tag:blogger.com,1999:blog-1474608369333206681.post6412546279329639584..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: புத்த மதமும் சுயமரியாதையும் - பெரியார்தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-10247621494366466182013-08-12T19:17:04.527+05:302013-08-12T19:17:04.527+05:30
அமர்த்தியாசென் சொன்னதும் சோக்களின் புழுக்கமும்!
...<br />அமர்த்தியாசென் சொன்னதும் சோக்களின் புழுக்கமும்!<br /><br />நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்தியாசென் அவர்கள் குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரமோடி குறித்து கருத்தினை வெளியிட்டார். அமர்த்தியாசென் அவர்கள் எந்த அரசியல் கட்சியின் வண்ணத்துக்கும் ஆட்பட்டவர் அல்லர்.<br /><br />பொது நிலையில் நின்று நாட்டுப் போக்குகளைக் கணித்துக் கருத்துகள் சொல்பவர்கள் நாட்டுக்கு அவசியம் தேவை. மத நல்லிணக்கத்துக்கு எதிரான ஒரு மனிதரை இந்தியாவின் பிரதமராக எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? ஓர் இந்தியக் குடிமகன் என்கிற முறையில் அவர் பிரதமர் ஆவதைக் கடுமையாக எதிர்க்கிறேன். சிறுபான்மை மக்கள் தாங்கள் பாதுகாப்புடன் இருக்கிறோம் என உணரும் வகையில் மோடி எதையுமே சொல்லவில்லை. சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல; பெரும்பான்மை மக்களுக்கும்தான் மோடி அப்படி என்னதான் செய்து விட்டார்? என்ற அறிவார்ந்த வினாவையும் எழுப்பினார்.<br /><br />இப்படி கூறும் பொருளாதார நிபுணருக்கு எந்தவித அரசியல் வண்ணமும் பூச முடியாது. அமர்த்தியாசென்னின் இந்தக் கருத்து இந்தி யாவைத் தழுவி மட்டுமல்ல; உலகம் முழுவதும் பேசப்படும் - பெரும் அளவுக்குத் தாக்கத்தையும் உண்டாக்கும். இதனைப் புரிந்து கொண்ட பிஜேபியைச் சேர்ந்தவர்களும், பிர்மா முகத்தில் பிறந்ததாகத் தங்களைக் கருதிக் கொள்ளும் பார்ப்பனர்களும், அமர்த்தியாசென் அவர்கள் கூறிய கருத்துக்களுக்குத் தக்கவகையில் பதில் சொல்ல வக்கில்லாத நிலையில் அவரை சிறுமைப்படுத்த முயற்சி செய்கிறார்கள்.<br /><br />பார்ப்பன சங்கத்தின் அதிகாரப் பூர்வமற்ற தலைவராக விளங்கிக் கொண்டுள்ள திருவாளர் சோ ராமசாமி தமது இதழில் (துக்ளக் 7.8.2010) தலையங்கம் தீட்டியுள்ளார். அமர்த்தியா சென் கூறிய கருத்து இந்த இந்த வகையில் தவறு? மோடி உண்மையிலேயே இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள மதச் சார்பின்மைக் கொள் கையில் நூற்றுக்கு நூறு உடன்பாடு உடைய பிடிவாதக்காரர் - அடுத்து அவர் பிரதமர் நாற் காலியில் சட்டமாக உட்கார்ந்தால் தான் மதச் சார்பின்மை என்பது முழுமையடைந்து மணம் வீசும் என்று எழுதியுள்ளாரா?<br /><br />மோடி என்ற பெயரைச் சொன்னாலே, எல்லோரும் ஏன் இப்படி நிதானம் இழக்கிறார்கள் என்று புரியவில்லை. அவ்வளவு சக்தி படைத்தவரா மோடி! அவரை விமர்சிக்கும் உரிமையோ, அவரை ஏற்க முடியாது என்று கூறுகிற உரிமையோ கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு உண்டு. அமர்த்தியாசென் அப்படிப் பேசியதால் என்ன வந்து விட்டது. மோடிக்கு ஒரு ஓட்டுக் குறைவு அவ்வளவு தானே! இதுதான் அறிவு ஜீ(சீ)வி திரு சோ. ராமசாமி அய்யரின் பதில்.<br /><br />இதன் மூலம் ஒன்று தெளிவாகி விட்டது. அமர்த்தியா சென் அவர்கள் ஆழமாக எடுத்து வைத்த குற்றச்சாற்றுக்கு பி.ஜே.பி. மற்றும் பார்ப்பனர் தரப்பில் எந்தவித உருப்படியான பதிலும் இல்லை - கை வசம் இல்லை என்பது உறுதியாகி விட்டது.<br />அமர்த்தியசென் ஓட்டுப் போடாவிட்டால் என்ன ஆகிவிடப் போகிறது என்கிற ஏளனம்தானே இதில் தொக்கி நிற்கிறது. துக்ளக் வாங்கும் தமிழர்கள் இந்த இடத்தை நிதானமாக, ஆழமாக நோக்கட்டும்!<br />சோ வகையறாக்கள் மோடியைப் பிரதமராகக் கொண்டு வரத் தவிப்பதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.<br />பார்ப்பனராக ஒரு பிரதமர் வந்து இந்து ராஜ்ஜியத்தை உருவாக்குவதைவிட பார்ப்பனர் அல்லாதாரான மோடி. அதனைச் செய்தால் அவர்களுக்கு மிகவும் வசதியாகும். பார்ப்பனர் பிரதமராக இருந்து அதனைச் செய்தால் மிக எளிதில் முத்திரை குத்திக் கீழே தள்ளி விடுவார்கள்.<br /><br />மோடி என்னும் பார்ப்பனர் அல்லாதாரைப் பிரதமர் ஆக்கினால். அவர்மீது அத்தகு முத்திரையைக் குத்தி வீழ்த்தி விட முடியாதே! இந்தத் தந்திரம் தான் மோடியை முன்னிலைப்படுத்துவதன் பின்னணியில் பதுங்கியுள்ள சூழ்ச்சியாகும். அதுவும் குஜராத்தில் மோடி அரங்கேற்றிய அந்தப் பாணி சூரத்தனம் - மனித வேட்டை இந்தியா முழுமையும் நடைபெற்றால் அது பிஜேபி சங்பரிவார்க் கும்பலுக்கும், பார்ப்பனர்களுக்கும் பால் பாயாசம் சாப்பிட்ட மாதிரி இருக்கும் அல்லவா!<br /><br />மோடி பிரதமர் ஆனால் ஏதோ சிறுபான்மை மக்களுக்குத்தான் ஆபத்து என்று மேம் போக்காக கருதிவிட வேண்டாம்; ஒட்டு மொத்த சமூகத்தையே அமளிக்காடாக்கும் ஆபத்தான ஒரு நிலை என்பதை மறந்துவிட வேண்டாம்.<br />அமர்த்தியாசென்கள் கொடுக்கும் குரல் பொது நிலையானது. வழிகாட்டும் திசை விளக்குப் போன்றது - கவனியுங்கள்! கருத்தூன்றுங்கள்!தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-14779079214568060032013-08-12T19:16:19.853+05:302013-08-12T19:16:19.853+05:30
நரிக்குறவர்கள் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சே...<br />நரிக்குறவர்கள் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் மத்திய அமைச்சருக்கு கலைஞர் கடிதம்<br /><br /><br />சென்னை, ஆக.12- தமிழகத்தில் வசிக்கும் நரிக் குறவர்கள் இனத்தை, அவர்களுடைய சமூக, கல்வி முன் னேற்றத்திற்காக பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தகுந்த நட வடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் கலைஞர் வலி யுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மத்திய அரசின் பழங்குடியினர் விவகாரம் மற்றும் பஞ்சாயத்துராஜ் அமைச் சர் வி. கிஷோர் சந்திரதோவ்வுக்கு 11.8.2003 அன்று அவர் எழுதிய கடிதத்தில்<br /><br />கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நரிக்குறவர் என்ற இனம் பரிதாபகரமான, இரக்கப் படக் கூடிய வாழ்க்கை நிலைகளை கொண்டுள்ளனர். அவர்கள் வசிப் பதற்கு நிலையான இருப்பிடம் இன்றி அடிக்கடி இடங்களை மாற்றும் நாடோடி வாழ்க்கை வாழ்ந்து கொண் டுள்ளனர்.<br /><br />அவர்கள் சமூகம் மற்றும் கல்வியில் மற்ற இனத்தவரை விட பின்தங்கி இருப் பதுடன் பழங் குடியினத்தவருக்கு சமமாக வாழ்ந்து வருகின்றனர். எனவே இரக்கத்து டன் இந்த இனத்த வர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்க வேண்டியது அரசின் கடமையாகும்.<br />தி.மு.க. அரசானது அவர்களின் முன்னேற்றத்திற்கு எல்லா உதவி களையும் செய்துள்ளது. 1970-இல் நரிக்குறவர்கள் ஒரே இடத்தில் வசிக்கவும் வாழ்வாதாரங்களுக் காகவும் தொகுப்பு வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது. 2008-2009இல் நல வாரியங்கள் தி.மு.க. அரசால் உருவாக்கப் பட்டு, பல்வேறு நலத் திட்ட உதவிகள் அவர்களுக்கு வழங் கப்பட்டுள்ளன.<br /><br />சமூகம் மற்றும் கல்வியில் முன்னேற்றமடைய தங்களை பழங்குடியினர் பட்டி யலில் சேர்க்க வேண்டும் என்று தமிழகத்தில் வசிக்கும் நரிக்குறவர் கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். வரலாற்று ரீதியாகவும் அவர்கள் பழங்குடி யினர் ஆவார்.<br /><br />பழங்குடியினரின் பட்டியலில் தங்களை சேர்க்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கை மத்திய அரசால் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பது எனது கருத்தாகும். எனவே தமிழ்நாட்டில் வசிக்கும் நரிக் குறவர்களை பழங்குடியினர் பட்டி யலில் சேர்க்க வேண்டும் என்ற அவர்களின் நீண்ட கால கோரிக் கைகளை கனிவுடன் பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். உங்களுடைய உடன் நடவடிக்கையை நான் பெரிதும் விரும்புகிறேன் என்று அக்கடிதத் தில் கலைஞர் தெரிவித்துள்ளார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-39968798646410269582013-08-12T19:15:42.188+05:302013-08-12T19:15:42.188+05:30
கிராமப்புறங்களில்... ஏழை - பணக்காரர் இடைவெளி அதிக...<br />கிராமப்புறங்களில்... ஏழை - பணக்காரர் இடைவெளி அதிகரிப்பு<br /><br /><br />ஆய்வுத் தகவல்<br /><br />புதுடில்லி, ஆக.11-இந்தியாவில் ஏழைகள் கடந்த 2004-05 இருந்த அளவைவிட 2011-2012இல் குறைந் துள்ளனர். இருந்தபோதிலும் கிராமப் பகுதிகளில் கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணக்காரர்களுடன் அவர்களது இடைவெளி அதிகரித்துள்ளது. அதேபோல், நகர்புறங்களில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.<br /><br />கடந்த 2011-2012ஆம் ஆண்டில் வீட்டு உபயோகப்பொருள் செலவு பற்றிய தேசிய மாதிரி ஆய்வு நடத்தப் பட்டது. புள்ளிவிவர ஆய்வில் கடைப்பிடிக்கப்படும் கினி விகிதம் அடிப்படையில் கணிக்கப்பட்டது. கிராமப்புறங்களில் கினிவிகிதம் 2011 2012இல் 0.28 ஆக அதிகரித்துள்ளது. இது 2004-2005ல் 0.26 ஆக இருந்தது. நகர் பகுதிகளில் முன்எப்போதும் இல்லாத அளவிற்கு 0.35லிருந்து 0.37 ஆகி உயர்ந்துள்ளது. கினிவிகிதம் பூஜ்யத்திலிருந்து ஒன்று என்று வரிசைப் படுத்தப்படுகிறது. பூஜ்யம் என்பது சரி சமமானது என்பதை குறிக்கும். ஒன்று என்பது சரிசம மற்றது என்பதை குறிக்கும்.<br /><br />ஏழை பணக்காரர் இடைவெளி உயர்ந்து உள்ளது குறித்து பொரு ளாதார நிபுணர்கள் வியப்பு தெரி வித்துள்ளனர். அரசு பல்வேறு நலத் திட்டங்களை கிராமங்களில் செயல் படுத்தி வந்தபோதிலும் இந்த இடை வெளி அதிகரிப்பு ஆச்சரியத்தை அளித்துள்ளது என்று டில்லி ஜவ ஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பிராந்திய மேம்பாடு பற்றிய கல்வி மய்யத்தின் பேராசிரியர் அமிதாப் குந்து தெரிவித்துள்ளார். கிராமப் பகுதியில், வேளாண்மை துறையைத் தவிர பிற தொழில்களிலும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதைத்தான் இது காட்டுகிறது என்று மேலும் கூறினார்.<br />1977 -1978ஆம் ஆண்டுக்கு பிறகு கிராமப் பகுதிகளில் சரி சமமற்ற நிலைமை அதிகரித்துள்ளது. 1973 -1974இல் 0.27 ஆக இருந்த கினிவிகிதம் அப்போது 0.34 ஆக அதிகரித்தது. இது கடந்த 1993 -1994ஆம் ஆண்டில் இது 0.28 ஆக இருந்தது. விவசாய தொழிலாளர்களின் நுகர்வு முறையில் சுணக்கம் இருந்தது. இது எதைக் காட்டுகிறது என்றால், நுகர்வு செலவு அதிகரித்துள்ளது சரிசமமற்ற வினி யோகம் மற்றும் திட்டங்களின் பயன் பாடு வசதியானவர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது என்பதைக் காட்டு கிறது என்றும் குந்து கூறினார்.<br /><br />வேலைவாய்ப்பை உருவாக்குதல் மற்றும் வருமான பகிர்வு ஆகியவை சரிசமமற்ற நிலையால் கடந்த 1990ஆம் ஆண்டுகளில் இருந்து சமு தாயத்தில் சரிசமமற்ற நிலைமை அதிகரித்து வந்துள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிலையை மாற்ற வேண்டியது அவசி யம். நகர்புறங்களில் இருப்பதைவிட கிராமப் பகுதிகளில் வறுமை சத வீதம் குறைந்துள்ளது. சரிசமமற்ற நிலைமை, நகரங்களைவிட கிராமங் களில் குறைவு என்பதையே இது உணர்த்துகிறது.<br /><br />திட்ட கமிஷன் புள்ளிவிவரப்படி பார்த்தால், கடந்த 2004-2005ஆம் ஆண்டில் கிராமப்பகுதிகளில் 42 சதவீதம் பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே இருந்தனர். ஆனால், 2011-2012ல் 25.7 சதவீதமாக குறைந்துள்ளது. அதேவேளையில் நகரங்களில் 25.5 சதவீதத்தில் இருந்து 13.7 சதவீதமாக குறைந்துள்ளது.<br /><br />இந்தியாவில் சரிசமமற்ற நிலை பிரிக்ஸ் நாடுகளுடன் ஒப்பிடுகையில் அவ்வளவு ஒன்றும் அதிகமாக இல்லை என்றுதான் சொல்லலாம். பிரிக்ஸ் நாடுகள் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப் ரிக்கா) கினி விகிதம், தென் ஆப்ரிக்கா வில் கடந்த 2008இல் அதிகபட்சமாக 0.67 ஆக இருந்தது. இதற்கு அடுத்த படியாக பிரேசிலில் (2012இல் 0.51), சீனாவில் (2012இல் 0.47), ரஷ்யாவில் (2011ல் 0.41) என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.<br /><br />இந்தியாவில் சரிசமமற்ற நிலைமை வருமானத்தை வைத்து கணக்கிடுவது இல்லை. நுகர்வு செலவை வைத்து கணக்கிடப்படு கிறது. கினிவிகிதம் தேசிய புள்ளி விவரம் கடந்த 2011-2012இல் கணக் கிடப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-31072000860438458392013-08-12T19:15:08.960+05:302013-08-12T19:15:08.960+05:30
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வும் குழப்பமும்
2...<br />முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வும் குழப்பமும்<br /><br /><br />21.7.2013 அன்று TRB,, 2800 முதுகலை ஆசிரியர் களைத் தேர்வு செய்வதற்காக நடத்திய தேர்வில் 150 மதிப்பெண்களுக்கான வினா பட்டியல் வழங்கப்பட்டது. அதில் பெரும்பாலான வினாக்கள் எழுத்துப் பிழைகளுடன் இருந்தன. இதுபற்றிய செய்திகள் ஒரு சில நாளிதழ்களில் அப்போதே வெளிவந்தது. அனைவருக்கும் தெரிந்ததே!<br /><br />மேலும் குறிப்பாக, பிரதமர் பெயர் டாக்டர் மன்மோகன் சிது என்றும், இந்திய திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டெக் சிது அலுவாலியா என்றும், நிதிக் குழு தலைவர் பெயர் ரெதுகராஜன் என்றும், தவறாக எழுத்துப் பிழையுடன் அச்சிடப்பட்டு இருந்தது.<br />மேலும், பல்வேறு கேள்விகளில் எழுத்துப் பிழைகள் அதிகமாக இருந்தன. இதனால் தேர்வு எழுதியவர் களுக்கு குழப்பமும், மன உளைச்சலும் ஏற்பட்டன. தேர்வு முடிந்து ஒரு வாரத்திற்குப் பிறகு அதற்குரிய விடைகள் (Answer Key) TRB மூலம் இணையதளத்தில் வெளியிடப் பட்டன. அதில் பல்வேறு கேள்விகளுக்கு தவறான விடைகள் அளிக்கப்பட்டிருந்தன. எடுத்துக்காட்டு: மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்திய திட்டக் குழுவின் துணைத் தலைவர் பெயர், மான்டெக் சிங் அலுவாலியா என்பதற்குப் பதிலாக ரெங்கராஜன் என்று தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பார்க்கும் போது நமது பிரதமருக்கு அடுத்த, முக்கியத்துவம் வாய்ந்த இந்திய திட்டக் குழுத் துணைத் தலைவர் பதவியாகும். இவர் பெயரையே TRB தேர்வு வாரியம் தவறாக வெளியிட் டுள்ளது. இதனால் தேர்வு எழுதியோர் மத்தியில் மிகவும் வியப்பும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-43098777540754777792013-08-12T19:14:32.018+05:302013-08-12T19:14:32.018+05:30
மனித சமுதாயத்தில்...
நாம் உண்மையான பகுத் தறிவு...<br />மனித சமுதாயத்தில்...<br /><br /><br /><br />நாம் உண்மையான பகுத் தறிவுவாதிகளாக ஆகிவிடுவோ மேயானால், நம் மனிதத் தன்மை வளர்ச்சி மட்டுமல்ல, சமுதாய வளர்ச்சியும் ஏற்பட்டுவிடும்; மனித சமுதாயத்தில் ஒழுக்கமும், நாணயமும் ஏற்படும்.<br />(விடுதலை, 16.11.1971)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-20924832295035101962013-08-12T06:35:52.944+05:302013-08-12T06:35:52.944+05:30
அர்ச்சகர் பிரச்சினை
மானமிகு திராவிடர் கழக தலைவ...<br />அர்ச்சகர் பிரச்சினை<br /><br /><br /><br />மானமிகு திராவிடர் கழக தலைவர் அவர் களுக்கு என் ஆசான் பொருளாளராக இருந்து வரும் கோ.சாமிதுரை அவர்களின் குமாஸ்தா பாலு பணிவன்புடன் எழுதிக்கொண்டது. நானும் என் ஆசான் அவர்களிடமும், அவரின் குமாரர் ஜி.எஸ்.பாஸ்கர் அவர்களிடமும் சுமார் 1962 முதல் குமாஸ்தாவாக பணிபுரிந்து கொண்டு வருகிறேன்.<br /><br />அய்யா நானும் சபரிமலைக்கு 48 ஆண்டுகள் சென்றுள்ளேன். கள்ளக்குறிச்சியில் அய்யப்பன் ஆலயமும் பலர் உதவியுடன் கட்டியுள்ளேன். அர்ச்சகர் பிரச்சினைபற்றி தங்களின் விளம்பரம் டீ..வி. பேப்பர் மற்றும் செய்திகள் மூலம் கேள்வி பட்டேன். தங்களின் நல்லதொரு கோரிக்கை அற்புதம், போராட்டம் அற்புதம் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற தங்களின் கோரிக்கை போற்றத்தக்கது. மேலும் ஊர் என்றால், பள்ளிக்கூடம், குளம் மற்றும் கோவில் இருக்க வேண்டும் என்பார்கள். பள்ளிக் கூடத்தில் ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவியர் கள் என அனைத்து ஜாதியினர் இருக்கிறார்கள். குளம் இருப்பின் அனைவரும் தண்ணீர் அருந்து கிறர்கள், கோவில் என்றால் பார்ப்பனர்கள் தான் ஆதிக்கம். அவர்களன்றி மற்ற இனத்தினர் அவர் களுக்கு அடிமைபோல் இருந்துவர வேண்டியுள்ளது. இதனை தந்தை பெரியார் அவர்கள் வைக்கம் முதல் அனைத்து இடங்களிலும் எதிர்த்து போராடினார்கள். அதே போல் தாங்கள் தற்போது நடத்தும் போராட்டம் போற்றக்கூடியது. எல்லா மதத்தினரும் நன்றாகவே ஆதரவு அளிப்பார்கள். தாங்கள் நடத்தும் இந்த போராட்டம் எல்லாம் வல்ல நம் முன்னோர்கள் ஆசீர்வாதத்தினாலும், அனைத்து ஜாதியினர்கள் ஆதரவாலும், நான் வணங்கும் என் தாய் தந்தையர்கள் ஆசீர்வாதத் தினாலும் சீரும் சிறப்புமாக நடக்க வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.<br /><br />- கே.பி. பாலு (வக்கீல் கிளர்க்) கள்ளக்குறிச்சிதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-82221240957534482562013-08-12T06:35:00.767+05:302013-08-12T06:35:00.767+05:30
கொலை செய்வது தான் கடவுளா?
தமிழில் பக்தி நுரை ...<br />கொலை செய்வது தான் கடவுளா?<br /><br /><br /><br />தமிழில் பக்தி நுரை தள்ளும் ஏடுகள் உண்டு. ஒன்றை வெளியிடுவதால் மக்களுக்கு என்ன பயன் என்று ஏனோ அவர்கள் கருதுவதில்லை.<br />இதோ ஒரு பட்டியல். சிவபெருமானின் வீரச் செயல்கள் நடந்த தலங்கள்<br />திருக்கண்டியூர் - பிரம்மனின் தலையைக் கொய்தது<br />திருப்பறியல் - தக்கன் தலை கொய்தது<br />திருவதிகை - திரிபுரம் எரிப்பு<br />திருக்குறுக்கை - காமன் எரிப்பு<br />திருக்கடவூர் - காலனை உதைத்தது<br />திருவிற்குடி - க(ச)ந்தராசுரன் சம்ஹாரம்<br />திருக்கோவிலூர் - அந்தகாசுரன்வதம்<br />இப்படி கொலை செய்வதும், எரிப்பதும், வதம் செய்வதும்தான் கடவுளா?<br />இந்தக் கடவுளை நம்பும், பக்தி செலுத்தும் பக்தனின் புத்தி விளங்குமா?<br />தான் நம்பும் கடவுளின் வழிகாட்டுதல்படி நடந்து கொள்வதால்தான் நாட்டில் இத்தனைக் கொலை பாதகங்கள் - வன்முறைகள் என்பதை ஒப்புக் கொள்வார்களா?தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-6114472131790609962013-08-10T20:07:18.834+05:302013-08-10T20:07:18.834+05:30
உணவு மசோதாவை ஆதரிக்க தி.மு.க. தலைவர் கலைஞர் நிபந்...<br />உணவு மசோதாவை ஆதரிக்க தி.மு.க. தலைவர் கலைஞர் நிபந்தனை<br /><br /><br />சென்னை, ஆக.10- மாநில அரசுகளின் உரிமை களுக்கு இம்மியளவும் பாதிப்பு ஏற்படாதளவு, உணவுப் பாதுகாப்பு மசோதா இருந்தால் மட்டுமே அதனை ஆதரிப்போம் என்று மத்திய அரசுக்கு, திமுக தலைவர் கலைஞர் நிபந்தனை விதித்துள்ளார்.<br /><br />இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:- உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத் துவதற்கான வழிமுறைகளை மாநில அரசுகள் மீது மத்திய அரசு திணிக்கக் கூடாது. அந்தந்த மாநிலங்களின் நிலைமைகளுக் கேற்ற செயலாக் கத்துக்கான விருப்புரிமையை மாநில அரசு களுக்கு வழங்கிட மத்திய அரசு முன் வரவேண் டும். சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆகின்றன.<br /><br />இதற்குப் பிறகாவது உணவுக்கான உரிமையை வழங்கி, மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் பிறந்திருப்பது ஆக்க பூர்வமானது. எனவே, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை முழுமையாக எதிர்க்கவும் இல்லை. முழுமையாக ஆதரிக்கவும் இல்லை.<br /><br />அவசரமாக மேற்கொள்ள வேண்டிய அவ சியமான திருத்தங்களுடன், மாநிலங்களில் உள்ள நடைமுறைக்கேற்ப உணவு மசோதாவை மத்திய அரசு கொண்டு வர முன் வரவேண்டும்.<br /><br />தமிழகத்தைப் பொறுத்தவரை ஏற்கெனவே இருக்கும் மாநில உரிமைகளுக்கு இம்மியளவும் பாதிப்பு ஏற்படாதளவு, உணவு மசோதா இருந் தால் மட்டுமே அது நிறைவேற திமுக ஆதரிக்கும்.<br /><br />எந்த மாநிலத்திலும் ஏற்கெனவே நடைமுறை யில் இருக்கும் உணவுப் பொருள் வழங்கு முறை யினைச் சீர்குலைப்பதாக உணவு மசோதா இருக் கக் கூடாது. மேம்படுத்துவதாக இருக்க வேண் டும்.<br /><br />இந்திய மக்கள் தொகையில் 67.5 சதவீத மக்கள் மட்டும் பயன்படும் வகையில் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.<br /><br />ஆனால், தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 90 சதவீத மக்கள் பயன் பெற்று வருகின்றனர். இதனால் தமிழக மக்கள் பாதிக்கப் படுவர் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள் ளார்.<br /><br />முதல்வர் தெரிவித்துள்ள குறைபாடுகளும் கோரிக்கைகளும் அலட்சியப்படுத்தக் கூடியவை இல்லை. உணவு மசோதாவினால் ஏற்படக்கூடிய விளைவுகளை ஒட்டுமொத்தமாக தமிழக அரசு தான் சீர்தூக்கிப் பார்த்து கருத்துகளைத் தெரி விக்க முடியும்.<br /><br />இந்த மசோதாவால் தமிழகத்துக்குப் பாதகம் தான். சாதகம் இல்லை என்று முதல்வர் உறுதி யாக இருந்தால், சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை தமிழகம் ஏற்காது என்று அறிவித்ததைப் போல், இதையும் ஏற்காது என்று அறிவித்து விடலாம்.<br /><br />ஆனால் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்தில் ஜெயலலிதாவும் மசோதா வில் திருத்தங்கள் தேவை என்றே கூறியுள்ளார். அனைத்து அரசியல் கட்சிகளும் திருத்தங் களையே கோருகின்றன. சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று யாரும் குரல் எழுப்ப வில்லை என்று கலைஞர் கூறியுள்ளார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-54137882278357480672013-08-10T20:06:59.421+05:302013-08-10T20:06:59.421+05:30
சோனாலி முகர்ஜி
அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள...<br />சோனாலி முகர்ஜி<br /><br /><br />அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்விற்காக அழகிகள் அணிவகுப்பில் வலம் வந்த சோனாலி முகர்ஜி அமிலவீச்சால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்விற்காகவும் அவர்களின் சிகிச்சைக்கான உதவித்தொகை வேண்டி சோனாலி முகர்ஜி மும்பையில் நடந்த சர்வதேச தங்கநகைக்கான விளம்பர அழகிகள் அணிவகுப்பில் (பேஷன் ஷோ) 102 அழகி களில் ஒருவராக கலந்து கொண்டு நிதி திரட்டினார்.<br /><br />ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் நகரைச்சேர்ந்த சோனாலி முகர்ஜி(18) மீது அவரது வீட்டிற்கு அருகில் வாழும் 3 இளைஞர்கள் இவர் வீட்டிற்குள் நுழைந்து உறங்கிக்கொண்டு இருந்த இவர் மீது அமிலத்தை வீசியுள்ளனர்.<br /><br />இதில் முகம் தலை மற்றும் நெஞ்சகம் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது, கண் பார்வையும் பறிபோனது.<br /><br />நீண்ட கால சிகிச்சைக்கு பிறகு இனி வரும் வாழ்க்கையை அமில வீச்சால் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்கால நலவாழ்விற்காக செலவழிக்க முடிவு செய்தார், இவருக்கு மும்பையைச் சேர்ந்த பேட்டி(மகள்) என்ற தொண்டு நிறுவனம் உதவ முன்வந்தது, அந்த நிறுவனத்தின் மூலம் அமிலவீச்சால் பாதிக்கப்படும் பெண்களுக்கான மருத்துவம் மற்றும் புனர்வாழ்விற்காக நிதிதிரட்டி வருகிறார். இந்த நிலையில் துபாயைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சர்வதேச தங்க நகை மதிப்பீட்டு நிறுவனம் மும்பையில் நடந்த தங்க நகைகளுக்கான அழகிகள் அணிவகுப்பு ஒன்றில் சோனாலி முகர்ஜியை கலந்து கொள்ள கேட்டுக்கொண்டனர். இதற்கு இசைந்த சோனாலி முகர்ஜி ஞாயிறன்று மும்பையில் பிரபல நட்சத்திர விடுதி ஒன்றில் 120 அழகிகளுடன் மேடையில் வலம் வந்தார்.<br /><br />இந்த நிகழ்ச்சி மூலம் சுமார் 50 லட்சம் வரை கிடைக்கும் என்றும் ஏற்கெனவே அமில வீச்சால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் இருக்கும் 2 பேரின் சிகிச்சைக்கு இந்த பணம் செலவிடப்படும் என்றார். கடந்த ஆண்டு அமிதாப்பச்சனின் நீங்களும் வெல்லாம் ஒரு கோடி (இந்தி) என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 25 லட்சத்தை வென்றார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. - சரவணா இராசேந்திரன்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-71226202882448746072013-08-10T20:06:00.811+05:302013-08-10T20:06:00.811+05:30
ஏ.டி.எம். ரகசியம்!
நீங்கள் ஏ.டி.எம். இயந்திரத்...<br />ஏ.டி.எம். ரகசியம்!<br /><br /><br /><br />நீங்கள் ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுக்கும்போது திடீரென ஒரு திருடன் வந்து உங்களிடம் பணம் எடுத்துத் தருமாறு மிரட்டினால், உங்கள் நுழைவு எண் பின்னை தலைகீழாக அடிக்கவும். அதாவது 1 2 3 என்றால் 3 2 1 என்று அடிக்கவும். நீங்கள் அடிக்கும்போது உங்கள் பணம் பாதிலேயே சிக்கிக் கொள்ளும். அதனால் காவல் நிலையத்திற்கு தகவல் சென்று விடும். எல்லா ஏ.டி.எம்.மிலும் இந்த வசதி உண்டு. அதனால் இதை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்!தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-78956492811911177462013-08-10T18:44:06.470+05:302013-08-10T18:44:06.470+05:30
காலணிகளின் ஊமைக்குரல்
மனித நேயம் வெளிப்படாத
ஆட...<br />காலணிகளின் ஊமைக்குரல்<br /><br /><br /><br />மனித நேயம் வெளிப்படாத<br />ஆடை அலங்காரத்தோடு<br />மனித இனம் பிரிக்கும் சாதி<br />சமய உணர்வோடு<br />கள்ளம் கபடம் நிறைந்திருக்கும்<br />அழுக்கு மனதோடு<br />குறுக்கு வழியில் பதுக்கி வைத்திருக்கும்<br />அளவிலா பொருளாசையோடு<br />சொத்து சுகங்களால் சேர்ந்திருக்கும்<br />பகட்டான முகப்பொலிவோடு<br />உண்மைக்கு நேர்மாறாக பேசும் பொய்நாவோடு<br />ஐம்புலனுள் எல்லாம் மறைத்து<br />போலி பக்தியோடு<br />கோவிலுள் நுழையுமுன் வெளியே<br />எங்களை கழட்டி விடுவது ஏன்?<br />நீங்கள் கும்பிடும் காட்சிகளை நாங்கள் பார்த்துவிடக் கூடாது<br />என்பதற்காகத்தானே! ஆமெனில்<br />இதுவும் ஒரு நாடகம் தானே!<br />இதில் இறையருளுக்கு இடமேது?<br />அருள். கிரகோரி<br />தலைமை ஆசிரியர் பணிநிறைவு<br />விமான நிலையம்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-88598690462265223512013-08-10T18:37:31.619+05:302013-08-10T18:37:31.619+05:30சுயமரியாதைக்கு ஜே!
சர்க்கார் உத்தரவு
எல்லா கிராம...சுயமரியாதைக்கு ஜே!<br /><br />சர்க்கார் உத்தரவு<br /><br />எல்லா கிராமம் கிராமாதிகாரிகளுக்கும் - பொதுச் சாவடி, பொதுக்கட்டடம், கச்சேரி, பள்ளிக்கூடம், பொதுக் கிணறு, பகிரங்கமான பாதை, சந்தை முதலிய எல்லா இடங்களிலும் ஆதிதிராவிடர் களுக்கும் பிரவேசிக்கச் சுதந்திரமுண்டு என்ற விஷயத்தையும், மேற்படி ஆதிதிராவிடர்களைப் பறையர், சக்கிலியர், பள்ளர் என்று அழைக்காமல் ஆதிதிராவிடர்கள் என்றே அழைக்க வேண்டும் என்பதையும், பத்திரங்களிலும் ஆதிதிராவிடர் என்றே பதியவேண்டியதையும் கிராமத்தில் பரவச் செய்து அமலுக்குக் கொண்டு வரவேண்டியது. மேற் படியார்களுக்குப் பூமி அடமான விஷயங்களில் வேண்டிய உதவி புரிய வேண்டியது.<br /><br />- குடியரசு - 21.11.1926 தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-45880883529406387902013-08-10T18:37:03.188+05:302013-08-10T18:37:03.188+05:30பார்ப்பனியத்தை ஒழித்த கலியாணங்கள்
சேலம் அடுத்த தா...பார்ப்பனியத்தை ஒழித்த கலியாணங்கள்<br /><br />சேலம் அடுத்த தாதம்பட்டி என்னும் கிராமத்தில் பல்ஜிய நாயுடு வகுப்பைச் சேர்ந்த வீடுகளில் மூன்று கல்யாணங்கள் வெகு விமரிசையாய் நடந்தன. அம்மூன்று கலியாணங்களுக்கும் பார்ப்பன புரோகிதர் கள் இல்லாமல் பார்ப்பனரல்லாதாரைக் கொண்டே முகூர்த்தம் செய்விக்கப்பட்டது.<br /><br />இவைகளில் ஒரு கலியாண வீட்டுக்காரருக்கு மாத்திரம் ஆரம்பத்தில் நாம் ஏன் இதை முதன் முதலாகச் செய்ய வேண்டும், மற்றும் யாராவது செய்து பிறகு நாம் செய்யலாம் என்கிற எண்ணம் மனதுக்குள்ளாக இருந்திருக்கிறது. அதற் கேற்றாற்போல் அவர் ஒரு பார்ப்பனப் புரோகிதரையும் தருவித்து விட்டார்.<br /><br />ஆனால் மற்ற இரண்டு கலியாண வீட்டுக்காரரும் தைரியமாய்ச் செய்ய ஆரம்பித்த பிறகும் ஈரோட்டிலிருந்து கலியாணத்திற்கு வந்திருந்த ஸ்ரீமான்களான அ.கோவிந்த நாயக்கர், வெ.முத்து நாயக்கர், ரா.துரைசாமி நாயக்கர், வெ. எல்ல நாயக்கர், எ.எல்ல நாயக்கர், கே. ராமசாமி நாயக்கர், ஈ.வெ. ராமசாமி நாயக்கர் முதலிய இன்னும் பல கனவான்கள் சொன்ன பிறகும் தான் தருவித்த பார்ப்பனப் புரோகிதருக்கு ஏதோ பணம் கொடுத்தனுப்பிவிட்டு அவரும் பார்ப்பனரல்லாதாரைக் கொண்டே தனது வீட்டு முகூர்த்தத்தையும் நடத்திக் கொண்டார்.<br /><br />ஆகவே, இந்த மூன்று கலியாணங்களும் எவ்வித சடங்கும் பார்ப்பன சம்பந்தமில்லாமலே இனிது நிறைவேறிற்று. அதோடு அங்கு வந்திருந்த மற்ற பந்து மித்திரர்களும் தங்கள் தங்கள் வீட்டு சுபா சுப காரியங் களையும் இனி பார்ப்பனரல்லாதாரைக் கொண்டே செய்து கொள்வது என்னும் அபிப்பிராயத்தையும் தெரிவித்துக் கொண்டார்கள்.<br /><br />இந்த வகுப்பார் பார்ப்பனியத்தை நீக்கி கலியாணம் செய்த கவுரவம் சேலம் தாதம்பட்டிக்கே கிடைத்ததோடு மற்றவர்களுக்கும் வழிகாட்டின பெருமையும் அவர் களுக்கு கிடைத்ததைப் பற்றி நாம் மிகுதியும் மகிழ்ச்சி அடைகிறோம். அதோடு இதற்கு முக்கியமாய் நின்று வேலை செய்த ஸ்ரீமான்கள் எல்ல நாயக்கர், கே. ராமசாமி நாயக்கர் முதலிய கனவான்களையும் பாராட்டுகிறோம்.<br /><br />- குடிஅரசு - செய்திக்குறிப்பு - 21.11.1926தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-62025090118245623242013-08-10T18:36:38.141+05:302013-08-10T18:36:38.141+05:30
தென்காசியில் பார்ப்பனர்கள்
ஒத்துழையாமையும் பகிஷ...<br />தென்காசியில் பார்ப்பனர்கள்<br /><br /><br />ஒத்துழையாமையும் பகிஷ்காரமும் கதவடைப்பும்<br /><br />தென்காசி சிவன் கோவிலில் பார்ப்பனர்களின் வேத பாராயணத்தைப் போலவே தமிழ் மக்களின் தேவாரப் பாராயணமும் செய்யப்பட வேண்டும் என்பதாகக் கருதி தேவாரப் பாராயணம் ஆன பிறகு பிரசாதம் கொடுக்கப்பட வேண்டும் என்று தேவதான போர்டாரும் கமிட்டியாரும் தர்மகர்த் தாக்களும் உத்தரவு போட்டதினால் அப்பேர்ப்பட்ட சுவாமி தரிசனமும் பிரசாதமும் தங்களுக்கு வேண்டியதில்லை என்று சொல்லி அதோடு ஒத்துழையாமையும் பகிஷ்காரமும் செய்து அவ்வூர் பார்ப்பனர்கள் எல்லாம் ஒன்று கூடி பார்ப்பன ஸ்த்ரீகள்,<br /><br />புருஷர்கள், குழந்தை குட்டிகள் சகிதம் யாரும் அக்கோவிலுக்குப் போகக் கூடாது என்றும், சுவாமியை தரிசிக்கக் கூடாதென்றும் பரிசாரகம் முதலிய வேலையைச் செய்யக் கூடாது என்றும், சுவாமி தங்கள் வீதிக்கு எழுந்தருளி வந்தாலும் ஒவ்வொரு பார்ப்பனரும் வீதி தெருக்கதவை அடைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தீர்மானம் செய்து கொண்டு அந்தப்படி அமலிலும் நடத்தி வருகிறார்கள் என்கின்ற விபரம் அறிய மிகவும் சந்தோஷமடைகிறோம்.<br /><br />ஏனெனில் பார்ப்பனர்கள் பகிஷ்காரம் செய்த வேலைகளை ஆதி சைவ குருக்கள் பட்டமார்களைக் கொண்டு கோவிலதி காரிகள் வேலை வாங்கி வருகிறார்கள். இது போலவே மற்ற ஊர்களிலும் உள்ள பார்ப்பனர்களும் மற்ற கோவில்களோடும் சுவாமிகளோடும் ஒத்துழையாமையும் பகிஷ்காரமும் செய்து விடுவார்களேயானால் நமது தெய்வங்களைப் பிடித்த சனியனும் நமது மதங்களைப் பிடித்த கிரகங்களும் அடியோடு ஒழிந்து யோக்கியமானதும் உண்மையானதுமாக விளங்கும்.<br /><br />- குடிஅரசு - செய்திக்குறிப்பு - 12.12.1926தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-46314088766648451552013-08-10T18:36:05.257+05:302013-08-10T18:36:05.257+05:30இதுகூட வகுப்புத் துவேஷமா?
திருநெல்வேலி ஜில்லா தென...இதுகூட வகுப்புத் துவேஷமா?<br /><br />திருநெல்வேலி ஜில்லா தென்காசியிலுள்ள ஒரு சிவன் கோவிலில் சமஸ்கிருதத்தில் வேத பாராயணம் செய்த பிறகு, தமிழில் தேவார பாராயணம் செய்த பிறகு எல்லோருக்கும் விபூதி பிரசாதம் கொடுக்க வேண்டும் என்பதாக கோவில் அதிகாரிகள் ஏற்பாடு செய்தார்களாம்.<br /><br />அங்கு வேத பாராயணம் செய்து வந்த பார்ப்பனர்கள் தேவார பாராயணம் செய்த பிறகு விபூதி பிரசாதம் வாங்குவது தங்கள் உயர்வுக்குக் குறைவு தேடினதாக ஆகுமென்று நினைத்து கலகம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று செய்தி வந்திருக்கிறதை வேறு இடத்தில் பிரசுரித்திருக் கிறோம். கோவிலில் தேவாரம் படிக்க வேண்டுமென்று சொன்னால்கூட அது நமது பார்ப்பனர்களுக்கு வகுப்புத் துவேஷமாய்ப் படுகிறதாயிருந்தால் பிறகு எங்கு போய்த்தான் பிழைக்கிறது?<br /><br />தேவாரம் படிக்காததினால் மோட்சம் கெட்டுப் போய்விட்டது என்பதாக நாம் பயப்படவில்லை. மக்களிடம் அன்பு செய்வதைத்தான் கடவுள் பக்தி என்று நினைக்கிறோமே அல்லாமல் வேத பாராயணமும் தேவார பாராயணமும்தான் கடவுள் பக்தி என்று நாம் நினைப்பதில்லை.<br /><br />ஆனாலும் தமிழ் மொழி என்றால் இந்தப் பார்ப்பனர்களுக்கு இவ்வளவு ஆத்திரம் வருவானேன் என்பதுதான் நமது கவலையே தவிர வேறில்லை. நமது தென்னாட்டுப் பிரயாணத்தில் ஒரு சமயம் அங்கு போக நேரிடினும் நேரும்.<br /><br />- குடிஅரசு - செய்திக்குறிப்பு - 21.11.1926 தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-53671944206410905312013-08-10T18:35:36.576+05:302013-08-10T18:35:36.576+05:30
சங்கரநாராயணர் கோவிலுக்குள் கக்கூசும் மிதியடியும்
...<br />சங்கரநாராயணர் கோவிலுக்குள் கக்கூசும் மிதியடியும்<br /><br /><br />திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள சங்கரன்கோவி லென்னும் சங்கரநாராயணன் கோவிலானது அச்சில் லாவில் உள்ள முக்கிய கோவில்களுள் ஒன்று. அக் கோவிலுக்கு ஏராளமான சொத்துக்கள் வரும்படி உண்டு. லோககுரு என்றும் சங்கராச்சாரியார் சுவாமிகள் என்றும் சொல்லப்பட்ட ஸ்மார்த்தர்களின் குருவானவர் இம்மாதம் அவ்வூருக்கு வந்து அக்கோவிலை தனக்கும் தனது பரிவாரத்திற்கும் ஜாகையாக வைத்துக் கொண்டார்.<br /><br />அதோடல்லாமல் சுவாமிகளின் திருக்கக்கூசும் அக்கோவிலுக் குள்ளாகவே கட்டப்பட்டு சுவாமிகளின் திருமலமும் கோவிலிலேயே சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. அக்கோவில் டிரஸ்டி கனவான்களில் பார்ப்பனரல்லாதார் அதிகமாய் (மெஜாரிட்டியாய்) இருந்தும் இதை ஆட்சேபிக்கத் தைரியமில்லை. ஏனென்றால் அவ்வூர் அதிகாரிகள் எல்லாம் குட்டி சுவாமிகள் குழாங்களாகவே இருக்கின்றன.<br /><br />அதோடு மாத்திரமில்லாமல் சுவாமிகள் சங்கர நாராயண சுவாமியை திருக்கண் பார்ப்பதாயிருந்தாலும், திரு மிதியடியை தாங்கிய திருப்பாதத்துடனே தான் மூலஸ்தானத்திற்குப் போய் திருக்கண் பார்த்தருளி னாராம். அதோடு மாத்திரமல்லாமல் சுவாமிகள் கோவி லுக்குள் நுழையும் போது திருமேனாவில் திருப்பள்ளி கொண்ட கோலத் துடனேயே சென்றாராம். மாமிக்கோர் மாமியுண்டானால் சுவாமிக்கோர் சுவாமி வேண்டாமா? அதுதான் நமது லோக குரு சங்கராச்சாரியார், சுவாமிகள் போலும்.<br /><br />சுவாமிகளின் இந்த வைபவங்களையும், தெய்வத் தன்மையையும் கண்ட திருநெல்வேலி நெல்லையப்பர் சுவாமி கோவில் பக்தர் களும், தர்மகர்த்தாக்களும் குறைந்தபட்சம் நெல்லை யப்பர் கோவிலுக்குள் சுவாமிகளின் திருக் கக்கூசாவது கட்டப்படாமல் இருக்கவேண்டுமென்று கருதி லட்சக் கணக்கான துண்டு விளம்பரங்கள் போட்டும் தர்மகர்த் தாக்களுக்கு நோட்டீசு விட்டும் சத்தியாக்கிரகம் செய்வதாய் பயமுறுத்தியும் ஆர்ப்பாட்டம் செய்து சுவாமிகளின் திருக் கக்கூசை திருக்கோவிலுக்குள் கட்டாமலிருக்க தக்க ஏற்பாடு செய்துவிட்டார்கள்.<br /><br />இது தவிர, நெல்லையப்பர் சுவாமி கோவிலுக்கு முன்னால் சங்கராச்சாரிய சுவாமிகள் வருகையை முன்னிட்டு போடப்பட்ட அலங்காரப் பந்தல்கள் போட அனுமதித்ததின் பலனாய் அஷ்டமி உற்சவத்தின்போது நெல்லையப்பர் சுவாமி எழுந்தருளுகையில் பந்தல் சமீபம் வந்தவுடன் தாழ்ந்தும் குனிந்தும் வெளியே வரவும் உள்ளே போகவும் ஏற்பட்டது.<br /><br />இதைப் பற்றி பல பக்தர்களுக்கு மனவருத்தமிருந் தாலும் சங்கராச்சாரிய சுவாமிகளும் அவரது திருக் கூட்டத்தாரும் இல்லாவிட்டால் நெல்லையப்பருக்கு இவ்வளவு மகத்துவமும், இவ்வளவு வேலி நிலமும், இவ்வளவு சொத்துக்களும் சுகங்களும் ஏது? ஆதலால் சங்கராச்சாரிய சுவாமிகளின் பந்தலுக்கு நெல் லையப்பர் தாழ்ந்து குனிந்து வணங்க வேண்டியது<br />தான்.<br /><br />- குடிஅரசு - கட்டுரை - 05.12.1926தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-91184103368691352862013-08-10T18:31:05.308+05:302013-08-10T18:31:05.308+05:30
தானே வீழ்ந்துவிடும்!
பார்ப்பான் என்கின்ற பெரிய ...<br />தானே வீழ்ந்துவிடும்!<br /><br /><br />பார்ப்பான் என்கின்ற பெரிய மரத்திற்கு வேர் கடவுளும், மதமும் ஆகும். இந்த வேரை அழித்தால் மரம் தானாகவே வீழ்ந்துவிடும்.<br />(விடுதலை, 20.11.1964)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-60307989760206146552013-08-10T18:30:33.947+05:302013-08-10T18:30:33.947+05:30
பழையவற்றைக் கிளறினால்...
நான்கு தீர்மானங்களை ம...<br />பழையவற்றைக் கிளறினால்...<br /><br /><br /><br />நான்கு தீர்மானங்களை முன்னிறுத்தி டெசோ அமைப்பு, தமிழ்நாடு தழுவிய அளவில் எழுச்சி ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.<br /><br />முதல் தீர்மானம்: இலங்கையில் 13ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் பற்றியதாகும். அந்தத் தீர்மானத்திலேயே ஒரு விஷயம் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.<br /><br />13ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம், ஈழத் தமிழர் பிரச்சினைக்கு முழு அரசியல் தீர்வாக அமையாது என்பதும்; இலங்கை உள்ளிட்ட - அனைத்து நாடுகளிலும், வாழும் ஈழத் தமிழர்களி டையே பொது வாக்கெடுப்பு நடத்தி, அவர்களுடைய கருத்தினைக் கேட்டுத் தீர்வு காண்பதுதான் ஈழத் தமிழர்களின் நலனுக்கு உகந்த தீர்வாக இருக்கும், என்பதுதான் டெசோ அமைப்பின் நிலைப்பாடாகும். இருப்பினும், தற்காலிகத் தீர்வாகாது, ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் பயன்பட வேண்டும் என்று டெசோ அமைப்பு கருதுகிறது எனத் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.<br /><br />இதுபற்றி தொலைக்காட்சிகளில் விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.<br />1987இல் ராஜீவ் ஜெயவர்த்தனே என்பது ஒரு வரப் பிரசாதம்; அதனைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறி விட்டனர் என்ற குற்றச்சாற்று காங்கிரஸ் தரப்பில் வைக்கப்படுகிறது.<br />26 ஆண்டுகள் ஓடி விட்ட காரணத்தால் அதன் உண்மைகள், தகவல்களை மறந்து போயிருப் பார்கள் மக்கள் என்ற மனப்பான்மையில் துணிந்து சொல்லப்படும் கருத்தாகவே இது கருதப்பட வேண்டும்.<br /><br />இந்த ஒப்பந்தம் தயாரிக்கப்படுவதற்குமுன் ஈழத் தமிழர்களுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் அமைப்புகளின் கருத்துக்கள் பெறப்படவில்லை. இலங்கை அரசும், இந்திய அரசும் (குறிப்பாக உளவுத் துறையும் சேர்ந்து) தயாரித்த சரத்துக்களைக் கொண்டதாகும்.<br /><br />விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை டெல்லி அசோகா ஒட்டலில் கிட்டத்தட்ட சிறைக் கைதிபோல் வைத்துப் பேசப்பட்டதாகும். தீட்சித் போன்றவர்கள் மிரட்டல் தொனியில் பேசியும், பிரதமர் ராஜீவ்காந்தி கேட்டுக் கொண்டும் ஒப்பந்தத்தில் உள்ள சரத்துகள் ஈழத் தமிழர்களின் உரிமைகளுக் குப் பாதகமாக இருந்ததால் பிரபாகரன் ஏற்றுக் கொள்ளவில்லையே!<br />கடைசியில் பிரதமர் ராஜீவ்காந்தியின் வார்த்தை களை நம்பத் தகுந்ததாகக் கருதி ஏற்றுக் கொள்ளும் ஒரு சூழ்நிலை (அதில்கூட பிரபாகரன் கையொப்ப மிடவில்லை) ஏற்பட்டது என்பதுதான் உண்மை.<br />ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட அதிபர் ஜெயவர்த் தனே (29.7.1987) கையொப்பம் போட்ட மை காய் வதற்கு முன்னதாகவே வானொலி, தொலைக்காட்சி ஊடகங்கள் மூலம் என்ன கூறினார்? (6.8.1987).<br />வடக்கு - கிழக்கு இணைப்புத் தற்காலிகமானது தான். இதைக் கண்டு ஏன் எதிர்ப்பைக் காட்டு கிறீர்கள்? நானே இந்த இணைப்பை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய இருக்கிறேன். தற்காலிகமான இந்த ஏற்பாட்டிற்கு என்னைப் புரிந்து கொள்ளாது சிங்களச் சகோதரர்களே, ஏன் ரகளை செய் கிறீர்கள்? என்று பேசவில்லையா?<br />அந்த இணைப்புக்கூட கிழக்கு மாகாணத்தில் வாக்கெடுப்பு நடத்தித்தான் முடிவு செய்யப்படுமாம்.<br /><br />கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும், (குடி யேற்றப்பட்டு விட்டார்களே) முசுலிம்களும் எதிராக வாக்களித்தால் அந்த இணைப்பு இல்லாமலேயே போய்விடும்.<br />அதற்குப்பின் ராஜபக்சே என்ன செய்தார்? தமது கூட்டணியில் உள்ள மார்க்ஸிய அமைப்பான ஜெ.வி.பி மூலம் உச்சநீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடுக்கச் செய்து, வடக்கு - கிழக்கு இணைப்புக் கூடாது என்ற ஒரு தீர்ப்பை பெற்றும் வைத்துள்ளார்.<br /><br />சிங்களமும், தமிழும் ஆட்சிமொழி ஆகும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளதே என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் கேட்டதற்கு அதிபர் ஜெயவர்த்தனே சொன்ன பதில் என்ன தெரியுமா? இரண்டு மொழிகள் இலங்கைக் கல்வி முறையில் தேவையா என்பது பற்றி இனிமேல்தான் ஆராய வேண்டும் (இந்தியன் எக்ஸ்பிரஸ் - 30.7.1987 பக்கம் 9) என்று ஒப்பந்தத்தின் மறுநாளே சொல்ல வில்லையா?<br /><br />இலங்கைக் குடியரசுத் தலைவரால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட நிலையில் புலேந்திரன் குமரப்பா உட்பட 17 பேர்களை இலங்கைக் கடற்படை கைது செய்ததே - அவர்களைக் காப்பாற்ற இந்திய அரசு முனையவில்லை என்பதைவிட தலையிட மறுத்தது என்பதுதானே உண்மை. அதன் காரணமாக விடுதலைப்புலிகள் அவர்களுக்கே உரிய பாணியில் சையனைடு குப்பிகளை பயன்படுத்தித் தற்கொலை செய்து கொண்டனரே! ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் கெதி இதுதானா?<br /><br />பழையனவற்றைக் காங்கிரஸ்காரர்கள் கிளற வேண்டாம் - அவை அவர்களுக்குச் சாதகமாக இருக்காது! இப்பொழுது 13ஆவது சட்டத் திருத் தத்தைக் கொண்டுவரச் செய்ய முடியுமா என்பதில், மத்திய அரசு கவனம் செலுத்தட்டும்!தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-5695779921971595422013-08-10T18:29:44.672+05:302013-08-10T18:29:44.672+05:30
ஏழை - பணக்காரத் தன்மைக்குக் காரணம் ஜாதி முறையே! ம...<br />ஏழை - பணக்காரத் தன்மைக்குக் காரணம் ஜாதி முறையே! முதல் அமைச்சர் சித்தராமையா படப்பிடிப்பு<br /> <br /><br />பெங்களூரு, ஆக.10- சமுதாயத்தில் ஏழை-பணக்காரர் இடையே இடைவெளி அதிகரிப் புக்கு காரணம் ஜாதி முறையே என்று சித்தரா மையா பேசினார்.<br /><br />பெங்களூரு சிறீ லட்சுமிநரசிம்மசாமி ஆன்மிக அமைப்பு சார் பில் நடைபெற்ற விழா வில் கலந்து கொண்டு முதல் அமைச்சர் சித்த ராமையா பேசும்போது கூறியதாவது:- பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களின் குழந்தை களுக்குக் கல்வி வசதி கிடைக்க வேண்டும். அவர்கள் முன்னேற வேண்டும் என்ற நோக் கத்தில் மாநிலத்தில் பல தலைவர்கள் செயல் பட்டு வந்துள்ளனர்; சமீபகாலமாக நான், எனது குடும்பம் என்ற மனோபாவம் மக்களி டையே அதிகரித்து வரு கிறது.<br /><br />இத்தகையவர்களால் எந்தப் பயனும் இல்லை. சுயநலத்துக்காக வாழ் பவர்களை<br /><br />மரணத்துக்கு பிறகு யாருமே நினைக் கப் போவதில்லை. அர சியலில் முறைகேடாக பணம் சம்பாதித்தவர் கள் என்ன ஆகி இருக் கிறார்கள் என்பது அனை வருக்கும் தெரியும். இந்த ஜாதி முறை யால் ஏராளமானவர் களுக்குக் கல்வி வாய்ப்பு கிடைக்கவில்லை. முந் தைய காலத்தில் மேல் தட்டு உயர் ஜாதி மக் களுக்கு மட்டுமே கல்வி கிடைத்தது. வஞ்சிக்கப் பட்டவர்களுக்கு அந்த கல்வி கிடைக்காததால் தான் இன்று சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற் பட்டுள்ளன. சமுதாயத் தில் ஏழை-பணக்காரர் இடையே இடைவெளி அதிகரித்து உள்ளதற்கு காரணம் ஜாதி முறையே.<br /><br />வஞ்சிக்கப்பட்ட மக்களின் குழந்தைகளுக் கும் நல்ல கல்வி கிடைக்க வேண்டும். அவர்களும் மற்றவர்களைப் போன்று வளர வேண்டும். இத் தகைய மக்களின் மேம் பாட்டுக்காக காங்கிரஸ் அரசு பல்வேறு திட்டங் களை தீட்டி செயல் படுத்தி வருகிறது.<br />இவ்வாறு சித்தரா மையா பேசினார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-74371328320967781812013-08-10T18:28:45.374+05:302013-08-10T18:28:45.374+05:30
மூடத்தனத்துக்குச் சவுக்கடி! குழந்தை தீப்பற்றி எரி...<br />மூடத்தனத்துக்குச் சவுக்கடி! குழந்தை தீப்பற்றி எரிவது பில்லி சூன்யம் அல்ல<br /><br /><br />மருத்துவர் மறுப்பு இது ஒரு வகை நோயே!<br /><br />சென்னை, ஆக.10- யாரும் பில்லி, சூன்யம் வைக்கவில்லை. உலகில் கடந்த 300 ஆண்டுகளில் 200 பேருக்கு மட்டுமே வந்த அதிசய நோயின் பாதிப்பு இது என்று குழந்தைக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் நாராயண பாபு கூறினார்.<br /><br />தானாக தீப்பற்றி எரியும் குழந் தைக்கு சிகிச்சை அளிக்கும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குழந்தை கள் நல தீவிர சிகிச்சை பிரிவின் தலைவர் மருத்துவர் நாராயண பாபு இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:<br />குழந்தை ராகுலுக்கு வந்துள்ள நோய் ஸ்பொன்டேனியஸ் ஹியூமன் கம்பஸ்டன் என்ற அதிசய நோய் ஆகும். இது உலகில் கடந்த 300 ஆண்டுகளில் 200 பேருக்கு மட்டுமே வந்துள்ளது.அதாவது ஒரு வகையான வாயு உடலின் உள்ளே இருந்து குழந்தையின் தோல் வழியாக வெளியே வருகிறது. அந்த வாயு எளிதில் தீப்பற்றக்கூடியதாகும். இதன் காரணமாக குழந்தையின் அருகே வெப்பமாக இருந்தாலும், அடுப்பு எரிந்து கொண்டிருந்தாலும், யாரா வது சிகரெட் போன்றவற்றை பிடித் துக்கொண்டிருந்தாலும் குழந்தையின் உடம்பில் தீப்பிடித்துவிடும். வியர்வை வியர்க்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.இந்த அபூர்வ நோய்க்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை. இன்னும் ஆராய்ச்சி அளவில் தான் உள்ளது.<br /><br />இந்த நோயால் பாதிக்கப்பட்ட வர்கள் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்தால் தீப்பிடிக்காது. காற்றோட் டமான இடத்தில் இருந்தாலும் தீப்பிடிக்காது. இதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட அந்த குழந்தையை பார்த்துக் கொள்கிறோம். தீக்காயங் களுக்கு மருந்துபோடுகிறோம். மற்றபடி குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. இது பில்லியோ, சூன்யமோ இல்லை. தெய்வக்குற்றமும் இல்லை. அறிவியல் ரீதியில் இது ஒரு நோய்.நான் 30 ஆண்டாக மருத்துவ தொழிலில் இருக்கிறேன். இப்படி தானாக உடலில் தீப்பற்றி எரிவதை கேள்விப்பட்டது இல்லை. பாடத்தில்தான் படித்திருக் கிறேன். இவ்வாறு மருத்துவர் நாராயண பாபு தெரிவித்தார்.<br /><br />விழுப்புரம் மாவட்டம் திண்டி வனம் அருகே உள்ள டி.பரங்குனி கிராமத்தைச் சேர்ந்தவர் கர்ணன் (வயது 26). கூலித்தொழிலாளி. இவரு டைய மனைவி ராஜேஸ்வரி (23). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ராஜேஸ் வரிக்கு கடந்த மே மாதம் 22ஆம் தேதி ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. குழந்தைக்கு ராகுல் என்று பெயர் வைத்தனர். ராகுல் பிறந்த 9ஆவது நாள் அன்று வீட்டில் பகலில் கட்டிலில் படுக்கவைத்திருந்தனர். அருகில் பெற்றோர் இருந்தனர். அப்போது திடீர் என்று குழந்தையின் உடலில் தீப்பற்றி எரிந்தது. ஏதாவது விளக்கு தீ பட்டுவிட்டதா வேறு எப்படி தீப்பிடித்தது என்று பெற் றோர் அக்கம்பக்கம் சுற்றிப்பார்த்தனர். ஆனால் அப்படி எந்த வித அறிகுறியும் தெரியவில்லை. 13ஆவது நாள் அன்று குழந்தையின் உடலில் மீண்டும் தீப்பற்றி எரிந்தது. 30ஆவது நாள் அன்றும் அப்படியே தீப்பற்றி எரிந்தது. இவ்வாறு தீப் பிடித்தபோது குழந்தையின் உடலில் தீக்காயம் ஏற்பட்டது. குழந்தை வலியால் துடித்தது.இதனால் மிகவும் பதறிப்போன பெற்றோர் உடலில் தீக்காயம் ஏற்பட்ட ராகுலுக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச் சைக்கு பின்னர் வீடு திரும்பிய ராகுலின் உடலில் மீண்டும் தீப்பற்றி எரிந்தது.<br /><br />இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் கிருஷ்ணணமூர்த்தி தலை மையில் மருத்துவர்கள் கொண்ட குழு குழந்தையின் உடலை பரிசோதித் தனர். மருத்துவர்கள் கூறுகையில் குழந்தை ஆரோக்கியமாக இருப்ப தாகவும், உடலில் ஏற்பட்டுள்ள தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி குழந்தை ராகுல், சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டுவரப்பட்டான்.<br /><br />சிறப்பு மருத்துவக்குழு குழந்தை ராகுலை குழந்தைகள் நலத்துறை தலைவர் பேராசிரியர் மருத்துவர் நாராயண பாபு பரிசோதித்தார். அந்த குழந்தை மீது மேலும் தீப்பிடிக்காத அளவுக்கு குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் சிறப்பு ஏற்பாடு செய்து அனுமதித்துள்ளனர். குழந்தை குளி ரூட்டப்பட்ட அறையில் உள்ளது.<br /><br />தீப்பிடித்தால் அணைக்க தீயணைப்பு கருவியும் வைக்கப்பட்டுள்ளது. ராகுலை கண்காணித்து சிகிச்சை அளிக்க இரவும் பகலும் தனித்தனி யாக ஒரு மருத்துவர் ஒரு நர்சு ஆகி யோர் சிறப்பு பணியில் ஈடுபடுத் தப்பட்டுள்ளனர். தற்போது குளூக் கோஸ் ஏற்றப்படுகிறது. குழந்தையின் உடல், தலை, கால் ஆகிய இடங்களில் தீக்காயம் உள்ளன. அந்த காயங் களுக்கு மருந்து போடப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறதுதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-34233422270542730822013-08-10T07:10:25.241+05:302013-08-10T07:10:25.241+05:30" நான் 1925 இல் காங்கிரசை விட்டு வெளியே வந்தே..." நான் 1925 இல் காங்கிரசை விட்டு வெளியே வந்தேன். வந்தது முதல் ஜாதி ஒழியவேண்டும். நம் மக்களிடையே இருக் கிற இழிவு, மானமற்ற தன்மை ஒழிய வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டு சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தேன்.<br />தேர்தலில் ஈடுபட்டால் மக்களிடையே உண்மையைக் கூற முடி யாது. ஆகையால், தேர்தலுக்கு நிற்கக் கூடாது என்று கொள்கை வைத்துத் தொண்டாற்றி வருகின்றேன். தேர்தலில் ஈடுபடாத காரணத்தினால்தான் நான் உங்களைக் காட்டுமிராண்டிகளே என்று அழைத்து, உங்களின் இழிநிலையை எடுத்துக் கூற முடிகிறது. இப்படிக் கூறி விட்டு உங்களிடம் வந்து நான் ஓட்டுக் கேட்டால், நீங்கள் என்ன சொல்வீர்கள்.<br />அயோக்கியன்! எங்களை காட்டுமிராண்டி என்று சொல்லிவிட்டு வோட்டு வேறு கேட் கிறாயா? என்று திருப்பிக் கேட்பீர்களா? இல்லையா? அதோடு நான் உண்மையை உங்களிடம் சொல்ல முடியாது என்பதால் தேர்தலில் நிற்காமல் தொண்டாற்றி வருகின்றேன் ! "<br />= தந்தை பெரியார் , (விடுதலை, 13.11.1968தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com