tag:blogger.com,1999:blog-1474608369333206681.post5566560286606563152..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: மனித வாழ்வுக்கு உதவுபவர் இழி சாதியா? - பெரியார்தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-1238355051245006052013-09-19T18:50:53.397+05:302013-09-19T18:50:53.397+05:30தனது பிறந்தநாளில் கொடுக்கப்படும் பரிசுப் பொருட்க...தனது பிறந்தநாளில் கொடுக்கப்படும் பரிசுப் பொருட்களை பெரியார் என்ன செய்வார் என்று கூறுகிறார்:<br /><br />"இன்று எனது எடைக்கு எடை முந்திரிப் பருப்பு அளித்துள்ளீர்கள். எனது எடையானது 192- ராத்தல் ஆகும். எனது எடைக்கு எடை வெள்ளி ரூபாய்கள், பேரீச்சபழம், துணி, நெல், கம்பு, உப்பு இப்படி அளித்தார்கள். காலையில் வயதை எண்ணி பவுன்கள் கொடுத்தார்கள். சென்ற ஆண்டு நண்பர் திரு. எம்.ஆர். இராதா அவர்கள் எனது வயது அளவுக்கு வருடத்துக்கு ஒரு பவுன் வீதம் தருவதாகக் கூறி 10.000 ரூபாய் அளித்தார்.<br /><br />நான் எனக்கு அளிக்கப்படும் பொருள்களைப் பணமாக ஆக்குகின்றேன்.<br /><br />நமது கழகத்துக்கு மாதம் குறைந்த பட்சம் 5000- வீதம் வருவாய் வரும் நிலையில் உள்ளது. இனி பணம் சேர்ப்பதை நிறுத்திக் கொண்டு பல தொழில்களுக்கும் பள்ளிகள் ஏற்படுத்த முயற்சித்து வருகின்றேன்.<br /><br />கவனிப்பாரற்றுத் திரிகின்ற பிள்ளைகளுக்கு இப்படி வாழ்க்கைக்கு வழிகாட்டும்படியான தொழில் பள்ளி ஏற்பாடு செய்ய இருக்கிறேன். இதற்கு மாதம் 1.500- செலவாகக் கூடும். இன்னும் மற்ற மற்றப் பணிகளும் செய்ய திட்டம் போட்டுள்ளேன்."<br /><br />- பெரியார்,<br />('விடுதலை', 29.07.1962)<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-88276343688447165452013-09-19T18:49:47.218+05:302013-09-19T18:49:47.218+05:30என்னுடைய பிறந்த நாளில் இராமாயணம், பகவத்கீதை போன்ற ...என்னுடைய பிறந்த நாளில் இராமாயணம், பகவத்கீதை போன்ற ஆபாச நூல்களைக் கொளுத்துவது என்று காலையில் நடந்த (திராவிடர் கழகம்) சாதி ஒழிப்பு மாநாட்டில் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. அதனை நல்ல வண்ணம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது அதிலுள்ள ஆபாசங்களையும் நாம் எடுத்து விளக்க வேண்டும். இராமாயணம், சீதையாணம் முதலிய நூல்களில் உள்ள ஆபாசங்களையும், கடவுள்களின் தன்மைகளையும் விளக்கமாக எடுத்துக் கூறிமுடித்தார்கள்.<br /><br />- பெரியார்,<br />('விடுதலை', 14.05.1962)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-1079737023773934822013-09-18T19:34:39.279+05:302013-09-18T19:34:39.279+05:30 பிள்ளையார் சிலை உடைப்பு: எது ஒழுக்கம்?
தந்தை பெர... பிள்ளையார் சிலை உடைப்பு: எது ஒழுக்கம்?<br /><br />தந்தை பெரியார் அவர்கள் காலத்தில், ஏன் பிள்ளையாரை உடைத்தார்? அவருக்கு என்ன பிள்ளையார்மீது கோபமா? உடைப்பதில்கூட ஒரு கட்டுப்பாட்டினைத் தன்னுடைய தோழர் களுக்குச் சொல்லியிருக்கிறார். குளத்தருகிலோ, மரத்தடியிலோ இருக்கின்ற பிள்ளையாரைக் கொண்டு வந்து உடைக்க வேண்டாம்; நம்முடைய காசைக் கொடுத்து வாங்கி அந்தப் பிள்ளையார் சிலைக்குச் சக்தி இல்லை என்று உடைத்துக் காட்ட வேண்டும் என்றுதான் சொன்னார்.<br /><br />இன்னொருவருடைய பொருளை எடுக்கக் கூடாது; அது திருட்டாகிவிடும்; அது தவறாகும். அதைச் செய்யக்கூடாது.<br /><br />ஆனால், பக்தன் என்ன சொல்கிறான்? திருட்டுப் பிள்ளையாரைக் கொண்டுவந்து கோவிலில் வைக்கவேண்டும் என்று சொல்கிறான்.<br /><br />இரண்டு பேருடைய ஒழுக்கத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.<br /><br />கடவுள் இல்லை என்று சொல்கின்ற நாத்திகர் பெரியார் அவர்கள், பிள்ளையாரை உடைத்த பெரியார் அவர்கள், உங்களுடைய சொந்தச் செலவில் பிள்ளையார் சிலையை வாங்கி உடையுங்கள் என்று சொன்னது ஒழுக்கமா? அல்லது திருடிக் கொண்டு வந்து கோவிலில் வைக்கவேண்டும் என்று பக்தன் சொல்வது ஒழுக்கமா?<br /><br />- பேராவூரணியில் 8.9.2013 அன்று நடைபெற்ற தி.க.வட்டார மாநாட்டில் தமிழர் தலைவர் கி.வீரமணி.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-58731903233939590922013-09-18T19:33:54.242+05:302013-09-18T19:33:54.242+05:30பெண்களுக்கான உரிமைகள்
1929ஆம் ஆண்டு செங்கல்பட்டி...பெண்களுக்கான உரிமைகள்<br /><br /><br />1929ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டில் மனிதரில் மேல்ஜாதி கீழ்ஜாதி என்ற வேற்றுமை இருப்பதுபோல் ஆண் உயர்ந்தவன், பெண் தாழ்ந்தவள் என்ற வேறுபாடும் இருக்கக் கூடாது என்று பேசியதுடன், அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்குச் சம வாய்ப்புக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திப் பேசியவர் நம் அய்யா அவர்கள்.<br /><br />இதனைக் கேட்ட சிலர், அப்படி என்னென்ன உரிமைகள் பெண்களுக்கு வேண்டும் என்று கேட்கிறீர்கள் என்று அய்யா அவர்களிடம் கிண்டலாகக் கேட்டனர்.<br /><br />கேட்டவர்களின் தொனியைப் புரிந்துகொண்ட அய்யா அவர்கள், நீங்கள் ஒன்றும் அதிகமாகப் பெண்களுக்கு உரிமைகளைத் தந்துவிட வேண்டாம். ஆண்களாகிய நீங்கள் இப்போது என்னென்ன உரிமைகளை அனுபவித்து வருகிறீர்களோ அதேபோல் பெண்களுக்கும் தந்தால் போதும் என்றதும் கேட்டவர்கள் வாயடைத்துப் போனார்களாம்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-29618092513395850882013-09-18T19:33:19.537+05:302013-09-18T19:33:19.537+05:30பெரியார் இல்லாவிட்டால்...?
கேள்வி : பெரிய...பெரியார் இல்லாவிட்டால்...?<br /> <br /><br />கேள்வி : பெரியார் தமிழ்நாட்டில் பிறக்காதிருந்தால்...?<br /><br />பதில் : கடைசி மனிதர்களும் தலைநிமிர்ந்து நின்றிருக்க முடியாது.<br /><br />கேள்வி : பூட்டிய அறைக்குள் 10 நாள் பொழுதுபோக என்ன புத்தகங்கள்?<br /><br />பதில் : அம்பேத்கர், பெரியார் புத்தகங்கள்தான்.<br /><br />கேள்வி : பிடித்த பாரதிதாசன் கவிதை?<br /><br />பதில்: ``இருட்டறையில் உள்ளதடா உலகம். ஜாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே!<br /><br />கேள்வி : விரும்புவது எந்த கலர் பேண்ட்?<br /><br />பதில் : ``கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு<br /><br />- கல்கி (18 ஆகஸ்ட் 2013) இதழில் தொல்.திருமாவளவன் அளித்த பதில்களிலிருந்து...தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-70560072791511736542013-09-18T19:32:21.369+05:302013-09-18T19:32:21.369+05:30பெரியார் திடல் வாங்கிய கதை!
ஜி.டி.நாயுடு அவர்கள்...பெரியார் திடல் வாங்கிய கதை!<br /><br /><br />ஜி.டி.நாயுடு அவர்கள் பேசினார்கள். உங்களுக்கும் தெரியும் அய்யா ஜி.டி.நாயுடு அவர்களுக்கும் எனக்கும் இருக்கிற நட்பு. எப்பவும் அவுங்க, எந்தக் கூட்டத்துக்கு வந்தாலும் என்னைப் பாராட்டுவதற்கு அவர் கொண்டிருக்கிற ஒரு உறவு என்னைப் பற்றிக் கேலியா சில வார்த்தைகள் சொல்லுவது என் காதுக்கு இனிய சில சிக்கல் சம்பிரதாயங்களை எடுத்து எடுத்துச் சொல்லுவார்கள். ஒன்னும் பொய் இருக்காது. அதை நான் சொல்லிக்கிறேன். நிஜம் தான் (கைத்தட்டல் சிரிப்பு) அய்யா அவர்களுக்கும் அது வேடிக்கை. சிக்கனம். நாங்கள் இரண்டு பேரும் ஒரு இலையில் உட்கார்ந்துக்கிட்டு சாப்பிட்டவன்தான். என்னால் ஆனவரைக்கும் தடுப்பேன். அவரு வேலைக்காரன் தானே எனக்கு அதிகமாகப் போட்டுட்டுப் போயிடுவான். (சிரிப்பு) அது அவருக்கு வேடிக்கை. போடுங்கிறேன். அவரு திங்கிறாரா இல்லையான்னு பார்ப்பார். அப்படி ரொம்ப எங்கள் இருவருக்கும் பழக்கமாயிடுச்சி. அதனாலே இந்த வேடிக்கையை எல்லாம் எடுத்துச் சொல்லுகிறதுதான். அது என்னைப் பற்றிச் சொல்லுகிறதுக்குப் (என்னை) பாராட்டுவதிலே அது அவருக்கு ஒரு முறை அவ்வளவுதான். (கைத்தட்டல் சிரிப்பு) வேறு சில விஷயங்களையும் அவரு சொன்னாரு. முக்கிய விஷயத்தையும் நான் சொல்றேன். இந்த இடம் (பெரியார் திடல்) அவர் ஜி.டி. நாயுடுகாரு) வாங்கிக் கொடுத்தது. (பெரியார் அவர்களுக்கு அடிக்கடி ஏப்பம் வந்து தொல்லை தருகிறது ஆனாலும் பேச்சு தொடர்கிறது). ஆரம்பத்திலே நான் வேண்டான்னுட்டேன். இதற்கு முன்பே என்கிட்டே விலைக்கு வந்தது. வந்து சொன்னாங்க வாங்கலாம்னு. பின்னால் அவர் வாங்கிட கட்டாயப்படுத்தவே _ -இயக்கத்துக்காக வாங்கினேன்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-80469306474243140802013-09-18T19:30:59.363+05:302013-09-18T19:30:59.363+05:30பெரியார் வாழ்கிறார்
இப்போதெல்லாம்
குப்பனையும் ச...பெரியார் வாழ்கிறார்<br /><br /><br /><br />இப்போதெல்லாம்<br />குப்பனையும் சுப்பனையும்<br />கோவில்களுக்குள்<br />காண முடிகிறது<br /><br />பொட்டுக்கட்டி விடப்பட்டிருந்த<br />பொன்னுத்தாயின் பேத்தி<br />லண்டனில்<br />பிசியோதரபி படிக்கிறாள்<br /><br />வியாதி என்றதும்<br />மந்திரித்து<br />தாயத்துக் கட்டிய கைகளில்<br />மருந்துச் சீட்டுகள்<br /><br />மாவட்ட ஆட்சியர் மாடசாமியிடம்<br />கையெழுத்திட வேண்டிய கோப்புகளைப்<br />பணிவோடு காட்டுகிறார்<br />கணேச அய்யர்<br /><br />வெண்டைக்காயை ஒடித்துப் பார்த்தும்<br />தேங்காயைத் தட்டிப் பார்த்தும்<br />கொள்முதல் செய்யும் கணவர்கள்<br />காய்கறிச் சந்தைகளில்<br /><br />மொட்டை போட்டிருந்த<br />நண்பன் ஒருவனிடம்<br />கோவிலுக்கா என்றேன்<br />சம்மருக்கு என்றான் சாதாரணமாக<br /><br />மேலத் தெருவில்<br />கீழத் தெருக்காரர்களின்<br />பாலிஷ் செய்யப்பட்ட<br />பாதுகைகளின் தடங்கள்<br /><br />வெண்ணிலாவின்<br />மதிப்பெண் அட்டையில்<br />அம்மா பெயரின் முன்னெழுத்தும்<br />மின்னிச் சிரிக்கிறது<br /><br />கழுத்துக் கயிற்றின்<br />மதச் சின்னங்கள்<br />காலாவதி ஆகிப் போய்<br />சில்வர் செயினில்<br />'Love' 'Cool' வாசகங்கள்<br /><br />தொலைக்காட்சியின்<br />சமையல் நிகழ்ச்சிகளில்<br />தொகுத்து வழங்கும் பெண்களையும்<br />சமைத்துக் காட்டும் ஆண்களையும்<br />எவரும் விகாரமாய்ப் பார்ப்பதில்லை<br /><br />சாலைகளில் முளைத்த<br />'வழி'பாட்டுத் தலங்கள்<br />அவ்வப்போது<br />நகராட்சியின் புல்டோசருக்கு இரையாகிறது<br /><br />மதத்தை ஜாதியை முன்னிறுத்தும்<br />அரசியல் அமைப்புகள் யாவும்<br />பெரியாரின் மண்ணில்<br />மண்ணையே கவ்வுகின்றன ....<br /><br />- ஓவியச்செல்வன்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-83832740369656529722013-09-18T19:29:42.483+05:302013-09-18T19:29:42.483+05:30வாழ்த்து?
எனக்கு வாழ்த்துவதிலே நம்பிக்கையில்லை. ...வாழ்த்து?<br /><br />எனக்கு வாழ்த்துவதிலே நம்பிக்கையில்லை. அது ஒரு மூடநம்பிக்கை. என்னை வையிரான் பாருங்க. அவன் நாசமாயப் போகமாட்டானான்னு அதுவும் ஒரு மூடநம்பிக்கைதானே. உடனே நான் நாசமாய்ப் போயிடுவேனா நான். ஆனதினாலே எல்லா மூடநம்பிக்கை போல வாழ்த்தும் _- ஒரு மூடநம்பிக்கை. ஆனாலும் அது ஒரு செல்வாக்குப் பெற்றிருக்கிறதினாலே, அது காதுக்கு இனிமை கொடுக்கிறது. அது என்னா செய்கிறதுன்னா? வாழ்த்துகிறபோது அது இனிமையைக் கொடுக்கிறது. வைகிறபோது கொஞ்சம் துன்பத்தைக் கொடுக்கிறது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-11342382134686670452013-09-18T19:29:17.610+05:302013-09-18T19:29:17.610+05:30மறு கன்னத்தைக் காட்டினால் என்னாகும்?
கருத்தொற்ற...மறு கன்னத்தைக் காட்டினால் என்னாகும்?<br /> <br /><br />கருத்தொற்றுமை கொண்ட வள்ளுவரும் இயேசுவும் நான் ஏறக்குறைய வள்ளுவரின் சங்கதிகளைக் கிறிஸ்துவுக்கும் பொருத்துவதுண்டு. ஆனால் நான் வள்ளுவர் முந்தியா? கிறிஸ்து முந்தியா? என்பதில் நான் கிறிஸ்து முந்தின்னு சொன்னால் கொஞ்சம் தகராறு வரும். ஆனால் அவர் வெகு தூரத்திலே 5000, 6000 மைலுக்கு அப்பாலே இருந்தவர். இவர் (வள்ளுவர்) இப்பால் இருந்தவர். இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் காப்பி அடிச்சிருக்க மாட்டாங்க _ வைச்சிக்கங்க, ஆனாலும் கருத்து ஒன்னாயிருக்கும். நல்லா மகிழ்ச்சியோடு அன்போடு அவரவர்கள் கருத்தைக் காட்டியிருக்கிறார்கள்.<br /><br />ரொம்பச் சரி. இவர்போல்தான் சொல்லியிருக்கிறார் கிறிஸ்து. இந்தக் (வலது) கன்னத்தில் அறைந்தால், இந்தக் (இடது) கன்னத்தையும் காட்டு என்று! மேல்சொக்காயைப் பிடுங்கினால் அடிச் சொக்காயையும் கழட்டிக் கொடுன்னார்! (சிரிப்பு) சரி ரொம்ப -அன்புக்கும் அது சரி. ரொம்ப ஆழ்ந்த ஞானத்துக்கும் அது இருக்குது. அது இன்னைக்கு முடியுமோ? இந்தக் கன்னத்தில் அறைஞ்சதும் நீ மறு கன்னத்தையும் காட்டினால் வாயில் உள்ள முப்பத்திரண்டு பல்லும் போயிடும் (சிரிப்பு). வெறும் ஆளாய்த்தான் போய்ச் சேருவான், கொஞ்சம் எதிர்த்தால்தான் முடியும். இன்றைக்கு அப்படி வேண்டியிருக்குது. அவர்கள் அப்பொழுது அப்படி இருந்தார்கள், அவர்கள் பயித்தியக்காரர்கள் அல்ல. அன்றைய காலம் அப்படி இருந்திருக்கும். ஒரு சமயம் அது போலவே நம்ம இலக்கியங்களிலே அனேக சங்கதிகள் இருக்கு. அதை சுவாமிகளும் சொல்லியிருக்கிறாங்க. அதை நம்புகிறோமோ இல்லையோ அது மாதிரி நடந்ததோ, இல்லையோ அதிலே இருக்கிற கருத்துகள் ரொம்பச் சரி, சிலது அப்படியே இருக்குது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-28797799750144924222013-09-18T19:27:59.793+05:302013-09-18T19:27:59.793+05:30ஒலிவட்டு Audo CD
தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வ...ஒலிவட்டு Audo CD<br /><br />தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள்<br /><br />தொடர்புக்கு : பெரியார் புத்தக நிலையம்<br /><br />தொலைப்பேசி : 044௨6618161<br /><br />பரபரப்பான இன்றைய உலகில் புத்தகங்களைப் படிப்பதற்குப் பலருக்கு நேரம் இருப்பதில்லை. ஒலிப் புத்தகங்களின் தேவை அதிகரித்துவிட்டது. பேருந்தில், ரயிலில் பயணம் செய்யும்போது பயனுள்ள கருத்துகளைத் தெரிந்து கொள்ள உதவும் வகையில் தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் ஒலிப் புத்தக வடிவில் வெளிவந்துள்ளது.<br /><br />தந்தை பெரியாரின் கருத்துகளை _- கொள்கைகளை இளைய தலைமுறையினரும் தெரிந்து பயன்பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.<br />பல ஆண்டுகளுக்குப் பின் இந்த உலகம் எப்படி எல்லாம் மாறியிருக்கும், அறிவியலின் கண்டுபிடிப்புகள் எப்படி உருவாகியிருக்கும் என்பதை முன்கூட்டியே சிந்தித்துச் சொன்ன அறிவு ஆசானின் சிந்தனைகள்,<br /><br />இனிவரும் உலகம், கடவுளும் மதமும் ஒழிய வேண்டும் ஏன்?, தமிழனை அடிமையாக்கியவை எவை? என்ற மூன்று தலைப்புகளில் மிளிர்கின்றன. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் குரலில் இனிவரும் உலகம் ஒலிக்கிறது.<br />தொடர்ந்து தந்தை பெரியாரின் சிந்தையைக் கவரும் கருத்துச் செல்வங்கள் வெளிவரும் என்ற அறிவிப்பு அடுத்தடுத்த ஒலிப் புத்தகங்களையும் எதிர்பார்க்க வைக்கிறது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-40871002203936959392013-09-18T19:27:10.068+05:302013-09-18T19:27:10.068+05:30நூல்:
வடநாட்டில் பெரியார் (தொகுதி 1, 2)
தொகுப்பாச...நூல்:<br /><br />வடநாட்டில் பெரியார் (தொகுதி 1, 2)<br />தொகுப்பாசிரியர்: கி.வீரமணி<br /><br />வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் பெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி. சம்பத் சாலை,. வேப்பேரி, சென்னை_7.<br /><br />பக்கங்கள்: தொகுதி 1: 224, தொகுதி: 2: 384. விலை: தொகுதி 1: 90, தொகுதி 2: ரூ.150. உலக மக்கள் அனைவரும் மூடநம்பிக்கைகளில் இருந்து _ மூடப் பழக்கவழக்கங்களில் இருந்து மீள வேண்டும் என எண்ணியவர் தந்தை பெரியார் அவர்கள். தமது எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுக்க வடநாட்டுப் பயணம் மேற்கொண்டார். பம்பாய், கல்கத்தா, பாட்னா, கான்பூர் போன்ற இடங்களுக்குச் சென்று ஆற்றிய உரைகள், நடத்திய மாநாடுகள், இயற்றிய தீர்மானங்கள், சந்தித்த நபர்கள், பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டிகள், அய்யாவின் உரைக்கு _ கருத்துக்கு பத்திரிகைகள் கொடுத்த சிறப்பு, பொதுமக்களிடம் காணப்பட்ட வரவேற்பு போன்ற பல செய்திகளை உள்ளடக்கிய நூல்.<br /><br />தந்தை பெரியாரை _ அவரது தடம் பிறழாத கொள்கைகளை _ சொல் வீச்சுகளைப் படம் பிடித்துக் காட்டி அனைவரது உள்ளங்களிலும் இல்லங்களிலும் இடம்பெற வேண்டிய கருத்துப் பெட்டகமாகத் திகழ்கிறது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-59980775414839252822013-09-18T19:26:02.390+05:302013-09-18T19:26:02.390+05:30 மாறுதல்
ஒரு கணவன் அவன் மனைவியை ஏதாவது அடிச்சிப்... மாறுதல்<br /><br /><br />ஒரு கணவன் அவன் மனைவியை ஏதாவது அடிச்சிப் போட்டான்னா அது கிரிமினல். பொம்பளைகள் எல்லாம் முன் காலத்திலே எப்படி நினைத்துச் சொல்லுவாள் தெரியுமா புருஷனிடம்? மகாராசா உன் கையாலே நான் செத்தால்நான் புண்ணியத்துக்குப் போய்டுவேன் என்பாள். இப்ப சட்டப்படி அது கிரிமினல். இப்போ வைதால் கிரிமினல். வாடி போடீன்னா இவன் கிட்டே இருக்க இஷ்டமில்லை அய்யா என்னைக் காட்டுமிராண்டி-யாட்டம் பேசுறான் என்பாள். இதெயெல்லாம் மனிதனுக்குச் சுதந்திரம் ஏற்பட்ட பிறகு _ மாறுதல் ஏற்பட்ட பிறகு ஏற்படுகிற மாற்றம். உலகம் இன்னும் எவ்வளவோ மாறிக்கிட்டு வரப்போவுது. ---பெரியார்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-31174204649630062882013-09-18T19:24:48.754+05:302013-09-18T19:24:48.754+05:30முட்டாள்கள் எங்கும் உண்டு
அமெரிக்கர் ஒருவர் அய்யா...முட்டாள்கள் எங்கும் உண்டு<br /><br />அமெரிக்கர் ஒருவர் அய்யா அவர்களைப் பார்க்க வந்திருந்தார். அய்யாவின் கொள்கைகள் பற்றி விவாதித்த அவர், மக்களிடையே நாளுக்கு நாள் ஒழுக்கக்கேடுகள், வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இளைஞர்கள் மிகவும் கெட்டுப் போகின்றனர். அவர்களை நல்வழிப்படுத்தி அவர்களுக்கு ஒழுக்க உணர்வை ஊட்டவாவது தெய்வபக்தி, மதநம்பிக்கை இவை இருக்க வேண்டியது அவசியமல்லவா? என்று கேட்டுள்ளார்.<br /><br />உடனே அய்யா அவர்கள், மதபோதனை, கடவுள் பக்தி எல்லாம் எத்தனையோ காலமாக மக்களுக்குச் சொல்லப்பட்டு வருகின்றன. இருந்தும் ஒவ்வொரு நாட்டிலும் குற்றவாளிகளின் எண்ணிக்கை குறையவில்லை. கூடிக்கொண்டுதான் போகிறது. உங்கள் நாட்டிலேகூட நிமிடத்துக்கொரு கற்பழிப்பு, மணிக்கொரு கொலை நடப்பதாகப் பத்திரிகைகள் எழுதுகின்றன. ஆகையினாலே நீங்கள் சொல்லும் மதபோதனை, கடவுள் பக்தி இவையெல்லாம் மக்களிடையே ஒழுக்கத்தை வளர்க்கவில்லை என்றுதானே அர்த்தம் என்று கேட்டுள்ளார்.<br /><br />உடனே அமெரிக்கர், ஹரே ராமா! ஹரே கிருஷ்ணா இயக்கம் அமெரிக்காவிலும் பரவி வருகிறதே என்றதும்,<br /><br />முட்டாள்கள் தமிழ்நாட்டுக்கு மட்டும் சொந்தமல்லர். எல்லா நட்டிலேயும் இருப்பாங்க, அமெரிக்காவிலும் இருக்காங்க என்றாராம் அய்யா.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-58680858129828061502013-09-18T19:23:57.534+05:302013-09-18T19:23:57.534+05:30வாழ்த்துவதில் கணக்குப் பார்க்கும்போது..
அய்யா ...வாழ்த்துவதில் கணக்குப் பார்க்கும்போது..<br /> <br /><br /><br />அய்யா அவர்களின் 83ஆவது பிறந்த நாள் விழா ஈரோடு பெரியார் மன்றத்தில் நடைபெற்றது. விழாவுக்கு அய்யா அவர்களும் வருகை தந்திருந்தார்கள். கூட்டத்தில் பேசிய பேச்சாளர்களுள் பலர்,<br /><br />அய்யா அவர்கள் ஈரோட்டில் பெண்கள் கல்லூரி தொடங்க வேண்டும். ஈரோட்டிற்கு அய்யா அவர்கள் எதுவும் செய்வதும் இல்லை. அய்யா காசு விசயத்தில இப்படிக் கணக்குப் பார்க்கக் கூடாது. கொஞ்சம் தாராளமாக இருக்க வேண்டும் என்று அய்யாவின் சிக்கனத்தைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்கள்.<br /><br />கூட்டம் முடியும்போது பேசிய அய்யா அவர்கள், நான் காசு பணம் விசயத்தில ரொம்பக் கணக்குப் பார்க்கிறேன்னு பேசியவர்களில் அதிகமானோர் சொன்னார்கள். நீங்கள் என்னை வாழ்த்தியபோது, அய்யா 100 வயசு வரையில் இருக்கணும், 101 வயசு வரையிலும் வாழணும் அப்படினுதானே வாழ்த்தினீர்கள். ஏன் லட்சம் வருசம் உயிரோடு வாழணும், அய்யா கோடி வருசம் வரை இருக்கணும்னு வாழ்த்தலே?<br /><br />நீங்க சும்மா வாழ்த்தறதிலேயே ஒரு கணக்குப் பார்க்கறீங்க. கஞ்சத்தனம் காட்றீங்க இது பணம், காசு விசயம்கூட இல்லை. சும்மாவே வாழ்த்தப் போறீங்க _ அப்படியிருக்க என்னைப் பார்த்துக் கணக்குப் பார்க்கறீங்கன்னு சொல்வது நியாயமா? என்று கேட்டாராம்.<br /><br />- நூல்: மேதைகளின் கருத்துக் களஞ்சியம்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-64253288203773446062013-09-18T19:21:06.874+05:302013-09-18T19:21:06.874+05:30வைக்கம் வீரர்
திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள்...வைக்கம் வீரர்<br /> <br /><br />திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் என்ற நூலில் சுவையான எழுத்தோவியம் இதோ:<br />வைக்கத்தில் (1924) தீண்டாமைப் போராட்டம் எழுந்தது. நாயக்கர் அங்கு சென்று சத்தியாகிரகம் செய்தார். திருவாங்கூர் அரசாங்கம் அவரைச் சிறைப்படுத்தியது. அப்பொழுது யான் வைக்கம் வீரர் என்று தலைப்பீந்து நாயக்கரின் தியாகத்தை வியந்து வியந்து நவசக்தியில் எழுதுவேன். வைக்கம் வீரர் என்பது நாயக்கருக்கொரு பட்டமாகவே வழங்கலாயிற்று. (பக்கம் 349)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-24879290311696814902013-09-18T19:16:31.927+05:302013-09-18T19:16:31.927+05:30
சேது சமுத்திரத் திட்டமும் - மத்திய அரசின் முடிவும...<br />சேது சமுத்திரத் திட்டமும் - மத்திய அரசின் முடிவும்!<br /><br />தமிழர்களின் நீண்ட கால கனவுத் திட்டம், சேது சமுத்திரத் திட்டமாகும். 1860 ஆம் ஆண்டு இதன் தொடக்கமாகும். 153 ஆண்டுகாலமாக இது நிறை வேற்றப்படாமல், தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு வருகிறது.<br /><br />மத்தியில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில், தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு அவர்கள், கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த நிலையில், இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதில் வேகம் காட்டப்பட்டது.<br /><br />60 சதவிகித பணிகள் முடிவுற்ற நிலையில், இந்தத் திட்டம் கூடாது; என்று முட்டுக்கட்டை போடப்பட்டு விட்டது.<br /><br />பச்சைப் பார்ப்பனரான சு.சாமி என்பவரும், அண்ணா பெயரையும், திராவிட இனக் கலாச்சாரப் பெயரையும் கட்சியில் வைத்துக்கொண்டுள்ள அண்ணா தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான செல்வி ஜெய லலிதாவும் உச்சநீதிமன்றத்திலே வழக்குத் தொடுத்து இடைக்காலத் தடையைப் பெற்று விட்டனர்.<br /><br />ராமன் கட்டிய பாலத்தை இடித்து, இந்தத் திட்டத்தை நிறைவேற்றப் பார்க்கிறார்கள் - இது இந்துக்களின் மனதைப் புண்படுத்தக் கூடியது, என்ற கரடியை அவிழ்த்துவிட்டுள்ளார்கள்.<br />இதில் என்ன கொடுமை என்றால், பி.ஜே.பி. காரர்கள் ராமன் பாலம் என்று சொல்லப்படும் பாதையில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று சொல்லி வருகிறார்களே தவிர, திட்டமே கூடாது என்று கூறவில்லை. ஆனால், செல்வி ஜெயலலிதா அவர்களோ இந்தத் திட்டமே அறவே கூடாது என்று அடம்பிடிக்கின்றார்.<br /><br />இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் 6 ஆவது வழித்தடம் என்பது அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் முடிவு செய்யப்பட்டதல்ல, மாறாக வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது பி.ஜே.பி. ஆட்சியில்தான் முடிவு செய்யப்பட்டது.<br /><br />முரளிமனோகர் ஜோஷி, செல்வி உமாபாரதி, தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ்.திருநாவுக்கரசர் ஆகியோர் மத்தியில் அமைச்சராக - பி.ஜே.பி. ஆட்சிக்காலத்தில் ஒப்புதலும் பெறப்பட்டதாகும்.<br /><br />அ.இ.அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை இரண்டு தேர்தல் அறிக்கையிலே சேது சமுத்திரத் திட்டத்தை விரைவில் நிறைவேற்றவேண்டும் என்று வலி யுறுத்தப்பட்டுள்ளது. திட்டத்தை நிறைவேற்றாத மத்திய அரசின் மீதும் தேர்தல் அறிக்கையில் குற்றச் சாற்றும் பதிவு செய்யப்பட்டது.<br /><br />இன்னும் சொல்லப் போனால், எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது தமிழ்நாடு சட்டப் பேரவையில் இந்தத் திட்டத்தை விரைவாக செயல்படுத்தவேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம்கூட நிறைவேற்றப்பட்டுள்ளது (10.5.1986).<br /><br />உண்மை இவ்வாறு இருக்க, சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது, என்று இன்று கூறுவதில், அரசியல் உள்நோக்கம் ஓங்கி நிற்கிறது.<br /><br />இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், மத்தியில் உள்ள காங்கிரசுக்கும், தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க.வுக்கும் அதன் அரசியல் பலன் போய்ச் சேர்ந்துவிடும் என்ற பயமே இதன் பின்னணியில் பெருந்தூணாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.<br /><br />இத்தகு உள்நோக்கத்தோடு, இந்தத் திட்டத்தைத் தடுப்பவர்கள், தமிழ்நாடு மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளனர்.<br /><br />தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்புக்கும், சிறு துறைமுகங்களின் வளர்ச்சிக்கும் பெரிதும் பயன்படக் கூடிய திட்டத்தைத் தடுப் பதன்மூலம் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் இந்தக் கட்சிகள் அம்பலப்படுத்தப்படும் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை. மிகக் கடுமையான விலையை எதிர்காலத்தில் கொடுக்க நேரிடும் என்று எச்சரிக்கின்றோம்! எச்சரிக்கின்றோம்!<br /><br />அ.இ.அ.தி.மு.க. மறுபரிசீலனை செய்யட்டும்!தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-52808002795450366522013-09-18T19:15:56.904+05:302013-09-18T19:15:56.904+05:30
முயற்சிக்கவேண்டும்
தமது வாழ்க்கையால் பிறர் துன்...<br />முயற்சிக்கவேண்டும்<br /><br /><br />தமது வாழ்க்கையால் பிறர் துன்பம் அடையாவண்ணம் நடந்து கொள்ள வேண்டும். இதையே மனித வாழ்க்கையின் இலட்சிய மாகக் கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயற்சிக்க வேண்டும்.<br />(விடுதலை, 20.3.1950)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-36537425835830627342013-09-18T19:14:42.985+05:302013-09-18T19:14:42.985+05:30திராவிடக் கட்சிகள்பற்றி சி.பி.எம்
சி.பி.எம். மாநி...திராவிடக் கட்சிகள்பற்றி சி.பி.எம்<br /><br />சி.பி.எம். மாநில செயலாளர் தோழர் ஜி.இராமகிருஷ் ணன் அவர்கள் சமூக சீர்திருத்த இயக்கங்களை முன் னெடுத்துச் செல்லுவதில் பெரியாரின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தகுந்ததாக இருந்தது என்று குறிப்பிட்ட அதே வேளையில், பெரியாருக்குப்பின் ஜாதி ஒழிப்பு இயக்கங் களை நடத்துவதில் திராவிடக் கட்சிகள் தவறிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.<br /><br />எந்த அடிப்படையில் தோழர் ஜி.இராமகிருஷ்ணன் அவர்கள் பொத்தாம் பொதுவாக அப்படிக் கூறுகிறார் என்று தெரியவில்லை.<br /><br />திராவிடர் கழகம் நடத்துகின்ற ஒவ்வொரு பொதுக் கூட்டமும், நிகழ்ச்சியும்கூட ஜாதி ஒழிப்பைக் கருவாகக் கொண்டதுதான்.<br /><br />தருமபுரி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புப் பகுதிகள் எரிக்கப்பட்டபோதுகூட களத்தில் முன்னின்று அனைவரையும் ஒருங்கிணைத்து, ஜாதி ஒழிப்பு மாநாடு நடத்தி ஜாதிவெறித்தனத்துக்குக் கொள்ளி வைத்ததுகூட திராவிடர் கழகமே!<br /><br />இன்றும் ஜாதி - தீண்டாமை என்பது அதிகாரப் பூர்வமாக, சட்ட ரீதியாக, சாஸ்திர ரீதியாக ஆளுமை யோடு அகங்காரத்தோடு, வீராப்புத்தனத்துடன் குடிகொண்டு இருப்பது கோவில் கருவறையே!<br /><br />இதனை முறியடிக்கும் மிகப்பெரிய சமூகப்புரட்சிப் போராட்டக் களத்தில் நின்றுகொண்டு இருப்பது திராவிடர் கழகம்தானே. அதற்கான சட்டங்களை இருமுறை கொண்டு வந்த சிறப்பு தி.மு.க.வுக்கு உரியது என்பதையும் புறந்தள்ளிவிட முடியாதே! ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்வோருக்கு ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் தி.மு.க. ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டன என்பனவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாமா?<br /><br />ஜாதி - வருணாசிரமத்தை வலியுறுத்தும் நூலான கிருஷ்ணனின் கீதையைப் பின்பற்றுவோம் என்று முதலமைச்சர் கூறியுள்ளது குறித்து சி.பி.எம். இதுவரை விமர்சன அளவில்கூட எதையும் கூறாதது ஏனோ?தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-74909281956261168032013-09-18T19:13:59.903+05:302013-09-18T19:13:59.903+05:30வைத்தி அய்யர்கள்
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா ...வைத்தி அய்யர்கள்<br /><br />தந்தை பெரியார் பிறந்த நாள் விழா செய்திகளைப் பல ஏடுகளும் வெளியிட்டுள்ளன. மாலை முரசு பெரியார் திடலில் அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை. (வாழ்க தமிழின உணர்வு!).<br /><br />தினமணி வைத்தியநாதய்யர் எப்படி செய்தியை வெளியிட்டுள்ளார் தெரியுமா? வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் பல்வேறு கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர் என்று தினமணி செய்தி போடுகிறது. அது என்ன பெரியார் திடலிலும்?<br /><br />பெரியார் திடல்தான் தந்தை பெரியாரின் தலைமை யிடம் - தலைமைக் கழகம் இருக்கக்கூடிய இடம். இயக் கத்தின் அதிகாரப்பூர்வ ஏடான விடுதலை நாள்தோறும் வெளிவந்திருக்கக்கூடிய இடம். இந்த நிலையிலும் பெரியார் திடலிலும் என்று போடுவதற்குப் பெயர்தான் திருத்தப்படவே முடியாத பார்ப்பனத்தனம் என்பது; தமிழர் விரோத ஏடு என்ற முத்திரையைப் பதிக்காமல் வைத்தி அய்யர் வெளியேற மாட்டார் என்று தெரிகிறது.<br /><br />(குறிப்பு: பார்ப்பனர்கள் மீசை வைத்துக் கொள்ள வேண்டும் என்று பார்ப்பன சங்க மாநாட்டில் தீர்மானம் போட்ட பிறகு மீசை வைத்துள்ள அய்யர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது).<br /><br />தமிழில் வெளிவரத் தொடங்கியுள்ள இந்து ஏடு ஓரளவு பெரியார் பிறந்த நாள் விழா செய்திகளை வெளி யிட்டுள்ளது. கட்டுரை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.<br /><br />நான்காம் பக்கம் வெளிவந்துள்ள செய்தியில் பூந்தமல்லி நெடுஞ்சாலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.<br /><br />தந்தை பெரியார் மறைந்த நிலையில், தி.மு.க. ஆட்சி யில் பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டு 34 ஆண்டுகள் ஆன நிலை யில், மறுபடியும் மறுபடியும் ஏடுகளும், தொலைக்காட்சி களும் தந்தை பெரியார் பெயரை இருட்டடிக்க ஆசைப் படுவது ஏன்? இப்படியெல்லாம் சூரியனைச் சுண்டைக் காயால் மறைத்துவிட முடியாதே!தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-55958486926942954462013-09-18T19:12:19.927+05:302013-09-18T19:12:19.927+05:30
செய்தியும் சிந்தனையும்
நடக்காது!
செய்தி: ஏழுமல...<br />செய்தியும் சிந்தனையும்<br /><br /><br />நடக்காது!<br /><br />செய்தி: ஏழுமலையா னுக்குப் புதிய பல்லக்கு. - நரேந்திரமோடி<br /><br />சிந்தனை: ஏன் நடப்பதில் தகராறோ?<br /><br />குறிப்பு: பிணியான வர்களையும், பிணமான வர்களையும்தானே தூக்கிச் செல்லுவார் கள்?தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-17790957060257839392013-09-18T07:47:07.555+05:302013-09-18T07:47:07.555+05:30
தந்தை பெரியார் பேசுகிறார்...
பார்ப்பனர்களை ஆதரித்...<br />தந்தை பெரியார் பேசுகிறார்...<br />பார்ப்பனர்களை ஆதரித்தது ஏன்?<br /><br /><br />பொதுவாக இந்தக் காரியத்திலே (தேர்தலிலே) கிருஷ்ணமாச்சாரியை மாத்திரமா நான் ஆதரிச்சேன். சீரங்கத்திலே, வாசுதேவ அய்யாங்காரை ஆதரிச்சேன் கும்பகோணத்திலே சம்பத்- அய்யங்காரை ஆதரிச்சேன், சர்.பி.ராமசாமி அய்யர் மகன் பட்டாபிராமனை அந்த ஆளை ஆதரித்தேன், பட்டுக்கோட்டையில் யாரோ ஒரு சீனிவாசனை ஆதரிச்சேன், இன்னும் எங்கெங்கேயோ நான் ஆதரிச்ச பாப்பானிலே தோத்துப்போன ஆளு இந்த காஞ்சிபுரம்தான், ஏறக்குறைய நான் போன ஆளுக எல்லாம் ஜெயிச்சாங்க, என்னமோ அந்த ஆளுக எல்லாம் இப்ப நம்ம காமாராசருக்குக் கையாளாக இருப்பாங்கன்னுதான் நினைச்சேன், அதுதான் காரணம்.<br /><br />அய்யமாரை ஆதரிக்கிறேன்னா காமாராசருக்குக் கையாளுன்னுதான், அய்ந்தாம் படையாய் இல்லாமல், சூழ்ச்சி பண்ற ஆளாய் இல்லாமே _- இந்த மாதிரி இருப்பாங்களேன்னு, இந்தக் காரியத்துக்காகத்தான் என் ஆதரவு,<br /><br />பாரத நாடும் காந்தி நாடும்!<br /><br />இந்த 1957-லேயாவது இந்த நாட்டுக்குக் காந்தி நாடுன்னுபேரு வைச்சா நான் வரவேற்பேன். காந்தி- சகாப்தமானாலும் நான் வரவேற்பேன். ஏன்? அஸ்திவாரமே இல்லாத நமக்கு, சம்பந்தமே இல்லாத நமக்கு, இழிவு தரும்படியான ஒரு நிலைமையில் உள்ள பேரு பாரத நாடு என்று இந்த நாட்டுக்குப் பேரு இருப்பதைவிட யாராவது ஒரு மனுஷனுடைய பேராக இருப்பதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. எதுக்காக இந்த நாட்டுக்குப் பாரத நாடு-ன்னு பேரு இருக்க வேண்டும்? அதுக்கு என்னா அர்த்தம், சரித்திரத்திலே ஏதாவது இருக்குதா? போக்கிரித்தனமாய் பாரத நாடுங்கிறான். காந்தியார் இறந்த உடனேயும் சொன்னேன். இந்த நாட்டுக்குக் காந்தி நாடு-ன்னு வைக்கச் சொன்னேன்.<br /><br />அதாவது வருஷம் என்றதுக்கு நமக்கு ஆதாரமே கிடையாது. உலகத்திலே மற்ற எல்லாருக்கும் இருக்குது. உலகம் பூராவும் வருஷம் என்கிறதுக்குக் கிறிஸ்து பேரிலே இருக்குது. கிறிஸ்து பிறந்து 1957ஆம் வருஷத்தில் இன்று நாம இருக்கிறோம். நமக்குன்னு என்னா இருக்குது சொல்லிக் கொள்ள? நான் பிரமாதி வருஷம் புரட்டசி மாதம் பிறந்தேன். பிரமாதி வந்து எத்தனை வருஷமாச்சி, 17 வருஷமாச்சி, இன்னைக்கு எனக்கு 17 வயது இப்போ? எந்த பிரமாதி? எவனும் கேட்கிறதில்லே? பாப்பான் அவ்வளவு புரட்டு பண்ணிட்டான். 20,000 வருஷம் இந்த நாடு எங்கே எப்படி இருந்ததோ தெரியாது? முஸ்லீம் முகம்மது நபி பிறந்தது முதல் வருஷம் கணக்கிடுகிறான், எனவே காந்தி பேராலே வருஷம் கணக்கிடட்டும் என்கிறேன்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-84889369719957534752013-09-18T07:46:07.550+05:302013-09-18T07:46:07.550+05:30
தந்தை பெரியார் பேசுகிறார்...
நமது தேர்தல் முறை ச... <br />தந்தை பெரியார் பேசுகிறார்...<br />நமது தேர்தல் முறை சரியா?<br /><br /><br />தோழர்களே! இந்த எலக்ஷன் முறையின் காரணமாக, பதவிக்கு வருவதற்குத் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்ற காரணத்திற்காக ஓட்டுப் பெற்று, அதனால் பலனை உண்டாக்குவதைவிட இந்த ஓட்டுக் காரணமாக எவ்வளவு நல்ல வேட்பாளனையும் அயோக்கியனாக்கி விடுகிறார்கள். எவ்வளவு யோக்கியர்களா இருந்தாலும் வேட்பாளர்கள் ஒழுக்கத்தோடு இல்லை. நான் சீமையில் தேர்தல் நடந்ததைப் பார்த்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன். முன்பெல்லாம் ஓட்டு இங்கு இருந்தது வெள்ளைக்காரன் காலத்திலே.<br /><br />ஆனால் ஒரு அளவுக்குத் தகுதிபார்த்துக் கொடுப்பான். அபேட்சகர்களும் தகுதியுள்ளவர்களாகவே நிற்பார்கள். அப்ப பணம் கொடுக்காமல் தேர்தல். நாணயம், ஒழுக்கம் கெடாமல் காரியம் நடக்கும். அப்படித்தான் இருந்தது. அவன் போன பிறகு எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்கணும்ன்னு ஆரம்பிச்ச பிறகு வேட்பாளர்களான இரண்டு பேர் நிற்பதில் போட்டி ஏற்பட்டு நாணயம் இல்லாமல் போய் விடுகிறது. காரணம் என்னா? கொள்கையில்கூட அவர்களுக்கு இலட்சியம் இல்லை. தேர்தலில் நின்றுவிட்டால் சரி, எப்படியாவது ஜெயிக்கணும். அதுக்கு எந்தவிதமான பித்தலாட்டமான ஒழுக்கக் கேடான காரியத்தையும் செய்யணும். எவ்வளவு யோக்கியமான ஓட்டராக இருந்தாலும் அவன் எந்த அளவிற்கு நாணயமாயிருந்தாலும் அவனை நாணய மற்றவர்களாக ஆக்கி எந்த விதத்திலாவது ஓட்டு வாங்கணும். இதுதான் ஓட்டுரிமையிலே ஏற்படுகிற பலன்.<br /><br />* * *<br /><br />10 ஆயிரம் 20 ஆயிரம் செலவு பண்ணி எலெக்ஷனில் ஜெயிக்கணும்ன்னா, உண்மையான ஜனநாயகத்திலே 100க்கு 95 பேருக்கு வசதி வாய்ப்பு இருக்குமா? எத்தனை பேரு நம்ம ஜனங்களிலே இலட்ச ரூபாய் செலவு பண்ணி எலக்ஷனிலே ஈடுபட வாய்ப்போடு இருக்கிறாங்க? எந்தக் கட்சிக்காரனும் அபேட்சகரை எதிர்த்து நிற்கும் ஆளு ஓட்டுக்கு வந்தாலும், அவனிடம் ஓட்டர்கள் ரூ 5 கொடுக்கறீயா, 10 ரூபாய் கொடுக்கறீயான்னு கேட்கலாம். இது ஒன்னும் ரகசியமில்லே. நம்ம நாடு பூராவும் தெரிந்திருக்கிற ரகசியம் இது. இதைப் பற்றி யாருக்கும் கவலையில்லையே. இலட்சியம் பண்றதில்லையே? எல்லாக் கட்சிக்காரர்களும் காந்தியார் காலம் தொட்டு மக்களுக்கு ஓட்டுக் கொடுத்து வருகிறாங்க. ஓட்டுக்குப் பணம் கொடுத்து அவர்களை ஏச்சி, எப்படியாவது பதவிக்கு வரணும் அது தான் அபேட்சகர்களின் நோக்கம். இப்படிப் பணம் கொடுத்துப் பதவிக்கு வந்த பிறகு அதுதான் ஜனநாயகம்ன்னு பேசுறாங்க.<br /><br />நான் இதை ஏன் சொல்லுகிறேன் என்றால், நான் ஒரு சமுதாயச் சீர்த்திருத்தக்காரன் என்பதனாலே இதைச் சொல்லுகிறேன். நான் அரசியலில் இருந்தால் கூட இந்த அயோக்கியத்தனமான காரியங்களை எல்லாம் நானும் பண்ணித்தான் ஆகணும். காந்தி அரசியலில் நின்னாலும் பணம் கொடுத்துத்தான் ஆகணும், ஜவஹர்லால் நேரு எலெக்ஷனில் நின்னாலும் அவரும் பணம் கொடுத்துத்தான் ஆகணும். நம்ம காமராசர் எலெக்ஷனில் நிற்கணும்ன்னு சொன்னாலும் அவரும் இலட்ச ரூபாய் செலவு பண்ணித்தான் ஆகணும், அப்புறம் மற்றவர்களைப் பற்றிச் சொல்ல வேணுமா? இப்படி எல்லாம் எலெக்ஷனில் ஜெயிச்சி வரணும்ன்னா இது என்னா ஜனநாயகம்? வெங்காய ஜனநாயகம் (சிரிப்பு கைத்தட்டல்) பணத்தினாலே ஜெயிக்கலாம், பித்தலாட்டத்திலே ஜெயிக்கலாம். மக்களை ஏய்க்கிறதினாலேயும் ஜெயிக்கலாம். (சிரிப்பு) அப்படி ஜெயிச்சி வந்ததுக்கு அப்புறம், அதை ஜனநாயகம் என்கிறான். ஜனநாயகத்தில் ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்கிறான்.<br /><br />ஏன் இதையெல்லாம் சொல்றேன்னா? பணம் கொடுக்கிறதாலே நாணயம் கெட்டுப் போகுது ஒழுக்கம் கெட்டுப்போவுது. இந்த முறையிலே நல்லவன் _ யோக்கியன் வரமுடியாமல் போயிடுது. நல்ல மனுஷன் வருவதுக்கு வாய்ப்பும் இல்லாமல் போயிடுது இந்த மாதிரியான தேர்தல் முறையினாலே. ஆனதினாலே இந்த மாதிரியான, ஒழுக்கக்கேடான, நாணயக்கேடான, ஜனநாயகத்தை ஒழிக்கத்தான் நான் பாடுபடுகிறேன். (கைத்தட்டல்) இது மாறணும் விரைவிலே. (கைத்தட்டல்) சுத்த காலிப்பசங்களைக் கொண்டுவந்து விட்டுடுறாங்க, மகா அயோக்கியத்தனங்களைச் செய்யப் பயப்படாமே துணிஞ்சி தேர்தலில் வந்திடுறாங்க. பணத்துக்குத்தான் ஓட்டுத் தந்தாங்கன்னு அவனுக பதவிக்கு வந்த உடனே பொறுக்கித் திங்க ஆரம்பிக்கிறாங்க. இந்த மாதிரி நிலை நீடிக்கிறதினாலே நாட்டிலுள்ள ஏழை மக்களுக்கு _ கஷ்டப்படுகிற மக்களுக்கு எந்த விதமான பலனும் இல்லை.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-51195945088659075422013-09-18T07:44:11.806+05:302013-09-18T07:44:11.806+05:30தந்தை பெரியார் பேசுகிறார்...
தமிழ் உயர்மொழி எனில்...தந்தை பெரியார் பேசுகிறார்...<br /><br />தமிழ் உயர்மொழி எனில் தமிழன் கீழ்மகனானதெப்படி?<br /><br /><br />தமிழ் உயர்மொழியானால், தமிழன் கலப்படமற்ற சுத்தப் பிறவியானால், தமிழ் பேசுகிறவன் தமிழன் என்கிற காரணத்திற்கு ஆக உன்னைச் சூத்திரன், பார்ப்பானின் வைப்பாட்டி மகன் என்று கடவுள் சொன்னதாக சாஸ்திரம் எழுதி வைத்து, கீதை வெங்காயம் சொல்லுகிறது என்று சொல்லி உன்னைத் தீண்டாத ஜாதியாக பார்ப்பானும் அவன் பெண்டாட்டி, பிள்ளை, ஆத்தாள், அக்காளும் நடத்துகிறார்களே; நீ நாக்கைப் பிடுங்கிக் கொண்டாயா? நீ யாருக்குப் பிறந்தாய் என்பது பற்றிச் சிறிதாவது சிந்தித்து இருந்தால், என்னை நீ யாருக்குப் பிறந்தாய் என்று கேட்டு இருக்க மாட்டாய்.<br /><br />எனக்கு நான் யாருக்குப் பிறந்தேன் என்பது பற்றிக் கவலை இல்லை. அது என் அம்மா சிந்திக்க வேண்டிய காரியம். நான் யாருக்குப் பிறந்தேன் என்று என்னாலும் சொல்ல முடியாது; தம்பீ உன்னாலும், அதாவது நீ யாருக்குப் பிறந்தாய் என்று (உன்னாலும்) சொல்ல முடியாது; அந்தப் பிரச்சினையே முட்டாளுக்கும், அயோக்கியனுக்கும்தான் தேவை.<br /><br />* * *<br /><br />கம்பன் இன்றைய அரசியல்வாதிகள், தேச பக்தர்கள் பலர் போல் அவர் படித்த தமிழ் அறிவை தமிழர் எதிரியாகிய பார்ப்பனருக்கு ஆதரவாய் பயன்படுத்தி தமிழரை இழிவுபடுத்தி கூலி வாங்கிப் பிழைக்கும் மாபெரும் தமிழர் துரோகியே ஆவான்! முழுப் பொய்யன்! முழுப் பித்தலாட்டக்காரன்! தன்னைப் பார்ப்பானாகவே கருதிக் கொண்டு பார்ப்பான்கூட சொல்லப் பயப்படும் கருத்துகளையெல்லாம் கூறி தமிழர்களை நிரந்தரக் கீழ்மக்களாக்கிவிட்ட துரோகியாவான்!<br /><br />* * *<br /><br />அடமுட்டாள்களா! உங்கள் தமிழை பார்ப்பான் நீசமொழி என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சாஸ்திரங்களில் எழுதி வைத்து, சாமிகள் இருக்குமிடத்தில் புகாமல் விரட்டி அடித்ததோடு மாத்திரமல்லாமல் உன்னையும் உள்ளே புகவிடாமல் தீண்டாதவனாக ஆக்கி வைத்திருக்கிறானே!<br /><br />இதற்கு நீ என்றாவது வெட்கப்பட்டாயா? உங்களப்பன் வெட்கப்பட்டாரா? அவனை விட்டுவிட்டு என்னிடம் வந்து மோதிக் கொள்கிறாயே? இதற்கு அறிவில்லை என்று பெயரா? மானமில்லை என்று பெயரா? நீ யாருக்குப் பிறந்தவன்? என்று என்னைக் கேட்கிறாய். நான் கேட்கிறேன், உன் தமிழையும் உன்னையும் உள்ளே விடாமல், இரண்டையும் வெளியில் நிறுத்தி கும்பிடு போடும்படி பார்ப்பான் செய்கிறான். நீயும் அதற்கேற்ப அடங்கி ஒடுங்கி நின்று குனிந்து கும்பிடுகிறாயே மடையா! மானங்கெட்டவனே! நீ யாருக்குப் பிறந்தவன் என்று கேட்கிறேன்.<br /><br />யாருக்குப் பிறந்தாலும் மனிதனுக்கு மானம் தேவை; அது உன்னிடம் இருக்கிறதா, என்னிடம் இருக்கிறதா என்பதுதான் இப்போது சிந்திக்க வேண்டிய தேவை.<br /><br />அதையும்விட தமிழ் மொழியிலும், தமிழ்ச் சமுதாயத்திலும் இருக்கிறதா? இருப்பதற்குத் தமிழ் உதவியதா? உதவுகிறதா? என்பதுதான் முக்கியமான, முதலாவதான கேள்வி.<br /><br />புலவனே! நீ கெடுவதோடு தமிழ் மக்களை ஒவ்வொருவனையும் பார்த்து, நீ யாருக்குப் பிறந்தவன் என்று கேட்கும்படிச் செய்கிறாயே; இதுதானா உன் தமிழின், தமிழர் சமுதாயத்தின் பெருமை?<br /><br />தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதால் உனக்குப் பொத்துக்கொண்டது. ஆனால், தமிழன் ஈன ஜாதிப்பயல் என்று கூறி உன்னை ஈனஜாதியாக நடத்துவது பற்றி உனக்கு எங்கும் பொத்துக் கொள்ளவில்லை! அதுமாத்திரமல்ல; முட்டாள் பசங்கள் உன்னை ஈனஜாதியாய் நடத்துகின்றவர்கள் காலில் விழுகிறீர்கள்; அவனைச் சாமி என்று கூறுகிறீர்கள்; பிராமணர்கள் என்று ஒப்புக் கொள்ளுகிறீர்கள்! சிந்தித்துப் பார், நீ, நீங்கள் யார் என்று!<br /><br />- நூல்: தமிழும் தமிழரும்<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-12803824452829466772013-09-18T07:43:07.123+05:302013-09-18T07:43:07.123+05:30
தந்தை பெரியார் பேசுகிறார்...
சோற்றைத் தின்றுவிட... <br />தந்தை பெரியார் பேசுகிறார்...<br /><br />சோற்றைத் தின்றுவிட்டு சும்மா இருப்பதா?<br /><br /> <br /><br />நேற்று குறிச்சி வைச்சேன் சொல்லலாம்னு. நேற்று வந்து என்னைச் சந்தித்தவரு 90 வயசு ஆகுதே கொஞ்ச நாளைக்குச் சும்மாயிருங்களேன்னாரு. அடே பயித்தியக்காரா ஒரு ஆளு சோறு திங்கிறேன். கொஞ்சங் கொஞ்சமா சாப்பிட்டாலும் என் ஒருத்தனுக்கு செலவு ரூ200 ஆகுது. ஒரு வேளை காபி, ஒரு வேளை பாலு, ஒரு நாளைக்கு அரைகிலோ கறி. கறி இல்லாமல் (இறைச்சி) சாப்பிடவே மாட்டேன். முட்டை அது இது எல்லாம். முன்பு ரூ.15லே அடங்கின செலவு இப்ப எனக்கு 200 ரூபாய் ஆகுது என் ஒருத்தன் செலவு. எப்படி ஆகுதுன்னு கேட்பிங்க. எட்டு பழம் மலைப்பழம் ஒரு பழம் இரண்டனா 1 டஜன் ஒன்னரை ரூபாய். இந்த மாதிரி நான் சாப்பிடுவது பொது மக்களுடைய பணம்தானே. ஒரு மாசத்துக்கு 200 ரூபாய்க்குத் தின்னுட்டு நான் சும்மாயிருக்க வேணும்னா அது சரியல்ல. ஆனதினாலே அய்யா என்னாலானதைப் பத்தில் ஒரு பங்காவது பொதுத் தொண்டு செய்யணும்னு சொன்னேன். அது மாதிரி மனிதன்னா தானுண்டு, தன் பொண்டுபிள்ளை உண்டுனு, சோறு தின்னுக்கிட்டு பொதுத் தொண்டு செய்யமாலிருப்பது- _ சுயவாழ்வை விட கேவலம் அது. நம்மாலே உலகத்துக்கு என்னா? அதனாலே மக்கள் ஆணும் பெண்ணும் பக்குவமடைய வேணும்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-23275139971519041392013-09-18T07:42:16.859+05:302013-09-18T07:42:16.859+05:30கிருஷ்ணன் மட்டும் வாழ்க!
ஒருமுறை செங்கல்பட்டில்...கிருஷ்ணன் மட்டும் வாழ்க!<br /> <br /><br />ஒருமுறை செங்கல்பட்டில் அண்ணா முன்னின்று நடத்திய நடிகர்கள் மாநாட்டிற்கு பெரியார் தலைமை வகிக்கிறார். அதில் கலந்து கொண்டவர்கள் எல்லாம் மிகப் பெரிய நடிகர்கள். பி.யு.சின்னப்பா, எம்.கே. இராதா, என்.எஸ். கிருஷ்ணன் போன்றோர் எல்லாம் கலந்து கொண்டனர். அப்போது பெரியார் பேசுகிறார்: நீங்க ஒவ்வொருவரும் ரூ.50,000க்கு மேல்சம்பளம் வாங்குகிறீர்கள். இது என்ன நியாயம்? எனப் பெரியார் கேட்கிறார். நடிகர்கள் ஏற்பாடு செய்த மாநாட்டில் தான் பெரியார் இப்படிப் பேசுகிறார். உங்களுக்கு ரூ.50,000 சம்பளம் எனக் கேள்விப்படுகிறேன். ஆனால் விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட சம்பளமாகக் கொடுப்பதில்லை. நீங்கள் எல்லாம் என்ன விவசாயிகளைவிட உயர்ந்தவர்களா? எனப் பெரியார் பேசுகிறார். இதனால் நடிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே பெரியார் பேச்சுக்குப் பதில் சொல்ல வேண்டுமென நடிகர்கள் முடிவு செய்கின்றனர். உடனே என்.எஸ்.கே மேடையில் ஏறி ஒரு புள்ளி விவரக் கணக்கு கூறுகிறார். அய்யா, நான் இத்தனைப் படத்தில் நடித்தேன், இவ்வளவு சம்பளம், அதில் நலிந்த நாடக நடிகர்களுக்கும் மற்றும் பலருக்கும் உதவிகள் செய்துள்ளேன் என்கிற ஒரு கணக்கைச் சொல்கிறார். உடனே பெரியார் ஒலிபெருக்கியின் முன்வந்து, இவ்வளவும் கேட்ட பிறகு சொல்கிறேன், கிருஷ்ணன் வாழ்க, கிருஷ்ணன் மட்டும் வாழ்க என்று சொன்னாராம். தகவல்: சந்திரன் வீராசாமி, திருச்சிதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com