tag:blogger.com,1999:blog-1474608369333206681.post5142844505486134453..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: இந்துத்துவா நஞ்சை முறிக்கும் சக்தி, ஈரோட்டு மூலிகைக்குத்தான் உண்டுதமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-4515391690148691382013-11-11T18:11:18.874+05:302013-11-11T18:11:18.874+05:30
சென்னை - பெரியார் திடலில் அறிவியல் மனப்பான்மை வளர...<br />சென்னை - பெரியார் திடலில் அறிவியல் மனப்பான்மை வளர்ப்பு மற்றும் மந்திரமல்ல; தந்திரமே விளக்கப் பயிற்சிப் பட்டறை துவங்கியது!<br /><br />அய்ந்து நாள் நடைபெறும் அறிவியல் மனப்பான்மை பயிற்சிப் பட்டறையினை தொடங்கி வைத்து திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் உரையாற்றினார். உடன் அகில இந்திய பகுத்தறிவாளர் கழக கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக், பன்னாட்டு மனிதநேய நன்னெறி ஒன்றியத்தின் பொறுப்பாளர் பாபு கோகினேனி, பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் வீ.குமரேசன், திராவிடர் கழக மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் உள்ளனர் (சென்னை-11.11.2013)<br /><br />சென்னை, நவ. 11- சென்னை - பெரியார் திடலில் அறிவியல் மனப்பான்மை வளர்ப்பு மற்றும் மந்திரமல்ல தந்திரமே விளக்கம்(Development of Scientific Temper and Demystification of Miracles) பற்றிய 5 நாள் பயிற்சிப் பட்டறை (நவ. 11 முதல் 15 முடிய) துவங்கியது.<br /><br />மய்ய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் பெங்களூரு கர்நாடகா அறிவியல் கழகம் உதவியுடன் தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகம் நடத்திடும் தமிழ்நாடு மாநில அளவிலான கூட்டுப் பயிற்சிப் பட்டறையின் தொடக்க விழா அன்னை மணியம்மையார் அரங்கத்தில் நடைபெற்றது.<br /><br />பயிற்சிப் பட்டறைக்கு வருகை தந்தோரை வரவேற்று திராவிடர் கழக மாநில மாணவரணிச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் உரையாற்றினார். தொடக்க விழாவிற்கு தலைமை வகித்த பகுத்தறி வாளர் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் வீ.குமரேசன் தனது உரையில், அரசமைப்புச் சட்டம் அறிவியல் மனப்பான்மை வளர்ப்பதை குடிமக்களின் அடிப்படைக் கடமைகளுள் ஒன்றாக வலியுறுத்துகிறது. ஆனால் அரசே சில சமயம் அறிவியல் மனப்பான்மையுடன் நடந்து கொள்வ தில்லை.<br /><br />அண்மையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் சாமியார் ஒருவர் கண்ட கனவின் அடிப்படையில் 1000 டன் தங்கப் புதையல் கிடைப்பதாக அரசுத் துறையினரே மண்ணைத் தோண்டும் பணியில் ஈடுபட்டது, அறிவியல் மனப்பான்மை சார்ந்ததாக இல்லை. மக்களிடம் அறிவியல் மனப்பான்மை, விழிப்புணர்வு இருந்தால் அரசு இத்தகைய செயல் களில் ஈடுபடாது. அத்தகைய விழிப்புணர்வுக்கு, பிரச்சாரத்திற்கு இந்தப் பயிற்சிப் பட்டறை பயன்பட வேண்டும். பயிற்சியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.<br /><br />தொடக்க உரை - கவிஞர் கலி.பூங்குன்றன்<br /><br />பயிற்சிப் பட்டறையினை தொடங்கி வைத்த திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தனது உரையில் குறிப்பிட்டதாவது:<br /><br />மூடநம்பிக்கை ஒழிப்புப் பணியினை, அறிவியல் சார்ந்த அணுகுமுறையினை கடைப்பிடிப்பதை தந்தை பெரியார் 1925ஆம் ஆண்டிலிருந்து அமைப்பு ரீதியாக பிரச்சாரம் செய்தார். அவர் நிறுவிய சுயமரியாதை இயக்கமும் தொடர்ந்து அறிவியல் மனப்பான்மையினை மக்களிடம் பெருக்கிட பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு வருகிறது. பாமர மக்களும் புரிந்து கொள்ளும் முறையில் பிரச்சாரம் செய்வது பெரியார் இயக்கத்தின் தனிச் சிறப்பு ஆகும்.<br /><br />அறிவியலை ஒருவர் படிப்பது என்பது ஒன்று, அறிவியல் மனப்பான்மையுடன் வாழ்வது என்பது வேறு. அறிவியல் படிப்பவர்கள் அனைவரும் அறிவியல் மனப்பான்மையுடன் நடந்துகொள்வ தில்லை.<br /><br />மூடநம்பிக்கை பலவற்றை பழக்கத்தின் காரண மாகக் கடைப்பிடித்து மனித வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக இருந்து தங்களது முன்னேற்றத்திற்கும் தடை விதித்துக் கொள்கின்றனர். அறிவியல் மனப்பான்மையுடன் மக்கள் அனைவரும் நடந்து கொண்டால் மானிடம் வளர்ச்சிப் பாதையின் பல்வேறு சிகரங்களை எட்டமுடியும்; வெற்றிகளை குவித்து மனித சமுதாயம் இணக்கமுடன் வாழ்ந்திட வழி ஏற்படும்.<br /><br />இந்த பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண் டுள்ள அனைவரும் அறிவியல் மனப்பான்மையினை வளர்க்கின்ற பிரச்சாரகர்களாக மாறிட வேண்டும் என்று தமது உரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.<br /><br />பன்னாட்டு மனித நேய நன்னெறி ஒன்றியத்தின் (IHEU) பொறுப்பாளர் பாபு கோகினேனி மற்றும் அகில இந்திய பகுத்தறிவாளர் கழகக் கூட்டமைப் பின் (FIRA) தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக் ஆகியோர் உரையாற்றினர்.<br /><br />பயிற்சிப் பட்டறையில் தமிழகத்தின் வட மாவட்டங்களிலிருந்து பல தோழர்கள், மகளிர் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர். அறி வியலாளர்கள் பலர் உரையாற்றிட உள்ளனர். நவம்பர் 15ஆம் நாள் வரை பயிற்சிப் பட்டறை நடைபெறும். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள், எடுத்துக்காட்டு விளக்க முறைகள் மூலம் பயிற்சிப் பட்டறை நடைபெறுகிறது.<br /><br />பயிற்சி யாளர்களுக்கு உணவும், தங்குமிடமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அறிவியல் குறிப்புகள், புத்த கங்கள், பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளன. பயிற்சிப் பட்டறை பற்றிய விளக்கத்திற்கு 94442 10999 என்ற எண்ணில் தொடர்பு கொள் ளலாம்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-42350124534519322032013-11-11T18:10:34.516+05:302013-11-11T18:10:34.516+05:30
காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கவில்லை என ...<br />காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்கவில்லை என அறிவிப்பு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு மன்மோகன்சிங் கடிதம்<br /><br />புதுடில்லி, நவ.11- இலங் கையில் சர்ச்சைக்குரிய காமன் வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்க வில்லை என அதிகாரப்பூர்வ மாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் ராஜபக் சேவுக்கு கடிதம் அனுப்பினார்.<br /><br />உள்நாட்டுப் போர் உச்ச கட்டத்தில் இருந்தபோது, லட் சத்துக்கும் அதிகமான தமிழர் களை இனப்படுகொலை செய்த இலங்கையின் தலைநகர் கொழும் புவில், 54 நாடுகள் பங் கேற்கும் காமன்வெல்த் மாநாட்டை நடத்துவதற்கு உலகமெங்கும் உள்ள தமிழ் அமைப்புகள், தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போர்க் கொடி உயர்த்தின.<br /><br />இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்கவும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக தமிழக சட்டப் பேரவையில் தீர்மானமும் நிறை வேற்றப்பட்டது. பல்வேறு அமைப்புகளின் சார்பில் போராட் டங்களும் நடைபெற்றன.<br /><br />பலத்த எதிர்ப்புக்கு மத்தி யில், காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங் கேற்பது தொடர்பாக காங் கிரஸ் உயர்நிலைக்குழு இரண்டு முறை கூடியும், முடிவு எடுக்க முடியவில்லை. காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதா, வேண்டாமா என்பதை பிரத மரின் முடிவுக்கே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகின.<br /><br />இதற்கிடையே டெல்லியில் நேற்று பேட்டி அளித்த வெளி யுறவுத்துறை செய்தித் தொடர் பாளர் சையத் அக்பருதீன், இலங்கை காமன்வெல்த் மாநாட் டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்பது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை. அதே நேரத்தில் அமைச்சர்கள் அளவி லான கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்துகொள்கிறார் என அறிவித்தார். இதனால் பிரதமர் மன்மோகன்சிங் பங் கேற்கப் போவதில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியானது.<br /><br />இந்நிலையில் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோ கன்சிங் பங்கேற்கப்போவ தில்லை என்பது அதிகார பூர்வ மாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு பிரத மர் மன்மோகன் சிங் அவசரக் கடிதம் ஒன்றை எழுதினார்.<br /><br />அந்தக் கடிதம், கொழும்பு வில் உள்ள இந்திய தூதரகத் தின் மூலமாக ராஜபக்சேவிடம் ஒப்படைக்கப்பட்டது.<br /><br />அந்தக் கடிதத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது என்ற விவ ரம் வெளியிடப்படவில்லை. இருப்பினும், சிறிய அளவிலான அந்தக் கடிதத்தில் தன்னால் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள இயலவில்லை என பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.<br /><br />அதே நேரத்தில் என்ன கார ணங்களால் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க இயல வில்லை என்பதை பிரதமர் மன்மோகன்சிங் கடிதத்தில் குறிப்பிடவில்லை என தெரிய வந்துள்ளது.<br /><br />தமிழக அரசியல் கட்சி களின் கடும் எதிர்ப்பு, தமிழக சட்டப் பேரவையில் இயற்றப் பட்ட தீர்மானம், உலகத் தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பு ஆகியவற்றுக்குப் பணிந்துதான் பிரதமர் மன்மோகன்சிங், காமன்வெல்த் மாநாட்டில் பங் கேற்காமல் தவிர்த்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-4919929277880370492013-11-11T18:09:46.334+05:302013-11-11T18:09:46.334+05:30
எருமை போவதுபோல்...
எவன் ஒருவன் முன்னோர்கள் சொன்ன...<br />எருமை போவதுபோல்...<br /><br />எவன் ஒருவன் முன்னோர்கள் சொன்னபடி, பெரியோர்கள் சொன்னபடி, புராணங்கள் சொன்னபடி, சாத்திரங்கள் சொன்னபடி என்று நடக்கின்றானோ அவன் எருமைக்கு ஒப்பாவான். அடித்து ஓட்டுகின்றவன் சொல் கின்ற பக்கம் எல்லாம் எருமை போவது போன்றே இவனும் செல்பவன் ஆவான்.<br /><br />_ (விடுதலை, 13.8.1961)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-75084047607250700492013-11-11T18:09:02.165+05:302013-11-11T18:09:02.165+05:30
படித்தவர்கள் மத்தியிலும் மூடநம்பிக்கை
இந்தியா க...<br />படித்தவர்கள் மத்தியிலும் மூடநம்பிக்கை<br /><br /><br />இந்தியா குறைந்த செலவில் செவ் வாய் கிரக ஆராய்ச்சிக்கு விண்க லத்தை அனுப்பியுள்ளது குறித்து ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சும் சற்று உயர்ந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை. அதே வேளையில் படித்தவர்களின் மூடநம்பிக்கை கண்டு அவர்களின் தலை தரையை நோக்கியிருக்கும் என் பதிலும் அய்யமில்லை.<br /><br />பாமரர்களின் மத்தியில் பரவலாக இருக்கும் மூட நம்பிக்கைகள் படித்த வர்கள் மத்தியில் புரையோடிப் போயிருக் கிறது.ஒவ்வொரு போலார் சாடிலைட் லாஞ்ச் வெகிகிள் என்னும் ஏவுகணை மூலமாக வானில் ஆராய்ச்சிக் கோள் கள் ஏவப்படும் போதெல்லாம் இன்றைய இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப் பின் தலைவர் டாக்டர் கே.ராதாகிருஷ் ணன் ஏவுகணையின் நகலுடன் திருப்பதி சென்று ஏழுமலையானின் காலில் அதை வைத்து வணங்கி விட்டு வந்த பின் தான் ஏவுகணை விண்ணில் செலுத்தப்படுகிறது என்ற தகவல் பகுத்தறிவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.<br /><br />இது ஏவுகணை விஷயத்தில் மட்டும் அல்ல . புதிதாக கட்டப்பட்ட கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டு பின்னர் கடலில் முதல் முதலாக பணி நிமித்தமாக இறக்கப்படும் போது கூட தேங்காய் உடைத்து திருஷ்டி கழித்து பூஜைபுனஸ்காரம் செய்த பின் னரே கப்பல் கடலில் இறக்கப்படுகிறது.<br /><br />இஸ்ரோ அமைப்பு மொத்தத்தில் எவ்வித மூடநம்பிக்கையிலும் ஈடுபடுவ தில்லை என்று இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஐஏஎன் எஸ் செய்தியாளரிடம் இஸ்ரோ விஞ்ஞானி கள் கூறியுள்ளனர். அப்படியென்றால் போலார் சாடிலைட் லாஞ்ச் வெகிக்கிள் - சி 13 என்ற ஏவுகணை என்ன ஆயிற்று என்று கேட்ட போது அவர்களிடம் பதில் இல்லை. இஸ்ரோ பிஎஸ் எல்வி - சி 12 அய் ஏவிய பின்னர் ஓசன்சட்-2 மற்றும் ஆறு ஐரோப்பிய நாடுகளின் நானோ சாடிலைட்டுகளையும் அனுப்பிய ஏவு கணைக்கு பிஎஸ் எல்வி - சி 14 என்று பெயரிட்டனர்.<br /><br />இது குறித்த கேள்விக்கு அது போன்ற எண்ணுடன் ஒரு ஏவு கணை இல்லை என்று இஸ்ரோ உயர் அதிகாரியொருவர் கூறியுள்ளார். எண் 13 ஐ ராசியில்லாத எண் என்று இஸ்ரோ கருதுகிறதா என்று கேட்ட போது அவர் மௌனம் சாதித்துள்ளார். ஆனால் அவர்கள் மூடநம்பிக்கையை முறியடித்து செவ்வாய் அன்று ஏவுகணையை ஏவியதாக மார்தட்டிக் கொள்கிறார்கள். இதுவரை செவ்வாய்க்கிழமையன்று ஒரு ஏவுகணை கூட ஏவப்பட்டதில்லை என்ப தற்கு செவ்வாய் வெறும் வாய் என்ற பழ மொழி உள்ளது போல் அது ஒரு ராசி யில்லா நாள் என்பதும் காரணமாகும்.<br /><br />செவ்வாய் ராசியில்லை என்றால் அப்பெயர் கொண்ட கிரகம் குறித்து ஏன் ஆராய்ச்சி செய்யவேண்டும் என்ற கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை. இஸ்ரோ நிறுவனத்தின் மூத்த அதிகாரியொருவர் செவ்வாய் எனக்கு ராசியான நாள் என்று கூறியுள்ளார். அப்படியென்றால் அவரின் விருப்பப்படி செவ்வாய் ஏவுகணை அன்று ஏவப் பட்டதா? என்ற கேள்வி எழுகிறது. அந்த அதிகாரி தனது பெயரைக்கூற மறுத்துவிட்டார்.<br /><br />செவ்வாய் கிரகத்துக்கு செவ்வாய் அன்று விண்கலத்தை அனுப்புவது பொருத்தமாக இருக்கும் என்று அவர்கள் கருதியிருக்கக் கூடும். மதநம்பிக்கைகளுக்கும், மூடநம்பிக் கைகளுக்கும் எதிரானது அறிவியல். அதேபோல் அறிவியலுக்கு மதநம்பிக் கைகளும், மூடநம்பிக்கை களும் எதிரானவை.<br /><br />உலகம் உருண்டை என்று கலிலியோ கூறிய போது அவருக்கு மதம் வாய்ப்பூட்டு போட்ட சம்பவம் வரலாறாகும். பின்னர் மதம் அந்த உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதும் வரலாறாகும். மதநம்பிக்கையும், மூடநம்பிக் கையும் இந்தியாவை சீரழித்து வரும் சமூகப்பிரச்சனைகளில் முக்கியமான இரண்டாகும்.<br /><br />படிக்காதவர்கள் மத்தியில் தான் மூடநம்பிக்கை பரவலாக இருக்கிறது என்பதெல்லாம் பழங்கதை. இன்று அவை படித்தவர்களின் ரத்தத்தில் ஊறிக்கிடப்பதை இது போன்ற சம்பவங்கள் சுட்டிக்காட்டு கின்றன. திருஷ்டி கழித்தலும், பூனை குறுக்கே ஓடினால் ஆகாது என்பதும், கழுதை கத்தினால் சுபம் என்று கூறு வதும் காலம் காலமாக கூறப்பட்டு வரும் மூடநம்பிக் கைகளாகும்.<br /><br />மதவாதிகள் அரசியலில் வேரூன்ற ஆரம்பித்த பின்னர் இவற்றுக்கு மவுசு கூடிவிட்டது. இன்றும் சமூக தளங்களில் செயல் பட்டுவரும் அரசியல், ஜனநாயக, சமூகநீதி இயக் கங்கள் அனைத்தும் மக்களிடையே கடுமையான வலுவான மூடநம்பிக்கை எதிர்ப்பு பணியில் ஈடுபட வேண்டும். மூடநம்பிக்கைகளை தடைசெய்யும் சட்டங்களை இயற்ற வேண்டும் என்று இவை அரசுகளை வற்புறுத்த வேண்டும்.<br /><br />நன்றி: தீக்கதிர் 9.11.2013<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-89168387242403656202013-11-11T18:08:13.633+05:302013-11-11T18:08:13.633+05:30
நூல் வெளியீடு
திராவிடர் கழகம் கட்சி அல்ல ஒரு புர...<br />நூல் வெளியீடு<br /><br />திராவிடர் கழகம் கட்சி அல்ல ஒரு புரட்சி இயக்கமே! தந்தை பெரியார் கருத்துகள் பற்றி ஓர் ஆய்வு எனும் தலைப்பில் திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு அவர்களால் எழுதப்பட்டு, விழிகள் பதிப்பகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அதனை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கருத்தரங்கத்தில் வெளியிட்டார். ரூ.160 விலையுள்ள அந்நூல் வெளியீட்டு விழாவின்போது ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.<br /><br />திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் டாக்டர் பிறைநுதல்செல்வி, பேராசிரியர் அ. மார்க்ஸ், பகுத்தறிவாளர் பெரம்பலூர் ஓவியர் முகுந்தன், கவிஞர் நந்தலாலா ஆகியோர் கழகத் தலைவரிடமிருந்து பணம் கொடுத்துப் பெற்றுக் கொண்டனர்.<br /><br />நூலைப்பற்றி கழகத் தலைவர் குறிப்பிட்டதாவது: இது பி.எச்.டி.க்குத் தகுதியானது. அறிவுக்கரசு பெயருக்கேற்ற அறிவுக்கு அரசாக இந்த நூலை எழுதியுள்ளார் என்று பாராட்டிய கழகத் தலைவர் நூலினைச் சிறப்பாக வெளியிட்ட விழிகள் பதிப்பக உரிமையாளர் வேணுகோபால் அவர்களையும் பாராட்டினார். வேணுகோபால் அவர்களும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-26802988912686074462013-11-11T06:55:40.951+05:302013-11-11T06:55:40.951+05:30
சூத்திரன் பாஞ்சாலிகள்
மணவறைப் பெண்ணின்
கூரைப் ...<br />சூத்திரன் பாஞ்சாலிகள்<br /><br /><br />மணவறைப் பெண்ணின்<br /><br />கூரைப் புடவையை மந்திரங்களால் அவிழ்த்து<br /><br />முதலிலவளை சோமனுக்கு மணமுடித்து<br /><br />பின் னவளை கந்தர்வனுக்கும் உத்திரனுக்குமென<br /><br />நான்காவதாய் அக்னிக்கும் மனைவியாக்கி<br /><br />மாற்றி மாற்றி மந்திரமோதும்<br /><br />அந்தப் புரோகிதப் பார்ப்பான்<br /><br />சூத்திரப் பாஞ்சாலியாய் அவளையாக்கி<br /><br />அவளின் பதிவிரதத் தன்மையை<br /><br />பலவாறாய்ப் பந்தாடி அழித்தபின்<br /><br />பாவமந்த சூத்திரப் பையனை<br /><br />அய்ந்தாவது கணவனாய் அவளுக்காக்கி<br /><br />ஓதும் மந்திரத்தால் வெதும்பி<br /><br />அந்த ஓமகுண்ட நெருப்பே<br /><br />புகைவிட்டழுகிறது.<br /><br />புரியாத ஜென்மங்களோ<br /><br />அட்சதையை தூவுகிறது...<br /><br />வைதீக திருமணங்களின் புரோகிதன் ஓதும் முக்கியமான மந்திரமீது: சோமசிறீ ப்ரதாமோ<br /><br />- விவிதே கந்தர்வ விவிதே உத்ரஹ - த்ருதியோ அக்னிஸ்டே - பதிஸ துரியஸ்தே -<br /><br />மனுஸ்ய ஜாஹா<br /><br />இதன் பொருள்: இங்கு மணமகளாக இருக்கும் பெண்ணை முதலில் சோமனும், பின்னர்<br /><br />முறையே கந்தர்வனும், உத்தி ரனும், அக்னியும் அடைந்து அனுபவித் தார்கள். இப்போது<br /><br />அய்ந்தாவதாக மணமகனாகிய உனக்கு இவளை தானம் செய்து கொடுக்கிறேன்.<br /><br />- பரமத்தி வேலூர் செல்மா காமராசன்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-24751039401737138362013-11-11T06:52:43.269+05:302013-11-11T06:52:43.269+05:30
சர்ச்சில் கூறியது ஒருமுறை
சர்ச்சிலை சொற்பொழிவு ...<br />சர்ச்சில் கூறியது ஒருமுறை<br /><br /><br />சர்ச்சிலை சொற்பொழிவு ஆற்ற அழைத்தார்களாம். எவ்வளவு நேரம்? என்று கேட்டார் சொற் பொழிவாளர். ஒரு மணி நேரம் பேசினாலும் மகிழ்ச்சியே! என்றனர். அப்படியானால் ஒரே நாளில் வந்து பேசி விடுவேன் என்றாராம்!<br /><br />அரை மணி நேரம் என்ற போது, ஒரு வாரம் டைம் கேட்டாராம். பத்து நிமிடங்கள் பேச, இரண்டு வாரங்கள் வேண்டும் என்றார். குறுகிய காலத்திற்குள் பேசி முடிப்பது என்பது கடினமான காரியம். அதேபோல் சிறுகதை என்றால் கதை, தீம், இன்ட்ரெஸ்டிங் நடை, பஞ்ச் எல்லாம் இருக்க வேண்டும் என்பதால், நாவல் எழுதுவதைவிட சிறுகதை எழுதுவதே கடினம் நாவல் என்றால், ஒரு தீம் கிடைத்து விட்டால் மெல்ல மெல்ல கதையைக் கொண்டு வந்துவிடலாம்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-67349977846680320152013-11-11T06:52:08.876+05:302013-11-11T06:52:08.876+05:30
கடவுளுக்குக் காணிக்கை ஏன்?
கடவுளை மற; மனிதனை நி...<br />கடவுளுக்குக் காணிக்கை ஏன்?<br /><br /><br />கடவுளை மற; மனிதனை நினை என்று அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்கள் கூறியது கண்முன்னே உண்மையென காட்சியளிக்கும் செய்தி.<br /><br />28.10.2013 தேதியன்று தினத்தந்தியில் வெளிவந்துள்ள செய்தி. திருப்பதி கோயிலுக்கு ரூ.35 இலட்சம் மதிப்புள்ள ஆம்புலன்ஸ் காணிக்கை எல்லாம் வல்ல இறைவன் தன்னையும், குடும்பத்தினரையும், மக்களையும் காப்பான் என்று எண்ணிச் செல்லும் மக்களைக் காக்க ஏழுமலையான் மறப்பானா?<br /><br />மலைமேல் செல்லும் பேருந்துகள் உருண்டன பக்தர்கள் மாண்டனர். புலி, கரடி, சிறுத்தை தாக்கின பக்தர்கள் பாதிப்பு அடைந்தனர். பக்தர்கள் ஏழுமலையான் சன்னதியில் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டனர்.<br /><br />எதற்கும் பகவான் அசைந்து கொடுக்கவில்லை பக்தர்களை காக்கவில்லை. எந்த அவதாரமும் எடுக்கவில்லை. கடவுள் கைவிட்டார் மனிதன் கை கொடுத்தான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனடி சிகிச்சைக்கு ரூ.35 லட்சம் மதிப்புள்ள ஆம்புலன்ஸை கொடுத்து மக்களை காக்க அப்பல்லோ மருத்துவமனை அதிபர் வழங்கினார்.<br /><br />(ஆண்டவன் காக்க மாட்டான் என அறிந்திருப்பாரோ) பச்சைக் குழந்தை பாலுக்கு அழுகையில் குழவிக் கல்லுக்கு பாலாபிஷேகம் செய்யும் நாடல்லவா?<br /><br />ஆன்மிக நோக்கில் டாக்டர் பிரதாப் (ரெட்டி) அவர்கள் அளித்திருப்பினும் திருப்பதி வெங்கடாசலபதிக்கு வைரக் கிரீடம் தங்கத்தேர், தங்கப் பூணூல், உண்டியலில் பணம் என்று கொடுக்காமல் (ஏற்கெனவே கொடுத்திருந்தாலும்) உயிர் காக்கும் மருத்துவத்திற்கு தேவையான ஆம்புலன்ஸ் வாகனம் அளித்துள்ளார். அவரின் கடவுள் பற்றைவிட, மனிதநேயப் பற்று வென்று விட்டது. அவரின் மனிதநேயப் பற்றை நாமும் பாராட்டுவோம். என்ன பாராட்டத்தானே வேண்டும். ஏனெனில் வருத்தப்பட வேண்டியது நாமல்ல. நாமம் போட்ட பெருமாள்தானே!<br /><br />- ச. மாரியப்பன், கோடம்பாக்கம், சென்னைதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-47984426514656138432013-11-11T06:51:17.752+05:302013-11-11T06:51:17.752+05:30
கொடிது கொடிது (ஈ.வெ.ரா)
கொடிது கொடிது கோவிலுக்க...<br />கொடிது கொடிது (ஈ.வெ.ரா)<br /><br /><br />கொடிது கொடிது கோவிலுக்குப் போதல். அதனினும் கொடிது பார்ப்பான் பூசை செய்யும் கோவிலுக்குப் போதல். அதனினும் கொடிது குழவிக்கல்லையும், செம்பையும் கும்பிடுதல். அதனினும் கொடிது தேர்த் திருவிழா உற்சவத்திற்குப் போதல். அதனினும் கொடிது பெண்களை அங்கு கூட்டிப்போதல். அதனினும் கொடிது கோவில் கட்டுதல். அதனினும் கொடிது காணிக்கை போடுதல். அதனினும் கொடிது (அர்ச்சகப்) பார்ப்பானுக்கு ஈதல்.<br /><br />- விடுதலை 21.10.1957 தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-63880317798411691932013-11-11T06:46:31.637+05:302013-11-11T06:46:31.637+05:30
திருச்சி விலங்கின மருத்துவர் திரு.மா. கங்காதரக் க...<br />திருச்சி விலங்கின மருத்துவர் திரு.மா. கங்காதரக் கோனார்<br /><br /><br />ஜாதி செருக்கைச் சாடி நீதிக்குப் போராடிய மாமனிதர் திருச்சிராப்பள்ளி மாரிமுத்து கங்காதரக் கோனார். அவர் 1908ஆம் ஆண்டு பிறந்தார். சிறு வயதில் அவர் தந்தை அவரை மதுக்கடைக்குச் சென்று மது வாங்கி வரப் பணித்தார். ஆனால் கங்காதரர் எவ்வளவு வற்புறுத்தியும் மறுத்தார். வாழ் நாள் முழுவதும் மது அருந்துவதையோ, புகைத்தலையோ, புலால் உணவு உண்ணுவதையோ அவர் விரும்பவில்லை. பின்னாளில் விலங்கின மருத்து வராகப் பணியாற்றிய காலத்திலும் இப்பழக்கங்கள் அவர்பால் இல்லை.<br /><br />முதல் உலகப் பெரும்போரில் போர்ப்படையில் பணி புரிந்தார். அப்பணியில் பெற்ற ஊதியத்தை இயன்றவரை சேமித்துச் சென்னை விலங்கின மருத்துவக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். அவர் படித்த கல்லூரி மாணவர் விடுதியில் அக்கால நிலைக்கு ஏற்ப பார்ப் பனருக்குச் சிற்றுண்டி உணவருந்தத் தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.<br /><br />அக்காலத்துப் பொது உணவு விடுதிகளிலும் இந்நிலை இருந்தது. அந்நிலை மாற கங்காதரக் கோனார் வெகுண்டெழுந்தார். உண்ணாநோன்பு மேற்கொண்டார். அக்காலத்தில் தந்தை பெரியாரின் குடியரசு ஏட்டிலும் இச்செய்தி வெளியிடப்பட்டது.<br /><br />நன்னிலத்தில் அவர் கால்நடை மருத்துவராகப் பணியாற்றிய காலத்தில் அஞ்சல் அலுவலகத் தலைவர். வட்டாட்சியர், விலங்கின மருத்துவர் இம் மூவரைத் தவிர மற்ற உயர் அலுவலகப் பணிகளில் பார்ப்பனரே இருந்தனர். அஞ்சல் ஊழியர் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்டவரே. இவர்கள் பார்ப்பனர் வாழும் இடத்துக்குச் செல்லும்போது வெயிலின் வெம்மையிலும் காலணி அணியக்கூடாது எனத் தடுக்கப்பட்டனர். கங்காதார் அவர்களைக் காலணி அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தினார். அவரை எதிர்க்கும் துணிவு பார்ப்பனருக்கு இல்லை. எனவே அக்கொடிய பழக்கம் ஒழிந்தது.<br /><br />டாக்டர் கங்காதரனின் இளவல் திரு. கிருஷ்சாமிக்குச் ஜாதி மறுப்புத் திருமணம் செய்வித்தார்.டாக்டர் க. முத்துபாபு (இணை இயக்குநர் கால் நடைப் பராமரிப்பு), பேரா. க. பாஸ்கரன் (கல்லூரி கல்வி இணை இயக்குநர்) ஆகியோர் அன்னாரது திருக்குமாரர்களாவர். நெஞ்சுரங்கொண்ட கங்காதரரை நினைவில் நிறுத்துவோமாக.<br /><br />- சி.சி. செல்லம்,<br />யாதவர் களஞ்சியம், பக்327தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-15029301615808852362013-11-11T06:45:19.071+05:302013-11-11T06:45:19.071+05:30உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் ...உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் அனைத்திலும் வழக்குகள் குவிந்து தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையை நீடிக்க விடக் கூடாது என்று நீதியரசர்கள் குரல் எழுப்பியும் முயற்சித்தும் வருகிறார்கள்.<br /><br />எண்ணியர் திண்ணியராகவும் இருக்க வேண்டுமல்லவா? செயல் திறம் படைத்த நீதிபதி ஒருவர் தீர்ப்பு வழங்குவதில் சாதனை நிகழ்த்திய செய்தி பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது. கட்சிக்காரர்களின் நெஞ்சில் பால் வார்த்துள்ளது. அதனைக் காண்போம்.<br /><br />மேற்கு வங்காளம் இஸ்லாம்பூர் மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றம், அக் டோபர் மாதம் 9ஆம் தேதி, புதன் கிழமை, காலை 11 மணிக்கு நீதிமன்றம் செயல்படத் தொடங்கியது. நீதிபதி முதலில், சாட்சிகள், சாட்சியம் அளிக்க வேண்டிய வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறார். அடுத்து, காவல் துறை அதிகாரிகள் அழைக்கப்பட்டு, சாட்சியாக விசாரிக்கப்பட வேண்டிய வழக்குகளை எடுத்துக் கொள்கிறார். மதியம் 2 மணிக்கு, பகல் உணவாக, சோறும், காய், கீரையை நீதிபதி உணவாக உட்கொண்டு வழக்கு விசாரணையைத் தொடர்கிறார். மாலை 4 மணிக்கு நீதிபதி, தன் அறையில் தேநீர் அருந்தி 15 நிமிடங்கள் ஓய்வு எடுத்துக் கொள்கிறார். வழக்குகளை நடத்துகிறார். இடை இடையே தேநீர் அருந்திக் கொண்டு மாலை நேரம் தொடர்கிறது. இரவு 11 மணிக்கு சிறிது இடைவேளை கொடுத்து 15 நிமிடத்தில் இரவு உணவை முடித்துக் கொண்டு வழக்குகளை நடத்துகிறார். இரவு முழுவதும் வழக்குகள்நடத்தப்படுகிறது. இந்த வேளையில் பிணை வழங்குதல், மேல் முறையீடு வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இடையே தேநீர் குடித்துக் கொள்கிறார். இரவு முழுவதும் வழக்குகள் விசாரிக்கப்பட்டு மறுநாள், அதாவது வியாழன், 10ஆம் தேதி காலை 7 மணிக்கு, நீதிமன்றப் பணி வழக்கு விசாரணை முடிவடைகிறது.<br /><br />தொடர்ந்து 20 மணி நேரம் செயல் பட்டு 393 வழக்குகள் விசாரிக்கப்பட் டன. அக்டோபர் 10 முதல், நவம்பர் 9ஆம் தேதி வரை நீதிமன்றத்துக்கு விடு முறை என்பதால், மனிதநேய உணர் வுடன் கட்சிக்காரர்கள் மனக் கவலையைக் கவனத்தில் கொண்டு பணியாற்றிய நீதிபதியின், கடமை, பொறுப்புணர்வைக் கண்டு வியக்கா மலும், போற்றாமலும் இருக்க முடியாது.<br /><br />இந்த சிறப்பான காரியத்தை நடத்தி முடிக்க நீதிமன்ற ஊழியர்களும், காவலர்களும், வழக்கு நடத்த வந்த 50 வழக்குரைஞர்களும் ஒத்துழைத்ததையும் மெச்ச வேண்டும். மாலை நீதிமன்ற வளாக உணவுக் கடைகளும் மூடப் பட்டதால் அனைவரும் தேநீர் குடித்து இரவைக் கழித்தனர்.<br /><br />இந்நீதிபதியின் செயல்பாட்டை, வழக்குரைஞர்கள் எப்படி விமர்சித் துள்ளனர் என்பதைப் பார்ப்போம்.<br /><br />மூத்த வழக்குரைஞர் கீதாநாத் கங்குலி: எனக்குத் தெரிந்தவரையில், வங்காளத்திலோ, ஏன் இந்தியாவிலோ இதுபோன்ற முன்மாதிரி இருந்த தில்லை. 2008இல் ஜெக்மோகன் டால்மியா வழக்கை உச்சநீதிமன்றம் நள்ளிரவு வரை விசாரித்தது. மே மாதம் 2009இல் கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி டி.பி. சென்குப்தா கோடை விடுமுறையில் இரவு 11 மணி வரை 201 பிணை வழக்குகளை விசாரித்தார்.<br /><br />இஸ்லாம்பூர் வழக்குரைஞர் சங்கத் தலைவர் முகமது ஃபெய்ஜ்யு ரிடீன் என்னுடைய தொழிற்காலத்தில், தொடர்ந்து இவ்வளவு நேரம் நீதி மன்றம் செயல்பட்டதை முதன் முறை யாகக் காண முடிந்தது.<br /><br />அரசு துணை வழக்குரைஞர் கெய்சர் சவுத்ரி; நான் இரவு முழுவதும் இருந்தேன். நீதிபதியின் ஆற்றலும், பதட்டப்படாது செயல்பட்ட முறையும் மெச்சத்தக்கது, ஒவ்வொரு வழக்காக எடுத்து வழக்குரைஞர் வாதத்தைக் கேட்டு, எழுத்தர்கள் எழுத ஆணையை வழங்கி வந்தார். இவரின் செயல் முறையை, நீதித்துறை பாராட்ட வேண் டும்.<br /><br />நீதித்துறையில் இத்தகைய சாதனையை பொது நல நோக்கோடு செயல்படுத்திய நீதிபதி ஜகாங்கீர் கபீர் என்பவர். 50 வயதானவர். பெக்ராம் பூரை சேர்ந்தவர். இஸ்லாம்பூரில் இரண்டு ஆண்டுகளாக பணியில் உள்ளார்.<br /><br />‘The Telegraph’ 11.10.2013 இதழில் வெளிவந்த செய்திதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-88904690402461344812013-11-11T06:45:13.698+05:302013-11-11T06:45:13.698+05:30நேரத்தை புறம்தள்ளிய நீதிபதி
- மு.வி. சோமசுந்தரம்
...நேரத்தை புறம்தள்ளிய நீதிபதி<br /><br />- மு.வி. சோமசுந்தரம்<br /><br />நீதி கெட்டது யாரால்? தந்தை பெரியார் கேட்ட பொருள் பதிந்த பெரிய கேள்வி.<br /><br />நீதி தேவன் மயக்கம் - விழிப்புடனும், தெளிவுடனும் இருந்து வாதத்தை கேட்டு, குவிந்துள்ள புராண குப் பையைக் கண்டு மயக்க நிலைக்குத் தள்ளப்பட்டார் நீதிபதி என்பதை அறிஞர் அண்ணாவின் நாடகம் விளக்கும்.<br /><br />ஒரு முக்கியமான வழக்கு, வழக் கறிஞர் அடுக்கடுக்காக ஆதாரங்களை முன் வைக்கிறார். மூச்சு விடாமல் தொடர்ந்து பேசுகிறார். நீதிபதி, பின்னே சாய்வதும், முன்னே குனிந்து கேட்பதுமாக இருக்கிறார் அசைந்து அசைந்து உட்காருகிறார். அலுப்புத் தட்டி விடுகிறது. உரத்த குரலில்பேசி வந்த வழக்கறிஞர் வாதத்தை முடித்துவிட்டார். நீதிமன்றத்தில் சூழ்ந்திருந்த மனித ஒலி ஓய்ந்தது.<br /><br />குற்றவாளிக்கு மரண தண்டனை என்று நீதிபதி தீர்ப்பைக் கூறினார்.<br /><br />அதிர்ச்சி அடைந்த வழக்கறிஞர், நான் தீர்ப்பை எதிர்த்து மேல் முறை யீடு செய்யப் போகிறேன் என்றார்.<br /><br />எனக்குப்பிறகு, வேறு நீதிபதி இல்லாதபோது எவரிடம் மேல் முறையீடு? என்று நீதிபதி கேட்டார்.<br /><br />தூங்கிய நிலையிலிருந்த நீதிபதியிட மிருந்து விழிப்பு நிலையில் உள்ள நீதிபதியிடம் மேல் முறையீடு செய்யப் போகிறேன் என்றார் வழக்கறிஞர். நீதி தூங்கக் கூடாது என்பதற்கான ஒரு துணுக்கு.<br /><br />தாமதமாகும் தீர்ப்பு, மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்று, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, விடியலை எதிர் நோக்கி ஆண்டு பலவாக துவண்ட நிலையில் காத்திருக்கும் கட்சிக்காரர்கள் ஏராளம்.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-20299224129333317862013-11-11T06:42:11.331+05:302013-11-11T06:42:11.331+05:30
சுசீந்திரம் சத்தியாக்கிரகம்
திருவாங்கூர் சமஸ்தா...<br />சுசீந்திரம் சத்தியாக்கிரகம்<br /><br /><br />திருவாங்கூர் சமஸ்தானத்தில் பொதுஜனங்கள் அதாவது ஈழவர் முதலானவர்களைச் சில பொதுத் தெருக்களில் நடக்கவிடாமல் கொடுமைப்படுத்தி வந்ததின் காரணமாக வைக்கத்தில் சத்தியாக்கிரகம் செய்ததும், அது ஒருவாறு அனுகூலமாய் முடிவடைந்த தும் நேயர்களுக்கு ஞாபகமிருக்கலாம்.<br /><br />அதன் பிறகும் அதே ராஜ்யத்தில் மற்றும் பல பொதுத் தெருக்களில் நடக்க உரிமை கொடுக்காமல் ஜனங்கள் உபத்திரவப் படுவதும், சிற்சில இடங்களை அந்தச் சர்க்கார் அனு மதித்து வருவதும் நேயர்கள் அறிந்திருக்கலாம். ஆனால், நாகர்கோவிலுக்கு அடுத்த சுசீந்திரம் என்னும் ஒரு ஊரிலும் இதே மாதிரி ஈழவர் முதலான ஜனங்களை நடக்கவிடாமல் கொடுமைப்படுத்தி வந்ததை உத்தேசித்து அதில் சத்தியாக்கிரகம் சென்ற வருஷம் ஆரம்பிக்கப்பட்டது.<br /><br />ஆனால் அதிகாரிகளும் சில அதிகாரிகளுக்கு நல்ல பிள்ளை ஆகவேண்டு மென்று நினைத்தவர்களும், அந்த சத்தியாக்கிரகம் நடத்திய தலைவர்களை ஏமாற்றி, சீக்கிரத்தில் எல்லோருக்கும் வழி திறந்து விடப்படும் என்றும், சத்தியாக்கிரகத்தை நிறுத்திவிடும்படியும் சொல்லி வஞ்சித்து சத்தியாக்கிரகத்தைத் திடீரென்று நிறுத்தும்படி செய்துவிட்டார்கள்.<br /><br />இம்மாதிரி மேற்படி சத்தியாக்கிரகம் நிறுத்தி சுமார் ஒன்றரை வருஷமாகியும் நாளதுவரை யாதொரு முடிவும் ஏற்படாமல் வருவதோடு, இப்போது சர்க்கார் வேறு ரோடு போட்டுக் கொடுப்பதாகவும், அதற்கு ரூபா பத்தாயிரம் வரை அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டிருப்ப தாகவும் தெரிய வருகிறது.<br /><br />இம்மாதிரி செய்வதற்கு அந்த ஊர்க்காரர்களும் மற்றும் அந்த சத்தியாக்கிரகத்தில் சம்பந்தப்பட்டவர்களும், அனுமதிப்பார்களேயானால் அதைவிட மானக்கேடான காரியம் வேறில்லை என்பதே நமது அபிப்பிராயம். ஆதலால் சத்தியாக்கிரகத் தலைவர்கள் ஊர் ஜனங்களுடனும், சுற்றுப் பக்கத்துப் பிரமுகர்களுடனும், தொண்டர்களுடனும் கலந்து, சர்க்காருக்கு ஒரு மாத வாய்தா கண்டு ஒரு இறுதிக் கடிதத்தை அனுப்பிவிட்டு, அதற்குள் தேவையான பிரசாரம் செய்து தக்க ஆதர வைத் தேடிக்கொண்டு உடனே சத்தியாக்கிரகத்தைத் தொடங்கவேண்டுமென்று விரும்புகிறோம்.<br /><br />தமிழ்நாட்டில் உற்சாகம் உள்ள பல தொண்டர்கள் பார்ப்பனர்களால் ஏமாற்றப்பட்டு வீண்காரியத்தில் பிரவேசித்து அனாவசியமாய் சிறை சென்று வரு கிறார்கள். இப்படி ஒரு காரியம் ஆரம்பித்தால் பலர் இவ்விடமிருந்து கூட வந்தாலும் வருவார்கள். இதை தக்கபடி யோசிக்க வேணுமாய்க் கோருகிறோம்.<br /><br />- குடிஅரசு - கட்டுரை - 04.09.1927<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-81801753952713826702013-11-11T06:41:31.852+05:302013-11-11T06:41:31.852+05:30
சத்தியாக்கிரகமாகுமா?
சென்ற வாரம் சென்னை மவுண்ட்...<br />சத்தியாக்கிரகமாகுமா?<br /><br /><br />சென்ற வாரம் சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள நீல்துரை உருவச் சிலையை இரண்டு தொண்டர்கள் உடைத்ததற்காக அவர்கள் ஒவ்வொரு வருக்கும், மூன்று மூன்று மாதம் கடுங்காவலும் முன்னூறு ரூபாய் அபராதமும் அது செலுத்தப்படாவிட்டால் மேற்கொண்டு மூன்று மாதம் தண்டனையும் அனுபவிக்கத்தக்கது என்பதாக தண்டிக்கப் பெற்றிருக்கிறார்கள்.<br /><br />ஒரு சிலையின் கையை ஒடிப்பது சத்தியாக்கிரகமாகுமா? தொண்டர்களின் மனஉறுதியையும், அவர்களது தேசாபிமான வெறியையும் மெச்சிக் கொள்வதானாலும் இச்செய் கைக்குச் சத்தியாக்கிரகம் என்ற பெயர் ஒரு சிறிதும் பொருந்தாது என்பதே நமது அபிப்பிராயம்.<br /><br />அக்கிரமத்தை ஒழிக்க எவ்வித கஷ்டத்தையும் அனுபவிக்கத் தயாராயிருக்கும் இம்மாதிரி ஊக்கமுள்ள தொண்டர்களைத் தலைவர்கள் என்ப வர்கள் சரியான வழியில் நடத்திப் பயன் உண்டாகும்படியாக உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டுமேயல்லாது இம்மாதிரி ஒழுங்கில்லாத காரியங்களை செய்வதற்கு உதவியாயிருக்கக் கூடாதென்பதே நமது அபிப்பிராயம்.<br /><br />ஒரு சிலையின் கையை உடைப்பது துர்ராக்கிரகமென்பதே நமது அபிப் பிராயம். சிலையை எடுக்கும்படி போராடலாம். அதற்காகச் சத்தியாக்கிரகம் செய்யலாம். அதைப்பற்றி நமக்கு ஆட்சேபணை இல்லை. ஒரு சிலையை விகாரமாக்குவது மகாத்மாவின் தத்துவப்படிப் பார்த்தால் எல்லை கடந்த பலாத்காரமாகும் என்றே நமக்குப் புலப்படுகிறது.<br /><br />நல்ல விஷயங்களுக்கு ஏற்பட்ட பொருளை இம்மாதிரி விஷயங்களுக்குச் செலவு செய்வதை நாம் பாராட்ட முடியாததற்கு வருந்துகிறோம். நீல்துரை அக்கிரமக்காரர் என்பதாகவே வைத்துக் கொள்வோம். அவர் செய்த அக்கிரமத்தைவிட அதிகமான அக்கிரமங்களும், கொடுமைகளும் செய்து வருகிறவர்களையெல்லாம் நாம் என்ன செய்து விட்டோம்?<br /><br />அப்பேர்ப்பட்டவர்களையெல்லாம் பலாத்காரமில்லாமல் மனமாற்ற மடையும் படி நாம் அவர்களை வேண்டிக் கொள்கிறோமேயல்லாமல் அவர்களுடைய கையையும், காலையும் ஒடிக்கப் போகிறோமா? அல்லது ஒடிக்க எண்ணு கிறோமா? அந்தப்படியே இதிலும் நாம் நடந்து கொள்ளவேண்டியதாயிருக்க இம்மாதிரி நடக்கத் துணிந்ததானது வருத்தப்படத்தக்கதேயாகும்.<br /><br />இம்மாதிரி ஒவ்வொரு காரியத்திற்கும் செய்ய ஆரம்பிப்போமானால், கடைசியாக அது எங்கு போய் நிற்கும் என்கிற ஒரு முடிவு கட்டவும் முடியாது. அன்றியும் நாம் நினைக்கிற காரியமும் கைகூடாததுடன் அது முறை அல்லவென்றே சொல்லுவோம்.<br /><br />- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 28-08-1927<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-28511763368037592732013-11-11T06:40:54.232+05:302013-11-11T06:40:54.232+05:30
அறிவை அடக்க புதிய சட்டம்
எழுத்துரு அளவு Larger Fo...<br />அறிவை அடக்க புதிய சட்டம்<br />எழுத்துரு அளவு Larger Font Smaller Font<br /><br />மதஸ்தாபகர்களைக் குற்றம் சொல்வதைப் பற்றி தண்டிக்க என்னும் பேரால் ஒரு புதிய சட்டம் வேண்டும் என்றும் இப்போது எங்கும் ஒரே கூச்சலாயிருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தை நமது நாட்டுப்பார்ப்பனர்கள் தங்களுக்கு அனுகூலமாய் உபயோகப்படுத்திக்கொண்டு தங்களுடைய அக்கிரமங்களை நிலைக்க வைத்துக் கொள்ள எண்ணி அவர்களும் கூடவே கோவிந்தா போடுகிறார்கள்.<br /><br />இம்மாதிரி ஒரு சட்டம் ஏற்படுத்துவதானது மனித உரிமையை அடக்குவதாகுமேயல்லாமல், மனித தர்மத்திற்கு நீதி செய்ததாகாது என்பதாக நாம் வலியுறுத்துவோம், மதம் என்று சொல்வது ஒரு மனிதருடைய கொள்கை அல்லது அபிப்பிராயமாகுமே யல்லாமல் அது உலகத்தில் உள்ள மனிதகோடிகள் அத்தனை பேரும் கட்டுப்பட்டு நடந்துதான் ஆகவேண்டுமென்று கட்டாயப் படுத்தக் கூடியதல்ல.<br /><br />அப்படி எல்லோரையும் கட்டாயப் படுத்தப்பட்ட விஷயம் இந்த உலகத்தில் ஒன்றுகூட இல்லை யென்பதே நமது அபிப்பிராயம். உலக மனிதர்களில் 100க்கு 99 பேர்களால் ஒப்புக்கொள்வதாகச் சொல்லப்படும் கடவு ளையும் அவரது தத்துவங்கள் என்பதையும் மறுப்பதற்கே எல்லா மனிதனுக்கும் உரிமை அளிக்கப்பட்டிருக்கிறது.<br /><br />கடவுள் செய்ததாகச் சொல்வதையும், சொன்னதாகச் சொல்வதையும் பற்றிய தர்க்கங்களும், மறுப்புகளும் அறிவு உலகத்தில் தினமும் தாண்டவமாடிக் கொண்டிருக்க உலகம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது, ஒன்றை எதிர்ப்பார்த்து அடையாமல் போனவர்களில் பலர் கடவுளையும் கூட தூட்சிப்பதையும் உலகம் பார்த்துக்கொண்டும் அனு மதித்துக் கொண்டுந்தான் வருகிறது. கடவுளைப்பற்றியே இவ்வளவு அனுமதிக்கப்பட்டவர் கடவுள் பக்தர்கள் என்று சொல்பவர்களைப்பற்றி, கடவுளை அடைய வழிகாட்டிகள் என்று சொல்பவர்களைப்பற்றி கேட்கவும் வேண்டுமா?<br /><br />எனவே இவ்விஷயங்கள் ஒருவருடைய அபிப்பிராயமேயல் லாமல் அதுவே சத்தியமாய் விடாது, உலகத்தில் ஏதாவது சீர்திருத்தம் என்பது ஏற்படவேண்டுமானால் ஒருவர் அபிப்பிராயத்தை ஒருவர் கண்டிப்பதும், மறுப்பதும் ஒருவர் கொள்கையை அனுமதிக்கப்பட்டுதான் ஆகவேண்டும். அதற்குச் சட்டம் போட்டு தடுத்து விட்டால் அது மனிதனின் அறிவு வளர்ச்சியைத் தடுத்ததாகுமே யொழிய மற்றபடி அது எந்தவிதமான நன்மையையும் செய்ததாக ஆகாது.<br /><br />அன்றியும், இம்மாதிரியாக ஒரு சட்டமியற்றுவது அநாகரிகமும் காட்டு மிராண்டித்தனமுமேயாகும் இப்பேர்ப் பட்ட விஷயங்களில்தான் மக்களுக்கு விசாரணை செய்ய தாராளமாக இடம் கொடுக்கப்படவேண்டும். அதற்கு இடையூறு உள்ளனவைகளையெல்லாம் களைந்தெறிய வேண்டும்.<br /><br />ஒவ்வொரு காலத்திலுள்ள மக்கள் அறிவு நிலைக்கேற்றவாறு ஒவ்வொரு கொள்கைகள் பரப்பப் படுவதும் அது நிலைபெறுவதும், அதற்குக் கோடிக் கணக்கான மக்கள் பின்பற்ற ஏற்படுவதும், சகஜமான தேயல்லாமல் அதில் ஒன்றும் அதிசயமில்லை.<br /><br />அதுபோலவே தற்காலத்தில் உள்ள மக்கள் அறிவு நிலைக்குத் தக்கபடி மாறிக்கொண்டே வருவதும் இயற்கையே ஒழிய அதிலும் ஒன்றும் அதிசய மில்லை. எனவே, மக்கள் வெறும் அரசியல் சமூக இயலில் மாத்திரம் முற்போக் கடைய வேண்டியது பாக்கியமில்லை, அறிவிலும், ஆத்மார்த்த விஷயத்திலும் மனிதனுக்குள் இன்னமும் என்ன என்ன சக்தி இருக்கிறது என்பதைக் கண்டு பிடிப்பதிலும் முற்போக்கடைய வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ பாக்கி யிருக்கிறது.<br /><br />அவைகளைக் கவனிக்கும் போது இந்த அரசியலும் சமூக இயலும் வெகுசிறியதே யாகும். ஆனால் அப்பேர்ப்பட்ட முயற்சிகளுக்குச் சமூக இயல் முதலியவைகள் அடிகோலிகள் என்பதை மாத்திரம் ஒப்புக்கொள்ளலாம்.<br /><br />ஆதலால் இம்மாதிரி அறிவு வளர்ச் சிக்கு ஏதுவாகிய பிறப்புரிமையான சுதந்திர உணர்ச்சிகள் சட்டத்தின் மூலமாய் அழிக்கப்பட்டால் உலகம் காட்டு மிராண்டித்தனத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை அறிவாளிகளுக்கு எச்சரிக்கை செய்கிறோம்.<br /><br />- குடிஅரசு - கட்டுரை - 21.08.1927<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-10836863278557322072013-11-11T06:38:35.579+05:302013-11-11T06:38:35.579+05:30
வென்றார் சித்தராமையா
கருநாடக மாநிலம், சாம்ராஜ்ந...<br />வென்றார் சித்தராமையா<br /><br /><br />கருநாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டத் திற்குள் நுழையும் எந்த ஒரு முதல் அமைச்சரும் ஒரு மாதத்திற்கு மேல் தாக்குப் பிடிக்கமாட்டார்கள். பதவியை இழப்பார்கள் என்ற ஒரு மூடநம்பிக்கை நிலவி வரும் நிலையில், இன்றைய முதல் அமைச்சர் சித்தராமையா அந்த மூடநம்பிக்கையை உடைத் துக் காட்டியது வரவேற்கத்தக்கது - பாராட்டத் தக்கது.<br /><br />தன்னம்பிக்கையற்றவர்கள் மூடநம்பிக்கை களை வளர்க்கிறார்கள். முட்டாள்கள் அதனை நம்புகின்றனர். நான் எப்பொழுதுமே மூடநம்பிக்கை களை நம்புவதில்லை. மூடநம்பிக்கையைத் தகர்த்தெறியவே இந்த சாம்ராஜ்நகருக்கு வந் துள்ளேன் என்று அழுத்தமாகக் குறிப்பிட்டாரே!<br /><br />30 நாட்களுக்குள் சித்தராமையா பதவியை இழப்பார் என்று அரசியல்வாதிகளும், ஜோதிடர் களும் கூறினார்களே - சாம்ராஜ் நகருக்கு முதல் அமைச்சர் சித்தராமையா சென்று வந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. அவர் பதவி ஒன்றும் பறி போய் விடவில்லை; பலமாகவே கால் ஊன்றித்தான் நிற்கிறார்.<br /><br />உத்தரப்பிரதேசத்திலே ஒரு சாமியார் தங்கச் சுரங்கம்பற்றி உளறினார். இந்த நாட்டு ஏடுகளும், அரசியல்வாதிகளும் அதனை நம்பி ஏமாந்தார்கள்.<br /><br />இப்படி மூடநம்பிக்கைகளை அவிழ்த்துவிடும் பேர் வழிகள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படாத வரை - தங்கள் எத்து வேலைகளை அரங்கேற்றிக் கொண்டுதான் இருப்பார்கள்.<br /><br />சாம்ராஜ் நகர் என்பது கருநாடக மாநிலத்தில் உள்ள ஒரு பகுதி, ஆட்சி எல்லைக்குள் அந்தப் பகுதி அடங்காதா? அந்தப் பகுதியில் நல்வாழ்வுத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு முதல் அமைச் சர் என்ற முறையில் செல்லுவது - கடமையின் பாங்கு அல்லவா!<br /><br />சாம்ராஜ் நகரில் அப்படி என்னதான் இருக் கிறது? அந்தப் பகுதியைக் கடவுள் கேவலமாகப் படைத்து விட்டாரா?<br /><br />இந்தக் கேள்விகளுக்கெல்லாம் எந்த மேதாவிகளிடமிருந்தும், மூடத்தனத்தைப் பரப்பி வயிறு வளர்க்கும் ஊடகக்காரர்களிடமிருந்தும் அறிவு நாணயமான பதில் வருவது கிடையாது.<br /><br />தங்களுடைய மூடநம்பிக்கை முற்றும் அம்பல மாகி விட்டது என்று தெரிந்த நிலையிலும் அடுத்த மூடநம்பிக்கையை அவிழ்த்துக் கொட்ட அவர்கள் சிறிதும் வெட்கப்படுவதே கிடையாது.<br /><br />விஞ்ஞானம் தந்த அறிவுக் கொடையான ஊடகங்கள் அதற்கு மாறாக அஞ்ஞானத்தைப் பரப்புவதில் கட்டுக்கடங்கா வெறி கொண்டு அலைகின்றனவே - இந்த வெட்கக்கேட்டை எது கொண்டு சாற்ற?<br /><br />இவ்வளவுக்கும், இந்திய அரசமைப்புச் சட்டம் மக்கள் மத்தியிலே விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் - அது ஒவ்வொரு குடிமகன் அல்லது குடிமகளின் கடமை என்று வலியுறுத்துகிறதே.<br /><br />அத்தகைய அடிப்படைக் கடமையை அரசுகள் செய்கின்றனவா?<br /><br />வேலியே பயிரை மேய்ந்த கதையாக ஆட்சி பீடத்தில், தலைமை இடத்தில் இருக்கும் முதல் அமைச்சர்களே, பிரதமர்களே, குடியரசுத் தலை வர்களே, ஆளுநர்களே மத மூடநம்பிக்கைக் கூண்டுக்குள் சிக்கிப் பரிதவிக்கிறார்களே!<br /><br />என்ன கொடுமையென்றால் மகாராட்டிர மாநிலத்தில் சமூக சீர்திருத்தப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்படுகிறார் என்றால், எவ்வளவுக் கேவலம்!<br /><br />உடனடியாக மகாராட்டிர மாநிலத்தில் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது போல மற்ற மற்ற மாநிலங்களிலும் இத்தகு சட் டங்கள் கொண்டு வரப்பட வேண்டியது அவசிய மாகும்.<br /><br />கருநாடகத்தில் அத்தகையதொரு சட்டத்தைக் கொண்டுவரவிருப்பதாக அம்மாநில முதல் அமைச்சர் அறிவித்துள்ளார் - வரவேற்கத்தக்கது.<br /><br />எல்லாவற்றையும்விட இத்தகு சட்டம் ஒன்றை மத்திய அரசே கொண்டு வந்து அரசமைப்புச் சட் டத்தில் காணப்பட்ட சரத்திற்கு வடிவம் கொடுக்க வேண்டும் என்பதே நமது அழுத்தமான வேண்டு கோளாகும்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-33653198255903076782013-11-11T06:37:58.033+05:302013-11-11T06:37:58.033+05:30
தொல்லை
வரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்ப...<br />தொல்லை<br /><br /><br />வரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுத்திக் கொண்டு துன்பப்படுபவர்கள் நாணயமாய் வாழ முடியாமல் நாட்டுக்குத் தொல்லை விளைவிப்பவர்கள்.<br />(குடிஅரசு, 19.9.1937)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-62892930754115330312013-11-11T06:36:28.171+05:302013-11-11T06:36:28.171+05:30
திராவிடர் கழகப் பொருளாளர் திரு. கோ. சாமிதுரை மறைவ...<br />திராவிடர் கழகப் பொருளாளர் திரு. கோ. சாமிதுரை மறைவு தி.மு.க. தலைவர் கலைஞர் இரங்கல்<br /><br /><br />சென்னை, நவ.9- திராவிடர் கழகப் பொரு ளாளரும், நீண்ட கால மாக திராவிடர் கழக வளர்ச்சிக்காக அரும் பாடுபட்டவரும், திரா விடர் கழகத் தலைவர், இளவல் வீரமணிக்கு உற்ற துணையாக இருந்து வந்தவருமான - வழக் கறிஞர் திரு. கோ. சாமி துரை, எம்.ஏ., பி.எல்., அவர்கள் இன்று சென் னையில் திடீரென மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். தன்னுடைய மாணவப் பருவம் முதலாக திரா விடர் கழகத்திலே ஈடுபாடு கொண்டவர் திரு. சாமிதுரை. திரா விடர் கழகத்தின் சார் பில் நடைபெற்ற அத் தனை போராட்டங்களி லும் ஆர்வத்தோடு சாமி துரை கலந்து கொண் டதை நான் நன்கறிவேன்.<br /><br />திராவிடர் கழகத்தின் பொருளாளராக பணி யாற்றியதோடு, பெரி யார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அறக் கட்டளையின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும், பெரியார் மணியம்மை இன்ஸ்ட்டிட்யூட் ஆப் சயன்ஸ் அண்ட் டெக் னாலஜியின் துணைத் தலைவராகவும் விளங்கி வந்தார். அவருடைய மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அவரு டைய மருமகன், தமிழ கச் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீர்மானக் குழு உறுப்பினர், தம்பி குழந்தை தமிழரசனுக்கும், மற்றும் அவரு டைய குடும்பத்தினருக் கும், திராவிடர் கழகத் தோழர்களுக்கும், குறிப்பாக அந்தக் கட்சியின் தலைவர், தமிழர் தலை வர் கி.வீரமணி அவர் களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித் துக் கொள்கிறேன்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-41385080488685647582013-11-11T06:35:09.942+05:302013-11-11T06:35:09.942+05:30வாழ்க்கை குறிப்பு
பெயர் : கோ. சாமிதுரை
வயத...வாழ்க்கை குறிப்பு<br /><br />பெயர் : கோ. சாமிதுரை<br /><br />வயது : 81<br /><br />பிறந்த ஆண்டு : 1934<br /><br />பிறந்த இடம் : முடியனூர் (கள்ளக்குறிச்சி வட்டம்)<br /><br />மாவட்டம் : விழுப்புரம்<br /><br />பட்டம் : எம்.ஏ., பி.எல். - வழக்குரைஞர்<br /><br />தந்தையார் பெயர் : கோவிந்தன்<br /><br />தாயார் பெயர் : அய்யம்மாள்<br /><br />துணைவியர் பெயர் : சரோஜா<br /><br />மகன்கள் பெயர்<br /><br />1. டாக்டர் ஜி.எஸ். குமார்<br />2. வழக்குரைஞர் ஜி.எஸ்.பாஸ்கர்,<br /><br />மகள்கள் பெயர் :<br /><br />1. திருமதி சாந்தி சம்பத்<br />2. திருமதி டி. விஜயா<br />3. திருமதி செல்வி<br /><br />மாணவர் பருவம் முதல் திராவிடர் கழகத்தில் இருந்து வருகிறார்.<br /><br />திராவிடர் கழகம் நடத்திய போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றுள்ளார்.<br /><br />பொறுப்புகள் : பொருளாளர், திராவிடர் கழகம்<br /><br />நிர்வாகக் குழு : பெரியார் சுயமரியாதைப் உறுப்பினர் பிரச்சார நிறுவனத் (அறக்கட்டளை)<br />துணைத் தலைவர், பெரியார் மணியம்மை<br /><br />இன்ஸ்டியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (அறக்கட்டளை)<br /><br />எழுதிய நூல் : அம்பேத்கர் பேசுகிறார்<br /><br />சாது என்ற புனைப் பெயரில் விடுதலையிலும், உண்மையிலும் கட்டுரைகள் எழுதி வந்தவர். கடலூரில் கி.வீரமணி, எம்.எஸ். ஜனார்த்தனம் (இன்றைய பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்தின் தலைவர்) ஆகியோருடன் இணைந்து வழக்குரைஞர் தொழில் நடத்தினார். பிறகு கள்ளக்குறிச்சியில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். இப்பொழுது முழு நேரம் திராவிடர் கழகப் பணிகளில் ஈடுபட்டு வந்தவர்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-86227327079175273742013-11-11T06:34:29.803+05:302013-11-11T06:34:29.803+05:30சோதனைக் காலத்தில் எல்லாம் துணை நின்ற கழகப் பொருளாள...சோதனைக் காலத்தில் எல்லாம் துணை நின்ற கழகப் பொருளாளர் வழக்குரைஞர் சாமிதுரை மறந்தாரே! - கி.வீரமணி<br /><br />பேரிடி போன்றதோர் செய்தி!<br /><br />சோதனைக் காலத்தில் எல்லாம் துணை நின்ற கழகப் பொருளாளர் வழக்குரைஞர் சாமிதுரை மறந்தாரே!<br /><br />திராவிடர் கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை மறைவு!<br /><br />திருச்சிக்கு இன்று (9.11.2013) காலை சென்றபோது, திராவிடர் எழுச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள்பற்றி கழகப் பொறுப்பாளர்களிடம் கலந்து பேசிக் கொண்டிருந்தபோது, பேரிடி போன்ற செய்தி ஒன்று எங்களைத் தாக்கியது.<br /><br />எனது வாழ்விணையர் திருமதி மோகனா அவர்களும், கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்களும் என்னை நெருங்கி, தயங்கி நின்று சொன்னார்கள்.<br /><br />கழகப் பொருளாளர் எனது அன்பு சகோதரர் கோ.சாமிதுரை அவர்கள் சற்றுமுன் சென்னையில் உள்ள (கோட்டூர்புரம் பகுதி) இல்லத்தில் காலமானார் என்ற அதிர்ச்சிச் செய்தியால் மிகவும் தாக்குண்டோம்!<br /><br />சில காலம் உடல் நலிவுற்று இருந்த நிலையில், அவர் தேறி வந்தது ஆறுதலாக எங்களுக்கு - இயக்கத்திற்கு இருந்தது!<br /><br />ஆனால், சற்றும் எதிர்பாராத விதத்தில் அவரது முடிவு ஏற்பட்டதை எப்படித் தாங்கிக் கொள்வது என்பதே தெரியவில்லை.<br />ஏற்றுக்கொள்ள முடியவில்லையே!<br /><br />எங்களாலேயே ஏற்றுக்கொள்ள முடியாத நிலை இச்செய்தி என்ற நிலையில், அவரது அன்புச் செல்வங்களான மகன்கள், மகள்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களால் எப்படித்தான் தாங்கிக் கொள்ள முடியும்?<br /><br />மாணவப் பருவம் தொட்டே சகோதரர் மானமிகு கோ.சாமிதுரை அவர்கள் எனக்கு நெருக்கமான இயக்கத்தவர். அரை நூற்றாண்டுக்குமேல் எங்கள் பாசமும், உறவும், நட்பும் மேலானதாக இருக்கும் ஒன்று.<br /><br />அவர் பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ., படித்தபோது, நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அதே காலத்தில் படிப்பில் இருந்தவன்.<br /><br />திராவிடர் மாணவர் கழகம் எங்களை இணைத்தது. சட்டக் கல்லூரியில் இருவரும் இணை பிரியாதவர்களாக இருந்தோம்.<br /><br />சோதனைக் காலத்தில் துணையாக இருந்த இளைஞர்<br /><br />இயக்கத்திற்கு சோதனை ஏற்பட்ட போதெல்லாம், சற்றும் சபலமோ, சலனமோ கொள்ளாத இளைஞர் அவர் அன்று.<br /><br />எனவேதான், அருமை அய்யாவின், அம்மாவின் பெரும் நம்பிக்கை பாராட்டைப் பெற்ற எனது உற்ற தோழர் என்ற பெருமைக்கு ஆளாகி, கடைசிவரை காத்தவர்.<br /><br />வழக்குரைஞர் தொழில் தொடங்கும்போது கடலூரில் நாங்கள் ஒன்றாக சேர்ந்தோம். அவர் கல்லக்குறிச்சியில் பிரபலமான நிலையில், வழக்குரைஞர் தொழிலைக்கூட கடந்த 10 ஆண்டுகளுக்குமுன் துறந்து, இயக்கத் தொண்டாற்ற பெரியார் திடலுக்கே தன்னை ஒப்படைத்துவிட்டு, சென்னைவாசியானார் என்னைப் போலவே!<br /><br />அவரது வாழ்விணையர் மறைந்த சரோஜா அவர்களும், எனது வாழ்விணையரும் கடலூரில் உயர்நிலைப் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள்.<br /><br />இப்படி இரு குடும்ப உறவுகளும் என்றும் மறக்க முடியாதவை - பிரிக்க முடியாதவை!<br />பாழும் சாவு பிரித்துவிட்டதே!<br /><br />பாழும் சாவு - எங்களைப் பிரித்துவிட்டதே!<br /><br />வரும் (நவம்பர்) 26 ஆம் தேதி அவரது 81 ஆம் ஆண்டு பிறந்த நாள்; என்னைவிட ஒரு சில நாள்கள்தான் மூத்தவர் அவர்!<br />அவரது பிரிவு கழகத்திற்கு ஏற்படுத்தியிருக்கும் பள்ளமும், இழப்பும் எளிதில் ஈடுசெய்ய முடியாத ஒன்று!<br /><br />என்றாலும், தந்தை பெரியாரின் அறிவுரைக்கேற்ப, இயற்கையின் கோணல் புத்திக்குமுன் என்ன செய்ய இயலும்?<br /><br />குளமான கண்களோடு பிரியாவிடை!<br /><br />எனவே, நாம் அவருக்குப் பிரியாவிடையைக் குளமாகும் கண்களோடும், கனத்த இதய வலியோடும் தந்து வீர வணக்கத்தைத் தெரிவித்து, எங்களது பெரும் பெரியார் குடும்பமான அந்தக் குடும்பத்து செல்வங்களுக்கும் தேற்ற முடியாத எமது ஆறுதலை, இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.<br /><br /> <br /><br />- கி.வீரமணி<br />தலைவர்,<br />திராவிடர் கழகம்.<br /><br />9.11.2013<br /><br />குறிப்பு: கழகக் கொடியை மூன்று நாள்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு கழகத் தோழர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-59189797928907144812013-11-11T06:29:31.991+05:302013-11-11T06:29:31.991+05:30இனமுரசு சத்யராஜ்
திராவிடர் கழகப் பொருளாளர் அய்யா ...இனமுரசு சத்யராஜ்<br /><br />திராவிடர் கழகப் பொருளாளர் அய்யா சாமிதுரை அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சி யுற்றேன். தந்தை பெரியார் அவர்களின் காலத்தி லிருந்து திராவிடர் கழகத்தின் எளிய தொண்ட னாகத் தம்மை இணைத்துக் கொண்டவர். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்களின் உற்ற நண்பராக 50 ஆண்டுகளாக உடனிருந்து இயக்கப்பணி செய்த பெருமகனாக, பெரியார் பெரும் தொண்டராக அவர் திகழ்ந்துள்ளார்.<br /><br />திராவிடர் கழகத்துடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்ட காலத்திலிருந்து நான் சாமிதுரை அவர் களை நன்கு அறிந்து பழகியுள்ளேன்.``பெரியார் திரைப்படம் உருவானபோது அவருடன் பலமுறை உரையாடியது எனக்கு நினைவுக்கு வருகிறது. பெரியார் கொள்கையில் அடிபிறழாமல் வாழ்ந்த ஒரு முன்னணித் தலைவரை நாம் இழந்திருக்கிறோம்.<br /><br />அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கும் திராவிடர் கழகத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது துயரத்தில் நானும் பங்கெடுத்துக்கொள்கிறேன். - இவ்வாறு இனமுரசு சத்யராஜ் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.<br /><br />வெளிநாட்டிலிருந்து....<br /><br />கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை அவர்கள் நேற்று (9.11.2013) காலை மறைவுற்ற செய்தி அறிந்ததும், அமெரிக்காவில் இருந்து தொலைப்பேசி வழியாக டாக்டர் சோம.இளங்கோவன், திரு.அசோக்ராஜ், திருமதி அருள், திரு.லட்சுமணன்தமிழ், பொறியாளர் சுந்தரராஜுலு, சிங்கப்பூரில் இருந்து திருமதி கவிதா மாறன், நடிகர் இனமுரசு சத்யராஜ், மும்பை இரவிச்சந்திரன் ஆகியோர் தங்களது இரங்கலை தமிழர் தலைவரிடமும், கழகப் பொருளாளரின் குடும்பத்தாரிடமும் தெரிவித்தனர்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-71186363990876510342013-11-11T06:28:33.129+05:302013-11-11T06:28:33.129+05:30அய்யா! பொருளாளரே! உமக்கு நன்றி!
தந்தை பெரியாரின் ...அய்யா! பொருளாளரே! உமக்கு நன்றி!<br /><br />தந்தை பெரியாரின் தொண்டரே!<br /><br />அய்யா ஆசிரியரின் நண்பரே!<br /><br />இயக்கத்தின் பெட்டகமாய்<br /><br />கழகத்தின் கணக்கிருப்பாய்<br /><br />கண்டிப்பின் மறு உருவாய்<br /><br />தொண்டறத்தின் சிறப்பினிலே<br /><br />சிக்கனத்தில் வாழ்ந்தவரே<br /><br />சிந்தையிலே நிறைந்து விட்டீர்!<br /><br />தள்ளாத உடலுடனே<br /><br />தளிர் நடை போட்டே தான்<br /><br />ஆசிரியரின் நிழல் போலே<br /><br />உடன் பிறப்பாய் நின்றவரே!<br /><br />உள்ளமெல்லாம் வலித்திடவே<br /><br />சாமிதுரை வாழ்கவென்றே<br /><br />நன்றியுடன் வாழ்த்திடுவோம் !<br /><br />- சோம.இளங்கோவன்<br />பெரியார் பன்னாட்டமைப்பு, அமெரிக்கா.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-58029384099644008602013-11-11T06:27:40.992+05:302013-11-11T06:27:40.992+05:30
திராவிடர் கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை மறைவு வைகோ ...<br />திராவிடர் கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை மறைவு வைகோ இரங்கல்<br /><br /><br />திராவிடர் கழகப் பொருளாளரும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் துணைத் தலைவரும், பெரியார் மணியம்மை அறிவியல்-தொழில்நுட்ப அறக்கட்டளை நிறுவன உறுப்பினரு மான வழக்கறிஞர் கோ. சாமிதுரை அவர்கள், 9.11.2013 அன்று காலை சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும் ஆறாத் துயரமும் கொண்டேன்.<br /><br />விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகில் உள்ள முடியனூர் என்ற குக்கிராமத்தில் பிறந்த சாமிதுரை அவர்கள், தமிழகம் முழுவதும் அறியும் வகையில் திராவிடர் கழகப் பணியின் மூலம் உயர்ந்தார். படிக்கட்டும் தமிழ் பேசும் பச்சையப்பன் கல்லூரியிலும், சென்னை சட்டக் கல்லூரியிலும் மாணவராகக் கல்வி கற்ற காலம் முதலே திராவிடர் கழகப் பணியில் அவர் முனைந்து செயல்பட்டார்.<br /><br />தென்னாற்காடு மாவட்டப் பொருளாளர், திராவிடர் கழக அமைப்புச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர், பொருளாளர் என தமது தொண்டால் படிப்படியாக உயர்ந்த கோ.சாமிதுரை அவர்கள் கருத்தாழமிக்க எழுத்தாளரும் ஆவார். சாது என்ற புனைப் பெயரில் அவர் விடுதலையிலும், உண்மையிலும் எழுதிய எழுத்துக்கள் கருத்தாழம் கொண்டவை ஆகும். அம்பேத்கர் பேசுகிறார் என்ற அரிய நூலையும் இவர் உருவாக்கித் தந்துள்ளார்.<br /><br />அண்மையில் இவரது துணைவியார் சரோஜா அம்மையாரின் மரணம் நேர்ந்து அந்தத் துயரம் வாட்டிய நிலையிலும், தனது பணிகளில் வழக்கம் போல தொய்வற ஈடுபட்டார்.<br /><br />தமிழக அரசின் பெரியார் விருது பெற்ற பெருமைக்குரிய கோ.சாமிதுரை அவர்களது மறைவுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வீரவணக்கம் செலுத்துகிறது.<br /><br />அவரது பிரிவால் துயருற்று இருக்கும் திராவிடர் கழகத் தோழர்களுக்கும், அவரது அன்புச் செல்வங் களான குமார், பாஸ்கர், சாந்தி, விஜயா, செல்வி ஆகியோருக்கும் ஆறுதலையும், இரங்கலையும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-13743682299228017512013-11-11T06:26:35.783+05:302013-11-11T06:26:35.783+05:30
மூடநம்பிக்கைக்கு எதிரான போரில் வென்றிருக்கிறார் ம...<br />மூடநம்பிக்கைக்கு எதிரான போரில் வென்றிருக்கிறார் முதல்வர் சித்தராமையா<br /><br /><br />மூடநம்பிக்கைக்கு எதிரான போரில் வென்றிருக்கிறார் முதல்வர் சித்தராமையா<br />முடிவுக்கு வந்தது சாம்ராஜ் நகர் மூடநம்பிக்கை!<br />30 நாட்களுக்கு மேலாகியும் முதல்வராகத் தொடர்கிறார் சித்தராமையா<br /><br />பெங்களூரு, நவ. 10- கருநாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்துக்குள் நுழை யும் எந்த முதல்வரும் ஒரு மாதத்துக்கு மேல் தாக்குப்பிடிக்க மாட்டார்கள். பதவியை இழப்பார்கள் என்று கருதப்பட்டு வந்த நிலையில் அக்டோபர் 7-ஆம் தேதி அந்த மாநில முதல்வர் சித்தராமையா சாம்ராஜ் நகருக்குள் காலடி எடுத்துவைத்தார். இப்போது அவர் நுழைந்து ஒரு மாதமாகி விட்டது.<br /><br />ஆனால், அவர் இன்றைக்கும் கருநாடக முதல்வராகத்தான் பவனி வருகிறார். மூடநம்பிக்கைக்கு எதிரான போரில் அவர் வென்றிருக்கிறார்.<br /><br />சாம்ராஜ் நகர் மாவட்டத்துக்குள் நுழைந்தபோது அவர் கூறினார். தன்னம் பிக்கை அற்றவர்கள் மூடநம்பிக்கையை உருவாக்குகின்றனர். முட்டாள்கள் அதனை நம்புகின்றனர். நான் எப்போதும் மூட நம்பிக்கைகளை நம்பியதில்லை. மூட நம்பிக்கையை தகர்த்தெறியவே சாம்ராஜ் நகருக்கு வந்தேன் என்று இன்றைக்கு அவர் சொன்னதைச் செய்து காட்டி விட்டார்.<br /><br />இன்னும் 30 நாட்களில் சித்தராமையா பதவி இழப்பார் என பல அரசியல் தலைவர்களும், ஜோதிடர்களும் கடந்த 30 நாட்களாக ஓயாமல் சொல்லி வந்தனர். இந்நிலையில் 30 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக சித்தராமையா வலம் வந்து கொண்டிருக்கிறார்.<br /><br />இதனால் முந்தைய முதல்வர்களின் நாற்காலிகளை காவு வாங்கியது சாம்ராஜ் நகரின் மூடு மந்திரங்கள் அல்ல. அவர்கள் செய்த தவறுகளும், ஊழலும்தான் என்பது மக்களுக்கு தெளிவாக புரிந்துவிட்டது.<br /><br />முதல்வராகப் பதவியேற்றதும் வீடு தேடிப்போய் எழுத்தாளர்களை சந்தித்தது. பத்திரிகையாளர்களை சந்தித்து ஆட்சி குறித்து ஆலோசித்தது. மூடநம்பிக்கைகள் நிறைந்த சாம்ராஜ் நகருக்குள் நுழைந்தது என கருநாடக அரசியலில் சித்தராமையா தனித்து நிற்கிறார்.<br /><br />எப்படி வந்தது இந்த மூடநம்பிக்கை<br /><br />இந்திய விடுதலைக்கு முன்பு வரை சாம்ராஜ் நகர் மாவட்டம் மதராஸ் ராஜ் தானியின் ஓர் அங்கமாக இருந்தது. 1956-ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது கருநாடக மாநி லத்துடன் சேர்க்கப்பட்டது. தமிழக - கருநாடக மாநில எல்லையில் இருக்கும் சாம்ராஜ்நகர், மைசூரிவிலிருந்து 87 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மக்கள் நலனுக்காகவும், நிர்வாக வசதிகளுக்காக வும் 1996 ஆம் ஆண்டு மைசூரிலிருந்து தனியாக சாம்ராஜ் நகர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.<br /><br />1947 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை வடகருநாடகத்தை சேர்ந்தவர்களே தொடர்ந்து கருநாடகத்தின் முதல்வராக ஆட்சி செய்வதால், அம்மாநிலத்தின் தென் எல்லையில் இருக்கும் சாம்ராஜ் நகர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.<br /><br />இதனால் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து என அடிப்படை வசதிகள் ஏதுமின்றி கருநாடகத்தில் சாம்ராஜ் நகர் மாவட்டம் பின்தங்கிய மாவட்டங்களின் பட்டியலில் நிரந்தரமாக இடம் பிடித்தது. உழைக்கும் மக்களின் வறுமையையும், அறியாமை யையும் மூலதனமாக்கிக் கொண்டு புதுப் புது விதங்களில் மூடநம்பிக்கை கூடா ரங்கள் புற்றீசல் போல் முளைத்தன.<br /><br />இதனால் சாம்ராஜ நகர் மந்திர தந்திர சித்து வேலைகளுக்கும், செய்வினை, ஆவியை ஏவி விடும் விளையாட்டு களுக்கும் மிகவும் பெயர் பெற்றது, இத னால் சாம்ராஜ் நகரை சேர்ந்தவர்கள் என்றாலே சூன்யம் செய்து விடுவார்கள் என்ற அச்சம் கருநாடக மக்களிடம் பரவலாக காணப்படுகிறது.<br /><br />- நன்றி தி இந்து, 8.11.2013தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-4640633624701791552013-11-11T06:24:25.321+05:302013-11-11T06:24:25.321+05:30திருச்சி திராவிடர் எழுச்சி மாநாட்டில் புரட்சித் தி...திருச்சி திராவிடர் எழுச்சி மாநாட்டில் புரட்சித் திருமணம்!<br /><br />நேற்று (9.11.2013) மாலை திருச்சி உழவர் சந்தையில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற திராவிடர் எழுச்சி மாநாட்டில் சுயமரியாதைத் திருமணத்தின் சார்பில் ஒரு புரட்சிகரமான வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா நடைபெற்றது.<br /><br />நீலகிரி மாவட்டம் - குன்னூர் லிங்கப்பன் - மலர்க்கொடி ஆகியோரின் மகன் வெங்கடேஷ் பி.சி.ஏ. சென்னை மண் ணிவாக்கம் இரா. பத்மாசூரன் - சிவபாக்கியம் ஆகி யோரின் மகள் ப. அருணா எம்.எஸ்சி ஆகியோருக்கு மாநாட்டு மேடையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பலத்த கரவொலிக்கிடையே மணவிழாவினை நடத்தி வைத்தார்.<br /><br />மணமகன், மணமகள் ஆகியோர் மணமுறிவு பெற்றவர்கள் மட்டுமின்றி மணமகளுக்கு மூன்று வயதில் பெண் குழந்தையும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு ஜாதி மறுப்புத் திருமணம், தாலி விலக்கப்பட்ட திருமணம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.<br /><br />இந்தத் திருமணத்தில் வழக்கம்போல உறுதிமொழி களைக் கூறச் செய்த கழகத் தலைவர் அவர்கள், மணமகனுக்குக் கூடுதலான சில உறுதிமொழிச் சொற்களையும் சேர்த்துக் கூறச் செய்தார்.<br /><br />எந்த நிலையிலும் பழைய வாழ்க்கை நினைவுகளைக் சுட்டிக்காட்டுவதில்லை என்றும்; இந்தக் குழந்தையை, தன் சொந்த குழந்தையைப் போலப் பாவிப்பேன் என்றும் கூறச் செய்தார். இத்தகைய உறுதிமொழிகளைக் கூறச் சொன்னபோது வெள்ளம்போல் திரண்டிருந்த மக்கள் திரள் பெருத்த கரஒலி எழுப்பியது.<br /><br />திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் இதனைச் சிறப்பாகச் சுட்டிக்காட்டி - இது சாதாரண திருமணமல்ல - சமுதாயப் புரட்சித் திருமணம் என்று குறிப்பிட்டார்.<br /><br />தன் பெற்றோர்களின் திருமணத்தை நேரில் பார்த்த பெருமை இந்தக் குழந்தைக்கு உண்டு என்று சொன்ன போது கூட்டத்தில் பெருத்த ஆரவாரம் ஏற்பட்டது. தொடக்கத்தில் திருமண நிலைய இயக்குநர் திருமகள் வரவேற்புரை ஆற்றினார். அருள் தந்தை ஜெகத் கஸ்பர், பேராசிரியர் காதர்மொய்தீன், தொல்.திருமாவளவன் ஆகியோர் சாட்சிக் கையொப்பமிட்டனர்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com