tag:blogger.com,1999:blog-1474608369333206681.post5112829893205105731..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: கிருஸ்தவ, முஸ்லீம் மதத்திலும் குறைபாடுகள் உண்டு!இல்லை என்று மறுத்துக் கூற முடியுமா?தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-5922210640687463652013-05-19T06:55:03.610+05:302013-05-19T06:55:03.610+05:30அந்த வார்த்தை
அறிஞர் பெர்னார்ட்ஷா நோபல் பரிசு பெற...அந்த வார்த்தை<br /><br />அறிஞர் பெர்னார்ட்ஷா நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர். அவரது படைப்பு களுக்குப் பதிப்பாளர்கள் ஒரு எழுத்துக்கு இவ்வளவு என்று பணம் கொடுப்பார்கள். பெரும்பாலும் ஓர் எழுத்துக்கு ஒரு ஷில்லிங் கொடுத்து விடுவார்கள்.<br /><br />இதைக் கிண்டல் செய்ய நினைத்த ஓர் இளைஞன், பெர்னார்ட்ஷாவுக்கு ஆறு ஷில்லிங் அனுப்பி, இதைப் பெற்றுக் கொண்டு, ஷா தன் கைப்பட ஒரு கடிதம் தனக்கு எழுத வேண்டும் என்று கேட்டிருந்தான்.<br /><br />பெர்னார்ட்ஷா, பண விஷயத்தில் எப்போதும் கறாராக நடந்து கொள்பவர்.<br /><br />எனவே, தனது கடிதத்தில் ஆறு எழுத்திற்கு மேல் ஓர் எழுத்து கூடக் கூடுதலாக இருக்கக் கூடாது என்று, ஆறு எழுத்துகளைக் கொண்ட ஒரு வார்த்தையை எழுதி, அந்த இளைஞனுக்கு அனுப்பி வைத்தார்.<br /><br />அந்த ஆங்கில வார்த்தை என்ன தெரியுமா? - Thanks.<br /><br />- சந்திரன் வீராசாமிதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-10958348989834466162013-05-19T06:43:56.961+05:302013-05-19T06:43:56.961+05:30போர்க் குற்ற இலங்கையின் முகத்தில் கரி?
இரண்டாம் ...போர்க் குற்ற இலங்கையின் முகத்தில் கரி?<br /><br /><br />இரண்டாம் எலிசபெத்<br /><br />இலங்கை போர்க் குற்றம் புரிந்த நாடு என்பது அய்.நா. அமைத்த மூவர் குழுவின் அறிக்கை.<br /><br />இலங்கை அதிபர் இராஜபக்சேவின் போர்க் குற்றம், மனித உரிமை மீறல்பற்றி, அய்.நா.வின் மனித உரிமை ஆணையம் ஜெனிவாவில் கூடிய அதன் கூட்டத்தில் ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது - இரண்டாம் முறையாக.<br /><br />முன்பு, முதற்கூட்டத்தில் - நடுநிலை வகித்த இந்தத் தீர்மானம் குறித்து 47 நாடுகளில், இந்த முறை இலங்கைக்கு எதிராகவே - அதன் வன்மைகளை உணர்ந்து தீர்மானத்திற்கு வாக்களித்துள்ளன.<br /><br />இந்த நிலையில், வரும் நவம்பரில் (2013) நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாடு, இலங்கையில் நடைபெறுவது கூடாது என்ற குரல் உலகின் பல பாகங்களிலிருந்தும் கிளம்பியது.<br /><br />காமன்வெல்த் அமைப்பில் 54 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இதில் பெரும்பாலானவை முன்பு பிரிட்டனின் ஆதிக்கத்தின்கீழ் இருந்த நாடுகளாகும்.<br /><br />இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தப்படக்கூடாது; ஜனநாயகத்திற்கு விரோத, மனித உரிமைகளை மீறிய போர்க் குற்றங்கள் புரிந்த அந்நாட்டில் இந்த மாநாடு நடத்தப்படுவது முறையல்ல என்று ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளும், இந்தியாவில் உள்ள பெரும்பாலானோரும் வற்புறுத்தினர்.<br /><br />டெசோ அமைப்பின் சார்பாக பற்பல நாட்டுத் தூதுவர்களைச் சந்தித்தும்கூட வற்புறுத்தப்பட்டது.<br /><br />வழமைபோல மத்திய அரசு வாய்மூடி மவுனியாகவே - இலங்கையை இன்னமும் நட்புறவு நாடு என்று கூறுவது, சிறிதும் ஈவு இரக்கமின்றி, தமிழர்களுக்குச் சவால் விடுவதைப்போல் இருந்தது!<br /><br />எப்படியோ காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்திடவேண்டும் என்று அவ்வமைப்பின் பெரும்பாலான நாடுகள் முடிவு செய்துவிட்டன என்பது நமது வேதனைக்குரியதாகும்!<br /><br />உலக அரங்கில், தமிழினப் படுகொலை செய்த இராஜபக்சே அரசு ஏதோ பெரிய சாதனையாளர்களைப்போல காமன்வெல்த் மாநாட்டை நடத்துவது அந்த நாடுகளுக்கே அவலமான அவமானமாகும்.<br /><br />என்றாலும், இதை உணர்ந்துதான்போலும், 87 வயதான முதிர்ந்த பிரிட்டிஷ் இராணி இரண்டாம் எலிசபெத் அம்மையார் அதில் பங்கேற்கமாட்டார்; அவருக்குப் பதிலாக இளவரசர் சார்லசை அனுப்பி வைக்க இருக்கிறார் என்று வந்துள்ள செய்தி, மனித உரிமை ஆர்வலர்களுக்குச் சற்று ஆறுதல் தருகிறது!<br /><br />1973 ஆம் ஆண்டுக்குப்பின், பிரிட்டிஷ் இராணியார் (அவர்தான் அதன் தலைவர்) கலந்துகொள்ளாமல் - பங்கேற்காமல் நடைபெறு வதே முதல் முறையாகும்!<br /><br />ராஜரீக ரீதியில் வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், உண்மை உலகத்திற்குத் தெரியாமலா போகும்? எனவே, இது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.<br /><br />கி.வீரமணி,<br />ஆசிரியர்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-72266094506344674442013-05-19T06:42:50.374+05:302013-05-19T06:42:50.374+05:30பொறுமைக்கு வலிமை உண்டு
விடுதலைச் சிறுத்தைகள் நட...பொறுமைக்கு வலிமை உண்டு<br /> <br /><br />விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய மக்கள் ஒற்றுமை<br /><br />நம்முடைய சகோதரர்கள், சகோதரிகள் ரத்தம் சிந்தக்கூடாது. எல்லோரும் சகோதரர்கள் - சிறை யிலே அவர்கள் இருக்கவேண்டும் - அவர்களைப் பழிவாங்க வேண்டும் என நினைத்து, அந்தத் துன்பத்திலே மகிழக்கூடியவர்கள் அல்லர். தயவு செய்து அமைதியாக யோசியுங்கள்.<br /><br /> <br /><br />நீங்கள் எடுத்த நிலைப்பாடு இருக்கிறதே, அது சரியான நிலைப்பாடு அல்ல. தவறான பாதை. சில நேரங்களிலே சில இலக்குகளை விசாரித்துக் கொண்டு ஊருக்குச் செல்லலாம். போகிற நேரத்திலே கொஞ்சதூரம் போனதும்தான் தவறான பாதை எனத் தெரிகிறது. தவறான பாதையாக இருந்தாலும், கடைசிவரைப் போவேன் என்றால், அது அறிவுடைமை அல்ல.<br /><br />கொஞ்சதூரம் போய் தவறான பாதை என நினைத்தால், சரியான பாதைக்கு வரவேண்டும். எனவே, தவறான பாதைக்குப் போனவர்களையும், சரியான பாதைக்குக் கொண்டு வரவும். அதேநேரத்தில் நல்லொழுக்கத்தையும், ஒற்றுமையையும் உருவாக்கி தமிழ்நாடு என்பதிருக்கிறதே, இது சமத்துவ பூமி, சமூகநீதிக் கொடி பறக்கக் கூடிய பெரியாரின் மண் என்பதை எடுத்துச் சொல்லி, அந்த வாய்ப்புக்காக இந்த மாநாடு ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.<br /><br />எந்தக் காரணத்தாலும் தோழர்களே நீங்கள் பொறுமையை இழக்காதீர்கள்; உங்கள் பொறுமைக்கு வலிமை உண்டு. மேடையில் பேசுவதைவிட, அமைதிக்கு மிக ஆழமான சொல்வன்மை உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள். அந்த வகையிலே உங்களுடைய சகிப்புத் தன்மை வரவேற்கத்தகுந்தது. பின்பற்றத் தகுந்தது. சமூகத்தில் ஒரு நல்ல மாற்றம் வரவேண்டும். எல்லோரும் கைகோர்க்க வேண்டும். யாரும் ரத்தம் சிந்தக்கூடாது என்ற காரணத்தாலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது.<br /><br />பொதுச் சொத்துக்கு நாசம் ஏற்படக்கூடாது. காரணம், பொதுச்சொத்து நம்முடைய சொத்து. அது யாருடைய சொத்தும் அல்ல. அதற்கு இழப்பு ஏற்பட்டால், அதற்கு வரி கட்ட வேண்டியவர்கள் நாம்தான் என்கிற உணர்வைப் பெற்று ஒரு புது ஒழுங்கை உருவாக்குவோம்.<br /><br />இந்த மாநாடு பொதுச் சொத்தைப் பாதுகாக்கிற மாநாடு; பொது ஒழுங்கை நிலை நிறுத்துகிற மாநாடு; பொது உறவைக் கட்டுகிற மாநாடு. எனவே, இந்த மாநாடு வாழ்க, வளர்க! அந்த நோக்கம் நிறைவேறுக!!<br /><br />- சென்னை,பெரியார் திடலில் 7.5.2013 அன்று விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய மக்கள் ஒற்றுமை மாநாட்டில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து...<br />செய்திகளை பகிர்ந்து கொள்ளதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-23333749314229668202013-05-19T06:40:45.607+05:302013-05-19T06:40:45.607+05:30காய்கறிக்காரரிடம் அடித்துப் பிடித்து சண்டை போட்டு ...காய்கறிக்காரரிடம் அடித்துப் பிடித்து சண்டை போட்டு கறாராக அய்ம்பது பைசா ஒரு ரூபாய் என விலை குறைத்து காய்கறிகள் வாங்கும் திறமை கொண்ட பெண்கள்... பல்லாயிரங்களைக் கொடுத்து, நகை வாங்குவதில் ஏமாந்துவிடுகிறார்கள். பலரும் நகை வாங்கும்போது... அதுல இந்திய தர நிர்ணய அமைப்பான பி.அய்.எஸ். (Berua of Indian Standard) நகைகளுக்கு வழங்கும் ஹால் மார்க் (Hall Mark) முத்திரை இருந்தாலே 24 கேரட் தங்கம் என்று தவறாகப் புரிந்துகொள்கிறார்கள்.<br /><br />ஆனால், 24 கேரட் தங்கம் என்பது நகைகளாக வடிவமைக்கும்போது 22 கேரட்தான் இருக்கும். ஆக, ஹால் மார்க் முத்திரையிடப்பட்ட 22 கேரட் தங்க நகை 916 அளவு துல்லியம் இருக்கும். அதேபோல் 21 கேரட்- 875 துல்லியம். 18 கேரட் - 750 துல்லியம், 17 கேரட்-708 துல்லியம், 14 கேரட்- 585 துல்லியம் என குறைந்த க்வாலிட்டி நகைகளுக்கும் இந்திய தர நிர்ணய அமைப்பினரால் (பிஅய்.எஸ்.) ஹால் மார்க் முத்திரை வழங்கப்படுகிறது. ஆனால், இதைப் பலரும் கவனிப்பதில்லை. லென்ஸ் மூலம் கண்டிப்பாக கவனிக்க வேண்டும்.<br /><br />விலை குறைய குறைய அந்த நகையின் துல்லியமும் குறைந்திருக்கும். அதனால்தான் ஒரு கடையில் வாங்கிய நகையை இன்னொரு கடைக்குக் கொண்டு போய் விற்கும்போது அதே ரேட்டுக்கு எடுத்துக் கொள்வதில்லை. அதனால் வெறும் ஹால்மார்க் முத்திரை மட்டும் இருக்கிறதா என்று பார்க்காமல் எவ்வளவு துல்லியம் என்பதையும் பார்க்க வேண்டும். அடுத்து நகைக்கடைக்காரர்களின் சேதாரம் என்ற சீட்டிங் என்று கூறியுள்ளார்.<br /><br />பகுத்தறிவு என்பது நம் வாழ்வில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வின்போதும் உரசிப்பார்க்கும் உரைக்கல். பகுத்தறிவு என்றவுடன் கடவுள் மறுப்பு மட்டுமே பலரது நினைவுக்கு வருகிறது. கூட்டமில்லாத நாளில் கடைவீதிக்குச் சென்று பொருள் வாங்குவதுகூட பகுத்தறிவுதான். தங்கத் தின் மதிப்பை உலகம் உயர்த்தி வைத்துள்ளதால் அது சிறந்த முதலீடாகக் கருதப்படுகிறது.<br /><br />அதனால், இப்போது ஆபரணத்துக்காக தங்கம் வாங்குவோரைவிட முதலீட்டுக்காக தங்கம் வாங்குவோர் அதிகமாகிவிட்டனர். இச்சூழலில் தான் அட்சய திருதியை போன்ற மூடநம்பிக்கை களை தங்க நகை வணிகம் செய்வோர் பயன் படுத்துகின்றனர்.<br /><br />அட்சய திருதியை நாள் உருவாக்கப்பட்டதிலிருந்து நகைக் கடைக் காரர்களுக்கு வேண்டுமானால் பணம் குவியுமே தவிர நகை வாங்கியவனுக்குக் குவியுமா? கடந்த 10 ஆண்டுகளாக அட்சய திருதியை நாளில் நகை வாங்கியோரெல்லாம் கோடீசுவரர்கள் ஆகிவிட்டார்கள் என்று சொல்லமுடியுமா? அந்த நாளில் கூடிய கூட்டத்தில், உள்ள நகையையும் பறிகொடுத்தவர்களுக்கு அட்சய திருதியை அந்த நகையைத் திருப்பிக் கொடுக்குமா?<br /><br />கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த அட்சய திருதியை மூடநம்பிக்கை என்பது இல்லை. அப்போதும் மக்கள் நகை வாங்கிக் கொண்டுதானிருந்தார்கள். அவர்களுக்கு வளம் இல்லாமல் போய்விட்டதா? அல்லது வளம் பெருகாமல் போய்விட்டதா?<br /><br />தமிழகத்தின் பிரபல கோவில் பட்டர் ஒருவர் ஆருடம் கூறியிருக்கிறார். அட்சய திருதியை நாளில் குறிப்பிட்ட 3 மணிநேரத்தில் நகை வாங்கி ஆண்டவன் முன் வைத்து வணங்கி னால் வளம் பெருகுமாம். அந்த 3 மணி நேரம் தவிர மற்ற நேரங்களில் வாங்கினால் என்னாகும் என்று ஏனோ அவர் சொல்லவில்லை.<br /><br />உழைப்புதான் மனிதனை உயர்த்தும்; அறிவுதான் மனிதனைக் காக்கும் என்பதை உணரும் காலம் வரும் வரை இந்த மூடநம்பிக்கைகளால் மக்கள் தமது செல்வத்தை இழந்துகொண்டுதான் இருப்பார்கள்.<br /><br />- அன்பன்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-28243332852213493882013-05-19T06:40:37.219+05:302013-05-19T06:40:37.219+05:30புதிய மூடநம்பிக்கையால் பொருள் இழக்கும் மக்கள்!
...புதிய மூடநம்பிக்கையால் பொருள் இழக்கும் மக்கள்!<br /> <br /><br />அட்சய திருதியை நாளில்<br /><br />தங்கச் சங்கிலி<br /><br />வாங்கச் சென்ற<br /><br />அங்கம்மாளின்<br /><br />கழுத்து நகை<br /><br />களவு போனது<br /><br />என்ற செய்தி கடந்த சில ஆண்டுகளாகவே பத்திரிகைகளில் வருவது வழக்கமாகிவிட்டது. அங்கம்மாக்களின் பெயர்கள்தான் மாறுகின் றனவே அன்றி, செய்தி இன்னும் தொடரத்தான் செய்கிறது.<br /><br />பழைய மூடநம்பிக்கைகள் காலாவதியாகிப் போக புதிய மூடநம்பிக்கைகள் உருவாக்கப் படுகின்றன. வளர்ந்துவிட்ட அறிவியல் ஊடகங்கள் காசு பண்ண இதனை மேலும் மேலும் வளர்த்துவிடுகின்றன. நாய் விற்ற காசு குரைப்பதில்லையே.<br /><br /> <br /><br />நல்ல நாளில் தங்கம் வாங்கப்போகும் ஒருவித மூடநம்பிக்கை நம் சமூகத்தில் நீண்ட நாட்களாவே உண்டு. அதனால் செவ்வாய், சனிக்கிழமைகளில் நகைக்கடைகள் கூட்டமில் லாமல் இருக்கும். மக்கள் தொகை பெருகப் பெருக கடைகளும் அதிகரித்தன. அவர்கள் தமது வணிகத்தைப் பெருக்க நகைச்சீட்டு சேர்க்கும் திட்டம் போல சில கவர்ச்சித் திட்டங்களைக் கொண்டுவரத் தொடங்கினார்கள்.<br /><br />பின்னர் திருமண சீசன் இல்லாத காலங்களில் வணிகம் செய்ய கிராமுக்கு இவ்வளவு குறைவு என்றோ, சில அன்பளிப்புகளை அளித்தோ வாடிக்கை யாளர்களை ஈர்த்தார்கள். சென்னையில் ஒரு புகழ் பெற்ற தங்க நகை அங்காடியின் வார விடுமுறையே செவ்வாய்க் கிழமைதான்.<br /><br />ஆனால், இன்று அந்தக் கடை பல கிளைகளைத் திறந்தும் கூட்டம் அலைமோத, வார விடுமுறை இல்லாமலேயே அந்தக் கடைகள் இயங்குகின்றன. வாடிக்கையாளர்களும் நாள் நட்சத்திரம் பார்க்காமல் நகை வாங்குகிறார்கள்.<br /><br />இத்தகைய சூழலில்தான் 10 ஆண்டுகளுக்கு முன் அட்சய திருதியை என்ற ஒன்றைக் கொண்டு வந்தார்கள் தங்க வணிகர்கள். அந்த நாளில் நகை வாங்கினால் வீட்டில் வளம் கொழிக்கும் என்றெல்லாம் புரளி கிளப்பினார்கள். ஒரு குண்டுமணித் தங்கமாவது வாங்கிவிடுவது என பெண்கள் கூட்டம் குவியத் தொடங்கிவிட்டது. இப்போது முன் நாட்களிலேயே அட்வான்ஸ் புக்கிங்கில் போய்க்கொண்டிருக்கிறது.<br /><br />ஒரு நாள் அட்சய திருதியை என்பது கடந்த சில ஆண்டுகளாக அட்சய திருதியை வாரமாகிவிட்டது. (எப்படி ஆனதோ?) அட்சய திருதியை ஆஃபரெல்லாம் வந்துவிட்டது.<br /><br />இந்த மே 9 அன்று நாளிதழ்களில் வெளியான ஒரு விளம்பரம் நம் கண்ணில் பட்டது. `கடவுளின் பெயரில் ஏமா(ற்)றலாமா? என்பது அதன் தலைப்பு. ``அட்சய திருதியை நாளை முன்னிட்டு கிராமுக்கு இவ்வளவு தள்ளுபடி, இலவசப் பரிசு, அட்சய திருதியை ஆஃபர் என்பதைக் கண்டு ஏமாறாதீர்கள். எங்கள் கடையில் அப்படியெல்லாம் இல்லை என்கிறது அந்த விளம்பரம்.<br /><br />அட்சய திருதியையைப் பயன்படுத்தி நகைக்கடைகள் செய்யும் தில்லு முல்லுகளை ஒரு நகைக்கடையே போட்டுக் கொடுத்துவிட்டது.<br /><br />தங்கம் வாங்கும் போது அதன் தரத்தைப் பார்க்க வேண்டுமே தவிர, நல்ல நாள்,- நேரம்,-அட்சய திருதியை போன்றவற்றைப் பார்த்தால் மிஞ்சுவது ஏமாற்றம்தானே! நகை வாங்கும் போது எதைக் கவனிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் இந்திய நுகர்வோர் அமைப்பின் துணை இயக்குநர் எம்.ஆர்.கிருஷ்ணா. அவர் 2013 மே 8 -10 நக்கீரனில் கூறியுள்ள தகவல்கள் இதோ:<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-6015881647510187212013-05-19T06:39:16.628+05:302013-05-19T06:39:16.628+05:30பிரிட்டனில் தாழ்த்தப்பட்டோருக்கு அங்கீகாரம்
பிர...பிரிட்டனில் தாழ்த்தப்பட்டோருக்கு அங்கீகாரம்<br /> <br /><br />பிரிட்டன் நாட்டில் வசிக்கும் 4 லட்சம் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சட்டப் பாதுகாப்புக் கொடுக்கும் வகையில் ஜாதி அடிப்படையில் வேற்றுமை காட்டுவது சட்டப்படிக் குற்றம் என்று பிரிட்டன் நாடாளுமன்றம் சட்டம் இயற்றியுள்ளது. இதற்கு ராணியின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது இதன் சிறப்பம்சமாகும்.<br /><br />2010ஆம் ஆண்டின் சமத்துவச் சட்டத்தின் ஒரு பகுதியாக ஜாதியையும் ஒரு பிரிவாக்கி இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறி வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும், ஜாதி வேறுபாட்டுக்கு எதிராக தெற்கு ஆசியாவிற்கு வெளியே இதுபோன்ற சட்டங்கள் இயற்றுவதில் பிரிட்டன் முதல் நாடாகும் என்ற பெருமையையும் பெறுகிறது.<br /><br />வருங்காலத்தில் ஜாதியானது இனத்தின் ஓர் அங்கமாகக் கருதப்படும் பிரிட்டனில் உள்ள ஆசிரியர்களின் வாழ்க்கை இந்த ஜாதி வெறுப்பு உணர்ச்சிகளால் மங்கிப்போய் இருந்தது. அவர்கள் வாழ்க்கையில் இனி புது நம்பிக்கை ஏற்படும் என்று தேசிய ஜாதி மதமற்ற அமைப்பின் ஆணையர் கெய்த் போர்டியஸ்வுட் கூறியுள்ளார்.<br /><br />பன்னாட்டுத் தலித்களின் ஒன்றிணைப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான ரிக்கி நோர்லிண்ட், இந்த முடிவானது மற்ற நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும். ஜாதி வேறுபாடு ஓர் உலகளாவிய பிரச்சினை. உலகத்தின் பல பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கானவர்களைப் பாதித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.<br /><br />பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் ஃபுல்லர், இது ஒரு நேரடிப் பிரச்சினை. வேலை செய்யும் இடத்தில் வேறுபாடு காட்டுவது தவறு. அவ்வாறு பாதிக்கப்படும் மக்களுக்குச் சட்டப் பாதுகாப்பு உண்டு. முடிவும் முதலுமாக இது இருக்கட்டும் என்று கூறியுள்ளார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-74251771184749568632013-05-19T06:38:21.618+05:302013-05-19T06:38:21.618+05:30கலப்புத் திருமணங்கள்
கலப்புத் திருமணம் செய்து ...கலப்புத் திருமணங்கள்<br /><br /> <br /><br />கலப்புத் திருமணம் செய்து கொள்பவர் களுக்கு வழங்கப்பட்டு வந்த 25,000 ரூபாய் பரிசுத்தொகையினை உயர்த்தி 75,000 ரூபாயாக உயர்த்தி இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் வீரபத்திர சிங் அறிவித்துள்ளார்.<br /><br />கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகளில் ஒருவர் தாழ்த்தப்பட்டவராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 68.50 லட்சம் மக்கள்தொகை கொண்ட இமாச்சலப் பிரதேசத்தில் 25 சதவிகிதம் தாழ்த்தப்பட்டோர் உள்ளனர்.<br /><br />கலப்புத் திருமணங்களை ஆதரித்து ஊக்கப்படுத்துவதன் மூலம் ஜாதிகள் ஒழிய வாய்ப்பு உள்ளது. 2009_2013ஆம் ஆண்டு தற்போது வரை 1,113 கலப்புத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன.<br /><br />ஜாதி என்ற தடையை மீறி இளம்பெண் களும், வாலிபர்களும் கலப்புத் திருமணம் செய்வதை ஊக்கப்படுத்தவே பரிசுத் தொகை வழங்கப்படுவதாக சமூக நீதித்துறைச் சிறப்புச் செயலர் சூட் கூறியுள்ளார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-78513423128069074192013-05-19T06:31:41.782+05:302013-05-19T06:31:41.782+05:30கீதை: சில கேள்விகள்
பாபு பீ.கே.
பகவத்கீதை என்ப...கீதை: சில கேள்விகள்<br /> <br /><br />பாபு பீ.கே.<br /><br />பகவத்கீதை என்பதே நம் புழக்கத் தில் இருப்பதால் அப்படியே குறிப் பிடுகிறேன். ஏனெனில், இன்னபிற கீதைகளும் இருப்பதாகச் சொல்வதால், இங்கு நாம் விவாதிக்கப்போவது இந்த பகவத்கீதையைத்தான் என்பதால்.<br /><br />1. முதலில் இதன் காலம் வேதங்களிலோ, வேத இலக்கியங்களிலோ அல்லது வேறு வரலாற்றுக் குறிப்புகளிலோ பாண்டவர்கள் குறித்தோ, மகாபாரத யுத்தம் குறித்த தகவல்களோ கிடையாது. (இருப்பின் எடுத்துத் தாருங்கள்.) மகாபாரதப் போர் நிகழ்ந்த காலம் எது?<br /><br />மகாபாரதம் நிகழ்ந்தது இராமாயணத்திற்கு முந்தைய காலம் என்று சொல்லப்படுகின்றது. அதாவது திரேதாயுகத்திற்கு முன்னர் நிகழ்ந்ததாக.<br /><br />யுகங்கள் ஒரு வரிசைப் பார்வை<br /><br />சத்ய யுகம் 1,728,000<br /><br />திரேத யுகம் 1,296,000<br /><br />துவாபர யுகம் 864,000<br /><br />கலியுகம் 432,000<br /><br />நாம் கலியுகத்தின் முதல் வருடத்தில் இருக்கின்றோம் என்று கொண்டால்கூட 21,60,000 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த ஒரு நிகழ்வு புவிமாறுதல்களுக்கு உட்படாமல் இன்றைக்கு நமக்கு எப்படிக் கிடைத்தது? அன்றிருந்த நிலப்பரப்பின் தொடர்புகள் எப்படி இருந்தன?<br /><br />2. இரண்டாவது, நிகழ்விடம்.<br /><br />ஒரு அக்குரோணி படை என்பது 21,870 தேர்கள், 21,870 யானைகள், 65,610 குதிரைகள் மற்றும் 1,09,350 காலாட்படை வீரர்கள் கொண்டதாம். அப்படி மொத்தம் 18 அக்குரோணிப் படைகள் குருசேத்திரத்தில் அணிவகுத்து நின்றதாம்.<br /><br />தேர்ப்படை 21,870 x 18 = 3,93,660<br /><br />யானைப்படை 21,870 x 18 = 3,93,660<br /><br />குதிரைப்படை 65,610 x 18 = 11,80,980<br /><br />காலாட்படை 1,09,350 x 18 = 19,68,300<br /><br />அக்காலத்தில் இருந்த மொத்த மக்கள் தொகை எவ்வளவு? அத்தனை பேருக்கான உணவு உற்பத்தி இருந்திருக்குமா? அப்படி 18 அக்குரோணிப் படைகளும் நிற்குமளவிற்கு குருசேத்திரம் அத்தனை பெரிய இடமா? அத்தனை பெரிய மைதானமா?<br /><br />3. மூன்றாவது, கிருஷ்ணன் யார்? அத்தனைப் பெரிய போர்ப்படைகள் அணிவகுத்து நிற்கும் இடத்தில் 18 அத்தியாயங்கள் வரக்கூடிய இந்த பகவத்கீதையை உபதேசிப்பது... உபதேசனை கூட இல்லை... ஒரு கேள்வி _- பதில் விவாதம் சாத்தியமா? அதுவரையில் மற்றவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? மேலும், இந்தக் கிருஷ்ணரைப் பற்றியும் வேதங்களில் எந்தக் குறிப்பும் இல்லை. (இருப்பின் எடுத்துத் தாருங்கள்.)<br /><br />4. இனி பகவத்கீதைக்குள் செல்வோம். சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாகஷ: தஸ்ய கர்தாரம் அபி மாம் வித்யாகர்தாரம் அவ்யயம் (அத் 4 -_ சுலோ 13)<br />நான்கு வர்ணங்களைப் படைத்து ஏன் செயலற்றவராகிறார்?<br /><br />5. ஆதித்யாநாமஹம் விஷ்ணுர்ஜ்யோதிஷாம் ரவிரம்ஸுமாந் |<br />மரீசிர்மருதாமஸ்மி நக்ஷத்ராணாமஹம் ஸஸீ (அத் 10 -_ சுலோ 21)<br />சந்திரன் நட்சத்திரமா?<br /><br />6. அத்யேஷ்யதே ச ய இமம் தர்ம்யம் ஸம்வாதமாவயோ:| ஜ்ஞாநயஜ்ஞேந தேநாஹமிஷ்ட: ஸ்யாமிதி மே மதி: (அத் 18- _ சுலோ 70)<br /><br />எழுதி வைத்துப் படிக்கப்போகின்றார்கள் என்று எப்படி முன்னரே தெரிந்தது? அர்ஜுனனுக்கு இது அத்தனையும் மனப்பாடமாகி விட்டதா? அர்ஜுனன்தான் இதனை எழுதினாரா அல்லது எழுதச் சொன்னாரா? இல்லை ஞானதிருஷ்டியில் ஒட்டுக்கேட்ட சஞ்சயன்தான் காரணமா?<br /><br />7. யேப்யந்யதே வதாபக்தா யஜந்தே ஸ்ரத்தயாந்விதா: |<br />தேபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதி பூர்வகம் (அத் 9 - சுலோ 23)<br />அபி சேத்ஸுதுராசாரோ பஜதே மாமநந்யபாக் |<br />ஸாதுரேவ ஸ மந்தவ்ய: ஸம்யக்வ்யவஸிதோ ஹி ஸ: (அத் 9- _ சுலோ 30)<br /><br />23ஆம் சுலோகத்தில், அந்நிய தேவதைகளைத் தொழுபவர்கள் (அப்படியென்றால் அப்பொழுது பல கடவுள்கள் இருந்திருக்கின்றனர்.) அறியாமையில்கூட என்னையே தொழுகின்றனர் என்ற உண்மையைக் கூறிய கிருஷ்ணன் பின்,<br /><br />30ஆம் சுலோகத்தில், மற்ற தெய்வங்களை வணங்காது என்னை வணங்குபவனையே நல்லவன் என்று கொள் என்று ஏன் முரண்பட்டுச் சொல்கிறார்? யாரை வணங்கினாலும், இவரைத்தானே வந்தடைகின்றது, பின் எப்படி அவர்கள் கெட்டவர்களாவார்கள்?<br /><br />8. வ்ருஷ்ணீநாம் வாஸுதேவோஸ்மி பாண்ட வாநாம் தநஞ்ஜய: |<br />முநீநாமப்யஹம் வ்யாஸ: கவீநாமுஸநா கவி: (அத் 10-சுலோ 37)<br /><br />பாண்டவர்களில் இவர் அர்ஜுனன் என்றால்... எதிரில் இருக்கும் அர்ஜுனன் யார்? முனிவர்களின் வியாசர் என்றால், பல ஆயிரம் வருடங்கள் கழித்து மகாபாரதத்தைத் தொகுக்கப் போகும் முனிவரைப் பற்றி முன்னரே தீர்க்கதரிசனம் கூறியுள்ளாரோ?<br /><br />இன்னும் நிறைய இருக்கின்றது. நினைவில் இருப்பனவற்றைக் கேட்டிருக்கிறேன். வரிசையாக ஒவ்வொன்றாகப் பார்த்தால், மற்றவைகள் நினைவுக்கு வருவதோடு இன்னும் புதிய கேள்விகளும் கிடைக்கலாம்.<br /><br />இன்னொரு பொதுவான கேள்வி. இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக்கொண்டு நீதிமன்றங்களில் ஏன் பகவத்கீதையைக் கொண்டு சத்தியம் வாங்குகின்றார்கள்? அப்படிச் சத்தியம் செய்தவர்கள் உண்மையைத்தான் சொல்வார்கள் என்பது என்ன நிச்சயம்?தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-41193966499785128712013-05-19T06:29:54.285+05:302013-05-19T06:29:54.285+05:30
முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.பி.க்கள், பிரதமர்,...<br /><br />முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.பி.க்கள், பிரதமர், ஜனாதிபதின்னு அனைவருமே பப்ளிக் சர்வண்ட் ஆப் சிவில்தான். அவங்க மக்களுக்காக சேவை செய்ய மக்களால் தேர்ந்தெ டுக்கப்படும் சாதாரண ஊழியர்கள். அவர்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டிய தில்லை. மக்கள் அவர்களுக்கு அதிக மரியாதை தரவும் அவர்கள் தங்களை ஏதோ தேவதூதர்கள் என்று நினைத்து வானில் பறப்பதும், அட்டூழியங்கள் செய்வதுமாக இருக்கிறார்கள். அந்தத் துணிச்சலில்தான் ஏகப்பட்ட தவறுகள், ஊழல்கள் பண்றாங்க.<br /><br />நடிகர் கமலஹாசன்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-80370573767007464142013-05-19T06:29:18.765+05:302013-05-19T06:29:18.765+05:30நடிகர் நாகேஷ்
வானொலி: ஜாதிப்பிரிவினைகளைப் பற்றி உ...நடிகர் நாகேஷ்<br /><br />வானொலி: ஜாதிப்பிரிவினைகளைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன?<br /><br />நாகேஷ்: பலபேர் பலவிதமான காரணங்கள் சொல்லுவாங்க. என் வீட்டைப் பொறுத்த வரைக்கும் நான் ஒரு அந்தணன், பிறப்பால். நான் ஒரு கிறித்தவப் பெண்ணை மணந்து கொண்டேன். மூன்று பையன்கள். கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர்கள். முதல் மகன் ஒரு கிறித்தவப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டான். இரண்டாவது மகன் ஒரு முசல்மான் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டான். மூன்றாம் மகன் ஒரு அய்யர் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டான்.<br /><br />எங்கள் குடும்பத்தில் எந்தவிதமான குழப்பமும் இல்லை. காரணம், எல்லாக் கல்யாணத்துக்குமே மறுப்பே சொல்லாமல் நான் நடத்தி வைத்ததுதான். ஏனென்றால், என் மனதுக்குள் இந்த ஜாதி மதம் என்பதெல்லாம் கிடையாது. எவ்வளவு பேர் எத்தனைவிதமான காரணங்கள் சொன்னாலும் கடைசியில் என் முடிவுக்குத் தான் வந்து தீர வேண்டும். அதை நான் செய்து காட்டவும் முடியும்.<br /><br />ஜாதி மதமென்று எப்படி வருகிறதென்றால் உன் வெளித்தோற்றம் எனக்குப் பிடிக்கவில்லை. அதனால உனக்கு என்னைப் பிடிக்கவில்லை.<br /><br />இது நெம்பர் 1.<br /><br />நெம்பர் 2, உனக்கு ஒன்று பிடித்தது. அது எனக்குப் பிடிக்கவில்லை.<br />அதனால் எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை. இதுதான் சார் ஜாதி, மதம்.<br /><br />- சிட்னி 'தமிழ் முழக்கம்'<br />வானொலிப் பேட்டியில் நடிகர் நாகேஷ்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-89014209352719874172013-05-19T06:27:08.133+05:302013-05-19T06:27:08.133+05:30என்னை மாற்றிய புத்தகம்
இந்நூலை வாசித்தால்...!
நா...என்னை மாற்றிய புத்தகம்<br /><br />இந்நூலை வாசித்தால்...!<br /><br />நான் என் இதுநாள் வரையிலான பொதுவெளி வாழ்க்கையில் அப்படி தன் பலத்தில் நிற்கவிரும்புகிற, தன் பொறுப்புகளை எந்நிலையிலும் தானே சுமக்கிற, ஒரு தருணத்திலும் அதிலிருந்து பெண் என்று சொல்லி சலுகை கோராத ஓர் இந்தியப் பெண்ணைப் பார்த்ததே இல்லை என்று சொல்லிக்கொள்கிறேன் - ஜெயமோகன்.<br /><br />சில நாட்களாகவே நம் எழுத்தாளர் களுக்கு உள்ளொளி தரிசனம் போதவில்லை என்பது மாதிரி ஓர் எண்ணம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. ஜெயமோகன் அதை உறுதிப்படுத்தியிருக்கிறார். பட்டுப்புழு தன்னைச் சுற்றி ஒரு கூட்டை தானே உருவாக்கிக் கொண்டு, அதுதான் உலகம் என்று நம்புவதைப் போல நம் எழுத்தாளர்கள் ஒரு கற்பனாவாத உலகத்தை உருவாக்கிக் கொண்டு, அவ்வுலகில் அவர்கள் சிந்தனைகளாலேயே நிகழும் சம்பவங்களை உலக யதார்த்தமாக பொதுமைப்படுத்திக் கொள்கிறார்கள். ஜெயமோகனின் உலக அனுபவம் எவ்வளவு சிறிய வட்டத்துக்குள் நிகழ்கிறது என்பதற்கு இப்பதிவு நல்ல உதாரணம்.<br /><br />பெண்களைக் குறித்து இம்மாதிரி அல்லது இதைவிட மோசமான கருத்துகளை ஒரு சாமா னியன் கொண்டிருந்தால் அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பாக அவர்களைக் குறித்த படுமோசமான, ஆபாசமான கருத்துகளையே கொண்டி ருந்தேன். என் தலையில் நாலு குட்டு குட்டி, இதைப் படிச்சிப்பார் என்றொரு சிறுநூலை வாங்கிப் பரிசளித்தார் அண்ணன் எஸ்.பாலபாரதி.<br /><br />அந்நூலை வாசித்த பிறகு என் செயல்பாடுகள் பெருமள வில் மாறிவிடவில்லை. ஆனால், பெண்கள் குறித்த என்னுடைய எண்ணங்கள் தவறு என்கிற புரிதல் மட்டும் தோன்றியது. பாலபாரதியிடம் இந்த மனோபாவ மாற்றத் தைச் சொன்னேன். அது போதும், நீ மாறணும்னு அவசியமில்லை.<br /><br />பெண்ணியப் போராளியா கொடி பிடிக்கணும்னும் தேவை யில்லை. நீ நம்பிக்கிட்டிருக்கிற, செஞ்சிக்கிட்டி ருக்கிற விஷயங்கள் தவறுன்னு உணர்ந்தா போதும். ஒவ்வொரு முறையும் இதே தவறை நீ செய்யும்போதும், குறைந்தபட்சம் ஒரு குற்றவுணர்வு இருக்கும். அது போதும் என்றார்.<br /><br />அதுவரை கட்டமைத்து வைத்திருந்த பல பிம்பங்களை உடைத்த அந்நூலில் நம் பாட்டி, அம்மா, சகோதரி, பக்கத்து வீட்டுப் பெண், எதிர்த்த வீட்டுப்பெண் என்று உலகின் எல்லாப் பெண்களும் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்பதற்கான விடை இருக்கிறது. மிகச்சிறிய நூல். எழுதியவர் ஜெயமோகன் மாதிரி பெரிய எழுத்தாளரும் அல்ல. அவருக்கு இலக்கியம் தெரியாது.<br /><br />எழுத்துநடையும்கூட படுசுமார்தான். ஆனால் சவாலாகவே சொல்கிறேன். அந்நூலை வாசிப்பவர்களுக்கு மிகச்சிறிய அளவிலாவது மனமாற்றம் தோன்றியே தீரும். மனிதனாகப் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் வாசித்தே ஆகவேண்டிய புத்தகம். தந்தை பெரியாரின் பெண் ஏன் அடிமை ஆனாள்?<br /><br />ஜெயமோகனுக்கு யாராவது இப்புத்தகத்தை வாங்கிப் பரிசளிக்கலாம்.<br /><br />- யுவகிருஷ்ணா<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-77104304030835878862013-05-19T06:23:13.069+05:302013-05-19T06:23:13.069+05:30உங்களுக்குத் தெரியுமா?
எஸ்.ஏ. வெங்கட்ராமன் என்ற ...உங்களுக்குத் தெரியுமா?<br /><br /><br />எஸ்.ஏ. வெங்கட்ராமன் என்ற அய்.சி.எஸ். பார்ப்பனர் லஞ்சம் வாங்கினார் என்பது நிரூபிக்கப்பட்டு உயர் நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட பிறகும், பார்ப்பன ஏடுகள் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று எழுதிய வரலாறு உங்களுக்குத் தெரியுமா?தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-56686923932295992492013-05-19T06:22:18.179+05:302013-05-19T06:22:18.179+05:30 இதுதான் இந்தியா
நம் நாட்டின் மக்கள்தொகையில் 42... இதுதான் இந்தியா<br /> <br /><br />நம் நாட்டின் மக்கள்தொகையில் 42 சதவிகிதம் குழந்தைகள் உள்ளனர். இதில், 150 கோடிக் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாகவும், 5 லட்சம் குழந்தைகள் வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br /><br />தேசிய மனித உரிமை ஆணையம், தேசியக் குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம், ஆசியக் குழந்தைகள் ஆணையம், குழந்தைகள் தகவல் தொடர்பு மய்யம் ஆகியன ஆய்வு செய்து மத்திய அரசிடம் கொடுத்த அறிக்கையில் மேலே உள்ள விவரங்கள் உள்ளன.<br /><br />மும்பையில் 70 ஆயிரம் குழந்தைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்தியப் பெண்கள் 10 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 63 சதவிகிதம் பெண்கள் சிறுவயதில் பாலியல் கொடுமைகளை அனுபவித்ததாகக் கூறியுள்ளனர்.<br /><br /> <br /><br />இந்தியாவில் டெல்லி, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஆந்திரா, கோவா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், பீகார் ஆகிய மாநிலங்களில்தான் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிக அளவில் நடைபெற் றுள்ளன. குழந்தைகள் மீதான குற்றங்களை விசாரிக்கும் தேசியக் குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையத்திடம் 2012ஆம் ஆண்டு 570 புகார்கள் பதிவாகியுள்ளன. இதில் டில்லியிலிருந்து 105 புகார்களும், ஆந்திராவிலிருந்து 43 புகார்களும், தமிழகத்திலிருந்து 8ம் வந்துள்ளன என்று மத்திய அமைச்சர் அகமத் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.<br /><br />இந்தியக் குழந்தைகளில் 53.22 சதவிகிதம் பேர் பாலியல் கொடுமைக்கு ஆளாவதாகவும் இதில் 21.09 சதவிகிதம் குழந்தைகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. உறவினர்கள், ஆசிரியர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், ஓட்டுநர்கள் எனக் குழந்தைக்கு உதவி செய்வதுபோல் நடிப்பவர்கள்தான் குழந்தை களிடம் தவறாக நடந்துள்ளார்கள்-.<br /><br />சென்ற 10 ஆண்டுகளில் 48,338 இந்தியப் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதன்படி, ஒவ்வோர் ஆண்டும் 12,000 புகார்கள் அதிகரித்து வந்துள்ளதும், மூன்றில் ஒரு பாலியல் வன்முறை குழந்தை மீது நடத்தப்படுவதும் தெரிய வருகிறது. பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டோரில் 90 சதவிகிதம் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள். 32 சதவிகிதக் குழந்தைகள் தெரிந்தவர்களாலேயே பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளனர்.<br /><br />பாலியல் வன்கொடுமைக்குள்ளான 87 சதவிகித குழந்தைகள் மீண்டும் மீண்டும் அதே சித்திரவதையை அனுபவித்துள்ளனர்.<br /><br />2011ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, 18 வயதிற்குட்பட்டோர் பாலியல் வன்முறையில் டில்லி முதலிடத்திலும், மும்பை இரண்டா மிடத்திலும், சென்னை மூன்றாமிடத்திலும் உள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக் கின்றன.<br /><br />சர்வதேச அளவில் கணக்கெடுத்து வாட்ச் டாக் இன்டர்நேஷனல், ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கொடுத்துள்ள அறிக்கையில், இந்தியாவில் 2001 முதல் 2011 வரையிலான 10 ஆண்டுகளில், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் 33.6 சதவிகிதம் அதிகரித் துள்ளது. உலகின் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளின் தலைநகரமாக தென்னாப் பிரிக்கா திகழ்கிறது. இங்கு, 3 நிமிடங்களுக்கு ஒரு பாலியல் வன்கொடுமை நடைபெறுகிறது.<br /><br />11-17 வயது வரையிலான 6 குழந்தைகளில் ஒருவர் அதாவது 16.5 சதவிகிதம் பிரிட்டனில் (U.S) பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க, அய்க்கிய நாடுகளில் (U.K) 1992-2010 வரை குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை 60 சதவிகிதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது.<br /><br />இந்தோனேஷியாவில் 2012ஆம் ஆண்டில் குழந்தைகள் மீது பதிவான 2,367 வன்முறை வழக்குகளில் 62 சதவிகிதம் பாலியல் வன்முறை தொடர்பானது என்றும், கனடாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 54 சதவிகிதத் தினர் தேவையில்லாத பாலியல் கவனத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-71455037152140549652013-05-18T20:32:36.910+05:302013-05-18T20:32:36.910+05:30பார்ப்பனப் பத்திரிகைகள்
நமது நாட்டுப் பார்ப்பனப் ...பார்ப்பனப் பத்திரிகைகள்<br /><br />நமது நாட்டுப் பார்ப்பனப் பத்திரிகைகளும் பார்ப்பனப் பத்திராதிபர்களும் ஸ்ரீமான் டாக்டர் வரதராஜூலு நாயுடுகாரையும், திரு.வி.கலியாண சுந்தர முதலியார் அவர்களையும் குல குருவாய் மதித்து ராஜரிஷி பிர்மரிஷி என்று புகழ்ந்து வண்டியில் வைத்து இழுத்தது வாசகர்களுக்குத் தெரியும். இப்பேர்ப்பட்ட இருவரையும் இன்று என்னமாய் நடத்துகிறார்கள் என்று பார்த்தால் இவ்விரு கனவான்கள் எழுதியனுப்பிய ராஜினா மாக்களை சரியாய் தங்கள் பத்திரிகையில் போடவே இல்லை.<br /><br />எங்கோ ஒரு மூலையில் ஒன்றரை அங்கு லத்தில் பொது ஜனங்கள் ராஜினா மாவின் முழுக் காரியங்களையும் அறியாதபடி போட்டிருக்கிறது. இவர்கள் ராஜினாமாவை மதித்ததாகக்கூட காட்ட வில்லை. வேறு ஏதாவது உபசார வார்த்தைகூட எழுத வில்லை. ஒரு வயிற்றுச் சோத்துப் பார்ப்பனன் ஒரு உத்தி யோகத்திலும் இல்லாமல் வெறும் ராஜினாமா அனுப்பி யிருந்தால் அதை மகாத்மா காந்தியிடம் கொண்டு போய் இந்தத் தலைவர் போய்விட்டால் தமிழ்நாடே முழுகிவிடும் என்று சொல்லி மகாத்மாவையே ராஜி செய்யச் சொல்லி ராஜினாமா கொடுத்ததாலேயே அவனை பெரிய தலைவராக்கி விடுவார்கள்.<br /><br />இது போலவே நமது பார்ப்பனர் தங்களது பத்திரிகையின் பலத்தால் பார்ப்பனரல்லாதாருடைய வாழ்வையும் முற்போக்கையும் பாழ்படுத்தி வருகிறார்கள். இதிலிருந்தாவது நம் நாட்டு முன்னேற்றத் தையும் பார்ப்பனரல்லாதார் சுயமரியாதையையும் உத்தேசித்தாவது பார்ப்பனப் பத்திரிகைகளை ஒழித்து பார்ப்பனரல்லாத பத்திரிகைகளை ஆதரிக்க முன்வரலாகாதா? ஓ! பார்ப்பனரல்லாத மக்களே! நீங்கள் இன்னமும் உணரவில்லையா அல்லது அலட்சியமா! பயமா! சுயநலமா! எழுங்கள்!<br /><br />பார்ப்பனரல்லாத பத்திரிகைளைப் பரப்புங்கள்! அஃதின்றி நாம் சுயமரியாதையோடு மனிதனாக வாழ முடியாது. ஒவ்வொரு நாளும் படுக்கையை விட்டு எழும் போது பத்திரிகையை பரப்ப இன்று என்ன செய்வது என்று யோசி யுங்கள்! படுத்துறங்கும்போது இன்று என்ன செய்தோமென்று நினையுங்கள்! உங்களுக்கு ரோஷம், மானம், வெட்கம் இல்லையா என்று உங்கள் மனச் சாட்சியைக் கேளுங்கள்! அன்றுதான் நாமும் மனிதனாகலாம்! இல்லாதவரை ஸ்ரீமான் ஒத்தக்காசு கந்தசாமி செட்டியார் பிராமணலரல்லா தாருக்கு மூளை இல்லை என்பது பலித்தாலும் பலித்துவிடும்!<br /><br />- குடிஅரசு - குறிப்பு, 11.07.1926தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-68116395577368713602013-05-18T20:32:00.441+05:302013-05-18T20:32:00.441+05:30
தமிழன்
முன்னர் காலஞ்சென்ற திரு.அயோத் தியாதாசப் ப...<br />தமிழன்<br /><br />முன்னர் காலஞ்சென்ற திரு.அயோத் தியாதாசப் பண்டிதரவர்களால் தமிழன் என்னும் பெயர் கொண்ட பத்திரிகை நடாத்தப் பெற்று அவர் காலத் திற்குப் பின்னர் அப்பத்திரிகை நிறுத்தப்பட வேண்டியதாயிற்று. பிறகு சில காலம் மற்றொருவரால் நடத்தப் பெற்றது. அதன் பிறகும் ஆதரிப்பாரற்று நின்று போயிற்று.<br /><br />மீண்டும் இப்பொழுது சாம்பியன் ரீப், கோலார் தங்கவயல் சித்தார்த்த புத்தகசாலை வைத் திருக்கும் திரு.பி.எம். இராஜரத்தினம் அவர்களால் ஜூலை மாத முதல் வெளியிடப் படுமென தெரிவிக் கிறோம். திரு. இராஜத் தினம் அவர் களின் நிர்வாகத் திறமையால் நன்கு நடைபெறு மென நம்புகி றோம்.<br /><br />- குடிஅரசு - செய்தி 04.07.1926<br /><br />அயோத்திதாச பண்டிதர் தாழ்த் தப்பட்டோரின் பாதுகாவலர் - பார்ப் பனர்களின் பிறவி எதிரி! ஒரு பைசாத் தமிழன் எனும் இதழ் நடத்தி தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை எழுச்சியூட்டியவர்! மிகச் சிறந்த சித்த மருத்துவர்! மிகச் சிறந்த கல்விமான்! மிகச் சிறந்த பட்டறிவாளர்!தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-2214034707869938322013-05-18T20:31:26.208+05:302013-05-18T20:31:26.208+05:30டாக்டர் கிச்சுலுவின் உபதேசம்
முஸ்லீம்கள் அரசியலில...டாக்டர் கிச்சுலுவின் உபதேசம்<br /><br />முஸ்லீம்கள் அரசியலில் தலையிடக் கூடாது நிர்மாணத் திட்டத்தால்தான் ஒற்றுமை ஏற்படும்<br />டாக்டர் கிச்சுலு கல்கத்தா இந்து முலீம் கலவ ரத்தைப்பற்றி சமாதானம் செய்யப் பிரசாரம் செய் வதில் மூன்று முக்கிய விஷயங்களைப் பற்றி சொல்லி யிருக்கிறார்.<br /><br />1. இந்து முஸ்லீம் இருவரும் நிர்மாணத் திட் டத்தை நிறைவேற்ற வேலை செய்தாலொழிய ஒற்றுமை என்பது ஏற்பட முடியவே முடியாது.<br /><br />2.முஸ்லீம்கள் கட்டுப்பாடாய் இருக்க வேண்டும்.<br /><br />3. முஸ்லீம்கள் அரசியலில் தலையிடக் கூடாது.<br /><br />என்று பேசியிருக்கிறார். (இது 5.7.26ல் மித்திரன் 4-வது பக்கம் 5-வது கலத்தில் காணப்படுகிறது) இப்படியிருக்க, டாக்டர் கிச்சுலு அப்படிச் சொன்னார், இப்படிச் சொன்னார், மகமதியர்களை காங்கிரசில் சேரச் சொன்னார் என்று எழுதுவதின் பொருள் என்ன? பாமர மக்களை ஏமாற்றுவதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது ராஜதந்திர மாய்ப் போய்விட்டது.<br /><br />ஒன்று நிர்மாணத் திட்டம் அல்லது வகுப்புக் கட்டுப்பாடு; இரண்டிலொன்றுக்கு உழைக்க வேண்டுமே அல்லாமல் ஒரு வகுப்பை அழுத்தி, ஒரு வகுப்பு ஆதிக்கம் செலுத்த செய்யப் படும் சூழ்ச்சியாகிய பார்ப்பனக் காங்கிரசோ, சுயராஜ்யக் கட்சியோ தேசத் துரோகத்திற்கும் மற்ற வகுப்புத் துரோகத்திற்கும்தான் உதவும் என்பதும் கண்ணை மூடிக்கொண்டு மக்கள் அதில் சேரக்கூடாது என்பதும் டாக்டர் கிச்சுலுவின் உபதேசத்தால் விளங்கி விட்டது. ஆதலால் இனியாவது மகமதியர்கள் போலிகளை நம்பி மோசம் போகாமல் கண் விழித்துக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்.<br /><br />- குடிஅரசு - குறிப்பு, 11.07.1926 தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-67254644187076790202013-05-18T20:30:56.569+05:302013-05-18T20:30:56.569+05:30
கிறித்தவ மதப் பிரசாரமா?
கிறித்தவ மதப் பிரசாரமா?...<br />கிறித்தவ மதப் பிரசாரமா?<br /><br /><br />கிறித்தவ மதப் பிரசாரமா? என்ற மகுடமிட்டு, சென்னைப் பார்ப்பன மித்திரன் சென்ற 5-7-26-ல் குறிப் பொன்றெழுதி, சென்னைக் கடற் கரையில் ஸ்ரீமான் ஆரியா இந்து மத அநுஷ்டானங்களைப் பற்றியும், இந்து தெய்வங்களைப் பற்றியும் குறிப்பாக விக்ரக ஆராதனையைப் பற்றியும் தூட்சித்துப் பேசியதாகவும், அவர் பேச்சைக் கேட்டு ஜஸ்டிஸ் கட்சியினர் ஆனந்தங் கொண்டதாகவும், இத் தகைய கிறித்தவ மதப் பிரசாரம் செய்ய ஸ்ரீமான் ஆரியா தங்களோடு காங்கிர சிலிருந்த காலத்தில் தைரியங் கொள்ள வில்லையென்றும், இந்து மதத்தை ரட்சிக்கு முகத்தான் எச்சரிக்கை செய்திருக்கிறான்.<br /><br />இக்குறிப்பில் அயோக்கியத்தனமும் சூழ்ச்சியும் ததும்பி வழிகிறது. யோக்கியமானவன் ஆரியாவின் பேச்சுக்களை முற்றிலும் பிரசுரித்து, தகுந்த ஆதாரத்தோடு கண்டித்திருப்பான். அவ்வாறின்றி தூட்சித்தார், மதப் பிரசாரம் செய்தார், ஆனந்தங் கொண்டனர், சட்டிக் கூழுக்கு மதத்தைப் புறக்கணித்தது யார்? என்று எழுதி பொதுவாகக் கிறித்தவ மதத்தின் பேரிலும், சிறப்பாக ஆரியாவின் பேரிலும் பொது மக்களி டையே துவேஷத்தை விளைவிக்கப் பார்ப்பது எவ்வளவு அயோக்கியத் தனமும் சூழ்ச்சியுமானதென்று கவனி யுங்கள்.<br /><br />மேலும், இந்து மதமானது போலி அநுஷ்டானங்களிலும், வெறும் விக்ரகங்களிலும் அடங்கிக் கிடக்க வில்லை. போலி வேடங்களை ஒருவர் கண்டிப்பதாலேயே இந்து மதங் கவிழ்ந்து கிறித்தவ மதமோங்கி விடாது. இன்று ஆரியாவைக் கண்டிக்கும் இதே பார்ப்பனன், இன்று இந்துப் பறை யனாயிருக்கும் கோவிந்தனை பக்கத் தில் வராதே என்று விரட்டுகிறான். அதே கோவிந்தன் நாளைய தினம் மோச ஆகிவிட்டால் கைலாகு கொடுப் பான்.<br /><br />ஆகவே கிறித்தவ மதத்தை இப்பார்ப்பனர்கள் ஆதரிக்கிறார்களா? அல்லது ஸ்ரீமான் ஆரியா ஆதரிக் கிறாரா? இதிலிருந்து இந்து மதத்தைப் பரிபாலிப்பதாகச் சொல்லும் இப்பார்ப்பன னுடைய வாய் வேதாந்தத்தையும் அநுஷ்டானத்தையும் பார்த்தீர்களா? இவ்விதப் பார்ப்பன அநுஷ்டானங்களை ஆரியா கண்டித்திருந்தால் அது இந்து மதத்தை சிலாக்கியப்படுத்தியதே ஆகும்.<br /><br />- குடிஅரசு, கட்டுரை, 11.07.1926தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-65891613943065880302013-05-18T20:27:09.205+05:302013-05-18T20:27:09.205+05:30
மதமே...
மதமே மனிதனுடைய சுயமரியா தைக்கு விரோதி. ...<br />மதமே...<br /><br /><br />மதமே மனிதனுடைய சுயமரியா தைக்கு விரோதி. மதமே மனிதனுடைய சுதந்திரத்துக்கு விரோதி. மதமே மனி தனுடைய அறிவு வளர்ச்சிக்கு விரோதி. மதமே மனிதச் சமூகச் சம தர்மத்துக்கு விரோதி. மதமே கொடுங்கோலாட்சிக்கு உற்ற துணை. மதமே முதலாளி வர்க்கத் துக்குக் காவல். மதமே சோம்பேறி வாழ்க்கைக்கு ஆதரவு.<br /><br />(புரட்சி, 26.11.1933தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-17624618636965911562013-05-18T20:26:08.541+05:302013-05-18T20:26:08.541+05:30பாராட்டுரைகள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒருவிதம்!!
மன...பாராட்டுரைகள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒருவிதம்!!<br /><br /><br />மனிதர்களை அவர்களின் அரிய சாதனைகளுக்காக பாராட்டுதல், வாழ்த்துதல் மிகவும் அவசியமாகும். அவர்களை அது ஊக்கப்படுத்தும், உற்சாகமூட்டும். மேலும் உழைக்கும் ஆர்வத்தை அவர்களுக்கிடையே தூண்டும்; அது அவர்களுக்கு மட்டு மல்ல; அவர்களது அரிய சாதனைகள் எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம் - எழுத்து, பேச்சு, செயல் எவ்வாறாயினும் - சமூகத்திற்கும்கூட அது வாய்ப்பாக அமையும்!<br /><br />பாராட்ட வேண்டும் என்று நினைத்தால், உடனே பாராட்டி விடுங்கள்; தாமதியாதீர்கள் - பிறகு உங்கள் மனம்கூட மாறிவிடக் கூடும் என்பார் தொண்டு செய்து பழுத்த பழமான தந்தை பெரியார் அவர்கள்.<br /><br />முன்பு, இரண்டு மாடிகள் ஏறி வந்து, அறிஞர் அண்ணா விடுதலை ஆசிரியராக ஈரோட்டில் இருந்து எழுதிய ஓர் தலையங்கத்திற்காக தந்தை பெரியார், மூச்சிறைக்கப் பாராட்டியது கண்டு அண்ணா இன்ப அதிர்ச்சிக்கு ஆளானார்கள். இது வரலாறு.<br /><br />நீதி கெட்டது யாரால் என்ற தலைப்பில் சென்னை உயர்நீதிமன் றத்தில் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் அவர்கள்மீது கோர்ட் அவமதிப்பு (Contempt of Court) வழக்குப் போடப்பட்டு தண்டிக்கப்பட்டதையொட்டி, சென்னை உயர்நீதிமன்றத்தில் உயர்ஜாதி நீதிபதிகள் என்பவர்கள் ஊழல் புரிந்ததை யொட்டி எழுந்த விமர்சனங்களைத் திரட்டி, திராவிடர்கள் - நீதிபதி களாகவோ, நிர்வாகஸ்தர்களாகவோ இருந்தால் மட்டும் அவர்களை வலிந்து சிறுசிறு தவறுகளையோ, அல்லது தவறுகள் நடந்ததாக கற்பனையாலேயோ, எழுதி சங்கடப்படுத்தும் பல்வகை வழக்கு ஆதாரங்களுடன் எழுதினேன் அப்போது நான் சென்னை சட்டக் கல்லூரியில் B.L. வகுப்பில் படித்து வரும் மாணவன்.<br /><br />சென்னையில் அதை அய்யாவிடம் காட்டினேன். விடுதலையில் போடுவ தற்காக எழுதியுள்ளேன் அய்யா என்று கூறினேன்.<br /><br />முழுவதும் படித்துப் பார்த்தார்கள்; இறுதியாக அதைப் பாராட்டி விட்டு, இந்தக் கட்டுரையை உன் பெயரில் போட வேண்டாம்; உனக்கு ஏதாவது தொல்லைகள் வரலாம்; அதோடு, அந்த மேட்டருக்கு உரிய வெயிட் உன் பெயரில் வந்தால் அவ்வளவு வராது. ஆகவேதான் என் பெயரிலேயே போடுமாறு விடுதலை அலுவலகத்திற்குக் கூறு கிறேன் என்றார்கள்.<br /><br />எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. ஆகா தாராளமாகச் செய்யுங்கள் அய்யா என்று கூறி வந்துவிட்டேன்.<br /><br />மாலை விடுதலையில் அய்யாவின் அறிக்கையாக அது வெளி வந்தது! சென்னை மீரான் சாயபுத் தெரு, இல் லத்தில் தங்கியிருந்த தந்தை பெரியார் அவர்களுக்குப் பலர் நேரில் வந்து பாராட்டுக்களைக் கூறினார்கள்.<br /><br />அந்த அறிக்கைகாக!<br /><br />அவர்களில் ஒரு குழுவினர் - இயக்கத்தவர்கள்தான் வேலூரிலிருந்து வந்தவர்கள் - அய்யாவின் இந்த அறிக்கை மிகப் பிரமாதம் அங்குள்ள வக்கீல்கள், நீதிக் கோர்ட் நியாயாதி பதிகள் எல்லோரும் எங்களிடத்தில் விசாரித்தார்கள்; விடுதலை பேப்பர் கிடைக்குமா என்று கேட்டு நச்சரித்தனர் என்று கூறி அய்யா ஒருவரால்தான் இப்படிப்பட்ட துணிச்சல் மிகுந்த, தெளிவு பொதிந்த, அறிக்கைகளைத் தர முடியும் என்று சரமாரி புகழ்ந்தார்கள்!<br /><br />பொறுமையாக இதைக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, அய்யா அவர்கள் கடைசியாக, உங்களுக் கெல்லாம் ஒரு சேதி தெரியுமா? அந்த அறிக்கை நான் எழுதியதில்லை; நம்ம வீரமணி இருக் கிறாரே அவர் சட்டக் கல்லூரியில் B.L. படிக்கிறார். அவர் தான் எழுதினார் - இந்தப் பாராட்டு, உண்மையில் என்னைச் சேராது அவரைத்தான் சேரும் என்றார்.<br /><br />வந்தவர்களுக்கு அதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சி (தனிப்பட்ட முறையில் என்னைப்பற்றி கசப்பு கொண்டிருந் தவர்கள்தான் அதில் சிலர் - அய்யா வுக்கும் கூட இது தெரியும் - தெரிந்தே சொன்னார்!)<br /><br />தந்தை பெரியாரின் அறிவு நாண யம் எப்படிப்பட்டது பார்த்தீர்களா?<br /><br />பிறர் பாராட்டும்போதுகூட அது யாருக்கு உரியது என்பதைக் கூறி, அதை ஏற்க மறுப்பதற்கு எத்தனை பெரிய உள்ளம் பார்த்தீர்களா?<br /><br />எனவே பாராட்டில் நிதானமும் வேண்டும் - பொய்யுரைகளைத் தவிர்த் தலும் அவசியம்! நாணயத்துடன் அது அமைந்தால் பொன்மலருடன், மணமும் சேர்ந்த பெருமையாகும்!<br />----கி.வீரமணி- வாழ்வியல் சிந்தனைகள் -18-5-2013தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-29182123002943963262013-05-18T20:18:51.034+05:302013-05-18T20:18:51.034+05:30சிறப்பு வாய்ந்த பத்து பழங்கள்
1. ஆப்பிள் : இதில்...<br />சிறப்பு வாய்ந்த பத்து பழங்கள்<br /><br /><br />1. ஆப்பிள் : இதில் உள்ள வைட்டமின் "சி" மிகவும் ஆற்றல் வாய்ந்தது. பல நோய்களுக்கான விஷப்பொருட்கள் உடலில் தங்காமல் தடுக்கும் மகத்தான சக்தி வாய்ந்தது<br /><br />2. வாழைப்பழம்: உடல் நலக்குறைவால் பலஹீனமடைந்தவர்கள் உடல் தேறி நலம் பெறவும், உடல் தசை நன்கு இயங்கவும் வாழைப் பழம் சாப்பிடலாம்.நீரிழிவு நோயாளிகள் தவிர எல்லா வயதினரும் தவறாமல் உண்ண வேண்டிய பழம்.<br /><br />3. ஆரஞ்சு: 3 டம்ளர் பால் = 1 டம்ளர் ஆரஞ்சு சாறு ஜீரண உறுப்புகளும், நோய் எதிர்ப்புச் சக்தியும் வலுப்பட இதில் உள்ள "பைட்டோ கெமிக்கல்" உதவுகிறது. இரத்தம் உறைவதைத் தடுப்பதால் மாரடைப்பு தடுக்கப்படும் வாய்ப்பு அதிகம்.<br /><br />4. பன்னீர் மற்றும் கருப்பு திராட்சை: இதயத்தைப் பாதுகாக்கும். புற்று நோயைக் குணமாக்கும். மஞ்சள் காமாலை, சிறுநீரகக் கோளாறு களைப் போக்கும்.<br /><br />5. மாதுளைப் பழம்: இதயத்திற்கும் நெஞ்சு வலிக்கும் மகத்தானது மாதுளம் பழம்.<br /><br />6. பப்பாளி: சீசன் இல்லாத காலத்திலும் தேடிப்பிடித்துச் சாப்பிட வேண்டிய பழம். மூன்று வேளை உணவிலும் சேர்த்துக் கொள்ளலாம். கல்லீரல், மாதவிலக்குக் கோளாறுகள் அகலும். மூட நம்பிக்கை காரணமாக இதை "மிஸ்" பண்ணாதீர்கள்.<br /><br />7.கொய்யா: இரத்தத்தை எளிதில் சுத்தப்படுத்தும். தோல் நோயாளிகளுக்கு அரிய மருந்து கொய்யாப்பழம். ஆண்டு முழுவதும் கிடைக்கும் இப்பழத்தைத் தவறாமல் சாப்பிட வேண்டும்.<br /><br />8.அன்னாசி: இரத்த சோகை, மஞ்சள் காமாலை நோய் வராமல் தடுக்கும். வயிற் றிலுள்ள பூச்சிகளைக் கொல்லும் ஆற்றல் வாய்ந்தது. ஆனால் அதிகம் சாப்பிடக்கூடாது. வாயும் குடலும் வெந்துவிடும்.<br /><br />9. உலர் திராட்சை: தினமும் 25 கிராம் உலர் திராட்சை சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சியின்றி வாழலாம். மூளை சுறுசுறுப்பாகச் செயல்படும். நாள்பட்ட நோயாளி களுக்கு நல்ல உணவு.<br /><br />10. சாத்துக்குடி: தாகத்தை அடக்கிப் பசியையும் போக்கி மருந்தாகவும் செயல் படுகிறது. கால்சியம் அதிகம் உள்ள பழம். 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் அடிக்கடி சாத்துக்குடி பழம் சாப்பிடவும்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-83224471361987507812013-05-18T20:15:18.239+05:302013-05-18T20:15:18.239+05:30
அறிவுரை
நாம் உடை - நகை இவற்றுக்கு நிறைய செலவிடு...<br />அறிவுரை<br /><br /><br />நாம் உடை - நகை இவற்றுக்கு நிறைய செலவிடுகின்றோம். பெண்களுக்கு எவ்வளவுக் கெவ்வளவு நகை - உடை ஆசை ஏற்படுகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அடிமை உணர்ச்சி தான் ஏற்படுமே ஒழிய, சுதந்திர உணர்ச்சி ஏற்படுவது கிடையாது.<br /><br />- தந்தை பெரியார்<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-87842306643499179822013-05-18T20:08:32.715+05:302013-05-18T20:08:32.715+05:30
திருடனா குருடனா?
பார்ப்பான் படைத்த புத்தகம்
புர...<br />திருடனா குருடனா?<br /><br /><br />பார்ப்பான் படைத்த புத்தகம்<br />புரட்டை படைத்தது<br />பெரியார் புகுத்திய புத்தியால்<br />பகுத்தறிவை பெற்றது<br />பார்ப்பன அறிவு பேதலித்து<br />தீயை உண்டாக்கியது<br />கை, கால், கண், இல்லா<br />குருடனா நீ?<br />கொள்கை இல்லா<br />திருடனா நீ?<br /><br />- வணங்காமுடி<br />தருமபுரி<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-60769649511758261132013-05-18T20:07:42.724+05:302013-05-18T20:07:42.724+05:30
அமெரிக்க நரம்பியல் - மனநல மருத்துவர் டாக்டர் டயேன...<br />அமெரிக்க நரம்பியல் - மனநல மருத்துவர் டாக்டர் டயேன் ஹென் ரிபவுல், நாம் மனதார ஒரு முடிவெ டுப்பதாக நினைக்கிறோம். ஆனால், உண்மையில், பெரும்பாலான முடிவுகள், நம் ஆழ்மனதில் உருப் பெருகின்றன என்று கூறுகிறார். எனவே, சொற்களை வாயளவில் ஒழுங்குபடுத்தி வெளிப்படுத்துவதின் மூலம் முறையான பேச்சை கைக் கொண்டதாகக் கூற முடியாது. இதற்கான தொடர்ந்து முயற்சி மேற்கொள்ள வேண்டும்.<br /><br />சிந் தனையை ஒழுங்கில் கொண்டு வர வேண்டும். நம் பழக்கத்துடன் ஒட்டி வந்துள்ள சுடுச் சொல், கடுஞ் சொற்களை கட்டுப்பாட்டில் கொண்டு வரும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஒரு கற்பனை எடுத்துக் காட்டு. ஒரு அலுவலகத்தில் அகிலா அலுவலராக உள்ளார். அலுவலக அதிகாரியும் அவருடைய தங்கையும், அகிலாவை சந்திக்கிறார்கள் அகி லாவைத் தங்கைக்கு அறிமுகப் படுத்தும்போது, இவர் எனக்கு என் தாயார் போன்றவர் என்று தங்கையிடம் கூறுகிறார்.<br /><br />தங்கை முகம் களித்துக் கொள்கிறாள். அகிலா வருந்துகிறாள். அந்த நேரத் தில் ஏதோ பேச வேண்டும் என்பதற் காக பேசி விட்டேன். குற்றமாக எதுவும் கூறவில்லையே. என் அவசர வார்த்தை நடத்தையால் ஒரு சங்கட சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டேனே இதில் பெரிய துன்ப விளைவு ஏற்பட வில்லை. ஆனால் எடுத்த எடுப்பில் ஏதேனும் உளறிக் கொட்டிவிட்டால் விளைவு ஆபத்தை ஏற்படுத்தும். எனவே கீழ்க்கண்டவற்றைக் கவ னத்தில் கொள்வது நல்லது.<br /><br />1) திடீரென்று மனதில் தோன்று வதை சொற்களாக வெளிப்படுத்த வேண்டிய தேவையில்லை.<br /><br />2) ஒருவருக்கு பதில் கூறும்முன் சிறிது நிதானித்து கூறவும். கூற வேண்டியதை யோசித்து அதனால் ஏற்படும் விளைவையும் நினைத்து பேசவும்.<br /><br />3. பதற்றப்பட்ட சூழ்நிலையில் பேச வேண்டிய நிலை ஏற்பட்டால், சிறிது நேரம் நீள் மூச்சு இழுத்து, பிறகு பேசவும்.<br /><br />4. ஒன்றை மறுத்துக் கூற முனை யும்போது நயத்தக்க முறையில், மென்மைக் குரலில் பதிவை ஏற்படுத் தும் வகையில் கூறவும்.<br /><br />5. விழா,பொது நிகழ்ச்சிகளில் குழுமியிருக்கும் வேளையில், உணர்ச்சி கட்டுப்பாட்டை மீறும் வாய்ப்பு ஏற்படும். எனவே எச்சரிக் கையாக பேசுவது நல்லது.<br /><br />6. சில வேளைகளில், தவறுதலாக, குறைபட்ட சொற்களை கூறிவிட் டால், உடனே மன்னிப்பு கேட்டு விடுங்கள். அது நமது கவுரவத்தைப் பாதிக்காது.<br /><br />7. எழுத்து மூலம் கருத்தைக் கூறுவது பாதுகாப்பானது. சொற் களை சரியான வகையில் பயன்படுத்த வாய்ப்பு ஏற்படுகிறது.<br /><br />8. அமைதியான மன நிலையில், குழுப்பமான தடுமாற்றமான சொற்கள் வராது. மூச்சுப் பயிற்சி, தியானம், அமைதியான மனநிலைக்கு வழி வகுக்கும்.<br /><br />9. மடத்தனமான சொற்களைக் கூறுவதைவிட, ஏதும் பேசாமல் இருப்பது சிறந்தது.<br /><br />10. நம்மைப் பார்த்து கூறப்படும் ஒவ்வொரு கருத்துக்கும், மறுப்புத் தருவது தேவையில்லை.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-71059554304920952742013-05-18T20:07:36.612+05:302013-05-18T20:07:36.612+05:30
நலம் விளைய நா காக்க
- மு.வி. சோமசுந்தரம்
சிதறி...<br />நலம் விளைய நா காக்க<br /><br /><br />- மு.வி. சோமசுந்தரம்<br /><br />சிதறிய பாலை எடுக்கவா முடியும்?<br />ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு<br />நுணலும் தன் வாயால் கெடும்<br />வில்லிலிருந்து வெளியேறிய அம்பு வெளியேறியதுதானே?<br />நாவினாற் சுட்ட வடு<br />பெரும் பயன் இல்லாத சொல்<br />இனிய உளவாக இன்னாத கூறல்<br /><br />ஊமையாக இல்லாதிருப்பது ஒருவர் பெற்ற அருட்கொடை இந்த இயற்கைப் பிறவிக் கொடையைப் பெற்றதின்பலன், அவர்தம் சிந்தனைக் கருவூலத்திலிருந்து சொல் முத்துக்களை சமூகம் மகிழ அதன் வழிதான் மகிழ் செய்வதாக வழங்குவதில் அமையும். வாய் வழி வரும் சொற்கள், முத்தாக, மணியாக, கோமேதகமாக, தேனாக, தன்மையாக இல்லாமல், தணலாக, முள்ளாக, கள்ளியாக இருக்குமானால், நாம் சமூகக் கேடர்களாகத் தான் கருதப்படுவோம். நாமும் கசங்கிய மலராக, கைபிசைந்து, குழம்பிய மன நிலையில் குனிந்த தலையுடன் தள்ளாடி நடக்க வேண்டியிருக்கும். நிலை ஏற்படுமல்லவா? இது நல்லதல்லவே!<br /><br />இந்த கருத்தை முன் வைக்கும் வகையில் கட்டுரையின் துவக்கத்தில் எட்டு வரிகள் கூறப்பட்டுள்ளன. அவை வழி காட்டும் வரிகளாகவும், எச்சரிக்கை அறிவிப்புகளாகவும், கருதப்படலாம். இந்த முறையில் மேலும் பல அறிவுரைகள் சேர்க்கப் படலாம்.<br /><br />குடி குடியைக் கெடுக்கும்<br /><br />தொப்பை வரும் முந்தி தொல்லை வரும் பிந்தி<br /><br />இவையும் ஒரு வகை பாது காப் புக்கான முழக்கங்களை அல்லவை களைத் தள்ளி வைத்தால் நல்லவை மாலை சூடலாம்.<br /><br />சொல் குற்றத்தால் சூழும் கேடுகள் பல. எடுத்துக்காட்டாக, ஜவகர்லால் நேரு அவர்கள் தமிழகத்து இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை நான்சென்ஸ் என்று கூறியதையும், இராசகோபாலாச்சாரியார், 1952இல் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களைக் கொச்சைப்படுத்தி, தாம்பரம் கிறித்தவக் கல்லூரியில் பேசியதைக் கூறலாம். யானைக்கும் அடிசருக்கும் அல்லவா?<br /><br />அனைவரும் சொல்லின் செல்வ ராக விளங்குவது இயலாத ஒன்று. நாட்டில் உள்ளவரெல்லாம் நாவல ராக நாட்டம் கொள்வது நடை பெறுமா? பேசும் வழிமுறை பற்றியும், சொல்லின் வலிமை பற்றியும், பிப்ரவரி, 18, இந்து இதழில் வெளிவந்த கட்டுரையின் கருத்துத் தொகுப்பைக் காண்போம். பயன் பெறுவோம்.<br /><br />பெரும்பாலான மனிதர்கள், சில நேரங்களில், சிந்தனையற்ற, சங்கடத்தை ஏற்படுத்தும், அறிவற்ற, ஆத்திரமூட்டக் கூடிய சொற்களை சிந்தி விடுகிறார்கள். இதன் காரண மாக, எதிர்வரும் பல ஆண்டுகள் தான் அப்படி பேசி இருக்கக் கூடாதே என்று ஏங்கி ஏங்கி அந்த எண்ணத்திலேயே மூழ்கி, ஒருவகை நோயால் பாதிக்கப்பட்டவர்களாகி விடுகின்றனர்.<br /><br />இப்படி ஏங்கி ஏங்கி கசிந்து கழிக்கும் காலத்தை எண்ணிப் பார்க்க செலவிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்குமல்லவா? இப்படி சொல்வது எளிதுதான். ஆனால் செயலில் காட்டுவதில்தான் சிக்கல்.<br /><br />இப்படிபட்ட நிலையில் சொற்களைக் கொட்டிவிட்டு சங்கட நிலையைச் சந்திப்பதும், மன இறுக்கம் அடைவதும் ஒரு பக்கம் இருந்தாலும் நீடித்திருக்க வேண்டிய, நட்பு, உறவு பாதிக்கப்படுகிறது.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-10817424977800550332013-05-18T06:17:17.028+05:302013-05-18T06:17:17.028+05:30போலந்தும் - லெனினும்!
நமது கல்விப்புரட்சி வேலைகளி...போலந்தும் - லெனினும்!<br /><br />நமது கல்விப்புரட்சி வேலைகளில் மக்களை மயக்கும் மதத்தோடு போர் புரிவது ஒரு முக்கிய வேலையாகும்.<br /><br />தொழிலாளருடைய ஆதிக் கத்தில் கோவிலுக்கு அரசாங்கம் எவ்வித ஆதரவும் அளிக்கக் கூடாது. பாதிரிக் கூட்டங்கள் புரட்சிக்கு எதிராக செய்து வரும் வேலைகளைக் கண்டிப்பதுடன் அடக்கவும் வேண்டும். - லெனின்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com