tag:blogger.com,1999:blog-1474608369333206681.post502157740456680092..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: திராவிடர் கழகம் எதற்காகப் பாடுபடுகிறது?தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-47764115647548316912013-12-02T05:27:58.671+05:302013-12-02T05:27:58.671+05:30
முதல்வரின் முக்கிய கவனத்திற்கு...
கொலை வழக்கில்...<br />முதல்வரின் முக்கிய கவனத்திற்கு...<br /><br /><br />கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மடாதிபதியும், அவரது சார்பில் ஒரு பெண்ணும் நீதிபதியிடம் லஞ்சப் பணம் கொடுக்கக் கால அவகாசம்பற்றிப் பேசியதாகச் சொல்லப்பட்ட ஓர் ஒலிப்பதிவு ஆவணம் வெளியானதை இப்போது மறுபடியும் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.<br /><br />அது அசல் ஒலிப்பதிவுதானா, இல்லை போலியானதா என்பதை மூவரின் குரல் பதிவுகளையும் எடுத்து ஒப்பிட்டுப் பார்த்து உண்மையைக் கண்டறியும்படி காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. சில மாதங்கள் கழித்துக் காவல்துறை அளித்த பதிலின்படி, அந்த ஒலிப்பதிவு ஆவணம் கரெப்ட் ஆகிவிட்டதால் அதில் எதையும் கேட்க முடியவில்லை.<br /><br />அதே ஒலிப்பதிவு துல்லியமாகக் கேட்கும் விதத்தில் இன்றும் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் நீதிமன்றம், காவல்துறையைப் பொறுத்தமட்டில் அசல் ஆவணம் கரெப்ட் ஆகி விட்டதால் அதன் உண்மைத் தன்மையைக் கண்டறியவே முடியாமல் விஷயமே காலாவதியாகிவிட்டது.<br /><br />- ஞானி, இந்து, தமிழ்நாளேடு, 1.12.2013தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-4667679564893853202013-12-02T05:27:00.644+05:302013-12-02T05:27:00.644+05:30
சு.சாமியின் வாய்க் கொழுப்பு!
t
காஞ்சி மடாதிபதி ம...<br />சு.சாமியின் வாய்க் கொழுப்பு!<br />t<br /><br />காஞ்சி மடாதிபதி மீது பொய் வழக்கு போட்டதற்குப் பொறுப்பேற்றுத் தமிழக முதல்வர் ஜெயலலிதா, காஞ்சி சங்கரமடத்துக்கு வந்து மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.<br /><br />காஞ்சிபுரத்தில் உள்ள சங்கர மடத்துக்கு ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி சனிக்கிழமை வந்தார். அங்கு மடாதிபதி ஜெயேந்திரர் மற்றும் இளைய மடாதிபதி விஜயேந்திரர் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.<br /><br />முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.<br /><br />சங்கரராமன் கொலை வழக்கில், புதுச்சேரி சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இந்து மதத்துக்குக் கிடைத்த வெற்றி; இந்த விவகாரத்தில் காஞ்சி மடாதி பதிகள்மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கு பொய் யானது. இந்து மதத்தை இழிவுபடுத்தும் நோக்கத்தில் தொடரப்பட்ட வழக்கு. இதற்குத் தமிழக அரசு சார்பில் முதல்வர் ஜெயலலிதா பொறுப்பேற்று மடத்துக்கு நேரில் வந்து மன்னிப்புக் கேட்கவேண்டும். தீர்ப்பு இப்படித் தான் வரும் என்று 8 ஆண்டுகளுக்கு முன்பே எனக்குத் தெரியும்.<br /><br />சங்கரராமன் கொலை செய்யப்பட்டது உண்மை தான். உரிய விசாரணை நடத்தி உண்மைக் குற்றவாளி களைக் கைது செய்ய வேண்டும் என்றார் அவர். அப்போது முன்னாள் அய்.ஏ.எஸ். அதிகாரி சந்திர லேகா உடன் இருந்தார்.<br /><br />வழக்கு நடந்தது செஷன்ஸ் கோர்ட்டில் - அதுவும் புதுவையில், அது ஒருபுறம்!<br /><br />2ஜி வழக்கில் சி.பி.அய். ஸ்பெஷல் கோர்ட் முதல் உச்சநீதிமன்றம்வரை நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை இணைக்க வழக்குத் தொடர்ந்து, தோற்றுவிட்ட சு.சாமி, சிதம்பரத்திடம் மன்னிப்புக் கேட்பாரா?<br /><br />பேசுநா இரண்டுடையாய் போற்றி! போற்றி!!தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-79342740518123932132013-12-02T05:21:30.162+05:302013-12-02T05:21:30.162+05:30பேராசிரியர் சுப. திண்ணப்பன் வாழ்த்துகிறார்
பேர...பேராசிரியர் சுப. திண்ணப்பன் வாழ்த்துகிறார்<br /><br /> <br /><br />பேரன்புமிக்க தமிழர் தலைவர் வீரமணி அய்யா அவர்களுக்கு வணக்கம். பிறை ஆயிரம் கண்ட பெருநாள் - முத்துவிழா நாள் ஆகிய உங்கள் 81ஆம் பிறந்த நாள் அன்று வாழ்த்துக்களை உங்களுக்குத் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.<br /><br />பகுத்தறிவுப் பகலவன் ஆகிய பெரியார் பெருமையையும், கொள்கைகளையும் பாரெங்கும் பரப்பும் பணி தொடர நீங்கள் உடல் நலத்துடன் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் என்பதுதான் என் விழைவு. பெரியார் உலகம் காண விரும்பும் உங்கள் கனவு நனவாகட்டும்.<br /><br />- சுப. திண்ணப்பன்<br />பேராசிரியர் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகம்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-40035909238251082002013-12-02T05:20:42.003+05:302013-12-02T05:20:42.003+05:30
அன்பர்கள் இருவரின் கடிதங்கள்
திராவிடர் கழக தலைவர...<br />அன்பர்கள் இருவரின் கடிதங்கள்<br /><br />திராவிடர் கழக தலைவரான தங்கள் 81ஆவது பிறந்த நாளையொட்டி தமிழ்நாட்டில் சாக்ரடீசா லெனினா, ரூசோவா அல்லது அந்த மூவரும் சேர்ந்த ஒரு புதிய வார்ப்படமா என்று சிந்தனையாளர்கள் எண்ணி ஆராயும் அற்புத தலைவர் தந்தை பெரியா ருக்கு 95 அடி உயர வெண்கல சிலையும் அவருடைய கருத்துக்களை இளைய சமுதாயத்திற்கு அறிமுகப் படுத்தி பெரியார் பெயரில் ஒரு உலகத்தையே நிர் மாணிக்கும் மறக்க முடியாத பணிக்காக சேர்க்கப்படும் 1000 பவுன் நிதிக்கு நான் 1 பவுன் 8 கிராம் அன்பளிப் பாக அளிப்பதை தயவு செய்து ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.<br /><br />12 நல்ல கனமான இலாக்காக்கள் என் பொறுப்பில் இருந்தாலும் எனக்கு தலைநகர் சென்னையில் ஒரு வீட்டு மனைகூடக் கிடையாது எங்கும் எந்த சொத்தும் வருமானம் வரும் வேறு தொழிலும் கிடையாது. 88 வயதை நெருங்கும் நான் எம்.எல்.ஏ., எம்.பி. பென்ஷனில் தான் நானும் என் மனைவியும் வாழ்ந்து வருகிறோம்.<br /><br />- வி.வி. சுவாமிநாதன்<br />முன்னாள் அமைச்சர் எம்.பி., சிதம்பரம்<br />2.12.2013 தஞ்சையில் நடக்கும் விழா சிறப்பாக நடைபெறவும் நிறைந்த ஆரோக்கியம் நீண்ட ஆயுள் தாங்கள் பெற்று வாழ்வும் என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!<br /><br />அன்புக்கும் மிகுந்த மதிப்புக்கும் உரிய தோழர் கி.வீரமணி அவர்களுக்கு,<br /><br />வணக்கம். தொண்டால் பொழுதளக்கும் என்று சொல்லுவார்களே அந்த வரிக்கு நூற்றுக்கு நூறு எடுத்துக்காட்டாக, பெரியார் ஏந்திப் பிடித்த சுயமரியாதைப் பெருஞ்சுடரைக் கடும் உழைப்பால் மேலும் பிரகாசமாக எரிய வைத்து, தமிழகத்துக்கு மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளுக்கும் ஒளி ஏற்றிக் கொண்டி ருக்கும் தங்களைத் தங்கள் 81ஆம் பிறந்த நாளான இன்று மனமார வாழ்த்துகிறேன்.<br /><br />இன்னும் நூறாண்டு காலம் முழு நலத்தோடு வாழ்ந்து, சுயமரியாதைச் சுடரொளியை எங்கும் பரப்புங்கள். தந்தை பெரியாருக்கு 95 அடி உயர வெண்கலப் பேரு ருவச் சிலை அமைப்பது பெருமைக்குரியது. பெரியாரின் அறிவொளி மேலும் மேலும் நாடெங்கும் பரவ இந்தச் சிலை ஒரு நல் அடையாளமாக நிமிர்ந்து நிற்கும்!<br /><br />அருமையான விழாவும் ஏற்பாடு செய்திருக்கிறீர்கள் பெரு மக்கள் பலர் கலந்து கொள்கிறார்கள். விழா புதிய வரலாறு சமைக்கும் நூறு பவுனுக்காக நிதி வழங்கும் சுயமரியாதை உள்ளங்கள் அனைத்தையும் வாழ்த் துகிறேன். வணங்குகிறேன். ரூ.1000 என்னுடைய எளிய பங்கையும் இத்துடன் அனுப்புகிறேன்.<br /><br />- பொன்னீலன்<br />தலைவர், அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம்<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-69014430919665971422013-12-02T05:18:34.936+05:302013-12-02T05:18:34.936+05:30பெரியார் நூலக வாசகர் வட்டம் 2000ஆவது நிகழ்ச்சி
கேள...பெரியார் நூலக வாசகர் வட்டம் 2000ஆவது நிகழ்ச்சி<br />கேளுங்கள் தரப்படும் - புதிய அறிமுகம் கேள்விக்குப் பெரியார் பதில் சொல்லும்முறை<br />தமிழர் தலைவர் எடுத்துக்காட்டு<br /><br />சென்னை, டிச.1- கூட்டங்களில் கேள்விகளுக்குத் தந்தை பெரியார் பதில் சொல்லும் முறையை எடுத்துக்காட்டுடன் விளக்கினார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.<br /><br />பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் 2000 - நிகழ்ச்சிகள் நிறைவு விழாவின் முதல் நாள் நிகழ்ச்சி 29.11.2013 வெள்ளி மாலை 6 மணிக்கு சென்னை பெரியார் திடலில், கலை நிகழ்ச்சிகளுடன் தொடங் கப்பட்டது.<br /><br />திராவிடர் கழக மகளிர் பாசறை செய லாளர் டெய்சி மணியம்மை கலை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.<br /><br />பெரியார் நூலக வாசகர் வட்ட செய லாளர் கி. சத்திய நாராயணன் வரவேற் புரை ஆற்றினார். வாசகர் வட்டம் தொடங் கப்பட்ட வரலாற்றை எடுத்துக் கூறினார்.<br /><br />நிகழ்ச்சிக்குத் திராவிடர் இயக்க ஆய் வாளர் க. திருநாவுக்கரசு தலைமை வகித்தார்.<br /><br />பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் 25 சொற்பொழிவுகள் நடத்தியதை பெருமை யாகக் கருதுவதாகக் கூறினார்.<br /><br />கேளுங்கள் தரப்படும்<br /><br />வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் என்கிற முறையில் நிகழ்ச்சியில் புதுமை புகுத்தப்பட்டது. இவ்வமைப்பின் புரவலர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தான் இந்தப் புது ஆலோசனையை வழங்கினார். அதன்படி முதல் நிகழ்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்டது.<br /><br />ஒவ்வொரு துறையிலும் கற்றுத் துறை போகிய அறிஞர் பெரு மக்கள் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.<br /><br />ஒவ்வொருவரிடமும் வினாக்கள் கேட்கப்பட்டன. ஒவ்வொரு வினாவிற்கும் அவர்கள் விடை அளித்தனர். மகளிர் உரிமை மற்றும் சட்டம் சம்பந்தமான கேள்விகளுக்கு திராவிடர் கழகப் பிரச் சார செயலாளர் வழக்குரைஞர் அருள் மொழி பதில் அளித்தார். அறிவியல் தொடர்பான வினாக்களுக்கு இயற்பிய லாளர் அ. பாலகிருஷ்ணன் பதில் அளித் தார்; வரலாறு தொடர்பான வினாக் களுக்கு வரலாற்றுப் பேராசிரியர் அ. கருணானந்தன் விடையளித்தார். பெரியா ரியல் தொடர்பான கேள்விகளுக்கு. பெரியார் பேருரையாளர் புலவர் முனைவர் மா. நன்னன் விடையளித்தார்.<br /><br />இந்தப் புதிய முறை பார்வையாளர் களைப் பெரிதும் கவர்ந்தது. பல புதிய புதிய தகவல்களை அறிய முடிந்ததாகப் பார்வையாளர்கள் கூறினர். கேள்விகளை வாசகர் வட்ட மூத்த உறுப்பினர்களுள் ஒருவரான அருணகிரி படித்தார்.<br /><br />தமிழர் தலைவர் கி.வீரமணி<br /><br />நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.<br /><br />கேளுங்கள் தரப்படும் என்ற புதிய அறிமுகம் சிறப்பாக அமைந்ததற்கு தம் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.<br /><br />இந்த முறையைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பெரியார் நூலக வாசகர் வட்டத்தில் நடக்கும் சொற்பொழிவுகள் 20 நிமிடம் உரை 20 நிமிடம் கேள்வி பதில் பகுதியை அறிமுகப்படுத்தலாம் என்ற ஆலோசனை யையும் தந்தார். பொதுக் கூட்டங்களில் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் முறையை அறிமுகப்படுத்தியது திராவிடர் இயக்கமே என்று கூறிய திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் தந்தை பெரியார், கேள்விக்குப் பதில் சொல்லும் முறையை எடுத்துக் கூறினார்.<br /><br />நியாயமான கேள்விக்கு நேர்மையான பதிலையும், குறும்புத்தனமான கேள்விக்கு அதே முறையில் பதிலும் தந்தை பெரியார் கூறியதற்கு உதாரணமாக பொன்மலை யில் தந்தை பெரியாரிடம் கேட்கப்பட்ட கேள்வியை நினைவூட்டினார்.<br /><br />நேரு பிரதமராக இருந்தபோது இரயில்வே துறையில் அகில இந்திய வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. அது அரசியல் உள்நோக்கம் கொண்ட தாக இருந்ததால் அந்த வேலை நிறுத் தத்தைத் தந்தை பெரியார் எதிர்த்துப் பேசினார். கூட்டம் முடியும் நேரத்தில் ஒருவர் கேள்வி ஒன்றைப் பெரியாரிடம் அளித்தார். நேரு அரசாங்கத்திடம் 10 லட்சம் ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு தானே நீ வேலை நிறுத்தத்தை எதிர்த்துப் பேசு கிறாய்? என்பது கேள்வி. பெரியார் கோபப் படவில்லை. சிரித்துக் கொண்டே பதிலடி கொடுத்தார்.<br /><br />நான் பணம் வாங்கிக் கொண்டு பேசக் கூடியவன் என்று நீங்கள் தெரிந்து கொண் டிருப்பதால், புத்திசாலியாக இருந்தால் நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்?<br /><br />காங்கிரஸ்காரன் பத்து லட்சம் ரூபாய் எனக்குப்பணம் கொடுத்தால் நீ 11 லட்சம் ரூபாய் எனக்கு கொடுத்து உன் பக்கம் பேசச் செய்திருக்க வேண்டாமா? என்று திருப்பிப் பதிலடி கொடுத்தார் - கேட்டவன் வாயடைத்துப் போனான்!<br /><br />இதுபோன்ற நிகழ்வுகள் தந்தை பெரியார் அவர்களின் பொது வாழ்வில் ஏராளம் என்று குறிப்பிட்டார் திராவிடர் கழகத் தலைவர்.<br /><br />தங்க தனலட்சுமி நன்றி கூறிட கூட்டம் இரவு 8.45 மணிக்கு நிறைவுற்றது.<br /><br />நிகழ்ச்சியில் பங்கேற்ற பெருமக் களுக்கு பெரியார் நூலக வாசகர் வட் டத்தின் சார்பில் திராவிடர் கழகத் தலை வர் கி. வீரமணி அவர்கள் பயனாடைகள் அணிவித்து, நூல்களையும் அன்பளிப்பாக வழங்கினார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-19077798941589864812013-12-02T05:16:54.199+05:302013-12-02T05:16:54.199+05:30தமிழர் தலைவருடன் சந்திப்பு
81 ஆம் ஆண்டில் அடி ...தமிழர் தலைவருடன் சந்திப்பு<br /><br /> <br /><br />81 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தமிழர் தலைவர் சந்திப்பு - நாளை காலை 9 மணி முதல் 11 மணி வரை வல்லத்தில் நடைபெறும். கழகத் தலைவரை சந்திப்பவர்கள் சால்வைகளுக்குப் பதில் பெரியார் பேருருவச் சிலைக்கு நிதி வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.<br /><br />- கலி. பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம்<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-34947029441685486352013-12-02T05:16:20.831+05:302013-12-02T05:16:20.831+05:30
பிறந்த நாள் விழா காணும் தலைவர் பதில் அளிக்கிறார்
...<br />பிறந்த நாள் விழா காணும் தலைவர் பதில் அளிக்கிறார்<br /><br /><br />2.12.2013 அன்று 81ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தமிழர் தலைவர் அவர்கள் அன்று முற்பகல் வல்லத்தில் நடக்கவிருக்கும் கருத் தரங்கின் முடிவில் 20 நிமிடங்கள் பார்வையாளர்களின் கேள்வி களுக்கு விடை அளிக்கிறார்.<br /><br />வேக வினாக்களும் விரைவான பதில்களும்!<br />இது ஒரு புதிய அம்சமாகும்.<br /><br />- தலைமை நிலையம்<br /><br /> தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-71693284085905835012013-12-02T05:14:52.767+05:302013-12-02T05:14:52.767+05:30
தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களை கழகத் தலைவர் சந்தி...<br />தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களை கழகத் தலைவர் சந்தித்தார்<br /><br /><br />திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் இன்று (1.12.2013) காலை சென்னை கோபாலபுரத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களைச் சந்தித்தார். கழகம் வெளியிட்ட 14 நூல்களையும் கலைஞர் அவர்களிடம் அளித்து ஒவ்வொரு நூலின் சிறப்புகளையும் எடுத்துக் கூறினார். சிறுகனூரில் நிறுவப்பட விருக்கும் தந்தை பெரியாரின் 95 அடி உயர சிலை பற்றியும் பெரியார் உலகத்தில் இடம் பெறும் அம்சங்கள் குறித்தும் எடுத்துக் கூறினார்.<br /><br />முதலாவதாக நாளை 81ஆம் பிறந்த நாள் காணும் தமிழர் தலைவர் அவர்களுக்கு முத் தமிழ் அறிஞர் சால்வை அணிவித்து வாழ்த் துக்கள்! வாழ்த்துக்கள்!! என்று கூறினார். கலைஞர் அவர்களுக்குத் தமிழர் தலைவர் சால்வை அணிவித்தார். நாளைய விழாவின் அழைப்பிதழை துணைத் தலைவர் கலி. பூங் குன்றன் கலைஞர் அவர்களிடம் அளித்தார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-72296612978733107552013-12-01T05:48:32.947+05:302013-12-01T05:48:32.947+05:30
நீங்கள் மாமனிதர்
கருப்புச் சட்டை வெள்ளை இதயம்
ந...<br />நீங்கள் மாமனிதர்<br /><br /><br />கருப்புச் சட்டை வெள்ளை இதயம்<br />நெஞ்சில் உரம் நேர்மைத் திறம்<br />மூச்சில் தமிழ் பேச்சில் நெருப்பு<br />உயர்ந்த சிந்தனை தெளிவான பார்வை<br />இவற்றுக்கு சொந்தக்காரர்<br />ஈரோட்டுத் திண்ணைக் காரர்<br />சமூக நீதிக் காவலர் - அவரே<br />எங்கள் அன்பு ஆசிரியர் அய்யா<br /><br />கடலூரின் கருத்துக் கனல் - என்றும்<br />அடங்கா எழுத்துப் புனல் -<br />எழுதிய நூல்கள் எழுபத்தைந்து<br />அத்தனையும் அரு மருந்து<br />60 ஆண்டுகள் அயராத சமூகப் பணி<br />சமுதாயப் பிணியை நீக்கும் பணி<br /><br />அதிகாரம் பேசும் பூமியில்<br />அரிதாரம் பூசாத மனிதர்<br />விடுதலை மூலம் மூடப்பழக்கங்களுக்கு<br />மூட்டை கட்டும் ஆசிரியர்<br />உண்மை உரைத்து புதிய<br />உலகம் செய்யும் போராளி<br />அகில உலகில் முதன் முதலாய்<br />பாவையருக்கு தொழில் நுட்ப கல்லூரி<br />கண்ட கல்விக் காவலர்<br />பெண்களைப் போற்றும் கண்மணி<br />பெண்களே போற்றும் வீரமணி<br />மூடநம்பிக்கை ஒழிப்பதே மூச்சு<br />மனிதாபிமானம் வளர்ப்பதே பேச்சு<br />பெண் உரிமை பெண்களுக்குச் சொத்துரிமை கண்ட<br />பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு காண தூண்டிய<br />பெரியாரின் இளவல்<br />பெண் உரிமைக் காவலர்<br /><br />தடம் பார்த்து நடப்பவன் மனிதன்<br />தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்<br /><br />(கோவை கே.ஜி. அறக்கட்டளை சார்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு ஆயிரமாண்டில் செயலாற்றல் மிக்க தலைவர் விருது - டாக்டர் கே.ஜி. பாலகிருஷ்ணன் படித்தளித்த புகழாரக் கவிதை இது - 25.2.20011).<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-85892160113063255322013-12-01T05:46:31.598+05:302013-12-01T05:46:31.598+05:30
சிம்பதியா - எம்பதியா?
பிறர்க்கு உதவி செய்திட ஒவ...<br />சிம்பதியா - எம்பதியா?<br /><br /><br />பிறர்க்கு உதவி செய்திட ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.<br /><br />சிம்பதி (Sympathy) என்பதைவிட எம்பதி(Empathy) என்பது வாழ்வில் மிக முக்கியம்.<br /><br />சிம்பதிக்கும் எம்பதிக்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு.<br /><br />சிம்பதி என்பது மற்றொருவரிடம் நாம் காட்டக் கூடிய இரக்கம். எம்பதி என்பது மற்றொருவர் படுகிற துன்பத்தின் நிலையை அவர் நிலையில் நம்மை நிறுத்திக் கொண்டு உணர்வது ஆகும்.<br /><br />சிம்பதியைவிட, எம்பதி என்பதே மனித நேயத்தின் முக்கிய அம்சம்.<br /><br />_ கி.வீரமணி<br />(திண்டுக்கல் ரோட்டரிக் கிளப்பில் -_ 3.1.1998)<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-58900556371993521792013-12-01T05:45:47.940+05:302013-12-01T05:45:47.940+05:30
பல்லாண்டு பாடுதும்! - புலவர் குறளன்பன் -
பல்லாண்...<br />பல்லாண்டு பாடுதும்! - புலவர் குறளன்பன் -<br /><br />பல்லாண்டு பாடுதும் பல்லாண்டு பாடுதும் .........பல்லாண்டு<br />மீனாட்சி மாண்பர் கிருட்டிண சாமியின்<br />தேனாட்சி நன்மகனாய்த் தென்கடலூர்த் தோன்றியார்க்குப் .........பல்லாண்டு<br /><br />ஆசிரியர்<br /><br />முன்னைப் பயிற்றிய மூத்தமணி ஆசானைப்<br />பின்னை மறவாமல் பேசி வரும் பண்பார்க்கு .........பல்லாண்டு<br /><br />பெரியார் சந்திப்பு<br /><br />திருப்பா திரிப்புலியூர் சந்திப்பில் தந்தை<br />தருமுரை தான்போற்றித் தானுயர்ந்த தோளார்க்கு .........பல்லாண்டு<br /><br />அண்ணா பாராட்டு<br /><br />அண்ணா புகழ் ஞான சம்பந்தன் ஆகிநிலம்<br />கண்ணாய் பரப்புரை செய் காதல் குறியார்க்கு .........பல்லாண்டு<br /><br />விடுதலை வீரர்<br /><br />பள்ளி வகுப்புமுதல் பல்கலை நாள்வரைக்கும்<br />துள்ளி விடுமுறையில் தொண்டு தொடர்ந்தார்க்கு .........பல்லாண்டு<br /><br />வளர்ப்பு மகன்<br /><br />வளர்பெரியார் நெஞ்ச வளர்ப்புமகன் என்ன<br />வளர்கேள்வி ஆளும் படிவளர்ந்த வீரர்க்கு .........பல்லாண்டு<br /><br />பெரியார் பரிசு<br /><br />வெல்ல விடுதலையும் மோகனாவும் தானளித்த<br />நல்ல பெரியாரின் நன்மதிப்பு நெஞ்சார்க்கு .........பல்லாண்டு<br /><br />பொதுச் செயலாளர்<br /><br />புதுமை செயவிரும்பிப் போர்ப் பெரியார் நல்கு<br />பொதுச் செய லாளர் பொறுப்பேற்ற பெற்றியார்க்கு .........பல்லாண்டு<br /><br />மலர்மணம்<br /><br />பிறந்த நாள் காண்பெரியார் பேசுமலர் எல்லாம்<br />சிறந்தார்க்கும் வண்ணத்தில் செய்தளித்த சீர்த்தியார்க்கு .........பல்லாண்டு<br /><br />நினைவு மன்றம்<br /><br />நல்ல நடிகவேள் நம் இராதா பேர்விளங்க<br />நல்ல நினைவுமன்றம் வார்த்தாள வைத்தார்க்கு .........பல்லாண்டு<br /><br />பெரியார் திடல்<br /><br />பெரியார் பெருந்திடலைப் பேரியக்கமாக்கி<br />உரியார் பணிபுரிய ஊக்கிவரும் ஒள்ளியார்க்கு .........பல்லாண்டு<br /><br />வகுப்புரிமை<br /><br />வகுப்புவாரிப் போரியற்ற வாழ்வுரிமை பாடி<br />மிகுவகுப்புத் தானூக்கும் மீட்சி மனத்தார்க்கு .........பல்லாண்டு<br /><br />கடவுள் மறுப்பு<br /><br />ஏறு திராவிடர்க் கில்லை மதம்சாதி<br />ஊறு கடவுளென ஓயா துழைப்பார்க்கு .........பல்லாண்டு<br /><br />அறிவியல்<br /><br />ஒவ்வா மடமூடம் ஓட்டும் அறிவியலால்<br />ஒவ்வும் வழிகூறி ஊக்கி ஒளிர்வார்க்கு .........பல்லாண்டு<br /><br />தன்மானம்<br /><br />பொய்மை உடைத்தாளப் போராடும் தன்மானம்<br />மெய்மை விடுதலைக்கு வேரென்னும் வீச்சார்க்கு .........பல்லாண்டு<br /><br />தூண்டுதொண்டு<br /><br />தீங்கு தகர்பெரியார் தேர்ந்த மணியம்மை<br />தாங்கு பணிதாங்கித் தானாளும் தூயார்க்கு .........பல்லாண்டு<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-54808568973631895982013-12-01T05:45:44.370+05:302013-12-01T05:45:44.370+05:30
பல்லாண்டு பாடுதும்! - புலவர் குறளன்பன் -
பல்லாண்...<br />பல்லாண்டு பாடுதும்! - புலவர் குறளன்பன் -<br /><br />பல்லாண்டு பாடுதும் பல்லாண்டு பாடுதும் .........பல்லாண்டு<br />மீனாட்சி மாண்பர் கிருட்டிண சாமியின்<br />தேனாட்சி நன்மகனாய்த் தென்கடலூர்த் தோன்றியார்க்குப் .........பல்லாண்டு<br /><br />ஆசிரியர்<br /><br />முன்னைப் பயிற்றிய மூத்தமணி ஆசானைப்<br />பின்னை மறவாமல் பேசி வரும் பண்பார்க்கு .........பல்லாண்டு<br /><br />பெரியார் சந்திப்பு<br /><br />திருப்பா திரிப்புலியூர் சந்திப்பில் தந்தை<br />தருமுரை தான்போற்றித் தானுயர்ந்த தோளார்க்கு .........பல்லாண்டு<br /><br />அண்ணா பாராட்டு<br /><br />அண்ணா புகழ் ஞான சம்பந்தன் ஆகிநிலம்<br />கண்ணாய் பரப்புரை செய் காதல் குறியார்க்கு .........பல்லாண்டு<br /><br />விடுதலை வீரர்<br /><br />பள்ளி வகுப்புமுதல் பல்கலை நாள்வரைக்கும்<br />துள்ளி விடுமுறையில் தொண்டு தொடர்ந்தார்க்கு .........பல்லாண்டு<br /><br />வளர்ப்பு மகன்<br /><br />வளர்பெரியார் நெஞ்ச வளர்ப்புமகன் என்ன<br />வளர்கேள்வி ஆளும் படிவளர்ந்த வீரர்க்கு .........பல்லாண்டு<br /><br />பெரியார் பரிசு<br /><br />வெல்ல விடுதலையும் மோகனாவும் தானளித்த<br />நல்ல பெரியாரின் நன்மதிப்பு நெஞ்சார்க்கு .........பல்லாண்டு<br /><br />பொதுச் செயலாளர்<br /><br />புதுமை செயவிரும்பிப் போர்ப் பெரியார் நல்கு<br />பொதுச் செய லாளர் பொறுப்பேற்ற பெற்றியார்க்கு .........பல்லாண்டு<br /><br />மலர்மணம்<br /><br />பிறந்த நாள் காண்பெரியார் பேசுமலர் எல்லாம்<br />சிறந்தார்க்கும் வண்ணத்தில் செய்தளித்த சீர்த்தியார்க்கு .........பல்லாண்டு<br /><br />நினைவு மன்றம்<br /><br />நல்ல நடிகவேள் நம் இராதா பேர்விளங்க<br />நல்ல நினைவுமன்றம் வார்த்தாள வைத்தார்க்கு .........பல்லாண்டு<br /><br />பெரியார் திடல்<br /><br />பெரியார் பெருந்திடலைப் பேரியக்கமாக்கி<br />உரியார் பணிபுரிய ஊக்கிவரும் ஒள்ளியார்க்கு .........பல்லாண்டு<br /><br />வகுப்புரிமை<br /><br />வகுப்புவாரிப் போரியற்ற வாழ்வுரிமை பாடி<br />மிகுவகுப்புத் தானூக்கும் மீட்சி மனத்தார்க்கு .........பல்லாண்டு<br /><br />கடவுள் மறுப்பு<br /><br />ஏறு திராவிடர்க் கில்லை மதம்சாதி<br />ஊறு கடவுளென ஓயா துழைப்பார்க்கு .........பல்லாண்டு<br /><br />அறிவியல்<br /><br />ஒவ்வா மடமூடம் ஓட்டும் அறிவியலால்<br />ஒவ்வும் வழிகூறி ஊக்கி ஒளிர்வார்க்கு .........பல்லாண்டு<br /><br />தன்மானம்<br /><br />பொய்மை உடைத்தாளப் போராடும் தன்மானம்<br />மெய்மை விடுதலைக்கு வேரென்னும் வீச்சார்க்கு .........பல்லாண்டு<br /><br />தூண்டுதொண்டு<br /><br />தீங்கு தகர்பெரியார் தேர்ந்த மணியம்மை<br />தாங்கு பணிதாங்கித் தானாளும் தூயார்க்கு .........பல்லாண்டு<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-25142784213244192782013-12-01T05:44:48.721+05:302013-12-01T05:44:48.721+05:30 நாம் பிறருக்கு உதவும்போது ஏற்படும் இன்பம்தான் ... நாம் பிறருக்கு உதவும்போது ஏற்படும் இன்பம்தான் நமது மனிதநேயத்தினை அளக்கும் கருவி.<br /> ஒருவரது தவறைச் சுட்டுவது தவறல்ல; பலர்முன் சுட்டிக் காட்டி அவரை மிகக் கேவலமாக மற்றவர் நினைக்கும்படி செய்வது தவறு.<br /> பெற்றோர்கள், குழந்தைகளை வளர்க்கும் போதே நன்றி என்பதைச் சொல்லிக் கொடுத்துப் பழக்கப் படுத்திவிட வேண்டும்.<br /><br />- கி.வீரமணி<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-67745630583161215212013-12-01T05:43:59.428+05:302013-12-01T05:43:59.428+05:30
அருண்ஷோரி நூலுக்கு மறுப்புரை: தோழரின் உணர்ச்சிக் ...<br />அருண்ஷோரி நூலுக்கு மறுப்புரை: தோழரின் உணர்ச்சிக் காவியம்!<br /><br /><br />டாக்டர் அம்பேத்கர்பற்றி பார்ப்பன எழுத்தாளர் அருண்ஷோரி எழுதிய நூலை விமர்சித்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ஆற்றிய உரையைச் செவிமடுத்த தோழர் ஒருவரின் உணர்ச்சிக் காவியம்!<br /><br />அன்புத் தலைவ! ஆகஸ்ட் திங்கள் 5,6 தேதிகளில் (1997) பெரியார் திடலில் அருண்சோரிக்கு தங்களின் ஆணித்தரமான மறுப்பும், அவருக்கு ஆதரவு தருவோருக்கு, வெட்கித் தலைகுனிகின்ற வகையில் தங்களின் ஆழ்ந்த சிந்தனைத் துளிகளின் தெளிவும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, அண்ணல் அம்பேத்கரின் உண்மை உள்ளத்தை, தியாகத்தை, சேவையை உணர்ந்த எந்த சமுதாயத்து நல்லவர்களும், தங்களின் மறுப்பை பெருமை யுடனும், மகிழ்வுடனும் வரவேற்கின்றனர்.<br /><br />பத்திரிகை பலம் இல்லாத சமுதாயம் என உணர்ந்து வரும் துன்பங்களை, தாங்கள் ஏற்றுக் கொண்டு, உள்ளம் குமுற, ஆனால், எதிர்ப்பவர்களின் நெஞ்சம் பதற தங்களின் பேச்சும், எழுத்தும், நீண்ட காலத்திற்கு தேவை. இந்தப் பேச்சும், எழுத்தும் மற்ற மாநில பத்திரிகைகளிலும் வரச் செய்தால் மிகவும் நலம் பயக்கும்.<br /><br />ஏனென்றால் ஒரு முறை ஹிந்து பத்திரிகையில் தாழ்த்தப்பட்டவருக்கு இருக்கும் இட ஒதுக்கீடு குறித்து கேலி செய்து, துணுக்கு வெளியிட, அதை வடபுலத்து கேரவான் பத்திரிகை மீண்டும் தமிழகத்து கல்கி பத்திரிகையும் வெளியிட்டது.<br /><br />எனவே நீங்கள், இதை மற்ற மாநில மொழி பத்திரி கைகளுக்கு அனுப்புவதும் நேரம் இல்லையென்றால் அதையே சிறு புத்தகமாக ஆங்கிலத்தில் அல்லது தமிழில் வெளியிட்டால், உங்கள் அரிய கருத்துக்களை நிறைய பேர் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். தங்களின் உயர்ந்த உள்ளத்தை, சமுதாய மக்கள் உணர இவை மேலும் வலுவூட்டும்.<br /><br />நன்றி வணக்கம்.<br /><br />- எம்.சீனிவாசன்<br />For the Scheduled Caste/Tribes REsidents Welfare Association Villivakkam, Madras - 600 049.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-20667183524314653112013-12-01T05:42:48.604+05:302013-12-01T05:42:48.604+05:30
உமை நினைப்பது இன்றா?
இல்லை இல்லை என்றும் எப்போது...<br />உமை நினைப்பது இன்றா?<br /><br />இல்லை இல்லை என்றும் எப்போதும்!<br /><br />அஞ்சா நெஞ்சனே, எங்கள் அண்ணனே<br /><br />பதவிக்கோட்டை தேடாத பட்டுக்கோட்டையே!<br /><br />வளையாத லட்சியமே!<br /><br />வரவு நாடா தியாகமே!<br /><br />எதிர்ப்பில் சிலிர்க்கும் சிங்கமே<br /><br />எங்கள் வழிகாட்டிக் கருவியே<br /><br />உம்மை நினைப்பது - இன்றா, நேற்றா?<br /><br />என்றும் எப்போதும் தான்!<br /><br />எங்கள் லட்சிய நடையின் வேகமே<br /><br />தொண்டறத்துக்கு ஏது சாவு? எம்<br /><br />தொண்டுப் பழத்தின் துவளாத துணையே<br /><br />உம்மை நினைப்பது - இன்றா, நேற்றா?<br /><br />இல்லை என்றும் எப்போதும்!<br /><br />எங்களின் குருதி ஓட்டமே, கொள்கைச்<br /><br />சட்டாம்பிள்ளையே, உம் நினைவு<br /><br />எமக்கு என்றும் எப்போதும் தான்<br /><br />- கி.வீரமணி<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-85462320689384747812013-12-01T05:42:04.033+05:302013-12-01T05:42:04.033+05:30
குடும்பங்களின் வாழ்த்துக்கள்!
உள்ளமெல்லாம் நிறை...<br />குடும்பங்களின் வாழ்த்துக்கள்!<br /><br /><br />உள்ளமெல்லாம் நிறைந்தே தான்<br /><br />நன்றியுடன் வாழ்த்துகின்றோம்!<br /><br />உறவுக்குப் பலர் இருப்போர்<br /><br />உங்களிடம் அன்பு பெற்று<br /><br />குடும்பத்து மூத்தவர் போல்<br /><br />உங்களிடம் கலந்து பேசி<br /><br />தாங்கள் பெறும் ஆறுதலை<br /><br />குடும்பம் குடும்பமாய்<br /><br />நன்றியுடன் நினைத்தேதான்<br /><br />வாழ்த்துகின்றோம் இன்றும்மை!<br /><br />எப்படித்தான் உணர்வீரோ<br /><br />ஆறுதல் தேவையுள்ளோர்<br /><br />கேட்குமுன்னே அறிந்திடுவீர்<br /><br />அன்பான வார்த்தைகளே<br /><br />அருமருந்தாய் கவலைபோக்கக்<br /><br />கனிவான கருத்துக்கள்<br /><br />குடும்பங்கள் ஏற்றிடுமே!<br /><br />எத்தனைத் தொண்டர்கள் எங்கெங்கோ இருந்திடினும்<br /><br />அத்தனையும் அத்துபடி<br /><br />அவர் பெயரை அழைத்திடுவீர்!<br /><br />அவர் தொல்லை தீர்த்திடுவீர்!<br /><br />அத்தனைக் குடும்பங்களும்<br /><br />அகமகிழ்ந்து வாழ்த்துகின்றோம்<br /><br />ஆசிரியர் வாழ்க வென்றே!<br /><br />நூறாண்டு வாழவேண்டும்!<br /><br />நூற்றாண்டு நாயகனின்<br /><br />நிழல்போலத் தொடர்ந்திடுவோம்!<br /><br />- சோம.இளங்கோவன்.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-16969381060877648052013-12-01T05:41:29.780+05:302013-12-01T05:41:29.780+05:30
வடகிழக்கு மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட...<br />வடகிழக்கு மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அறவே கிடையாதாம்! மசோதாவைத் தடுத்து நிறுத்துவீர்!<br /><br /><br />மத்திய மனிதவள அமைச்சக மான கல்வி அமைச்சு நாடாளு மன்றத்தில் தற்போது தாக்கல் செய்துள்ள மசோதாவில், வடகிழக்கு மாகாணங்களில் OBC என்ற இதர பிற் படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு நீக்கப் பட்டுள்ளது. அங்கே OBC பிற் படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்றால், இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து வட கிழக்கு மாநிலங்கள் பிரிந்து சென்று விட்டதாக, மத்திய கல்வி அமைச்சகம் கருதுகிறதா?<br /><br />இது சரியான தகவலாக இருப்பின் இது வன்மையான கண்டனத் திற்குரியதே!<br /><br />சமூக நீதி, இட ஒதுக்கீடு இந்தியா முழுவதற்கும்தான். இந்திய அரசியல் சட்டப்படி இட ஒதுக்கீடு அமலில் உள்ள நிலையில் இப்படி ஒரு நிலைப் பாடு எடுப்பது தவறான சட்ட விரோத நடவடிக்கை அல்லவா?<br /><br />வடகிழக்கு மாநிலங்களில் இட ஒதுக்கீடு 50 சதவிகிதத்தைத் தாண்டு வதால், அதனைச் சரி செய்ய பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அறவே நீக்கி விடுகிறார் களாம். இது ஓர் ஆபத்தான ஆரம்பமாகும்; முளையிலேயே இது கிள்ளி எறியப்படவேண்டும்.<br /><br />உடனடியாக சமூக நீதிக்கான அனைத்து அமைப்புகளும், இதனை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும். சமூகநீதியில் நம்பிக்கை உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர் களும் முன் வரிசையில் நின்று இந்த ஆபத்தைத் தடுத்து நிறுத்த வேண் டும்.<br /><br />- கி. வீரமணி திராவிடர் கழகத் தலைவர் (விடுதலை: 5.8.2011)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-24708469570127750652013-12-01T05:40:50.915+05:302013-12-01T05:40:50.915+05:30
ஆதி திராவிடர் தனிப் பிரிவு உண்டா?
கேள்வி: திராவ...<br />ஆதி திராவிடர் தனிப் பிரிவு உண்டா?<br /><br /><br />கேள்வி: திராவிடர் கழகத்தில் ஆதிதிராவிடர் பிரிவு என்று ஒன்று உண்டா?<br /><br />பதில்: திராவிடர் கழகத்தில் அப்படி ஒரு பிரிவு நிச்சயம் இல்லை. இருக்க முடியாது. காரணம், திராவிடர் கழகம் என்ற அமைப்பில் உறுப்பினர் ஆனாலே ஆதிதிராவிடர், மீதித் திராவிடர் என்ற பேதம் தானே பறந்துவிட வேண்டுமே!<br /><br />சென்னை மாநாடு ஒன்றில் தந்தை பெரியார் அவர்களிடம் திராவிட நாடு திராவிடருக்கானால் ஆதிதிராவிடர்களுக்கு என்ன லாபம்? என்று கேள்வி கேட்கப்பட்ட போது, அய்யா அவர்கள் சொன்ன பதில் லாபம் இல்லை. நட்டம்தான். ஆதி என்ற இரண்டு எழுத்துக்களை வெட்டியெறிந்து விடுவோம் என்றார்கள்.<br /><br />அரசியல் கட்சிகளால் இப்படி ஒன்று வாக்குகளை வைத்தே உருவாக்கப்படுகிறது. உண்மையான சமுதாயப் புரட்சி இயக்கத்தில் எப்படி அது இருக்க முடியும்? அதே நேரத்தில், சமுதாயத்தில் அழுத்தப்பட்டு அடித்தளத்தில் கிடக்கும் மக்களின் உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுத்து திராவிடர் கழகம் அன்று முதல் இன்று வரை பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.<br /><br />தமிழர் தலைவர் கி.வீரமணியின் பதில்<br />(விடுதலை ஞாயிறு மலர் 21.8.1994)<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-20284538296988964822013-12-01T05:38:34.646+05:302013-12-01T05:38:34.646+05:30
தமிழர் தலைவரைப் பாராட்டி லண்டனிலிருந்து ஒரு கடிதம...<br />தமிழர் தலைவரைப் பாராட்டி லண்டனிலிருந்து ஒரு கடிதம்<br /><br /><br />இனமானத் தமிழினத்தின் நலத் திற்கும் பாதுகாப்பிற்கும் உயர்வுக் கும் தன்னையே அர்ப்பணித்துப் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் விட்டுச் சென்ற சீரிய பணியைத் தொய்வின்றித் தொடர்ந்து நடத்தி வரும் பெரியாருக்குப் பெரியாராய் பேரும் புகழும் ஈட்டிக் கொண்டி ருக்கும் தமிழினத் தலைவர்களில் பகுத்தறிவுத் தமிழராகத் திகழும் அய்யா கி.வீரமணி அவர்கள், நீதி மன்றங்களில் திருக்குறள் தேசிய நூலாக வைக்கப்பட வேண்டும் என அனைவருக்கும் முகாமை யான வேண்டு கோளாக விடுத்திருப்பதை உலகத் தமிழர் முன்னேற்றத்திற்கு நெம்புகோலாகத் திகழும் லண்டன் த.மு.க. வழி மொழிந்து நெஞ்சார வரவேற் கின்றது.<br /><br />திருக்குறள் நீதி நூல் நேர்மையில்லா செயலுக்கு நெற்றியடி கொடுத்து நீதியை (பக்க சார்பற்ற முறையில்) நிலை நிறுத்தும் ஒப்பற்ற அரிய நூல்.<br /><br />உலகின் மூத்தகுடியான தமிழ்க்குடி, தமிழ் செம்மொழி என அறிவிக்க ஆதாரமாக இருப்பவை திருக்குறளே. 2000 ஆண்டு களுக்கு மேலான வாய்மைச் சிறப்பு மிக்க நூல் என உலகமாந்த இனமே நெஞ்சார ஏற்றுச் சிறப்படையும் சிறந்த நூல் என்பதை தமிழக அனைத்து மக்களும் சமய வேறுபாடு களின்றி தர்க்க வாதங்கள் செய்திடாது, பகுத்தறிவுச் சிந் தனையோடு முழு ஆதரவு நல்கி அறிவு நூலான திருக்குறளை நீதி மன்றங்களில் வைத்துப் போற்றிட வேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.<br /><br />தமிழர்களின் எண்ணம் ஈடேறிட! வாழ்வு முன்னேறிட வாய்மை வெல்லும் என்பதை நெஞ்சில் நிறுத்துவோம்!<br /><br /><br />லண்டன்<br />10.9.2004<br /><br />- ம. தேவதாசு,<br />லண்டன் தமிழர்<br />முன்னேற்றக் கழகம்<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-85100815670069030472013-12-01T05:37:59.152+05:302013-12-01T05:37:59.152+05:30
கண்மணி வீரமணியின் அரும்பணி
பனிமொழி பகர்ந்து தனி...<br />கண்மணி வீரமணியின் அரும்பணி<br /><br /><br />பனிமொழி பகர்ந்து தனி அன்பினைக் கலந்து என்றும் எனை வரவேற்கத் தவறாத என் ஆருயிர் இளவல், இன்று தன்மானத் தோழர் களால் தமிழர்க்குத் தலைவரென அழைக்கப்படும் வீரமணியாரின் தீரம் மிக்க திறனால் போற்றிப் பாது காக்கப்படும் தந்தை பெரியார் தந்து விட்டுச் சென்ற மாட மாளிகை அல்ல; கூட கோபுரம் அல்ல;<br /><br />அவற்றையும் மிஞ்சும் வண்ண மிகு எண்ணங்கள் - தமிழ் வசீகர வளாகத்தைக் கண்டேன்; ஆங்கமைந்த கலைவாணர் அரங்கம் ஒன்றில் ஓங்கு கதிர் சூரியனாம் உண்மை ஒளிர் தலைவனாம் உலகம்போற்றும் பெரியாரை, ஒவ்வொரு இளங்கலைஞர் களின் இசையில், நடனத்தில், ஆட்டத்தில் அனைத்திலும் அடியேன் கண்டு ஆனந்தப் பரவசமுற்றேன். அருவியில் குளித்தோர்க்கும் அந்த இன்பம் கிடைப்பதில்லை.<br /><br />அடாத அரசியல், கொடும் வெயிலில் காய்ந்திடும் எனக்கு அந்த அருவிச் சோலையில் கிடைத்த புத்துணர்ச்சியைத்தான் என் னென்று புகழ்வேன்?<br /><br />இருபது ஆண்டின் முன்னே இளவல் வீரமணி எனையழைத்து, அங்கே சோலை நடுவே அய்யாவின் சிலையை நாட்டச் சொன்னார். அந்த சிலை இன்றைக்கும் அங்கேயிருந்து என்னை அருகணைத்து உச்சி முகர்ந்தது போல் கண்ட உணர்வு எத் துணை மகிழ்ச்சியானது! எப்படி என் உடலைச் சிலிர்க்க வைத்தது?<br /><br />அய்யாவுக்குப் பிறகு அவர் ஆரம்ப காலந்தொட்டு சேர்த்து வைத்த ஆஸ்தி, பாஸ்தி, கட்டிவைத்த கட்டடங்கள், அறிவுக் கூடங்கள், விட்டுச் சென்றுள்ள கொள்கைகள், வீரம் மிக்க அறை கூவல்கள் இத்தனையையும் கட்டிக் காக்க, யாருளர் என்று நமக்கெலாம் எழுந்த அய்யப்பாட்டை, இதோ நானிருக்கிறேன் என்று எடுத்துக்காட்டி ஏறுபோல் நம்மை நிமிர்ந்து பார்க்கின்ற என்னரும் இளவல், பெரியாரின் பெருந்தொண்டர், சுயமரியாதைச் சுடர், தன் மான முரசு வீரமணியார்.<br /><br />என் கண்ணிலும் அவர் கண்ணிலும் நீர் துளிக்க, அது ஆனந்தப் பன்னீராக இருக்க, ஒருவரையொருவர் தழுவிக் கொண்டோம். உமது முயற்சிகள் வெல்க! இங்கு வளரும் பூங்கொடி கள், பூஞ்செடிகள், புதுமை மணம் பெறுக! இன்றுபோல் என்றென்றும் இது பகுத்தறிவுப் பண்ணையாகத் திகழ்க! என்று வாழ்த்தினேன். அவரும் வாழ்த் தினார்.<br /><br />அறிவுப் பணி, அதற்குத் தேவையான அமைப்புப் பணி, அதிலும் ஒரு கட்டுப் பாட்டுப் பணி என இப்படி கடமைப் பணியாற்றுகிற சுயமரியாதை இயக்கக் கண்மணியாம் வீரமணியாரின் நிருவாகப் பணியை நேரிலே காணும் வாய்ப்பு இனியும் பலமுறை இந்த வாய்ப்பு எனக்குக் கிட்ட வேண்டும் என பேராவலுடன் விடை பெற்றுக்கொண்டேன்.<br /><br />ஆங்கொரு நூலகத்திற்கு விழா மேடையில்இறுதிக் கட்ட மாக ஓர் அறிவிப்பு: கலைஞர் கருணாநிதி நூலகம் என்று அது அழைக்கப்படும் என்று! திணறிப் போனேன். தேன்குடத்தில் தூக்கிப் போட்டு விட்டார் களேயென்று!<br /><br />பெரியாருக்குக் காலணியாய் இருப்பது போல், பெரியார் பெயரில் அமைந்துள்ள அந்தப் பூங்காவில் நூலகம் என்ற ஒரு நுண்ணிய கொடியாக இருந்து விட்டுப் போகிறேன். அது எனக்கு பிறவிப் பெரும் பயன் தான்.<br /><br />(முரசொலி 15-10-2008, திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி நூலகத் திறப்பு விழாவில் - முதலமைச்சர் கலைஞர்.)<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-74210453579207417332013-12-01T05:37:24.708+05:302013-12-01T05:37:24.708+05:30
தந்தை பெரியாரின் கணிப்பு!
வீரமணி அவர்கள் எம்.ஏ.ப...<br />தந்தை பெரியாரின் கணிப்பு!<br /><br />வீரமணி அவர்கள் எம்.ஏ.பி.எல்., பட்டம் பெற்றவர். நல்ல கெட்டிக்காரத் தன்மையும் புத்திக் கூர்மையும் உள்ளவர். அவர் எம்.ஏ., பி.எல்., பாஸ் செய்து வக்கீல் தொழிலில் இறங்கியவுடன் மாதம் ரூ. 300, ரூ.400 வரும்படி வரத்தக்க அளவுக்குத் தொழிலில் வளர்ந்ததோடு கொஞ்சக் காலத்திலேயே மாதம் ரூ. 500, 1000 தொழில் வளம் பெற்றுவரும் நிலையைக் கண்டவர். இந்த நிலையில் அவர் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் இருந்து வந்தவர்.<br /><br />இந்த நிலையில் சுயநலமில்லாது எவ்விதப் பொருள் ஊதியத்தையும் கருதாமல் பொதுத்தொண்டு செய்ய ஒருவர் வந்தார் என்றால், இதுபோல மற்றொருவர், வந்தார் வருகிறார் வரக்கூடும் என்று உவமை சொல்லக்கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்லவேண்டும்.<br /><br />அப்படிப்பட்ட ஒருவரை நாம் தக்கபடி பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் அது நம்முடைய அறியாமையாகவே முடியும் என்ற எண்ணத்தின் மீதே அவரை நம் இயக்கத் தலைமைப் பிரச்சாரகராகவும், நமது விடுதலை ஆசிரியராகவும் பயன்-படுத்திக் கொள்ள முன்வந்து அவருடைய ஏகபோக ஆதிக்கத்தில் விடுதலையை ஒப்படைத்து விட்டேன்.<br /><br />விடுதலை பத்திரிகையை நிறுத்திவிடாததற்கு இதுதான் காரணம்!<br /><br />- விடுதலை 6.6.1964)<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-24631934554003096172013-12-01T05:36:24.047+05:302013-12-01T05:36:24.047+05:30
வீரமணிபற்றி உலக இதழ்கள்
ஆனந்த விகடன் பார்வையில்...<br />வீரமணிபற்றி உலக இதழ்கள்<br /><br /><br />ஆனந்த விகடன் பார்வையில் வீரமணி<br /><br />திராவிடர் கழகத் தலைவர் வீரமணி போன்றவர் பேசும்போது குறுக்கே பேச மாட்டார் கவன மாக சில சமயம் தன் கைகளைக் கட்டிக் கொண்டு கூர்மையாகக் கேட்பார். வயதில் சின்னவர் களைக்கூட வாங்க போங்க என்று தான் சொல்வார்.<br /><br />நன்றி: ஆனந்த விகடன் 22.5.1983<br /><br />சிந்தனைத் தெளிவும், கொள்கை நெறி பிசகாது, மலிவான விமர்சனங்களில் இறங்காது, தொய்வு தட்டாமல் பேசக் கூடிய நா. வல்லவர்களில் மூன்று நான்கு பேர்களில் வீரமணியும் ஒருவர்.<br /><br />நன்றி: சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ்முரசு 1983<br /><br />பிராமணர்கள் மனிதர்களாகத்தான் இருக்கவேண்டும்; தங்களை மற்றவர்களை விட உயர்ந்தவர்களாகக் கருதக் கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறுகிறார்.<br /><br />நன்றி: நியூயார்க் டைம்ஸ் நவம்பர் 3, 1982<br /><br />தமிழ்நாட்டில் திராவிடர் கழகம் என்ற இயக்கம் பார்ப்பனீய எதிர்ப்பு கொள்கையில் வலிமை மிக்கதாகவும், சக்தி வாய்ந்த இயக்கமாகவும் இருக்கிறது. அதன் தலைவர் கி.வீரமணி.<br /><br />நன்றி: இந்தியா டுடே ஜனவரி 15, 1983.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-25013225770844751632013-11-30T18:46:34.440+05:302013-11-30T18:46:34.440+05:30ஸ்ரீமான் காந்தி
ஸ்ரீமான் காந்தி அவர்களுக்கு இப்போ...ஸ்ரீமான் காந்தி<br /><br />ஸ்ரீமான் காந்தி அவர்களுக்கு இப்போது அழைப்புமேல் அழைப்பு வரத்தொடங்கி விட்டது. ஒவ்வொரு ஊர் ராஜாக்களும் வரவேற்கிறார்கள். ரயில்வே வியாபாரிகள் போன்று அய்ரோப்பியர்கள் எல்லோரும் வரவேற்கிறார்கள். சர்க்கார் அதிகாரிகள் வரவேற்கிறார்கள். ராஜப் பிரதிநிதி வரவேற்கிறார், அழைக்கிறார்.<br /><br />நமது நாட்டுப் பார்ப்பனர்களும் தாசானுதாசராய் இருக்கிறார்கள் ஆகவே, அவர் அவ்வளவு தூரம் அய்ரோப்பிய அரசாங்கத்திற்கும், அய்ரோப்பிய வியாபாரிகளுக்கும், பார்ப்பனர் களுக்கும் பரமானந்த சாதுவாக ஆகிவிட்டார் என்பது நன்றாய் விளங்குகிறது.<br /><br />இப்படி அய்ரோப்பியருக்கும், பார்ப்பனருக்கும் பரமானந்த சாதுவாயும், வரவேற்றுக் கொண்டாடத்தக்கவராகவும் ஒருவர் இருந்தால் அவரால் நாட்டுக்கு என்னவிதமான நன்மை விளையக்கூடும்? மேல் கொண்டு, இக்கூட்டத்தாரால் நசுக்குண்டு வாழும் கோடிக்கணக்கான அய்ரோப்பியரல்லாத பார்ப்பனரல்லாத ஏழை மக்களுக்கு என்ன பலன் உண்டாகக்கூடும்? ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் பார்த்தால் போதும் அல்லவா?<br /><br />- குடிஅரசு - கட்டுரை - 30.10.1927தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-3089355351011136162013-11-30T18:46:09.092+05:302013-11-30T18:46:09.092+05:30
தேவதாசி விண்ணப்பம்
நமது நாட்டில் தெய்வத்தின் பேர...<br />தேவதாசி விண்ணப்பம்<br /><br />நமது நாட்டில் தெய்வத்தின் பேராலும், மதத்தின் பேராலும் விபசாரித் தனத்திற்கு இடமாயிருக்கிற தேவதாசிகள் என்கிற தத்துவம் எடுபடவேண்டு மென்பதாக பலர் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக, சென்னை சட்டசபை அங்கத்தினரும், உப தலைவருமான ஸ்ரீமதி டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் அவர்களால் சென்னை சட்ட சபையில் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.<br /><br />அதன் தத்துவம் என்னவென்றால், விபசாரத்திற்காக மதத்தின் பேரால் கோவிலில் பெண்களுக்கு பொட்டுக்கட்டி (முத்திரை போட்டு) விடும் வழக்கம் கூடாதென்றும், அப்படிச்செய்தால் அதற்கு இன்ன தண்டனை என்று ஏற்படுத்த வேண்டுமென்றும் குறிப்பிடப் பட்டிருக்கிறது.<br /><br />இந்தச் சட்டம் கூடாது என்பதாக இரண்டு தேவதாசிப் பெண்கள் அதாவது ஸ்ரீமதிகள் துரைக்கண்ணு, பார்வதி, என்கிற இரு சகோதரிகளால் சட்டசபை மெம்பர்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றனவாம். இதைப் பற்றி நமக்கு யாதொரு ஆச்சரியமுமில்லை. ஏனெனில், இந்த விண்ணப்பம் அச்சகோதரி களால் அனுப்பப்பட்டிருக்காது என்பதும், அதற்குப்பின்புறம் சிலரிருந்துகொண்டு வேலை செய்திருப்பார்கள் என்பதும் நாம் மனப்பூர்வமாய் தீர்மானிக்கக் கூடியதாயிருக்கிறது.<br /><br />ஏனெனில், அப்பெண்மணிகளுக்கு அவ்வேலை நின்று போனால் பிழைக்க முடியாது என்றாவது, அப்பெண்மணிகளால்தான் உலகத்திலுள்ள மற்ற பெண்களுக்கு கற்புகெடாமலிருக்கின்றது என்றாவது, இச்சட்டத்தால் உலகம் முழுகிப் போகுமென்றாவது நாம் நினைக்கமுடியாது.<br /><br />ஆனால், அப்பெண்களுக்கு தரகர்களாயிருந்து நோகாமல் ஒரு சொட்டு வேர்வைகூட நிலத்தில் விழாமல் மேலா மினுக்காய் இருந்து வாழ்ந்துவரும் மாமாக்கள் என்று சொல்லு கின்றவர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கொரு வழி கிடைப்பது சற்று கஷ்டமாயிருக்கும்.<br /><br />ஆதலால், அவர்கள் இந்த விண்ணப்பத்திற்கு மூல கர்த்தாக்களாயிருப்பதில் நமக்கு ஆச்சரியமில்லை. எனினும், இக்கூட்டத்தார் பிழைப்பதற்காக நமது சகோதரிகள் நாட்டுக்கும், சமூகத்திற்கும் இழிவான வேலைகள் செய்து கொண்டிருக்க மதத்தின் பேரால் இடம் கொடுப்பதை விட அதர்மமானதும், கொடுமையானதுமான காரியம் வேறில்லை.<br /><br />தவிர, மற்றும் சில பெரியோர்கள் நாட்டின் நற்பெயரையும், நமது மற்ற பெண்களின் கற்பையும் காப்பதை உத்தேசித்து, இம்மாதிரி ஒரு கூட்டம் பெண்கள் விபசாரத்திற்கென்றே தனியாயிருக்க வேண்டும் என்று சொல்லுகின்றார்களாம். இந்தக் கொள்கையைப் பற்றி நாம் விவகாரம் பின்னால் செய்து கொள்ள நினைக்கின்றோம்.<br /><br />ஆனால், அப்படி ஒரு கூட்டம் பெண்கள் வேண்டும் என்கிற கட்சியை நியாயமென்று கொள்வதாகவே வைத்துக் கொண்டாலும், அதற்காக ஒரு வகுப்பாரே தலைமுறை, தலைமுறையாக தங்கள் பெண்களை உதவிவர வேண்டும் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கின்றது? என்று கேட்பதுடன், அந்த தேசாபிமானமும், நாட்டின் கற்பு அபிமானமும் கொண்டதான இந்தப் பரோபகாரம் எல்லா வகுப்புக்கும் பங்கு முறைப்படி வரட்டும் என்பதாக தாராள நோக்கத்துடன் பார்த்து,<br /><br />அதை மற்றவகுப்புக்கும் பிரித்து விடுவதில் என்ன ஆட்சேபணை, அல்லது நாட்டு கற்பில் கவலையுள்ள ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு பெண்ணை இந்த தேசாபிமானத்திற்கும், கற்பு அபிமானத்திற்கும் விட ஒரு சட்டம் செய்வதற்கு என்ன ஆட்சேபணை என்று கேட்கின்றோம். இப்படிப்பட்ட தர்ம நியாயங்கள் சொல்லி ஏமாற்றித்தானே, ஆதியில் ஒரு வகுப்பார் தலையில் இவ்விழிவு காரியங்கள் போய் விழுந்து விட்டன.<br /><br />தவிரவும், இவர்கள் இப்படிச் சொல்லுவதிலிருந்து மற்ற பெண்கள் கற்பு தவறுவதற்கு ஆண்களே காரணம் என்றும், அந்த ஆண்களுக்கு வேறு பெண்கள் தயாராயிருந்து விட்டால் மற்ற பெண்கள் கற்பு கெடாது என்றும் கருதுவதாகவும் தெரிகின்றது.<br /><br />இப்படிச் சொல்லு வதானது, ஆண் சமூகத்திற்கே கொடுமை செய்ததாகும். சட்டமும், சாஸ்திரமும், மதமும் எப்படி இருந்தாலும் இயற்கைத் தத்துவமும் கடவுள் சித்தமும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இவ் விஷயத்தில் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும் என்பது நமது அபிப்பிராயம்.<br /><br />ஆனாலும், பெண்களுக்கு காவலும், கட்டுப்பாடும், நிபந்தனையும் அதிகமாயிருப்பதால் அவர்கள் விஷயத்தில் நாம் அதிக யோக்கியதை கொடுத்துவிட நேருகின்றது. கட்டுப்பாட்டால் காப்பாற்றப்படும் கற்பை, கற்பு என்று நாம் ஒருபோதும் ஒப்புக் கொள்ள முடியாது.<br /><br />இவ்விஷயத்தில், உலகத்தில் உள்ள எல்லா மதமும் பழக்கத்தில் தனிமயமாகத்தான் நடந்து கொள்ளுகின்றது. ஆனால், இம்முறைகள் இனி அதிக காலத்திற்கு நிலைக்காது என்பதும் நிலைக்கும் வரை ஆண் பெண் இரு பாலர்க்கும் சரி சமானமான சுதந்திரம் இல்லை என்பதுமே நமது அபிப்பிராயம்.<br /><br />- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 30.10.1927தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-4248621039068305412013-11-30T18:45:21.766+05:302013-11-30T18:45:21.766+05:30
சென்னையில் பார்ப்பனரல்லாத வாலிபர் மகாநாடு
சென்ற ...<br />சென்னையில் பார்ப்பனரல்லாத வாலிபர் மகாநாடு<br /><br />சென்ற வாரம் 22, 23 ஆம் தேதிகளாகிய சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை பீபிள்ஸ் பார்க் என்கிற மைதானத்தில் அமைக்கப்பட்ட, நாயர் பந்தல் என்கின்ற ஒரு அழகிய பெருங் கொட்டகையில் பார்ப்பனரல்லாத வாலிபர்களின் முதலாவது மாகாண மகாநாடு, பெங்களூர் சட்ட சபை மெம்பரும் முனிசிபல் சேர்மனுமான ஜனாப் மகமத் அப்பாஸ்கான் சாஹேப் அவர்கள் தலைமையில் நடந்தது.<br /><br />சுமார் ஆண், பெண் உள்பட 5000 ஜனங்கள் வரை விஜயம் செய் திருந்தார்கள். அவ்வாலிப சங்கத்தலைவரும், மகாநாட்டின் வரவேற்புத் தலைவருமான ஸ்ரீமான் ஆரியா அவர்கள் வரவேற்பு உபன்யாசமும், தலைவரின் அக்கிராசன உபன்யாசமும் வாலிப சங்கத்தின் ஆரம்பத்தைப் பற்றியும் அதன் அவசியத்தைப் பற்றியும் பார்ப்பனரல்லாத வாலிபர்களும், பெரியோர்களும் இனி நடந்து கொள்ள வேண்டியதைப் பற்றியும் தெளிவாய் எடுத்துச் சொல்லி இருக்கின்றனர்.<br /><br />அவற்றை ஒவ்வொருவரும் கவனித்துப்படிக்க வேண்டியது அவசியம். தவிர, இம்மகாநாடானது அளவுக்குமேல் வெகுவிமரிசையாகவும் அதி ஊக்கமாகவும், மிக தாராள நோக்கத்துடனும் நடைபெற்றதானது நமது நாடு விழித்துக் கொண்டதென்பதையே காட்டுகிறது.<br /><br />அதில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்கள் உலகத்தையே மூட நம்பிக்கையிலிருந்தும், அடிமைத் தனத்திலிருந்தும் விடுதலை செய்யத் தகுந்த அவ்வளவு சக்தி அடங்கியவைகளாகவே இருந்தன.<br /><br />உதாரணமாக, மனுதர்ம சாஸ்திரத் தையும் அதை ஆதாரமாகக் கொண்ட புராணங் களையும் அரசாங்கத்தார் பறிமுதல் செய்ய வேண்டும் என்று செய்த தீர்மானமும், சூத்திரன் என்று கூப்பிட்டால் பினல் கோட் சட்டப்படி கடுங்காவல் தண்டனையும், கசையடியும் கொடுக்கவேண்டும் என்று பேசிய பேச்சும், பார்ப்பனர்களின் சூழ்ச்சியை எல்லோரும் அறிந்து விட்டார்கள் என்பதையே வெளியாக்கு கிறது.<br /><br />அன்றியும் குடும்பச் சொத்துக்களில் ஆண்களுக்கு உள்ளதுபோலவே பெண் களுக்கும் சம உரிமை இருக்க வேண்டும் என்று செய்த தீர்மானமும், விதவைகளான பெண் களுக்கும் குடும்பச் சொத்தில் தங்கள் புருஷர்கள் இருக்கும்போது அனுபவித்து வந்த வாழ்க்கை யையே அளிக்கவேண்டுமே அல்லாமல்,<br /><br />ஜீவனாம்சம் என்பதாகச் சொல்லிக்கொண்டு வக்கீல் வீடுகளிலும், கோர்ட்டுகளிலும் அலையா திருக்கச் செய்யவேண்டிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பவைகளாகிய பல தீர்மானங்களும், சுயமரியாதைக்காகச் செய்யப்படும் சத்தியாக் கிரகங்களிலும் அதை ஆதரிப்பதுடன் அதில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று செய்த தீர்மானமும் இவைகளில் காட்டிய உற்சாகமும் தமிழ் நாட்டின் சுயமரியாதை உணர்ச்சிக்கு வீரம் எழுந்து விட்டதென்பதையே காட்டுகின்றன.<br /><br />இவ்வாலிப சங்கமானது இத்தீர்மானங் களுடன் திருப்தி அடைந்துவிடாமல் இவை அமலுக்கு வரத் தகுந்த அளவு வேலை செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகின்றோம். இரண்டு மாதங்களுக்கு முன் பம்பாய் வாலிபர் மகாநாட்டிலும் ஏறக்குறைய இது போன்ற தீர்மனங்களே நிறைவேறி இருக்கின்றன.<br /><br />ஒரு நாடு விடுதலையடைய வேண்டுமானால், அந்நாட்டு வாலிபர்களுக்கு விடுதலை உணர்ச்சி வரவேண்டும் என்கின்ற ஆப்தவாக்கின்படியே நமது நாட்டுக்கு இப்போது விடுதலை அறி குறிகள் காணப்படுகின்றதும், அத்துடன் பால்யைகளும் முனைந்து முன் இருக்கின்ற தானது இம்மகாநாட்டால் அறியலாம், ஸ்ரீமதிகள் கிருஷ்ணாபாய் B.A.L.T.; ஊ.ஏ நாயகம் B.A.;பாரிஜாதம் B.A.; இந்திராணி பால சுப்ரமணியம், ஸ்கவுட் மாஸ்ட்டர், அலர்மேலுமங்கைத் தாயாரம்மாள் முதலிய ஸ்திரீ ரத்தினங்களின் சொற்பொழிவுகள் முன் காலத்தில் தமிழ்நாட்டுச் சரித்திரத்தில் காணப்படும் வீரத் தாய்மார் களையெல்லாம் உறுதிப்படுத்தியது.<br /><br />எனவே, வாலிப சங்கத்தையும், இம்மகா நாட்டையும், அதன் நிர்வாகிகளையும், அதற்கு ஆதரவளித்த பெரியோர்களையும் நாம் மனப் பூர்வமாய் பாராட்டுவதுடன் நமது கொள்கைக்குப் பின்பலமாயிருப்பதற்கு நமது நன்றியறிதலையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.<br /><br />- குடிஅரசு கட்டுரை - 30.10.1927<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com