tag:blogger.com,1999:blog-1474608369333206681.post4804834015268935158..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: தேசிய வியாபாரம்- பெரியார்தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-15150598590775760902014-11-13T23:15:46.433+05:302014-11-13T23:15:46.433+05:30குஜராத் முதல்வர் மோடியும் தணிக்கைத்துறை அறிக்கையும...குஜராத் முதல்வர் மோடியும் தணிக்கைத்துறை அறிக்கையும்<br /><br />மோடி முதல்வராக இருந்தபோது குஜராத்தில் நிர்மல் கிராம் புரஸ்கார் திட்டத்தில் செய்ய வேண் டியதை செய்யாமல் இன்று தூய்மை பாரதம் என பெயரை மாற்றியுள்ள மோசடியை பொதுக் கணக்குத் தணிக்கைத்துறையின் அறிக்கை தோலுரித்துள்ளது.<br /><br />பொதுக்கணக்குத் தணிக்கைத்துறையின் சார்பில் அறிக்கை 10.11.2014 அன்று குஜராத் மாநில சட்டசபையில் அளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான அங்கன்வாடி மய்யங்களில் கடந்த ஆண்டுவரையிலும் கழிப்பிட வசதி அமைக்கப்படவில்லை என்று கூறியுள்ளது.<br /><br />2008 முதல் 2013 ஆம் ஆண்டு வரை குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, நிர்மல் கிராம் புரஸ்கார் எனும் மத்திய அரசின் திட்டத்தின்படி, முழுசுகாதாரத் திட்டத்தை அம்மாநிலத்தில் சரிவர நடைமுறைப் படுத்தவில்லை என்று பொதுக்கணக்குத் தணிக்கைத்துறை அறிக்கை கூறுகிறது.<br /><br />பொதுக்கணக்குத்துறையின் சார்பில் குஜராத் மாநிலத்தில் முழு சுகாதாரத்திட்டம் செயல்பாடு குறித்து 2008ஆம் ஆண்டிலிருந்து 2013ஆண்டு வரையில் உள்ள காலத்தில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.<br /><br />அப்போதைய மத்திய அரசால் 1999ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நிர்மல் கிராம் புரஸ்கார் எனும் அத்திட்டம் 2012ஆம் ஆண்டில் நிர்மல் பாரத் அபியான் என்று பெயர் மாற்றப்பட்டது.<br /><br />குஜராத்தில் ஊரகப்பகுதிகளில் முழு சுகாதாரத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏராளமான பற்றாக்குறை இருந்துள்ளது.<br /><br />இத்திட்டத்தின்மூலம் அரசு நடத்தும் அங்கன்வாடி மய்யங்கள் அல்லது ஆரம்ப பள்ளிகளில் கழிவறைகள் கட்டப்படவேண்டும். அதன்படி குஜராத்தில் 22,505 அங்கன்வாடிகளில் கழிவறைகள் 2009ஆம் ஆண்டில் கட்டப்பட்டன. பின்னர் 30,516 ஆக ஏப்ரல் 2012இல் இருந்துள்ளது.<br /><br />குஜராத் மாநில அரசின் செயல்களின்மீதான பொதுக்கணக்குத் துறை அறிக்கையில்,30,516 அங்கன்வாடி மய்யங்களுக்கான கழிவறைகள் கட்டும் இலக்கில் 25,422 (83%) மார்ச் 2013ஆம் ஆண்டில் எட்டப்பட்டது. ஜாம் நகரில் (47 விழுக்காடு) குறைந்த அளவில் எட்டப்பட்டுள்ளது. அதனால், அங்கன் வாடிகளில் உள்ள குழந்தைகள் அடிப்படை வசதிகளை இழந்துள்ளனர் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.<br /><br />இந்நிலையில் குஜராத் சட்டமன்றத்தில் வீடுதோறும் கழிவறைகள், அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும்வகையில் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட வேண்டும் என்றால் கழிப்பிடம் போட் டியிடுபவரின் வீட்டில் இருந்தால்தான் போட்டியிட முடியும் என்று சட்ட முன்வரைவை நிறைவேற்றி உள்ளது.<br /><br />குஜராத்தில் முழு சுகாதாரம்குறித்து தணிக்கைத் துறை அறிக்கையில் குறிப்பிடும்போது, தடுக்கப்பட்ட ஒன்றான மனித மலத்தை மனிதன் அகற்றுவது குஜராத் மாநிலத்தில் நடைமுறையில் உள்ளதாக குறிப் பிடப்பட்டுள்ளது.<br /><br />உலர் கழிப்பிடம் மற்றும் மனித மலத்தை அகற்றுவதில் மனிதர்களை ஈடுபடுத்துவதைத் தடுக்கும் 1993ஆம் ஆண்டு சட்டம் இருந்தபோதிலும், குஜராத் மாநிலத்தில் 2011ஆம் ஆண்டின் புள்ளிவிவர அறிக்கையின்படி, மாநிலத்தில் மனித மலத்தை அகற்ற மனிதர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என முழு சுகா தாரத் திட்டம்குறித்த பொதுக்கணக்குத் தணிக்கைத் துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.<br /><br />முழு சுகாதாராத் திட்டம் உலர் கழிப்பிடங்களை மாற்றவும் வலியுறுத்தி உள்ளது. ஆனாலும், குஜராத் மாநிலத்தில் மனிதக்கழிவை மனிதர்களே அகற்றுவது குறித்து 1,408 புகார்கள் பதிவாகி உள்ளன. எரு மற்றும் உரங்களுக்காக மனிதக்கழிவுகளை மனிதர்கள்மூலம் இரவு நேரங்களில் அகற்றியதாக 2,593 புகார்கள் பதி வாகி உள்ளன. மனிதக் கழிவை மனிதனே அகற்றுவதை சமுதாயத்தின் தீமை என்று அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.<br /><br />மனித மலத்தை மனிதன் சுமப்பது தெய்வீக சேவை - கர்மயோக் என்று நூல் எழுதியவர்தான் அன்றைய குஜராத் முதல்வர் மோடி - அதனை எதிர்த்து திராவிடர் கழகம் போராட்டம் நடத்தியதும் இங்கு நினைவூட்டத் தக்கதாகும்.<br /><br />2012ஆம் ஆண்டு மே மாதத்தில் மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை மற்றும் சமூக நீதி, அதிகாரமளித்தல் துறையின் சார்பில் குஜராத் மாநில அரசுக்கு இதுபோன்ற செயல்பாடுகளில் தம்முடைய கவலைகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளது என்பதை யும் பொதுக்கணக்குத் தணிக்கைத்துறை அறிக்கை குறிப்பிட்டுள்ளது.<br /><br />ஊழலை ஒழிப்பதாக தோள் தட்டும் பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் முதல் அமைச்சராக இருந்தபோது நடைபெற்ற ஊழல் சரித்திரம் இது!<br /><br />Read more: http://viduthalai.in/page-2/91039.html#ixzz3IyJTO1yM<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-65464687220574633122014-11-13T23:15:08.098+05:302014-11-13T23:15:08.098+05:30தொல்லை
வரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படு...தொல்லை<br /><br />வரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுத்திக் கொண்டு துன்பப்படுபவர்கள் நாணயமாய் வாழ முடியாமல் நாட்டுக்குத் தொல்லை விளைவிப்பவர்கள். - (குடிஅரசு, 19.9.1937)<br /><br />Read more: http://viduthalai.in/page-2/91038.html#ixzz3IyJJXurx<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-44262189349876766882014-11-13T23:12:19.444+05:302014-11-13T23:12:19.444+05:30ஆரியர்கள் அந்நியர்களே! பழங்குடியினர்தான் பூர்விகக்...ஆரியர்கள் அந்நியர்களே! பழங்குடியினர்தான் பூர்விகக் குடிகள் பிகார் முதல்வர் கருத்து<br /><br /><br />பாட்னா, நவ.13- உயர் வகுப்பினர் அனைவரும் அந்நியர்கள். அவர்கள் ஆரிய இனத்தின் வழித்தோன்றல்கள் என்று பிகார் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி கூறியுள்ளார்.<br /><br />பிகாரில் நேற்றுமுன்தினம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் கூறுகையில், உயர் வகுப்பினர் எல்லாருமே அந்நியர்கள். அவர்கள் ஆரிய இனத்தின் வழித்தோன்றல்கள். அவர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். நம்மிடையே உள்ள பழங் குடியினர் மற்றும் தலித்களும்தான் மண்ணின் மைந் தர்கள். அவர்களாகவே கல்வி, அரசியல் விழிப்புணர்வு பெற வேண்டும். அவர்கள் பிகாரில் அரசுகளை அமைப்பதற்கு மிக முக்கியப் பங்காற்றுவர்கள் என்றார். இவரின் இந்தக் கருத்துக்கு பிகாரின் முன்னாள் துணை முதல்வர் கஷல்குமார் மோடி கூறும்போது, இவரின் இந்தக் கருத்தால் பிகாரின் வன்முறைகள் நேரிடலாம் என்றாராம்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/91050.html#ixzz3IyIcOYXe<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-69035266401730049552014-11-13T07:33:49.795+05:302014-11-13T07:33:49.795+05:30இன்றைய ஆன்மிகம்?
வாஸ்து தோஷம்
கேள்வி: வாஸ்து தோஷ...இன்றைய ஆன்மிகம்?<br /><br />வாஸ்து தோஷம்<br /><br />கேள்வி: வாஸ்து தோஷம் நீங்க எளிய பரிகாரம் ஏதாவது சொல் லுங்கள்?<br /><br />பதில்: வாஸ்துதோ ஷம் ஒன்றே இல்லை, அதனால் நமக்கு எந்த கஷ்டமும் இல்லை என் னும் இரண்டு வரிகளை முழுமையாக நம்பி, தினமும் 16 முறை ஜபம் செய்யுங்கள், இதுதான் எளிய பரிகாரம். - தினமலர் ஆன்மிக மலரின் கேள்வி பதில்தான் இது கடவுள் இல்லை - இல்லவே இல்லை என்று நாள் ஒன்றுக்கு 16 முறை எழுதுங்கள். அப்பொ ழுதுதான் கடவுள் கடாட் சம் கிடைக்கும் என்று அடுத்து அவரே எழுது வார் என்று எதிர்ப்பார்க் கலாம்.<br /><br />Read more: http://viduthalai.in/page1/90930.html#ixzz3IuTeng9h<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-16382062099035759652014-11-13T07:19:07.250+05:302014-11-13T07:19:07.250+05:30பெரியாரை உலகமயமாக்குவோம்
அண்மையில் சிங்கப்பூர் தே...பெரியாரை உலகமயமாக்குவோம்<br /><br />அண்மையில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் இயங்கும் தெற்காசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் - பல்துறை அறிஞர்கள் இடையே வகுப்பு எடுப்பதுப் போல உரையாற்றிய நமது கழகத் தலைவர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர். ஆசிரியர் கி.வீரமணியார் அவர்கள், சிங்கப்பூர், மலேசியா மியான்மா ஆகிய 3 நாடுகளிடையே பெரியார் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது ஏற்பட்ட தாக்கத்தையும், அதைத் தொடர்ந்து பெரியார் உலகமயமாகிறார் என்பதற்கான அற்புத விளக்கத்தையும் தந்துள்ளார்கள். தெற்காசிய ஆய்வு நிறுவனத்தில் உரை யாற்றிய காரணத்தால் அந்த எல்லையோடு உரையை முடித்துக் கொண்டார் எனக் கருதுகிறேன். எப்போதும் எவற்றிலும் எல்லைத்தாண்டாத ஆசிரியர் அவர்கள் நாகரிகமாக அவ்வாறு நடந்துக் கொண் டதை யான் பாராட்டுகிறேன்.<br /><br />அதே சமயம் ஆசிரியர் அவர்களின் உழைப்பால் - அமெரிக்காவில் - கனடா வில் - இங்கிலாந்து மற்றும் அய்ரோப்பிய நாடுகளில் மட்டுமல்ல. தென்ஆப்பிரிக்கா - தென் அமெரிக்கா ஏன் ஆஸ்திரேலி யாவில் கூட பெரியாரின் தாக்கம் அங் குள்ள திராவிட மக்களின் ஈடுபாட்டோடு ஏற்பட்டுள்ளது என்பதை மறுப்பாரில்லை.<br /><br />பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட திராவிடர் கழகத்திற்கு உண்மையான திராவிட இயக்கத்திற்கு பன்முகத் தோற்றம் கொண்ட உன்னத செயல்பாடுகளை அடையாளப்படுத்தியுள்ளார். திராவிடர் இனப்பற்று, தமிழ்பற்று, அதே போன்று திராவிட மொழிகள்பால் பற்று - கடவுள் மறுப்பு - ஏற்றத்தாழ்வற்ற சமுதாய அமைப்பு - நேர்மையான அரசு அமைவதற்கான ஒத்துழைப்புகள் என்று எவ்வளவோச் சீர்திருத்தக் கருத்துக்களை பட்டியலிடலாம் இன்னும் உலக சமுதாய நன்மைக்கு என் னென்ன வழி முறைகள் உள்ளனவோ அத் தனையும் குறிப்பிட்டு அடையாளப்படுத்திய வர்தான் தந்தை பெரியார் அவர்கள்.<br /><br />உலகில் எவ்வளவோ வகையான மதவேற்றுமைகள் - சாதி வேற்றுமைகள் - நிற வேற்றுமைகள் - பண்பாட்டு வேற்று மைகள் இன்ன பிற வேற்றுமைகள் இருப் பினும், பெரியாரின் அளவுகோலால் அளந் தால் கடவுள் ஏற்பாளர் - கடவுள் மறுப்பாளர் என்ற இரண்டே நிலைகளில் அடங்கிவிடும். இதில் ஆதிமனிதகுலம் ஏற்றது. கடவுளைப் பற்றிய கவலை இல்லாமல் இருந்த நிலை தான். பிற்காலத்தில் கடவுள்கள் ஏற்பட்டு பல்கிப்பெருகி நாட்டிற்கும் - மக்களுக்கும் ஏற்ற வகையில் பெருக்கம் கண்டது. எனவே கடவுள் மறுப்பு ஒன்று மட்டுமே - பகுத்தறிவு ரீதியான உண்மைநிலை. அந்த உண்மை நிலை ஏற்பட உலகிலேயே ஓர் இயக்கம் கண்டு, அது எப்போதும் தொய்வில்லாமல் செயல்பட ஏற்பாடுகள் செய்து - வெற்றி கண்ட ஒரே மாமேதை பெரியார் மட்டுமே.<br /><br />பல சந்தர்பங்களில் _ பல நாடுகளில் பலபேர் கடவுள் மறுப்பு பற்றி குரல் கொடுத்திருக்கிறார்கள். ஆணித்தரமாக வாதிட்டும் உள்ளார்கள். அவர்களுக்குப் பின்னர் அக்கருத்துகள் செயல்பட ஏற்பாட் டினை செய்யவில்லை. பின் தொடர முயற்சித்த சிலரும் தோல்விகண்டு துவண்டு போனதுண்டு. இன்று உலகிலேயே பெரியார் ஒருவர் மட்டுமேதான் கடவுள் மறுப்புக் கொள்கையை எல்லாக்காலத்திற்கும், எல்லா நாட்டிற்கும் உகந்தவகையில் ஏற்பாடு செய்து சென்றுள்ளார் என துணிந்து கூறுவேன்.<br /><br />உலக அளவில் நாம் நம் கொள்கை வீச்சை செயல்பட முனைவதால் நம் திராவிட இனப்பற்றை விட்டுவிடவில்லை. ஆரிய மதப்பித்தலாட்டத்தை வெளிப்படுத் திட தயக்கம் கொள்ளவில்லை. தமிழ் மொழிப்பற்றை விட்டுவிடவில்லை. இந்திய நாட்டிற்கு ஏற்ற அரசை வலியுறுத்துவதிலே தயக்கம் காட்டவில்லை. நெறிதவறிப் போகும் அரசுகளை. உலக மன்றத்தை கண்டிக்கத் தவறவில்லை. வேற்று இனத் தவர் - நாட்டிற்கு செய்யும் நல்லவைகளை போற்றாமல் இருக்கவில்லை. என்றும் நம்பாதை தெளிவானது. தற்போதைக்கு பயணம் கடுமையானதுதான். எனினும் உலகளாவிய தாக்கம் கொண்டது என்பது மட்டும் மிகவும் உண்மை. வாழ்க பெரியார்! வாழ்க வையகம்!!<br /><br />- வேலை பொற்கோவன் (முன்னாள் திமுக அவைத்தலைவர், வேலம்பட்டி, கிருட்டிணகிரி மாவட்டம்)<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/91011.html#ixzz3IuQbjFNq<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-42622815972847638722014-11-13T07:18:18.565+05:302014-11-13T07:18:18.565+05:30அறிவு விளக்கம் இல்லாதவர்கள்
கக்கூஸ் எடுப்பவர்களுக...அறிவு விளக்கம் இல்லாதவர்கள்<br /><br />கக்கூஸ் எடுப்பவர்களுக்கும், ஜலதாரை அள்ளிக் கொட்டுகிறவர்களுக்கும் எப்படி நாற்றம் தெரியாதோ, அதுபோலக் கடவுள் நம்பிக்கைக்காரர்களுக்கு அறிவு விளக்கமே இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டியதாயிருக்கிறது. - (விடுதலை, 20.10.1967)<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/91002.html#ixzz3IuQ0UAvt<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-32009093041514452132014-11-13T07:17:29.659+05:302014-11-13T07:17:29.659+05:30
அதே நேரத்தில் கோவை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்கள...<br />அதே நேரத்தில் கோவை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 30 லட்சம் பேர் நேரடியாக அமராவதி ஆற்றையே நம்பி வாழ்கின்றனர். அமராவதி ஆற்றின் நீராதாரமான பாம்பாற்றில் அணைகட்டும் போது மேற்கு தமிழகம் வறட்சியைச் சந்திக்க நேரிடும். ஏற்கெனவே காவிரி பிரச்சனையால் வட மற்றும் கிழக்கு மாவட்டங்கள் கோடையில் வறட்சியைச் சந்தித்துக்கொண்டு இருக்கும் போது தற்போது அமராவதி ஆற்றிலும் தண்ணீர் வராத நிலையில் தமிழகத்தில் 60 விழுக்காடு மக்கள் பாதிக்கப்படுவார்கள். இந்தியத் தேசியம் பேசும் காங்கிரஸ்தான் கேரளத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. ஆனால், நடைமுறை யில் அது உதட்டளவில் பேசப்படுவதே தவிர, செயல் பாட்டில் கிஞ்சிற்றும் காண முடிவதில்லை. கருநாடகத்தில் காவிரிப் பிரச்சினையிலும் இதே நிலைதான்.<br /><br />இப்படி அடாவடித்தனமாக, சட்ட விரோதமாக நடந்து கொள்வதற்குக் காரணம் மத்திய அரசின் பொறுப்பற்ற தன்மையே!<br /><br />சர்வதேச சட்டமாக இருந்தாலும் சரி, இந்திய அளவில் உள்ள சட்டமாக இருந்தாலும் சரி, நதிநீருக்கான சட்டங்கள் இருக்கவே செய்கின்றன.<br /><br />ஓர் நதியில் அணை கட்டப்படவேண்டுமானால், கீழ்ப் பகுதியில் உள்ள அரசின் அனுமதி கண்டிப்பாகத் தேவை. மாநிலத்தில் உள்ள அரசுகள் இதனை மீறும்போது மத்திய அரசு கண்டுகொள்ளாதது - ஏன்? அதிலும் அரசியல் புகுந்து விளையாடுவதுண்டு.<br /><br />கருநாடகம், கேரளாவில் எப்படிப்பட்ட அரசியலை வளர்த்து வைத்துள்ளார்கள் தெரியுமா?<br /><br />சட்ட விரோதமாக நதிநீர்ப் பிரச்சினையில் தங்களின் மாநில அரசு நடந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கும் அளவுக்கு வெறியூட்டி மக்களை வளர்த்துள்ளனர்.<br /><br />நீரோட்டம் சரியில்லை என்றால், தேசிய நீரோட்டமும் ஒரு கட்டத்தில் கேள்விக் குறியாகிவிடும் - எச்சரிக்கை!<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/91003.html#ixzz3IuPobJx3தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-68832472653418633682014-11-13T07:17:23.805+05:302014-11-13T07:17:23.805+05:30பாம்பாற்றில் தடுப்பணையா?
கேரள மாநிலம், இடுக்கி ம...பாம்பாற்றில் தடுப்பணையா?<br /><br /><br />கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் பிறந்தாலும் தன்னுடைய பாதை முழுவதும் மலைப்பள்ளத்தாக்கு ஊடாகப் பயணித்து இறுதியில் தமிழக எல்லையில் தரையைத் தொடுகிறது பாம்பாறு. தமிழகத்திற்குள் வந்த பிறகு பாம்பாறு அமராவதி என்றழைக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள சிறந்த சுற்றுலா தலங்களுள் அமராவதி ஆற்றின் குறுக்கே உள்ள தூவானம் அருவியும், கும்பக் கரை அருவியும் குறிப்பிடத்தக்கவைகளாகும்.<br /><br />உடுமலைப் பேட்டை வட்டத்தில் அமராவதி அணை 1958 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. இந்த அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்கள், திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன் சத்திரம், பழனி, கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி என சுமார் 60,000 ஏக்கர் நிலம் ஆண்டு முழுவதும் பாசன வசதி பெறுகிறது.<br /><br />திருப்பூர், கரூர் மாவட்டங்களின் குடிநீர்த்தேவையை முழுமையாகத் தீர்க்கும் நன்னீர் வளமாகும். திருப்பூரில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட குடிநீர்த்திட்டம், கரூரில் 8, பழனி ஒட்டன்சத்திரத்தில் 7 மற்றும் பொள்ளாச்சி என 30-க்கும் மேற்பட்ட கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு ஆதாரமாக அமராவதி ஆறு திகழ்கிறது, அமராவதி அணைக்கு பாம்பாறு,தேனாறு, சிற்றாறு மூலம் நீர் வந்து சேர்ந்தாலும் பாம்பாற்றில் இருந்துதான் அமராவதி ஆற்றுக்கு ஆண்டு முழுமையும் நீர் கிடைக்கிறது. தமிழகத்தின் தொழில்வளம் வியாபாரப் பயிர்வளம் மிகுந்த திருப்பூர், பொள்ளாச்சி, திண்டுக்கல் மாவட்டங் களில் வாழும் மக்களுக்கு உயிர்நாடியாகத் திகழும் பாம்பாற்றின் குறுக்கே தமிழக - கேரள எல்லையில் உள்ள மறையூர் அருகே காந்தலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டிசேரி என்ற இடத்தில் ரூ.26 கோடி செலவில் ஒரு புதிய அணை கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளது. 3.11.2014 அன்று திருவனந்தபுரத்தில் இருந்து காணொளிக் காட்சி மூலம் கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி அடிக்கல் நாட்டினார். பட்டிசேரியில் நடந்த விழாவில், கேரள நதிநீர் பாசன அமைச்சர் பி.ஜே.ஜோசப், சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த அணை 75 அடி உயரத்தில், 440 அடி நீளத்தில் கட்டப்படுமாம். இதன் மூலம் அமராவதி ஆற்றிற்குவரும் நீர்வரத்து முற்றிலும் பாதிக்கப்படும்; காவிரி நடுவர் மன்றத்தில், காவிரியின் கிளை நதியான அமராவதியும் வருகிறது. காவிரி ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசும், கேரள அரசும் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், காவிரி ஆணையம், சுற்றுச்சூழல் துறை, நீர்வளம், மின்சாரத் துறை ஆகிய அமைப்புகளின் ஒப்புதலைப் பெறாமலேயே தடுப்பணையைக் கட்ட முடிவு செய்துள்ளது கேரள அரசு. அணையினால் பாசன வசதிபெறும் தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் மேல் பகுதியில் அணை கட்டுவது சட்டவிரோதமாகும். கேரள அரசின் இந்தத் திட்டத்தால் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 60 ஆயிரம் ஏக்கர் பாசனப் பகுதிகள் பாதிக்கப்படுவதுடன், பெரும்பகுதி பாலைவனமாகக்கூடிய சூழ்நிலையும் ஏற்படும். அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையையும் இழுத்து மூடவேண்டிய நிலைதான். தென் தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான முல்லைப் பெரியாறில், பென்னிகுக் அணையை உடைத்து தமிழகத்துக்கு பெரும் கேடு செய்ய அனைத்து வழிகளிலும் முயன்று தோற்றுப் போன கேரள அரசு, தற்போது மேற்கு தமிழகத்தின் வாழ்வாதாரங்களில் ஒன்றான பாம்பாற்றுக்குக் குறுக்கே புதிய அணை கட்டி தமிழகத்திற்கு நெருக்கடி தரப் பார்க்கிறது. திருப்பூர் கரூர் மாவட்டங்களில் சுமார் 40 லட்சம் மக்கள் முழுக்க முழுக்க அமராவதி ஆற்றை நம்பியுள் ளனர்.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-37861549075613851192014-11-13T07:13:55.283+05:302014-11-13T07:13:55.283+05:30சு.சாமி கக்கும் உண்மை சரக்கு!
பிராமணர்களும், கற்ற...சு.சாமி கக்கும் உண்மை சரக்கு!<br /><br />பிராமணர்களும், கற்ற றிந்தவர்களும் எந்தப் பதவி களிலும் இருக்கவில்லை. ஆனால், அவர்கள் சொல் வதை அரசர்கள் கேட்டனர். இப்போது நான் சவுகரிய மான இடத்தில் இருக்கிறேன். நான் என்ன சொன்னாலும் ராஜா (பிரதமர்) கேட்கிறார். பிறகு, எனக்கு எதற்கு மத்திய அமைச்சர்?<br />- சு.சாமி<br />(தினமலர், 12.11.2014, பக்கம் 8)<br /><br />ஆக, பிராமணரும் கற்றறிருந்தவருமான நான் சொல்லுவதைத்தான் பிரத மர் மோடி கேட்கிறார் என்று சொல்லியுள்ளார் சு.சாமி.<br /><br />மோடி தலைமையிலான ஆட்சியின் லட்சணம் எந்த நிலையில் உள்ளது என்ப தற்கு இது ஒன்றே போதாதா?<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/90995.html#ixzz3IuPMJCsK<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-26757959736933105642014-11-13T07:13:06.665+05:302014-11-13T07:13:06.665+05:3010 ஆண்டு விஞ்ஞான முயற்சிக்குப் பெரும் வெற்றி!
உலகி...10 ஆண்டு விஞ்ஞான முயற்சிக்குப் பெரும் வெற்றி!<br />உலகின் ஆரம்பம் அறியப்படுகின்றது!<br /><br />நவம்பர் 12 பொன்னேட்டில் பதிக்கப்படும் நாள்களில் ஒன்று<br /><br />2004 ஆம் ஆண்டில் அய்ரோப்பிய மற்றும் நாசா விஞ்ஞானிகள் சேர்ந்து பிரஞ்சு குனியா கொவரு விலிருந்து ஒரு விண்கலத்தை அனுப்பினர். அதன் பெயர் ரோசட்டா. எகிப்து நாகரிகத்தைக் கண்டறிய உதவிய ரோசட்டாகல்லின் நினைவாகப் பெயரி டப்பட்டது.<br /><br />இதன் முக்கிய குறிக்கோள் வால் நட்சத்திரத்தைத் தொடர்ந்து சென்று ஆராய்வது. அந்த வால் நட் சத்திரம் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அதை ஆராய்ந்து அதில் 220 பவுண்டு எடையுள்ள ரோபாட் கருவியை அந்த வால் நட்சத்திரத்தில் இறக்கி ஆராய்ச்சி செய்வது!<br /><br />வால் நட்சத்திரம் பெரிய பனிப்பாறைகளாக இருக்கும். அது சூரியனின் அருகே வரும்போது, அதிலிருந்து புகை மண்டலம் பெரிய வால்போல் 60 மைல் நீளங்கூடத் தெரியும். அந்த வால் நட்சத் திரத்தின் பனிக்கட்டி மூலமே பூமிக்குத் தண்ணீர் வந்திருக்க முடியும் என்று நம்பப்படுகின்றது. அதி லுள்ள மற்ற வாயுக்களும், தாதுக்களுமே பூமி உண்டாக ஆரம்பகாலத் தோற்றமாக இருக்கும் என்று கருதுகின்றனர்.<br /><br />ஆகவே, அதை ஆராய்ந்து பார்த்தால் பல உண்மைகள் கண்டுபிடிக்கப்படலாம். இதுதான் திட்டம்.<br /><br />ரோசட்டா தொடர்ந்து ஆராய்ச்சி செய்துவரும் 67_பி என்ற வால் நட்சத்திரம் மிகவும் பொல்லாதது. ஒரு பெரிய மலை; ஆனால் பார்ப்பதற்கு உரிக்காத வேர்க்கடலை போன்று இருக்கின்றது. துப்பாக்கியி லிருந்து வரும் குண்டைவிட முப்பது மடங்கு விரைவாகச் சுற்றுகின்றது. இதிலே பிலே என்ற பல கருவிகள் அடங்கிய பெரிய குளிர்பதனப் பெட்டிபோல உள்ள ஆராய்ச்சி இயந்திரம் தரை இறக்கப்பட உள்ளது. ஒரு சிறு மில்லி மீட்டர் தவ்றினாலும் இறங்கும் இடம் ஆயிரம் மீட்டர்கள் தவறி வீணாகி விடும். ரோசட்டாவிலி ருந்து பிலே தள்ளப்பட்டு அது 67_பி இல் இறங்கு வதற்கு ஏழு மணி நேரம் ஆகும், புவி ஈர்ப்பு மிகவும் குறைவாக உள்ளதால். தள்ளி விட்டபின் அதை மாற்ற முடியாது. மூன்று கால்களிலும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. அதை ஆணி அடித்தால் போல இறக்குவதற்கு சின்ன ராக்கெட் அதி லேயே உள்ளது. பன்னி ரண்டு ஆராய்ச்சி இயந் திரங்கள் பொருத்தப்பட்டு வால் நட்சத்திரத்தைத் தோண்டி ஆராய்ச்சி செய்து படங்களும் செய்திகளும் அனுப்பப்படும். வந்து சேர்வதற்கு அரை மணிநேரம் ஆகும்.<br /><br />இந்த அற்புதம் 300 மில்லியன் மைல் தொலை விலே மணிக்கு 37,000 மைல் வேகத்திலே செல்லும் வால் நட்சத்திரத்தில் நடக்கவுள்ளது. அதை நாம் இணையத்தில் பார்க்க வசதிகள் செய்துள்ளனர்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/90993.html#ixzz3IuP95kFj<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-78487840274670208792014-11-13T07:12:15.926+05:302014-11-13T07:12:15.926+05:30இன்றைய ஆன்மிகம்?
பார்ப்பான் வயிற்றில்....
என் கண...இன்றைய ஆன்மிகம்?<br /><br />பார்ப்பான் வயிற்றில்....<br /><br />என் கண் முன்னால் ஜீவன்கள் படும் அவஸ் தையைக் கண்டால் என் நிம்மதியே போய்விடு கிறது.<br /><br />பெரிய பார வண் டியை இழுக்கும் காளை களைப் பார்த்தால், நான் அழுதுவிடுவேன் என்று பக்தர் ஒருவர் எழுது கிறார்.<br /><br />அதற்கு ஜோதிடரின் பதில் என்ன தெரியுமா?<br /><br />ஒரு தடவையாவது கன்றுடன் கூடிய பசு வைத் தானம் செய்யுங்கள் என்று பதில் எழுதியுள் ளார் - ஓர் ஆன்மிக மலரில்.<br /><br />எது செய்தாலும் அது பார்ப்பான் வயிற்றில் அறுத்துக் கட்டுவதுதானா ஆன்மிகம்?<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/90997.html#ixzz3IuOwX38P<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-47692526726571288462014-11-13T07:11:08.750+05:302014-11-13T07:11:08.750+05:30ஆந்திர மாநில பகுத்தறிவு எழுத்தாளர், ஆய்வாளர்களுக்க...ஆந்திர மாநில பகுத்தறிவு எழுத்தாளர், ஆய்வாளர்களுக்குத் தமிழர் தலைவர் பாராட்டு<br /><br /><br /><br />சித்தார்த்தா பக்ஷ் (பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்) முனைவர் விஜயா பக்ஷ் (பணி ஓய்வு பெற்ற விரிவுரையாளர், ஆய்வாளர்) ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மண்டபேட்டாவில் வசித்து வருகின்றார்கள்.<br /><br />நாத்திக மய்ய நிறுவனர் நாத்திகர் கோரா மற்றும் எம்.வி. இராமமூர்த்தி ஆகியோர், இவ்விருவருடைய (சித்தார்த்தா பக்ஷ் இசுலாமியர், விஜயா அம்மையார் பார்ப்பனர் சமுதாயத்தவர்) திருமணத்தை 1972 ஆம் ஆண்டில் சுயமரியாதைத் திருமணமாக, பதிவுத் திருமணத்தை நடத்தி வைத்தார்கள்.<br /><br />முனைவர் விஜயா பக்ஷ் ஒரு எழுத்தாளர் ஆவார். பகுத்தறிவு செயல்பாடுகளில் ஆர்வமுடன் செயல்பட்டு வருபவர் ஆவார். திரு.பக்ஷ் அவர்கள் 1965ஆம் ஆண் டிலிருந்து இன்றுவரையிலும் தொடர்ந்து பகுத்தறிவு செயல்பாடுகளிலும், மனிதநேயப் பணிகளிலும் ஈடுபட்டுவருபவர் ஆவார். மாநில பகுத்தறிவாளர் சங்க செயலாளராகவும் பொறுப்பேற்று செயல்பட்டு வந்துள்ளார்.<br /><br />இருவருமே பகுத்தறிவு மற்றும் மனிதநேயச் செயல் பாடுகளுடன் செயல்பட்டு வருவதோடு, முற்போக்கு கருத்துகளைக் கொண்டுள்ளவர்கள்.<br /><br />ஜாதியற்ற சமுதாயத்துக்காகப் பாடுபட்டு வருப வர்கள். முனைவர் விஜயா பக்ஷ் அய்தராபாத் தெலுங்கு பல்கலைக்கழகத்தில் தெலுங்கு இலக்கியத்தில் பகுத்தறிவுக் கருத்துகளின் தாக்கம் என்கிற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றதோடு, அந்த ஆய்வுக்காக தங்கப்பதக்கமும் பெற்றவர் ஆவார்.<br /><br />பெண்களுக்கு உள்ள சிக்கல்கள் குறித்து ஏராளமான கட்டுரைகளையும், நூல்களையும் தெலுங்கு மொழியில் எழுதி, ஏழு நூல்களை அவரே பதிப்பித்தும் உள்ளார்.<br /><br />அவர் எழுதிய நூலான பைபிள் புசாரி (பைபிள் பேசுகிறது) என்கிற தெலுங்கு மொழி நூலை ஆந்திர அரசு தடை செய்தது. உச்சநீதிமன்றம்வரை சென்று வழக்காடி, நூலுக்கான தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையொட்டி நூலுக்கான தடை நீங்கி ஏராளமான நூல்கள் மக்களிடம் சென்றடைந்தன.<br /><br />இத்தகைய சிறப்புமிகுந்த இணையர் பெரியார் திடலுக்கு வருகை தந்து தமிழர் தலைவர் அவர்களை சந்தித்து தாங்கள் வெளியிட்ட தெலுங்கு நூல்களை வழங்கி மகிழ்ந்தனர். இணையருக்கு தமிழர் தலைவர் அவர்கள் பயனாடை அணிவித்து மிகுந்த பாராட்டு களைத் தெரிவித்தார். அப்போது மேனாள் மாவட்ட நீதிபதி பரஞ்சோதி உடனிருந்தார் (11.11.2014).<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/90994.html#ixzz3IuOYSpdC<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-29682953483622894472014-11-10T17:26:47.940+05:302014-11-10T17:26:47.940+05:30நுரையீரல் பாதிப்புகளுக்கு தீர்வளிக்கும் பீன்ஸ்
ம...நுரையீரல் பாதிப்புகளுக்கு தீர்வளிக்கும் பீன்ஸ்<br /><br /><br />மனிதன் ஆரோக்கியமாக வாழ உடலின் பல்வேறு உறுப்புகள் கட்டாயம் செயல்பட வேண்டியது அவசியமாகும். மனிதன் உயிருடன் வாழ இதயம் தொடர்ந்து இயங்க வேண்டியுள்ளது.<br /><br />இயங்குவதற்காக காற்றை சுவாசிப்பதில் நுரையீரல் பெரும் பங்கு வகிக்கிறது. இதில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அது மனிதன் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். நுரையீரல் பாதிப்பால் ஆண்டுதோறும் உலகம் முழுவதும் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் உயிரிழக்கின்றனர்.<br /><br />பொதுவாக புகைபிடித்தல், புகையிலை பொருட்களை பயன்படுத்துதல், போன்றவற்றாலேயே நுரையீரல் பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டு வந்தது. ஆனால் சமீப காலமாக பெருகிய வாகனங்களால் காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டுள்ளது.<br /><br />இந்தியாவில் சுமார் 60 விழுக்காடு பேர் அசுத்தமான காற்றை சுவாசிப்பதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவும் நுரையீரல் பாதிப்பு ஏற்படுகின்றன. இதனால் நுரையீரல் புற்றுநோய், நெஞ்சு சளி, மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாசக் கோளாறுகள் போன்ற நோய்கள் மனிதனை தாக்குகிறது.<br /><br />இந்நோய்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவத் துறையில் மருந்துகள் இருந்தாலும் வருமுன்காப்போம் என்பது கேள்வி குறியாகவே உள்ளது. இந்நிலையில் நுரையீரல் பாதிக்காமல் இருக்க மனிதன் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய காய்கறிகள் குறித்த ஆய்வை கார்ட்டின் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஜப்பானில் உள்ள மருத்துவமனை ஆய்வுகூடத்தில் மேற்கொண்டனர்.<br /><br />இதன் முடிவில் பீன்ஸ், கலந்த உணவை தினமும் 75 முதல் 100 கிராம் வரை சாப்பிடுபவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் கணிசமாக குறைந்தது தெரிந்தது. இதுமட்டுமல்லாமல் நோய் பாதிப்பு இருப்பவர்கள் பீன்சை சாப்பிடும்போது அவர்களின் வியாதி வளர்ச்சி விகிதம் குறைந்தது. நல்ல நிவாரணம் கிடைப்பதையும் ஆய்வாளர்கள் உறுதிசெய்துள்ளனர்.<br /><br />குறிப்பாக பச்சை பீன்சில் வைட்டமின் பி6, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் மாங்கனீசு ஆகிய சத்துகள் அதிகம் உள்ளது. இது தவிர புரோட்டீன் சத்தும் பச்சை பீன்சில் அதிகம் உள்ளது. தினமும் சுமார் 50கிராம் பீன்சை உட்கொண்டால் நுரையீரல் தொடர்பான நோய் தாக்குதலில் இருந்து 90சதவீதம் வரை மனிதனுக்கு நோய் ஏற்படாது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.<br /><br />Read more: http://viduthalai.in/page-7/90872.html#ixzz3IfM5vtm3<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-36303615939901894752014-11-10T17:19:58.597+05:302014-11-10T17:19:58.597+05:30புரிந்து கொள்ளுங்கள்:
ஒரு முஸ்லீம் கூட இல்லாத கிரா...புரிந்து கொள்ளுங்கள்:<br />ஒரு முஸ்லீம் கூட இல்லாத கிராமத்தைத் தத்தெடுத்த மோடி!<br /><br />பிரதமர் மோடி தத் தெடுத்த கிராமத்தில் முஸ்லீம் மதம் உள் ளிட்ட மாற்று மதத்தைச் சேர்ந்தவர் ஒருவர் கூட இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. உத்தரப் பிரதேச மாநி லத்தில் உள்ள இந்துக் களின் புனித நகரமான வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று தனது தொகுதிக்குட்பட்ட ஜெயபூர் என்ற கிராமத்தைத் தத்தெடுத்தார்.<br /><br />அப்போது பேசிய அவர், இந்த கிராமத்தில் மாற் றத்தை ஏற்படுத்துவதே எனது இலக்கு. கிராமவாசிகள் தங்கள் திறனை ஒன்றுபடுத்தி செயல்பட வேண்டும். அரசு உதவியை எதிர்பார்த்திருப்பதை விடுத்து களத்தில் இறங்கி கிராமவாசிகள் செயல்பட வேண்டும். குழந்தை களுக்குக் கல்வி அளித்தல், அடிப்படை சுகாதாரத்தை பேணுதல், சுற்றுப்புறத் தூய்மையை குடும்பத்தின் கொள்கையாகக் கொள்வது ஆகியவற்றை உறுதி மொழியாக இந்த கிராமத்தினர் எடுத்து கொள்ள வேண்டும். ஜெயபூர் கிராமத்தோடு இணைந்து செய லாற்றுவது மகிழ்ச்சி. நான் ஜெயபூரின் வளர்ச்சிக்கு உறுதியளிக்கிறேன். தண்ணீர் பஞ்சம் இல்லாத புதிய ஜெயபூரை உருவாக்கிக் காட்டுகிறேன்" என்று கூறினார். இதனிடையே, இந்த கிராமத்தில் இந்து மதத்தின் `குர்மி` இனத்தவரைத் தவிர வேற்று மதத்தினர் யாரும் இல்லை என்று தற்போது தெரியவந்துள்ளது. விவசாயத்தை பாரம்பரியமாக செய்து வரும் இந்த குர்மி இனத்தவர்கள் வசிக்கும் ஜெயபூர் கிராமம், 450 ஆண்டுகால வரலாற்றை உடையது என்பதோடு, ஒரு முழுமையான இந்துக்கள் வசிக்கும் கிராமமும் ஆகும். இது தொடர்பாக, பாஜகவினர் கூறுகையில், முஸ் லீம்கள் இங்கு வாசிக்காமல் போனது தற்செயலானது. வரும் 2016 ஆம் ஆண்டுக்குள் முன் மாதிரி கிராமமாக ஜெயபூர் உருவாக்கப்படும் என்று தெரிவித்தனர்.<br /><br />Read more: http://viduthalai.in/page1/90920.html#ixzz3IfKNpXcM<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-91526357685027816012014-11-10T17:15:40.393+05:302014-11-10T17:15:40.393+05:30அறிவியல்கதிர் - அறிவியலாளர்களும் அறிவியல் பார்வைய...அறிவியல்கதிர் - அறிவியலாளர்களும் அறிவியல் பார்வையும்<br /><br />மகாபாரதத்தில் கர்ணன் தாயின் கருவறையிலிருந்து பிறந்தவரல்ல என்பதை வைத்து மரபணு விஞ்ஞானம் அந்தக் காலத்திலேயே இருந்துள்ளது என்றும் விநாயகரின் வடிவத்தை வைத்து அவரது மனித உடலில் யானையின் தலையைப் பொருத்திய பிளாஸ்டிக் சர்ஜன்கள் முன்காலத் திலேயே இருந்திருக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் பேசியிருக்கிறார். அதுவும் ஒரு மருத்துவமனை தொடக்க விழாவில்!புராணங்களை இப்படி அறிவியல் முன்னேற்றத்துடனும் சாதனங்களுடனும் இணைப்பது கேலிக்குரியது. இப்படிப்பட்ட சிந் தனைகள் பள்ளிப் பாடப் புத்தகங்களில் இடம் பெறுவது ஏற்றுக் கொள்ளவே முடியாதது. ஆனால் இதைத்தான் குஜராத்தில் பாஜக அரசு செய்து கொண்டிருக்கிறது.<br /><br />பிரதமரின் பேச்சு ஊடகங்களின் கவனத்தைப் பெறவில்லை என்றும் எந்த விஞ்ஞானியும் மோடியினது கருத்துக்களை மறுக்கவில்லை என்றும் ஒரு கட்டுரை எழுதி (நவம்பர் 1) ஆங்கில இந்துவில் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் பிரபல தொலைக்காட்சி வர்ணனையாளர் கரன் தப்பார்.<br /><br />அவரது கட்டுரையை ஒட்டி இந்துவில் 13 கடிதங்கள் வெளியாகின. அதில் இரு கடிதங்கள் மட்டுமே மோடியின் கருத் துக்கு எதிர்க்கருத்தைப் பதிவு செய் திருந்தன. மீதி 11 கடிதங்களும் மோடியின் கருத்தை ஏற்று, தங்கள் வழிகளில் வியாக்கியானம் செய்தவைதான்! அவற் றில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் 38 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற ஒரு விஞ்ஞானியின் கடிதம் நமது பரிசீலனைக்குரியது. அவர் விநாய கக் கடவுள் இருப்பதையும் கைலாயத்தில் எருதின் மீது சவாரி செய்து வரும் சிவபெருமானையும் நம்புபவராம்.<br /><br />அவரது நம்பிக்கையில் நாம் குறுக்கிட முடியாது. ஆனால் இன்றுள்ள அறிவியல் முன்னேற்றங்கள் எல்லாமே முன்பு இந்தியாவில் இருந்தவைதான் என்று அவர் ஒரே போடாகப் போடுவதை எப்படி ஏற்றுக் கொள்வது? விஞ்ஞானிகளுக் கெல்லாம் அறிவியல் கண்ணோட்டம் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அறிவியல் பார்வையைப் பெறு வதற்கு ஒருவர் விஞ்ஞானியாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. சுற்றி நடக்கும் விஷயங்களை ஆழ்ந்து கவனிப்பவராக ஒருவர் இருந்தாலே போதுமானது. கல், வில், அம்பு, சக்கரத்திலிருந்து தொடங்கி அறிவியல் எப்படி வளர்ந்தது - விவசாயமும் தொழில் களும் எப்படி முன்னேறின - எந்தெந்த காலக்கட்டங்களில் எந்தெந்த கண்டு பிடிப்புகள் நிகழ்ந்தன - என்ற வரலாறு தெரிந்தவர்கள்... எந்த ஒரு நிகழ்வையும் அதன் காரண காரியத்தோடு பொருத்திப் பார்த்து சிந்தித்து சுயமுடிவுக்கு வருபவர்கள்... ஒரு குறிப்பிட்ட நம்பிக்கை காலங்காலமாக இருந்து வருகிறது என்ற ஒரு காரணத்திற்காகவே அதை அப்படியே ஏற்றுக் கொள்ளாதவர்கள்... ஆகியோருக்கெல்லாம் அறிவியல் பார்வை கிடைப்பது எளிதாகி விடும். உதாரணமாக, சூரியன்தான் பூமியைச் சுற்றிவருகிறது என்பது ஆதிகாலத் திலிருந்து இருந்து வந்த ஒரு நம்பிக்கை.<br /><br />இந்த நம்பிக்கை எதுவரை கோலோச்சிக் கொண்டிருந்தது? ஒரு கோபர்னிக்கஸ் வந்து அதை மறுக்கும் வரை.. ஒரு ஜார்டானோ ப்ரூனோ, கோபர்னிக்கஸ் கருத்தை ஏற்றதற்காக எரிக்கப்படும் வரை... ஒரு கலீலியோ அதே காரணத்திற்காக சிறைப்படும் வரைதான். உயிரினங்களின் தோற்றம் பற்றி சார்லஸ் டார்வினின் ஆய்வு படைப்புக் கோட்பாட்டினைப் புரட்டிப் போடவில்லையா? மின்சார பல்பு, ரயில், விமானம், ஏவுகணை, செயற் கைக்கோள், தொலைபேசி, அலைபேசி, ரேடியோ, தொலைக்காட்சி என்று எத்தனையெத்தனை அறிவியல் சாதனங்கள்! இவையெல்லாம் ஆதிகாலத்திலேயே எங்களிடம் இருந்தன என்று கூறுவது எத்தகைய பேதைமை! சித்த மருத்துவம், யோகப் பயிற்சி, உணவே மருந்து என்ற அடிப்படையிலான நமது சமையல் கலை, கணிதவியலில் நாம் காட்டிய நிபுணத்துவம் போன்ற உண்மை யிலேயே போற்றத்தக்க நமது பாரம் பரியப் பெருமைகளுக்காக மட்டும் நெஞ்சை நிமிர்த்துவோம். வீண் பெருமை பேசி எண்ணற்ற விஞ்ஞானி களின் உழைப்பைச் சிறுமைப்படுத்து வதைத் தவிர்ப்போம்!<br /><br />நன்றி: தீக்கதிர் 10.11.2014<br /><br />Read more: http://viduthalai.in/page-2/90912.html#ixzz3IfJIhPma<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-81815328839001824982014-11-09T19:31:32.590+05:302014-11-09T19:31:32.590+05:30புட்டபர்த்தி சாய்பாபா கோவிலுக்கு வந்த ஆஸ்திரேலிய ப...புட்டபர்த்தி சாய்பாபா கோவிலுக்கு வந்த ஆஸ்திரேலிய பெண் கொன்று புதைப்பு<br /><br />பகவான் (?) பாபா சக்தி எங்கே?<br /><br />புட்டபர்த்தி, நவ.9 ஆந்திராவில் உள்ள புட்டபர்த்தி சாய்பாபா கோவிலுக்கு வந்த ஆஸ்திரேலிய மூதாட்டி கொன்று புதைக்கப்பட் டார். இதுதொடர்பாக காவலாளி உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.<br /><br />ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் லுட்கேட் டோனி பெர்லி ஆன்னி (வயது 75). புட்டபர்த்தி சத்யசாய் பாபா பக்தை யான இவர், கடந்த ஜூலை மாதம் ஆஸ்திரே லியாவில் இருந்து ஆந்திர மாநிலத்தில் உள்ள புட்ட பர்த்தி சாய்பாபா ஆசிர மத்திற்கு வந்தார். அங்கு உள்ள அடுக்குமாடி குடி யிருப்பில் தங்கி ஆசிரம பணிகளை மேற்கொண்டு வந்தார்.<br /><br />இந்தநிலையில் கடந்த ஆகஸ்டு 29-ந்தேதியில் இருந்து அவரை திடீ ரென காணவில்லை. இதுகுறித்து அந்த குடியி ருப்பின் காவலாளி பகவன் துடு என்பவர் கடந்த 24-ஆம் தேதி காவல் துறையில் புகார் செய்தார்.<br /><br />உடனே காவலர் ஆஸ்திரேலியாவில் உள்ள டோனியின் உறவினர்களி டம் கேட்டபோது, டோனி ஆஸ்திரேலியா விற்கு வரவில்லை என்று தெரிவித்தனர். காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் புகார் அளித்த காவலாளி பகவன்துடுவை பிடித்து விசாரித்தனர்.<br /><br />விசாரணையில், பகவன்துடு பணத்துக்காக நண்பர்களுடன் சேர்ந்து மூதாட்டியை கொலை செய்து பிணத்தை ஊருக்கு வெளியே புதைத்ததை ஒப்புக்கொண்டார். வீடு பார்ப்பதற்காக டோனி, காவலாளியிடம் பணம் கொடுத்துள்ளார். வீடு சரியில்லாததால் அந்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார்.<br /><br />இதனால் ஆத்திரம் அடைந்த பகவன்துடு தனது நண்பர்களுடன் சேர்ந்து அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து புதைத்து விட்டு மாயமாகி விட்டதாக காவல்துறை யில் புகார் செய்து நாடக மாடியது தெரியவந்தது.<br />இந்த கொலை தொடர்பாக காவலாளி பகவன்துடு, போட்ட லய்யா மற்றும் கார் டிரை வர் நாகராஜூ ஆகி யோரை காவல்துறையினர் கைது செய்தனர்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/90811.html#ixzz3Ia0z5COK<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-1013890404006870632014-11-09T19:31:05.222+05:302014-11-09T19:31:05.222+05:30பிபிசி தமிழ்ச் சேவை: தமிழர் தலைவர் கருத்தை வரவேற்ற...பிபிசி தமிழ்ச் சேவை: தமிழர் தலைவர் கருத்தை வரவேற்று திமுக தலைவர் கலைஞர் கருத்து<br /><br /><br />லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பி.பி.சி.யின் தமிழ்ச் சேவையை புதுடில்லிக்கு மாற்றி இந்தியுடன் இணைப்பதை எதிர்த்து விடுதலை (5.11.2014)யில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்த அறிக்கையை வரவேற்று, வலியுறுத்தி தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் முரசொலியில் இன்று (9.11.2014) எழுதியிருப்பதாவது:<br /><br />கேள்வி :- பி.பி.சி.யின் தமிழ்ச் சேவை ஒலிபரப்பினை இந்திச் சேவை யுடன் இணைத்த நிலையில், டெல்லியில் இயங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, அதிலே தமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்களும், தமிழக அரசும் கருத்தைச் செலுத்த வேண்டுமென்று திரு. கி. வீரமணி அறிக்கை விடுத் திருக்கிறாரே?<br /><br />கலைஞர் :- தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையிலே தெரிவித் திருப்பது போல, பி.பி.சி., தமிழ்ச் சேவையை புதுடெல்லிக்கு மாற்றி, இந்தியுடன் அதனை இணைப்பது தமி ழர்களுக்கு இழைக்கப்படும் கேடாகும். பி.பி.சி. தமிழோசை என்பது, பி.பி.சி. உலக சேவை வானொலியின் தமிழ்ச் சேவையாகும்.<br /><br />பி.பி.சி.யின் தமிழோசை நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதிலும் பரவியிருக்கும் தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பு உண்டு. இதனை டெல்லிக்கு மாற்றினால், இந்தி மொ ழியின் ஆதிக்கம், தமிழோசை யிலும் மேலோங்கும். இந்திய-இலங்கை அரசு களின் நட்புறவின் காரணமாக இலங்கை அரசுக்கு ஆதரவான செய்திகளே அதிகம் ஒலிபரப்பப்படும்.<br /><br />எனவே இதிலே உள்ள ஆபத்தைப் புரிந்து கொண்டு, இதுவரையில் இருந்த நடை முறையைப் போல பி.பி.சி. தமிழ்ச் சேவையை இலண்டனில் இருந்தே தொடர மத்திய, மாநில அரசுகள் உட னடியாகத் தங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டு மென்று வலியுறுத்துகிறேன். (முரசொலி 9.11.2014)<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/90814.html#ixzz3Ia0s0tg5<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-30514333499566510332014-11-09T19:29:08.470+05:302014-11-09T19:29:08.470+05:30பிரார்த்தனையால்தான் வெற்றியா?
கிரிக்கெட் மட்டையை...பிரார்த்தனையால்தான் வெற்றியா?<br /><br /><br />கிரிக்கெட் மட்டையைப் பிடித்து கோடி கோடியாக சம்பாதித்த சச்சின் டெண்டுல்கர் தன் வரலாறு எழுதி யுள்ளாராம். ஏடுகள் பக்கம் பக்கமாகசெய்திகள் வெளி யிடுகின்றன.<br /><br />அதில் ஓரிடம் : 2011ஆம்ஆண்டு உலகக் கோப் பையை வென்றது என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாகும். இறுதிப் போட்டியில் ஆட்டமிழ்ந்து நான் வெளியேறிய பிறகு ஆட்டத்தைப் பார்க்கவில்லை.<br /><br />ஸ்டேடியத்தின் உள்ளே இருந்த நான் வெற்றிக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தேன் வெற்றிபற்றி எனக்குத் தெரிய வந்ததும் துள்ளிக் குதித்தேன் அனைவருடனும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன்.<br /><br />என் வாழ்க்கையில் இது பெருமையளிக்கக் கூடியதாகும் என்கிறார்.<br />விளையாட்டு என்பது திறமைக்கான களம்! இதில் கடவுளுக்கும், பிரார்த்தனைக்கும் ஏது இடம்?<br />பிரார்த்தனையால் வெற்றி என்றால் விளையாட்டு வீரர்களின் சாதனைக்கு என்ன மதிப்பு? இந்த இந்துத் துவா வாதம் எவ்வளவு முறைகேடானது என்பதைச் சிந்திக்க வேண்டாமா? டெண்டுல்கரின் பிரார்த்தனை யால்தான் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதா? இவ்வளவுக்கும் இவர் இந்த இறுதிப் போட்டியில் அடித்துக் கிழித்த ஓட்டங்கள் வெறும் 18 தான்.<br /><br />இந்தக் கேவலத்தில் இவர் பிரார்த்தனையால்தான் இந்தியா ஜெயித்ததாம். ஹி... ஹி...<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/90815.html#ixzz3Ia0NGRdZ<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-33486616400583417552014-11-09T19:29:06.827+05:302014-11-09T19:29:06.827+05:30பிரார்த்தனையால்தான் வெற்றியா?
கிரிக்கெட் மட்டையை...பிரார்த்தனையால்தான் வெற்றியா?<br /><br /><br />கிரிக்கெட் மட்டையைப் பிடித்து கோடி கோடியாக சம்பாதித்த சச்சின் டெண்டுல்கர் தன் வரலாறு எழுதி யுள்ளாராம். ஏடுகள் பக்கம் பக்கமாகசெய்திகள் வெளி யிடுகின்றன.<br /><br />அதில் ஓரிடம் : 2011ஆம்ஆண்டு உலகக் கோப் பையை வென்றது என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாகும். இறுதிப் போட்டியில் ஆட்டமிழ்ந்து நான் வெளியேறிய பிறகு ஆட்டத்தைப் பார்க்கவில்லை.<br /><br />ஸ்டேடியத்தின் உள்ளே இருந்த நான் வெற்றிக்காகப் பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தேன் வெற்றிபற்றி எனக்குத் தெரிய வந்ததும் துள்ளிக் குதித்தேன் அனைவருடனும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன்.<br /><br />என் வாழ்க்கையில் இது பெருமையளிக்கக் கூடியதாகும் என்கிறார்.<br />விளையாட்டு என்பது திறமைக்கான களம்! இதில் கடவுளுக்கும், பிரார்த்தனைக்கும் ஏது இடம்?<br />பிரார்த்தனையால் வெற்றி என்றால் விளையாட்டு வீரர்களின் சாதனைக்கு என்ன மதிப்பு? இந்த இந்துத் துவா வாதம் எவ்வளவு முறைகேடானது என்பதைச் சிந்திக்க வேண்டாமா? டெண்டுல்கரின் பிரார்த்தனை யால்தான் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதா? இவ்வளவுக்கும் இவர் இந்த இறுதிப் போட்டியில் அடித்துக் கிழித்த ஓட்டங்கள் வெறும் 18 தான்.<br /><br />இந்தக் கேவலத்தில் இவர் பிரார்த்தனையால்தான் இந்தியா ஜெயித்ததாம். ஹி... ஹி...<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/90815.html#ixzz3Ia0NGRdZ<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com