tag:blogger.com,1999:blog-1474608369333206681.post4333048636062061038..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: கீதை யாருடைய நூல்?தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger97125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-81476992029786955752015-02-21T23:14:45.071+05:302015-02-21T23:14:45.071+05:30தமிழகத்தில் மூடப்பட்ட தொழிற்சாலைகள்
நோக்கியா
கடந...தமிழகத்தில் மூடப்பட்ட தொழிற்சாலைகள்<br /><br />நோக்கியா<br /><br />கடந்த ஆகஸ்டிலிருந்து தமிழகத்தில் மூடப்பட்ட தொழிற்சாலைகளினால் வேலையிழந்தவர்களின் எண்ணிக்கை 50,000 தொட்டுள்ளது. இதில் நோக் கியா மற்றும் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் மாத்திரம் நேரடியாக மற்றும் அதனைச் சார்ந்த தொழில் செய்து வந்த 25,000 பேர் நிரந்தரமாக வேலையிழந்துள்ளனர். <br /><br />நோக்கியா தொழிற்சாலை வரி ஏய்ப்பிற்காக மூடப்பட்டதா?<br /><br />2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நோக்கியா தனது தொழிற்சாலையை சென்னையில் திறந்தது. மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய பகுதிகளில் இருந்த சந்தைகளுக்கு இங்கிருந்து மொபைல் போன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.<br /><br />ஒப்பந்தத்தின் படி ஏற்றுமதிக்கான தயாரிப்புகள் மாத்திரமே இங்கு தயாரிக் கப்பட்டு வந்தது. ஆனால் ஏற்றுமதி செய்வதற்குப் பதிலாக, உள்ளூர் சந்தையில் பெரும் வரவேற்பு இருப்பதை அறிந்து கொண்டு விதிமுறைகளை மீறி மொபைல் போன்களை உள்நாட்டுச் சந்தையிலும் விற்றது.<br /><br />நோக்கியாவின் இந்த விதி முறை மீறிய செயல்பாட்டின் காரண மாக தமிழ்நாட்டிற்கு சுமார் 3000 கோடி வரி இழப்பு ஏற்பட்டது. கலைஞர் தலைமை யினால் ஆன அரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கில் விதிமுறை மீறிய நோக்கியா நிறுவனம் தமிழக அரசுக்கு 2,400 கோடி ரூபாய் வரி கட்ட வேண்டும் என அறிவிக்கை அனுப்பியது.<br /><br />மற்றோரு வழக்கில் நோக்கியா மைக்ரோசாஃப்டிற்கு மாற்றுவதற்கு முன்பாக 3500 கோடி ரூபாய்க்கு உத்தரவாதமளிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.<br /><br />ஆனால், நோக்கியா நிறுவனம் சிறீப்பெரும்புதூர் தொழிற்சாலை கைமாறவில்லை, அதற்கு மாறாக மொபைல் போன்களை உற்பத்தி செய்து தருவதாக மட்டும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டோம் என்று நீதிமன்றத்தில் கூறியது. இதன் மூலம் சிறீப்பெரும்புதூர் நோக்கியா ஆலை தொடர்ந்து இயங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.<br /><br />ஆனால் திடீரென மைக்ரோசாப்ட் நிறுவனம் மொபைல்போன் வாங்குவதை நிறுத்தி விட்டது. ஆகவே தொழிற்சாலையை மூடப் போகிறோம் என்று அறிவித்து கடந்த நவம்பர் முதல் இந்நிறுவனம் இழுத்து மூடப்பட்டது. நோக்கியா நிறுவனம் இயங்கிக்கொண்டு இருந்த போது சுமார் 8000 தொழிலாளர்கள் நேரடியாக பணிசெய்து கொண்டு இருந்தனர்.<br /><br />இவர்களை அழைத்துச்செல்ல 27 ஒப்பந்தப் பேருந்துகள் இயங்கிக் கொண்டு இருந்தன. மேலும் நோக்கியா நிறுவனத்தில் பராமரிப்பு பணிக்கான ஒப்பந்தத் தொழிலாளர்கள் என 25,000 பேரின் வாழ்வாதாரம் நோக்கியா நிறுவனத்தை நம்பி இருந்தது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் முதல் நோக்கியா தன்னுடைய பணியாளர்களை வெளி யில் அனுப்ப ஆரம்பித்து விட்டது.<br /><br />எதிர்காலத்தில் நோக்கியா நிறுவனம் மூடப்படும் என்பதால் வேறு வழியின்றி சுமார் அய்ந்தாயிரத்திற்கும் மேற்பட் டோர், தானாகவே பணியிலிருந்து விலகிவிட்டனர். ஒப்பந்தத்தை மீறி உள்ளூர் சந்தையில் விற்பனையில் ஈடுபட்ட நிறுவனம் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியது. நீதிமன்றம் மூலம் வரியை திருப்பித்தரக்கோரினால் ஆலையை மூடிவிட்டு ஓடிவிட்டது. நவம்பர் மாதம் முற்றிலுமாக அனை வரும் வெளியேற்றப்பட்டனர்.<br /><br />ஃபாக்ஸ்கான்<br /><br />சிறீபெரும்புதூரில் நோக்கியா செல்போன் தொழிற்சாலை வளாகத் தில் செல்போன் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் ஃபாக்ஸ்கான் தொழிற் சாலை இயங்கி வந்தது. இத்தொழிற் சாலையில் நிரந்தர தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் பயிற்சி தொழிலாளர்கள் என மொத்தம் சுமார் 8000 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.<br /><br />இந்நிலையில் நோக்கியா தொழிற் சாலை மூடப்பட்டதை தொடர்ந்து பாக்ஸ்கான் நிறுவனம் தனது உற்பத் தியை குறைத்துக்கொண்டது. இதனால் இத்தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த ஒப்பந்த தொழிலாளர்கள், பயிற்சி தொழிலாளர்கள் சுமார் 6400 பேர் ஏற்கனவே வேலை இழந்துள்ளனர். இந்த நிலையில் 2014-ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி ஆலையை முழு மையாக மூடிவிட்டது. இதன் மூலம் 8000 பேர் வேலை இழந்துள்ளனர்.<br /><br />Read more: http://viduthalai.in/page3/96591.html#ixzz3SP1oxxwn<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-51053240979488847442015-02-21T23:14:15.495+05:302015-02-21T23:14:15.495+05:30மோடியின் 10 லட்ச ரூபாய் சட்டை ஏலம்
பாவத்தைப் போக்க...மோடியின் 10 லட்ச ரூபாய் சட்டை ஏலம்<br />பாவத்தைப் போக்க கங்கையில் கரைக்கிறார்களோ!<br /><br />குடியரசு தினத்தன்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் இருந்த போது மோடி அணிந்த ஆடை உலக அளவில் மிகவும் கடுமையான விமர் சனத்திற்கு ஆளானது.<br /><br />இங்கிலாந்து நிறுவனம் ஒன்றினால் தனிப்பட்ட முறையில் தங்க இழையால் நரேந்திர தாமோதர் மோடி என பெயர் பொறிக் கப்பட்டு நெய்து ஆஸ்திரியா நாட்டு ஆடை வடிவமைப்பாளர்களின் கைவண்ணத்தில் ஆடையாக நரேந்திர மோடி அணிந்தார். இந்த ஆடை நெய்வ தற்கு, ஆடை வடிவமைக்க தைத்து கொடுக்க என்று ரூ 10 லட்சம் வரை செலவானது.<br /><br />இது குறித்து இன்றுவரை மோடி எதுவும் கூறவில்லை. ஆனால் இந்த ஆடை விவகாரம் பெரிய அளவில் மோடிக்கு அவப் பெயரை வாங்கிக்கொடுத்ததுமல்லாமல் டில்லி தேர்தலின் தோல்விக்கு ஒரு காரணமாகவும் அமைந்துவிட்டது.<br /><br />இந்த ஆடை அணிந்த நாளில் இருந்து தொடர்ந்து மோடிக்குக் கெட்ட சகுனமாகவே இருந்து வந்ததாம், காஷ்மீர் விவகாரத்தில் ஆட்சியமைப் பதில் இருந்து பின்னடைவு, டில்லி தேர்தல் தோல்வி, பீகார் மாநில அரசி யலில் தலையிட்டதன் மூலம் கூட்டணி கட்சிகளிடம் பிணக்கம் என தொடர்ந்து அரசியல் சிக்கல் ஏற்பட்டது.<br /><br />இதற்கு முக்கிய காரணம் இந்த ஆடையின் மூலம் கண் திருஷ்டி ஏற்பட்டுவிட்டது என்று கூறி ஆடையை ஏலம் விட முடிவு செய்தார்களாம். வெறும் ஆடையை மட்டும் ஏலம் விட்டால் ஊடகங்கள் பிரச்சினையை எழுப்பும் என்று கூறி மோடி குஜராத் முதல்வராக இருந்த போதுஅவருக்கு பரிசாக அளித்த 400-க்கும் மேற்பட்ட பொருட்களையும் ஏலம் விடப் போகி றார்களாம்.<br /><br />இதில் வரும் தொகை கங்கை சுத்திகரிப்பு இயக்கத்திற்கு கொடுக்கப் படும் என்று மோடியின் தரப்பில் கூறப்படுகிறது. (இதிலும் இந்துத்துவா தானா?)<br /><br />கடந்த வெள்ளியன்று மோடியின் ஆடையை ஏலம் விட்டு அதில் வரும் பணத்தை தூய்மை இந்தியா இயக்கத் திற்கு வழங்கப்படும் என்று கூறிவந்த நிலையில் திடீரென கங்கை சுத்திகரிப்பு இயக்கத்திற்கு வழங்கப்படும் என்று அறிவித்ததன் பின்புலம் இப்படியும் இருக் கலாம்; அவர்கள் நடவடிக்கைப்படி அவர் செய்த பாவம் எல்லாம் கங்கையில் கரைக்கும் ஏற்பாடாக இருக்குமோ!<br /><br />Read more: http://viduthalai.in/page3/96590.html#ixzz3SP1hrKjo<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-50715447163624526802015-02-21T23:13:46.317+05:302015-02-21T23:13:46.317+05:30அய்வருக்கும்....
பாஞ்சாலி
யார்? -
வாக்காளர்
பட்டி...அய்வருக்கும்....<br /><br />பாஞ்சாலி<br />யார்? -<br />வாக்காளர்<br />பட்டியல்<br />தயாரிப்பவர்<br />கேட்டாராம்....<br />நவ.5<br />என பதில்வர<br />திகைத்துப் போய்<br />எடுத்தார்<br />ஓட்டம்?<br /><br />யார் கண்டுபிடிப்பு!?<br /><br />நாங்கள்<br />எதையும் கண்டுபிடிக்கவில்லையா?<br />மதம், சாதி, கடவுள்...<br />எங்களைத் தவிர - வேறு<br />யாரால் கண்டுபிடிக்க முடியும்?<br />சவால்! சவால்!<br /><br />- மா. அழகிரிதாசன்<br /><br />Read more: http://viduthalai.in/page3/96589.html#ixzz3SP1YH6Hu<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-80438731606161152672015-02-21T23:12:23.346+05:302015-02-21T23:12:23.346+05:30புத்தர்தம் பகுத்தறிவு ஒளி!
’இவ்வுலகில் புலன் இன்ப...புத்தர்தம் பகுத்தறிவு ஒளி!<br /><br />’இவ்வுலகில் புலன் இன்பங்களில் கட்டுப்பாடு அற்றவர்களாய், இனிய பொருட்களில் பேரவா கொண்டவர் களாய், குற்றச் செயல்களோடு தொடர்பு உடையவர்களாய், அழிவு நிலைப் பார்வை உடையவர்களாய், குறுகிய மதியினராய் இருப்பவர்களே தீயவர்கள்! இறைச்சியை உண்பவர்களன்று’<br /><br />’இவ்வுலகில் கடுமையானவராய் நம்பிக்கைத் துரோகம் செய்பவராய், கருணை அற்றவராய், அதிக சுயநலம் கொண்டவராய், கருமியாய், எவருக்கும் ஏதும் அளிக்காதவராய், புறங்கூறுபவ ராய் இருப்பவர்களே தீயவர்கள்! இறைச் சியை உண்பவர்கள் அன்று’<br /><br />இவ்வுலகில் தீயொழுக்கம் உடை யவராய், தம் தொழிலில் ஏமாற்றுக் காரராய், கடனைத் திருப்பித்தர மறுப்பவராய், பாசாங்குக்காரராய், பிறரை இகழ்ச்சியாய் நினைப்பவராய் இருப்பவர்களே தீயவர்கள்! இறைச் சியை உண்பவர்கள் அன்று.<br /><br />இவ்வுலகில் பிறருக்குத் துன்பம் இழைப்பவராய், பிறர் பொருள் கவர்பவராய், தீயொழுக்கம் உள்ளவராய் மரியாதை அற்றவராய், கொடுஞ் செயல்களில் கட்டுப்பாடு அற்றவராய் இருப்பவர்களே தீயவர்கள்! இறைச் சியை உண்பவர்கள் அன்று.<br /><br />இவ்வுலகில் கொலை செய்வோராய், கொலை செய்யத் தூண்டுதலாய் இருப்போராய், திருடராய், பொய்யராய், வஞ்சிப்பவராய், ஏமாற்றுக்காரராய் தவறான காமச் செயல்களில் ஈடுபடு வோராய் இருப்பவர்களே தீயர்கள்! இறைச்சியை உண்பவர்கள் அன்று.<br /><br />இவ்வுலகில் சினம் மிகுந்தோராய், தற்பெருமை, தற்புகழ்ச்சி, பொறாமை, தீய நெறிகளில் நிலைப்போராய் இருப்பவர்களே தீயர்கள். இறைச்சியை உண்பவர்கள் அன்று.<br /><br />எவரொருவர் மீனையும், இறைச் சியையும் உண்பவராய் இருந்தும், நல் லோராய், பற்றுக்களைக் கடந்தோராய், நேரிய வழியில் மகிழ்வோராய், வெல்லப்பட்ட புலன்களை உடைய வராய், பேராசை, வஞ்சகம், தற்புகழ்ச்சி அற்றோராய், கருணை உள்ளவராய், இறப்பிற்குப் பின்னும் நற்பெயர் பெறு வோராய், நன்னெறியில் நிலைப் போராய் இருப்பவர்கள் தீயோராக கருதப்படுவதில்லை.<br /><br />எவரொருவர் பற்றுகள் நிறைந் தவராய், பேராசை பிடித்தவராய், ஏமாற் றுக்காரராய், வஞ்சகம் செய்வோராய், குற்றச் செயல்களில் தொடர்புடை யோராய், புலன்களை வெல்ல முடி யாதவராய், தீய ஒழுக்கமுடையோராய், நம்பிக்கைத் துரோகம் புரிபவராய், கருணை அற்றவராய், இறப்பிற்குப் பின்னும் தீய பெயர் பெறுவோராய்,<br /><br />தீய நெறியில் நிலைப் போராய் இருந்து, சாம்பல் பூசியவராய், சடைமுடி வளர்ப் பவராய், பருவத்திற்கேற்ப பூஜைகள், யாகங்கள் செய்வோராய், எல்லாவித சடங்குகளையும் செய்பவராய் இருப் பவர், மீனையும் இறைச்சியையும் தவிர்ப்பவராய் இருப்பதினால் நல் லோராக கருதப்படுவது இல்லை.<br /><br />மீனையும், இறைச்சியையும் உண் ணாது தவிர்த்தலும், நிர்வாணமாய் இருத்தலும், குடுமி வைத்தலும், மழித் தலும், உரோம உடை உடுத்தலும், யாகத் தீ வளர்த்தலும் போன்ற இவை யெல்லாம் பேரின்ப ஞானம் பெற போதிய வழிமுறைகள் அன்று. தன்னை வருத்தலும், யாகத்தீயில் தானப் பொருள்களை இழத்தலும், சடங்குகளும், குற்றம் உடைய மனிதனைத் தூய்மைப் படுத்தி விடாது.<br /><br />’தீமைகளை உருவாக்குவது தீயசெயல் களே அன்றி மீனையோ இறைச் சியையோ உண்பதனால் அன்று’<br /><br />உங்கள் புலன்களை அடக்குங்கள்! உண்மையைக் கடைப்பிடியுங்கள்! உங்கள் சக்திகளை நீங்களே ஆளும் திறன் பெறுங்கள்! இரக்கத்தோடு இருங்கள்! அனைத்துக் கட்டுக்களையும் விட்டொழித்து தீமைகளை வென்ற துறவிதான் கண்டவற்றாலும் கேட்ட வற்றாலும் களங்கப்படுவது இல்லை.<br /><br />புனிதர் புத்தரின் போதனைகளி லிருந்த சத்தியத்தை உணர்ந்த துறவி ஆமகந்தர், அங்கேயே அப்போதே தன்னையும் தன் சீடர்களையும் நன் னெறியாம் தம்மநெறிக்கு ஒப்புக் கொடுக்க புனிதர் புத்தரைப் பின்பற்றுவோர் களாகத் தம்மை ஏற்கும்படி வேண்டிப் பணிந்தார்.<br />இவ்வாறு புத்தர் கூறினார்.<br /><br />(அண்ணல் அம்பேத்கர் எழுதிய நூலின் மொழி பெயர்ப்பு)<br /><br />மொழியாக்கம்: திருமகள்<br /><br />Read more: http://viduthalai.in/page3/96587.html#ixzz3SP1Cvdv4<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-46445325775305101102015-02-21T23:11:48.851+05:302015-02-21T23:11:48.851+05:30வாத்தியாரே தீர்ப்பை மாற்று!
மனைவியின் விருப்பமின்...வாத்தியாரே தீர்ப்பை மாற்று!<br /><br />மனைவியின் விருப்பமின்றி கணவன் வற்புறுத்தி உறவுகொள்வது பாலியல் வன்முறைக் குற்றமாக்கப்பட வேண்டும் என்று கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் தனிப்பட்ட பிரச்சி னையை பொதுப்பிரச்சினையாகக் கருத முடியாது என்று நிராகரித்துவிட்டது.<br /><br />டில்லியில் அலுவலராகப் பணி புரியும் ஒரு பெண் தன்னுடைய கணவ னால் தொடர்ச்சியாக பாலியல் வன் முறைக்கு ஆளாகி உள்ளார். அப்படி தன்னுடைய விருப்பத்துக்குமாறாக இருந்துள்ள கணவனின் செயலை குற்ற மாக்கிட வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.<br /><br />அப்பெண்ணின் வழக்கில் சட்டத்தின் பார்வையில் கணவன் மனைவியிடம் நடந்துகொள்ளும் பாலியல் உறவு என்பதை குற்றமாகக் கருத இடம் இல்லை என்றும், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 375இன்படி, மணமான இணையருக்குள் பாலியல் உறவு என்பதில் அவர்களுக்குள் ஒப்புத லின்றியே இருந்தாலும், மனைவியின் வயது 15வயதுக்குள் இல்லாமல், மனைவியின் ஒப்புதலின்றி அவள் கணவன் உறவு கொண்டால் அது பாலியல் வன்முறை ஆகாது என்று கூறப்பட்டுள்ளது.<br /><br />2012ஆம் ஆண்டு டில்லியில் பாலியல் வன்முறை வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அமைக்கப் பட்ட நீதிபதி வர்மா தலைமையிலான குழு அறிக்கையில், மணமான பின்னர் விருப்பமின்றி உறவு கொள்வதைக் குற்றமாகக் கருதவேண்டுமா?<br /><br />என்ப தைக் கவனத்தில் கொள்ளும்போது, விருப்பமின்றி கணவன் மனைவி யிடையே ஏற்படக்கூடிய உறவைக் குற்றமாகக் கருதினால், அது திருமணம் என்பதற்கான முறையையே அழித்து விடும் ஆற்றல் உள்ளதாக ஆகிவிடும் என்று இந்திய அரசு கருதுகிறது. குடும்ப முறையே முழுமையாக பெரிய அழுத் தத்துக்கு உள்ளாகிவிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.<br /><br />குடும்ப முறையை சீர்குலைத்துவிடும் என்பதால் திருமணத்துக்குப்பின்னர் கணவன் மனைவியிடையே விருப்ப மின்றி உறவு கொள்வதைக் குற்றமாகக் கருத முடியாது என்று இப்பிரச் சினைகுறித்து விவாதிக்க அமைக்கப் பட்ட நாடாளுமன்ற குழு கூறிவிட்டது.<br /><br />அதேநேரத்தில், சட்டப்படி பிரிந்து இருக்கும்போது கணவன் மனைவியி டையே பாலியல் தொல்லைகள் நிகழும்போது, அதைக் கடுமையானக் குற்றமாகக் கருதவேண்டும். என்றும் நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை கூறியிருந்தது.<br /><br />வழக்கு தொடுத்த பெண்ணின் வழக்குரைஞர் கோலின் கோன்சால்வ்ஸ் கூறுகையில், இப்போதைக்கு வழக்குக் கான மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறோம். ஆனாலும், பெண் களுக்கான அமைப்புவாயிலாக மீண்டும் நீதிமன்றத்தை நாடுவோம் என்றார்.<br /><br />Read more: http://viduthalai.in/page3/96588.html#ixzz3SP15gTcq<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-87909328904854509382015-02-21T23:10:17.248+05:302015-02-21T23:10:17.248+05:30ஜா(பா)தகம்
வீரன்வயல் வீ. உதயக்குமரன்
உங்க பொண்ணு...ஜா(பா)தகம்<br /><br />வீரன்வயல் வீ. உதயக்குமரன்<br /><br />உங்க பொண்ணு எங்களுக்கு பிடிச்சி போச்சி.. உங்க எல்லோருக்கும் என் பையனையும் பிடிச்சி போச்சி.. ஆனா ரெண்டு பேரோட சாதகமும் பொருந்த லேன்னு சொல்றது சரியா படலே சம்மந்தி உடைந்த குரலில் சொன்னார் சிவ சங்கரன்.<br /><br />கள்ளிமேட்டு சோசியன் கணிப்பு தப்பாது. கல்யாணம் நடந்தா ஆறே மாசத்துல என் பொண்ணு முண்டச்சி ஆயிடுவா<br />அழுத்தமாய் வாதித்தார் பெண்ணின் தந்தை நாச்சிமுத்து.<br /><br />”சரி வேற சோசியரை பார்ப்போம். அவனும் இதையே சொன்னா... இந்த கல்யாணம் வேண்டாம்”<br /><br />”சம்மந்தியும் விடறதா இல்ல. சரி உங்க திருப்திக்காக வேற ஜோசியனையும் பாக்கலாமே நான் சோதிடம், ஆன்மீகம் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லாதவன் இதெல்லாம் சுத்த பேத்தல்னு நிரூபிக்கதான் நான் வேற சோசியனை பாக்கலாம்னு சொல்றேன்”<br /><br />சம்மந்திகள் இருவரும் கொத்தமங்கலம் கோபாலிடம் சாதகங்களை நீட்டி னார்கள். கோபால் தனது காவி பற்கள் வெளியே தெரிய சிரித்தார்.<br /><br />”இந்த கல்யாணம் நடக்கும்.. ஆனா உடனே நடக்காது.. ஆறு வருஷம் பொறுத்திருக்கணும்”<br /><br />”என்ன சோசியரே.. உங்க கிட்ட கல்யாணத்துக்கு பொருத்தம் பாக்க சொன்னா அறுபதாம் கல்யாணத்துக்கு காத்திருக்க சொல்றீங்க”<br /><br />சிவசங்கரன் தனது எரிச்சலை கொட்டித் தீர்த்தார். மேலும் நான்கு சோதிடர்களை பார்த்த பிறகு சிவசங்கரன் ஒரு முடிவுக்கு வந்தார்.<br /><br />”சம்மந்தி எவனாவது ஒரே மாதிரி சொன்னானா.. நாலு பேரும் நாலு விதமா சொல்றான். இப்ப வாங்க.. நாம முதல்ல பாத்த கள்ளி மேட்டு சோசியன் கிட்ட போகலாம் ம் அவர்தான் கரெக்டான ஆள்”<br /><br />ம்.. இந்த சாதகத்துக்கு ரெண்டு பேர்க்கும் போன வருஷமே கல்யாணம் நடந்திருக்கணுமே கள்ளி மேட்டு சோதிடர் தனது கணிப்பை சொன்னதும் பொங்கி எழுந்தார் நாச்சிமுத்து.<br /><br />”படவா ராஸ்கல் உன் பேச்சை கேட்டு ஒருவருஷம் வீணாப் போச்சிடா.. போன வருஷம் ஒரு பேச்சு இந்த வருஷம் ஒரு பேச்சு இதான் சாதகமா.. வாங்க சம்மந்தி நாமளே நாள் குறிக்கலாம்”<br /><br />Read more: http://viduthalai.in/page3/96584.html#ixzz3SP0hKKoH<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-70505296182039240842015-02-21T23:08:03.200+05:302015-02-21T23:08:03.200+05:30பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்
வைரம் ஜொலிக்க வேண்...பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள்<br /><br />வைரம் ஜொலிக்க வேண்டுமானால், சாணை பிடிக்கத்தான் வேண்டும். தங்கம் பிரகாசிக்க வேண்டுமானால் தணலில் காய்ச்சத்தான் வேண்டும். ஆம் அதைப்போல், நல்வாழ்வு பெற வேண்டுமானால் நாம் பகுத்தறிவுப் பாதையில் செல்லத்தான் வேண்டும்.<br /><br />நமது இலட்சியம் அரசியல் வேட்டையல்ல, மந்திரி நாற்காலியல்ல. நாலாறு பெறுவதல்ல. நமது மூதாதையர் ஆண்ட நாட்டை மீண்டும் பெறுவது - புதிய அரசை அமைப்பது, அதுதான் நம்முடைய நோக்கம்.<br /><br />Read more: http://viduthalai.in/page2/96579.html#ixzz3SP08tthy<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-78882650756704403272015-02-21T22:59:02.833+05:302015-02-21T22:59:02.833+05:30மனித சமுதாயத்தில்...
நாம் உண்மையான பகுத்தறிவுவாத...மனித சமுதாயத்தில்...<br /><br /><br />நாம் உண்மையான பகுத்தறிவுவாதிகளாக ஆகிவிடுவோமேயானால், நம் மனிதத் தன்மை வளர்ச்சி மட்டுமல்ல, சமுதாய வளர்ச்சியும் ஏற்பட்டுவிடும்; மனித சமுதாயத்தில் ஒழுக்கமும், நாணயமும் ஏற்படும். (விடுதலை, 16.11.1971)<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/96607.html#ixzz3SOxr26SJ<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-71875964650148282202015-02-21T22:58:01.000+05:302015-02-21T22:58:01.000+05:30இன்றைய ஆன்மிகம்?
சமஸ்கிருதம்
கடவுள் சபலங்களுக் க...இன்றைய ஆன்மிகம்?<br /><br />சமஸ்கிருதம்<br /><br />கடவுள் சபலங்களுக் கும், சடங்குகளுக்கும் அப்பாற்பட்டவர் என் றால் கோயிலில் சமஸ் கிருதத்தில்தான் அர்ச் சனை செய்யப்பட வேண்டும். குட முழுக்கு சமஸ்கிருதத்தில்தான் நடைபெற வேண்டும் என்பது கடவுளைக் கேலி செய்வது ஆகாதா? ஆகமம் என்றாலும் அவாளுக்குத்தான் சாதகமா?<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/96619.html#ixzz3SOxcOCal<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-11466757931779411752015-02-21T22:57:37.715+05:302015-02-21T22:57:37.715+05:30இதுதான் மகா சிவராத்திரி நிர்வாண சாமியார்களின் ஆபாச...இதுதான் மகா சிவராத்திரி நிர்வாண சாமியார்களின் ஆபாசம்!<br /><br /><br />ஜூனாகாத், பிப்.21_ குஜராத்தின் ஜூனாகத் பாவ்நாத் கோவிலில் ஆயிரக்கணக்கான நிர்வாண சாமியார்களின் அமர்க்களமான ஆட்டம் பாட்டம் ஊர்வலத்துடன் மகாசிவராத்திரி வழிபாடு நடைபெற்றது. குஜராத் மாநிலம் ஜூனாகாத்தின் கிர்னார் மலைப் பகுதியை சிவனின் முகமாக கருதி இந்துக்கள் வழிபாடு நடத்துகின்றனர். 10 ஆயிரம் படிக்கட்டுகளைக் கடந்து வழிபாடு நடத்து வது இங்கு வழக்கம். இம்மலை அடிவாரத் தில் இந்து மதத்தின் 'தற்கொலைப்படை'யாக செயல்பட்டு வரும் அகோ ரிகள் எனப்படும் நிர் வாண சாதுக்களின் கிளை மடங்கள் ஏராளமாக உள்ளன. பொதுவாக கும்பமேளா காலங்களில் தான் பல்லாயிரக்கணக் கில் நிர்வாண சாதுக்கள் ஒன்று திரண்டு பேரணி நடத்தி ஹரித்துவார், அலகாபாத் உள்ளிட்ட இடங்களில் நீராடி வழி பாடு நடத்துவர். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி நாளில் கிர்னார் மலை அடி வாரத்தில் உள்ள பாவ் நாத் கோயிலில் இந்த நிர்வாண சாதுக்கள் ஒன்று கூடி நீராடி வழி பாடு நடத்துவது வழக்கம். இவர்கள் நீராடுவது மிகச் சிறிய அளவிலான கிணறு போன்ற இடத்தில்தான்.. இந்த கிணற்றில் நிர் வாண சாதுக்களின் எந்தப் பிரிவு முதலில் குளிக் கிறதோ அவர்களுக்கு சிவபெருமானின் அருள் நேரடியாக கிடைத்து விடும் என்பது நம்பிக்கை யாம். இதற்காக நிர்வாண சாதுக்களிடையே பெரும் போட்டி அடிதடியும் நடைபெறும்.<br /><br />இந்த ஆண்டும் பாவ்நாத் சிவ ராத்திரி திருவிழா கடந்த 15-ஆம் தேதி தொடங் கியது. இதையொட்டி நாடு முழுவதும் இருந்து சாம்பல் பூசிய உடம்புடன் நிர்வாண சாமியார்கள் ஆயிரக்கணக்கில் ஜூனா காத் கிர்னார் மலை அடி வாரத்தில் முகாமிட்டிருந் தனர். மலைஅடிவாரத் தில் கொட்டும் பனியிலும் இவர்கள் அனைவரும் நிர்வாணமாகவே விடிய விடிய வலம் வந்து கொண்டிருந்தனர். மகாசிவராத்திரியின் கடைசி நாளில் அதி காலையில் சிறப்பு வழி பாடு நடத்தப்பட்டன. முன்னதாக நிர்வாண சாமியார்களின் பிரம் மாண்ட ஊர்வலம் நடத் தப்பட்டது. நிர்வாண மாகவே ஆடிப் பாடி பலவகை சாகசங்களை நிகழ்த்தியபடி இவர்கள் ஊர்வலமாக வந்தனர். மிரள வைக்கும் சிலம் பாட்டம், கத்திச் சண்டை உள்ளிட்ட இந்த நிர் வாண சாகச நிகழ்ச்சிகள் பல மணிநேரம் நடை பெற்றது. உள்நாடு மற்றும் வெளிநாட்டினர் பல்லாயிரக்கணக்கில் திரண்டு இந்த 'நிர்வாண' சாதுக்களின் சாகசங்களை பார்வையிட்டனர். பின் னர் பாவ்நாத் கோயிலின் புனித கிணற்றில் போட்டி போட்டுக் கொண்டு நிர் வாண சாதுக்கள் புனித நீராடி வழிபாடு நடத்தின ராம். இந்தத் திருவிழா வையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/96621.html#ixzz3SOxUzuV6<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-78966532758253731922015-02-21T22:57:07.648+05:302015-02-21T22:57:07.648+05:30வன்முறைக்கும், பயங்கரவாதத்திற்கும் காரணம்
மத அடையா...வன்முறைக்கும், பயங்கரவாதத்திற்கும் காரணம்<br />மத அடையாளங்களைச் சுமப்பவர்களே!<br /><br />அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்து<br /><br />நியூயார்க் பிப் 21_ மத அடையாளத்தைச் சுமக்கும் சிலரே வன் முறைக்கும், பயங்கரவாதத் துக்கும் காரணமானவர் களாவர் மதத்தின் பெயரைக் கூறிக்கொண்டு மனித நேயமற்ற செயல் களைப் புரிபவர்கள் மீதான நடவடிக்கை எடுக் கும் கட்டாயத்தில் உலக நாடுகள் ஒன்று சேர வேண்டும் என்று பராக் ஒபாமா கூறியுள்ளார்.<br /><br />அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் புதன்கிழமை நடந்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கான உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெ ரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரேசில், ருஷ்யா, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் உட்பட 63 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மூன்று நாட்கள் நடக் கும் இந்த மாநாட்டில் அதிபர் பராக் ஒபாமா பேசியதாவது: உலகில் அதிகரித்து வரும் தீவிர வாதத்திற்கு எதிரான நடவடிக்கை எடுக்க நாம் இங்கு கூடியுள்ளோம். ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு (இஸ்லாம்) எதிராக நட வடிக்கை அல்ல, இதை பல முறை தெளிவுபடுத்தி யுள்ளோம். எந்த ஒரு மதமும் மனிதர்களைக் கொல்வதை வலியுறுத்த வில்லை, மனித நேயத் தைத்தான் வலியுறுத்து கிறது. ஆனால் சிலர் மதத்தின் பெயரால் மக் களை துன்புறுத்துகின்ற னர். கொலை செய்கின்ற னர்.<br /><br />அடிமைகளாக வாழ்நாள் முழுவதும் வைத்திருக்கின்றனர். ஆகையால் நமது நட வடிக்கை மதத்தின் மரபு களைத் திரித்து மனித நேயத்திற்கு எதிரான நட வடிக்கையில் இறங்குபவர் களை ஒடுக்குவதாக இருக்கும். சில தீவிரவாத இயக் கங்கள் மதரீதியில் ஆன சமூகத்தை உருவாக்கு கிறோம் என்று கூறிக் கொண்டு அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் மதங்களுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கு கின்றன என பிரச்சாரம் செய்கிறார்கள். இளைஞர் களை இவர்கள் மூளைச் சலவை செய்கிறார்கள். இவர்களின் பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும். மதம் சார்ந்த பெரியவர்கள் இளைஞர் களை நல்வழியில் திருப்ப வேண்டும். காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் மனித நாகரிகம் வளர்ச்சி என்பது நீண்ட கால வரலாற்றை உடை யது, ஒவ்வொரு கால கட்டதிலும் புதிய பரிணா மத்தை உள்ளடக்கியது. ஆனால் மதங்கள் இந்த நவீன நாகரிக வளர்ச் சியை ஏற்றுக்கொள்வ தில்லை. அவர்கள் அனை வரும் நவீன வளர்ச்சிகள் எல்லாம் மதக் கோட் பாடுகளுக்கு எதிரானவை என்று கூறிக்கொண்டு வருகின்றனர். அறிவியல் வளர்ச்சியின் மூலம் கண்டுபிடித்த சாதனங்கள் மூலமாக அவர்கள் அறி வியல் வளர்ச்சி முட்டாள் தனமானது என்று பேசி வருகின்றனர். அவர்கள் முன் வைக்கும் எந்த ஒரு வாதத்தையும் நாம் ஏற்றுக் கொள்ளக்கூடாது. ஏனெ னில் அவர்கள் சொல்வது பொய். அவர்கள் எதிர் பார்க்கும் அங்கீகாரத்தை ஒருபோதும் நாம் அளித்துவிடக் கூடாது. அவர்கள் மதங்களைச் சார்ந்தவர்கள் அல்லர் அவர்கள் முழுக்க முழுக்க மனித சமூகத்திற்கு எதிரான செயல் களைச் செய்பவர்கள் தீவிரவாதச் செயல்களைச் செய்ப வர்கள் ஒரு மதத்தின் பின் னால் ஒளிந்து கொள் கின்றனர். தீவிரவாதிகளின் சித்தாந்தத்தை உலகம் முழுதும் உள்ள மக்கள் நிராகரித்துள்ளனர். இஸ்லாமியர்களுக்காக குரல் கொடுக்கிறோம் என்று சில தீவிரவாதக் குழுக்கள் கூறுவதை ஏற்றுகொள்வது தவறான பார்வையாகும். அவர்கள் இஸ்லாத்தை எந்த வகை யிலும் பிரதிநிதித்துவம் செய்யவில்லை.<br /><br />அவர்கள் கடவுளின் பெயரால் அப்பாவிகளைக் கொலை செய்யும் பைத் தியக்காரர்களே. கடவு ளின் பெயரால் அப்பாவி களைக் கொல்பவர்கள் இந்துக்களானாலும் சரி, கிறிஸ்தவர்கள் ஆனாலும் சரி, யூதர்கள், புத்தமதத் தவர்கள் என எந்த மதத் தைச் சேர்ந்தவராகவும் இருக்க முடியாது. பயங்கர வாதத்துக்கு எந்த ஒரு மதமும் பொறுப்பல்ல. ஆனால், மத அடையா ளத்தைச் சுமக்கும் சிலரே வன்முறைக்கும், பயங்கர வாதத்துக்கும் காரண மானவர்களாவர்.<br /><br />தீவிரவாதத்தால் சிரியா, ஈராக்கை அய். எஸ்.அய்.எஸ். சீர் குலைத்து வருகிறது. அப்பாவி மக்கள் தலை துண்டிக்கப்பட்டு, உயிரு டன் எரித்துக் கொல்லப் படுகின்றனர். இது மன் னிக்க முடியாத கொடூரம். அதே நேரத்தில் மதத்தின் பெயரால் ஒரு சாராரை அடிமைப்படுத்தும் செயலும் நீண்ட காலமாக நடந்து வருகிறது. மதத்தின் பெயரால் மனித நேயத்திற்கு எதி ரான போக்கை மதத்தின் பெயரைக்கொண்டு செய்பவர்களை மன்னிக்க முடியாது. இவர்களின் தீவிரவாதச் செயல்களுக் குக் கூடுதல் கண்காணிப்பு தேவைப்படுகிறது. ஆனால், பயங்கரவாதத் துக்கு எதிரான இந்தப் போரில் வெற்றி பெறு வோம் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது. உலக நாடுகளின் ஒத் துழைப்பு இந்த நம்பிக் கையை மேலும் பலப் படுத்தியுள்ளது என்றார் அவர்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/96617.html#ixzz3SOxNNe4t<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-28089920691009909092015-02-21T22:56:24.316+05:302015-02-21T22:56:24.316+05:30ஜாதி கணக்கெடுப்பில் உள்நோக்கமில்லை
முதல்வர் சித்தர...ஜாதி கணக்கெடுப்பில் உள்நோக்கமில்லை<br />முதல்வர் சித்தராமையா<br /><br />பெங்களூரு, பிப்.21 ''பொது நியாயப்படி, அனைவருக்கும் கிடைக்க வேண்டிய சலுகைகள், கிடைக்க வேண்டுமென்ற ஒரே நோக்கத்தில், ஜாதி கணக்கெடுப்பு நடத்தப்படு கிறது. இதில், எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை, என்று, முதல்வர் சித்தராமையா கூறினார்.<br /><br />மைசூரு மண்ட ஹள்ளி விமான நிலையத் தில், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பொது நியாயப்படி, அனைவருக்கும் கிடைக்க வேண்டிய சலுகைகள், கிடைக்க வேண்டுமென்ற ஒரே நோக்கத்தில், ஜாதி கணக்கெடுப்பு நடத்தப்படு கிறது. இதில், எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. அனைவருக்கும் சமமான சலுகையை வழங்கு வதன் மூலம், சமூக அபிவிருத்தியை, முன்னோக்கி கொண்டு செல்ல நடவடிக்கை மேற் கொள்ளப் பட்டுள்ளது. ஆனால், இதை பற்றி சிலர், தேவையின்றி குற்றம் சாட்டி வருகின் றனர்; இதற்கு, அரசு பணி யாது. சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு, கூடுதல் முக்கியத்துவம் தரப்படும். மத்திய அரசு, இது போன்ற திட்டங்களை குறைத்து கொள்வது சரியல்ல. இவ்வாறு அவர் கூறினார்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/96615.html#ixzz3SOxChszH<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-56266803872688967422015-02-20T20:22:07.141+05:302015-02-20T20:22:07.141+05:30அண்ணா சொன்ன கடவுளர் கதைகள்
ஆண்டவன் ரகசியம்
ஆதி க...அண்ணா சொன்ன கடவுளர் கதைகள்<br /><br />ஆண்டவன் ரகசியம்<br /><br />ஆதி காலத்தில் மனிதன் ஓயாத அலைகளைப் பார்த்தான். அதன் சீற்றத்தால் நாடு அழிவதைக் கண்டான்; கடும்புயல் வீசி பெருமரங்கள் சாய்வதைக் கண்டான்; இடி இடித்து அதன் ஓசையால் புற்றுக்குள் இருக்கும் நாகமும், புதரில் மறைந்து இருக்கும் புலியும் நடுநடுங்கி ஓடுவதை அவன் பார்த்தான்.<br /><br />ஏன் இவை ஏற்படுகின்றன என்று அவனுக்குப் புரியவில்லை. இது விளங்காத காரணத்தால் அவனுக்கு அச்சம் ஏற்பட்டது. ஏன் என்று புரியாது அச்சத்துடன் நின்ற அந்த மனிதனின் முன்னே ஒரு எத்தன் நின்றான். அவை என்ன தெரியுமா? அதுதான் ஆண்டவன் செயல் என்று அந்த எத்தன் கூறினான்.<br /><br />அந்த ஆதி மனிதன் முன்னே நின்ற எத்தன்தான் உலகிலேயே முதலில் தோன்றிய பார்ப்பனன் அல்லது புரோகிதன். அச்சத்திலே ஏற்பட்டதுதான் ஆண்டவன் தத்துவம்.<br /><br />முக்தி பெற்ற பார்ப்பான்!<br /><br />மதுரை சோமநாதப் பெருமானின் ஒரு பார்ப்பன பக்தன் காமுகப்பட்டு, கருத்திழந்து தொட்டிலிலே வளர்த்தவளை கட்டிலுக்கிழுத்தான்- பெண்டாடினான். நடக்க கூடாத செயல்! ஆனால் நடந்திருக்கிறது.<br /><br />தாய் அவனைப் பார்த்து பாவி அன்னையையா இந்த அக்கிரமம் செய்தாய் என்று கேட்க அவன் அப்பன் ஒருவன் இருப்பதால் அல்லவோ நீ எனக்கு அன்னையானாய் அவன் இல்லாவிட்டால்...! ஒரு பெண்தானே, என எண்ணி அவனை வெட்டி வீழ்த்தினான்.<br /><br />இரு பாதகம் செய்த அவன் மருட்சி கொண்டு மதுரைக்கு வந்து ஆலவாய் அப்பனிடம் அடைக்கலம் புகுந்தான் அலறினான். அப்போது சோம பெருமானும் மீனாட்சி அம்மையும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருக்க, அவன் குரல் கேட்ட பெருமான் ஆட்டத்தை நிறுத்த, உடனே அம்மை பார்த்து ஏன் ஆடவில்லை என்று கேட்க அய்யன்,<br /><br />அன்னையை பெண்டாடிய அடியாரின் கருத்தை விளக்க, அந்த மாபாவிக்கா அருள்புரிவது என்று மீனாட்சி சிணுங்க உமையவளே, உற்றுக் கேள் எத்தகைய மகா பாதகம் என்றாலும் பிராமணன் என்றால் அருள்புரியத் தான் வேண்டும் என்று கூறினாராம். பிறகு அவன் முக்தி (மோட்சம்) பெற்றானாம்.<br /><br />அக்கினியின் ஆசை!<br /><br />ஒரு காலத்தில் சப்தரிஷிகள் யாகம் செய்தனராம். அந்த யாகத்திற்கு அவிர்ப்பாகம் வாங்கச் சென்ற அக்கினி பகவான் அந்த ஏழு ரிஷி பத்தினிகள் மீதும் காமமுற்றா னாம். இதனை வெட்கத்தை விட்டு தன் மனைவியிடம் சொன்னானாம்.<br /><br />ஆண்டவனான அக்கினி பகவான் தன் மனைவியிடம் அதற்கு ஏற்பாடுகளையும் செய்யச் சொன்னானாம். அவன் மனைவியும் சப்தரிஷிகளில் ஆறு பேர்களின் மனைவியைப் போல உருவெடுத்து தன் கணவனின் காமத்தைத் தணித்தாளாம்.<br /><br />ஆனால் ஏழாவது முனிவரின் மனைவியான அருந்ததியைப் போல மட்டும் உருவெடுக்க முடியவில்லையாம் அதற்குக் காரணம் அருந்ததி ஒரு ஆதி திராவிடப் பெண்ணாம்.<br />ஆதாரம்: பேரறிஞர் அண்ணா சொன்ன குட்டிக் கதைகள் 100 என்ற நூல்<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/96560.html#ixzz3SITopAdp<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-18464838967572369272015-02-20T20:20:50.210+05:302015-02-20T20:20:50.210+05:30கோபுரத்தை தாங்கும் காக்கைகள்!
இங்கு மட்டும்தான் ம...கோபுரத்தை தாங்கும் காக்கைகள்!<br /><br />இங்கு மட்டும்தான் மூட நம்பிக்கைகள் இருக்கின்றன என்று யாரும் நினைக்கவேண்டாம். ஆனால் நம் நாட்டில் மூடநம்பிக்கைகள் கொஞ்சம் அதிகம்.<br /><br />லண்டனின் லண்டன் டவர் என்ற பிரசித்திபெற்ற கோட்டைக் கோபுரங்களில் பல காக்கைகள் வாழுகின்றன. அந்த காக்கைகளையும் அரண்மனை பணியாளர்கள் கணக்கில் சேர்த்து, அரசாங்க செலவில் அவற்றை பராமரிக்கிறார்கள்.<br /><br />இதற்கு காரணம் என்? அந்தக் காக்கைகள் அகன்று விட்டால் லண்டன் டவர் கட்டடம் இடிந்து விழுந்து விடும் என்று நினைக்கிறார்கள். என்னே மூட நம்பிக்கை!<br /><br />தகவல்: நாங்கூர் எஸ்.பாஸ்கரன் எம்.ஏ.,<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/96555.html#ixzz3SITVzY67<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-4331122440884313072015-02-20T20:20:19.944+05:302015-02-20T20:20:19.944+05:30ரஷ்யாவில் விஷ்ணுவின் மகன் விநாயகன்
ரஷ்யாவில் உள்ள...ரஷ்யாவில் விஷ்ணுவின் மகன் விநாயகன்<br /><br />ரஷ்யாவில் உள்ள லெனின் கிராட் நகரில் உள்ள வினோதங்களில் ஒன்று அங்கு அமைந்திருக்கும் நாத்திகர்கள் காட்சி சாலை. உலகத்தில் உள்ள அனைத்து மதங்கள், கடவுள்கள் பற்றிய விளக்கக் குறிப்புகளும், கடவுள் உருவச் சின்னங்களும் அங்கு வைக் கப்பட்டுள்ளன.<br /><br />மதங்களாலும், கடவுள்களாலும் அல்லது இவை பற்றிய நம்பிக்கையால் மக்களுக்கு ஒருவித பயனும் இல்லை என்பதை விளக்குவதே அந்த கண்காட்சியின் நோக்கம்.<br /><br />அங்கு ஓரிடத்தில் விநாயகர் சிலைக்குக் கீழே விநாயகர் விஷ்ணுவின் மகன் என்ற குறிப்பு இருக்கிறது.<br /><br />அந்தக் கண்காட்சியில் கடவுள், மதம் காரணமாக மனித குலத்துக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள், அநீதிகள் பற்றிய விளக்கங்கள் காணப்படுகின்றன.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/96555.html#ixzz3SITO14B2<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-73241194490957942952015-02-20T20:16:13.928+05:302015-02-20T20:16:13.928+05:30கற்றுக் கொள்ள வேண்டியது
இதுவரை எந்தப் பார்ப்பனரா...கற்றுக் கொள்ள வேண்டியது<br /><br /><br />இதுவரை எந்தப் பார்ப்பனராவது பார்ப்பனரல்லாத கட்சிக்கு அனுகூலமாய்ப் பிரச்சாரம் செய்ய வந்திருக்கிறாரா? என்றால் ஒருவர்கூட இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். பார்ப்பனருக்கு வேறு எவ்வளவு கெட்ட குணம் இருந்தாலும், தங்கள் வகுப்பு விசயத்தில் எல்லாரும் ஒன்று சேருவது அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விசயம்.<br />(குடிஅரசு, 7.11.1926)<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/96550.html#ixzz3SISLaB4F<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-69122451231871202222015-02-20T20:14:45.172+05:302015-02-20T20:14:45.172+05:30பகுத்தறிவுத் திரைப்படத்தை முடக்குவதா?
பிரபுவிண்...பகுத்தறிவுத் திரைப்படத்தை முடக்குவதா?<br /> <br /><br />பிரபுவிண்டே மக்கள் எனும் மலையாளப்படத்தில் பகுத்தறிவுக் கருத்துகள் உள்ளன.<br /><br />மதங்களுக்கு எதிரான கருத்துகளை உள்ளடக்கி உள்ளதால் இணையத்தில் அந்த படம் தடை செய்யப்பட்டுள்ளது.<br /><br />படத்தின் இயக்குநர் சஞ்ஜீவன் அந்திகாட் கூறும்போது, இந்தப்படத்தை 1.25 இலட்சம் பேர் பார்த்துள்ளனர். பகுத்தறிவு மற்றும் மதசார்பற்ற குழுவினராகிய கேரளா சுதந்திர சிந்தனையாளர்களின் அமைப்பால் கடந்த ஜனவரி 8ஆம் நாளன்று யூ டியூப்பில் இந்தப் படம் பதிவேற்றம் செய்யப்பட்டது.<br /><br />இந்த அமைப்பின்மூலம் ஏற்கெனவே பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த பிற வீடியோப் பதிவுகள் மதவெறி மற்றும் மூடநம்பிக்கைள், பகுத்தறிவு வாதங்கள் ஆகி யவைகளைக் கொண்டுள்ள வீடியோப் பதிவுகளும் தடை செய்யப்பட்டுள்ளன என்று கூறினார். யூ டியூப்பிலிருந்து கேரளா சுதந்திர சிந்தனை யாளர்கள் அமைப்புக்கு உள்ள கணக்கு முடக்கப் பட்டதாக தகவல் வந்துள்ளது.<br /><br />உரிய முறையில் பொருத்தம் இல்லாமல் பதிவுகள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட தகவலையடுத்து யூ டியூப் நிர்வாகம் அவைகளை தடை செய்து உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு பதிவையும் எவரேனும் நீக்க வேண்டும் என்று குறிப்பிட்டுவிட்டால், யூ டியூப் நிர்வாகத்தின் சார்பில் உள்ள குழுவினர் அதை ஆய்வு செய்வார்கள். அதன்படி, யூ டியூப் அளித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மீறிய வகையில் அப்பதிவுகள் இருந்துள்ளன. ஆகவே, அவை நீக்கப்பட்டன. பிரபுவிண்டே மக்கள் (மலை யாளம்) முழு படமும் அதன்படியே நீக்கப்பட்டுள்ளது என்று யூ டியூப் அளித்துள்ள தகவலில் தெரிவிக்கப் பட்டுள்ளது.<br /><br />படத்தின் இயக்குநர் இணையத்தில் வெளியிட்ட மூன்று வாரங்களுக்குள் அப்படம் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. வகுப்புவாத சக்திகள் அப்படத்தை நீக்குவதற்காகப் பணிபுரிந்துள்ளனர்.<br /><br />இயக்குநர் சஞ்ஜீவன் அந்திகாட் மேலும் கூறும் போது, மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின்மூலம் தணிக்கை சான்று அளிக்கப்பட்ட படமாகும். அப்படி இருக்கும்போது, பொருத்தமில்லாதவை எப்படி அதில் இடம் பெற முடியும்? மதங்களால் ஏற்படும் தீமைகளை அந்தப்படம் வெளிப்படுத்தி உள்ளது. ஆகவே, மதவாத சக்திகளாக இணையத்தில் மறைந்துள்ளவர்களால் அதன் சிறகுகள் வெட்டப்பட்டுள்ளன.<br /><br />சமூக வலைத்தளங்களில் கேரளா சுதந்திர சிந்தனையாளர்களுக்கான அமைப்பு பதிவேற்றிய பக்கங்கள் இதுவரையிலும் ஆறு முறை இதுபோன்று தடுக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.<br /><br />பி.கே. என்ற இந்தி படம் வட மாநிலங்களில் சங்பரிவார்க் கும்பலால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. பல திரையரங்குகள் தாக்கப்பட்டன. அதன் விளைவு பொது மக்கள் மத்தியிலே பெரும் ஆதரவைப் பெற்றது. 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை வாரிக் குவித்தது. இந்தக் கால கட்டத்தில் பிரபு விண்டே மக்கள் எனும் மலையாளப் படத்தினை இணையத்தில் முடக்கு வதேன்? அதுவும் தணிக்கைத் துறையால் அனுமதிக்கப் பட்ட ஒரு திரைப்படத்தை முடக்குவது எந்த வகையில் சரியானதாக இருக்க முடியும்?<br /><br />மக்களிடத்தில் விஞ்ஞான மனப்பான்மையையும் சீர்திருத்த உணர்வையும் வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறும் நிலையில் இது போன்ற திரைப்படங்களை முடக்குவது கண்டிக்கத் தக்கது - சட்ட விரோதமானதும்கூட மக்கள் மத்தியில் இந்தப் பிரச்சினையைக் கொண்டு செல்லுவது கேரள சமூக சீர்திருத்தவாதிகளின் முக்கிய கடமையாகும்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/96552.html#ixzz3SIRvUEZ7<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-28548112852746196012015-02-20T20:12:50.153+05:302015-02-20T20:12:50.153+05:30இன்றைய ஆன்மிகம்?
சாதனையா?
பகவான்தான் தலை எழுத்தை...இன்றைய ஆன்மிகம்?<br /><br />சாதனையா?<br /><br />பகவான்தான் தலை எழுத்தை எழுதுகிறான் என்றால் மக்களின் சராசரி வயது முன்பை விட இப்பொழுது உயர்ந் துள்ளதே - இது கடவுள் சக்தியா? அறிவியல் மருத்துவத்தின் சாதனையா?<br /><br /> <br /><br />Read more: http://viduthalai.in/e-paper/96572.html#ixzz3SIRTif7W<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-53072967554643848462015-02-20T20:12:10.546+05:302015-02-20T20:12:10.546+05:30செய்தியும் சிந்தனையும்
அடிமாடு
செய்தி: தொழில் து...செய்தியும் சிந்தனையும்<br /><br />அடிமாடு<br /><br />செய்தி: தொழில் துறை எவ்வளவு வளர்ச்சி அடைந் தாலும் போதாது; விவசாயம் தான் வளர்ச்சி அடைய வேண்டும். - பிரதமர் மோடி<br /><br />சிந்தனை: ஆமாம்; அதற்காகத் தான் விவசாய நிலங்களை கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக அடி மாட்டு விலைக்கு வாங்கப் படுகிறது.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/96569.html#ixzz3SIRKFtrY<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-79114040856133858602015-02-19T17:58:28.294+05:302015-02-19T17:58:28.294+05:30வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?
-புரட்சிக்கவ...வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?<br /><br />-புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்<br /><br />தமிழ் அழிப்பாரின் எண்ணத்துக்கு வலிமை சேர்த்துவிடக் கூடும் என்று கருதினார் புரட்சிக்கவிஞர். தம் கருத்தை வலியுறுத்தி ஆராய்ச்சித் தொடர் ஒன்றினை எழுதினார்; வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா? எனும் கட்டுரைத் தொடர், தமிழ்ப் பகைவர்களுக்குச் சாட்டையடி கொடுத்தது: தமிழ் ஆர்வலர்களுக்கெல்லாம் புது வழி காட்டியது; தெளிவூட்டியது.<br /><br />- சு.மன்னர்மன்னன்<br /><br />காட்சி<br /><br />தமிழ்ச் சொற்களையெல்லாம் வடசொற்கள் என்று ஆக்குவதில் பார்ப்பனர்க்குத் தனி ஆசை. அவ்வாறு செய்வதால் இந்நாட்டுக்கும் அவர்கட்கும் இல்லாத தொடர்பை உண்டு-பண்ணிக் கொள்கிறார்கள். ஆனால் இந்தத் தீய முயற்சியை அறிவுடைய தமிழர்களும், நடுநிலை-யுடைய உலகமும் அறிந்து நகையாடக்கூடுமே யென்பதை அவர்கள் கருதுவதேயில்லை.<br /><br />தூங்கிக் கொண்டிருந்தார்கள் தமிழர்கள். அது அந்த நாள். பார்ப்பனர் அல்லல் புரிந்தார்கள் அளவில்லாமல்.<br /><br />விழித்துக் கொண்டார்கள் தமிழர்கள். இது இந்த நாள். அல்லல் புரியாது அடங்கினார்களா எனில் இல்லை.<br /><br />காட்சி _- தொழிற்பெயர். அதில் காண், முதனிலை, சி_-தொழிற்பெயர், இறுதிநிலை. காண் என்பதின் இறுதியில் உள்ள _ -ண், என்ற மெய்யானது _- சி, என்ற வல்லினம் வந்தால் _- ட் -_ ஆகும் என்பது சட்டம். அதனால்தான் காட்சி என்றாயிற்று. காணல், காண்டல், காட்சி அனைத்தும் ஒரே பொருள் உடையவை. எனவே காட்சி தூய தமிழ்ச் சொல். இதைப் பார்ப்பனர் தம் ஏடுகளில் காக்ஷி என்று போடுவார்கள்.<br /><br />காட்சியைக் காக்ஷி ஆக்குவதில், தமிழ்ச்-சொல்லை வடசொல் ஆக்குவதில் அவர்-கட்குள்ள ஆசை புரிகிறது அல்லவா? இவ்வாறு காக்ஷி என்று பார்ப்பனர்கள் தம் ஏடுகளில் கொட்டை எழுத்துகளில் வெளியிடுவதால் நம்மவர்களும் அதையே பின்பற்றத் தொடங்கி விடுகிறார்கள்.<br /><br />பார்ப்பான் சொன்னது பரமசிவன் சொன்னதல்லவா? அதனால்தான் நாம் பொதுவாக நம்மவர்கட்குச் சொல்லுகிறோம்.<br /><br />தமிழ் தமிழர்க்குத் தாய்! தமிழிற் பிழை செய்வது தாயைக் குறைவுபடுத்துவதாகும். படக் காட்சிக்குரிய அறிவிப்போ, திருமண அழைப்பிதழோ, வாணிக அறிவிப்புப் பலகையோ எழுதும் போது தமிழறிஞர்களைக் கலந்து எழுதுங்கள் என்கிறோம்.<br /><br />இனி இவ்வாறு தமிழ்ச் சொற்களையெல்லாம் பார்ப்பனர் வடசொற்கள் என்று சொல்லிக்-கொண்டு போகட்டுமே, அதனால் தீமை என்று தமிழரிற் சிலர் எண்ணலாம்.<br /><br />அவ்வாறு அவர்கள் இந்நாள் வரைக்கும் விட்டு வைத்ததால் என்ன ஆயிற்று தெரியுமா? வடமொழியினின்றுதான் தமிழ் வந்தது, வடவர் நாகரிகத்திலிருந்துதான் தமிழர் நாகரிகம் தோன்றியது என்றெல்லாம் அவர்கள் சொல்வ-தோடு அல்லாமல், உலகையும் அவ்வாறு நம்பவைக்கவும் முயல்கிறார்கள்.<br /><br />அது மட்டுமா? மேற்சொன்ன காரணங்-களைக் காட்டி, அவர்கள் பிறப்பிலேயே உயர்ந்தவர்கள் என்னும் முடிச்சுமாறித்-தனத்தையும் மெய் என்று நிலைநாட்டி வருகிறார்கள்.<br /><br />இது வட சொல்லன்று; இன்ன காரணத்தால் இது தமிழ்ச் சொல் என்று விளக்கிவர முடிவு செய்துள்ளோம். தமிழர்கள் ஊன்றிப்படிக்க.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-55323482275964641702015-02-19T17:57:55.022+05:302015-02-19T17:57:55.022+05:30மோடி ஏன் மறுக்கவில்லை?
இந்தியாவில் மதச் சிறுபான்ம...மோடி ஏன் மறுக்கவில்லை?<br /><br />இந்தியாவில் மதச் சிறுபான்மையர் மீதான வன்முறைத் தாக்குதல்கள் குறித்துக் குறிப்பிடும் போது, மோடியின் மவுனம் ஆபத்தானது என்று அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் இதழின் தலையங்கம் குறிப்பிட்டுள்ளது.<br /><br />கிறித்தவர்களின் வழிபாட்டிடங்கள்மீதான தாக்குதல்களை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்தியாவில் அனைத்துக் குடிமக்களையும் காப்பாற்ற வேண்டியராக உள்ள பிரதமர் மோடி, எவ்விதக் கருத்தும் தெரிவிக்காமல் உள்ளார்.<br /><br />அதேபோல், கிறித்தவர்கள் மற்றும் இசுலாமியர்கள் அதிக அளவில் கட்டாயப்-படுத்தி அல்லது பணம் கொடுப்பதாக உறுதியளித்து இந்து மதத்துக்கு மாற்றம் செய்யப்படுவது குறித்தும் எந்தக் கருத்தும் வெளியிடாமல் உள்ளார்.<br /><br />மத சகிப்புத்தன்மை இல்லாத நிலை அதிகரித்து இதுபோன்ற தொல்லைகள் இருந்தபோதிலும், மோடி தொடர்ச்சியாக அமைதியாக இருப்பதன் மூலம், இந்து தேசியவாதிகளின் உரிமைகளைக் குறித்த எல்லைகளுக்குள் கட்டுப்படுத்த முடியவில்லை அல்லது கட்டுப்படுத்த விரும்பவில்லை என்பதைக் காட்டுகிறது.<br /><br />அண்மையில் இந்தியாவில் உள்ள ஏராளமான கிறித்தவ வழிபாட்டிடங்கள் தீக்கிரையாக்கப்பட்டு சூறையாடப்பட்டன. கடந்த டிசம்பரில் கிழக்கு டில்லியில் செயின்ட் செபாஸ்டியன் சர்ச் முழுவதுமாக தீக்கிரை-யாக்கப்-பட்டது.<br /><br />கிறித்தவ மதபோதகர் கூறும்போது, புகைமண்டலமாக இருந்தபோது மண்ணெண்ணெய் மணம் வெளிவந்ததாகக் கூறியுள்ளார். டில்லியில் அண்மையில் தீய நபர்களால் செயின்ட் அல்போன்சா சர்ச் தீவைத்து எரிக்கப்பட்டது. சடங்குகளுக்குப் பயன்படுத்தும் பொருள்களை எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால், பணம் நிறைந்திருந்த உண்டியல் பெட்டியை அவர்கள் தொடவில்லை.<br /><br />கத்தோலிக்க ஆயர்களின் மாநாட்டில் இந்தியாவுக்கே உரிய மதச் சார்பின்மையை நிலைநிறுத்த அரசுக்குக் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தியாவில் கிறித்தவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள், சொந்த நாட்டில் பாதுகாப்பாக உள்ளார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும்.<br /><br />மாபெரும் அளவிலான மதமாற்றங்கள் குறித்தும் கவலைகளைத் தெரிவித்துள்ளனர். ஆக்ராவில் கடந்த டிசம்பரில் 200 முசுலீம்கள் இந்து மதத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஜனவரியில் மேற்கு வங்கத்தில் நூறு கிறித்தவர்கள்வரை மறு மதமாற்றம் என்கிற பெயரில், இந்துமதத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.<br /><br />இந்து தேசியவாதக் குழுக்களாக உள்ள விஸ்வ இந்து பரிஷத், ராஷ்டிரிய சுயம் சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்) ஒளிவுமறைவின்றி தாய்மதம் திரும்புதல் என்கிற பெயரில் பிரச்சாரத்தைச் செய்து இந்துக்கள் அல்லாதவர்களை மீண்டும் இந்து மதத்துக்குத் திரும்பச் செய்வதாகக் கூறுகிறார்கள்.<br /><br />இந்தியாவில் 80 விழுக்காட்டினருக்கும் மேலாக இந்துக்கள் உள்ளனர். ஆனால், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சார்ந்த பிரவீன் தொகாடியா கூறும்போது, அவருடைய அமைப்பான வி.எச்.பி., நாட்டில், நூறு விழுக்காட்டளவில் இந்துக்களாக ஆக்குவது-தான் இலக்கு என்று கூறியுள்ளார். அதற்கு ஒரே வழி மதச்சிறுபான்மையரின் மத நம்பிக்கைகளை மறுப்பதுதான்.<br /><br />அயோத்தியில் 3,000 முசுலீம்களை ஒரே நேரத்தில் மதமாற்றம் செய்ய உள்ளதாக வி.எச்.பி. கூறுகிறது. இந்துத்துவத் தீவிரவாதிகளால் 1992ஆம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, நாடுமுழுவதும் ஏற்பட்ட வன்முறைக் கலவரங்களில் 2000பேர் உயிரிழந்தனர்.<br /><br />நெருப்போடு விளையாடுவதை வி.எச்.பி. தெரிந்தே செய்கிறது. மோடியின் விருப்பமான திட்டமாக இந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதி அளித்திருந்தார். ஆனால், புதுடில்லியில் கடந்த மாதம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மதவாதங்களால் பிரித்துக் கொண்டிருக்கும் வரை, இந்தியா வெற்றி பெறவே முடியாது என்று கூறியுள்ளார். மத சகிப்புத் தன்மையற்ற தன்மையில் கேளாக்காதாக உள்ள மோடியின் அமைதியை உடைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-62423914301315009602015-02-19T17:57:27.927+05:302015-02-19T17:57:27.927+05:30புதுப்பா
முகங்கள்
அண்ணனுக்கு ஆனைமுகம்
தம்பிக்கு ஆ...புதுப்பா<br /><br />முகங்கள்<br />அண்ணனுக்கு ஆனைமுகம்<br />தம்பிக்கு ஆறுமுகம்<br />தந்தைக்கும் தாய்க்கும்<br />பாதிப் பாதி முகம்<br />பக்தனே நீ எந்த முகத்தோடு<br />கோவிலுக்குப் போகிறாய்?<br /><br />- வீ.உதயக்குமாரன், வீரன்வயல்.<br /><br />புதுப்பா<br /><br />பாதையை மாற்று!<br />விரும்பியதை விரும்பு - உன்னை<br />விரும்பியதை விரும்பு!<br />எறும்புக்குத் தெரியாதா<br />கரும்பின் சுவை!<br />கண்ணின் பார்வை<br />காணும் தூரம் மட்டும்!<br />அறிவின் பார்வையோ<br />ஆகாயத்தை எட்டும்!<br />கீதையைப் போற்றாதே!<br />பாதையை மாற்று! - பெரியார்<br />பாதைக்கு மாற்றேது!<br /><br />- சீர்காழி கு.நா.இராமண்ணாதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-88015187883096125002015-02-19T17:56:24.265+05:302015-02-19T17:56:24.265+05:30பழைமையான சூரியக் குடும்பம்
பூமியைப் போன்ற அளவுள்...பழைமையான சூரியக் குடும்பம்<br /><br /><br />பூமியைப் போன்ற அளவுள்ள அய்ந்து கிரகங்கள் சுற்றி வரும் ஒரு நட்சத்திரம் நாசாவின் கெப்ளர் செயற்கைக்கோள் மூலம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதுவரை கண்டறியப் பட்ட நட்சத்திரங்களிலேயே மிகப் பழைமையான நட்சத்திரமாகக் கருதப்படும் இதற்கு கெப்ளர் 444 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கெப்ளர் 444அய் பூமியை விடச் சிறியதான புதன் மற்றும் வெள்ளி கிரகங்களுக்கு இடைப்பட்ட அளவில் உள்ள அயந்து கிரகங்கள் சுற்றி வருகின்றன. கெப்ளர் 444 குடும்பத்திலுள்ள கிரகங்கள் தங்களது சூரியனை 10 நாள்களுக்கும் குறைவான நேரத்தில் சுற்றி வந்துவிடுகின்றன. அதேபோல பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரத்தில் பத்தில் ஒரு பங்கு தூரத்திற்குள் வட்டப் பாதையில் சுற்றி வந்துவிடுகினறன என வானியலாளர்கள் கூறியுள்ளனர். இதுபோன்ற பழைமையான நட்சத்திரத்தைச் சுற்றி ஏராளமான சிறிய கோள்கள் சுற்றி வருவதைப் பார்த்ததில்லை. இது மிகவும் சிறப்பானது. கெப்ளர் 444 சூரியக் குடும்பமானது நமது சூரியக் குடும்பத்தைவிட இரண்டரை மடங்கு பழைமையானது. நமது சூரியக் குடும்பம் 450 கோடி ஆண்டுகள்தான் பழைமையானது என சிட்னி பல்கலைக்கழக இயற்பியல் கல்லூரிப் பேராசிரியர் டேனியர் ஹுபர் கூறியுள்ளார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-26864680589138470292015-02-19T17:55:44.204+05:302015-02-19T17:55:44.204+05:30பகுத்தறிவே இளைஞர்களை ஆளவேண்டும்
-அறிஞர் அண்ணா
பட...பகுத்தறிவே இளைஞர்களை ஆளவேண்டும்<br /><br />-அறிஞர் அண்ணா<br /><br />பட்டதாரிகளே! உங்கள் குடும்பங்களுடைய நன்னிலைக்குப் பாடுபடுவதோடு, சமூகத்திற்-காகப் பணிகளையும் செய்ய வேண்டியதுடன், பகுத்தறிவுவாதத்தின் ஒளியை எங்கும் வீசச் செய்பவர்களாக நீங்கள் திகழ வேண்டும்.<br /><br />பகுத்தறிவுவாதம் என்பது அடிப்படை உண்மைகளை, நெறிகளை மறுப்பதாகாது; எதையும் காரணங் கண்டு ஆராய்ந்து உண்மை காண்பதாகும். போலித்தனமான எண்ணங்-களை, செயல்களை அழித்தொழிப்பதுதான் பகுத்தறிவு ஆகும்.<br /><br />அறிவின் எந்த ஒரு துறையாயினும் அதில் நமக்கென்று ஒருமுறை இல்லாமலில்லை. நம்முடைய வாழ்க்கை முறைகள் அழியாதவை என்று நாம் கொண்டாடலாம். ஆயினும், அந்த முறைகளை இளமை குன்றாத தீவிரத் தன்மையோடு கூடியதாக வைத்திருக்க வேண்டுமானால், மாறுதலை ஏற்றுக் கொள்ளத்தக்க, புதிய கருத்துகளை ஏற்றுக் கொள்ளக்கூடிய இளம் இதயத்தைப்போல் நமது இதயம் பசுமையானதாக விளங்க வேண்டும்.<br /><br />பெரியாரைப் பின்பற்றுவோம்<br /><br />நெடுங்காலமாகப் பழைய முறைகளிலேயே ஊறி, அவற்றைத் தாங்கி, அவற்றுக்கெதிரான வாதங்களுக்கு எதிர்ப்புக்கூறி, காலத்தைக் கழித்திருக்கிறோம்.<br /><br />இதே காலத்தில் உலகத்தின் ஏனைய நாட்டவர்கள் எல்லாம் உண்மையை நாடி, பொறுமையோடு தங்களது இடைவிடா ஆராய்ச்சி சோதனை மூலம் பல புதிய முடிவுகளை எய்தியதுடன், உயர்வு பெற்றுள்ளனர். நாம் பண்டைய பழம்பெருமையில் அமர்ந்திருப்பதில் திருப்தி கொள்கிறோம்.<br /><br />நன்மையறியாமல் இவற்றைப் பாதுகாக்கக் கூடியவர்களாக இருந்து வந்துள்ளோம். இந்த வகையில், புரையோடிய சமூகக் கருத்துகளைச் சாகடிக்கும் வீரர் பெரியாரைக் குறைகூறத் துணிவதில் சிறிதுகூட அறிவுத் தெளிவு இல்லை.<br /><br />பழம் பெருமை பேசிக்கொண்டு, மூடப் பழக்கங்களில் ஆழ்ந்து அடிமைப்பட்டிருக்கும் சமுதாயத்தைச் சீர்திருத்தி, புரையோடிய சமுதாயக் கருத்துகளை ஒழித்துப் போராடும் வீரரான பெரியாரைக் குறைகூறிப் பயன் என்ன? பகுத்தறிவே எல்லோருடைய உள்ளங்களையும் தங்குதடை-யின்றி ஆளவேண்டும்.<br /><br />ஜாதி ஒழிந்த சமத்துவ சமுதாயம் அமைக்கும் போர் வீரர்களாக எல்லோரும் முன்வர வேண்டும். நாட்டில் புத்துயிர் ஊட்டிப் பகுத்தறிவாளர்களைப் பெருக்க வேண்டும்.<br /><br />ஜாதி முறையை எதிர்த்துப் போர் தொடுங்கள்<br /><br />பகுத்தறிவு மூலம் சமுதாயத்தினைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட வேண்டும். பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்று வெளியேறுவோர் இப்பணிக்குத் தூதுவர்களாக விளங்க வேண்டும். ஜாதி முறையை எதிர்த்துப் போர் தொடுத்திடுங்கள் என நான் உங்களை அழைக்கிறேன்.<br /><br />விஞ்ஞானத்தோடு ஒட்டி வாழ முடியாத மூடப் பழக்கங்களுக்கு எதிராகப் போர் தொடுக்கும்படியும் உங்களை வேண்டுகிறேன்.<br /><br />(அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் 18.11.1967 அன்று ஆற்றிய உரையின் ஒரு பகுதி.)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-47905067579937847132015-02-19T17:55:38.459+05:302015-02-19T17:55:38.459+05:30பகுத்தறிவு வளர சிறந்த வழி
எங்கள் வழிகாட்டி மாம்ப...பகுத்தறிவு வளர சிறந்த வழி<br /><br /><br />எங்கள் வழிகாட்டி மாம்பலம் ஆ.சந்திரசேகர் அழைப்பு சோதிடம் மறுப்பு...<br /><br />கூடுதல்....மாதம், நாள் மறுப்பு......செய்தால்...!<br /><br />என் திருமண மண்டபத்தில்....<br /><br />ஆடி , மார்கழி, புரட்டாசி.. மாதங்களில் திருமணம் செய்தால் கட்டணத்தில் 75% தள்ளுபடி செய்கிறேன்!<br /><br />அஷ்டமி... நவமி... அமாவாசையில் எந்த மாதம் மணம் செய்தாலும் 75% தள்ளுபடி நிச்சயம்!<br /><br />நான் தயார்..<br /><br />நீங்கள் தயாரா?...<br /><br />- முகநூலிலிருந்துதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com