tag:blogger.com,1999:blog-1474608369333206681.post4299208452167536165..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: கும்பமேளாவா - கொலைகார பீடமா? தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-50390154852898730602013-02-21T05:52:13.938+05:302013-02-21T05:52:13.938+05:30
இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடுவோம், வாரீர்! பிப்...<br />இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடுவோம், வாரீர்! பிப்ரவரி 28ஆம் தேதி போராட்டம்!<br /><br /><br />பிரபாகரன் மகன் படுகொலைப் படங்கள் பொய்யா?<br /><br />இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடுவோம், வாரீர்!<br /><br />பிப்ரவரி 28ஆம் தேதி போராட்டம்!<br /><br />தமிழர் தலைவர் அறிவிப்பு<br /><br /><br />மாவீரன் பிரபாகரனின் மகன் பாலச் சந்திரனைப் படுகொலை செய்ததோடு அல்லாமல் அந்த உண்மைச் செய்தியை - வெளியில் வந்த படங்களை பொய்யென்று கூறி உலக மக்கள் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவும் இலங்கை அரசின் தூதரக அலுவல கத்தை முற்றுகையிடும் போராட்டம் வரும் 28ஆம் தேதி நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:<br /><br />இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி மூலம் அந்நிறுவனத்தின் இயக்குநர் கெல்லம்மெக்ரே - மாவீரன் பிரபாகரனின் 12 வயது பாலகன் பாலச்சந்திரன் கொடூரமாக மார்பில் அய்ந்து குண்டுகளைப் பாய்ச்சிப் பச்சைப் படுகொலை செய்யப்பட்ட படங்களை உலகெங்கும் பரப்பி பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி விட்டார்.<br /><br />இன்று உலகளவில் பேசப்படும் முதல் நிலைச் செய்தி இதுதான். இதன் மூலம் இலங்கை சிங்கள இனவாத அரசு - அதன் அதிபர் மகிந்த ராஜபக்சேயின் மனிதாபிமானமற்ற கொடிய இட்லர் முகம் உலகெங்கும் அம்பலப்படுத்தப்பட்டு விட்டது.<br /><br />ஜெனிவாவில் அமெரிக்கத் தீர்மானம் கொண்டு வரப்படும் ஒரு கால கட்டத்தில்...<br /><br />அதுவும் ஜெனிவாவில் மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்க அரசால் இலங்கைக்கு எதிராகப் புதியதோர் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ள ஒரு கால கட்டத்தில் இப்படி ஒரு செய்தி உலகெங்கும் தொலைக்காட்சி மூலம் அதிரடியாக வெளி வந்திருப்பது - இலங்கை அரசின் மீதான உலகப் பார்வை மேலும் கொழுந்து விட்டு எரியக் கூடிய நிலைதான். போர்க் குற்றவாளிதான் ராஜபக்சே என்பதற்குக் கூடுதல் சாட்சியமாகும்.<br /><br />மிகப் பெரிய நெருக்கடியில் இலங்கை அரசு<br /><br />கடுமையான - அதேநேரத்தில் உண்மையான இந்தக் குற்றச்சாற்றிலிருந்து எப்படியாவது விடுவிக்கப்பட வேண்டும் என்ற மிகப் பெரிய நெருக்கடிப் பள்ளத்தாக்கில் இலங்கை அரசும், ராஜபக்சேவும் தள்ளப்பட்டு விட்டனர்.<br /><br />பொய்தானே - இந்தக் கொடியவர்களின் கையில் உள்ள கேடு கெட்ட பொல்லாத ஆயுதம்?<br /><br />ஹிட்லரும், முசோலினியும், இடி அமீன்களும் என்றாவது உண்மைகளைப் பேசி இருக்கிறார்களா? இலங்கை இராணுவ செய்தித் தொடர்பாளர் (பிரிகேடியர் ரூபன் வானிகசூர்யா) என்ற ஒருவர் பெயரால் பிரிட்டன் சேனல் 4 ஒளிபரப்புப் படங்கள் பொய்யானவை என்று மறுப்பு வெளி வந்துள்ளது.<br /><br />கெல்லம்மெக்ரே திட்டவட்ட அறிவிப்பு<br /><br />படுகொலை செய்யப்பட்ட பிரபாகரன் மகன் பாலசந்திரன் படம் உண்மையானதுதான்; சித்திரிக்கப் பட்டவையல்ல; வெளியிடப்பட்ட படங்களுக்கான பொறுப்பினை ஏற்றுக் கொண்டுள்ளார் - பிரிட்டன் நிறுவனத்தின் இயக்குநர் கெல்லம்மெக்ரே.<br /><br />அது மட்டுமல்ல, தமிழ்ப் பெண்களுக்கு எதிராக சிங்கள இராணுவ வெறியர்கள் நடத்திய பாலியல் வன்கொடுமை, சரண் அடைய வந்த போராளிகளை சுட்டுக் கொன்ற காட்சிகள் எல்லாம் விரைவில் ஒளிபரப் பப்பட உள்ளன என்று பிரிட்டன் நிறுவனம் அறிவித் திருப்பதன் மூலம் ராஜபக்சேயின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளார் இயக்குநர் கெல்லம்மெக்ரே.<br /><br />28இல் முற்றுகைப் போராட்டம்!<br /><br />இந்த நிலையில் உலக மக்களின் கண்களில் மிளகாய்த் தூள் தூவி உண்மைத் தகவலை முற்றிலும் தகர்த்திட வழக்கமான பொய்ப் பிரச்சாரம் என்னும் பட்டத்தை உலகெங்கும் பறக்க விட முயற்சிக்கிறார்.<br /><br />ராஜபக்சேயின் இந்தக் கேவலத்தைக் கண்டிக்கும் வகையிலும், கீழே தள்ளியதோடு அல்லாமல் குழியையும் பறிக்கும் இலங்கைப் பாசிச அரசின் முகமூடியைக் கிழிக்கும் வகையிலும், இந்திய அரசே இலங்கைத் தூதரகத்தை இழுத்து மூடு! எனும் முழக்கத்தை முன்னெடுப்போம்.<br /><br />வரும் 28.2.2013 வியாழன் காலை 11 மணிக்கு சென் னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை திராவிடர் கழகம் மேற்கொள்ளும்.<br /><br />தமிழின உணர்வாளர்கள் கட்சிகளைக் கடந்து ஓரணியில் ஒன்றுபடுவோம் வாரீர்! வாரீர்!!<br /><br />கி.வீரமணி<br />தலைவர், திராவிடர் கழகம்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-69016396057563507242013-02-19T20:29:10.379+05:302013-02-19T20:29:10.379+05:30வார ஏட்டுக்கு ஒரு சூடு! இது விபச்சாரத்தைவிட இழிவான...வார ஏட்டுக்கு ஒரு சூடு! இது விபச்சாரத்தைவிட இழிவானது குமுதம் ரிப்போர்ட்டர் இதழைக் கண்டித்து சுப.வீ.<br /><br /><br />சென்னை, பிப். 19- கருத்துச் சுதந்திரம் வேண்டும் என்னும் கருத்துடையவர் கள்தாம் நாம். ஆனால், அநாகரிக மாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் எழுதுவது கருத்துச் சுதந்திரம் ஆகாது. இப்போது வெளிவந்துள்ள குமுதம் ரிப்போர்ட்டர் என்னும் குப்பை இதழ் ஒன்று, நம் தலைவர் கலைஞர் அவர் களையும், குஷ்புவையும் தொடர்புபடுத்தி, மனம் புண்படும் வகையில் எழுதியுள்ளது. இன்னொரு மணியம்மை என்று தலைப் பிட்டு, தன் வக்கிர புத்தியை வெளிப் படுத்தியுள்ளது.<br /><br />ஒரு பெண் நடிகையாய் இருந்தால் அவரைப்பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதலாமா? இந்த இதழின் ஆசிரியர் வரதராஜனைப் பார்த்துக் கேட்கிறேன், உங்கள் வீட்டுப் பெண்களைப்பற்றி இப்படி நாங்களும் எழுதட்டுமா? அரசி யல் எழுது, ஆயிரம் விமர்சனங்களை வை, வேண்டாமென்று சொல்லவில்லை. ஆனால், ஆபாசமாகவும், அருவருப்பாக வும் எழுதித்தான் பணம் சேர்க்க வேண்டுமா? இதனைவிட நீ வேறு பிழைப்பு நடத்தலாமே?<br /><br />மணியம்மையின் வரலாறு தெரியுமா உனக்கு? 1957 ஆம் ஆண்டு போராட் டத்தில் தந்தை பெரியார் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். நம் ஆசிரியர் வீரமணி அவர்கள் அப்போது சட்டக் கல்லூரி மாணவராக இருந்தார். அந்த நேரத்தில், திருச்சி சிறையில், சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றிருந்த மணல் மேடு வெள்ளைச்சாமி, பட்டுக்கோட்டை ராமசாமி ஆகிய இருவரும் சிறையிலேயே இறந்துபோனார்கள்.<br /><br />இருவரின் உடல் களையும் அதிகாரிகள் சிறையிலேயே புதைத்து விட்டனர். உடனே மணியம்மையார்தான், நடிகவேள் ராதாவின் காரில் சென்னை வந்து அன்றைய முதலமைச்சர் காமராஜர் அவர்களைச் சந்தித்து, வாதாடி, மீண்டும் அவர்களின் உடல்களைத் தோண்டி எடுக்க வைத்தார். அதற்குப் பிறகு அந்த உடல்களை ஏந்தியபடி, திருச்சி முழுவதும் மாபெரும் ஊர்வலத்தை நடத்தி, அய்யா களத்தில் இல்லாதபோதும், இயக்கத்திற்குப் புதிய வலிவை ஊட்டியவர் மணியம்மையார் தான். இந்த வரலாறெல்லாம் வரத ராசன்களுக்கு எங்கே தெரியப் போகிறது?<br /><br />கண்டதையும் எழுதிக் காசு சேர்ப்பது, பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசுவதைப் போலக் கொடுமையானது. விபச்சார விடுதி நடத்துவதைவிட இழிவானது. (பேசியபடியே, அந்த இதழை அவர் மேடையில் கிழித்தெறிந்தார்).<br /><br />(16.2.2013 அன்று மாலை, சென்னையை அடுத்துள்ள மேடவாக்கம் பகுதியில் நடைபெற்ற திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை நடத்திய, திராவிட இயக்க நூற்றாண்டு நிறைவுப் பொதுக்கூட்டத்தில், சுப.வீரபாண்டியன் ஆற்றிய உரையின் ஒரு பகுதி இது).தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-47443811192222282152013-02-18T22:48:48.537+05:302013-02-18T22:48:48.537+05:30
அழித்தாக வேண்டும்
மக்களைச் சுயமரியாதை இல்லாமல் ...<br />அழித்தாக வேண்டும்<br /><br /><br />மக்களைச் சுயமரியாதை இல்லாமல் செய்து மிருகங்களாக்கி, நாய், பன்றிகளைவிட இழிவாய் நடத்த ஆதாரமாய் இருக்கும் மதம் எதுவானாலும் அதை அழித்தாக வேண்டும்.<br /><br />(குடிஅரசு, 18.12.1927)<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-90476374856337661982013-02-18T22:43:41.170+05:302013-02-18T22:43:41.170+05:30
சிந்தனைச் சிற்பி
இனி வரும் புதிய அரசியல் திட்டத...<br />சிந்தனைச் சிற்பி<br /><br /><br />இனி வரும் புதிய அரசியல் திட்டத்தை வழங்க, நமது சுயமரியாதையோர் தேர்தலில் தலையிடுவார் களேயானால் Sweep The Polls என்று சொல்லும் வகையில் முற்றும் அவர் கைக் கொள்ள என்ன தடை?<br /><br />இவர்கள் முன் யார் நிற்கிறார்கள்? இவர்கள் முன் யார் இருப்பினும், எந்த மகாசபையாக இருப்பினும் சுயமரியாதைத் தொண்டர் கள்முன் பேசும் திறமையில் நிகர் யாருமில்லை என்று சொல்லலாம்.<br /><br />- இவைகளின் சிறப்பை யோசிக்குங்காலை, உங்கள் இயக்கத்திற்கு ஒரு மகத்தான வருங்காலம் இருக்கிறது. அதற்கு There is a Great Future என்று சொல்லலாம். இனி வருங்காலத்தில் உங்கள் இயக்கம் இந்திய உலகத்திற்குச் சிறந்ததோர் நன்மை பயக்கத்தக்க கருவியாக நிற்கப் போகின்றது. ஆனால் எதிர்கால செல்வாக்கு உங்கள் தளரா வன்மையும், ஆற்றலையும் விட முயற்சியை யும் பொறுத்தது - சுயமரியாதையோருக்கு மதங்கள் ஒழிந்து விட்டதென இன்று கூறலாம்.<br /><br />இந்த இயக்கம், முதலில் லூத்தர் மிஷன் மதத்தைப் போல், மதங்களைச் சீர்திருத்தும் இயக்கமாக ஆரம்பித்து, இன்று கடவுளென்ற பெயரையே அகராதியிலி ருந்து எடுத்து விடும் போல் தோன்றுகிறது. உங்கள் இயக்கத்தால் தமிழ்நாட்டில் பல்லாயிரவர் வாயில் கட வுளென்ற பெயரைப் பய பக்தியோடு உச்சரிப்பது போய், பரிகாசம் செய்யும் நிலைமையில் வந்துவிட்டது<br /><br />கடவுளென்ற ஒருவர் இருப்பாராயின், அவர் என்முன் வருவாராயின், அவர் கழுத்தை அறுப்பேன் என்று ஒரு சுயமரியாதை யுணர்வுடன் எழுதுகிறார்! இல்லாத மனப்பான்மை, நமது தமிழ்நாட்டில் இவ்வளவு சீக்கிரத்தில் தோன்றியதற்கு, நமது தோழர் ஈ.வெ.ராமசாமி செய்த அருந்தொண்டும் உழைப்புமே ஆகும் (குடி அரசு 13.11.1932) என்று குடிஅரசு இதழில் எழுதிய சிந்தனைச் சிற்பி மயிலை சிங்காரவேலரின் பிறந்த நாள் இந்நாள் (1860).<br /><br />மீனவர் சமூகத்தில் பிறந்த அவர் அந்தக் கால கட்டத்திலேயே வழக்குரைஞர் ஆனவர். சுதந்திரப் போராட்டத்துக் காக வழக்குரைஞர் தொழிலைத் தூக்கி எறிந்தவர்.<br /><br />மூட நம்பிக்கைகளை எதிர்த்து அவர் எழுதிய கட்டு ரைகள் அந்தக் கால கட்டத்தில் மகத்தானவை. குடிஅரசு இதழை அதற்காகப் பயன்படுத் திக் கொள்ள வாய்ப்பும் அளித் தார் பெரியார். இன்னும் சொல்லப் போனால், தனக்கு மாறுபட்ட தாக இருந்தாலும் அந்தக் கருத்தை அப்படியே பதிவு செய்ய சிங்காரவேலருக்கு வாய்ப்பளித்த பெருந்தன்மையும் தந்தை பெரியார் அவர்களையே சாரும்.<br /><br />வெறும் வர்க்கப் பேதத்தை மட்டும் பேசவில்லை. அதைவிட முதன்மையான வருணபேதம் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்று போர்க் குரல் கொடுத் தவர். சென்னையில் முதல் நாத்திக மாநாட்டை நடத்தி முதல் நாத்திகன் என்று தம்மைப் பறைசாற்றிக் கொண்ட உண்மையான கம்யூனிஸ்டு அவர். போர்க் குண மிகுந்த செயல் முன்னோடி பொதுவு டைமைக் கேகுக. இவன் பின்னாடி என்றார்.<br /><br />- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்<br /><br />இத்தகைய சிந்தனைச் சிற்பியின் பிறந்த நாள் இந்நாள் (1860). அந்த மாவீரருக்கு ஒரு புரட்சி வணக்கம்!<br /><br />- மயிலாடன்<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-54669131960165734432013-02-18T22:43:03.750+05:302013-02-18T22:43:03.750+05:30
சி.நடேசனார்
பார்ப்பனர் அல்லாதாரே, தாழ்த்தப்பட்ட...<br />சி.நடேசனார்<br /><br /><br />பார்ப்பனர் அல்லாதாரே, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத் தோழர்களே, தொழிலாளர் கழகத் தோழர்களே!<br /><br />இன்று ஒரே ஒரு மணித்துளியாவது எழுந்து நின்று இந்த மனிதனை நினைவு கூருங்கள். உங்கள் குடும்பத்தாரிடமும் உற்றார் உறவினரிடமும் இந்த மனிதன்பற்றி ஒரே ஒரு தகவலையாவது சொல்லி வையுங்கள்.<br /><br />திராவிடர் இயக்கத்தின் தோற்றுநர் என்ற பெருமைக்குரிய டாக்டர் சி. நடேசனார் அவர்களின் நினைவு நாள் இன்று (1937).<br /><br />62 ஆண்டுகள் வாழ்ந்த இந்த மாமனிதர் பார்ப்பனர் அல்லாதாராகிய திராவிடர் என்ற இனம் இருக்கும் வரைக்கும் இதயப் பேழையில் நன்றி உணர்வோடு சீராட் டப்பட வேண்டியவர் ஆவார்.<br /><br />ஆரிய ஆதிக்க முதலைப் பிடியில் மூர்க்கத்தனமாகக் சிக்குண்டு கிடந்த திராவிடரை மீட்டுக் கொடுத்த திராவிடர் இயக்கத்தின் பிரசவ அறை இவர்தான்.<br /><br />1912இல் அவரால் தோற்றுவிக்கப்பட்ட சென்னை அய்க்கிய சங்கம் தான் திராவிடர் சங்கமாக, தென்னிந்திய நல உரிமைச் சங்கமாக (South Indian Liberal Federation) நீதிக் கட்சியாகப் பரிணமித்தது.<br /><br />டாக்டராக இருந்து அவர் ஈட்டிய பொருள் எல்லாம் பொது நலம் என்ற கழனிக்கே பயன்படுத்தப் பட்டது.<br /><br />அவரால் ஆக்க ரீதியாக உருவாக்கப்பட்ட திராவிடர் இல்லம் (Hostel) பார்ப்பனர் அல்லாதார் கல்விக்குப் பால் வார்த்த தாய் வீடாகும். ஏழை -எளிய மக்களுக்குத் தங்கும் வசதி, இலவச உணவு அளித்து நம் மக்களை உச்சிமோந்த பெருமகன் ஆவார்.<br /><br />இந்த இல்லத்தில் தங்கிப் படித்தவர்கள்தான் பிற்காலத்தில் அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக வந்த டி.எம். நாராயணசாமி அவர் களும், பிற்காலத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக வந்த சிவ சுப்பிரமணிய நாடார் அவர் களும் ஆவார்.<br /><br />சட்டமன்றத்தில் அவர் கொண்டு வந்த தீர்மா னத்தை இப்பொழுது நினைத் தாலும் மயிர்க் கூச்செரியக் கூடியதாகும்.<br /><br />பார்ப்பனர் அல்லாதா ருக்குக் கிடைக்க வேண்டிய விகிதாச்சார உரிமை கிடைக்கும் வரை, இனிமேல் அரசாங்க உத்தியோகங்கள் யாவும் பார்ப்பனர் அல்லாதா ருக்கே கொடுக்கப்பட வேண்டும் என்ற தீர் மானத்தைக் கொண்டு வந்தார் (5.8.1921).<br /><br />கல்லூரிகளில் மாண வர்கள் சேர்க்கைக்குக் கல்லூரிக் குழு அமைக்க வழி செய்தவரும் இந்தப் பெருமகன்தான்.<br /><br />ஒரு நடேசன் நலிந்தால் நாம் நலிவு கொண்டு விடாமல் 1000 நடேசனைக் காணுவோமாக! - என்று தலையங்கம் தீட்டியது குடிஅரசு (21.12.1937)<br /><br />வணக்கம் செய்வீர், திராவிடர்களே - இந்த வாழ்வித்த வள்ளலுக்கு!<br /><br />- மயிலாடன்<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-87546862853583088822013-02-17T05:47:24.209+05:302013-02-17T05:47:24.209+05:30
சென்னை பல்கலைக்கழகத்தில் கழகத்துணைத் தலைவர்
சென்...<br />சென்னை பல்கலைக்கழகத்தில் கழகத்துணைத் தலைவர்<br /><br />சென்னை, பிப்.16- நாமெல்லாம் இன்று பல்வேறு பதவிகளில் இருப்பதற்கு காரணம், தந்தை பெரியார் தனக்கு கிடைத்த சென்னை ராஜதானியின் பிரதமர் பதவியை மறுத்ததால்தான் என்று திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசினார்.<br /><br />சென்னைப் பல்கலைக்கழகம் வரலாற்றுத்துறை சார்பாக ஆய்வு மாணவர்களுக்காக பல்கலைக்கழக வளாகத்தில் 06.02.2013 அன்ற பிற்பகலில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியை வரலாற்றுத்துறை சார்பாக பேராசிரியர் கருணானந்தம் ஒருங்கிணைத்தார்.<br /><br />பேதமற்ற இடம்தான் மேலான இடம்<br /><br />ஆய்வு மாணவர்களுக்கு சிறப்பு பேச்சாளரை பேரா.கருணானந்தம் அறிமுகப்படுத்தி பேசினார். அவர் தனது அறிமுக உரையில், சிறப்பு பேச் சாளரின் இயக்கம் சார்ந்த செயல்பாடுகளை விவரித்தார். தொடர்ந்து அவர், மாற்றம், புரட்சி பற்றி குறிப்பிட்ட போது, கம்யூனிசம், காந்தியிசம், பெரியாரிசம் ஆகியன பற்றி சுருக்கமாக கூறிவிட்டு, பெரியாரிசம் மட்டும் இன்னமும் எப்படி உயிர்ப்புடன் உள்ளது என்பதை கோடிட்டு காட்டினார். மேலும் அவர், பெரியாரிசத்தின் இலக்கு பேதமற்ற இடம்தான் என்பதையும் மாணவர்களுக்கு சுட்டிக் காட்டினார்.<br /><br />மானமும் அறிவும் மனிதர்க்கழகு<br /><br />பேரா. கருணானந்தத்தைத் தொடர்ந்து திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் பேசினார். அவர் தனது ஆய்வுரையில், படிப்பறிவு இல்லாத மக்களிடையே பெரியார் தனது கருத்துகளை எப்படி விதைத்தார் என்பதை மானமும் அறிவும் மனிதர்க்கழகு என்று பெரியார் சொன்னதையும், இதை நான்கு வார்த்தைகளில் ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் உள்ளடக்கத்தையே காட்டிவிட்ட மேன்மையையும், திருக்குறளை விட சுருக்கமாக பேசி மக்களுக்கு விளங்கச் செய்ததையும் கூறினார்.<br /><br />மக்களுக்கு அறிவு வந்து விட்டது<br /><br />மேலும் அவர், தஞ்சை திலகர் திடலில் பெரியாரின் 80ஆம் ஆண்டு பிறந்தநாள் கூட்டத் தில் 80 பரிசுப் பொருட்களை மக்கள் அளித்த போது, பேசியதை வியப்புடன் நினைவு கூர்ந்தார். பெரியாருக்கு அதே இடத்தில் தொடக்கத்தில் அவரது கூட்டத்தில் பாம்பு, காளைமாடு, அழுகிய முட்டை போன்றவற்றை பயன்படுத்தி கூட்டத்தை கலைக்க முயன்றதையும், அதே இடத்தில் இன்று 80 பொருட்கள் பரிசாகத் தருவதையும் பார்த்து பெரியாருக்கு ஏற்பட்ட அய்யத்தையும் அந்த அய்யத்தையும் மக்களைப் பார்த்து, நான் ஏதாவது எனது கொள்கையில் பல்டி அடித்து விட்டேனோ, இல்லை உங்களுக்கு (மக்களுக்கு) அறிவு வந்து விட்டதோ? என்று கேட்டதையும் குறிப்பிட்டு, திராவிடர் இயக்கத்தில் பெரியாரின் ஈடு இணையற்ற அறிவுப் பிரச்சாரத்தின் மூலம் மக்கள் அறிவு பெற்ற வரலாற்றை நினைவூட்டினார்.<br /><br />மகத்தான மனித உரிமைப் போர்<br /><br />தொடர்ந்து பேசிய திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர், பெரியார் காங்கிரசில் இருந்த பொழுதே, சேரன் மாதேவியில் உள்ள குருகுலத்தில் வ.வெ.சு. அய்யரின் கபட நாடகத்தையும், அதை பெரியார் எதிர் கொண்ட நேர்மையையும் தொட்டுக் காட்டினார். மேலும், கேரளாவில் உள்ள வைக்கத்தில் நடந்த இந்திய துணைக் கண்டத்தில் நடந்த மகத்தான மனித உரிமைப் போர் பற்றியும், அதில் பெரியார் பெற்ற வெற்றியையும், திரு.வி.க. தனது நவசக்தி பத்திரிகையில் பெரியாரை வைக்கம் வீரர் என்று எழுதியதையும் கோடிட்டு காட்டினார்.<br /><br />தொடர்ந்து பேசிய அவர், பெரியார் காங்கிரசில் இருந்துகொண்டே, வகுப்புரிமை தீர்மானத்தை ஒவ்வொரு ஆண்டும் கொண்டு வந்ததையும், காங்கிரசின் எதிர்வினையையும் சுட்டிக் காட்டி திராவிடர் இயக்கத்தில் பெரியாருக்கு இருந்த அளப்பரியா பாங்கை மாணவர்களின் அறிவில் தைக்கும்படி பேசினார்.<br /><br />இன்னும் திராவிடர் இயக்கமாம் நீதிக்கட்சியின் சாதனைகளையும் பட்டியலிட்டார். அதன் தொடர்ச்சியாகத் தான் பெரியாரின் பணி என்ப தையும், 1929இல் செங்கல்பட்டு மாநாட்டில் விவாகரத்து உரிமை, விதவைப் பெண்களுக்கு திருமணம், பெண்களுக்கு சொத்துரிமை என்று பெரியாரின் தொண்டை விவரித்தார்.<br /><br />இறுதியாக, இந்த நாட்டில் இருந்த, இருக்கின்ற பெரிய பெரிய தலைவர்கள் கூட பெரியாரின் அறிவுப் பண்ணையில் விளைந்தவர் என்று சுட்டிக் காட்டி உரையை நிறைவு செய்தார்.<br /><br />தொடர்ந்து மாணவர்கள் கேள்விகள் கேட்டு, அதற்கு பொருத்தமான விடைகளையும் பெற்று மகிழ்ந்தார்கள். நிகழ்ச்சியில், முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வு மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-45845147177132600622013-02-17T05:47:11.594+05:302013-02-17T05:47:11.594+05:30
தந்தை பெரியார் பொன்மொழி
பகுத்தறிவு வளர்ந்தால்.....<br />தந்தை பெரியார் பொன்மொழி<br /><br /><br />பகுத்தறிவு வளர்ந்தால்...<br /><br />மக்களுக்கு அறிவும் - ஆராய்ச்சியும் வளர, வளர கடவுள் உணர்ச்சியின் அளவும் குறைந்து கொண்டே போகும் என்பது திண்ணம். அது போலவே அறிவும் - ஆராய்ச்சியும் குறையக் குறைய கடவுள் உணர்ச்சி வளர்ந்து கொண்டே வரும் என்பதும் ஒப்புக்கொண்டாக வேண்டும்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-34334888098446127302013-02-17T05:45:26.821+05:302013-02-17T05:45:26.821+05:30இன்னும் இதிலும், கடினமாகப் பதங்களைத் தேடும்படியாகி...இன்னும் இதிலும், கடினமாகப் பதங்களைத் தேடும்படியாகி விட்டதேயென்று நமக்குவருத்தமாகத் தானிருக்கிறது. இந்த நிலையில் பிராமணரல்லாத நம்மவர்களுக்குள்ளேயே ஒருவருக்கொருவர் காட்டிக் கொடுப்பதால், விஷமஞ் செய்கிறவர்களுக்கு மிகுந்த சவுகரிய மேற்பட்டுப் போய் விடுகிறது. அவரவர்களைப் பற்றி வரும்போது தான் அவரவர்கள் கவனிக்கின்றார்கள். உதாரணமாக, சுயராஜ்யா பத்திரிக் கை ஸ்ரீமான், நாயக்கரின் சென்னைப் பிரசங்கத்தைப் பற்றி, நாயக்கரின் குட்டிக்கரணமென்றும், பிள்ளையார் வேஷமென்றும், கீர்த்திக்காக தியாகம் செய்தவரென்றும், எழுதின காலத்தில், பிராமணரல்லாத மற்ற பத்திரிக்கைக் காரர்கள் பார்த்துச் சிரித்துக் கொண்டி ருந்தார்கள். இதன் பலனாய் மற்றவர் களையும்தனித்தனியாய் மேற்படி பத்திரிக்கை தாக்க ஆரம்பித்தது.<br /><br />இப்படியே ஒவ்வொரு சமயத்தில் ஒருவரைப் பற்றி எழுதும்போது மற்றவர் பார்த்துச் சிரிப்பதால் பொதுவாக பிராமணரல்லாதாருடைய நிலைமையே தாழ்வடையக் காரணமாய்ப் போய்விட்டதென்பதை ஒவ்வொரு வரும் ஊன்றிக் கவனிக்கவேண்டும். இவ்விஷயத்தை யோசித்துப் பார்த்தால் பிராமணரல்லாத தேசத்தொண்டர்களுடையவும் தேசீயத்தலைவர்களுடைய வும் ஒற்றுமையின்மையும் சுயநலமுமே பிராமணரல்லாதாரை இக்கெதிக்குக் கொண்டு வந்து விட்டது.<br /><br />இனியாவது இம்மாதிரியான சந்தர்ப்பங்களில், பிராமணரல்லாதார் தகுந்த ஜாக்கிரத்தையுடன் நடந்து, பிராமணரல்லாத சமூகமும் தீண்டாதாரென்று கூறப்படுவோர்களின் நிலைமையையும், முன்னேற்றமடையச் செய்வித்து சுயமதிப்பைக் காப்பாற்றிக் கொள்ளுவார் களென உறுதியாய் நம்புகிறோம்.<br /><br />- குடிஅரசு - துணைத் தலையங்கம் - 01.11.1925<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-1021357917295772612013-02-17T05:45:21.864+05:302013-02-17T05:45:21.864+05:30உதாரணமாக, பொள்ளாச்சி, மதரா, அனுப்பர்பாளையம், தஞ்சை...உதாரணமாக, பொள்ளாச்சி, மதரா, அனுப்பர்பாளையம், தஞ்சை, மாயவரம் இந்த இடங்களில் ஸ்ரீமான், நாயக்கர் பேசிய பேச்சைப் பற்றி சுதேசமித்திரன் பத்திரிக்கை தாறுமாறாகவும் பிரசுரம் செய்து அதையனுசரித்துப் பல குட்டித் தலையங்கம் எழுதிவந்திருக்கிறது. சில பிராமணரல்லாதாரிடம் கையெழுத்துப் பெற்று, அவர்கள் பேரால் பிரசுரம் செய்து கொண்டும் வருகிறது.<br /><br />இப்பிராமணப் பத்திரிகைகள், பிராமணரல்லா தாருக்கு விரோதமாய் இங்ஙனம் செய்யும் அயோக்கிய பிரசாரத்தையும், பிராமணர்கள் சிலர் செய்யும் முறையற்ற சூழ்ச்சிப் பிரசாரங்களையும் நாம் கண்டித்து எழுதும் போது கடினபதங்களைப் பிரயோகிப்பதாய் சிலர் கூறுகின்றனர். மனிதர்களுடைய யோக்கியதைக்குத் தகுந்த பதம் உபயோகப்படுத்த வேண்டுமேயென்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள்.<br /><br />மான வெட்கமுள்ள ஜனங்களுக்கு உபயோகப்படுத்த வேண்டிய பதம் வேறு, அஃதில்லாதவர்களுக்கு உபயோகப்படுத்த வேண்டிய பதம் வேறு, ஒவ்வொரு பதத்தையும் நாம் மனிதர்களுக்குத் தக்கபடி தான் அளந்து உபயோகிக்கிறோம். நாம் உபயோகப்படுத்துகிற பதங்கள் கடினபதங் களென்று சொல்லப்படுவது கூட, சிலருடைய குணத்தைக் கொஞ்சமும் மாற்ற முடியாததாய் இருக்கிறது.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-61940364274864469052013-02-17T05:45:09.653+05:302013-02-17T05:45:09.653+05:30
சுதேசமித்திரனின் ஜாதிப்புத்தி - 2
சென்ற வாரம் இ...<br />சுதேசமித்திரனின் ஜாதிப்புத்தி - 2<br /><br /><br />சென்ற வாரம் இத்தலையங்கத்தின் கீழ் சுதேசமித்திரன் என்னும் பிராமணப் பத்திரிக்கை, பிராமணரல்லாதாருக்கும், முக்கியமாய் பிரா மணரல்லாத தேசத் தொண்டர்களுக்கும், விரோதமாய் வேண்டு மென்றே செய்து வரும் சூழ்ச்சிகளைப் பற்றி எழுதி, மற்றும் மறுமுறையென்று எழுதியிருந்தோம்.<br /><br />அவற்றில் முக்கியமாக ஸ்ரீமான். ஈ.வெ. இராமசாமி நாயக்கரைப் பற்றி தன்னாலும் தான் ஆட்சி கொண்டவர்களாலும் பொது ஜனங்களுக்கு எவ்வளவு கெட்ட அபிப்ராயத்தைக் கற்பிக்க வேண்டுமோ, அவ்வளவையும் செய்து பார்ப்பதென்றே முடிவு கட்டிக் கொண்டிருக்கிறது.<br /><br />ஸ்ரீமான், நாயக்கர் எந்த ஊருக்குப் போயிருந்தாலும், என்ன பேசினாலும் அவற்றைத் திரித்துப் பொது ஜனங்களுக்குத் தப்பபிப்பிராயப்படும்படி கற்பனை செய்து பத்திரிக்கைகளிலெழுதுவதும் அவற்றிற் கேற்றாற்போலவே சில ஈனஜாதி நிருபர்களை அங்கங்கே வைத்துக் கொள்ளுவதும், அவர்கள் பேரால் ஸ்ரீமான் நாயக்கர் சுயராஜ்யம் வேண்டாமென்கிறார், ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்து விட்டார், அதிகாரவர்க்கத்தோடு கலந்து விட்டார், காங்கிரஸ் கொள்கைக்கு விரோதமாயிருக்கிறார் என்று இவ்வாறாக அப்பத்திரிக்கை எழுதி வருகிறது.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-77758697847094317852013-02-17T05:44:40.582+05:302013-02-17T05:44:40.582+05:30அந்த பகுத்தறிவினை மனிதன் மற்ற காரியங்களுக்கு எல்லா...அந்த பகுத்தறிவினை மனிதன் மற்ற காரியங்களுக்கு எல்லாம் செலவிடுகின்றான். நல்ல உணவு, நல்ல உடை, நல்ல வாழ்வு வாழப் பயன்படுத்துகின்றான். ஆனால், நாம் ஏன் கீழ்ஜாதி? அவன் என்ன மேல் ஜாதி? நாம் ஏன் ஏழை? அவன் ஏன் பணக்காரன்? என்று சிந்தித்துப் பார்க்காதவனாக ஆகிவிட் டான். இந்தத் துறையில் சுத்த முட்டாளாக ஆகிவிட்டான்.<br /><br />அவன் என்ன பார்ப்பான்? அவன் ரத்தம் என்ன ரத்தம்? நமது ரத்தம் என்ன கீழா? அவன் மட்டும் ஏன் உயர்ந்தவன்? நாம் மட்டும் ஏன் இழிஜாதி? என்று சிந்தித்துப் பார்ப்பதே இல்லை. இது போலத்தான் அவன் ஏன் பணக்காரன்? நாம் ஏன் ஏழை? என்று சிந்திப்பதே இல்லை. இவைகளுக்கு எல்லாம் காரணம் நாம் பகுத்தறிவு கொண்டு சிந்திக்காததுதான்.<br /><br />1925லேயே சமதர்மத்தைப் பற்றி பேசியவன் நான் என்று நண்பர் பழனி அவர்கள் கூறினார்கள். 1925இல் காங்கிரசை விட்டு விலகிய பிறகு கடவுளை ஒழிக்க வேண்டும். பணக்காரனை ஒழிக்க வேண்டும்.<br /><br />சமதர்மம் மலர வேண்டும் என்று பிரச்சாரம் செய்த நான் சமதர்மம் எப்படி ரஷ்யாவில் நடைபெறுகின்றது என்பதை நேரில் போய் பார்த்துவிட்டு வரலாமே என்று அங்கு போய் பார்த்துவிட்டு வந்தேன். சமதர்மம் எப்படி உன்னத நிலையில் அங்கு நடைபெறுகின்றது என்பதை கண்டு வந்த நான் முன்னிலும் தீவிரமாக பிரச்சாரத்தை மேற்கொண்டேன்.<br /><br />சமதர்மம் வெற்றி பெற வேண்டுமானால், மக்கள் மனத்தில் குடிகொண்டு உள்ள கடவுள், மதம், சாஸ்திரம் பற்றிய முட்டாள்தனமான எண்ணங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்று எடுத்துரைத்தார்.<br /><br />(10.7.1965 அன்று முதுகுளத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை -விடுதலை 7.8.1965).<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-48101646688188065152013-02-17T05:44:34.617+05:302013-02-17T05:44:34.617+05:30
சமதர்மம் - சமநீதி மலர பகுத்தறிவைப் பயன்படுத்துக!
...<br />சமதர்மம் - சமநீதி மலர பகுத்தறிவைப் பயன்படுத்துக!<br /><br /><br />இறுதியாக தந்தை பெரியார் அவர்கள் அறிவுரையாற்று கையில் குறிப்பிட்டதாவது:- நமது நாட்டின் செல்வத்துக்கோ, படிப்புக்கோ மற்றபடி வளப்பத்துக்கோ குறைவேதுமில்லை. வேண்டிய அளவுக்கு மேல் உள்ளது. ஆனால், அது எங்கே போய் விட்டது என்றால் எல்லோருக்கும் கிடைக்கும்படி சரியானபடி பங்கிடப்படவே இல்லை.<br /><br />இப்போதுதான் பூமி ஒருவர் இடம் 500-1,000 வேலி என்று குவிந்து இருந்ததை ஆளுக்கு 30 ஏக்கருக்கு மேல் இருக்கக் கூடாது என்று பிரித்தார்கள். அதுபோலவே, 10 கோடி, 20 கோடி, 50 கோடி என்று ஒரு சிலரிடம் போய் குவிந்துள்ள பணத் தையும் உச்சவரம்பு கட்டி பாக்கியை அரசாங்கம் எடுத்துக் கொண்டு எல்லா மக்களுக்கும் பயன்படும்படி செய்ய வேண்டும்.<br /><br />எல்லா வளமும் இருந்தும் அது எல்லோருக்கும் கிட்டவில்லையென்றால், எல்லா வளமும் இருந்தும் அறிவு வளம் இல்லாத குறை ஒன்றுதான் காரணமாக இருக்கின்றது. மனிதன் மற்ற மிருகங்களிடம் இல்லாத பிரத்தியேகமான அறிவான பகுத்தறிவினைப் பெற்றுள்ளான்.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-39501266319953694582013-02-17T05:44:10.749+05:302013-02-17T05:44:10.749+05:30(ஈ) பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டங்களைக் கண்டிப...(ஈ) பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டங்களைக் கண்டிப்பாகப் போடக்கூடாது.<br /><br />(உ) ஜாதி சின்னங்களை குறிப்பாக பூணூலை யாரும் அணியக்கூடாது.<br />ஆவணி அவிட்டம் என்று கூறி பூணூலைப் புதுப்பிப்பது தடை செய்யப்பட வேண்டும்.<br /><br />(ஊ) தெருக்கள், ஊர்கள் பெயர்களில் உள்ள ஜாதிப் பெயர்கள், வணிக நிறுவனங்களில் இடம்பெறும் ஜாதிப் பெயர்கள் நீக்கப்படும் வகையில் சட்டம் இயற்றுமாறு தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.<br /><br />(எ) கோயில்களில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டத்தை செயல்பாட்டுக்குக் கொண்டுவர தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.<br /><br />ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களின் பிள்ளைகளுக்குத் தனி இடஒதுக்கீடு தேவை<br /><br />(ஏ) ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்து கொள்வோர்க்குப் பிறக்கும் குழந்தைகளை ஜாதியற்றவர் களாக அறிவித்து குறிப்பிட்ட சதவிகிதத்தில் அவர் களுக்கு இடஒதுக்கீடு (INTER CASTE QUOTA) அளிக்கப்பட வேண்டும். இந்த வகையான இடஒதுக் கீட்டின் சதவிகிதம் அதிகரித்துக் கொண்டே போக வேண்டும், ஜாதி அளவு கோல் இடஒதுக்கீட்டின் விகிதாச்சாரம் குறைந்து கொண்டு போகும் வகையில் சட்டத்திருத்ததத்தைக் கொண்டு வருமாறு மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.<br /><br />(அய்) தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடுகளைக் கட்டும்போது, தனித்தனி காலனிகளைக் கட்டாது, ஊருக்குள் பலரும் கலந்து வாழும் வகையில் கட்டித் தருவதே சமத்துவம், சகோதரத்துவம், சமூக ஒற்றுமைக்கு நிரந்தர வழிவகுக்கும் என்பதை மாநில, மத்திய அரசுகள் கவனத்தில் கொள்ள இம்மாநாடு வற்புறுத்துகிறது.<br /><br /><br />தீர்மானம் 10 :<br /><br />மக்கள் மத்தியில் ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஒத்த கருத்துள்ளவர்களை, அமைப்புகளை இணைத்து தமிழ்நாடு தழுவிய அளவில் மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.<br /><br />தீர்மானம் 11 :<br /><br />ஜாதி மறுப்பு, மத மறுப்பு திருமணங்களையும், காதல் திருமணங்களையும் - துணைவரை இழந்தோர், மணமுறிவு பெற்றோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான திருமணங்களையும் ஊக்குவிப்பது, மன்றல் தேடும் விழாக்களை நடத்துவது, அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது என்ற ஆக்க ரீதியான செயல்களில் ஈடுபடுவது என்று தீர்மானிக்கப் படுகிறது.<br /><br />தீர்மானம் 12 :<br /><br />சிலை திருட்டுப் போன்றவற்றிற்குக் காவல் துறையில் தனி உளவுத்துறை இருப்பது போல ஜாதி, மத மோதல்களைத் தொடக்க நிலையிலே தடுக்கும் வகையில், காவல்துறையில் தனிப் பிரிவு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று இம்மாநாடு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது.<br /><br />(அ) இன்னும் தேநீர்க்கடைகளில் இரட்டைக் குவளை முறை, சுடுகாடு மற்றும் சுடு காட்டுக்குச் செல்லும் பாதைப் பிரச்சினைகள், கோயில் திருவிழாக்களில் ஜாதியச் சிக்கல்கள் அவற்றின் காரணமாக கலவரங்கள் - இவற்றிற்கு இடம் இல்லாத அளவுக்கு இராணுவத் தீர்வு போல செயல்பாடுகள் அமைய வேண்டும் என்று இம்மாநாடு மாநில, மத்திய அரசுகளுக்குத் திட்ட வட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது.<br /><br />தீர்மானம் 13 :<br /><br />டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு அரசு உதவி செய்வது மகிழ்ச்சியளிக்கிறது. அதுபோல வறண்ட, நிலத்தடி நீர் குறைந்து போன மற்ற மாவட்ட விவசாயிகளுக்கும், குறிப்பாக பொள்ளாச்சி பகுதிகளில் தென்னை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கும் அரசு மானியம் வழங்க முன்வரவேண்டுமென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.<br /><br />தீர்மானம் 14 :<br /><br />ஊட்டி பிலிம் தொழிற்சாலை<br /><br />ஊட்டி பிலிம் தொழிற்சாலைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தும் அது இன்னும் வழங்கப்படாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி மய்ய அரசு தக்க நடவடிக்கை மேற்காண்டு விரைவாக ஊட்டி பிலிம் தொழிற்சாலைக்கு போதிய நிதி கிடைக்கச் செய்து ஊட்டி பிலிம் தொழிற் சாலை நன்கு செயல்பட ஆவன செய்ய மத்திய நிதி அமைச்சரையும் மத்திய அமைச்சரவையையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-7606431214620651742013-02-17T05:44:05.129+05:302013-02-17T05:44:05.129+05:30பொள்ளாச்சி திராவிடர் கழக மாநாட்டின் தீர்மானங்கள்
...பொள்ளாச்சி திராவிடர் கழக மாநாட்டின் தீர்மானங்கள்<br /><br /><br />டெல்டா அல்லாத வறண்ட மற்றும் நிலத்தடி நீர் இல்லாத மாவட்டங்களுக்கும் நிவாரணம் அளித்திடுக!<br /><br />இட ஒதுக்கீட்டுக்கு மட்டுமே ஜாதி தேவை; வேறு எந்த காரணத்துக்காகவும் முன்னிறுத்தப்படக்கூடாது<br /><br />பொள்ளாச்சி திராவிடர் கழக மாநாட்டின் தீர்மானங்கள்<br /><br />பொள்ளாச்சி மாநாட்டில் தீர்மானங்களை சு.வேலுச்சாமி முன்மொழிந்தார்.<br /><br />பொள்ளாச்சி, பிப். 16- மருந்தில் விஷம் கலப்பது போல, இடஒதுக்கீட்டுக்கு மட்டுமே ஜாதி அளவு கோல் பயன்படுத்தப்படவேண்டும்; வேறு எந்தக் காரணத்துக்காகவும் முன்னிறுத்தப்படக் கூடாது என்றும், டெல்டா மாவட்டங்கள் அல்லாத - வறட்சி மற்றும் நிலத்தடி நீர் இல்லாத பகுதிகளுக்கும் தமிழ்நாடு அரசு நிவாரண உதவி அளிக்க வேண்டும் என்பது உள்பட 14 முக்கிய தீர்மானங்கள் பொள்ளாச்சியில் திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று (15.2.2013) நடத்தப்பட்ட ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.<br /><br />தீர்மானம் 1 :<br /><br />ஜாதி, மத வெறிகளைத் தூண்டுவதோடு வன் முறைக்குத் தூபம் போடும் வகையில் பேசுகிறவர்கள், எழுதுகிறவர்கள், நடந்து கொள்பவர்கள் மீது காலந் தாழ்த்தாது சட்ட ரீதியான கடும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று இம்மாநாடு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.<br /><br />தீர்மானம் 2 :<br /><br />அரசியலுக்காக ஜாதியைப் பயன்படுத்தும் போக்கை இம்மாநாடு கண்டிக்கிறது. குறிப்பாக தலித்- தலித் அல்லாதார் என்று ஒரு புதிய முறையில் பிளவுபடுத்திட மேற்கொள்ளப்படும் சிந்தனை - அணுகு முறை - செயல்பாடுகள் அபாயகரமான திசைநோக்கி சமூகத்தை இழுத்துச் செல்லும் என்பதை எடுத்துக்காட்டி, சமூக எழுச்சி வரலாறு அத்தகையோரை மன்னிக்காது - மறக்காது என்பதைச் சம்பந்தப்பட்டவர்களுக்கு இம் மாநாடு சுட்டிக்காட்ட விழைகிறது.<br /><br />தீர்மானம் 3 :<br /><br />ஜாதி என்பதும் - அதன் விளைவான தீண்டாமை என் பதும் பகுத்தறிவுக்கும், அறிவியலுக்கும், மனிதத் தன் மைக்கும் விரோதமானதால் அந்தப் பிறவி பேதங்களை முற்றிலும் நிராகரித்து, மனிதர்களாக வாழ வேண்டும் என்று இம்மாநாடு தமிழ்ப்பெருங்குடி மக்களைக் கேட்டுக் கொள்கிறது.<br /><br />தீர்மானம் 4 :<br /><br />தீண்டாமை ஒழிப்பு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மிகச் சரியான முறையில், துல்லியமாக செயல்படுத்த இம்மாநாடு வலியுறுத்துகிறது.<br /><br />தீர்மானம் 5 : சமூகநீதிக் கண்ணோட்டத்தில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஆகிய மிகவும் முக்கியமான இவ்விரு சக்திகளும் இணைந்து போராடி பல உரிமைகளைப் பெற வேண்டிய நிலையில் இருப்பதை இம்மாநாடு சுட்டிக்காட்டி, இருகரங்களாக, தோள்களாக இணைந்து செயல்பட வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. நம்மில் ஒற்றுமை நீங்கின் ஆதிக்க சக்திகள் தலைஎடுக்க ஏதுவாகும் என்பதை இம்மாநாடு எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்டுகிறது.<br /><br />இச்சமூகங்களை வழிநடத்தும் தலைவர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் பிளவு மனப்பான்மையை, பகைமை உணர்ச்சியை மறந்தும் கூட ஏற்படுத்தாது, சமூகப் பொறுப்பு உணர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.<br /><br />தீர்மானம் 6 :<br /><br />தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கென்று ஒதுக்கப்பட்ட நிதியை வேறு காரியங்களுக்குப் பயன்படுத்தக்கூடாது என்று இம்மாநாடு அரசுகளை வலியுறுத்துகிறது.<br /><br />தீர்மானம் 7 :<br /><br />சட்டத்திருத்தம் தேவை<br /><br />இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத்தப்பட்டோருக்கிடையே பிரித்தாளும் முறையில் சட்டங்களையோ, ஆணைகளையோ இயற்றக்கூடாது என்று மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.<br /><br />தீர்மானம் 8 : இந்திய அரசமைப்புச்சட்டத்தின் 17ஆவது பிரிவில் தீண்டாமை (UNTOUCHABILITY) ஒழிக்கப்படுகிறது என்று இருப்பதை மாற்றி ஜாதி (CASTE) ஒழிக்கப் படுகிறது என்று அரசியல் சட்டத்திருத்தம் கொண்டு வருமாறு மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. இந்த வகையில் மாநில அரசுகளும், முற்போக்குச் சிந்தனை படைத்தவர்களும் வலியுறுத்த வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.<br /><br />தீர்மானம் 9 : (அ) ஜாதியைப் பாதுகாக்கும், ஊக்குவிக்கும் கீதை, மனுதர்மம் போன்ற வேத சாஸ்திர, புராண, இதிகாச நூல்களைத் தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.<br /><br />(ஆ) ஜாதி - தீண்டாமை என்பவை குற்றமானவை. மனிதநேயத்துக்கும், சகோதரத்துவத்துக்கும் எதிரா னவை என்ற உணர்வை தொடக்க நிலையிலேயே மாணவர்களுக்குப் போதிக்கும் வகையில் பாடத் திட்டங்களை வகுக்குமாறு மாநில, மத்திய அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.<br /><br />இட ஒதுக்கீட்டுக்கு மட்டுமே ஜாதி அளவுகோல்<br /><br />(இ) ஜாதி என்ற அளவுகோல் சமூகநீதிக் கண்ணோட்டத்தில் இட ஒதுக்கீட்டுக்காக மட்டும், மருந்தில் நோய்க்கொல்லியாக விஷம் சேர்க்கும் அளவு பயன்படுத்தப்படவேண்டும் என்றும், வேறு எந்தக் காரணத்துக்காகவும் ஜாதி முன்னிறுத்தப்படக்கூடாது என்றும் இம்மாநாடு அறிவித்துக் கொள்கிறது. இதுவும் கால வரை யற்றதல்ல; ஒரு சமனியம் பெறும் வகையில் மட்டுமே!<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-82979246615690466522013-02-16T19:31:38.465+05:302013-02-16T19:31:38.465+05:30
மரியாதை இல்லை
பிறர் உழைப்பில் படாடோப வாழ்க்கை ...<br />மரியாதை இல்லை<br /><br /><br /><br />பிறர் உழைப்பில் படாடோப வாழ்க்கை நடத்துவதும், அதிகப்படியான பொருள்களுக்கு அதிபதியாய் இருப்பதும் கண்ணியமான பெருமையான வாழ்க்கை என்று கருதப்படுகின்ற மூட நம்பிக்கை ஒழியவேண்டும். இதில் எத்தகைய ஒரு கவுரவமும், மரியாதையும் இல்லை.<br />(விடுதலை, _ 22.6.1973)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-73982880240021343102013-02-16T19:31:25.792+05:302013-02-16T19:31:25.792+05:30குறிப்பிட்டுச் சுட்டிக்காட்ட வேண்டுமானால்; 2011 பொ...குறிப்பிட்டுச் சுட்டிக்காட்ட வேண்டுமானால்; 2011 பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி வாய்ப்பை இழந்து, மூன்றாவது இடத்துக்கு வந்ததற்குப் பிறகு; நல்ல சமயமடா நழுவ விடாதே - என்று திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஜென்ம விரோதிகள் எனத் தம்மைத் தாமே நினைத்துக் கொண்டிருக்கும் ஒருசில பத்திரி கையாளர்கள் சேர்ந்து சதித் திட்டம் தீட்டி, திராவிட முன்னேற்றக் கழ கத்தை ஒழித்துக் கட்ட இதுவே சிலாக்கியமான தருணம் என்று முடிவெடுத்து காரியத்தில் இறங்கி இருப்பது கண்கூடு. இதற்கு மேலி டத்து ஆசீர்வாதமும் அரவணைப் பும் அறிவுரைகளும் உண்டு என்பதை அனைவரும் அறிவர். தீட்டப்பட்ட சதித் திட்டத்தின் தொடர்ச்சியாகத் தான் - கழக முன்னணி யினரைக் காயப்படுத்தி, கலகமூட்டிக் குழப்பம் ஏற்படுத்திடும் கற்பனையான செய்திகள், என்னைப் பற்றியும் எனது குடும்பத்தைப் பற்றி யும் இட்டுக் கட்டிய பொய்யுரைகள் அபாண்டமான முறையிலும், அதிர்ச்சியூட்டத் தக்க வகையிலும் வெளியிடப்பட்டு வருகின்றன. நமது கவனத்தைத் திசை திருப்புவதற் காகவே வெளியிடப்படும் அந்தச் செய்திகளை அவ்வப்போது மறுத்து விளக்கமளிப்பதும், சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்வதும் கால விரயத்தை ஏற்படுத்தும் என்பதால், அவற்றைப் பெரிதாக எண்ணி அலட்டிக் கொள்ளாமல், அமைதியாக அலட்சியப்படுத்தப்பட் டன. அலட்சியம் செய்ததையே ஆதாயமாகக் கருதி, ஆட்டைக் கடித்து . . . . .மாட்டைக் கடித்து ....... என்பார்களே அதைப் போல, அருவருக்கத்தக்க கட்டுக்கதைகளை, எவ்வித நாகரிகமுமின்றி வெளியிடத் தொடங்கியிருக்கிறார்கள். என்னைப் பற்றிக் கூட நான் எப்போதும் கவலைப்படுவதில்லை, ஆனால் ஒரு பெண்மணியைப் பற்றி, அதுவும் கணவனுடனும், குழந்தைகளுடனும் குடும்பம் நடத்தி வாழ்ந்து கொண்டு, கட்சிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டி ருப்பவரைப் பற்றி நாராச நடையில் கொச்சைப்படுத்தி எழுதுவது முறை தானா? தமிழ்நாட்டு மக்கள் அதையெல்லாம் பொறுத்துக் கொள் கிறார்களா? அந்தப் பத்திரிகையாளர் கள் தங்களுக்கும் குடும்பம் - பிள்ளை குட்டிகள் இருப்பதை மறந்து, சேற்றை அள்ளி வீசுகிறோமே, அதனால் கைகள் கறை ஆவதோடு, மற்றவர் மனம் எப்படியெல்லாம் வேதனைப்படும் என்பதைப் பற்றிக் கவலை கொள்ளாமல், செய்திகளை வெளியிடுகிறார்கள் என்றால், அவர்களுக்குப் பணம் தான் எல்லாம்; பண்பாடு - பத்திரிகா தர்மம் போன்ற நெறிமுறைகள் பழங்குப்பை தான்!<br /><br />சேற்றை வீசுவோர்மீது நடவடிக்கை<br /><br />நான் கடந்த எழுபது ஆண்டுகளுக் கும் மேலாகப் பத்திரிகையாள னாகவே வளர்ந்து வந்திருக்கிறேன். எனது கைகளைக் கொண்டே என்னை அடிப்பதா என்ற தயக்கத் தில் இதுவரை அமைதியோடு பொறுமை காத்து வந்தேன். பத்திரி கையாளர்கள் சிலர், என்னைப் பொறுமையின் விளிம்பிற்கே தள்ளிக் கொண்டிருப்பது எனக்குப் புரி கிறது. எனவே சேற்றை வாரி வீசுவோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து, சட்ட வல்லுநர்களின் ஆலோசனை பெற்று அமைப்பு ரீதியாக முடிவெடுத்து அறிவிக்கலாமா அல்லது கட்சி ரீதியாக அந்தப் பத் திரிகை அலுவலகத்தின் முன்னா லேயே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தலாமா என்றிருக்கிறேன்.<br /><br />கழகத் தோழர்கள், உள்நோக்கம் கொண்ட இத்தகைய செய்திகளைப் பற்றிக் கவலைப்படாமல் - சதித் திட்டத்தை நிறைவேற்ற இறுக்கிக் கட்டிக் கொண்டு கிளம்பியிருக்கும் இனவெறிக் கூட்டத்தின் செய்தி களையும், ஏடுகளையும் புறந்தள்ளி விட்டு - என்றும் போல் கட்சிப் பணி - மக்கள் பணி ஆற்றி, வெற்றி காண வேண்டும் என்று விரும்புகிறேன். குறிப்பாகக் கழகத் தோழர்கள் எத்தகைய ஏடுகள் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுகின்றன என் பதைப் புரிந்து கொண்டு, அத்தகைய இதழ்களை வாங்குவதில்லை, அவற் றைக் கையாலும் தொடுவதில்லை என்று அந்தந்த கிளைக் கழகத்தின் சார்பில் சூளுரை மேற்கொள்ள வேண்டுமென்றும், அதுபற்றிய செய் தியை முரசொலிக்கு அனுப்பிட வேண்டுமென்றும் கேட்டுக் கொள் கிறேன்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-3697468194732221872013-02-16T19:31:20.291+05:302013-02-16T19:31:20.291+05:30தமிழகத்தில் சில குறிப்பிட்ட ஏடுகளும், இதழ்களும் தா...தமிழகத்தில் சில குறிப்பிட்ட ஏடுகளும், இதழ்களும் தாங்கள் வெளியிடும் செய்திகளும் - செய்திக் கட்டுரைகளும் எப்படிப்பட்ட தீய விளைவுகளை ஏற்படுத்தும் என் பதைப் பற்றி எள்ளளவும் கருதிப் பார்க்காமல்; அப்படிக் கருதிப் பார்த்தால் தாங்கள் செய்து வரும் வியாபாரம் அடிபட்டுப் போய் விடுமோ என்ற அச்சத்தின் காரண மாக, எதையும் எழுதலாம், எப்படி வேண்டுமானாலும் வெளியிடலாம் என்று; கனி இருப்பக் காய் கவர்ந்து முகம் சுளிக்கும் காரியத்தைச் செய்து வருகின்றனர். இப்படிச் செய்வதால், விற்பனையாகும் பிரதி களின் எண்ணிக்கை கூடலாம். ஆனால் அது தற்காலிகமானது தான் என்பதை யும்; அவர்கள் வெளியிடும் செய்திகள் ஏற்படுத்துவது ஒரு வகை மயக்கமே - அந்த மயக்கம் மறு நொடியில் தெளிந்து விடும் என்பதையும்; கடைசியில் அவர் களுக்கே அது பாதகமாகி விடும் என்பதையும்; தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்; தர்மம் மறுபடி வெல்லும் என்பதையும் அவர்கள் உணராமல் இருப்பது தான், வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.<br /><br />சில பத்திரிகையாளர்களின் சதித் திட்டம்<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-13701088072068765142013-02-16T19:31:07.181+05:302013-02-16T19:31:07.181+05:30
இனவெறிக் கூட்டத்தின் ஏடுகளைப் புறந்தள்ளுக! தி.மு....<br />இனவெறிக் கூட்டத்தின் ஏடுகளைப் புறந்தள்ளுக! தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கை!<br /><br /><br />சென்னை, பிப்.16- இனவெறிக் கூட்டத்தின் இதழ்களை வாங்குவ தில்லை அவற்றைக் கையாலும் தொடுவதில்லை என்ற சூளுரையை கழகத் தோழர்கள் மேற்கொள்ள வேண்டுமென்று தி.மு.க. தலைவர் கலைஞர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.<br /><br />அவரது அறிக்கை வருமாறு:<br /><br />கருத்துச் சுதந்திரம் - பத்திரிகைச் சுதந்திரம் என்பவை ஜனநாயக நாட் டில் எந்த அளவுக்கு முக்கியமான வையோ; அதே அளவுக்கு முக்கிய மானவை சமூகப் பொறுப்பு - பத்திரிகாதர்மம் ஆகியவை என்பதை ஜனநாயக உரிமைகளிலும் - கடமை களிலும் நம்பிக்கையுள்ள எல் லோரும் ஏற்றுக் கொள்வர்.<br /><br />சமூகப் பொறுப்பு என்பதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படா மல், அதைக் காற்றில் பறக்க விடும் பத்திரிகைச் சுதந்திரம்; பத்திரிகை களுக்கான நெறிகளை அதாவது பத்திரிகா தர்மத்தைக் கிஞ்சிற்றும் பேணாத பத்திரிகைச் சுதந்திரம்; படிப்போர் மனங்களில் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சைக் கலக்கவும், ஜனநாயக சமூகத்தின் ஆணி வேரை அரிவாள் கொண்டு அறுக்கவும் பயன்படுமே அல்லாமல்; ஜனநாய கத்தைச் செழுமைப்படுத்தவோ, சமூகத்தை ஆரோக்கியப் படுத்தி ஆக்கப் பூர்வமான பாதையில் அழைத்துச் செல்லவோ, அணுவள வேனும் பயன்படாது.<br /><br />எப்படியாவது வருவாயை பெருக்கிக் கொண்டே போக வேண்டும் என்ற எண்ணம்<br /><br />பத்திரிகை உலகின் வியாபாரப் போட்டியில் வருமானமே முதன்மை யானது என்ற குறுகிய நோக்கம் ஆட்கொள்ளும்போது, சமூகப் பொறுப்பும் - பத்திரிகா தர்மமும் இற்று விழுந்து காய்ந்து போகத் தான் செய்யும். இப்படித் தான் வருவாயைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று நியதியை விதித்துக் கொள்ளாமல்; எப்படியாவது வருவாயைப் பெருக்கிக் கொண்டே போக வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி விடுமானால், பொறுப் புணர்வும் - தர்ம சிந்தனையும் கடைசி இடத்துக்குப் போய் விடும்.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-44051470564501750732013-02-16T19:30:29.736+05:302013-02-16T19:30:29.736+05:30
கச்சத் தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம்!
இந்திய...<br />கச்சத் தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யலாம்!<br /><br /><br />இந்தியக் கடற்கரையின் பரப்பளவு சுமார் 6000 கி.மீட்டர் தூரமாம். மூன்றரைக் கோடி மீனவர்கள் கடல் வளத்தை நம்பி வாழ்கிறார்கள்.<br /><br />தமிழ்நாட்டில் தனுஷ்கோடி தொடங்கி நாகப்பட்டினம் வரை 400 கி.மீ. தூரம் வரை உள்ள நீண்ட கடற்கரைப் பகுதியில் 175-க்கும் கூடுத லான ஊர்களில் நான்கு லட்சம் மீனவர்கள் கடல் வளத்தை நம்பி வாழ்கிறார்கள்.<br /><br />இவர்களுக்கான பாரம்பரிய உரிமை இப் பொழுது பரிதாபகரமான வகையில் பறிக்கப்பட்டு விட்டது. இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையோ எந்த மண்ணாங்கட்டியோ தமிழின மீனவர்களின் தலையில் கையை வைத்து விட்டது.<br /><br />சிங்களக் கடற்படை இந்தியக் கடல் எல் லைக்குள் அத்துமீறி நுழைவதுண்டு. தனுஷ் கோடித் தீவின் அலைக்குடா ஊருக்குள் புகுந்து அங்கு வாழ்ந்த தமிழின மீனவர்களின் குடிசை களை ஒரு முறை தீயிட்டுக் கொளுத்தியதும்கூட உண்டு; அதற்கான எதிர்வினை இந்திய தரப்பில் இல்லை.<br /><br />இந்திய அரசின் இத்தகைய அணுகுமுறை இலங்கையின் கையை மேலோங்கச் செய்து விட்டது.<br /><br />இலங்கையோடு இந்தியா போட்டுக் கொண்ட ஒப்பந்தங்கள் தமிழ்நாட்டுக்கோ தமிழ்நாட்டு அரசுக்கோ எந்தவித சம்பந்தமும் இல்லாமலேயே தன்னிச்சையாக நடந்து விட்டது.<br /><br />1974 ஜூன் 26 ஒப்பந்தத்தில் தமிழக மீனவர் களுக்கு மீன் பிடி உரிமை இருந்தது. இரண்டாவது ஒப்பந்தம் (23.3.1976) நெருக்கடி காலத்தைப் பயன்படுத்தி காதும் காதும் வைத்தாற்போல, கையுறை போட்டு முடித்துக் கொள்ளப்பட்டது அரசு செயலாளர்கள் மட்டத்தில். இது ஒரு ஜனநாயக அமைப்புக்கோ, அரச மைப்புச் சட்டத்தின் கோட்பாட்டுக்கோ உகந்த தல்ல.<br /><br />தமிழ்நாடு சட்டப் பேரவையில் இது குறித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருந்தும்கூட, இந்திய அரசு அவற்றையெல்லாம் பொருட் படுத்தியதே கிடையாது.<br /><br />இந்தியாவுடன் போடப்பட்ட எத்தனையோ ஒப்பந்தங்களை இலங்கைமீறி இருக்கிறது.<br /><br />நேரு- கொத்தவாவலை ஒப்பந்தம் (1954) சிறீமாவே - சாஸ்திரி ஒப்பந்தம் (1962), மீனவர் உரிமை ஒப்பந்தம் (1976), ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் (1987) போன்றவைகளை முழுமையான அளவில் இலங்கை சிங்கள அரசு நிறைவேற் றிடவில்லை என்கிறபோது, இலங்கையுடன் 1976இல் இந்திய அரசு செய்து கொண்ட ஒப் பந்தத்தை ரத்து செய்வதில் என்ன குற்றம் வந்து குடிபுகப் போகிறது?<br /><br />இவ்வளவுக்கும் கச்சத்தீவு நமக்குச் சொந்த மானது; அப்படி இருக்கும்பொழுது ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள நமக்கு அதிகமான உரிமையும், வாய்ப்பும் இருக்கவே செய்கின்றன.<br /><br />இராமேசுவரத்தில் 26.7.1997 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழக மீனவர்கள் பாதுகாப்பு மாநாடும் - கச்சத்தீவு மீட்பு மாநாடும் நடத்தப் பட்டன. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற அம்மாநாட்டில் சமதா கட்சித் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜார்ஜ் பெர்னாண்டசு அவர்களும் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப் படுவதைத்தடுத்து நிறுத்த வேண்டும்; தமிழர் களுக்குச் சொந்தமான கச்சத் தீவு மீண்டும் தமிழ்நாட்டிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அம்மாநாட்டில்.<br /><br />மாநாட்டின் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கச்சத்தீவு தமிழர்களுக்கே சொந்தம் அதற்கான வழக்குத் தொடுக்கப்படும் என்று மாநாட்டில் அறிவித்தார்.<br /><br />அறிவித்ததோடு மட்டுமல்லாமல் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுவும் தாக்கல் செய்யப் பட்டது. (29.7.1997) ஜஸ்டிஸ் திரு. ஜெயசிம்மபாபு அவர்களால் விசாரணைக்கும் ஏற்றுக் கொள் ளப்பட்டது. அது இன்னும் நிலுவையில் தான் உள்ளது.<br /><br />நாடாளுமன்றத்தின் ஒப்புதலையோ, தமிழ்நாடு அரசின் ஒப்புதலையோ பெறாமல் இரு அரசு அதிகாரிகள் செய்து கொண்ட ஒப்பந்தம் எப்படி செல்லுபடியாகும்?<br /><br />எல்லாவற்றிற்கும் மேலாக மக்கள் விழிப்புணர்ச்சி என்பதே மிகவும் முதன்மையானது. அந்த வகையில் டெசோ சார்பில் வரும் 18,19 நாட்களில் முறையே இராமேசுவரத்திலும் நாகை யிலும் நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் அர்த்தமுள்ள தாகும். கட்சிகளை மறந்து ஒத்த குரல் கொடுக்க வாரீர் என்று அழைக்கிறோம் - அழைக்கிறோம்!தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-12786065270112191502013-02-16T19:29:56.316+05:302013-02-16T19:29:56.316+05:30
கலைஞர் தலைமையில் தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பின் (ட...<br />கலைஞர் தலைமையில் தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) கலந்துரையாடல் கூட்டம்<br /><br /><br />கலைஞர் அவர்கள் தலைமையில் 25.2.2013 திங்கள்கிழமை காலை 11 மணியளவில் தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) கலந்துரையாடல் கூட்டம், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்.<br /><br />அப்பொழுது டெசோ அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.<br /><br />- டெசோதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-6098899032470424532013-02-16T19:29:34.529+05:302013-02-16T19:29:34.529+05:30மற்ற நாடுகளில் சூத்திரன் உண்டா? இதைத்தான் டாக்டர் ...மற்ற நாடுகளில் சூத்திரன் உண்டா? இதைத்தான் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் மற்ற நாடுகளில் பேதம் இருக்கிறது. இந்தியாவில் மட்டும்தான் படிக்கட்டு பேதம் இருக்கிறது என்று தெளிவாக சொன்னார்கள். சரஸ்வதியைப் பார்த்து கையெடுத்து கும்பிட்ட நமது பாட்டி, அவருடைய பேத்தி இன்றைக்கு வக்கீல், டாக்டர், இது சுயமரி யாதை இயக்கத்தின் சாதனை. ஜாதி சாவதில்லை, மனிதன் சாகிறான். சுடுகாட்டில் கூட ஜாதியை கொண்டு வந்து விட்டானே. ஜாதி என்ற விஷம் மனிதனைக் கொன்று விடும். இவ்வளவும் சொன் னதற்கு பின்னால், ஒருசிலர் கேட்கிறார்கள், இட ஒதுக்கீட்டில் மட்டும் ஜாதியை கேட்கிறீர்களே என்று காலம் காலமாக மனுதர்மத்தால் மறுக்கப்பட்ட கல்வி யை, நான்கு வர்ணத்தையும் நானே உண்டாக்கினேன் என்று கற்பித்தவர்களிடம் இருந்து பறித்து வேலைவாய்ப்பு பெற இடஒதுக்கீட்டின் பேரால்தான் சமத்துவத்தை, சமூகநீதியை நிலை நாட்ட முடியும்.<br /><br />தந்தை பெரியார் அவர்கள் தமது 95ஆவது ஆண்டில் ஜாதி ஒழிப்பு தொடர் போராட்டத்தை அறிவித்தார். வேதங்களின் வேர்களை அழித்தாலே ஜாதி ஒழிந்து விடும். எல்லா இடத்திலும் ஜாதியை ஒழித்துவிட்டோம். கோவில் கருவறையில் இருந்த அந்த ஜாதிப் பாம்பை கலைஞர் அவர்கள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்னும் சட்டம் மூலம் அதையும் அடித்து நொறுக்கினார். இப்போது உச்ச நீதிமன்றத்திற்கு இப்பிரச்சினை போயிருக்கிறது. நல்ல தீர்ப்பு விரைவில் வரும். ஆச்சாரியார் கொண்டு வந்த கல்வித்திட்டம் இன்றைக்கு வேறுபெயரால் உள்ளே நுழையப் பார்க்கிறது. இதைத் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம். ஈழத்தமிழரிடையே புகுந்து கொண்டுள்ள ஜாதியை ஒழிக்கவும் நாம் போராட வேண்டியிருக்கிறது. பெரியார் அங்கேயும் தேவைப் படுகிறார்.<br /><br />இன்றைக்கு முள்வேலி முகாமுக்குள் தமிழர்கள் அடைபட்டுக்கிடக்கிறார்கள். அங்கே மனித உரிமைகள் இல்லை. மனித உரிமைக்குழு இலங் கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது. இலங்கையை பற்றி உலகம் இன்றைக்கு புரிந்து கொண்டது. டெசோ அமைப்பின் நோக்கமே இதுதான். நமக்குப் பொது எதிரி ராஜபக்சேதான், கலைஞரல்ல! நமக்குள் யார் பெரியவர் என்பதல்ல பிரச்சினை. அனைத்து குரல்களும் ஒன்று சேர்ந்து பொதுஎதிரியை வீழ்த்தப் பயன்பட வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு விடியல் கிடைப்பதற்காக போராடும் டெசோ அமைப்பைப்பற்றி மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.<br />எவருடைய பாராட்டும் எங்களுக்கு தேவை யில்லை. ஜாதி - தீண்டாமை ஒழிந்தால்தான் ஈழத் தமிழர் வாழ்விலும் விடியல் ஏற்படும். எங்கே மனித உரிமைகள் நசுக்கப்பட்டாலும் அங்கே ஓடிச்சென்று அணைக்கும் தீயணைப்பு நிலையம் தான் திராவிடர் கழகம். இது சிறந்த கல்விச்சாலை! நோயால் , விபத்தால் செத்தோம் என்பதை விட கொள்கையால் செத்தோம் என்பதுதான் எங்களுக்குப் பெருமை. மனிதநேயம், சமத்துவம், சமவாய்ப்பு அனைவருக்கும் கிடைப் பதற்கு, பெரியாரை துணை கொண்டு மூச்சுக்காற்றாய் செயல்படுவோம்! என்று தமிழர் தலைவர் அவர்கள் உணர்ச்சிஉரை நிகழ்த்தினார்.<br /><br />கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர்கள் டாக்டர் துரை.சந்திரசேகரன், மருத்துவர் பிறை நுதற்செல்வி, கழக அமைப்புச் செயலாளர் உரத்தநாடு குணசேகரன், கழகச் சொற்பொழிவாளர் கோபி.கருப் பண்ணன், கோவை மாவட்டத் தலைவர் பிரகஸ்பதி, செயலாளர் இரகுநாத், திருப்பூர் மாவட்டத் தலைவர் ஆறுமுகம், செயலாளர் சக்திவேல், மேட்டுப் பாளையம் மாவட்ட தலைவர் வேலுச்சாமி, செய லாளர் வெள்ளியங்கிரி, நீலமலை மாவட்டத் தலைவர் கருணாகரன், செயலாளர் ராஜேந்திரன், ப.க. தலைவர் குமாரராசா, புலியகுளம் வீரமணி, பொள்ளாச்சி பராதி, செந்தில்நாதன், பழ.அன்பரசு, கணியூர் மயில்சாமி, பொள்ளாச்சி செழியன், குறிச்சி சிற்றரசு, தமிழ்முரசு, கு.வெ.கி.செந்தில், ப.க.செயலாளர் கண்ணன், மே.ப.ரங்கசாமி, கணியூர் மாயவன் மற்றும் ஏராளமான கழகத் தொண்டர்களும், மகளிரணி, இளைஞரணி பொறுப்பாளர்களும், ஏராளமான கழத்தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். நகர தி.க. தலைவர் வீரமலை நன்றி கூற கூட்டம் இரவு 9 மணிக்கு முடிவு பெற்றது.<br /><br />நீலமலை மாவட்டத்தின் திராவிடர் கழகம் சார்பில் 102 விடுதலை சந்தா தொகையை மா. த. கருணாகரன், மா.செ. ராசேந்திரன் ஆகியோர் தமிழர் தலைவரிடம் வழங்கினர்.<br /><br />தொகுப்பு: கோவை மாவட்ட<br />செய்தியாளர் அன்பரசு.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-22146186498266847382013-02-16T19:29:28.482+05:302013-02-16T19:29:28.482+05:30
பொள்ளாச்சியில் ஜாதி - தீண்டாமை எதிர்ப்பு மாநாடு.....<br />பொள்ளாச்சியில் ஜாதி - தீண்டாமை எதிர்ப்பு மாநாடு..<br /><br /><br />நோயால், விபத்தால் - சாகக் கூடாது! கொள்கையால் செத்தோம்... என்பதே பெருமை...<br /><br />ஆயுதமில்லா - அறிவுப்புரட்சியை செய்தது சுயமரியாதை இயக்கம்...<br /><br />தமிழர் தலைவர் சங்கநாதம்!...<br /><br />நீலமலை மாவட்டத்தின் சார்பில் முதல் தவணையாக விடுதலை சந்தா 102க்கான தொகையினை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் மாவட்ட தலைவர் கருணாகரன், மாவட்ட செயலாளர் நாகேந்திரன், பொதுச் செயலாளர் டாக்டர் பிறைநுதல் செல்விஆகியோர் வழங்கினர். உடன் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன், வழக்கறிஞர் பாண்டியன், பொறியாளர் தி. பரமசிவம், சி. மாரிமுத்து ஆகியோர் உள்ளனர். (பொள்ளாச்சி - 15.2.2013)<br /><br />கோவை, பிப்.16- கோவை - பொள்ளாச்சியில், ஜாதி தீண்டாமை எதிர்ப்பு மாநாடு 15.2.2013 மாலை 6 மணிக்கு திருவள்ளுவர் திடலில், பொள்ளாச்சி மாவட்ட தி.க. தலைவர் பொறியாளர் பரமசிவம் தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில், மாவட்ட தி.க. செயலாளர், மாரிமுத்து வரவேற்புரையாற்ற, மண்டல தி.க. தலைவர் வசந்தம் இராமச்சந்திரன், மண்டல செயலாளர், ஆ. பாண்டியன், பெரியார் பெருந்தொண்டர் இராதா, மண்டல இளைஞரணி செயலாளர் சந்திரசேகரன், மணடல மகளிரணி செயலாளர் கலைச்செல்வி, மேட்டுப் பாளையம் மாவட்டத் தலைவர் வேலுசாமிஆகியோர் முன்னிலையி லும் மிகுந்த எழுச்சியுடன் துவங்கிய இந்நிகழ்ச்சியில், தமிழர் தலைவர் அவர்கள் சங்கநாத உரை நிகழ்த் தினார். அவர் தமதுரையில்,<br /><br />பெரியாருக்குப்பின் இந்த இயக்கம். ஆலமரம் போல் வேரூன்றி அதன் தொடர்ச்சி, விழுதுகளாய் இன்றைக்கு பரவிக் கிடப்பதை இந்த உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இது ஒரு கொள்கை இயக்கம்..! அடுத்த தலைமுறைக்கான இயக்கம், பழைய கொள்கை வீரர்கள், மறைந் தும் மறையாமல் இருக்கின்ற தியாகச் செம்மல்களை நினைத்துப் பார்க் கிறேன்; 1960ஆம் ஆண்டு அரசியல் சட்டத்தை கொளுத்தும் போராட் டத்தில் கைதானவர் இந்தப் பகுதியை சேர்ந்த ஆனைமலை நரசிம்மன்; அவரும், நானும் கழகப் பொதுச் செயலாளர்களாக, தந்தை பெரியா ரால் நியமிக்கப்பட்டவர்கள், தந்தை பெரியார் அவர்களின் வடநாட்டு சுற்றுப் பயணத்தின்போது ஆனை மலை நரசிம்மன் அவர்களும், நானும் உடன் சென்றோம்.<br /><br />எத்தனை எதிர்ப்புகள்! ஏளனங் கள்! லட்சாதிபதியாக இருந்த நிலை மறந்து சாதாரண மனிதராக கை கட்டிக் கொண்டு எங்களோடு இருந்த நரசிம்மன், ஆனைமலை, அனீபா, திருமூர்த்தி இப்போதும் எங்களோடு வந்து கொண்டிருக்கிற 88 வயதைக் கடந்த பெரியார் பெருந்தொண்டர் பொள்ளாச்சி இராதா, அரசுப் பணியில் இருந்தபோதே பெரியார் கொள்கைக்கு உரம் சேர்த்த பொறி யாளர் பரமசிவம் - இவர்களைப் போன்றவர்கள் இந்தக் கொள்கையை தாங்கி நின்றார்கள்; அதன் தொடர்ச்சிதான் இன்றைக்கு ஏராளமான இளைஞர் இன்றைக்கு இந்த இயக்கத்தில்... ஆலமரம் போன்ற இந்த இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது! எவராலும் அழிக்கமுடியாது.<br /><br />21ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக் கிறோம்; நாயை விண்வெளிக்கு அனுப்பினார்கள்; குரங்கை அனுப்பினார்கள்; ஆனால் இங்கோ, அனுமார் கடலைத் தாண்டிச் சென்றான் என்று கதையளந்து, கற்பனைக் கதைகளை நம்பிக் கொண்டிருக்கிறார்கள். சிந்திக்க வேண்டாமா? ஜாதி பற்றிப் பேசுகிறார்கள்! அறிவியலுக்கு விரோதமாக நடந்து கொள்கிறார்கள்... ஜாதியைப் பாதுகாப்ப வர்களுக்கு ஒரு கேள்வி? இவர் இன்ன ஜாதி என்று அடையாளங் காண முடியுமா? இவர் செட்டியார், முதலியார், கவுண்டர், வன்னியர் என்று அடையாளம் காட்ட முடியுமா? ஜாதி அடையாளம் உண்டா? ஆளைப் பார்த்து ஜாதியை சொல்ல முடியுமா? ஜாதி என்பது கற்பனை மூளைக்கு போட்ட விலங்கு. அது புகுத்தப்பட்டது. அதனால் நாம் பிரிக்கப்பட்டோம். ஆதாரமில்லாத அறிவியலால் ஒப்புக் கொள்ள முடியாத ஒன்றுதான் ஜாதி என்னும் விலங்கு; அதை ரோட்டுசக்மட்டியால் அடித்தால் தான் உடையும்.<br /><br />இல்லாததை ஒழிக்கத்தான் நாம் போராட வேண்டியிருக்கிறது. எங்களுக்கு என்ன ஜாதி என்று தெரிய வேண்டிய தேவையில்லை. எங்களை அடையாளப்படுத்துவது கறுப்புச்சட்டை ஒன்றுதான். இன்றைக்கு எல்லாக்கட்சியும் கறுப்புச் சட்டை போடுகிறார்கள். 65 ஆண்டுகள் ஓடி விட்டதே, சுதந்திரம் பெற்று!, பஞ்சமன் இருக்கலாமா? சூத்திரன் என்ற சொல் இருக்கலாமா?<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-90498960932466930402013-02-16T19:28:53.019+05:302013-02-16T19:28:53.019+05:30
மேடைகள் பலவாயினும் ஒத்த குரல் கொடுத்து ஈழத் தமிழர...<br />மேடைகள் பலவாயினும் ஒத்த குரல் கொடுத்து ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுப்போம்!<br /><br /><br />கொலைகாரன் ராஜபக்சே தண்டனை பெற்றாக வேண்டும்<br /><br />மேடைகள் பலவாயினும் ஒத்த குரல் கொடுத்து<br /><br />ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுப்போம்!<br /><br />தமிழர் தலைவர் அறிக்கை ஜெனிவாவில் நடைபெற உள்ள அய்.நா. மனித உரிமைக் கூட்டத்தில் கொலைகாரன் ராஜபக்சேவுக்குத் தண்டனை கிடைத்தாக வேண்டும். இங்குள்ள தமிழர்களாகிய நமக்கு மேடைகள் பலவானாலும் ஒத்த குரல் கொடுத்து ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:<br /><br />ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பறித்து, அந்நாட்டின் மண்ணின் மைந்தர்களான, அந்நாட்டு குடிமக்களான ஈழத்துச் சனங்களாகியவர்களுக்கு சாதாரண அடிப்படை மனித உரிமைகளைக்கூடப் பறித்து, அவர்களையெல்லாம், யுத்தக் குற்றவாளிகளைவிட மிக மிகக் கொடுமையான வகையில் நடத்தி வருகின்றது - அங்குள்ள சிங்களப் பேரினவாத இராஜபக்சே அரசு.<br /><br />இதற்குமுன், உலகத்தின் பற்பல நாடுகளின் கண்களில் எல்லாம் மண்ணைத் தூவி தனது அரசு, பயங்கரவாதிகளை எதிர்க்கும் அரசே தவிர, அப்பாவி பொது சனத்தை குறி வைப்பதல்ல; அடுத்த ஒரு நல்ல அரசியல் தீர்வை நாங்கள் ஏற்படுத்துவோம் என்றுகூறி, அதை அப்படியே காற்றில் பறக்க விட்டதோடு, தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம்; தமிழ்ப் பெயர்கள் (பல நூற்றாண்டுகளாக) இருக்கும் ஊர்களையெல்லாம் சிங்களமயமாக்கி, பண்பாட்டுப் படையெடுப்பை மிகவும் தீவிரமாக நடத்தி, தமிழ் இனத்தின் அடையாளத் தினையே ஒட்டு மொத்தமாக அழித்திடும் நீண்ட கால இன அழிப்பு, இன ஒடுக்கல் கொள்கைகளையே அன்றாட நடைமுறையாக்கி வருகிறது!<br /><br />பயங்கரவாதமா? சுதந்திரப் போரா?<br /><br />முன்பு அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப் பட்டதிலிருந்து, அமெரிக்காவோ வேறு பல நாடுகளோ எது பயங்கரவாதம், எது சுதந்திரப் போர் என்று பிரித்துப் பார்க்கும் தன்மையை இழந்துவிட்டனர்.<br /><br />இந்திய அரசுக்கு ஏதோ ஒரு தனி அஜெண்டா; இலங்கை இராணுவத்திற்கு முக்கிய ஆயுத விநியோகம் முக்கிய கருவிகளைப் பயன்படுத்தப் பயிற்சி தந்து தீவிரவாதத்தினை தடுத்து நிறுத்துகிறோம் என்ற பிரச்சாரத்திற்குப் பலியானார்கள்!<br /><br />அராஜக வழியில் படுகொலை!<br /><br />இதன் விளைவு...? உலக நாடுகள் இன்று லேசாகக் கண் விழித்துப் பார்க்கும் நிலையில், அய்.நா. கூட மிரட்டப் பட்டு (இலங்கை அரசால்) அதன் கடமையிலிருந்து பின்வாங்கி, தமிழர்கள் பல்லாயிரம் பேர்களை பலியாக் கவும், 90 ஆயிரம் தமிழச்சிகள் விதவைகள் ஆன நிலைமை, பல்லாயிரவர் காணாமற் போனவர்களாகவும், சட்ட முறைகளுக்கு மாறான அராஜக வழியில் கொல் லப்பட்டனர்.<br /><br />இவை எல்லாம் இப்போதுதான் மெல்ல மெல்ல ஆனால் உறுதியாக வெளிச்சத்திற்கு வருகின்றன!<br /><br />ஜெனிவா, மனித உரிமை ஆணையம் அதன் பார்வையை விசாலப் பார்வையாக ஆக்கி வருவது, ஓரளவு நொந்த தமிழர்கள் உள்ளத்திற்குச் சற்று ஆறுதலைத் தருகிறது!<br /><br />டெசோவின் பணியும் பயணமும்<br /><br />டெசோ துவங்கி எவரது விமர்சனமும் காமாலைக் கண் பார்வையால் கனன்று விழும் வெட்டிப் பேச்சுகள் பற்றிக் கவலைப்படாமல், நம் கடன் ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுவதே என்பதாக பணியாற்றி வருகிறோம்; சர்வதேசத்தவரின் பார்வைக்கு அநீதி, அக்கிரமங்களைக் கொண்டு செல்லும் பணியும், இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வரும் பணியும் நமதுதொடர் பணிகளாக இருந்து வருகிறது!<br /><br />நமது பொது எதிரி இராஜபக்சே, கோத்தபய இராஜ பக்சேக்களின் சிங்களப் பேரினவாத அரசே தவிர, இங் குள்ள விமர்சகர்களான அரசியல் ஏவுகணைகளான பரிதாபத் திற்குரியவர்கள் மீது அல்ல என்பதே, எமது அணுகுமுறை!<br /><br />எல்லோரும் அங்கே தனித்தனிதான்<br />ஏகமனதாகி அவர் நம்மை எதிர்ப்பதெங்கே?<br /><br />என்ற புளகாங்கிதத்துடன் நவீன ஹிட்லர் இராஜ பக்சே திருப்பதிக்கு வந்து செல்கிறான்!<br /><br />தமிழர் உணர்வை மீட்டெடுப்போம்!<br /><br />அடுத்த மாதம் (மார்ச்) ஜெனிவாவில் நடைபெறவிருக் கும் மனித உரிமை ஆணையத்தில் போர்க் குற்றவாளி யான இராஜபக்சேகளுக்குத் தக்க தண்டனை கிடைத் தாக வேண்டும்.<br /><br />இங்கே, மேடைகள் பலவாயினும் குரல் ஒன்றே என்று தமிழர்கள் கட்சி, ஜாதி, மதம் இவைகளைத் தாண்டி ஓர் குரலில். ஈழத் தமிழர் வாழ்வுரிமையை மீட்டெடுக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டு முழு மூச்சும் குடிசெய் வார்க்கில்லை பருவம் என்ற குறள்வழி பணியாற்றி எஞ்சிய எம் தமிழர் சனங்களைக் காப்பாற்றிடும் பணியும், தமிழர் மீதான பண்பாட்டுப் படையெடுப்பினை முறியடித் திடும் வகையில் ஒத்த குரல் கொடுப்போம்!<br /><br /><br />கி.வீரமணி<br />தலைவர், திராவிடர் கழகம்<br /><br />சென்னை<br />16.2.2013தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-55114611239668618702013-02-16T19:28:34.656+05:302013-02-16T19:28:34.656+05:30காஷ்மீரில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு
சிறீநகர், பிப...காஷ்மீரில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு<br /><br />சிறீநகர், பிப். 16- காஷ்மீரில் நேற்று முன் தினம் இரவு மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டது.<br /><br />5 நாள் இடைவெளிக் குப் பின் காஷ்மீரின் பல பகுதிகளில் நேற்று முன் தினம் ஊரடங்கு தளர்த் தப்பட்டது.<br /><br />இந்நிலை யில் அப்சல் குரு நினைவாக வரை நேற்று பேரணி செல்ல, ஹூரி யாத் மாநாட்டு அமைப் பின் தலைவர் சயீத் அலி ஷா கிலானி நேற்று முன்தினம் அழைப்பு விடுத்ததையடுத்து காஷ் மீரில் நேற்று முன்தினம் இரவு முதல் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-4585904990130192662013-02-16T19:28:22.990+05:302013-02-16T19:28:22.990+05:30
கல்கியும் கைவிடுகிறது...
கேள்வி: பிரதமர் வேட்பா...<br />கல்கியும் கைவிடுகிறது...<br /><br /><br />கேள்வி: பிரதமர் வேட்பாளராக சுஷ்மா சுவராஜை அறிவிக்க சிவசேனா ஆதரவு என்ற செய்திபற்றி?<br /><br />பதில்: சிவசேனா ஆதரவு சுஷ்மாவுக்கு இருக்கலாம். ஆனால் பெரும்பாலான இந்திய மக்களின் ஆதரவு நரேந்திர மோடிக்குத் தான் இருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. பா.ஜ.க. ராமர் கோயில் விவகாரத்தை மறுபடி மய்யப்படுத் தினாலே வோட்டு குவி யும் என்று நினைக் கிறது. ஹய்யோ, பாவம்!<br />(கல்கி 17.2.2013 பக்கம் 14)<br /><br />கல்கி அவதாரமே கைவிட்டபின் மரத்துக் குப்பின் ஒளிந்து வாலியைக் கொன்ற ராம அவதாரம் எந்த மூலைதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com