tag:blogger.com,1999:blog-1474608369333206681.post4114243811257568136..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: ஈழத்தமிழர்களுக்காக எங்களை விட வேகமாகச் செயல்படக் கூடியவர்களா?-கி.வீரமணி தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-19432519784080611702012-08-27T19:36:55.442+05:302012-08-27T19:36:55.442+05:30விடுதலையின் பணி!
விடுதலை என்னும் தமிழர்களின் பாது...விடுதலையின் பணி!<br /><br />விடுதலை என்னும் தமிழர்களின் பாது காப்புக் கேடயமான ஏட்டிற்கு அரை நூற் றாண்டு காலம் ஆசிரியராக இருந்து சாதனை புரிந்த ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர் களுக்குப் பாராட்டு விழா - சென்னை பெரியார் திடலில் 25.8.2012 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.<br /><br />1962 ஆம் ஆண்டில் இதே நாளில்தான் தனது முதல் தலையங்கத்தை எழுதினார் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் (25.8.1962).<br /><br />வரியில்லாமல் ஆட்சி நடக்குமா? -என்பதுதான் அந்தத் தலையங்கம். அன்று தொடங்கி, ஆசிரியர் அவர்களால் எழுதப்பட்ட தலையங்கங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 13,499; எழுதப்பட்ட அறிக்கைகள் 1926.<br /><br />இந்தத் தலையங்கங்களும், அறிக்கைகளும் பல துறைகள் சம்பந்தப்பட்டவை. விடுதலை யின் இந்த எழுத்துகள் எத்தனை எத்தனையோ மாற்றங்களுக்கு விதை ஊன்றி இருக்கின்றன.<br /><br />ஆட்சியின் ஆணைகள் மாற்றப்பட்டுள்ளன - புதிய சட்டங்கள் பிறப்பிப்பதற்கும் கைமுதல் கொடுத்திருக்கின்றன.<br /><br />தலையங்கப் பகுதிகளில் சில நேரங்களில் தந்தை பெரியார் அவர்களின் அறிக்கைகளும் கையொப்பத்துடன் வெளியாகியுள்ளன.<br /><br />எழுத்துரிமை பறிக்கப்பட்டதற்காக தலை யங்கப் பகுதி வெற்றிடமாக விடப்பட்டதும் உண்டு.<br /><br />முரசொலி நாளேட்டின் ஆசிரியர் திரு. செல்வம் சட்டமன்றக் கூண்டில் ஏற்றப்படுவதன் மூலம் எழுத்துரிமை அ.இ.அ.தி.மு.க. அரசால் பறிக்கப்பட்டதற்கு விடுதலை ஏடு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அதன் அடையாளமாக தலையங்கப் பகுதி வெற்றிடமாக விடப்பட்டது (21.9.1992).<br />அரசு ஊழியர்களுக்கு இருந்த இரகசிய குறிப்பேடு முறையை எதிர்த்து எத்தனை எத்தனைத் தலையங்கங்கள் தீட்டப்பட்டன! கடைசியில் வெற்றியும் கிடைத்தது.<br /><br />நுழைவுத் தேர்வை எதிர்த்து எத்தனை எத்தனை நுட்பமான தலையங்கங்கள் - கடைசியில் விடுதலைக்கே வெற்றி! வெற்றி!!<br /><br />விடுதலையின் வரலாற்றில் அரசு நூலகங் களில் விடுதலை இடம்பெறத் தடை செய்யப் பட்டதுண்டு. 1950 இல் அப்படி தடை செய்யப் பட்டபோது விடுதலையில் ஒரு தலையங்கம் (3.2.1950). தலைப்பு வைக்கோலுக்குள் விடுதலை விளக்கு என்பதாகும்.<br /><br />ஆட்சியாளர் சுடர்விட்டு எரியும் விடுதலை விளக்கையெடுத்து வைக்கோல் போருக்குள் ஒளித்து வைத்துவிட்டார்கள். பொதுமக்கள் காண முடியாதபடி, விளக்கை மறைத்து விட்டதாக ஆட்சியாளர் முடிவு என்று எழுதியது.<br /><br />இப்பொழுதுகூட தமிழ்நாட்டை ஆளும் அ.இ. அ.தி.மு.க. அரசால் விடுதலை அரசு நூலகங் களுக்குப் போடக்கூடாது என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன் விளைவு 50 ஆயிரம் சந்தாக்கள் தமிழர்களிடம் திரட்டப்பட்டு புதிய வாசகர்கள் கிடைத்துள்ளனர்.<br /><br />விடுதலைக்குள்ள தனித்தன்மை ஒன்று உண்டு. ஆளும் கட்சியினை எதிர்க்கும் நிலைப் பாடு எடுக்கப்பட்டபொழுதும்கூட, அந்த ஆட்சியில் ஏதாவது நன்மை விளைவிக்கும் காரியங்கள் நடைபெற்றால், அதனை வரவேற்று எழுதிடத் தயங்குவதில்லை.<br /><br />எதிர்த்து எழுதுவதில் எவ்வளவு வேகம் இருக்குமோ, அதேபோல் ஆதரிக்க வேண்டிய அவசியம் இருந்தால் விடுதலை தன் கண் களை மூடிக்கொள்ளாமல் மனந்திறந்து பாராட்டவே செய்யும்.<br /><br />அத்தகைய பண்பட்ட விடுதலை தமிழர் இல்லந்தோறும் ஒளிவிளக்காகத் திகழ வேண் டாமா? தமிழர்கள் எண்ணிப் பார்க்கட்டும்! 27-8-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-30265669120921666742012-08-27T19:34:39.390+05:302012-08-27T19:34:39.390+05:30லகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவக் கல்லூரியில் இலங்...லகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவக் கல்லூரியில் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்குப் பயிற்சியா? தமிழர் தலைவர் கண்டனம்<br /><br /><br />நீலகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவப் பயிற்சி கல்லூரியில் இலங்கை இராணுவ அதிகாரி களுக்குப் பயிற்சி அளிக்கப்படுவதைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:<br /><br />நீலகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் இம்மாதம் 19 ஆம் தேதிமுதல் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கதாகும்.<br /><br />தாம்பரம் விமானப் படையில் பயிற்சி<br /><br />சென்னை - தாம்பரம் விமானப் படை நிலையத்தில் இலங்கை இராணுவத்துக்குப் பயிற்சி அளிப்பதை எதிர்த்து தமிழ்நாட்டில் வலுவான குரல் கிளம்பியதையடுத்து தாம்பரத்திலிருந்து பெங்களூருவுக்குப் பயிற்சி அளிப்பதை மாற்றினர். அதுவே ஒரு தவறான முடிவாகும். ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த - கொன்று குவிக்க இருக்கிற ஒரு இராணுவத்துக்குப் பயிற்சியைத் தாம்பரத்தில் அளித்தால் என்ன? பெங்களூருவில் அளித்தால் என்ன? இது ஓர் ஏமாற்று வேலைதான்.<br /><br />ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாளா?<br /><br />ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பதுபோல மீண்டும் இலங்கை இராணுவ அதிகாரி களுக்கு நீலகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவக் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்படுகிறது என்றால் இதன் பொருள் என்ன?<br /><br />தமிழ்நாடு அரசின் சார்பிலும், முக்கிய எதிர்க்கட்சிகள் சார்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வந்தும், மத்திய அரசு இப்படி நடந்துகொள்வது தமிழர்களின் உணர்வைக் கொச்சைப்படுத்துவதாகும்.<br /><br />டெசோ மாநாட்டுத் தீர்மானம்<br /><br />12.8.2012 அன்று சென்னையில் டெசோ சார்பில் நடைபெற்ற மாநாட்டிலும் இத்தகைய பயிற்சியை அளிக்கக் கூடாது என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.<br /><br />மத்திய அரசு ஈழத் தமிழராக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டுத் தமிழர்களாக இருந்தாலும் சரி - அவர்களை அலட்சியப்படுத்தும் தன்மையில் நடந்துகொள்வதாகவே கருதுகிறோம்.<br /><br />மத்திய அரசின் நோக்கம் என்ன?<br /><br />அந்த நோக்கம் தங்களுக்கு இல்லை என்பதை சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட முறையில் வெளிப்படை யாகக் காட்டிக்கொள்ள மத்திய அரசு கடமைப் பட்டுள்ளது.<br /><br />தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற் படையால் தாக்கப்படும் பிரச்சினையிலும் மத்திய அரசு பொறுப்பாக நடந்துகொள்ளவில்லை என்பதும் வெளிப் படை.<br /><br />உலகத் தமிழர்கள் மத்தியில் உருவாகிவரும் சிந்தனை;<br /><br />சுண்டைக்காய் நாடான இலங்கையிடம் இந்திய அரசு ஏன் இப்படி நடந்துகொள்ளவேண்டும்? எந்தக் காரணத் துக்காக அப்படி நடந்துகொண்டாலும் சரி, ஈழத் தமிழர் களுக்கும் (இந்தியாவின் தெற்கேயுள்ள மிகப்பெரிய வரலாற்றுக்குச் சொந்தமான தமிழின மக்களின் தொப்புள்கொடி - ரத்த உறவுக்காரர்கள்) தமிழ்நாட்டுத் தமிழர்களான மீனவர்களுக்கும் இலங்கைப் பயங்கரவாத அரசால் மேற்கொள்ளப்படும் வன்முறை நடவடிக்கை களுக்கு எந்த வகையில் (இராணுவப் பயிற்சி உள்பட) துணைபோகும் வகையில் இந்திய அரசு நடந்துகொண்டு வருவது - உலகத் தமிழர்கள் மத்தியிலே புதிய சிந்தனை களைத் தோற்றுவிக்க வழிவகுக்கக் கூடியதாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.<br /><br />31 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்திலும்<br />சேர்த்துக் கொள்க!<br /><br />எனவே, கழகத் தோழர்களே, வரும் 31 ஆம் தேதியன்று காவிரி நீர்ப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை, சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு எனும் நான்கு பொருள்களை மய்யப்படுத்தி மாவட்ட தலைநகரங்களில் கழகத்தின் சார்பில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களுடன் இந்தியாவில் இலங்கை இராணுவத்தினருக்குப் பயிற்சி அளிப்பதைக் கண்டிப்பதையும் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.<br /><br />திருவாரூர் <br />27.8.2012<br /><br />கி.வீரமணி <br />தலைவர்,<br />திராவிடர் கழகம்<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-81654478176557411832012-08-27T10:33:20.624+05:302012-08-27T10:33:20.624+05:30நல்ல பதிவுநல்ல பதிவுindrayavanam.blogspot.comhttps://www.blogger.com/profile/07135049783028909703noreply@blogger.com