tag:blogger.com,1999:blog-1474608369333206681.post4013708177755211481..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: காமன்வெல்த்-தமிழர்களின் உணர்வுகளை மதிக்காத மத்திய அரசைப்பற்றி...கி.வீரமணிதமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-34881338468572808462013-11-02T18:50:03.142+05:302013-11-02T18:50:03.142+05:30ஒரு மறுப்பு!:நாயக்கர் முதல் மந்திரிக்கு உபசாரம் செ...ஒரு மறுப்பு!:நாயக்கர் முதல் மந்திரிக்கு உபசாரம் செய்தது<br /><br />தமிழ்நாடு பத்திரிகையில் ஈரோடு ரெயில்வே ஸ்டேஷனில் ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் முதலானவர்கள் கனம் முதல் மந்திரியை வந்து சந்தித்து உபசரித்தார்கள் என்றும் சுதேசமித் திரனில் ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் டாக்டர் சுப்பராயனைக் கண்டு பேசினார் என்றும் எழுதப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு பத்திரிகைகளும் முறையே மந்திரிக்கு உபசாரம் மந்திரிகளின் பிரசாரம் என்ற தலைப்பு களின் கீழ் இதை எழுதியிருக்கின்றனர்.<br /><br />எனவே, இதைப் படிக்கிறவர்கள் சந்தேகப்படக்கூடும். என்ன வெனில் மந்திரி சுப்பராயன் முதலியவர்களின் அக்கிரமமான நடத்தைகளை ஆதரிப்பதற்காகவும், மேன்மை தங்கிய கவர்னர், கவர்னர் பதவிக்கு லாயக்கில்லை, ஆதலால் அவரை திருப்பி அழைத்துக்கொள்ள வேண்டுமென்று கோவை மகாநாட்டில் தீர்மானம் கொண்டுவந்த ஒருவர் அதே மந்திரிக்கு ரயிலில் உபசாரம் செய்தார் என்பதாக ஏற்படுமானால் அவருக்கு (தீர்மானம் கொண்டு வந்தவருக்கு) எவ்வளவு யோக்கியப் பொறுப்பு இருக்கும் என்பதாக ஜனங்கள் நினைக்கக்கூடும் என்பதற்காகவும்,<br /><br />மந்திரி தனது வேலையைக் காப்பாற்றிக் கொள்ளும் முறையில் அவர் செய்யும் பிரசாரத்தில் நமக்குப் பங்கு இருந்தது என்று பலர் நினைக்க இடமுண்டாகும் என்கிற எண்ணத்தின் பேரிலும், அந்த இரண்டு பத்திரிகைகளின் கூற்றையும் மறுக்கக் கடமைப்பட்டவனாக இருக் கிறேன். எனது நண்பர் ஸ்ரீமான் பி.டி.ராஜன் அவர்கள் தான் 26ஆம் தேதி மெயிலில் நீலகிரியிலிருந்து வருவதாக தந்தி கொடுத் திருந்ததால் அவரை வரவேற்க நான் ரயிலுக்குப் போயிருந்தேன். அப்போது ஸ்ரீமான் ராஜன் அவர்களும், டாக்டர் சுப்பராயன் அவர்களும் ஒரே வண்டியில் இருந்ததால் ஒருவருக்கொருவர் வந்தனம் செய்து கொண்டோம். நீலகிரிமலையில் மழை உண்டா என்று கேட்டேன். மந்திரி ஆம் என்றார்.<br /><br />இதே மாதிரி மந்திரி கேட்ட ஒரு கேள்விக்கு நான் ஆம் என்றேன். இதற்குள் ஸ்ரீமான் ராஜனவர்களின் சாமான்கள் வண்டியி லிருந்து இறக்கப்பட்டு விட்டதால் இருவரும் டாக்டர் சுப்பராயனிடம் பயணம் சொல்லிக்கொண்டு புறப்பட்டு விட்டோம். மந்திரி இலாகா நியமனத் திற்காகவும், அவ்விலாகாவிலுள்ள ஆவலாதி களுக்காகவும், பலர் அங்கு வண்டிக்குள்ளாகவே கூடிவிட்டார்கள். இதுதான் நடந்த விஷயம். இவற்றைத் திரித்து நிருபர்கள் பத்திரிகைகளுக்கு எழுதி இருப்பது சரியல்லவென்றே கண்டிக்கிறேன்.<br /><br />மந்திரிகளை நான் பார்ப்பது எனது நிலைக்கு உயர்வு தாழ்வு என்றாவது கருதி நான் இம்மறுப்பை எழுதவில்லை. அவசியம் நேர்ந்தால், அல்லது நண்பர்கள் என்கிற முறையில், ஒருவரை ஒருவர் காணவும், அளவளாவவும் கடமைப்பட்டவர்களே யாவோம். ஆனால், இந்த சந்தர்ப்பத்தில் விஷமத் தனமான தலையங்கமிட்டு ஜனங்கள் தப்பர்த்தம் கொள்ளும்படி எழுதியிருப்பதால் மறுக்க நேரிட்ட தற்கு வருந்துகிறேன்.<br /><br />- குடிஅரசு - அறிவிப்பு - 31.07.1927தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-65497631021626074452013-11-02T18:49:36.933+05:302013-11-02T18:49:36.933+05:30
டெல்லி கிருஷ்ணனும் - தமிழ்நாட்டுக் கிருஷ்ணனும்: ச...<br />டெல்லி கிருஷ்ணனும் - தமிழ்நாட்டுக் கிருஷ்ணனும்: சித்திரபுத்திரன்<br /><br /><br />டெல்லியில் உள்ள பாலகிருஷ்ண சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி என்கிற பண்டி கையின்போது தீண்டாதவர்கள் என்கிறவர்களை எல்லாம் கோவி லுக்குள் அனுமதிக்கப்பட்டிருப்ப தாக தமிழ்நாடு பத்திரிகையில் காணப்படுகிறது. புராணங்களின்படி கிருஷ்ணன் என்பதாக ஒரு சுவாமியோ, ஆசாமியோ இருந்ததாக நாம் ஒப்புக் கொள்வதானால் அது ஒரே சாமியாகத் தான் இருந் திருக்கலாமே தவிர, டெல்லிக்கு ஒரு கிருஷ்ணனும், தமிழ்நாட்டுக்கு ஒரு கிருஷ்ண னும் இருந்திருக்க முடியாது.<br /><br />அப்படியிருக்க டெல்லி கிருஷ்ணன் தீண்டாதவர்கள் கோவிலுக்குள் போனால் ஓடிப்போகாமல் கோவில்களுக் குள்ளாகவே தைரியமாய் உயிருடன் இருக்கும்போது, நமது தமிழ்நாட்டுக் கோவில்களில் உள்ள கிருஷ்ணன் மாத்திரம் தீண்டாதவர்கள் உள்ளே போனால் கோவிலைவிட்டு ஓடிப்போவதோ அல்லது ஒரே அடியாய் செத்துப்போவதோ ஆனால் இந்த மாதிரி கிருஷ்ணனை வைத்து பூஜை செய்வ தால் நமக்கு என்ன பலன் அவரால் உண்டாகக் கூடும்?<br /><br />ஒரு மனிதன் உள்ளே வந்தால் தாக்குப் பிடிக்காத கிருஷ்ணன் யாருக்கு என்ன செய்ய முடியும்? ஆதலால் தமிழ் நாட்டு கிருஷ்ணனை துரத்திவிட்டு டெல்லி கிருஷ்ணனைத்தான் தருவித்துக் கொள்ளவேண்டுமேயல்லாமல் இந்த மாதிரி சக்தியில்லாத, கிட்டப்போனால் ஓடிப்போகிற கிருஷ்ணன் நமக்கு அரை நிமிஷங்கூட கண்டிப்பாய் உதவவே உதவாது.<br /><br />- குடிஅரசு - கட்டுரை - 28.8.1927தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-73889182505146229052013-11-02T18:41:36.514+05:302013-11-02T18:41:36.514+05:30
தஞ்சை நகர மன்ற தலைவரின் தகாத பேச்சுகள்
ஆசிரியருக...<br />தஞ்சை நகர மன்ற தலைவரின் தகாத பேச்சுகள்<br /><br />ஆசிரியருக்குக் கடிதம்<br /><br />தஞ்சை நகர மன்ற தலைவரின் தகாத பேச்சுகள்<br /><br />நான் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் 2003 முதல் தஞ்சை நகர தி.க. செயலாளர் பொறுப்பில் இருந்து கொண்டு இயக்கப்பணி செய்து வருகிறேன். என் துணைவியார் மு.ஜெயலட்சுமி தஞ்சை நகர 3-ஆவது வட்ட திமுக நகர் மன்ற உறுப்பினராக உள்ளார். கடந்த 7.10.2013 அன்று தஞ்சை நகராட்சி சார்பில் கரந்தைப் பகுதியில் மக்கள் குறை கேட்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தஞ்சை நகர் மன்றத் தலைவர் தஞ்சை தொகுதி சட்டமன்ற உறுப்பினர், கரந்தை பகுதி நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளார்கள்.<br /><br />குறை கேட்கும் சமயத்தில் 3-ஆவது வட்டத்தைச் சேர்ந்த செல்லியம்மன் கோயில் தெரு தனபால் என்பவர் தனது வீட்டுக்கு ஒரு ஆண்டாக குடி தண்ணீர் வரவில்லை என்று சற்று கடுமையாக கேட்டுள்ளார். அது சமயம் என் துணைவியாரும் எங்கள் வார்டில் தண்ணீர் சரியாக வரவில்லை என்று கூறியிருக்கிறார். இது தொடர்பாக நகர் மன்றத் தலைவர் சாவித்திரி கோபால் என்பவர் முகாம் நடந்த இடத்தில் தக்க பதில் அளிக்காமல், மறு நாள் (8.10.2013) அன்று நகர் மன்றத் தலைவர் என்னுடைய அலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் 3-ஆவது வார்டைச் சேர்ந்த அரசுப் பணியி லிருந்த ஓய்வு பெற்ற ஒருவன், அவன் வீட்டுக்கு ஒரு ஆண்டாக தண்ணீர் வரவில்லை என்று சொல்கிறான். உங்கள் பெண்டாட்டியும் தண்ணீர் வரவில்லை என்று சொல்கிறார். என்னிடம் நேரில் வந்து சொல்லாமல் குறை கேட்கும் முகாமில் எப்படி சொல்லலாம். கரந்தை பகுதியில் உள்ள திமுக 3 வார்டுகளிலும் உள்ள பொதுமக்கள் பொய்யான கோரிக்கை மனு கொடுத்து இருக்கிறார்கள் என்று கரந்தையில் ஒலி பெருக்கி வைத்து விளம்பரம் செய்வேன். மூன்று வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் நடைபெறுவதை நிறுத்தி விடுவேன் என்று கடுங்கோபத்துடன் என்னை மிரட்டினார். நான் என் துணைவியாரை விசாரிக்கிறேன் என்று கூறிவிட்டு அலைபேசியை வைத்துவிட்டேன்.<br /><br />மக்கள் குறை கேட்கும் முகாம் நடைபெற்ற விவரத்தை என் துணைவி யாரிடம் கேட்டபோது தெருக்களுக்கு தண்ணீர் சரியாக வரவில்லை என்று தான் சொன்னேன். மற்றபடி தவறாக எதுவும் சொல்லவில்லை என்று கூறினார். இதன் பிறகு நான் 9.10.2013 அன்று அலைபேசியில் மிரட்டியது குறித்து நகர் மன்றத் தலைவர் சாவித்திரி கோபால் அவர் அறையில் நேரில் சந்தித்து விவரம் கேட்டேன். அப்போதும் மக்கள் குறை கேட்கும் முகாமில் தண்ணீர் வரவில்லை என்று உங்கள் பெண்டாட்டி எப்படி சொல்லலாம்? அலுவலகத்தில் என்னிடம் நேரில் வந்துதானே சொல்ல வேண்டும் என்று ஆத்திரம் பொங்க கேட்டார். அதற்கு நான் என் துணைவியார் தவறாக கேட்கவில்லையே அவ்வாறு அவர் கேட்டது தவறு என்று உங்களுக்கு பட்டிருந்தால் அங்கேயே முகாம் நடந்த இடத்தில் கவுன்சிலரை கேட்க வேண்டியது தானே என்றவுடன், உங்கள் செல்போன் நம்பர்தானே இங்கு இருக்கிறது என்றார். ஏன் முரணாக பதில் சொல்லுறீங்க என்று கேட்டதும் மிகவும் கோபத்துடன் உங்களையெல்லாம் நாற்காலியில் உட்கார வைத்துப் பேசுவதே தப்பு என்று சொன்னார். அவருடைய எதிர்பாராத வார்த்தையில் அதிர்ச்சி அடைந்த நான் தொடர்ந்து வாதம் செய்தால் மேலும் அசிங்க படுத்துவார் என்று எண்ணி உடனடியாக அவர் அறையை விட்டு வெளியே வந்தேன். நான் அவரிடம் தவறாகவும் பேசவில்லை, தவறாகவும் நடந்து கொள்ளவில்லை. அவ்வாறு இருக்கும்போது நாற்காலியில் உட்கார வைத்துப் பேசுவது தப்பு என்று ஏன் சொன்னார் என்ற விவரம் தெரிய வில்லை. ஒரு வேளை அவர் உயர்ஜாதி (பாப்பாத்தி) பெண்மணியாகவும் நான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவன் என்ற எண்ணமா? அல்லது தி.க.காரனை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பேசினாரா? என்ற விவரம் தெரியவில்லை. எனவே இந்த நிகழ்வு தொடர்பாக கண்டனம் தெரிவிக்கும் வகையில் மேற்படி செய்தியை விடுதலையில் வெளியிட வேண்டும் என்று கணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.<br /><br />- கரந்தை சு. முருகேசன், நகரச் செயலாளர், தி.க. தஞ்சாவூர்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-60133114622251382102013-11-02T18:39:17.750+05:302013-11-02T18:39:17.750+05:30
கலைஞர்மீது காய்ச்சல்!
மோடியைப் பிரதமர் நாற்காலியி...<br />கலைஞர்மீது காய்ச்சல்!<br />மோடியைப் பிரதமர் நாற்காலியில் உட்கார வைத்தே தீருவது என்று, ஒற்றைக்காலில் ஊசி முனையில் அமர்ந்து தவம் இருக்கும் திருவாளர் சோ ராமசாமி, தமது துக்ளக் இதழில் (30.10.2013 பக்.21) கேள்வி ஒன்றுக்கு அளித்த பதில் வருமாறு:<br /><br />கேள்வி: ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தை, குஜராத் அரசு முறையாகச் செயல்படுத்தவில்லை என்று, சி.ஏ.ஜி. குற்றம் சாட்டியுள்ளாரே! இதற்கு உங்கள் பதில் என்ன?<br /><br />பதில்: இதற்கு உங்கள் பதில் என்ன என்று என்னை நீங்கள் கேட்பதற்கு நான் என்ன குஜராத் அரசா?<br /><br />என்று பதில் எழுதியுள்ளார். சோவின் அறிவு நாணயம் எந்தத் தன்மையது - பதில் சொல்லும் தரம் எந்தத் தகுதியானது? என்பதற்கு இது ஒருபதம்.<br /><br />மோடியைப் பற்றியும் அவர் ஆட்சியையும் பற்றிக் கேட்டால் இதே பாணியில்தான் பதில் சொல்லி வந்திருக்கிறாரா?<br /><br />பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடிக்குப் பயங்கரவாதிகளால் ஆபத்து இருப்பதாக நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு இதே பாணியில் பதில் சொல்வதாக இருந்தால் என்ன சொல்லியிருக்க வேண்டும்? நான் என்ன சி.பி.அய். இயக்குநரா இதையெல்லாம் தெரிந்து வைப்பதற்கு என்று சொல்லவில்லையே! இன் றைக்கு, இந்தியத் தலைவர்களில் பாதுகாப்பு மிகவும் தேவைப்படுகிறவர், மோடிதான் என்பதில் சந்தேகமே இல்லை, என்று பதில் சொல்லுகிறாரே எப்படி?<br /><br />மோடியைக் காப்பாற்ற முடியவில்லை என்றால், நழுவி ஓடுவது, அல்லது எதிர்க் கேள்வி போட்டுத் தப்பிப்பது - இதுதான் சோவின் சூரத்தனம் போலும்!<br /><br />2ஜிபற்றி சி.ஏ.ஜி. சொன்னால் அத்திரிபாட்சா கொழுக்கட்டை என்று தாவி குதிப்பார். அதே சி.ஏ.ஜி. குஜராத் முதல் அமைச்சர் பற்றி குற்றம் சுமத் தினால் நான் என்ன குஜராத் அரசா என்று குறுக்கு வழியில் தப்பித்து ஓடப் பார்ப்பார்.<br /><br />உண்மையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தில், குஜராத் படுபாதாளத்தில் விழுந்து கிடக்கிறது.<br /><br />குழந்தைகள் இறப்பு விகிதம் ஆயிரத்திற்கு 62 குஜராத்தில்; பிற மாநிலங்களிலோ 12 முதல் 14 வரைதான்!<br /><br />மற்ற மற்ற மாநிலங்களில் பெண்களின் ஆயுள் காலம் 75 என்றால், குஜராத்தில் வெறும் 64 ஆண்டுகள்தான்.<br /><br />அதே சி.ஏ.ஜி. 2012இல் குஜராத் மாநிலத்தில், நடைபெற்ற ஊழல் ரூ.16 ஆயிரம் கோடி என்று கூறியுள்ளார் - சி.ஏ.ஜி. அறிக்கை என்றால், அது 2ஜி மட்டும்தான் - திமுக சம்பந்தப்பட்டதுதான் - அதற்கு மட்டும்தான் சோ அய்யர் வாளால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.<br /><br />இன்னொரு கேள்வி:<br /><br />வரும் மக்களவைத் தேர்தலில் மோடியுடன் கை கோர்க்க கலைஞர் முன் வந்தால், அந்தக் கூட்டணிகளுக்கு உங்கள் ஆதரவுண்டா?<br /><br />சோவின் பதில்: அவசியமே இல்லை. அது தானாகவே தோற்கும்; என் உதவி தேவைப்படாது என்கிறார்.<br /><br />இந்தியா பூராவும் மோடியின் செல்வாக்குப் பறப்பதாக தம் பட்டம் அடிக்கும் திருவாளர் சோ திமுகவோடு கூட்டணி சேர்ந்தால் தோற்கும் என்கிறாரே இதன் பொருள் என்ன? (தமிழ் நாட்டிலே பி.ஜே.பி. இருக்கும் நிலையில் தி.மு.க.வுடன் கூட்டுச் சேர்ந்தால் பிஜேபிக்கும் இடம் கிடைக்கும் என்று அவரால் எழுத முடியாது. அப்படியொரு கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்பது வேறு சங்கதி)<br /><br />மோடி பிரதமராக வரவேண்டும் என்பதைவிட கலைஞர் மீதான வெறுப்பு என்பது பூணூலில் நெருப்புப் பிடித்ததுபோல் கொதிக்கிறது.<br /><br />அவர் வந்தால் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பார்; செம்மொழிக்கு சிம்மாசனம் கிடைக்கும், இடை இடையே தமிழன் தமிழ்ப் பண்பாடு, தமிழீழம், பகுத்தறிவுக் கொள்கை என்றெல்லாம் பேசிக்கொண்டே இருப்பார்.<br /><br />பொறுக்குமா பூணூல் கோத்திரங்களுக்கு? அதுதான் கலைஞர்மீது பாய்ந்து பிராண்டுவ தற்குக் காரணம்; பார்ப்பனர்களுக்குத் தெரிவது தமிழர்களுக்குத் தெரிவதில்லையே என்ன செய்வது!தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-27144708651516308422013-11-02T18:38:42.883+05:302013-11-02T18:38:42.883+05:30
சொல்லவேண்டும்
பார்ப்பனியமும், மத ஆதிக்கமும் ஒழி...<br />சொல்லவேண்டும்<br /><br /><br />பார்ப்பனியமும், மத ஆதிக்கமும் ஒழிந்தாலொழிய இந்தியாவில் யோக்கியமான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர்பார்க்க முடியாது. பார்ப்பனிய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன்னாலும் தீராது என்றுதான் சொல்லவேண்டும்.<br />(குடிஅரசு, 17.8.1930)<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-4701450701130829352013-11-02T18:38:11.039+05:302013-11-02T18:38:11.039+05:30
இந்து ஏட்டில் ஆர்.எஸ்.எஸ். பற்றி எழுதிய பெண் எழுத...<br />இந்து ஏட்டில் ஆர்.எஸ்.எஸ். பற்றி எழுதிய பெண் எழுத்தாளருக்கு கொலை மிரட்டல்<br />புதுடில்லி, நவ.2- சர்தார் வல்லபாய் படேல் பற்றி கட்டுரை எழுதிய பெண் பத்திரிகையாள ருக்கு ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் அஜய் மாக் கன் புகார் கூறினார். இச்சம்பவத் துக்குக் கடும் கண்டனம் தெரி வித்த அவர், இது குறித்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.<br /><br />இது தொடர்பாக டில்லியில் செய்தியாளர்களிடம் அஜய் மாக் கன் வியாழக்கிழமை கூறியதாவது:<br /><br />ஆங்கில நாளிதழில் பெண் பத்திரிகையாளர் வித்யா சுப்பிர மணியன் சர்தார் வல்லபாய் படேல் கால நிகழ்வு தொடர்பாக கட்டுரை எழுதினார். அதைத் தொடர்ந்து அவருக்கு ஆர்எஸ் எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப் புகள் மிரட்டல் விடுத்ததாக கடந்த 15-ஆம் தேதி டில்லி நாடா ளுமன்ற சாலை காவல் நிலையத் தில் புகார் அளித்தார். அதில் தனக்கு தொலைபேசி வாயிலாக வும் உடல் ரீதியாகவும் குண்டு வீசி கொலை செய்து விடுவதாகவும் ஆர்எஸ்எஸ், விஸ்வ ஹிந்து பரி ஷத் அமைப்புகளைச் சேர்ந்த வர்கள் மிரட்டல் விடுப்பதாக வித்யா சுப்பிரமணியன் கூறியுள் ளார். இந்த விவகாரம் தொடர் பாக உரிய முறையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி டில்லி காவல்துறைக்கு உத்தர விடும்படி மத்திய உள்துறை அமைச் சர் சுஷீல் குமார் ஷிண்டே வுக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்.<br /><br />பத்திரிகை சுதந்திரத்தைப் பாது காப்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. சமூகத்தைப் பிரதிபதி லிக்கும் நிகழ்வுகளை ஆய்வு செய்து கட்டுரை எழுதும் பத்திரி கையாளரை அதுவும் பெண் பத்திரிகையாளருக்கு மிகவும் இழிவான முறையில் ஆர்எஸ்எஸ் அமைப்பு விடுக்கும் மிரட்டல் ஏற்றுக்கொள்ள முடியாதது. கண்டனத்துக்குரியது என்றார் அஜய் மாக்கன்.<br /><br />இது குறித்து கருத்து தெரி வித்த மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே, அஜய் மாக்கனின் கடி தத்தை மத்திய உள்துறைச் செய லாளர் அனில் கோஸ்வாமிக்கு அனுப்பியுள்ளேன். உரிய நடவ டிக்கை எடுக்கப்படும். ஜனநாயகத் தில் ஓர் அமைப்பு தொடர்பான விமர்சனங்களை ஏற்றுக் கொள் ளும் பக்குவம் சமூக அமைப்பு களுக்கு இருக்க வேண்டும். மிரட் டல் விடுவது சரியல்ல என்றார்.<br /><br />இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லேகி கருத்து கூறுகையில் அஜய் மாக் கனின் கடிதத்துக்கும் எனக்கும் தொடர்பு இல்லை என்று வித்யா சுப்பிரமணியனே தொலைக்காட் சிக்கு அளித்த பேட்டியில் கூறி யுள்ளார். இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி ஆதாயம் பெற காங்கிரஸ் முயற்சிக்கிறது என்றார்.<br /><br />இதற்கிடையே, வித்யா சுப்பிரமணியன் புகார் குறித்து நாடாளுமன்ற காவல் நிலைய துணை ஆணையர் எஸ்.பி.எஸ். தியாகியிடம் கேட்டதற்கு பெண் பத்திரிகையாளர் அளித்த புகார் மீது இந்திய தண்டனைச் சட்டம் 506-ஆவது பிரிவின்படி (குற்றம் புரியும் நோக்குடன் அச்சுறுத்து வது) முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அவர் புகார் கூறிய அதே நாளில் அதை மேல் விசாரணைக்காக தமிழ்நாடு காவல்துறைக்கு தில்லி காவல் துறை அனுப்பி விட்டது என்றார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-54035943797075060552013-11-02T18:35:36.229+05:302013-11-02T18:35:36.229+05:30
அடுத்த பிசினஸ் ஆரம்பம்!
தீபாவளி இன்றோடு முடிந்த...<br />அடுத்த பிசினஸ் ஆரம்பம்!<br /><br /><br />தீபாவளி இன்றோடு முடிந்தது - காசைக்கரியாக்கியாயிற்று; அடுத்த பிசினஸ் ஆரம்பிக்கப்பட வேண்டாமா?<br /><br />கந்தசஷ்டி நாளை முதல் தொடக்கமாம்; சூரசம்ஹாரம் நவம்பர் 8ஆம் தேதி என்றுஎழுத ஆரம்பித்து விட்டனர்.<br /><br />பக்தி என்பது பிசினஸ் என்று சொன்ன வாரியார் இன்று இருந்தால் அவர் வாயில் சாக்கரையைத்தான் அள்ளிக் கொட்ட வேண்டும்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-38897247717474855322013-11-02T18:34:59.212+05:302013-11-02T18:34:59.212+05:30
தீபாவளி கொண்டாடுவோரே, வாழ்த்துச் சொல்வோரோ சிந்தனை...<br />தீபாவளி கொண்டாடுவோரே, வாழ்த்துச் சொல்வோரோ சிந்தனை செய்வீர்!<br /><br />தீபாவளி - நரகாசுரன் கதை கட்டியது பார்ப்பனரே<br /><br />தமிழ்க்கடல் மறைமலை அடிகளாரின் கருத்து<br /><br />கண்ணன், நரகாசுரனைக் கொன்ற நாளின் நினைவுக் குறியாக தீபாவளி நாள் கொண்டாடப்படுவதாயிற்று என்னும் கதை பிற்காலத்தில் பார்ப்பனர் கட்டி விட்டதொன்றாகும். பார்ப்பனர் தமது உயிர்க் கொலை வேள்விக்கு உடன்படாத நரகாசுரன் என்னும் மன்னன் ஒருவனை தமக்குத் துணையாயிருந்த தமிழ் மன்னன் கண்ணனை ஏவிக் கொலை செய்தனர்<br /><br />- தமிழர் மதம் என்ற நூலில் பக்கம் 200-201)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-18480834085200585962013-11-02T07:09:59.318+05:302013-11-02T07:09:59.318+05:30புதுப்பா
காசா? கடவுளா?
காசியில் இருக்கும் கடவு...புதுப்பா<br /> <br /><br />காசா? கடவுளா?<br /><br />காசியில் இருக்கும் கடவுளுக்கும்<br />காசினியில் வாழும் மனிதனுக்கும்<br />காசுமட்டும் இருந்தால் ஏகமதிப்பு!<br />காசுமட்டும் இல்லாவிடில் ஏதுமதிப்பு!<br /><br />கடவுளுக்கும் காசுக்கும் ஓட்டம்<br />கண்டுகழிக்க மானுடக் கூட்டம்<br />காசிடம் கடவுள் தோற்கிறது<br />காசைத்தான் அதுகள் ஏற்கிறது (பிச்சையெடுத்தல்)<br /><br />காசுபணம் பறிப்பதற் காகவே<br />கற்பனைக் கடவுள்களை விதைத்தனர்<br />விண்ணையும் மண்ணையும் காட்டியே<br />விற்பனையில் மனிதநேயத்தைப் புதைத்தனர்<br /><br />காசுபொருள் இருக்கும் கோவிலில்<br />கடல்போல் மனிதக் கூட்டம்<br />காசில்லா கோவில் என்றாலே<br />காணலையே மக்கள் நடமாட்டம்<br /><br />- மின்சாரம் வெ.முருகேசன், விருதுநகர்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-14148982614410866222013-11-02T07:07:11.356+05:302013-11-02T07:07:11.356+05:30இதுதான் பார்ப்பனீயம்!
திருவாளர் சோ என்று ஒருவர்...இதுதான் பார்ப்பனீயம்!<br /> <br /><br />திருவாளர் சோ என்று ஒருவர் இருக்கிறார். நடுநிலைக்கே அவர்தான் குத்தகைதாரர் என்று பார்ப்பன ஊடகங்களால் முடிசூட்டப் பட்டவர். நம்ம சூத்திர முண்டங்கள் சிலதுகளும் இதனை வழிமொழிவதுண்டு. இரட்டைநாக்குப் பேர்வழியான இந்தப் புளுகுணி தன் இனத்தின் நலனை மட்டுமே முன்னிறுத்திப் பேசும்; எழுதும். பல நூறுமுறை இதன் பார்ப்பனக் குள்ளநரித்தனத்தை நாம் தோலுரித்திருக்கிறோம். இதோ இது அண்மையில் நடந்தது. அக்டோபர் 18 அன்று பா.ஜ.க.வைச் சேர்ந்த நரவேட்டை மோடி சென்னை வந்திருந்தார். சென்னைப் பல்கலைக் கழக மண்டபத்தில் வடநாட்டு சோ-வான அருண்சோரியின் நூலை வெளியிட்டார். அதனைப் பெற்றுக்கொண்ட துக்ளக் சோ அய்யர்வாள் பிரதமர் மன்மோஹன் சிங்கைக் கேலி செய்து பேசினாராம். பேசியதோடு மன்மோஹன்சிங் எப்படி சோனியா, ராகுலுக்கு அடங்கி இருக்கிறார் என்பதை நடித்துக்காட்டினாராம். அதனை மோடி ரசித்தாராம்.<br /><br />சரி, அவர் நடித்துக்காட்டட்டும். இதில் நமக்கொன்றும் கவலை இல்லை; ஆனால், சோனியா, ராகுலுக்குப் பணிவதை விடக் கேவலமாக தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குக் குனிவதையே மந்திரிமார்கள் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனரே, இதனை இதுவரை எத்தனை முறை இந்த நடுநிலை(?) நாற்றமெடுக்கும் சோ கேலி செய்திருப்பார்? இந்த முறை ஜெயலலிதா ஆட்சிப் பொறுப் பேற்கும் போதே அமைச்சர்கள் அந்தக் குனி குனிந்தனரே, எதிரே இந்த சோ உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்தாரே, அங்கு மட்டும் எப்படி இவரது நடுநிலை வேலை செய்யவில்லை.<br /><br />மன்மோஹன் சிங்கைக் கேலி செய்யும் சோ அய்யர், தன்மானத்தை அடகுவைக்கும் அந்த மேடைக்கு முன்னே அமர்ந்திருக்கலாமா? தெரிந்துகொள்ளுங்கள் தமிழர்களே... ஒரு பார்ப்பன அம்மையாரின் காலில் ஒரு தமிழன் விழுவதை ரசிப்பது சோ பார்ப்பனரின் குணம். அது அந்த இனத்துக்கே உரிய தனிக்குணம்.<br /><br />அடுத்து கருமாதிப் பத்திரிகைக்கு வருவோம். தினமல(ம்)ர் என்றொரு நாளிதழ் இருக்கிறது.இதற்கு தமிழ், தமிழினம், திராவிடம், ஈழத்தமிழர் என்றால் பேதியாகிவிடும். அவ்வளவு அலர்ஜி. தமிழின வளர்ச்சிக்குப் போராடுபவர்களை அவ்வளவு கேலி செய்யும். தி.க., தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க,. என கொள்கை முழங்கும் கட்சிகளையெல்லாம் சிறுமைப்படுத்தும்.<br /><br />ஆனால், இதனிடம் சில நாட்களுக்கு முன் ஒரு மாற்றம். கடந்த வாரம் ஜாதிக் கட்சிகளையெல்லாம் திரட்டி பா.ம.க. ராமதாஸ் தேர்தலில் நிற்கப்போவதாக அறிவித்தார்.இதுவரை சமூகநீதி, தமிழ், தமிழினம், ஈழத்தமிழர், பெரியார் என்றெல்லாம் பேசிவந்த ராமதாஸ், ஒரு தேர்தலில் காணாமல் போகவே ஜாதி ஆயுதத்தைக் கையில் எடுத்தார். அவ்வளவுதான் தினமல(ம்)ர் பா.ம.க.வின் செய்தியை படத்துடன் 6 பத்தியில் போடுகிறது.(தினமலர் சென்னை பதிப்பு, பக்.12, 23.10.2013).<br /><br />சமூக நீதி பேசியவர் ஜாதிக் கட்சியானபின் அதனை ஊக்குவிக்கிறது. அதுவும் இன்னொரு ஜாதிக்கட்சிக்காரரைச் சந்திக்கும் நிகழ்ச்சிக்கே இவ்வளவு பெரிய விளம்பரம். தமிழினத்தை மேலும் மேலும் பிரிக்கும் செயலைச் செய்யும் துரோகிகளுக்கு விளம்பரம் வழங்கும் வேலையை தினமல(ம்)ர் செய்யத் தொடங்கியுள்ளது.திராவிட இயக்கத்தால் ஒழிக்கப்பட்ட ஜாதிவெறியை மீண்டும் உயிர்ப்பிக்கும் செயலுக்கு ஊக்கம் கொடுக்கிறது.<br /><br />தமிழர்களே...ஆரியத்தின் நோக்கம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டாமா?<br /><br />- பெரியாரிடி<br />செய்திகளை பகிர்ந்து கொள்ளதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-18999043833929774332013-11-02T07:06:26.823+05:302013-11-02T07:06:26.823+05:30எனது பாதை தொடங்கிய இடம் - நடிகர் கமல்ஹாசன்
நீங்க...எனது பாதை தொடங்கிய இடம் - நடிகர் கமல்ஹாசன்<br /><br /><br />நீங்க ஒருத்தரோட முரண்பட்டீங்கன்னா அவன் சொல்றது தப்புன்னு நிரூபியுங்க. ஒருத்தரோட கருத்து தப்புன்னு நிரூபிக்க உயிரை எடுக்காதீங்க. பகுத்தறிவுவாதியான நரேந்திர தபேல்கர் மாதிரியான ஆட்கள் கொல்லப்படுவது, இந்தியாவுக்கே பெருத்த அவமானம். இத்தனை குழப்பங்களுக்கும், பிரச்சினைகளுக்கும் நடுவிலே வட இந்தியாவுக்கு ஏற்பட்ட பாதிப்பு தமிழ்நாட்டுக்கு இல்லைங்கிறதுல நான் மிகவும் பெருமைப்படுறேன்.<br /><br /> <br /><br />***<br /><br /><br />நான் சுயமரியாதை இயக்கத்தோட உருவாக்கம். நான் பிறந்தது எங்கே? சுப்ரபாதம் என் காதில் ஒலிக்கிற சூழல்ல நான் பிறந்தேன். 10 வயசு வரைக்கும் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் பிரார்த்தனை பண்ணுவேன். என்னோட அப்பா, சித்தப்பா, அண்ணன் இவங்க மேல பெரியாரோட தாக்கம்தான் இதுக்குக் காரணம். அவங்க அவரைத் திட்டுவாங்க... விமர்சிப்பாங்க... அவரோட அறிவை எண்ணி உள்ளுக்குள் சிரிச்சிக்குவாங்க. ஆக, அவரோட எதிர் முகாமிலும் அவருக்கு ரசிகர்கள் இருந்தாங்க. நான் அந்த எதிர் முகாம்ல இருந்து வந்தவன்.<br /><br />***<br /><br />தபேல்கர் கொலை, நம்பிக்கை இழக்கச் செய்வதாக இருக்கலாம். ஆனால் அது நான் பேசவேண்டியதை பேசுவதிலிருந்து மாற்ற முடியாது. அதற்கு தமிழ்நாட்டுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். இங்கே நிறைய விஷயங்கள் தவறாவும் இருக்கு. கூவம், அடையாறு உட்பட நிறைய விஷயங்கள் சரி செய்யப்படல. அற்புதங்கள்ல எனக்கு நம்பிக்கையில்லை. ஆனா எனக்கு மேஜிக் மேல நம்பிக்கையிருக்கு. ஏதோ ஒன்றை பார்க்கத் தவறும்போது அந்த மேஜிக் நடக்கும். சினிமா அப்படிப்பட்டதுதான். அந்த மேஜிக்கை சினிமா உருவாக்குது. யார் வேணும்னாலும் மேஜிக்கை நிகழ்த்தலாம். கற்றல் என்கிற மிக மெதுவான செயல்முறையால் மாறுதல் நிகழணும்.<br /><br />***<br /><br />ராமாயணம் புராணம். அதுல எல்லாம் கலந்து கிடக்கு. நான் சின்னப்பையனா கன்னியாகுமரி போயிருந்தப்ப, ஒரு ஜோடி மிகப்பெரிய காலடித் தடத்தைக் காட்டுனாங்க. அப்ப நான் பக்தி மார்க்கத்துல இருந்தேன். அவங்க இது ராமனோட காலடித் தடம்னு சொன்னாங்க. அது ரொம்ப பெரிசா இருந்ததால, ராமன் என்ன ராட்சஷனான்னு கேட்டேன். பகுத்தறிவுக்கான என்னோட பாதை அங்க தொடங்கிச்சு.<br /><br />- நன்றி: ஃப்ரண்ட் லைன், அக்டோபர் 18, 2013தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-80446925722881404402013-11-02T07:05:43.684+05:302013-11-02T07:05:43.684+05:30கருத்து
எதிர்காலத்தில் நான் அரசியல்வாதியாக வேண்ட...கருத்து<br /><br /><br />எதிர்காலத்தில் நான் அரசியல்வாதியாக வேண்டும் என விரும்புகிறேன். பாகிஸ்தானில் மாற்றம் வரவேண்டும். கட்டாயக் கல்வி கொண்டுவர வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். பாகிஸ்தான் மக்களிடம் அமைதி, சுதந்திரம் அனைத்து உரிமைகள் பெறும் காலம் ஒரு நாள் கண்டிப்பாக மலரும். ஒவ்வொரு சிறுமி மற்றும் சிறுவர்கள் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். எங்கள் நாட்டு சமுதாயத்திடம் இருக்கும் மோசமான சிந்தனை, அதை யாராவது வந்து செய்யட்டும். அதுவரை நாம் காத்திருக்கலாம்.<br /><br />- மலாலா யூசுஃப்<br />(தலிபான்களுக்கு எதிராகப் போராடி சுடப்பட பாகிஸ்தான் சிறுமி)<br /><br />மருத்துவமனையின் தரம் என்பது நோயாளியின் வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டது. மருத்துவமனையில் நோயாளி ஒருவர் உயிரிழக்கிறார் என்றால் அதற்கு நோயை மட்டுமே காரணமாகச் சொல்ல முடியாது. மருத்துவமனையில் நிலவும் நோய் பரவும் சூழலும் ஒரு முக்கியக் காரணமாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலோருக்கு இது தெரியாது.<br /><br />- டாக்டர் கிர்தர் ஜே கியானி,<br />தலைமை இயக்குநர், இந்திய மருத்துவமனை உரிமையாளர் சங்கம்.<br /><br />பெற்றோர்கள், பிள்ளைகளின் எதிர்காலம் என்ற பெயரில் பணம், வேலையை மட்டுமே முதன்மையாக நினைக்கின்றனர். எப்படியாவது மதிப்பெண் பெற வேண்டும். எப்படியாவது நல்ல வேலை பெற வேண்டும் என சொல்கிறார்களே தவிர எப்படி உழைக்க வேண்டும், உருவாக வேண்டும் என சொல்லித் தருவதில்லை.<br /><br />- டாக்டர் சி.ராமசுப்பிரமணியன், மனநல ஆலோசகர்<br /><br />இந்தியாவில் சராசரி எடையைக் காட்டிலும் குறைந்த அளவிலான எடை கொண்ட 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஒவ்வொரு நகரிலும் அதிகளவில் உள்ளனர். 40 சதவீதம் குழந்தைகள் இதுபோன்ற நிலையில் உள்ளனர். சமூகத்தில் சமத்துவம் இல்லாதது குறைந்த அளவிலான ஊட்டச் சத்து, கல்வி, பெண்களுக்கான சமூக நிலை ஆகியவையே, தெற்கு ஆசியாவில் ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கைக்குக் காரணமாக உள்ளன.<br /><br />- பார்பெல் டைக்மேன், சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு அமைப்புதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-59298992175707851022013-11-02T07:04:01.934+05:302013-11-02T07:04:01.934+05:30கவிதை : குறி அறுத்தேன்
மாதவம் ஏதும் செய்யவில்லை...கவிதை : குறி அறுத்தேன்<br /> <br /><br />மாதவம் ஏதும் செய்யவில்லை நான் குறி அறுத்து<br />குருதியில் நனைந்து<br />மரணம் கடந்து<br />மங்கையானேன்<br />கருவறை உனக்கில்லை<br />நீ பெண்ணில்லை என்றீர்கள்<br />நல்லது<br /><br />ஆண்மையை அறுத்தெறிந்ததால் சந்ததிக்குச் சமாதி கட்டிய<br />பட்டுப்போன ஒற்றை மரம் நீ<br /><br /><br />விழுதுகள் இல்லை உனக்கு<br />வேர்கள் உள்ளவரை மட்டுமே<br />பூமி உனைத் தாங்கும் என்றீர்கள்<br />நல்லது<br /><br />நீங்கள் கழிக்கும் எச்சங்களை ஜாதி வெறியும் மதவெறியும் கொண்டு<br />நீங்கள் விருட்சமாக்க<br />விதைபோட்ட<br />உங்கள் மிச்சங்களை<br />சிசுவாக சுமக்கிற<br />கருவறை எனக்கு வேண்டாம்<br />உங்கள் ஏற்றத்தாழ்வு<br />எச்சங்களைச் சுமந்ததால்<br />பாவம், அவள் கருவறை<br />கழிவறை ஆனது<br /><br />நல்லவேளை<br />பிறப்பால் நான் பெண்ணில்லை<br />என்னைப் பெண்ணாக<br />நீங்கள் ஏற்க மறுத்ததே<br />எனக்குக் கிடைத்த விடுதலை<br /><br /> <br /><br />பெண்மைக்கு நீங்கள் வகுத்துள்ள அடிமை இலக்கணங்களை<br />நான் வாசிப்பதில்லை<br />என்னை இயற்கையின் பிழை என்று தாராளமாய் சொல்லிக்கொள்ளுங்கள்<br />நான் யார் என்பதை<br />நானே அறிவேன்<br /><br />மதம் மறந்து ஜாதி துறந்து<br />மறுக்கப்பட்டவர்கள் ஒன்றுகூடி வாழும் வாழ்க்கையை<br />வாழமுடியுமா உங்களால்?<br /><br />கருவில் சுமக்காமலேயே<br />தாயாக முடியுமா<br />உங்களால்?<br /><br />மார்முட்டிப் பசியாறாமலேயே<br />மகளாக முடியுமா உங்களால்?<br /><br />என்னால் முடியும்<br /><br />உங்களின் ஆணாதிக்கக் குறியை<br />அறுத்துக் கொள்ளுங்கள்<br />நீங்கள் யார் என்பதை அப்போது நீங்கள் அறிவீர்கள்<br />பிறகு சொல்லுங்கள்<br />நான் பெண்ணில்லை என்று.<br /><br />-<br /><br />- கல்கி சுப்ரமணியம்<br />தனது முகநூலில் எழுதியதுதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-6775877436408420072013-11-02T06:59:43.997+05:302013-11-02T06:59:43.997+05:30செய்தியும் சிந்தனையும்
துடைப்பத்தை எடுத்த பெண்ணும...செய்தியும் சிந்தனையும்<br /><br />துடைப்பத்தை எடுத்த பெண்ணும் துடைப்பத்தால் அடிபட்ட பெண்ணும்!<br /><br />உலக அதிசயங்களுள் ஒன்றாக ஆக்ராவை அலங்கரிக்கும் தாஜ்மகால் கருதப்படுகிறது.<br /><br />அமெரிக்கப் பெண்மணியின் பெயர் எரின் நயிட் (30) தாஜ்மகாலைப் பார்க்க வேண்டும் என்று பறந்தோடி வந்தார். தாஜ்மகாலைச் சுற்றிப் பார்த்தவருக்கு ஒரு அதிர்ச்சி!<br /><br /> <br /><br />எங்குப் பார்த்தாலும் குப்பைக் கூளங்கள் அசுத்தம் _ மூக்கைத் துளைத்தன.<br /><br />வெளிநாட்டுக்காரர்கள் இந்தியா வரத் தயங்குவதற்கு முக்கிய இடம் வகிப்பது இந்த அசுத்தங்களும் திறந்த வெளியில் மலம் கழிக்கும் போக்கும் இந்தக் கொசுக்களும்தான்.<br /><br />என்ன இருந்தாலும் இந்தப் பூமிக்குப் புண்ணிய பூமி என்ற பெயர் மட்டும் இன்று வரை தள்ளாடாமல் நிற்கிறது.<br /><br />அமெரிக்கப் பெண் சாதாரணமானவரும் அல்லர். உளவியல் மருத்துவரும்கூட!<br />அழகிய ஆக்ரா அழுக்குப் போர்வை போர்த்திக் கொண்டு அசிங்கப்பட்டுக் கிடக்கிறது. இதைவிடக் கூடாது; இந்த நகரைச் சுத்தப்படுத்தியே தீருவேன் என்று கையில் துடைப்பத்தை எடுத்துக் கொண்டு ஆக்ராவின் வீதியில் இறங்கிவிட்டார். தாஜ்மகாலையும் பெருக்க ஆரம்பித்துவிட்டார்.<br /><br />தாஜ்மகாலாக இருந்ததால் தப்பித்தோம். இதுவே இந்துக் கோயிலாக இருந்திருந்தால், என்னதான் எலிப்புழுக்காக நாற்றமும், நாய் விட்டைப் போடும் கக்கூசாக இருந்தாலும் சரி, ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி துடைப்பத்தை எடுத்துக் கொண்டு சுத்தம் செய்யும் வேலையில் இறங்க முடியுமா? முதலில் கோவில் வளாகத்துக்குள்தான் காலடி எடுத்து வைக்கவும் முடியுமா?<br /><br />வேற்று மதக்காரர்கள் உள்ளே நுழையக் கூடாது என்ற எச்சரிக்கை _ கோவிலின் நுழைவு வாயிலிலேயே கால்களை இயங்காது ஆக்கிவிடுமே.<br /><br />இதற்கு விளக்கம் வேண்டுமானால் 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு நாம் பயணிக்க வேண்டும்.<br /><br />பமீலா கே ஃபிளிக் (28) என்ற பெண்மணி ஒருவர். அவரும் அமெரிக்காவிலிருந்து வந்தவர்தான்.<br /><br />வாரணாசியில் வந்து தங்கிய போது அணில் யாதவ் என்ற பொறியாளருடன் காதல் கொண்டு திருமணமும் செய்து கொண்டார். அதற்காக இந்து மதத்திற்கும் மாறினார். ஒரிசா தலைநகர் புவனேஸ்வர் லிங்கராஜ் கோவிலுக்கு அந்த இணையர்கள் வந்தனர்.<br /><br />அவ்வளவுதான். ஒரே களேபரம்தான். உள்ளே நுழையாதே! என்ற குரல்.<br /><br />மதம் மாறிவிட்டோம் என்று ஆதாரங்களைக் காட்டியும் பயனில்லை. வார்த்தைகள் முற்றி இணையர்கள் அடி உதை பட்டதுதான் மிச்சம்.<br /><br />இதனைச் சற்றும் எதிர்பாராத மதம் மாறிய அந்தப் பெண்மணி _ காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தார். புகார் மனு பெற்றுக் கொள்ளவும் மறுக்கப்படுகிறது.<br /><br />இந்தச் செய்தி பரபரப்பாக ஏடுகளில் வெளிவரவே, அவசர அவசரமாக காவல்துறை புகாரைப் பெற்றுக் கொண்டார்கள். பெயர் அளவுக்கு நடந்த சடங்காச்சாரம் அவ்வளவுதான்.<br /><br />கோவில் நிர்வாகி ராம்காந்த் மிஸ்ரா. அவரிடமும் அந்தப் பிரச்சினை முட்டியது. அவர் மிஸ்ராவாயிற்றே!<br /><br />நெற்றியில் திலகமிட்டுக் கொண்டாலும் ஒரு வெளிநாட்டுப் பெண் இந்துவாகிவிட முடியுமா? என்று தனது கோணல் திருவாயால் மொழிந்தார்.<br /><br />பூரி சங்கராச்சாரியார் நிஷ்ச்சாலனந்தா சரஸ்வதிதான் இதில் முடிவெடுக்க முடியும் என்று அவரிடம் அனுப்பி வைத்தனர்.<br /><br />அங்கும்தான் சென்று பார்ப்போமே! சென்றனர். பெரியவாள் தன் பெரிய வாயைத் திறந்தார்.<br /><br />வேற்று மதத்தைச் சேர்ந்த ஒருவர் இந்துவாக மதம் மாறி, ஒரு இந்துவை மணம் புரிந்தால் அவரை இந்துவாக ஏற்றுக் கொள்வதில் எந்தத் தடையும் இல்லை. ஆனால், வழிபாடுகளில் இவர்களுக்கான உரிமைகள் மாறுபடுகின்றன. இந்து சனாதன தர்மத்தின்படி கோவில் வழிபாடுகள் வர்ணாசிரமத்துக்கு அல்லது ஜாதியின் பிரிவுக்கு ஏற்ப அமைந்துள்ளன.<br /><br />வேற்று மதத்திலிருந்து இந்துவாக மதம் மாறியவர்கள் வர்ணாசிரம தர்மத்துக்கு அப்பாற்பட்டவர்கள். எனவே, வழிபாடு பற்றிய உரிமைகள் அவர்களுக்குப் பொருந்தாது. யார் வேண்டுமானாலும் இந்து மதத்துக்கு மாறலாம். ஆனால், தான் எந்தத் தரமான இந்து என்பதை அவர்கள் முடிவு செய்துகொள்ள வேண்டும். உலகின் எல்லா மதங்களிலும் விதிகளும், வரன்முறைகளும் உள்ளன. இந்துக் கடவுள்கள் மீது உண்மையான பக்தியும், நம்பிக்கையும் ஒருவன் கொண்டிருப்பானேயானால், தன் மீது விதிக்கப்படும் இந்த ஜாதிகளையும், வரைமுறைகளையும் மனமுவந்து பின்பற்ற வேண்டும் என்று இதோபதேசம் செய்ய ஆரம்பித்து விட்டார் பெரியவாள்.<br /><br />வெறுத்தே போனார் அந்த வெள்ளைக்காரப் பெண்மணி. இதற்காகவா இந்து மதத்துக்கு மாறினேன் என்று புலம்பினார்.<br /><br />நம் நாட்டு மொழியில் சொல்ல வேண்டுமானால் என் புத்தியைச் செருப்பால் அடிக்க வேண்டும் என்று சொல்லியிருப்பார்கள். (ஆதாரம்: ஜூனியர் விகடன் 23.11.2005)<br /><br />ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி ஆக்ரா வருகிறார். தாஜ்மகாலைச் சுற்றிப் பார்க்கிறார். தாஜ்மகாலையும் ஆக்ராவையும் சுத்தப்படுத்த துடைப்பத்தைக் கையில் எடுக்கிறார்.<br /><br />இன்னொரு அமெரிக்கப் பெண்மணி இந்தியா வருகிறார். இந்துவாகவும் மதம் மாறுகிறார். இந்து மதக் கணவருடன் இந்துக் கோவிலுக்குள் நுழைந்தால் துடைப்ப அடி விழுகிறது.<br /><br />இதுதான் அர்த்தமுள்ள இந்துமதம்!தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-71006244022496166002013-11-02T06:58:32.729+05:302013-11-02T06:58:32.729+05:30துளிச் செய்திகள்
வியாழனைவிட எட்டு மடங்கு பெ...துளிச் செய்திகள்<br /> <br /><br /> வியாழனைவிட எட்டு மடங்கு பெரிய கோளினைக் கண்டுபிடித்து அதற்கு எம்.ஓ.எ.2011_பி.எல் என்று பெயரிட்டுள்ளனர்.<br /><br /> நியூசிலாந்து நாட்டின் பெண் எழுத்தாளர் எலியனார் காட்டன் (வயது 28) எழுதிய தி லூமினரீஸ் என்ற நாவலுக்கு புக்கர் விருது (2013) வழங்கப்பட உள்ளது.<br /><br /> இணைய இணைப்புக்காக எல்இடி பல்புகளைப் பயன்படுத்தி சமிக்ஞைகளைக் கடத்தும் லைஃபை என்ற புதிய தொழில் நுட்பத்தை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.<br /><br /> பூமியிலிருந்து 80 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள புதிய கிரகத்தைக் கண்டுபிடித்த அமெரிக்காவின் ஹவாயில் உள்ள விஞ்ஞானிகள் அதற்கு பி.எஸ்.ஓ.ஜெ 318.5_22 என்று பெயரிட்டுள்ளனர்.<br /><br /> செல்பேசி மூலம் ரயில் பயணச்சீட்டை முன்பதிவு செய்யும் வசதியை அய்.ஆர்.சி.டி.சி. அறிமுகப்படுத்தி உள்ளது.<br /><br /> தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 15 கடல்மைல் தொலைவில் நுழைந்த எம்வி சீமேன் கார்டு ஓகியோ என்ற ரோந்துக் கப்பலினை அக்டோபர் 12 அன்று இந்தியக் கடலோரக் காவல் படையினர் பிடித்தனர்.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-34913337760168790602013-11-02T06:56:54.538+05:302013-11-02T06:56:54.538+05:30
சட்டத்தை மதிக்கும் நீதிபதி
இது மதச்சார்பற்ற நீதி...<br />சட்டத்தை மதிக்கும் நீதிபதி<br /><br />இது மதச்சார்பற்ற நீதிமன்றம். இங்கு இந்துமதப் பண்டிகையான ஆயுதபூஜைக்கான செலவை யார் ஏற்பது? நீதிமன்றச் செலவுகளுக்கு அரசு கொடுக்கும் பணத்தில் பூஜை நடத்துவது சட்ட விரோதம். ஊழியர்கள் தங்கள் சொந்தச் செலவில் கொண்டாடினால் அதனால் ஏற்படும் செலவினங்களை அவர்கள் எப்படி ஈடுகட்டுவார்கள். அது தவறு செய்ய அவர்களைத் தூண்டிவிடும் செயலாக மாறிவிடும். எனவே, இந்த பூஜைக் கொண்டாட்டங்கள் எல்லாம் நான் நீதிபதியாக இருக்கும் நீதிமன்றத்தில் நடத்தக் கூடாது. இப்படிச் சொல்லி இருப்பவர் ஒரு நீதிபதி. தமிழ்நாட்டில் உள்ளவர் அல்ல; கர்நாடக மாநிலத்தில் இருப்பவர். அவர் பெயர் முடிகவுடா. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்து வருபவர் இவர்தான். இந்தியாவின் அரசியல் சட்டம் மதச்சார்பற்ற நாடு என்கிறது. ஆனால், இங்கே அரசு இயந்திரங்கள் எல்லாம் இந்து மதச் சாயம் பூசிக்கொள்கின்றன. கொஞ்சமும் கூச்சமில்லாமல் தமது சொந்த மத நம்பிக்கையை எல்லோருக்கும் பொதுவான அரசின் மீது திணிக்கிறார்கள்.<br /><br />அரசு ஆணைகள் எல்லாம் அவமதிக்கப்படுகின்றன. அரசை வழிநடத்தும் ஆட்சியாளர்கள் வாழ்த்து சொல்கிறார்கள்; அதிகாரிகள் அலுவலகங்களில் பூஜை போடுகிறார்கள். நீதிபதிகளே தங்களின் அலுவலகத்தில் மதக் கடவுள் படங்களை வைத்துக் கொள்கிறார்கள். மத விழாக்களுக்குச் செல்கிறார்கள்; மதவாதிகளுக்கு அடி பணிகிறார்கள். இத்தகைய நேர்மையில்லாத சூழலில் நீதியரசர் முடிகவுடாவின் நேர்மைக்கு ஒரு வணக்கம் சொல்வோம்; முடிகவுடா அவர்களுக்கு மதச்சார்பற்ற மனிதநேயர் என்ற மகுடம் சூட்டுவோம்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-43117500396936151022013-11-02T06:54:12.781+05:302013-11-02T06:54:12.781+05:30ஆவணப்படம்
அஃறிணைகள்
இயக்கம் : இளங்கோவன்
செல்பேசி ...ஆவணப்படம்<br /><br />அஃறிணைகள்<br />இயக்கம் : இளங்கோவன்<br />செல்பேசி 9789725197<br /><br />திருநங்கைகளுக்கும் மனம் உண்டு, அறிவாற்றல், சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு உண்டு என்பதை வெளிப்படுத்தியுள்ள படம். ஆண் என்ற நிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உணர்வுகளால் மாறி திருநங்கையாகும் விதம் மனநல மருத்துவரின் விளக்கத்துடன் இடம் பெற்றுள்ளது.<br /><br />அரவணைக்க வேண்டிய பெற்றோர் காட்டும் வெறுப்பு, சமூகம் பார்க்கும் பார்வை, எதிர்கொள்ளும் பிரச்சினைகள், எதிர்நீச்சல் போட்டு முன்னுக்கு வரும் வழிமுறைகள், விளக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட நபர்களே கதாபாத்திரங்களாக தோன்றி இயல்பு நிலையை வெளிப்படுத்தி காண்போர் நெஞ்சையும் கருத்தையும் நிறைத்து திருநங்கைகளுக்கு சமுதாயத்தில் ஓர் அங்கீகாரத்தை - மதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. உணர்வுகளால் மாற்றம் பெற்று வரும் ஆண்களுக்கு தன்னம்பிக்கையை உண்டாக்கியுள்ள படம்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-64888247453929083952013-11-02T06:53:36.321+05:302013-11-02T06:53:36.321+05:30நூல்
நூல்: தமிழர் தலைவரின் அரசியல் பயணம் |
ஆசிரி...நூல்<br /><br />நூல்: தமிழர் தலைவரின் அரசியல் பயணம் |<br /><br />ஆசிரியர்: கி. வீரமணி<br /><br />வெளியீடு: திராவிடர் கழக(இயக்க) வெளியீடு,<br /><br />84/1,(50) ஈ.வெ.கி.சம்பத் சாலை, சென்னை-_7. (: 044_26618161<br /><br />பக்கங்கள்: 64 | விலை: ரூ.35/_<br /><br />பத்து வயது அடையும் முன்பே பெரியார் கொள்கையைப் பரப்பத் தொடங்கி, 80 வயதிலும் அதே தொண்டைத் தொடர்ந்து கொண்டிருக்கும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் அரசியல், சமூக நீதிப் பயணத்தை திரும்பிப் பார்க்கும் நூல்! துக்ளக் இதழில் இந்த ஆண்டு தமிழர் தலைவர் கி.வீரமணி எழுதிய தொடர் கட்டுரைகளுடன், 1982ஆம் ஆண்டு சோ அவர்களால் துருவித் துருவிக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு திராவிடர் கழகத் தலைவர் அளித்த விளக்கமான நேர்காணலும், 1985ஆம் ஆண்டு வைக்கம் போராட்டம் பற்றி வெளிவந்த கட்டுரைச் செய்திக்கு தகுந்த ஆதாரங்களுடன் கொடுத்த மறுப்பும் சேர்க்கப்பட்டிருக்கிறது. மாற்றுக் கருத்துடைய இதழ் ஒன்றில் இடம் பெற்ற பதிவுகளின் தொகுப்பு என்பது கூடுதல் ஆர்வத்தைக் கொடுக்கிறது.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-26257994679892616182013-11-02T06:52:20.678+05:302013-11-02T06:52:20.678+05:30 ராகுல் காந்திககு சில கேள்விகள்
எனது பாட்டியைக் ... ராகுல் காந்திககு சில கேள்விகள்<br /><br /><br />எனது பாட்டியைக் கொன்ற பேயந்த் சிங், சத்வந்த் சிங் ஆகியோர் மீதான கோபம் தணிய எனக்கு சுமார் 15 ஆண்டுகள் ஆனது. பஞ்சாப் மக்கள் அப்போது கோபமாக இருந்தார்கள். இப்போது தணிந்துவிட்டது. சில மாதங்களுக்கு முன் பஞ்சாபிலிருந்து என்னைப் பார்க்க சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் வந்தார். திரும்பிப் போவதற்கு முன் என்னைப் பார்த்து 20 ஆண்டுகளுக்கு முன் உங்களைச் சந்தித்திருந்தால் கொன்றிருப்பேன். அப்போது கோபமோ கோபம். இப்போது கோபம் தணிந்துவிட்டதாகக் கூறி என்னைத் தழுவிக் கொண்டார். கோபம் தணிய பல ஆண்டுகள் ஆகிறது. அதைத் தூண்டி விட ஒரு நிமிடம் போதும். கோபத்தை மறக்கவும் சகோதரத்துவத்தை ஏற்படுத்தவும் பல நாட்கள் ஆகின்றன. இப்படிப் பேசியிருப்பவர் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி.<br /><br />இவரது உணர்வுகளை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. கொலை என்பது எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. கொலைகளை யார் செய்தாலும் குற்றம் குற்றமே. இதில் நமக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், சில கேள்விகளும் நம்மிடம் உள்ளன. இவரது தந்தை ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் ஈழத் தமிழர்களில் சிலர் என்பதால் அவர்கள் மீதான கோபம் இன்னும் ராகுலிடம் தணியவில்லையே, ஏன்? 22 ஆண்டுகள் கடந்தும் கூட அந்தக் கோபம் நீடிப்பது ஏன்? ஒரு சிலர் செய்த தவறுக்காக அந்த இனத்தையே அழிக்க சிங்களர் அரசுக்குத் துணைபோவது சரியா? 2009 ஆம் ஆண்டில் நடந்த முள்ளிவாய்க்கால் போருக்கு ராகுலின் கட்சி ஆளும் இந்திய அரசு துணைபோனதா? இல்லையா? இதற்குப் பெயர் பழிவாங்கும் நடவடிக்கை அல்லவா? 2009க்குப் பின் நான்கு ஆண்டுகள் ஆகியும் இன்னும் தமிழின அடையாளங்களை அழிக்கும் சிங்கள அரசின் கொடுங்கோலன் ராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பது சரியா? அவரது தலைமையை ஏற்கும் வகையில் காமன்வெல்த் மாநாட்டுக்கு இந்தியா செல்லுவது என்ற முடிவில் இன்னும் மாற்றமில்லையே ஏன்?<br /><br />அமைதிப் படை என்கிற பெயரில் ஈழத்தில் தமிழர்களை உங்கள் அப்பா ராஜீவின் இந்திய ராணுவம் கொன்றது உங்களுக்குத் தெரியுமா? அதனால் அவர்கள் கோபம் கொண்டார்கள் என்பதை அறிவீர்களா? இவ்வளவு நடந்த பின்னும் தமிழ்நாடு உங்கள் மீது கோபம் கொள்ளாமல் இன்னும் கோரிக்கை மட்டுமே வைத்துக் கொண்டிருக்கிறதே, இதனை நீங்கள் புரிந்துகொண்டீர்களா? உங்கள் தந்தையைக் கொன்றதற்கு உங்கள் குடும்பத்தை விட அதிகம் அழுதவர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ராகுல்? 1991 வரை ஈழத்தமிழர்களுக்கு எல்லா வகையிலும் உதவி வந்த தமிழ்நாடு, உங்கள் தந்தையைக் கொன்றதையடுத்து, அவர்கள்மீது ஒருவித கண்டிப்புடனே நடந்ததே, நீங்கள் அறிவீர்களா?<br /><br />பஞ்சாபியர்களின் கோபம் தணிக்க மன்மோகன் சிங்கை 10 ஆண்டுகள் பிரதமர் பதவியில் உட்கார வைத்தீர்கள். இன்னும் தங்களிடம் நேசம் காட்டும் தமிழர்கள்மீது உங்களது பாசத்தை எப்போது காட்டுவீர்கள் ராகுல்?<br /><br />- பெரியாரிடிதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-56251175636989868562013-11-02T06:51:18.494+05:302013-11-02T06:51:18.494+05:30வறுமையில் முதலிடம் மோடியின் குஜராத்
நாட்டிலேயே ...வறுமையில் முதலிடம் மோடியின் குஜராத்<br /> <br /><br />நாட்டிலேயே அதிகமாக வறுமையில் வாடுபவர்கள் குஜராத் மாநிலத்தில் வசிக்கிறார்கள் என்பதை சமீபத்திய ஆய்வு ஒன்று தெளிவுபடுத்தியது. குஜராத்தில் நர்மதா பள்ளத்தாக்கில் இருந்த 2 இலட்சம் பேர் அரசால் வெளியேற்றப்பட்டதால் இன்று மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் பிச்சை எடுத்துக் கொண்டு பிளாட்பாரங்களில் தூங்கிக் கொண்டு உள்ளனர். மோடியைப் போன்றவர்கள் நாட்டை ஆண்டால் என்னவாகும்!<br /><br />- ஹர்ஷ் மந்திர், அய்.ஏ.எஸ்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-8763856949401620922013-11-02T06:50:27.862+05:302013-11-02T06:50:27.862+05:30விதவையர்க்கும் மரியாதை!
- கர்நாடகத்தில் ஓர் மாற...விதவையர்க்கும் மரியாதை!<br /> <br /><br />- கர்நாடகத்தில் ஓர் மாற்றம்!<br /><br />கோவில் கருவறைக்குள் பெண்கள் நுழையவே அனுமதியில்லாத நம் நாட்டில் விதவைப் பெண்களான இந்திரா சாந்தி, லட்சுமி சாந்தி என இருவர் அர்ச்சகராகியுள்ளனர். மங்களூர் குத்ரோலியில் இருக்கும் கோகர்னாதேஸ்வரர் கோவிலில் இரண்டு விதவைப் பெண்கள் தினமும் சிவனுக்கு அர்ச்சனை செய்து வருகின்றனர். கோவிலுக்குள் வந்ததும் பாரம்பரிய முறைப்படி மேளதாள வரவேற்பு அர்ச்சகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்திற்கான பெருமை மேனாள் மத்திய நிதி அமைச்சரும், தற்போது கோவிலின் ஆலோசனைக் குழுத் தலைவருமான ஜனார்த்தன பூஜாரியைச் சாரும்.<br /><br />கோவிலுக்குப் பக்கத்து ஊரான பன்னூர் கிராமத்திலிருந்து வரும் இந்திராசாந்தி திருமணமான சிறிது காலத்திலேயே கணவனை இழந்து சமுதாயக் கொடுமைகளுக்கு ஆளானவர். இவரை அழைத்த கோவில் நிர்வாகம், கோவிலில் பூஜை செய்ய வேண்டும் என்று சொன்னபோது பயந்தவர், பின்பு, சமூகத்தில் விதவைப் பெண்கள் மீதான மூடநம்பிக்கையை ஒழிக்க வேண்டும் என்பதற்காக ஒத்துக் கொண்டதாகக் கூறியுள்ளார். மேலும், தான் செய்யும் பூஜையை ஏற்றுக்கொண்ட பக்தர்கள், தன்னிடம் தீர்த்தம், பூ, பிரசாதம் வாங்கிச் செல்வது மகிழ்ச்சியாக உள்ளது என்று பூரித்துள்ளார்.<br /><br />இது குறித்து ஜனார்த்தன பூஜாரி,<br /><br />எந்த ஜாதியைச் சேர்ந்த பெண்களாக இருந்தாலும், எந்த மதத்தைச் சார்ந்த பெண்களாக இருந்தாலும் ஒரு நாள் பயிற்சி எடுத்துக்கொண்டு இந்தக் கோயில் கருவறைக்குள் சென்று பூஜை செய்யலாம். விதவைப் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். கோவில் நிர்வாகத்தின் சார்பாக விதவைகளுக்கு மறுமணமும் இலவசமாக செய்து வைக்கிறோம். இதை யாரும் எதிர்க்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. காரணம், அவர்களும் ஒரு பெண்ணின் வயிற்றில்தான் பிறந்திருப்பார்கள் என்று கூறியுள்ளார். மேலும், மாறிவரும் காலத்திற்கேற்ப நாமும் மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். பெண்களை பூமா தேவியாக மதிக்கும் நம் நாட்டில், அவர்கள் கணவனை இழந்துவிட்டால் எந்த நல்ல காரியத்திலும் பங்கு கொள்ள அழைக்காமல் புறக்கணிப்பது மூடநம்பிக்கையின் அடையாளம். இந்த வழக்கம் நாட்டிலிருந்து ஒழிய வேண்டும் என்றும் கூறியுள்ளார் பூஜாரி.<br /><br />விதவைப் பெண்கள் அர்ச்சகர் நியமனத்தை கர்நாடகாவிலுள்ள பல பெண்கள் அமைப்பினர் வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-31188895961152980232013-11-02T06:47:27.464+05:302013-11-02T06:47:27.464+05:30
பிரபாகரன் மகள் என சந்தேகித்து இசைப்பிரியாவை கைது ...<br />பிரபாகரன் மகள் என சந்தேகித்து இசைப்பிரியாவை கைது செய்யும் காட்சிகள்... புதிய வீடியோ வெளியீடு!<br /><br /><br />லண்டன், நவ.1 இலங்கை இறுதிப் போரில் இலங்கை ராணுவத்தின ரால் கைது செய்யப் பட்டு பின்னர் பாலியல் வன்முறைக்கு ஆளாக் கப்பட்டு கொலை செய் யப்பட்ட தமிழீழத் தேசிய தொலைக்காட் சியின் செய்தி வாசிப்பா ளரான இசைப்பிரியா தொடர்பான புதிய போர்க்குற்ற ஆதாரம் ஒன்றை சேனல் 4 தொலைக்காட்சி வெளி யிட்டுள்ளது.<br /><br />இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை ராணுவத்தி னரால் இசைப்பிரியா படுகொலை செய்யப் பட்டு கிடக்கும் காட்சி கள் ஏற்கெனவே வெளி யாகியிருந்தன. ஆனால் இசைப்பிரியா போரின் போதே கொல்லப்பட் டார் என்று இலங்கை அரசு கூறி வருகிறது.<br /><br />இந்நிலையில் இலங்கை ராணுவத்தின ரால் இசைப்பிரியா உயி ரோடு கைது செய்யப் பட்ட வீடியோ ஆதா ரத்தை இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக் காட்சி நேற்று வெளி யிட்டுள்ளது. கடற்கரை ஒன்றில் மேலாடையின்றி நீருக் குள் அமர்ந்திருக்கும் இசைப்பிரியாவை இலங்கை ராணுவத்தி னர் வெள்ளைத் துணி ஒன்றைப் போர்த்தி இழுத்து வரும் காட்சி அதில் பதிவாகியுள்ளது.<br /><br />இலங்கை ராணுவத் தினர் 6 பேர் இசைப் பிரியாவை பிடித்து வரு வதும் அப்போது அவர் கள் பிரபாகரனின் மகள் என்று அவரைக் கூறு வதும் அதற்கு அவர் அய்யோ அது நானில்லை என்று அழுவதும் அந்த காட்சியில் பதிவாகி யுள்ளது.<br /><br />இதன் மூலம் இசைப் பிரியா இலங்கை ராணு வத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்டு படு கொலை செய்யப்பட் டுள்ளது உறுதியாகியுள் ளது. வெள்ளைத் துணி போர்த்தப்பட்ட நிலை யிலும், துணி அகற்றப் பட்ட நிலையிலும் இசைப்பிரியாவின் உடல் கிடந்த காட்சிகள் ஏற்கெனவே வெளியாகி யிருந்தன என்பது குறிப் பிடத்தக்கது.<br /><br />இலங்கையில் காமன் வெல்த் மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் இந்த புதிய போர்க்குற்ற ஆதார வீடியோ வெளியாகி இருப்பது அந்நாட்டுக்கு பெரும் நெருக் கடியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-88729140487883414502013-11-02T06:46:54.789+05:302013-11-02T06:46:54.789+05:30
ஆசிரியர் தகுதித் தேர்வும்-நீதிபதி விதித்த அபராதமு...<br />ஆசிரியர் தகுதித் தேர்வும்-நீதிபதி விதித்த அபராதமும்! தி.மு.க. தலைவர் கலைஞர் கருத்து<br /><br /><br />சென்னை, நவ.1- ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர் பான வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அளித்த அபராதம் குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் தெரிவித்த கருத்து வருமாறு:<br /><br />கேள்வி: ஆசிரியர் தகுதித் தேர்வில் குளறுபடி நடைபெற்றதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவருக்கு சென்னை உயர்நீதிமன்ற (மதுரைக் கிளை) நீதிபதி நாகமுத்து அவர்கள் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்திருக்கிறாரே?<br /><br />கலைஞர்: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலை வராக ஒரு மூத்த அய்.ஏ.எஸ். அதிகாரிதான் பணியில் இருந்து வருகிறார். அவருக்கு உயர்நீதிமன்றம் அப ராதம் விதித்திருப்பது என்பது அரசுக்கே அவ மானத்தைத் தரக்கூடிய ஒரு தீர்ப்பாகும்.<br /><br />நீதியரசர் தனது தீர்ப்பில், இந்த வழக்கு ஓராண் டாக நிலுவையில் உள்ளது. பலமுறை விசார ணைக்கு வந்தும், தேர்வு வாரியத்தின் தலைவர் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. அரசுத் தரப்பிற்கு கால அவகாசம் அளித்தும், நடவடிக்கை இல்லை. இத னால் மனுதாரர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி யுள்ளார்.<br /><br />தேர்வு வாரியத் தலைவருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறேன். அவர் தொகையை மனுதாரருக்கு வழங்கவேண்டும் என்றெல்லாம் சொல்லியிருப்பது, தனிப்பட்ட ஒரு அதிகாரிக்குக் கண்டனம் அல்ல, அ.தி.மு.க. அரசுக்கே விதிக்கப் பட்ட தண்டனையாகத்தான் கருத வேண்டும்.<br /><br />இந்த வழக்கிலே மாத்திரமல்ல; இரண்டு நாட் களுக்கு முன்பு உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஜெயச்சந் திரன், நாகமுத்து ஆகியோர், கொலை வழக்கு ஒன்றில் அளித்த தீர்ப்பிலேகூட தங்கள் வேதனை யைத் தெரிவித்திருக்கிறார்கள். அந்தத் தீர்ப்பில், குற்றவாளிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கீழ் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கொலைக்குப் பயன்படுத்திய அரிவாளை காவல்துறையினர் பறி முதல் செய்துள்ளனர்.<br /><br />அதை நீதிமன்றத்தில் ஒப்ப டைக்கவில்லை. அதில் படிந்திருந்த ரத்தக்கறையை டி.என்.ஏ. சோதனைக்கு அனுப்பி, அந்த அரி வாளைத்தான் கொலையாளிகள் பயன்படுத்தினர் என்பதை நிரூபிக்கவில்லை. விசாரணையில் பல் வேறு குறைபாடுகள் இருந்தன. அந்தக் குறை பாடுகளைக் களைய காவல்துறையினருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதைக் காவல்துறையினர் சரி யாகப் பயன்படுத்தவில்லை.<br /><br />இந்த வழக்கில் காவல்துறையினரின் பல்வேறு குறைபாடுகள், தவறுகள், திறமையின்மை வெளிப் பட்டுள்ளது. இதற்குமேல் விசாரணை அமைப்பை எப்படி விமர்சனம் செய்யவேண்டும் எனத் தெரிய வில்லை. கல்நெஞ்சம் படைத்த கொலையாளிகள் நான்கு பேரைக் கொடூரமாகக் கொலை செய் துள்ளனர். காவல்துறையினரின் விசாரணை முழு வதும் வீணாகி விட்டது. உயர்நீதிமன்றம் வைத் திருந்த நம்பிக்கையை காவல்துறையினர் தகர்த்து விட்டனர்.<br /><br />தகுந்த ஆதாரங்கள் சாட்சியங்களின் அடிப்படையில் நிரூபிக்க காவல்துறையினர் தவறிவிட்டனர். காவல்துறையினர் பொறுப்பு, கடமைகளில் தவறியதை உணரவேண்டும். விசாரணையில் காவல்துறையினர் அலட்சியம் காட்டுவது, நீதி, நியாயம் தோற்கக் காரணமாக அமைகிறது.<br /><br />இந்த வழக்கில் நீதி தோற்றதை கனத்த இதயத்துடன் சொல்கிறோம் என்று காவல்துறைபற்றி நீதிபதிகள் விமர்சித்திருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இப்படியொரு தீர்ப்பு வந்திருந்தால் உடனே காவல்துறைக்குப் பொறுப் பேற்றுள்ள மைனாரிட்டி ஆட்சியின் முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்று அறிக்கை கொடுத் திருப்பார்கள். ஆனால் இப்போது?<br /><br />- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-28025675580258071792013-11-02T06:43:49.382+05:302013-11-02T06:43:49.382+05:30
உடுமலையாரின் பாடல்
ஆண்: காசிக்குப் போனாக் கருவு...<br />உடுமலையாரின் பாடல்<br /><br /><br />ஆண்: காசிக்குப் போனாக் கருவுண்டாகு மென்ற<br />காலம் மாறிப் போச்சு... இப்ப<br />ஊசியைப் போட்டா உண்டாகு மென்ற<br />உண்மை தெரிஞ்சு போச்சு<br /><br />பெண்: ஈசன் செயலால் இறப்பும் பிறப்பும்<br />எல்லாம் நடக்குதுங்க - அதை<br />எண்ணாமே எவனோ சொன்னான்னு கேட்டு<br />ஏமாந்து போகாதீங்க!<br /><br />ஆண்: ஆகாரம் சமைக்க சூரிய ஒளியால்<br />அடுப்பை மூட்டுறாங்க<br />ஆணைப் பெண்ணாக பெண்ணை ஆணாக<br />ஆளையே மாத்துறாங்க - இங்கே<br />ஆளையே மாத்துறாங்க.<br /><br />பெண்: அது... ஆயிரங் காலத்துக் கப்பாலே நடக்கிற<br />ஆராய்ச்சி விசயமுங்க... மூளை<br />ஆராய்ச்சி விசயமுங்க - நம்ம<br />அறிவுக்குப் பொருத்தம்<br />ஆறு, கோயில், அரசமரந்தானுங்க!<br /><br />ஆண்: கோழி யில்லாமெ தன்னால முட்டைகளில்<br />குஞ்சுகளைப் பொரிக்க வச்சார் - உங்<br />கொப்பன் பாட்டன் காலத்தில் யாரிந்த<br />கோளாறைக் கண்டு பிடிச்சார்.... இந்தக்<br />கோளாறைக் கண்டு பிடிச்சார்!<br /><br />பெண்: அந்தக் குஞ்சுகள் பொறிக்க வச்ச கோளாறுக் காரனை<br />முட்டை யொண்ணு பண்ணச் சொல்லுங்க? - பார்ப்போம்<br />முட்டை யொண்ணு பண்ணச் சொல்லுங்க - வாய்<br />கூசாமல் எதையும் யோசனை செய்யாமே<br />பேசுவது தப்பித முங்க<br /><br />ஆண்: எட்டாத விஷயத்தை ஈசன் பெயரால்<br />இயற்கை யெங்குறாங்க - இனிமேல்<br />இயற்கையுங் கூட செயற்கையில்.. ஆகும்<br />முயற்சியும் பண்ணுறாங்க!<br /><br />- சுயமரியாதைக் கவிஞர் உடுமலை நாராயண கவி இயற்றி கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும், மதுர மும் பாடிய பகுத்தறிவுக் கருத்துகள் நிறைந்த இப் பாடல் டாக்டர் சாவித்திரி எனும் படத்தில் இடம் பெற் றுள்ளது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-86982730331464832682013-11-02T06:42:58.481+05:302013-11-02T06:42:58.481+05:30
சோதிடம் - அறிவியலல்ல!
விண்வெளிக் களங் களைப் பற்...<br />சோதிடம் - அறிவியலல்ல!<br /><br /><br />விண்வெளிக் களங் களைப் பற்றி என்னிடம் பல நண்பர்கள் கேள் விகள் கேட்ட போது, அவர்கள் சில நேரங் களில் ஜோதிடம் பற்றியும் கூட கேள்விகள் கேட் டனர்.<br /><br />நமது சூரிய மண்டலத்தில் நம்மை விட்டு வெகு தொலைவில் உள்ள கோள்களுக்கு நமது மக்கள் இந்த அளவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்ததன் பின்னணியில் உள்ள காரணத்தை உண்மையில் என்னால் எப்போதுமே புரிந்து கொள்ள முடியவில்லை என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்.<br /><br />ஜோதிடம் ஒரு கலை என்பதற்கு எதிராக நான் எந்தக் கருத்தையும் கொண்டிருக்கவில்லை. ஆனால் அது அறிவியல் என்ற போர்வையில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு நான் வருந்தவே செய்கிறேன்.<br /><br />இந்த கோள்கள், நட்சத்திரக் கூட்டங்கள், செயற்கைக் கோள்கள் ஆகியவை மனித உயிர்கள் மீது ஆற்றல் செலுத்த இயலுமென்ற கட்டுக் கதைகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன<br /><br />என்பதை நானறியேன். விண்வெளியில் உள்ள இவற்றின் சரியான இயக்கத்தைச் சுற்றி, குழப்பம் மிகுந்த கணக்குகளை கற்பனையில் உருவாக்கி அவற்றிலிருந்து மக்களின் வாழ்க்கை நடைமுறைகள் பற்றி முடிவுகளைப் பெறுவது என்பது சரியானதென எனக்குத் தோன்றவில்லை.<br /><br />நான் காணும் வரை, பூமி ஒன்றே ஆற்றல் மிகுந்த, சுறுசுறுப்புடன் இயங்கும் ஒரு கோளாகும். தனது இழந்த சொர்க்கம் (8ஆம் புத்தகத்தில்) ஜான்மில்டன் அழகாக கூறியபடி,<br /><br />பூமிக்கும் மற்ற நட்சத்திரங்களுக்கும் சூரியன் மய்யமானதாக இருந்தால் என்ன?<br /><br />மூன்று வேறுபட்ட வழிகளில் பூமி அறிவற்றபடி இயங்குவதாக தோன்றினாலும், பூமி என்னும் இக்கோள் எவ்வளவு உறுதியாகச் செயல்படுகிறது!<br /><br />நெருப்பு இறக்கைகள் என்ற தனது சுயசரிதையில் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியும், இந்திய அரசின் அறிவியல் ஆலோசகருமான ஏ.பி.ஜே.அப்துல்கலாம்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com