tag:blogger.com,1999:blog-1474608369333206681.post3093575601641896009..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: யோகா - நோய்களைக் குணப்படுத்துமா?தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-70342644974138099162012-03-16T04:24:08.621+05:302012-03-16T04:24:08.621+05:30இந்திய அரசின் முடிவு - தமிழர்களுக்கு எதிரான துரோகம...இந்திய அரசின் முடிவு - தமிழர்களுக்கு எதிரான துரோகம் தி.மு.க. தலைவர் கலைஞர் பேட்டி<br /><br /><br />சென்னை, மார்ச் 15- நாடாளுமன்றத்தில் இலங்கை குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறிய கருத்து தமிழர்களுக்கு எதிரான துரோகம் என்றார் கலைஞர். சென்னையில் செய்தி யாளர்களிடம் (14.3.2012) தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் கூறியதாவது:-<br /><br />செய்தியாளர் :- இன்று நாடாளுமன்றத்தில், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் ஒருமித்த குரலில், இலங்கைப் பிரச்சினையில் கருத் துக்களை எடுத்து வைத்துள்ளார்கள். குறிப்பாக, மாநிலங்களவை உறுப்பினர்கள் கனிமொழி யும், திருச்சி சிவாவும் பேசியிருக்கிறார்கள். ஆனால், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா பேசும்போது அண்டை நாடான இலங்கைக்கு எதிராக, முடிவெடுக்க மாட்டோம் என்று கூறியிருக் கிறார். இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? தமிழர்களுக்குத் துரோகம்<br /><br />கலைஞர்:- திரு. எஸ்.எம். கிருஷ்ணா அவர்கள் பேசியதை சுட்டிக்காட்டி, கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழியும், திருச்சி சிவாவும் மாநிலங்களவையில் பேசும்போது, ``அண்டை நாடுகளுக்கு எதிராக முடிவெடுக்க மாட்டோம் என்றால்; பங்களாதேஷ் பிரச்சினையில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர்கள், (மத்திய அரசினர்) பதில் சொன்ன தாகத் தெரிய வில்லை. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களிக்க வேண்டும். இல்லா விட்டால், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாக தி.மு.க. அதைக் கருதும்.<br /><br />செய்தியாளர்:- இந்திய அரசு அப்படி முடி வெடுத்தால், மத்திய அரசுக்கு நீங்கள் கொடுத்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவீர்களா?<br /><br />கலைஞர்:- அது நான் ஒருவன் மாத்திரம் தீர்மானிக்கக் கூடியதல்ல; அதைப் பற்றி நாங்கள் எங்கள் செயற்குழுவில் கலந்தாலோசித்து முடி வெடுப்போம்.<br /><br />செய்தியாளர்:- சங்கரன்கோவிலில் நீங்கள் நாளை பேசவுள்ள மேடையை அகற்ற வேண்டுமென்று போலீஸ் தரப்பில் சொல்லியிருக்கிறார்களே?<br /><br />கலைஞர்:- அதெல்லாம் சிறிய விஷயங்கள். உள்ளூர் அ.தி.மு.க. தோழர்கள் ஈடுபட்டு செய்கின்ற காரியங்கள். அதை நாங்கள் பெரிதாக கருதவில்லை.<br /><br />செய்தியாளர்:- தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு அங்கே எப்படி உள்ளது?<br /><br />கலைஞர்:- தேர்தல் ஆணையம் அங்கே ஓரவஞ் சகமாக செயல்படுகிறது என்று புகார்கள் வரு கின்றன. செய்தியாளர்:- சங்கரன்கோவிலில் 32 அமைச்சர்கள் முற்றுகையிட்டு பல்வேறு வாக்குறு திகளை வாக்காளர்களுக்கு அளித்து வருகிறார்கள். இது எந்த அளவிற்கு தேர்தலை பாதிக்கும்?<br /><br />கலைஞர் :- இதைப் பற்றியெல்லாம் அறி வார்ந்த ஆசிரியர்களை கொண்ட பத்திரிகைகள் விமர்சனம் செய்து எழுத வேண்டும்.<br /><br />செய்தியாளர்:- சங்கரன்கோவிலில் தேர்தல் நியாயமாக நடைபெறுமா?<br /><br />கலைஞர்:- நடைபெற வேண்டும். செய்தியாளர்:- தேர்தல் நியாயமாக நடைபெற் றால் - தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு எப்படி?<br /><br />கலைஞர்:- தேர்தல் நியாயமாக நடை பெற்றால், தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு உறுதி.<br /><br />செய்தியாளர்:- இரயில்வே பட்ஜெட் டில் கட்டண உயர்வுகள் அறிவிக்கப்பட் டுள்ளதே?<br /><br />கலைஞர்:- தமிழகத்தில் பேருந்துக் கட்ட ணத்தை உயர்த்தியதைப் போல - மத்திய அரசு ரயில்வேயில் பயணிகள் கட்டணத்தை உயர்த்தி யிருக்கிறது. கட்டண உயர்வு என்றாலே, சாதாரண ஏழை மக்களை பாதிக்கக் கூடியது தான். கட்டணங் கள் மக்களால் தாங்கிக் கொள்ளக்கூடியதாக இருந்தால் அதைப்பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. ஒரே வரியில் கட்டணத்தை ஏற்றிவிட்டார்கள் என்று சொல்ல முடியாது. எப்படி, என்ன காரணத் தால் ஏற்றியிருக் கிறார்கள், எப்படியெல்லாம் ஏற்றியிருக்கிறார்கள், அதன் நிறை குறை என்ன என்பதைப் பற்றி யெல்லாம் யோசிக்க வேண்டும். கழகத்தின் கருத்தை கனிமொழியும் - சிவாவும் எதிரொலித்திருக்கிறார்கள்!<br /><br />செய்தியாளர்:- மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் கிருஷ்ணா பேசியது சரியாக இல்லையே?<br /><br />கலைஞர்:- அதைப் பற்றி கனிமொழி, மாநி லங்களவையில் இன்று பேசியது தி.மு.க. வின் கருத்தாக அமைந்திருக்கிறது. திருச்சி சிவாவும் கழகத்தின் கருத்தை எதிரொலித் திருக்கிறார்.<br /><br />செய்தியாளர்:- சங்கரன்கோவில் தேர்தல் முடிவு தி.மு.கவின் வெற்றி வாய்ப்பு எப்படி?<br /><br />கலைஞர்:- நல்லதை நினைப்போம். - இவ்வாறுகலைஞர் அவர்கள் பேட்டியளித்தார்.15-3-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-17886419397096820842012-03-16T04:11:37.366+05:302012-03-16T04:11:37.366+05:30இதை அடுத்து டி.ஆர்.பாலு இலங் கையில் தமிழர்களுக்கு ...இதை அடுத்து டி.ஆர்.பாலு இலங் கையில் தமிழர்களுக்கு எதிராக மனித உரிமை கள் மீறல் குறித்து அரசு தீவிரமாக இல்லை என்று வருந்துகிறேன். நாங்கள் வெளி நடப்பு செய்கிறோம் என்றார். இதையடுத்து நாடா ளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.<br /><br />மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சர் இலங்கை பற்றிய அறிக்கை சமர்ப் பித்த பிறகு அதன்மீது நடைபெற்ற விவாதத் தில் கலந்து கொண்ட தி.மு.கழக உறுப்பினர் கனிமொழி பேசிய தாவது:<br /><br />இலங்கை அரசால் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்து விசாரணைகள் நடைபெறுவதாகவும் அதன் முடிவில் பொறுப்பு நிர்ணயம் கிடைக்கும் என்று நாம் நம்புவதாகவும் அமைச் சர் அறிக்கையில் கூறி யுள்ளார். அவர்களது கூற்றுகள் மற்றும் சமரச கமிஷனின் அறிக்கை இலங்கை அரசு எந்தப் போர்க் குற்றங்களையும் செய்யவில்லை என்று கூறுகிறது. பெண்கள், குழந்தைகள் உள்பட 40,000 அப்பாவி குடி மக்கள் கொல்லப்பட்ட தில் இலங்கை அரசுக்கு எந்தவிதமான பங்கும் இல்லை என்றுஅது கூறுகிறது. இலங்கை அரசுக்கு இந்தக் குற் றங்கள் எதிலும் பாத் திரம் இல்லை என்று அது மன்னிக்கிறது. பின்னர் இலங்கை அரசு பற்றி இந்த உறுதியும் நம்பிக்கையும் எங் கிருந்து வருகிறது?<br /><br />அடுத்து நாம் நமது அண்டை நாட்டின் உள் விவகாரங்களில் தலை யிட முடியாது என்று கூறுகிறோம். ஆனால் 1971 வங்கதேசப் போரில் இந்தியா வகித்த பங்கு பற்றி நமக்குத் தெரியும். உலகம் முழுவதற்கும் தெரியும்.<br /><br />நமது பிரதமர் தென்னாப்பிரிக்கா, சென்றிருந்தபோது பெருமையுடன் அறிவித் தார்.<br /><br />எங்களது விடு தலைக்கு முன்பே 1946ஆம் ஆண்டில் நாங்கள் நிறவெறிக் கொள்கையை அய்க்கிய நாடுகள் அமைப்பில் ஒரு பிரச்சினையாக எடுத்தோம். 2009 ஜனவரி 9 அன்று அய்.நா. மனித உரிமைகள் கவுன்சில் (பாலஸ்தீனில்) காசா பகுதியில் இஸ்ரேலால் இழைக்கப்பட்ட மனித உரிமைகள் அத்துமீற லுக்கு எதிராக தீர்மா னம் கொண்டு வரப் பட்டபோது இந்தியா ஆதரித்தது என்று பெருமையுடன் பிரதமர் பிரகடனம் செய்தார். எனவே இலங்கையி லுள்ள தமிழர்கள் என்று வரும்போது தென் இந்தியா மற்றும் தமிழ் நாடு மக்களின் உணர்வு கள் என்று வரும்போது நாம் ஏன் மவுனமாக இருக்க வேண்டும்?<br /><br />நாங்கள் வேறெதுவும் கோரவில்லை. இலங்கை யில் நடைபெற்றுள்ள மனித உரிமை அத்து மீறல்கள் பற்றிய விசா ரணையை இந்திய அரசு ஆதரிக்கிறதா என்று மட்டும்தான் நாங்கள் கேட்கிறோம்.<br /><br />இதுபோன்ற அறிக் கையை எங்களால் ஏற் றுக் கொள்ள முடியாது என்றார் அவர்.<br /><br />இன்னும் சொல்லப் போனால் தமிழர் என்ற உணர்வையும் கடந்து இதில் மனித உரிமை இருக்கிறது என்பது முக்கியமானது என்றார்.<br /><br />திமுகவைச் சார்ந்து திருச்சி சிவா பேசும் போது கூறியதாவது:<br /><br />இலங்கை அரசு சொல்லிக் கொண்டிருக் கும் தகவல்களையே அமைச்சரும் அறிக்கை யில் கூறுகிறார். இலங்கை அரசின் அறிக்கை போலவே உள்ளது.<br /><br />சொன்னதையே திரும் பத் திரும்ப சொல்லு கின்ற ஜெராக்ஸ் காப்பி போல உள்ளது அமைச் சர் அறிக்கை வரலாற்று பூர்வ நட்புறவுக்கு தமி ழர்களின் உயிர்கள்தான் விலையா? இலங்கையில் வரலாற்று சிறப்பு மிக்க உறவு தேவை என்பதற் காக தமிழக மீனவர்கள் பலியாக வேண்டுமா? தமிழர்களின் உணர்வு களை மத்திய அரசு துச்சமாக மதிக்கும் நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் ஏற்படும் விளைவுகள் விரும்பத் தகாதவையாக இருக் கும்.<br /><br />இந்தியா எடுத்திருக்க வேண்டிய முயற்சியை பிற நாடுகள் எடுத்துள் ளன. இப்போது ஒன்றும் கெட்டுப் போகவில்லை. தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் இந்தியா இதற்கு குறைவாக வேறு எதுவும் எங்களை சமா தானப்படுத்தி விடாது. அதையும் செய்ய மறுத் தால், இதன் விளைவுகள் எதிர்காலத்தில் சந்தித்தே ஆக வேண்டும் என்றார்.<br /><br />கிருஷ்ணா தன் உரையை நிறைவு செய்த வுடன் அதிமுக எம்.பி.க் கள் அமைச்சரின் அறிக் கையை கிழித்தனர். கிழித்ததை சபைத் தலை வர் இருக்கைமுன் வீசி விட்டு வெளியேறினர். 15-3-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-8270687214937199122012-03-16T04:11:31.537+05:302012-03-16T04:11:31.537+05:30இலங்கைமீதான அமெரிக்கத் தீர்மானம் இந்திய வெளியுறவுத...இலங்கைமீதான அமெரிக்கத் தீர்மானம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அறிக்கைக்கு நாடாளுமன்றத்தில் கண்டனம்<br /><br /><br />தி.மு.க. - வெளி நடப்பு, அ.தி.மு.க. - நகல் கிழிப்பு<br /><br /><br /><br />புதுடில்லி, மார்ச் 15- இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் மீது இந்தியா எடுத் துள்ள முடிவு குறித்து நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் கடும் எதிர்ப்பும், கண்டன மும், தெரிவிக்கப்பட் டது.<br /><br />நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர். பாலு மக்களவையில் ஒரு ஒழுங்குப் பிரச் சினையைக் கிளப்பிக் கூறியதாவது:<br /><br />எனது நண்பர்கள் முற்றிலும் குழப்பமான நிலையில் இருப்பது போல் தெரிகிறது. நேற்று வெளியுறவுத் துறை அமைச்சர் அறிக்கை மூலமாக பிரச்சினை விளக்கப்படும் என்று அரசு உத்தரவாதம் அளித்தது. என்ன பிரச் சினை? பிரச்சினை அமெரிக்கா முன் வைத் துள்ள தீர்மானத்துக்கு ஆதரவு தொடர்பானது.<br /><br />இன்றைக்கு அவை நடவடிக்கைகள் இலங் கையின் நிலைமை பற்றிய அறிக்கை அளிப் பதாகும். தமிழில் ஒரு முதுமொழி உண்டு. பட்டுக் கோட்டைக்கு வழி கேட்டால், கொட் டைப் பாக்கு என்ன விலை? என்று சொல் கிறார். அய்.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அமெரிக்கா முன் மொழிந்துள்ள தீர்மா னத்துக்கு ஆதரவு குறித்து அமைச்சரிடமி ருந்து அறிக்கையைக் கேட்டால் அவர் இலங் கையில் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த் தல் போன்றவை குறித்து அறிக்கையுடன் வந்துள் ளார். நாங்கள் பல முறை கேட்டுவிட்டோம்.<br /><br />இதற்கு மேல் டி.ஆர். பாலு மற்றும் எவரும் பேச அனுமதிக்கப் படாததால் வெளி யுறவுத் துறை அமைச்சர் அறிக்கையை சமர்ப்பித் தார்.<br /><br />இறுதியாக இந்த அவையில் கூறப்பட் டுள்ள கருத்துக்கள், உணர்வுகள் ஆகிய வற்றை அரசு மனதில் இறுத்தி, இறுதி முடிவு எடுக்கப்பட்டவுடன் அரசு இந்த அவைக்குத் தெரிவிக்கும் என்று உறுதி அளிக்கிறேன் என்று முடித்தார் வெளியுறவுத் துறை அமைச்சர்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-45558451872887408302012-03-16T04:07:12.406+05:302012-03-16T04:07:12.406+05:30இரத்தக் கண்ணீர்!
குஜராத் மாநிலத்தில் மதக் கலவரம்...இரத்தக் கண்ணீர்!<br /><br /><br />குஜராத் மாநிலத்தில் மதக் கலவரம் இப்பொ ழுது தான் நடக்கிறதா? இதற்கு முன்பும் நடந் துள்ளதே என்று, அம் மாநில முதல் அமைச்சர் நரேந்திரமோடி கூறியுள் ளதன் மூலம், இவர் ஆட்சியில் மதக் கல வரங்கள் நடந்திருப்பது உண்மைதான் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.<br /><br />என்னதான் சாமர்த் தியம் காட்டினாலும் சிறு மழை பெய்தால்கூட சாயம் வெளுத்துப் போய் விடுமே!<br /><br />பெரிய பெரிய அதி காரிகளே காவல்துறை குஜராத்தில் நடந்தது என்ன என்பதை செதிர் காயாக உடைத்துக் காட்டி விட்டனரே!<br /><br />உண்மையைக் கூறிய தற்காக காவல்துறை அதிகாரி சஞ்சய்பட் மோடி ஆட்சியிலே சிறைக்குச் செல்ல வேண் டியதாயிற்று. மாநிலக் காவல்துறை அதிகா ரிக்கு எதிராக ஒரு கான்ஸ்டேபிளிடம் புகார் மனு வாங்கி அம்மாநில அதிகாரியைச் சிறையில் தள்ளும் அளவுக்குக் கீழ்த்தரமான இந்த மோடிக்கு மூடிபோட்டுக் காட்டி மோகனராகம் பாடும் சோ ராமசாமி அய்யர்கள் தமிழ்நாட்டில் உண்டு.<br /><br />இன்னொரு தகவல்: .கோத்ரா நிகழ்வுக்குப் பின்னர் கட்டவிழ்த்து விடப்பட்ட சிறுபான்மை மக்களான முஸ்லிம் களுக்கு எதிரான கல வரத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பானுமி யான் சி.பி.அய். அதிகாரி ஆர்.கே. ராகவன் தலை மையிலான சிறப்புப் புல னாய்வுக் குழுவின் முன் தெரிவித்த தகவல் நெற் றிப் பொட்டில் குண்டு பாய்ச்சுவது போன்றதே!<br /><br />வெறியாட்டத்தின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் விடுபட முடி யாத நிலைக்குத் தள்ளப் பட்ட என் பேத்தி ஒரு மாற்றுத் திறனாளி! அவரிடம் நான் என்ன சொல்லக்கூடும்!<br /><br />தாக்குதல், கொலை, கொள்ளை போன்ற அனைத்தையும் திட்ட மிட்டு, கூட்டுக் கும்ப லாகத் திட்டமிட்ட வகை யில் செயல்பட்ட கும்பல் தலைமுறை தலைமுறை யாக வாழ்ந்து வந்த எங் களை, எங்கள் சொந்த நிலங்களிலிருந்து பறித்து வெளியேற்றினார்கள். அப்படிப்பட்டவர்கள் சுதந்திர மனிதர்களாக மகிழ்ச்சியோடு நடமாடிக் கொண்டுள்ளனரே - அவர்களைப் பற்றியா மாற்றுத் திறனாளியான என் பேத்தியிடம் சொல்ல முடியும்? என்ற அந்த வார்த்தைகளில்தான் எத்துணை எத்துணை கொந்தளிப்புகளும் துய ரங்களும்! ரத்தக் கண் ணீர் வடிக்கின்றனவே!<br /><br />இதற்கெல்லாம் சூத் திரதாரியான தாமோதர தாஸ் நரேந்திர மோடி. இந்தியாவுக்கே பிரதமர் ஆக வேண்டுமாம். ஆமாம், இந்தியா சுடு காடாக வேண்டும் என்ற அளப்பரிய ஆசை இந்தப் பார்ப்பனக் கூட்டத்துக்கு!<br /><br />- மயிலாடன் 15-3-2012<br /><br />.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com