tag:blogger.com,1999:blog-1474608369333206681.post2867857559529067007..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: பகுத்தறிவாளர் கழகத்தைச் சேராதவர்கள் எல்லாம் பகுத்தறிவு அற்றவர்களா?தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-64577979001901916922015-02-26T17:14:55.246+05:302015-02-26T17:14:55.246+05:30கர்மப்பலன்
செய்தி: மதர்தெரசா மருத் துவத் தொண்டு எ...கர்மப்பலன்<br /><br />செய்தி: மதர்தெரசா மருத் துவத் தொண்டு என்ற பெயரில் மத மாற்றத்தில் ஈடுபட்டார். - மோகன் பகவத் ஆர்.எஸ்.எஸ். தலைவர்<br /><br />சிந்தனை: குஷ்ட நோய் என்றால் அது கர்மபலன் என்று சொல்லும் இந்துத் துவவாதிகள் அந்த நோய் தீர்க்கும் பணியில் ஈடுபட்ட வர்களை ஏற்றுக் கொள் வார்களா?<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/96900.html#ixzz3SqnolyCZ<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-14958720763714547762015-02-26T17:12:48.497+05:302015-02-26T17:12:48.497+05:30அஸ்திவாரம் கிடையாது!
பார்ப்பனர்களால் போற்றி வளர்...அஸ்திவாரம் கிடையாது!<br /><br /><br />பார்ப்பனர்களால் போற்றி வளர்க்கப்படும் இந்து மதம் என்று சொல்லப்படுகிற மதத்துக்கு அஸ்திவாரமே கிடையாது. - (விடுதலை, 11.7.1954)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-55232598103796846122015-02-26T17:07:00.728+05:302015-02-26T17:07:00.728+05:30இன்றைய ஆன்மிகம்?
பட்டர்
ஜாதியைப் பொறுத்து யாரும்...இன்றைய ஆன்மிகம்?<br /><br />பட்டர்<br /><br />ஜாதியைப் பொறுத்து யாரும் உயர்வு, தாழ்வு பாராட்டக் கூடாது; கடவுள் பக்தி கொண்டவன், பக்தியற்றவன், தாழ்ந்த வன் என்பது தான் வைணவத்தின் அடிப்படை. மகாபாரதத்தில் வரும் விதுரர் தாழ்ந்த குலத்தில் பிறந்தாலும் அவரை வியாசர் போற்றி வணங் குகிறார் என்று எழுது கிறது ஓர் ஆன்மிக இதழ்.<br /><br />ஏன் அதனோடு நிறுத்திக் கொண்டனர்? அந்தப் பக்தியுள்ள விதுரர் குலத்தவர்கள் அந்த வைணவக் கோயி லில் பட்டராக முடி யாதது ஏன் என்பதுதான் இன்றையக் கேள்வி?<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/96887.html#ixzz3Sqlr2YPG<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-89944588104522814872015-02-26T17:06:31.482+05:302015-02-26T17:06:31.482+05:30மோடி குட்டு உடைந்தது!
சொந்த தொகுதிக்குக்கூட ஒரு பை...மோடி குட்டு உடைந்தது!<br />சொந்த தொகுதிக்குக்கூட ஒரு பைசா செலவழிக்கவில்லை<br /><br />மோடியின் தத்து கிராமத்திலும் வெத்து விளம்பரம் தான்! புதுடில்லி பிப் 26_ புதிய ஆட்சி அமைந்து ஓர் ஆண்டு நெருங்கிக் கொண்டு இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்களின் தொகுதிக்காக இதுவரை என்ன செய்தார்கள் என்று டில்லியைச் சேர்ந்த சமூக சேவகர் தகவல் அறியும் உரிமைச்சட்டத் தின் கீழ் கேள்வி கேட் டுள்ளார்.<br /><br />இதில் வாரணாசி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான மோடி இதுவரை அந்த தொகுதிக் காக ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை என் பது தெரியவந்தது. நாடாளுமன்ற உறுப்பி னர்கள் அவர்களின் தொகுதி வளர்ச்சிக்காக ரூ200 கோடி ஒதுக்கப்படு கிறது. இந்த நிதியில் அவர்களின் தொகுதி மேம்பாட்டிற்கென புதிய திட்டங்களை வகுத்து அதை நடைமுறைப்படுத்த லாம், மத்திய மாநில அரசுகளின் அனுமதி மற்றும் வேறு எந்த ஒரு தடையும் இல்லாத நிலையில் திட்டங்களை தொகுதி மக்களிடம் இருந்து பெறலாம். வாரணாசி தொகுதி மக்கள் இதுவரை பொது சமுதாயக் கூடம், பள்ளி களில் கணினி, குடிநீர் சுத்திகரிப்பு கருவி, மற்றும் சிறுதொழில் முனைவோ ருக்கான பொதுச்சந்தை போன்ற பல்வேறு திட் டங்களை மோடி வார ணாசிக்கு வரும் போதெல்லாம் அவரிடம் கோரிக்கை மனுவாக கொடுத்திருந்தனர். ஆனால் இந்த மனுக்கள் என்ன ஆனது என்று தெரியவில்லை. மேலும் மக்கள் கொடுத்த கோரிக் கைகள் குறித்து ஆலோ சனைகள் கூட நடைபெற வில்லை என்று தெரிகிறது,.<br /><br />இது குறித்து வார ணாசி மக்கள் கூறும் போது மோடி வாரணா சிக்கு வரும்போது நாங்கள் கொடுக்கும்; மனுக்கள் குறித்து என்ன நடவ டிக்கை எடுத்தார் என்று கேட்டதற்கு இதில் பெரும்பாலானவை மாநில அரசு செய்து கொடுக்கும் இதற்கான நிதி மாநில அரசின் வளர்ச்சித் திட்டத்தில் ஒதுக்கியுள்ளோம் என்று பதில் கிடைத்தது. மோடி வாரணாசி வரும்போ தெல்லாம் வாரணாசியை சிங்கப்பூராக மாற்றுவோம் என்று பாஜக காரர்கள் கூறுகிறார்கள்.<br /><br />வாரணா சிக்கு உலக தலைவர்களை எல்லாம் அழைத்து வரு வோம் என்கிறார்கள். ஆனால் அந்தத் தலை வர்கள் வருகை தருவதற்கு தரமான சாலைகள் எதுவும் இல்லை, இதற்குக் காரணம் கேட்டால் சாலைகளை நிர்வகிப்பது மாநில அரசு என்று பதில் வருகிறது. மோடியின் தத்து கிராமம்தான் என்ன வாழ்கிறது? மோடி தத்து எடுத்த முஸ்லீம்களே வசிக்காத கிராமமான ஜெயபூரிலும் இதே நிலைதான், மோடி செயல்படுத்தப்போகும் திட்டங்களின் பட்டியல் அடங்கிய பெரிய பதா கைகள் கிராமத்தின் நுழைவாயிலில் அலங்கரிக் கின்றன.<br /><br />மோடி முதல் முறையாக வருகைதந்த போது வைத்த இந்தப் பதாகைகள் இன்று பழையதாகிப் போய் விட்டன. பல எழுத்துகள் அழிந்துவிட்டன; ஆனால் இதுவரை எந்த ஒரு திட்டமும் செயல் படுத்தப்படவில்லை. இதற்குக் காரணம் கேட்ட போது கிராமங்களில் முக்கிய உறுப்பினர்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்று அங்கெல்லாம் நடந்து வரும் வளர்ச்சிப் பணியை கண்காணித்து வருகின்றனர். கிராமத்தில் நாங்கள் கேட்ட சாதாரண திட் டங்களுக்குகூட இப்படி எதிர்மாறான பதில்களே வருகின்றன. ஆக்கப் பூர்வமான எந்த திட்டமும் இன்றுவரை நடைபெறவில்லை என்று கூறுகின்றனர்.<br /><br />கோடைப் பிரதேசமான வாரணாசி யில் ஆப்பிள் மரம் நடு வதற்கு வற்புறுத்துகின்ற னர். ஆப்பிள் மரங்கள் பனிபொழியும் பிரதேசங் களில் தான் செழுமையாக வளரும் ஆண்டிற்கு 3 மாதம் மட்டுமே குளிர் காலமாக இருக்கும் வாரணாசியில் ஆப்பிள் விவசாயம் என்பது இய லாத காரியம்; ஆனால், ஜெயபூர் கிராம பஞ் சாயத்துத் தலைவரான துர்காவதி தேவியின் மைத்துனர் கிராமத்தில் ஆப்பிள் விவசாயம் செய்ய அனைவரையும் வற்புறுத் துகிறார் இதற்காக லட்சக் கணக்கில் பணம் செல வழிக்கின்றனர். தேவை யற்ற இந்த காரியத்தின் மூலம் வாரணாசியில் மோடிக்கு அவப்பெயரே ஏற்படப்போகிறது என்று வாரணாசி மக்கள் கூறுகின்றனர்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/96885.html#ixzz3SqliRMqH<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-8921002340488283312015-02-26T17:05:41.879+05:302015-02-26T17:05:41.879+05:30இங்கிலாந்திலிருந்து வெளிவரும் இதழில்
இங்கிலாந்தில...இங்கிலாந்திலிருந்து வெளிவரும் இதழில்<br /><br />இங்கிலாந்திலிருந்து வெளிவரும் ஸ்வின்டன் அட்வர்ட்டைசர் (swindonadvertiser.co.uk) எனும் ஆங்கில இதழில் கடவுள் இல்லை என்று தலைப்பிட்டு வெளியாகி உள்ள வாசகர் கடிதத்தில் உள்ள தகவல் வருமாறு:<br /><br />கடவுள் இல்லை<br /><br />மூன்று முசுலீம்கள் அமெரிக்காவில் கொல்லப் பட்டனர். கடவுளை நம்புபவர்களிடையே காட்டு மிராண்டித்தனங்கள் ஏற்படக்கூடாது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணமாக உள்ளது.<br /><br />அண்மைக்காலத்தில் எத்தனை முசுலீம்கள் கொல்லப்பட்டுள்ளனர்? வானத்திலிருந்து கற் பனையாக எவனோ குதிப்பான் என்கிற நம்பிக்கை யால், மக்களைக் கடத்துவது மற்றும் உயிரோடு எரிப்பது என நடைபெறுகின்றன.<br /><br />ஏசுவாக இருந்தாலும், அல்லாவாக இருந்தாலும், இன்னும் மொகம்மத் அல்லது கடவுள் அல்லது புத்தர் என்று எவரும் இருப்பதாகக் கூறினால், நாம் வாதிடுவதற்கு காரணமாவது இருக்கும்.<br /><br />எங்குமே கடவுள் இல்லை, மற்றபடி இல்லாத இந்தக் குப்பைகளின் பெயரால் அந்த நம்பிக்கையில் பின்பற்றுபவர்களால் பொறுப்பற்றமுறையில் பலவும் நடத்தப்படுகின்றன.<br /><br />அப்படி ஒருவன் இல்லாதநிலையில் அவனால் என்ன செய்துவிட முடியும்?<br /><br />- ரோஜெர் லேக் வடக்கு ஸ்வின்டன்<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/96890.html#ixzz3SqlW7xUI<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-58214405706262315902015-02-25T17:57:20.347+05:302015-02-25T17:57:20.347+05:30செவ்வாய்த் தோஷ நம்பிக்கையாளர்களுக்குக் காணிக்கை!
ச...செவ்வாய்த் தோஷ நம்பிக்கையாளர்களுக்குக் காணிக்கை!<br />செவ்வாய்க்கோளில் பிறக்கும் முதல் குழந்தை?<br /><br />மார்ஸ் ஒன் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள செவ்வாய்க்கோளுக்கு ஒரு வழிப்பயணம். உள்படம்: செவ்வாய்க்கோளுக்கு ஒரு வழிப் பயணம் மேற்கொண்டு, பிள்ளை பெற விரும்பும் பிரிட்டானிய பெண் மேகி லியூ<br /><br />செவ்வாய்க் கோளில் பெண்மணி ஒருவர் முதல் முறையாக குழந்தை பெற்றெடுக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.<br /><br />நெதர்லாந்தை சேர்ந்த மார்ஸ் ஒன் (Mars One) என்ற தனியார் நிறுவனம் கடந்த 2013 ஆம் ஆண்டு செவ்வாய்க்கோளுக்கு ஒரு வழிப்பயணம் (A One-Way Trip) என்ற பிரமாண்டமான திட்டத்தை அறிவித்தது. இதற்காக, செவ்வாய்க்கு செல்லும் பயணிகள் மீண்டும் பூமிக்குத் திரும்ப இயலாது; அதற் கான எந்த ஏற்பாட்டையும் நிறுவனம் செய்ய வில்லை என்ற நிபந்தனையுடன் விண்ணப் பங்களை வழங்கியது.<br /><br />2024 ஆம் ஆண்டு செவ்வாய்க்கோளை நோக்கி செல்லும் இந்த பயணக்குழுவினர், அங்கேயே நிரந்தரமாக தங்க வைக்க அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்து, இந்த சாகசப் பயணத்தில் பங்கு பெற உலகம் முழுவதிலும் 2 லட்சத்து 2 ஆயிரத்து 586பேர், தங்களின் பெயர்களை முன்பதிவு செய்தனர். இத்திட்டத்திற்கு, சுமார் 100பேர் தெரிவு செய்யப்பட்டனர். இதில், அமெரிக்காவி லிருந்து 39, அய்ரோப்பாவிலிருந்து 31, ஆசியா விலிருந்து 16, ஆப்ரிக்காவிலிருந்து 7, ஓசியானி யாவிலிருந்து 7 பேரும் தேர்வாகியுள்ளனர். செவ்வாய்க்கோள் பயணத்தில் பயணம் செய்யும் குழுவினரில் இந்தியர்களான கேர ளாவைச் சேர்ந்த சாரதா பிரசாத் (19), துபாயில் வசிக்கும் ரிதிகா சிங் (29) ஆகிய 2 பெண்களும், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கணினி அறிவியலில் டாக்டரேட் பயின்று வரும் தரண்ஜீத் சிங் (29) உட்பட 3 பேர் தேர்வானவர்களின் பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.<br /><br />இந்நிலையில், இந்தப் பயணத்திற்குப் பிரிட்டனைச் சேர்ந்த 24 வயதான மேகி லியூ (Maggie Lieu)<br />என்ற பெண் தெரிவாகி யுள்ளார். மேலும் இவர், செவ்வாய்க்கோளில் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க முடிவெடுத் துள்ளதாகவும் தகவலை வெளியிட்டுள்ளார்.<br /><br />இதுகுறித்து அவர் கூறும்போது, செவ்வாய்க்கோளில் குழந்தையை பெற்றெடுப்பதற்கு அங்குள்ள புவி ஈர்ப்பு விசை சாதகமாக இருக்காது என்று இதுவரை ஆராய்ச்சியில் வெளியாகவில்லை என்றும் அதனால், அங்கு தான் நிச்சயம் குழந்தை பெற்றெடுப்பேன் எனவும் கூறியுள்ளார்.<br /><br />மேலும், இந்த பயணத்திற்கு தெரிவான 100 பேரில் அனைவரும் 19 வயதிலிருந்து 60 வயதுடையவர்கள் என்பதால் அவர்களில் ஒருவரை எனது வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொண்டு குழந்தையை பெற்றெடுப்பேன் என தெரிவித்துள்ளார்.<br /><br />சுமார் 6 பில்லியன் டாலர் செலவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பயணத்தில் பங்கு பெறுபவர்கள் அனைவருக்கும் ஆண்டுக்கணக்கில் பல பயிற்சிகள் அளிக்கப் பட்டு வருகின்றன. இது தவிர, இந்த பெரிய பயணத்தை உருவாக்கியவரும், இத்திட்டத்தின் தலைமை நிர்வாகியுமான பாஸ் லான்ஸ் டோர்ப் கூறுகையில், உலகமே வியக்குமளவிற்கு இருக்கப் போகும் இந்தப் பயணத்தை நேரடியாக செவ்வாய்க்கோளிலிருந்து ஒளிப்பரப்ப போகி றோம் என்று தெரிவித்துள்ளார்.<br /><br />மேலும், தொலைக்காட்சி மற்றும் இணைய தள வசதிகள் உள்ள ஒவ்வொருவரும் இந்தப் பயணத்தைக் கண்டுகளிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ள தாகவும் தெரிவித்துள்ளார்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/96811.html#ixzz3Sl81XgPw<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-39694084624696033862015-02-25T17:51:36.772+05:302015-02-25T17:51:36.772+05:30பள்ளி மாணவர்கள் மத்தியிலே நேருவைக் கொச்சைப்படுத்தி...பள்ளி மாணவர்கள் மத்தியிலே நேருவைக் கொச்சைப்படுத்திய பி.ஜே.பி. கல்வி அமைச்சர்<br /><br /><br />ரோஹதக், பிப்.25_ பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அரி யானா கல்வியமைச்சர் ராம்விலாஸ் சர்மா பள்ளி மாணவர்கள் முன்பு முன் னாள் பிரதமர் நேருவை அசிங்கமான வார்த்தை களைப் பயன்படுத்தி திட் டினார். அரியானா மாநிலம் ரோஹதக்கில் அம்<br /><br />மாநிலத்தைச் சேர்ந்த பிரபல கவிஞர் லக்மிசந் தின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது, இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக அரியானா மாநிலத்தின் கல்வி அமைச்சர் ராம்விலாஸ் சர்மா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: அனைவரிடத்திலும் சங்கடத்தை ஏற்படுத்தியது<br /><br />நமது கவி லக்மிசந் திற்கு நிகரானவர் யாரு மில்லை. அவருக்குள்ள புகழ் என்றும் மறையாது. அவரை எந்த ஒரு தலை வருடனும் ஒப்பிட முடி யாது. ஒருமுறை டில்லிக் குப் பயணம் செய்த சிலர் பேசிக்கொண்டனர். அதில் ஒருவர், இன்று நேரு இறந்துவிட்டார் என்று கூறினார். அதற்குப் பதிலளித்த நமது அரியா னாவைச் சேர்ந்தவர் கூறும்போது, பெருமை மிக்க லக்மிசந்த் எங்கே என்று கூறி (சில தவறான வார்த்தைகளை உபயோ கித்து) அந்த நேரு எங்கே? என்று கூறினாராம். இதை அப்படியே ஒலி பெருக்கியில் கூறினார். அவருக்கு முன்பாக நூற் றுக்கணக்கான பள்ளி மாணவ, மாணவிகள் அமர்ந்திருக்க, மேடை யில் ஆசி ரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் அமர்ந் திருக்கும்போது, மாநில கல்வி அமைச்சர் ஒருவரே ஜவர்கர்லால் நேருவை அசிங்கமான வார்த்தை யால் திட்டித் தீர்த்துள் ளது அனைவரிடத்திலும் சங்கடத்தை ஏற்படுத் தியது. நிகழ்ச்சி முடிந்த பிறகு இதுகுறித்து ஊடகவிய லாளர்கள் அமைச்சரிடம் கேட்ட போது,<br /><br />நான் வேண்டு மென்றே இந்த வார்த்தையைக் கூற வில்லை. கவிஞர் லக்மி சந்த்பற்றி மக்கள் கூறு வதைத்தான் நான் கூறி னேன். மேலும், சில வார்த் தைகளை எந்த அளவு கோல் வைத்து மட்ட மான வார்த்தை நல்ல வார்த்தை என்று கூறு கிறீர்கள் என்று ஊடக வியலாளர்களிடம் பதில் கேள்விவைத்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த ஆசிரியர்கள் கூறியதாவது: அவை நிறைந்த பள்ளி மாணவ, மாணவிகள் முன்பாக இதுபோன்ற வார்த்தையை பயன் படுத்தக் கூடாது<br /><br />. மேலும் பள்ளியில் நேரு குறித்து மாணவர்களுக்கு நாங்கள் பாடம் சொல்லித்தருகி றோம். அப்படி இருக்க எங்களின் முன்பே புகழ் பெற்ற ஒரு தலைவரை கொச்சையான வார்த்தை களைப் பயன்படுத்தி பேசியிருப்பது தவறான முன்னுதாரணமாகும் என்று கூறினார்கள். ஆர்.எஸ்.எஸ் உறுப் பினரான ராம்விலாஸ் சர்மா முன்னாள் பாஜக மாநிலத் தலைவராக நீண்ட ஆண்டுகாலம் பதவி வகித்தார். அரியா னாவில் உள்ள பாஜக அரசில் கல்வி அமைச்ச ராக உள்ளார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-60871106754719720452015-02-25T17:50:51.190+05:302015-02-25T17:50:51.190+05:30இன்றைய ஆன்மிகம்?
விருப்பு - வெறுப்பு!
ஆன்மிகம் ...இன்றைய ஆன்மிகம்?<br /><br />விருப்பு - வெறுப்பு!<br /><br />ஆன்மிகம் பொதுவானது என்றால், வடகலைக் காரன் ஏன் தென்கலைக்காரனை வெறுக்கிறான்? திருநீறு பூசுபவன் ஏன் இவர்கள் இருவரையும் வெறுக் கிறான்? ஆக, ஆன்மிகத்திலும் விருப்பு - வெறுப்பு இருக்கிறது என்பது உண்மையானால், அது என்ன வெங்காய ஆன்மிகம்?<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/96808.html#ixzz3Sl6NwyQP<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-53040066013858091672015-02-25T17:50:23.239+05:302015-02-25T17:50:23.239+05:30செவ்வாய்த் தோஷ நம்பிக்கையாளர்களுக்குக் காணிக்கை!
ச...செவ்வாய்த் தோஷ நம்பிக்கையாளர்களுக்குக் காணிக்கை!<br />செவ்வாய்க்கோளில் பிறக்கும் முதல் குழந்தை?<br /><br />மார்ஸ் ஒன் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள செவ்வாய்க்கோளுக்கு ஒரு வழிப்பயணம். உள்படம்: செவ்வாய்க்கோளுக்கு ஒரு வழிப் பயணம் மேற்கொண்டு, பிள்ளை பெற விரும்பும் பிரிட்டானிய பெண் மேகி லியூ<br /><br />செவ்வாய்க் கோளில் பெண்மணி ஒருவர் முதல் முறையாக குழந்தை பெற்றெடுக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.<br /><br />நெதர்லாந்தை சேர்ந்த மார்ஸ் ஒன் (Mars One) என்ற தனியார் நிறுவனம் கடந்த 2013 ஆம் ஆண்டு செவ்வாய்க்கோளுக்கு ஒரு வழிப்பயணம் (A One-Way Trip) என்ற பிரமாண்டமான திட்டத்தை அறிவித்தது. இதற்காக, செவ்வாய்க்கு செல்லும் பயணிகள் மீண்டும் பூமிக்குத் திரும்ப இயலாது; அதற் கான எந்த ஏற்பாட்டையும் நிறுவனம் செய்ய வில்லை என்ற நிபந்தனையுடன் விண்ணப் பங்களை வழங்கியது.<br /><br />2024 ஆம் ஆண்டு செவ்வாய்க்கோளை நோக்கி செல்லும் இந்த பயணக்குழுவினர், அங்கேயே நிரந்தரமாக தங்க வைக்க அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்து, இந்த சாகசப் பயணத்தில் பங்கு பெற உலகம் முழுவதிலும் 2 லட்சத்து 2 ஆயிரத்து 586பேர், தங்களின் பெயர்களை முன்பதிவு செய்தனர். இத்திட்டத்திற்கு, சுமார் 100பேர் தெரிவு செய்யப்பட்டனர். இதில், அமெரிக்காவி லிருந்து 39, அய்ரோப்பாவிலிருந்து 31, ஆசியா விலிருந்து 16, ஆப்ரிக்காவிலிருந்து 7, ஓசியானி யாவிலிருந்து 7 பேரும் தேர்வாகியுள்ளனர். செவ்வாய்க்கோள் பயணத்தில் பயணம் செய்யும் குழுவினரில் இந்தியர்களான கேர ளாவைச் சேர்ந்த சாரதா பிரசாத் (19), துபாயில் வசிக்கும் ரிதிகா சிங் (29) ஆகிய 2 பெண்களும், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கணினி அறிவியலில் டாக்டரேட் பயின்று வரும் தரண்ஜீத் சிங் (29) உட்பட 3 பேர் தேர்வானவர்களின் பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.<br /><br />இந்நிலையில், இந்தப் பயணத்திற்குப் பிரிட்டனைச் சேர்ந்த 24 வயதான மேகி லியூ (Maggie Lieu)<br />என்ற பெண் தெரிவாகி யுள்ளார். மேலும் இவர், செவ்வாய்க்கோளில் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க முடிவெடுத் துள்ளதாகவும் தகவலை வெளியிட்டுள்ளார்.<br /><br />இதுகுறித்து அவர் கூறும்போது, செவ்வாய்க்கோளில் குழந்தையை பெற்றெடுப்பதற்கு அங்குள்ள புவி ஈர்ப்பு விசை சாதகமாக இருக்காது என்று இதுவரை ஆராய்ச்சியில் வெளியாகவில்லை என்றும் அதனால், அங்கு தான் நிச்சயம் குழந்தை பெற்றெடுப்பேன் எனவும் கூறியுள்ளார்.<br /><br />மேலும், இந்த பயணத்திற்கு தெரிவான 100 பேரில் அனைவரும் 19 வயதிலிருந்து 60 வயதுடையவர்கள் என்பதால் அவர்களில் ஒருவரை எனது வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொண்டு குழந்தையை பெற்றெடுப்பேன் என தெரிவித்துள்ளார்.<br /><br />சுமார் 6 பில்லியன் டாலர் செலவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பயணத்தில் பங்கு பெறுபவர்கள் அனைவருக்கும் ஆண்டுக்கணக்கில் பல பயிற்சிகள் அளிக்கப் பட்டு வருகின்றன. இது தவிர, இந்த பெரிய பயணத்தை உருவாக்கியவரும், இத்திட்டத்தின் தலைமை நிர்வாகியுமான பாஸ் லான்ஸ் டோர்ப் கூறுகையில், உலகமே வியக்குமளவிற்கு இருக்கப் போகும் இந்தப் பயணத்தை நேரடியாக செவ்வாய்க்கோளிலிருந்து ஒளிப்பரப்ப போகி றோம் என்று தெரிவித்துள்ளார்.<br /><br />மேலும், தொலைக்காட்சி மற்றும் இணைய தள வசதிகள் உள்ள ஒவ்வொருவரும் இந்தப் பயணத்தைக் கண்டுகளிக்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ள தாகவும் தெரிவித்துள்ளார்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/96811.html#ixzz3Sl6GETOL<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-72440854250974600532015-02-25T17:49:17.284+05:302015-02-25T17:49:17.284+05:30இணைய தமிழில் புதிய மாற்றம் பெரியார் அறிமுகப்படுத்த...இணைய தமிழில் புதிய மாற்றம் பெரியார் அறிமுகப்படுத்திய எழுத்துச் சீர்திருத்தம்<br /><br />இந்த மாற்றத்திற்குப் பேருதவி புரிந்துள்ளது!<br /><br />இந்து ஆங்கில ஏட்டில் சிறப்புக் கட்டுரை<br /><br />சென்னை, பிப்.25_ இணைய தளத்தில் தமிழ் இன்று ஆதிக்கம் செலுத்து வதற்கு முக்கிய காரணம் தந்தை பெரியார் அறிமுகப் படுத்திய தமிழ் எழுத்துச் சீர்திருத்தமே என்று இந்து ஏட்டில் இன்று (25.2.2015) வெளிவந்துள்ள சிறப்புக் கட்டுரை கூறுகிறது.<br /><br />இணையதமிழ் (i தமிழ்) என்ற தமிழ் எழுத்துருவின் நவீன வடிவத் திட்டத்தை கார்கி ஆராய்ச்சி மய்யம் செயல் படுத்த முனைந்துள்ளது. தமிழ் பல நூற்றாண்டு களாக பல்வேறு மாற்றங் களை சந்தித்து வந்தது. எழுத்துருவில் மாற்றங் களைச் சந்தித்தாலும் அதன் தொன்மை மாறா மல், வளமை குன்றாமல் இன்றளவும் இளமையாக, மேலும் புதுமையாக திகழ் வதே இதன் தனித்துவ மாகும். இதனடிப்படையில் கணினி எழுத்திற்கேற்ப எளிமையான முறையில் தமிழ் எழுத்துக்களில் மாற் றங்களைக் கொண்டுவர கவியரசர் வைரமுத்துவின் மகன் கார்க்கி தன்னுடைய ஆய்வு மய்யத்தின்மூலம் புதிய எழுத்துருக்களை வர விருக்கும் தமிழ் இணைய வழி மாநாட்டில் ஆய்வா ளர்கள் முன்பு வைக்க உள்ளார்.<br /><br />மதன்கார்க்கி அவரது குழுவினரான சுதர்சனம் நேசமணி மற்றும் தமிழ்ச் செல்வி ஆகியோர் ஒன்றி ணைத்து 216 உயிர்மெய் எழுத்திற்கும் புதிய வரிவடி வத்தை உருவாக்கியுள்ளனர். முக்கியமாக ஒருங்குறி யில் (யுனிக்கோட்) முறை யில் இன்றளவும் சில குறை பாடுகள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. முக் கியமாக தற்போது மிகவும் வேகமாக வளர்ந்துவரும் ஆண்டிராய்டு மற்றும் அய்போன் போன்ற தளங் களில் யுனிக்கோட் எழுத் துருக்கள் சரிவர தெரிவ தில்லை.<br /><br />இதனடிப்படை யில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு கார்கி ஆய்வு மய்யம் வேகமாக வளர்ந்துவரும் இணைய தமிழ் உலகில் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையிலும், அதேநேரத்தில் இனிவரும் காலத்திலும் இணைய வழித் தமிழ் மிகவும் எளிய முறையில் வரும் தலை முறைக்கும் பயனளிக்கும் விதத்தில் பல்வேறு மாற் றங்களைக் கொண்டுவந் துள்ளனர்.<br /><br />i தமிழ் எழுத்துருக்கள் நவீன ஸ்மார்ட் போன் களின் எழுது பலைகை களில் (keyboard) எவ்வித சிறப்புக் குறியீடுகள் இல் லாமல் சாதாரண எழுது பலகை போன்றே அவற்றை நாம் பயன்படுத்தமுடியும். தமிழ் எழுத்துருக்களில் மாற்றம் நூற்றாண்டுக ளாகத் தொடர்ந்து மாறிக் கொண்டு வந்தாலும் வீர மாமுனிவர் காலத்தில் தமிழ் எழுத்துக்கள் எளிமையாக் கும் முயற்சி துவங்கியது.<br /><br />தந்தை பெரியார் தொலைநோக்கிற்கு மிகப் பெரும் உதாரணங்களுள் ஒன்றாக தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கூறலாம். அவரது காலத்தில் தமிழ் அச்சுக்கள் தோன்ற ஆரம் பித்துவிட்டன. தமிழ் அச் சுக்கோர்வைக்கு அப்போதி ருந்த வடமொழிக் கலப்புத் தமிழ் ஏற்றதாக இருக்காது என்ற தொலைநோக்குப் பார் வையில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தார். பெரியாரின் இந்த எழுத்துச் சீர்திருத்தம் என்பது இன்று இணையம் வரை வந்து விட்டது. இந்திய மொழிகளில் இணையத்தில் தமிழின் ஆதிக்கம் இன்று முதலிடத் தில் இருப்பதற்கு முக்கிய காரணம் பெரியார் கொண்டு வந்த தமிழ் சீர்திருத்தம் தான். பெரியாரின் எழுத் துச் சீர்திருத்திற்கு முன்பாக இருந்த தமிழையொட் டியே மலையாளம், தெலுங்கு கன்னடம் போன் றவை இருந்தன. ஆனால், அம்மொழிகளால் எழுத் துச் சீர்திருத்தம் பெற இய லாமல் இன்றளவும் இணைய உலகில் பின்தங் கியே உள்ளது. சீன மொழி இன்றள வில் உலகம் முழுவது அதி கமாக பேசும் மொழிகளில் முதன்மையானதாக உள் ளது. நவீன சீனாவைப் படைத்த சான் யாட் சென் சீனமொழியை நவீன காலத்திற்கு ஏற்ப மாற்றம் செய்யவேண்டும். நவீன வளர்ச்சிக்கு ஏற்ப மொழி யில் மாற்றம் செய்யவேண் டும் என்று கூறினார். அவரது ஆலோசனையின் படி சீன மொழியில் ஏற் பட்ட எழுத்துரு மாற்றம் இன்று உலகின் பொருளா தார வல்லரசாக மாற்றி யுள்ளது.<br /><br />கார்கி ஆய்வு மய்யம் கொண்டுவந்துள்ள நவீன தமிழ் எழுத்துருக்கள்மூலம் பதிப்பிற்குச் செல்லும் போது அதிக இடங்கள் சேமிக்கப்படும் இதன் மூலம் காகித சேமிப்பு மாத் திரமல்லாமல் காகிதத்திற் காக வெட்டப்படும் மரங்கள் சேமிக்கப்படும்.<br /><br />(இன்றைய ஆங்கில இந்து ஏட்டில் கார்த்திக் சுப்பிரமணியம் எழுதிய ‘‘A Proposal to simplify the Tamil Script’’ கட்டுரையின் தமிழாக்கம் இது).<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/96807.html#ixzz3Sl5yEyt0<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-53449045232892680702015-02-24T17:58:18.703+05:302015-02-24T17:58:18.703+05:30ரத்த அழுத்தத்தை சீராக்கும் ஆப்பிள்
ஆப்பிள் பழங்கா...ரத்த அழுத்தத்தை சீராக்கும் ஆப்பிள்<br /><br />ஆப்பிள் பழங்காலத்தில் இருந்தே அறியப்பட்ட ஒரு அற்புதமான பழமாகும். ஆப்பிள், குமளி பழம், ஆப்பழம், சீமை இலந்தைபழம், அரத்திபழம் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இவை பெரும்பாலும் குளிர் பிரதேசங்களில் வளரக்கூடியது. தற்போது இந்தியா, சீனா, அர்ஜென்டினா மற்றும் மத்திய ஆசியாவில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.<br /><br />நம்நாட்டில் சிம்லா, காஷ்மீர் பகுதிகளில் உள்ளன. எல்லாப் பருவ காலங்களிலும் கிடைக்கும் ஆப்பிள், அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பி சாப்பிடக்கூடியது. விலை சற்று அதிகம் என்றாலும் மருத்துவத்தில் இதன் பயன் அதிகரித்துள்ளது.<br /><br />சத்துக்கள்: ஆப்பிள் பழத்தில் இரும்பு, புரோட்டீன், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் பி1, பி2, சி, முதலிய சத்துகள் அதிக அளவில் அடங்கியுள்ளன.<br /><br />பயன்கள்: ஆப்பிள் பழத்தில் உள்ள ரசாயன கலவைகள் ஒன்றுக்கொன்று வேதியியல் முறையில் இணக்கமாக செயல்படுகிறது. ஆர்கானிக் கலவை இரும்பு சத்தை எளிதில் உடல் கிரகிக்க உதவுகிறது. ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் ரத்தசோகை விரைவில் நிவர்த்தியாகிறது. ரத்த ஓட்டச் சுழற்சி சீராக இயங்குகிறது.<br /><br />* தேவையற்ற கொழுப்பு சத்தை குறைக்கிறது. சோடியம் குறைக்கப்பட்டு ரத்த அழுத்தம் குறைய உதவுகிறது. அதிக ரத்த போக்கை தடுக்கிறது. நரம்பு மண்டலத்துக்கும் மூளைக்கும் நல்ல சக்தி கிடைக்கிறது.<br /><br />செரிமாண மண்டலம் சீராக இயங்க செய்கிறது. கால்சியம் உடலில் சேமிக்க செய்கிறது. இன்சுலின் சுரப்புக்கு உதவுகிறது. இன்சுலின் சுரப்பு நடைபெறுவதால் ரத்த சர்க்கரை குறைய உதவுகிறது. சோடியம் உடம்புக்கு பயன்படுவது போக அதிகப்படியாக சேராமல் பாதுகாக்கிறது.<br /><br />* மூளைக்கு மிகுந்த சக்தியளிப்பதால், மூளைக்கு அதிக வேலை கொடுப்பவர்கள், சிந்தனையாளர்கள், மாணவர்கள் ஆகியவர்களுக்கு நல்ல நினைவாற்றல் கிடைக்கிறது.<br /><br />* குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் ஆப்பிள் பழத்தை வேகவைத்து பிசைந்து கொடுத்தால் குணமாகும்.<br /><br />* வலிப்பு உள்ளவர்கள் ஆப்பிள் பழச்சாறு 60 மி.லி, அத்திப்பழச்சாறு 60 மி.லி கலந்து தினசரி இரண்டு வேளை கொடுத்து வந்தால் மூன்று தினங்களில் வலிப்பின் தீவிரம் குறைந்துவிடும்.<br /><br />* இதய நோயாளிகளுக்கு சிறந்த உணவாகிறது. நரம்பு தளர்ச்சி நீங்கவும், நல்ல தூக்கம் வரவும் ஆப்பிள் பழம் மட்டும் சாப்பிடுவதால் மிகுந்த நன்மை கிடைக்கிறது.<br /><br />* தூக்கத்தில் எழுந்து நடக்கும் இயல்பு டையவர்கள் குணமடைய, இரவில் இரண்டு ஆப்பிள் பழங்களை தண்ணீரில் போட்டு வைத்திருந்து அதி காலையில் இதன் சாற்றை பிழிந்து சாப்பிட்டு வந்தால் இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.<br /><br />* வறட்டு இருமல் உள்ளவர்கள், தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டால் இருமல் தீரும்.<br /><br />* சரியான உடல் வளர்ச்சியும், சதைப்பிடிப்பும் இல்லா தவர்களும் தொடர்ந்து ஆப்பிள் பழம் சாப்பிட்டால் ஒல்லியான உடல் சீராகப் பருமன் அடையும்.<br /><br />Read more: http://viduthalai.in/page1/96736.html#ixzz3SfHl41FW<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-76931952409632034432015-02-24T17:57:45.052+05:302015-02-24T17:57:45.052+05:30பல நோய்களை தீர்க்க உதவும் அதிமதுரம்
அதிமதுரம் கொட...பல நோய்களை தீர்க்க உதவும் அதிமதுரம்<br /><br />அதிமதுரம் கொடி வகையை சேர்ந்தது. காடுகளில் புதர் செடியாக வளரும் கூட்டிலைகளை கொண்டது. கணுக்களில் சிறிய மஞ்சள் கலந்த ஊதா நிறபூக்கள் நிரம்பியதாக இருக்கும். இதன் வேர்கள், இலைகள் மருத்துவத்திற்கு பயன்படுகிறது. வேர் கடை சரக்காக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். மலச்சிக்கலை போக்கும் உணவு மண்டலத்தை சீராக இயங்கவைக்கும்.<br /><br />ஊட்டசத்து நிரம்பியது. சிறுநீர் புண்களை ஆற்றும், கல்லடைப்பை நீக்க பயன்படும். அதிங்கம், அஷ்டி, மதூகம், மதூரம் என பல்வேறு பெயர்களால் வழங்கப்படும் அதிமதுரம் உலகத்தின் அனைத்து மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதை எளிய முறையில் பயன் படுத்தி பல்வேறு நோய்களையும் தீர்க்கமுடியும்.<br /><br />பித்தம், வாதம். ரத்ததோசம், வீக்கம், வாந்தி, நாவறட்சியை போக்கும். தாகம், அசதி, கண்நோய்கள், விக்கல், எலும்பு நோய்கள், மஞ்சள்காமாலை, இருமல், தலை நோய்கள் ஆகியவற்றை குணமாக்கும். வேர்கள் இனிப்புச்சுவையும் குளிர்ச்சித்தன்மையும் கொண்ட வையாக இருக்கும்.<br /><br />அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளம்வறுப்பாய் வறுத்து சூரணம் செய்து வைத்து கொண்டு சூட்டினால் ஏற்படும் இருமலுக்கு 5 கிராம் அளவில் தேனில் குழைத்து சாப்பிட தீரும்.<br /><br />சிலர் உடல் உறுப்புகளில் புண் ஏற்பட்டு ரத்தவாந்தி எடுப்பார்கள். இவர்கள் அதிமதுரப்பொடி, சந்தனத்தூள் சமஅளவாக கலந்து அதில் 1 கிராம் அளவில் அளவில் பாலில் கலந்து குடிக்க ரத்தவாந்தி நிற்கும். புண்கள் ஆறும்.<br /><br />போதுமான அளவில் தாய்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அளவில் அதிமதுர சூரணத்தைப்பாலில் கலந்து அதனுடன் இனிப்பு சிறிது சேர்த்து சாப்பிட்டால் தாய்பால் நன்கு சுரக்கும். அதிமதுரத்தை நன்றாக அரைத்து பசும்பாலில் கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் இளநரை ஏற்படாது. முடி உதிர்தலும் நிற்கும். அதிமதுரத்தை சூரணமாக்கி காற்றுபுகாத பாட்டிலில் வைத்துக்கொள்ள வேண்டும்.<br /><br />தொண்டைக்கட்டு, இருமல், சளி உள்ளவர்கள் 1 முதல் 2 கிராம்வரை எடுத்து தேனில் குழைத்து காலை மாலை சாப்பிட தீரும். 1முதல் 2 கிராம் அளவில் அதிமதுரப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வர மார்பு, ஈரல், இரைப்பை, தொண்டை ஆகியவற்றில் உள்ள வறட்சி நீங்கி நலம் உண்டாகும். இருமல், மூலம், தொண்டைகரகரப்பு, நரம்புதளர்ச்சி தீரும்.<br /><br />Read more: http://viduthalai.in/page1/96734.html#ixzz3SfHbdKIm<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-24059669594042673422015-02-24T17:55:05.025+05:302015-02-24T17:55:05.025+05:30காரணம்
வட நாட்டு மக்களையும், தென்னாட்டு மக்களையு...காரணம்<br /><br /><br />வட நாட்டு மக்களையும், தென்னாட்டு மக்களையும், அவர்களின் திறமை, அபிலாஷைகளையும் புரிந்து கொள்ள முடியாதவாறு பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். பத்திரிகைகள் என்ற ஒரே ஆயுதம் அவர்களிடம் சிக்கிவிட்டிருப்பதே அதற்குக் காரணம்.<br />(விடுதலை, 28.8.1963)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-71098824336851054852015-02-24T17:54:03.430+05:302015-02-24T17:54:03.430+05:30இன்றைய ஆன்மிகம்?
வியாபார வசீகரமா?
செவ்வாய், வெள்...இன்றைய ஆன்மிகம்?<br /><br />வியாபார வசீகரமா?<br /><br />செவ்வாய், வெள்ளி களில்தான் கோயில் களுக்குச் சென்று வழிபட வேண்டும் என்பது வியா பார வசீகரமா? அல்லது கடவுளுக்கு மற்ற கிழமை கள் எல்லாம் பிடிக்கா தவை என்ற அர்த்தமா?<br /><br />Read more: http://viduthalai.in/page1/96710.html#ixzz3SfGh7g6s<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-11171498676827904622015-02-24T17:44:00.007+05:302015-02-24T17:44:00.007+05:30குருட்டு நம்பிக்கை...
உலகில் உள்ள மதங்கள் எல்லாம...குருட்டு நம்பிக்கை...<br /><br /><br />உலகில் உள்ள மதங்கள் எல்லாம் குருட்டு நம்பிக்கை என்கின்ற பூமியின் மீதே கட்டப்பட்டிருக்கின்றன.<br />(குடிஅரசு, 3.11.1929)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-59189372888832281672015-02-24T17:42:25.722+05:302015-02-24T17:42:25.722+05:30காமாலைக் கண்களுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள்தான்
மதம்...காமாலைக் கண்களுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள்தான்<br />மதம் மாற்றம் செய்ய வந்தாராம் மதர் தெரசா - மோகன்பகவத் கூறுகிறார்<br /><br /><br />பரத்பூர் (ராஜஸ்தான்) பிப் 24 சமூகசேவை என்ற பெயரில் மத வியாபாரம் செய்தார் மதர் தெரசா, உண்மையில் அவருக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மன நிலை இருந்தால் இந்தியாவிற்கு ஏன் வர வேண்டும்? மக்களை சேவை என்ற பெயரில் ஏமாற்றி மதமாற்றம் செய்வதற்காகத்தான் இங்குவந்தார் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறினார். ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்பகவத் தன் னுடைய சொந்த ஊரான பரத்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது மதர்தெரசா பற்றி அவர் கூறியதாவது, நமது நாடு ஆங்கிலேயர்கள் வருகையின் முன்பு செல் வச்செழிப்பும் அமைதியும் அவரவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நியதியின் படி கட்டுப்பாட்டோடு வேலைகளைச் செய்து வந்தனர். முகமதியர்கள் வந்த பிறகு செல்வச் செழிப்பை சுரண்டினர். இதன் காரணமாக வறுமை தொடங்கியது. ஆங்கிலேயர்கள் வந்த பிறகு மக்களிடம் வறுமை கோரதாண்டவமாடியது. இதைச் சாதகமாகப் பயன் படுத்தி மதமாற்றத்தை ஆங்கிலேயர்கள் செய்ய ஆரம்பித்தனர். அவர் களின் மதமாற்றத்திற்கு உதவ பல வெளிநாட்டி னர் இங்குவந்தனர். அவர்கள் கல்வி என்ற பெயரில் மதமாற்றத்தை செயல்படுத்தினர்.<br /><br />இந்த வரிசையில் மதர் தெரசா மிகவும் புத்தி சாலித்தனமாக சேவை என்ற போர்வையை போர்த்திக்கொண்டு மத மாற்றத்தில் இறங்கினார். எங்களைப் போன்றவர் களுக்கு மாத்திரம் தான் மதர்தெரசாவின் உண்மை யான நடவடிக்கை என்ன வென்று தெரியும். மக்கள் மதர்தெரசாவின் உண்மை யான மதமாற்றச் செயலை கவனிக்காமல் விட்டு விட் டார்கள். அவர் செய்த மதமாற்றச் செயல்பாடு கள் வெளியில்வராமல் இருக்க ஆங்கிலேயர்கள் அவருக்கு நோபல் பரிசு கொடுத்தனர். அவர் உண்மையி லேயே சேவை செய்ய வேண்டுமென்றால் உலகில் வேறு நாடுகளே இல்லையா, இந்தியா மாத்திரம் ஏன் அவர் களின் கண்களுக்குப் பட்டது. அவர்களின் நோக்கமே இந்துமதத்தின் மாண்புகளை சிதைக்க வேண்டும் மக்களை மதம் மாற்றி இந்துமதத்தை அழிக்கவேண்டும் என்பது தான் என்று தன்னுடைய உரையில் கூறினார்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/96782.html#ixzz3SfDgl1en<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-31731085372807422472015-02-24T17:41:36.576+05:302015-02-24T17:41:36.576+05:30கோல்வால்கரும் - மோகன்பகவத்தும்
நீண்ட காலமாக மறைக்...கோல்வால்கரும் - மோகன்பகவத்தும்<br /><br />நீண்ட காலமாக மறைக் கப்பட்ட ஒரு நூல் ஆர்.எஸ். எஸின் குருநாதரான எம்.எஸ். கோல்வால்கரால் எழுதப்பட்ட We or our nationhood defined என்பதாகும். திராவிடர் கழகத் தலைவர் அவர்களுடைய உரையில் அண்மைக் காலமாக தோண்டி எடுக்கப்பட்டு வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.<br /><br />அவர்களின் குருநாதரால் எழுதப்பட்ட இந்நூலை வெளிச்சத்திற்குக் கொண்டு வர வெட்கப்படுகிறார்கள் என்பதைவிட அந்நூலில் இடம் பெற்றிருப்பவை வெளி யில் வந்தால் தங்களுக்குப் பெரும் இடர்ப்பாட்டை ஏற்படுத்தும் - வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாகும் என்ற அச்சம் அவர்களைப் பிடுங்கித் தின்பதே இதற்கு விழுமிய காரணமாகும்.<br /><br />இந்த நூலை வெளிப் படுத்தத் தயங்கினாலும், அந்த நூலின் சாரத்தை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் உட்பட ஆங்காங்கே தூவிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.<br /><br />ஆட்சி அதிகாரம் அவர்கள் கைகளில் இருக் கும் இந்தத் தருணத்தில் அதனைச் சொல்லாமலும் இருக்க முடியவில்லை; சொன் னாலும் எதிர் விளைவை ஏற்படுத்தி விடுமே என்ற அச்சமும் அவர்களைக் குடைந்தெடுக்கிறது.<br /><br />அந்த நூலில் கோல் வால்கர் என்ன எழுதுகிறார்?<br /><br />சிறுபான்மையினர் இந்த தேசத்தில் வாழ்வது ஆபத் தானது அது தேசப் பாது காப்பிற்கும் தேச நலன் களுக்கும் உகந்தது அல்ல. எனவே, தேசிய இனத்தைச் சாராதவர்கள் தேசிய இனத்தின் மொழியையும், மதத்தையும், கலாச்சாரத் தையும் தனதாக்கிக் கொள்ள வேண்டும். அவர்கள் தங் களுடைய அனைத்து விட யங்களையும் தேசிய இனத் தின் அடிப்படையிலேயே மாற்றிக் கொள்ள வேண்டும். சிறுபான்மையினருக்கு இரண்டே வாய்ப்புகள் தான் உள்ளன. ஒன்று அவர்கள் தங்களை முழுவதுமாக பெரும்பான்மை தேசிய இனத்தின் அடிப்படையில் வாழ்க்கை நெறிகளை மாற்றம் செய்ய வேண்டும். இல்லை யென்றால் எந்த உரிமையும் இல்லாமல் பெரும்பான்மை மக்கள் கருணை கொண்டு அவர்கள் அனுமதிக்கும் காலம் வரை வாழலாம். (“We or our nationhood defined’’ பக்கம் - 47)<br /><br />ஆர்.எஸ்.எஸ்.இன் மிக முக்கியமான சிந்தனைவாதி யாகவும், குருவாகவும் கருதப் படும் குருஜி கோல்வால்கர் இந்துத்துவத்தை அடிப் படையாக கொண்ட இந்து ராஷ்ட்ரியத்தின் சிறுபான்மை யினர் குறித்தான பிரச்சினை களுக்கு ஹிட்லர், முசோலினி யின் தீர்வையே முன்மொழி கின்றார்.<br /><br />சிறுபான்மையினர் இங்கே வாழ வேண்டுமாயின் அவர்கள் தேசிய இனமான இந்துக்களின் மதம், மொழி மற்றும் கலாச்சாரங்களை பின் பற்ற வேண்டும். இல்லை யென்றால் அவர்களுக்கு இந்த தேசத்தில் எந்த உரி மையும் இல்லை. ஏன் அவர் கள் இந்துஸ்தானின் குடி மக்களாக கூட கருதப்பட மாட்டார்கள்.’(“We or our nation hood defined’’பக்கம் - 47)<br /><br />இந்துஸ்தானில் வாழும் இந்துக்களே தேசியவாதிகள், அவர்களே தேசபக்தர்கள் இந்துக்கள் அல்லாதவர்கள் இந்த தேசத்தின் எதிரிகள் மற்றும் துரோகிகள் இந்துக் கள் அல்லாதவர்களால் இந் துஸ்தானின் தேச நலனிற்கு பேராபத்து உள்ளது (மேற்கண்ட நூல் பக்கம் - 44)<br /><br />இப்பொழுது ஆர்எஸ். எஸ். தலைவர் மோகன் பகவத் கூற்றைக் கொஞ்சம் கவனிப்போம்.<br /><br />காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்கள் அனைவரும் இந்துக்களே! அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்துக் கொள் கைகளை ஏற்க வேண்டியவர்களே என்று அரசின் வானொ லியைப் பயன்படுத்திப் பேசி யதை நினைவில் கொள்வீர்!<br /><br />- மயிலாடன்<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/96775.html#ixzz3SfDWmfrg<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-18656987098111934432015-02-24T17:40:40.191+05:302015-02-24T17:40:40.191+05:30இந்தி - சமஸ்கிருதம்: அவசரம் காட்டும் அதிகாரிகள் கல...இந்தி - சமஸ்கிருதம்: அவசரம் காட்டும் அதிகாரிகள் கலைஞர் கருத்து<br /><br /><br />சென்னை, பிப்.24_ இந்தி, சமஸ்கிருதம் திணிப்பில் அரசைவிட அரசு அதிகாரிகள் அவச ரம் காட்டுகிறார்கள் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் எழுதியுள்ளார்.<br /><br />கேள்வி :- இந்தி, சமஸ் கிருதம் போன்ற மொழி களைத் திணிக்க மத்திய ஆட்சிப் பொறுப்பிலே இருப்போர் அவசரம் காட்டாத நிலையிலும், அதிகாரிகள் மட்டத்திலே இருப்பவர்கள் இந்தியைத் திணிக்க அவசரம் காட்டு கிறார்களே?<br /><br />கலைஞர்:- உண்மை யானதும், அதிர்ச்சி தரத் தக்கதுமான செய்திதான் இது. தினமணி நாளிதழில் வெளி வந்துள்ள செய்தி யில், சி.பி.அய். (மத்திய புல னாய்வுத் துறை) அனைத்து அலுவலகங்களிலும் நிர்வாகத் தேவைகளுக் கான பணிகளை இந்தி மொழியில் மேற்கொள்ள வும், அந்த மொழியை அலுவலர்கள் அறிந்து கொள்ளும் வகையிலான நிகழ்ச்சிகளை நடத்தவும் அதன் தலைமையகம் கண்டிப்புடன் உத்தரவு பிறப்பித்துள்ளது.<br /><br />சி.பி.அய். தலைமையக நிர்வாகப் பிரிவு துணை இயக்குநர் மணிஷ் கே. ஷா அவர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக் கையில், சி.பி.அய் அலுவல கக் கூட்ட நிகழ்வுகள், தீர் மானங்கள், அரசாணை கள், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய அறிக்கைகள், அலுவலக ஒப்பந்தங்கள், உரிமங்கள், ஏல ஒப்பந்தப் புள்ளி கோரல் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் இந்தி உள்ளிட்ட இரு மொழிகளில் வெளியிடு வதை மண்டலத் தலைமை அதிகாரிகள் உறுதிப் படுத்த வேண்டும். இந்தி மொழியில் சி.பி.அய். அலுவ லகத்துக்கு வரும் கடிதங் களுக்கு கட்டாயம் இந்தி மொழியில்தான் பதில் அனுப்ப வேண்டும். அதி காரிகளின் பணிக்கால ஆவணங்கள் அனைத்தும் இந்தி மொழியிலேயே இருக்க வேண்டும். அலு வல் கோப்புகளில் அதிகா ரிகள் குறியிடும் விவரங் கள் இந்தி மொழியில் தான் இருக்கவேண்டும் என்றெல்லாம் குறிப்பிடப் பட்டுள்ளது என்று செய்தி வந்திருப்பது அதிர்ச் சியாக உள்ளது. இந்தச் செய்தி உண்மையாக இருக்குமேயானால், மத் திய அரசும், முக்கியமாக பிரதமர் அவர்களும் இதனைப் பரிசீலித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றப் புலனாய் வில் முக்கியப் பங்கு வகிக் கும் சி.பி.அய். இப்படி அலு வலக நடைமுறைகளில் இந்திக்கு முதலிடம் அளிக்குமானால், மத்திய அரசின் மற்ற துறைகளும் ஒவ்வொன்றாக இந்த முன் மாதிரியைப் பின்பற்றும் நிலை ஏற்பட்டு, அனைத் தும் இந்தி மயம் என்ற ஆபத்து தோன்றிவிடும்! கிரானைட் முறைகேடுகள் குறித்து சகாயம் அய்.ஏ. எஸ். அவர்களுக்குத் தகவல் தந்தவர் தாக்கப்பட்டுள்ள நிலையில் சகாயம் அவர் களுக்கு அதிக பாதுகாப்பு செய்து தரப்பட வேண் டும் என்றும் கலைஞர் எழுதியுள்ளார்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/96788.html#ixzz3SfDGtbLo<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com