tag:blogger.com,1999:blog-1474608369333206681.post2689097959870572926..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: பார்ப்பனர்களும் பாரதிராஜாக்களும்தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-76643200505911204552012-11-19T06:11:39.784+05:302012-11-19T06:11:39.784+05:30
மாற்றுத் திறனாளிகள் கோயிலில் வழிபடத் தடையா?
மாற...<br />மாற்றுத் திறனாளிகள் கோயிலில் வழிபடத் தடையா?<br /><br /><br />மாற்றுத் திறனாளிகள் தோல் செயற்கை உறுப்புகளுடன்<br /><br />கோயிலில் வழிபடத் தடையா?<br /><br />மனித உரிமைக்கு எதிரான போக்குக்கு கண்டனம்!<br /><br />தமிழர் தலைவரின் முக்கிய அறிக்கை<br /><br />தமிழ்நாடு இந்து அறநிலையப் பாதுகாப்பு துறையின் சுற்றறிக் கையில்: மாற்றுத் திறனாளி தோல் செயற்கை உறுப்பு களுடன் கோயிலில் வழிபட வழி யில்லை என்று தெரிவித்திருப் பது, மனித உரிமைக்கு எதிரான போக்கு என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.<br /><br />இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள முக்கிய அறிக்கையில் கூறியிருப்பதாவது:<br /><br />இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையின் நோக்கம் - அது சட்டம் இயற்றிய நீதிக்கட்சி காலத்திலேயே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.<br /><br />தணிக்கையே தவிர, இந்து மத பிரச்சாரம் செய்வதோ, பக்தியைப் பரப்புவதோ அல்ல.<br /><br />(அ) இந்திய அரசியல் சட்டத்தில் கூட, மத விஷயங்களில், உள் தத் துவங்கள், முதலியவற்றைத் தவிர, பல வகையில் சீர்திருத்தம் செய்யவும் தெளிவாக இந்திய அரசியல் சட்ட அடிப்படை உரிமைகளில் பிரிவு 25இல் (Article) மதச் சார்பற்ற மற்ற விஷயங் களில் அரசுகள் தலையிட, மாற்றம் செய்ய உரிமை உள்ளது.<br /><br />(ஆ) இந்த உரிமைகளில்கூட எல்லை வகுக்கப்படாத முழு உரிமை கள் (Absolute Rights) அல்ல, பொது அமைதி, பொது ஒழுக்கம், சுகாதாரம், இவற்றோடு இந்திய அரசியல் சட்டத்தின் இந்தப் பிரிவின் மற்ற விதிகள் இவைகளுக்குட்பட்டதே அவ் வுரிமைகள்.<br /><br />இந்த நிலையில், தமிழ்நாடு இந்து அறநிலையப் பாதுகாப்பு துறையின் சுற்றறிக்கை, ஆணை - மாற்றுத் திறனாளிகளாக உள்ள பக்தர்கள் ஊன்றுகோல், மற்றும் செயற்கைக்கால் மற்றும் செயற்கை உபகரணங்களில் தோல் சம்பந்தப்பட்ட பொருட்களினால் செய்யப்பட்டுள்ளது என்பதனால், கோயில்களில் வழிபட அத்தகைய மாற்றுத் திறனாளிகளை கோயில் இறை சன்னதி வரை சென்று வழிபடச் செய்ய வழி இல்லை என்பது போன்ற நிலை - மனிதநேயத்திற்கும், மனித உரிமைக்கும் முற்றிலும் மாறுபட்டதாகும்.<br /><br />தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு இதுபற்றி 6.9.2012-இல் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறைக்கு இந்த நிலையை அனுமதிக்காததை நீக்க வேண்டும் என்று கோரியுள்ளது.<br /><br />இன்று கோயில் உள்ளே எண்ணெய் விளக்குக்குப் பதில் மின்சார விளக்கு களைப் போடுவதும், பெரிய கோயில் களில் ஏர்கண்டிஷன் உட்பட செய்துள்ள தும், பக்தர்களைக்கூட மெட்டல் டிடெக் டர் வைத்து சோதித்து அனுப்பும் முறை யும், திருப்பதி லட்டு, பழனி கோயிலில் இழுவை ரயில் மூலம் கோயிலுக்கு அனுப்புவதும், ஆகம விதிகளில் உண்டா?<br /><br />ஆண்டவன் சேவைக்கு அனுமதிக் கட்டணம் வசூலிக்க ஆகமங்கள் கூறு கின்றனவா?<br /><br />எல்லா கோயில்களும் ஆகம விதிப்படி கட்டப்பட்டுள்ளனவா?<br /><br />ஆகம விதிப்படி கட்டப்படாத கோயில்கள் அறநிலையப் பாதுகாப்பு துறையின்கீழ் இருக்கலாமா? இருக் கிறதே - அதற்கென்ன பதில்?<br /><br />மாற்றுத் திறனாளிகளுக்கு, மற்ற மனிதர்களுக்கு உள்ள உரிமை மறுக்கப் படக் கூடாது என்ற நியதி அடிப்படை யிலேயே நாம் இதனை சம்பந்தப்பட்ட துறைக்குத் தெரிவித்து கேட்கிறோம்.<br /><br />உடனடியாகப் பரிகாரம் கிடைக்கா விட்டால், மனித உரிமை ஆணையம், நீதிமன்றங்கள் மூலம் தீர்வு காணப்பட நேரிடலாம். அந்நிலைக்கு முன்பே பரீசிலித்து நீதி வழங்கிடுவது அவசியம், அவசரம்.<br /><br />கி.வீரமணி<br />தலைவர்,<br />திராவிடர் கழகம்.<br /><br />18.11.2012, சென்னை<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-61272225604773560592012-11-19T06:01:18.228+05:302012-11-19T06:01:18.228+05:30
புதுவையல்ல புரட்சியின் அழைப்பு
புதுச்சேரியைப் பு...<br />புதுவையல்ல புரட்சியின் அழைப்பு<br /><br />புதுச்சேரியைப் புதுவை என்று அழைக்கிறோம். உண்மையைச் சொல்லப் போனால் அது புரட்சிக் கவிஞரை ஈன்ற மண்ணாயிற்றே!<br /><br />எத்தனையோ கவிஞர்கள் தந்தை பெரியார் அவர்களைப் பாட்டுப் பட்டாடைப் போர்த்தியிருந் தாலும், அந்தக் கவிஞன் நான்கே வைர வரிகளில் படம் பிடித்தானே! ஆகா அதற்கு நிகர் ஏது!<br /><br />தொண்டு செய்து பழுத்த பழம்<br /><br />தூய தாடி மார்பில் விழும்<br /><br />மண்டைச் சுரப்பை உலகு தொழும்<br /><br />மனக் குகையில் சிறுத்தை எழும்<br /><br />என்றாரே - ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு வரியும் பொருள் காவியத்துக்கான கருப்பொருள் அல்லவா?<br /><br />மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்றாரே, எத்தகைய தொலைநோக்கு!<br /><br />மத அச்சுறுத்தல் என்னும் கோரப் பற்களால் மனிதக் குடலைப் பிடுங்கி மாலையாகப் போடப்பட்டு வரும் காலம் இது.<br /><br />மதக் காரணங்களால் மனிதக் குருதி மண் முழுவதையும் செந்நிறமாக்கி விட்ட கொடுமை!<br /><br />ஒரு மதத்துக்குள்ளேயே உட்பிரிவுகளுக்கிடையே குத்து வெட்டு!<br /><br />மதம், பெண் உரிமைகளையும் காலில் போட்டு மிதிக்கும். மதவாதங்களும் இன்னொரு புறம்.<br /><br />ஈராக்கில் பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், நான் கடவுளிடம் அனுமதி பெற்றே இந்தப் போரை நடத்தினேன் என்று<br /><br />கடவுளைக் காரணமாக்கிப் படுகொலை செய்த கொடுமையை என்ன சொல்ல!<br /><br />மதமற்ற உலகம் தேவை! அது ஒன்றுதான் மனித நேயத்தை வளர்க்கும், மனித உரிமையை மதிக்கும் சகோதரத்துவத்தை மலர்விக்கும்.<br /><br />அந்த மதமற்ற உலகை உலகுக்குத் தருவது தந்தை பெரியாரியல்தான்! தத்துவப்போதகம் தான்.<br /><br />மதமே மனிதனுடைய சுயமரியாதைக்கு விரோதி!<br /><br />மதமே மனிதனுடைய சுதந்திரத்திற்கு விரோதி!<br /><br />மதமே மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கு விரோதி!<br /><br />மதமே மனித சமூக சமதர்மத்துக்கு விரோதி!<br /><br />மதமே கொடுங்கோலாட்சிக்கு உற்ற துணை!<br /><br />மதமே முதலாளி வர்க்கத்துக்குக் காவல்!<br /><br />மதமே சோம்பேறி வாழ்க்கைக்கு ஆதரவு!<br /><br />மதமே உழைப்பவனைத் தரித்திரத்தில் ஆழ்த்தி, உழைக்காதவனை உச்சத்தில் வைப்பதற்கு உதவி<br />(புரட்சி, தலையங்கம், 26.11.1933)<br /><br />மத ஓடத்தில் ஏறிய மாந்தரைப் பற்றியும் புரட்சிக் கவிஞர், தந்தை பெரியார் அடியொற்றிப் பாடியதுண்டே.<br /><br />அந்தப் புரட்சிக் கவிஞர் பிறந்த புதுவையாம் புரட்சி மண்ணிலே வரும் 23ஆம் தேதி திராவிடர் கழக மாநாடு.<br /><br />மாநில மாநாடோ என்று வியக்கும் அளவுக்கு தடபுடலான ஏற்பாடுகள். சுவர்கள் எல்லாம் மாநாட்டு விளம்பரப் பதாகைகளாகப் பறை சாற்றிக் கொண்டு இருக்கின்றன. கழக அலுவலகமாம் பெரியார் படிப்பகம். கருஞ்சட்டைத் தொண்டர்களின் பாடி வீடாகக் காட்சி அளிக்கிறது. தேனீக்கள் போல பறந்து, பரம்பரமாய்ச் சுழன்று பணிகள் வாயு வேகத்தில் நடந்து கொண்டு இருக்கின்றன.<br /><br />23ஆம் தேதி காலையிலே கனல் பறக்கும் கருத்தரங்கம். காலத்திற்கேற்ற கருத்துரைகள் கனமாகக் கிடைக்கும்.<br /><br />பேரணியை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். திராவிடர் கழகம் ஒன்றுதானே கலாச்சாரப் புரட்சிப் பாட்டையை வகுத்துக் கொடுக்கிறது.<br /><br />நீண்ட இடைவெளிக்குப் பிறகு மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் புதுச்சேரியின் நீள - அகலத்தைக் கலக்கப் போகிறது கட்டுப்பாட்டுப் பேரணியைக் கண்ணுறும் இருபால் இளைஞர்கள் ஈர்க்கப்படுவார்கள்.<br /><br />ஜாதி - தீண்டாமை ஒழிப்பு முழக்கங்கள் - விண்ணை முட்டும். சமூக நீதி சங்க நாதத்தைக் கேட்கப் போகிறீர்கள். மனித நேயத்தின் மணம் வீசும்.<br />திறந்த வெளி மாநாட்டில் தமிழர் தலைவர் உரை, புதிய செய்திகளைச் சுமந்து வரும்! அறிவிப்புகள் மிதந்து வரும்.<br /><br />கழகத்துக்குப் புது முறுக்கு<br /><br />தமிழக மக்களுக்கோ முக்கிய அழைப்பு.<br /><br />ஆக புதுவை மாநாடு புரட்சி முழக்கமாக, எழுச்சியான இடியோசையாக,<br />சமூக நீதியின் சங்கநாதமாக, ஜாதிக் காட்டை அழிக்கும் எரிமலையாகச் சுழன்றடிக்கும்.<br /><br />23ஆம் தேதி - உங்கள் வாழ்நாளில் பொன்னாளாக இருக்கும். பயனுடைய நாளாக எண்ணி அசை போடலாம்.<br /><br />தனியாக வராதீர்கள் குடும்பத்தோடு வாருங்கள். கொள்கைச் சத்துணவு தாராளமாகக் கிடைக்கும்.<br /><br />லட்சிய தூய காற்று இலவசமாகவே கிடைக்கும்.<br /><br />புதுவை வாரீர்! வாரீர்!!<br /><br />புன்முறுவலோடு தமிழர் தலைவர் உங்களுக்காகக் காத்திருப்பார் என்ன புறப்படத் தயார்தானே!<br /><br />- மின்சாரம் -<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-76902706296943103692012-11-19T05:56:37.116+05:302012-11-19T05:56:37.116+05:30
எல்லா வகை தவறுகளையும் திருத்துபவன் பிராமணனாம்!
...<br />எல்லா வகை தவறுகளையும் திருத்துபவன் பிராமணனாம்!<br /><br /><br />ஒரு தொலைக்காட்சியில் விஷமப் பிரச்சாரம்<br /><br />சீறி எழுகிறார் ஒரு வீராங்கனை<br /><br /><br />(தொலைக்காட்சிகளில் நடைபெறும் ஒருவிஷமப் பிரச்சாரம்பற்றி ஒருவீராங் கனை சீறி எழுந்துள்ளார். இணையதளம் ஒன்றில் அந்த வீராங்கனை செய் துள்ள பதிவு இதோ:)<br /><br />கடந்த 14 ஆம் தேதி நான் மாலை 6 மணியளவில் விஜய் தொலைக்காட்சியில் வந்த சிவம் என்ற தொடரைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.<br />அதில் உள்ள உரையாடல்:<br /><br />ஒரு (பார்ப்பான்) பிராமணன் என்றால், எல்லாவித தவறான செயல்களையும் திருத்துவதற்காக வந்தவன். இப்பொழுது அவர்கள் அதைத்தான் செய்துகொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் இந்த உரையாடல்.<br /><br />அது எப்படி முடியும்? அதனால் தான் அய்.அய்.டி (இந்தியன் இன்ஸ்ஷடியூட் ஆஃப் டெக்னா லஜி) முழுதும் பிராமணர்களாலும் மற்ற நடுவண் அரசு அலுவலகங் களின் உயர் அலுவலர்களும் பார்ப்பனராயுள்ளனர் போலும்!<br /><br />பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் (உங்களையும், என்னையும் சேர்த்துதான்) இது வெட்கப்படக் கூடியது. பெரியார் பல நலங்களை நமக்குச் செய்திருந்தும், இன்னும் பார்ப்பனர்கள் நம்மை ஆண்டு கொண்டு தான் இருக்கிறார்கள்.<br /><br />மேலும், ஜெயா, சன், ராஜ் தொலைக்காட்சிகள் மற்றவையும், நமது செலவில், அவர்களது எண் ணங்களையும் நம்பிக்கையையும் வளர்க்கிறார்கள். தற்போது தினகரனும், எழுதுகிறது. இதை அறியாத நிலையில் உள்ள பார்ப் பவர்களையும், படிப்பவர்களையும் மூளைச் சலவை செய்வதற்கே.<br /><br />விஜய் மற்ற தொலைக்காட்சி களும், தினகரனும் செய்து வரும் இந்த மோசமான செயலைத் தடுக்க நாம் ஏதாவது செய்து ஆக வேண்டும்.<br /><br />ராம் ஜெத் மலானி, ராமன் ஒரு மோசமான கணவன் என சொல்லியிருப்பது ஒரு நல்ல செய்தி என்று நான் கருதுகிறேன். ராம் ஜெத் மலானி மீது அவருக்கு எதிராக, யாராவது ஒருவர் வழக்கு தொடர நாம் ஆவன செய்ய வேண் டும். அவர் வழக்கு மன்றத்தில் மேலும் பற்பல உண்மைகளைச் சொல்லுவார்.<br /><br />ஆகவே ஜெத்மலானி கோபம் அடையக் கூடிய முறையில் அவரைத் தூண்டி விட்டுச் செயல் பட வேண்டும்.<br /><br />2ஜி ஊழல், சங்பரிவாரத்தின ரால்தான் உண்டாக்கப்பட்டது.<br /><br />ராஜாவின் நவீன பங்களா வையும் பொய்யாகப் பரப்பி வரு கிறார்கள் அந்தப் பங்களா எங்குள்ளது? (உண்மை இதழ் அம்பலப்படுத்தி விட்டதே!)<br />நிலக்கரி ஊழலில், பிரதமர் பதவி விலகல் செய்ய வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். கூட்டம் முழங்கி வருகிறது. ஆனால் கட்காரி விவகாரத்தில் இரட்டை நாக்குடன் செயல்படுகிறது.<br /><br />ராமன் மற்றும் அவன் செயல்கள் குறித்தவற்றை வெளிப்படுத்து வதன் மூலம் பார்ப்பனீயத்திற்கு எதிராக நாம் இந்தியாவில் வெற்றி கொள்ள முடியும்... செய்வோமாக!<br /><br />- உங்கள் உடன் பிறந்தாள்<br />இராசம்மா செல்வி 18-11-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-11723451526285415792012-11-18T12:46:43.899+05:302012-11-18T12:46:43.899+05:30பாரதிராஜாவின் இச்செயல் கண்டிக்கத்தக்கது.இவரா இப்பட...பாரதிராஜாவின் இச்செயல் கண்டிக்கத்தக்கது.இவரா இப்படி என நினைக்க வைக்கிறது.ஆட்சி மாறியதால் அவரும் மாறிவிட்டார்போலும்,பாரதிராஜா என்பது கூடத்தான் தமிழ்ச் சொல் அல்ல அதற்காக அவர் தமிழர் அல்ல என்று எடுத்துக் கொள்ளலாமா? Anonymoushttps://www.blogger.com/profile/07473691754100297387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-35063173782839742822012-11-18T06:41:08.265+05:302012-11-18T06:41:08.265+05:30" நான் மொட்டை மரம் ; என்னை மிரட்டுவதற்கு உங்க..." நான் மொட்டை மரம் ; என்னை மிரட்டுவதற்கு உங்களிடம் சரக்கு கிடையாது ! உத்தியோகமா பணமோ , பதவியோ எதிர் பார்த்து நான் பொதுச் சேவையில் இறங்க வில்லை . நான் பலமுறை ஜெயில் பார்த்தாகிவிட்டது . பார்ப்பனர்களின் அனைத்துத் தொல்லைகளையும் அனுபவித்தும் வ<br />ிட்டேன் .காடு வா வா என்கிறது ; வீடு போ போ என்கிறது ( இதற்குப் பிறகு அய்யா 40 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார் ) நான் செத்தால் எனக்காக அழுபவர்கள் கூட யாரும் இல்லை . நான் ஒற்றை ஆள் , நின்ற நாளைக்கு நெடுஞ் சுவர் ; விழுந்தால் குட்டிச்சுவர் . முழுகிப் போவது ஒன்றும் இல்லை ! "<br />(12 -10 - 1934 ல் , கோவை டவுன் ஹால் கூட்டத்தில் )தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-1188141775880090022012-11-18T06:38:38.246+05:302012-11-18T06:38:38.246+05:30கார்ப்பரேஷனில் உள்ள ஒரு பார்ப்பனன் ஆயிர ரூபாயைத் த...கார்ப்பரேஷனில் உள்ள ஒரு பார்ப்பனன் ஆயிர ரூபாயைத் திருடிவிட்டால், திருவாங்கூரிலுள்ள திவான் கவர்னருக்குச் சிபாரிசு செய்ய வருகிறார், நமக்கு என்ன ஆபத்து வந்தாலும் கேட்க நாதியில்லை. நமது கொட்டகையைக் கொளுத்தினார்கள். நம் தோழர்களை அடித்தார்கள். கண்களைக் குத்தினார்கள். சட்ட சபையிலே இதைப்பற்றி யாராவது கேட்டார்களா? சட்ட சபையிலே காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கட்சிகள் இல்லையா? யாராவது ஒரு வார்த்தை கேட்டார்களா? நமது நிலைமை அவ்வளவு நாதியற்றதாக, கதியற்றதாக இருக்கிறது. பத்திரிகை வசதி யாராவது உண்டா? நமது செய்தியை ஒரு பத்திரிகைக் கூட போடுவதில்லை. இல்லை பத்திரிகை ரிப்போர்ட்டர்களாவது நம்மைப் பற்றிச் சரியாக எழுதுகிறார்களா? அவர்கள் இங்கே எதற்காக வருகிறார்கள் என்றால், நமது கூட்டத்தில் கல், செருப்பு விழுந்ததா? கலகம் நடந்ததா என்பவைகளைக் காணவும், எழுதவும் தான் வருகிறார்கள். இந்த ஊரில் எப்படி இருந்தாலும் வெளியூர்களிலேயுள்ள ரிப்போர்ட்டர்கள் அப்படித்தான், நம் இயக்கப் பத்திரிகைகள் என்பவைகளால் நமக்குத் தொல்லை தான் அதிகம். எனவே நமக்கு நாதியுண்டா? நமக்குள்ள குறைபாடுகள் அவ்வளவு இருக்கின்றன. இவைகளுக்கிடையே தான் நாம் வளரவேண்டியிருக்கிறது. இந்த நிலையில் தான் இயக்கத்தில் தொண்டாற்றி வருகிறோம். இயக்கமும் வளர்ந்து வருகிறது. ---- தந்தைபெரியார் - "குடிஅரசு" 30.05.1947தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-13509547866629045502012-11-18T06:28:57.396+05:302012-11-18T06:28:57.396+05:30
சுயமரியாதை இயக்கமும், கம்யூனிஸ்டு கட்சியும்
193...<br />சுயமரியாதை இயக்கமும், கம்யூனிஸ்டு கட்சியும்<br /><br /><br />1932இல் சுயமரியாதை இயக்கமும், கம்யூனிஸ்டு கட்சியும் தமிழகத்தில் தழைக்கத் தொடங்கியது. சுயமரியாதை இயக்கத்தை நீதிக்கட்சியின் ஆதரவுடன் முழுக்க முழுக்க பார்ப்பனரல்லாத இயக்கமாகவே நடத்தி வந்தார்.<br /><br />ஜாதி வேறுபாடுகளை ஒழிப்பதையே நோக்கமாக கொண்டு ஆரம்பத்தில் துவக்கப்பட்ட இது படிப்படியாகப் பொது உடமைப் பாதைக்குத் திசை திரும்பி, மதம், தனி உடைமை ஆகியவற்றை எதிர்க்கத் தொடங்கியது. 1933-1934இல் தமிழ்நாட்டிலுள்ள எல்லா மாவட்டங்களிலும் தனது தீவிரமான பிரச்சாரத்தை தொடங்கி வைத்தது.<br /><br /><br />1965ஆம் ஆண்டு மலர், பக்கம் 104-105<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-27035957079353937232012-11-18T06:28:37.787+05:302012-11-18T06:28:37.787+05:30
இந்தி எதிர்ப்பு
சில பாடசாலைகளில் இந்தி மொழியைப் ...<br />இந்தி எதிர்ப்பு<br /><br />சில பாடசாலைகளில் இந்தி மொழியைப் பரீட்சார்த்தமாகக் கட்டாய பாடமாக்கிய திரு.சி.ராச கோபாலாச்சாரியின் திட்டத்திற்கு அவரது அரசியல் எதிரிகளிடமிருந்து கிளம்பிய எதிர்ப்பைப் போல், அவரது அமைச்சரவையினர் கொண்டு வந்த வேறு எந்த திட்டத்திற்கும் அவ்வளவு எதிர்ப்பு தெரிவிக் கப்பட்டதில்லை. திரு. ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவர்களின் தலைமையில் இயங்கி வந்த சுயமரியாதை இயக்கத்திடமிருந்துதான் மிகக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.<br /><br />எனினும் நீதிக்கட்சி, முஸ்லீம் லீக், தாழ்த்தப்பட்டோர் கட்சி ஆகிய கட்சிகள் சுயமரி யாதை இயக்கத்திற்குத் தங்கள் முழு ஆதரவையும் அளித்தன.<br /><br />சென்னை மாநகரத்திலும், தென்ஆர்க்காடு உட்பட தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் நடந்த பொதுக்கூட்டங்களில் பிராமணர்களைத் தாக்கிச் சொற்பொழிவுகள் ஆற்றப்பட்டன; பிராமண ஆதிக் கத்தை நீட்டிப்பதற்காகவும், திராவிடக் கலாசாரத் தின் மீது ஆரியக் கலாச்சாரத்தைச் சுமத்துவதற் காகவுமே இந்தி மொழி திணிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டது.<br /><br />பிரதம மந்திரியின் வீட்டிற்கும் முன்பும், சில பாடசாலைக் கட்டடத்திற்கு முன்பும் சுயமரியாதை இயக்கத்தின் தொண்டர்கள் அணி அணியாகச் சென்று மறியல் செய்தனர். சென்னை மாநகரத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு, மறியல் செய்தவர்களில் பெரும்பாலோர் தண்டிக்கப்பட்டு சிறை சென்றனர். திரு. ஈ.வெ. ராமசாமி நாயக்கரும் கைது செய்யப்பட்டு, ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். எனினும் போராட்டம் தொடர்ந்து நடந்து வந்தது.<br /><br />1939இல் காங்கிரஸ் அமைச்சரவை பதவியிலிருந்து விலகியதும், அடுத்து வந்த மந்திரிசபை கட்டாய இந்தியை ஒழித்துக் கட்டி, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வந்தவர்கள் விடுதலை செய்யப்பட்ட பிறகுதான் போராட்டம் ஓய்ந்தது.<br /><br />திரு. ஈ.வெ.ராமசாமி நாயக்கர் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் காலத்திலேயே, நீதிக்கட்சியானது 1938ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அவரைத் தனது தலைவராக தேர்ந்தெடுத்துக் கொண்டது.<br /><br /><br />1965ஆம் ஆண்டு மலர், பக்கம் 108 ஆதாரம்: தென் ஆர்க்காடு மாவட்ட கெசட்டர்<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-28361967723517209272012-11-18T06:28:16.574+05:302012-11-18T06:28:16.574+05:30
பல்லடம் தோழர் பொன்னுசாமி உண்ணாவிரதம்
01-06-1938...<br />பல்லடம் தோழர் பொன்னுசாமி உண்ணாவிரதம்<br /><br /><br />01-06-1938 முதல் சென்னை தியாகராய நகரில் கனம் முதன் மந்திரி வீட்டுக்கெதிரில் உண்ணா நோன்புடன் சத்தியாக்கிரகம் செய்துவரும் தோழர் பொன்னுச்சாமி மிக உறுதியுடன் இருக்கிறார்.<br /><br />ஆனால், வெயில், காற்று, மழைகளில் இருந்து வருவதால் இளைப்புடன் காணப்படு கிறார். அவருக்குப் பக்கத்தில் ஒரு குடத்தில் குடிப்பதற் காகத் தண்ணீர் வைக்கப்பட்டிருக்கிறது. கயிற்றுக் கட்டிலும் அமைக்கப்பட்டிருக்கிறது. முன்னைய இரவைப் போலவே 02-06-1938 இரவிலும் கடுமழை பெய்தது. இரவு முழுதும் தோழர் அவர்கள் மழையில் நனைந்தார்.<br /><br />அவருக்கு அருகில் சி.அய்.டி.களும் போலீஸ்காரரும் நிறுத்தப்பட்டிருக் கின்றனர். பொதுஜனங்களும் தோழர்களும் அவரை வந்து பார்த்துவிட்டுச் செல்கிறார்கள். நேற்று ராவ்பகதூர் எம். ராமன் அவர்களும் இன்று காலை தலைவர் மேடை தளவாய் குமரசாமி முதலியார் அவர்களும் வந்து பார்த்து விட்டுச் சென்றார்கள்.<br /><br />குடிஅரசு - செய்தித்துணுக்கு - 03-06-1938<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-87411462301113508052012-11-18T06:27:57.037+05:302012-11-18T06:27:57.037+05:30
சோழவந்தான் மகாநாடு!
எழுத்துரு அளவு Larger Font
...<br />சோழவந்தான் மகாநாடு!<br />எழுத்துரு அளவு Larger Font <br /><br />நிறைவேறிய தீர்மானங்கள்<br /><br />(1) சென்னை மாகாணத்தில் இந்தி பாஷையைக் கட்டாயப் பாடமாக பள்ளிகளில் வைக்கக் கூடாதென்று இம்மாகாணத் தமிழ் மக்கள் எவ்வளவோ தக்க காரணம் சொல்லி ஆட்சேபித்தும் லட்சியம் செய்யாமல், 125 பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக வைத்திருக்கும் மந்திரி சபையின் செய்கையை இம்மகாநாடு கண்டித்து, தமிழ் மக்களின் அதிருப்தியை சர்க்காருக்குத் தெரிவிக்கிறது.<br /><br />(அ) சர்க்காரின் செயலை வெற்றிபெறாமல் செய்ய பயனளிக்கத்தக்க முறையில் பலமான முயற்சி எடுத்துக்கொள்ளுமாறு திருச்சி தமிழர் மகாநாட்டில் நிறுவப்பட்ட கமிட்டியாரையும் காஞ்சிபுரத்தில் கூடிய சென்னை மாகாண இந்தி எதிர்ப்பாளர் மகாநாட்டாரால் நிறுவப்பட்ட கமிட்டியாரையும் காஞ்சிபுரத்தில் கூடிய சென்னை மாகாண இந்தி எதிர்ப்பாளர் மகாநாட்டாரால் நிறுவப்பட்ட கமிட்டியாரையும் இந்தி கட்டாயப் பாடமாவதை எதிர்க்கும் இதர பிரமுகர்களையும் கேட்டுக்கொள்கிறது.<br /><br />2. மதுரை ஜில்லா சம்பந்தப்பட்ட வரை இந்தியைக் கட்டாயப் பாடமாக வைத்திருக்கிற கலாசாலைகளில் மாணாக்கர்கள் வாசியாமல் வேறு பள்ளிகளில் வாசிக்கு மாறு பெற்றோர்களைக் கேட்கும்படி தூண்டவும், அவசிய மானால் மறியல் செய்வது போன்ற இதர துறைகளில் வேலை செய்யவும் கீழ்க்கண்டவர்களடங்கிய தோழர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறது.<br /><br />1. டபிள்யு. பி. ஏ. சவுந்திரபாண்டியன், 2. டி. ஆவுடை யப்பன், 3. ப. வ. விநாயகமூர்த்தி, 4. எம். ஆர். மத்திரன், 5.எஸ். பாதம்பரி முதலியார், 6. சரவணை, 7. டி. சோமு நாடார்; அவசிய மேற்பட்டால் மேற்படி கமிட்டியார் வேண்டியவர்களையும் சேர்த்துக்கொள்ள அதிகாரம் கொடுக்கிறது. 3. இந்தி கட்டாய பாடமாவதைத் தடுக்க இந்தி எதிர்ப்புக் கமிட்டியாரால் செய்யப்படுகிற வேலைத் திட்டங்களை இந்த ஜில்லாவாசிகள் முழுமனதுடன் வரவேற்பதுடன் கூடிய விரைவில் கமிட்டியார்கள் கூடி இந்தி எதிர்ப்பு வேலை முறைகளைச் செய்யுமாறு இம்மகாநாடு கேட்டுக் கொள்கிறது. 4. மதுரையில் நடந்த மதுரை ஜில்லா சுயமரியாதை மகாநாட்டில் மீதியான பணத்தையும், இந்த மகாநாட்டில் மீதியான பணத்தையும் இந்தி எதிர்ப்பு நிதிக்கு வைத்துக்கொண்டு வேலைகள் ஆரம்பிக்குமாறு கமிட்டியாரைக் கேட்டுக்கொள்கிறது.<br /><br /> <br /><br />குடிஅரசு - தீர்மானங்கள் - 22-05-1938<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-74390318268576314652012-11-18T06:26:24.211+05:302012-11-18T06:26:24.211+05:30ஆண்டவனைப் பற்றிப் பாடி வந்த வள்ளலார் பெருமகன் ஆறாம...ஆண்டவனைப் பற்றிப் பாடி வந்த வள்ளலார் பெருமகன் ஆறாம் திருமுறையில் சமூக மாயைகளைப் பற்றிப் பகுத்தறிவுக் கண்ணோட்டம் கொண்டு பதிவு செய்த பொழுது, ஆன்மீகவாதிகளின் ஆதிக்கத்தால் எதிர்ப்பு நிலைக்கு ஆளானார். இறுதியில் கடைவிரித் தேன்; கொள்வாரில்லை என உண்மைநிலை அறியா மாந்தர் பற்றி மனம் நொந்தார்.<br /><br />ஆனால் பெரியாரோ - தமது கருத்துகள் எதிர்ப்புக்கு ஆளாகும்; மக்கள் எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாதவை என உணர்ந்தே கடைவிரித்தேன்; கொள்வாரில்லை என மனம் நொந்து போகாமல், களம் இறங்கி பிரச்சாரம் செய்து, கடைவிரிப்பேன், மக்கள் மனம் கொள்ளும்வரை போராடுவேன் என பொது வாழ்க்கை வாழ்ந்தவர்.<br /><br />அந்தப் போராட்டம், தமது காலத்திற்குப் பின்பும் தொடர வேண்டும் என அதனை நடத்திட அமைப்பு - இயக்கம் கண்டவர் தந்தை பெரியார். பெரியாரின் சிறப்பை - தனித்துவத்தை - சமூகப் பணியினை யாரும் மறைத்துவிட முடியாது. சிறுமைப்படுத்திவிட முடியாது. பெரியாரின் பணியால் மேம்பாடு கண்ட மக்கள் எல்லாருமே, பெரியாரின் உழைப்பினை பறைசாற்றும் படைக் கருவி களாவர்.<br /><br />இந்த நிறைவு விழாவில் சிறப்புப் பேச்சாளர் பேராசிரியர் அரங்க.ராமலிங்கம் தமிழ்ச்சித்தர் சிந்தனைகள் பற்றிய பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்தார். சமூக அவலங் களை எதிர்த்துப் பெரியார் போராடியதைப் போலவே சித்தர்களும் அந்நாளில் போராடியதாகக் கூறினார். ஆனால் நிறுவன ரீதியாக சித்தர்கள் போராடவில்லை; பெரியாருக்கும் சித்தர்களுக்கும் உள்ள வேறுபாட்டுத்தளம் என்பது கடவுள் பற்றியது. பாமர மக்களுக்கு ஒரு பிடிப்பு வேண்டும் என்பதற்காக கடவுள் நம்பிக்கை அவசியம் என சித்தர்கள் உணர்ந்தனர் எனக்குறிப்பிட்டுப் பேசினார்.<br /><br />நமது நிலை என்னவென்றால், எத்தனை நாளைக்கு பாமரமக்கள், பாமர மக்களுக்காகவே இருப்பது; அவர்கள் படித்து உண்மை நிலை உணரவேண்டாமா? உண்மை நிலை உணர்ந்தால் கடவுள் நம்பிக்கை தகர்ந்து விடுமே! பேராசிரியர் பேசும்பொழுது பெரியாரையும் சித்தர்களையும் பிரிப்பது கடவுள் நம்பிக்கை விசயம்தான் என்றார். எங்களைப் பொறுத்த வரையில் எது நம்மைப் பிரிக்கிறது என்பதைவிட எது நம்மை இணைக்கிறது எனப் பார்ப்பவர்கள். அந்த வகையில் சமூக அவலங்களை எதிர்த்துக் குரல் கொடுப்பதில், போராடுவதில் சித்தர் சிந்தனையார்களும், பெரியார் இயக்கத்தினரும் இணைந்து போராட வேண்டியவர்கள்.<br /><br />சித்தர்கள் பற்றிய, உயர்வான எண்ணங்களைக் கொண்டிருந்தார் பெரியார். எதையும் தெளிவாக, பாமர மக்களுக்கும் புரியம் வகையில் கருத்துகளைச் சொல்லும் ஆற்றல்பெற்ற பெரியார் தான் நிறுவிய உண்மை இதழின் முதல் வெளியீட்டிலேயே புத்தியைப் பயன்படுத்துபவர் புத்தர்;<br /><br />சிந்தனையைப் பயன்படுத்துபவர் சித்தர் என மிக எதர்த்தமாகக் கூறினார். சித்தர்களைப் பற்றியக் குறிப்பிடும் பொழுது அவர்களைக் கலகம் (revolt) செய்பவர்கள்; கலக்காரர்கள் என்றே குறிப்பிட்டார் பெரியார். அழிவுப் பணியில் ஈடுபடும் கலக்காரர்கள் அல்ல அவர்கள்; சமூக அவலங்களை எதிர்த்துக் குரல் கொடுத்த கலகக்காரர்கள் - சித்தர் என பெருமை யாகவே குறிப்பிட்டார்.<br /><br />சித்தர்கள் நிறுவன ரீதியாக செயல்படவில்லை என பேராசிரியர் குறிப்பிட்டார். சித்தர் போராடியது வேதாந்தத்தை எதிர்த்து; வேதாந்தத்திற்கு எதிர்ப்பு நிலை சித்தாந்தம். வேதாந்தத்திற்கு அடிப்படை வேதங்கள். வேதங்களைப் போற்றுவது இந்து மதம். மற்ற மதங்களான கிறித்துவ, முகமதிய மதங்களைப் போல நிறுவன மதமாக இந்து மதம் இல்லை. இருப்பினும் மற்ற மதங்களுக்கு இல்லாத கூடுதல் ஆதிக்க பலம் என்பது இந்து மதத்தின் கருத்துக்கட்டமைப்பில் உள்ளது.<br /><br />கருத்துக் கட்டமைப்பில் தான் அதன் நிறுவன இயல்பு நீடிக்கிறது. வருணாசிரம் எனும் கருத்து நிறுவனத்தால் இந்து மதம் எனும்வேதமதம் மக்களை வேறுபடுத்தி மேல்தட்டு மக்களான பார்ப்பனர்களுக்கு அனுகூலமாக உள்ளது. அந்த வகையில் நிறுவன ரீதியில் செயல்படாவிட்டாலும், சிந்தனை அடிப்படையில் சமூக மேம்பாடை வலியுறுத்திய சித்தர்களின் சிந்தனை வழி அமைப்புகள், இன்றைய செயல்பாட்டாளர்கள் - கருத்து நிறுவன ஆதிக்க பலம் கொண்ட இந்து மதத்தை எதிர்த்து பெரியார் இயக்கத் துடன் இணைந்து போராட முன்வரவேண்டும்.<br /><br />இணைந்து போராட வேண்டியவர்கள் நாம். ஆரியத்தின் சூது வலையில் சித்தர் சிந்தனையாளர்கள் சிக்கிவிடக் கூடாது. சிக்கிவிடாமல் அவர்களையும் இணைத்து வருங் காலத்தில் போராட பெரியார் இயக்கம் அணியமாகவே உள்ளது. ஒத்த மனிதநேய சிந்தனையாளர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதே திராவிடர் இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவில் நாம் விடுக்கும் செய்தியாகும்.<br /><br />-இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி தமது நிறைவுப் பேருரையில் குறிப்பிட்டார்.<br />(நிகழ்வில் பங்கேற்ற மற்ற பேச்சாளர்களின் உரை விபரங்கள் பின்னர் வெளிவரும்.)<br /><br />கூட்டத்தில் கல்வியாளர்கள், பல்துறை வித்தகர்கள் என பல தரப்பட்ட மக்களும் வருகை தந்திருந்தனர். அரங்கம் முழுவதும் மக்கள் கூட்டமாக நிரம்பியது. அரங்கத்திற்கு வெளியிலும் மக்கள் நிரம்பி இருந்தனர்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-23185303027062399622012-11-18T06:26:19.349+05:302012-11-18T06:26:19.349+05:30தந்தை பெரியார், பிற நாத்திக அறிஞர் போல அல்லாமல்
து...தந்தை பெரியார், பிற நாத்திக அறிஞர் போல அல்லாமல்<br />துணிச்சலாக களம் இறங்கிப் போராடிய சமூகப் புரட்சியாளர்!<br />திராவிடர் இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழர் தலைவர் பேருரை<br /><br />சென்னை, நவ.17-திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பாக திராவிடர் இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவும் நீதிக்கட்சியின் 96ஆம் ஆண்டு விழாவும் சிறப்பாக நடைபெற்றது. சென்னை பெரியார் திடலில் 16.11.2012 அன்று நடைபெற்ற நிறைவு விழாவில் தமிழர் தலைவர் கி.வீரமணி பங்கேற்று நிறைவுப் பேருரையாற் றினார்.<br /><br />அன்னை மணியம்மையார் அரங்கத்தில் மாலை 7 மணி அளவில் தொடங்கிய விழாவிற்கு திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைவர் பேராசிரியர் முனைவர் அ.இராமசாமி தலைமை தாங்கினார். சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் அரங்க.இராமலிங்கம் தமிழ்ச் சித்தர் சிந்தனைகள் எனும் தலைப்பில் சிறப்புரையாற் றினார்.<br /><br />திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் முனைவர் பெ.ஜெகதீசன் வரவேற் புரையாற்றிட செயலாளர் பேராசிரியர் அ.கருணானந்தன் நன்றி கூறினார். மய்யத்தின் பொருளாளர் வீ.குமரேசன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.<br /><br />தமிழர் தலைவரின் நிறைவு விழா பேருரை<br /><br />திராவிடர் இயக்க நூற்றாண்டு விழா நிகழ்வுகள் கடந்த ஓராண்டு காலமாக இயக்கத்தின் பல்வேறு அமைப்புகளின் சார்பாக நாடெங்கும் கொண்டாடப்பட்டு வந்துள்ளன. கொண்டாட்டம் எனச் சொல்லும்பொழுது கொள்கைப் பிரச்சாரம்தான் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமூகத்தில் பல நூற்றாண்டுகளாக அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்டு அவர்களின் மேம்பாட்டிற்குக் காரணமாக திராவிடர் இயக்கம் அமைந்துள்ளது.<br /><br />நூறாண்டு கண்ட வேளையிலும் திராவிடர் இயக்கத் தின் பணி தேவைப்படுகிறது. காரணம், நூற்றாண்டைக் குறிப்பிட்டுப் பேசும் வேளையில் - குறிப்பாக ஊடகங் களில் - ஆரியப் போக்கிற்கு ஆட்பட்ட ஊடகங்களில் திரா விடர் இயக்கத்தினை உயர்த்துவது போன்ற தோற்றத்தில் சிறுமைப்படுத்தும் செயல்கள் நீடித்து வருகின்றன.<br /><br />திராவிடர் இயக்கத்தின் செயல்பாட்டுத் தேவை இன்றும், வருங்காலத்திலும் தேவைப்படுகிறது என்பதைத்தான் இந்த ஆரியப் போக்கு காட்டுகிறது. ஈரோட்டுக் கண்ணாடி (பெரியார் கருத்தியல் பார்வையில்) போட்டுப் பார்த்தால்தான் ஊடகங்களின் சிறுமைப்படுத்தும் போக்கு புலப்படும். உயர்த்துவது போன்று தாழ்த்துவது; அரவணைப்பது போன்று அழிக்க முனைவது - இவை ஆதிக்க ஆரியத்தின் கடந்த கால செயல்கள் மட்டும் அல்ல; இன்றும் தொடரும் நிகழ்வுகளாகும்.<br /><br />திராவிடர் இயக்க நூற்றாண்டு காலத்தில் திராவிடர் இயக்கத்தின் மய்ய பலமான பெரியாரைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது, பெரும்பாலான ஊடகங்கள் அவரை சிறுமைப்படுத்தும் நோக்கத்தில், தேடிப் பார்த்து இதுவரை தெரியாத நாத்திகர்களைப் பற்றிய குறிப்புகளை வெளியிட்டு - பெரியாருக்கு முன்பே நாத்திகர் பலர் இந் நாட்டில் இருந்திருக்கின்றார்கள் என ஆராய்ச்சி (?) செய்திகளாக வெளியிட்டு - ஆதிக்க மனநிலை ஆரியத் திடம் மங்கிவிடவில்லை என்பதை உணர்த்துவதாக நடந்து கொள்கின்றனர்.<br /><br />ஆம். பெரியாருக்கு முன்பு பல நாத்திகர்கள் இந்த மண்ணில் வாழ்ந்திருக்கிறார்கள். தனிப்பட்ட சிந்தனையா ளர்களாக இருந்திருக்கிறார்கள். சிலர் அமைப்பு ரீதியிலும் செயல்பட்டிருக்கின்றனர். புத்தர் கடவுள் மறுப்பாளர்தான் - அமைப்புக்கட்டி செயல்பட்டவர்தான். இருப்பினும் அமைப்பில் ஆரிய ஊடுருவலால் புத்த நெறி உருவான இந்த நாட்டில் அதன் சிறப்பு அழிக்கப்பட்டு, மதம் எனும் நிலைக்கு மகத்துவம் குறைக்கப்பட்டது. பிறநாடுகளிலும் மதம் எனும் நிலையிலேயே புத்தநெறி போற்றப்படுகிறது.<br /><br />ஆனால் பெரியாரைப் பொறுத்த அளவில் சமூகப் புரட்சிக்கு துணிச்சலாகக் களம் இறங்கிப் போராடி - ஆரியத்தின் சூழ்ச்சி வலைகளை அறுத்தெறிந்து - சமூக அடக்கு முறைக்கு ஆளான மக்களின் மேம்பாட்டுக்காக உழைத்துக் கண்ட வெற்றியால் மற்ற நாத்திகர்களிட மிருந்து வேறுபடுகிறார்; சிறப்புப் பெறுகிறார். தனது சுயசிந்தனையால் விளைந்த கருத்துகளை அமைப்பு ரீதியில் பிரச்சாரம் செய்து, கைக்கொண்ட அறிவார்ந்த அணுகுமுறையால் தனித்துவ வெற்றி கண்டார் தந்தை பெரியார். இத்தகைய வெற்றி, அணுகுமுறை முன்னாளில் வாழ்ந்த நாத்திகர்கள் கைக்கொள்ளவில்லை என்பதே உண்மை நிலை.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-37651065386305201082012-11-18T06:24:54.493+05:302012-11-18T06:24:54.493+05:30
எட்டடியும்கூட சொந்தமில்லையே! இப்போது
எங்கு பார்...<br />எட்டடியும்கூட சொந்தமில்லையே! இப்போது<br /><br /><br />எங்கு பார்த்தாலும் நிலப்பறி நிலப் பறி என்ற வழக்குகள்; கிணறுகளைக் காணாமல் போயிற்று என்று நகைச் சுவை நடிகர் வடிவேலுவின் காமெடியையும் தாண்டி, மலைகள் காணாமற் போகின்றன.<br /><br />ஒடிசா போன்ற மாநிலங்களில் சுரங்கங்களில் நடைபெறும் சுரண்டல் கள் தோண்டத் தோண்ட சுரங்கமாகி, இப்போது அரங்கங்களில் அதுபற்றி அலசி ஆராயப்படும் அவலங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன!<br /><br />சுரங்கக் காண்ட்ராக்ட்டில் எல்லா அரசியல் கட்சிகளுக்கும்கூட சமரச சன்மார்க்க அணுகுமுறை போல லஞ்சம் - இல்லை இல்லை நன் கொடைகள் - தாராளமாக பல ஆயிரம் கோடிகள் கொடுக்கப்பட்டுள்ளனவா?<br /><br />இந்த ஒப்பந்தக் கம்பெனி, வெளி நாடோ, உள்நாடோ - எப்படியிருப் பினும் பெயர் வேதாந்தா என்பது - வேதத்தின் அந்தம் வேதனை கடைசி எல்லை இப்படியா சுரங்கத்தையும் விடாது சுரண்டுவதான ஊழலில் முடிவது என்ற கேள்வி ஒருபுறம்.<br /><br />பலர் சொத்துக்களை வாங்கி, வாங்கி (திருடி திருடி) என்றெல்லாம் சிலர் கூறுவார்கள் சேர்க்கிறார்களே இவர்கள் கடைசியில் தங்களுக்கென்று மாய்ந்து சேர்த்துள்ள எப்படியெல்லாம் அனுபவிப் பார்கள்? இயலுமா?<br /><br />பணம் சேர்ப்பது, சொத்து சேர்ப்பது என்பது குறிக்கோள் இல்லாது, ஒரு பழக்கமாகவே பலருக்கு ஆகி, அதுவே பிறகு வழக்கமாகி வம்பில், வாதில் முடிகிறது.<br />காலந் தாழ்ந்து உணர்ந்து என்ன பயன்? குதிரைக் காணாமல் போன பின்பு, காலி லாயத்தைப் பூட்டி வைப்பது பின்புத்தி அல்லவா?<br /><br />பாட்டுக்கோட்டையாரான, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் போன்றவர்களை கலங்கரை வெளிச்சமாகக் கொண்ட பொதுவுடைமைக் கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் என்ற அந்த மகத்தான கவிஞர் திரைப்பட பாடல்கள் கூட, பல அருமையான தத்துவங்களை அகிலத்திற்கு அளித்து சிந்திக்க வைத்தன.<br /><br />தத்துவக் கருத்துக்களை எளிமையில் தோய்த்து எவரும் எப்போதும் மனதிற் கொள்ளும்படி எழுதிய பாடல் ஒன்று இதோ:<br /><br />குட்டி ஆடு தப்பி வந்தால்<br />குள்ள நரிக்குச் சொந்தம்<br />குள்ள நரி மாட்டிக்கிட்டா<br />குறவனுக்குச் சொந்தம்<br />தட்டுக் கெட்ட மனிதர் கண்ணில்<br />பட்டதெல்லாம் சொந்தம்<br />சட்டப்படி பார்க்கப் போனால்<br />எட்டடிதான் சொந்தம்.<br />கூட்டுல குஞ்சு பறக்க நினைத்தால்<br />குருவியின் சொந்தம் தீருமடா<br />ஆட்டுல குட்டி ஊட்டமறந்தால<br />அதோட சொந்தம் மாறுமடா<br />காலை நீட்டியே வைத்து<br />நெருப்பிடுபோது<br />நேசம் பாசம் பொருளாசைக்கெல்லாம்<br />காட்டிய ஒருபிடி வாய்க் கரிசியிலே<br />கணக்குத் தீர்த்திடும் சொந்தமடா<br />அடடா என்னே தத்துவ ஒளிக்கீற்றுகள்!<br />சட்டப்படி பார்க்கப் போனால்<br />எட்டடிதான் சொந்தம்<br />என்பதுகூட இப்போது மாறி வருகிறதே!<br /><br />அதுகூட சொந்தமில்லை - கார ணம் மின்மயமனம் வந்து சடலத்தை எடுத்து நொடிப் பொழுதில் முடித்து, அடுத்தவர் அங்கும் க்யூ வரிசையில் காத்திருக்கிற காலமல்லவா இது!<br /><br />எட்டடிக் கொட்டடியில் (சிறையில்) இருப்போர் பலரும்கூட<br /><br />(சொத்துப்பறி - பணமோசடிக்காக) அதையே நிரந்தரமாகக் கொள்ள முடி யாதே - பின் ஏன் இப்படிப் பேராசை? புரியவில்லையே!<br /><br />- கி.வீரமணி 17-11-2012<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-76287549058818684522012-11-18T06:24:05.563+05:302012-11-18T06:24:05.563+05:30
நவம்பர் 25 அழைக்கிறது!
திராவிடப் பெருங்குடி மக்...<br />நவம்பர் 25 அழைக்கிறது!<br /><br /><br />திராவிடப் பெருங்குடி மக்களே! வரும் 25ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் ஒரு புரட்சி விழா!<br /><br />எத்தனையோ புரட்சி அத்தியாயங்களை நம் மக்களுக்கு உருவாக்கிக் கொடுத்த திராவிடர் கழகம் இப்பொழுது அதன் திசையிலே என்றென்றும் ஒளி உமிழும் ஓர் செயல்பாட்டுக்கு உங்களை அழைக் கிறது.<br /><br />ஜாதி என்பது நமக்கு உரியதன்று. அது இடையில் வந்த ஒரு கூட்டத்தால் திணிககப்பட்ட தீய நஞ்சு.<br /><br />திராவிடர் இனத்தின் ஒற்றுமையை உருக் குலைத்த எலும்புருக்கி நோய்! நாம் ஓர் இனம் என்ற உணர்வை ஒழித்துக் கட்டிய திட்டமிட்ட ஏற்பாடு அது.<br /><br />பிறப்பின் அடிப்படையில் பேதம் பேசும் இந்த வருணாசிரம ஏற்பாட்டை ஒழித்துக் கட்டினால் ஒழிய நம் இனத்துக்கு மீட்சியில்லை.<br /><br />பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் தம் வாழ் நாள் முழுவதும் பிரச்சாரம் செய்ததும், பாடுபட்டதும் ஜாதி ஒழிப்பு சமத்துவ சமுதாயம் ஒன்றைப் படைப்ப தற்காகத்தான்; ஜாதியின் பாதுகாப்புக் கோட்டை யாக இருந்துவரும் கடவுள் மதம், சாஸ்திரம், ஏன் இந்திய அரசமைப்புச் சட்டம் முதலியவற்றின் ஆணி வேருக்கே சென்று அறிவாயுத அணுக்குண்டைப் போட்டவர் அறிவுலக ஆசான் அய்யா.<br /><br />நாட்டில் ஏராளமான ஜாதி மறுப்புத் திருமணங்கள் - மத மறுப்புத் திருமணங்கள் நடக்கத் தொடங்கின. கோரிக்கையற்றுக் கிடக்கு தண்ணே வேரில் பழுத்த பலா என்று துணைவரை இழந்த பெண்களின் நிலையைக் கண்டு கவிதை வரியில் படம் படித்துக் காட்டினார் நமது இயக்கக் கவிஞர் பாரதிதாசன்.<br /><br />துணைவரை இழந்தால் இன்னொரு துணை வியை தேடிக் கொண்டால் என்ன என்று துணிச்ச லாக வினா எழுப்பி மக்கள் மத்தியில் சிந்தனை அலைகளை எழுப்பி வந்திருக்கிறோம். அதன் விளைவு ஏராளமான திருமணங்கள் இந்தத் திசையில் நடந்து வருகின்றன.<br /><br />சிவகாமி - சிதம்பரனார் ரெங்கம்மாள் - சிதம்பரம் என்று தொடங்கி நீண்ட பட்டியலே உண்டு.<br /><br />மத மறுப்புத் திருமணங்களும் நடந்து வருகின்றன - நாமும் நடத்தியும் வைத்திருக்கிறோம்.<br /><br />பார்ப்பனப் புரோகிதம் ஒழிந்த சுயமரியாதைத் திருமணங்கள் நாட்டில் நடக்கப் புதுமுறை ஒன்றை அறிமுகப்படுத்தியவர் புரட்சியின் சின்னமாம் தந்தை பெரியார்! சட்டப்படி அவை செல்லாது என்று நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியும், சட்டமா? சுயமரியாதையா? என்று வெடித்தெழுந்த வினாவுக்கு சுயமரியாதையே என்று பதில் அளித்ததோடு மட்டுமல்லாமல், புரோகித மறுப்புத் திருமணங்களை நடத்தித்தான் வந்தனர்.<br /><br />அறிஞர் அண்ணா தலைமையில் அமைந்த திமுக ஆட்சியில் சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாக்கப்பட்டு தந்தை பெரியார் அவர் களுக்கு காணிக்கையாக்கப்பட்டது.<br /><br />இப்பொழுது அடுத்த கட்ட அத்தியாயத்தை பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் எழுதிட உள்ளது.<br /><br />ஜாதி மறுப்புத் திருமணம், மத மறுப்புத் திருமணம் விதவையர் திருமணம், மாற்றுத் திறனாளிகளுடன் திருமணம், திருமண விடுதலை பெற்று மறு திருமணம் செய்து கொண்டோர்களுக்கு ஒரு பாதுகாப்பு என்று கூடச் சொல்லலாம். இந்த இணையர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்குத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யும்போது இடர்ப் பாடுகள் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களிலிருந்து அவர்களைக் காப்பாற்றிடவும், ஜாதி மறுப்பு - மத மறுப்பு திருமணங்கள், விதவையர் திருமணங்கள், மறு வாழ்வு திருமணங்கள் இவற்றை ஊக்கப்படுத்தவும் வரும் நவம்பர் 25ஆம் தேதி காலை முதல் மாலை வரை முழு நாள் என்று சொல்லும் அளவுக்கு மன்றல் 2012 நிகழ்ச்சி சென்னை பெரியார் திடலில் நடைபெற உள்ளது.<br /><br />ஜாதி மறுப்பு, மத மறுப்பு திருமணங்கள் விதவைப் பெண்கள் திருமணங்கள் விவாக விடுதலைப் பெற்றோர் திருமணம், மாற்றுத் திறனாளிகளுடன் திருமணம் இவற்றை செய்து கொள்ள விரும்புவோர் அன்று பெரியார் திடலில் கூடலாம்.<br /><br />முன்னதாகவே பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநருக்குத் தகவல்களைத் தெரிவிக்க லாம்.<br /><br />ஜாதிக்குள் சுயம்வரங்கள் நாட்டில் நடப்பதுண்டு. இந்த வகையில் நாட்டில் நடைபெறுவது இதுதான் முதல் முறை.<br /><br />மேலும் மேலும் தொடர்ந்திடவும் வாய்ப்பு இருக் கிறது. திராவிடர் கழகம்தானே எல்லா மறு மலர்ச்சிக்கும் முன்னோடி!<br /><br />வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வீர்! வாகை மலர் சூட்டிக் கொள்வீர்!!<br /><br />நவம்பர் 25 அழைக்கிறது! அழைக்கிறது!!17-11-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-23497487485031982102012-11-18T06:22:54.021+05:302012-11-18T06:22:54.021+05:30வழக்குகள் நடைபெறுவதால் அதனுள் புக விரும்பவில்லை - ...வழக்குகள் நடைபெறுவதால் அதனுள் புக விரும்பவில்லை - பல்வேறு அம்சங் கள் முரண்பட்ட நியாய விரோத நிலைப்பாடாக இருந்த போதிலும்கூட!<br /><br />இப்பொழுது என்னாயிற்று?<br /><br />10. ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு என்பதையே ஏதோ மோசடி, சதியென்று கூறிய நிலையில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டும் முறைகளை யொட்டி மீண்டும் ஏலம் விடப்பட்டதே இரண்டு நாள்களுக்கு முன் - அதில் அரசுக்கு அதிக அளவில் லாபம் வரும் என்று பிரச்சாரம் ஊடகங்களால் செய்யப்பட்டதே. கிடைத்ததா?<br /><br />கூவிக்கூவி ஏலம் போட்டும், கிடைத்தது 9400 கோடி ரூபாய்கள்தான். (ஜி.எஸ்.எம். பிரிவில் மட்டும் அரசுக்கு 28000 கோடி கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது).<br /><br />இதையும்கூட வரவு என்று சொல்லி விட முடியாது. 2ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றம் சாட்டப்படாத நிறுவனங்கள், தாங்கள் ஏற்கெ னவே உரிமம் பெற்றபோது செலுத்திய முன் பணத்தை இப்போது கழித்துக் கொள்ள முடியும். ஆகவே இந்த ஏலத்தின் மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருவாய் சுமார் ரூபாய் 5,000 கோடிதான்.<br /><br />ஏலப்பாட்டுப் பாடி, ரூ. 1.76 லட்சம் கோடி நட்டம் என்ற இமாலயப் புளுகினைக் கட்டவிழ்த்து விட்டு, காலந்தள்ளிய ஊடகங்களும் உத்தம ஊழல் ஒழிப்பு அவதாரங்களும் இப்போது, ஏலம் எடுப்போர் கூட்டுச் சேர்ந்து சதி செய்ததால் (Cartel) இப்படி ஏலம் குறைந் திருக்கலாம் என்று நாகூசாமல் மறுபடியும் பேசுகிறார்கள். முன்பே ஏலம் விட்டிருந்தால், ஏலம் எடுப்போர் கூட்டுச் சேர்ந்து குறைந்த ஏலம் கோராமல் இருந்திருக்க மாட்டார்களா? என்னே மழுப்பல்கள். எனவே சதி அல்ல இதன் பின்னணி சாதி! சாதி!! சாதி!!! தி.மு.க. வெறுப்பு - அவ்வளவுதான்!<br /><br />மத்திய அமைச்சர் கபில்சிபல் கூறுவதைக் கேளுங்கள்<br /><br />அது மட்டுமல்ல. மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் கபில்சிபல் நேற்று குறிப்பிட்டுள்ளார்.<br /><br />தற்போதைய ஏலத்தில் குறைந்த தொகை மட்டுமே, அரசுக்கு வருமானக் கிடைத்துள்ளது. உண்மை நிலை இவ்வாறிருக்க, ஏலத்தில் விட்டிருந்தால் கோடியில் லாபம் கிடைத்திருக்கும் எனக் கூறியது, எந்த அளவு உண்மை என்பதை இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும். 2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட்டதின் மூலம் மிகப் பெரிய பாடம் கிடைத்துள்ளது.<br /><br />கடந்த 2005 முதல் 2007 வரை, 2ஜி ஸ்பெக்டரம் மூலம் மக்களுக்குப் பயன் போய்ச் சேர, அரசு நடவடிக்கை எடுத்தது. கோடிக்கணக் கானோர் மொபைல் போன்களில் பேசும் வசதி கிடைத்தது. ஏல முறை இல்லாததால், தொலைத் தொடர்பு அடர்த்தி அதிகரித்தது. சாமான்ய மக்கள் ஏராளமானோருக்குப் பயன் கிடைத்தது. ஆனால் தற்போதைய ஏல முறையால் கிடைக்கா மற் போய் உள்ளது என்றும் கூறியுள்ளாரே மத்திய அமைச்சர் கபில் சிபல்<br /><br />இப்போது பொய்த் திரை - ஊடகங்களின் எதிர்க்கட்சிகளின் கொயபெல்ஸ் பிரச்சாரப் பொய்த் திரை - மாய்மாலம் கிழிந்தும், உடைந்தும் சுக்கல் நூறாகி விடவில்லையா?<br /><br />பாதிக்கப்பட்டவர் தாழ்த்தப்பட்டவர் என்றால்...<br /><br />இறுதியில் நீதி வழங்க வேண்டியவர்களே பிராசியூட்டர்களாகி, சட்டத்தின் ஆட்சியின் இறக்கைகளை ஒடித்து, நியாயத்தினை மறுக்க லாமா? என்று கேட்டு, தன் தவறுக்கு மத்திய அரசு - அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசு தக்க பரிகாரம் தேட வேண்டாமா?<br /><br />பாதிக்கப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் அவர்களை நாதியற்றவர்களாக்கி வேடிக்கை பார்ப்பது சரியா? நியாயமா? நாம் இதனை ஓராண்டுக்கு முன்பே சொன் னோம்.<br />இந்த சி.ஏ.ஜி. என்ற அதிகாரி இதுபற்றி ஒரு அரசியல்வாதியைப் போல, தமிழ்நாட்டு அக்கிரகார வாரப் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டிகொடுத்து பிரச்சினைக்கு எண்ணெய் ஊற்றிப் பெரிதாக எரியச் செய்தது எதைக் காட்டுகிறது? உள்நோக்கத்தோடு இது திட்டமிட்டு சுமத்தப் பெற்ற குற்றச்சாட்டுதான்!<br /><br />நடுநிலையாளர்கள் சிந்திக்கட்டும்<br /><br />நீதிமன்றங்களில் அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது; தலையிடக் கூடாது என்று உச்சநீதிமன்றத் தீர்ப்புகளே உள்ளனவே! அதை அலட்சியம் செய்யலாமா?<br />எனவே 2ஜி அலைக்கற்றை வழக்கும் அது சம்பந்தமான பல்வேறு நடவடிக்கைகளும் மீண்டும் மத்திய அரசின் மறுபரிசீலனைக்குட்படுத்துவதே தவறிய நியாயத்தை, வழங்கிட வாய்ப்பை ஏற்படுத்தும்.<br /><br />இதுபற்றி நடுநிலையாளர்கள், நியாய உணர் வாளர்கள் சிந்திக்க வேண்டும். பாதிக்கப்பட் டவர்கள் பரிகாரம் தேடிட உரிமை உண்டே!<br /><br />வேலிகளே பயிர்களை மேயும் நிலையை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.<br /><br />சென்னை<br /><br />17.11.2012<br /><br />கி. வீரமணி<br />தலைவர்,திராவிடர் கழகம்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-63248943649346618642012-11-18T06:22:49.457+05:302012-11-18T06:22:49.457+05:30மத்திய அரசின் தவறு
9. இதனைத் திட்டவட்டமாக மறுத்து...மத்திய அரசின் தவறு<br /><br />9. இதனைத் திட்டவட்டமாக மறுத்து, இது கொள்கை முடிவு, இதில் எந்தவித நடைமுறை இழப்பும் ஏற்படவில்லை. இந்த சி.ஏ.ஜி. தணிக்கை அதிகாரி கூறுவது அனுமான இழப்பே தவிர உண்மையான இழப்பு அல்ல. (Only Presumptive Loss - No actual Loss) உண்மையான இழப்பு பூஜ்யமே. (இப்படி கபில்சிபல் போன்ற அமைச்சர் கூட கூறியிருக்கும் நிலையிலும்) துணிந்து எதிர்க்கட்சிகள், ஊடகங்கள், பிளாக்குமெயில் அரசியல் பேரக்காரர்கள் கூற்றுக்கள் என்பதை யெல்லாம், திராணியுடனும், துணிவுடனும் மேற்கொண்டு, தமது அமைச்சரவையும், அதன் கூட்டணிக் கட்சி அமைச்சரவையும் பாதுகாப் பதில் உறுதியானதொரு நிலைப்பாட்டினை எடுக்கத் தவறி, கரடி வந்தவுடன் மரத்தில் ஏறி தன்னை மட்டும் காப்பாற்றிய இரு நண்பர்களில் ஒருவனைப் போல், மத்திய அரசு, எதிர்க் கட்சிகளின் பிரச்சாரப் பெரும் புயலைச் சரியாகச் சந்திக்கத் தவறியது அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு.<br /><br />அது நாடாளுமன்ற கூட்டு விசாரணைக்குழு முடிவைக்கூட, துவக்கத்திலேயே துணிந்து சரியான நடவடிக்கையை எடுக்கத் தவறி, உச்சநீதிமன்றத்தின் ஆணை என்பதையே சாக்காக வைத்து, இராசாவை பதவி விலக வைக்க தி.மு.க.வை வற்புறுத்தியது தி.மு.க.வும் ஏற்றது; பிறகு அவரைக் கைது செய்து, ஓராண்டுக்கு மேல் டெல்லி சிறையில் வைத்தது. அதையொட்டி கலைஞர் தொலைக்காட்சியில் உண்மையான தொடர்பு இல்லாத நிலை யிலும்கூட கனிமொழி எம்.பி. அவர்களையும் சரத்குமார் என்பவரையும்கூட கைது செய்யப்பட்டு அவர்கள் திகார் சிறையில் பல மாதங்கள் கழித்தே ஜாமீனில் வந்தனர்.<br /><br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-15246040131314772682012-11-18T06:22:39.761+05:302012-11-18T06:22:39.761+05:30
தீர்ப்பை முன் கூட்டியே எழுதும் ஏடுகள்
6. பத்திரி...<br />தீர்ப்பை முன் கூட்டியே எழுதும் ஏடுகள்<br /><br />6. பத்திரிகை நடத்தும் பல பெருமுதலாளிகள் தொலை காட்சிகளையும் தங்கள் கையில் வைத்து, செய்திகளை மக்களுக்குத் தருவதற்குப் பதிலாக, செய்திகளை அவர்களே உருவாக்கித் தருவதும், இல்லாத ஒரு பிரச்சினையை பூதாகரமாக்கி ஊதி, குற்றம் சுமத்திடுவதோடு, அவ்வழக்கின் விசாரணையையும் அவாளே நடத்தியும் தீர்ப்பும்கூட எழுதிடும் போக்கும் அண்மைக் காலத்தில் மிகவும் மலிந்து வருகின்றன. (Trial by media, Judgement by media).<br /><br />7. இவர்களில் உயர்ஜாதி அதிகார வர்க்கத்திடம் உள்ள பதவிப் பொறுப்புக்களைப் பயன்படுத்தி, திட்டமிட்டே வெகு மக்களுக்குப் பயன்படுபவைகளை அழிக்க, தவறான ஒரு செய்தியைக் கசிய விட்டு, விளம்பர வெளிச் சத்தை அதன்மீது வாரி விடுவதும், குற்றம் சுமத்து வதும் ஆன போக்கும் பிறகு இணைந்து கொள்வது.<br /><br />CAG என்னும் உயர்ஜாதி பார்ப்பனர்<br /><br />8. 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் அமைச்சர் இராசாவைக் குற்றம் சுமத்தி, இதனால் ரூபாய் 1.76 லட்சம் கோடி நட்டம் ஏற்பட்டு விட்டது என்ற ஒரு ஆதாரமில்லாத, ஒரு புகாரை - CAG என ஒரு உயர்ஜாதி பார்ப்பனர் தணிக்கைக் குறிப்பில் எழுதியதோடு, அது அதிகாரப் பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பே, அச்செய்தி (மீடியாவில்) ஊடகங்களில் கசிய விட்டு - மிகப் பெரிய கொயபெல்ஸ் பிரச்சாரத்தைச் செய்தனர்.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-27199462882076289732012-11-18T06:22:27.511+05:302012-11-18T06:22:27.511+05:30
1.76 லட்சம் கோடி 2ஜியில் ஊழல் என்று ஊரெல்லாம்...<br /> 1.76 லட்சம் கோடி 2ஜியில் ஊழல் என்று ஊரெல்லாம் கூச்சலிட்டவர்களே!<br /> ஏலம் விடப்பட்டதால் இப்போது கிடைத்த லாபம் என்ன?<br /><br />ஆ.இராசா குற்றவாளியா? நடு நிலையாளர்கள் சிந்திக்கட்டும்!<br />தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை<br /><br />மத்திய அமைச்சர் ஆ. இராஜாவால் அரசுக்கு 1.76 லட்சம் கோடி நட்டம் என்று பிரச்சாரம் செய்தவர்கள் ஏல முறையால் அரசுக்கு வருவாய் ரூ.9400 கோடி என்ற இந்த நிலைக்குப் பிறகு என்ன செய்யப் போகிறார்கள் என்ற வினாவை எழுப்பியுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை வருமாறு:<br /><br />1. அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்று, நாட்டின் குக்கிராமங்களில்கூட தொலைத் தொடர்பு வசதியை, ஏழை, எளியவர்கள்கூட பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு அளித்த கொள்கை முடிவினை மிக வேகமாகச் செயல் படுத்தியும், தி.மு.க.வுக்கும் மத்திய அமைச்சர வைக்கும் பெருமை சேர்த்தவர் ஆ. இராசா அவர்கள்.<br /><br />முதலாளிகளின் ஏகபோகம்!<br /><br />2. அத்துறையில் நிலவிய சில பெரு முதலாளிகளின் ஏக போகத்தை உடைத்து, புதிதாக நுழைவோருக்கும் வாய்ப்பு என்பதை சிறப்பான வகையில் செயல்படுத்தியதால், தொலைபேசிக் கட்டணம் 30 காசுகளுக்குள் - உலகில் எங்கும் இவ்வளவு மலிவான கட்டணம் இல்லை என்ற சாதனைச் சரித்திரத்தை செய்தவர் அவர்!<br /><br />3. அது மட்டுமல்ல - இராணுவத் துறையினர் பயன்படுத்தாத அலைக்கற்றையையும் போராடி வாங்கி அதனை சாமான்ய மக்கள் பயன்படுத்தும் வகையில் மலிவுப் பதிப்பாக்கி, நுகர்வோருக்கு மிகப் பெரும் பயன் விளைவித்தவரும் அவரே!<br /><br />கொள்கை முடிவு<br /><br />4. அதில்கூட முதலில் வருபவருக்கு முன்னுரிமை First Come First served) என்ற கொள்கைகூட இவரால் உருவாக்கப்பட்டதல்ல. ஏற்கெனவே ஆண்ட பா.ஜ.க. அரசினரால் - உருவாக்கப்பட்டதாகும் இதை பா.ஜ.க.வால் மறுக்க இயலாது. ஆ. இராசா இந்தக் கொள்கை முடிவினை சிறப்பான வகையில் செயல்படுத்தி, அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும், குறிப்பாக தி.மு.க.வுக்கும் பெருமை சேர்த்தார்.<br /><br />5. இதில் பாதிக்கப்பட்ட பெரு முதலாளிகள் - சந்தர்ப்பம் தேடி காத்திருந்தனர். அமைச்சர் இராசாவின் சாதனை கண்டு சிலர் பொறாமையும் பட்டனர். ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒருவனுக்கு இவ்வளவு பெருமையா? உயர்ஜாதி தலைவர்கள், ஊடகங்களுக்கும், சகித்துக் கொள்ள முடியாத எரிச்சல் - எதிர்க்கட்சி யினருக்கு அரசியல் நடத்த ஏதாவது தீனியைத் தேடினர்.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-3500632611561614542012-11-18T06:21:04.840+05:302012-11-18T06:21:04.840+05:30
அசல் நாத்திகம்!
தமிழ்நாடு இந்து சமய அற நிலையத் ...<br />அசல் நாத்திகம்!<br /><br /><br />தமிழ்நாடு இந்து சமய அற நிலையத் துறை திடீரென்று நாத்திகக் கொள்கையைக் கடைப் பிடிக்கத் தொடங்கியது ஆச்சரியமானது - ஆனா லும் அது உண்மைதான்.<br /><br />கடவுளை மற - மனிதனை நினை என்ற தந்தை பெரியார் அவர் களின் வேண்டுகோளையும் ஏற்றுக் கொண்டது வியப்பை அளிக்கிறது.<br /><br />சக்தியுள்ள சாமிக்குச் சாவியும் - பூட்டும் ஏன் என்று சுவர் எழுத்தாளர் சுப்பையா அன்று எழுதி னார்.<br /><br />இந்தக் கருத்தையும் இந்து சமய அறநிலையத் துறை ஏற்றுக் கொண்டு இருப்பதாகத் தெரிகிறது.<br /><br />நமது தமிழக முதல் அமைச்சர் திடீரென்று சென்று தரிசிக்கக் கூடிய ஒன்று உண்டென்றால் அது சென்னையை அடுத்த - திருவொற்றியூரில் உள்ள வடிவுடைஅம்மன் கோயில் தான்.<br /><br />ஓகோ, அவ்வளவு சக்தியுள்ள (ஆ) சாமியோ - இருந்துவிட்டுப் போகட்டும் - அதனாலென்ன?<br /><br />சரி, என்ன வந்தது அந்தக் கோயிலுக்கு? ஒன்றும் இல்லை - கோலி விளையாட்டுப் பையன்கள் தீபாவளியன்று வெடித்த பட்டாசு ஒன்று ராஜகோபுரத் தின்மீது போடப்பட்டு இருந்த கீற்றுக் கொட்டகை யின்மீது விழுந்து தீப் பிடித்து எரிந்து சாம்பலாகி விட்டது போலும்!<br /><br />என்ன சொல்கிறீர்கள்? சக்திக் கடவுளான வடி வுடை அம்மன் கோயிலிலா இந்தச் சமாச்சாரம்!<br /><br />வெடித்தது பட்டாசு. கடவுள் சக்தியோ புஸ் வாணமாகி விட்டது! தீபாவளி நாளில் மிகவும் பொருத்தம்தான் - பேஷ்! பேஷ்!!<br /><br />வடிவுடை அம்மனுக்கு என்ன வந்தது? அதுதான் அடித்து வைத்த சிலை யாயிற்றே! சீறீரங்கத்தில் ரெங்கநாதன் கோயில் பற்றி எரிந்தபோது கடவுள் ரெங் கநாதன் சிலையும் வெடித் துச் சிதறவில்லையா?<br /><br />முதல் அமைச்சர் பிரத்தியேகமாகக் கும்பிடும் சாமி ஆயிற்றே! அதிகாரி களால் சும்மா இருக்க முடியுமா?<br /><br />உத்தரவு பறந்தது. இனிமேல் இது போன்ற கீற்றுக் கொட்டகைகளைக் கோயில்களில் போடக் கூடாது. தீப்பிடிக்காத ஆஸ் பெஸ்டாஸ் பொருள்களைத் தான் பயன்படுத்த வேண் டும் என்பது இந்து சமய அறநிலையத் துறை அதி காரிகளின் உத்தரவு சுற்றறிக்கை.<br /><br />அது மட்டுமல்ல; கோயில் அதனைச் சுற்றி யுள்ள இடங்களில் அக்னி பகவானுக்கும் தடையாம். தீப்பெட்டி, பீடி, சுருட்டு, சிகரெட் போன்ற பொருட் களைப் பக்தர்கள் எடுத்து வரவும் தடையாம்.<br /><br />மின் கசிவு ஏற்பட்டு பகவானுக்கு ஆபத்து வந்து விடக் கூடாது என்ப தற்காக மின் இணைப்பு களை உடனே சரி பார்க் கவும் உத்தரவாம்!<br /><br />வடலூர் இராமலிங்க அடிகளார் சொன்னாரே நினைவு இருக்கிறதா? சாமி கும்பிடுவது என்பது பிள்ளை விளையாட்டே என்றாரே! அதனை இந்த இடத்தில் கொஞ்சம் நினைவு படுத்திக் கொண்டால், அதற்குப் பெயர்தான் புத்திசாலித்தனம் என்பது!<br /><br />- மயிலாடன்17-11-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-74599711073471896652012-11-18T06:20:25.709+05:302012-11-18T06:20:25.709+05:30
மாமிசம் சாப்பிடுவோர்பற்றி அவதூறு மத்திய பாடத் திட...<br />மாமிசம் சாப்பிடுவோர்பற்றி அவதூறு மத்திய பாடத் திட்டத்திலிருந்து நீக்குக!<br /><br /><br />மாமிசம் சாப்பிடுவோரை அசிங்கம் அவதூறு பரப்பும் சி.பி.எஸ்.சி. பாட நூல்களில் பாடத் திட்டக் குழுவினரால் வைக்கப்பட்டுள்ள ஒரு நூலில் (ஆறாம் வகுப்பு) உடல் நலக் கூறுகள் சம்பந்தமான ஒரு பாடம், மாமிச உணவு சாப்பிடுகின்றவர் (Non- Vegetarians) எல்லோரையும் சகட்டுமேனியாக, திருடர்களாக பொய் சொல்பவர் களாகவும், வன்முறையாளர்களாகவும் காமவெறி கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்று எழுதி, அதை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதால் புதிய கண்டனம் வெடித்துக் கிளம்பியுள்ளது நியாயமானதேயாகும்!<br /><br />அறிவியல் ரீதியாகவோ, உளவியல் ரீதியாகவோ நிரூபிக்கப்பட முடியாத மிக மோசமான கூற்று இது. இந்தப் பாடத்தையும் உடனே மத்திய அரசு திரும்ப பெற வேண்டியது அவசர அவசியமாகும். தேவையற்ற வீண் சர்ச்சைகளை உருவாக்கும், ஜாதி மோதல்களையும், அரசியல் சண்டைகளையும் உண்டாக்கும் நிலையில் பாட புத்தகக் குழுவின் மிகவும் பொறுப்பற்ற முறையில் பணிபுரிந்துள்ளனர் எனத் தெரிய வருகிறது.<br /><br />இதன்மீது உடனே நடவடிக்கை எடுத்து நீக்குவதோடு, இதற்குக் காரணமான பாட குழுவினர்மீது உரிய சட்டப்படிக்கான நடவடிக்கை எடுத்துத் தண்டிக்கத் தயங்கக் கூடாது. ஏற்கெனவே அம்பேத்கர் பற்றிய கேலிச் சித்திரங்கள், நாடார் மக்கள்பற்றி அவதூறு பரப்பும் பாடம், போன்ற அவலம் எல்லாம் எப்படி நீடிக்கலாம்? மத்தியக் கல்வித் துறை அமைச்சர் போதிய முன் எச்சரிக்கையுடன் செயல்பட தாக்கீது பிறப்பிக்க வேண்டும்.<br /><br />சென்னை <br />17.11.2012<br /><br />- கி.வீரமணி<br />தலைவர், திராவிடர் கழகம்<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-52601722432315800642012-11-18T06:19:59.953+05:302012-11-18T06:19:59.953+05:30
பார்ப்பான் பண்ணையம் கேட்பாரில்லையா? அசைவம் சாப்பி...<br />பார்ப்பான் பண்ணையம் கேட்பாரில்லையா? அசைவம் சாப்பிடுபவர் - ஏமாற்றுப் பேர் வழிகளாம் சி.பி.எஸ்.இ. பாடம் சொல்லுகிறது<br /><br /><br />புதுடில்லி, நவ. 17-அசைவம் சாப்பிடுபவர்கள் பற்றி தவறான கருத்து 6ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் கூறப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.<br /><br />நியூ ஹெல்த்வே என்ற தலைப் பில் வெளிவந்த 6ஆம் வகுப்பு அறிவியல் புத்தகத்தை பல சிபிஎஸ்இ பள்ளிகள் தேர்வு செய்து மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றன. இதில் ஆரோக்கியம், சுகாதாரம், மனோதத்துவம், பாது காப்பு, பாலியல் கல்வி, விளை யாட்டு மற்றும் உடற்பயிற்சி குறித்த பாடங்கள் இடம் பெற்றுள்ளன.<br /><br />இந்தப் புத்தகத்தின் 56ஆவது பக்கத்தில் அசைவ உணவு பற்றி தவறான பிரசாரம் செய்யப்பட்டுள்ளது. சிக்கன், மட்டன் போன்ற அசைவ உணவு சாப்பிடுபவர்கள் ஏமாற்றுவர், பொய் பேசுவர், வாக்குறுதிகளை மறப்பர், கெட்ட வார்த்தை பேசு வர், திருடுவர், சண்டை போடுவர், வன்முறை மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவர் என கூறப்பட்டுள்ளது.<br /><br />மேலும் ஜப்பானியர்கள் சைவ உணவு சாப்பிடுபவர்கள். அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு சைவ உணவுதான் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானி யர்கள் உணவில் மீன் உணவுக்கு முக்கியத்துவம் அளிப்பது பற்றி அந்தப் பாடப்புத்தகத்தில் குறிப் பிடவே இல்லை.<br /><br />இது குறித்து சிபிஎஸ்இ தலை வர் வினித் ஜோஷியிடம் கருத்து கேட்ட போது, 9ஆம் வகுப்புக்கு மேல் உள்ள பாடப் புத்தகங் களைத்தான் சிபிஎஸ்இ பரிந்துரை செய்கிறது. மற்ற வகுப்புக்கான பாடப் புத்தகங்களை அந்தந்த பள்ளிகளே தேர்வு செய்கின்றன. பள்ளி பாடப் புத்தகத்தில் என்ன உள்ளது என்பதை பற்றி சிபி எஸ்இ கண்காணிப்பதில்லை என்றார்.<br /><br />தனியார் நிறுவனங்கள் வெளி யிடும் பாடப்புத்தகங்களில் முரண் பாடான பல தகவல்கள் இடம் பெறுவது பற்றி கல்வியாளர்கள் பல அறிக்கைகளை கடந்த 2005ஆம் ஆண்டிலிருந்து சமர்ப் பித்து வருகின்றனர்.17-11-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-73335293943485137912012-11-18T06:19:01.835+05:302012-11-18T06:19:01.835+05:30
பாம்பா? பயமா?
பாம்பைப் பார்த்ததுமே பா...பா...பா....<br />பாம்பா? பயமா?<br /><br />பாம்பைப் பார்த்ததுமே பா...பா...பா... என்று வார்த்தைகளில் தந்தியடிக்கும் மனிதர்களைத் தான் இதுவரை பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு சிறுமி பாம்பிடம் காட்டும் அலாதிப்பிரியம் நம்மை விய(ர்)க்க வைக்கிறது. வழக்கமாக பாம்பு பிடிக்கிறவர்களுக்குக் கூட சில நேரங்களில் சிம்ம சொப்பனமாக விளங்கும் ராஜநாகம் பாம்பை தன் நண்பன் என்கிறாள் இந்த சிறுமி. அவள் பெயர் கஜோல். வயது 8, உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவள். தன் பாம்பு தேசம் பற்றி அவள் கூறும்போது, எனக்கு பள்ளிக்கூடம் போகத்தான் பிடிக்காது. எப்போதும் பாம்புகளுடன் இருக்கப் பிடிக்கும். அவைகளுடன் நான் விளையாடும்போது சில பாம்புகள் என்னை செல்லமாக கடித்து வைப்பதுண்டு. சில நேரங்களில் பல் பதிந்து ரத்தம் வந்துவிடும். அப்போது மட்டும் நான் பயப்படுவதுண்டு. ஆனால் என் அப்பா மட்டும் பதறாமல் நேராக காட்டுக்கு சென்று பச்சிலை பறித்து வந்து வைத்தியம் பார்ப்பார். அப்போதே பயம் பறந்து மற்ற பாம்புகளுடன் விளையாடச் சென்று விடுவேன்என்கிறாள்.<br /><br />இவளுக் பாம்பு பிடிக்கும் பின்னணியில், பாம்பு பிடிக்கும் இவளது தந்தை இருக்கிறார். காட்டில் இருக்கும் பாம்புகளை அடிக்கடி வீட்டில் பார்த்துப் பார்த்து பாம்பு பயம் போயே போச் என்கிறாள் கஜோல். அதுசரி, கஜோல் பள்ளிக்கூடம் எதற்காக போகவில்லையாம்? படிப்பு வரவில்லையா?<br />நல்லாத்தான் படிச்சேன். சில நாட்கள் நண்பர்களுடன் (பாம்புகள்) பள்ளிக்கூடத்துக்குப் போய்விடுவேன். அவர்கள் அலறியபடி காட்டிக் கொடுத்ததில் படிப்பா....பாம்பாநீயே முடிவு செய்து காள் என்று பள்ளியில் கண்டிப்பாக கூறி விட்டார்கள் எனகிறாள். அதற்குப்பிறகு தான் பள்ளிப்படிப்பு பாம்புப் படிப்பாகிவிட்டிருக்கிறது.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-48190781958753188332012-11-18T06:18:14.488+05:302012-11-18T06:18:14.488+05:30அடிமையிலும், இழிவிலும் நெடுங்காலம் ஆழ்ந்து கிடந்தத...அடிமையிலும், இழிவிலும் நெடுங்காலம் ஆழ்ந்து கிடந்ததால் தன்மானமே இன்றி மரக்கட்டை களாகக் கிடந்த பார்ப்பனரல்லா தாரை உலுக்கி, நீ மனிதன், பகுத்தறிவு பெற்ற மனிதன். ஆகவே பகுத்தறிவுக்கே முதல் இடம் கொடு. கடவுளை மற; மனிதனை நினை; பிறப்பால் உயர்வும் இல்லை; தாழ்வும் இல்லை. ஆணும் பெண்ணும் சமம்; மனைவி மலிவான வேலைக் காரியல்ல; வெறும் விளையாட்டுப் பொம்மையல்ல; நகை மாட்டியல்ல; வாழ்க்கைத் துணை உயிருள்ள, உரிமையுள்ள வாழ்க்கைத் துணை. எனவே, இருவரும் தோழமையோடு வாழுங்கள் அன்று அய்ம்பது ஆண்டுகள் வேலை, அய்ம்பதாயிரம் கூட்டங்களிலாவது அறிவு புகட்டிய பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் ஆவார் என்று குறிப்பிடுகிறார். பகுத்தறிவுவாதியும், கலப்பு மணம், பதிவுத் திருமணம் செய்து கொண்ட இக்கல்வியாளர்.<br /><br />பகலுணவுத் திட்டம் - புதிய பார்வை<br /><br />திராவிட இயக்கம், தியாகராயர் காலத்தில் உருவான பள்ளிச் சிறார் களுக்கான மதிய உணவுத் திட்டம் பகல் உணவுத் திட்டமாக உருவெடுத்துக் காமராசருக்கும், நெ.து.சு.விற்கும் பெயர் பெற்றுத் தந்தது.<br /><br />மதிய உணவுத் திட்டம் பசி மட்டும் போக்கும் திட்டமட்டும் அல்ல. இதைப் பகுத்தறிவாளர் நெ.து.சு. பார்த்த கண் ணோட்டம் பகுத்தறிவுக் கண்ணோட் டம் எனும் அமைதிப் புரட்சித் திட்டம்.<br /><br />பல சாதியினரும் பள்ளியில் ஒன்றாக அமர்ந்து உண்டது சாதி முறையை முறித்தது. எல்லோரும் ஒரு குலம் எல்லோரும் ஓர் இனம் என்னும் மனப்போக்கை வளர்க்க உதவியது. பள்ளிச் சீரமைப்பு இயக்கம் எனும் பெயரில் நடந்த மாநிலம் தழுவிய மக்கள் உதவி கல்வியின் பால் கவனத்தைத் திரும்பியது. பல மைல் கற்கள் கடந்து தான் பள்ளிக்கூடம் என்னும் பெயர்ப் பலகை காணும் நிலை மாறித் தெரு வெங்கும் பள்ளிகள் கட்டுவோம், கல்வி தெரியாத பேர்களே இல்லை என்று நிலையாக்குவோம் என்னும் நிலை உருவாவதில் நெ.து.சு.வின் பங்கு இருந்தது.<br /><br />தன்மான இயக்கத்தின் முதல்தலைமுறையினர்<br /><br />பெரியாரைப் பின்பற்றுவோர் கடவுள் மறுப்பாளராக இருப்பது போதாது; சாதிக் கலைப்பாளராகச் செயல்பட வேண்டும். வகுப்புரிமைக்கும் போராடுவதோடு நிறைவு கொள்ளக் கூடாது; சமதர்ம முறையைக் கொண்டு வருவதற்கு முனைப்பாயிருக்க வேண்டும். அதுவே, எல்லா ஆதிக்கங்களையும் ஆவணங்களையும் தூக்கி எறிய முடியும் என்று பெரியாரும் சமதர்மமும் எனும் நூலில் கூறுபவர் கூறும் இக்கருத்தும் போற்றத் தக்கது. புகழத்தக்கது.<br /><br />தன்மான இயக்கத்தின் முதல் தலைமுறையினன் என்னும் உரிமை யாலும், கட்சி தாவாத தன்மான இயக்கத்தவன் என்னும் தகுதியாலும் நாள் சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்றே ஒன்று அது என்ன? தொடக்க கால சுயமரியாதை இயக்கத்தின் சாதாரண தொண்டரின் கனவிலும் சாதிப் பற்று எந்நேரத்திலும் பளிச்சிட்டதில்லை. மனித இனத்தைச் சேர்ந்தவர்கள், பகுத்தறிவுப் பெருங் குடும்பத்தவர்கள் என்னும் உணர்வே எங்கள் மூச்சாகும்.17-11-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-71934180923428732012-11-18T06:18:09.622+05:302012-11-18T06:18:09.622+05:30பூணூல்கள் பாய்ச்சலுக்குப் பதிலடி
எனவே 26.9.1974, ...பூணூல்கள் பாய்ச்சலுக்குப் பதிலடி<br /><br />எனவே 26.9.1974, 27.9.74, 29.9.74 ஆகிய இரு நாள்கள் விடுதலை பீரங்கி யிலிருந்து நெ.து.சு.வின் பேச்சிற்கு ஆதர வாகத் தந்தை பெரியார் துணை வேந்தர்மீது பூணூல்கள் பாய்ச்சல் என இரண்டு தலையங்கம் தீட்டினார் எனில் நெ.து.சு.வின் பணியின் உயர்வைப் புரிந்து கொள்ளலாம் தலையங்கத்தின் மேலே பெரியார் பொன்மொழிகள் தங்கள் ஆதிக்கத்திற்கு ஆபத்து என்றவுடன் பார்ப்பனர்கள் எவ் வளவு கட்டுப்பாடாக எதிர்க் கிறார்கள் என்பதைப் பார்த்தாவது நமது தமிழர்களுக்கு மானம் வர வேண்டாமா? சோதிடம் என்பதே மிகப் பெரிய புரட்டு அதைக் கிரிமினல் குற்றமாக்க வேண்டும் என்பன இடம் பெற்றன.<br /><br />தந்தை பெரியாரின் பெரு மதிப்பைப் பெற்றவர் நெ.து.சு. நமது வைஸ்சான்சலர் என விடுதலையில் தலையங்கம் எழுதினார். பெரியார், ஈரோடு சிக்கையா கல்லூரியில் நெ.து. சுந்தரவடிவேலு பகுத்தறிவுப் போட்டிப் பரிசுகள் வழங்க அறக் கட்டளையை நிறுவினார். இச்சிறப்பினை நெ.து.சு. ஒருவருக்கே பெரியார் செய்துள்ளார்.<br /><br />பெரியாருக்கே உரியது<br /><br />இதனால் பெரு மகிழ்வுற்ற அவர் நெ.து. சுந்தரவடிவேலு, பகுத்தறிவுவாதி யாகவும் உண்மையான சமதர்மவாதி யாகவும், வாழ்வதன் பெருமை எனக்கா உரியது? இல்லை. தந்தை பெரியாருக்கும் அவருடைய தன்மான இயக்கத்திற்கும் உரியதாகும் என்றார்.<br /><br />அது மட்டுமல்லாது நெ.து.சு. பெரியாரைக் குறித்துக் குறிப்பிட்ட உரைகள் உண்மையின் உயரிய வாக்கு தத்துவத்திற்குக் கிடைத்த தனிப் பெரும் சிறப்பு. ஏனென்றால் 1929ல் செங்கல் பட்டில் நடைபெற்ற சுயமரியாதை முதல் மாநில மகா நாட்டில் பங்கேற் றவர் அங்கே அன்றே நாடார் பெரு மக்கள் சமைத்த உணவை அனைவரும் ஒன்றாக அமர்ந்து சம பந்தி போஜன மாக உண்டதை வியந்து பாராட்டி மகிழ்ந்தவர்.<br /><br />இவர்தாம் பெரியார்<br /><br />ஈராயிரம் ஆண்டுகளாகத் தூங்கிக் கிடந்த தமிழ் மக்களைத் தட்டியெழுப்பி யவர் தன்மான இயக்கத் தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமி ஆவார்.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-23059281116164358572012-11-18T06:17:59.259+05:302012-11-18T06:17:59.259+05:30பெரியார் அவர்கள் ஈரோட்டி லிருந்து நாமக்கல் அருகே, ...பெரியார் அவர்கள் ஈரோட்டி லிருந்து நாமக்கல் அருகே, பயணம் செய்து வருகையில் பள்ளி விடுகின்ற நேரம். உயர்நிலைப் பள்ளி ஒன்றைக் கடக்கிறார். அப்போது பள்ளியிலிருந்து பெண் சிறார்கள் பள்ளிச் சீருடையில் பட்டாம் பூச்சிகளைப் போல சுமார் நூறு பேருக்கு மேல் சைக்கிளில் வெளியே சிட்டெனப் பறந்து வரு கிறார்கள். பெரியார் தாம் பயணிக்கும் ஊர்தியை ஓரமாக நிறுத்தச் சொல் கிறார். ஊர்தியின் கதவு வழியே பத்து நிமிடம் அப்படியே அந்தப் பெண் குழந் தைகளை மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.<br /><br />எல்லோரும் சென்று விட்டனர். அய்யா தம் தோளைக் குலுக்கி, கையைத் தட்டிக் கொண்டே, மகிழ்ச்சி பொங்கத் தம்வாய் மணக்கும் சிரிப்புப் பொங்கல். இதுதான், இதுதான் வேணும். இதுதான் நான் விரும்பினது என்று சொல்லிக் கொண்டே சொல் லொணாத மகிழ்ச்சியில் திளைக்கிறார்.<br /><br />நம் சமூகம் கல்வியறிவு பெற வேண்டும் என்பதிலே எவ்வளவு ஆழ்ந்த பற்று, ஈடுபாடு பெரியாருக்கு. இப்போது கேட்டாலும் கவிஞர் சொன்ன அந்த நிகழ்வு பெரியாருக்கு ஒவ்வொரு பள்ளியிலும் சிலை வைத்துப் போற்றச் செய்யும்.<br /><br />இவர்கள்தாம்<br /><br />தமிழகத்தில் கல்விப் புரட்சி விளைச் சல் கண்டதற்குத் தந்தை பெரியார், தலைவர் காமராசர், கல்விநெறிக் காவலர் நெ.து.சு. காரணமாக விளங்கிய மூவர்.<br />இயக்கக் குடும்பத்தவர்களுக்கு மட்டுமல்ல, நம்மவர்க்கு அந்நாளில் எம்.ஏ. படிப்பில் சேருவது என்பது இன்றைய நாளில் மருத்துவத்தில் எம்.டி., எம்.எஸ். பட்டத்தில் சேருவது போல குதிரைக் கொம்பு, போல நன்றியோடு பலரும் துணைவேந்தர் ஒதுக்கீடு என்னும் ஒதுக்கீட்டின் கீழ் சுந்தர வடிவேலு அவர்கள் இடம் வழங்கிப் பயன் பெற்றிருக்கிறார்கள், அய்யா அவர்கள் பரிந்துரையின் பேரில் நெ.து.சு. அவர்கள் இடம் வழங்கிடப் படித்து கல்வித் துறையிலேயே முதன்மைக் கல்வி அலுவலர் (சி.ஈ.ஓ.) பதவி பெற்றவர் இராணி அவர்கள். அது போல் மிகவும் பிற்படுத்தப் பெற்ற குடும்பத்தைச் சேர்ந்த என் தங்கை சுசீலா அவர்கள் அய்யா பரிந்துரையின் பேரில் இடம் பெற்றார் என்று கவிஞர் நன்றியோடு குறிப்பிடுவது போல், கல்விப் பணியைக் சமுதாயப் பணியாக ஆற்றியவர் நெ.து.சு.<br /><br />பூணூல் திருமேனிகள்<br /><br />நெ.து.சு.வின் கல்விப்பணி, பகுத்த றிவுப் பணி கண்டு பாய்ந்தனர் பூணூல் திருமேனிகள், இதுகளெல்லாம் படிப்பதா? என்னும் இழிகுணம் கொண்ட சிலர் அதற்கான வாய்ப்புக்குக் காத்திருந்தனர்.<br /><br />17.9.1974 அன்று சென்னையில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 96ஆவது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய அந்நாளில் சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தரா யிருந்த நெ.து.சு. அவர்கள் மூடநம்பிக் கைகளை ஒழிக்கத் தீவிரமான செயல்கள் செய்யப்பட வேண்டும் என்று வற்புறுத்தியதோடு, சோதிடம் முதலிய மோசடிகளை அரசு சட்டம் வாயிலாகத் தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்.<br /><br />மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு<br /><br />பொறுக்குமா பூணூல் திருமேனி யர்க்கு, அது குறித்து அந்நாளைய மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு இந்துப் பத்திரிகையில் ஆசிரியர் கடிதப் பகுதி யில் துணைவேந்தர் எனும் தலைப்பில் கடிதம் ஒன்றை வெளியிட்டு, ஒரு சர்ச்சைக்குக் கால் கோளிட்டது.<br /><br />மூடநம்பிக்கையை ஒழிப்பதற்காகச் சோதிடம் தடை செய்யப்பட வேண்டும் என்று பேசுவது அரைப்பைத்தியம் போன்றது என ஒரு பைத்தியம் எழுதி யதை வெளியிட்டது. துணைவேந்தர் பேச்சில் அறிவார்ந்த வாதம் இல்லை. அரசியல்தான் அதற்கு அடிப்படை என வேதம் ஓதும் சாத்தான் ஓதியதுடன் எவ்வளவ ஆத்திரத்தைக் கொட்ட முடியுமோ, அவ்வளவையும் அவாளின் பேனா கொட்டித் தீர்ந்தது. நெ.து.சு. போன்ற கல்வி வள்ளல்கள் தங்களைச் சீரிய பகுத்தறிவுவாதிகள் என அறிவித் துக் கொள்பவர்களாக இருப்பது கண்டு ஆரியம் குமுறும் எரிமலையாய்க் கொந்தளிக்கும் மாக்கடலாய், எரிச்சலின் ஏகபோக வடிவமாய் மாறியது.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com