tag:blogger.com,1999:blog-1474608369333206681.post2614817904849835449..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: மதம் ஏன் ஒழிய வேண்டும்? - பெரியார்தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-16825531881843810192012-08-17T18:53:15.938+05:302012-08-17T18:53:15.938+05:30அப்பா, ஒரு சந்தேகம்!
மகன்: ராஜ கோபுரத்தின் முன்...அப்பா, ஒரு சந்தேகம்!<br /><br /><br /><br />மகன்: ராஜ கோபுரத்தின் முன்னேயே தீ அணைப்பு மோட்டார் நிறுத்தி வைத்திருக்கிறார்களே எதற்கு?<br /><br />தகப்பனார்: தீ விபத்து ஏற்பட்டால் அணைப்பதற்கு<br /><br />மகன்: சாமி நெருப்பு பிடிக்காமல் பார்த்துக் கொள்ளாதா?<br /><br />தகப்பனார்: (மகனை முறைத்துப் பார்க்கிறார்)<br /><br />மகன்: (பயந்து கொண்டு) அப்பா.<br /><br />தகப்பனார்: என்னடா?<br /><br />மகன்: என் மேலே கோவிக்காமல் சொல்லுப்பா.<br /><br />தகப்பனார்: சரி என்னத்தை கேட்கப்போற?<br /><br />மகன்: சாமி தூக்கி வரும்போது பக்கத்திலே ஏராளமான போலீஸ்காரர்கள் சூழ்ந்து கொண்டு வருகிறார்களே எதுக்கப்பா?<br /><br />தகப்பனார்: அட, இது தெரியலியே உனக்கு! சாமிக்கு போட்டு வைத்திருக்கிற தங்கம், வைரம் இவைகளை கொண்டு செய்த விலை மதிப்பு போட முடியாத நகைகளை திருடர்கள் கொள்ளை அடித்துக் கொண்டு போகாமல் பார்த்துக் கொள்ளப் போகிறார்கள்.<br /><br />மகன்: சாமியே பார்த்துக் கொள்ளாதா அப்பா?<br /><br />தகப்பனார்: சரி, சரி நீ வீட்டுக்கு வாடா உன் தோலை உரித்து விட்டு மறு வேலை பார்க்கிறேன்.<br /><br />- வி.வாசுதேவன், திருவொற்றியூர், சென்னை.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-75820395327824923762012-08-17T18:51:32.592+05:302012-08-17T18:51:32.592+05:30ஈரேழு லோகமாம்!
கண்ணன் வாயைக் காட்டியதும் அவன் வ...ஈரேழு லோகமாம்!<br /><br /><br /><br />கண்ணன் வாயைக் காட்டியதும் அவன் வாயில் ஈரேழு பதினான்கு உலகமும் இருப்பதை நேரில் அவன் தாய் கண்டாள் என்று சொற்பொழிவாளர் கூறியதும் கூட்டத்திலிருந்து கேள்வி கேட்கிறார்.<br /><br />ஒரு கேள்வி: ஏனையா, வாய்க்குள் ஈரேழு லோகங்களும் புகைபோல் தெரிந்தனவா? திருத்தமாகவா? உபந்நியாசகர்: முட்டாளே! அசல் உலகங்கள்! உலகத்தில் உள்ள ஒன்று விடாமல் தெரிந்தன என்று தாய் ஆச்சரியப்பட்டாள்.<br /><br />மற்றொரு வேண்டுகோள்: அய்யா! உபந்நியாசகரே! இந்தக் கடிதத்தை அந்த அம்மாவிடம் கொடுத்து, தயவு செய்து (வாய்க்குள் தெரிவதால்) சுலபமாய்ச் சென்னை - பாரிஸ் வெங்கடாசல அய்யர்வீதி நெ.17 வீட்டின் குறட்டில் போட்டு விடச் சொன்னால் போதும் அவசரமான லெட்டர். ஸ்டாம்பு வாங்கக் காசில்லை.<br /><br />-புரட்சிக் கவிஞர் (பாரதி தாசன் கதை: பக்கம்:100)<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-84454668927401413222012-08-17T18:42:18.554+05:302012-08-17T18:42:18.554+05:30பாலிமர் தொலைக்காட்சியில் அனல் பறக்கும் விவாதத்தில்...பாலிமர் தொலைக்காட்சியில் அனல் பறக்கும் விவாதத்தில் தமிழர் தலைவர்<br /><br />19.8.2012 ஞாயிறு இரவு 9 மணிக்கு பாலிமர் தொலைக்காட்சியில் மக்களுக்கான நிகழ்ச்சியில் A.L. கண்ணனின் அனல் பறக்கும் விவாத அரங்கில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் சூடும் - சுவையும் நிறைந்த பதில்கள் ஒளிபரப்பப்படும்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-17060209672385575402012-08-16T19:16:30.088+05:302012-08-16T19:16:30.088+05:30எதிரியைப் பார்!
சென்னையில் டெசோ சார்பில் நடத்தப்ப...எதிரியைப் பார்!<br /><br />சென்னையில் டெசோ சார்பில் நடத்தப்பட்ட ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடுபற்றி இன எதிரிகள் இல்லாததும் பொல்லாததுமான விஷமச் செய்திகளைப் பரப்பும் வேலையில் மும்முரமாக இறங்கினர்.<br /><br />மாநாட்டின் நோக்கம் குறித்து டெசோ தலைவர் கலைஞர் அவர்களால் தெரிவிக்கப்பட்ட கருத் துருவில், தனியீழம் தொடர்பான தீர்மானம் மாநாட் டில் நிறைவேற்றப்படாது என்று சொன்னதுதான் தாமதம் - டெசோ என்று பெயர் வைத்துக் கொண்டு தனியீழம் கேட்கும் தீர்மானம் மாநாட்டில் இடம் பெறாது என்றால் என்ன பொருள் என்று வீராதி வீரர்கள் போலே தோளைக் குலுக்கினார்கள்.<br /><br />இதில் வேடிக்கை என்னவென்றால், டெசோவை இரண்டாவது முறை புதுப்பித்த போது தனியீழம் கேட்கும் அதன் குறிக்கோளை வரவேற்றார்களா என்றால், அதுதான் இல்லை.<br /><br />அப்பொழுதும் ஏறுமாறான விமர்சனங்களில்தான் ஈடுபட்டனர். தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களை மய்யப்படுத்தி அவர் எது செய்தாலும் அதனைக் கொச்சைப்படுத்துவது என்ற திசையில் எழுதி வந்தனர்.<br /><br />மாநாடு நடக்காது; தடை செய்யப்பட்டு விடும் என்றனர். அதற்கான முயற்சிகளில் பலரும் ஈடுபட்டனர் என்பதும் உண்மைதான். டெசோ அமைப்பில் பதற்றப்படாத, பக்குவமான முயற்சி களினால், எதிர்ப்பாளர்களின் முகங்களில் கரி தடவப்பட்டு, டெசோ மாநாடு வெகு சிறப்பாகவே அறிவிக்கப்பட்ட இடத்திலேயே அட்டியின்றி நடைபெற்றது.<br /><br />சில பல காரணங்களால் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்த தலைவர்கள் வரவில்லை என்றாலும் உலகம் தழுவிய அளவில் பேராளர்கள் பங்கு கொண்டனர்.<br /><br />சிங்களவரான - இடதுசாரி எண்ணம் கொண்ட டாக்டர் விக்ரம பாகுகர்ண ரத்தினே அவர்களே கலந்து கொண்டு ராஜபக்சேயின் பாசிச நடவடிக்கைகளின் முகத்திரையைக் கிழித்துக் காட்டினார். மிக அருமையான தீர்மானம் 14 - ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தின்மீது குறை சொல்ல முடியாத நிலையில் தினமலர் போன்ற பார்ப்பன ஊடகங்கள் சம்பிரதாயமான முறையில் மாநாடு நடைபெற்றது என்று தனக்குத்தானே ஆறுதல் கூறிக் கொண்டுள்ளன.<br /><br />இந்த மாநாடு வெற்றியா, தோல்வியா என்னும் அளவுகோல் எங்கே இருக்கிறது தெரியுமா? நமது எதிரிகளிடத்தில் தான் இருக்கிறது.<br /><br />ஈழத்திலிருந்து மாநாட்டுக்குச் செல்வோர் யாராக இருந்தாலும் அவர்கள் இலங்கை அரசால் கண்காணிக்கப்படுவார்கள் என்று அச்சுறுத்தும் வகையில் இலங்கை அரசு கருத்துத் தெரிவித் திருந்தது. (அதனைக் கண்டித்துக்கூட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்).<br /><br />இலங்கை அதிபர் ராஜபக்சே டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள் பற்றி தெரிவித்துள்ள கருத்தும் டெசோவின் வெற்றிக்குக் கட்டியம் கூறுவதாகும்.<br /><br />இதன் மூலம் டெசோ நடத்தும் மாநாடு இலங்கை அரசுக்கு எதிரானது என்பது வெளிப்படையாகி விட்டதா - இல்லையா?<br /><br />மாநாடு முடிந்த நிலையில்கூட இலங்கையில் உள்ள சிங்களவர் அமைப்பான தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் என்ன கருத்துக் கூறியுள்ளது?<br /><br />டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளையாட்டுத்தனமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்திய மத்திய அரசின் கூட்டணிக் கட்சியாக தி.மு.க. இருப்பதால், மகிந்த ராஜபக்சே அரசு இந்த விவகாரத்தை சிறியதாகக் கருதக் கூடாது.<br /><br />டெசோ மாநாட்டுத் தீர்மானங்கள்மீது கூடுதல் கவனம் செலுத்தி நாட்டுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் அரசு செயல்பாடுகளை வலுப்படுத்த வேண்டும். தமிழர்கள் தங்களுக்குத் தேவையான வகையில் அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்ளும் வகையில் அய்.நா.வில் இந்தியா தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் எனக் கூறப்படுவது கிட்டத்தட்ட தனியீழத்தை உருவாக்கும் முயற்சியாகவே அதனைப் பார்க்க வேண்டும் என்று அந்த அமைப்புக் கூறியுள்ளதே!<br /><br />எதிரிகள் நம்மைச் சரியாகப் புரிந்து கொண் டுள்ளனர். ஆனால் இங்குள்ளவர்களோ டெசோ மாநாடு தோல்வி என்கின்றனர். இவர்களை எது கொண்டு சாற்றுவதோ! 16-8-2012<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-44396234337298271402012-08-16T19:14:01.767+05:302012-08-16T19:14:01.767+05:30செய்தியும் சிந்தனையும்
சமபந்தி!
செய்தி: ஆகஸ்டு 1...செய்தியும் சிந்தனையும்<br /><br />சமபந்தி!<br /><br />செய்தி: ஆகஸ்டு 15 சுதந்திர நாளையொட்டி கோயில்களில் சம்பந்தி விருந்து.<br /><br />சிந்தனை: நாள் தோறும் உணவு விடுதி களிலும் அதுதான் நடந்து கொண்டு வருகிறது. கோயிலுக்குள் இன்னும் சில இடங்களில் தாழ்த்தப் பட்டோர் நுழைய முடிய வில்லை; கோயில் கரு வறைக்குள் ஒரு ஜாதி மட்டும் தான் நுழைய முடியும். அங்கெல்லாம் சம்பந்தி நடப்பது எப்பொழுது?<br /><br />16-8-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-76686990604658287272012-08-16T19:13:51.820+05:302012-08-16T19:13:51.820+05:30கடவுளுக்குக் கேட்குது குவார்ட்டர்கள்!
சின்னமனூர...கடவுளுக்குக் கேட்குது குவார்ட்டர்கள்!<br /><br /><br /><br />சின்னமனூர், ஆக.16- குச்சனூர் கருப்பண்ணசாமிக்கு 4 ஆயிரம் மது பாட்டில்களை பக்தர்கள் படைய லிட்டு நேர்த்தி கடன் செலுத்தினார் களாம். மேலும் 13 ஆடுகள், 10 சேவல் களை பலியிட்டு விடிய, விடிய பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்ட தாம்.<br /><br />தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே குச்சனூரில் சனீஸ்வரபகவான் கோயிலில் தனி சன்னதியாக சோனைக் கருப்பண்ணசாமி கோயில் இருக்கிறது.<br /><br />ஆடி நான்காவது வாரம் சனிக் கிழமை முடிந்து இரண்டாவது நாளில் சோணை கருப்பண்ண சுவாமிக்கு பொங்கல் வைத்து திரு விழா நடத்தப்பட்டது. கருப் பண்ண சாமிக்கு நேர்த்திகடனாக ஆயிரக் கணக்கான பக்தர்கள் மது பாட் டில்களை காணிக்கையாக செலுத் தினார்களாம்.<br /><br />பக்தர்கள் வழங்கிய குவார்ட்டர், ஆப், புல் என சுமார் 4 ஆயிரம் பாட்டில்கள் சுவாமிக்கு படையலிடப் பட்டனவாம். பூசாரி ஜெயபாலமுத்து வாயில் துணியை கட்டிக்கொண்டு பூஜைகள் செய்தாராம். பின்னர் கதவினை பூட்டிக்கொண்டு சுவா மிக்கு பின்புறம் உள்ள துவாரத்தின் வழியாக மதுவை ஊற்றினாராம். அந்த மதுவை சுவாமி துவாரம் வழியாக ஏற்றுக்கொள்வாராம்.<br /><br />அப்போது வெளியில் நின்றவாறே பக்தர்கள் பிரார்த்தனை செய்தார் களாம். இவ்விழாவையொட்டி 13 ஆடுகள், 10 சேவல்கள் வெட்டி பலி கொடுக்கப்பட்டனவாம். இதைய டுத்து 2 ஆயிரம் பேருக்கு கறிச் சோறு வழங்கப்பட்டதாம். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு துவங்கிய விழா, இரவு ஒரு மணிக்கு முடிந் ததாம். விழா ஏற் பாடுகளை கோயில் செயல் அலுவலர் ராஜேந்திரகுமார் செய்திருந்தார்.<br /><br />நேர்த்தி கடனாக வழங்கிய மது பாட்டில்கள் கருவறையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.16-8-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-6324453458460476902012-08-15T17:59:22.345+05:302012-08-15T17:59:22.345+05:30யார் இந்த சிருங்கேரி சங்கராச்சாரியார்கள்?
இந்தியா...யார் இந்த சிருங்கேரி சங்கராச்சாரியார்கள்?<br /><br />இந்தியாவின் தென்கோடியில் கருநாடக மாநிலத்தின் சிக்மகளூர் மாவட்டத்தில் சிருங்கேரி சங்கராச்சாரியார் மடம் ஒன்றுள்ளது. ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட மடங்களுள் இதுவும் ஒன்று. (காஞ்சி மடம் இந்தப் பட்டியலில் வராது.)<br /><br />இந்தச் சிருங்கேரி மடத்தின் சங்கராச்சாரியார் ஸ்ரீபாரதி தீர்த்த மஹா ஸ்வாமிகளாம். சென்னையில் டேரா போட்டுள்ளார். (மயிலாப்பூர் சுதர்மா இல்லத்தில் சாதுர்மாஸ்ய விரதத்தை அனுசரித்துக் கொண்டு வழக்கம் போல இருக்காளாம்.)<br /><br />19.8.2012 கல்கி அட்டைப்படம் போட்டு ஆராதித்து சாங்கோபாங்கமாகப் பேட்டி ஒன்றையும் வெளியிட்டுள்ளது.<br /><br />தமது குருநாதரான ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்தர் பற்றி சும்மா விளாசித் தள்ளி இருக்கிறார். அந்தக்குருநாதர் எப்படிப்பவட்டவர் தெரியுமா? ‘The Hindu Ideal’ எனும் நூலை சிருங்கேரி மடம் வெளியிட்டுள்ளது. அதன் 23 ஆம் பக்கம் இவ்வாறு கூறுகிறது:<br /><br />‘The Panchama asked to be at a distance because of the inborn impurity of his body. Any amount of washing of the body with the best available soaps and any clothing and decoration of it in the best uptodate style cannot remove from it its inlaid flith that has originated from the deep rooted contamination of filthy inheredity. ’<br /><br />என்று அந்நூலில் கூறப்பட்டுள்ளது.<br /><br />உலகத்தில் உள்ள எந்த உயர்ந்த சோப்பைப் போட்டுக் குளிப்பாட்டினாலும், நவீன ஆடை அணிமணிகளால் அலங்கரித்தாலும் கூட பஞ்சமர்கள் என்று சொல்லப்படும் தாழ்த்தப்பட்டவர்கள் மீது படிந்த அந்தத் தீட்டு - அழுக்கு பரம்பரைப் பரம்பரையாக ஆழமாக வேர் பிடித்து அவர்களின் பிறப்பிலேயே தொடர்ந்து வந்துள்ளதால் இதனை நீக்கவே முடியாது என்று சொன்னவர்தான் - இல்லை, இல்லை - திருவாய் மலர்ந்தருளியவர்தான் இவரின் குருநாதர்.<br /><br />இந்த மனிதகுல விரோதிகள் இவர்கள்! சகமனிதனைப் பிறப்பின் அடிப்படையில் வெறுக்கக் கூடிய மனிதநேயமற்ற வகையில் மனித உருவில் நடமாடும் பேர்வழிகள்தான் ஆச்சாரியார்களாம் - ஜகத்குருக்களாம்- ஸ்ரீலஸ்ரீகளாம்.<br /><br />நியாயமாக தீண்டாமையைப் பச்சையாகப் பேசும் இந்த வர்ணாசிரம விரியன்கள், பிணையில் வெளியில் வர முடியாத குற்றத்தின் கீழ் வெஞ்சிறையில் தள்ளப்பட வேண்டியவர்கள். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால் துணிச்சலாக அதனைச் செய்யத்தானே வேண்டும்? நம் அரசுகளுக்கு ஏது அந்த முதுகெலும்பு?<br /><br />குறிப்பு: காஞ்சி சங்கர மடத்துக்கும், சிருங்கேரி சங்கர மடத்துக்கும் ஆகாது - அந்த அளவுக்கு ஜென்மப் பகை என்பது வேறு விஷயம்! 15-8-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com