tag:blogger.com,1999:blog-1474608369333206681.post2567913761236184521..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: தினமலர் முதல் மார்க்கண்டேயா கட்ஜூ வரை தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-3131582857931237982014-11-04T19:19:13.049+05:302014-11-04T19:19:13.049+05:30நமது பணி...
மதச் சம்பந்தமான, கடவுள், புராண, இலக்க...நமது பணி...<br /><br />மதச் சம்பந்தமான, கடவுள், புராண, இலக்கியச் சம்பந்தமான விஷயங்களில் மக்களுக்கு உள்ள மூட நம்பிக்கைகளைப் போக்கித் தெளிவு ஏற்படுத்தி அவர்களை ஒழுக்கம் உள்ளவர்களாக, மான உணர்வுள்ளவர்களாக ஆக்குவதே நமது முக்கிய வேலை.<br />(விடுதலை, 2.4.1973)<br /><br />Read more: http://viduthalai.in/page-2/90502.html#ixzz3I6jCq4au<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-11782217286830873502014-11-04T19:18:41.429+05:302014-11-04T19:18:41.429+05:30நெடும் தூக்கத்தில் இருக்கும் நிவாரணப் பணிகள்
தமி...நெடும் தூக்கத்தில் இருக்கும் நிவாரணப் பணிகள்<br /><br /><br />தமிழ்நாட்டில் இவ்வாண்டு அதிக மழை பெய்திருக்கிறது. கடந்த பல ஆண்டுக் காலமாக தண்ணீர்ப் பற்றாக்குறையால் விவசாயம் பாதிக்கப்பட்ட நிலை. இவ்வாண்டு மேட்டூர் அணை தாமதமாகத் திறக்கப்பட்டாலும், தண்ணீர் கடைமடை போய்ச் சேரவில்லை என்று டெல்டா பகுதி விவசாயிகள் வேதனைக் குரலை வெளிப்படுத்தினர்.<br /><br />ஆறு, வாய்க்கால்கள் தூர் வாரப்படாதது தான் இதற்கு முக்கிய காரணம் என்று குறிப்பாக பொதுப் பணித்துறை மீது விவசாயிகள் ஒரு மனதாகக் குற்றஞ்சாட்டினார்கள்.<br /><br />விவசாயம் தமிழ்நாட்டில் மிக முக்கியமான துறையாக இருக்கும் பொழுது, அதற்கான முன் கூட்டியே செய்யப்பட வேண்டிய ஆயத்தப்பணி களைச் செய்வதைவிட அரசுக்கு வேறு என்ன வேலைதான் இருக்க முடியும்? அதுவும் அதற்கென்றே ஒருதுறை இருக்கும் பொழுது திட்டமிட்ட வகையில் செயல்பாடு இல்லை என்பது எந்த வகையிலும் மன்னிக் கப்படவே முடியாத குற்றமாகும். அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த 2011ஆம் ஆண்டிலிருந்தே இந்தக் குறைபாடு சுட்டிக் காட்டப்பட்ட போதிலும் ஏன் உறக்கமோ தெரியவில்லை.<br /><br />காலந் தாழ்ந்து விவசாயப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு அறுவடை செய்யப்படும் கால கட்டத்திலோ கன மழை பொழிந்து பயிர்கள் நீரில் மிதந்து அழுகும் நிலைக்கு ஆளாகி விட்டன. போதிய வடிகால் வசதி இல்லாததே இதற்குக் காரணம் என்கிறார்கள் விவசாயப் பெருங்குடிமக்கள். இந்த விவசாயத் தொழில் என்ன பாவம் செய்ததோ என்று விவசாயிகள் தங்களுக்குத் தெரிந்த மொழியில் புலம்பி வருகின்றனர்.<br /><br />கருநாடக மாநிலம் காவிரியில் தண்ணீர் திறந்து விடவில்லை. அதனால் விவசாய தொழில் தமிழ்நாட் டில் நசிந்து விட்டது என்று நியாயமான குற்றச்சாட்டை முன் வைக்கின்றோம். ஆனால், தமிழ்நாடு அரசோ, அந்த விவசாயம் நிமிர்ந்து நிற்பதற்கான வழிமுறை களை, திட்டங்களைச் செயல்படுத்துவதில்லையே இதற்கு எங்கே போய் முட்டிக் கொள்ளுவது?<br /><br />ஒன்று காஞ்சி கெடுக்கும் அல்லது பெய்து கெடுக் கும் இயற்கை என்ற பழமொழி தஞ்சை மாவட்டத்தில் அதிகமாகச் சொல்லப்படும் ஒன்றாகும்.<br /><br />விவசாயத்தையே தம் வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களுக்கு இயற்கையின் உற்பவத்தின்மீது இத்தகு நேரத்தில் கோபம் கொள்வதைப் புரிந்து கொள்ளத்தான் வேண்டும். நமது கவலையெல்லாம் பருவ காலச் சூழலுக்கு ஏற்ப அரசால் மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்பாடுகள் ஏன் சோம்பிப் போயின என்பதுதான்!<br /><br />இது ஒருபுறம் இருந்தால், கன மழை காரணமாக எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கிக் கிடக்கும் அவலம் - குறிப்பாக தலைநகரமாகிய சென்னையோ அவலத் தின் உச்சமாகும். இலட்சக்கணக்கான வாகனங்கள் பயணிக்கும் ஒரு தலைநகரம் தொடர்ந்து 24 மணி நேரம் மழை பெய்தால் அதனைத் தாக்குப் பிடிக்கும் வலுவில் இல்லை; பள்ளிகளுக்குத் தொடர்ந்து விடுமுறை அறிவிப்பு!<br /><br />எப்படியோ சமாளித்து பிள்ளைகள் பள்ளிகளுக்குச் சென்றாலும் பள்ளிகளைச் சுற்றியே குளம் மாதிரி தண்ணீர்த் தேக்கம்.<br /><br />வீடுகளுக்குள்ளேயே தண்ணீர் புகுந்து ஏழை எளிய மக்கள் அல்லாடும் அவலத்தைத் தொலைக் காட்சிகளில் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்.<br /><br />பாம்புகளும், விஷப்பூச்சிகளும் வீட்டுக்குள் விருந் தினர்களாக வரும் கொடுமை! வறுமைதான் எவ்வளவு பெரிய கொடிய நோய்!<br /><br />தண்ணீர் ஆங்காங்கே தேங்கிக் கிடப்பதால் கொசுக்கள் அதன் காரணமாக தொற்று நோய்கள், டெங்குக் காய்ச்சல் பரவி வருவதாக அபாய அறிவிப்பு. மாநகராட்சி நடத்தும் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பஞ்சம் என்ற நிலைமை.<br /><br />கிபீமீஹ் கிமீரீஹ்ஜீவீ வகைக் கொசுக்களால் டெங்கு பரவுகிறது வீட்டைச் சுற்றி நீர் தேக்கம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று மருத்துவர்கள் கூறி வருகிறார்கள். ஏடுகளிலும் அந்த அறிவிப்பு வந்து கொண்டுதானிருக்கிறது.<br /><br />வீட்டைச் சுற்றித் தண்ணீர் தேங்குவதற்கு அங்கு குடியிருக்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்களா பொறுப்பு? அவர்களால் என்னதான் செய்ய முடியும்? தேங்கிய தண்ணீரை இறைக்கும் வேலையையும் மாநகராட்சி தானே செய்ய வேண்டும்?<br /><br />சென்னையில் நடைபாதை ஆக்கிரமிப்புகளில் முதன்மையான இடம் கோயில்களுக்குதான் ஆக்கிர மிப்புகளால் வடிகால் அடைபட்டுப் போகும் நிலையில் தண்ணீர் வெளியேற வாய்ப்பு எங்கே இருக்கிறது? இதைப்பற்றி எல்லாம் அரசு அதிகாரிகள் சிந்திக்க வேண்டாமா?<br /><br />ஓர் ஆண்டு ஏற்படும் அவலங்களைக் கவனத்தில் கொண்டு, அடுத்த ஆண்டிலாவது அந்தக் குறை பாடுகள் ஏற்படாமல் தவிர்த்திட முன் கூட்டியே திட்டமிட்டு தேவையான பணிகளைச் செய்து முடிக்க வேண்டாமா?<br /><br />கடும் மழையால் மக்கள் பாதிப்புக்கு ஆளான நிலை யில் கடுமையான பணிகளைப் போர்க்கால அடிப் படையில் செயல்பட வேண்டிய தமிழ்நாடு அரசோ சொந்த கட்சிப் பிரச்சினை என்னும் சூழலில் சிக்கிச் செயலிழந்து கிடக்கிறது!<br /><br />எத்தனை நாட்கள் தான் துக்கத்தை அனுசரித்துக் கொண்டு இருக்க முடியும்? அதிலிருந்து விடுபட்டு, அரசு தன் கடமையைச் செய்ய முன் வர வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் மிக முக்கிய வேண்டுகோள்!<br /><br />Read more: http://viduthalai.in/page-2/90503.html#ixzz3I6j0CFb6<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-81745982395548738932014-11-04T19:17:30.234+05:302014-11-04T19:17:30.234+05:30கூட்டு முயற்சியாம்
இலங்கை - இந்தியா இராணுவங்களுக்...கூட்டு முயற்சியாம்<br /><br />இலங்கை - இந்தியா இராணுவங்களுக்கிடையே கூட்டு இராணுவ பயிற்சி இலங்கையில் யுவா - குடோயா ராணுவ முகாமில் தொடங்கியது. நவம்பர் 22 வரை நடைபெறுமாம்.<br /><br />இந்தியாவில் நடந்தால் எதிர்ப்பு வரும் என்று இலங்கையில் இந்தப் பயிற்சி நடந்தாலும் அர்த்தம் ஒன்றுதான். இலங்கைக்குச் செய்யப்படும் தூசி அளவு உதவியாக இருந்தாலும் அது ஈழத் தமிழர் ஒழிப்புக்கே பயன்படும் என்பது மட்டும் உறுதி. இந்தப் பயிற்சியையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.<br /><br />-----------<br /><br />விளையாட்டைப் பார்ப்பது குற்றமா?<br /><br />இரானில் வாழும் கலானி என்ற பெண்மணி, இரானில் உள்ள ஆஸாதி விளையாட்டரங்கில் நடைபெற்ற கைப்பந்துப் போட்டியைக் காணச் சென்றதற்காகக் கைது செய்யப்பட்டு, ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளார்.<br />கைப்பந்துப் போட்டியை ஒரு பெண் பார்ப்பது கூடக் குற்றமா? இதில்கூடவா மதம்?<br /><br />-----------<br /><br />தந்திரம்!<br /><br />குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல்களில் ஒரே ஒரு முஸ்லிமைக் கூட வேட்பாளராக நிறுத்தாத பி.ஜே.பி. காஷ்மீர் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் மட்டும் 11 முசுலிம் வேட்பாளர்களை நிறுத்துகிறதாம். வேறு வழியில்லை என்கிற பட்சத்தில்தான் இந்த முடிவு என்பதை மறந்து விடக் கூடாது.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/90499.html#ixzz3I6inRVKX<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-13077064570045904462014-11-04T19:16:57.873+05:302014-11-04T19:16:57.873+05:30மூடநம்பிக்கைகளை ஊடகங்கள் பரப்பக் கூடாது கருநாடக மு...மூடநம்பிக்கைகளை ஊடகங்கள் பரப்பக் கூடாது கருநாடக முதல்வர் வேண்டுகோள்<br /><br />பெங்களூரு, நவ.4- கருநாடக மாநில முதல் வர் சித்தராமையா ஊட கங்கள் மூடநம்பிக்கை களைப் பரப்பக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார்.<br /><br />மின்னணு ஊடகங்கள் பல்வேறு வகையிலான மூடநம்பிக்கைகளைப் பரப் புவதிலிருந்து விலகியே இருக்க வேண்டும்.<br /><br />டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்தின் சார்பில் விஜய கருநாடகா 15ஆம் ஆண்டு விழாவில் கரு நாடக முதல்வர் சித்தா ராமையா கலந்துகொண்டு பேசும்போது, ஊட கங்கள் பகுத்தறிவு மற்றும் அறிவியல் கருத்துக்களை பரப்புவதில் கவனம் கொள்ளவேண்டும் என்று பேசினார்.<br /><br />கெட்ட வாய்ப்பாக பல தொலைக்காட்சி அலைவரிசைகள் ஜோதி டம் மற்றும் வாஸ்து, அற்பமான குடும்பப் பூசல் கள் குறித்த நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக ஒளி பரப்பிக் கொண்டிருக்கின் றன. இடைக்காலத்தில் நவீன, அறிவியல் காலத்தை நோக்கிய பார்வை ஊட கங்களுக்கு இருக்க வேண் டும் என்றார்.<br /><br />அவர் கூறும்போது, குறைந்தது ஒரு மணி நேரம் முக்கிய செய்தித் தாள்களை வாசிப்பதிலி ருந்தே அந்த நாளுக்குரிய பணிகளைதான் தொடங் குவதாகக் கூறினார். உண்மையான பிரச்சி னைகளில் ஊடகங்கள் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். பொறுப்புணர்ச்சி மற்றும் முதிர்ச்சியுடன் வளரும் உணர்வு மற்றும் தங் களையே உள்ளாய்வு செய்துகொள்ளவும் வேண்டும் என்றார்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/90495.html#ixzz3I6idz700<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-29336996519208277142014-11-04T19:15:42.919+05:302014-11-04T19:15:42.919+05:30யார் பொறுப்பு?
கிருட்டினகிரி மாவட்டம் போச்சம்ப...யார் பொறுப்பு?<br /><br /> <br /><br />கிருட்டினகிரி மாவட்டம் போச்சம்பள்ளியைச் சேர்ந்த கண்ணதாசன் (வயது 23) அர்மேனியாவில் மருத் துவக் கல்லூரியில் படித்து வந்தார். முதலாண்டுக்கான கல்விக் கட்டணம் நிலத்தை விற்று சரி செய்யப்பட்டது.<br /><br />இரண்டாம் ஆண்டுக் கட் டணத்தைக் கட்ட முடியாத நெருக்கடி. ஒன்றரை ஆண் டுக்குமுன் போச்சம்பள்ளி யில் உள்ள இந்தியன் வங்கியில் கல்விக் கடன் கேட்டாராம். வங்கி விண்ணப்பமே தரவில்லையாம். உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ரூ.20 லட்சம் கடன் தர நீதிமன்றம் உத்தர விட்டும் கடன் தராததால், மாணவன் கண்ணதாசன் அர்மேனி யாவிலேயே தற்கொலை செய்து கொண்டார்.<br /><br />இந்தப் பரிதாப நிலைக்கு யார் பொறுப்பு? பெரும் பண முதலைகள் வாங்கிய கட னைத் திருப்பிக் கொடுப்ப தில்லை; தள்ளுபடி செய்யும் வங்கி கல்விக் கடனைக் கொடுப்பதில் மட்டும் ஏன் அலட்சியம்?<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/90496.html#ixzz3I6iJ6u3p<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-31724822385033774012014-11-04T19:14:44.119+05:302014-11-04T19:14:44.119+05:30சட்டத்தால் மட்டுமே மூடநம்பிக்கைகளை முடிவுக்கு கொண்...சட்டத்தால் மட்டுமே மூடநம்பிக்கைகளை முடிவுக்கு கொண்டு வரமுடியாது<br /><br />அமைச்சர் உமாசிறீ<br /><br />துமக்குரு, நவ.4- கர் நாடக மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் உமாசிறீ சட்டத்தால் மட் டுமே மூடநம்பிக்கைகளை முடிவுக்கு கொண்டு வர முடியாது என்று கூறினார்.<br /><br />அவர் கூறும்போது, மகப்பேறுபெற்ற பெண் கள், மாதவிலக்கு உள்ள பெண்கள் வீட்டைவிட்டு வெளியே இருக்க வேண் டும் என்கிற மனிதத் தன் மையற்ற, மூடநம்பிக்கை செயல்கள் கடுகொல்லா வகுப்பினரிடையே இருப் பதை சட்டத்தால் மட் டுமே முடிவுக்குக் கொண்டு வரமுடியாது என்று கூறினார்.<br /><br />2.11.2014 அன்று செய் தியாளர்கள் சந்திப்பின் போது அமைச்சர் உமா சிறீ கூறும்போது, கல் வியும், விழிப்புணர்வும் மட்டுமே மக்களிடமுள்ள கண்மூடித்தனமான நம்பிக்கைகளிலிருந்து மாற்றங்களைக் கொண்டு வரும். மூட நம்பிக்கை களைத் திணித்து அதை வளர்ப்பவர்கள்மீது கடு மையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கடுகொல்லா வகுப் பினரின் கல்வி மற்றும் சமூக வளர்ச்சி தேவை யான அளவீடுகளை மாநில அரசு எடுக்கும் என அமைச்சர் உமாசிறீ உறுதி கூறினார்.<br /><br />மேலும் அவர் கூறும் போது, லம்பானி தாண் டாஸ், வத்தாரா தாண் டாஸ் மற்றும் கொல்லார ஹட்டிஸ் ஆகியவை வருவாய் கிராமங்களாக உயர்த்தப்படும் என்றார்.<br /><br />துமக்குரு மாவட்டத் தில் குனிகல் வட்டத்தில் டி.ஹோசஹள்ளி, கொல் லாரஹட்டி ஆகிய பகுதிகளில் மகப்பேற்றை பெற்ற தாய்மார்கள் வீட் டுக்கு வெளியே ஒரு குடி சையில் தங்கியிருந்ததை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/90497.html#ixzz3I6i0cy14<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-76924156085228951052014-11-04T19:13:41.672+05:302014-11-04T19:13:41.672+05:30இன்றைய ஆன்மிகம்?
சக்தியற்றவர்
சகல மனுஷரே! கேளுங்...இன்றைய ஆன்மிகம்?<br /><br />சக்தியற்றவர்<br /><br />சகல மனுஷரே! கேளுங்கள். நீங்கள் கர்த்த ரோடிருந்தால் அவர் உங் களோடு இருப்பார் நீங்கள் அவரைத் தேடினால், உங் களுக்கு வெளிப்படுவார். அவரை விட்டு விட்டீர் களேயானால், அவர் உங் களை விட்டு விடுவார்! என்கிறது பைபிள்.<br /><br />விரும்புபவர்களைக் காப்பாற்றுவதும் விரும் பாதவர்களைக் கை விடுவதும் உயர்ந்த பண்பாடா? கடவுளுக்கு இது அழகா? அப்படியானால் சராசரி மனுசனுக்கும் இந்தக் கர்த்தருக்கும் தான் என்ன வேறுபாடு? கர்த்தர் ஆசா பாசம் உள்ள சாதாரண மனிதர் போன்றவர் தானா? தன்னிடம் அடைக்கலம் ஆகுமாறு கர்த்தர் மக் களை மாற்றிட சக்தியற்றவர் தானா?<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/90498.html#ixzz3I6hpnhqh<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-36403751679908962602014-11-04T19:13:16.889+05:302014-11-04T19:13:16.889+05:30நாடார்கள்
பாரதீய கல்சூரி ஜெய்ஸ் வால் சம்வர்க்கிய ...நாடார்கள்<br /><br />பாரதீய கல்சூரி ஜெய்ஸ் வால் சம்வர்க்கிய மகாசபையின் மூன்றாவது மாநாடு இந்தியாவின் வடமேற்கில் ராஜஸ்தான் மாநிலம் பிஸ் வாரா என்ற நகரில் உள்ள நகராட்சி கலையரங்கில் 2014 ஆகஸ்டு 23,24 ஆகிய நாட்களில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் தமிழ் நாடு உட்பட அனைத்து மாநிலங்களில் இருந்தும் ஆயுட் கால உறுப்பினர் கள் 400 பேர் கலந்து கொண்டனர்.<br /><br />இந்த மாநாட்டினை தொடங்கி வைத்து நிறு வனத் தலைவர் பசர்லால்ஷா பேசியதாவது:<br /><br />தமிழ்நாட்டில் நாடார் என்றும், ஆந்திரத்தில் கவுடு, கர்நாடகத்தில் ஈடிகா, கேர ளத்தில் ஈழவா, மத்திய இந் தியாவில் கலால், கல்ச்சூரி, ஜெய்ஸ்வால், அலுவாலியா என்று பல பெயரில் இருந் தாலும் அனைவரும் ஒரு தாய் மக்களே!<br /><br />நாம் ஆண்ட பரம்பரை - பிராமணர் களால் நாம் வீழ்ந்தோம். நமது சமுதாய மன்னர்கள் சிறப்பான நல்லாட்சி கொடுத்து உள்ளனர். அதற் கான வரலாற்றுச் சான்று கள் உள்ளன. இன்று இந்தி யாவில் 30 முதல் 40 சதவீத மக்கள் நாம் இருக்கின் றோம். நமக்கு முறையாக 200 எம்.பி.கள் இருக்க வேண்டும். ஆனால் 20 எம்.பி.க்கள் மட்டுமே உள் ளனர். நாம் அடுத்தவர்கள் உயர பாடுபட்டுக் கொண் டிருக்கிறோம்.<br /><br />நாம் இழந்த அதிகாரங் களை மீட்டெடுக்க வேண் டிய தருணத்தில் இருக்கி றோம் என்று நிறுவனத் தலைவர் பசர்லால்ஷா பேசினார்.<br /><br />இதனை நாடார் மகா ஜன சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் மஹா ஜனம் (25.9.2014) இதழில் (பக்கம் 26) வெளியிடப் பட்டுள்ளது.<br /><br />நிறுவனத் தலைவரின் வரலாற்று ரீதியான கருத் தான ஆண்ட பரம்பரையி லான நாடார்கள் பார்ப் பனர்களால் வீழ்ந்தது என் பது கோடிட்டுக் காட்டத் தகுந்ததாகும்.<br /><br />முதலில் இந்த மஹா ஜனம் இதழ் இதனை உணர்ந்திருக்கிறதா என் பது கேள்விக் குறி! பார்ப் பனீய சிந்தனைதான் இவ் விதழில் பெரும்பாலும் குடி கொண்டிருக்கிறது என் பதை மறுக்க முடியாது).<br /><br />எந்த அளவுக்கு நாடார் மகாஜன மக்கள் பார்ப் பனர்களால் அவமதிக்கப் பட்டனர் என்பதற்கு எண் ணிறந்த சான்றுகள் உள்ளன.<br /><br />கல்லூரணியில் அக்கிர காரம் ஒன்று நீண்டகால மாக இருந்தது. பல பிரா மணக் குடும்பங்கள் வாழ்ந்தன. தமிழ்நாட்டு மரபுப்படி நன்செய்கள், தோட்டங்கள் இவர்களுக்கு உரியனவாக இருந்தன.<br /><br />இவர்கள் நாடார்களை இழி வாக நடத்திய வரலாறுகள் உண்டு. நாடார்கள் அக்ர காரத்தில் கீரை விற்கச் சென்றால் கீரையை அய்யரின் வீட்டு வாசலில் வைத்து விட்டுச் சற்றுத் தொலைவில் தள்ளி நிற்க வேண்டும். பிராமணக் குடும்பத்தார் வேண்டிய கீரையை அள்ளிக் கொண்டு, அவர்கள் வீட்டினுள் சென்றபின் நாடார் கீரைப் பெட்டியையும், அவர்கள் வைத்துள்ள காசையும் எடுத்து வர வேண்டும். பிராமணர் நாடார்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சியம் சொல்லிப் பகை பாராட்டினர்<br /><br />- (முனைவர் பு. இராசதுரை எழுதிய உறவின் முறை பக்கம் - 180).<br /><br />இந்த உண்மை வரலாறு நமது இளைய தலைமுறை மற்றும் பெரும் வணிகத்தில் ஈடுபட்டு வரும் நாடார் சகோதரர்களுக்குத் தெரியுமா? சங் பரிவார்க் கும்பலுக்கு ஊட்டம் தரும் போக்கிலிருந்து நமது சகோதரர்கள் விடுபடுவார்களாக!<br /><br />- மயிலாடன்<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/90492.html#ixzz3I6hhhNcY<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-60563641761782034562014-11-03T20:28:28.132+05:302014-11-03T20:28:28.132+05:30
என்றும் பெரியார்தான் தலைவர்
{இலட்சிய நடிகர் எஸ்...<br /><br />என்றும் பெரியார்தான் தலைவர்<br /><br />{இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆரின் மலரும் நினைவுகள்}<br /><br />வீர வணக்கம்!<br /><br />தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகரும், சீரிய பகுத்தறிவாளரும், திராவிட இயக்க அரசியலில் பங்காற்றியவருமான இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் தமது 84ஆம் வயதில் (24.10.2014) காலமானார்.<br /><br />திராவிட இயக்கத்தின் கொள்கைகளை நான் தெரிந்து கொள்வதற்கு முன்னாலேயே, நானே சுயமாக சிந்திக்கத் தொடங்கிவிட்டேன். எனது தந்தையாருக்கு இரண்டு மனைவியர். இருவரும் மிகவும் ஒற்றுமையாக இருப்பார்கள். சிறுவயதிலேயே நாடகம் பார்ப்பதில் ஆர்வம் உண்டு. அதனால் அப்போது நடக்கும் புராண நாடகங்களெல்லாம் பார்ப்பேன். அதில் கிருஷ்ணன் கதை நாடகமும் பார்த்துள்ளேன்.<br /><br />கிருஷ்ணனுக்கு இரு மனைவிகள். பாமா, ருக்மணி. கிருஷ்ணனுடன் ருக்மணி சேர்ந்து பாமா வீட்டுக்குப் போக வேண்டும் என்று சொன்னால் பாமா கதவைச் சாத்திவிடுவாள். அப்பொழுது கிருஷ்ணன் பாடுவார் சத்யபாமா கதவைத் திறவாய் என்று. இந்தக் காட்சிகளையெல்லாம் நாடகத்தில் பார்த்துள்ளேன். ஆனால் எங்கள் வீட்டில் உள்ள எனது தந்தையாரின் இரு மனைவியரும் ஒற்றுமையாக இருப்பார்கள். எங்க அம்மாவும், சின்னம்மாவும் வித்தியாசம் பார்க்காமல் எங்களிடம் பாசம் காட்டுவார்கள். கடவுளுடைய யோக்கியதை இப்படி மோசமாகவுள்ளதே. நம்ம வீட்டில் எவ்வளவோ நன்றாக உள்ளதே என்று சிந்தனை செய்யத் தொடங்கினேன்.<br /><br />இது டி.கே.எஸ். கம்பெனியில் இருந்தபோது பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொள்வதற்கு அடித்தளமாக இருந்தது. அங்கு வரும் பெரியாரின் பத்திரிகைகளையெல்லாம் படிப்பேன். விவாதங்கள் செய்வேன். நாடகக் கம்பெனி ஊர் ஊராகச் செல்லும்போது கும்பகோணம் சென்றோம். அங்கு கே.கே.நீலமேகத்துடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் வீட்டில் அய்யாவின் படம் இருக்கும். அய்யா நூல்களைப்பற்றி சொல்லுவார். அதுவரை அய்யா அவர்களை நான் பார்த்ததில்லை. அப்படியே ஒவ்வொரு ஊராகச் சென்றோம்.<br /><br />*****<br /><br />பெரியார் அவர்களைச் சந்தித்தேன். அடிக்கடி சந்தித்தேன். அவருடன் பேசினேன். சில சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்பேன். சில சமயங்களில், விவாதமே செய்வேன். அது அவருக்கு ரொம்பப் பிடிக்கும். சின்னப் பையன்தானே என என்னை நினைக்காமல், பொறுமையோடு, நிதானமாகப் பதில் சொல்வார். தந்தை பெரியாரும் சில சமயங்களில் எங்கள் நாடகங்களைக் காண வருவார். அங்குள்ள திராவிடர் கழக நண்பர்களுடன் எனக்குப் பழக்கமேற்பட்டது.<br /><br />அங்கு அய்யா அவர்கள் பண்பாட்டைக் கண்டு வியந்தேன். சிறு வயதினனான என்னை வாங்க... போங்க... என்று அழைத்தார். அப்போது நான் துருதுருவென துடிப்புடன் இருப்பேன். ஏராளமாகக் கேள்விகள் கேட்டேன். பொறுமையுடன் பொதுக்கூட்டத்தில் பேசுவது போல பதில் சொல்வார்.<br /><br />*****<br /><br />சம்பூர்ண இராமாயணம் திரைப்படம் எடுக்கும்போது என்னை பரதன் வேடத்தில் நடிக்க அழைத்தார்கள். நான் மறுத்துவிட்டேன். ஏன் நடிக்க மறுக்கிறீர்கள் என்று கேட்டார்கள். நான் சொன்னேன், எனக்கென்று ஒரு கொள்கை உண்டு. அது பெரியார் கொள்கை. நான் முதலில் கழகத்துக்காரன். இரண்டாவதுதான் தொழில் என்று சொன்னேன். இதனால்தான் என்னை அண்ணா அவர்கள் இலட்சிய நடிகர் என்று அழைத்தார்கள். அதுவே எனக்குப் பட்டமாயிற்று. யார் யாரோ இன்று வேஷம் போட்டுக்கொண்டு வருகிறார்கள். ஆனால் ராஜேந்திரன் ஒரு கொள்கையுள்ள நடிகர். எனக்குக்கூட ஆசைதான். ராஜேந்திரன் நடிக்க மறுக்கும் வேடங்களில் வேறு யாராவது நடித்து பணம் வாங்கிச் சென்று விடுவார்களே, இவரே நடிக்கலாமே என்று. அதனால் பல லட்சங்கள் அவருக்கு இழப்புதானே? ஆனால் அவரைப் பாராட்டுகிறேன் என்று அய்யா அவர்களே என்னைப் பாராட்டினார்கள்.<br /><br />*****<br /><br />மூட நம்பிக்கைகளை ஒழித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று அய்யா கருதினார். எங்கெல்லாம் தவறு இருக்கிறதோ அதை வெளிப்படையாகத் தட்டிக்கேட்டவர் தந்தை பெரியார். அவருக்கு முன்பு அப்படி ஒரு தலைவர் தோன்றியதில்லை. இறுதியில் தந்தை பெரியாரின் கொள்கைதான் நிற்கும்.<br /><br />தந்தை பெரியார் அவர்கள் தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கிப்பேச மாட்டார்கள். மதவாதிகளையோ, அரசியல் வாதிகளையோ, பிற்போக்குவாதிகளையோ அவர்களின் கொள்கைகளைத்தான் கண்டித்துப் பேசுவார்.<br /><br />*****<br /><br />என்றைக்கும் எனக்கு அய்யா ஒருவர்தான் தலைவர். அவர் கொள்கையைத்தான் நான் இன்றும் கடைப்பிடிக்கிறேன்.<br /><br />நேர்காணல்: மணிமகன்<br />தந்தை பெரியார் 125ஆம் பிறந்த நாள் மலர் (2003)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-27529794153776922662014-11-03T20:27:48.829+05:302014-11-03T20:27:48.829+05:30வீடியோ தானே எடுத்தாங்க ரேப்பா பண்ணிட்டாங்க...
காஞ...வீடியோ தானே எடுத்தாங்க ரேப்பா பண்ணிட்டாங்க...<br /><br />காஞ்சி சங்கர மடக் கல்லூரியின் பாலியல் திமிர்ப் பேச்சு<br /><br />காஞ்சி சங்கர மடத்துக்குச் சொந்தமான நிகர்நிலைப் பல்கலைக்கழகம் காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் மாணவிகளுடன் பேசக் கூடாது, இப்படித்தான் உடை அணிய வேண்டும், மாணவர்களை அடிப்பது, நாள்தோறும் முகச்சவரம் செய்ய வேண்டும்... என ஏகப்பட்ட கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ள இப்பல்கலைக்-கழகத்தின் உள்ளே நடைபெறுவதைக் கேட்டால் அதிர்ச்சியில் உறைய வைக்கிறது.<br /><br />மாணவிகள் தங்கிப் படிக்கும் இப்பல்-கலைக்கழக பெண்கள் விடுதி குளிக்கும் அறையில் கேமராக்கள் பொருத்தப்-பட்டுள்ளனவாம். மாணவிகள் புகார் கொடுத்தும் நிர்வாகத்தால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வெளியில் சொன்னால் அவமானம் என நினைத்த மாணவிகளும் கடந்த 2 ஆண்டுகளாக அமைதி காத்து வந்துள்ளார்கள்.<br /><br />கடந்த 10 நாள்களாக கேமரா விவகாரம் குறித்து விடுதிக் காப்பாளரிடம் (வார்டன்) புகார் கொடுத்தும் எந்தப் பதிலும் இல்லாததால் உடன் பயிலும் மாணவர்களிடம் கூறியுள்ளனர். வெகுண்டெழுந்த மாணவர்கள் இந்தச் செயலைச் செய்தது அங்கு மின்சார வேலை(எல்க்ட்ரீசியன்) பார்ப்பவர் என்பதைக் கண்டுபிடித்து விடுதியின் தலைமைக் காப்பாளரிடம் கூறியதுடன், கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைத்து தக்க நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.<br /><br />இதில் எந்தப் பலனும் ஏற்படாததால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட 400 மாணவர்கள் ஊர்வலமாகச் சென்றுள்ளனர். அங்கோ 2 மணி நேரமாக ஆட்சியர் ஆலோசனைக் கூட்டத்தில் (மீட்டிங்) இருப்பதாகவே பதில் வந்துள்ளது.<br /><br />விடுதிக் காப்பாளர், பல இடத்தில் நடக்குறதுதானே, ரொம்பப் பிரச்சினை செய்தா மெமரி கார்டில இருப்பதை இணையதளத்தில் அப்லோடு செஞ்சிடுவேன்<br /><br />என்றதும், கோபமடைந்த மாணவர்கள் கல்லூரியினுள் சென்று டீனிடம் முறையிட்டுள்ளனர். டீனோ, நாகரிகமாக நடந்துகொள்ளும்படிக் கூறியதுடன் பிரச்சினையைப் பெரிதாக்க வேண்டாம் என்று அறிவுரையும் கூறியுள்ளார்.<br /><br />இத்தகு பிரச்சினைகளை மாணவர்கள் எதிர்கொண்டிருந்த வேளையில், கல்லூரி நிர்வாகத்தினைச் சேர்ந்த ஒருவர், வீடியோதான எடுத்தாங்க, ரேப்பா பண்ணிட்டாங்க என்றதும் மாணவர்கள் பொங்கி எழுந்துள்ளனர்.<br /><br />மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக கல்லூரி நிர்வாகம் கூறியதும் மாணவர்கள் அமைதி காத்துள்ளனர்.<br /><br />மாணவர்கள் அனைவரும் காலை முதல் தண்ணீர்கூடக் குடிக்காமல் சோர்வுடன் இருந்ததன் விளைவு, இரவு 7.30 மணிக்கு கல்லூரியின் விளக்குகள் அணைக்கப்பட்டு, காவல்துறையின் உதவியால் மாணவர்களைச் சித்ரவதை செய்து களிப்படைந்துள்ளது நிர்வாகம்.<br /><br />சங்கரமடம் என்பது கொலைக்கூடாரம். பல்லாண்டுகளாக உழைக்கும் மக்களைக் கொன்றொழித்து அதன் மீது கட்டப்பட்டிருக்கும் பார்ப்பன அக்கிரகாரக் கோட்டை. அதன் ஒவ்வொரு செங்கல்லும் கொலைகளின் கதைகளையும் பாலியல் வன்புணர்ச்சியின் கதறல்களையும் சொல்லும். இந்தச் சத்தங்களை மறைக்க வேதங்கள் ஓதப்பட்டுக் கொண்டு இருக்கின்றனவோ?<br /><br />நன்றி: வினவுதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-22118407929665896942014-11-03T20:27:13.524+05:302014-11-03T20:27:13.524+05:30நம்பிக்கைகளின் அடிப்படையில்....
நம்பிக்கைகள் பிற...நம்பிக்கைகளின் அடிப்படையில்....<br /><br /><br />நம்பிக்கைகள் பிறக்கின்றன<br />நம்பிக்கைகள் சாகின்றன<br />நம்பிக்கைகளைப் பிடித்துத் தொங்குகின்றோம்<br /><br />ஒரு நம்பிக்கை ஒருவனைச் சாட்டையால் அடிக்கிறது<br />இன்னொருவனின் நம்பிக்கை<br />ஒருவனின் கழுத்தை அறுக்கிறது<br />ஒரு நம்பிக்கை<br />அசுரனைக் கொல்கிறது<br />இன்னொன்று அந்தணன் கொன்றால்<br />அவனைத் தண்டிக்காதே பிரமஹத்தி தோஷம் வருமென்கிறது<br /><br />நம்பிக்கைகளுக்காகச் சண்டையிடுகிறோம்<br />அவைகளுக்குப் பெயரிடுகிறோம்<br />ஒரு நம்பிக்கையின் பெயர் ஜாதி<br />இன்னொன்றின் பெயர் கட்சி<br />நம்பிக்கை மதமாகிறது<br />சில நம்பிக்கைகள் நம் கண்முன்னே சாகின்றன<br />சில தன்னை மாற்றிக்கொள்கின்றன<br /><br />கண்டால் தீட்டெனச் சொன்ன நம்பிக்கை<br />செத்து சுண்ணாம்பாகிவிட்டது<br />கணவன் சிதையில் மனைவிகளைத் தூக்கியெறிந்த நம்பிக்கையின்மேல் புல் முளைத்துவிட்டது<br />ஈயத்தைக் காதில் ஊற்றச் சொன்ன நம்பிக்கை<br />உலகத்தை விட்டு ஓடிவிட்டது<br />என்றோ ஒரு நாள் சாகப்போகும் நம்பிக்கைகளின் பெயரில் நேற்றும் ஒருவனை அல்லது ஒருத்தியைக் கொன்றோம் இன்றைக்கும் வளர்கின்றன நம்பிக்கைகள்<br />அவரவர் நம்பிக்கை அவரவர்களுக்கு!<br /><br />நேரம் கிடைத்தால் நம்பிக்கைகளைக் கொஞ்சம் கவனியுங்கள்<br />அதன்அடியில் ஒளிந்து கொண்டிருப்பவர்கள்<br />இன்னொரு நம்பிக்கையின் அடியில் இருப்பவர்கள்மீது கல்லெறிந்து கொண்டிருப்பதை<br />எளியமனிதர்களைச் சுரண்டிக் கொண்டிருப்பதை<br />உங்களைத் தேடுங்கள் நீங்கள் எந்தப்பக்கம் இருக்கிறீர்கள்...?<br /><br />- கோசின்ராதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-799440957338470932014-11-03T20:21:18.940+05:302014-11-03T20:21:18.940+05:30ஜீவகாருண்யம் படும்பாடு!
ஊருக்குள் வந்து உறக்கத்தை...ஜீவகாருண்யம் படும்பாடு!<br /><br />ஊருக்குள் வந்து உறக்கத்தைக் கெடுக்கும் புலியைப் பிடிக்க திறந்த கூண்டொன்று தயாரானது! கவிச்சி இறைச்சி வேண்டுமே, அதற்கு ஆட்டுக்குட்டி ஒன்று அங்கே கொண்டு வரப்பட்டது. காருண்ய சீலர்களின் கவனமும் கவலையும் அதன்பக்கம் திரும்பியது. உயிர்வதை இது, ஒருகணமும் அனுமதிக்க மாட்டோம் என்றனர்.<br /><br />மாற்றுத் தீனி ஒன்று வேண்டுமே, இரத்த வாடையும் இருக்க வேண்டுமே, நம் வீட்டுக் குப்பையைக் கிளறிவிடும் கோழி அகப்பட்டது. தோலுரித்துத் தொங்கவிட்டால் புலிக்கு மூக்கு வேர்க்காமலா போகும்?<br /><br />அது நடந்தது, அருகிலுள்ள காட்டில்!<br /><br />காட்டிற்குச் சளைத்ததா நம் நாடு?<br /><br />காத்துக்கு கருப்புக்கு கடாவெட்டி பொங்கித் தின்பதெல்லாம் உயிர்வதை என்று உளறக் கூடாது, பெற்ற மகளையே நரபலி கொடுக்கத் துணிந்தானே ஒரு தகப்பன் துறையூரில்... அதுவல்லவோ உயிர் வதை!<br /><br />சிரிப்பாய் சிரிக்கும் ஜீவகாருண்யம்!<br /><br />- சிவகாசி மணியம்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-26581406303078974672014-11-03T20:20:41.000+05:302014-11-03T20:20:41.000+05:30தாழ்த்தப்பட்ட சிறுவனைத் தலையில் அடித்த பூசாரி
பெங...தாழ்த்தப்பட்ட சிறுவனைத் தலையில் அடித்த பூசாரி<br /><br />பெங்களூரை அடுத்த நெலமங்களாவில் உள்ள ஜெயநகரில் வசிப்பவர் ராஜ்குமார். இவர் செருப்புத் தைக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ் அங்குள்ள அரசுப் பள்ளியில் மூன்றாம் வகுப்புப் படிக்கிறார். சந்தோஷ் அங்குள்ள ருத்ரேஸ்வரா கோவில் பூசாரியால் தாக்கப்பட்டுள்ளார். இது குறித்து, தனது நண்பர்களுடன் கோவிலுக்குள் தண்ணீர் குடிக்கச் சென்றபோது கோவிலில் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்த-தாகவும், அதனை வாங்கச் சென்றபோது, பூசாரி இவர்களைத் தடியால் அடித்த-தாகவும், நண்பர்கள் தப்பியோடிய நிலையில் தான் மட்டும் மாட்டிக் கொண்டதாகக் கூறியுள்ளார் சந்தோஷ். மேலும், வெயிலில் முழங்கால் போட வைத்து தலையில் அடித்தபோது இரத்தம் வந்தவுடன், இனி கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று கூறி திட்டி அனுப்பியதாகவும் கூறியுள்ளார்.<br /><br />சந்தோசின் அம்மா, காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்ற-போது, உன்னுடைய மகன் கோவிலில் திருட வந்தான். அதனைப் பூசாரி தடுக்க முற்பட்ட-போது, அவனே தூணில் இடித்துக்கொண்டு மண்டை உடைந்து-விட்டது. அதுபற்றி நாங்கள் புகார் கொடுத்தால் உங்கள் குடும்பத்தையே சிறையில் போட்டு-விடுவார்கள். நாங்கள் புகார் அளிக்காமல் இருக்க வேண்டும் என்றால் பேப்பரில் கையெழுத்துப் போட வேண்டும் என கோவில் நிர்வாகிகள் சிலர் மிரட்டி-யுள்ளனர். போலீஸார் சிலரும், சந்தோஷின் சிகிச்சைக்காக ரூ. 2 ஆயிரம் வாங்கித் தருகிறோம் எனக் கூறி வெற்றுப் பேப்பரில் கைநாட்டு வாங்கியுள்ளனர்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-90703210518373381802014-11-03T20:19:25.759+05:302014-11-03T20:19:25.759+05:30சொல்றாங்க!
தமிழ்த் தேசிய கூட்டணியும் வெளிநாடுகளில...சொல்றாங்க!<br /><br />தமிழ்த் தேசிய கூட்டணியும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களும் தமிழ் ஈழம் என்ற பிரிவினைவாதக் கோரிக்கையைக் கைவிட வேண்டும். அவ்வாறு செய்தால், தற்போதுள்ள அதிபருக்கு அதிக அதிகாரம் இருக்கும் வகையிலான ஆட்சி முறையை முடிவுக்குக் கொண்டுவரத் தயாராக இருக்கிறேன்.<br /><br />- மகிந்த ராஜபக்ஷே, இலங்கை அதிபர்<br /><br />----------<br /><br />ராஜபக்ஷே செல்கின்ற பாதை முழுமையாக சட்டத்துக்கு விரோதமானது. உச்சகட்ட ஊழல் நடக்கின்றது. ஒப்பந்தங்களில் எந்தளவுக்கு பணம் கொள்ளை அடிக்கப்-படுகின்றது என்பது எனக்குத் தெரியும். தங்களின் குடும்பத்தை வளர்த்துவிடுகிறார்கள். அதற்காக பொதுச் சொத்துகள் சுரண்டப்-படுகின்றன. அன்று ஊழல் குற்றச்சாட்டில் அவரைச் சிறையில் அடைக்காமல் விட்டதற்காக நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவர் மூன்றாவது தடவையாக அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசமைப்புச் சட்டப்படி தகுதியை இழந்துவிட்டார்.<br /><br />- சரத் என்.சில்வா, இலங்கை உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி<br /><br />-----------<br /><br />சொல்றேங்க!<br /><br />ஓ... இது தான் மேட்டரா? திரும்ப அதிபராக முடியாது. ஆக, அதிபருக்கு அதிகாரத்தைக் குறைத்துவிட்டால், பிரதமராக அதிகாரம் பெறலாமல்லவா?<br /><br />ராஜபக்சே ஏன் கழுத்துத் துண்டைக் கழற்றிப் போடுறான்னு தெரியுதா?தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-11456871088476060372014-11-03T20:18:51.739+05:302014-11-03T20:18:51.739+05:30
பிளாஸ்டிக்கிற்குப் பதிலாக, சணல் பொருட்களின் பயன்-...<br />பிளாஸ்டிக்கிற்குப் பதிலாக, சணல் பொருட்களின் பயன்-பாட்டை அதிகரிக்க வேண்டும். வங்க தேசத்தில் சணல் உற்பத்தி அதிகம் உள்ளது. இந்தியாவில் சணல் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. எனவே, இரண்டு நாடுகளும் இந்த விஷயத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம், சணல் உற்பத்தியை அதிகரிக்க முடியும். பிளாஸ்டிக்கை ஒழிப்பதோடு, பொருளாதார வளர்ச்சிக்கும் இந்த நடவடிக்கை பெரும் உதவியாக இருக்கும்.<br /><br />- அப்துல் கலாம், மேனாள் குடியரசுத் தலைவர்<br /><br />-----------<br /><br />பா.ஜ. தலைவர்கள் தங்களின் பல்வேறு நெட்ஒர்க்குகள் மூலம் எதிர்த் தரப்பினைக் குறிவைத்து, நாகரிக-மற்ற வார்த்தைகளில் விமர்சிக்-கின்றனர். தனிநபர் தாக்குதலும் அதிகரித்துவிட்டது. அவர்களின் இதுபோன்ற நடவடிக்கைக்கு பெண்கள்கூட தப்பவில்லை. இதைப் பார்க்கும்போது அவசரநிலைக் காலம்போல் இருக்கிறது.<br /><br />- மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதலமைச்சர்<br /><br />-----------<br /><br />தமிழகத்தில் நீலகிரியில் நடுவட்டம், கூடலூரில் புல்வெளியில் அரிதாகக் காணப்-படும் பூச்சி உண்ணி தாவரங்கள் கோடையில் ஏற்படும் வனத் தீ காரணமாக அழிந்து வருகின்றன. அழிவின் விளிம்பில் உள்ள இவற்றைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.<br /><br />- சுந்தரேசன், கூடலூர் தாவர ஆய்வாளர்<br /><br />-----------<br /><br />பெற்றோர் வாங்கும் மிகக் குறைந்த கடன்களுக்காக குழந்தைகள் கொத்தடிமை-களாக்கப்படுவது இப்போது பரவலாகி வருகிறது. இதுபோன்ற வன்முறைகளைக் கட்டுப்படுத்த ஏராளமான சட்டங்கள் இயற்றப்-பட்டுள்ளன. ஆனால், அவை கடுமையான நடைமுறைப்படுத்தப் படும்போது-மட்டுமே குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை முழுமை-யாகக் கட்டுப்படுத்த முடியும்.<br /><br />- டி.முருகேசன், மேனாள் தலைமை நீதிபதி, டில்லி உயர் நீதிமன்றம்<br /><br />-------<br /><br />ஆதிதிராவிடப் பெண் பேராசிரியைகள் தங்கள் துறையில் முக்கியப் பொறுப்புகளை ஏற்கவும் தங்கள் உரிமைகளை நிலைநாட்டவும் தங்களது தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். பணியாற்றும் இடங்களில் பெண் உரிமைகள் மறுக்கப்படலாம். பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கும் உள்ளாகலாம். அக்கால கட்டத்தில் பெண் உரிமைக்காகப் போராடும் அமைப்புகளை நாடத் தயங்கக் கூடாது. மேலும், இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள அப்பெண் பேராசிரியைகளுக்கு சட்ட விழிப்புணர்வும் அவசியம்.<br /><br />- ராமாத்தாள், தமிழ்நாடு மகளிர் ஆணைய மேனாள் தலைவிதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-73888186281563093332014-11-03T20:13:12.956+05:302014-11-03T20:13:12.956+05:30மனிதத் தன்மை!
மூடநம்பிக்கை, பெண் ணடிமைத்தனம் பற்...மனிதத் தன்மை!<br /><br /><br />மூடநம்பிக்கை, பெண் ணடிமைத்தனம் பற்றி யெல்லாம் படித்திருப் போம். ஆனால் இராக் - சிரியாவில் இரண்டும் இணைந்த ஒரு கலவை யாக உள்ளது.<br /><br />அய்.எஸ். தீவிரவாதி களாக இருக்கக் கூடிய வர்கள் அஞ்சி நடுங்கி ஓடக் கூடிய ஓர் இடம் இருக் கிறது என்றால் ஆச்சரி யம்தானே!<br /><br />குர்திப் படைப் பிரிவில் உள்ள பெண் வீராங்கனை களைக் கண்டால் அந்த அய்.எஸ். தீவிரவாதிகள் ஓட்டம் பிடிக்கிறார்களாம். என்ன காரணம் தெரியுமா?<br /><br />பெண்கள் கையால் (துப்பாக்கிப் பிரயோகத் தால்) ஆண்கள் உயிரிழந் தால் சொர்க்கத்திற்குச் செல்ல முடியாதாம்!<br /><br />எப்படி இருக்கிறது? தங்கள் உயிரையே திரண மாக மதித்துத் தீவிர வேலைகளில் ஈடுபடும் ஆண்கள்கூட இப்படி இருக்கிறார்கள் என்றால் இதன்பொருள் என்ன? உடல் வலிமை இருந்தாலும் மூளையில் குடியேறிய மத மூடநம்பிக்கை அவர் களைக் கோழைகளாக்கி விடுகிறதே!<br /><br />இன்னொரு செய்தி ஈரானிலிருந்து வெளி வந்துள்ளது. ரேஹானே என்ற பெண்மணி தன் னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற ஒரு புலனாய்வுத்துறை அதிகா ரியைக் கொலை செய்து விட்டார் அந்தப் பெண்மணி.<br /><br />அந்தப் பெண்ணின் நோக்கம் அந்த அதி காரியைக் கொலை செய் வதல்ல; தன்மீது பாலியல் வன்முறையை மேற் கொண்ட பொழுதுதான் அந்தக் கொலை நடந்திருக் கிறது. (கொலையும் செய் வாள் பத்தினி என்பது நம் நாட்டுப்பழமொழி!) ஆனால் ஈரானில் தீர்ப்பு என்ன தெரியுமா? அந்தப் பெண் குற்றவாளியாக்கப் பட்டுத் தூக்குத் தண்டனை யும் விதிக்கப்பட்டுள்ளார் என்னே கொடுமை!<br /><br />அந்தப் பெண் தன் தாய்க்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்.<br /><br />தாயே உனக்கு என் னைப் பற்றி நன்கு தெரியும். நான் ஒரு கொசுவைக் கூடக் கொன்றதில்லை. கரப்பான் பூச்சிகளைப் பிடித்து மெதுவாகத்தான் வெளியேற்றியிருக்கிறேன். தற்போது நான் திட்டமிட்ட கொலைகாரியாக இருக் கிறேன். இறப்பதற்கு முன் ஒரு வேண்டுகோள்.<br /><br />தூக்குத் தண்டனைக் குப் பிறகு என் உடல் மண் ணுக்கு இரையாக வேண் டாம்; எனது உடலிலிருந்து பிறருக்குப் பயன்படும் அனைத்து உறுப்புகளை யும் அகற்றி அவற்றைத் தேவைப்படுபவர்களுக்குப் பரிசாக அளித்து விடுமாறு கெஞ்சிக் கேட்டுக் கொள் கிறேன். எனது உறுப்பு களைப் பெற்றவர்களுக்கு நான் என்பதோ, என் பெயரோ எதுவும் தெரிய வேண்டாம்.<br /><br />எனக்குப் பூச்செண்டும் கொடுக்க வேண்டாம். பிரார்த்தனை யும் செய்ய வேண்டாம் என்று அந்தக் கடிதத்தில் அந்த ஈரானியப் பெண் குறிப்பிட்டுள்ளார்.<br />ஒருபக்கம் மத மூட நம்பிக்கை இன்னொரு பக்கம் அதையும் கடந்த மனிதத் தன்மை! அசை போட்டுப் பாருங்கள் புரியும்.<br /><br />- மயிலாடன்<br /><br />Read more: http://viduthalai.in/page1/90433.html#ixzz3I16HqPTo<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-45109400720692848022014-11-03T20:11:03.304+05:302014-11-03T20:11:03.304+05:30காலை உணவை தவிர்க்கக் கூடாது...ஏன்?
காலை உணவைத் தவ...காலை உணவை தவிர்க்கக் கூடாது...ஏன்?<br /><br />காலை உணவைத் தவிர்ப்பதற்கான காரணங்களில் ஒன்று பசியின்மை. 9 மணிக்கு வெளியில் கிளம்பு கிறவர்களாக இருந்தால் 8 மணிக்குள் குளித்துத் தயாராகி விடுங்கள். குளித்தவுடன் இயல்பாகவே பசியெடுக்க ஆரம்பித்து விடும். உங்களுக்கு காலை உணவு உண்பதற்கு நேரமும் கிடைக்கும். இல்லாவிட்டால், 11 மணிக்குப் பசி அதிகமாகும்.<br /><br />காலை உணவும் சாப்பிட முடியாமல், மதிய உணவும் சாப்பிட முடியாமல் ஆரோக்கியமற்ற நொறுக்குத் தீனிகளையும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர் பானங்களையும் சாப்பிட வேண்டியிருக்கும். ஏற்கெனவே உணவைத் தவிர்த்திருப்பதால் உடல் சோர்வு, மூளையில் மந்தத் தன்மை, பருமன், சர்க்கரை அளவு ரத்தத்தில் ஏறி இறங்குவது, ரத்தசோகை போன்ற பிரச்சினைகள் அதிகமாகும்.<br /><br />தவிர உப்பு, கொழுப்பு, இனிப்பு அதிகம் நிறைந்த நொறுக் குத்தீனிகளால் ரத்தக் கொதிப்பு ஏற்படுவது, காலைப் பசியின் காரணமாக மதியம் அதிகமாக சாப்பிட நேர்வது, பட்டினியின் காரணமாக வயிற்றில் அமிலம் அதிகமாக சுரப்பது, அமிலம் அதிகம் சுரப்பதால் அல்சர் குறைபாடு இருந்தால் இன்னும் அதிகமாவது போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். ஆகவே, நோய்களை விரட்ட காலை உணவை தவிர்க்காதீர்கள்.<br /><br />Read more: http://viduthalai.in/page-7/90446.html#ixzz3I15hAQiz<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-77837079424198974342014-11-03T20:07:27.774+05:302014-11-03T20:07:27.774+05:30சபாஷ் - வரவேற்கத் தகுந்தது!
மூன்றாம் பாலினத்தவர்...சபாஷ் - வரவேற்கத் தகுந்தது!<br /><br /><br />மூன்றாம் பாலினத்தவர் ஆட்டோ ஓட்டுநர் - செய்தி வாசிப்பாளர்! மூன்றாம் பாலினத்தவர்கள் சமூகத்தின் பல்வேறு தரப்பினராலும் ஒதுக்கப்பட்டுவந்த நிலையில், அவர்களின் அயராத முயற்சியால், தடைகளைக் கடந்து பலதுறைகளி லும் துணிந்து அடி எடுத்து வைத் துள்ளார்கள்.<br /><br />மூன்றாம் பாலினத்தைச் சேர்ந் தவரான வைஷ்ணவி, வட சென் னைப் பகுதியைச் சேர்ந்தவர். தன் னுழைப்பால் பொருளாதாரத்தில் உயர வேண்டும் என்பதில் உறுதி கொண்டவர்.<br /><br />சென்னையில் உள்ள தாய்-வி.எச்.எஸ் அமைப்பில் இணைந்து மூன்றாம் பாலினத்தவர் மத்தியில் எச்.அய்.வி தடுப்புப் பணி மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களின் பொரு ளாதார மேம்பாட்டுப் பணிகளை செய்து வந்துள்ளார். இந்தியாவின் முதல் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட் டுநராக இருக் கும் வைஷ்ணவி "சில மக்கள், ஆட்டோ ஏற வந்து விட்டு, நான் திரு நங்கை என தெரிந்தவுடன் ஆட்டோவில் கூட ஏறாமல் சென்று விடு வதும், சில சமயம் சந்திக்கும் கேலி, கிண்டல்கள்தான் மன வருத்தமாக இருக்கிறது. மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள் உழைக்க வேண்டும் என சொல்கிறார்கள். ஆனால், உழைக்க வந்தால், இப்படி கேலி கிண்டல் இருக்கிறது. ஆனாலும் என் தொழிலை நான் விட மாட்டேன். இந்தத் தொழிலை இன்னும் விரிவுபடுத்துவேன் என நம் பிக்கையுடன் கூறுகிறார் வைஷ்ணவி.<br /><br />தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் பத்மினி பிரகாஷ் தமிழகத்தில் இயங்கக் கூடிய தனியார் தொலைக் காட்சியில் செய்தி வாசிப் பாளராக திருநங்கையான பத்மினி பிரகாஷ் பணியாற்றுகிறார்.<br /><br />ஏற்கெனவே, மூன்றாம் பாலினத் தவரான ரோஸ், தனியார் தொலைக் காட்சி ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப் பாளராக பணியாற்றியுள்ளார்.<br /><br />தமிழகத்தின் மேற்கு மாவட் டமான கோயம்புத்தூரைச் சேர்ந்த பத்மினி பிரகாஷ், கல்லூரியில் வணிகவியல் துறையில் சேர்ந்து முத லாம் ஆண்டோடு படிப்பை நிறுத் தியவர்.<br /><br />'ஊடகங்கள் மூலம் செய்திகள் மட்டும் போய்ச் சேருவதில்லை. செய்திகளைக் கொண்டு சேர்ப்பவர் களும் மக்களை எட்டுகிறார்கள். ஆகவே தான், ஊடகத் துறையை விரும்பினேன்' என்கிறார் பத்மினி.<br /><br />மூன்றாம் பாலினத்தவர்களின் நலனைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் பல நல்வாழ்வுத் திட்டங்கள் செயல் படுத்தப்பட்டிருக்கின்றன. இந்தப் பிரிவினருக்கென நல வாரி யமும் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் வழங்கப்படும் உணவுப் பொருள் வழங்கல் அட்டைகளில் (குடும்ப அட்டை), வாக்காளர் அடையாள அட்டைகளில் மூன்றாம் பாலினமாக குறிப்பிடப்படுகிறார்கள். கல்லூரி களிலும் தனிப் பிரிவினராக அங்கீ கரிக்கப்பட்டுள்ளனர்.<br /><br />உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதத்தில் மூன்றாம் பாலினம் என் கிற அங்கீகாரத்தை வழங்கி உத்தர விட்டது குறிப்பிடத்தக்கது.<br /><br />Read more: http://viduthalai.in/page-2/90475.html#ixzz3I14pevn9<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-69363196487175064942014-11-02T12:54:25.938+05:302014-11-02T12:54:25.938+05:30உடுமலை.சு.தண்டபாணி தண்டபாணி
கலைவாணரும், பழைய சோறு...உடுமலை.சு.தண்டபாணி தண்டபாணி<br /><br />கலைவாணரும், பழைய சோறும்…!<br />...........................................................<br /><br />ஒருநாள் காலையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தன்னுடைய வீட்டில் அமர்ந்து, பழைய சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.<br /><br />அப்போது வீட்டுக்கு வந்த அவரது நண்பரும்… முன்னாள் அமைச்சருமான என்.வி.நடராசன், “என்னங்க… மதுரம் உங்களுக்கு டிபன் எதுவும் செய்து தரலையா..? பழைய சோறு சாப்பிடுறீங்க..!”<br /><br />கலைவாணர் எதுவும் பேசாமால், வேலைக்காரரைக் கூப்பிட்டு,<br /><br />“இந்தா… இந்த ஒரு ரூபாய்க்கு… பழைய சோறு வாங்கிட்டு வா…” என்றார்.<br /><br />ரொம்ப நேரம் கழித்து வந்த வேலைக்காரர்,<br /><br />“ஐயா… நானும் எங்கெங்கோ அலைஞ்சிட்டேன். ஒரு இடத்திலேயும் பழைய சோறு கிடைக்கல..” என்றார்.<br /><br />“கேட்டீங்களா நடராசன்…<br /><br />எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காத அற்புதப் பொருள்…<br /><br />அதனால்தான் இதை சாப்பிட்டேன்!” என்று கலைவாணர்<br /><br />சொன்னதைக் கேட்டு நடராசன் மட்டுமின்றி…<br /><br />மதுரமும் அசந்து விட்டார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-28095399823424543632014-11-02T12:54:19.966+05:302014-11-02T12:54:19.966+05:30நிருபர் : பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் பற்றிய ...நிருபர் : பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் பற்றிய தங்கள் கருத்தென்ன?<br />அண்ணா .: இங்குள்ள பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் பிரச்சினை வேறு. வடநாட்டிலுள்ள இந்து முஸ்லீம் விஷயம் வேறு. பார்ப்பனர் தங்களை உயர்ந்தவர் என்று கருதுகிறார்கள். சமுதாயத்தில் அவர்கள் செல்வாக்கு அதிகம். ஆகவே, அரசியலிலும் பொருளாதாரத்திலும் அவர்களுக்கே செல்வாக்கு இருக்கிறது.<br /><br />நிருபர் : இந்தப் பிரச்சினை தீர வழி இல்லையா?<br />அண்ணா .: இன்னும் ஐந்து ஆண்டுகளில் தீர்ந்துவிடலாம்.<br /><br />நிருபர் : அதெப்படி? அவ்வளவு சரியாகச் சொல்கிறீர்கள்.<br />அண்ணா .: இது எங்கள் ஆசையைக் காட்டுகிறது. இப்போதே முக்கியப் பார்ப்பனத் தலைவர்கள் இப்பிரச்சினை முடிவு காட்டப்படவேண்டும் என்று விரும்புகிறார்கள்.<br /><br />நிருபர் : பார்ப்பனத் தலைவர்கள் இங்குள்ள இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முயலவில்லையா?<br />அண்ணா .: முயன்றிருந்தால் பிரச்சினை வெகு சீக்கிரம் முடிந்திருக்கும். உதாரணத்துக்குச் சொல்கிறேன். இந்த 1950 -ல் கூட, எங்களால் பார்ப்பனர் வசிக்கும் அக்கிரகாரத்தில் ஒரு வீடு வாங்க முடியாது. அது மட்டுமல்ல, கோயிலிருக்கிறது. அங்கு எங்களால் பூசை முதலாய காரியங்களை அவர்கள் மூலந்தான் செய்ய வேண்டியிருக்கிறது. எங்களால் செய்ய முடிவதில்லை. அதேபோலத்தான் எங்கள் சடங்குகளும்.<br /><br />நிருபர் : ஐரோப்பாவில்கூட மதகுருமார் இருக்கத்தான் செய்கிறார்கள்!<br />அண்ணா .: அங்கு யாரும் மதகுருவாகலாம். அதேபோல இங்கு நான் விரும்பினால் அப்துல் லத்தீப் ஆகிவிடலாம். ஆனால் அனந்தாச்சாரி ஆக முடியாது. எவ்வளவு வேதசாத்திரங்களைக் கற்றாலும், இங்கு நான் புரோகிதர் ஆக முடியாது.<br /><br />நிருபர் : மனிதாபிமானம் நிறைந்தோர் இக் கொடுமைகள் ஒழிய வேண்டும் என்றே விரும்புவர். சமுதாய நீதி கிடைக்கவேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது. இதற்கு மகாத்மா காந்தியின் தத்துவமே போதுமே! பிரிவினயா கேட்க வேண்டும்.<br /><br />அண்ணா .: காந்தியார் நல்ல தத்துவம் தந்தார். ஆனால், இங்குள்ளோர் தங்களுக்கேற்ற வகையில் அதைத் திரி்த்துக் கொண்டனரே!<br />இராம ராஜ்யமாக நாடு இருக்கவேண்டும், அது நல்ல நாடாக இருக்கவேண்டும என்னும் பொருளில் சொன்னார். ஆனால், அதைப் பரப்பும் வசதி கொண்டவர்களோ இராம இராஜ்யம் என்றால், இந்து ராஜ்யம், அதாவது வருணாசிரம தர்மம் இருக்கவேண்டும், நாலு சாதிகள் இருக்கவேண்டும் என்றல்லவா திரித்துப் பேசுகிறார்கள்.<br /><br />காந்தியார் தங்கத்தைத் தந்தார். ஆனால், அதைத் தங்கள் இஷ்டத்திற்கேற்றவாறு நகைகளாகச் செய்துகொண்டனர் அவரது சகாக்கள். ஆனால், இங்குள்ளோரோ அதைக் கொண்டு விலங்கைச் செய்து எங்கள் கைகளில் அல்லவா பூட்டி இருக்கிறார்கள்.<br /><br />- இந்தி நல்லெண்ணக் குழுவினருக்கு அறிஞர் அண்ணா<br />அளித்த பேட்டியிலிருந்து ( 11 - 10 1950 )தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-25441292172455119362014-11-02T12:32:29.284+05:302014-11-02T12:32:29.284+05:30'பெரியார் என்பது வெறும் பெயரல்ல.இந்தியாவில் உள...'பெரியார் என்பது வெறும் பெயரல்ல.இந்தியாவில் உள்ள ஏழை,எளிய அடித்தட்டு மக்கள்,கல்வியில் உயர்ந்து நிற்பதற்குக் காரணமாக இருந்த மகத்தான சக்தி அது.<br /><br />இப்போது சாதி மத பேதமில்லாமல் அருகருகே உட்கார்ந்து நாம் கல்வி கற்கிறோம்.அதற்கு தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கார் போன்றவர்களின் மகத்தான தியாகமும்தான் காரணம்.''<br /><br />- எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் (ஜூனியர் விகடன் 29.10.14.பக்.20.)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-27833796575765873612014-11-01T21:05:42.970+05:302014-11-01T21:05:42.970+05:30இந்து மதம்
இந்து மதம், இஸ்லாமானவர்களுக்கும், கிற...இந்து மதம்<br /><br /><br />இந்து மதம், இஸ்லாமானவர்களுக்கும், கிறிஸ்தவர் களுக்கும் கொள்கையில் எவ்வளவு கெடுதியோ அதைவிடப் பல மடங்கான கெடுதிகளை பார்ப்பனரல்லாத மக்களுக்கு காரியத்தில் விளைவிக்கின்றது. அதைவிடப் பன்மடங்கே தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் விளைவிக்கின்றது. இஸ்லாம் ஆனவர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இந்து மதத்தால் யாதொரு கெடுதியும் இல்லை என்று சொல்லலாம். இஸ்லாமியரையும், கிறிஸ்தவரையும். இந்துக்கள் வேறாகக் கருதுகின்றார்கள். தங்கள் சமுகத்திற்கு எதிராய் கருதுகின்றார்கள் என்பதைத் தவிர வேறில்லை. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பயனாய் அவர்கள் பார்ப்பனரொழிந்த இந்துக்களைவிட சற்று அதிகமாக நிலையில் லாபமே அடைந்திருக்கிறார்கள். ஆனால், இந்துமதம் காரணமாக பார்ப்பனரல்லாதாரும் தீண்டா தாரும் இழிவாய் நடத்தப்படுவதுடன் சுயமரியாதை இல்லாத முறையிலும், சுதந்திரமில்லாமலும் நடத்தப்படு கிறார்கள். மேலும் இவர்களைப் பார்ப்பனர்கள் அடிமை யாக்கிக் கொண்டும், இவர்களது கஷ்டத்தின் பயன்களை அனுபவித்துக் கொண்டும் இவர்களை (பார்ப்பனரல்லா தாரையும், தீண்டாதாரையும்) தலையெடுக்கச் செய்யாமலும் செய்து வருகிறார்கள். இந்து மதம் என்பதாக ஒன்று இருப்பது இஸ்லாமான வர்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் மற்றொரு விதத்தில் லாபகரமான தென்றே சொல்லலாம். எப்படியெனில் மேற்கண்ட இரண்டு மதமும் இரண்டு சமுக எண்ணிக் கையிலும் பெருக்க மேற்படுவதற்கு இந்து மதமே காரண மாயிருக்கின்றது. இந்தியாவில் இந்து மதமில்லாமல் வேறு புத்த மதம், கிறிஸ்து மதம் ஆகியவை இருந்திருந்தால் இஸ்லாம் மதம் சமுக எண்ணிக்கை இவ்வளவு பெருகி இருக்காது. அதுபோலவே, வேறு மதங்கள் இருந்திருந்தால் கிறிஸ்து மத சமுக எண்ணிகையும் இவ்வளவு பெருகி இருக்காது. ஆகவே அவ்விஷயத்தில் இந்து மதம் இருப்பது முஸ்லீம், கிறிஸ்தவ மதங்களுக்கு லாபமேயாகும். ஆகையால், இந்து மதத்தை ஒழிக்க வேண்டியதென்பது இந்திய பார்ப்ப னரல்லாத மக்களுக்கும், அவர்களில் தீண்டப்படாதார் என்கின்ற மக்களுக்கும் தான் மிகவும் அவசியமானது என்று சொல்லுவோம். இதோடு ஏழைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் கூட சமத்துவமும், பொது உடைமை தத்துவமும் ஏற்பட வேண்டுமானால் முதலில் இந்து மதம் ஒழிய வேண்டியது மிகவும் அவசியமாகும்.<br /><br />குடிஅரசு - துணைத் தலையங்கம் - 07.06.1931<br /><br />Read more: http://viduthalai.in/page-7/90374.html#ixzz3HpcWHW5d<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-62538667851072169462014-11-01T21:05:13.869+05:302014-11-01T21:05:13.869+05:30புதியமுறை சீர்திருத்த மணம்
சீர்திருத்தத் திருமணம...புதியமுறை சீர்திருத்த மணம்<br /><br /><br />சீர்திருத்தத் திருமணம் என்றும், சுயமரியாதைத் திருமணம் என்றும் சொல்லப்படுபவை எல்லாம் எனது கருத்துப்படி பழைய முறையில் உள்ள அதாவது தெய்வீக சம்பந்தம், சடங்கு, இருவருக்கும் சம உரிமையில்லாத கட்டுப்பாடு, நியாய வாழ்க்கைக்கு அவசியமில்லாத, இயற்கைத் தத்துவத்திற்கு முரணான நிபந்தனைகள் ஆகியவைகளில் இருந்து விடுபட்டு நடைபெறும் திருமணங்களேயாகும். சுயமரியாதை இயக்கத்திற்குப் பின் இத்திருமண விஷயத்தில் அநேகவித சீர்திருத்த மணங்கள் நடை பெற்றிருக்கின்றன. அதாவது பார்ப்பனப் புரோகிதமில்லாத அர்த்தமற்ற, அவசியமற்ற சடங்குகள் இல்லாத புரோகிதமேயில்லாத, ஒரே நாளில் ஒரே மணியில் நடைபெறக்கூடிய வீண் செலவு இல்லாத முதலிய மாதிரியிலும் மற்றும் கலப்பு மணங்களும், விதவை மணங்களும், குழந்தைகளுடன் விதவை மணங்களும், ஒரு கணவன் ஒரே காலத்தில் இரு பெண்களை வாழ்க்கைத் துணைவர்களாய் ஏற்றுக் கொண்ட மணங்களும், மனைவியைப் புருஷன் ரத்து செய்துவிட்டு வேறு பெண்ணை செய்து கொண்ட மணங்களும் மற்றும் கிறிஸ்துவ மதத்தில் ஒரு மனைவி ஏற்கனவே இருக்க அதைத் தள்ளிக் கொண்ட திருமணமும் மற்றும் பொட்டுக்கட்டி தாசித் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் பொட்டுகளை அறுத்துவிட்டுச் செய்து கொண்ட மணமும் இப்படியாகப் பலவித சீர்திருத்த மணங்கள் இதுவரை நடைபெற்று வந்திருக்கின்றன. ஆனால், இந்தத் திருமணம் என்பதானது இதுவரை நடந்த சீர்திருத்தத் திருமணங்களையெல்லாம்விட ஒருபடி முன்னேறிய திருமணம் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.<br /><br />இன்றைய மணமகளாகிய திருமதி. சுலோசனா ஏற்கனவே திருமணம் நடந்து அந்தம்மையினுடைய கணவனார் இப்பொழுது நல்ல நிலையிலும் உத்தியோகத்திலும் இருந்து கொண்டிருக்கிறார். அப்படியிருக்க இந்தம்மைக்கு இப்போது முதல் புருஷன் இருக்கவே அவரிடமிருந்து விலகி, இது இரண்டாவ தாகச் செய்துகொள்ளும் சீர்திருத்தத் திருமணமாகும். இந்தத் திருமணம் முதல் புருஷனுடைய சம்மதப்படியே நடைபெறுவதாகும். பெண்ணின் தகப்பனாரும் மற்ற நெருங்கிய பந்துக்களுடையவும் முழு சம்மதத்துடனேயே இது நடைபெறுகின்றது. பெண்ணின் தகப்பனார் இப்பொழுது 500,600ரூபாய் சம்பளத்தில் சர்க்கார் உத்தியோகத்தில் இருப்பதாக அறிகிறேன். பெண்ணின் தகப்பனார் பெண்ணுக்கு இந்த நகைகள் போட்டிருப்பதல்லாமல் இந்த மகாநாட்டுச் செலவு, கல்யாணச் செலவு, மற்ற செலவு ஆகியவைகள் அவராலேயே செய்யப்படுகிறது. பெண்ணின் சிறிய தகப்பனார் நேரில் இருந்து எல்லாக் காரியங்களையும் நடத்துகின்றார். அதனால்தான் இந்தத் திருமணம் இதுவரை நடந்த சீர்திருத்தத் திருமணங்களை யெல்லாம் விட ஒருபடி முன்னேறிய திருமணம் என்று சொன்னேன். மணமகன் திரு. பொன்னம்பலம் அவர்களைப் பற்றி உங்களுக்கு ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. அவர் சைவ வேளாளர் வகுப்பு என்பதைச் சேர்ந்தவராயிருந்தாலும் அவற்றையெல்லாம் அடியோடு ஒழித்து எவ்வித ஜாதிமத பேதமில்லாமல் சகலத்திற்கும் துணிந்து சுயமரியாதைத் தொண்டாற்றிவருபவர். பெண் ஸ்ரீ வைணவ என்று சொல்லப்படுவதும் சாத்தாதார் என்று சொல்லப்படுவதுமான வகுப்பைச் சேர்ந்திருந்தவர். அவற்றை யெல்லாம் அடியோடு விட்டுவிட்டதுடன், இத்திருமணவிஷயத்தில் அப்பெண்ணுக்கு வேறு யார் யாரோ எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்து பெரும் பழிகள் கூறி, அதன் புத்தியைக் கலைத்தும் அதற்கெல்லாம் முற்றிலும் ஏமாறாமல் தைரியமாய் இருந்து இத்திருமணத்திற்கு இசைந்தனர். ஆகவே, இத்திருமணமானது நாம் விவாக முறையில் என்னென்ன விதமான கொள்கைகளை நமது இயக்கத்தின் மூலமாக பிரச்சாரம் செய்கின்றோமோ அவைகளில் முக்கியமானதொன்றென்றும், ஆண் பெண் விவாக விஷயத்தில் ஏற்படும் சீர்திருத்தமே நமது நாட்டை ஏன் உலகத்தையே சமதர்ம மக்களாகச் செய்யக்கூடிய ஒரு முக்கியக் கருவியாக இருக்கும் என்றும் கருதுகிறேன்.<br /><br />(24.5.1931இல் நடைபெற்ற திருவாளர் பொன்னம்பலனார் - சுலோசனா மணவிழாவில் ஆற்றிய உரை)<br />குடிஅரசு சொற்பொழிவு 31.05.1931<br /><br />Read more: http://viduthalai.in/page-7/90373.html#ixzz3HpcOTsxT<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-51893751557095788762014-11-01T21:04:34.421+05:302014-11-01T21:04:34.421+05:30சுயமரியாதை உதயம் பெண்கள் சுதந்திரம்
சொத்து உரிமை...சுயமரியாதை உதயம் பெண்கள் சுதந்திரம்<br /><br /><br />சொத்து உரிமை: மைசூர் சமஸ்தானத்தில் பெண் மக்களுக்குச் சொத்து உரிமை அதாவது தகப்பன் சொத்தில் பெண்களும் பங்கு பெறவும், சொத்துக்களை வைத்து, சுதந்திரமாய் அனுபவிக்கவும் உரிமை பெற்று விட்டார்கள். கல்யாண ரத்து: பரோடா சமஸ்தானத்தில் ஆணும், பெண்ணும் கல்யாண ரத்து செய்து விலகிக் கொள்ள சட்டம் கொண்டுவர அனுமதிக்கப்பட்டாய் விட்டது.<br /><br />அதாவது, தம்பதிகளில் ஆணோ, பெண்ணோ 7வருஷ காலம் இருக்குமிடம் தெரியாமல் பிரிந்து இருந்தாலும், வேறு மதத்தைத் தழுவிக் கொள்வதில் இஷ்டமில்லாவிட்டாலும், சன்னியாசியாகி விட்டாலும், 3 வருஷ காலம், ஒற்றுமை யின்றி சதா குடும்பத்தில் கண்டிப்பாயிருந்தாலும், வேண்டாம் என்று பிரிந்து போய்விட்டாலோ, குடியில் மூழ்கினவர்களாயிருந்தாலோ, சதா பிறர் மீது காதலுள் ளவர்களாக இருந்தாலோ ஆகிய காரணங்களால் துன்பப் படும் புருஷனோ, மனைவியோ தங்கள் விவாகங்களை சட்ட மூலம் ரத்து செய்து கொள்ளலாம்.<br /><br />மற்றும் கல்யாணமாகும் சமயத்தில் தம்பதிகளில் யாராவது செவிடு, ஊமை, வியாதி, குருடு, பைத்தியம், ஆகியவைகள் இருந்ததாகவோ அல்லது மைனராக இருந்ததாகவோ தெரிய வந்தாலும், இஷ்டப்படாவதவர்கள் தன்னைக் கல்யாணப்பந்தத்தில் இருந்து விலக்கிக் கொள் ளலாம். இந்தப்படி விலக்கிக்கொண்ட 6 மாதம் பொறுத்து அவரவர்கள் இஷ்டப்படி வேறு கல்யாணம் செய்து கொள்ளலாம்.<br /><br />மைசூரில் கல்யாண வயது<br /><br />மைசூர் சமஸ்தானத்தில் பெண்களுக்கு 14 வயது ஆனபிறகு தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று சட்டம் கொண்டு வர ஏற்பாடாயிருக்கிறது.<br /><br />செங்கல்பட்டு தீர்மானங்களைப் பார்த்த கனவான்கள் - ஜஸ்டிஸ் பேப்பர் உள்பட சுயமரியாதை இயக்கம், மத சமூகத்தைக் கட்டுத்திட்டமில்லாமல் செய்கின்றது என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் இப்போது இந்திய சமஸ்தானங்களைப் பார்த்தாவது புத்தி பெறுவார்கள் என்று கருதுகின்றோம். குடிஅரசு - செய்திக்கட்டுரை - 21.06.1931<br /><br />Read more: http://viduthalai.in/page-7/90372.html#ixzz3HpcEf3Qo<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-36401755141981729822014-11-01T21:01:57.431+05:302014-11-01T21:01:57.431+05:30ஈ.வெ.ரா. காவடிச்சிந்து
- கவிஞர் கி. கோவிந்தராசு -...ஈ.வெ.ரா. காவடிச்சிந்து<br /><br />- கவிஞர் கி. கோவிந்தராசு -<br /><br /><br />வணிகத்தொழில் செய்த குடும்பம் - நல்ல<br />வசதி நிறைந்திட்ட குடும்பம் - அங்கே<br />விளைந்தார் இராமசாமி<br />வெங்கடநாயக்கர்<br />மகனாய் - மதி - முகனாய்<br />அணிகளும் மணிகளும்பூட்டி - நல்ல<br />அறிவுள்ள கல்வியும் ஊட்டி - அவரை<br />அன்னையும் தந்தையும்<br />அன்புடன் வளர்த்தர் சீர்<br />ஆட்டி- பாசம்- காட்டி<br />வேதத்தைக் கற்பிக்க ஒருவர் - வந்து<br />வீட்டிலே சொல்லியே தருவார் - அன்று<br />அறியாத வயதிலே<br />ஆன்மீகம் கற்றுமே<br />சிறந்தார் - பின்னாள் - மறந்தார்<br />வாதங்கள் செய்வாரம் உடனே - வேத<br />வகுப்புகள் முடிந்திடும் முன்னே! - அந்த<br />இளையவயதிலேயே<br />ஏன்?எதற்கு?என்ற<br />தெரிவு - பகுத் - தறிவு!<br />காசிக்கும் பெரியாரும் சென்றார் - அந்தக்<br />கங்கையில் அழுக்குகள் கண்டார் - மனித நேயமே இல்லாது<br />நிகழ்ந்திடும் கொடுமைகள்<br />உணர்ந்தார் - காவி - துறந்தார்<br />யோசித்தார் இவையாவும் எதனால்? - முடிவில்<br />உணர்ந்திட்டார் கடவுள்தான் அதனால் - எனக்<br />கருதியநாள் முதல்<br />உறுதியாய் இருந்திட்டார்<br />பொறுப்பாய் - கடவுள் - மறுப்பாய்!<br />கீதை படித்தவர்கள் கொஞ்சம் - கள்<br />போதை அடித்தவர்கள் கொஞ்சம் - என<br />மேலும் கீழும் என<br />வேறுபாடுகளைப்<br />பார்த்தார் - நெஞ்சம் - வேர்த்தார்!<br />சீதை இராமன் கதை கற்றால் - சமூகம்<br />சீர்பெற போவதில்லை முற்றாய் - எனப்<br />பகுத்தறிந்து உண்மை<br />பார்த்து அறிய ஒரு<br />பாதை சொன்ன -மேதை!<br />சாதிப் பெயர் தன்னைச் சொல்லி - கோயில்<br />சன்னதி நுழையாது தள்ளி - நம்<br />ஆதிதிராவிடரை<br />வேதியர் சிலர் ஆங்கே<br />ஒடுக்க - எழுந்தார்- தடுக்க!<br />வீதியில் இறங்கிப்போர் செய்தார் - அந்த<br />விஷமர்கள்மேல் அம்பு எய்தார்- பின்பு<br />கோவில் பொதுவென்ற<br />கூற்றால் பகைவென்ற<br />சூரர் - வைக்கம் - வீரர்!<br />மூடப்பழக்கத்தினாலே - தமிழன்<br />மூளை இழந்திருந்தவேளை - பெரியார்<br />பகுத்தறிவு சொல்லிப்<br />பாடம்புகட்டினாரே<br />மெல்ல - அறிவு - வெல்ல!<br />கூடாஒழுக்கம் கள் குடித்தல் - எனக்<br />கொள்கை முழக்கங்கள் செய்தார்- பெயரில்<br />சாதிப் பெயர்சேர்த்தல்<br />சற்றும் கூடாதென்றே<br />உரைத்தார் - வேர் - அறுத்தார்!<br /><br />பெரியோரைத் தலைமையாய்க்<br />கொண்டு - பெற்ற<br />பெற்றோரே முதன்மையாய் நின்று - செய்யும்<br />சடங்கில்லாத் திருமணம்<br />சுயமரியாதையின்<br />பிறப்பு - சாதி - மறுப்பு!<br />மரியாதை மனிதர்க்குத் தேவை - பிறரை<br />மதிக்கின்ற பண்பதுவும் தேவை - நம்மில்<br />ஆணுக்குப் பெண்ணிங்கே<br />அடிமைபோல் இருப்பதும்<br />நாடா - வெட்கக் - கேடா!<br />பழுத்துக் கனிந்ததோர் மேனி - தமிழ்<br />எழுத்துகள் சீர்செய்த ஞானி - பெரியார்<br />சேமிக்கும் குணத்திலும்<br />சிக்கனச் செயலிலும்<br />தேனீ - நமக்கு - ஏணி!<br />தழும்புகள்தான் பெற்றார் நிறைய - அனைத்தும்<br />தமிழினம் முன்னேற்றம் அடைய - பெரியார்<br />ஞானத்தைஉலகமே<br />நயம் என ரசித்தது<br />அறிய - புகழ் - விரிய!<br />கைத்தடி ஊன்றிய சிங்கம் - பெரியார்<br />பைந்தமிழ் காத்திட்ட தங்கம் - அவர்<br />அறிவார்ந்த கருத்தினை<br />ஆர்வத்தோ(டு) அறிந்திடின்<br />தங்கும் - வாழ்க்கை - பொங்கும்!<br />வைத்தகால்பின் வாங்காவீரர் - பெரியார்<br />வாக்குப் பிறழாததீரர் - கொண்ட<br />கொள்கையில் மாறாத<br />கோடிக்கு மயங்காத<br />திண்ணன் - வெள்ளை - வண்ணன்!<br />தமிழ்நாடு தமிழர்க்கே என்று - பெரியார்<br />தனியொரு மனிதனாய் நின்று - செய்த<br />இந்தி எதிர்ப்புப்போர்<br />இந்தியா முழுவதும்<br />செல்ல - தமிழ் - வெல்ல!<br />தமிழர்க்குத் தமிழரேபோட்டி - ஒரு<br />தமிழனை இன்னொருவன் காட்டி - தந்து<br />உயர்ந்திடும் நிலை அதுவும்<br />உலகினில் இதுவரை<br />ஏனாம் - இனி - வேணாம்!<br />வேறு<br />மூடப்பழக்கங்கள் முடைநாறிக் கிடந்த<br />பேதை தமிழினத்தின்<br />வேதனைகள் நீக்கவந்த<br />மேதை அவர்தானே பெரியார் - அவர்<br />மேன்மை உணராதார் அறியார்!<br /><br />(26.10.2014 அன்று நடைபெற்ற தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு அளிக்கப்பட்ட விருந்தோம்பலில் பாடப்பட்ட கவிதை)<br /><br />Read more: http://viduthalai.in/page-5/90387.html#ixzz3HpbTVX8e<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com