tag:blogger.com,1999:blog-1474608369333206681.post2554140348863589173..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: ஜாதி, மத மறுப்பு இணைதேடல் பெரு விழாவாம் மன்றலின் வெற்றிதமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-61494359063765071412013-06-19T19:25:51.736+05:302013-06-19T19:25:51.736+05:30
சில ஆண்டுகளுக்கு முன் விடுதலை வளர்ச்சி நிதி திரட்...<br />சில ஆண்டுகளுக்கு முன் விடுதலை வளர்ச்சி நிதி திரட்டப்பட்ட கால கட்டத்தில் தங்கள் பங்கு என்று கூறி தந்தது சந்தாக்கள் அல்லாமல், ஒரு தொகையை என்னிடம் நேரில் வந்து தந்து, எதற்குப் பயன்படுத்திட தாங்கள் எண்ணுகிறீர்களோ, அதற்கு இந்த எளிய தொகையைப் பயன்படுத்திக் கொள்ளுங் கள் என்று கூறி சென்று விட்டார்கள்!<br /><br />விடுதலையின் எழுத்தாலும் கழகத் தின் போராட்டத்தினாலும் தங்களது குடும்பத்தில் ஒரு பெண் இன்று தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து M.B.B.S. பட்டம் வாங்க இருப்பதாக திண்டுக்கலில் நான் நமது கெழுதகை நண்பரும் பெரியார் சுயரியாதைப் பிரச்சார நிறுவனம் என்ற பெரியார் டிரஸ்ட்டின் நிர்வாக உறுப்பினருமான வழக்குரைஞர் மானமிகு கொ. சுப்ரமணியம் இல்லத்தில் 15.6.2013 - பொதுக் குழுவுக்குப் போன போது நான் தங்கியிருந்த இடத்தில் - நேரில் வந்து இருவர் கூறி, நன்றி தெரிவித்தனர்.<br /><br />திண்டுக்கல் மாநகரில் மிகப் பெரிய புத்தக விற்பனையாளர்களாக இருக்கும் அய்யனார் புத்தக விற்பனை நிலைய உரிமையாளர்கள் பெரியவர் பூவலிங்கம், முத்து மாணிக்கம் தந்தையும் தனயனும் ஆவர்.<br /><br />பெரியார் பற்றாளர்கள் - பகுத்தறி வாளர்கள் அவ்விருவரும்.<br /><br />அய்யா எனது பேத்தி நல்ல மார்க் வாங்கியிருந்தும், மருத்துவக் கல்லூரிக்கு சேர்ப்பதில் வரிசைப்பட்டியல் வந்தததில் - முறைப்படி தேர்வு செய்ய 100 இடங்கள் - கலைஞரின் ஆட்சியில் சென்ற முறை தர்மபுரியில் மருத்துவக் கல்லூரி அறிவிக்கப்பட்டு, கட்டுமானங்கள் எல்லாம் முடித்து துவக்க மத்திய அரசு அனுமதி கிடைக்கவில்லையாதலால் நூறு இடங்களை பூர்த்தி செய்யாமல் நிறுத்தி வைத்து விட்டனர்.<br /><br />இது குறிப்பிட்ட கல்வி ஆண்டே துவக்கப்பட்டால் தான் கிராமப்புற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஏழை, எளிய கிராமப் பிள்ளைகள் படிக்க வாய்ப்பு ஏற்படும், என்று மாநில அரசும், மத்திய அரசும் முயற்சிகள் மேற் கொண்டு உடனடியாக இவ்வாண்டே துவக்க வேண்டும் என்று விடுதலையில் எழுதினீர்கள்.<br /><br />தர்மபுரியில் அறப்போராட்டத்தை யும், திராவிடர் கழகம் நடத்திட அறிவித்து நடத்தினீர்கள். அதனால் அவ்வாண்டே மருத்துவக் கல்லூரி துவக்கப்பட்டது. 100 இடங்கள் கூடுத லாக வந்ததால், கிடைக்கவில்லை என்று வேறு வேலைக்குச் சென்ற என் பேத்திக்கு M.B.B.S. அட்மிஷன் கார்டு வந்தது - எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது! எங்கள் குடும்பத்தில் முதல் டாக்டர் இப்பெண். இது விடுதலையாலும், கழகத்தாலும் தான் சாத்தியமானது என்று நன்றி பொங்கக் குறிப்பிட்டார்கள்.<br /><br />இப்படிப் பலப்பல நிகழ்வுகள்! பெரியார் என்ற பேராசானின் உழைப்பு என்றுமே பலன் தராமல் சென்ற தில்லை, என்றாலும் பயனடைந்தவர் களில் பலர் இல்லாவிட்டாலும் - சிலராவது கூறுகிறார்களே - அது நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.<br /><br />நன்றிப் பெருக்கின் நாயகர்கள் வாழ்க! .<br /><br />- கி.வீரமணிதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-12226765859817380902013-06-19T19:25:45.493+05:302013-06-19T19:25:45.493+05:30நன்றி மறவா நாயகர்கள் இதோ! (2)
சில மாதங்களுக்கு ம...நன்றி மறவா நாயகர்கள் இதோ! (2)<br /><br /><br />சில மாதங்களுக்கு முன்பு (ஏன் ஓராண்டுக்கு மேலாகவே கூட இருக்கலாம்); என்னுடன் முன்பு அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தில் விடுதியில் தங்கியிருந்தவர் திரு. லட்சுமி நாராயணன் என்ற நண்பர். இவர் சீர்காழியைச் சேர்ந்தவர்; பி.ஏ. வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார்; அதற்கு முன்பும் இண்டர்மீடீயெட் என்ற இடைநிலை வகுப்பும் அங்கேயே படித்து அறிமுகமான நண்பர் திராவிடர் இயக்கப் பற்றாளர்.<br /><br />எப்போதும் என்னிடத்தில் அன் புடன் பழகுபவர்; நாங்கள் இருவருமே ஒருவரை ஒருவர் அண்ணாச்சி என்றுதான் அழைத்துக் கொள்வோம்! எனது அறைக்கே வந்து விடுதலை படிப்பார்; பல்வேறு செய்திகளை விவாதிப்பார்.<br /><br />அதன்பிறகு அவர் பணிக்கு சென் னையில் சேர்ந்தபிறகு அடையாறு காந்திநகர் பகுதியில் குடியிருந்தார்; அவருடைய மகனும், என் மகனும் அங் குள்ள பள்ளியில் வகுப்புத் தோழர்கள்!<br /><br />சிற்சில நேரங்களில் எங்கள் வீட் டிற்கு வந்து உரையாடிச் செல்வார்; பிறகு அதிக தொடர்பு இல்லை.<br /><br />திடீரென்று ஒரு நாள் ஒரு கடிதம் அலுவலக முகவரிக்கு வந்தது. அத் துடன் முப்பாதாயிரம் ரூபாய்க்கான காசோலையும் இணைக்கப்பட்டு, நான் லட்சுமிநாராயணன் எழுது கிறேன் என்று எழுதி, விடுதலையை நாளும் படித்து வருகிறேன். ஓய்வு பெற்ற நிலையில் விடுதி ஒன்றில் தங்கி யுள்ளேன் சென்னை புறநகர் பகுதியில்.<br /><br />தங்களின் பணிகள் சிறக்க விரும்பி, இந்தத் தொகையை நன்கொடையாக அனுப்பியுள்ளேன் பெற்றுக் கொண்டு, தங்கள் விருப்பப்படி இதனை பணி களுக்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். குறிப்பிட்ட முகவரிக்கு நான், நன்றி தெரிவித்துக் கடிதமும்கூட எழுதினேன்.<br /><br />இதுபோல் கண்ணுக்குத் தெரிந்த உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் நண்பர் களைவிட நேரடிப் பார்வையில் இல்லா மலேயே நமது பணிகளைப் பாராட்டி ஊக்க மூட்டி நன்றி தெரிவிக்கும் நண்பர்கள் ஏராளம்! ஏராளம்!! அநேகர் அந்தப் பட்டியலில் உண்டு.<br /><br />அதுபோலவே மருதூர் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் - மறைந்தா லும் எப்போதும் நம் நெஞ்சங்களில் நிறைந் தவரான நாகை மாவட்ட முன்னாள் தி.க. தலைவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் - அவர்களது குடும்பம் அம்மா, பிள்ளைகள் உட்பட அனைவருமே மிகுந்த பற்றும் மரியாதையுடன் கழகப் பணிகளைப் பாராட்டிடுவர்.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-57928606270951264292013-06-19T18:58:48.731+05:302013-06-19T18:58:48.731+05:30
அரசு என்ன செய்ய உத்தேசமோ!
திண்டுக்கல்லில் நடைபெ...<br />அரசு என்ன செய்ய உத்தேசமோ!<br /><br /><br />திண்டுக்கல்லில் நடைபெற்ற (15.6.2013) திராவிடர் கழகப் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களுள் குறிப்பிடத்தக்கது - சமூகநீதித் தொடர்பான ஒன்றாகும். அதிலும் குறிப்பாக தமிழ்நாடு ஆசிரியர் பணி நியமனத்துக்கான தகுதித் தேர்வு பற்றியதாகும். இதுவரை தமிழ்நாட்டில் நடந்திராத அளவுக்கு சமூக அநீதி இதில் கொடி கட்டிப் பறக்கிறது.<br /><br />தீர்மானம் வருமாறு:<br /><br />ஆசிரியர் தகுதி தேர்வு - சமூகநீதிக்கு விரோதமான தமிழக அரசின் செயல்பாடு<br /><br />தமிழ்நாடு அரசு ஆசிரியர் தகுதி தேர்வில், சமூக நீதிக்கு விரோதமாகவும், தேசிய கல்விக் கழகத்தின் வழிகாட்டுதலுக்கு விரோதமாகவும், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், உயர்ஜாதி அனைவருக்கும் ஒரே அளவு தகுதி மதிப்பெண்ணை (60 சதவிகிதம்) நிர்ணயித்து இருப்பதை திராவிடர் கழகம் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும், கல்வியாளர்களும் சுட்டிக்காட்டியும், அதுகுறித்துச் சிந்திக்காமல் கொள்கை முடிவு என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது - சமூகநீதிக்கு வெட்டப்படும் படுகுழி என்பதை இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது.<br /><br />இதில் வீண் பிடிவாதம் காட்டாமல், செய்த தவறைத் திருத்திக் கொண்டு, தமிழ் மண்ணுக்கே உரிய சமூகநீதி உணர்வைக் கட்டிக் காக்குமாறு தமிழ்நாடு அரசை - குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இப்பொதுக் குழு கேட்டுக்கொள்கிறது.<br /><br />இந்தச் சமூக அநீதி கமுக்கமாகக் கழுத்தறுப்பது போல, மிக மிகத் தந்திரமாக அரங்கேற்றப்பட்டுள்ளது.<br /><br />முதன் முதலில் இந்தப் பிரச்சினையை வெளிச்சத் துக்குக் கொண்டு வந்தவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்தான்; வெளிப்படையாக்கியது விடுதலை - எனும் சமூக நீதிப் போர் வாள்தான்.<br /><br />அதன் பிறகு தமிழ்நாடு சட்டப் பேரவையில் இடதுசாரிகள் இந்தப் பிரச்சினையைக் கிளப்பினார்கள். தொடக்கத்தில் இந்தப் பிரச்சினை முதல் அமைச்சர் பரிசீலனையில் இருக்கிறது என்று சொல்லி சமாளித்த கல்வி அமைச்சர், தவறு நடந்ததை ஒப்புக் கொண்டு திருத்திக் கொள்ளாமல், இது அரசின் கொள்கை முடிவு என்று ஏதோ சில வார்த்தைகளை பிறகு வெளியிட்டார்.<br /><br />இது இன்னும் ஆபத்தானது. அ.இ.அ.தி.மு.க. அரசின் கொள்கை முடிவு - சமூகநீதிக்கு விரோத மானதே என்பதே கல்வி அமைச்சர் கூறுவதற்கான பொருளாகும்.<br />தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களும் இதுகுறித்து விளக்கமாக அறிக்கையினை வெளியிட்டுள்ளார்; கல்வியாளர்களும் களத்தில் குதித்துள்ளனர்.<br /><br />ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்னும் கதையாக, ஏற்கனவே 19 ஆயிரம் ஆசிரியர் பணிகள் நியமனத்தில் செய்த அதே தவறினை - வரும் ஆகஸ்டில் நடக்க இருக்கும். ஆசிரியர் தகுதித் தேர்விலும் பின்பற்றும் வகையில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.<br /><br />தவறுகளைத் திருத்திக் கொள்ளும் மனப்பான்மை அ.இ.அ.தி.மு.க. அரசிடம் இல்லை என்பது இன்னும் விரிவாக வெளிச்சமாகத் தெரிந்து விட்டது.<br /><br />இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் சென்றால், தமிழ்நாடு அரசு பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்ளும்.<br /><br />பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வருமான வரம்பு என்ற ஆணையைப் பிறப்பிக்கப் போய் - 1980 நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 39 இடங்களில் 37 இடங்களில் தோல்வியை வாரி அணைத்துக் கொண்டார் - முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். சமூகநீதிக்கு எதிரான அவரது ஆணையை மக்கள் மத்தியில் வலுவாக திராவிடர் கழகம் எடுத்துச் சென்றது - இநதத் தோல்விக்குக் காரணம் என்பதை எம்.ஜி.ஆர். அவர்களே ஒப்புக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.<br /><br />69 சதவீத இடஒதுக்கீட்டைக் காப்பாற்றிக் கொள்ள திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் அரிய ஆலோசனை அன்றைய முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு தேவைப்பட்டது.<br /><br />அதே முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள்தான் இன்றைக்கும் முதல் அமைச்சர் - சமூக நீதிப் பிரச்சினை யில் விழிப்பாக நடந்து கொள்ள வேண்டாமா? கோட்டை விட்டு விட்டாரே!<br /><br />தாழ்த்தப்பட்டோருக்கும், முன்னேறியவருக்கும் இடையே உள்ள இடைவெளி கூடத் தெரியாதவரா முதல் அமைச்சர் ஜெயலலிதா? பாதிக்கப்பட்டுள்ள தாழ்த்தப் பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், சிறுபான்மை யினரும் கையணைத்து வீதிகளில் உரிமை முழக்கமிடக் களத்தில் குதிக்க ஆரம்பித்தால் இந்த ஆட்சியின் நிலை என்னாகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?<br /><br />குதிரை காணாமற் போன பின்பு தான் இலாயத்தை இழுத்துப் பூட்டப் போகிறதா அ.இ.அ.தி.மு.க. அரசு? தமிழ் மண் போராட்டக் களமாக மாற வேண்டுமா?<br /><br />பந்து அவர்கள் பக்கம்தான் இப்பொழுது இருக்கிறது; என்ன செய்ய உத்தேசம்?தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-45644609031220233932013-06-19T18:57:19.296+05:302013-06-19T18:57:19.296+05:30
செய்தியும் சிந்தனையும்
சந்தி... சிரிக்கிறது!
ச...<br />செய்தியும் சிந்தனையும்<br /><br /><br />சந்தி... சிரிக்கிறது!<br /><br />செய்தி: அத்வானியை நரேந்திர மோடி சந்தித்தார்.<br /><br />சிந்தனை: விடயம் சந்தி சிரிக்கிறதே - சந்திக்காமல் என்ன செய்வாராம்?தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-41331507529293777272013-06-19T18:55:08.222+05:302013-06-19T18:55:08.222+05:30
சு...தந்திரம்
நாடு ஆனந்த சுதந் திரம் பெற்று விட...<br />சு...தந்திரம்<br /><br /><br />நாடு ஆனந்த சுதந் திரம் பெற்று விட்டது என்று ஆடினார்கள் - பாடினார்கள். ஒவ்வொரு ஆகஸ்டு 15 அன்றும் பிள்ளைகளுக்கு மிட்டாய் கொடுக்கப்படுகிறது - (மன்னிக்கவும், கொஞ்சம் முன்னேறி - சாக்லெட் கொடுக்கப்படுகிறது)<br /><br />ஆனாலும்.. ஆனாலும்... 2012ஆம் ஆண்டு குறித்து தேசிய குற்ற ஆவணக் காப்பகம் எனும் அமைப்பு வெளியிட் டுள்ள ஒரு தகவல் நமது தலையை 360 டிகிரியில் சுற்றச் செய்கிறது.<br /><br />இந்தியத் துணைக் கண்டத்தில் 2012ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடத் தப்பட்ட வன்கொடுமை வழக்குகள் 33,655; 1.10 லட்சம் வழக்குகள் இன் னும் நிலுவை என்னும் ஊறுகாய்க் கலயத்தில் குறட்டை விட்டுத் தூங் கிக் கொண்டிருக்கின் றன - 5.6 சதவீத வழக் குகளில் மட்டும் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண் டனை வழங்கப்பட்டுள்ளது.<br /><br />இதுதான் இந்திய நாட்டின் சுதந்திரத்துக் கான தங்கப்பூண் அணி விக்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழ்!<br /><br />இந்த லட்சணத்தில் சில ஜாதீயவாதிகள் இப் பொழுது அக்னியைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டுள்ளார்கள். தலித்களுக்கு எதிரான அணியைத் திரட்டப் போகிறார்களாம். தமிழ் நாட்டில், தந்தை பெரியார் மண்ணில் அது வேகாது என்பதற்கு அடையாளம் அந்த நெருப்பு அதற்குள் அணைந்து சுருண்டது என்பதுதான்.<br /><br />தீண்டாமைக் குற்றம் செய்பவர்களைத் தண்டிப் பதற்காக இருப்பது வன் கொடுமைத் தடுப்புச் சட்டம்; அது தவறாகப் பயன்படுகிறது என்றும், அந்தச் சட்டத்தை அறவே நீக்கிவிட வேண்டும் என்றும் நீட்டி முழங்கிக் கொண்டுள்ளனர்.<br /><br />அவர்கள் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அளிக்கும் புள்ளி விவ ரத்தை ஒரு முறை கவனிக்க வேண்டும்.<br /><br />இன்னும் இரட்டைக் குவளை முறைகள் இருக் கின்றன. இன்னும் ஜாதி சுடுகாடுகள் இருக் கின்றன. இன்னும் கரு வறைக்குள் சென்று பூசை செய்யும் உரிமை தாழ்த் தப்பட்ட மக்களுக்குக் கிடையாது. இன்னும் கவுரவக் கொலைகள் - தருமபுரிகள் - நடந்து கொண்டுதான் இருக் கின்றன.<br /><br />இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டதா? சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டில் சுதந் திரம் இருக்குமா? என்ற தந்தை பெரியார் அவர்களின் வினாவுக்கு விடை எங்கே? எங்கே?<br /><br />- மயிலாடன் தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-91654590100189748912013-06-18T19:08:19.419+05:302013-06-18T19:08:19.419+05:30
பகுத்தறிவு
பகுத்தறிவு என்று சொல்வதும் மாறி மாறி...<br />பகுத்தறிவு<br /><br /><br />பகுத்தறிவு என்று சொல்வதும் மாறி மாறி வருவதாகும்.<br /><br />இன்று எவைகளை அறிவுக்குப் பொருத்தமானவை என எண்ணு கிறோமோ, அவை நாளைக்கு மூடப் பழக்க வழக்கங்கள் என தள்ளப்படும்.<br /><br />நாம் கூட பல பொருள்களை ஏன் மகான்கள் என்று புகழப்படுபவர்கள் சொன்னவற்றையே, பழைய கருத்துக்களெனத் தள்ளி விடவில்லையா?<br /><br />-குடிஅரசு, தொகுதி 32, பக்கம் 22தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-42659207333168414562013-06-18T19:07:39.355+05:302013-06-18T19:07:39.355+05:30தீர்மானம்
அடுத்தாற்போல் வரும் மக்கள் எண்ணிக்கை...தீர்மானம்<br /><br /> <br /><br />அடுத்தாற்போல் வரும் மக்கள் எண்ணிக்கைக் கணக்கெடுக்கும் சென்ஸஸ் என்பதில் திராவிட மக்கள் தங்களைத் திராவிடர்கள் என்றே சொல்ல வேண்டுமென்றும், இந்துக்கள் என்று சொல்லக் கூடாது என்றும் கேட்டுக் கொள்வதோடு எண்ணிக்கைக்காரர்கள், மதம் என்ன என்று கேட்டால் திராவிட சமயம் என்று சொல்லலாமே ஒழிய இந்து சமயம் என்று சொல்லக் கூடாது என்றும் வேண்டிக் கொள்கிறது.<br /><br />(4.8.1940 அன்று திருவாரூரில் பெரியார் ஈ.வெ.ரா. தலைமையில் நடந்த தென்னிந்திய நல உரிமைச் சங்க 15ஆவது மாகாண மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 18 ஆவது தீர்மானம்)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-86718783826468420662013-06-18T19:06:46.307+05:302013-06-18T19:06:46.307+05:30
பவுத்தம் விடுத்த பகுத்தறிவுக் கேள்விகள்
அரசர்கள...<br />பவுத்தம் விடுத்த பகுத்தறிவுக் கேள்விகள்<br /><br /><br />அரசர்களைக் கைக்குள் போட்டுக்கொண்டு ஜைனர்களையும், பவுத்தர்களையும் கழுவிலேற்றிச் சித்திரவதை செய்து கொன்ற கொலை பாதகங்களைத் திருவத்திபுரம், காஞ்சிபுரம் கோயில்களில் இன்றைக்கும் சிற்பங்களாகக் காணலாமே!<br /><br />யதாஹிசவ்ர;<br />ஸ்யத தயாஹி புத்த;<br />ததாகதம் நாஸ்திக மத்ரவித்தி<br /><br />என்று வால்மீகி ராமாயணம் கூறுகிறதே - இதற்குப் பொருளென்ன?<br /><br />திருடனும் புத்தனும் ஒன்றாவான். அவன் நாத்திகன் என்று இந்துமதத்தின் இதிகாசம் கூறி இருக்கிறதே. இந்த நிலையில் மாஜி சங்கராச்சாரியார் புத்தரின் நாத்திகவாதத்தையும், ஜைனர்களின் நாத்திகத் தத்துவத்தையும் போற்றிப் புது அகவல் பாடுகின்றார் என்றால், பார்ப்பனர்களின் சந்தர்ப்பவாதப் பாசாங்குத் தனத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.<br /><br />பவுத்தர்களையும், ஜைனர்களையும் வாதில் வெல்ல யோக்கியதை இல்லாத திருஞான சம்பந்தப் பார்ப்பனர் - சூழ்ச்சி வலைகளைப் பின்னி, சூதாக அவர்களைக் கொன்றொழித்த கதை எல்லாம் வரலாற்றில் சுவடு தெரியாமல் மறைந்துவிட்டன என்று சங்கர மடங்கள் மனப்பால் குடிக்கின்றனவா?<br />கையில் சரக்கு இருந்திருந்தால் உட்கார்ந்து மணிக்கணக்கில் பவுத்தர்கள், ஜைனர்களுடன் விவாதப் போர் நடத்தி இருக்கலாம்.<br /><br />கையாலாகாத் திருஞான சம்பந்தரோ கடவுளிடம் போய் அல்லவா மன்றாடுகின்றார், மடிப்பிச்சைக் கேட்கின்றார்.<br /><br />வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆதமில்லிய மணோடு தேரரை<br />வாதில் வென்றழிக்கத்<br />திருவுள்ளமே.<br /><br />இவர்களோடு வாதில் வெல்லக் கடவுள் அருள்புரிய வேண்டும் என்று மன்றாடுவதிலிருந்து இவர்களின் கோழைத்தனம் புரியவில்லையா?<br /><br />வாதில் வெல்ல மட்டுமா ஆண்டவனிடம் அடிபணிந்து கிடக்கின்றார்? ஜைன பவுத்தர்களின் அழகிய பெண்களின் கற்பினை அழிக்கவும் கடவுளிடம் வரம் கேட்கின்றார் திருஞான சம்பந்தர்.<br /><br />மண்ணகத்திலும் வானிலும் எங்குமாய்த்<br />திண்ணகத் திருவால வாயருள்<br />பெண்ணகத் தெழில் சாக்கியப் பேயமண்<br />பெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே<br /><br />என்று பாடுகின்றார் என்றால், பர்ப்பனீய வேதமதக் கொடுங்கோலர்களின் கேவலப் புத்தி எந்த எல்லை வரை தறிகெட்டு நிர்வாணக் கூத்தாடியிருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளலாம். பக்தியின் யோக்கியதையையும் தெரிந்து கொள்ளலாம்.<br /><br />இவ்வளவும் செய்துவிட்டு, இன்றைய தினம் ஆரியம் மாஜி சங்கராச்சாரியார் உருவில் பவுத்த, ஜைன நாத்திக வாதங்கள் பற்றிக் கசிந்துருகுகிறது என்றால்-இது எவ்வளவு நீலித்தனம்! போலித்தனம்!! போக்கிரித்தனம்!!!<br /><br />பவுத்தர்களும், ஜைனர்களும், புனல்வாதம், அனல்வாதம், புத்திவாதம் எல்லாம் செய்தனர் என்று மாஜி சங்கராச்சாரியார் கூறியுள்ளார்.<br /><br />பவுத்தர்கள் எழுப்பிய வினாக்களுக்கு விடை அளிக்க முடியாமல் விழி பிதுங்கினார்கள்.<br /><br />யாகத்தில் கொல்லப்படுகின்ற பசு சொர்க்கத்தை அடைவது உண்மையானால் யாகம் செய்கிறவன் தன் தந்தையைக் கொன்று சொர்க்கத்தை அடைவிக்காததன் காரணம் என்ன? யூபம் (யாகத்தில் வதைத்துக் கொல்லப்படுகின்ற பசுவைக் கட்டி வைக்கின்ற தூண்) உண்டுபண்ணிப் பசுக்களைக் கொன்று ரத்தச் சேற்றை உண்டுபண்ணுபவன் சொர்க்கத்தை அடைவானாயின், நரகத்தை அடைபவன் யாவன்?<br /><br />என்பதுபோன்ற அறிவு பொருந்திய ஆற்றல் கணைகளை அடுக்கடுக்காக ஆரியத்தை நோக்கிப் பவுத்தம் விடுத்தது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-44364659107314762062013-06-18T18:56:32.318+05:302013-06-18T18:56:32.318+05:30
அறிவிப்புகள் இருந்தாலும் எந்தக் காரணத்தாலோ அது நட...<br />அறிவிப்புகள் இருந்தாலும் எந்தக் காரணத்தாலோ அது நடைமுறைக்கு வராமல் தள்ளிக் கொண்டே போனது. முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களின் உடல் நல பாதிப்பும் ஒரு காரணம். சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு அரசு சார்பில் முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களின் தலைமையில் நடைபெற்ற தந்தை பெரியார் 113 ஆம் ஆண்டு விழாவில் அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள், தந்தை பெரியார் அவர்களின் இறுதி விருப்பமான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் வாய்ப்பினை உருவாக்கும் கோரிக்கையினை முதல் அமைச்சர் முன் வைத்தார். (17.9.1991).<br /><br />அ.இ.அ.தி.மு.க.வின் 20ஆம் ஆண்டு தொடக்க விழாவில் ஹேமமாலினி மண்டபத்தில் கலந்து கொண்ட முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கீழ்க்கண்ட அறிவிப்பினை வெளியிட்டார்.<br /><br />தமிழக அரசு சார்பில் வேதாகமக் கல்லூரி திறக்கப்பட உள்ளது. அதுபற்றிப் பல பிரச்சினைகளும் எழுப்பப் பட்டுள்ளன. அதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அரசால் திறக்கப்படவிருக்கும் வேத ஆகம கல்லூரியில் தாழ்த்தப் பட்டவர்களும் இடஒதுக்கீட்டுக் கொள்கைப்படி 18 சதவீதம் சேர்த்துக் கொள்ளப்படுவர். அவர்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டு, கோயில் அர்ச்சகர்களாக ஆக்கப் படுவார்கள். இதன் மூலம் பெரியார், அண்ணா கனவுகள் நனவாக்கப்படும் என்று பேசினார். (17.10.1991).<br /><br />அது ஆகமக் கல்லூரியாக இருக்க வேண்டுமே தவிர வேத ஆகமக் கல்லூரியாக இருக்கக் கூடாது என்று கழகப் பொதுச் செயலாளர் கூறினார். அதனை முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் ஏற்றுக் கொண்டு தமிழ்நாடு சட்டப் பேரவையில் இந்து அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்மீது உரையாற்றிய போது தெளிவாக திட்டவட்டமாக அறிவித்தார்.<br /><br />இந்தக் கல்லூரியை அமைப்பதற்குத் தேவையான நிலம் மற்றும் நிதி உதவி அளிக்க சில பெரியவர்களும் முன் வந்திருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கல்லூரியை அமைதி சூழ்ந்த இடத்தில் ஆன்மீக உணர்வுக்குத் தகுந்த இயற்கைச் சூழலில் அமைத்திட வேண்டும் என்றும், அப்படி தேர்ந்தெடுக்கப்படும் இடம் ஆழ்ந்த தியானத்திற்கும், வழிபாட்டிற்கும் உகந்ததாக இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் இதற்குத் தேவைப்படும் 40 ஏக்கர் நிலத்தைத் தேர்வு செய்யும் பணி நடந்து கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீட்டு முறை இந்தக் கல்லூரியிலும் பின்பற்றப்படும் என்று சட்டப் பேரவையிலேயே முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தாரே! (9.4.1992) திருச்சியை அடுத்த கம்பரசம் பேட்டையில் அதற்கான இடமும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் தேர்வு செய்யப்பட்டதே!<br /><br />இவ்வளவையும் எடுத்துக்காட்டுவதற்குக் காரணமே - இந்தப் பிரச்சினை அஇஅதிமுகவுக்கு - அதன் ஆட்சிக்கு - முதல் அமைச்சருக்கு உடன்பாடான ஒன்றே என்பதை நினைவூட்டவும், செயல்படுத்திட தார்மீகக் கடமை இருக்கிறது என்பதை வலியுறுத்தவும்தான்; உச்சநீதிமன்றத் தில் நிலுவையில் இருக்கும் வழக்கைத் துரிதப்படுத்தி வெற்றிகரமாக இந்தத் திட்டத்தை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்பதே நமது மிக முக்கியமான வேண்டுகோள்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-31647019786794963572013-06-18T18:56:26.328+05:302013-06-18T18:56:26.328+05:30முதல் அமைச்சர் ஜெயலலிதா ஏற்றுக் கொண்ட முடிவுதான்!
...முதல் அமைச்சர் ஜெயலலிதா ஏற்றுக் கொண்ட முடிவுதான்!<br /><br /><br /><br />திண்டுக்கல் திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பது ஜாதி - தீண்டாமை ஒழிப்பை மய்யமாகக் கொண்டது என்றும், இதில் எந்தவித அரசியல் பிரச்சினையும் கிடையாது என்றும் தெளிவுபடுத்தியதோடு, அதனைத் தமிழக அரசு செயல்படுத்தினால், மகிழ்ச்சியோடு வரவேற்பதோடு, பாராட்டவும் தயங்க மாட்டோம் என்று மனந்திறந்து பேசினார்.<br /><br />தி.மு.க.வோடு சம்பந்தப்படுத்தி அரசியல் கண்ணோட் டத்தோடு பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்த போது, அதற்கான போராட்டத்தை அறிவித்த நேரத்தில், உங்களுடைய சீடர்கள் ஆட்சியில் இருக்கும் பொழுது நீங்கள் போராட்டம் நடத்த வேண்டுமா? அதற்கான சட்டத்தை தி.மு.க. அரசு கொண்டு வரும் என்று சொல்லி அதற்கான சட்டம் நிறை வேற்றப்பட்டது.<br /><br />அதன் தொடர்ச்சியாக எம்.ஜி.ஆர். அவர்களும், அதனை ஏற்றுக் கொண்டு தந்தை பெரியார் நூற்றாண்டையொட்டி நீதியரசர் எஸ். மகராஜன் தலைமையில் 12 பேர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு, பரிந்துரையும் பெறப்பட்டது.<br /><br />அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதற்கு ஆகமவிதிகள் தடையாக இல்லை என்றும் அந்த அறிக்கை காரண காரியத்துடன் தெளிவுபடுத்தியது.<br /><br />அந்த அறிக்கையின் அடிப்படையில் அர்ச்சகர் பயிற்சி அளிப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி என். கிருஷ்ணசாமி ரெட்டியார் தலைமையில் 13 பேர் கொண்ட குழுவையும் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். நியமித்தார் (செய்தி, சுற்றுலா மற்றும் (தமிழ்) பண்பாட்டுத் (செ.வை) துறை - செய்தி வெளியீடு எண் 339 நாள்: 8.9.1984).<br /><br />அந்தக் குழுவும் மூன்று மாதத்தில் அதற்கான அறிக்கையைத் தயாரித்துக் கொடுத்தது. பழனி கோயிலில் ஆகமக் கல்லூரி அமைக்கப்பட்டு அனைத்து ஜாதி யினருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்படும் என்று எம்.ஜி.ஆர். ஆட்சியில், இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எம். வீரப்பன் அவர்கள் தமிழ்நாடு சட்டப் பேரவையிலேயே அறிவித்தார்.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-65664225816661343522013-06-18T18:54:50.149+05:302013-06-18T18:54:50.149+05:30
தனிச் சலுகை
ஏழைகள் வாழ்வு மலரவே சமதர்மம் விழைக...<br />தனிச் சலுகை<br /><br /><br /><br />ஏழைகள் வாழ்வு மலரவே சமதர்மம் விழைகிறோம். எல்லா வகுப்பினரும் சம வாய்ப்புப் பெறும் வரையில் திட்டமிட்டுப் பரம்பரையாய்த் தாழ்ந்துள்ள சமூகத்தினர்க்குத் தனிச் சலுகை தரப்படவேண்டும்.<br />(விடுதலை, 8.12.1967)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-76641020513046107232013-06-18T18:53:38.276+05:302013-06-18T18:53:38.276+05:30
எழுத்தாளர் இராமகிருஷ்ணன் :
எழுத்துரு அளவு Larger ...<br />எழுத்தாளர் இராமகிருஷ்ணன் :<br />எழுத்துரு அளவு Larger Font <br /><br /> <br /><br />சென்னை நாரத கான சபாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் கூறியதாவது:<br /><br />கோயில்களில், சிலைகளின் அழகைப் பார்க்காமல் குங்குமமும், விபூதியும் அவற்றில் கொட்டிப் பாழாக்குகிறோமே என்றார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-56090939558295551852013-06-18T18:52:25.115+05:302013-06-18T18:52:25.115+05:30
நீதியரசர் கர்ணன்
இந்த மனுவை நீதிபதி சி.எஸ்.கர்ணன...<br />நீதியரசர் கர்ணன்<br /><br />இந்த மனுவை நீதிபதி சி.எஸ்.கர்ணன் விசாரித் தார். அவர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-<br /><br />தனது உத்தரவால் ஒரு பாவமும் அறியாத குழந்தைகளுக்கு சமுத யத்தில் பாதிப்பு ஏற் படும் என்பதை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி கவனிக்கவில்லை.<br /><br />இந்த இரண்டு குழந் தைகளையும், முகம துக்கு முறைதவறிப் பிறந்தவை என்று குடும்பநல நீதிமன்றம் நீதிபதி கூறியுள்ளார். குழந்தை பிறப்பின் போது, கணவன், மனை வியிடம் மருத்துவமனை நிர்வாகம் ஒப்புதல் கையெழுத்து பெறுவ துண்டு. அந்த ஆவணத் தில் கணவன், மனை விக்காக குறிக்கப் பட்டு இருக்கும் இடத்தில் இரண்டு பேரும் கையொப்பமிட்டு இருப்பதால், அவர்களுக்குப் பிறந்த குழந்தையை முறையற்ற பிறப்பு என்று கூற முடியாது.<br />திருமணத்தை நடத்துவது, சமுதாயம் மற்றும் சடங்குகளுக்காக வைக்கப்படும் ஒன்று. ஆனால் சட்டத்தின் அடிப்படையில் அவை கட்டாயமல்ல.<br />இந்த வழக்கில் முகமது மற்றும் பாத்திமாவை, வித்தியாசமாக சுய அடையாளமிட்டுக் கொண்ட கணவன், மனைவி என்றே இந்தக் நீதிமன்றம் கருதுகிறது. எனவே அவர்களுக்குப் பிறந்த அந்த குழந்தைகளும் முறையானவைதான்.<br /><br />பாலியல் உறவு முக்கியம்<br /><br />ஒரு பெண்ணுக்கு 18 வயது, ஒரு ஆணுக்கு 21 வயதும் பூர்த்தியாகி, (ஏற்கனவே திருமணம் ஆகாத நிலையில்) அவர்கள் பாலியல் தொடர்பு வைத்துக் கொள்வதன் மூலம், அந்தப் பெண் கர்ப்பம் தரித்தாள் என்றால், அவள் மனைவி என்றும் அவன் கணவன் என்றும் கருதப்பட வேண்டும் என்பது இந்த நீதிமன்றத்தின் கருத்து.<br /><br />ஒருவேளை அவள் கர்ப்பம் தரிக் காமல் போனாலும், அவர்களுக்குள் பாலியல் தொடர்பு இருந்தது என்பதற்கான ஆதாரம் இருந்தால், இருவருமே கணவன், மனைவி உறவுக்கு உட்பட்டவர்கள்தான். எனவே அப்படிப்பட்ட பாலியல் தொடர்புடைய இரண்டு பேருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால், சட்ட பூர்வமாக மனைவியிடம் இருந்து நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்ற பிறகுதான், மற்றொரு வரை கணவன் திருமணம் செய்ய முடியும்.<br /><br />ஒரு பெண்ணுடன் உடல் ரீதியான தொடர்பு ஏற்பட்டுவிட்டது என்ப தால், அவரிடம் இருந்து சட்ட பூர்வமான விவாகரத்து பெறாமல் மற்றொரு திருமணத்தை கணவன் செய்ய முடியாது.<br /><br />சட்ட பூர்வமான வயதை அடைந்த இரண்டு பேரும் பாலியல் ரீதியான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டாலே, பின் விளைவுகளைக் கொண்ட ஒரு அர்ப்பணிப்புக்கு உள்ளாகி விடு கின்றனர்.<br /><br />அப்படி சட்டபூர்வ வயதை அடைந்த ஆண், பெண் இரண்டு பேர் (ஏற்கெனவே திருமணம் ஆகாத வர்கள்), பாலியல் உறவுகளை வைத்துக் கொண்டால், அவர்களின் செயல்பாட்டை திருமணம் என்றும் அவர்கள் இருவரையும் கணவன் மனைவி என்றும் கருதலாம். சட்ட பூர்வமான வயதைக் கடந்த பிறகு கிடைக்கும் சுதந்திரத்தின் அடிப் படையில் அவர்கள் விருப்பப்படி தேர்வு செய்துகொள்கின்றனர்.<br /><br />தாலி கட்டுவதும் சடங்குகளும் மட்டும் திருமணமல்ல<br /><br />தாலி கட்டுவது, மாலை, மோதிரம் மாற்றுவது, தீக்குழியை சுற்றுவது அல்லது அரசு அலுவலகத்தில் போய் பதிவு செய்வது போன்றவை எல்லாம், மதச் சடங்குகளை பின்பற்றி சமு தாயத்தை திருப்திப்படுத்துவதற்காகத் தான் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து மதச் சடங்குகளை பின் பற்றி திருமணம் செய்த பிறகும், கணவன், மனைவிக்குள் பாலியல் ரீதி யான உறவு இல்லாவிட்டால், அந்தத் திருமணம் சட்டப்படி செல்லாது.<br /><br />எனவே ஒரு திருமணத்தின் முக்கிய மான சட்ட பூர்வமான ஆதாரம் என்னவென்றால், அது அந்த இணை யர்க்கு இடையே உள்ள பாலியல் உறவுதான். இந்த வழக்கில் அப்படிப் பட்ட உறவு நடந்தேறியுள்ளது. எனவே தங்களுக்கு இடையே பாலி யல் உறவு இருந்ததற்கான ஆதாரங் களை குடும்பநல நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, திருமணம் நடந்ததை அவர்கள் நிரூபிக்கலாம்.<br /><br />அப்படி திருமணம் நடந்ததை நிரூபிக்கும் பட்சத்தில், தன்னை முகமதுவின் மனைவி என்று அரசு ஆவணங்களில் பாத்திமா பதிவு செய்து கொள்ளலாம். சடங்குகளு டன் திருமணம் செய்த தம்பதிகளுக்கு என்ன சட்ட உரிமைகள் உள்ளதோ, அதே உரிமைகளை, தங்களுக்கு இடையே இருந்த பாலியல் உறவை நிரூபிக்கும் தம்பதியினரும் பெற்றுக் கொள்ளலாம்.<br /><br />திருமண சடங்குகள் முடிந்து, அதன் பிறகு பாலியல் உறவு நடந்தால் தான் சட்டப்படி அந்த திருமணம் செல்லும். பாத்திமா விவகாரத்தில், திருமண சடங்குகள் இல்லாமலேயே பாலியல் உறவு நடந்திருக்கிறது. எனவே அது திருமணம்தான்.<br /><br />பராமரிப்புக்காக பணம் வழங்கப்பட வேண்டும்<br /><br />ஆகவே, கணவன் முகமது தனது மனைவி பாத்திமாவுக்கு மாதம் ரூ.500-அய் பராமரிப்புச் செலவுக்காக வழங்க வேண்டும். 2000-ஆம் ஆண்டு செப்டம்பரில் அதற்கான வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்ததால், அந்த ஆண்டில் இருந்து கணக்கிட்டு 3 மாதங்களுக்குள் பாக்கித் தொகையை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-42103253861146253452013-06-18T18:52:18.996+05:302013-06-18T18:52:18.996+05:30
திருமணம் என்பது வெறும் தாலி கட்டுவதும், சடங்கும் ...<br />திருமணம் என்பது வெறும் தாலி கட்டுவதும், சடங்கும் அல்ல!<br /><br /><br />ஆண் - பெண் இருபாலருக்குமிடையே நிலவும் பாலியல் உறவே!<br /><br /><br />சென்னை, ஜூன் 18- திருமணம் என்பது தாலி கட்டுவதும், மதச் சடங் குகள் செய்வது அல்ல. ஆண் - பெண் இருவருக் கிடையே நிலவும் பாலி யல் உறவே கணவர் மனைவி என்பதை நிச்ச யிக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் புதிய சிந்தனையின் அடிப் படையில் தீர்ப்பை வழங்கியுள்ளது.<br /><br />கோவை பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா (வயது 35). இவருடைய கணவர் முகமது. (இரண்டு பேரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன). முகமது செருப்பு தயா ரித்து விற்பனை செய் பவர். இவர்களுக்கு 16.9.94 அன்று இஸ்லா மிய முறைப்படி திரு மணம் நடந்ததாக கூறப்படுகிறது. திருமண வாழ்க்கையின் பலனாக 23.12.96 மற்றும் 1.1.99 அன்றும் முறையே இரண்டு பெண் குழந் தைகள் பிறந்தன.<br /><br />1999-ஆம் ஆண்டு மனைவி, குழந்தைகளை விட்டு முகமது பிரிந்து சென்றுவிட்டார். மீண் டும் அவர்கள் சேர்ந்து வாழ்வதற்கான முயற் சிகள் மேற்கொள்ளப் பட்டன. ஆனால் அனைத்தும் வீணாய்ப் போய்விட்டன. முகமது வுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் வருமானம் வரு கிறது. எனவே அவரிடம் இருந்து மாதம் ரூ.5 ஆயிரம் கேட்டு கோவை குடும்பநல நீதிமன்றத்தில் பாத்திமா வழக்கு தாக் கல் செய்தார்.<br /><br />இந்த வழக்கை குடும்பநல நீதிமன்றம் விசாரித்தது. விசார ணையின்போது, புகைப் படங்கள், முகமதுக்கு குழந்தைகள் எழுதிய கடிதங்கள், குழந்தை களின் கல்விச் சான்றிதழ், பிறப்புப் பதிவு, ரேஷன் அட்டை பெறுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் ஆகியவை பாத்திமா தரப்பு ஆதா ரங்களாக தாக்கல் செய்யப்பட்டன. செருப்பு குடோனில் வேலை பார்த்தபோது தன்னுடன் பழகி, அதன் பிறகு தன்னை முகமது திருமணம் செய்ததாக பாத்திமா தரப்பில் வாதி டப்பட்டது.<br /><br />கையொப்பமே ஆதாரம்<br /><br />இரண்டாவது குழந் தைக்கான பிறப்பு அறிக் கையில், தந்தை முகமது என்றும், தாய் பாத்திமா என்றும் குறிப்பிடப்பட் டுள்ளதை டாக்டர் சாட் சியாகக் கூறினார்.<br /><br />இரு தரப்பு வாதங் களையும், ஆதாரங் களையும் பரிசீலித்த குடும்பநல நீதிமன்ற நீதிபதி, இரண்டு குழந் தைகளும் முகமதுக்குத் தான் பிறந்தவர்கள் என்றும் அதனால் இரண்டு பேருக்கும் தலா ரூ.500 தொகையை பராமரிப்புக்காக வழங்க வேண்டும் என்றும் 2006-ஆம் ஆண்டு உத்தர விட்டார்.<br /><br />ஆனாலும், முகம துவை திருமணம் செய் ததற்கான ஆதாரம் எது வும் இல்லை என்பதால் பாத்திமாவுக்கு பரா மரிப்புத் தொகை வழங்க உத்தரவிட முடியாது என்றும் நீதிபதி உத்தர விட்டார். இந்த உத்த ரவை எதிர்த்து நீதிமன் றத்தில் பாத்திமா மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார்.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-54018517188346962662013-06-18T18:49:54.655+05:302013-06-18T18:49:54.655+05:30மீண்டும் ஹிந்து சாம்ராஜ்ஜியப் பேராசை?
- ஊசி மிளகா...<br />மீண்டும் ஹிந்து சாம்ராஜ்ஜியப் பேராசை?<br /><br />- ஊசி மிளகாய்<br /><br />ஆர்.எஸ்.எஸ்.சின் ஏடு ஒன்றில் கீழ்க் கண்டவாறு எழுதப்பட்டுள்ளது (21.6.2013).<br /><br />ஜூன் 21ஆம் தேதி, ஜேஷ்ட, சுக்ல த்ரேயோதசி (ஆனி மாதம் சுக்லபட்சம், த்ரயோதசி திதி) புனித நாளாகும்! இதே நாளில்தான் 1674 ஜூன் 6ஆம் தேதி, சத்ரபதி சிவாஜி ஹிந்து சாம்ராஜ்யத்தின் மன்னனாக முடி சூட்டிக் கொண்டார்.<br /><br />பிரபல சரித்திர ஆராய்ச்சியாளரான ஸ்ரீ ஜதுநாத சர்க்கார் சிவாஜியைப் பற்றி எழுதியுள்ளதில் தங்களுக்கு உகந்த சில பகுதிகளை மட்டும் (இதுதான் ஆரியத்தின் கைதேர்ந்த டெக்னிக்குகளில் ஒன்றாயிற்றே!)<br /><br />...சிவாஜி ஒரு அவதார புருஷரல்ல. நம்மைப் போன்ற ஒருவர்தான் என்பதை நினைப்போம்!<br /><br />...சிவாஜி மகாராஜாவைப் போலவே சுதந்திரமான ஹிந்து ராஷ்டிரத்தை உருவாக் குவோம் என்று இந்த மங்களகரமான நன்னாளில் விரதமேற்போம் ........என்று முடித்துள்ளார்கள்.<br /><br />அதே வரலாற்று ஆசிரியர் ஜதுநாத் சர்க்காரின் எழுத்துக்களையும், இன்னும் சில சரித்திர நூல்களையும் ஆதாரமாகக் கொண்டே அறிஞர் அண்ணா அவர்கள், தானே எழுதி நடித்த சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் -<br /><br />பார்ப்பனர்களின் பக்திச் சுரண்டல்கள், எப்படி சிவாஜியின் கஜானாவையே, யாகயோகம் என்று கூறி மொட்டையடித்தது என்பதை மிகத் துல்லியமாக, தானே ஏற்று நடித்த காகபட்டர் வேடத்தின் மூலமும் அவரது சீடன் கங்குபட்டர் மூலமும் விளக்கி யுள்ளார்களே!<br /><br />தோனார், புரந்தர், கல்யாண் போன்ற எண்ணற்ற மலைக்கோட்டைகளை வென்ற மலைஎலி என்று புகழப்பட்ட சிவாஜி முடி சூட்டிக் கொள்ள முனைந்த நேரத்தில், அது முடியாத காரியம் என்று தடுத்தது ஹிந்துமத சனாதன சாம்ராஜ்யம் அல்லவா!<br /><br />சிவாஜி நீ சூத்திரன் - நாலாம் ஜாதிக் காரன் அடிமை வேலையை பிராமணருக்குச் செய்ய ஆண்டவனால் உண்டாக்கப்பட்டவன், நீ எப்படி மன்னனாக முடியும்?<br /><br />க்ஷத்திரியர்கள் அல்லவோ நாடாளப் பிறந்தவர்கள். நாடாள அவர்கள் ஆசைப்பட்டால் அதுதான் வர்ண தர்மப்படி நியாயமானது; நீ விரும்புவது அதர்மம், என்றவுடன், மனம் வெதும்பி, இதை மாற்ற வேறு மார்க்கமில்லையா குருதேவா? என்று கேட்க, கங்கை நதிப் புரத்திலிருந்து காகபட்டர் என்ற பெரும் பிராம்மண முனிவரை அழைத்து வந்து பெருத்த யாகம் செய்து, அவர் அழைக்கும் ஆயிரக்கணக்கான பிராம்மணர் களுக்கும் பொன்னும், வைரமும், மற்றவை களையும் தானமாக தாராளமாகக் கொடுத்து, 45 நாள் யாகம் தொடர்ந்து செய்தால் உன்னைத் தற்காலிகமாக க்ஷத்திரி யனாக்கி மன்னனாக்கி முடி சூட்டலாம் என்று ஆசைகாட்டி மோசம் செய்யப்பட்ட அந்த சிவாஜி பரம்பரை எப்படி வீழ்ந்து, பார்ப்பன சாம்ராஜ்யமாகவே - பேஷ்வாக்களே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி பச்சை வர்ணாசிரம ஆட்சியாகியது என்ற வரலாற்றை அருமையாக 3 மணி நேரத்தில் நாடகமாக்கினார் - அறிவு வெளிச்சம் ஏற்பட்டது.<br /><br />அதில் சிவாஜி ஒப்பனையோடு சிவாஜி யாகவே மாறி சிறப்பாக நடித்த வி.சி. கணேசனுக்கு தந்தை பெரியார் இன்று முதல் சிவாஜிகணேசன் என்று கூற, அதுவே அவரது பெயராக இறுதிவரை ஆகிவிட்ட கதை சில பேருக்காவது தெரிந்தால் நல்லது.<br /><br />சிவாஜி கண்ட ஹிந்து ராம்ராஜ்யம் பார்ப்பனர்களின் பகற் கொள்ளை சாம்ராஜ்யம், யாகங்கள் என்ற பெயரால் சோம்பேறிப் பார்ப்பனர்கள் கூட்டம் பொன்னையும், பொருளையும் அள்ளிச் சென்று அக்கிர காரத்தில் ஆட்டம் போட்டு, செல்வச் செழிப்பில் புரண்ட காலம் தான் ஹிந்து சாம்ராஜ்ய வர்ணதர்மக் கொடி பறந்த கொடுமையான காலம்!<br /><br />அந்த நாடகத்தில் மிக அருமையாக எளிய முறையில் அண்ணா காகபட்டராக நடித்துக் காட்டுவார்! கங்குபட்டர் என்ற ஒரு அப்பாவி சீடன் கேள்வி கேட்பான்.<br /><br />அவனை வைத்து அருமையான பாடங்களை கூறுவார்.<br /><br />டேய் கங்கு, நான் எதன்மீது அமர்ந்துள்ளேன் பார்த்தாயா?<br /><br />ஹம் தெரியாதா - ஆசனத்தில்....<br /><br />டே - மண்டு அதல்லடா - ஆசனத்தில் எதன்மீது?<br /><br />புலித்தோல்மீது...!<br /><br />பார்த்தாயா அந்த புலியை உயிருக்குத் துணிந்து வேட்டையாடியவன் எவனோ?<br /><br />நான் புலித்தோல்மீது சுகமாய் அமர்ந்துள்ளேன் இதுதாண்டா நம்மவாளின் சாமர்த்தியம் புரிந்ததோ என்பார்.<br /><br />இப்படி ஆரியத்தின் தோலை உரித்து மறைந்த வரலாற்று உண்மைகளை நாடகமாக்கி சிந்திக்க வைத்து எழுச்சி உண்டாக்கினார் அண்ணா.<br /><br />சிவாஜிக்கு நல்ல புத்தி கூறிய தளபதி சந்திரமோகனை விரட்டி விட்டான் சிவாஜி ஆரியர் பேச்சைக் கேட்டு.<br /><br />அதுபோல ஹிந்து சாம்ராஜ்யம் மீண்டும் வர வேண்டுமாம்<br /><br />எவ்வளவு பேராசை பார்த்தீர்களா?<br /><br />'' பேராசைக்காரனடா பார்ப்பான்!<br /><br />பிச்சுப்பணங் கொடு என்றே தீர்ப்பான்?"<br /><br />- பார்ப்பன பாரதியார் தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-29597367571382218692013-06-18T07:29:47.312+05:302013-06-18T07:29:47.312+05:30விஞ்ஞானிக்கும் . . .
பிரபல விஞ்ஞானி அய்ன்ஸ்டீன்...விஞ்ஞானிக்கும் . . .<br /> <br /><br />பிரபல விஞ்ஞானி அய்ன்ஸ்டீன் ஒரு சமயம் ரெயிலில் பயணம் செய்துகொண்டு இருந்தார். அவர் மனதிற்குள் ஒரு கஷ்டமான கணக்கிற்கு விடை தேடிக் கொண்டு இருந்தார். அப்போது டிக்கெட் பரிசோதகர் வந்தார்.<br /><br />அவர் ஒவ்வொருவரிடமும் டிக்கெட் வாங்கிச் சோதித்துக் கையெழுத்துப் போட்டார். பிறகு ஆல்பர்ட் அய்ன்ஸ்டீனிடம் டிக்கெட் கேட்டார். அவர் தான் அணிந்திருந்த கோட்டுப் பைக்குள் கையை விட்டு டிக்கெட்டைத் தேடினார். அது எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. டிக்கெட் பரிசோதகர் அவரை உற்றுப் பார்த்தார். அவர் அறிவியல் மேதை அய்ன்ஸ்டீன் என்பதை அறிந்து கொண்டார். பரவாயில்லை அய்யா, டிக்கெட்டைத் தேட வேண்டாம் என்று சொல்லிக் கொண்டே அடுத்த நபரிடம் டிக்கெட்டை வாங்கிப் பரிசோதித்தார்.<br /><br />அப்பொழுதும் தனது சூட்கேசைத் திறந்து அய்ன்ஸ்டீன் கவனமாக டிக்கெட்டைத் தேடிக் கொண்டு இருந்தார். அதன் உள்ளே இருந்த புத்தகங்களை எல்லாம் எடுத்து வெளியே போட்டுத் தேடினார். துணிகளிலும் டிக்கெட் இருக்கிறதா என்று ஒவ்வொன்றாக உதறிப் பார்த்தார். அப்பொழுதும் கிடைக்கவில்லை .<br /><br />அப்போது மீண்டும் டிக்கெட் பரிசோதகர் அந்த வழியாக வந்தார். அய்யா, தாங்களோ உலகப் புகழ் பெற்ற பெரிய விஞ்ஞானி. தங்களிடம் டிக்கெட் இல்லாவிட்டால்தான் என்ன? ஏன் வீணாகத் தேடிக் கொண்டு கஷ்டப்படுகிறீர்கள்? உங்களால் இந்த நாட்டிற்கே பெருமை. டிக்கெட் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. என்று மீண்டும் சமாதானப்படுத்தினார்.<br /><br />அய்ன்ஸ்டீன் மீண்டும் தேடிக்கொண்டே, உங்களுக்குப் பரவாயில்லை. நான் எந்த ஊருக்குப் போக வேண்டும் என்ற விவரம் டிக்கெட்டில் அல்லவா இருக்கிறது? நான் என்ன செய்வது? எனக்கு இப்போது டிக்கெட் வேண்டுமே..! என்றார்.<br /><br />- சந்திரன் வீராசாமிதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-54001178790521291742013-06-18T07:22:15.263+05:302013-06-18T07:22:15.263+05:30
கடல்லயே இல்லையாம்!
(இந்திய ஒலிம்பிக்கும், வண்டு...<br /><br />கடல்லயே இல்லையாம்!<br /><br />(இந்திய ஒலிம்பிக்கும், வண்டுமுருகன் ஜாமினும்)<br /><br />உலகெங்கும் ஒலிம்பிக் நாள் கொண்டாடப்படுகிறது. நீங்களும் கலந்து கொள்ளுங்கள்.. ஒலிம்பிக் அருங்காட்சியகத்தைப் பார்க்கும் வாய்ப்பை வெல்லுங்கள் அப்படின்னு ஒரு விளம்பரம். சரி, நாமளும்தான் என்ன போட்டின்னு போய்ப் பார்க்கலாமேன்னு பார்த்தேன். உங்களுக்குப் பக்கத்தில எங்க விழா நடக்குதோ, போட்டி நடக்குதோ அங்க போய் கலந்துக்கங்கன்னு போட்டிருந்துச்சு. சரி, நம்மளுக்குப் பக்கத்திலன்னா சென்னை இல்ல பெங்களூரு-வா இருக்கும்னு ஆவலா எடுத்துப் பார்த்தா... அடப் பாவிகளா...<br /><br />வஞ்சர மீன் இருக்குன்றான்... வால மீன் இருக்குன்றான்...<br /><br />கெண்டை மீன் இருக்குன்றான்... கெளுத்தி மீன் இருக்குன்றான்...<br /><br />அவ்வளவு ஏன் சுறா மீன் கூட இருக்குன்றான்... ஆனா... ஜாமீன் மட்டும் இல்லைங்கிறான்...<br /><br />கடல்லயே இல்லையாம்..னு வடிவேலு படத்தில வர்ற மாதிரி...<br /><br />பாகிஸ்தான்ல இருக்குன்றான்... பங்களாதேஷ்ல இருக்குன்றான்...<br /><br />இலங்கைல இருக்குன்றான்... இந்தோனேசியால இருக்குன்றான்...<br /><br />மியன்மார்ல இருக்குன்றான்... மாலத்தீவுல இருக்குன்றான்...<br /><br />அவ்வளவு ஏன் நேபாளத்திலகூட இருக்குன்றான்... ஆனா... இந்தியாவுல மட்டும் இல்லைங்கிறான்...<br /><br />ஒரு கண்ணை இடுக்கிக் கொண்டு, இந்தியா ஒலிம்பிக்-லயே இல்லையாம்..னு சொல்றாய்ங்க...<br /><br />அதிர்ச்சி ஆகாதீங்க.. இது பழைய செய்தி! கடந்த ஆண்டு டிசம்பர்லயே இந்திய ஒலிம்பிக் சங்கத்தைத் தடை பண்ணிருச்சாம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி! இங்க ஒரே ஊழல், அரசின் தலையீடு, முறைகேடு, உறுப்பினர்கள் பலர் மேல கிரிமினல் வழக்குகள் அப்படியிப்படி ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளைச் சொல்லித் தடை பண்ணிட்டாங்க... துப்பாக்கிச் சுடும் போட்டியில பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா, மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் மாதிரி ஆட்கள் நேரில போய் ஒலிம்பிக் சங்க நிர்வாகிகளை 5 மாதம் கழிச்சுச் சந்திச்சு (கடந்த மே மாதத்தில) தடையை நீக்கக் கேட்டிருக்காங்க... முறையா தேர்தல் நடத்துங்க... அப்புறம் தடையை ரத்து பண்றோம்னு சொல்லிட்டாங்க... நம்மாளுகளும் நம்பிக்கை தெரிவிச்சுட்டு வந்துட்டாங்க...<br /><br />இதைப் பத்தி எவனுக்காவது தெரியுமா? கிரிக்கெட் - ஒரு விளையாட்டுன்னு அதைக் கட்டிக்கிட்டு அழுது, அதுலயும் சூதாடி, ஊழல் செஞ்சு, அதைப் பத்தியே பேசிக்கிட்டிருக்கானுக...<br /><br />இங்க என்னடான்னா, உருப்படியா விளையாட வேண்டிய விளையாட்டுகளுக்கே ஆப்பு வந்திடுச்சு! முழுமையான உடல் தகுதியும், விளையாட்டுத் திறமையும் இருக்கிற, இந்த நாட்டோட மூலை முடுக்குகள்லயும், கிராமங்கள்லயும், மலைப் பகுதியிலயும் இருக்கிற வீரர்கள், வீராங்கனைகளைக் கண்டுக்காம, அவங்களை வளர்த்தெடுக்காம, பணம் - சிபாரிசுன்னு உருப்படாத சாம்பார்களைத் தேர்ந்தெடுக்கிறது - கிரிக்கெட் மாதிரி மொக்கை விளையாட்டுகளுக்கு விளம்பரம், வசதி கொடுக்கிற ஊடகங்கள், அரசுகள் எல்லாம் உருப்படியான விளையாட்டுகளுக்கு வசதி தராம தட்டிக் கழிக்கிறதுன்னு இருந்தா... வௌங்கும் இந்த நாட்டு விளையாட்டு!<br /><br />கிரிக்கெட் இந்த நாட்டுல மத்த உண்மையான விளையாட்டுகளை எப்படி ஒழிச்சதுன்னு ரொம்பப் பேரு கேட்கிறாங்க... ஒலிம்பிக்-ல நம்ம இல்லைங்கிறதயே தெரியாம வச்சிருக்கே... இதை விடவா ஒரு எடுத்துக்காட்டு வேணும்... அந்த மட்டையைப் புடுங்கி அடுப்புல போட்டாத் தான் நாடு உருப்படும்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-28605093325150033862013-06-18T07:20:10.514+05:302013-06-18T07:20:10.514+05:30கலகலக்கும் கடவுள்
இறைநம்பிக்கையாளர்கள் 6% குறைந்த...கலகலக்கும் கடவுள்<br /><br />இறைநம்பிக்கையாளர்கள் 6% குறைந்துவிட்டதாக குறிப்பிடுவோர், யோசிக்க வேண்டாமா, இறைநம்பிக்கையாளர்கள் குறைந்துவிட்டனர் என்றால் நாத்திகர்களின் எண்ணிக்கையில் இந்த 6% அதிகரித்திருக்க வேண்டாமா? ஆனால் 3% தானே நாத்திகர்கள்? என்று விடுதலையில் வெளிவந்த செய்தியைப் பார்த்து மதவாதிகள் சிலர் இணையத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர்.<br /><br />இறை நம்பிக்கையாளர்கள் 6% குறைந்தால் கடவுள் நம்பிக்கையற்றோரில் 6% கூடியிருக்க வேண்டாமா? என்பது அவர்கள் கேள்வி. இந்தக் கணக்கெடுப்பு ஒன்றும் முழுமையான ஒன்றோ, இதை வைத்து போட்டி போடுவதற்கான ஒன்றோ, எண்ணிக்கை விளையாட்டு விளையாடத் தேவையான ஒன்றோ அல்ல என்றாலும், கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்றுண்டு. அது என்னவெனில், மதநம்பிக்கையற்றோர் என்றொரு வகையும் இதில் உள்ளது. அதில் இந்தியாவைப் பொறுத்தவரையில் 13% பேர் உள்ளனர்.<br /><br />கடவுள் நம்பிக்கை என்ற கருத்திலிருந்து கடவுள் மறுப்பு என்ற சிந்தனைப் போக்குக்கு வரும் வழியான ஒரு இடைநிலைப் பகுதியே மத நம்பிக்கையற்றோர் என்பதாகும். கடவுள் கருத்து கலகலத்துப் போயிருக்கிறது. அதன் அடிப்படையிலான மத நம்பிக்கையிலிருந்தும் விடுபட்டவர்களாக 13% பேர் இருக்கின்றனர் என்பது, இவர்கள் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. -_லிருந்து +க்குப் போவதற்கு நடுவில் 0 என்ற இடத்தைத் தாண்டித்தானே ஆகவேண்டும். இந்த இடத்திலிருந்து குறிப்பிட்ட விழுக்காட்டினர் கடவுள் மறுப்பாளர்களாக மாறுவர் என்பதே இக்கணக்கெடுப்பு கூறும் உண்மை.<br /><br />- அன்பன்<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-62386949417898360982013-06-18T07:19:33.891+05:302013-06-18T07:19:33.891+05:30 தமிழ்வழிக் கல்வி இந்தத் தலைமுறை எப்படிப் பார்க்கி... தமிழ்வழிக் கல்வி இந்தத் தலைமுறை எப்படிப் பார்க்கிறது?<br /><br /> <br /><br />தமிழ்வழிக் கல்வி குறித்த விவாதங்கள் மீண்டும் தொடங்கியுள்ளன. தற்போதைய இளம் தலைமுறை என்ன கருதுகிறது என்பதாக இந்த வாசகரின் எண்ணம் அமைந்துள்ளது. ``சென்ற தலைமுறையினர் செய்த தவறை நாம் இனிமேலும் தொடரக்கூடாது. பிற நாட்டவரின் அறிவியல் தொழில்நுட்பங்களை முந்தைய தலைமுறையினர் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கத் தவறிவிட்டதன் விளைவுதான் இன்று தமிழ்வழிக் கல்வியா அல்லது ஆங்கிலவழிக் கல்வியா என்ற விவாதத்திற்கு வித்திட்டுள்ளது. இந்தத் தலைமுறையினராகிய நாம் அறிவியல், பொறியியல், மருத்துவம் என அனைத்தையும் மொழிபெயர்க்க முழு முயற்சியுடன் களமிறங்க வேண்டும். அனைவரும் சொல்வதைத்தான் நானும் சொல்கிறேன். சீனா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகள் பிற நாட்டவரின் அறிவியல் தொழில் நுட்பங்களைத் தங்கள் மொழியில் மொழிபெயர்த்துப் போதிக்கிறார்கள். அவர்கள் ஆங்கிலப் பயிற்சியை மேற்கொள்கிறார்களே தவிர, ஆங்கிலக் கல்வி முறையை ஊக்குவிப்பது இல்லை. இன்று நடைமுறையில் பார்த்தோமானால், மெட்ரிக் பள்ளி களில் படித்த பெரும் பாலானவர்கள் பட்டப்படிப்பு முடித்த பிறகுகூட தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் புலமை அற்றவர்களாகவே உள்ளனர் என்பது நடைமுறை உண்மை. தமிழிலும் சரி, ஆங்கிலத்திலும் சரி இலக்கணப் பிழை இல்லாமல் எழுதத் தெரிவதில்லை என்பதும் நடைமுறை உண்மை. இதுகூட பரவாயில்லை. இவர்களில் எத்தனை நபர்கள் தாங்கள் பயின்ற பாடத்திட்டங்களை முழுமையாகப் புரிந்து கொண்டு படித்திருப்பார்கள் என்று அறுதியிட்டுக் கூற முடியாது.<br /><br />நான் இளங்கலை வரையில் தமிழ் வழியில்தான் படித்தேன். முதுகலையில் ஆங்கிலவழிக் கல்வி மட்டும்தான் என்ற நிர்ப்பந்தத்தால் அனைத்துப் பாடங்களையும் தமிழில் புரிந்து கொண்டு ஆங்கிலத்தில் எழுத பயிற்சி மட்டுமே எடுத்துக் கொண்டேன். இன்றுகூட என்னுடைய விடைத்தாள்களை எடுத்துப் பார்த்தால், நான் என் சொந்த நடையில்தான் எழுதியிருப்பேன். தமிழ்வழிக் கல்வியால் தாழ்வு மனப்பான்மை என்று ஏதேதோ சொல்கிறார்கள். ஆங்கிலப் புலமை உள்ளவர்கள் பேசுவதைப் பார்க்கும் பொழுது தாழ்வு மனப்பான்மை வரும் என்பது உண்மைதான் என்றாலும், ஆங்கிலம் என்பது ஒரு மொழி, முறையான பயிற்சி எடுத்துக்கொண்டால் தாழ்வு மனப்பான்மை என்ற சொல் நம் அகராதியில் இருக்காது.<br /><br />இனிமேலும் தாமதம் செய்யாது நாம் முதலில் மொழிபெயர்ப்பினைத் தொடங்குவோம். பிறகு அரசாங்கத்தை நிர்ப்பந்திப்போம்.<br /><br />- கணேஷ் ஏழுமலை<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-31802906128893110952013-06-18T07:16:16.204+05:302013-06-18T07:16:16.204+05:30 கூழ் முட்டைகள்
மகள் : தமிழ்த் தேசியம... கூழ் முட்டைகள்<br /><br /> <br /><br />மகள் : தமிழ்த் தேசியம்ன்னு சொல்றாங்களே, அப்படீன்னா என்னப்பா ?<br /><br />அப்பா : ஆம்லேட் எதுல இருந்து வந்தது ?<br /><br />மகள் : முட்டையில் இருந்து...<br /><br />அப்பா : இதே கேள்விக்கு ஆம்லேட் தோசைக்கல்லில் இருந்து வந்தது ன்னு பதில் சொல்றதுக்குப் பேருதான் தமிழ்த் தேசியம்.<br /><br />- ஓவியன், தாம்பரம்<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-89241280837363062812013-06-18T07:15:13.487+05:302013-06-18T07:15:13.487+05:30காவிரித் தீர்ப்பு : திசைத் திருப்பும் கரு’நாடகம்’
...காவிரித் தீர்ப்பு : திசைத் திருப்பும் கரு’நாடகம்’<br /><br /><br /><br />தமிழ்நாட்டில் காவிரி டெல்டா விவசாயிகளின் வேதனை நாளுக்கு நாள் சொல்லொணாத சோகத் தொடராக தொடர்ந்து கொண்டுள்ளது. நடுவர் மன்றத் தீர்ப்பை மதித்ததுண்டா?<br /><br />குறுவை, சம்பா என்று பயிரிட்டு வாழ்வாதாரத்தை ஓரளவுக்கேனும் நடத்திவரும் நமது விவசாயத் தோழர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக கர்நாடகத்தின் ஈரமில்லா நெஞ்ச முடிவு காரணமாக நியாயமான உரிமைப்படி நடுவர் மன்றத் தீர்ப்புப்படி ஒருமுறைகூட, நீரை அளித்ததே கிடையாது!<br /><br /> <br /><br />உச்ச நீதிமன்றமாக இருந்தாலும், நடுவர் மன்றாக இருந்தாலும்கூட, சட்டத் தீர்ப்புகளைக் கூட மதிக்காது, கர்நாடக அரசு (அங்குள்ள வாக்கு வங்கி அரசியலில் யார் அதி வேகமாக தமிழ்நாட்டுக்கெதிரான குரலை உயர்த்துவது என்ற போட்டியினால்) 6.6.2013 அன்று ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி (அது மத்திய அரசால் கெசட் செய்யப்பட்டதினால் சட்ட வலிமை பெற்ற தீர்ப்பாகவே கருதப்பட வேண்டும்) முதல் 4 மாதங்கள் (ஜூன் துவங்கி) 134 டி.எம்.சி. தண்ணீர் தர முடியாது. மாறாக 97.82 டி.எம்.சி. தண்ணீர்தான் கொடுக்க இயலும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.<br /><br />வருகிற ஜூன் 12ஆம் தேதி டெல்லியில் கூடவிருக்கும் காவிரிக் குழுக் (தற்காலிகக் குழு) கூட்டத்தில் இதனைத் தெரிவிக்கப் போவதாகவும், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புத் தரப்பட்டு 5 ஆண்டுகளாகி விட்டதால் _- 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மறுபரிசீலனை செய்ய அச்சட்டத்தில் இடம் இருப்பதால் மறு பரிசீலனைக்காக மனு போட்டு வழக்கை நடத்தப் போவதாகவும் கூறியிருப்பது<br /><br />சட்டப்படியும் சரி<br />நியாயப்படியும் சரி<br />சரியான நிலைப்பாடு அல்ல.<br />கண் ஜாடை நடவடிக்கையா?<br /><br />அதற்குரிய காரணங்கள்:<br /><br />மத்திய அரசு அமைத்துள்ள குழு ஒரு தற்காலிக ஏற்பாடாகவே உள்ளது. கர்நாடகத் தேர்தலை ஒரு சாக்காக மத்திய அரசு கூறியது. தேர்தல் முடிந்து ஏறத்தாழ ஒரு மாதம் ஆகும் நிலையில், ஏன் இன்னமும் காலதாமதம் _- கர்நாடக காங்கிரஸ் ஆட்சிக்குச் சாதகமான கண் ஜாடை நடவடிக்கையா?<br /><br />இக்குழு தற்காலிகக் குழுவாக அமைந்தபோதே நாம் தெளிவாகச் சுட்டிக் காட்டினோம்; இதனால் உருப்படியான எந்தப் பலனும் ஏற்படாது என்று.<br /><br />அதுபோலவே இது ஒரு கொலு பொம்மைக் காட்சியாகத்தான் அமைந்தது.<br /><br />உடனடியாக நிரந்தரக் குழுவை, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புப்படி செயல்படுத்த நிபுணர்களைக் கொண்ட நடுநிலை தன்னாட்சிக் குழுவின் மேற்பார்வை _- கண்காணிப்புக்கு விட்டு, நீரை இரு மாநிலங்களுக்கும் அக்குழுதான் அளிக்க ஆணைகள் ஆண்டுதோறும் பிறப்பிக்கப்பட வேண்டும்.<br /><br />சட்டப்படி அதுதான் சரியான ஏற்பாடாகவே அமையும்.<br /><br />இந்நிலையில் கர்நாடக அரசு தனது பல்வேறு முட்டுக்கட்டை முயற்சிகளில் ஏற்கெனவே தோல்வி அடைந்து விட்ட நிலையில், புதுக்கரடி ஒன்றை விட்டு, தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமையை மறுக்க நினைக்கிறது!<br /><br />நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பளித்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டதால் மறுபரிசீலனை செய்வோம் என்று கர்நாடக முதல் அமைச்சர் கூறுவது சரியல்ல.<br /><br />1). இறுதித் தீர்ப்பு என்பது எதிலிருந்து சட்டப்படி கணக்கிட வேண்டுமென்றால், மத்திய அரசிதழில் *(கெசட்டில்) வெளியானதிலிருந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகே மறுபரிசீலனையை எந்த மாநிலமும் கோர முடியும்.<br /><br />நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளி வந்த நாள் பிப்ரவரி 5, 2007; அது கெசட்டில் வெளியிடப்பட்ட நாள் பிப்ரவரி 19, 2013 ஆகும். இதன்படி மறுபரிசீலனை மனு 2018இல்தான் போட முடியும்.<br /><br />2). 2007 முதல் கணக்கிடப்படக் கூடாது; மேலும், நிரந்தரக் குழுவும் இன்னும் அமையவில்லையே! எனவே இது ஒரு திசைத் திருப்பல் நாடகம் ஆகும் _ -இதனை ஏற்கவியலாது. தமிழக அரசே, கருநாடகத்தைப் பார்!<br /><br />தமிழ்நாட்டில் -_ அனைத்துக் கட்சிக் கூட்டம் எப்பிரச்சினையிலும் கடந்த இரண்டரை ஆண்டுகளில் நடந்ததே இல்லை.<br /><br />எத்தனையோ பேர் கத்திப் பார்த்து ஓய்ந்து போனாலும், ஒத்தக் கருத்துகூட கர்நாடகத்தைப்போல எளிதில் இங்கே வராது என்பது மேலும் வேதனையின் வெந்த புண்ணாகும்!<br /><br />தமிழ்ச் சமுதாயமே, அந்தோ! உன் கதி இப்படித்தானா? டெல்டா விவசாயிகளின் தற்கொலைகளுக்கு முடிவே இல்லையா?<br /><br />வேதனை! வெட்கம்!<br /><br />கி.வீரமணி,<br />ஆசிரியர்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-19925687861446327662013-06-18T07:06:39.215+05:302013-06-18T07:06:39.215+05:30
பெரியார் பிஞ்சு குழந்தைகள் முகாம்
நாம் நடத்தும்...<br />பெரியார் பிஞ்சு குழந்தைகள் முகாம்<br /><br /><br />நாம் நடத்தும் பெரியார் பிஞ்சு - குழந்தைகள் பழகு முகாம் பற்றி இங்கே குறிப்பிட்டனர். நான் சமீபத்தில் ஒரு திருமண வரவேற்பு விழாவிற்குச் சென்றேன். இப்பொழுது அய்.ஏ.எஸ். அதிகாரியாகப் பெரிய பொறுப்பில் இருக்கக் கூடியவரின் வீட்டுத் திருமணம். நான் அங்கு சென்றபோது அன்புடன் வரவேற்றனர். அப்பொழுது அவர் பக்கத்தில் இன்னொருவர் இருந்தார். இவர் யார் என்று உங்களுக்குத் தெரிகிறதா என்று கேட்டார். தெரியவில்லையே என்றேன்.<br /><br />இவர் வல்லத்தில் தாங்கள் நடத்திய குழந்தைகள் முகாமிலே பயிற்சி பெற்றவர். இப்பொழுது பொறியாளர் மிகப் பெரிய நிறுவனத்தில் பெரிய பதவியில் இருக்கிறார் என்று சொன்னார். அதனைக் கேட்ட பொழுது எனக்குப் பெரு மகிழ்ச்சியாக இருந்தது.<br />அந்தப் பையனுடைய தாயார் குறுக்கிட்டுச் சொன்னார் குழந்தைகள் முகாமில் நீங்கள் விதைத்த விதை இன்றுவரை நன்கு வேலை செய்கிறது. இவன் பகுத்தறிவுவாதியாகவே இருக்கிறான் என்று தாயார் சொன்னபோது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது.<br /><br />நம் வீட்டுக் குழந்தைகளை பெரியார் பிஞ்சு முகாமுக்கும், வளர்ந்தவர்களை பெரியாரியல் பயிற்சிப் பட்டறைக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.<br /><br />இளைஞர்கள் கணினி பயிற்சி பெற்றாக வேண்டும். இணையதளத்தின் மூலம் நம் கருத்துகளைப் பரப்ப வேண்டும். காலம் மாறி வருகிறது. அதற்கேற்ற வழிமுறைகளையும் நாம் மாற்றிக் கொண்டாக வேண்டும்.<br /><br />- திண்டுக்கல் திராவிடர் கழகப் பொதுக் குழுவில் தமிழர் தலைவர் 15.6.2013தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-27526215384932249822013-06-18T07:03:25.999+05:302013-06-18T07:03:25.999+05:30அரசுக்கு நமது வேண்டுகோள்!
அனைத்து ஜாதியினருக்கும்...அரசுக்கு நமது வேண்டுகோள்!<br /><br />அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பது அ.இ.அ.தி.மு.க. அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டதுதான் (2001-2006) 69 சதவீத அடிப்படையில் பயிற்சி அளிக்கப்படும் என்று அன்றைய தினம் முதல் அமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டதுதான். அதனை நிறைவேற்றும் பொறுப்பு முதல் அமைச்சருக்கு இருக்கிறது. இதில் எந்தவித அரசியல் பிரச்சினையும், நோக்கமும் அறவே கிடையாது.<br /><br />போராட்டம் நடத்த வேண்டும் என்பதற்காக இந்தப் போராட்டத்தை நாங்கள் நடத்தவில்லை. இந்தக் கோரிக்கையைச் செயல்படுத்தினால் அதனை நாங்கள் வரவேற்போம் - மகிழ்ச்சி அடைவோம் - ஏன், பாராட்டவும் செய்வோம் எங்களுக்குக் கொள்கைதான் முக்கியம்!<br /><br />- திண்டுக்கல் திராவிடர் கழகப் பொதுக் குழுவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி 15.6.2013தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-60779106810434935342013-06-18T06:59:17.588+05:302013-06-18T06:59:17.588+05:30
தமிழ்மொழியின் தயவால் சமஸ்கிருதம் செம்மொழி ஆனது! த...<br />தமிழ்மொழியின் தயவால் சமஸ்கிருதம் செம்மொழி ஆனது! திருவெறும்பூரில் தமிழர் தலைவர்<br /><br /><br />திருவெறும்பூர், ஜூன் 15- தமிழ்மொழியின் தயவால் சமஸ் கிருதம் செம்மொழி ஆனது எனத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டார். தமிழின முன்னேற்றத் திற்குப் பெரிதும் தடையாக இருப்பது அகப்பகையே, புறப் பகையே எனும் தலைப்பில் திருவெறும்பூரில் பட்டிமன்றம் நேற்று (14.6.2013) நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.<br /><br />அடையாளம் முக்கியம்!<br /><br />பெருமையோடு வாழ்ந்த தமிழினம், தனது அடையா ளத்தை மறந்ததால் இன்று வீழ்ந்து கிடக்கிறது. எந்த இனமும் தனது அடையாளங்களை மறக்கக் கூடாது. வளர்ச்சி பெற்ற நாடுகளில், எழுச்சிப் பெற்ற இனங்கள் தங்கள் அடையாளங் களைப் பேணுவதில் முதன்மையாக இருக்கிறார்கள். ஆப் பிரிக்க நாடுகளில் கூட தங்கள் அடையாளங்களைப் பாது காத்துப் பெருமை கொள்கிறார்கள். அடையாளம் என்பது வேர்களுக்குச் சமமானது. வேர்கள் பழுதானால் கிளைகளும், இலைகளும் இருக்காது. வேர்கள் வெளிப்படையாகத் தெரி வதில்லை. ஆனால் அதுதான் முக்கியமானது. கட்டடங்களின் அஸ்திவாரம் கூட வெளியே தெரியாது, ஆழத்தில் பதிந் திருக்கும். ஆனால் அதுவே கட்டடங்களின் அடையாளம். தமிழ் குவியல்! சமஸ்கிருதம் அவியல்!<br />தமிழ் உருவான காலத்தில், சமஸ்கிருதம் தோன்றவே இல்லை. இந்த வரலாறு பலருக்குத் தெரியாது. பல காய்கறிகள் கொண்ட சமையலுக்கு அவியல் என்று பெயர். சமஸ்கிருதம் கூட பல மொழிகளால் சேர்த்துச் சமைக்கப்பட்ட ஒரு மொழி. அது ஒரு கலவை. அதற்கென்று தனித்தன்மை கிடையாது. பேராசிரியர்களாக இருந்த பார்ப்பனர்களே இதை ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால் தமிழ் அப்படி கிடையாது. ஹரப்பா, மொகஞ்சதாரோ காலத்திலேயே தமிழ் தனித்தன்மையோடு விளங்கியது.<br />தமிழின் தயவில் சமஸ்கிருதம்!<br /><br />தனித்தன்மையோடு விளங்கும் தமிழுக்கு, செம்மொழி அங்கீகாரம் வழங்க முடிவு செய்தார்கள். உடனே பார்ப்பனர் கள் சமஸ்கிருதத்திற்கும் செம்மொழி வேண்டும் என்றார்கள். செம்மொழி அங்கீகாரம் பெற சில நிபந்தனைகள் உண்டு. அதில் எல்லாவற்றிலும் தமிழுக்கு முதலிடம் உண்டு. ஆனால் சமஸ்கிருத மொழிக்கு அந்தத் தகுதி இல்லை. எனினும் நிபந்தனைகளைத் தளர்த்தி, தமிழுக்கு அங்கீகாரம் கிடைத்த நேரத்தில், அதைப் பயன்படுத்தி அவர்களும் செம்மொழித் தகுதியைப் பெற்று விட்டார்கள். சுனித்குமார் சட்டர்ஜி எனும் ஆய்வாளர் கூறுவதுபோல, நிறைய தமிழ்ச் சொற்களைக் கொண்டதுதான் சமஸ்கிருதம். முனைவர் தொ.பரமசிவன் எனும் தமிழ் ஆய்வாளர் இதுகுறித்து நிறைய எழுதியுள்ளார். பூ செய் என்பதைப் பூஜை என்றார்கள், ரசம் என்பதை ரஜம் என்றார்கள், வேட்டி என்பதை வேஷ்டி என்றார்கள். பால கிருஷ்ணன் அய்.ஏ.எஸ். என்பவர் மொழி ஆய்வில் தனி உலக வரைபடமே தயாரித்துள்ளார். தமிழ்நாட்டின் ஊர் பெயர்கள் ஹரப்பா, மொகஞ்சதாரோ, எகிப்து போன்ற பல நாடுகளிலும் ஒரே மாதிரியாக இருப்பதை அவர் நிரூபிக்கிறார். இந்த வரலாறுகளை நாம் அறிய வேண்டும்.<br /><br />துரோகத்தின் தொடக்கம்!<br /><br />நம் இதிகாசம், நம் புராணம் எனப் பார்ப்பனர்கள் அடிக்கடி சொல்வதுண்டு. அவற்றை வெள்ளையர்கள் கெடுத்துவிட்ட தாகவும் சொல்வார்கள். என்ன உன் புராணம் என்றால் கண்ணகியைக் காட்டுவார்கள். தீக்குளித்ததைப் பெருமை யாகப் பேசுவார்கள். எங்கே, இப்போது யாரையாவது தீக் குளிக்கச் சொல்லுங்கள் பார்ப்போம். உன் மீது எனக்கும் சந்தேகம் இருக்கிறது, நீ தீக்குளி என்பார்கள் இன்றைய புரட்சிப் பெண்கள். அதேபோல இராமாயணம். முதன்முதலில் காட்டிக் கொடுத்த வேலையைச் செய்தவன் விபீஷணன். அவனுக்கு ஆழ்வார் பட்டம் வேறு. துரோகம் தொடங்கிய இடமே இராமாயணம்தான். அன்று தொடங்கிய அந்தத் துரோகம் இன்று ஈழத்துக் கருணாவிடம் வந்து நிற்கிறது.<br /><br />இலங்கையில் தமிழர்களைச் சிறுபான்மையினம் என்று அழைத்து வந்தார்கள். இனி அதற்கும் வழியற்று, 13-ஏ எனும் புதுச் சட்டத்தின் மூலம், தமிழர்களின் ஒட்டு மொத்த அடை யாளங்களையும் அழிக்கப் பார்க்கிறார்கள். இதற்கான ஏற் பாட்டை சிங்கள அதிகாரி ஒருவர் செய்கிறார். அவர் யாரென் றால், ராஜீவ் காந்தி, இலங்கை சென்ற போது, துப்பாக்கியின் பின்புறத்தால் ராஜீவை தாக்கியவர். அவர் இன்றைக்கு அங்கு நல்ல நிலையில் இருக்கிறார். எப்படி தமிழர்களைக் காட்டிக் கொடுத்து, கருணா பதவி சுகத்தோடு இருக்கிறாரோ அப்படி. ஆக வெளிப்படையான புறப்பகையை விட, துரோகம் செய்யும் அகப்பகை மிகவும் ஆபத்தானது. எனவே இந்த இருபகை களிலும் நாம் கவனமாக இருந்து, நம் வரலாற்று அடையா ளங்களை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பேசினார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-66075871570689989502013-06-18T06:57:40.880+05:302013-06-18T06:57:40.880+05:30
கோவையில் ஜூன் 16இல் ஜாதிமறுப்பு இணைதேடல் மன்றல் ...<br /><br />கோவையில் ஜூன் 16இல் ஜாதிமறுப்பு இணைதேடல் மன்றல் பெருவிழா<br /><br /><br />கோவை, ஜூன் 15- பெரியார் சுயமரியாதைத் திருமணம் 1974-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, சென்னையில் உள்ள பெரியார் திடலைத் தலைமையிடமாகக் கொண்டு தொடர்ந்து 40 ஆம் ஆண்டில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதுவரை ஆயிரக்கணக்கான திருமணங்களை இத்திருமண நிலையம் நடத்திவைத்திருக்கிறது. பல்லாயிரக்கணக்கானோர் இத்திருமண நிலை யத்தின் மூலமாக தங்களுக்கேற்ற வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்து மணம் முடித் துள்ளனர். முற்றிலும் வணிக நோக்கின்றி சமூக மாற்றத்தை நோக்கிய பயணத்தின் வெற்றியையே கருத்தில் கொண்டு பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் நடைபெற்று வருகிறது.<br /><br />எண்ணற்ற ஜாதி மறுப்பு, மத மறுப்பு, மண முறிவு - துணையை இழந்தோர் மறுமணம் ஆகிய வற்றை நடத்தி வைத்திருந்தாலும், இந்த வாய்ப்பைப் பரவலாக எடுத்துச் செல்லும் நோக்கில் தமிழ் நாடெங்கும் இதன் கிளைகள் விரிவு படுத்தப் பட்டன. இன்றைய சமூகச் சூழலில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்யத் தயாரானவர்களுக்கும் அவர்கள் விரும்பும் இணையர் (வாழ்க்கைத் துணை) கிடைப்பதில் இருக்கும் தாமதத்தையும், குறை களையும் போக்கும் வண்ணம் பெருமளவில் மக்கள் கலந்துகொள்ளும் வண்ணம் மன்றல் என்னும் நிகழ்ச்சியினை கடந்த ஆண்டு முதல் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம் நடத்திவருகிறது. சென்னையில் கடந்த 2012- ஆம் ஆண்டு நவம்பர் 25-ஆம் நாள் மன்றல் தொடங்கப் பட்டது. தமிழகம் முழுக்க இருந்து 300க்கும் அதிகமான குடும்பங்கள் பங்கேற்றுப் பலன டைந்தனர். அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளையும் கவரும் வண்ணம் திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இதற்கு பல தரப்பட்ட அமைப்புகளும், சங்கங்களும் பல வழிகளிலும் தங்கள் பங்களிப்பை அளித்துவருகின்றனர்.<br /><br />வரும் 16.6.2013 ஞாயிற்றுக்கிழமை கோவையில் தமிழகத்தின் மாபெரும் ஜாதி மறுப்பு இணை தேடலான மன்றல் நடைபெறுகிறது. பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்துடன் கோயம் புத்தூர் அரிமா சங்கமும் இணைந்து இந்நிகழ்ச் சியை வழங்குகிறது.<br /><br />மன்றல் கோவை, சிவானந்தா காலனியிலுள்ள அரிமா சங்க திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுவருகின்றன. கோவை மண்டலம் முழுக்க விளம்பரங்கள் செய்யப்பட்டு, அதன் மூலம் பலரும் தொடர்பு கொண்ட வண்ணம் உள்ளனர். ஜாதி மறுப்புத் திருமணம் செய்ய விரும்பு வோருக்கான மிகப்பெரிய வாய்ப்பாக இந்நிகழ்வு அமையும். அது தவிர, மத மறுப்புத் திருமணம், மண முறிவு பெற்றோர், துணையை இழந்தோர் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவுகளும் உணடு. மாற்றுத் திறனாளிகளுடன் மண வாழ்க்கை அமைத்துக் கொள்ள விரும்புவோருக்கான சிறப்புப் பிரிவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.<br /><br />மேலும், இந்நிகழ்வில் பங்கேற்க வருவோருக்கு குருதிப் பரிசோதனை செய்யவும், அவர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கவும் தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.<br /><br />மன்றல் நிகழ்ச்சி 16.6.2013 ஞாயிற்றுக் கிழமை காலை 8 மணியளவில் தொடங்கும். பதிவு செய்ய வருவோர் தொடர்ந்து தங்களைப் பதிவு செய்து கொள்வர். காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இந்நிகழ்வு நடைபெறும். காலை 10 மணி யளவில்நடைபெறும் தொடக்க விழாவில் பாரதியார் பல்கலைக் கழகப் பதிவாளர் கு.ம.ராமாத்தாள் பங்கேற்று தொடங்கிவைக்கிறார். இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்கள் மருத்துவர் பிறைநுதல்செல்வி, வீ.அன்புராஜ் ஆகியோர் பங்கேற்கின்றனர். மாலை நடைபெறும் நிறைவு விழாவில் அக்சயா அ.நாகராஜ் பங்கேற்கிறார். மேலும் இதுகுறித்து கோவையில் நேற்று (14.6.2013) பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் திருமகள் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது:-<br /><br />கோவை மன்றல் பெருவிழாவில், 180க்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளனர். கோவை, திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி, குன்னூர், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் பதிவு செய்துள்ளவர்களை 16.6.2013 ஞாயிறன்று அனைவரையும் விழாவன்று அழைத்துள்ளோம். பதிவு செய்துள்ளவர்கள் மன்ற விழாவன்று வழக்குரைஞர் குழுவின் இலவச ஆலோசனையும், மருத்துவர் குழுவினரின் இலவச பரிசோதனையும் நடைபெற இருக்கிறது.<br /><br />கோவை சிவானந்தா காலனி, அரிமா சங்க திருமண அரங்கில் 16ஆம் தேதியன்று நடைபெறும் இவ்விழாவில் கோவை மாநகரில் ஜாதி மறுப்பு திருமண விழா, 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று, மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என எதிர்பார்க்கிறோம்.<br /><br />எல்லாவித பிரச்சினைகளையும் சமூக நோக்கோடு பார்க்கும் திராவிடர் கழகம் ஜாதிமத பேதமற்ற சமூகம் அமையப் பெறுவதற்காக தமிழகம் முழுவதும், அனைத்து நகரம், மற்றும் குக்கிராமங்களிலும் மன்றல் இணைதேடல் பெருவிழா நடத்துவதற்காக முயற்சிகளை எடுத்து வருகிறோம் என தெரிவித்தார்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com