tag:blogger.com,1999:blog-1474608369333206681.post2349426344142028377..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: மக்கள் பணத்தைச் சுரண்டுவதே அட்சய திருதியை!தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-54100546576938604872011-05-07T07:28:08.501+05:302011-05-07T07:28:08.501+05:30அட, தடி மாடே!
அட்சய திருதியையாம் - அது இந்நாள்தான...அட, தடி மாடே!<br /><br />அட்சய திருதியையாம் - அது இந்நாள்தானாம். இந்த நாளில்தான் குசேலன் தனது பால்ய நண்பன் கண்ணபிரானைப் பார்க்கச் சென்றானாம். போனவன் சும்மா போகவில்லை. கண்ணபிரானுக்கு மிகவும் பிடித்தமான அவலையும் கொஞ்சம் எடுத்துச் சென்றானாம். அவன்தான் வறுமைக் கழுகு புடுங்கித் தின்னும் 27 பிள்ளைகளைப் பெற்றெடுத்த பெரும் குடும்பஸ்தன் ஆயிற்றே - கொஞ்சம் அவலைத்தானே எடுத்துச் செல்ல முடியும்? 27 பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு சென்றானாம் குசேலன். கொஞ்சம் அவலை கிருஷ்ணனுக்குக் கொடுத்த இந்த நாளில் கண்ணபிரான் ஏராளமான செல்வங்களை குசேலனுக்கு வாரி வழங்கினானாம். குசேலன் குபேரன் ஆகி விட்டானாம் - இந்த அட்சய திருதியையில்!<br /><br />தந்தை பெரியார்தான் நாக்கைப் பிடுங்குமாறு ஒரு கேள்வி கேட்டார்.<br /><br />ஒருவனுக்கு 27 குழந்தைகள் இருந்தால் அவன் வருஷத்துக்கு ஒரு குழந்தை பெற்று இருந்தால், இருபது வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் நிறைந்த குழந்தைகள் எட்டாக இருந்திருக்கும். இந்தக் குழந்தைகள் சோம் பேறித் தடியன்கள் போல் ஒரு வேலைக்கும் இலாயக் கில்லாத மாமிசப் பிண்டங்களாகவா இருந்திருக்கக் கூடும்? இப்படி இருபது வயதுக்கும் மேற்பட்ட மக்களை வீட்டில் வைத்துக் கொண்டு ஒருவன் பிச்சை எடுக்கப் போயிருந்தால், அந்த நாட்டில் மற்றவர்களும் இது போலிருந்திருக்க வேண்டாமா? அப்படி இருந்தால் அந்த நாடு எப்படி உருப்படி ஆகி இருக்கும்? இப்படிப்பட்ட சோம்பேறித் தடியர்களுக்குக் கடவுள் செல்வம் கொடுக்கலாமா? இப்படி ஒரு கூட்டம் நம்மிடம் வந்து பிச்சை கேட்டால் நாம் என்ன சொல்லுவோம்? என்ற அறிவார்ந்த வினாவைத் தொடுக்கிறார் தந்தை பெரியார் (பொன்னி பொங்கல் மலர் 1948 சனவரி).<br /><br />தடிப்பயல் மாதிரி 8 பிள்ளைகளை வைத்துக் கொண்டு பிச்சை எடுக்கிறாயே அட தடிமாடே!, உனக்கு வெட்கம் இல்லையா? என்று சாதாரணமாகக் கேட்பார்களே - அந்த சர்வ சாதாரண புத்திகூட பகவான் கண்ணபிரானுக்கு இல்லையா?<br /><br />இந்த அட்சய திருதியை நாள் என்பது சோம்பேறி களுக்குச் சோறு போடும் நாளா? உழைக்காமல் ஒருவ னுக்கு லஞ்சமாக அவல் மட்டும் கொடுத்து அதற்குப் பதிலாக அய்ஸ்வரியங்களை வாரிக் குவிக்கும் வடி கட்டின ஊழலுக்கு மஞ்சம் விரிக்கும் மடத்தனமான நாளா? குசேலன் குபேரன் ஆனது என்பது நாட்டு மக்களுக்குக் கெட்ட வழியைக் காட்டும் செயல் அல்லவா?<br /><br />சோம்பேறியாக இரு - பகவானைக் கெஞ்சு - உனக்குப் பொன் கிடைக்கும் என்பது மக்களைச் சோம்பேறிகளாக்கும் சோணகிரித்தனம் அல்லவா - நியாயமாக அட்சய திருதியையை அரசு தடை செய்ய வேண்டும். அப்படி செய்வதுதான் மக்கள் நல அரசு என்பதற்கு (Welfare State) அடையாளமும் ஆகும்.<br /> -----------விடுதலை 6-5-2011தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-63706077314646751362011-05-06T20:55:19.181+05:302011-05-06T20:55:19.181+05:30நகைக்கடை வியாபாரிகள் கொள்ளைஅடிக்க கண்டுபிடித்த
ஒரு...நகைக்கடை வியாபாரிகள் கொள்ளைஅடிக்க கண்டுபிடித்த<br />ஒரு புதிய வழி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-88991705261647618612011-05-06T20:53:14.834+05:302011-05-06T20:53:14.834+05:30நகைக்கடை வியாபாரிகள் கொள்ளைஅடிக்க கண்டுபிடித்த
ஒரு...நகைக்கடை வியாபாரிகள் கொள்ளைஅடிக்க கண்டுபிடித்த<br />ஒரு புதிய வழி.Anonymousnoreply@blogger.com