tag:blogger.com,1999:blog-1474608369333206681.post201318107494334106..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: நீதிக்கட்சிதாழ்த்தப்பட்டோருக்குநீதிசெய்யவில்லையா? -2தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-15669297168815780872012-05-11T18:08:27.106+05:302012-05-11T18:08:27.106+05:30ஒரு சந்தேகம்!
பையன்: புரோகிதரே, ஒரு சந்தேகம்?
ப...ஒரு சந்தேகம்!<br /><br /><br />பையன்: புரோகிதரே, ஒரு சந்தேகம்?<br /><br />புரோகிதன்: என்ன?<br /><br />பையன்: இறந்து போனவர்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டுமென்றால், அதை உம்மிடம்தான் கொடுக்க வேண்டுமா?<br />புரோகிதன்: ஆமாம்!<br /><br />பையன்: அப்படீன்னா, இறந்து போனவர்கள் தர வேண்டியதையும் உம்மிடமே வசூலிக்கலாமா?<br />புரோகிதன்: ? ? ?<br /><br /><br />- கலைச்செல்வி, அறந்தாங்கி 11-5-2011தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-49296356460595238322012-05-11T18:03:33.233+05:302012-05-11T18:03:33.233+05:30சுயகட்டுப்பாடு பற்றி ஊடகத்தினர் அவ்வப்போது பேசுகின...சுயகட்டுப்பாடு பற்றி ஊடகத்தினர் அவ்வப்போது பேசுகின்றனர். ஆனால் ஊடக நிறுவனங்கள் லாபத்தையே குறிக்கோளாகக் கொண்ட வியாபாரி களின் உடைமைகளாக உள்ளன. லாபம் ஈட்டுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் அவ்வாறு லாபம் ஈட்டுவது என்பது சமூகப் பொறுப்புகளுடன் இணைந்ததாக இருக்க வேண்டும். சமூகத்தின் மற்ற பிரிவு துன்பம் அடைந்து கொண்டிருந்தாலும், லாபம் ஈட்ட தாங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஊடக முதலாளிகள் கூறமுடியாது.<br /><br />அத்தகைய ஒரு அணுகு முறை தன்னைத் தானே அழித்துக் கொள்வதற்கு ஒப்பாகும்; இப்போது தங்களை அவர்கள் சரி செய்து கொள்ளவில்லை என்றால் நீண்ட காலத்திற்குப் பின் அவர்கள் துன்புறவே நேரும். பெரும்பாலான ஊடகங்கள் பொறுப்பற்ற முறையிலும், விளைவுகளைப் பற்றி கவலைப்படாமலும், மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமலும் நடந்து கொள்கின்றன. மக்களிடையே பரவிக் கிடக்கும் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், ஊட்டச் சத்துணவு இன்மை, விவசாயிகளின் தற்கொலை, உடல் நலம் பேணுதல், வரதட்சணை சாவுகள், பெண்கரு அழிப்பு ஆகிய வற்றைப் பற்றி அலட்சியப்படுத்துவது அல்லது அதிகமாகக் கவலைப்படாமல் இருப்பது என்ற முறையிலும், ஆபாச மஞ்சள் செய்திகள், மலிவான உணர்வு களைத் தூண்டும் செய்திகள், திரைப்பட நட்சத்திரங்களின் மற்றும், கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை போன்ற சில்லறைச் செய்திகளைப் பெரியதாக வெளியிடுவது, மூடநம்பிக்கைகளை வளர்ப்பது, மக்களுக்கும் அவர்களின் நற்பெயருக்கும் இழுக்கைத் தேடித் தரும் செய்திகளை வெளியிடுவதே ஊடகங்களின் இன்றைய அடையாளங்களாக ஆகிவிட்டன. சோதிடம், கிரிக்கெட் (இந்திய மக்களின் அபின்), பொதுமக்களை பாபாக்கள் ஏமாற்றி முட்டாள்களாக்குவது என்பது போன்ற செய்திகள் மற்றும் தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் சர்வசாதாரண மானவைகளாக ஆகிவிட்டன.<br /><br />கட்டணம் செலுத்தி செய்தியிதழ்களி லும், தொலைக்காட்சிகளிலும் செய்தி வெளியிடுவது இன்றைய நடைமுறையாக ஆகிவிட்டது. தங்களின் பத்திரிகை செய்தியாளர்களின் கூட்டத்திற்கு வரும் செய்தியாளர்களுக்குப் பணம் தருவது, கூட்டத்திற்கு வராதவர்களுக்கும் செய்தியை வெளியிடுவதற்காக பணம் தருவது என்ற அளவுக்கு சில அரசியல் வாதிகள் மோசமானவர்களாக உள்ளனர் என்று ஒரு மூத்த அரசியல் தலைவர் என்னிடம் கூறினார்.<br /><br />அண்மைக்கால பாபா (இந்நாட்களில் தொலைக்காட்சி களில் ஆதிக்கம் செலுத்தும்) அவரது கூட்டங்களைத் தொலைக் காட்சியில் காட்டுவதற்கு ஒரு பெரும் தொகையை அளிக்கிறார் என்று ஒரு தொலைக் காட்சி உரிமையாளர் என்னிடம் கூறினார். பல பத்திரிகை செய்தியாளர்களும் கையூட்டு அளிக்கப்பட இயன்றவர்களே என்றும், அதன் மூலம் தாங்கள் விரும்பும் செய்தி களை வெளியிடச் செய்யவும் இயல்கிறது என்றும் மது கிஷ்வார் என்ற மூத்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் மாநிலங்களவை யில் கூறினார். 11-5-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-66312412108397889092012-05-11T18:03:26.042+05:302012-05-11T18:03:26.042+05:30கட்டுப்பாடுகளை ஊடகங்களால் நிராகரிக்க முடியாது
மா...கட்டுப்பாடுகளை ஊடகங்களால் நிராகரிக்க முடியாது<br /><br /><br />மார்க்கண்டேய கட்ஜூ<br /><br />கடந்த வாரத்தில் நாடாளுமன்றத்தில் மீனாட்சி நடராஜனால் அறிமுகப்படுத் தப்பட இருந்த ஊடகக் கட்டுப்பாடு பற்றிய தனியார் மசோதா வரைவினை நான் படிக்கவில்லை என்பதால் அது பற்றிய எனது கருத்தைத் தெரிவிக்க இயலாத வனாக நான் உள்ளேன். என்றாலும் அச்சு மற்றும் மின்னியல் ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை நிச்சயமாக நான் கொண்டிருக்கிறேன்.<br /><br />ஊடகங்கள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேனே அன்றி, கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என்று விரும்பவில்லை. இந்த இரண்டுக்கும் இடையே வேறுபாடு உள்ளது; கட்டுப்பாட்டில் சுதந்திரம் இருக்காது; ஆனால் ஒழுங்குபடுத்து வதில், பொது நலன் கருதி விதிக்கப்படும் சில நியாயமான கட்டுப்பாடுகள் கொண்ட சுதந்திரம் இருக்கும். இந்தியா வில் ஊடகம் ஆற்றல் மிக்கதாக ஆகி விட்டது. அதனால் மக்களின் வாழ்க் கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த அதனால் இயலும். எனவே பொது நலனுக்காக அது ஒழுங்குபடுத்த ப்படவேண்டும்.<br /><br />பேச்சு மற்றும் கருத்தை வெளியிடும் சுதந்திரத்தை அளிக்கும் அரசமைப்புச் சட்ட 19 (1) (அ) பிரிவைப் பற்றி ஊடகத் தினர் பெரிதாகக் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கின்றனர்; ஆனால் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, நாட்டின் பாதுகாப்பு, பொது அமைதி, பண்பாடு, ஒழுக்கம், மானஇழப்பு அல்லது ஒரு குற்றம் புரியத் தூண்டுதல் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு சில நியாயமான வரையறைகளுக்கு உட்பட்டதுதான் இந்தப் பேச்சு சுதந்திரம் என்பதை வலியுறுத்தும் அரசமைப்புச் சட்ட 19 (2) பிரிவைப் பற்றி அவர்கள் வாய் திறப்பதேயில்லை. பேச்சு சுதந்திரம் கருத்து வெளியிடும் சுதந்திரம் நிலையானது அல்ல<br /><br />இவ்வாறு ஊடகங்களுக்கு சுதந்திரம் இருக்க வேண்டும் என்று கூறும் அதே நேரத்தில், அதன் மீது கட்டுப்பாடு இருக்கக்கூடாது என்றும், நாட்டின் பாதுகாப்பை, பொது அமைதி, ஒழுக்கம் போன்றவற்றை பாதிக்காத வகையில் இந்தச் சுதந்திரம் பயன்படுத்தப் பட வேண்டும் என்றும் கூறவேண்டும். எந்த ஒரு உரிமையும் முழுமையானதாக இருக்க முடியாது. ஒவ்வொரு உரிமையும், பொதுநலனுக்குத் தேவையான சில நியாயமான வரையறைகளுக்கு உட்பட்டதுதான். இதன் காரணமே மனிதர்கள் சமூகப் பிராணிகள் என்பது தான்.<br /><br />ஒரு சமூகத்தில் இல்லாமல், எவர் ஒருவராலும் தனித்து வாழ்ந்துவிட முடி யாது. எனவே, மற்றவர்களுக்கோ சமூகத் துக்கோ ஆபத்து விளைவிக்கும் வகையில் அந்த சுதந்திரத்தைப் பயன்படுத்தக் கூடாது. இல்லாவிட்டால் பிழைத்திருப் பதே கடினமான செயலாக ஆகி விடும்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-35515948804416403202012-05-11T18:02:18.350+05:302012-05-11T18:02:18.350+05:30மரபு மீறப்படுகிறதா?
நேற்றைய தினமணியின் முதல் பக்...மரபு மீறப்படுகிறதா?<br /><br /><br />நேற்றைய தினமணியின் முதல் பக்கத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றி விலாவாரியாக வார இதழ்போல படங்கள் எல்லாம் போட்டு விளாசித் தள்ளியுள்ளார் அதன் ஆசிரியர்.<br /><br />கடந்த கால நிகழ்வுகளையெல்லாம் மலரும் நினைவுகளாக வெளியிட்டு இருக்கிறார்.<br /><br />குடியரசுத் தலைவராக வட இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் இருந்தால் துணைக் குடியரசுத் தலைவராக தென்னிந்தியர் இருக்க வேண்டும்; தென்னிந் தியாவைச் சேர்ந்தவர் குடியரசுத் தலைவராக இருந்தால் வட இந்தியாவைச் சேர்ந்தவர் குடியரசு துணைத் தலைவராக இருக்க வேண்டாமா? இதற்கு தி.மு.க. தலைவர் கலைஞர்தானே முயற்சி செய்திருக்க வேண்டும்?<br /><br />கலைஞர் நினைத்திருந்தால் பேராசிரியர் க.அன்பழகனையோ, விடுதலை கி.வீரமணியையோ கூட குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்குப் பரிந்துரைத்து இருக்கலாமே என்று நீட்டி முழக்கி எழுது கோல் பிடித்திருக்கிறது தினமணி.<br /><br />ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்குக் கூடப் போட்டியிடாத அமைப்பு திராவிடர் கழகம் என்று உலகத்திற்கே தெரியும். அப்படி இருக்கும் பொழுது திராவிடர் கழகத்தின் தலைவரைக் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு கலைஞர் பரிந்துரை செய் திருக்கலாம் என்று எழுதுவது என்பது அசல் பார்ப் பனக் குசும்பும், குறும்புமாகும். விஷமத்தனமும்கூட!<br /><br />திராவிடர் கழகத்திற்கு ஆற்ற வேண்டிய எவ்வளவோ சமூகப் புரட்சிப் பணிகள் இருக்கின்றன. இரண்டு முறை சென்னை மாகாணத்தின் பிரதமராக பதவி ஏற்கவேண்டும் என்று ஆங்கிலேய ஆளுநர்கள் கேட்டுக் கொண்ட போதும் கூட முகவரி தெரியாமல் இங்கு வந்து விட்டீர்கள்; மாகாண பிரதமர் பதவிக்கு எத்தனையோ பேர் தவம் இருக்கிறார்கள். அங்கே செல்லுங்கள்; அதே நேரத்தில் இந்தச் சமூகப் பணிக்கு என்னை விட்டால் வேறு நாதியில்லை என்று சொன்ன உண்மையான புரட்சித் தலைவரான தந்தை பெரியாரின் தலைமைச் சீடர்தான் மானமிகு கி.வீரமணி அவர்கள்.<br /><br />விளையாட்டாகவோ, வினையாகவோ அவரின் பெயரை இப்படிப் பயன்படுத்துவது கண்டிக்கத் தக்கதாகும். தி.மு.க. வடக்கு - தெற்கு பேசினால் பிரிவினை வாதம் என்று பேசிக் கொண்டிருந்த தினமணி வகையறாக்கள் இப்பொழுது வடக்கு - தெற்கு பேச ஆரம்பித்துவிட்டனவே - இது என்ன வாதமாம்?<br /><br />வடக்கு - தெற்கு என்பதை விட குடியரசுத் தலைவராக ஒரு தாழ்த்தப்பட்டவர் வரவேண்டும் என்று குரல் கொடுத்தது திராவிடர் கழகம். குஜராத்தில் நடைபெற்ற அரசு பயங்கரவாதத்தை அடக்கிட இராணுவத்தை அனுப்பி ஒடுக்க வேண்டும் என்று பிரதமர் வாஜ்பேயியை குடியரசுத் தலைவர் என்ற முறையில் கே.ஆர். நாராயணன் அவர்கள் அறிவுறுத்தியும் அதற்கு செவி மடுக்கவில்லையே - அது பற்றியெல்லாம் என்றைக்காவது தினமணிகள் எழுதியதுண்டா? விமர்சித்ததுண்டா?<br /><br />பிரதமராக ஒரு தாழ்த்தப்பட்டவர் வரவேண்டும் என்று சொன்னால் இதே தினமணிகள் எப்படி எடுத்துக் கொள்ளும்? பிரதமர் பதவியையெல்லாம் இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கலாமா என்று இதோபதேசம் செய்யும்.<br /><br />குடியரசுத் தலைவர் பதவி என்பது - அதிகாரமற்றது. பிரதமர் பதவி என்பது வலிமை வாய்ந்தது என்பதால் அவர்களின் எழுதுகோல்கள் சந்தர்ப்பச் சதிராட்டங்கள் போடும்.<br /><br />தாழ்த்தப்பட்ட ஒருவர் இந்தியாவில் பிரதமராக வர இன்னும் நூறாண்டுகள் பிடிக்கும் என்றாரே - அரசியலில், பொது வாழ்வில் மூத்த தலைவரான - தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பாபு ஜகஜீவன்ராம்! - அதன் பொருள் என்ன என்று தினமணிக்குத் தெரியுமா, தெரியாதா?<br /><br />இந்தியாவின் முக்கிய பொறுப்புகளுக்கு யார் வரவேண்டும் என்பதை வடக்கு - தெற்கு என்று பார்ப்பதை விட சமூக நீதிப் பார்வையில் பார்ப்பதுதான் பொருத்தமானதும் - சரியானதுமாகும்.<br /><br />ஒரே நேரத்தில் குடியரசுத் தலைவரும், குடியரசு துணைத் தலைவரும் பார்ப்பனர்களாக இருந்தார்களே - அப்பொழுது அது குறித்து ஒரு வரி எழுதி இருக்குமா பார்ப்பன ஊடகங்கள்?<br /><br />எதையாவது சொல்லி கலைஞர் மீது சேற்றை வாரி இறைக்க வேண்டும் என்பதுதான் இதற்குள் இருக்கும் இரகசியம்! 11-5-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-87276513311308169802012-05-11T17:58:32.669+05:302012-05-11T17:58:32.669+05:30பார்ப்பனக் குறும்பைப் பாரீர்!
அம்பேத்கரைக் கேலி ...பார்ப்பனக் குறும்பைப் பாரீர்!<br /><br /><br />அம்பேத்கரைக் கேலி செய்து 11 ஆம் வகுப்புப் பாடம்!<br /><br />சென்னை, மே 11: கேலிச் சித்திரக்காரர் சங்கர் 1960 இல் வெளியிட்ட கேலிச் சித்திரத்தை 11 ஆம் வகுப்பு பாட நூலில் எடுத்துப் போட்டு குறும்பு செய்துள்ளனர் பார்ப்பனர்கள்.<br /><br />இந்தக் கேலிச் சித்திரம் பாபாசாகிப் அம்பேத்கர் அவர் களை இழிவு படுத்துவதாக இருப்பதால், இதனைப் பாட நூலில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி விடுதலை சிறுத் தைகள் கட்சியினர் கீழ்ப் பாக்கம் கேந்திரிய வித்யாலயா முன் போராட்டம் நடத்தி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபிலின் உருவப் பொம்மையையும் எரித்தனர்.<br /><br />இதற்காக காவல் துறை ஏழு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தொண்டர்களைக் கைது செய்துள்ளது. இந்திய அரசமைப்புச் சட்ட வரலாற்றைப் பற்றிய ஒரு பாடத்தில், இந்த கேலிச் சித் திரம் இடம் பெற்றுள்ளது.<br /><br />அரசமைப்புச் சட்டம் இயற் றும் பணியை விரைவுபடுத்து மாறு கேட்டு, நத்தையின்மீது உட்கார்ந்திருக்கும் அம்பேத் கரை சாட்டையுடன் ஜவஹர் லால் நேரு துரத்துவது போன்ற கேலிச் சித்திரம் அது. நத்தை வேகத்தில் அரச மைப்பு சட்டம் இயற்றப் பட்டதாக இந்த கேலிச்சித்திரம் கேலி செய்துள்ளது.<br /><br />அரசமைப்புச் சட்ட மன்றம் அமைக்கப்பட்டு, அரசமைப்பு வரைவுக் குழு ஒன்று பாபா சாகிப் அம்பேத்கர் தலைமை யில் நியமிக்கப்பட்டு, அக்குழு வரைவு அரசமைப்புச் சட் டத்தை சட்டமன்றத்தில் தாக் கல் செய்து அதனைப் பற்றி முழுமையாக சட்டமன்றம் விவாதித்து முடிவு செய்த பிறகு, அது 1950 ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்தது. அரசமைப்புச் சட்டம் வரைவதில் ஆன தாமதத்திற்கு, அரசமைப்புச் சட்டத்தின் தந்தை என்று புகழப் படும் அம் பேத்கரே காரணம் என்பது போல இந்த கேலிச் சித்திரம் காட்டுகிறது.<br /><br />அது மட்டுமல்ல. 1950 இல் நடைமுறைக்கு வந்து விட்ட அரசமைப்பு சட்டத்தைப் பற்றி 1960 களில் சங்கர் கேலிச் சித் திரம் வரைந்ததின் நோக்க மென்ன? அதன் பின் 50 ஆண்டு கள் கழித்து அந்தக் கேலிச் சித்திரத்தை மாணவர்களின் பாடநூலில் வெளியிட்டதன் நோக்கம் என்ன? பார்ப்பனக் குறும்பு அல்லாமல் இது வேறு என்னவாம்?<br /><br />அரசமைப்பு சட்ட வரைவுக் குழுவிற்கு பாபாசாகிப் அம் பேத்கரைத் தலைவராக நியமித் ததே அக்குழுவில் உறுப்பினர் களாக இடம் பெற்றிருந்த பார்ப்பனர்களுக்கு மகா வயிற் றெரிச்சலாக இருந்தது. தம்மில் யாராவது அந்த தலைமையிடத் தில் நியமிக்கப்பட்டிருந்தால், வசதியாக அரசமைப்புச் சட் டத்தையே மனுதர்ம சாஸ்திரத் தின் அடிப்படையில் எழுதி விட்டிருக்கலாமே என்ற அங்கலாய்ப்பு அவர்களுக்கு.<br /><br />பார்ப்பனர்களிடம் இந்தப் பணியை விட்டால் என்ன நடக்கும் என்பதை நன்கு அறிந் திருந்த பண்டித ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர் போன்ற தாழ்த்தப்பட்ட ஒருவரின் கண்ணோட்டத்தில் அரசமைப் புச் சட்டம் இயற்றப்படுவது தான் நியாயமானதாக இருக்கும் என்றும், இந்தப் பணிக்கு அம் பேத்கரே பொருத்தமானவர் என்றும் முடிவு செய்தார்.<br /><br />அரசமைப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக செயல்பட்டு வரும் நேரத்தில், சம்பந்தமே இல்லாமல் ஒரு கேலிச் சித்திரக்காரர் வரைந்த கேலிச் சித்திரத்தை பள்ளி மாணவர்களின் வரலாற்றுப் பாடநூலில் வெளியிடுவது மிகவும் குறும்புத்தனமான செய லாகும். அதனை உடனே பாட நூலிலிருந்து நீக்க வேண்டும் என்பதை நாம் வலியுறுத்து கிறோம்.<br /><br />இதனைச் செய்ய மறுப்பதோ, தயங்குவதோ, அது வேண்டுமென்றே வெளியிடப் பட்டது என்பதை உண்மை யாக ஆக்கிவிடும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும். 11-5-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com