tag:blogger.com,1999:blog-1474608369333206681.post1583235615402197694..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: பகவான் சாயிபாபாவின் மறுபக்கம் - திடுக்கிடும் கசப்பான உண்மைகள்தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-80870533750369984082011-05-01T18:58:02.266+05:302011-05-01T18:58:02.266+05:30பி.சி. சர்க்கார்
இந்தியாவின் புகழ்பெற்ற தந்திரக்க...பி.சி. சர்க்கார்<br /><br />இந்தியாவின் புகழ்பெற்ற தந்திரக்கலை (மேஜிக்) நிபுணர் பி.சி. சர்க்கார். அவருக்கு மத்திய அரசு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டுப் பெரு-மைப்-படுத்தியிருக்கிறது. இதற்குமுன் பத்மசிறீ விருதும் வழங்கப்பட்டுள்ளது. அவர் மறைந்து எட்டாண்டு-களுக்-குப்பின் கொல்கத்தா நகராட்சி ஒரு தெருவுக்கு இவரின் பெயரைச் சூட்டிச் சிறப்பு செய்தது.<br /><br />இவர் செய்த தந்திரக் கலை என்பது மூட நம்பிக்-கை-களைச் சார்ந்ததல்ல; அறிவியல் பூர்வமாகவே நடத்தி வந்தார்.<br /><br />இவரது நிகழ்ச்சி என்பது _ இசை, நடனம் உள்ளிட்ட பல கலை வண்ணங்கள் ஒளிரும் கலவையாகக் கண்-டோரை ஈர்க்கும் சிறப்புத்-தன்மை உடையது.<br /><br />பணம் கொடுத்து அனு-மதிச் சீட்டு வாங்கி மக்கள் ஆர்வத்தோடு ஓடோடிப் பார்க்கும் ஒரு நிலையை ஏற்படுத்தினார். அத்தகைய தந்திரக்கலை மன்னருக்கு நடுவண் அரசு இத்தகைய சிறப்பு செய்தது பாராட்டத்-தக்கதாகும்.<br /><br />கடவுள் சக்தியென்று கூறி, கையசைப்பில் பொருள்களை வரவழைப்பதாகக் கூறும் சாய்பாபாவை சந்திக்க பி.சி. சர்க்கார் விரும்பினார். ஒவ்-வொரு முறையும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தன்னை அசாம் வியாபாரி என்று கூறிக்கொண்டு, தனக்கு ஆஸ்துமா நோய் நெடுநாளாக இருப்பதாகவும், சாய்பாபா-விடம் குணப்படுத்திக் கொள்கிறேன் என்று கூறிக்-கொண்டு சாய்பாபா ஆசிர-மத்துக்குள் நுழைந்துவிட்டார் பி.சி. சர்க்கார். ஒவ்வொரு-வராகத் தரிசனத்துக்காக அழைத்தார் சாய்பாபா.<br /><br />பி.சி. சர்க்காரும் அழைக்-கப்பட்டார். சாய்பாபாவைச் சுற்றி அவரைச் சேர்ந்த சீடர்கள் உட்கார்ந்திருந்தனர்.<br /><br />அசாம் மொழி, இந்தி மொழி ஆகியவற்றைக் கலந்து பேசினார் சர்க்கார். சாய்-பாபா-வால் அதனைப் புரிந்து-கொள்ள முடியவில்லை. மொழி பெயர்ப்பாளரை அழைத்துக்கொண்டு வந்தனர் (அவர்தான் பகவான் ஆயிற்றே _ அசாம் மொழி தெரியாதது ஏனோ?)<br /><br />உங்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டார் சாய்பாபா. ஆஸ்துமா வியாதி இருக்கிறது; அதைக் குணப்-படுத்திக்கொள்ளவே இங்கு வந்தேன் என்றார் சர்க்கார். மந்திரத்தால் விபூதி கொடுத்து ஆசீர்வதிக்குமாறு வேண்டி-னார். கைவசம் வைத்திருந்த விபூதி தீர்ந்துவிட்ட நிலையில், ஒரு நிமிடம் சாய்பாபா திகைத்தார்.<br /><br />சூ போட்டு சந்தனம் கொடுத்து ஆசீர்வதித்தார். பி.சி. சர்க்காரே கடைந்-தெடுத்த தந்திரக்கலை நிபுணர் ஆயிற்றே _ நடந்தது என்ன என்பதை நுனிப்பொழுதில் தெரிந்துகொண்டார்.<br /><br />பலகாரத் தட்டு ஒன்றை எடுத்து வந்து சாய்பாபாவின் சீடர் அதில் சந்தனத்தையும் போட்டார்; அதை சர்க்காரும் கவனித்துவிட்டார் (பாம்பின் கால் பாம்பறியும் அல்லவா!) அவ்வளவுதான் பி.சி. சர்க்கார் திடீரென்று சாய்பாபா செய்த அதே தந்திரத்தைக் கையாண்டு, ரசகுல்லா ஒன்றை வரவழைத்து சாய்-பாபாவிடம் கொடுத்தாரே பார்க்கலாம் (பக்கத்தில் பலகார தட்டு இருந்தது அல்லவா!).<br /><br />அவ்வளவுதான் வியர்த்து விறுவிறுத்துப் போய்விட்டார் சாய்பாபா; சீடர்கள் கூச்சல் போட்டு என்ன பயன்? பக-வானின் வேடத்தைக் கலைத்-தெறிந்து கம்பீரமாக வெளியில் வந்தார் பி.சி. சர்க்கார் (ஆதாரம்: இம்பிரிண்ட், ஜூன் 1983) என்ன, பி.சி. சர்க்காருக்கு அஞ்சல் தலை வெளியிட்டது சரிதானே!<br /><br />- மயிலாடன்.27-2-2010தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-65250932224748368902011-05-01T18:43:09.852+05:302011-05-01T18:43:09.852+05:30கடவுள் மறைவதில்லை என்று கூறும் பக்தர்களே!
பகவான் ச...கடவுள் மறைவதில்லை என்று கூறும் பக்தர்களே!<br />பகவான் சாயிபாபா மறைந்துவிட்டார் என ஏன் பதறுகிறீர்?<br /><br /> கடவுளுக்கு இறப்பில்லை என்று கூறும் பக்தர்களே! பகவான் (சாயிபாபா) இறந்துவிட்டார் என்று நீங்களே கூறுகின் றீர்களே! என்று பக்தர்களின் அறியாமையை விளக்கி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி விளக்கவுரையாற்றினார். அரக்கோணம் மாவட்டம் நெமிலி ஒன்றியம் பெரப்பேரியில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் 28.4.2011 அன்று இரவு 7 மணிக்கு வெகு சிறப்பாக பெரப்பேரி பெரியார் ஊழியன் துரை. சக்ரவர்த்தி நினைவு மேடையில் நடைபெற்றது. பெரப்பேரி கிராமம் முழுமையும் மற்றும் வழிநெடுக இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு கழகக் கொடிகளும், வண்ண விளக்குகளும் பார்த்தோர் வியக்கும் வண்ணம் மாநாடு போல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.<br /><br />தமிழர் தலைவர் உரை<br /><br />இந்நிகழ்ச்சியில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் சிறப்புரையில் பேசியதாவது:<br /><br />பெரியார் பிறந்திருக்காவிட்டால்.... என்று ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். பெரியார் பிறந்திருக்காவிட்டால் நம்முடைய தோளில் துண்டு தொங்குமா? நம்முடைய வேட்டி முழங்காலுக்குக் கீழே இருக்குமா?<br /><br />மார்பை மறைக்க உரிமை இல்லை<br /><br />தாய்மார்கள் சிந்திக்கவேண்டும். நூறு வருடங் களுக்கு முன்னால், பெரியார் பிறப்பதற்கு முன்னால், நம்முடைய சமுதாயத்தில் இருந்த பெண்கள் - தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பெண்கள் - நம்முடைய சகோதரிகள் மார்பை மறைக்கக் கூடிய உரிமையைப் பெற்றவர்களாக வாழவில்லை. வெட் கத்தோடு சொல்கிறோம்; இன்றைக்கு அந்நிலை மாறி போய்விட்டது. பெண்கள் அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ், வழக்கறிஞர்களாக, மருத்துவர்களாக, பொறியாளர்களாக மற்றும் அனைத்துத் துறை களிலும் வளர்ந்திருக்கிறார்கள். இந்த மாற்றத்திற்கு யார் காரணம்? இதை மாற்றிய கொள்கைச் சீலர்தான் - இதோ, நாம் திறந்து வைத்திருக்கக்கூடிய சிலையாக நின்று கொண்டிருக்கும் நமது பகுத் தறிவுப் பகலவன் தந்தை பெரியார்தான் இந்த மாற்றத்திற்கான காரணகர்த்தா!<br />ஏன் பெரியாருக்கு சிலை வைக்கிறோம்? பெரியாருடைய சிலையை பார்க்கும்பொழுது, மனித உரிமை சம உரிமை, சமத்துவம் என்கிற உணர்வை நாம் பெறவேண்டும் என்பதற்காகத்தான் அய்யாவிற்கு சிலை வைக்கிறோம். மற்றவர்களைப் போல இந்த சிலையை மூன்று சுற்று சுற்றி வந்தால், யார் யாருக்கு என்ன வேண்டுமோ அதெல்லாம் நடக்கும், அல்லது தேங்காய், பழத்தோடு விழுந்து கும்பிட்டால், நடக்கவேண்டியது நடக்கும்; கிடைக்கவேண்டியது கிடைக்கும். அரசை மரத்தைச் சுற்றி வருவதுபோல சுற்றி வந்தால், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் போன்ற மூட நம்பிக்கைகளுக்காக நாம் சிலை வைக்கவில்லை. இவைகளையெல்லாம் மூட நம்பிக்கை என்று சொன்னாரே, நமக்கு அறிவை கொளுத்தினாரே, அறிவு வெளிச்சம் தந்தாரே, இருட்டிலிருந்து நம்மை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தாரே, அந்தத் தலைவர் தந்தை பெரியார்தான் இதோ சிலையாக நிற்கிறார் பாருங்கள் என்று தெளிவாக, அவருடைய தொண்டை மக்களுக்கு எடுத்துச் சொல்லத்தானே தவிர, வேறொன்றுமில்லை. அடுத்த தலைமுறையி னருக்கு தந்தை பெரியாரின் பணியை, இந்த இயக்கத்தின் பணியை எடுத்துச் சொல்ல, தந்தை பெரியாரால் பலன் - பயன் பெற்ற தமிழர்கள் முனைப்பு காட்டவேண்டும் என்று குறிப்பிட்டார்.<br /><br />பகவான் கவலைக்கிடமா?<br /><br />மேலும் அவர் உரையில்,பகவான் கவலைக் கிடம் என்று தலைப் பிட்டு அனைத்து ஊட கங்களும் செய்தி வெளி யிட்டன. பகவானாக இருப்பவர் எப்படி கவலைக்கிடமாக இருக்க முடியும்? உடல் நிலைக் கவலைக் கிடமாக இருந்தால், அவர் எப்படி பகவா னாக இருக்க முடியும்? இதைத்தானே திராவி டர் கழகம் நீண்ட நாள்களாக கேட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு யாராவது பதில ளிக்க முடியுமா? எந்த ஊடகங்கள், பக்தர்கள், சாய்பாபா சக்தி மிகுந்த பகவான் என்று சொன் னார்களோ, இப்போது அவர்களே, பகவான் மறைந்தார் என்று சொல்லுகிறார்கள். பகவான்களுக்கு உயிர் தர வேண்டுமென் றாலும் மருத்துமவனை களைத்தான் நாட வேண்டி இருக்கிறது. இப்போது மட்டுமல்ல, பல ஆண்டுகளுக்கு முன்பே இதே பக வானை கொல்ல சதி நடந்ததாகவும் செய்தி வெளிவந்தது. பக வானை சாதாரண மனி தர்களால் கொலை செய்ய முடியுமா? என் பதை பக்தர்கள் சிந் தித்துப் பார்க்கவேண் டும் என்று தமிழர் தலைவர் உரையாற் றினார். (முழு உரை பின்னர் வெளிவரும்).<br />---விடுதலை” 30-4-2011தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com