tag:blogger.com,1999:blog-1474608369333206681.post1522592999682106044..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: இதுதான் வால்மீகி இராமாயணம் -6தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-56331896093933783682014-06-29T06:51:38.693+05:302014-06-29T06:51:38.693+05:30
காங்கிரஸ்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் அதன் த...<br />காங்கிரஸ்<br /><br />தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் அதன் தலைவரும் சென்னையில் நடந்த காங்கிரசின்போது வரவேற்புத் தலைவராய் இருந்தவரும் பார்ப்பனர்களின் தாசானுதா சராய் இருந்தவருமான திரு.முத்துரங்க முதலியாரும் மற்றும் அதன் காரியதரிசியாய் இருந்த திரு. கே. பாஷ்யம் அய்யங்காரும் மற்றும் நிருவாக அங்கத்தினர்களான திருவாளர்கள் எ.சத்தியமூர்த்தி சாஸ்திரி, ஆர்.சீனிவா சய்யங் கார் முதலியவர்கள் நிருவாக சபையில் ராஜினாமா செய்து விட்டார்கள்.<br /><br />காங்கிரஸின் நிலைமை எங்கு பார்த்தாலும் இதே கதியாகத்தான் இருந்து வருகின்றது. ஏனெனில், கொஞ்ச காலமாய் காங்கிரசில் இந்த மாதிரி ஆட்கள்தான் அதில் இருக்க முடிந்தது. அதாவது சட்டசபை மந்திரி முதலிய தானங்களும் அபேட்சை உள்ளவர்கள் மாத்திரம் அதில் இருக்கும்படி இருந்தது.<br /><br />இப்போது அதற்கு இடமில்லாமல் ஒரு சமயம் ஜெயிலுக்கும் போகும்படியான சந்தர்ப்பம் ஏற்படக் கூடும் என்று தெரிவதால் அப்படிப்பட்ட ஆட்கள் அதை விட்டு ஓடி வேறு கட்சிகளின் பெயர்களைச் சொல்லிக்கொண்டு வாழவேண்டியதாய் விட்டது. இதனாலே யே காங்கிரசைப் பார்ப்பனர்கள் வளர்த்து வந்த உத்தேசம் இன்னது என்பது நன்றாய் விளங்கும்.<br /><br />நிற்க, இன்றைய தினம் சென்னை மாகாணத்தில் காங்கிரசிலிருந்து ராஜினாமா கொடுத்து ஓடுகின்ற ஆட்கள் எல்லாம் சென்னையில் காங்கிரஸ் கூடியபோது லாகூர் தீர்மானமாகிய பூரண சுயேச்சை தீர்மானத்தை வெகுவீரத் துடன் ஆதரித்த ஆசாமிகளாவார்கள். ஆனால் அத்தீர் மானம் லாகூரில் நிறைவேற்றி அதற்கு ஆரம்பவிழா நடத்தப் போவதாக பிரதாபம் வெளிப்பட்டவுடன் ராஜினாமா கொடுத்து ஓடிவிட்டார்கள்.<br /><br />இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் என்னவென்றால் அதிகாரமுள்ள எல்லா ஸ்தாபனங்களையும் கைப்பற்றவேண்டும் என்பதேயாகும். எனவே உத்தியோகம் தேர்தல் தாபனங்களைக் கைப்பற் றுவதுமேதான் இந்தப் பார்ப்பனர்களுடையவும் அவர்களது அடிமைகளுடையவும் தேசிய லட்சியம் என்பதையும் அதற்கு வழி இருந்தால்தான் பூரண சுயேச்சையில் கலந்தி ருப்பார்கள் என்பதையும் மற்றவர்கள் யாராவது அப்படிச் செய்தால் அவர்களைக் குலாம் என்றும் சர்க்கார்தாசர்கள் என்றும் சிறிதும் மானம் வெட்கம் இல்லாமல் எழுதுவார்கள் என்பதையும் ஒருசமயம் ஜெயிலுக்குப் போகவேண்டியதா யிருந்தால் இராஜினாமா கொடுத்துவிட்டு ஓட்டம் பிடிப்பார்கள் என்பதையும் நாம் நம் வாசகர்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டியதில்லை என்றே நினைக்கின்றோம்.<br /><br />- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 09.03.1930<br /><br />Read more: http://viduthalai.in/page-7/83072.html#ixzz35zFmL2tF<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-38975962948456124492014-06-29T06:51:02.976+05:302014-06-29T06:51:02.976+05:30தந்தை பெரியார் பொன்மொழி
இன்று ஆறாம் ஜார்ஜ் மன்னரு...தந்தை பெரியார் பொன்மொழி<br /><br />இன்று ஆறாம் ஜார்ஜ் மன்னருக்கு இதுவரை இருந்து வந்த சக்கரவர்த்திப் பட்டத்தை எடுத்துவிட்டார்களா இல்லையா? அரசர் கடவுளின் பிரதிநிதி என்ற பழைய கொள்ளை இன்று என்னவாயிற்று? கோவணம் கட்டத் தெரியாத குழந்தைப் பிள்ளைகளெல்லாம் இன்று அவன் ஏன் பணக்காரன்? இவன் ஏன் மிராசுதாரன்?<br /><br />என்று கேட்க ஆரம்பித்து விட்டார்களா இல்லையா? அதேபோல், தாழ்த்தப்பட்ட மக்கள் சிந்திக்க வேண்டும் - நாம் எதனில் தாழ்த்தப்பட்டிருக்கிறோம் என்று. அப்போது தெரியும் - நாம் தாழ்த்தப்பட்டிருக்கக் காரணம் நாம் தழுவி நிற்கும் இந்து மதம்தான் என்று. எவனும் தன்னை ஓர் இந்து என்றே கூறிக்கொள்ளக் கூடாது.<br /><br />Read more: http://viduthalai.in/page-7/83069.html#ixzz35zFeqWbm<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-81691668260624552712014-06-29T06:50:38.111+05:302014-06-29T06:50:38.111+05:30தந்தை பெரியார் பொன்மொழி
திராவிடன் என்றால் என்ன மொ...தந்தை பெரியார் பொன்மொழி<br /><br />திராவிடன் என்றால் என்ன மொழி என்று சிலர் கேட்கிறார்கள். என்ன வார்த்தையாகத்தான் இருக்கட்டுமே. இந்தக் கருத்து இருக்க வேண்டும். இழிவுள்ள சகல மக்களும் ஒன்று சேர அவ்வார்த்தையில் இடம் இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை.<br /><br />நாம் எல்லோரும் காப்பி சாப்பிடுகிறோம். அது என்ன மொழி என்று நாம் சிந்திக்கிறோமோ? வாய்க்குள்ளே செலுத்தும் காப்பி என்ன மொழி என்று நீ சிந்திப்பதில்லை. நீ போற்றும் இந்து மதம் என்ன மொழி என்று நீ சிந்திப்பதாகக் காணோம். திராவிடன் என்ற சொல்லைக் கேட்கத்தானா உன் காது கூசுகிறது?<br /><br />Read more: http://viduthalai.in/page-7/83069.html#ixzz35zFX1J94<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-37879412723684465442014-06-29T06:47:30.752+05:302014-06-29T06:47:30.752+05:30
72-ஆம் ஆண்டாக மேடையேறிய தமிழர் தலைவருக்கு பலத்த க...<br />72-ஆம் ஆண்டாக மேடையேறிய தமிழர் தலைவருக்கு பலத்த கரவொலி மூலம் பாராட்டு<br /><br /><br />நேற்று (ஜூன் 27) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும். 71 ஆண்டுகளுக்கு முன் 1943-இல் இதே நாளில் தான் கடலூர் பழையப்பட்டினம் செட்டிக்கோயில் திடலில் மாலை நடைபெற்ற தமிழர் கூட்டம் என்ற பொதுக்கூட்டத்தில், அன்று பத்துவயது கூட நிரம்பாத சிறுவனாக இருந்த கி.வீரமணி மேடை யேறி உரையாற்றினார்.<br /><br />தோழர் மா.பீட்டர் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் புராணங் களையும், புராண ஆபா சங்களையும் கிழி கிழி என்று கிழித்து சிறுவன் வீரமணி அவர்கள் ஆற்றிய உரை அனைவரையும் ஈர்த்தது. மேடையை நோக்கி வந்த அறிஞர் அண்ணா அவர் கள் சிறுவன் வீரமணியின் உரையினால் பெரிதும் கவ ரப்பட்டார். இக்கூட்டத்தில் காஞ்சி பொன்னப்பா, பூவாளூர் போட்மெயில் பொன்னம்பலனார் போன் றோர் கலந்து கொண்ட னர்.<br /><br />ஏராளமான பொது மக்கள் கலந்துகொண்ட பொதுக் கூட்டத்தில் அறிஞர் அண்ணாவின் திராவிட நாடு வார இத ழுக்கு வளர்ச்சி நிதியாக வசூலித்த தொகையான ரூ.103/- வழங்கப்பட்டு வழிகாட்டப்பட்டது. அன்றைய சிறுவன் வீரமணி, இன்று (ஜூன் 27, 2014) திராவிடர் கழ கத்தின் தலைவராக, அடுத்த தலைமுறை கொள்கை யாளர்களை உருவாக்கும் குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் உங்களுக்கு வகுப்பினை நடத்த வந்திருக்கிறார் என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தச் செய்தியை கழகப் பொதுச்செயலா ளர் முனைவர் துரை.சந் திரசேகரன் தெரிவித்த போது அரங்கத்திலிருந்த அனைவரும் பலத்த கரவொலி மூலம் தங்கள் வரவேற்பை, மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தினர். தொடர்ந்து கடவுள் மறுப்பு-ஏன்? என்ற தலைப்பில் தமிழர் தலை வர் வகுப்பு நடத்தினார் என்பது எத்துணை வர லாற்றுப் பொருத்தம்!<br /><br />Read more: http://viduthalai.in/page-4/83068.html#ixzz35zEjmOlL<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-32424052598982695082014-06-29T06:44:22.045+05:302014-06-29T06:44:22.045+05:30
ஊழலைப்பற்றி ஏன் பேசவில்லை?
கேள்விக்குப் பதில்
...<br />ஊழலைப்பற்றி ஏன் பேசவில்லை?<br /><br /><br />கேள்விக்குப் பதில்<br /><br />ஊழலைப்பற்றி தாங்கள் பேசவில்லையே, ஊழலைப்பற்றி தங்களின் கருத்தென்ன? என்று பொதுக்கூட்டத்தில் ஒருவர் கேள்வி எழுதி அனுப்பினார்.<br /><br />அதற்குப் பதில் அளிக்கும் முறையில் தமிழர் தலைவர் கூறியது: ஊழல் ஒழிக்கப்பட வேண்டியது தான். அதே நேரத்தில் இந்தத் தேர்தல் முறையில் மாற்றம் வராதவரை ஊழலை ஒழிக்க முடியுமா என்பது முக்கிய கேள்வியாகும். 200 ரூபாய் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடும் மன நிலையில் மக்கள் இருக்கும் நாட்டில் லஞ்சம் ஒழியுமா? (பலத்த கரஒலி!)<br /><br />இப்படி லஞ்சம் வழங்கியதை எங்களால் தடுக்கவே முடியவில்லை என்று தேர்தல் கமிஷனே சொல்லும் நாட்டில் ஊழல் சுலபத்தில் அழியுமா? உண்மையைச் சொல்லப்போனால் லஞ்சம் எங்கே ஆரம்பிக்கிறது? பூஜை அறையில் இருந்துதானே ஆரம்பிக்கிறது. பிரார்த்தனை என்பது என்ன? ஒன்றைக் காணிக்கைச் கொடுப்பது என்பது என்ன? கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பதுதானே?<br /><br />இந்த லஞ்சத்தைப்பற்றி யாரும் பேசுவதில்லையே ஏன்? என்று திராவிடர் கழகத் தலைவர் வினா எழுப்பியபோது பலத்த கரஒலி!<br /><br />- கீழப்பாவூர் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் (27.6.2014)<br /><br />Read more: http://viduthalai.in/page-4/83067.html#ixzz35zDwEjIG<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-6863552280235187572014-06-29T06:40:57.650+05:302014-06-29T06:40:57.650+05:30
பாலாறா? பாழாறா?
தமிழ்நாட்டுக்கு எல்லாத் திசைகள...<br />பாலாறா? பாழாறா?<br /><br /><br /><br />தமிழ்நாட்டுக்கு எல்லாத் திசைகளிலிருந்தும் தொல்லைகள் தலை தூக்குகின்றன. கருநாடகத்தி லிருந்து காவிரிக்குத் தொல்லை என்றால் கேரளாவி லிருந்து முல்லைப் பெரியாறுப் பிரச்சினையில் முட்டுக்கட்டை!<br /><br />இப்பொழுது ஆந்திராவிலிருந்து அறைகூவல் இவ்வாற்றின் பிறப்பிடம் கருநாடகம் என்றாலும் 60 மைல் அம்மாநிலத்தில் ஓடி ஆந்திர மாநிலம் குப்பத்தில் கால் பதிக்கிறது. குப்பம் மாவட்டத்தில் 30 மைல் பயணமாகி தமிழ்நாட்டின் வாணியம்பாடி அருகே புல்லூரில் புகுகிறது. வேலூர், காஞ்சிபுரம், செங்கற்பட்டு வழியாக வழிந்தோடி கல்பாக்கம் அருகே கடலில் சங்கமமாகிறது. தமிழ்நாட்டில் இதன் ஓட்டம் 140 மைலாகும்.<br /><br />இந்தப் பாலாறு வேலூர் மாவட்ட மக்களுக்குப் பால் வார்க்கும் நதியாகும் அம்மாவட்டத்தில் 49 ஆயிரம் ஏக்கர் நிலம் பாலாற்றால் பயன் அடைகிறது. 300 ஏரி குளங்களுக்கான பாசன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.<br />பாலாற்றங் கரையில் நெல், கரும்பு, வாழை, தென்னை ஆகியவை முக்கிய பயிர்களாகும்.<br /><br />பாலாற்றின் நீர் ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு தான் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் செயல்பட்டும் வருகின்றன.<br /><br />மைசூர் மாநிலத்திற்கும், சென்னை மாநிலத்திற்கும் இடையில் எப்படி காவிரி நீர்ப் பிரச்சினையில் ஒப்பந்தம் போடப்பட்டதோ அதுபோலவே பாலாற்றுப் பிரச் சினையிலும் ஓர் ஒப்பந்தம் 1892இல் போடப்பட்டது.<br /><br />அதன்படி பாலாற்றில் புதிய அணைகளைக் கட்டக் கூடாது; அணைகளின் உயரத்தையும் நீட்டக் கூடாது.<br /><br />காவிரி நீர்ப் பிரச்சினையில் கருநாடக மாநிலம் எப்படி ஒப்பந்தத்தை எல்லாம் உடைத்துத் தானடித்த மூப்பாக கருநாடகம் நடந்து கொண்டு வந்துள்ளதோ, அதே புத்தியில் பாலாற்றுப் பிரச்சினையிலும் கருநாடகம் நடந்து கொண்டது. ஆனால், பேந்த மங்கலம் என்னும் இடத்தில் ஏற்கனவே இருந்து வந்த அணையை ஒப்பந்தத்தை மீறி 15 அடியிலிருந்து 30 அடியாக உயர்த்திக் கொண்டது மட்டுமல்லாமல் பாலாற்றின் குறுக்கே ராமாசாகர் என்ற புதிய அணையையும் கட்டிக் கொண்டது.<br /><br />கருநாடக அரசு தன் பங்குக்கு ஒப்பந்தத்தை உடைத்தது என்றால் ஆந்திர அரசு தன் பங்குக்கு ஏதாவது தமிழ்நாட்டுக்குக் கெடுதல் செய்ய வேண்டாமா?<br /><br />1892 ஒப்பந்தத்தை மீறி குப்பம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே 20 அடி உயரம் உள்ள 22 தடுப்பு அணைகளை 30 மைலுக்குள் கட்டி முடித்துக் கொண்டது.<br /><br />இதனால் இயற்கையாகப் பாலாற்றின் மூலம் தமிழ்நாட்டுக்கு வந்த தண்ணீர் செயற்கையாகத் தடுத்து நிறுத்தப்பட்டது. அணைகள் நிரம்பி வழியும் தண்ணீர் மட்டுமே தமிழ்நாட்டுக்குள் வந்து சேர முடியும்.<br /><br />இதன் காரணமாகவே பாலாறு பாழாறாகிப் போய் விட்டது. 1892 ஒப்பந்தப்படி பாலாற்று நீர் தமிழ்நாடு, கருநாடகம், ஆந்திர மாநிலங்களில் சம அளவில் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். ஆனால் இதில் பழி வாங்கப்பட்டது தமிழ்நாடு மட்டுமே.<br /><br />இதன் காரணமாக தமிழ்நாட்டின் வட மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் குடிநீர்ப் பாசனமும், பாசன நீர்ப் பாசனமும் முற்றாக முடக்கப்பட்டு விட்டது.<br /><br />இதற்கிடையில் குதிரை கீழே தள்ளிக் குழியும் பறித்த கதையாக ஆந்திர மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற திருவாளர் சந்திரபாபு நாயுடு தமிழ்நாட்டின், வடக்கு மாவட்டங்களின் தலையில் பாறாங் கல்லைத் தூக்கிப் போடுவது போல ஒன்றை அறிவித்துள்ளார்.<br /><br />குப்பத்தில் பாலாற்றில் புதிய அணை ஒன்றைக் கட்டி, ஒரு துளி நீரும் வீண் போகாமல், ஆந்திர விவசாயிகளின் நன்மைக்காகத் திட்டங்கள் தீட்டுவேன் என்று கூறியுள்ளார்.<br /><br />முன்னாள் முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். முதல் அமைச்சரும் தமிழ்நாட்டு உரிமையை மீட்பேன் என்று கூறியுள்ளார்.<br /><br />இதில் முன்னாள் முதல்வர் கலைஞரை இந்நாள் முதல்வர் ஜெயலலிதா சீண்டியுள்ளது தேவையற்ற ஒன்று.<br /><br />ஒரு முதலமைச்சராக இருக்கக் கூடியவர் இது போன்ற தமிழ்நாட்டு நலனைச் சேர்ந்த பொதுப் பிரச்சினையில், கிடைக்கக் கூடிய ஆதரவை வளர்த்துக் கொள்ளாமல், பொதுப் பிரச்சினையில்கூட நாங்கள் ஒற்றுமையாக இருக்க மாட்டோம் என்று காட்டிக் கொள்வது முதல் அமைச்சர் என்ற பொறுப்பில் உள்ளவர்களுக்கு அழகல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.<br /><br />வட மாவட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு போராடினால் போதிய பயன் கிடைக்க வாய்ப்புண்டு.<br /><br />Read more: http://viduthalai.in/page-2/83047.html#ixzz35zD5DagJ<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-34734654373098965452014-06-29T06:39:35.079+05:302014-06-29T06:39:35.079+05:30திரவுபதையின் ஆசை
திரவுபதை கர்ணன் மீது ஆசைப்பட்டத...திரவுபதையின் ஆசை<br /><br /><br />திரவுபதை கர்ணன் மீது ஆசைப்பட்டது ஏன்?<br /><br />1) தருமன் -சதா வேதாந்தம் பேசுவான்.<br /><br />2) பீமன் - உடல் பெரியவன் குண்டன் சாப் பிட்டுக் கொண்டே இருப் பான்.<br /><br />3) அர்ச்சுனன் - ஏகப் பட்ட மனைவிகள் (ஆற்று மணலை எண்ணி னாலும் அர்ச்சுனன் மனைவிகளை எண்ணவே முடியாது). 4. நகுலன், 5. சகா தேவன்<br /><br />எனது பிள்ளைகள் மாதிரி. எனவே கர்ணன் மீது ஆசைப்பட்டேன் என்கிறாள் திரௌபதி. (வியாசர் பாரதம்)<br /><br />இந்த ஆன்மிகத்தை ஏற்கத் தயார் தானா?<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/83044.html#ixzz35zCePPHy<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-13159643306791661792014-06-29T06:38:31.891+05:302014-06-29T06:38:31.891+05:30
நாத்திக அறிஞர் தபோல்கருக்கு அம்பேத்கர் விருது
ப...<br />நாத்திக அறிஞர் தபோல்கருக்கு அம்பேத்கர் விருது<br /><br /><br />பூனா, ஜூன் 28-_ பூனாவில் பாலகந்தர்வா அரங்கில் நடைபெற்ற விழாவில் மறைந்த நாத்திக அறிஞர் டாக்டர் நரேந்திர தபோல்கருக்கு 2013-2014ஆம் ஆண்டுக்குரிய பாரத் ரத்னா டாக்டர் பாபாசாஹெப் அம் பேத்கர் விருது அவர் மகள் முக்தாவிடம் அளிக் கப்பட்டது. நாத்திக அறிஞர் நரேந்திர தபோல் கர் ஆதிக்க சக்திகளை எதிர்ப்பதிலும், போதை களிலிருந்து விடுவிக்கும் இயக்கத்தின்மூலமும் சமுதாயத்துக்கு தம்முடைய பங்களிப்பை வழங்கியதால் அவருக்கு அம்பேத்கர் விருது வழங்கப்படுவதாக விழாவில் தெரிவிக்கப்பட் டது.<br /><br />மகாராட்டிர மாநிலத் துணை முதல்வர் அஜீத் பவார் விழாவில் கலந்துகொண்டு இவ் விருதை தபோல்கர் மகள் முக்தாவிடம் வழங்கினார். விருதுடன் ரூபாய் 1,11,111 தொகையும் வழங்கப்பட் டது. விருதுவழங்கும் விழாவில் கலந்து கொண்டு விருதை வழங்கிய மகா ராட்டி மாநிலத் துணை முதல்வர் பேசும்போது, ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதிக்குள் சிசிடிவி கேம ராக்களை பூனா மற்றும் பிம்பிரி-சின்ச்வாட் உள் ளிட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் பொருத்த உள்ளதாகத் தெரிவித்தார். பூனா மாநகராட்சி கார்பொரேஷன் சார்பில் அதன் தலைவர் சுபாஷ் ஜக்தப், இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவரும் அம் பேத்கர் விருது தேர்வுக் குழுத் தலைவருமாகிய டாக்டர் சித்தார்த் தேண்டே ஆகியோர் இணைந்து கடந்த ஆண்டு அம்பேத்கர் விருதுக்கு டாக்டர் நரேந்திர தபோல் கரைத் தேர்வு செய்துள்ள தாகச் செய்தியாளர் களிடம் அறிவிப்பை வெளியிட்டனர்.<br /><br />சமுதாயப் பணியில் ஈடுபட்டுள்ளவர் களும், எழுத்தாளர்களுமா கிய ராவ்சாஹெப் காஸ்பெ மற்றும் ராம்நாத் சவன் அம்பேத்கர் விருதுக்குரிய வர்களை தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்வதில் இறுதி முடிவெடுத்தனர். அதன்படி நாத்திக அறிஞர் டாக்டர் நரேந்திர தபோல் கர் தேர்வு செய்யப்பட்டார். 2013ஆம் ஆண்டில் ஆகஸ்ட்டு மாதம் 19ஆம் தேதி அன்று ஆதிக்க வெறியர்களால் சுடப்பட் டுக் கொல்லப்பட்டார்.<br /><br />அவருடைய சமுதாயப் பணிகளை நினைவுகூர்ந்து அவருக்கு 22-6-2014 அன்று வழங்கப்பட்ட அம்பேத்கர் விருதை அவர் மகள் முக்தா பெற்றுக்கொண்டார். விழாவில் இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவர் ராம்தாஸ் அத வாலே, மேயர் சன்சலா கோத்ரே, டாக்டர் பாபா அதவ், நிலைக்குழுவின் தலைவர் பாபு கார்னே, பூனா மாநகராட்சி ஆணையர் விகாஸ் தேஷ்முக், தேசியவாதக் காங்கிரசுக் கட்சியின் பேச்சாளர் அன்குஷ்காகடே, ராம்நாத் சவான் மற்றும் பலரும் விழாவில் பங் கேற்றனர்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/83041.html#ixzz35zCTGurf<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-51041261420589538322014-06-29T06:32:57.781+05:302014-06-29T06:32:57.781+05:30
அரிது! அரிது!!
அரிது! அரிது!!
ஒன்றை ஆக்குதல் அர...<br />அரிது! அரிது!!<br /><br />அரிது! அரிது!!<br /><br />ஒன்றை ஆக்குதல் அரிது; அழித்தல் எளிது என்பது பழமொழி. இது எல்லா விஷயத்திலும் சரியில்லை. கடவுள் பெயரால் வெகு எளிதாகப் புளுகி வைத்துள்ளார்கள். அவைகளை அழிப்பது மிக அரிதாகவே முடிகிறது.<br /><br />கடவுளும் மனிதனும்!<br /><br />கடவுளுக்கும் மனிதனுக்கும் சம்பந்தம் உண்டு! உண்டு!! உண்டு!!!<br /><br />உதாரணம்:- மனிதன் சுருட்டுப்பிடித்து விடும் புகை கடவுளிருக்கும் வானத்தை நோக்கிப் போகிறதல்லவா?<br /><br />- புரட்சிக்கவிஞர்<br /><br />Read more: http://viduthalai.in/page6/83033.html#ixzz35zB2suJz<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-76733787945912012602014-06-29T06:32:12.210+05:302014-06-29T06:32:12.210+05:30
காவித் தலைவருக்கு காவல்துறை அணி வகுப்பு மரியாதையா...<br />காவித் தலைவருக்கு காவல்துறை அணி வகுப்பு மரியாதையாம்!<br /><br /><br />சிருங்கேரி மடாதிபதி பாரதி தீர்த்த சாமிகள் என்னும் சிருங்கேரி சங்கராச் சாரி காலடியில் உள்ள கோயில்களுக்கு செல்லும்போது பயணியர் விடுதியில் அவருக்கு காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதை அளிக்கப்பட் டுள்ளது.<br /><br />ஆதிசங்கரர் பிறந்த இடமாகிய பெரியாறு ஆற்றங்கரைப்பகுதியை ஒட்டியுள்ள காலடியில் ஆதிசங்கரரின் நூற்றாண்டு விழா மற்றும் பிறந்த நாள்விழா கொண்டாடப்பட்டது.<br /><br />15ஆண்டுகளுக்குப்பின்னர் 2010ஆம் ஆண்டில் சிருங்கேரி சங்கராச்சாரி கால டிக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். நூற்றாண்டு விழாவையொட்டி மாநில அரசின் சிறப்பு விருந்தினராக இருக்கிறார். விசாக சுக்ல பஞ்சமியில் ஆதிசங்கரர் பிறந்த நாளை மே 18இல் தத்துவவாதியின் நாளாக மாநில அரசு கொண்டாடுகிறது. மே 7ஆம் தேதி 2010 அன்று சிருங்கேரி சங்கராச்சாரி வருகையின்போது கேரள மாநில தொழிலாளர்துறை அமைச்சராக இருந்தவரான ஜோஸ் தெட்டாயில், தேவஸ்வ அமைச்சர் இராமச்சந்திரன், கடன்னபள்ளி மற்றும் திருவாங்கூர் அரச பரம்பரையின் தலைவரான உத்ரோதம் திருநாள் மார்த்தாண்ட வர்மா ஆகியோர் வரவேற்றுள்ளனர்.<br /><br />ஆதிசங்கரர் மற்றும் சாரதாம்பாள் கோயில் வளாகத்தின் கிழக்கு நுழை வாயில் பழமையான கேரளா பாணி யில் மறுசீரமைக்கப்பட்டு கட்டப்பட் டது. சிருங்கேரி சங்கராச்சாரி கோயிலைப் பார்வையிட்டபின் கூறும்போது, காலடி தீர்த்த ஷேத்திர மாக உள்ளது. சிருங்கேரி மடத்தின் பிரதிநிதியாக வருகைதரும் சிருங்கேரி சங்கராச் சாரிக்கும் மடத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ள பி.என்.கோபாலகிருஷ்ணன் கூறும் போது, 20ஆம் நூற்றாண்டின் தொடக் கத்தில் சங்கரரின் பிறந்த இடம் அறியாமல் இருந்துவந்தது. 33 ஆம் சிருங்கேரி சங்கராச்சாரி சச்சிதானந்தா ஷிவபினவா நரசிம்ம பாரதி சாமி மற்றும் திருவாங்கூர் மகாராஜா சிறீமூலம் திருநாள் ராமவர்மா ஆகியோர் சேர்ந்து ஆதி சங்கரரின் பிறந்த இடத்தைக் காலடி என்று கண்டறிந்தனர்.சிருங்கேரி மற்றும் சங்கராச்சாரிகளுக்கு முக்கியத்துவம் உள்ள இடமாக காலடி உள்ளது என்றார்.<br /><br />1910ஆம் ஆண்டில் மகா சுக்ல துவாதசியில் இரண்டு கோயில்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. மே 14இல் தொடங்கி ஆதிசங்கரரின் பிறந்தநாள் விழாக் கொண்டாட் டங்கள் மே 31 வரை நடைபெற்றுள்ளது. பூர்ணஹத்தியின் ஆதி ருத்ர மகாயாகம் சிருங்கேரி மடாதிபதியின் முன்னிலை யில் நடைபெற்றுள்ளது. விழாவை யொட்டி வித்வத் சபாக்களில் வேதங்கள் ஓதப்படுகின்றனவாம். மே 18ஆம் தேதி அன்று சிருங்கேரி சங்கராச்சாரியால் சிறப்புப் பூசை செய்யப்படுகிறதாம். அப் போது, வேதங்கள் பயின்ற வித்துவான் கள் விருதுகள், சான்றுகள் அளித்துப் பாராட்டப்படுகின்றனர். தி இந்து ஆங்கில நாளிதழ், 14-.5.-2010<br /><br />Read more: http://viduthalai.in/page6/83032.html#ixzz35zAs7p4J<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-58288053634692473542014-06-29T06:30:33.365+05:302014-06-29T06:30:33.365+05:30
ஒரே தேசம், ஒரே கலாச்சாரம், ஒரே மக்கள், ஒரே தலைவர்...<br />ஒரே தேசம், ஒரே கலாச்சாரம், ஒரே மக்கள், ஒரே தலைவர் என்ற முழக் கங்கள் சங்பரிவாரத்தின் அடிப்படை யான, ஆதிக்கம் செலுத்தும் முழக்கங் களாக ஆயின.<br />ஹிந்துத்துவ அமைப்பின் மறைமுக மான செயல்திட்டம்:<br /><br />வி.டி.சாவர்க்கர் எழுதிய ஹிந்துத்துவா என்ற நூலில் இருந்து<br /><br />ஹிந்து என்றழைக்கப்படும் ஒருவன் யார்? சிந்து நதியிலிருந்து தெற்கே கடல் வரை பரவியிருக்கும் பாரதவர்ஷமாகிய இந்த தேசத்தை தனது தந்தையர் நாடாகவும், புனித நாடாகவும், தனது மதம் மற்றும் கலாச்சாரத்தின் தொட்டி லாகவும் கருதி பாவிக்கும் ஒருவன்தான் ஹிந்து என்பவன்.<br /><br />வி.டி.சாவர்க்கர் எழுதிய ஹிந்துத்துவா என்ற நூலில் இருந்து (பக்கம் 38-_39)<br /><br />சிந்து என்ற சொல்லின் வளர்ச் சியைத் தேடும் நமது முயற்சியில், சன்ஸ் கிருதி என்ற சொல்லையே இதுவரை நாம் சார்ந்து, நம்பி வந்துள்ளோம். தற்போதுள்ள வேறு எந்த சொற் களையும் விட சிந்துஸ்தான் என்ற சொல்லே இந்திய தேசம் என்ற வளர்ந்து வரும் கோட்பாட்டை மேலான முறையில் விவரிக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட ஒரு நிலையில் நமது தேடுதல் என்னும் நூலின் நுனியை நாம் விட்டுவிட்டோம். குறுகிய மனப்பான்மையும், பழமைவாத மும் கொண்ட ஆர்யவர்த்தா என்னும் சொல்லின் முக்கியத்துவத்தை சிந்துஸ் தான் என்ற இந்த சொல்லுக்கு அளிக் கப்பட இயன்ற வாய்ப்பினை முறியடிப் பதற்கான அதே நோக்கத்துடன்தான், ஒரு குறிப்பிட்ட அமைப்புடன் தொடர்பு ஏதுமில்லாத முறையிலும், கட்சி வண்ணம் பூசப்படாமலும் இந்த சொல் உருவாக்கப்பட்டுள்ளது.<br /><br />எடுத்துக் காட்டாக, ஒரு வல்லுநரின் கூற்றுப்படி, ஆர்யவர்த்தா என்பது<br /><br />(நான்கு வர்ணங்கள் நடைமுறை இல்லாத ஒரு நாடு உண்மையிலேயே இருக்க முடியாது. அப்படி இருந்தால் அது மிலேச்சர் நாடு என்றுதான் அழைக்கப்படவேண்டும். ஆர்யவர்த் தாவோ அதனையும் தாண்டி வெகு தொலைவில் இருப்பதாகும்.)<br /><br />ஹிந்துத்துவா என்ற நூலில் இருந்து (பக்கம் 115)<br /><br />அதனால், எட்டப்பட்ட முடிவு களைத் தொகுத்துக் கூறும்போது, இந்து எனப்படும் ஒருவன் சிந்து முதல் சிந்து வரை - அதாவது சிந்து நதியிலிருந்து கடல்கள் வரை உள்ள நிலத்தை தனது தந்தையர் (பித்ரு) நாடாகக் காண்பவனாகவும், அந்த இனத்தின் ரத்தத்தின் வழி வந்த வனாகவும், அவனது நுண்ணறி விற்கான முதல் ஆதாரத்தை வேதகால அய்ந்து சிந்துநதிகளில் தேடிக் காணத் தக்கவனாகவும், தொடர்ந்த தனது முன்னேற்றப்பாதையில் தான் எவற்றை எல்லாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டுமோ அவற்றையெல்லாம் உள்வாங்கிக் கொண்டு அந் நாட்டுடன் தன்னை ஒருங்கிணைத்துக் கொள்ப வனாகவும் இருக்கும் ஒருவனே இந்து என அறியப்படுபவன்ஆவான்; பொது வான அவர்களது செம்மொழியான சமஸ்கிருதத்தில் விவரிக்கப்பட்டுள்ள அந்த இனத்தின் கலாச்சாரத்தை பாரம்பரியமாகப் பெற்று வந்து அதனையே தனது கலாச்சாரமாகக் காண்பவன் ஆவான்; ஒரு பொதுவான வரலாறு, பொதுவான இலக்கியம், கலை, கட்டடக் கலை, சட்டம் மற்றும் நீதி பரிபாலனம், சடங்குகள், சம்பிரதா யங்கள், விழாக்கள், பண்டிகைகள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றின் பிரதிநிதியாக விளங்குபவன் ஆவான்; அனைத்துக்கும் மேலாக, இந்த சிந்துஸ்தான் என்னும் நாட்டினை புண்ணிய பூமியாக (புனித தேசமாக), தனது மதத் தலைவர்கள் மற்றும் தேவதூதர்கள், குருக்கள், கடவுள் மனிதர்கள் வாழும் தேசமாக வும், வழிபாட்டிற்காக தலயாத்திரை செய்யும் புண்ணிய பூமியாகவும் கருதுபவன் ஆவான்.<br /><br />ஹிந்துத்துவாவிற்கு மிகமிக முக்கிய மானவையாவன:<br />ஒரு பொதுவான நாடு (ராஷ்டிரா),<br />ஒரு பொதுவான இனம் (ஜாதி)<br />ஒரு பொதுவான கலாச்சாரம் (சன்ஸ்திரி)<br /><br />மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இவற்றை எல்லாம் சிறந்த முறையில் ஒன்றுதிரட்டி மிகச் சுருக்கமா இவ் வாறு கூறலாம்:<br /><br />எவன் ஒருவனுக்கு சிந்துஸ்தான் ஒரு பித்ரு பூமியாக மட்டுமல்லாமல் புண்ணிய பூமியாகவும் இருக்கிறதோ அவனே ஹிந்து எனப்படுபவன்.<br /><br />ஹிந்துத்வாவின் முதல் இரு முக்கிய தேவைகளான தேசம் மற்றும் ஜாதி ஆகியவை மிகமிகத் தெளிவாக பித்ரு பூமி என்று குறிப்பிடப்பட்டு பொருள் கொள்ளப்படுவதாகும். அதே நேரத்தில் மூன்றாவது முக்கியத் தேவையான சன்ஸ்திரி (கலாச்சாரம்) மிகமிக முக்கியத்துவம் வாய்ந்த முறையில் புண்ணியபூமி என்ற சொல்லால் குறிப் பிடப்படுகிறது. இந்த சன்ஸ்திரி என்பதில் புண்ணிய பூமி எனப்படும் புனித பூமியைக் குறிக்கும் சடங்குகள், சம்பிரதாயங்கள், விழாக்கள், கொண் டாட்டங்கள் ஆகியவையும் அடங்கும். <br /><br />- அ. பாலகிருஷ்ணன்<br /><br />Read more: http://viduthalai.in/page6/83029.html#ixzz35zA2hr5wதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-43286940815534571202014-06-29T06:30:28.726+05:302014-06-29T06:30:28.726+05:30இதுதான் ஹிந்துத்துவா
கலாச்சார, மத மற்றும் அரசிய...இதுதான் ஹிந்துத்துவா<br /><br /><br /><br />கலாச்சார, மத மற்றும் அரசியல் இலக்குகளையே ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கம் தனது நோக்கங்களாகக் கொண்டிருந்தது. இந்து தர்மம் எனும் இந்து மதம், இந்து சன்ஸ்கிருதி எனும் இந்து கலாச்சாரம், இந்து ராஷ்டிரா எனும் இந்து தேசம் ஆகியவற்றின் உயர்வுக்காக சேவை செய்வதே தனது கடமையாகக் கொண்டு சங்கம் செயலாற்றி வந்தது.<br /><br />சங்கத்தின் முன்னாள் தொண் டரால் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதையடுத்து ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கத்தின் மீது விதிக்கப் பட்ட அரசின் தடையை விலக்கிக் கொள்வதற்கு, குறைந்த அளவு பொது மக்களின் கண்களுக்குத் தோன்றும்படி யாவது, அரசியல் கோணத்திலான தனது செயல்பாடுகளை சங்கம் கை விடவேண்டுமென்று 1948 ஜனவரியில் சங்கத்திற்கு படேலினால் நிர்ப்பந்தம் அளிக்கப்பட்டது.<br /><br />அதன்படி சங்கத்தின் மறைமுகமான செயல் திட்டத்திலிருந்து ஹிந்து ராஷ்டிரா என்ற சொல்லை நீக்கிய சங்கம் தாங்கள் முழுமையான ஒரு கலா சார அமைப்பாகவே செயல்படுவோம் என்று அரசுக்கு உறுதியளித்தது. (பக்கம் 13-_14)<br /><br />ஹிந்து மதத்தின்பால் தான் கொண் டிருந்த பாசமிகுதியின் காரணமாக சாவர்க்கர் தான் எழுதிய ஹிந்துத்வா என்ற பெயர் கொண்ட நூலில் தான் உருவாக்கி முன்னிலைப்படுத்திய ஆற்றல் நிறைந்த, வலிமை வாய்ந்த செயல்முறையான ஹிந்துத்வா என்ற சொல்லில் தங்கள் நோக்கங்கள் நிறை வேற்றப்படுவதற்கான நல்வாய்ப்புகள் இருப்பதை சங்கம் கண்டுகொண்டது. சாவர்க்கரைப் பொறுத்தவரை ஹிந் துத்துவா என்பது ஒரு மதம் என்ற சாதாரணமான கருத்தைக் கொண்டது அல்ல. அவரைப் பொறுத்தவரை இந்திய தேசத்தின் ஹிந்துக்கள்<br /><br />(1) ஒரு பொதுவான கலாச்சாரத் தினால் கட்டுண்டிருப்பவர்கள்;<br /><br />(2) பொதுவான ஒரு வரலாற்றினைப் பெற்றிருப்பவர்கள்;<br />(3) தங்களுக்கென ஒரு பொது மொழியினைப் பெற்றிருப்பவர்கள்;<br />(4) தங்களுடையது என்ற இந்திய தேசத்தைப் பெற்றிருப்பவர்கள்;<br />(5) தங்களுடையது என இந்து என்ற ஒரு தனி மதத்தினைப் பெற்றிருப்ப வர்கள் ஆவர்.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-64675512152645357792014-06-29T06:27:52.344+05:302014-06-29T06:27:52.344+05:30
இங்கர்சாலின் பொன்மொழிகள்
மனித இதயத்திலிருந்து உர...<br />இங்கர்சாலின் பொன்மொழிகள்<br /><br />மனித இதயத்திலிருந்து உரிமையை - நியாய புத்தியைப் பிரித்து எடுத்து விடும் மதங்கள், அவற்றின் கொள்கைகள், கோட்பாடுகள், நூல்கள், உருவங்கள் இவைகளைப் பாதுகாக்க நிற்கும் சட்டங்கள் இவைகளைத் தூக்கி தூரப் போடுங்கள். சிந்திக்காதே - அது பெரிய ஆபத்தான காரியம் என்ற அபிப்பிராயம் எந்த மூலையில் - எந்த வடிவில் உங்கள் முன் வந்தாலும் அடித்து நசுக்குங்கள்.<br /><br />####<br /><br />அறியாமையைக் காட்டிலும் இழிவான அடிமைத்தனம் வேறு கிடையாது. அறிவுத்தாய் பெற்றெடுத்த அருங்குழந்தையின் பெயர் சுதந்திரம், உரிமை, விடுதலை என்றெல்லாம் கூறலாம்.<br /><br />Read more: http://viduthalai.in/page6/83028.html#ixzz35z9nQFXv<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-81190067638792583502014-06-29T06:27:07.755+05:302014-06-29T06:27:07.755+05:30
பவுத்த வெறியர்களின்ஆபாசம் வட்டரக்க விஜித தேரருக்க...<br />பவுத்த வெறியர்களின்ஆபாசம் வட்டரக்க விஜித தேரருக்கு பலவந்தமாக சுன்னத்து<br /><br /><br />இலங்கையில் கடந்த வாரம் தாக்கப் பட்ட வட்டரக்க விஜித தேரர், தாக்கு தலின் போது தனக்கு சுன்னத்து எனப் படும் விருத்தசேஷனம் செய்யப்பட் டதாகக் கூறினார் என்று அவரது வழக்குரைஞர் தெரிவித்துள்ளார். மிதவாத பவுத்த அமைப்பு என்று கருதப்படும் ஜாதிக பல சேனாவின் பொதுச் செயலாளராக வட்டரக்க விஜித தேரர் செயற்படுகிறார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வட்டரக்க விஜித தேரரை சந் தித்து திரும்பிய அவர் வழக்குரைஞரான நாமல் ராஜபக்ஷ இந்தத் தகவலை கூறியுள்ளார்.<br /><br />ஒரு மிதவாத பிக்குவாகப் பொதுவாகப் பார்க்கப்படும் விஜித தேரரை, முஸ்லிம்களுக்கு ஆதரவாகச் செயற்படுவதாக கடும்போக்கு பௌத்த பிக்குமார் விமர்சித்து வருகின்றார்கள். அளுத்கம பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக கடும்போக்கு பௌத்த அமைப்பின் ஆதரவாளர்களால் தாக் குதல் நடத்தப்பட்ட மறுதினம் வட்ட ரக்க விஜித தேரரும், தாக்குதலுக்கு உள்ளான நிலையில் தெருவில் வீசி எறியப்பட்டுக் காணப்பட்டார். மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், சில பிக்குமாரே தன்னை தாக் கியதாகக் கூறியதாக அவரது வழக் குரைஞர் முன்னதாக கூறியிருந்தார். இந்த தாக்குதல் சம்பவத்தில் விஜித தேரர் பொதுபல சேனா அமைப் பையே குற்றஞ்சாட்டுகிறார் என்று அவர் வழக்குரைஞர் கூறியுள்ளார்.<br />-பிபிசி தமிழோசை, 23-_6_-2014<br /><br />Read more: http://viduthalai.in/page6/83027.html#ixzz35z9bRjhn<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-90846527093815669622014-06-29T06:26:29.177+05:302014-06-29T06:26:29.177+05:30
நம் வீட்டில் எந்த நூல்கள்?
20.6.2014 நாளிட்ட விஜ...<br />நம் வீட்டில் எந்த நூல்கள்?<br /><br />20.6.2014 நாளிட்ட விஜய பாரதம் இதழில் அதன் ஆசிரியர் 34 ஆம் பக்கத்தில் கீழ்க்கண்டவாறு இந்துக்களுக்கு நூலகம் அமைக்கவும் அதில் கீழ்க்கண்ட நூல்கள் அவசியம் இருக்க வேண்டுமென்று கூறுகிறார்.<br /><br />இதோ ஒவ்வொரு ஹிந்துவின் வீடுகளிலும் சின்னஞ் சிறு நூலகம் அமைய வேண்டும் வீட்டில் உள்ள பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்கள் அதில் இடம் பெற வேண்டும். ஒவ்வொரு ஞாயிறுதோறும் கிறித்துவர் கைகளிலே பைபிள் புத்தகங்களோடு குடும்ப சகிதம் சர்ச்சுக்கு செல்லக்கூடிய காட்சிகளைப் பார்க்க முடியும். ஆனால் நம்முடைய இந்துக்களின் வீடுகளில் நமது சமய புத்தகங்கள் இருக்கின்றனவா என்றால் அது ஒரு கேள்விக் குறி தான்.<br /><br />குறைந்தபட்ச புத்தகங்களையாவது நமது வீடுகளில் அவசியம் வைத்து இருக்க வேண்டும்.<br /><br />1) சிறீமத் பகவத் கீதை (இறைவன் மனிதனுக்கு சொன்னதாம்) 2) திருவாசகம் (மனிதன் இறைவனுக்கே சொன்னதாம்) 3) திருக்குறள் (மனிதனுக்கு மனிதன் சொன்னதாம்) 4) ராமாயணம் 5) மகாபாரதம் 6) பாரதியார் பாடல்கள் 7) ஆழ்வார்கள், நாயன்மார்கள் வாழ்க்கை வரலாறு. 8) அர்த்தமுள்ள இந்து மதம் 9) பஜனை பாடல்கள் 10) சுவாமி விவேகானந்தர் வரலாறு.<br /><br />இப்படி விஜய பாரதம் இதழ் இந்துக் களுக்கு அறிவுரை கூறி உள்ளது.<br /><br />அதில் எப்படியோ திருக்குறளையும் இணைத்து விட்டார்கள் ஏமாற்று வேலை தான். இதில் கிறித்துவர்களையும் பைபிளையும் சொல்லிவிட்டு இஸ்லாமியர்களையும், குரானையும் விட்டுவிட்டார்கள். அதே இதழில் மகான்களின் வாழ்வில் என்று தலைப்பிட்டு அதில் எனக்கு உறக்கம் எப்படி வரும்? என்று அம்பேத்கர் அவர்களின் படத்தை போட்டு செய்தியை திசை திருப்பி எழுதி இருக்கிறார்கள். இந்து மதத்தில் இருந்தால் எப்படித் தான் உறக்கம் வரும் அம்பேத்கர் அவர்களுக்கு?. மகான்களின் வாழ்வில் என்று குறிப்பிடும் விஜய பாரதம். அம் பேத்கரை இந்து மதவாதியாக்கி மகான் பட்டம் சூட்டி இருக்கிறது, மறுபக்கம் அம்பேத்கர் சமூகம் இழிநிலை சமுதாய மாக வைத்திருக்கிறது. பார்ப்பனியம் இதுதான் பிஜேபி, ஆர்.எஸ்.எஸின் பிரித் தாளும் சூழ்ச்சி (தாழ்த்தப்பட்ட மக்கள் விஜய பாரதத்தை பார்த்து ஏமாறாமல் இருந்தால் சரி).<br /><br />எனவே திராவிடர்களாகிய தமிழர்கள், தனக்கு மானமும், அறிவும், சுயமரியாதை உணர்வும், பகுத்தறிவும் புரட்சி எண்ணத் தையும் உருவாக்கி மனிதனை மனிதனாக்கி தலைவர்களைப்பற்றி படியுங்கள். தமி ழர்களின் வீடுதோறும் தவறாமல் படிக்க வேண்டிய நூல்கள் கீழ்க்கண்டவைகளாக இருக்கட்டும்.<br /><br />1) திருக்குறள் 2) விடுதலை, உண்மை 3) குடியரசு 4) ஜாதி ஒழிய வேண்டும் ஏன்? (அம்பேத்கர்) 5) ஆரிய மாயை (அறிஞர் அண்ணா) 6) பாரதிதாசன் பாடல்கள் 7) தந்தை பெரியார் வரலாறு 8) இராமாயண பாத்திரங்கள் (தந்தை பெரியார்) 9) கீதையின் மறுபக்கம் (கி.வீரமணி) 10) தமிழிசைப் பாடல்கள் 11) இராவண காவியம் 12) வாழ்வியல் சிந்தனைகள்<br /><br />மேற்கண்ட புத்தகங்கள் அனைத்தும் (பெரியார் புத்தக நிலையங்களில்) கிடைக் கும். வாங்கிப் படித்து உண்மையை உணர்ந்து மூளைக்கிடப்பட்ட விலங்கை உடைத்தெறிய வேண்டும்.<br /><br />மதங்கள் மாளட்டும், ஜாதிகள் அழி யட்டும்<br /><br />சமத்துவம் மலரட்டும்<br /><br />- அ.தமிழ்ச்செல்வன், தருமபுரி<br /><br />Read more: http://viduthalai.in/page6/83026.html#ixzz35z9Qhji9<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-7536144222463784732014-06-29T06:25:34.984+05:302014-06-29T06:25:34.984+05:30
மூன்றாம் இடத்தில்.... செபிர் நிறுவனத்தின் கணிப்பு...<br />மூன்றாம் இடத்தில்.... செபிர் நிறுவனத்தின் கணிப்பு<br /><br /><br />இன்னும் 15 ஆண்டுகளில், பொருளாதார வலிமையில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்தியா மூன்றாம் இடத்தைப் பிடிக்கும் என லண்டனைச் சேர்ந்த ஆலோசனை சேவை நிறுவனமான செபிர் தெரிவித்துள்ளது. செபிர் நிறுவனத்தின் மதிப்பீடு களின்படி 2028 இல் சீனா முதல் இடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் இருக்கும். தற்போது மூன்றாவது இடத்தில் இருந்து வரும் ஜப்பான் நான்காவது இடத்திற்கு தள்ளப்படும். அந்த ஆண்டில் மெக்சிகோ ஒன்பதாவது இடத்திலும், கனடா பத்தாவது இடத்திலும் இருக்கும்.<br /><br />செபிர் நிறுவனத்தின் 2013ஆம் ஆண்டு உலக பொருளாதார அட்டவணைப்படி இந்தியா தற்போது 11ஆவது பெரிய நாடாக உள்ளது. 2018இல் நம் நாடு 9ஆவது இடத்திற்கு முன்னேறும். 2023இல் மேலும் முன்னேறி 4ஆம் இடத்தை பிடிக்கும். 2028இல் 3வது இடத்தை பிடிக்கும். அப்போது இந்தியாவின் பொருளாதார பலம் 6.56 லட்சம் கோடி டாலராக இருக்கும் என செபிர் கணித்துள்ளது. தற்போது நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 1,75,800 கோடி டாலராக உள்ளது. வளர்ந்து வரும் நாடுகளின் முன்னேற்றம் நன்றாக உள்ளது. இந்நாடுகளின் வளர்ச்சி வேகம் இதே அளவில் நீடிக்கும்பட்சத்தில், 2018ஆம் ஆண்டில் இரஷ்யா 6ஆம் இடத்தில் இருக்கும். இந்தியா 9ஆம் இடத்திலும், மெக்சிகோ 12வது இடத்திலும், கொரியா 13ஆவது இடத்திலும்,துருக்கி 17வது இடத்திலும் இருக்கும் என செபிர் கணித்துள்ளது. காமன்வெல்த் நாடுகளைப் பொறுத்தவரை இந்தியா இரண்டாவது பெரிய நாடாக திகழ்கிறது. நிதிப் பற்றாக்குறை, நடப்பு கணக்கு பற்றாக்குறை, ரூபாய் மதிப்பு சரிவு போன்றவற்றால் நாடு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.<br />(வளர்தொழில் ஜூன் 2014 பக்.32)<br /><br />Read more: http://viduthalai.in/page5/83024.html#ixzz35z9DXpiI<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-47107010120939712262014-06-29T06:24:43.212+05:302014-06-29T06:24:43.212+05:30வெண்ணெயும் - இறைச்சியும் கூடாதா?
வெள்ளைக்காரர் ...<br />வெண்ணெயும் - இறைச்சியும் கூடாதா?<br /><br /><br /><br />வெள்ளைக்காரர் சொல்வதே வேதம் என்ற எண்ணம் நமக்கு - அதிலும் வெள்ளைக்காரர்கள் கொடுத்த ஆங்கில வழிக் கல்வி படித்த நமக்கு வெண்ணெய் என்றாலே ரத்தக்குழாயில் மாரடைப்பை ஏற்படுத்தும் நஞ்சுருண்டையாகவே காட்சி தருகிறது. அப்படியெல்லாம் இல்லை, வெண்ணெய் நல்லது என்று அமெரிக்காவின் டைம் பத்திரிகை இப் போது அட்டைப்படக் கட்டுரையாகவே வரைந்து தள்ளிவிட்டது.<br /><br />உடலில் எடை கூடவும் தொப்பை வளரவும் வெண்ணெய்தான் காரணம் என்று இந்நாள்வரை ஆராய்ந்து கூறியதெல்லாம் தவறு, சர்க்கரையும் பதப் படுத்தப்பட்ட பெட்டியில் அடைக்கப் பட்ட ஆயத்த (ரெடிமேட்) உணவுகளும் தான் உடல் பருமனுக்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் இப்போது அறிவிக்கின்றனர். 'கிளினிகல் நியூட்ரிஷன்' என்ற அமெரிக்கப் பத்திரிகை, அறிவியல்பூர்வமான பல ஆய்வுகளை நடத்திய பிறகு இந்த முடிவுக்கு வந்த தாகவும், வெண்ணெயினால் மாரடைப்பு வருவதில்லை என்றும் உரத்து அறிவித்திருக்கிறது. 'பிரிட்டிஷ் மெடிகல் ஜர்னல்' என்ற பத்திரிகையோ, பாலிலிருந்து கிடைக்கும் பாலாடைக்கட்டி, வெண்ணெய், நெய் போன்ற பொருள்களைச் சாப்பிடுவதற் கும் மாரடைப்புக்கும் சம்பந்தமே இல்லை என்று முழங்கியிருக்கிறது. பீதியில் ஆழ்த்தினர் வெண்ணெய், நெய் சாப் பிட்டால் உடல் பருக்கும், ரத்தத்தில் கொழுப்பு சேரும், அந்தக் கொழுப்பு சிறு துகள்களாகி ரத்தக்குழாயில் பயணிக்கும், இதயத்துக்குச் செல்லும் குழாய்களில் அது போய் அடைத்துக்கொள்ளும், அப்போது மாரடைப்பு ஏற்படும் என்று விரிவாகச் சொல்லி அனைவரையுமே பல்லாண்டு களாக பீதியில் ஆழ்த்திவிட்டனர். இயற்கையில் கிடைத்த இந்த வெண் ணெயை இப்படி வில்லனாக்கிய அதே சமயம், சிகரெட்டுகளுக்கும் _ மதுபானங் களுக்கும் கோடிக்கணக்கில் பணம் செலவிட்டு உபயோகியுங்கள், உற்சாக மாக இருங்கள் என்று வழிகாட்டி னார்கள் மேற்கத்திய தொழிலதிபர்கள். சிகரெட்டும் மதுபானமும் உடல் நலத்துக்கு எந்த அளவுக்குக் கேடு செய்யும் என்பதை விளக்க வேண்டிய தேவையே இல்லை. புற்றுநோய் வராமலிருக்க புகையிலைப் பொருள்களின் பக்கமே போகாதீர்கள் என்று இப்போது உலக அளவில் கெஞ்சிக் கொண்டிருக் கிறார்கள். புல்தரை வளர்த்து, அதில் கால்நடைகளை மேயவிட்டு, பால், வெண்ணெய், நெய் போன்றவற்றைக் கலப்படமில்லாமல் தயாரித்து உலகின் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அயர்லாந்தில், வெண்ணெய் சாப்பிடு கிறீர்களா, அப்படியானால் இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்துகொள்ளுங்கள் என்று நிபுணர் ஒருவர் இரக்கமில்லாமல் எச்சரித்தார்.<br /><br />இதுவும் மக்களுடைய மனங்களில் ஆழப்பதிந்தது. மாவும் சர்க்கரையுமே உயிர்க்கொல்லிகள் 1970-களின் இறுதியில் தொடங்கி சமீப காலம்வரை வெண்ணெய்க்கு எதிராக இப்படிப்பட்ட பிரச்சாரங்களே ஓங்கி யிருந்தன. கார்போஹைடிரேட் என்று அழைக்கப்படும் மாவுச்சத்தும், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகளும்தான் உடல் பெருக்கக் காரணம் என்று சமீப காலங்களாகத்தான் அடுத்தடுத்து உறுதி செய்துள்ளனர்.<br /><br />பால்பொருள்களும், செந்நிற இறைச்சியும்தான் உடலுக்குக் கேடு செய்யும் உணவுகள் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பிரச்சாரமே செய்தனர். அது, உணவு, சுகாதாரம் குறித்து மக்களுடைய மனங்களில் கவலை பரவியிருந்த காலம். எனவே பிரச்சாரம் எடுபட்டது. அறையில் நிலவும் சாதா ரண வெப்பத்தில் உருகாத வெண்ணெய், பன்றிக்கொழுப்பு போன்றவற்றால் ஆபத்து என்றும் சூரியகாந்தி எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்ற திரவங்களால் ஆபத்து இல்லை என்றும் கூறப்பட்டது. விலக்கியதால் மாரடைப்பு இப்படிப் பிரச்சாரம் செய்து வெண்ணெய் சாப் பிடுவதை அறவே விலக்கிவிட்டதால் தான் மாரடைப்பு பலருக்கு ஏற்பட்டி ருக்கிறது என்று லண்டனைச் சேர்ந்த இதயவியல் நிபுணர் அசீம் மல்ஹோத்ரா குறிப்பிட்டிருக் கிறார். வெண்ணெய் போன்றவைதான் இதயத்தைக் காப்பவை என்றும் அவர் குறிப்பிடுகிறார். வெண் ணெய், பாலாடைக்கட்டி போன்றவற்றில் வைட்டமின் 'டி' இருக்கிறது. இது இல்லா விட்டால்தான் மாரடைப்பு ஏற்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.<br /><br />கால்சியம், பாஸ்பரஸ் போன்றவையும் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுபவை. மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி போன்ற செந்நிற இறைச்சி வகைகளில் இரும்புச் சத்தும் சி.எல்.ஏ. என்று சுருக்கமாக அழைக்கப்படும் காஞ்சுகேடட் லினோலெய்க் அமிலமும் அதிகம் இருக்கின்றன. இவ்விரண்டும் பொது வான நோயெதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்துபவை. புற்றுநோய் வராமல் தடுக்கும் குணங்கள் உள்ளவை என்று இப்போது அறியப்பட்டுள்ளது. பதப்படுத்தப்பட்ட இறைச்சி களால்தான் மாரடைப்பும் சர்க்கரை வியாதியும் ஏற்படுகின்றனவே தவிர இயற்கையான செந்நிற இறைச்சியால் அல்ல என்று இப்போது நிரூபிக்கப் பட்டிருக்கிறது. குறைந்தளவு கொழுப்பு உள்ளவை என்று விளம்பரப்படுத் தப்படும் உணவுப் பண்டங்களையே இப் போது வாங்கி உண்கின்றனர், அவற்றில் அதிக சர்க்கரை இருக்கிறது என்று எச்சரிக்கிறார் மல்ஹோத்ரா.<br /><br />Read more: http://viduthalai.in/page5/83023.html#ixzz35z8zALVm<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-34987807644681277722014-06-29T06:22:26.813+05:302014-06-29T06:22:26.813+05:30வேற்று கிரகவாசிகளைக் கண்டறிய நாசா நிறுவும் மிகப்பெ...<br />வேற்று கிரகவாசிகளைக் கண்டறிய நாசா நிறுவும் மிகப்பெரிய தொலைநோக்கி<br /><br /><br />ஏலியன்ஸ் எனப்படும் வேற்று கிரகவாசிகளைக் கண்டறிவதற்கு, 176 அடி நீளமுள்ள தொலைநோக்கியை, விண்வெளியில் நிறுவ, நாசா திட்டமிட்டுள்ளது.<br /><br />பிரிட்டனின், போர்ட்ஸ்மவுத் நகரில் நடந்த தேசிய வானவியல் கூட்டத்தில், ராயல் வானவியல் கழகத்தின் தலைவர் மார்ட்டின் பார்ஸ்தோ, இத்திட்டம் குறித்து கூறியதாவது: இதற்காக, பூமியில் இருந்து, 10 லட்சம் மைல்கள் தொலைவில், 52 அடி விட்டமுள்ள லென்சுடன் கூடிய, 176 அடி நீளமுள்ள தொலைநோக்கி நிலை நிறுத்தப்படுகிறது. மேம்பட்ட நுண்துளை தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் இந்த தொலைநோக்கி, 30 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கோள்களை ஆய்வு செய்யும் திறன் கொண்டது. ஏற்கனவே விண்வெளியில் நாசா நிறுவியுள்ள, 44 அடி நீள, 'ஹபல்' தொலைநோக்கியை விட, நான்கு மடங்கு பெரிதான, இந்த தொலைநோக்கியின் உதவியால், விண்வெளியில், கண்ணுக்குத் தெரியாத பகுதிகளில் விசித்திரமான ஜீவன்கள் இருக்கிறதா, இல்லையா என்பதையும், 60 புதிய கோள்களையும் எளிதில் கண்டறிய முடியும். மேலும், வேற்று கோள்களில், உயிர்வளி (ஆக்சிஜன்) மற்றும் இதர வாயுக்களின் நிலையையும் எளிதாக அறிந்து கொள்ள முடியும். ஆனால், இவ்வளவு பெரிய தொலைநோக்கியை, பூமியில் தயாரித்து, ராக்கெட் மூலம் விண்வெளிக்கு எடுத்துச் செல்வது சாத்தியமல்ல என்பதால், இதற்கு தேவையான பொருட்களை விண்ணுக்கு கொண்டு சென்று, அங்கு, தொலைநோக்கியை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, விண்வெளி ஆய்வு மய்யத்திற்கு விண்வெளி வீரர்கள் அடங்கிய குழு, விரைவில் அனுப்பப்படுகின்றனர். வரும், 2030ஆம் ஆண்டுக்குள், தொலைநோக்கியை உருவாக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, விண்வெளியில் நிலை நிறுத்தப்படும் இவ்வாறு, மார்ட்டின் பார்ஸ்தோ கூறியுள்ளார்.<br /><br />Read more: http://viduthalai.in/page4/83021.html#ixzz35z8PQVML<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-67338108406078762172014-06-29T06:21:28.029+05:302014-06-29T06:21:28.029+05:30
திக்கெட்டும் முரசு கொட்டும் பெரியார் கொள்கைகள்!
...<br />திக்கெட்டும் முரசு கொட்டும் பெரியார் கொள்கைகள்!<br /><br />பெரியார் பன்னாட்டு அமைப்பின் புரவலரான தமிழர் தலைவருடன் பெரியார் பன்னாட்டு அமைப்பின் ஜெர்மனி கிளைத்தலைவர் பேரா. டாக் டர் யுர்லிக் நிக்லசும், துணைத்தலைவர் திரு.சுவன்வோர்ட், செயலாளர் டாக்டர் கிளவுடியா வெப்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.<br /><br />பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுக் கொள்கைகள் தமிழர் தலைவரின் சீரிய முயற்சியால் உலகமயமாக்கலின் தொடர்ச்சியாக தற்போது ஜெர்மனி நாட்டில் கொலோன் நகரில் பெரியார் பன்னாட்டு அமைப்புத் தொடங்கப் பட்டுள்ளது.<br /><br />பெரியார் பன்னாட்டு அமைப்பு (ஜெர்மனி) 6.6.2014 (Periyar International Germany Chapter Inc) தொடங்கப்பட்டது.<br /><br />4ஆம் தேதி கொலோன் பல்கலைக் கழகத்தில் இந்தி எதிர்ப்பு இயக்கம் என்ற தலைப்பில் மாணவர்களுக்கும், ஆய்வு மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் பவர் பாயிண்ட் மூலம் ஆய்வுரை நிகழ்த்தினார்.<br /><br />5ஆம் தேதி காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இந்தியவியல் மற்றும் தமிழ்த்துறை மாணவர்களுக்குத் தந்தை பெரியாரின் தன்மான இயக்க மான திராவிடர் கழக வரலாற்றையும், அதன் தொடர் பணிகள் குறித்தும் வகுப்பு எடுத்தார்.<br /><br />இப்படிப் பல்வேறு நிகழ்வுகளின் மூலம், தந்தை பெரியாரின் பணியினால் தமிழகத்திலும் உலகின் பிறபகுதிகளிலும் நிகழ்ந்திருக்கும் மாற்றங்களையும், அதனால் மக்கள் விடுதலை அடைந்த நிலையையும் அறிந்ததன் விளைவாக, பெரியாரின் பணிகளை ஜெர்மனியிலும் தொடர வேண்டுகோள் விடுத்தார்.<br /><br />பெரியார் பன்னாட்டு அமைப்பின் புரவலரான தமிழர் தலைவர் மற்றும் அதன் இயக்குநர்களின் ஒப்புதலோடு பெரியார் பன்னாட்டு அமைப்பு (ஜெர்மனி கிளை) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.<br /><br />இந்தக் கிளையின் தலைவராக பேரா.டாக்டர் யுர்லிக் நிக்லசும், துணைத் தலைவராக சுவன்வோர்ட், செயலாள ராக டாக்டர் கிளவுடியா வெப்பரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.<br /><br />இந்த ஜெர்மானிய அமைப்பானது பெரியார் பன்னாட்டு அமைப்பின் (அமெரிக்கா) வழிகாட்டுதலில் அவர்களோடு இணைந்து, தங்கள் நாட்டில் பெரியார் தத்துவக் கொள்கை களை, அவர் காண விரும்பிய சமுதா யத்தைப் படைக்க தன் பணியைச் செய்யும் என பொறுப்பாளர்கள் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்தனர்.<br /><br />புதிதாகப் பொறுப்பேற்ற நிர்வாகி களுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சால்வை அணிவித்தும், இயக்கப் புத்தகங்களை வழங்கியும் பாராட்டினார்கள்.<br /><br />நிகழ்ச்சி அமைப்பாளர்கள் பாஸ்கல் வொல்ப் ஸ்பெர்ஜர், லூகாஸ் பைபர், டிமோ பெய்ன் ஆகியோர், பெரியார் புத் தகங்களை அரங்கில் அமர்ந்து விற்பனை செய்தனர்.<br /><br />தந்தை பெரியார் அவர்கள் 1932இல் மேற்கொண்ட ஜெர்மனி பயணத்திற்குப் பிறகு, இப்போது தமிழர் தலைவர் கொலோன் பல்கலைக்கழக அழைப்பின் பேரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது இயக்க வரலாற்றின் பொன்னேடுகளில் பதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.<br /><br />பெரியார் பன்னாட்டு அமைப்பின் புரவலரான தமிழர் தலைவருடன் பெரியார் பன்னாட்டு அமைப்பின் ஜெர்மனி கிளைத் தலைவர் பேரா.டாக்டர் யுர்லிக் நிக்லசும், துணைத் தலைவர் சுவன்வோர்ட், செயலாளர் டாக்டர் கிளவுடியா வெப்பர் ஆகி யோரும் கலந்து கொண்டனர்.<br /><br />பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுக் கொள்கையை தமிழர் தலைவரின் சீரிய முயற்சியால் உலகமயமாக்கலின் தொடர்ச்சியாக தற்போது ஜெர்மனி நாட்டில் கொலோன் நகரில் பெரியார் பன்னாட்டு அமைப்புத் தொடங்கப்பட் டுள்ளது.<br /><br />தொகுப்பு: இலக்கியா<br /><br />நன்றி: கருஞ்சட்டைத் தமிழர் (ஜூன் 16-30 2014)<br /><br />Read more: http://viduthalai.in/page4/83020.html#ixzz35z85WAvs<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-68115810127155156712014-06-29T06:14:46.728+05:302014-06-29T06:14:46.728+05:30னடா பள்ளிகளில் பாலினங்களைக் குறிப்பிடுவதில் மாற்றம...னடா பள்ளிகளில் பாலினங்களைக் குறிப்பிடுவதில் மாற்றம்<br /><br /><br />கனடாவில் உள்ள பள்ளிகளில் ஆண், பெண் பாலினத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லாக He/She என்பதற்குக்குப் பதிலாக Xe என்கிற பாலின பொதுச் சொல்லைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். கனடியன் சிட்டி பள்ளியின் நிர்வாகம் இந்த மாற்றத்தை அங்கீகரித்து உள்ளது. புதிய மாற்றத்தின்படி He/She என்பதற்குப் பதிலாக ‘Xe’, என்றும், him/her என்பதற்குப் பதிலாக ‘xem’, என்றும், his/her என்பதற்குப் பதிலாக ‘xyr’ என்றும் புதிதாக மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது பள்ளி நிர்வாகம். குழந்தைகளிடையே கழிப்பிடங்களைப் பயன்படுத்தும்போது குழப்பங்கள் இல்லாமல், பாலின வேறுபாடுகள் இன்றி (unisex) கழிப்பிடங்கள் இருக்கவேண்டும் என்பதால் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.<br /><br />பள்ளி நிர்வாகத்தின் உறுப்பினர் மைக் லோம்பர்டி கூறும்போது, நாங்கள் குழந்தைகளுக்காகவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம். பள்ளியில் பாதுகாப்பு உள்ளிட்ட எல்லாவற்றுக்காகவுமே இந்த நடவடிக்கை என்று கூறினார். பெற்றோர்கள் இந்த மாற்றங்கள்குறித்து கேட்கும்போது, ஆறு வயதுள்ள குழந்தைகள் மத்தியில் பாலின அடையாளங்கள் பெரிதாக புரிவதில்லை. அவர்கள் கழிப்பிடங்களைப் பயன்படுத்துவதில் அவர்களாகவே முடிவெடுக்க வேண்டி உள்ளதால் குழப்பங்களை அடைகிறார்கள். இந்த மாற்றத்துக்கான கொள்கை முடிவு எடுக்கும்முன்பாக விவாதங்களுக்கான கூட்டங்கள் காவல் துறையினரின் பாதுகாப்புடன் காரசாரமாகவே நடைபெற்றது. கோபத்துடன் உள்ள பெற்றோர்கள் தரப்பில் செரில் சாங் என்பவர் குற்றச்சாட்டாகக் கூறும் போது, விவாதக்கூட்டத்துக்கு பெற்றோர்கள், உளவியல் நிபுணர்கள், மருத்துவ வல்லுநர்கள் என்று யாரையுமே அழைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டினார். மேலும் அவர் கூறும்போது, இந்த விவாதம் பொருளற்றது. பிரிக்கும் அரசியலாகி உள்ளது. இதனால், மக்கள் கோபத்துடனும், நிலைகுலைந்தும் உள்ளனர் என்று கூறினார்.<br /><br />Read more: http://viduthalai.in/page2/83019.html#ixzz35z6RHjfV<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-30351564729562680452014-06-28T06:16:05.830+05:302014-06-28T06:16:05.830+05:30
இன்று (ஜூன் 27) உலக நீரிழிவாளர் தினம்
நீரிழிவ...<br />இன்று (ஜூன் 27) உலக நீரிழிவாளர் தினம்<br /><br /> <br /><br />நீரிழிவு சர்க்கரை வியாதி என்ற உடனேயே இன்று பெரும்பாலானோர் பயத்தில் மூழ்கிவிடுகின்றனர். அக்காலத்தில் இயற்கைக்கு உகந்த உணவை உண்டு வந்தனர். ஆகையால் சர்க்கரை நோய் அவர்களைத் தாக்கவில்லை, இன்று நாம் பலவகையான உணவுப் பொருட்களை உட்கொள்கிறோம் ஆகவே எளிதில் சர்க்கரை வியாதிக்கு ஆளாகிவிடுகிறோம் என்றும் சிலர் கூறுவார்கள். மனிதர்களுக்கு நாகரிகம் வளர வளர வசதிகள் பெருகுகின்றன. ஆகவே நாகரிக ஓட்டத்திற்கு ஏற்ப நாமும் மாறிக் கொள்கிறோம். உடலும் தன்னை மாற்ற முயல்கிறது. இதுதான் பரிணாமவளர்ச்சி என்று கூறுகிறோம். கடந்த 200 ஆண்டுகளில் பல உயிர்க்கொல்லி நோய்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடி இருக்கின்றன. இதற்குக் காரணம் மருத்துவத் துறையின் வளர்ச்சி. உடலில் உள்ள சர்க்கரை அளவை நிரந்தரமாக கட்டுக்குள் கொண்டுவருவதற்கும் உலகமெங்கும் உள்ள மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்துகொண்டு வருகின்றனர். முன்பு சர்க்கரை நோய் வந்தவர்கள் உடல் பாகத்தில் ஏதாவது பாதிப்பு ஏறப்பட்டால் அந்தப் பாகத்தையே வெட்டி எடுத்துவிடும் நிலை இருந்தது. இன்று அப்படி அல்ல.<br /><br />பாகிஸ்தானின் பிரபல மட்டைப்பந்து வீரர் வாசிம் அக்ரம் தன்னுடைய 31 வயதில் முதல்நிலை சர்க்கரை நோய்க்கு ஆளானவர் (type-1 diabetes) இந்த நிலை நோயுள்ளவர்கள் 200 ஆண்டுகளுக்கு முன்பு விரை விலேயே மரணத்தை அடைந்து விடுவார்கள். பிரபல நகைச்சுவை சிரிப்பு நடிகர் உசிலைமணி இந்த type-1 diabetes<br />தாக்கத்தால் நீண்ட நாட்களாக மிகவும் வேதனைக் குள்ளாகி இறுதியில் மரணமடைந்தார்.<br /><br />ஆனால், இன்று எந்த வகை சர்க்கரை நோயானாலும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து நீண்ட நாட்களாக உயிர் வாழமுடியும். மிகவும் ஆபத்தான நிலையில் சர்க்கரை அளவு உயரும் தன்மையை கொண்ட வாசிம் அக்ரம் கூறுவதைக் கேளுங்கள்.<br /><br />தொடக்கத்தில் எனக்கு type-1 diabetes உள்ளது என்றவுடன் என்னுடைய பயிற்சியாளர்கூட பயமுறுத்தி விட்டார். பாகிஸ்தானில் பெரிய மருத்துவர்கள் கூட என்னை அச்சுறுத்தினர். முக்கியமாக மட்டைப்பந்து விளையாட்டைக் கைவிடக்கூறினார்கள். ஆரம்பத்தில் எனக்கு ஒரு பயம் தான் இருந்தது. என்னுடைய ஆஸ்திரேலிய நண்பர்கள் சில இந்த வகையான சர்க்கரை வியாதியால் பாதிப்படைந்தும் இன்றும் ஆரோக்கியமாக வாழும் அவர்களின் வாழ்க்கை முறை பற்றி அறிந்து கொண்ட போது மிகவும் வியப்பாக இருந்தது. மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள் உணவுக் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தனர். முக்கியமாக முன்பிருந்ததைவிட அதிக நேரம் உற்சாகமாக தங்களு டைய அன்றாடப் பணிகளில் ஈடுபட்டனர்.<br /><br />சில நாள்கள் அவர்களுடன் இருந்து அவர்களின் வாழ்க்கை முறையைக் கற்றுக்கொண்டேன். அது ஒன்றும் பெரிய சிரமமான செயல் அல்ல. பாகிஸ்தான் திரும்பிய பிறகு குடும்பத்துடன் அதிக நேரம் செலவழித்தேன். எந்த ஒரு எதிர்மறையான சிந்தனையையும் எடுத்துக்கொள்ளமாட்டேன். அதன் பிறகு என்னுடைய வாழ்க்கையில் பல புதிய நல்ல திருப் பங்கள் ஏற்பட்டன.<br /><br />அதிலிருந்து என்னுடைய வாழ்க் கையில் பெரும் பங்கை நீரிழிவு நோய் என்ற மாயையினால் பாதிக்கப்படும் மக்களுக்காக செலவழிக்கத் தொடங்கி விட்டேன். இன்று யாரும் என்னை type-1 diabetes-ஆல் பாதிக்கப்பட்டவர் என்று கூற முடியாது.<br /><br />கலகலப்பான வாழ்க்கை, உணவுக்கட்டுபபாடு, மருத் துவர்களின் ஆலோசனைஎல்லாவற்றையும் விட குடும்பத் தாரிடமும், பழகும் பிற நபர்களிடமும் இன்முகத்துடன் பழகி சுற்றுப்புறச்சூழலைக் கலகலப்பாக வைத்துக் கொண்டாலே நீரிழிவு நோயிலிருந்து விடுபடலாம்.<br /><br />Read more: http://viduthalai.in/page-8/82993.html#ixzz35tInUCBz<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-3795066227353645772014-06-28T06:14:37.388+05:302014-06-28T06:14:37.388+05:30குட்டி கல்லுச் சாமி!
ஒரு கிழவர் தன் பேரனான சிறுவன...குட்டி கல்லுச் சாமி!<br /><br />ஒரு கிழவர் தன் பேரனான சிறுவனுடன் கோவில் ஒன்றுக்குச் சென்றார். அந்தப் பையனிடம் கற்சிலையைக் காட்டி, அதைக் கும்பிடும்படி கேட்டுக் கொண்டார். சுட்டிப்பயல் உடனே, கல்லை எதற்குத் தாத்தா கும்பிடச் சொல்கிறீர்கள்? என்று கேட்டான்.<br /><br />உடனே கிழவர், இது கல் இல்லை. கடவுளின் சிலை. இதைக் கும்பிடு என்று கூறினார். பையனும் கைகூப்பிக் கும்பிட்டான் - அந்தக் கற்சிலையை. சாமி தரிசனம் முடிந்ததும் அருகில் இருந்த ஓட்டலுக்கு மதிய உணவு சாப்பிடச் சென்றார்கள்.<br /><br />சோற்றில் சிறு கல் ஒன்றைப் பார்த்துவிட்ட அந்தப் பையன் உற்சாக மிகுதியால், தாத்தா! தாத்தா!! குட்டி சாமி இதோ என்று கும்பிட ஆரம்பித்து விட்டான். உடனே கிழவர் செய்வதறியாது, உடனிருந்தவர் களுடன் கூடி தானும் சிரித்து விட்டார்.<br /><br />நன்றி: மலையாள மனோரமா, (1979 - மே 3-ஆம் வாரம்) தமிழாக்கம்: ச.ராமசாமி<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/82992.html#ixzz35tIRGuma<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-28557968491797804042014-06-28T06:14:07.918+05:302014-06-28T06:14:07.918+05:30
பைபிளில் ஜாதி வெறி!
அன்றியும் தேவ பக்திக்குரிய ...<br />பைபிளில் ஜாதி வெறி!<br /><br /><br />அன்றியும் தேவ பக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக் கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார். ஆவியிலே நீதியுள்ளவ ரென்று விளங்கப்பட்டார். தேவ தூதர்களால் காணப் பட்டார். புற ஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார்; உலகத்திலே விசுவாசிக்கப்டடார். மகிமையிலே ஏறெடுத்து கொள்ளப்பட்டார். (1 தீமோத்தேவு 3:16)<br /><br />இதில் தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார் என்பதும், புற ஜாதிகளிடத்திலே பிரசங்கிக்கப்பட்டார் என்பதும் கவனிக்கும் பொழுது தேவன் (ஏசு) என்று சொல்லக்கூடியவரும்;<br /><br />சாதாரண மனிதனைப் போல மாம்சத்திலேயே உண்டாகினார் என்பதும் அவர் தேவ தூதர்களால் காணப்பட்ட நேரத்தில் புற ஜாதிகளிடத்திலும் பிரசங்கிக்கப்பட்டார் என்பதைப் பார்க்கும் பொழுதும் இவர்கள் மதத்திலும், ஜாதி வெறிகள் அன்றே இருந்திருக் கிறது என்பது தெளிவாக விளங்குகிறது.<br /><br />அந்த தேவன் தூதர்களின் கண்ணில் மட்டுமே காணப்பட்டார் என்பதும் மற்ற விசுவாசித்து ஜெபம் தொழும் அனைவருடைய கண்ணிலும் அவர் காணப் படவில்லை என்பதும் இது எவ்வளவு அப்பட்டமான பொய் கதையை புகுத்தியுள்ளார்கள் என்பதை அவர்களின் பைபிள் வாசகங்களே நிரூபித்துக்காட்டுகின்றன. இதை நம்புகிறவன் மடையன் என்று தந்தை பெரியார் அவர்கள் கூறியது உண்மைதானே!<br /><br />தகவல்: ச.இராமசாமி, சென்னை-18<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/82992.html#ixzz35tIIjl6B<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-42920050229784751142014-06-28T06:13:21.331+05:302014-06-28T06:13:21.331+05:30
அய்யா தீட்டியது - ஒரு சிறு உரையாடல்
மூடர்களே! ம...<br />அய்யா தீட்டியது - ஒரு சிறு உரையாடல்<br /><br /><br />மூடர்களே! மூடர்களே!! ஒரு சின்ன சங்கதி. கோவிலின் மீதிருக்கும் கலசம் திருட்டு போகின்றது, அம்மன் விக்கிரகங்களின் கழுத்திலிருக்கும் தாலிகள் திருட்டு போகின்றது, விஷ்ணு விக்கிரகத்தின் நெற்றியில் இருக்கும் நடு நாமம் (தங்கத்தில் வைத்தது) திருட்டுப் போகின்றது, சிவன் விக்கிரகத்திலிருக்கும் நெற்றிப்பட்டை, மற்ற விக்கிரகங்களை கீழே தள்ளி அதிலிருக்கும் தங்கம் முத்து ரத்தினம் திருட்டுப் போகின்றது. இவைகளின் வாகனத்தில் தேரில் நெருப்புப் பிடிக்கின்றது, அச்சு ஒடிகின்றது.<br /><br />இவைகளின் பயனாய் பலர் சாகின்றார்கள். மூடர்களே இவற்றைப் பார்த்தும் கேட்டும் கூடவா அந்த இடங்களில் இந்த விக்கிரகங்களில் புனிதத் தன்மை அருள்தன்மை, ஆண்டவனை ஞாபகப்படுத்தும் தன்மை முதலியவைகள் இருக்கின்றதாக நினைக்கின்றீர்கள். உங்களிலும் மூடர்கள் இனியும் எங்காகிலும் உண்டா! தயவு செய்து சொல்லுங்கள்.<br /><br />இன்னும் ஒரே குட்டி சங்கதி. வட்டி வாங்குகின்றவர்கள் கோட்டீஸ்வரனாகிறான். வட்டி கொடுப்பவன் நாசமாய் - பாப்பராய் போகிறான் என்பதை பார்த்தும் கேட்டும் இன்னமுமா பாழாய்ப் போன கடவுள் இருக்கிறார் என்று கருதுகின்றீர்கள்.<br /><br />இன்னும் ஒன்றுதான் - அப்புறம் ஒன்றுமில்லலை. துளியூண்டு சங்கதி. காவடி எடுத்துக் கொண்டு போனவன் காலராவில் செத்த பிறகு கூடவா நாசமாய் போன சாமி இருக்குதுண்ணு நினைக் கின்றீர்கள்.<br /><br />மூடர்: சும்மா இப்படியெல்லாம் பேசிவிட்டால் போதுமா? இந்த உலகத்தை படைத்ததற்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டாமோ? அதுதான் கடவுள்.<br /><br />பதில்: சரி. அப்படியானால் அந்தக் காரணத்தை - கடவுளை உண்டாக்கினதற்கு மற்றொரு காரணம் வேண்டாமா? அதுதான் சுயமரியாதை இயக்கம் (பகுத்தறிவு)<br /><br />மூடர்: கடவுளை படைப்பதற்கு ஒரு காரணம் கேட்பது முட்டாள் தனமாகும்.<br /><br />பதில்: அப்படியானால் உலகப்படைப்புக்கு காரணம் தேடிக் கொண்டிருப்பது அதைவிட இரட்டிப்பு முட்டாள் தனமாகும்.<br /><br />மூடர்: உங்களோடு யார் பேசுவார்கள்.<br /><br />பதில்: சரி.நல்ல காரியமாச்சு. சனியன் தொலைந்தது. ஆனால், காணாத இடத்தில் குலைக்காதே.<br /><br />-சித்திரபுத்திரன், குடிஅரசு (4.1.1931)<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/82995.html#ixzz35tI6dfGi<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-14110938912945776352014-06-28T06:12:34.912+05:302014-06-28T06:12:34.912+05:30ராமனின் மிருகத்தனம்
சீதை நெருப்பில் இறங்கி வந்தும...ராமனின் மிருகத்தனம்<br /><br />சீதை நெருப்பில் இறங்கி வந்தும்கூட, ராமனுக்கு அவள் மீதுள்ள சந்தேகம் தீராமல் போய்விட்டது. கடைசியாக, கதையின் முடி வானது சீதை 5 மாத கர்ப்பத்துடன் தனியே காட்டிற்குக் கொண்டுபோய் விடப்பட்டாள் என்று முடிந்தது.<br /><br />இந்தக் காரியம் எப்படி மன்னிக்கப்படக் கூடியது என்பது விளங்கவில்லை. உலக ஒப்புதலுக்காகச் செய் யப்பட்டது என்றாலும், இந்தச் சம்பவத்தால் மக்களுக்கு என்ன நீதி, படிப்பினை ஏற்பட்டு விட்டது என்பது நமக்கு விளங்கவில்லை.<br /><br />இதைப் பார்க்கின்றபோது அதாவது, தனது மனைவி யை 5 மாத கர்ப்பத்துடன் துஷ்ட ஜந்துக்கள் வாழும் கானகத்தில் கொண்டுபோய் தனியே விட்டு வரும்படிச் செய்தவன், தாடகையைக் கொன்றதும், சூர்ப்பனகையின் மூக்கையும், காதையும் அறுக்கும்படிச்செய்ததும் ஓர் ஆச்சரியமென்று சொல்லமுடியாது.<br /><br />ஆகவே, ராமன் ஆண்கள் விஷயத்தில் நடந்து கொண்ட மாதிரிக்கு வாலி, ராவணன் வதையும், சுக்ரீவன், விபீசணன் நேசமும், ராமன் பெண்கள் விஷயத்தில் நடந்து கொண்ட மாதிரிக்கு தாடகை வதம், சூர்ப்பனகை பங்கம், சீதை காட்டுக்கு அனுப்பப்பட்டது முதலியவையும் தக்க அத்தாட்சிகளாகும்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/82994.html#ixzz35tHunLY5<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com