tag:blogger.com,1999:blog-1474608369333206681.post1517084051492876890..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: ராஜபக்சேவை பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பதா? - கி.வீரமணிதமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-68322174354848639992014-05-27T06:53:45.489+05:302014-05-27T06:53:45.489+05:30
ஹிட்லருக்கு இணையாக ஒப்பிடவேண்டிய மோடியை ஏழைகளின் ...<br />ஹிட்லருக்கு இணையாக ஒப்பிடவேண்டிய மோடியை ஏழைகளின் காப்பாளர் என்று தூக்கிப் பிடித்தது சரியா?<br /><br /><br />ஹிட்லருக்கு இணையாக ஒப்பிடவேண்டிய மோடியை ஏழைகளின் காப்பாளர் என்று தூக்கிப் பிடித்தது சரியா?<br /><br />ஊடகங்களுக்கு அச்சுதானந்தன் கேள்வி<br /><br />திருச்சூர்,மே 26- ஜன நாயகத்தின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப் படும் ஊடகங்கள், கார்ப் பரேட்மயமாக்கலின் ஆர வாரங்களுக்கு இடையே தங்களின் முகத்தை இழந்துகொண்டிருக்கின்றன என்று கேரள சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் கூறினார்.<br /><br />திருச்சூரில் சீனியர் ஜெர் னலிஸ்ட் ஃபாரம் (மூத்த பத்திரிகையாளர்கள் சங் கம்) மாநில மாநாட்டை யொட்டி ஊடகங்களின் நம்பகத்தன்மை வீழ்ச்சி யடைகிறதா? என்ற தலைப் பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங் கிற்கு அனுப்பிய துவக்க உரையில் அச்சுதானந்தன் மேலும் கூறியதாவது: சர்வதேச-தேசிய-மாநில சூழ்நிலைமைகளில் ஊடக அமைப்புகள் முதலாளித் துவ-கார்ப்பரேட் நலன் களுக்கு அடிபணிந்து செயல் படுகின்ற நிலைமை உள் ளது நாட்டில் உள்ள முக் கியமான சுமார் 40 பத்திரி கைகளும் அவற்றின் துணை வெளியீடுகளும் டாடா, பிர்லா மற்றும் பெனெட், கோல்மேன் உள்ளிட்ட நான்கைந்து பெரும் ஏக போக முதலாளிகளுக்குச் சொந்தமானதாக உள்ளன. கேரளத்திலும் பிரபல பத் திரிகைகள் இவர்களின் நலன்களைத்தான் பாதுகாக் கின்றன.<br /><br />சமூக வாழ்க்கையில் நிலவும் அநீதிகளை கண்ட றியவும், அவற்றை அகற்றி வாழ்க்கையை ஒழுங்குப் படுத்தவும், மாற்றி அமைக் கவும் ஊடகங்கள் கட மைப்பட்டவையாகும். ஆனால், ஊடகங்கள் இன்று பணம் வாங்கிக் கொண்டு செய்திகளை வெளியிடுவதாகவும் பிரை வேட் ட்ரீட்ஜெர்ன லிசம் (தனியார் அணுகி தனக்கா னதை சாதித்துக் கொள்ளும் இதழியல்) என்றும் குற்றச் சாட்டுக்கு ஆளாகின்றன. திருவனந்தபுரத்தில் அர சின் குடியிருப்புத்திட்டத் தில் வீடு வழங்கப்பட்ட 54 பத்திரிகையாளர்கள் ஆண் டுகள் பலவாகியும் ஒரு பைசாக் கூட கட்டவில்லை என்றுசில நாட்களுக்கு முன்பு ஒரு செய்தி வெளி யானது.<br /><br />எல்லாவற்றையும் விமர்சிக்கின்ற நான்காவது தூண்என்று அழைக்கப் படும் பத்திரிகைகளை யார் விமர்சிப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது. கேரளத் தில் இரண்டு பிரபல பத்தி ரிகைகளுக்கு, மற்ற பத்திரி கைகளுக்கு வழங்கப்படு வதைவிட மூன்று மடங்கு கூடுதல் கட்டணத்தில் அரசு விளம்பரம் அளித்தது என்று தகவல் உரிமை சட் டத்தின்படி கிடைத்த தக வல் கூறுகிறது. ஊடகங் களின் பிரச்சாரங்கள் மூலம் நரேந்திரமோடி பாரதத்தின் ரட்சகர் என்று வர்ணிக்கப் பட்டார். இதுபற்றி ஊட கங்கள் மேலும் ஆய்வு செய்வது அவசியமாகும்.<br /><br />குஜராத் இனப்படு கொலையின் பேரில் ஹிட் லருடன் ஒப்பிடும் அள வுக்கு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மோடியை ஊட கங்கள் எளிமையானவர் என்றும் இரக்கம் உள்ளவர் என்றும் ஏழைகளின் காப் பாளர் என்றும் வர்ணித்தன. ஊடகங்களையும் ஊடகங் களின் போக்குகளையும் விமர்சனரீதியாக பார்க் கின்ற ஒரு சமூகத்தை உரு வாக்கவேண்டும். அதுதான் ஊடகங்களின் நம்பகத்தன் மையை மீட்டெடுப்பதற் கான முக்கியமான முதல் படியாகும். இவ்வாறு அதில் அச்சு தானந்தன் கூறியுள்ளார்.<br /><br />Read more: http://viduthalai.in/page-8/81019.html#ixzz32sItyzJm<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-53402240590548484552014-05-27T06:52:24.651+05:302014-05-27T06:52:24.651+05:30சீதாப்பழத்தின் மருத்துவ குணங்கள்
சீதாபழத்தின் தோல...சீதாப்பழத்தின் மருத்துவ குணங்கள்<br /><br />சீதாபழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகள் கொண்டது. சீதாப்பழத்தில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார் சத்து, சுண்ணாம்புசத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. இத்தைகையை சத்துகள் சீதாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்களை அடக்கியுள்ளது.<br /><br />சீத்தாபழத்தில் உடலை வலிமையாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.<br /><br />சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும். சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.<br /><br />* சீதாப்பழத்தை சாப்பிட்டால் செரிமானம் ஏற்படும்.<br /><br />* சீதாப்பழ சதையோடு உப்பை கலந்து முகப்பரு மேல் தடவினால் முகப்பரு பழுத்து உடைந்து மறையும்.<br /><br />* இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டால் புண்கள் ஆறும். * விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறு பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி மிருதுவாகும்.<br /><br />* சீதாப்பழம் காய்ச்சலை குணப்படுத்தும்.<br /><br />* சீதாப்பழம் விதைகளை பொடியாக்கி கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வந்தால் முடி உதிராது.<br /><br />* சிறுவர்களுக்கு சீதாப்பழம் சாப்பிட்டால் எலும்பு உறுதியாகும். * சீதாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயம் பலப்படும்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/81031.html#ixzz32sIb4Pou<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-20709692432609127752014-05-27T06:51:59.514+05:302014-05-27T06:51:59.514+05:30உடலில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்தும் பார்லி
பார்...உடலில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்தும் பார்லி<br /><br />பார்லி என்கிற பொருளே உங்களில் பலருக்கு நினைவில் இருக்குமா என்பது தெரியவில்லை. முன்பெல்லாம் உடம்பு சரியில்லாத போது கஞ்சி வைத்துக் கொடுக்கவாவது உபயோகத்தில் இருந்த பார்லி, இன்று இருக்கும் இடம் தெரியவில்லை. ஆனால், அப்படி மறந்து ஒதுக்க முடியாத அளவுக்கு மருத்துவக் குணங்கள் நிறைந்த ஒரு பொருள் பார்லி. குறைந்த கலோரி கொண்ட உணவான பார்லி, இயற்கையான எடைக் குறைப்புக்கு உதவுகிறது. அரிசியுடன் ஒப்பிடும் போது இதில் மாவுச்சத்து குறைவு. உடல்நலம் சரியில்லாத போது, நார்ச்சத்து குறைவான உணவுகளையே உட்கொள்ளச் சொல்வார்கள் மருத்துவர்கள். அதற்குப் பொருத்தமான உணவு பார்லி. எளிதில் செரிமானமாகும். சளி சவ்வுப் படலத்தில் உண்டான புண்களை ஆற்றும். அதனால்தான் காய்ச்சலில் படுத்தவர்களுக்கு பார்லி கஞ்சி கொடுக்கும் பழக்கம் அந்தக் காலத்தில இருந்திருக்கிறது. இதய நோயாளிகளுக்கு பார்லி அற்புதமான ஒரு உணவு. கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதால், இது இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. பார்லியில் உள்ள கரையாத நார்ச்சத்தில் ப்ரோபியானிக் என்கிற அமிலம் இருக்கிறது. அது கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. அதனால்தான் இதய நோயாளிகளுக்கு பார்லி நல்லது. பார்லியில் பீட்டாக்ளூக்கோன் அதிகம். அதுவும் கொலஸ்ட் ராலை குறைக்கவல்லது. இந்த பீட்டாக்ளூக்கோனானது, பித்த நீருடன் சேர்ந்து, கொழுப்பை மலத்தின் வழியே வெளியேற்றி விடும்.<br /><br />அதனால், இதய நோயாளிகளுக்கு அரிசி உணவுகளுக்குப் பதில் பார்லி அதிகம் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. உடலிலுள்ள நச்சு நீரை வெளியேற்ற வல்லதால், எடைக் குறைப்பு முயற்சியில் உள்ளவர்களுக்கும் பார்லி சிறந்த உணவாகப் பரிந்துரைக்கப்படுகிறது. பார்லியில் நயாசின் என்கிற பி வைட்டமின் அதிகம். மேலும் இதிலுள்ள லிப்போ புரோட்டீன் (புரதமும் கொழுப்பும் கலந்த ஒரு சத்து) மெனோபாஸ் காலகட்டத்தை நெருங்கும் பெண்களுக்கு அந்தப் பருவத்தில் இயல்பாக எகிறக் கூடிய எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மெனோபாஸ் கட்டத்தை நெருங்கும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் குறையும். அதனால் உடலில் தண்ணீர் தேக்கம் அதிகமிருக்கும். காலையில் தூங்கி எழுந்ததும் முகமெல்லாம் வீங்கிக் காணப்படும். அந்தப் பிரச்சினைக்கு பார்லி எடுத்துக் கொள்வது பலனளிக்கும்<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/81031.html#ixzz32sIVBdx4<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-79805054137413551782014-05-27T06:51:33.456+05:302014-05-27T06:51:33.456+05:30குடற்புண்ணை விரட்ட தண்ணீர் குடிக்கலாம்
குடற்புண் ...குடற்புண்ணை விரட்ட தண்ணீர் குடிக்கலாம்<br /><br />குடற்புண் அல்லது வயிற்றுப்புண் என்பது இரைப்பை உணவுக்குழாய் பாதையில் ஏற்படும் சீழ்ப்புண் ஆகும். இது பொதுவாக அமிலத்தன்மையுடையது. மிக அதிக வலி வுடையதாக இருக்கும். வயிற்றின் அமிலச்சூழலில் வாழும் ஒரு சுருள் வளைய வடிவிலான நுண்கிருமியாகும். வயிற்றில் உணவை செரிக்க ஹைட்ரோ குளோரிக் அமிலம் உள்ளது. இந்த அமிலம் அதிகம் சுரப்பதால் இரைப்பை மற்றும் சிறுகுடல்கள் சுவர்களில் உள்ள மியூக்கோஸா படலம் சிதைத்து குடற்புண் உண்டாக்குகிறது. சாலிசிலேட் மருந்து, ஆஸ்பிரின் முதலான வலி நிவாரணி மருந்து, காயம் மற்றும் மூட்டு வலிகளுக்கு சாப்பிடும் மருந்து போன்றவற்றால் அல்சர் ஏற்படலாம். சிகிச்சை பின்வருமாறு:<br /><br />தண்ணீர்: போதுமான அளவிற்கு தண்ணீர் பருகுவது வயிற்றுக்கு ஏற்றது. சுத்தமான தண்ணீர் மிக மிக அவசியம்.<br /><br />அருகம்புல்: எல்லா நோய்களுக்கும் ஏற்ற சிறந்த மருந்து. காலையில் பசி ஆரம்பித்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். பசிப்பதற்கு முன்பே சாப்பிடக்கூடாது. இதை சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் போதும். அடுத்து மதிய சாப்பாடு. இதன்மூலம் எல்லா நோய்களும் குணமடையும். உடல் எடை குறைய, அல்சர், கொலஸ்ட்ரால் குறைய, நரம்புத்தளர்ச்சி நீங்க, ரத்தப்புற்று குணமடைய அருகம்புல் ஒரு சிறந்த டானிக். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கச் செய்வதில் சிறந்தது அருகம்புல்தான்.<br /><br />வாழைத்தண்டு: நோயாளிகளுக்கு பொதுவாக சிறு நீரகக்கல் அறுவை சிகிச்சை செய்யாமலேயே குணமடைய பச்சை வாழைத்தண்டு சாறு சாப்பிடலாம். வாழைத் தண்டுடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு சட்னிபோல் அரைத்து சாறு பிழிந்து குடித்துவர நோய்கள் விலகும். மேலும் சிறுநீர் தொல்லைகள் வராமல் பாதுகாக்கலாம்.<br /><br />கொத்தமல்லி: இதை தினமும் உணவில் சேர்த்து சாப்பிடலாம். அல்சர் இருப்பவர்களுக்கு இது நல்ல மருந்து ஆகும். பசியை தூண்டும், பித்தம் குறையும். காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம், நரம்புத்தளர்ச்சி குணமாகும்.<br /><br />வல்லாரை: மஞ்சள் காமாலை, அல்சர், தொழுநோய், யானைக்கால் வியாதி, பேதி, நரம்புத்தளர்ச்சி, ஞாபக சக்தி முதலியவற்றிற்கு சிறந்தது. தினமும் 2 வேளை சிறிதளவு இலைகளை சாப்பிடலாம்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/81031.html#ixzz32sIOBdmf<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-16041243198425709002014-05-27T06:51:07.920+05:302014-05-27T06:51:07.920+05:30
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?
க...<br />சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?<br /><br />கணையத்தில் இன்சுலின் சுரப்பது குறைவால் சர்க்கரை நோய் ஏற்படுவதாக கூறப்பட்டாலும், குடும்ப பாரம்பரியம் நமது வாழ்க்கை நடைமுறை ஆகியவையும் முக்கிய காரணிகளாக உள்ளன. சர்க்கரையின் அளவை கணக் கிட்டு அதற்கேற்ப மாத்திரைகள் வழங்கப்படும். சிலருக்கு சர்க்கரை அளவு ஆண்டிற்கு ஆண்டு அதிகரிக்கும். அதற்கேற்ப வீரியமிக்க மாத்திரைகள் வழங்கப்படும். மாத்திரைகளால் கட்டுப்படுத்த முடியாத போது, இன்சுலின் செலுத்தப்படும்.<br /><br />அறிகுறிகள்: அதிக தாகம் எடுத்தல், எடை குறைதல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், உடலின் மெல்லிய பாகங்களில் வெடிப்பு ஏற்படுதல் (ஆணுறுப்பு, விரல் நுனிகளில் வெடிப்பு, ஊறல் இருக்கும்), தலை சுற்றல் போன்றவை இருக்கும்.<br /><br />ரத்தபரிசோதனை: பொதுவாக 35 வயதிற்கு மேல் ஆண்டிற்கு ஒரு முறை சர்க்கரை நோய் பரிசோதனை செய்வது நல்லது. சர்க்கரை நோய் பாதிப்புடையவர்கள் ஆரம்பத்தில் சர்க்கரை அளவை துல்லியமாக அறிய தொடர்ந்து ரத்த பரிசோதனைகள் செய்யப்படும். உடல் பருமன் உடையவர்கள், குடும்ப பாரம்பரியமாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் 25 வயது முதலே சோதனை செய்யலாம். சர்க்கரை நோய் நரம்புகளையும் வலுவிழக்க செய்யும். மேலும் சிறிய ரத்த குழாய்களில் கொழுப்பு படிவதால் சிறிய ரத்த குழாய் மற்றும் பெரிய ரத்த குழாய் பாதிப்பு ஏற்படும். பெரிய ரத்த குழாய் பாதிப்பால் கால்கள், இதயம் போன்றவவை பாதிக்கபடும். இதனால் மாரடைப்பு, கால்களில் உணர்ச்சியற்று போதல் ஏற்படும். நோயை கண்டு கொள்ளாவிட்டால் சுயநினைவிழப்பு போன்றவை ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து விளைவித்து விடும். சிறிய ரத்தக்குழாய் பாதிப்பால் கண்கள், சிறுநீரகங்கள் பாதிக்கப்படும். எனவே சர்க்கரை நோயாளிகள் கொலஸ்டிரால், பிரஷர், கிரியாட்டினின், ஆல்பமின்(உப்பு) போன்ற நோய்களுக்கான பரிசோதனையும் மேற் கொள்வது அவசியம். மேலும் கண்களையும் ஆண்டிற்கு ஒரு முறை பரிசோதிப்பதால் கண்களில் திரையில் உள்ள நரம்புகளில் பாதிப்பை கண்டறிந்து லேசர் சிகிச்சை மூலம் பார்வை இழப்பைத் தடுக்க முடியும்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/81031.html#ixzz32sIEsRbH<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-24685193803124508962014-05-27T06:48:30.656+05:302014-05-27T06:48:30.656+05:30
பெரும்பான்மையின வாதமும், சார்க் மாநாடு அழைப்பும்
...<br />பெரும்பான்மையின வாதமும், சார்க் மாநாடு அழைப்பும்<br /><br /><br />- குடந்தை கருணா<br /><br />மோடி பிரதமர் பதவி ஏற்கும் விழாவுக்கு ராஜபக்சே உள்ளிட்ட சார்க் அமைப்பு உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். ராஜபக்சே வருவதற்கு தமிழ் நாட்டிலும், நவாஸ் ஷெரிப் இந்தியா வருவதற்கு சிவ சேனாவினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அண்டை நாடுகளுடன் நட்பு வளர்வதற்கு மோடி எடுத்துள்ள சிறப்பான முயற்சி இது என பாஜக வினர் தம்பட்டம் அடிக்கின்றனர்.<br /><br />இதே அண்டை நாடுகளுடன் பேச்சு வார்த்தையை மன்மோகன் சிங் அரசு எடுத்தபோது அதை மோடியும், பாஜகவினரும் கடுமையாகச் சாடினர். இப்போது வெற்றி பெற்றதும், நட்பு, உறவு, அண்டை நாடு என மோடி பரிவாரங்கள் பேசுகின்றன.<br /><br />தேர்தல் நேரத்தில் மோடி எப்படி எல்லாம் பேசினார்? நான் வெற்றி பெற்றால் மாநில அரசுக்கு உரிய மதிப்பு அளிப்பேன் என்று சொன்னார். அந்த அடிப்படையில் ராஜபக்சேவை அழைப்பதற்கு முன், தமிழக அரசோடு கலந்து பேசியிருக்க வேண் டாமா?<br /><br />ஏறத்தாழ ஒன்றரை லட்சம் தமிழ் மக்கள் கொல்லப் படுவதற்கு காரணமான ராஜபக்சே மீது போர் குற்றவாளி என அறிவிக்க வேண்டும் என பல நாடுகள் முயன்று வரும் நிலையில், தமிழக மக்கள் அதற்காக வலியுறுத்தும் நிலையில், ராஜபக் சேவை அழைக்க வேண்டிய அவசி யம் என்ன? குஜராத்தை சேர்ந்த ஒரு லட்சம் மக்கள், வேண்டாம், ஒரு நூறு பேர் பாகிஸ்தானில் தாக்கப்பட்டிருந்தால், மோடியின் நிலைப்பாடு இப்படித் தான் இருக்குமா? அதெல்லாம் இருக்கட்டும். பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்படுவோம் என்று கூறிய மோடி, வெற்றி பெற்றதும் சொன்னாரே, சார்க் அமைப்பு உறுப்பினர்களை அழைப்பதற்கு முன், அவரது கூட்டணியில் இருபத்தேழு கட்சிகள் இருக்கின்றனவே, அதில் தொடர் புடைய மாநிலக் கட்சிகளோடு ஏதாவது ஆலோசனை நடத்தியிருக்க வேண்டுமா? வேண் டாமா? தொடர்புடைய மாநிலக் கட்சி களோடும் பேசவில்லை; தொடர் புடைய மாநில அரசோடும் பேச வில்லை.<br /><br />அப்படி என்றால் இப் போது அமைய உள்ள ஆட்சி, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அல்ல; மாறாக, இது அவர்கள் முதலில் சொன்னதுபோல், மோடி சர்க்கார் தான் என்பதை, வாக்களித்த மக்கள் மட்டுமல்ல; கூட்டணியில் உள்ள கட்சிகளும் புரிந்து கொள்ள வேண் டும். பதவி ஏற்கும் விழாவிற்கு சார்க் அமைப்பு உறுப்பினர்களை அழைக் கும் வழக்கம் ஏதும் இதற்கு முன்னர் எப்போதும் கிடையாது. இப்போது மோடி அரசால் ஆர்எஸ்எஸ் வழி காட்டுதலில் இந்த அழைப்பு அனுப் பப்பட்டுள்ளது என்றால், இதன் நோக்கம், பாஜகவின் பெரும்பான் மையினவாதத்தை அண்டை நாடு களுக்கு காட்டுவதற்குத்தான் எனக் கருத வேண்டியுள்ளது.<br /><br />Read more: http://viduthalai.in/page-2/81003.html#ixzz32sHauayB<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-34211355604264006522014-05-27T06:48:00.062+05:302014-05-27T06:48:00.062+05:30
சிறிதும் இராது
பார்ப்பனருக்கு நோக்கமெல்லாம் பதவ...<br />சிறிதும் இராது<br /><br /><br />பார்ப்பனருக்கு நோக்கமெல்லாம் பதவி, உத்தியோகம் ஆகியவற்றில் தங்களுக்கு ஏகபோகம் இருக்க வேண்டும் என்பதுதானே ஒழிய, மற்றபடி நாணயம், நீதி, நேர்மை பற்றியோ பார்ப்பனர் தவிர்த்த மற்றவர் பற்றியோ கவலை சிறிதும் இராது. - (விடுதலை, 10.6.1968)<br /><br />Read more: http://viduthalai.in/page-2/80993.html#ixzz32sHT0q12<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-18422801622806325352014-05-26T06:38:54.920+05:302014-05-26T06:38:54.920+05:30
ஆரம்பமாகிவிட்டது மத வெறியர்களின் ஆட்டம்
பாட்னா,...<br />ஆரம்பமாகிவிட்டது மத வெறியர்களின் ஆட்டம்<br /><br /><br />பாட்னா, மே 25- டில்லியில் உள்ள ராம் லால் ஆனந்த் கல்லூரியில் பேரா சிரியராக பணியாற்றிவரு பவர் ஜி.என்.சாய்பாபா அவருக்கும் மாவாயிஸ்ட் டுகளுக்கும் தொடர்பு உள்ள தாகக் கூறி 9-5-2014 அன்று மகாராட்டிரக் காவல்துறை யினர் கைது செய்தனர். பாட்னாவில் உள்ள ஏஎன்சின்கா சமூக கல்வி நிறுவனம் சார்பில் பேரா சியர் கைது குறித்து கல்வி யாளர்களின் கருத்தரங்கு கூட்டம் நடத்த ஏற்பாடா னது.<br /><br />கூட்டம் நடக்கும் போது, வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் பாரத் மாதா கி ஜே, வந்தே மாதரம் என்று முழக் கங்களை எழுப்பியபடி கல்வி நிறுவனத்தின் பொருட் களை சேதப்படுத்தியது. மேலும், கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்தவர் களை விரட்டி அடித்து வன்முறை வெறியாட்டத் திலும் ஈடுபட்டது. வன் முறையில் ஈடுபட்டவர்கள் பாஜகவின் மாணவர் அமைப் பான அகில பாரதீய வித் யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) என்கிற அமைப்பைச் சேர்ந் தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. வன்முறை வெறியாட் டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உள்ளதாகவும், விரைவில் வன்முறையில் ஈடுபட்ட வர்கள்மீது நடவடிக்கை யும் எடுக்கப்படும் என்று காவல்துறையின் மூத்த கண்காணிப்பாளர் மனு மகராஜ் தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட் தீவிர வாதிகளுடன் தொடர்பு என்றாலே எவ்வித விவாத மும் நடத்தவே கூடாது என்று வன்முறையாட் டத்தை ஏபிவிபியினர் நடத்தி உள்ளனர்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/80934.html#ixzz32mOfYWbk<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-86525150906449246572014-05-26T06:38:26.459+05:302014-05-26T06:38:26.459+05:30
இன்றைய ஆன்மீகம்?
குல தெய்வ வழி பாட்டுடன் முரு...<br />இன்றைய ஆன்மீகம்?<br /><br /> <br /><br />குல தெய்வ வழி பாட்டுடன் முருகப் பெரு மானை செவ்வாய் கிழமைகளில் அரளிப்பூ வைத்து வழிபட்டால் உங்கள் கடன் தீரும் என்று ஓர் ஏடு தெரிவித் துள்ளது.<br /><br />தனி நபர் கடன் தீர இந்த எளிய வழியென்றால் இந்தியாவின் கடன் சுமை தீர பரங்கிப் பூ வைத்துப் படைக்கலாமா?<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/80935.html#ixzz32mOYYeGk<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-32666245334461700882014-05-25T06:44:52.145+05:302014-05-25T06:44:52.145+05:30தந்தை பெரியார் பொன்மொழிகள்
இன்றைய சுதந்திரம் வடநா...தந்தை பெரியார் பொன்மொழிகள்<br /><br />இன்றைய சுதந்திரம் வடநாட்டானுக்கும் அவன் மொழிக்கும் தென்னாட்டவர் அடிமையாய் வாழ வேண்டு மென்றே ஆக்கப் பட்டுவிட்டது. வெள்ளையரிடமிருந்து பெற்ற சுதந்திரத்தைவிட வடவரிடமிருந்து சுதந்திரம் பெறுவதே மிகமிக முக்கியமானது.<br /><br />Read more: http://viduthalai.in/page-7/80882.html#ixzz32gZfumTY<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-16776456568445240452014-05-25T06:44:09.762+05:302014-05-25T06:44:09.762+05:30பாலிய விதவையின் பரிதாபம்
இந்து தருமத்தின் மகிமை
...பாலிய விதவையின் பரிதாபம்<br /><br />இந்து தருமத்தின் மகிமை<br /><br />17.07.1929ஆம் தேதி அலகாபாத் ஹைகோர்ட்டில் நீதிபதிகள் எங்,பெனட் ஆகிய இருவர் முன்னிலையிலும் ஒரு அப்பீல் வழக்கு வாதிக்கப்பட்டது.<br /><br />தீதுவானி கிராமம் நாராயணசிங்கர் மகள் இருபத்திரண்டு வயதுள்ள பீபியா என்னும் ஒரு பெண்ணுக்கு 5ஆவது வயதிலேயே மணம் முடிக்கப்பட்டது. அடுத்த ஆண்டில் புருஷன் இறந்து போனான். இவளுடைய ஜாதியில் விதவாவிவாக அனுமதி இல்லாமையால் பீபியா மரணப் பரியந்தம் விதவையாகவே காலம் கழிக்கும்படி நேரிட்டது. அவள் தன்னுடைய புருஷன் குடும்பத்திலேயே வாழ்ந்து வந்தாள். சென்ற ஆண்டில் கருத்தரித்துவிட்டாள். இவள் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது பிரசவ வேதனை கண்டு குழந்தையைப் பெற்றுக் குழி தோண்டிப் புதைத்துவிட்டாள். மாடு மேய்ப்பவர்கள் மூலம் பரவின செய்தி போலீசாருக்கு அறிவிக்கப்பட்டதும் அவர்கள் பீபியாவை சிசுக் கொலை செய்ததாக நீதிபதி முன்பாக நிறுத்தினார்கள்.<br /><br />பீபியாவுக்கு நீதிபதிகள் தீவாந்திர திட்சை விதித்து மாகாண அரசாங்கத்தார் கருணைக்கும் சிபாரிசு செய்திருக்கின்றனர். இந்து தருமத்தின் மகிமையே மகிமை!<br /><br />- குடிஅரசு - செய்தி விளக்கக்குறிப்பு - 11.08.1929<br /><br />Read more: http://viduthalai.in/page-7/80882.html#ixzz32gZVED88<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-7482491972063993102014-05-25T06:43:45.121+05:302014-05-25T06:43:45.121+05:30சைவப் பெரியார் மகாநாடு
திருநெல்வேலியிலும் திருப்ப...சைவப் பெரியார் மகாநாடு<br /><br />திருநெல்வேலியிலும் திருப்பாப்புலியூரிலும், சமீபத்தில் கூட்டப்பட்ட சைவப் பெரியார்கள் மகாநாடு என்பதானது திருவாளர். அண்ணாமலைப் பிள்ளை, சாமிநாதசெட்டியார், திரு.வி.கல்யாண சுந்தரமுதலியார். கிருஷ்ணசாமிப்பாவலர் என்பவர்களுக்கு மகாநாட்டில் கலந்து கொள்ளவும், மகாநாட்டு மேடைமேல் ஏறி அவர்கள் யோக்கியதைக்குத் தகுந்தபடி பேசவும் மகாநாட்டுத் தீர்மானங்களுக்கு ஓட்டு கொடுக்கவும் தாராளமாய் இடமளித்து, திருவாளர்கள் வ.உ.சிதம்பரம் பிள்ளை, பொ.திரிகூடசுந்தரம் பிள்ளை, பூவாளூர். செல்வக்கணபதியார் ஆகியவர்களுக்கும் மற்றும் சில சைவசமாஜப் பிரதிநிதிகளுக்கும் இடமளிக்க மறுத்ததிலிருந்தும், சைவப் பெரியார்கள் என்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதையும், அம்மகாநாடு எந்தப் பிரச்சாரத்திற்காகக் கூட்டப்பட்டது என்பதையும், அதைப்பற்றி நாம் முன்பு எழுதி வந்தவைகள் எல்லாம் உண்மையா? அல்லவா? என்பதையும் பொது ஜனங்கள் அறிந்து கொள்ள அம்மகாநாடானது ஒரு அளவு கருவியாகப் பயன்பட்டமைக்கு நாம் மகிழ்ச்சியுடன், மகாநாட்டைக் கூட்டிய பிரமுகர்களுக்கும் நன்றி செலுத்துகின்றோம்.<br /><br />குடிஅரசு - துணைத்தலையங்கம் - 02-06-1929<br /><br />Read more: http://viduthalai.in/page-7/80882.html#ixzz32gZP3bju<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-41481995871557496682014-05-25T06:43:25.571+05:302014-05-25T06:43:25.571+05:30
தமிழ்நாடு மாகாண மகாநாடு
தமிழ்நாடு மாகாண மகாநாட...<br /><br /><br />தமிழ்நாடு மாகாண மகாநாடு<br /><br />தமிழ்நாடு மாகாண மகாநாடு வேதாரண்யத்தில் கூடுவதாக இரண்டு மூன்று மாதமாக பத்திரிகைகளில் பெருத்த விளம்பரங்களும் ஆடம் பரங்களும் நடைபெற்றன. தமிழ்நாடு மாகாண மகாநாடு சென்னையில் 1926இல், கோகலே ஹாலில் நடந்த பிறகு 27லும் 28லும் நடைபெற முடியாமலே போய்விட்டது, வாசகர்களுக்குத் தெரியும். ஆனால் இந்த வருஷம் தேர்தல் வரக்கூடும் என்று கருதி, அதுவும் கனம் திரு.முத்தையா முதலியார் அவர்களை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தின் மீது தனியாகவே பார்ப்பனர்களால் வேதாரண்யத்தில் மகாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காகக் கூலிகளை விட்டும் எவ்வளவோ பிரச்சாரமும் செய்யப்பட்டது என்றாலும் அந்த மகாநாட்டுத் தலைமைப் பதவியை ஏதாவது ஒரு பார்ப்ப னரல்லாதார் தலைமை வகிக்க ஏற்பட்டுவிட்டால் தங்கள் ஜில்லாவின் பெருமைக்கு ஹானி வந்துவிடும் என்றும், அவர்களால் ஏதாவது வகுப்பு விஷமம் புகுத்தப்பட்டு விடுமென்றும் கருதி ஒரு பார்ப்பனரைத் தலைவராக்கக் காங்கிரசு ஆபீஸ் சிப்பந்திகளும், காங்கிரசு பார்ப்பனத் தலைவர்களும் ஊர் ஊராய்ச் சென்று விஷமப் பிரச்சாரம் செய்து திரு. சத்யமூர்த்தியைத் தேர்ந்தெடுத்தாய் விட்டதாக ஏற்பாடு செய்தாய் விட்டது. ஆனால் இந்த செய்தியை இன்னும் இரகசியமாக வைத்திருக்கின்றார்கள்.<br /><br />வரமுடியாத ஒருவர் பெயரை முதலில் சொல்லி பொது ஜனங்களை ஏமாற்றி பிறகு திரு.மூர்த்தியின் பெயரை வெளியிடுவார்கள். திரு.வரதராஜுலுவைத் தெரிந்தெடுக்க சில பார்ப்பனரல்லாத காங்கிரஸ் தொண்டர்களும் சில பொது ஜனங்களும் பாடுபட்டார்கள் ஆனால், பார்ப்பனர்களும் காங்கிரஸ், ஆபீசுகளும், சிப்பந்திகளும் யோக்கியமாய் தங்கள் பிரச்சாரத்தைச் செய்திருந்தால் திரு.வரதராஜுலுவே தெரிந்து எடுக்கப்பட்டிருப்பார். ஆனால் பார்ப்பன சூழ்ச்சியால் அவர் பெயர் இரண்டொரு கமிட்டி தேர்ந்தெடுத்தும், திருப்பி அனுப்பி, திரு.சத்தியமூர்த்தியைத் தெரிந்தெடுக்க வேண்டியதாயிற்று. இதன் பலனாய் மகாநாட்டின் போது பெருத்த கலகமேற்படும் போல் தெரியவருகின்றது. ஆனால் இருதிறத்தாரும் கலகத்திற்குக் காரணம் சுயமரியாதைக் கட்சியார்கள் என்று சொன்னாலும் சொல்லக்கூடும். அதைப்பற்றி நமக்குக் கவலை இல்லை. யார் பேரில் வந்தாலும் சரி, எப்படியும் காங்கிரசுக்குத் தமிழ் நாட்டில் உள்ள யோக்கியதை எவ்வளவு என்பதும், அதில் உள்ள நாணயம் எவ்வளவு என்பதும், அதில் எவ்வளவு தூரம் வகுப்புவாதம் இல்லை என்பதும் ஆகியவைகளை மாத்திரம் பொதுஜனங்கள் இனியும் அறிந்து கொள்ள இதை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக் காட்டுகின்றோம்.<br />- குடிஅரசு - துணைத் தலையங்கம் - 14.07.1929<br /><br />Read more: http://viduthalai.in/page-7/80882.html#ixzz32gZHeI7v<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-77166571568283619452014-05-25T06:40:08.085+05:302014-05-25T06:40:08.085+05:30வரலாறுதிரும்பும்!
- கி.தளபதிராஜ்
"மோடியும...<br />வரலாறுதிரும்பும்!<br /><br /><br />- கி.தளபதிராஜ்<br /><br /><br />"மோடியும் லிபரல்களின் தோல்வி யும்" என்கிற ஒரு கட்டுரையை தமிழ் இந்து நாளிதழ் (23.5.14) வெளியிட்டி ருக்கிறது. இந்தத்தேர்தலில் சுதந்திரப் போக்காளர்கள் (லிபரல்கள்) ஏன் தோற்றுப்போனார்கள் என்பதற்காண காரணமாக "இடதுசாரி அறிவுஜீவிகளும் அவர்களையொத்த சுதந்திரப் போக் காளர்களும் ஒரு கூட்டமைப்புபோலச் செயல்பட்டார்கள். மதச்சார்பின்மைதான் மிக மேன்மையானது என்பதுபோல நடந்துகொண்டார்கள். மூட நம்பிக் கைகளுக்கும் பழக்கவழக்கங்களுக்கும் எதிராக சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய வேண்டும் அல்லது புதிய சட்டங்களை இயற்ற வேண்டும் என்று முழங்கினார்கள்.<br /><br />அறிவியல் விஞ்ஞானி, ராகுகாலம் கழிந்த பிறகு வருவதுகூட விமர்சனத் துக்கு உள்ளாயிற்று. அடக்கு முறையா கவே மாறியது" என்று சொல்லும் கட் டுரையாளர்<br /><br />"பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்த, மதநம்பிக்கையுள்ளவர்களின் மனக் குறையை மோடி நன்கு புரிந்து கொண்டார். மதச்சார்பின்மை வெறும் பொய்வேடம் என்பதை அம்பலப்படுத் தினார்.அதனால் அவர் வெற்றிபெற்றார்" என எழுதுகிறார்<br /><br />மோடி பெரும்பான்மை சமுதாயமான இந்து சமுதாயத்தின் ஒட்டு மொத்த வாக்குகளை பெற்றிருக்கிறாரா? வெறும் 31 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று வெற்றி பெற்றிருக்கிறார் மோடி. அதுவும் ஊழல் மற்றும் கடுமையான விலைவாசி உயர்வு காரணமாக காங்கிரஸ் மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பை அறுவடை செய்திருக்கிறார் மோடி என்பதே உண்மை. நிலைமை இப்படியிருக்க இதை மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிரான வெற்றியாக சித்தரிக்க முயல்வது ஆதிக்க சமூகத்தின் ஆழ்மனதையே வெளிக் காட்டுகிறது. "அய்ரோப்பாவின் பல பகுதிகளில் இப்போது மதம் என்றாலே வெறுக்கிறார்கள். ஹாலந்து நாட்டில் மிகவும் அழகான பல தேவாலயங்கள் மக்களுடைய வருகை குறைந்ததால் அஞ்சல் அலுவலகங்களாக மாற்றப்பட்டு விட்டன" என புலம்புகிறார் கட்டுரை யாளர். அவை மானுட சமூகத்தின் அறிவு முதிர்ச்சியில் ஏற்பட்ட மாற்றங்கள்!<br /><br />நாத்திகர்களாலோ, மதச்சார்பின்மை கொள்கையாளர்களாலோ எந்த வழிபாட்டுத்தலங்களுக்காவது வன்முறை யால் கேடு விளைவிக்கப்பட்டிருக்கிறதா?. ஆர்.எஸ்.எஸ் வகையறாக்களால் இந்தி யாவில் உள்ள மசூதிகளுக்கும் தேவாலயங்களுக்கும் மோடி ஆட்சியில் தீங்கு ஏற்படாமல் காப்பாற்றப்படட்டும் முதலில்!<br />நம் நாட்டில் நடைபெறும் அறிவியல் மாநாடுகளே சிறிய கும்பமேளா போலத் தான் திருவிழாக் கோலமாக இருக்குமாம்.<br /><br />அசிங்கப்படுத்தப்படவேண்டிய செய்திகளையெல்லாம் அதிசயிக்கிறது கட்டுரை!.<br /><br />நம்முடைய மதம் அறிவியலுக்கு எதிராக எப்போதும் இருந்ததில்லை யாமே! அப்படியா? அரசமரத்தை சுற்றினால் அடிவயிறு பெறுக்கும் என்பது தான் அறிவியலா? கழுதைகளுக்கு கல்யாணம் செய்தால் கனமழை என்பது எந்த வகை அறிவு? மதச்சார்பின்மைக்கு எதிரான வெற்றி என்றால் மோடி முதலில் தமிழ்நாட்டில் அல்லவா வெற்றி பெற்றிருக்க வேண்டும்?<br /><br />பெரும்பான்மை இடங்களில் பிஜேபி கூட்டணி டெபாசிட்டையே இழந்தது பெரியார் மண் என்பதால்தானே? ஆச்சாரியார் குலக்கல்வித்திட்டத்தை கொண்டுவந்தபோது கிளர்ந்த எதிர்ப்பில் "ஆளை விடுங்கோ! உதவின்றபேர்ல உபத்திரம் பண்ணின்டு இருக்காதேள்!" னு அக்கிரஹாரமே கூடி ஆச்சாரியாரிடம் எச்சரித்ததெல்லாம் இந்துக்குழுமத்துக்கு மறந்து போயிடுத்தோ? இராமனுக்கு விபீஷ்ணனும், அனுமனும் கிடைத்தது போல் இன்று உங்களுக்கு மோடி கிடைத் திருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் உங்கள் கனவு ஒரு போதும் பலிக்காது!<br /><br />Read more: http://viduthalai.in/page-2/80889.html#ixzz32gXqJpjU<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-70054773725459828392014-05-25T06:38:09.509+05:302014-05-25T06:38:09.509+05:30
வெட்டிக்காடு என்னும் குக்கிராமம் உரத்தநாடு அருகில...<br />வெட்டிக்காடு என்னும் குக்கிராமம் உரத்தநாடு அருகில்; படிக்க வாய்ப்பற்றுக் கிடந்த அந்தப் பகுதியில் ஆறு ஆண்டுகளுக்கு முன் பெரியார் அறக்கட்டளை சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் துவக்கினார்.<br /><br />இவ்வாண்டு ஆறுபேர் பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதி அத்தனை மாணவர்களும் வெற்றி பெற் றுள்ளனர். அந்த ஆறு பேரில் மூவர் 400-க்கும் மேலாக மதிப்பெண் பெற்றுள்ளனர்.<br /><br />நாகம்மையார் இல்லத்துப்பிள்ளைகளின் நூறு சதவீத வெற்றி பெருமிதமாக இருக்கிறது.<br /><br />படிப்பு பார்ப்பனர்களுக்குத்தான் வரும்; சூத்திரர்களுக்கும், பஞ்சமர்களுக்கும் வரவே வராது என்று ஆக்கி வைக்கப்பட்ட மனுதர்ம காட்டை அழித்து, சமூகப் புரட்சி இந்த நாட்டில் உருவாக் கப்பட்டுள்ளது என்பதற்கு இவை எல்லாம் ஈடில்லா எடுத்துக்காட்டுகள்.<br /><br />தாழ்த்தப்பட்டவர்களைப் பள்ளியில் சேர்க்கா விட்டால் மான்யம் நிறுத்தப்படும் என்று ஆணை பிறப்பித்த நீதிக்கட்சியை நெஞ்சார இந்த நேரத்தில் நினைப்போமாக!<br /><br />பெரியார் கல்வி நிறுவனங்களை நிறுவி, அடி கோலிட்ட அய்யாவையும், அன்னை மணியம்மை யாரையும், நாகம்மை இல்லத்துப் பிள்ளைகளின் அண்ணனாக இருந்த அருமைப் புலவர் கோ. இமயவரம்பன் அவர்களையும் எண்ணுவோம்.<br /><br />இன்று பெரும் அளவு வளர்த்த எல்லோரையும் ஆச்சரியரித்தோடு திரும்பிப் பார்க்க செய்துள்ள நமது தலைவர் ஆசிரியர் அவர்களை மானசீகமாகக் கை குலுக்குவோம்! பெரியார் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உரமாக இருந்து உழைக்கும் ஒருங்கிணைப்பாளர்கள், தாளாளர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் அனை வரையும் பாராட்டுவோம் - நன்றியும் கூறுவோம்! வாழ்க பெரியார்!<br /><br />Read more: http://viduthalai.in/page-2/80888.html#ixzz32gXiHsTiதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-91426732942689161222014-05-25T06:38:05.007+05:302014-05-25T06:38:05.007+05:30கல்வி வெள்ளம் கரை புரள்கிறது!
தமிழ்நாட்டில் 10ஆ...கல்வி வெள்ளம் கரை புரள்கிறது!<br /> <br /><br />தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளி வந்துவிட்டன.<br /><br />இதில் 90.7 சதவீத இருபால் மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.<br /><br />முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களின் எண்ணிக்கை 400-க்கும் மேல் என்பது - எந்த அளவுக்கு நம் மக்களிடையே கல்வியின் செழிப்பு வளர்ந் திருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.<br /><br />சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று ஆக்கி வைத்த சமூகத்தில், இப்படி கல்விப் பயிர் செழித்துக் குலுங்குகிறது என்பதை எண்ணும் பொழுது உடல் அணுக்கள் எல்லாம் சிலிர்க்கின்றன.<br /><br />இதற்காக உழைத்த தந்தை பெரியார் அவர்களையும் அவர் கண்ட இயக்கத்தையும் நீதிக் கட்சித் தலைவர்களையும், திராவிடர் இயக்கத்தையும், கல்வி வள்ளல் காமராசர் அவர்களின் முயற்சியையும் இந்த நேரத்தில் எண்ணிப் பார்ப்போம்! நெஞ்சம் நிறைந்த பூரித்த நன்றிவுணர்வால் அவர்களை நனைப்போம்.<br /><br />சமூக புரட்சியாளரான தந்தை பெரியார் அவர்கள், தாம் கண்ட அறக்கட்டளையின் சார்பில் சில கல்வி நிறுவனங்களை உருவாக்கினார்; நடத்தினார்; அன்னை மணியம்மையார் அவர்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினார்.<br /><br />தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் ஒப்பிட முடியாத முயற்சியாலும், கண் துஞ்சாப் பணியாலும் கூர்த்த சிந்தனையாலும், அறிவார்ந்த திட்டங்களாலும், அக்கல்வி நிறுவ னங்களை மேலும் மேலும் (எத்தனை மேலும் என்றும் போட்டுக் கொள்ளலாம்) வளர்த்தார் - வளர்த்துக் கொண்டும் உள்ளார்; ஒரு பல்கலைக் கழகம் என்கிற அளவுக்குப் பெரியார் விதைத்த அந்தக் கல்வி வித்தினை வளர்த்து ஆளாக்கி விட்டாரே!<br /><br />அழுக்காறு அற்ற நெஞ்சங்கள் வாழ்த்துகின்றன - பூரிக்கின்றன - பாராட்டுகின்றன. பெரியார் கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் உலகெங்கும் பரவிப் பணியாற்றுகின்றனர். இந்திய இராணுவத் துறையிலும்கூட முத்திரை பதிக்கின்றனர் என்று எண்ணும்போது நம் தலைவர் அடையும் மகிழ்ச்சிக்கோர் எல்லையில்லை.<br /><br />உலகின் பல்வேறு பல்கலைக் கழகங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, உலகளாவிய அளவில் தந்தை பெரியார் பெயரைக் கொண்டு சென்ற அந்தப் பெற்றிதான் என்னே!<br /><br />பெரியார் கல்வி நிறுவனங்கள் ஆண்டுதோறும் நிகழ்த்திக் காட்டும் சாதனைகள் அனைவரின் கவனத்தையும், கருத்துகளையும் ஈர்த்துள்ளன.<br /><br />எட்டு ஆண்டுகளுக்கு முன் 217 மாணவர்களுடன் பெரியார் அறக்கட்டளையால் கையகப்படுத்தப்பட்ட ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் குலேசன் பள்ளியில், இப்பொழுது படிக்கும் இருபால் மாணவர்களின் எண்ணிக்கை எத்தனைத் தெரியுமா 2500; 217 எங்கே 2500 எங்கே!<br /><br />பத்து மடங்கு அதிகமாக மிகவும் பின் தங்கிய ஒரு பகுதியில் ஒரு பள்ளியில் மாணவர்கள் படையெடுக் கிறார்கள் என்றால் அதன் தன்மையின் ஆழத்தை, அதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் பரப் பினை எண்ணினால் மிகவும் பிரமிப்பாகவே உள்ளது.<br /><br />நேற்று வெளியான பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநிலத்திலேயே அதிக மதிப்பெண்கள் பெற்றதில் மூன்றாவது இடத்துக்கு வந்த மாணவன் (கி. நவீன்ராஜ் 497/500). ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவன் என்று நினைக்கிறபோது, அந்த மாணவனின் பெற்றோர்களைவிட நமது தலைவரும், பள்ளி ஆசிரியர்களும், கழகத்தவர்களும் பூரிப்படைகின்றனர் - பெருமிதம் கொள்கின்றனர்.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-88005801225983661012014-05-25T06:33:46.584+05:302014-05-25T06:33:46.584+05:30
ஆட்டுக் கல்லான அறிவு!
குமாரபாளையம், மே 24- நாமக...<br />ஆட்டுக் கல்லான அறிவு!<br /><br /><br />குமாரபாளையம், மே 24- நாமக்கல் மாவட் டம் குமாரபாளையம் பகுதியில் கொச்சி பெங் களூர் தேசிய நெடுஞ் சாலையில் பல இடங் களில் ஆட்டுக்கல், அம் மிக்கல், குழவி கல் போன் றவை நேற்றுமுன்தினம் திடீ ரென கொட்டப்பட்டிருந் தன. இந்த கற்கள் எப்படி நெடுஞ்சாலைக்கு வந்தது என்பது பலர் புரியாமல் தவித்தனர். மழை வேண்டி மக்கள் இப்படி செய்தது தெரிய வந்தது. குமார பாளையம் கிராமங்களில் மழை பெய்யாமல் கடும் வறட்சி நிலவும் போது, கல் கொடும்பாவி கொட்டுதல் என்ற வினோத வழிபாடு மக்கள் மத்தியில் உள்ளதாம். மழை பெய்யாத கிராமங் களை சேர்ந்தவர்கள், தங்கள் பகுதிகளில் பயன் படாத கல் உரல், ஆட் டுக்கல், அம்மி குழவி போன்றவற்றை வண்டி யில் ஏற்றிச் சென்று அருகில் உள்ள கிராமங்களில் இர வோடு, இரவாக கொட் டுவார்கள். இதனால் தங்கள் கிராமங்களில் உள்ள பீடைகள் நீங்கி, மழை கொட்டும் என நம்புகின் றனராம் குமார பாளையம் தேசிய நெடுஞ் சாலையில் நேற்று முன் தினம் (20ஆம் தேதி) இரவு 3 இடங்களில் இது போல் கல் கொடும் பாவி கொட் டப்பட்டுள்ளது. இதற் கிடையில், கற்கள் கொட் டப்பட்ட பகுதியில் மழை பொய்த்து போகுமோ என்ற அச்சம் அப்பகுதி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/80861.html#ixzz32gWrUvD7<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-48934256167714801692014-05-25T06:30:13.684+05:302014-05-25T06:30:13.684+05:30
உச்சநீதிமன்றத்திற்கு மேலும் 4 புதிய நீதிபதிகளா? அ...<br />உச்சநீதிமன்றத்திற்கு மேலும் 4 புதிய நீதிபதிகளா? அனைவரும் உயர் ஜாதியினர்தானா?<br /><br />உச்சநீதிமன்றத்திற்கு மேலும் 4 புதிய நீதிபதிகளா?<br /><br />அனைவரும் உயர் ஜாதியினர்தானா?<br /><br />சென்னை உயர்நீதிமன்றத்தில் வரப் போகும் தலைமை நீதிபதியும் ஒரு பார்ப்பனர்தானா?<br /><br />சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக உள்ளவர் வட மாநிலத்திலிருந்து வந்துள்ள ஒரு பார்ப்பனர்.<br /><br />இவர் வேறு மாநிலத்திற்குத் தலைமை நீதிபதியாகி விரைவில் சென்று விடுவார் என்ற நிலையில், மீண்டும் நிரந்தரமான தலைமை நீதிபதியாக, பஞ்சாப் அரியானா மாநிலத்தில் தலைமை நீதிபதியாக உள்ள ஒருவர் இவரும் உயர் ஜாதி பார்ப்பனர் (கவுல் என்றாலே காஷ்மீர மூலதாரமான உயர் பார்ப்பன வகுப்பு ஆகும்) அவர் இங்கே வந்து, சில மாதங்களிலேயே உச்சநீதிமன்றத்திற்குப் பதவி உயர்வு பெற்று சென்று விடக் கூடும்.<br /><br />60 மொத்த நீதிபதிகளைக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது ஓய்வு பெற்றவர்கள் போக 43 நீதிபதிகள்தான் உள்ளனர். 17-க்கும் மேற்பட்ட பதவிகள் காலி; வழக்குகளும் அதன் காரணமாக ஏராளம் தேக்கமாகி நிற்கின்றன!<br /><br />உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை மொத்தம் 31.<br /><br />இதற்கு தற்போது காலி இடங்களில் புதிதாக 4 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.<br /><br />இதில் மூன்று பேர் பார்ப்பன உயர் ஜாதிக்காரர்கள், இரண்டு பேர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளாகி, உச்சநீதிமன்றத்திற்குப் பதவி உயர்வு பெற்று வரவிருக் கின்றவர்கள்; மற்றும் இரு சட்ட நிபுணர்கள் என்பதால் - நீதிபதியாகாமலேயே நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட இருப்பவர் இருவர். ஒருவர் பார்சி வழக்குரைஞர்; மற்றொருவர் தமிழ்நாட்டைச் சார்ந்த பார்ப்பன வழக்குரைஞர் நீண்ட காலம் டில்லியிலேயே அரசு வழக்குரைஞராகவே இருந்தவர்.<br /><br />உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக கர்நாடகத்தைச் சார்ந்த ஜஸ்டீஸ் வெங்கடாச்சலய்யா என்ற பார்ப்பனர், இவருக்கு மூத்த வழக்குரைஞர் தகுதியை, விதிகளுக்கு விலக்கு அளித்தே இவரை குறுக்கு வழியில் உயர்த்தியது தான் இன்று இவர் இப்பதவி உயர்வுக்கும் - உச்சநீதிமன்ற நீதிபதியாக பிரேரணை செய்வதற்கும் அடிப்படைக் காரணமாகும்.<br /><br />உச்சநீதிமன்றத்தில் ஜனநாயக நாடான இந்தியாவின் மக்கள் தொகையில் 80 விழுக்காட்டிற்கு மேல் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களான நீதிபதிகள் தகுதியுள்ள பலர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், மற்ற நீதிபதி களாகவும், அதேபோல மூத்த நீதிபதிகளாக பல தாழ்த் தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த நீதிபதிகள் - தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரத்தில் இருந்தும் அவர்களில் ஒருவர்கூட உச்சநீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கப்படாதது, அரசியல் சட்டத்தின் சமூகநீதி உத்தரவாதத்திற்கு முற்றிலும் எதிரானது என்றும் வழக்குரைஞர்களிடையே குமுறல் உள்ளது. உச்சநீதிமன்ற வரலாற்றிலேயே மிகவும் காலந் தாழ்ந்து,<br /><br />தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து<br /><br />1. ஜஸ்டீஸ் வரதராஜன் (தமிழ்நாடு)<br />2. ஜஸ்டீஸ் இராமசாமி (ஆந்திரா)<br />3. ஜஸ்டீஸ் பாலகிருஷ்ணன் (கேரளா)<br /><br />வந்து ஓய்வு பெற்று விட்டனர்!<br /><br />இப்போது எவரும் இல்லை! அதேபோல் பிற்படுத்தப் பட்ட சமூகத்திலிருந்து<br /><br />1. ஜஸ்டீஸ் எஸ். இரத்தினவேல் பாண்டியன் (தமிழ்நாடு)<br />2. ஜஸ்டீஸ் ப. சதாசிவம் (தமிழ்நாடு)<br /><br />இவர்களும் ஓய்வு பெற்று விட்டனர். தற்போது எவரும் இல்லை! 31 இடங்களிலும் ஆண் களும் சரி, பெண்களும் சரி எல்லாம் முற்பட்ட ஜாதியினரே!<br /><br />மேலும், இப்போது நிரப்பப்படவிருக்கும் நான்கு நீதிபதிகளும்கூட உயர் வகுப்பினரே!<br /><br />இதுபற்றி புதிய மத்திய அரசு, சமூக நீதிக் கண்ணோட் டத்தில் ஆராய்ந்து நல்ல முடிவினை எடுப்பதும்; கொலி ஜியம் என்ற முறையை மாற்றுவதுபற்றி யோசிக்கவும் முன்வர வேண்டும் என்பதே பல வழக்குரைஞர்கள், முன்னாள் நீதியரசர்கள் பலரின் கருத்தாகும். விடியல் ஏற்படுமா நீதித் துறையில்?<br /><br />- நமது சிறப்பு செய்தியாளர்<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/80858.html#ixzz32gVwptGG<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-85042570828612118302014-05-25T06:26:37.626+05:302014-05-25T06:26:37.626+05:30
சூரிய ஒளிபட்டு மின்னிய சனிக்கோள் வளையங்கள்
சனிக...<br />சூரிய ஒளிபட்டு மின்னிய சனிக்கோள் வளையங்கள்<br /><br /><br />சனிக்கோளின் வளையங்களில் இதுவரை கண்ணுக்கு புலப்படாத பகுதி முதல் முதலாக சூரிய ஒளியை உள்வாங்கி பிரகாசித்தது. இந்தக் காட்சியை சனிக்கோளை ஆய்வு செய்ய அனுப்பிய கசினி விண்கலம் படமெடுத்து அனுப்பியுள்ளது. சனிக்கோளின் கடுமையான ஈர்ப்புவிசை மற்றும் அதன் வேகம் காரணமாக சனியின் நடுக்கோட் டுப்பகுதியில் பலலட்சம் கிலோமீட்டர் தூரம் வரை அழகிய வளையங்கள் உருவாகியுள்ளது. சுமார் 500 கோடி ஆண்டுகளாக சனிக்கோளை சுற்றி வரும் வளையங்களை பல பகுதிகளாக பிரித்து அதற்கு ஆங்கிய எழுத்து ஏ முதல் எப் வரை பெயர் சூட்டி யுள்ளனர். இதில் சுமார் 12 லட்சம் கிலோ மீட்டர் வரையிலான வளையப்பகுதி இருட்டிலேயே உள்ளது. இந்தப் பகுதிக்கு பி என்று பெயர் சூட்டி அழைத்துவந்தனர். அடர்த்தியான தூசுகள் சூழ்ந்துள்ளதால் இப்பகுதி ஒளியிழந்து காணப்படுகிறது. சூரியனைச் சுற்றி வரும் சனிக்கோள் 43 டிகிரி கோணத்தில் தற்போது சூரியனை நெருங்கிச் சுற்றுகிறது, இதன் காரணமாக பி வளையம் முழுவதிலும் நன்றாக சூரிய ஒளிபட்டு அந்த வளையப்பகுதி மிகவும் பிரகாசமாகத்தோற்றம் அளிக் கிறது, இதனை கசினி விண்கலம் படம்பிடித்து அனுப்பியுள்ளது.<br /><br />கசினி அனுப்பிய படம் குறித்து நாசா மற்றும் அய்ரோப்பிய விண் வெளி ஆய்வு மய்யம் மற்றும் இத்தாலி விண்வெளி கழகம் மூன்றும் இணைந்து ஆய்வு செய்துவருகிறது. இதுவரை தொலைநோக்கி மூல மாகவும் விண்கலன்களின் புகைப்படக் கருவிக்கும் புலனாகாத பி வளையம் தற்போது ஆய்விற்கு உகந்த சூழ் நிலையில் சூரியஒளியை உள்வாங்கி எதிரொளித்துக்கொண்டுள்ளது. இதை வைத்து வியாழனுக்கும், சனிக்கும் இடையில் சுற்றும் விண்கற்களின் பாதையில் ஏற்படும் மாற்றம் குறித்த விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாசாவில் சூரியக்குடும்பம் குறித்து ஆய்வு செய்யும் அறிவியல் ஆய்வாளர்கள் கூறினார்கள்<br /><br />Read more: http://viduthalai.in/page7/80915.html#ixzz32gV41SVl<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-20635267357046345292014-05-25T06:26:03.954+05:302014-05-25T06:26:03.954+05:30
தேவை பெரியார் இயக்கம்
புதுச்சேரி மாநில அமைப்பு ...<br />தேவை பெரியார் இயக்கம்<br /><br /><br />புதுச்சேரி மாநில அமைப்பு ரீதியான திராவிடர் கழகம் 3.5.2014இல் தங்களால் அமைக்கப்பட்டு, புதுவையிலே ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளீர்கள் என்ற சேதி, இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்பது போல தித்திப்பாக இனிக்கிறது.<br /><br />இன்றைக்கு உலக நாடுகள் பலவற் றிலே இனவெறி, மதவெறி, நிறவெறி, பதவி வெறி, தீவிரவாதம் போன்ற தீய சக்திகளால் - உலக மனித சமுதாயம் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றன. மனிதாபிமானமற்ற இலங்கை ராஜபக்சே அரசு இன்று வரை தமிழர்களை அழிப்பதையே, குறியாகக் கொண்டு, தமிழர்களை கொன்று குவித்து வருகின்றது - இது ராஜபக்சே அரசின் இன வெறி. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றார்கள் யூதர்கள் - இது மதவெறி.<br /><br />இந்தியாவை மதச் சார்பற்ற நாடு என்று சொன்னதால், காந்தியை 1948-லே சுட்டுக் கொன்றது - பார்ப்பன - ஆரிய மதவெறி.<br /><br />ஒடிசாவில் பழங்குடி மக்களின் தொழு நோயைப் போக்கும் தொண்டறத்தைச் செய்து கொண்டிருந்த, ஆஸ்திரேலியா டாக்டர் கிரகாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது இரு குழந்தைகளையும் - 1999-லே ஜீப்பில் வைத்துக் கொளுத்திக் கொன் றார்களே இந்துத்துவா பஜ்ரங்தள் கும்பல் - இது இந்து மதவெறி.<br /><br />இன்றைக்கு இந்தியாவில் 93 கோடி மக்கள் சேரிப் பகுதிகளில் ஒதுக்குப்புற மாக தள்ளப்பட்டு, வாழ்ந்து கொண்டிருக் கிறார்களே. இது இந்து மதத்தின் சாதி வெறி. நெல்சன் மண்டேலாவும் அவரது தோழர்களும் கருப்பினத்தைச் சேர்ந்த வர்கள் என்பதால் வெளிச்சத்தைப் பார்க்கக் கூடாது - இருட்டிய பிறகுதான் வெளியே வர வேண்டும் என்ற நீதிபதியின் உத்தர வின்படி 5 ஆண்டுகள் இந்தக் கொடு மையை அனுபவித்தனர். இது தென் ஆப் பிரிக்க வெள்ளையர் அரசாங்கத்தின் நிற வெறி. எங்கள் மாநிலத்தின் விவசாயிகள் காரில் செல்கிறார்கள் என்று மோடி ஒரு முறை சொன்னார். ஆனால் 20.03.2012 கால கட்டத்தில் குஜராத்தில் 641 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். (ஜூனியர் விகடன் 13.4.2014) இப்படி மோடி உண்மைக்கு மாறாகக் கூற வேண்டிய தன் அவசியமென்ன? இதுதான் பதவி வெறி!<br /><br />சீனாவில் உள்ள சின்ஜியாங் மாகா ணத்தை தனியாகப் பிரித்து தந்து இஸ் லாமிய நாடாக அறிவிக்க வேண்டும் என போராடி வரும் வீகர் எனப்படும் தீவிர வாதக் குழுவினர் - யுன்னான் மாகாணத்தின் குன்மிங் ரயில் நிலையத்துக்குள் கத்தியுடன் நுழைந்து கண்ணில் தென்பட்டவர்களை யெல்லாம் வெட்டிச் சாய்த்தனர். இந்த கொலைவெறி தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 28 பேர் பலியாகினர். இது ஒரு பயங்கரவாத தாக்குதலாகும் (2.3.2014) இது தீவிரவாதம்.<br /><br />இப்படி காலங்காலமாக உயிர்ச் சேதங்களும், பொருளாதார அழிவுகளும், பெண்கள் பாலியல் வன்கொடுமை களுக்கு ஆளாக்கப்படுவதும் நடை பெற்றுக் கொண்டுதானிருக்கின்றன. இவை களையெல்லாம் மாற்றியமைக்கின்ற வழிமுறைகள் பற்றி எத்தனை நாட்டுத் தலைவர்கள் சிந்தித்து இருக்கின்றார்கள்? சிந்தித்து செயல்பட்டு இருக்கின்றார்கள் என்பதைப்பற்றி நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.<br /><br />பட்டம், பதவிக்காகவும், கோடி கோடி யாகக் கொள்ளையடித்து சொத்துக்களை குவிப்பதற்காகவும், தாங்கள் பெற்ற பதவி களைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் தங்களுக்குச் சாதகமான - தீய வழி முறையாக இருந்தாலும் - கிஞ்சிற்றும் கவலை கொள்ளாமல் - அதன்படி நடக் கவே சித்தமாக உள்ளார்கள். அது முதல்வராக இருந்தாலும் சரி, அல்லது அமைச்சர்களாக இருந்தாலும் சரி.<br /><br />பணம் பதுக்கி வைப்பதற்கென்றே ஒரு சுவிஸ் வங்கி வேறு. இப்படி பல கோணங்களிலே ஏராளமான களைகள் உலகளவிலே முளைத்து துளிர் விட்டுக் கொண்டிருக்கின்றன. இவைகளை யெல்லாம் வெட்டி, கெல்லி எறிகின்ற ஒரே களைவெட்டி - பெரியாரிசம் தான்.<br /><br />இன்றைய உலகிற்கு மிகவும் தேவை மனிதநேயம். அந்த மனிதநேயத்தைப் பரப்புரை செய்கின்ற ஒரே இயக்கம் திராவிடர் கழகமும் அதன் தலைவர் கி. வீரமணியும் ஆவார்கள். உலகெங்கும் திராவிட இயக்கத்தின் கட்டமைப்பை வலுப்படுத்துவோம். புதியதோர் உலகம் செய்வோம். அதில் மாந்தர்களை மட்டுமே காண்போம்.<br />கா.நா. பாலு, எடப்பாடி<br /><br />Read more: http://viduthalai.in/page7/80914.html#ixzz32gUurGWC<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-90330601443024167482014-05-25T06:24:33.375+05:302014-05-25T06:24:33.375+05:30
வெள்ளைப் பூண்டு
பூண்டு செடியின் வேர்தான் உண...<br />வெள்ளைப் பூண்டு<br /><br /><br /> பூண்டு செடியின் வேர்தான் உணவில் சேர்க்கப்படும் வெள்ளைப் பூண்டு. ஆலியேசியே தாவர குடும்பத்தைச் சேர்ந்த வெள்ளைப் பூண்டின் அறிவியல் பெயர் ஆலிவம் சட்டைவம்.<br /> வெள்ளைப் பூண்டில் மரபுரீதியாகவே நிறைய தாதுக்கள், வைட்ட மின்கள், நோய் எதிர்ப்புப்பொருட்கள் மற்றும் சத்துப் பொருள்கள் உள்ளன. பூண்டு 100 கிராமில் 5346 மைக்ரான் அளவு நோய் எதிர்ப்புப்பொருட்கள் உள்ளன.<br /> தயோ சல்பினேட் எனும் உயிர்ப்பொருள் பூண்டு வகையில் உள்ளது. இது பிற உயிர் மூலக்கூறுகளுடன் இணைந்து ஆலிசின் எனப்படும் நொதி செயற்பாட்டு காரணியை உருவாக்கும்.<br /> கெட்ட கொழுப்பான கொலஸ்டிரால் உற்பத்தியை தடுக்கும் ஆற்றல் ஆலிசின் மூலக்கூறுகளுக்கு இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரி விக்கின்றன.<br /> ரத்தத் தட்டுக்கள் உறைந்துவிடாமல் பாதுகாப்பதிலும், ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைப்பதிலும் ஆலிசின் உதவுவதாக தெரியவந்துள்ளது. ரத்தக்கட்டிகள் ஏற்படாமல் பாதுகாப்பதிலும், உருவான ரத்தக்கட்டிகளை நீக்குவதிலும் பங்கெடுக்கிறது. இச்செயலால் கரோனரி தமனி பாதுகாக்கப்படுகிறது. மேலும் இதய பாதிப்புகள், முடக்குவாதம், பி.வி.டி. போன்ற வியாதிகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது..<br /><br /> இரப்பைப் புற்றுநோய் பாதிப்பை குறைக்கும் ஆற்றல் பூண்டிற்கு உண்டு என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.<br /> பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை போன்ற நோய்த்தொற்று நுண் கிருமிகளை ஒடுக்கும் ஆற்றலுடைய நோய் எதிர்ப்புப்பொருட்கள் வெள்ளைப் பூண்டில் உள்ளது. ஆலிசின் சிறந்த நோய் எதிர்ப்புப் பொருளாகும்<br /><br /><br />Read more: http://viduthalai.in/page6/80912.html#ixzz32gUXFMwz<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-90327416621675063242014-05-25T06:23:44.446+05:302014-05-25T06:23:44.446+05:30
வாழ்க அண்ணா நாமம்!
உடல் நலம் சிறக்க இந்து மதம் ...<br />வாழ்க அண்ணா நாமம்!<br /><br /><br />உடல் நலம் சிறக்க இந்து மதம் கூறும் வழிகள்<br />யாகம் செய்வதன் பலன்<br />பஞ்ச பூதங்களை வென்றவர் ஸ்ரீ ஆஞ்சநேயர்<br />கணபதியின் திருநாமங்கள்<br />மறுபிறப்பு எடுக்க வேண்டிய அவசியம்<br />அரச மரத்தடி விநாயகர் அதிக சக்தி வாய்ந்தவரா?<br /><br />இவை எல்லாம் ஆர்.எஸ்.எஸின் ஏடான விஜயபாரதத்தில் வெளிவந்த தலைப்புகள் அல்ல - செய்திகளும் அல்ல ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள ராமகிருஷ்ண விஜயத்தில் வெளி வந்தவையும் அல்ல! பின் வேறு என்னவாம்! அண்ணா பெயரைக் கட்சியிலும் அண்ணா உருவத்தை கொடியிலும் பொறித்து வைத்துள்ள திராவிட என்ற இனக் கலாச்சாரப் பெயரையும் இணைத்துக் கொள்ளும் அண்ணா திமுகவின் அதிகாரப் பூர்வ ஏடான ஞிக்ஷீ. நமது எம்.ஜி.ஆரில் வெளி வந்தவைதான் (19.5.2014) இவை! வாழ்க அண்ணா நாமம்!<br /><br />Read more: http://viduthalai.in/page6/80911.html#ixzz32gUKuiNO<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-51386132545054145412014-05-25T06:20:45.132+05:302014-05-25T06:20:45.132+05:30
பாகிஸ்தானின் தீப்பொறி
பஞ்சாயத்து கூடியது. அவள் வ...<br />பாகிஸ்தானின் தீப்பொறி<br /><br />பஞ்சாயத்து கூடியது. அவள் வீட்டுக்கு எதிரே 400 பேர் கூடி குசுகுசுவென்று பேசிக் கொண்டேயிருந்தார்கள். அவள் வீட்டுக்கும் விஷயம் அரசல்புரசலாக தெரிந்துதான் இருந்தது. காரணம், சிம்பிள். அவளுடைய சகோதரன் எதிர் கும்பலை சேர்ந்த ஒரு பெண்ணோடு ஓடி விட்டான். அதற்கு என்ன செய்யலாம் என்று முடிவெடுக்கதான் பஞ்சாயத்து கூடியிருந்தது.<br /><br />அவளும் அப்பாவும் சமாதானம் பேச கிளம்பினார்கள். மாலை ஆரம்பித் திருந்தது. கூட்டமும் குறைந்திருந்தது. அப்பா பேச ஆரம்பித்தார். அவர் பேச்சினை சட்டை செய்யலாமல் அந்த நாலு பேரும் அவளை அவர் கண் முன்னாலேயே தூக்கி, குடிசைக்குள் நுழைந்தார்கள்.<br /><br />அப்பாவின் கதறலும் அவளின் கூக்குரலும் ஊர் முழக்க எதிரொலித்தது. கந்தலான துணி போல வெளியே வந்தாள். அவருடைய சல்வார் கமீஸ் கிழிந்திருந்தது. ஊரின் மானத்தை காத்து விட்டோம் என்று அந்த நான்கு ஓநாய்களும் காவலுக்கு நின்றிருந்த மற்றவர்களும் எக்காளமிட் டனர். வெளியே வந்த அவளை அந்த கூட்டம் நிர்வாணப்படுத்தியது. அப் பாவின் முன் நிர்வாணமாகவும், ரத்தம் கசியவும் நின்றாள். தன்னிடமிருந்த ஒரு துண்டினை அவள் உடம்பில் போர்த்தி கண்ணீர் விடுவதை தவிர எதையும் செய்ய இயலாத அவளுடைய அப்பா கைத் தாங்கலாக அழைத்துச் சென்றார். உடலும் உள்ளமும் அனலாய் கொதித்தது. வீட்டின் கதவை மூடுமுன் அவள் திரும்பிப் பார்த்தாள். அந்தப் பார்வை பாகிஸ்தானை உலுக்கியது. அவள் முக்தாரன்பீவி அல்லது முக்தாரன் மாய், பாகிஸ்தானில் ஒரு சின்ன கிராமமான மீராவலாவில் வசித்தவர்.<br /><br />முக்தாரன் சும்மா விடவில்லை. ஊடகங்களுக்கு போனார். பெண்ணு ரிமைகளை பேச ஆரம்பித்தார். பாகிஸ் தான் ஜெனரல் முஷ்ரப்பின் அதிகாரத்தின் கீழ் இருந்தது. அமெரிக்க, பிரிட்டிஷ் செய்தியாளர்களுக்கு மூக்கு வேர்த்து, மோப்பம் பிடிக்க ஆரம்பித்தார்கள். வெளிநாட்டு ஊடகங்கள் பரபரப் பானது. வெளிநாடுகளிலிருந்து பாகிஸ்தானில் பெண்களின் நிலைப்பற்றி பேச அழைப்பு வந்தது.<br /><br />முஷ்ரப்புக்கோ தலைவலி, பாகிஸ் தானில் பெண்களின் நிலை இதுதான் என்று மேற்கு நாடுகள் நினைத்தால் தன்னை காலி செய்து விடுவார்கள் என்று பயந்தார். இவரின் பாஸ்போர்ட்டினை முடக்கினார். முக்தாரன் அதையும் தைரியமாக எதிர்கொண்டார். வெளிநாடுகளில் வசித்த பாகிஸ்தானியர்கள் பொங்கி எழுந்தார்கள். பாகிஸ்தானின் ஊடகங்கள், பொது மக்கள், அரசு நீதிபதிகள், வழக்குரைஞர்கள் என பெருங்கூட்டமே முக்தாரனுக்கு பின்னால் எழுந்து நின்றது.<br /><br />ஆனாலும், பாகிஸ்தான் நீதிமன்றங்கள் அரசியல் பேசின. வன்புணர்வுக்கு துணை நின்ற நான்கு பேர்மீது போதிய சாட்சியங்கள் இல்லை என்று விடுதலை செய்தன. ஆனால், ஒரு வன்புணர்வு ஆயுத மாக மாறி பாகிஸ்தானிய மனசாட்சியை நெறிக்க ஆரம்பித்திருந்தது.<br /><br />முக்தாரன் மாய் பாகிஸ்தானிய பெண் குரலுக்கான முகமாக மாறியிருந்தார். 2005-இல் பாத்திமா ஜின்னா தங்க விருது கிடைத்தது. கிளாமர் வார இதழ் அதே வருடம் வுமன் ஆஃப் தி இயர் விருதினை வழங்கி கவுரவப்படுத்தியது.<br /><br />பிரிட்டிஷ் செய்தியாளர் இவரோடு பேசி எழுதிய நினைவலைகள் தேஷ்னூரி ஆங்கிலத்தில் ‘Oh! Edition’ என்று வெளியாகி உலகமெங்கும் அதிர்வினை கிளப்பியது. 2006-இல் அய்.நா.வின் பேசினார். 2006-இல் பாகிஸ்தானின் கீழ் சபை வன்புணர்வுக்கான சட்டங்களை மாற்ற முன்மொழிந்தது. 2010-இல் கனடிய பல்கலைக் கழகம் கவுரவ முனை வர் விருது கொடுத்தது.<br /><br />வெந்து தணிய காட்டுக்கு ஒரே ஒரு தீப்பொறி போதும். பாகிஸ்தானில் முக்தாரன் மாய் அந்த தீப்பொறி. - நரேன்<br /><br />(தினகரன் வசந்த மலர் 18.5.2014<br /><br />Read more: http://viduthalai.in/page5/80909.html#ixzz32gTZIYcv<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-40115197053178863252014-05-25T06:19:08.818+05:302014-05-25T06:19:08.818+05:30
மே மாத நினைவுகள்!
ஓடுமாற்றின்
மணல்மேலே கல்லையி...<br />மே மாத நினைவுகள்!<br /><br /><br /><br />ஓடுமாற்றின்<br />மணல்மேலே கல்லையிட்டு - அது<br />கணத்தோடு இறங்க<br />புணல் மேலே பொறியியலின் பாடம் சொன்ன<br />நம்<br />பாட்டனும் - சர் ஆர்தர்<br />காட்டனும் காட்டிய வழியில்<br />காவிரியின் தீரம்<br />சுமக்கிறது ஈரம்!<br />உண்ணும் உணவெல்லாம்<br />எண்ணும் உணர்வெல்லாம்<br />தந்த மகன் வாழ்க!<br /><br />- சர் ஆர்தர் காட்டனு பிறந்த நாள் - 15/05<br /><br />சிலர் தமிழின்<br />உண்மையையும்<br />தொன்மையையும்<br />தோண்டிப் புதைத்தபோது - மதத்தையும்<br />தாண்டி, பதைத்து போய் ஒருவன்<br />வெளிக்கொணர்ந்தான் - நாம்<br />களிக்கின்ற கன்னித்தமிழ் அவனின் கொடை<br />கால்டுவெல் என்னும் கனவான் வாழ்க!<br /><br />- ராபர்ட் கால்டுவெல் பிறந்த நாள் - 07/05<br /><br /><br />உழைத்து<br />வேர்வையில் நனைந்த மக்களின்<br />பார்வையில் ஒரு பகலவன்!<br />கீழ்த்தட்டு மக்களுக்கு ஏங்கியவன் - அதனாலந்த<br />மேல்தட்டு வசவுகளைத் தாங்கியவன்!<br />மார்க்ஸ் எனும் மேதை வாழ்க!<br /><br />-காரல்மார்க்ஸ் பிறந்த நாள் 05/05<br /><br />தன்<br />விழுதுகளுக்காக - இன்னும்<br />அழுது சுமக்கும் ஆலமரங்கள்!<br />நமக்காக<br />தன்பால் அன்பிலாவிடினும்<br />தன்பால் குடித்தவன்<br />உயர நினைக்கும்<br />உயிராம் அன்னையர் வாழ்க!<br /><br />- அன்னையர் தினம் 11/05<br /><br />எத்தனை காலம் பொறுத்தும் - அந்த எத்தனை எதுவும் செய்ய முடியாமல்<br />நாமிருந்தோம்<br />பென்னியெனும்<br />கண்ணிய வானின் கனவாக - நம்<br />பாசன உயர்வுக்காக - அரசியல்<br />சாசன அமர்வு<br />அளித்தது தீர்ப்பு அல்ல<br />தமிழர்க்கான உயிர்ப்பு!<br />அந்த<br />உயிர்ப்பை மீட்டுத் தந்தோரை -நம்<br />உயிர் பை நிறைந்து வாழ்த்துவோம்! வாழ்க!<br /><br />பொறியாளர், தி.த. சண்முகவடிவேல், தஞ்சாவூர்<br /><br />Read more: http://viduthalai.in/page4/80906.html#ixzz32gTAbfGN<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-37227232550820877602014-05-25T06:18:12.278+05:302014-05-25T06:18:12.278+05:30
வாழ்க பெரியார் சாக்ரடீஸ்!
பெரியார் தொண்டர் களுக...<br />வாழ்க பெரியார் சாக்ரடீஸ்!<br /><br /><br />பெரியார் தொண்டர் களுக்கு மகிழ்ச்சியைத் தருவதில் இரண்டு விஷ யங்கள் முன்னணியில் நிற்கும். ஒன்று அய்யாவின் தத்துவங்களையும் சிறப்பு களையும் நாம் பேசும் பொழுது, இரண்டாவது, தந்தை பெரியாரை மற்றவர்கள் போற்றிப் புகழும் பொழுது அடைகின்ற இன்பம்.<br /><br />அந்த வகையிலே, 2008ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு புத்தகத்தைப் புரட்டும் பொழுது- முன்னுரைப் பக்கங்களிலேயே சமூக மாற்றத்தில் தமிழ்நாடு பெற்றிருக்கும் அபரிமிதமான வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக விளங்கியவர் தந்தை பெரியார்.<br /><br />பண்புகளின் பல்கலைக் கழகமாக விளங்கும் பெரியாரின் வாழ்வு இந்திய அளவில் சிறந்த தலைவர்களாகக் கருதப்படும் எவரையும் விஞ்சி நிற்கக் கூடியது என்பன போன்ற வரிகளைப் படிக்கப் படிக்க நமக்குள் இன்பம் ஊற்றெடுக்கத் தொடங்கியது.<br />ஆனால், அடுத்த பக்கத்தில்<br /><br />கள ஆய்வில் தங்களது நேரங்களைத் தந்து உதவிய நன்றிக்குரிய பெருமக்கள் என்ற பெயர்களின் வரிசையில் இறுதியாக இருந்த பெரியார் சாக்ரடீஸ் என்ற எழுத்துகளைப் படித்தவுடன் மனிதன் இன்பம் சட்டென ஆவியாகி பெருமூச்சு மட்டுமே மிஞ்சியது.<br /><br />அதற்குமேல் படிப்பதற்கு மனம் நாட்டம் கொள்ளவில்லை என்றாலும், அனிச்சைச் செயலாக அடுத்த பக்கத்தைப் புரட்டினேன், முதல்கட்டுரையின் தொடக்கத்திலேயே மேற்கோள் காட்டப்பட்டிருந்த வரிகள் என்ன தெரியுமா?<br /><br />ஒவ்வொரு மனிதனும் செத்துப் போவது உண்மைதான் என்றாலும், அவனோடு அவனுடைய முயற்சிகளும் அவன் துவக்கிய காரியங்களும் செத்துப்போய் விடுவதில்லை பெரியார்<br /><br />என்றிருந்த வரிகளைப் படித்தபொழுது மெய் சிலிர்த்துப் போனேன். எவ்வளவு கண்ணீர் சொரிந்தாலும் ஆறாத மனப் புண்ணுக்கு ஆளான - அருமை பெரியார் சாக்ரடீசை இழந்து வாடும் அவரது குடும்பத் தினர்க்கும், கழகத்தவர்க்கும் தந்தையின் இந்த வரிகள் துளிம்பாது மாறட்டும்; வாழ்க பெரியார் சாக்ரடீசு!<br /><br />- பா. சடகோபன், மதுரை - 14<br /><br />Read more: http://viduthalai.in/page3/80905.html#ixzz32gSvlBLh<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com