tag:blogger.com,1999:blog-1474608369333206681.post1262303561886841679..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: கிருஷ்ணனுக்கு ஜெயந்தி கொண்டாடலாமா? கோபப்படாதீர் - சிந்திப்பீர்!தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-5892378649772569852013-09-01T07:15:07.246+05:302013-09-01T07:15:07.246+05:30
இன்னும் பிராமணியமா?
திருவாங்கூரைச் சேர்ந்த கொட்ட...<br />இன்னும் பிராமணியமா?<br /><br />திருவாங்கூரைச் சேர்ந்த கொட்டாரக்கரையில் காலஞ் சென்ற ஸதாநந்த சுவாமிகள் கண்ட ஆசிரமமொன் றுள்ளது. அதில் தற்பொழுது சுவாமி ஆத்மாநந்தபாரதி அவர்கள் தலைமை வகித்து வருகிறார்கள். அன்னார் இப்பொழுது ஒரு குருகுலங் கண்டிருக்கிறார்கள். அதில் இப்பொழுது தாழ்த்தப்பட்டவர்கள் சேர்க்கப்பட வில்லை.<br /><br />இதைப்பற்றி, சுவாமிகள் குருகுல நிதி திரட்ட நாகர்கோவில் வந்தபொழுது ஸ்ரீமான் டாக்டர் ஆ.நு. நாயுடு அவர்கள் பேட்டி கண்டு பேசினார்கள். அதற்குச் சுவாமிகள் பிறப்பினாலேயே பிராமணர்கள் உயர்ந்த வர்களென்றும், ஏனையோர் ஸம்ஸ்காரத் தினாலேயே உயரவேண்டு மென்றும் கூறி சேரமாதேவிக் குருகுலம் நாசமாவதற்குக் காரணம் தாழ்த்தப் பட்டவர்களைச் சேர்த்ததினாலேயே என்றுங்கூறினார்கள். அதற்கு டாக்டர் அவர்கள் தாழ்த்தப்பட்ட இந்துக்களை ஏனைய மதத்தவர் வலிந்து இழுக்கும் போது இந்து மதத்தவரான நாம் அகற்றுவது அழகாகுமாவென்று கேட்டார்கள்.<br /><br />அதற்குச் சுவாமி அவர்கள் ஸம்ஸகாரமடைந்தால் யாவரையும் எடுத்துக்கொள்ளப்படுமென்றும் அக்காலம் தனக்குத் தெரியுமென்றும், அதற்கு ஆயிரம் ஆண்டுகள் ஆயினும் பரவாயில்லை யென்றும் கூறினார்கள். இதைக் கேட்டவுடன் மனிதனை மனிதனுக்கு அடிமையாக்கும் உங்கள் இந்து மதம் அழிந்து ஒழிகவென்று கூறி வெளிவந்தார்கள். இதைப்பற்றி டாக்டர் அவர்கள் சமுதாயத் தலைவர்களில் ஒருவரான ஸ்ரீமான் மன்னத்துபத்மனாப பிள்ளை அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதிக் கேட்டார்கள்.<br /><br />அதற்கு பிள்ளையவர்கள் சுவாமிகளின் வைதிகப் பார்ப்பனியம் தனக்குப் பிடிக்கவில்லை யென்றும் இதை முன்னிட்டுத்தான் இதற்கு முன் தான் ஒரு அபிப் பிராயமும் கொடுத்த தென்றுங்கூறி பதிலிறுத்தனர். ஜாதி பேதமும், தீண்டாமையும், நீங்கவேண்டு மென்று மும்முரமாக வேலைநடந்து வருமிவ் வேளையில் இந்துமதம் இத்தீண்டாமை யெனுங்கொடுமையால் ஆயிரக்கணக் கான மக்களை ஆண்டுதோறும் அன்னிய மதத்திற்குக் கொடுத்துவரு மிக்காலத்தில் பாலர்களுடைய மாசற்ற இருதயங்களில் பேதநிலையை உண்டாக்காதவாறு காப்பதற்கு மாறாக பேத நிலையை உண்டு பண்ணுவது கூடாது.<br /><br />சுவாமிகள் ஒரு பிராமணரல்லாதாராகவிருந்தும் பார்ப்பனியத்தை ஆதரிப்பது கண்டு ஆச்சரியப் படுகிறார்கள். சுவாமிகளும் சேர மாதேவி குரு குலத்தின் பேத நிலையால் வசூலான பணத்தைக் கொடுக்க மறுத்துவிட்ட செட்டி நாட்டுக்குச் செல் வாரென்று தெரிகிறது. மாணவர்களுக்கிடையே பேதநிலைமையுண்டு பண்ணாதிருந்தால் தான் அங்கே செல்வாக்கு கிடைக்குமேயொழிய அல்லதில்லை.<br /><br />தன் குருகுலம் நல்ல நிலையையடைய வேண்டு மானால் தன் கொள்கையை அடியோடு விட்டு விடவேண்டும். இனியாவது சுவாமிகள் தங்கள் கொள்கையை மாற்றி விடுவார்களென்று நம்புகிறேன்.<br /><br />- குடிஅரசு - கட்டுரை - 30.01.1927<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-18279038688561410602013-09-01T07:14:19.215+05:302013-09-01T07:14:19.215+05:30
நன்றி கெட்ட தன்மை
சென்னையில் வர்த்தகர்கள் சங்கம...<br />நன்றி கெட்ட தன்மை<br /><br /><br />சென்னையில் வர்த்தகர்கள் சங்கம், வியாபாரச் சங்கம் என்பதாக இரண்டொரு சங்கங்கள் இருந்து வந்தாலும் அவை முழுவதும் அய்ரோப்பியர்கள் ஆதிக்கமாகவே இருந்து வருவதோடு, இந்திய வியாபாரிகளுக்கு அவற்றில் போதிய செல்வாக்கும், சுதந்திரமும் இல்லை என்பதாகக் கண்டு காலஞ்சென்ற பெரியார் சர். பி. தியாகராய செட்டியார் அவர்கள் பெருமுயற்சி செய்து தென் இந்திய வர்த்தக சங்கம் என்பதாக ஒன்றை ஏற்படுத்தி அது நிலைத்திருப்பதற்கு வேண்டிய சகல சவுகரியங்களும் செய்து கொடுத்து அதன் மூலம் அய்ரோப்பிய சங்கங் களுக்கு இருப்பது போலவே சென்னை முனிசி பாலிடிக்கும், சென்னை சட்டசபைக்கும் இந்திய சட்டசபைக்கும் அங்கத் தினர்களை தெரிந்தெடுக்கும் உரிமைகள் முதலிய பெருமைகளையும் வாங்கிக் கொடுத்து அதற்கு ஒரு யோக்கியதையையும் உண்டாக்குவதற்கு எவ்வளவோ கஷ்டமும் பட்டார்.<br /><br />இப்போதும், மற்ற எல்லா ஸ்தாபனங்களையும் நமது பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்திற்காக சூழ்ச்சிகளாலும், தந்திரங்களாலும் சுவாதீனப்படுத்திக் கொண்டது போலவே, இதையும் கைப்பற்றிக்கொண்டு இருப்பதோடு அச்சங்கத்திற்கு இவ்வளவு பெருமையும், யோக்கியதையும் சம்பாதித்துக் கொடுத்த சர் தியாகராயரின் வாரிசான ஸ்ரீமான் பி.டி. குமாரசாமி செட்டியார் அவர்களையே அச்சங்கத்தில் சேர்த்துக்கொள்ள மறுத்து விட்டார்கள்.<br /><br />இக் கூட்டத்தாரின் கல்னெஞ்சத்தையும், நன்றிகெட்ட தன்மையும் காட்ட இதைவிட வேறு ஏதாவது உதாரணம் வேண்டுமா? ஆகவே, நமது பொது நன்மைக்காக என்று எந்த ஸ்தாபனங்களை ஏற்படுத்தினாலும் மெள்ள மெள்ள அதில் வேலைக் காரராக வந்து சேர்ந்து குமாஸ்தாவாகி, மேனேஜராகி, எஜமான்களாகி நம்மை கூலிக்காரர்களாக செய்து விடுகிறார்கள்.<br /><br />இக்காரணங்களால்தான் நாம் செய்யும் தியாகமோ, உழைக்கும் உழைப்போ, ஏற்படுத்தும் ஸ்தாபனங்களோ, நமக்கே பலன்தர வேண்டுமானால் கண்டிப்பாய் அவற்றில் பார்ப்பனர்களைச் சேர்க்கக்கூடாது என்று வாதாடி வருகிறோமே அல்லாமல் மற்றபடி அவ்வகுப்பார்மீது துவேஷம் கொண்டல்ல.<br /><br />இந்த விஷயத்தை அறியாமல் இருப்பவர்களும், பார்ப்பனர் களிடம் கூலி வாங்கிப் பிழைப்பவர்களும், பார்ப்பனர் விரோதம் கொண்டால் வாழ முடியாதவர்களும், தங்களைப் பெரிய தேசபக்தர்கள் போல காட்டிக்கொண்டு உபதேசம் செய்யவந்து விடுகிறார்கள். ஆனபோதிலும், பொது ஜனங்கள் இதை ஏதோ அறியாமையாலும், வயிற்றுக் கொடுமையாலும், இப்படி உளறுகிறார்கள் என்பதாக மதித்து கூடியவரையில் பார்ப்பனச் சம்பந்தமில்லாமலே முற்போக்கான வழி தேடவேண்டுமென்றும், அதற்கேற்ப ஸ்தா பனங்களையும், ஏற்படுத்த வேண்டும் என்றும் விரும்புகிறோம்.<br /><br />- குடிஅரசு - கட்டுரை - 06.02.1927<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-84380044938740705942013-09-01T07:13:14.421+05:302013-09-01T07:13:14.421+05:30
இன்னுமா நமக்கு சூத்திரப் பட்டம்?
நமது நாட்டில் ஆ...<br />இன்னுமா நமக்கு சூத்திரப் பட்டம்?<br /><br />நமது நாட்டில் ஆதியில் வருணாசிரம தர்மம் என்பது இல்லையென்றும், மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு இல்லையென்றும், இப்போது வருணாசிரம தர்மம் என்பதன் மூலமாய் வருணாசிரம முறையில் மிகவும் தாழ்ந்த நிலைமை யில் நாம் அழைக்கப்படுகிறோம் என்றும், அதாவது பார்ப்பனர்களால், சூத்திரர்கள், பஞ்சமர்கள், மிலேச்சர்கள் என்று கருதப்படுகிறதும் 100க்கு 97 பேருக்கு மேலான எண்ணிக்கை கொண்ட நாம் இப்பெயரை வகிப்பது மிகவும் சுயமரியாதையற்ற தென்றும், சூத்திரன் என்கிற பதம் பார்ப்பனர்களின் அடிமை, பார்ப்பனர்களின் வேசிமக்கள் என்னும் கருத்தையே கொண்டது என்றும்,<br /><br />பஞ்சமன் என்கிற பதம் ஜீவ வர்க்கத்தில் பூச்சி, புழு, பன்றி, நாய் கழுதை முதலியவைகளுக்கு இருக்கும் உரிமை கூட இல்லாததும் கண்களில் தென்படக் கூடாததும் தெருவில் நடக்கக் கூடாததுமான கொடுமை தத் துவத்தைக் கொண்டது என்றும், மிலேச்சர்கள் என்பது துலுக்கர், கிறிஸ்தவர், அய்ரோப்பியர் முதலிய அன்னிய நாட்டுக்காரரை குறிப்பது என்றும்,<br /><br />அவர்களைத் தொட்டால் தொட்ட பாகத்தை வெட்டி எறிந்து விட வேண்டிய கருத்தைக் கொண்டதென்று உண்டாக்கி அந்தப்படியே பார்ப்பனர்களால் ஆதாரங்களும் ஏற்படுத்தி வைத்துக் கொள்ளப்பட்டு அதுதான் இந்து மதத்திற்கு ஆதாரமென்று காட்டப்படுகிறதென் றும் அநேக தடவைகளில் ஆதார பூர்வமாய் எடுத்துச் சொல்லி வந்திருக்கிறோம். அதற்காக எவ்வளவோ கிளர்ச்சிகளும் செய்து வந்திருக்கிறோம்.<br /><br />இவ்வளவும் நடந்துவரும் இந்தக்காலத்தில் இன்னமும் முனிசிபாலிட்டி, ஜில்லா போர்டு, தாலுகா போர்டு முதலிய ஸ்தாபனங்கள் சூத்திரன், பஞ்சமன், பிராமணன் என்னும் பதங்களை உபயோகப்படுத்தி வருகிறதென்றால் இதன் தலைவர்களுக்கு மானம், வெட்கம், சுயமரியாதை உணர்ச்சி, சுத்த ரத்த ஒட்டம் ஆகியவை இருக்கிறதா என்று கேட்கிறோம்.<br /><br />சமீபத்தில் மதுரையில் நடந்த பார்ப்பனரல்லாதார் மகாநாட்டில் பொது ஜனங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட உணர்ச்சியே இதுதான். இப்படியிருக்க, அம்மதுரைப் பட்டணத்திலே மங்கம்மாள் சத்திரங்களில் சூத்திரன் என்னும் வாசகங்கள் கொண்ட போர்டுகள் எழுதி தொங்க விடப்பட்டிருக்கின்றன. இது எவ்வளவு அநியாயம்? ஆதலால் மதுரை ஜில்லா போர்டாரோ, முனிசிபாலிட்டியாரோ உடனே இதைக் கவனித்து இவ்வித இழி மொழிகள் கொண்ட போர்டு களையும், வாசகங்களையும் அப்புறப்படுத்தி இவ்வித வித்தியாசங் களையும் ஒழித்துவிடுவார்கள் என்று நம்புகிறோம்.<br /><br />இதுபோலவே இன்னும் மற்ற ஊர்களிலும் இம்மாதிரி வாசகங்களோ, சொற்களோ காணப்பட்டால் அதை உடனே அடியோடு நிவர்த்திக்க வேண்டியது உண்மை யான மக்களின் முதல் கடமை என்பதாக தெரிவித்துக் கொள்ளுகிறோம்.<br /><br />- குடிஅரசு - கட்டுரை - 06.02.1927<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-82561013445431650312013-09-01T07:10:18.001+05:302013-09-01T07:10:18.001+05:30
திமுகவில் எந்த கோஷ்டியும் இல்லை அடக்கும் வல்லமை எ...<br />திமுகவில் எந்த கோஷ்டியும் இல்லை அடக்கும் வல்லமை எனக்கு உண்டு: தி.மு.க. தலைவர் கலைஞர்<br /><br /><br />சென்னை, ஆக. 31- திமுகவில் எந்தக் கோஷ்டியும் இல்லை. கோஷ்டி இருந்தாலும் அடக்கக்கூடிய வல்லமை என்னிடம் உண்டு என்று கலைஞர் பேசினார்.<br /><br />வேலூர் மாவட்ட திமுக செயலாளர் ஆர்.காந்தி இல்ல திருமணத்தை திமுக தலைவர் கலைஞர் நேற்று (30.8.2013) தலைமை தாங்கி நடத்தி வைத்தார். மணமக்களை வாழ்த்தி கலைஞர் பேசியதாவது:<br /><br />ஒரு மனிதன் என்னதான் பெரும்புகழ் செல்வம் பெற்றிருந்தாலும், எல்லாவற்றையும்விட பெரும் செல்வம், அவன் அதிகமாக நண்பர்களைப் பெற்றி ருப்பதுதான். அந்த வகையில் காந்தி அளவற்ற நண் பர்களைப் பெற்றிருக்கிறார். இந்தத் திருமண விழா வில் துரைமுருகன், காந்தி பற்றி பாராட்டியதைவிட, துணைவியாரைத்தான் அதிகமாகப் பாராட்டினார்.<br /><br />காந்தி வீட்டுக்குப் போனால், தங்களுக்கு நல்ல இனிய உணவு விருந்தளிப்பார் என்பதை அவர் சொன்னபோதுதான், எனக்கு உண்மையான விஷயம் புரிந்தது. இவர்கள் ராணிப்பேட்டை காந்தி வீட்டைச் சுற்றி வந்தததற்குக் காரணம், அங்கே கிடைக்கின்ற நல்ல உணவுதான். அவர்களுக்கு உணவு கிடைக்கிறது. என்னைப் பொறுத்தவரையில், காந்தியிடம் நான் காண்பது, திராவிட உணர்வு, தமிழ் உணர்வு, சுயமரியாதை உணர்வு.<br /><br />சட்டமன்றத்தில் அவர் இருந்தபோது நானும் இருந்திருக்கிறேன். சட்டமன்றத்தில் காந்தி பேசி னால், காங்கிரஸ்காரர்கள் அதை பாராட்டி மகிழ்ச்சி தெரிவிப்பார்கள். திமுக அரசாக இருந் தாலும், காந்தி, தான் நினைத்ததை சொல்லத் தவறு வதில்லை.<br /><br />உண்மைக்காக தொண்டாற்றக் கூடிய ஒருவர். உண்மையைச் சொல்லி, திமுகவில், ஆட்சி யில் இருக்கின்ற குறைபாடுகளை எடுத்து சொன்ன வர். மாவட்ட செயலாளர் என்ற பதவி காரணமாக இந்த மாவட்டத்தில் எந்தவிதமான பூசலும் இல் லாமல், எல்லோரும் நண்பர்களாகப் பழகுகின்ற நிலையை உருவாக்கியிருக்கிறார் என்று துரை முருகன் சொன்னார்.<br /><br />துரைமுருகன் சாதாரணத் தொண்டரல்ல துணைப் பொதுச் செயலா ளர். அவர் சொன்னார் தமிழ்நாட்டில் கோஷ்டி இல்லாத ஒரு மாவட்டம், வேலூர் மாவட்டம்தான் என்றார். துரைமுருகன் அவருடைய மாவட்டமும் அது என்பதால் அப் படிச் சொல்லிக் கொண்டாரோ என்று எனக்குத் தெரியவில்லை.<br /><br />வேலூர் மாவட்டத்தில்தான் கோஷ்டி இல்லை என்றால், மற்ற மாவட்டங்களில் கோஷ்டி இருப் பதைப் போல சிலர் நினைக்கக் கூடும். தி.மு.க.வில் எந்தக் கோஷ்டியும் எங்கும் இல்லை. எந்தக் கோஷ்டி இருந்தாலும், அந்தக் கோஷ்டிகளை அடக்கக் கூடிய வல்லமையும், வாய்மையும் என்னிடமும், திமுகவில் உள்ள தலைவர்களிடத்திலும் உண்டு. மணமக்க ளுக்கு நான் சொல்லுகிற அறிவுரை குடும்ப வாழ்வை சீராக, செம்மையாக, சிக்கனமாக எளிய முறையில் வாழ வேண்டும் என்பதுதான்.<br /><br />- இவ்வாறு கலைஞர் பேசினார்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-73618931958896430982013-09-01T07:09:35.705+05:302013-09-01T07:09:35.705+05:30
கடவுள் சக்தி அவ்வளவுதான்! வைத்தீஸ்வரன் கோவில் மண்...<br />கடவுள் சக்தி அவ்வளவுதான்! வைத்தீஸ்வரன் கோவில் மண்டபம் இடிந்து விழுந்தது<br /><br /><br />கோவில் திருஷ்டி சுத்தி மண்டபத்தின் மேல்தளம் இடிந்து விழுந்திருப்பதைக் காணலாம்<br /><br />சீர்காழி, ஆக.31- சீர் காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவி லில் உள்ள மண்டபம் இடிந்து விழுந்தது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே தரும புரம் ஆதீனத்துக்குச் சொந்தமான வைத்தீஸ் வரன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் வைத் தியநாதசாமி, தையல் நாயகி, விநாயகர், செல்வ முத்துக்குமரசாமி, அங் காரகன் ஆகிய சுவாமி களுக்கு தனித்தனி சன் னதிகள் உள்ளனவாம்.<br /><br />இந்தக் கோவிலுக்கு தின மும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்து செல்கின்றனர். மேலும், இந்தக் கோவில் நவக்கிரகங்களில் ஒன் றான செவ்வாய் தலம் என்பதால் திருமண தோஷம் உள்ளவர்கள் இந்த கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனராம்.<br /><br />இந்த கோவிலில் விழாக்காலங்களின் போது விழா முடிவ டைந்தவுடன் பஞ்ச மூர்த்திகளை திருஷ்டி சுத்தி மண்டபத்தில் வைத்து திருஷ்டி கழிப் பது வழக்கமாம். சில ஆண்டுகளாக கோவி லின் பல்வேறு இடங் கள் வலுவிழந்து காணப் பட்டதாம். இந்த நிலை யில் கடந்த சில மாதங் களுக்கு முன்பு மேற்கு கோபுரவாசல் பகுதியில் உள்ள திருஷ்டி சுத்தி மண்டபத்தின் இடது பக்க மேல்தளம் இடிந்து விழுந்தது.<br /><br />நேற்று (30.8.2013) மதியம் இந்த மண்ட பத்தின் வலது புற மேல் தளம் இடிந்து விழுந்தது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த கோவில் நிர்வாகிகள் மண்டபம் இடிந்த பகுதி யைச் சுற்றி கம்பிவேலி அமைத்தனர். கோவில் மண்டபம் இடிந்து விழுந்த சம்பவத்தால் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் பெரும் பர பரப்பு ஏற்பட்டது.<br /><br />தன்னுடைய கோபு ரத்தையும், மண்டபத் தையும் காக்க முடியாத வைத்தீசுவரன் எப்படி பக்தர்களைக் காப்பான்.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-78916865489572508712013-09-01T07:03:11.144+05:302013-09-01T07:03:11.144+05:30
பதவி உயர்வும், தகுதி, திறமையும்
பொதுத்துறை வங்கி...<br />பதவி உயர்வும், தகுதி, திறமையும்<br /><br />பொதுத்துறை வங்கிகளில் செயல் இயக் குநர் பதவிக்கு நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டது பற்றி நேற்றைய விடுதலையில் (30.8.2013) முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.<br /><br />இந்த நான்கு பேர்களும் ஏற்கெனவே பொதுத்துறை வங்கிகளில் பணிகளில் இருந்தவர்கள்தாம். இவர்களுக்கு நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் மொத்தம் 30 மதிப்பெண் களுக்கு, ஒரே ஒரு மதிப்பெண்தான் பெற்றுள் ளனர் என்றாலும் அவர்களுக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.<br /><br />மதிப்பெண்கள்தான் தகுதி திறமைகளை நிர்ணயிக்கக்கூடிய அளவுகோல் என்று கதறி வந்தவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?<br /><br />பார்ப்பனர்கள் தொடக்கத்தில் சொல்லி வந்த ஒவ்வொரு காரணமும் பொருளற்றவை என்று நிரூபிக்கப்பட்டு வருகிறது.<br /><br />இடஒதுக்கீட்டால் ஜாதி வளரும் என்றனர். இடஒதுக்கீட்டின் காரணமாக கல்வி வளர்ச்சி பெற்று - ஜாதி உணர்வு மழுங்கடிக்கப்படுகிறது. படித்தவர்களிடையே ஜாதி கடந்த திருமணங் கள் நாட்டில் பெருகி வருகின்றன.<br /><br />இடஒதுக்கீட்டால் தகுதி திறமை பாதிக்கப் படுகிறது - தகுதிக்கு அளவுகோல் தேர்வு களில் பெறும் மதிப்பெண்கள் என்றும் சொல்ல ஆரம்பித்தார்கள். அது வெறும் வார்த்தை ஜாலமே தவிர, உண்மையல்ல என்பதும் நிதர் சனமாகி விட்டது. தேர்வில் அதிக மதிப்பெண் கள் பெறுபவர்கள் அவர்களின் துறைகளில் பரிணமிக்கவில்லை; அதே நேரத்தில், தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறாதவர்கள்கூட, அவர்கள் சார்ந்திருக்கும் துறைகளில் சாதனை முத்திரைகளைப் பொறித்து வருகின்றனர்.<br /><br />சிவ அய்யாத்துரை என்ற தமிழர் கிராமப் பள்ளியில் படித்து - இடஒதுக்கீட்டின் காரண மாக வாய்ப்பைப் பெற்றவர்தான். ஆனாலும் மின்னஞ்சலை அவர்தான் கண்டுபிடித்துக் கொடுத்து உலக அளவில் போற்றப்படுகிற மனிதராகி விட்டார்.<br /><br />இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் பார்ப்பனர்கள் கூறி வந்த ஒவ்வொரு காரணமும், தோல்வி அடைந்து - இப்பொழுது வேறு வழியின்றிப் பார்ப்பனர்களே மாநாடு போட்டு தங்களுக்குரிய இடஒதுக்கீடு தேவை என்று தீர்மானம் போடும் அளவுக்கு கீழே இறங்கி வந்துவிட்டனர். இதனை நாம் வரவேற்கிறோம். மக்கள் தொகையில் அவர்கள் இருக்கும் 3 சதவீத அளவு இடஒதுக்கீட்டை ஒத்துக் கொள்வார் களேயானால், அனேகமாக இடஒதுக்கீடு பிரச்சினையே ஒரு முடிவுக்கு வந்து விட்ட தாகக் கருதப்படும்.<br /><br />பதவி உயர்வில், இடஒதுக்கீடு தேவை என்பதையும் உயர் ஜாதியினர் எதிர்த்து வருகின்றனர். டில்லியில் வங்கிப் பணிகளில் பதவி உயர்வு பெற்றவர்கள் நேர்முகத் தேர்வில் மிகக் குறைந்த அளவு (30-க்கு ஒன்று) மதிப்பெண்கள் பெற்றவர்களே. இவர்கள் பெரும்பாலும் உயர்ஜாதிக்காரர்கள்தான். இதற்குப் பிறகாவது பதவி உயர்வில் இட ஒதுக்கீடு என்பது சரியானதுதான் மதிப்பெண் ணெல்லாம் தேவையில்லை என்று ஒத்துக் கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கலாமா?<br /><br />தாழ்த்தப்பட்டவர்களுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு என்கிற வரவேற்கத்தக்க சட்டத் திருத்தம் செய்யப்பட்டு விட்டது. அதனை யொட்டி பிற்படுத்தப்பட்டவர்களுக்குப் பதவி உயர்விலும் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண் டும் என்ற நியாயத்தை அனைத்துத் தரப் பினரும் ஏற்றுக் கொள்வார்கள். பிற்படுத்தப் பட்டவர்களுக்கான நாடாளுமன்றக் குழு இதில் கவனம் செலுத்தி ஆவன செய்ய இதுதான் சரியான நேரம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-58453366479931106742013-09-01T07:02:28.532+05:302013-09-01T07:02:28.532+05:30
ஏழைகளுக்கு வழங்கப்படும் இலவசத் திட்டங்கள் பொருளாத...<br />ஏழைகளுக்கு வழங்கப்படும் இலவசத் திட்டங்கள் பொருளாதார ஏற்றத் தாழ்வைக் குறைக்கின்றன<br /><br /><br />தமிழகத்தில் ஏழை மக்களை இலவசத் திட்டங்கள் மூலம் திரா விடக் கட்சிகள் சோம்பேறிகளாக்கி விட்டன (தினமணி 12.8.2013) என்று காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் கண் டனம் தெரிவித்திருக்கிறார். ஆனால் பொருளாதார மேதைகள் ஏழை களுக்கு வழங்கப்படும் இலவசத் திட் டங்கள் சமூகத்தில் நிலவும் பொருளா தார ஏற்றத் தாழ்வைக்குறைக்க உதவுகின்றன என்று கூறுகிறார்கள்.<br /><br />20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி யில் அரசாங்கத்தின் தலையாய குறிக்கோள் குடிமக்களின் வாழ் வைக் கருவிலிருந்து கல்லறை வரை பராமரித்து அவர்களின் வாழ்க் கையை வளமிக்கதாக ஆக்குவதே ஆகும். அத்தகு அரசைப் பொதுநல அரசு Welfare State என்று கூறுகி றோம். 1930-ஆம் ஆண்டு மே 10, 11 நாட் களில் ஈரோட்டில் நடந்த சுயமரி யாதை இயக்கத்தின் 2-ஆவது மாநில மாநாட்டில் தந்தை பெரியாரின் உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந் தவை,<br /><br />உரை வருமாறு: ஒருவன் உழைப்பில் ஒருவன் நோகாமல் சாப்பிடுவது என்கின்ற தன்மை இருக்கின்ற வரையில், ஒருவன் தினம் ஒரு வேளைக் கஞ்சிக்கு மார்க்கமில்லாமல் பட்டினி கிடந்து சாவதும், மற்றொருவன் தினம் ஐந்து வேளை சாப்பிட்டுவிட்டு இருக்கின்ற வரையில், ஒருவன் இடுப்புக்கு வேட்டி இல்லாமல் திண்டாடுவதும், மற்றொருவன் மூன்று வேட்டி போட்டுக் கொண்டு உல்லாசமாகத் திரிவதுமான தன்மை இருக்கின்ற வரையில், பணக்காரர்கள் எல்லாம் தங்கள் செல்வம் முழுதும் தங்களுடைய சுக வாழ்விற்கே என்று கருதிக்கொண்டு இருக்கின்ற வரையில் சுயமரியாதை இயக்கம் இருந்தே தீரும்.<br /><br />காமராசர் தமிழக முதல்வராக இருந்த போது 14 இலட்சம் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. எந்த மனித நேய முள்ள அரசியல் தலைவராவது இதைக் குறை கூற முடியுமா?<br /><br />இதைப்போலவே தான் முதியோர் உதவித்தொகை, கருவுற்ற ஏழைப் பெண்களுக்கு உதவித்தொகை. பத்தாம் வகுப்பு வரை படித்த ஏழைப்பெண்களுக்கு திருமண உதவித் தொகை ஆகியவை ஏழைகளின் வாழ்வில் வளம் சேர்க்கும் திட்டங்கள்.<br /><br />கலைஞர் ஆட்சிக்காலத்தில் மருத் துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் பயன் அடைந் துள்ளனர். இதனால் அரசுக்கு ரூபாய் 700 கோடி செலவாகி உள்ளது.<br /><br />உலக வங்கி World Bank தனது சென்ற ஜூன் மாத அறிக்கையில் உலகம் முழுவதும் 120 கோடி ஏழைகள் ஏழ்மையில் வாடுகின்றனர் என்றும், இந்தியாவில் மட்டும் 40 கோடி ஏழைகள் உள்ளனர் என்றும் அறிவித்துள்ளது. இந்த ஏழை மக்களுக்கு உணவு, உடை, உறையுள், மருத்துவ வசதி முதலிய அடிப்படைத் தேவைகளை அளித்து அவர்களின் வாழ்வில் ஓரளவு நிம்மதியை அளிப்பது தான் பொது நல அரசின் கடமை ஆகும்.<br /><br />தந்தை பெரியார் ஈரோடு சுயமரி யாதை மாநாட்டில் கூறிய கருத்தையே திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டு களுக்கு முன், பின் வருமாறு கூறு கிறார்:<br /><br />பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்<br />தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.<br /><br />கிடைத்ததைப் பகுத்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப் பாற்றுதல் அற நூலோர் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.<br /><br />ஏழைகளுக்கு இலவச திட்டங்கள் வழங்குவதன் மூலம் திராவிட கட்சி கள் அவர்களை சோம்பேறிகளாக்கி விட்டன என்று கூறுவது உண்மைக் கும் புறம்பான கூற்றாகும்.<br /><br />- இர.செங்கல்வராயன் (முன்னாள் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், செய்யாறு)<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-69339748359349889972013-09-01T07:00:47.559+05:302013-09-01T07:00:47.559+05:30
வளர முடியும்
நமது நாட்டில் மனிதனுக்கு மனிதன் வெ...<br />வளர முடியும்<br /><br /><br />நமது நாட்டில் மனிதனுக்கு மனிதன் வெறுப்பும், பேதமும் உண்டாக்கவே கடவுள், மதம், சாதி ஏற்படுத்தப்பட் டுள்ளன. இவை ஒழிந்த இடத்தில்தான் மனிதனுக்கு அன்பு வளர முடியும்.<br /><br />(விடுதலை, 20.9.1968)<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-3045023540548656052013-09-01T06:57:53.349+05:302013-09-01T06:57:53.349+05:30அதிகம் காபி குடிப்பவரா நீங்கள்?
ஒரு நாளைக்கு நான்...அதிகம் காபி குடிப்பவரா நீங்கள்?<br /><br />ஒரு நாளைக்கு நான்கு கோப்பைக்கும் அதிகமாக காபி குடிக்கும் நாற்பதாயிரம் பேரிடம் நடத்திய ஆய்வில், காபி குடிக்கும் பழக்கம் அதிகரிப்பதால் உடல் சார்ந்த பிரச்சினைகள் அதிகம் ஏற்படுவதாகவும், 32 விழுக்காட்டினர் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.<br /><br />இப்பழக்கத்தால் 2500-_க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாகவும், 55 வயதிற்கு உட்பட்டவர்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும், இதயம் எளிதில் பலவீனம் அடைவதாகவும் கடந்த 17 ஆண்டுகள் தொடர்ந்து நடத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-21436089845134519132013-09-01T06:57:06.320+05:302013-09-01T06:57:06.320+05:30
எரிந்த தாளில் எழுத்துக்கள் தெரிவது ஏன்?
காகிதங்...<br />எரிந்த தாளில் எழுத்துக்கள் தெரிவது ஏன்?<br /><br /><br />காகிதங்கள் எரிந்த பின்னாலும், அதிலுள்ள எழுத்துக்கள் தெரிவதை நீங்கள் கவனித்து இருப்பீர்கள். அது ஏனென்று தெரியுமா?<br /><br />காகிதம், தாவர செல்லுலோஸ் என்னும் கரிமப் பொருளால் ஆனது. இது எரியக் கூடியது. அச்சு மையிலும் கரிமப் பொருட்களும், வண்ணம் தரும் நிறமிகளும் இருக்கும். இரும்பு சல்பேட் போன்ற சில ரசாயன பொருட்களும் மையில் காணப்படும்.<br /><br />காகிதம் எரியும்போது, கரிமப் பொருட்களும், நிறமியும் எரிந்து போகும். ஆனால் இரும்பு சல்பேட் மட்டும் எரியாமல் இருக்கும். இதுவே எழுத்து இருந்த இடத்தில் இருந்து எழுத்துக்களை அடையாளம் காட்டுகிறது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-25004532629662228732013-09-01T06:55:20.120+05:302013-09-01T06:55:20.120+05:30
உணர்வுக்கு உரம் ஈட்டிய உடுமலை
- மு.வி.சோமசுந்தர...<br />உணர்வுக்கு உரம் ஈட்டிய உடுமலை<br /><br /><br />- மு.வி.சோமசுந்தரம்<br /><br />உடுமலைப்பேட்டை என்ற ஊரை நினைத்தாலும் உச்சரித்தாலும், உச்சரிக்கக் கேட்டாலும் ஏற்படும் உற்சாகத்துக்கும், பொங்கி எழும் உணர்வுக்கும் அணை கட்ட முடியாது.<br /><br />காலை அரும்பி பகலெல்லாம் போதாகி<br />மாலை மலரும்<br /><br />என்று வள்ளுவர், வேறு சூழ் நிலையை விளக்க வந்த கருத்து, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகி யோரின் ஆழிசூழ் உலகின் அழியா சிந்தனைப் பெருஞ்சுடர், என் பள்ளி வாழ்க்கையில் அரும்பி, கல்லூரி வாழ்க்கையில் போதாகி, உடுமலை அதன் விரிவாக்கம் அமராவதிநகரில் மலர்ந்தது என்று கூறும் வகையில், உடுமலை தனிச்சிறப்பைப் பெறுகிறது.<br /><br />அமராவதி நகரிலிருந்து 25 ஆண்டுகள் பணி ஆற்றிய காலத்தில், பெற்ற நட்புகள் (கு.வெ.கி.ஆசான், பொறியாளர் து.பரமசிவம், அ.ப. நட ராசன் கபிலன் செகன்னாதன், வசந்தம் இராமச்சந்திரன், தென்மொழி ஞானபண்டிதன், வழக்கறிஞர் கஸ்தூரி புலவர் மருதவாணன் மற்றும் பலர்) நிகழ்ந்த நிகழ்வுகள் (தந்தை பெரியார், ஜி.டி.நாயுடு, நிகழ்ச்சி மண்டல் கமிஷன் விளக்க பயிற்சி முகாம் (தமிழர் தலைவர் பங்கேற்பு) மதுரை ஆதீனம் ஆசிரியர் கூட்டம், இறையன் - செல் வேந்திரன் பட்டிமன்றம், முத்துக்கூத் தன் பொம்மலாட்டம், ஜோசப், முனைவர் நெடுஞ்செழியன், ஆசான் - தமிழ்க்குடிமகன், கண்மணி - தமிழரசன், கோரா, ஞானபண்டிதன், திருக்குறள் முனுசாமி, சாலை இளந்திரையன், முனைவர் அருணா ராஜகோபால், பெரியார் பிறந்தநாள் விழாக்கள், இந்தி எதிர்ப்பு ஊர்வலம், கலந்துரையாடல் கள் நடிகவேள் இராதா நாடகம்) பள்ளியுடன் இணைந்த விழாத் தொடர்புகள் (முத்தமிழ் அறிஞர் கலைஞர், சாதிக்பாட்சா, நாவலர் நெடுஞ்செழியன், பாபு ஜெகஜீவன்ராம், ப.உ.சண்முகம், மதியழகன்)<br /><br />இவற்றைத் தொகுத்துப் பார்க்கும் நேரத்தில் தொண்டு செய்து பழுத்த பழத்தின் சுவையைக் கண்டவனாகத் தான் எண்ண வேண்டியுள்ளது. களம் கண்டோ, போராட்ட ஏர் பிடித்தோ பணியாற்றியதில்லை.<br /><br />இவற்றை இன்று நினைத்துப்பார்க்க வேண்டிய வாய்ப்பை ஏற்படுத்தியது, சைனிக் பள்ளியின் என் பழைய மாணவர்களின் இரண்டு (1988-இல் படித்து முடித்தவர்கள்) நாள்கள் வெள்ளி விழா நிகழ்ச்சிகள். அவர்கள் கற்ற காலத்திலிருந்த ஆசிரியர்களைக் குடும்பத்துடன் பார்க்க வேண்டும்.<br /><br />அவர்களுக்கு சிறப்பு செய்ய வேண்டும் என்ற விழைவில் அன்பு அழைப்பு விடுத்தார்கள், தொலைபேசி மூலமும் நினைவுபடுத்தினார்கள். பல ஆண்டு களுக்குப் பிறகு, இணையருடன், உடுமலை, அமராவதிநகரைப் பார்க்க, உடன்பணியாற்றியவர்களையும் சந்திக்க, ஜூன் 28இல் புறப்பட்டோம். (தனியாக, மகிழுந்தை ஏற்பாடு செய்து கொடுத் தார்கள்). இரண்டு நாள் நிகழ்ச்சிகளும் மகிழ்ச்சியையும், மன நிறைவையும் அளிக்கும் வகையில் அமைந்திருந்தன.<br /><br />இக்கட்டுரையை எழுதுவதற்கு முக்கிய காரணமே வேறு. உடுமலைக்கு செல்வது என்ற எண்ணம் ஏற்பட்ட வுடன், தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் பெரிதும் வியந்து பாராட்டி எழுதிய உடுமலை தமிழறிஞர், தெளிந்த சிந்தனையாள ரான, 99 அகவையை அடைந்துள்ள ந.சுப்ரமண்யன் அவர்களைக் காண வேண்டும், உரையாட வேண்டும் என்ற அவா மிகுந்திருந்தது.<br /><br />ஆசிரியர் அய்யா அவர்கள் உடுமலை பெரியவர் எழுதிய பல நூல்களைப் பற்றியும், குறிப்பாக உரத்த சிந்தனை என்ற நூலைப் பற்றி விடுதலை இதழில் இரண்டு நாள்கள் எழுதியதும், என் அவாவை மேலும் உயர்த்தியது.<br /><br />எண்ணிய எண்ணம் கைகூட நம் கழக பெரியார் தொண்டரும், நண்பரு மான அய்யா நடராசன் துணையிருந்து அழைத்துச் சென்றார். நல்லதொரு மகிழ்ச்சி அளித்த சந்திப்பு என்றும் நினைவில் நிற்கும் சந்திப்பு, இணைய ருடனும், என்னுடனும் அன்பாக 20 நிமிடங்கள் உரையாடினார். உரையாட லின் போது, எழுப்பிய வினாக்களுக்கு அவர் கூறிய விளக்கங்களை இங்கு பதிவு செய்வது நல்லது என்று கருதுகிறேன்.<br /><br />1) எனக்கு தமிழ்மொழி தாய் (Mother),ஆங்கிலம் காதலி (Love) தாய்க்கு கட்டுப்பட்டவன், சொல்படி நடப்பவன், காதலியுடன் எப்படியும் இருப்பேன்(Flexible)<br /><br />2) உ.வே.சாமிநாதன் தமிழில் வல்லவர் ஆங்கிலம் தெரியாது, சமஸ்கிருதமும் தெரியாது.<br /><br />3) என் தந்தையார் தாம்பரம் கிறித்துவக்கல்லூரியில் சூர்ய நாராயண சாஸ்திரி மாணவர், டாக்டர் மில்லர் டென்னிசனின் பாடலில் உள்ள இயற்கைக் காட்சிக்கு இணையா வேறு இருக்காது என்று கூறினார். என் தந்தை, கம்பராமாயணத்தில் உள்ள பாடலை விளக்கினார்.<br /><br />4) கிறித்துவக்கல்லூரி பேராசிரியர் டாக்டர் சந்திரன் தேவனேசன் வலிய என்னை ஷிலாங் பல்கலைக் கழகத் துக்கு அழைத்துச் சென்றார்<br />(Dr. சந்திரன் தேவனேசன் என் விடுதி காப்பாளர்)<br /><br />5) பாரதிதாசனின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டவர்கள் இருவர் என்று கூறினார். பாரதியார், மனோன்மணியம் சுந்தரனார்.<br /><br />6) பார்ப்பனர்கள் பிறவி அலுவலக ஊழியர்கள் (Born clerk like Robert Clive)<br /><br />7) பார்ப்பனர்களுக்கு நாட்டுப்பற்று என்பது கிடையாது.<br /><br />8) யூதர்களுக்கு முதலீடு பணம் பார்ப்பனர்களுக்கு அறிவு.<br /><br />9) பார்ப்பனர்களுக்கு ஒழுக்கம் கிடையாது. (No character)<br /><br />அன்பு விடை பெற்று அவரின் மூன்று நூல்களைப் பெற்று மகிழ் வுடன் திரும்பினோம்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-49382131960905637332013-09-01T06:54:04.272+05:302013-09-01T06:54:04.272+05:30
களங்காண வாருங்கள் காளையரே!
போர்க்களம்! போர்க்கள...<br />களங்காண வாருங்கள் காளையரே!<br /><br /><br />போர்க்களம்! போர்க்களம்!! சாதி யொழிப்புப்<br />போர்க்களம் சனாதனம் காக்கும்<br />பார்ப்பனர்க் கெதிரான போர்க்களம்! பெரியார்<br />நெஞ்சில்முள் அகற்றும் போர்க்களம்!<br />இருமுறை தமிழ்நாடு சட்டமன்றம் இயற்றிய<br />தீர்மானம் ஏற்காததால் போர்க்களம்!<br />பெரும்பான்மை மக்களை இன்னும் பஞ்சம<br />சூத்திர ராக்குவதால் போர்க்களம்!<br />அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்<br />பட்டது தீண்டாமை ஒழிந்ததா?<br />அரசை நடத்துவோர் அதிகார மய்யங்கள் சிந்திந்து சீர்செய்ய மனமில்லை<br />தேர்ந்தெடுக்கப் படாது நியமனம் பெற்றோரால்<br />உருவானதே அரசமைப்புச் சட்டம்<br />பார்ப்பனரே அதிகார மய்யமாய் இருந்ததால்<br />வெகுமக்கள் உரிமை முடக்கம்!<br />சட்டத்தின் முன்னே அனைவரும் சமமென்று<br />சாற்றுவது வெறும் சொல் விளையாட்டு<br />சட்டப் படியும் சாத்திரப் படியும்<br />சூத்திர ரென்பது இழிவன்றோ!<br />ஓட்டை உடைசல் உரிமை மீறலே<br />இந்நாட்டில் அரசமைப்புச் சட்டம்<br />கோட்டை கொத்தளம் கொலு மண்டபம் வேதபுரிகள் வேட்டைக் காடாகியே!<br />தகுதித் திறமை தமக்கு மட்டும்<br />இருப்பதாக எண்ணிக்கொண்டு<br />மிகுதியாக பீற்றித் திரியும் பார்ப்பனரே<br />தமிழர்க்கும் அருச்சகர் தகுதியுண்டு<br />முட்டுக் கட்டைப் போடும் மூடர்காள்<br />தன்னலம் மட்டுமே தகுதியாகா<br />வட்டியும் முதலுமாய் வாங்கிக் கட்டிக்<br />கொள்வீர்! எச்சரிக்கை செய்கிறோம்!<br />வீர வணக்கம் வீர வணக்கம்<br />சாதி யொழிப்புச் சமரினில்<br />சரித்திரம் படைத்த ஈகியர்க்கு வீர வணக்கம்! வீர வணக்கம்!!<br />களங்காண வாருங்கள் காளையரே அய்யா<br />முன்னெடுத்த போர்க்களம்! தமிழர்<br />தலைவர் அழைக்கின்றார்! தோழமை துணையுடன்<br />அய்யா பணிமுடிப்போம் ஆர்த்தெழுவீர்!<br /><br />- இனியன், திருச்சி--_14<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-37738129325688471112013-09-01T06:49:36.435+05:302013-09-01T06:49:36.435+05:30மனிதனின் ஆயுளை கண்டறியும் சோதனை!
ஒருவர் இன்னும் ...<br />மனிதனின் ஆயுளை கண்டறியும் சோதனை!<br /><br /><br />ஒருவர் இன்னும் எத்தனை ஆண்டுகாலம் உயிரோடு இருப்பார் என்பதைக் கூறக் கூடிய "இறப்பை அறியும் சோதனை'யை பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.<br /><br />உலகிலேயே முதன் முறையாக இந்தச் சோதனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த லங்காஸ்டர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக இருக்கும் அனீடா ஸ்டெஃபனோவ்ஸ்கா, பீட்டர் மெக்கிளிண்டாக் ஆகியோர் இந்தச் சோதனைக்கான காப்புரிமையைச் சமீபத்தில் பதிவு செய்தனர். இதன்படி, கைக்கடிகாரம் போன்ற சாதனத்தின் மூலம் மனிதர்களின் தோல் மீது வலியில்லாத லேசர் ஒளிக்கற்றை பாய்ச்சப்படும்.<br /><br />இது, உடலில் உள்ள எண்டோதீலியல் செல்கள் எனப்படும் உட்புற செல்களை ஆராய்ந்து, வயது அதிகரிக்கும்போது குறிப்பிட்ட நபரின் உடல் எப்போது சிதைவுறும் (இறப்பு) என்பதை மதிப்பிடும். இந்த செல்கள் ரத்த நாளங்கள் உள்ளிட்ட உள் உறுப்புகளில் காணப்படுகின்றன.<br /><br />லேசர் ஒளிக்கதிர் பாய்ச்சப்படும்போது இந்த செல்களில் ஏற்படும் அதிர்வுகளை மதிப்பிடுவதன் மூலம் தங்களால் குறிப்பிட்ட நபர் இன்னும் எத்தனை ஆண்டுகள் உயிர் வாழ முடியும் என்று கூற முடியும் என மேற்கண்ட ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும், புற்றுநோய் போன்ற நோய்கள் தாக்கக் கூடிய ஆபத்து குறித்தும் கூற முடியும் என்று அவர்கள் கருதுகின்றனர்.<br /><br />இந்தச் சோதனையை டாக்டர்களால் எளிதில் பயன்படுத்தத் தக்க தொழில்நுட்பம் அடுத்த 3 ஆண்டு களில் உருவாக்கப்பட உள்ளது. இத்தொழில் நுட்பத்தைக் கொண்டு பல்வேறு மனிதர்களின் ஆயுள்காலத்தை அறிந்து ஒரு தகவல் பெட்டகம் உருவாக்க முடியும் என்று நம்புவதாக விஞ்ஞானி ஸ்டெஃபனோவ்ஸ்கா தெரிவித்தார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-30451305802590137942013-09-01T06:49:02.938+05:302013-09-01T06:49:02.938+05:30
ரெண்டும் ஒன்னு தான்! - சிவகாசி மணியம்
அம்மாவின்...<br />ரெண்டும் ஒன்னு தான்! - சிவகாசி மணியம்<br /><br /><br />அம்மாவின் கரத்தைப் பற்றிய படி கோயில் வளாகம் முழுக்க சுற்றி வந்தபோது அங்கிருக்கும் சிலைகள் ஒவ்வொன்றையும் அம்மா செய்வது போலவே கும்பிட்டு வந்தது குழந்தை.<br /><br />இடது காலைச் சற்று சாய்த்தபடி புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் சிலையை குழந்தைக்கு காட்டி ஏதோ சொன்னாள் தாய். கொண்டு வந்த உதிரிப் பூக்களை சிலையின் மீது தூவி விட்டு மூன்று முறை சுற்றி வந்தாள். பூஜை முடித்து ஒரு வழியாக வெளியே வந்தார்கள்.<br /><br />கோயிலின் நுழைவாயிலில் வளையல் கடை, புத்தகக்கடை, பூக்கடை என்று பல இருந்தாலும் குழந்தையைக் கவர்ந்தது பொம்மைக் கடை தான்! அம்மாவிடம் அந்தக் கடையைச் சுட்டிக் காட்டியபடி அங்கே இழுத்துப் போனது.<br /><br />கரடி பொம்மையிலிருந்து கடவுள் பொம்மைகள் வரை அங்கே குவிந்து கிடந்ததைப் பார்த்த குழந்தைக்கு கோயிலுக்குள் பார்த்தது போன்ற ஒன்று கண்ணில் பட்டது. வண்ண மயமாய் முரளி கிருஷ்ணன் முழு உருவத்தில் இருந்தார்.<br /><br />குழந்தைக்கு ரொம்பவும் பிடித்துப்போக அதை வாங்கித் தரும்படி அம்மாவிடம் கேட்டது. கோயிலுக்குள்ள பார்த்தோமே அதே மாதிரி இல்ல.<br />அங்கே பார்த்தது சாமிடி<br /><br />அப்ப இது,,?<br /><br />பொம்மை.,,!<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-76908154020067288482013-08-31T06:17:31.836+05:302013-08-31T06:17:31.836+05:30ஆளை விடய்யா!
திருடர்களுக்கு: வீண் சிரமப்பட்டு பூட...ஆளை விடய்யா!<br /><br />திருடர்களுக்கு: வீண் சிரமப்பட்டு பூட்டை உடைக்க வேண்டாம். விலை மதிப்புள்ள பொருள்கள், பொன், வெண்கலச் சிலைகள் மற்றும் மதிப்புள்ள பொருள்கள் எதுவும் இல்லை என அறிவிக்கப் பட்டுள்ளது. இப்படி எழுதப்பட்டுள்ள கோவில் நெல்லை மாவட்டம் காருகுறிச்சியின் கீழ் பகுதியில் கால்வாய் கரையில் அமைந்துள்ளது.<br /><br />ஆளைவிடய்யா... என் கையிலே மடியிலே ஒன்றுமில்லை என்று கடவுள் கெஞ்சுவது போல் இல்லையா?<br /><br />தகவல்: நெல்லை சந்திரன், மீனவன்குளம்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-36188916946685462242013-08-31T06:16:58.974+05:302013-08-31T06:16:58.974+05:30
கிருஸ்தவர்கள் பாதரட்சை அணியலாமா?
(அப்போஸ்தலர்: 7...<br />கிருஸ்தவர்கள் பாதரட்சை அணியலாமா?<br /><br />(அப்போஸ்தலர்: 7:33)இல் பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப் போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாயிருக்கிறது என்றும்.<br /><br />(அப்போஸ்தலர்: 12:79)இல் தூதன் பேதுருவை எழுப்பி; பேதுருவை நோக்கி: உன் அரையைக் கட்டி, உன் பாதரட்சைகளைத் தொடுத்துக் கொள் என்றான். அந்தப்படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின் சென்று.... என்றும் இருக்கிறது. இதிலிருந்து பேதுரு இயேசுவின் கட்டளையை நம்பவில்லை என்றுதானே தெரியவருகிறது?<br /><br />ஒரு வானொலி நிலையத்தின் ஒலிபரப்பில் கிருஸ்தவர்கள் கோவிலுக்குள்ளும் செருப்பு அணிந்து செல்கின்றனரே? என்ற கேள்வி எழுந்தது. இதிலிருந்து இயேசுவை கிருஸ்தவர்கள் கூட நம்பவில்லை என்று தெரியவில்லையா?<br /><br />(ஆதாரம்: இந்திய வேதாகமச் சங்கத்தாரால் 1978இல் வெளியிடப்பட்ட புதிய ஏற்பாடு)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-32568220967506949482013-08-31T06:16:22.096+05:302013-08-31T06:16:22.096+05:30நாத்திகம் பற்றி வினோபா?
நான் எந்தக் கட்சியையும் ச...நாத்திகம் பற்றி வினோபா?<br /><br />நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவனல்ல. எல்லாக் கட்சியினரும் எனக்கு வேண்டும். நாஸ்திகன் தான் மக்களுக்கு உண்மையான சேவை செய்பவன், ஆத்தி கனால் சேவை செய்ய முடி யாது. உதாரணமாக ஒருவன் பீடி குடிக்கிறான் என்றால், அவனுக்கு பீடி கொடுத்துக் கொண்டிருப்பது சேவை செய்வதாகாது.<br /><br />அவனுடைய மனதை மாற்றி, பீடி குடிப்பதை நிறுத்துவதுதான் உண்மையான சேவையாகும். எந்த அரசாங்கமும் நாத்திகத் தன்மையில் இருந்தால் தான் மக்களுடைய தேவைகளை அனுசரித்து சேவை செய்ய முடியும்.<br /><br />(22.8.1956 காலை 10 மணிக்கு பவானி கூடு துறையில் உள்ள திருமுறை கழகக் கட்டடத்தில் நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் ஆச்சாரியார் வினோபா உரையாற்றுகையில் குறிப்பிட்டதுதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-41709676599143788082013-08-31T06:15:53.620+05:302013-08-31T06:15:53.620+05:30 இங்கல்ல... யூகோஸ்லாவியாவில்....
யூகோஸ்லாவியா பயண... இங்கல்ல... யூகோஸ்லாவியாவில்....<br /><br />யூகோஸ்லாவியா பயணக்கதை எழுதி வரும் திரு.மணியன் அங்கு தான் சந்தித்த ஒரு முஸ்லிம் ஜோடிகளுடன் நடந்த உரையாடலை எழுதுகிறார்.<br /><br />நீங்கள் தினமும் பிரார்த்தனை செய்வீர்கள் இல்லையா? என்று கேட்டேன் அந்த இளம் ஜோடியை.<br /><br />இல்லை, எங்களுக்குக் கடவுள் மீது நம்பிக்கை இல்லை! என்று பதில் சொன்னார்கள்.<br /><br />கடவுள் நம்பிக்கை இல்லை என்றால் முஸ்லீமாக இருக்க முடியாதே! என்றேன்.<br /><br />இந்த நாட்டில் அப்படி நிறைய பேர் இருக்கிறார்கள். நான் முஸ்லீம் இல்லை; கிறிஸ்டியன் இல்லை; நான் ஹ்யூமன்... இங்கே இரண்டு மனிதர்கள்தான் சந்தித்துக் கொள்வார்கள். இரண்டு மதங்கள் சந்தித்துக் கொள் ளாது. கிறிஸ்தவர் குடும்பத்தில் பிறந்த பெண், முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த பிள்ளையைக் காதலித்து கல் யாணமும் செய்து கொள்வாள். எங்கள் திருமணமெல்லாம் பதிவுத் திருமணம்தான்... என்று விளக்கமாக சொன்னாள்.<br /><br />நன்றி: இதயம் பேசுகிறது மே (5-11) 1985 <br />தகவல்: வே.அன்புராஜ், திருலோக்கிதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-76564638852570175982013-08-31T06:15:24.493+05:302013-08-31T06:15:24.493+05:30
மதத்திற்குள் ஒருமைப்பாடு
இந்து சந்நியாசிகள் எதை...<br />மதத்திற்குள் ஒருமைப்பாடு<br /><br /><br />இந்து சந்நியாசிகள் எதை துறந்தாலும் பொறாமையைத் துறக்க மாட்டார்கள் என்று எழுத்து வேந்தர் சுகி.சுப்பிரமணியம் ஒரு தடவை எழுதியிருந்தார். இந்திய நாட்டுச் சாதாரண சந்நியாசிகளிலிருந்து மடாதிபதிகள் வரை இதற்கு விதி விலக்கல்லர். ஜகத்குரு என்பதெல்லாம் கூட ஒப்பனைப் பெயர்களே தவிர, உணர்வுப் பெயர்களல்ல.<br /><br />இந்தியாவில் ஜகத்குரு என்ற பெயரில் அரை டஜன் மடாதிபதிகள் இருக்கிறார்கள். இதில் சிருங்கேரி ஜகத்குரு, காஞ்சி காமகோடி ஜகத்குரு மடத்தை, ஆதிசங்கரர் நிர்மாணித்த மடமே இல்லை என்பார். சைவ மடங்கள் பற்றிக் கேட்பானேன்? திருவாவடுதுறையும், திருத்தரும புரமும் வடக்கு - தெற்குத்துருவங்கள் போல நெடுந் தொலைவுக்குப் போவானேன்? உங்கள் நல்லூர் ஞான சம்பந்தராதீனம் சுவாமிநாத சுவாமிகளுக்கும், மதுரை ஆதீனத்துக்குமே இப்பொழுது இராசிப் பொருத்த மில்லையாம்!<br /><br />இந்த பழைய மடங்கள்தான் அப்படி என்றால், புதிய நிறுவனங்களிடையிலும் கூட ஒருங் கிணைப்பு இல்லை. இராம கிருஷ்ண மிஷனில் சுவாமி சிவா னந்தர் சேரவில்லை. சிவானந்த தபோவனத் திலோ இராமகிருஷ்ண மிஷனிலோ சுவாமி சின்மயானந்தர் சேரவில்லை.<br /><br />எல்லாம் தனித்தன்மைகள்! இந்த அவலச் சூழ்நிலையில் எப்படி உலக நிறுவனம் தோன்ற முடியும்?<br /><br />ஜாதி வேற்றுமைகள், வழக்கு நெறிகள், விளம்பர ஆசைகள், ஆதிபத்திய உரிமைகள் ஆகியன சைவத்திற்கு ஒரு உலகந் தழீஇய நிறுவனத்தை படைப்பதில் தடையாக உள்ளன. இந்த தடையை உடைத்து ஒருமைப்பாடு காண நாம் எடுத்த முயற்சிகள் போதிய பலன் தர வில்லை.<br /><br />- குன்றக்குடி அடிகளார் - (நமது சிந்தனை 1.11.1980 இதழில்)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-7129282899569948582013-08-31T06:14:44.570+05:302013-08-31T06:14:44.570+05:30புத்தர் பற்றி ரசல்!
கிறிஸ்துவுக்கு 623 ஆண்டுகளுக்...புத்தர் பற்றி ரசல்!<br /><br />கிறிஸ்துவுக்கு 623 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய கவுதம புத்தர் கூறாத நல்லொழுக்கம் எதையும் கிறித்து புதிதாக கூறவில்லை<br /><br />- பெர்ட்ரண்டு ரசல்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-17472151296762997592013-08-31T06:14:14.181+05:302013-08-31T06:14:14.181+05:30
மனப்பாடம் செய்வீர்!
பார்ப்பனரைப் புரோகிதராக அழை...<br />மனப்பாடம் செய்வீர்!<br /><br /><br />பார்ப்பனரைப் புரோகிதராக அழைத்து நடைபெறும் திருமண வீடுகளிலே புரோகித பார்ப்பான் கூறும் மந்திரம் கீழே தரப்படுகின்றது. இந்த மந்திரத்தை மனப்பாடம் செய்து நமது இயக்கப் பேச்சாளர்களும், பகுத்தறிவாளர்களும் ஒவ்வொரு திருமணத்திலும் கூறக் கேட்டுக் கொள்கின்றோம்.<br /><br />சோமஹ ப்ரதமோ<br />விவிதே கந்தர்வ<br />விவிதே உத்ரஹ<br />த்ருதியோ அக்னிஸ்டே<br />பதிஸ துரியஸ்தே<br />மனுஷ்ய ஜாஹ.<br /><br />இதன் பொருள்: இங்கு மணமகளாக இருக்கும் பெண்ணை முதலில் சோமனும், பின்னர் முறையே கந்தவர்வனும், உத்திரனும், அக்னியும் அடைந்து அனுபவித்தார்கள். இப்போது அய்ந்தாவதாக மண மகனாகிய உனக்குத் தானம் செய்து கொடுக்கிறேன் என்று புரோகிதர் சொல்லுகிறார்.<br /><br />நமது பெண்களையும், ஆண்களையும் பார்ப்பனர்கள் எவ்வளவுக் கேவலப்படுத்துகிறார்கள் என்கிற உண் மையை நாம் அம்பலப்படுத்தி பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளை உணர வைக்க வேண்டும். புரியாத மொழியால் வரும் கேட்டைப் பார்த்தீர்களா? மந்திரங்கள் எல்லாம் வடமொழியில் தான் இருக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் சொல்லும் சூட்சுமம் புரிகிறதா?தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-35531758415181768412013-08-31T05:52:42.301+05:302013-08-31T05:52:42.301+05:30
மனித சமுதாயம்
நாட்டினுடைய வளப்பம் மனித சமுதாயத்...<br />மனித சமுதாயம்<br /><br /><br />நாட்டினுடைய வளப்பம் மனித சமுதாயத்தின் அத்தனைப் பேரை யும் பொறுத்ததே ஒழிய, மூன்றே முக்கால் பேர்களைப் பொறுத்தது அல்ல.<br /><br />(விடுதலை, 2.4.1966)<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-30746741001643159452013-08-31T05:51:13.474+05:302013-08-31T05:51:13.474+05:30
தீவிரவாதம் ஒழிய, மாணவர்கள் பகுத்தறிவாளர்களாகட்டும...<br />தீவிரவாதம் ஒழிய, மாணவர்கள் பகுத்தறிவாளர்களாகட்டும்!<br /><br /><br />இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. மதம் சாராத அறிவியற் கொள்கைகளை, மக்கள் மனதில் நிலைநிறுத்த வேண்டி யது அரசின் கடமை. ஆனால் உண்மை நிலையென்ன? நாட்டில் மதக்கலவரங் கள், தீவிரவாதங்கள், கொலைகள், கொள்ளைகள், கற்பழிப்பு சம்பவங்களென நாளும் பெருகி வருகின்றது. மக்களின் வாழ்க்கையில் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் போன்ற தன்மைகள் உண்டாக அரசாங்கத்திடம் எந்த விதமான கொள் கைகளோ, கோட்பாடுகளோ, எதுவும் இல்லை. மக்கள் வெளியே நடமாட அஞ்சு கின்றனர். பெண்கள் ஆபரணங்களுடன் சென்று திரும்ப முடியவில்லை.<br /><br />இளம் பெண்கள் தனியாக வெளி இடங்களுக் குச் சென்று வர முடியவில்லை. 1947-இல் கிடைத்ததாகச் சொல்லப்படும் சுதந்திரம் 2013-ஆம் ஆண்டிலும் மக் களுக்கு கிடைத்ததாகத் தெரியவில்லை. இந்தியா ஜனநாயக நாடு என்று சொல் லப்படுகிறதே தவிர ஜனங்களுக்குப் பாதுகாப்பில்லை. நாயகர்களுக்கும் (தலைவர்களுக்கும்) பாதுகாப்பில்லை. எங்கும் பணநாயகமே மேலோங்கி நிற்கிறது. இலஞ்சம் தலை விரித்தாடு கிறது. இலட்சியவாதிகள் அலட்சியப் படுத்தப்படுகின்றனர். இந்நிலை நீடித்தால், நாட்டில் அமைதிக்குப் பங்கம் தான் விளையும். இன்று தமிழ்நாடு அமைதிப்பூங்கா என்று சொல்லுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.<br /><br />தமிழ்நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு தண்ணீருக்கு டில்லிக்கும் சென்னைக் கும் நாயாய் அலைய வேண்டியிருக்கிறது. தப்பித்தவறி தண்ணீர் வந்துவிட்டால், அதைச்சேமிக்க எந்த துப்புமில்லை. கொடநாட்டில் கொடி நாட்டினால் போதுமா? தமிழ்நாட்டில் நாற்று நட வேண்டாமா? கொள்ளிடம் ஆற்றில் மேலணைக்கும் (முக்கொம்பு) கீழணைக் கும் (அணைக்கரை) இடையில் தஞ்சை மாவட்டத்தில் கோவிலடி, சுக்காம்பார், வைத்தியநாதன் பேட்டை, தேவன்குடி, கருப்பூர், புத்தூர், குடிதாங்கி, திருவைக் காவூர் ஆகிய இடங்களில் கதவணைகள் அமைத்தால் 30 டி.எம்.சி. நீரை தேக்கி வைக்கலாமென்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனரே!<br /><br />இதுபற்றி அரசுக்கு ஏதேனும் அக்கறை உண்டா? பார்ப்பனர் பண்ணையம் கேட்பாரில்லை என்ற நிலைதானா? மேட்டூர் அணை 16 கதவணையிலிருந்து இடைப்பாடிக்கு தண்ணீர் கொண்டு வர கால்வாய் வெட்டி யிருந்தால், பெரிய ஏரி நிரம்பியிருக்குமே. மக்கள் நலன் பற்றி அக்கரை இல்லாத அரசு; திராவிடர் கழகங்களின் ஆர்ப் பாட்டங்களை அலட்சியப்படுத்தினார் ஆட்சி அதிகாரம் ஆட்டம் காணக்கூடும் என்றாரே நம் தமிழர் தலைவர், உண்மை தானே!<br /><br />சேது சமுத்திரக் கால்வாய் திட்டத் திற்கு, தமிழ்நாட்டு முதலமைச்சரே முட்டுக்கட்டை போடுகின்றார் என்றால், ஓட்டுப் போட்ட தமிழ்நாட்டு மக்கள் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு போகவேண்டிய நிலைதானா! இஞ்சி தின்ற குரங்காக இன்று மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றார்கள். மந்திரி மார்கள், வாய் திறக்கவே பயப்படுகிறார் கள். பதவி ஆசையில் பட்டத்து ராணியின் காலடியில் விழுந்து கிடக்கிறார்கள். இதையெல்லாம் தட்டிக்கேட்கும் திராணி யுள்ள தலைவர் நம் தமிழர் தலை வரன்றோ! அவரணியில் தமிழ்மக்கள் ஒன்று சேர வேண்டாமா! சிந்திப்பீர். இன்னும் உறக்கம் வேண்டாம். விழித் தெழுங்கள்!<br /><br />எல்லாப் பிரச்சினைகளுக்கும் தமிழர் தலைவர் காலத்திலேயே முடிவு கட்ட வேண்டும். இன்றைய மாணவர்கள் நாளைய குடிமக்கள். இன்றைய மாண வர்கள் நாளை நாடாளும் மந்திரிகள். அவர்கள் பகுத்தறிவாளர்களாக ஆக்கப் படவேண்டும். அவர்கள் சுயசிந்தனையா ளர்களாக மாற்றப்பட வேண்டும். நாம் வரலாற்று ரீதியாக திராவிடர்கள் என்பது உணரப்படவேண்டும்.<br /><br />இதற்காகத் தான், தந்தை பெரியார் 135-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பெரியார் மணி யம்மை பல்கலைக்கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் மற்றும் பெரியார் பிஞ்சு இணைந்து வழங்கும் பெரியார் 1000 மாபெரும் வினா - விடைப் போட்டியாகும் பரிசுகளைத் தட்டிச் செல்வீர்!<br /><br />வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!<br /><br />- கா.நா.பாலு (தலைவர் நகர தி.க., இடைப்பாடி)<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-47939164099869210872013-08-31T05:50:09.942+05:302013-08-31T05:50:09.942+05:30
தகுதி - திறமையைப் பாரீர்! 30-க்கு ஒரே ஒரு மதிப்பெ...<br />தகுதி - திறமையைப் பாரீர்! 30-க்கு ஒரே ஒரு மதிப்பெண் பெற்ற நால்வருக்கு வங்கி செயல் தலைவர் பதவியாம் எல்லாம் ஜாதிக் குறிதான்!<br /><br /><br />புதுடில்லி, ஆக.30- பொதுத் துறை வங்கிகளில் செயல் இயக்குநர் (Executive Director) பொறுப்புகளுக்கு 4 அதிகாரிகள் பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்றனர். ஆனால், அவர்கள் நேர்முகத் தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண்களோ, 30-க்கு ஒன்றே ஓன்றுதான்!<br /><br />ஒரு செயல் இயக்குநர் (Executive Director) வங்கியின் மிக உயர்ந்த நிர்வாகத்தின் ஒரு பங்கு. வங்கித் தலைவர், நிர்வாக இயக்குநர் ஆகிய பணிகளுக்கு அடுத்த இடம்தான் செயல் இயக்குநர்.<br /><br />எல்லா வங்கி அதிகாரிகளும் அவர்களது ஆண்டு ரகசிய அறிக்கைகளில் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.<br /><br />நேர்முகத் தேர்வில் 30-க்கு ஒரே ஒரு மதிப்பெண் பெற்று, நீங்கள் வேலை பெற முடியுமா? முடியும். நீங்கள் பொதுத்துறை வங்கியின் செயல் இயக்குநராக ஆசைப் பட்டால் முடியும்.<br /><br />நான்கு பொதுத் துறை வங்கிகளின் பொது மேலாளர்கள் செயல் இயக்குநர்களாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், இந்தியப் பொருளாதாரப் பணிகள் செயலாளர் ராஜீவ் தக்ரூ என்பவரால் ஜூன், ஜூலை மாதங்களில் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.<br /><br />அவ்விதம் அறிவிக்கப்பட்டவர்கள் பி.எஸ். ராமராவ், ஆந்திரா வங்கியின் பொது மேலாளராக இருப்பவர், விஜயா வங்கியின் செயல் இயக்குநராகவும், சென்ட்ரல் பாங்கு ஆஃப் இந்தியாவின் பொது மேலாளரான அப்துல் அகர்வால், இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் செயல் இயக்குநராகவும் சிண்டிகேட் வங்கி பொது மேலாளர் மகேஷ் ஜெயின், இந்தியன் வங்கி செயல் இயக்குநராகவும், ஒரியண்டல் வங்கி ஆஃப் காமர்ஸ் பொது மேலாளராக இருந்த தக்கர், தேனா வங்கி செயல் இயக்குநர் பதவிக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.<br /><br />செயல் இயக்குநர் பதவி, வங்கித் தலைவர், மற்றும் நிர்வாக இயக்குநருக்கு அடுத்த பதவி. செயல் இயக்குநர் பதவிக்கு, பணி அமர்த்தும் பொறுப்பு ரிசர்வ் வங்கி ஆளுநர் தலைமையில் நடைபெறும். ஆளுநர் வர முடியாமல் போகும் பட்சத்தில், பொருளாதாரப் பிரிவுச் செயலாளர் நியமிக்கும் ஒரு துணைக் குழு, வேட்பாளர்களைப் பேட்டி கண்டு பொருளாதாரப் பிரிவு செயலாளர் தலைமையில் வேட்பாளர்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும்.<br /><br />ஆனால், இந்த குறைந்த மதிப்பெண் பெற்ற பொது மேலாளர்கள் பணி நியமனக் குழுவை எப்படி ஏமாற்றி வந் தனர் என்பது புரியவில்லை. (எல்லாம் ஜாதிக் குறிதானே).<br /><br />தகவல்: டைம்ஸ் ஆஃப் இந்தியா 28.8.2013)<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-34561956814978674452013-08-31T05:49:18.362+05:302013-08-31T05:49:18.362+05:30பழங்குடியினர் பட்டியலில் நரிக் குறவர்கள் இனம் மத்த...பழங்குடியினர் பட்டியலில் நரிக் குறவர்கள் இனம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்<br /><br />புதுடில்லி, ஆக.30- பழங்குடியினர் பட்டி யலில் (எஸ்.டி.) நரிக் குறவர்கள் இனத்தவரைச் சேர்க்க மத்திய அமைச் சரவை வியாழக்கிழமை ஒப்புதல் தெரிவித்தது.<br /><br />இது தொடர்பாக கடந்த சில நாள்களுக்கு முன்பு திமுக தலைவர் கலைஞரும், தமிழக முதல்வரும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதியிருந்த கடிதங் களில் கோரிக்கை விடுத் திருந்தனர்.<br /><br />இந்நிலையில், பிரத மர் மன்மோகன்சிங் தலைமையில் டில்லியில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத் தில் நரிக்குறவர்கள் இனத் தவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப் புதல் தெரிவிக்கப்பட்டது.<br /><br />அமைச்சரவையின் அனுமதியைத் தொடர்ந்து, அரசியலமைப்புச் சட் டத்தின் 342 (1) மற்றும் (2) பிரிவுகளில் நரிக் குறவர்கள் இனத்தை பழங்குடியினர் பட்டிய லில் சேர்க்க மத்திய அரசு சட்டத் திருத்த மசோதா தயாரிக்க வேண்டும். அந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு இதற்கான அறி விப்பு அரசிதழில் வெளி யிடப்படும். அதன்பிறகு பழங்குடியினருக்கான அனைத்து சலுகைகள், பலன்கள் நரிக்குறவர் களுக்குக் கிடைக்கும்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com