tag:blogger.com,1999:blog-1474608369333206681.post1240702528471137344..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: கர்ப்பக்கிருகத்திற்குள் மட்டும் பேதம் எதற்காக?தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-58190509330685176842018-09-22T23:36:49.990+05:302018-09-22T23:36:49.990+05:30நாம் தாழ்வுற்றதேன்?
(டாக்டர் ரவீந்திரநாத் தாகூர்)...நாம் தாழ்வுற்றதேன்?<br /><br />(டாக்டர் ரவீந்திரநாத் தாகூர்)<br /><br />டாக்டர் ரவீந்திர நாத் தாகூர் தமது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் காணப்படும் ஒரு பகுதி இது!<br /><br />இந்துமதம் இந்தியாவின் தலைவிதியானது நீக்க முடியாத ஒரு தலைவிதியாகும். அதன் கதி இந்தப்படித் தவிர வேறுவிதமாகயிருக்க முடியாது. ஏனென்றால், நாம் நமக்குள் ஜாதி ஜாதியாகப் பிரிந்து விட்டோம். அந்தந்த ஜாதிக்குள்ளும் வகுப்பு வகுப்பாகவும் பிரிந்து விட்டோம், இவ்வண்ணம் நாம் துண்டு துண்டு களாகப் பிரிந்து போய்விட்டோம், இதனால் நாம் ஒத்து ஒருவரிடத்தில் ஒருவர் மனிதத் தன்மையாக இருக்க முடியாமல் போய்விட்ட தனால், நாம் அழிந்து ஒழிந்து போவதற்குத் தகுதியுடையவர்களாக ஆனோமே தவிர, நாம் இனி, உலகத்தில் உயிருடன் இருக்கத் தகுதியுடையவர்களாக இல்லை. இப்படி நாம் பிரிந்துவிட்டதாலேயே நாம் எக்காலத்திலும் நம் நாட்டை பிறருக்கு வசப்பட்டுப் போகும் படி கொடுத்துக் கொண்டே வந்திருக்கிறது.<br /><br />நாம் நம் ஜாதிப்பிரிவுகளால் தற்கொலை செய்துக் கொண்டவர்களாக ஆகிவிட் டோம். நாம் ஜாதிகளை ஒழித்து அதனால் நாம் முன்னுக்கு வர வழிகோலவே இல்லை. நம் சாஸ்திரங்கள் ஜாதிப்பிரிவு களை மீறக் கூடாதென்றும், மீறினால் இவ்வளவு பாவம் - இவ்வளவு தண்டனை யென்றும் உரைத்து நம்மை அடக்கி விட்டன.<br /><br />நம் ஜாதிகளையும், அவற்றை வலி யுறுத்தி நிலைநிறுத்தும் சாஸ்திரங்களை யும், பெரியோர்கள் ஏற்படுத்தினார்கள் என்ற காரணத்தினால் அவை ஆதிகாலம் தொட்டு நடைமுறையில் அனுஷ்டிக்கப் பட்டு வருவதனால் அவற்றை நாம் தற்சமயம் இடையில் கலைக்கப்படாது என்ற மூடக்கட்டுப்பாட்டை வைத்துக் கொண்டிருப்பதனால், நாம் மனிதத் தன்மை இழந்து உலகிலுள்ள பெரிய ஜன சமூகங்களுக்கு இடையில் தாழ்ந்துவிட் டோம்.<br /><br />- விடுதலை 6.7.1953, பக்கம் 3<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-82658902750464243102018-09-22T23:36:15.044+05:302018-09-22T23:36:15.044+05:30ரிக் வேதத்தில்
டாக்டர் ராஜேந்திரலால் மித்ரா, அவர்...ரிக் வேதத்தில்<br /><br />டாக்டர் ராஜேந்திரலால் மித்ரா, அவர்கள் கூறுவது மாதிரி, இரத்த பலி கொடுப்பது அன்றும் இன்றும் நடைபெற்று வரும் ஒரு பண்டைய வழக்காகும். வங்காளத்தில் இன்றும் காணலாம், துர்க்கா பூஜை காலங்களில் சிலை முன்பு நின்று கொண்டு பெண்கள் தங்கள் மார்பு இரண்டுக்கும் நடுவிலுள்ள பாகத்தில் சற்று சீறி ரத்தம் வெளிப்படுத்தி தங்களது முன்னாளைய பிரார்த்தனையைச் செலுத்துவதன் அறிகுறியாக, கன்னங்களில் வெள்ளி வேலால் குத்திக் கொள்ளும் பழக்கம் இன்றும் - உண்டே தென்னாட்டுப் பகுதியில்!<br /><br />பழங்குடி மக்கள் மேல் படையெடுத்துச் செல்லுமுன்னர் அவர்கள் தங்கள் கடவுளர்களைப் பிரார்த்திக்கும் முறை பாருங்கள்! சிறு சிறு பகுதியாக வந்து, நூற்றுக்கானக்கான ஆண்டுகட்குப் பிறகேதான் சற்றேனும் இடத்தைப் பிடிக்க முடிந்தது அவர்களால் என்பது நினைவில் இருக்கட்டும். தங்கள் கடவுள்களை வேண்டின முறை பாரீர்!<br /><br />எரியல் விழுங்கிந்த எத்தர்<br /><br />களையும் பித்தர்களையும் (36.20)<br /><br />இடியே இ எறியவர் மேல்<br /><br />உன் வச்சிராயுதத்தை! (36.20)<br /><br />அழியல் வறிவிலர் தமை<br /><br />எரித்துவிடு ஒழியக் குழுவை<br /><br />துரத்தக் கொடியாரை<br /><br />அழல்கண் னரையழியாப்<br /><br />பகையால்பாட்டு<br /><br />தழலோய் கூட்டோடே<br /><br />கடிந்திடப் பகையை.<br /><br />ரிக்வேதம் 8.18:13<br /><br />(ஆங்கில மொழி பெயர்ப்பின் கருத்தி னைக் கொண்டது. ஆ.ர்.)<br /><br />பச்சை மாமிசம் தின்போர், திருடர், வஞ்சகர், கொலைஞர், அழிவுக்காரர்கள் என்றெல்லாம் திராவிடர்களைப் பற்றிக் கூறும் பொருட்டு வசைபாடும், அது தான் வேதமாக இருக்கிறது.<br /><br />- விடுதலை 8.7.1953<br /><br /><br />பக்கம் 3<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-23683001957937863922018-09-22T23:35:22.997+05:302018-09-22T23:35:22.997+05:30மானுடப் போராளி தந்தை பெரியார் -140
1973 ஆம் ஆண்...மானுடப் போராளி தந்தை பெரியார் -140<br /><br /><br /><br />1973 ஆம் ஆண்டில் மறைந்த பேராசிரி யர். ந.சஞ்சீவியுடன் புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் பற்றிய அரிய தகவல்களைப் பெறுவ தற்காக நான் பாண்டிச்சேரிக்குச் செல்லும் வாய்ப்பினைப் பெற்றேன்.<br /><br />இரண்டு நாட்கள் ஒரு மருத்துவர் இல்லத் தில் தங்கியிருந்தோம்.<br /><br />முதலில் புரட்சிக் கவிஞரின் மகளாரைச் சந்தித்து உரையாடினோம். அந்த அம்மை யார், பாண்டிச்சேரியின் முதல் திராவிட இயக்க முன்னோடி பெரியவர் நோயல் அவர் களைச் சந்திக்குமாறு கேட்டுக் கொண்டார்.<br /><br />அவரும் அப்பாவும் இணை பிரியா நண்பர்கள். அவரிடம் புரட்சிக் கவிஞர் பற்றி ஏராளமான தகவல்களைப் பெறலாம் என்றார்.<br /><br />பாரதிதாசனாரைப் பெரியாரோடு இணைத்தவர் தான் பெரியவர் நோயல் என்பது எங்களுக்கு அரியத்தகவலாக இருந்தது.<br /><br />அவரும் ஆசிரியராகப் பணிப்புரிந்தவர்.<br /><br />பெரியவர் நோயல்தான் பாண்டிச்சேரிக் குப் பெரியாரை அடிக்கடி அழைத்துக் கூட்டங்களை நடத்தியவர். அதனால் எண் ணற்ற இடர்களைச் சந்தித்தவர்.<br /><br />பாரிஸ் நகர் சென்று பிரஞ்சு உயர் நீதிமன்றத்தில் வழக்காடி, பெரியார் பணி மேற் கொள்வதற்காக பலத் தடைகளை உடைத் தவர்.<br /><br />85 அகவையிலும் பெரியவர் நோயல் பல பயனுள்ள தகவல்களை அளித்தார்.<br /><br /><br /><br />பெரியார், வீட்டின் திண்ணையில் அமர்ந்து தான் அக்காலக்கட்டத்தில் பேசு வாராம். ஒலிப் பெருக்கியும் கிடையாது.<br /><br />பெரியார் கூட்டத்திற்கு நான் இன்று தலைமை தாங்கப் போகிறேன். கனக சுப்பரத்தினமும் (புரட்சி கவிஞரின் இயற்பெயர்) கலந்து கொள்ளவேண்டும் என்று நோயல் வேண்டுகோள் விடுத்தார்.<br /><br />பெரியாரின் கருத்துகளோடு எனக்கு உடன்பாடில்லை, அவரிடம் பல வினாக்களை எழுப்புவேன். தகராறுகூட செய்யத் தயங்க மாட்டேன் என்றாராம் புரட்சிக் கவிஞர்.<br /><br />வழக்கம் போல ஒலிப்பெருக்கி இல்லா மல் திண்ணையில் அமர்ந்து பெரியார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசினார்.<br /><br />வந்த 10 பேர்களில் சிலர் கலவரம் செய்யும் எண்ணத்தோடு வந்தார்களாம்.<br /><br />பெரியார் பேச்சில் இருந்த "தரணிக்குத் தேவையான தங்கநிகர் எண்ணங்கள்" (ராஜா ராணி திரைப்படத்தில் பெரியாரை நினைவு கூறும் வகையில் சாக்ரட்டீஸ் பற்றிய கலைஞரின் வசனம்) கேட்டு, புரட் சிக் கவிஞர் பெரியாரின் சீடராக மாறினார்.<br /><br />கலவரம் செய்ய வந்தவர்களும் கட்சித் தொண்டர்களாக மாறினர்.<br /><br />இன்று பெரியவர் நோயல் அவர்களு டன் உரையாடியதை நினைத்துப் பார்க்கி றேன். அங்குலம் அங்குலமாக, அடி அடியாக பெரியார் இந்தச் சமுதாயத்தைத் திருத்த எவ்வாறு பாடுபட்டார் என்பதற்கு பாண் டிச்சேரி நிகழ்வு ஒரு சிறிய அடையாளம் ஆகும்<br /><br />எதிர்ப்புகளை, ஏளனங்களை, கல்வீச் சுகளை, செருப்பு வீச்சுகளை எல்லாம் எதிர் கொண்டு தனது தொடர் பயணத்தை 70 ஆண்டுகள் மேற்கொண்டது போல உல கில் எந்தச் சிந்தனயாளரும், சமூகப் புரட்சி யாளரும் மேற்கொண்டதில்லை எனலாம்.<br /><br />மானுட வளர்ச்சிக்குத் தடையாக ஒட்டிக் கொண்டு வளர்ந்த கடவுளா, மதமா, சாதியா, இவைகளை வளர்ப்பதற்கு ஏற்பட்ட ஆறு கால பூஜைகளா, இதை நிலைநிறுத்த உதவிய சீமான்களா, பூசாரிகளா, ஊர் பெரிய மனிதர்களா யாரைப் பற்றியும் பெரியார் கவலைப்படவில்லை. குறுக்கே காந்தியார் வந்தபோதும் கூட கவலைப்படவில்லை.<br /><br />அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள்.<br /><br />பெரியார் அடித்த அடியில் கோயிலே ஆடிப்போனது.<br /><br />இன்று ஒடுக்கப்பட்ட சமூகத்தினரும் கோயில்களில் அர்ச்சகராக ஆகலாம். அரசுகள் தயங்கியதை, ஆதினங்கள் செய்ய முடியாததைப் பெரியாரும், திராவிட இயக்கமும் செய்து முடித்தது.<br /><br />பெரியாரின் பெரும் பணிகளை இன்று உலகமே உற்றுப் பார்க்கிறது.<br /><br />ஆனால், சிறகொடிந்த சில அரசியல் ஊர் குருவிகள் பெரியார் சிலை மீது எச்சம் இட்டு கீச்! கீச்! என்று கத்துகின்றன.<br /><br />தான்தான் ராஜா என்று எண்ணி கிணற்று தவளைகளும் அருவருப்பான கூச்சல்களை எழுப்புகின்றன.<br /><br />ஆனால் பெரியாரின் சிந்தனைகள் உலகை நோக்கி விரிகின்றன.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-88340136571817272542018-09-22T23:34:14.248+05:302018-09-22T23:34:14.248+05:30பார்ப்பனர் சிறு தொகையினர் தான். ஆனால்...
பார்ப்...பார்ப்பனர் சிறு தொகையினர் தான். ஆனால்...<br /><br /><br /><br />பார்ப்பனரிடம் ஏனய்யா பயம்? அவர்களைக் கண்டு பொறாமை எதற்கு? அவர்கள் 100-க்கு 3 பேர்தானே! நீங்கள் 100-க்கு 97 பேரன்றோ? சிறுபான்மைச் சமூகத்திடம் பெரும்பாலான சமூகம் ஏன் பயங்கொண்டு பாதுகாப்புக் கோர வேண்டும் என்று அடிக்கடி தேசியத் தோழர்கள் கேட்பதுண்டு. அப்படிக் கேட்கும் போதெல்லாம் தங்கள் அறிவின் திறத்தைத் தாமே மெச்சிக் கொள்வர் - அத்தோழர்கள்... சமுகத்தைக் கவனித்தால் பார்ப்பனர் சிறு தொகையினர்; பார்ப்பனரல்லாதாரின் மூச்சு, பாப்பனரைத் திணற வைக்கும்... அவ்வளவு அதிக எண்ணிக்கை உள்ளவர்கள்தான் பார்ப்பனரல்லாதார்.<br /><br />ஆனால் பார்ப்பனீயம் எண்ணிக்கையைப் பொறுத்ததல்ல. இதுவரை அதற்குப் பலவழிகளிலும் தரப்பட்ட படை பலத்தைப் பொறுத்திருக்கிறது.<br /><br />- அண்ணா, (திராவிட நாடு 25.4.1948)<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com