tag:blogger.com,1999:blog-1474608369333206681.post1207663422283929426..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: சாய்பாபா ஜாலம் - பி.சி. சர்க்கார் அம்பலப்படுத்தினார்!தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-53034856030033883352013-04-21T19:20:03.248+05:302013-04-21T19:20:03.248+05:30வகுப்பு நலன் தேடுவது என்றால் நமது நாடு பல வகுப்புக...வகுப்பு நலன் தேடுவது என்றால் நமது நாடு பல வகுப்புகளை உடையதாயிருக்கிறது. ஆதலால் பல வகுப்பாருடைய நலனையும் தேடுவதாய் ஏற்படும்; அப்போது அது முடியாத காரியமாகிவிடும்; ஆதலால் நாட்டுநலம், நாட்டுநலம் என்று பொதுவாய்ச் சொல்லிக் கொண்டிருப்பதுதான் அனுகூலமானது என்று சிலர் சொல்லுகிறார்கள். நமது நாடு பல வகுப்பாரைக் கொண்டதாகவோ எந்தக் காரணத்தினாலோ ஏற்பட்டுப் போய்விட்டது. பல வகுப்பாருக்கும் நம்பிக்கை உண்டாகும்படியாக நடந்து கொள்ள வேண்டியதுதான் நாட்டின் நலன் தேடுவோரின் கடமை.<br /><br />நாட்டுநலன் தேடுவோரின் ஒவ்வொரு திட்டமும் சகல வகுப்பாரின் நம்பிக்கைக்கும் ஏற்றதாய்த்தான் இருக்க வேண்டும். தற்போது நமது நாட்டில் வகுப்பு என்று சொல்லக்கூடிய மாதிரியில் வகுப்புரிமைக்கு ஆவலாயும், ஒன்றுக்கொன்று அவநம்பிக்கையாயும் இருப்பது மூன்றே வகுப்புத்தான். அவை பிராமணர் - பிராமணரல்லாத இந்துக்கள் - பஞ்சமர் என்று சொல்லக் கூடிய மூன்று வகுப்பார்தான். இதை எல்லோருமே சர்க்கார் உள்பட - நாட்டு உரிமை தேடுவோர் உள்பட - எல்லோரும் ஒப்புக்கொண்டாய்விட்டது. ஆந்திரர் - தமிழர் - கர்நாடகர் - கேரளர் என்கிற பிரிவைச்சொல்லி ஜனங் களை ஏய்க்க வேண்டியதில்லை. இவற்றைத் தனித்தனி யாகவே பிரிக்கவேண்டுமென்று காங்கிரஸ் ஏற்பாடு செய்தாகிவிட்டது. காங்கிரஸிலும் அதுபோலவே பிரித் தாகிவிட்டது. ஆதலால் அதைப் பற்றிக் கவலையில்லை. எனவே மேற்சொன்ன மூன்று வகுப்பார்தான் ஒருவருக் கொருவர் அவநம்பிக்கையுடனிருக்கிறார்கள். இவர் களுக்கு உரிமை வழங்கிவிட்டால், இவர்களுக்குள்ளாகவே பல வகுப்புகள் கிளம்பும் என்று சிலர் சொல்லி ஜனங்கள் புத்தியைக் கலைக்கக்கூடும். அப்படியிருந்தாலும், சகல வகுப்பாரின் நலனையும் கவனிக்கத்தகுந்த திட்டம் போடுவதற்கு முடியா தென்று பயப்பட வேண்டியதில்லை. வகுப்புகளுக்குத் தகுந்தபடி உத்தியோகங்களையும் ஸ்தானங்களையும் அமைக்கவும் சௌகரியமிருக் கிறது. 3ஙூ கோடி ஜனங்களுக்குள்ள இங்கிலாந்து பார்லி மெண்டில் 700 மெம்பர்கள் இருந்து ராஜீய பாரம் செய்கிறார்கள். ஆதலினால் நமது நாட்டிலும் சகல வகுப்பாரையும் ராஜீய பாரத்தில் சேர்ப்பது கஷ்டமல்ல. இரட்டை முதல் வகுப்புப் படியும், 5000, 6000 ரூபாய் சம்பளமும் கொடுக்காமல் 3-வது வகுப்புப்படிச் செலவும் 400, 300 சம்பளமும் கொடுத்தால் எல்லாம் சரிக்கட்டிப் போகும். அப்போது அதிகப் போட்டி இருக்காது. ஆதலால் வகுப்புரிமையைப் பற்றி பயப்பட வேண்டியதில்லை. அல்லாமலும், நமது நாட்டில் அதிகமான பிரிவினைகள் இருக்கிறதாக நினைத்துக் கொள்ளுகின்றோமேயல்லாமல், வாஸ்தவத்தில் அளவுக்கு மிஞ்சினதாக ஒன்றுமில்லை. பிராமணர் களும் தாங்கள் ஒரு வகுப்பென்றும், தங்களைத் தவிர மற்றவர்களில் சூத்திரர் - பஞ்சமர் என இரண்டு வகுப்புகள் தான் இருப்பதாக ஒப்புக் கொள்ளு கிறார்கள். பிராமணரல்லாதாரும், மேற்சொன்ன பிராமணரல்லாதார் எல்லாம் ஒரு வகுப்பென்றும், தங்களுக்குக் கீழ் பஞ்சமர் என்று ஒரு வகுப்பும் இருப்பதாகத்தான் ஒப்புக் கொள்ளுகிறார்கள். பஞ்சமர்கள், தாங்கள் ஒரு வகுப்பென்றும், மற்றவர்கள் தங்களுக்கு மேற்பட்ட வகுப் பென்றும் ஒப்புக் கொள்ளுகிறார்கள். இம் மூன்று வகுப்பாரும் தங்களில் ஒருவருக் கொருவர் வித்தியாசமிருப்பதாகக் கற்பித்துக் கொள் ளுவதால், இம்மூவருக்கும் தான் ஒருவருக்கொருவர் நம்பிக்கையுண்டாகும் படி தக்க உரிமைகள் ஏற்பட வேண்டியது மிகவும் அவசியமானதாகும். இம்மூவரும் தங்களுக் குள் ஒருவருக் கொருவர் உயர்வு - தாழ்வு இல்லை; எல்லோரும் சமம்தான்; மனித உரிமையை அடைவதில் நாம் ஒருவருக் கொருவர் உயர்ந்தவர் தாழ்ந்தவர்களல்ல என்கிற உணர்ச்சி வருகிற காலத்தில் வகுப் புரிமையைப் பற்றிய கவலையே வேண்டியது மில்லை. வகுப்பின் பேரில் உரிமையும் கேட்க அவசியம் ஏற்படாது. அப்படிக்கில்லாமல் பல வகுப்பாரும் சேர்ந்து கஷ்டப்பட்டு ஒரு பதவியைச் சம்பாதித்தால், அதை ஒரு வகுப்பாரே அனுபவிப்பதற்கு அனுகூலமாகவும், மற்ற வகுப்பார்கள் சூத்திரர்கள் என்றும், பிற்பட்ட வரென்றும், தீண்டாதார்கள் என்றும், தெருவில் நடக்கவும் - கண்ணில் தென்படவும் அருகர்களல்ல வென்றும், ஒரு வகுப்பார் ஒரு வகுப்பாரால் கருதப் படுகின்ற போது, வகுப்புரிமையைக் கவனிக் காமல் நாட்டுரிமையைக் கவனிக்க வேண்டுமென்று சொல் லுவது நல்லாண்மையல்லாததும், அர்த்தமில் லாததும், பித்தலாட்ட உரிமையாகவுமேதான் முடியும். - குடிஅரசு - துணைத் தலையங்கம் 14.02.1926தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-122002284466794892013-04-21T19:19:56.859+05:302013-04-21T19:19:56.859+05:30
குறள் - தந்தை பெரியார்
நல்லாண்மை யென்பது ஒருவரு...<br />குறள் - தந்தை பெரியார்<br /><br /><br />நல்லாண்மை யென்பது ஒருவருக்குத் தான் பிறந்த<br />இல் ஆண்மை ஆக்கிக் கொளல்.<br /><br />நாயனார் அவர்கள் குறளில், நல்ல ஆண்மை என்பது ஒருவருக்குத் தான் பிறந்த இல்லாண்மை ஆக்கிக்கொளல் என உரைத்திருக்கின்றதையும், அதன் கருத்து ஒருவனுக்கு ஆண்மை என்று சொல்லப் படுவது தன் குடியை உயர்த்திக் கொள்வது என்பதையும் அனைவரும் உணர்ந்திருப்பார்கள். ஆனால் நமது நாட்டில் ஆண்மைக்காகப் பாடுபடுகின் றோமென்று சொல்லிக் கொள்ளுகிறவர்கள் நல் லாண்மை ஏற்பட வேண்டுமானால் வகுப்பு நலனையும் குல நலனையும் மறந்துவிட வேண்டும்; தேசத்தையே பெரிதாக நினைக்க வேண்டும் என்று மனதார அர்த்தமில்லாத மாய வார்த்தைகளைச் சொல்லி, பாமர ஜனங்களாகிய தம் குலத்தாருக்கே துரோகம் செய்து, அவர்களைக் காட்டிக் கொடுத்து, அந்நிய குலத் தாருக்கு ஒற்றர்களாகி, அவர் பின்னால் திரிந்து வயிறு வளர்ப்பதையும், தத்தமக்கு ஆக்கந்தேடிக் கொள் ளுவதையும் நாம் பார்க்கும் போது நமது குலம் எவ்வளவு இழிவான நிலைமையில் இருக்கிறது என்பதும் விளங்கும். தற்கால ராஜீய உலகத்தில் எவனாவது ஒருவன் தன் வகுப்பு முன்னேற்றத்தைப் பற்றிப் பேசுவதும், மற்றும் தாழ்ந்த வகுப்பு முன்னேற்றத்தைப் பற்றிப் பேசுவதும் தேசத் துரோகமெனவும், ஆண்மைத் துரோகமெனவும் மதிக்கப்பட்டுப் போகிறது. இந்நிலையும் நமது நாட்டின் பிற்பட்ட வகுப்பாருடையவும், தாழ்த்தப்பட்ட வகுப் பாருடையவும் ஈனஸ் திதியை விளக்குவ தோடு, முற்பட்ட வகுப்பாருடையவும் உயர்ந்த வகுப்பாருடையவும் ஆதிக்கத்தையும் எடுத் துக்காட்டுகிறது. தமிழ்நாட்டில் நல் லாண்மைக்கென ஏற்பட்ட பத்திரிகைகள் மிகுந்திருந்த போதிலும் அவைகள் முற்பட்ட வகுப்பாருக்கும், உயர்ந்த வகுப்பாருக்கும் பயந்து கொண்டு, வகுப்பு நலனை நாடுவதும், இல்லாண் மையாக்கிக் கொள்ளுவதும் நல்லாண்மை ஆகாதென்றும் சொல்லி தங்கள் பத்திரிகைகளை நடத்தி வருகின்றன. நாட்டில் ஏற்பட்ட ஒவ்வொரு வகுப்பாருக்கும் தங்கள் தங்கள் ஆண்மைகளை அடையவும், நாட்டு நலன்களில் சமஉரிமை அடையவும் மார்க்க மில்லா திருக்கும் போது தேச உரிமையும், நாட்டு உரிமையும் யாருக்கு? வகுப்புரிமை பெற்றால் வகுப்புச் சச்சரவுகளை உண்டாக்கும் எனச் சொல்லிக் கொண்டு பல வகுப்புரிமைகளையும் நாசமாக்கி, ஒரு வகுப்பார் சகல உரிமைகளையும் அடைந்து முன் நிற்பதை மற்ற வகுப்பார் பார்த்துக் கொண்டு அவர்களுக்கு அடிமையாயிருக்க வேண்டும் என்று சொல்லுவதில் எவ்வளவு யோக்கியமிருக்கும்? நமது நாட்டில் பல வகுப்புகளிருந்த போதிலும் ஒவ்வொரு வகுப்பையும் கவனித்து அதற்கு வேண்டிய சுயமரியாதை ஏற்பட்டிருக்கின்றதா? தேசத்திற்கு வரும் ஆக்கம் பல வகுப்புகளுக்கும் சரிவரப் போய்ச் சேர மார்க்க மிருக்கின்றதா? என்பதைக் கவனித்து வேலை செய்தால் அது தேசத்தையே முன்னுக்குக் கொண்டு வந்ததாகும். அப்படிக்கின்றி முன்னாலிருக்கிற வகுப்பாரை மாத்திரம் கூட்டிக்கொண்டு, அவர்கள் மெச்சும்படி அவர்கள் பின்னாலும் திரிந்து கொண்டு, நாட்டுநலம், நாட்டுநலம் என்று சொல்லிக் கொண்டும், வகுப்பு நலத்தைத் தேடினால் நாடு கெட்டுப்போகும் என்றும் சொல்லிக் கொண்டு திரிந்தால் ஒரு நாடு எப்படி முன்னுக்கு வரும்? ஒரு நாடு என்பது, ஒரு நாட்டிலுள்ள பல வகுப்பாரின் சேமத்தையும் பொறுத்ததா? ஒரு வகுப்பாரின் சேமத்தை மாத்திரம் பொறுத்ததா? உண்மை நாட்டுநலம் தேடுவோர் தாழ்ந்த வகுப்பாருடைய நலத்தையும், பிற்பட்ட வகுப்பாருடைய நலத்தையும் தேடுவதைத்தான் நாட்டு நலமென்று நினைப்பார்கள். நாடு என்பது சகல வகுப்பாருக்குமேயொழிய வலுத்த வகுப்பாருக்கென்று மாத்திரம் ஏற்பட்டதல்ல. தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-29974058353563055442013-04-20T17:21:43.636+05:302013-04-20T17:21:43.636+05:30ஆசிரியருக்குக் கடிதம்
பாலியல் வன்கொடுமைகள்
அண்ம...<br />ஆசிரியருக்குக் கடிதம்<br /><br /><br />பாலியல் வன்கொடுமைகள்<br /><br />அண்மையில் திருமதி சுனிதா அவர்களின் சொற்பொழிவைக் கேட் டேன். நான்கு வயது சிறுமி யைச் சின்னா பின்னப் படுத்திய வன்கலவிக் கொடுமைக்காரன் பற்றிக் கேட்க நேர்ந்தது.<br /><br />இதே மாதிரி நிகழ்வுகள் தமிழகத் திலும் நடை பெறுவதை அறிந்து துடிக்காத நல்ல நெஞ்சங்களே இல்லை.விடுதலை, உண்மையிலும் இது பற்றிய செய்திகளைப் பார்த்தேன். பல்லாயிரக் கணக்கானோர் வருத்தப் படுவதுடன் நாம் என்ன செய்ய முடியும் என்று சிந்தித்திருப்பார்கள்.<br /><br />திராவிடர் கழகம் மக்கள் கழகம். முன்னோடியாகச் சிந்தித்துச் செயல் படும் சமுதாய அமைப்பு. நாம் இந்தக் கொடுமைகளை வேரோடு சாய்க்க பகுத்தறிவுடன் சிந்தித்து, சிந்திக்க வைத்துச் செயல் பட வேண்டும்.<br /><br />சிறு வயதில் பாலியல் கொ டுமைக்கு ஆனவர்கள் தான் இந்த மாதிரி மனித நேயமற்றக் கொடுமை களைச் செய்பவர்கள் என்று ஆராய்ச்சி யாளர்கள் சொல்கின்றனர். இதில் நெருங்கிய உறவினர்களின் திருட்டுத் தனமான பாலியல் வன்முறைகள் குழந்தைகளுக்கு ஆழ்ந்த மனக்காயத்தை ஏற்படுத்துவ்தும் அதுவே பிற்காலத்தில் இவர்கள் கொடுமைகள் செய்வதற்கு அடிப்படை என்றும் கருதுகிறார்கள்.<br /><br />சிறு வயதில் பாதிக்கப்பட்டவர்கள் மனக் கொடுமைகளைப் பேசிக் கொட்ட ஒரு அமைப்பு தேவை.மருத்துவர்கள் என்று இல்லாமல் சமூக நீதி ஆர்வலர்கள் ஆங்காங்கே வாரம் ஒரு முறை சந்திக்கவும் , விரும்பியவர்கள் பெயரைச் சொல்லவும், விரும்பாதவர்கள் பெயரைச் சொல்லாமல் குழப்பத்தை மட்டும் எழுதிக் கொடுத்து அதைப் பற்றி அனைவரும் பேசுவதும் பலன் தரும். மன அமைதிக் குழுக்கள் என்று பொதுவாக இருந்தால் அனைவரும் பங்கேற்க முடியும்.<br />குழந்தைகளுக்குப் பெரியார் பிஞ்சு இதழில் போட்டிகள் வைத்து சிறந்த வற்றை ஒவ்வொரு இதழிலும் போட்டுப் பரிசும் கொடுக்கலாம். திருக்குறள் கதைகள் ,கட்டுரைகள் போட்டிகள் வைத்து ஆங்காங்கே " பெரியார் பிஞ்சு" நிகழ்ச்சிகள் நடத்தினால் பெரியார் பிஞ்சுக்கும் விளம்பரம் கிடைக்கும், செய்திகளும் போய்ச் சேரும்ஆங்கே குழந்தைகள் மற்றவர்களிடம் கவனமாக இருக்க வேண்டியதையும் சொல்லிக் காட்டலாம்.<br /><br />இங்கு அமெரிக்காவிலே பல நகரங்களில், தமிழ்ச் சங்கங்களும், தமிழ்ப் பள்ளிகளும் ஆண்டு தோறும் திருக்குறள் போட்டிகள் வைத்துப் பரிசளிப்பதில் குழந்தைகளின் பங்கேற்பு பெரிதும் வளர்ந்துள்ளது.<br /><br />இதைத் தமிழகமெங்கும் கொண்டு சென்றால் நல்லது. நான் ஆங்கிலத்தில் எழுதியுள்ள நூல் போலத் திருக்குறள் கதை நூல்கள் பல வரவேண்டும். குழந்தைகள் ஆர்வமுடன் படிக்கும் படியான சிறு நூல்கள் நல்ல பலன் தரும். சிறந்த நூல்களுக்குப் பரி சளிப்போம்.<br /><br />என்னை இந்த அளவிற்குச் சமுதாயப் பணிகளில் ஈடு படத் தூண்டிய பெரியார் அய்யாவின் எழுத்துக்களுக்கும், அயராத உழைப் பால் அனைவரையும், முக்கியமாக என்னுடைய சிந்தனை செயல்பாடு களை ஊக்கப்படுத்திய ஆசிரியர் அய்யா வீரமணி அவர்களுக்கும், தங் களையே அர்ப்பணித்துக் களப்பணி செய்யும் கருப்பு மெழுகுவர்த்தி களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.<br />பெரியார் மகளிர் அணியின் சாதனைகளுக்குத் தலை வணங்கு கின்றேன். கோவை மாநாட்டின் பலன் பலருக்குக் கிடைக்கட்டும்.<br /><br />- சரோ இளங்கோவன்<br />அமெரிக்காதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-46250639720550172432013-04-20T17:21:06.274+05:302013-04-20T17:21:06.274+05:30
மொழியைப்பற்றி...
தமிழனைப்பற்றித் தமிழ் மக்கள் நல...<br />மொழியைப்பற்றி...<br /><br />தமிழனைப்பற்றித் தமிழ் மக்கள் நலம், தமிழ் மக்கள் தன்மதிப்பு என்பதல்லாமல் வெறும் மொழியைப்பற்றி நான் எவ்விதப் பிடிவாதம் கொண்ட வனுமல்ல.<br />(குடிஅரசு, 26.1.1946)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-74394807922183654192013-04-20T17:18:56.916+05:302013-04-20T17:18:56.916+05:30எங்கே போகிறது பகுஜன்?
15ஆவது மக்களவைக்கான தேர்தல்...எங்கே போகிறது பகுஜன்?<br /><br />15ஆவது மக்களவைக்கான தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதற்குள் அரசியல் கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பி விட்டன. உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 36 பேர்களில் 18 பேர் பார்ப்பனர்களாம்.<br /><br />கன்சிராம் பகுஜன் சமாஜ் கட்சி தொடங்கியதன் நோக்கம் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் (பகுஜன்) தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும், சிறுபான்மை யினரும்தான்; இவர்கள் கைகளில்தான் ஆட்சி அதிகாரம் வர வேண்டும் என்ற நோக்கில்தான் பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார். அந்த அடிப்படையில்தான் மாயாவதி, உ.பி. முதல்வரும் ஆனார். ஆனால் இப்பொழுது என்னடா என்றால் 50 விழுக்காடு இடங்கள் பார்ப்பனர்களுக்காம்! நாடு எங்கே போகிறது? பதவி வந்தால் பத்தும் பறக்கும் என்பார்களே, அது இதுதானோ!தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-47920444141852391492013-04-20T17:14:51.839+05:302013-04-20T17:14:51.839+05:30
தூக்கமும் சோர்வின்மையும்
சரியான தூக்கமில்லாதவர்...<br />தூக்கமும் சோர்வின்மையும்<br /><br /><br />சரியான தூக்கமில்லாதவர்கள், சோர்வுடனும், வேலையில் ஆர்வம் இல்லாமலும், அலுத்துக் கொண்டு இருப்பதை பார்க்கமுடியும். ஆனால் விஞ்ஞானிகள், சில இரவில் 4 அல்லது 5 மணிநேரமே தூங்குபவர்கள், உடல் நலத்துடனும், சோர்வு இல்லாமலும், எரிச்சல்பட்டு செயல்படாமலும், நம்பிக்கையாளர்களாகவும், சுறுசுறுப்புடனும் இருக்கும் பருமன் இல்லாத மனிதர்களைக் கண்டு ஆய்வு நடத்தினர். இப்படிப்பட்ட மனிதர்கள், தேனீர், காப்பி போன்றவற்றை குடிக்காமலும், ஒரு நாளில் இடை சிறு தூக்கமில்லாமலும், சலைக்காமல் ஒன்றுக்கு இரண்டு வேலை செய்யக்கூடியவர்களாகவும் உள்ளனர். இதற்குக் காரணம் என்ன என்பதை, அமெரிக்க நாட்டு கலிபோர்னியா விஞ்ஞானிகள், கலிபோர்னியாவிலுள்ள ஒரு குடும்பத்தில் உள்ளவரிடம் ஆய்வு செய்தனர். டி.என்.ஏ. சோதனையில் இத்தகையவரிடம் அவர்களின் மரபணுவில் சிறுமாற்றம் மற்ற குடும்ப உறுப்பினர்களிடம் இல்லாத வகையில் உள்ளதைக் கண்டனர். இப்படி குறைந்த தூக்கத்துடன் சுறுசுறுப்பாக இருப்பவர் 100க்கு 1 இருந்து 3 பேராக உள்ளனர். இவர்கள் டி.என்.ஏ. சோதனைக்குத் தங்களை உட்படுத்திக் கொள்ள முன்வரவேண்டும் என்று விஞ்ஞானிகள் விரும்புகின்றனர். ஆய்வாளர்கள், தங்கள் ஆய்வு மூலம் குறைந்த தூக்கமுள்ளவர்கள் மேலும் சில மணி நேரம் தூங்குவதற்கு, உடல் பாதிப்பு ஏதுமில்லாத மருந்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று முயற்சிக்கின்றனர்.<br />- மு.வி. சோமசுந்தரம்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-55774494752347474762013-04-20T17:11:36.710+05:302013-04-20T17:11:36.710+05:30
தமிழன் தொடுத்த போர்
(தமிழன் தொடுத்த போர் நூலில்...<br />தமிழன் தொடுத்த போர்<br /><br /><br />(தமிழன் தொடுத்த போர் நூலில், 10ஆம் பக்கத்தில் இருப்பது)<br /><br />சமஸ்கிருதம் எனும் ஆரிய மொழி, அதனைத் தாய்மொழியாகக்கொண்ட ஆரியர், அந்த ஆரியர் போற்றி வளர்த்த வேத புராண இதிகாசக்கலை, அந்தக் கலையிற் பிறந்த ஆரிய வருணாசிரம நாகரிகம் - இவற்றின் கூட்டுத் தொகைதான் தமிழன் சீர்கேடு.<br /><br />இதை எந்தத் தமிழனும் - அவன் எந்த அரசியல் கட்சியில் இருந்தாலும் சரி - மறந்து விட முடியாது. ஒரு வேளை சூழ்நிலையின் காரணத்தால் மறுக்க நேர்ந்தாலும் மறுக்க முடியாது. தவறி மறுப்பானாயின் அவன் தமிழனாய் இருக்க முடியாது. எதை வேண்டுமானாலும் தமிழன் பொறுத் துக் கொண்டிருப்பான்.<br /><br />ஆனால் யாரேனும் தன் உயிர் நாடியை அழிக்கத் தொடங்கினால் - தன் தாய் மொழியை வளமிழக்கச் செய்தால் - தமிழுக்கு ஆபத்துச் சூழ்ந்தால் - அதை மட்டும் அவன் பொறுக்க மாட்டான்.<br /><br />இது அவனுக்கு வரலாறு புகட்டிய பாடம்.<br /><br />ஆரிய நாகரிகம் தமிழன் வாழ்வைச் சிதைக்கத் தொடங்கிய அந்தக் காலத்தில் முதன்முதல் ஆரியத்தின் நோக்கம் தமிழன் மொழி மீதுதான் பாய்ந்தது.<br /><br />தமிழன் தன் மொழியை இழந்தால் பிறகு தன் கலையை, வாழ்வை, நாக ரிகத்தை, நாட்டை ஆகிய அத்தனை யையும் இழந்து விடுவான் என்பதை நன்குணர்ந்த அந்த நாள் ஆரியம் எடுத்த எடுப்பில் தமிழ் மொழியை வீழ்த்தத்தான் திட்டமிட்டது,<br />ஆரியச் சூழ்ச்சியின்<br /><br />விளைவாகத் திருமுதுகுன்றங்கள்<br />விருத்தாசலங்களாயின.<br /><br />மறைக்காடுகள் வேதாரண் யங்களாய் உருவெடுத்தன.<br /><br />திருக்கழுக்குன்றங்களும் திருவானைக்காக்களும், பஷி தீர்த்தங்களாய் ஜம்பு கேஸ்வரங்களாய் மாற்று வடிவம் அடைந்தன.<br />நெடுஞ்செழியன் என்றும்<br /><br />செங்குட்டுவன் என்றும்.<br /><br />இளமுருகன், இளவழகன், இளஞ் செழியன், இளவெயினி, இராவணன் (இரா. வண்ணன் - கருப்பு நிறத்தான்) என்றும் கண்ணகி காவற் பெண்டு காக்கை பாடினியார் ஒக்கூர் மாசாத் தியார் வெண்ணிக்குயத்தியார் என்றும், கீரன் இளங்கீரன் நச்சினார்க்கினியன் மாறன் பொறையன் ஒரே ருழவன் பிசிராந்தை என்றும், பாசி ஓரி ஆய் அதியமான்<br /><br />கோச்செங்கணான் கோவூர் கிழான் கரிகாலன் என்றும்,<br /><br />மாவளவன் மலையமான் மதியழகன் மணிமொழியன் மணக்குடவன் என்றெல்லாம் இனிய அழகிய தூய தண்தமிழ்ப் பெயர் வாய்ந்திருந்த தமிழர்.<br /><br />ஆரியருடைய மயக்குரையால் ஏமாந்து, அவர்தம் மொழிவழிச் சென்று, அவர் இசைத்ததை இன சத்துத் தம் பெயரைச் சடாசூடி ரரூபன் என்றும்,<br />சஹஸ்ரநாமம் என்றும்,<br /><br />ஸ்வயம்பு என்றும்<br /><br />லஷ்மிகாந்தன் என்றும்<br /><br />- க.பழநிசாமி, திண்டுக்கல் தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-87752551307168868822013-04-20T17:06:00.451+05:302013-04-20T17:06:00.451+05:30
எங்கே செல்லுகிறது சமூகம்?
ஒரு மாத விடுமுறை.. தற...<br />எங்கே செல்லுகிறது சமூகம்?<br /><br /><br />ஒரு மாத விடுமுறை.. தற்காலிக மனைவி.. போகும் போது விவாகரத்து!<br /><br />வளைகுடா மற்றும் ஆப்பிரிக்கா விலிருந்து வரும் ஆண்களுக்கு இந்தியாவில் பல பெண்கள் ஒப்பந்த திருமண முறை மூலம் பாலியலுக் காக இரையாகி வருகிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி யுள்ளது. அதாவது ஒரு மாதம் வரை இந்தியாவில் தங்குவது, அந்த காலகட்டத்தில் ஒப்பந்த திருமணம் என்ற பெயரில் மைனர் பெண்களை மனைவிகளாக்கி, இச்சையைத் தீர்த்துக் கொண்டு போகும்போது விவாகரத்து கொடுத்து விட்டுப் போகும் செயல் சத்தம் போடாமல் அரங்கேறி வருகிறதாம். 17 வயது சிறுமியின் மூலம் இந்த அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒரு மாத காலத்திற்கு தாங்கள் மனைவி யாக நடிப்பதாக அந்தப் பெண் கூறியுள்ளார்.<br /><br />பாலியலுக்கான டூரிசம் இந்த கொடுமைக்கு இவர்கள் வைத்துள்ள பெயர் பாலியல் டூரிசம். ஒரு மாதம், 2 மாதம் என மேற் கண்ட நாடுகளிலிருந்து பெரும் பணக்காரர்கள் பண மூட்டையுடன் இந்தியா வருகின்றனர். இங்கு அவர்கள் விரும்பும் வயதுடைய பெண்களைக தற்காலிக மனைவி களாக்கி பணம் பார்க்கின்றனர் இங்குள்ளவர்கள்.<br /><br />ஹைதராபாத்தில்தான் அதிகம்<br /><br />இந்த அக்கிரமச் செயல் ஹைத ராபத்தில்தான் அதிகமாக நடக் கிறதாம். அதிலும் ஏழைகளான, சிறுபான்மையின பெண்களைக் குறி வைத்தே இந்த கொடுமை நடக்கிறது.<br /><br />வறுமையைப் பயன்படுத்தி...<br /><br />குறிப்பாக வறுமையின் கோரப் பிடியில் சிக்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகளை இவர்கள் அடையாளம் கண்டு பணத்தாசை காட்டி வலையில் வீழ்த்துகின்றனர். இந்த செயலில் உள்ளூர் ஏஜென் டுளும் கை கோர்த்து செயல்படு கின்றனர்.<br /><br />அம்பலப்படுத்திய நவ்ஷீன் தபஸம் 17 வயதான நவ்ஷீன் தபஸம் என்ற சிறுமிதான் இந்த அவல கல் யாணத்தை வெளியில் அம்பலப் படுத்தியுள்ளார். கடந்த மாதம் இவர் ஒரு சூடான் பணக்காரரின் பிடியி லிருந்து தப்பி ஓடி வந்து தனக்கு நேர்ந்த கதியை வெளியில் சொன்னார்.<br /><br />நான்கு வார மனைவி<br /><br />கடந்த மாதம்தான் சூடானைச் சேர்ந்த மிகப் பெரிய பணக்காரருக்கு தற்காலிக மனைவியாக அனுப்பப் பட்டார் இந்த சிறுமி. பெற்றோரே வலியுறுத்தி அனுப்பியுள்ளனர். நான்கு வார காலத்திற்கு மனைவியாக இருப்பதற்காக இவர் அனுப்பி வைக்கப்பட்டார். இதற்காக அவரது குடும்பத்திற்கு ரூ. 1 லட்சத்து 486 பணம் கொடுத்துள்ளனர்.<br /><br />44 வயது சூடான் பணக்காரர்...<br /><br />நடந்தது குறித்து காவல்துறையில் தபஸம் கூறுகையில், என்னை ஒரு ஹோட்டலுக்கு எனது அத்தை அழைத்துச் சென்றார். அங்கு என்னைப் போல மேலும் சில சிறுமிகள் இருந்தனர். எங்களை சூடானைச் சேர்ந்த 44 வயதான உஸ்மான் இப்ராகிம் முகம்மது என்பவருக்கு அறிமுகப்படுத்தினர். அவருக்கு சூடானில் கல்யாணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளன ராம்.<br /><br />கல்யாணம் செய்து வைத்து...<br /><br />கமிஷன் அடித்து.. பின்னர் அந்த சூடான்காரர் என்னைத் தேர்வு செய்தார். இதையடுத்து எனக்கும், அந்த சூடான்காரருக்கும் ஹைதாரா பாத்தைச் சேர்ந்த ஒரு காஜி திருமணம் செய்து வைத்தார். எனது அத்தையிடம் ரூ. 1 லட்சம் பணத்தைக் கொடுத்தனர். அதில் ரூ. 25,000 எடுத்துக் கொண்டு மீதப் பணத்தை அத்தை எனது வீட்டில் கொடுத்தார். காஜிக்கு ரூ. 5,000 கொடுத்தனர்.<br /><br />அடுத்த நாள் வீட்டுக்கு வந்தார்<br /><br />திருமணத்தைத் தொடர்ந்து அடுத்த நாள் சூடான்காரர் எனது வீட்டுக்கு வந்தார். என்னுடன் உறவுக்கு முயற்சித்தார். நான் மறுத்து விட்டேன். பின்னர் என்னை எனது வீட்டார் மிரட்டினர். பிறகு நான் தப்பி வந்து விட்டேன்.<br /><br />ஆப்பிரிக்கர்களே அதிகம்<br /><br />தபஸத்தைப் போல பல சிறுமிகளை இப்படிப் பணத்திற்காக தற்காலிக மனைவிகளாக்கி வருவோர் ஹைதராபாத்தில் அதிகம் உள்ளனராம். மேலும் ஆப்பிரிக் கர்களே பெரும்பாலும் அதிக அளவில் பணத்தைக் கொடுத்து தற்காலிக மனைவிகளைப் பெற்று லீவு முடியும் வரை செக்ஸ் நட வடிக்கையில் ஈடுபடுகிறார்கள் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.<br /><br />மதம், பக்தி என்று எவ்வளவோ பிரச்சாரம் செய்யப்படுகிறதே - இவை எல்லாம் இதற்குள் அடங்குமோ!<br /><br />பாரத புண்ணிய பூமியின் 22 காரட் பண்பாடு இது தானோ!<br /><br />ஓ, அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி தானே பாரதப் பண்பாடு?தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-18689512551201924262013-04-20T17:04:46.839+05:302013-04-20T17:04:46.839+05:30இப்போதும் தினமும் என் செண்பகவள்ளியை வணங்கி விட்டுத...இப்போதும் தினமும் என் செண்பகவள்ளியை வணங்கி விட்டுத்தான் மற்ற பணிகளுக்குச் செல்வேன். சில நேரங்களில் ஆக மத்திற்காக பூசகரை வைத்து வழி பாடு நடத்துவேன். ஆண்டுக்கொரு முறை மகள்களும், மருமகன்களும் மட்டும் வந்து வணங்கிச் செல் வார்கள் என்றார்.<br />இந்தச் செயல்பாடுகளில் பல உண்மைகள் தெரிய வரும். கோயில் என்றால் அது என்னவோ பெரிய சக்தி மாதிரி வெளியில் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மையை நாம் உணர வேண்டும். மன்னருக்கு முடிந்ததால் மனைவிக்கு தாஜ்மகால் கட்டினார். இவருக்கு முடிந்ததால் மூன்று லட்சத்தில் கோயில் கட்டியிருக்கிறார் என் பதைத் தவிர வேறொன்றுமில்லை. அதே போல் நான்கு புறமும் சுற்றி வருவதால் இயல்பாகவே ஆண் களுக்கு பக்தியில் நம்பிக்கை இல்லை. ஆனால் பெண்களுக்கு அதை விட்டால் வேறு வழியே இல்லை என்பதுபோலவும் அதே நேரத்தில் அவர்கள் அறிந்தது அவ்வளவுதான் என்கிற அளவில் பக்தியைக் கைக்கொண்டிருக்கிறார்கள்.<br /><br />மேலும் சுப்பையா மட்டும் மணியடித்துக் கொண்டிருந்தால் யாரும் அந்தப் பக்கம் திரும்பியும் பார்க்க மாட்டார்கள் என்பதால் ஆகம விதிப்படி என்று சொல்லி பூசகரை வரவழைத்து பூசைகள் செய்வது. அந்தக் கோயில் இல்லை என்றால் அவர் வேறு கோயிலுக்குச் சென்று மனைவியை நினைத்து உருகிக் கொண்டிருப்பார். மனநிலை பாதிக்கப் பட்டிருப்பார் என்பது தானே உண்மையாக இருக்க முடியும்.<br /><br />அதேபோல் இன்றைக்கு உருவாக்கி வைத்திருக்கும் கிரில் கேட்டும் கல்வெட்டும்தான் நாளைய வரலாறு. இன்றைக்கு மகன்கள் வரவில்லை என்றபோதிலும் நாளை அவர்களது பிள்ளைகள் வரும் போது நம் பாட்டி என்று வணங்குவார்கள். அவர்களது பிள்ளைகள் வரும்போது முன்னோர் தெய்வமாக்கப்பட்டு விடுவார் செண்பகவள்ளி. இப்படித்தான் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வோர் இடத்திலும் கோயில்கள் உருவாகி இருக்கின்றனவே தவிர வேறொ ன்றுமில்லை. அந்தக் கோயில்களால் மட்டுமல்ல எந்தக் கோயிலாலும் ஊருக்கும் மக்களுக்கும் எதுவும் நடந்து விடப்போவதில்லை. ஒன்று மட்டும் நடக்கும் என்பது உண்மை.<br /><br />அதாவது சிறிய கோயிலாக இருந்து பிரபலமானால் கோயில் பூசகருக்கு மட்டும் வருமானம். அதுவே பெரிய கோயிலாகி விட்டால் பார்ப்பன இனத்துக்கே வருமானம் தரும் கோயிலாக நம் துணையோடு மாற்றப்பட்டு விடும். அதில் பார்ப்பானின் பணமோ உடல் உழைப்போகூட இருக்காது. எனவே கோயில்களின் தன்மை அறிந்து ஒதுங்கிக் கொள்வது ஒன்றே நமக்கும் அடுத்த தலைமுறைக்கும் நல்லது.<br /><br />- - புதுக்கோட்டையிலிருந்து கண்ணன்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-66084570174096112132013-04-20T17:04:41.269+05:302013-04-20T17:04:41.269+05:30அதன்படி என்மனைவியின் போட்டோவைக் கொடுத்து சிலை செய்...அதன்படி என்மனைவியின் போட்டோவைக் கொடுத்து சிலை செய்யச் சொன்னேன். கிட்டத்தட்ட முக்கால்வாசி அவருடைய உரு வத்தை ஒத்து வந்தது. ரூபாய் 2-லட்சம் செலவில் அய்ம்பொன் சிலை கும்பகோணத்தில் செய்யப் பட்டது. திறப்பு விழாவிற்கு மகன்கள் நான்கு பேருமே வர மறுத்து விட்டார்கள். மகள்களும் மருமகன்களும் மட்டும் வந்தாரகள். திறப்பு விழா செய்தேன். இன்றுவரை தினமும் வழிபட்டு வருகிறேன். எனக்கு தெய்வமாய் இருந்து வழிகாட்டி வருகிறார்.<br /><br />மகன்களுக்கு மட்டும் இந்தக் கோயில் கட்டுவதிலோ வழிபாடு நடத்துவதிலோ விருப்பமே இல்லை. அதனால் எந்தச் செலவுக்கும் பணம் தர மறுத்து விட்டார்கள். ஆனாலும் மகன்கள் பெயர்கள் எல்லாம் வருகிறமாதிரி கிரில் சன்னல்களும் கல்வெட்டுக்களும் வடிவமைத்து விட்டேன். பிற்காலத்தில் அவர்களது பெயர்களும் நிலைக்க வேண்டும் என்பதற்காக. எனது சொந்தப் பணத்தைப் போட்டுத்தான் சிலை வடித்தேன் கோயிலும் கட்டினேன். எல்லாமுமாக மூன்று லட்ச ரூபாய் செலவானது.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-81613038172083283812013-04-20T17:04:25.086+05:302013-04-20T17:04:25.086+05:30
இப்படித்தான் கோயில்கள் தோன்றினவோ!
மனைவி செண்பகவ...<br />இப்படித்தான் கோயில்கள் தோன்றினவோ!<br /><br /><br />மனைவி செண்பகவள்ளியின் சிலைக்கு தீபாராதணை காட்டும் சுப்பையா<br /><br />இப்படித்தான் கோயில்கள் தோன்றினவோ! புதுக்கோட்டை நகரப்பகுதிக்குள் இருக்கும் உசிலங்குளம் ஏழாம் வீதியில் உள்ளவர் சுப்பையா. இவர் தொலைபேசித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் . இவர் தன் மனைவிக்குக் கோயில் கட்டி அதில் மனைவியின் சிலையை நிறுவி மற்ற கோயில்களில் நடக்கும் ஆகம விதிப்படி இங்கும் பூசைமுறைகளைக் கையாண்டு மனைவியை வணங்கி வருகிறார் .<br /><br />இது குறித்து சுப்பையாவிடம் கேட்டபோது என் அப்பா மன்னர் காலத்தில் கையெழுத்துப் போடத் தெரிந்த காரணத்தால் அப்போதே காவல் துறையில் வேலையில் சேர்ந்து விட்டார் . 1958-ஆம் ஆண்டு ஓய்வு பெற்று விட்டார் . நான் பிறந்தது 1.7.1935இ-ல். என் மனைவி செண்பக வள்ளி பிறந்தது 23.3.1943. அவர் எனக்கு தாய்மாமன் பொண்ணு. ஏழெட்டு வயதாக இருக்கும்போதே என் வீட்டுக்கு அடிக்கடி வருவாள். அந்தப் பழக்கமானது வாலிபப் பருவத்திலும் தொடர்ந்ததால் எனது 21-ஆவது வயதில் இருவருக்கும் பெற்றோர் திருமணம் செய்து வைத்தார்கள். அப்போது நான் தொலைபேசித்துறையில் பணி புரிந்து வந்தேன். எங்களுக்கு ஆண் குழந்தைகள் 5 பெண்குழந்தைகள் 5-என பத்துக் குழந்தைகள் பிறந்தனர் . அவர்களில் ஆண் ஒன்றும் பெண் ஒன்றும் இறந்து விட, இருப்பது எட்டுப்பேர் . அனைவருக்கும் திரு மணம் ஆகி விட்டது. அனைவரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். மக்கள் மருமக்கள் அனைவரும் அர சுப் பணிகளிலும் தொழில்துறை களிலும் இருக்கிறார்கள்.<br />எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்போம். ஒருநாள்கூட ஒருவர் மீது ஒருவர கோபப்பட்டது கிடையாது. கடந்த 7.9.2006இ-ல் என் மனைவி செண்பகவள்ளி உடல் நலக்குறைவால் இறந்து விட்டார் . அவரது பிரிவு என்னை மிகவும் பாதித்து விட்டது. இந்நிலையில் அவருக்கு ஒரு கோயில் கட்ட நினைத்து மகன்களிடம் சொன்ன போது யாரும் ஒத்துக் கொள்ள வில்லை. மகள்கள் மட்டும் ஒத்துக் கொண்டார்கள்.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-88406164945165829442013-04-20T17:00:33.563+05:302013-04-20T17:00:33.563+05:30
இவர்கள் ஏமாற்றுக்காரர்கள்!
இந்த நாட்டில் எதற்கு...<br />இவர்கள் ஏமாற்றுக்காரர்கள்!<br /><br /><br />இந்த நாட்டில் எதற்கு கதை எழுதி வைக்கப்படவில்லை; எதற்கு காரணங்கள் கூறப்படவில்லை; தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்திலே வேதாரணியத்திற்கு அருகாமையிலே கோடியக்கரை என்று ஒரு ஊர் இருக்கிறது ஒரு காடு இருக்கிறது. அந்த காட்டிலே ஒரு கருங்கல்லிலே இரண்டு பாதங்களை செதுக்கி வைத்து இருக்கிறார்கள். இன்றைக்குச் சுற்றுலாப் பயணிகள் யாராவது போய் இது என்ன? கருங்கல் பாதம் என்று கேட்டால் இங்கே நின்று கொண்டு தான் இராமர் இலங்கையைப் பார்த்ததார் என்று சொல்கிறார்கள்.<br /><br />திரவுபதி மஞ்சள் குளித்தாளா?<br /><br />சென்னைக்கு அருகிலே உள்ள மாமல்லபுரம்; மகாபலுபுரம் என்று தான் சொல் வழக்கு ஆனால் உண்மையான பெயர் மாமல்லபுரம். மாமல்ல பல்லவனால் உருவாக்கப்பட்டநகரம். அந்த மாமல்லபுரத்திற்கு சென்றால் அங்கே இருக்கின்ற பாறைகளைப் பார்த்தால் அங்கே ஒரு பாறை பெரிதாக உருண்டு திரண்டிருக்கும் அந்த வழிகாட்டி நமக்கு விளக்கம் சொல்லுவார். உருண்டு திரண்டு இருக்கும் இந்தப் பாறை என்ன தெரியுமா? இது கிருஷ்ணனுக்காக உருட்டி வைக்கப்பட்ட வெண்ணெய்! என்பார். வெண்ணையையும் தொட்டுப் பார்த்து பாறையையும் தொட்டுப்பார்த்தது அதை நம்பினால் அவர்களைவிட முட்டாள் யாராவது இருக்க முடியுமா என்று நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். இன்னொரு இடத்திலே ஒரு பாறையிலே வெடிப்பு ஏற்பட்டு மழை பெய்த தண்ணீர் அதிலே தேங்கி இருக்கும்.<br /><br />இது என்ன என்று? கேட்டால் இங்கே தான் திரவுபதி மஞ்சள் குளித்தாள்! என்று சொல்லுவார்கள். இப்படி எதற்கும் ஒரு காரணம்- ஒரு விளக்கம். இவை அத்தனையும் தங்கள் பிழைப்பிற்காக என்று கணக்கிட்டுக் கொண்டு காரியங்கள் நாட்டிலே நடைபெற்று ஒரு பெரிய இனம் அதன் காரணமாக ஏமாந்து கிடக்கும் காட்சியை இன்றைக்கு நாம் காண்கிறோம்.<br /><br />(20.5.83 வெள்ளியன்று பெங்களூருவில் நடைபெற்ற முருகேசன் இல்ல மணவிழாவில் டாக்டர் கலைஞர் ஆற்றிய உரையிலிருந்து)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-56800895727782493092013-04-20T07:08:19.562+05:302013-04-20T07:08:19.562+05:30தோண்டத் தோண்ட தமிழர் எலும்புக் கூடுகள்! தமிழர்களை ...தோண்டத் தோண்ட தமிழர் எலும்புக் கூடுகள்! தமிழர்களை உயிரோடு புதைத்த கொடுமை!!<br /><br />கோத்தபாய ராஜபக்சே பொறுப்பென்று சாட்சியம் அளித்த சிங்களப் பெண்!<br /><br />கொழும்பு, ஏப். 16- சிங் களவர் அதிகம் வசிக்கும் மாத்தளை பகுதியில் நூற்றுக் கும் மேற்பட்ட மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரத்தில் மகிந்த ராஜ பக்சேவின் தம்பி கோத்தபாய ராஜபக்சேவை குற்றம்சாட்டி சிங்களப் பெண்மணி ஒருவர் அளித்துள்ள வாக்கு மூலம் அதிர வைத்திருக்கிறது.<br /><br />மாத் தளைபகுதியில் மருத்துவமனை கட்ட மண் தோண்டிய போது தோண்டத் தோண்ட மனித எலும்புக் கூடுகள் வெளிவந்தன. இந்த எலும்புக் கூடுகள் 1980-1989 ஆம் ஆண்டு காலப் பகுதியில் புதைக்கப்பட்டதாக இருக்கலாம் எனக் கருதப் படுகிறது. இந்தக் கால கட்டத் தில் அப்பகுதியில் லெப்டினன்ட் கர்னலாக பதவி வகித்தவர் கோத்தபாய ராஜபக்சே. அத னால் அவர்தான் இந்தப் படு கொலைக்கு காரணமாக இருக் கலாம் என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.<br /><br />இந்நிலையில் சிங்கள தாய் கமலாவதி என்பவர் மாத்தளை மனித புதை குழி தொடர்பாக அளித்திருக்கும் வாக்குமூலம் கோத்தபாய ராஜபக்சேவின் கோர முகத்தை வெளிப்படுத்து கிறது. அவர் தமது வாக்குமூலத் தில் கூறியுள்ளதாவது: 1989ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி மாத்தளையில் உள்ள விஜய வித்தியாலயா என்னும் பள்ளிக் கூடத்துக்கு அருகே இருந்த வீடுகளை, இராணுவம் சுற்றி வளைத்தது. அப்போது எனது இரண்டு மகன்களுக்கு மதிய உணவைக் கொடுத்துக் கொண்டு இருந்தேன். வீட்டுக் குள் நுழைந்த ராணுவத்தினர், மகன்கள் இருவரையும் பலவந்த மாக இழுத்துக்கொண்டு சென் றனர். அருகில் உள்ள ரெஸ்ட் ஹவுஸ் என்ற முகாமுக்கு முதலில் சென்றனர்.<br /><br />இராணுவத்தின் வாகனத் துக்கு பின்னால் நான் ஓடிச் சென்று அவர்கள் அந்த முகா மிற்குள் செல்வதனை பார்த் தேன். மீண்டும் மறுநாள் அங்கு சென்று மகன்கள் இருவரையும் பார்க்கவேண்டும் என்று மன் றாடினேன். ஆனால் முகாமுக் குள் செல்ல அனுமதிக்கப்பட வில்லை. இதனைத் தொடர்ந்து அவர், உள்ளூர் அரசியல்வாதி யான எக்கநாயக்கவை தொடர்பு கொண்டேன்.<br /><br />அவர் தமது செயலாளரை அந்த முகாமுக்கு அனுப்பி விசாரித்து விட்டு, லெப்டினன்ட் கர்னல் கோத்தபாயவிடம் பேசிவிட்ட தாகவும் இனி நீங்கள் உங்கள் மகனைப் பார்க்கலாம் என்றும் கூறினார். இதனை நம்பி நானும் அந்த முகாமுக்கு மீண்டும் சென்றேன். ஆனால் என்னைப் பார்க்க கோத்தபாய மறுத்துவிட்டார். மேலும் உங்களது இரண்டு மகன்களும் வேறு முகாமுக்கு மாற்றப்பட்டுவிட்டதாகக் கூறி அலைய வைத்தனர்.<br /><br />இதுவரைக்கும் எனது மகன்கள் வீடு திரும்பவில்லை. மாத்தளையில் அவர்களோடு சிறையில் இருந்த சிலர் விடுதலையாகி வெளியே வந்த போது என் மகன்கள் ரெட் பானா சித்திரவதை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. ரெட் பானா முகாமில் ஜேவிபியினர் எனக் கருதி மகன்கள் சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டு மாத்தளையில் புதைக்கப்பட்டி ருக்கலாம். தற்போது கண்டெ டுக்கப்பட்ட 150 எலும்புக் கூடுகளுக்குள் எனது மகன் களின் எலும்புக் கூடும் இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது. அதனால் டி.என்.ஏ. சோதனை நடத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.<br /><br />1989ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை ராணுவத்தில் இருந்து விலகிய கோத்தபாய ராஜபக்சே அமெரிக்கா சென்று விட்டார். அங்கே கிரீன் கார்ட்டை எடுத்துக்கொண்ட அவர், தனது சகோதரரான மகிந்த ராஜபக்சே தீவிர அர சியலில் இறங்கிய பின்னரே இலங்கைக்கு திரும்பி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-27298882036529931952013-04-20T07:06:20.548+05:302013-04-20T07:06:20.548+05:30மாற்றம்
வேதனை தரும் அந்தச் செய்தியைக் கேட்டதில் ...மாற்றம்<br /><br /><br />வேதனை தரும் அந்தச் செய்தியைக் கேட்டதில் இருந்து நல்லசிவத்தின் இதயத்துடிப்பு வேகம் அதிகரித்துக் கொண்டே போனது. சில நேரங்களில் நெஞ்சை இடது கையால் பிடித்துக் கொண்டார்.<br /><br />பரம்பரையா வாழ்ந்த இடம்... மன்னார்குடிக்கும் பட்டுக்கோட்டைக்கும் போடப்போற ரயில்வே பாதை குறுக்கே வர்றதால அரண்மனை மாதிரி இருக்கிற வீட்டை இடிக்கப் போறாங்களே... அது நடந்தா நான் செத்துடுவேன் கருப்பையா.<br /><br />வேலைக்காரன் கருப்பையனிடம் தன் மன பாரத்தை இறக்கி வைத்தார் நல்லசிவம்.<br /><br />அய்யா மனசத் தளர விடாதீங்க. எல்லாத்தயும் அந்த வீதியோர அய்யனார் பாத்துக்குவார்.<br /><br />கருப்பையனின் பேச்சு நல்லசிவத்தின் மன உளைச்சலுக்கு மருந்து போட்டது போல் இருந்தது.<br /><br />கருப்பையா நாளைக்கு எந்த வேலை எப்படியிருந்தாலும் பரவாயில்லை. எல்லாம் நல்லபடியா நடக்கணும்னு அந்த அய்யனார் காதில போட்டு வச்சிட்டு வரணும்.<br /><br />பூஜை சாமான்களுடன் வீதியோர அய்யனாரைத் தரிசிக்க வந்த நல்லசிவம் அதிர்ச்சியில் நிலைகுலைந்து போனார். அய்யனார் கோவில் தரைமட்டமாகிக் கொண்டிருந்தது.<br /><br />அய்யனார்க்கே இந்த நிலைமையா?<br /><br />இந்தக் கோவில் போக்குவரத்துக்கு இடையூறா இருக்குன்னு இடிக்கிறதுக்கு கலெக்டரிடமிருந்து உத்தரவு வந்துருக்கு.<br /><br />அய்யனாரே என் குறையை உன்கிட்ட சொல்ல வந்தேன். ஆனா, உன் குறையைப் புரிஞ்சிக்கிட்டேன். அதிகாரம் ஆண்டவன் கையில இல்ல. ஆள்றவன் கையில.<br /><br />பக்தியோடு வந்த நல்லசிவம் நல்ல புத்தியோடு திரும்பிக் கொண்டிருந்தார்.<br /><br />_ வீரன்வயல் வீ.உதயக்குமாரன்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-87387739088334661802013-04-20T07:05:05.199+05:302013-04-20T07:05:05.199+05:30நம்புங்கள். மாப்பிள்ளைக்கும், நம் ஜாதி ஜனங்களுக்கு...நம்புங்கள். மாப்பிள்ளைக்கும், நம் ஜாதி ஜனங்களுக்கும் எந்தவிதத் துரோகமும் இழைக்கமாட்டாள் என்றார் அரசியின் தந்தை.<br /><br />அவள்தான், பேசினேன் அதற்கென்ன? என்கிறாளே. தெரிந்தே சாக்கடையில் விழுவதா? வா அம்மா, போகலாம் என நடையைக் கட்டினான் மாப்பிள்ளையாய் வந்தவன்.<br /><br />நெடுமரமாய் நின்றனர் அரசியின் பெற்றோர். மரியாதையாய்ப் பேசுங்கள். சாக்கடையாம், யார் சாக்கடை? ஜாதிப் பெருமை பேசி என் தந்தை நின்றதால் நானும் என் உள்ளத்து ஆசைகளை எரித்துச் சாம்பலாக்கி உங்களைக் கட்டிக்கச் சம்மதித்தேன். ஜாதிப் பெருமை தேடி வந்த நீங்களோ, ஒழுக்கம் பற்றி உரையாடல் நடத்துகிறீர்கள். நான் பேசினதற்கே கெட்டுப் போயிருப்பாளோ என நினைத்தால் நாளை எதற்கெல்லாம் ஒழுக்கங்கெட்டவள் எனச் சான்றிதழ் தருவீர்கள்? தெரியாமல்தான் கேட்கிறேன். நீங்கள், இதற்குமுன் எங்கேயாவது ஒழுக்கங்கெட்டுத் திரிந்தீர்களாவென எந்தப் பெண்ணாவது எங்கேயாவது கேட்கிறார்களா? அது என்ன பெண்ணிடம் மட்டும் அந்தச் சோதனை? ஆண்கள் ஒழுக்கமானவர்கள்தான். அதுவும் உயர் ஜாதியென்றால் ஒழுக்கமே ஆடையென அணிந்தவர்கள் என்பதை நாங்கள் வினாத் தொடுக்காமலேயே நம்ப வேண்டும். நம்பிக் கழுத்தில் கட்டுடா, வெட்டுடா என நீட்ட வேண்டும் அப்படித்தானே எனப் பொரிந்து தள்ளினாள் அரசி.<br /><br />போதும், நிறுத்தம்மா என்றார் மாப்பிள்ளையின் தந்தை. பொறுக்கமாட்டாதவராய் போங்கய்யா என்று விரட்டினார் அரசியின் தந்தை. உங்கள் ஜாதிப் பெருமைக்காக நான் வாங்கிக் கட்டிக் கொண்ட பட்டம் பார்த்தீர்களா அப்பா. நான், ஒழுக்கங்கெட்டவளாம். சாக்கடையாம். பரவாயில்லை அப்பா. உங்கள் சுய கவுரவத்தை எனக்காகத் தானம் செய்ய வேண்டாம். இன்னும்கூட உங்கள் ஜாதியிலேயே வேறொரு மாப்பிள்ளையைப் பாருங்கள். கட்டிக்கொள்ள நான் தயார் என்றாள் அரசி.<br /><br />என்னை மன்னித்து விடம்மா. ஜாதிப் பெருமையைவிட ஒழுக்கம்தான் மேலானது என்பதைத் தெரிந்து கொண்டேன். ஒழுக்கம் உடைமை குடிமை என்பார் திருவள்ளுவர். வெளியே போ என்றவுடன் போனாரே அந்த நேர்மையைப் பாராட்டுகிறேன் அம்மா. அம்மா..... அரசி..... அந்தத் தம்பியின் செல்பேசி எண்ணைத் தாம்மா என்றார் தந்தையார்.<br /><br />எண்ணைத் தந்தாள். தொடர்பு கொண்டார். நீயே வரச் சொல்லும்மா என்று செல்பேசியை மகளிடம் தந்தார். உடனே புறப்பட்டு வாருங்கள், உங்கள் அம்மா, அப்பாவுடன் என்றாள். வந்தார்கள். வரவேற்பு தடபுடலாக நடந்தது.<br /><br />மன்னித்து விடுங்கள் தம்பி. மேல்ஜாதி என் ஜாதி என்று கூச்சலிட்டேன். உங்கள் நட்பால் என் பெண் பெருமைதான் அடைந்துள்ளாளேயொழிய சிறுமைத்தனம் பெறவில்லை. நீங்கள் சம்மதித்தால் என் பெண்ணையே தங்களுக்குத் தர விரும்புகிறேன் என்றார் அரசியின் தந்தை. பெற்றோர் தலையாட்டச் சம்மதித்தான் இனியன்.<br /><br />ஜாதிக்காரன் வந்து இழிவாய்ப் பேசுவதைக் காட்டிலும் அவர்களில்லாமல் மணம் முடிக்க ஏற்பாடாகியது. தன் நண்பன் உதவியோடு மன்றல் நிகழ்வில் கலந்துகொண்டு திருமகள் இறையன் தலைமையில், பார்வதி, வெற்றிச்செல்வி முன்னிலையில் மனோரஞ்சிதம்மை அறிவுரையுடன் அரசியும் இனியனும் இணையராயினர்; வாழ்க்கையில் எல்லா நிலையிலும் பாதுகாப்பாயினர்.<br /><br />- மா.பால்ராசேந்திரம்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-61583068654044654802013-04-20T07:05:00.529+05:302013-04-20T07:05:00.529+05:30யாரும் சாப்பிடவில்லை. ஒருவரோடு ஒருவர் பேசவில்லை. ம...யாரும் சாப்பிடவில்லை. ஒருவரோடு ஒருவர் பேசவில்லை. மன்னியுங்கள். உங்கள் ஜாதிப் பெருமைக்கு நான் எந்தவிதக் கேடும் இழைக்கமாட்டேன் என மகள் அரசி தானாக முன் வந்து பேசியதால் வீடு இயல்பு நிலைக்குத் திரும்பியது.<br /><br />வழக்கமாக வீதியில் சந்தித்தார்கள். நடந்தவைகளுக்காக அரசி வருத்தம் தெரிவித்தாள் இனியனிடம். வாரமொன்று கடந்தது. அப்பாவின் திடீர் அறிவிப்பு. மாப்பிள்ளை வீட்டார் இன்று வருகிறார்களென்று.<br /><br />வந்தார்கள். அமர்ந்தார்கள். பேசினார்கள். ஜாதிச் சடங்கு, சம்பிரதாயங்கள் அடிப்படையில் தொடர்ந்தது சொல்லாடல்கள்.<br /><br />வந்தவர்க்குப் பெண்ணைப் பிடித்துப் போய்விட்டது. வாய்விட்டுத் தெரிவித்ததால், மகிழ்ந்தார் அரசியின் தந்தை; ஜாதி காப்பாற்றப்பட்டது என்பதற்காக. தவறாக நினைக்காதீர்கள். மருமகளுக்குக் கூடப் படித்த பையனோடு ஏதோ..... தவறான பேச்சு வார்த்தை இருக்கிறதாமே! அது உண்மையா? என்றார் வருங்கால மாமியார்.<br /><br />அப்படியெல்லாம் ஏதுமில்லை. கூடப்படித்தவர்களோடு சரளமாகப் பேசுவாள். அவ்வளவுதான். என் பொண்ணு நல்ல ஒழுக்கமான பெண் என்றார் அரசியின் தந்தை.<br /><br />ஒழுக்கமா! கீழ் ஜாதிப் பயலை வீட்டுக்குள்ளேயே கூட்டி வந்து, உட்கார வைத்து நாட்கணக்கில் பேசியிருக்கிறாள். உண்மையா, பொய்யாவென்று உங்கள் பெண்ணையே கேளுங்கள் என்றான் வேகத்துடன் மாப்பிள்ளை.<br /><br />விரைந்து வந்த அரசி, உண்மைதான். பேசினேன். அதிலென்ன தப்பு? நான் நேர்மையானவள். அவனும் அப்படியே. நாங்கள் எந்தத் தவறிலும் ஈடுபடவில்லை. நம்புங்கள் என்றாள்.<br /><br />அக்கம் பக்கத்தார் சொல்கிறார்களே. உங்கள் குழந்தைதானே, அக்காளும் அவனும் பூட்டிய வீட்டுக்குள் இருந்தார்கள். அப்பா கோபப்பட்டுத் திட்டினார் என்று சொன்னாள் என்றாள் வந்தவள்.<br /><br />வெகுளித்தனமாய்த் தங்கை வீதியில் பெருமை அடித்துக்கொண்டு விட்டாள் விளைவை அறியாமல்.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-82473315913989531702013-04-20T07:04:50.497+05:302013-04-20T07:04:50.497+05:30மன்றல்
இனியனும் அரசியும் ஒரே கிராமத்துவாசிகள். ஒ...மன்றல்<br /><br /><br />இனியனும் அரசியும் ஒரே கிராமத்துவாசிகள். ஒரே பள்ளியில் படித்தவர்கள். நண்பர்களாய்ப் பழகியவர்கள். கல்லூரிதான் மாற்றம். நட்பில் மாற்றமில்லாச் சந்திப்புகள். இனியன் முதுகலைப் பட்டதாரி. வேலை தேடும் வேலை. இளங்கலைப் பட்டத்துடன் ஆசிரியப் படிப்பின் இறுதியாண்டு மாணவி அரசி. தேர்வு முடிந்த இறுதி நாள்.<br /><br />தற்செயலாக, நேரமிருந்தால் வா என்று தனது இல்லத்திற்கு இனியனை அழைத்திருந்தாள். அழைப்பை ஏற்று வந்தான். பேசினார்கள்.... பேசினார்கள்.....<br /><br />படிப்பின் போக்குப் பற்றி, பணி தேடும் பணி பற்றி, தங்களின் நட்பின் ஆழம் பற்றித் தொடர்ந்து இருவரின் உரையாடல், நேரம் போனது தெரியவில்லை. ஒரு மணி நேரம் கடந்திருக்கலாம். கடைவீதி சென்ற பெற்றோர் திரும்பினர். வீட்டினுள்ளே வரக்கூடாத பையனைப் பார்த்த தந்தை, தலையில் ஆயிரந்தேள் அயராது கொட்டியது போல் பரபரவென நின்றார். தாயோ, என்ன நடக்குமோவென வெடவெடுத்து நின்றார். பத்து வயது தங்கையோ எதையுமறியாது அடுப்படிக்குள் நுழைந்தாள்.<br /><br />ஏய்! உன்னையெல்லாம் இங்கே யார் நுழையவிட்டது? போ வெளியே என்றார் கடுமையுடன் தந்தை. அப்பா! இதிலென்னப்பா இருக்கிறது? ஒன்றாகப் படித்தோம்; பழகினோம்; நட்பானோம். வரச் சொன்னேன். வந்தான். இதிலென்ன தப்பு? யதார்த்தமாகக் கேட்டாள் அரசி. தம்பி! நீங்கள் தயவுசெய்து வெளியே போங்கள். குடும்பத்துக்குள் கலவரத்தை ஏற்படுத்தாதீர்கள் என்றாள் தாய்.<br /><br />எழுந்தான். போய் வருகிறேன் என்ற இரு சொல்லோடு நடையைத் தொடர்ந்தான் இனியன்.<br /><br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-47498962682195844592013-04-20T07:03:59.394+05:302013-04-20T07:03:59.394+05:30மனைமாட்சியருக்கு விழா!
ஆண்கள் தங்கள் குறிப்பிட்...மனைமாட்சியருக்கு விழா!<br /> <br /><br />ஆண்கள் தங்கள் குறிப்பிட்ட வயது தொடங்கும்போது வெள்ளி விழா, அறுபதாம் ஆண்டு விழா, மணி விழா, பவள விழா என்று சிறப்பித்துக் கொண்டாடி குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் சூழ மகிழ்வர்.<br /><br />அப்போது, பெண்ணுக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, தங்கள் இணையருடன் இணைந்து விழாவினைச் சிறப்பிக்க வேண்டும். இப்படியொரு சூழலில், தங்கள் இணையருக்கு -_ மனைமாட்சியருக்கு விழா எடுத்து மாண்பு செய்து பெருமைப்படுத்தியுள்ளனர் சென்னை, எம்.ஜி.ஆர். நகரில் வசிக்கும் வெள்ளையாம்பட்டு சுந்தரம், எஸ்.நடராஜன் குடும்பத்தினர்.<br /><br />மனைவிக்கு மணிவிழா! இல்லத்தரசிக்கு இனிய விழா!.... எனத் தொடங்கும் கவிதை பொன் விழா, வைர விழா, முத்து விழா கொண்டாட வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவிக்கிறது. பாராட்டுக்குரியவர்கள் இந்த இரண்டு பதிப்பாளர்களும்!<br /><br />இந்த நேரத்தில் இத்தகைய விழாக்களுக்கான தொடக்கத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி வைத்தது திராவிடர் கழகம் என்ற வரலாற்றினையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.<br /><br />கவிஞர் முகவை ராஜமாணிக்கம் அவர்களது இணையரின் 60ஆம் ஆண்டு விழாவை திராவிடர் கழகம் தனது சொந்தச் செலவிலேயே (அழைப்பிதழ் முதல் நிறைவு வரை) நடத்திக் காட்டியது.<br /><br />அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி அவர்களே முன்னின்று நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்ற (பழைய) கட்டிடத்தில் இந்நிகழ்ச்சியை நடத்தினார்கள்.<br /><br />அதனைத் தொடர்ந்து, பெரியார் பேருரையாளர் இறையனார் தனது இணையர் திருமகள் அவர்களின் 60ஆம் பிறந்தநாளை பூட்கைப் பெருவிழா என்று கொண்டாடினார். பெரியார் தொண்டர்கள் பல இடங்களிலும் இத்தகைய விழாக்களை நடத்தி வருகிறார்கள். நாமும் தொடரலாமே!தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-6223491270565077172013-04-20T07:02:31.062+05:302013-04-20T07:02:31.062+05:30புதுப்பாக்கள்
காக்கும் கடவுள்?
பெருத்துப் போய்
...புதுப்பாக்கள்<br /><br /><br />காக்கும் கடவுள்?<br /><br />பெருத்துப் போய்<br />கோயிலின்<br />உண்டியல் வயிறுகள்,<br />கசங்கிய கச்சையில்<br />ஏழை பக்தனின்<br />யாசக பிரார்த்தனை.<br />ஆண்டாண்டு காலமாய்<br />கல்லாகவே இருப்பதை<br />எப்படி நம்புவது ?<br />காக்கும் கடவுளென்று .......<br /><br />- செல்வன்<br /><br /> <br /><br />வேறுபாடு<br /><br />உண்டு கொழுத்தவன்<br />திண்ணையைத் தேடுவான்<br />ஊரை ஏய்ப்பவன்<br />கோவிலை நாடுவான்.<br /><br />- கவிமுகில்<br /><br /> <br /><br /><br />வருமோ வாட்டம்<br /><br />பல தெய்வம் உண்டென்று<br /><br />பக்தராய் எங்கும் கூட்டம், அதில்<br /><br />குல தெய்வம் எமதென்று<br /><br />குடும்பம் குடும்பமாய் ஓட்டம்<br /><br />சில தெய்வம் உண்டென்று<br /><br />சிந்தனையில் இல்லை நாட்டம்<br /><br />உள தெய்வம் அறிவென்று உணர்ந்தால்<br /><br />ஒரு நாளும் வருமோ வாட்டம்!<br /><br />- ஆல.தமிழ்ப்பித்தன், புனல்வேலி<br /><br /> <br /><br /><br />எதற்கிந்த கவனம்?<br /><br />கவனத்தில்<br />குறைவாய் கவனிக்கப்பட்டு<br />காலமானவரின்<br />இறுதிச் சடங்கில்<br />ஒலித்தது ஒரு குரல்<br />கவனமாய் உடை<br />தேங்காயை என்று!<br /><br />_ மலர்மன்னன், முசிறி<br /><br /> <br /><br />சமத்துவம்<br /><br />சமத்துவம் பேசும் நண்பன்<br />தன் தந்தை வருவதைப் பார்த்ததும்,<br />டேய் வெளியே போய் நில்லு என்கிறான்.....<br />எனக்குப் பின் கூடவே<br />ஒளிந்துகொள்கிறது அவன்<br />ஜாதியும், சமத்துவமும்......<br />................<br />தெருவில் விளையாடும்<br />குழந்தைகளுக்கு<br />எப்படியோ தெரிந்திருக்கிறது<br />நாமமும், பட்டையும்<br />போடாத குழந்தைகள்<br />தன் நண்பர்கள் இல்லையென்று......<br /><br />- தாய்சுரேஷ், கடத்தூர்<br /><br /> <br /><br />சமத்துவக் குழந்தை<br /><br />நிலா காட்டி சோறூட்டும் தாயின் இடுப்பில் அமர மறுத்து,<br />கதை சொல்லி சோறூட்டும்<br />ஆயாவின் மடியையே விரும்புகிறது<br />சமத்துவக் குழந்தை.......<br /><br />- தாய்சுரேஷ், கடத்தூர்<br /><br /> <br /><br /><br />வழியில்லை<br /><br />சிலருக்கு<br />கோவணத்திற்கே<br />வழியில்லை! - அந்தக்<br />கோயிலை இடிக்கவும்<br />வலுவில்லை.<br /><br />- கவிமுகில்<br /><br /><br />குடிசை வீட்டுப் பையன்<br /><br />பணக்கார வீட்டுப் பிள்ளை<br />ருசி பார்த்த அய்ஸ்க்ரீம் பந்தை<br />திருப்பி அடித்து அடித்தே<br />அவனைவிட மிக உயரப் பறந்தான்........<br />குடிசை வீட்டுப் பையன்.....!<br /><br />- தாய்சுரேஷ், கடத்தூர்<br /><br /><br />கயவன் யார்?<br /><br />கல்லுக்குப் பூப்போடடு<br />கற்பூர மேற்றி<br />வணங்க வைத்தவன் யார்?<br />வடித்த கல்லை வணங்கென்று<br />முட்டாளாய் ஆக்கிவிட்ட<br />தன்னலத் தறுதலையாம்<br />ஆரியனன்றி வேறு யார்?<br /><br />- கவிமுகில்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-19160836372638297232013-04-20T07:01:48.295+05:302013-04-20T07:01:48.295+05:30
167 நாட்கள் தாமதத்துக்குப் பின்னர் இந்த உத்தரவை எ...<br />167 நாட்கள் தாமதத்துக்குப் பின்னர் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சி.பி.அய். மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி எச்.எல். டட்டு தலைமையிலான பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் உத்தரவிட்டபடி வழக்கு விவரங்களை சி.பி.அய். ஏப்ரல் 1 அன்று தாக்கல் செய்தது. இதன் மீதான விசாரணையில், சொலிசிட்டர் ஜெனரல் (மத்திய அரசின் கூடுதல் தலைமை வக்கீல்) தரப்பால் மேல்முறையீடு தாக்கல் செய்ததில் தாமதம் ஆகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நபரின் பிரமாணப் பத்திரம், தாமதம் ஏன் என்பது பற்றி நாங்கள் அறிந்துகொள்ள உதவும். இந்தப் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்தால் அது உங்களுக்கு நல்லதாக அமையும். எனவே, இரண்டு வாரங்களுக்குள் அந்தப் பிரமாணப் பத்திரத்தைத் (சொலிசிட்டர் ஜெனரல்) தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இத்தகைய சூழலில்தான் அத்வானி இப்படிப் பேசியுள்ளார்.<br /><br />1992 ஆம் ஆண்டில் பாபர் மசூதியை இந்துத்துவக் கும்பல் இடித்தபோது, உணர்ச்சி வசப்பட்ட தொண்டர்கள் இடித்துவிட்டார்கள் என்று நழுவியவர்கள் இப்போது இப்படிப் பேசுவதற்கு நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதே காரணம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.<br /><br />தனது பிரதமர் கனவைக் கலைக்க நரேந்திர மோடியை கட்சியின் தற்போதைய தலைவர் ராஜ்நாத் சிங் போன்றோர் முன்னிறுத்தும் வேளையில் தன்னைத் தீவிர இந்துத்துவாவாகக் காட்டிக்கொள்ள அத்வானி இப்படிப் பேசலாம் என்ற கருத்தும் எழுந்துள்ளது. மேலும், பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க அவர்களுக்குள்ளேயே கருத்தொற்றுமை இல்லாததால் கட்சி பலவீனப்பட்டிருக்கும் நிலையில் தனது பழைய ஆயுதத்தையே பா.ஜ.க. எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு தனது இந்து ஓட்டு வங்கியைக் காப்பாற்றிக்கொள்ள அத்வானி இப்படிப் பேசியிருக்கிறார் என்றும் டெல்லி அரசியல் வட்டாரம் கூறுகிறது.<br /><br />இந்த அரசியல் காரணங்களெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஒரு மதச்சார்பற்ற நாட்டின் எதிர்க்கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர் ஒருவர், இன்னொரு மத வழிபாட்டுத் தலத்தை இடிக்கக் காரணமாக இருந்து விட்டு, அந்த வழக்கு இன்னும் முடிவடையாத நிலையில் அதனை நியாயப்படுத்தும் வகையில் பேசுகிறார்.<br /><br />அதனை இந்த நாடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்றால், இங்கே மனிதம் வாழுமா? மதச் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் இந்தப் பேச்சை எப்படி நாடு அனுமதிக்கிறது என்ற கேள்வியை மதங்களைக் கடந்த மனிதநேயர்கள் கேட்கிறார்கள். 1992 ஆம் ஆண்டில் போடப்பட்ட வழக்கை 21 ஆண்டுகளாக இழுத்தடித்துக் கொண்டு போகலாமா? கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசு இதனை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்காதது ஏன்?அத்வானியின் இந்தப் பேச்சை உச்ச நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொள்ளுமா? சுதந்திர இந்தியாவில் அதுவரை நீடித்த மத நல்லிணக்கம் சீர் குலைந்து, மனிதர்களுக்குள் மத உணர்வுகள் தலைதூக்க 1992 ஆம் ஆண்டில் நிகழ்ந்த பாபர் மசூதி இடிப்பு ஒரு முக்கியக் காரணம் அல்லவா? எங்கே போகிறது இந்தியா?<br /><br />- அன்பன்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-18055450663408636472013-04-20T07:01:43.718+05:302013-04-20T07:01:43.718+05:30உ.பி மாநிலத்தின் அயோத்தியில் கரசேவை நடத்தி கடந்த ...உ.பி மாநிலத்தின் அயோத்தியில் கரசேவை நடத்தி கடந்த 1992ஆ-ம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சம்பவத்தின்போது, ராம்கத குஞ்ச் மேடையில் இருந்த பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, கல்யாண் சிங், உமாபாரதி உள்ளிட்ட 21 தலைவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 ஏ (இரு வகுப்பினரிடையே பகைமை ஏற்படுத்துதல்), 153 (பி) (நாட்டின் ஒருமைப்பாட்டுக்குப் பங்கம் ஏற்படுத்துதல்), 505 (பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கிற வகையில் தவறான கருத்துகள் வெளியிடுதல், வதந்திகளைப் பரப்புதல்) ஆகியவற்றின் கீழ் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் இதே பிரிவுகளின்கீழ் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, அவர்கள் மீது குற்றச்சதி செய்ததாக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 120-பி யும் வழக்கில் சேர்க்கப்பட்டது. சர்ச்சைக்குரிய பாபர் மசூதி இடிப்பில் தொடர்புடையதாகக் கருதப்படும் லட்சக்கணக்கான கரசேவகர்கள் மீது இரண்டாவது வழக்கு பதிவு செய்யப்பட்டது.<br /><br />இந்த நிலையில் அத்வானி, கல்யாண் சிங், உமாபாரதி, வினய் கட்டியார், முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 21 தலைவர்கள் மீதான வழக்கில், அவர்கள் குற்றச்சதியில் ஈடுபட்டதாக சேர்க்கப்பட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 120-பியின் கீழான குற்றச்சாட்டினை தனி நீதிமன்றம் ரத்து செய்து 2001ஆ-ம் ஆண்டு மே மாதம் 4-ஆம் தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சி.பி.அய். மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த 2010ஆ-ம் ஆண்டு, மே மாதம் 21-ஆம் தேதி தனிக்கோர்ட்டு உத்தரவினை உறுதி செய்தது. அதே நேரத்தில் பிற பிரிவுகளின் கீழான குற்றச்சாட்டுகளை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-81969926442479747802013-04-20T07:01:33.942+05:302013-04-20T07:01:33.942+05:30 பாபர் மசூதி வழக்கும் அத்வானியின் பேச்சும்!
டெல... பாபர் மசூதி வழக்கும் அத்வானியின் பேச்சும்!<br /> <br /><br />டெல்லியில் நடைபெற்ற பாரதிய ஜனதாக் கட்சியின் 33 ஆம் ஆண்டு நிறுவன தினத்தில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் லால் கிஷன் அத்வானி, அயோத்தியா விவகாரத்தில் நமது கட்சி வருத்தப்படத் தேவையில்லை. இந்த விவகாரத்தில் கட்சியின் நிலைப்பாடு பெருமைக்குரிய விசயமாகும். தயக்கம் கொள்ளாதீர்கள். தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிக் கொள்ளாதீர்கள்.<br /><br /> <br /><br />அயோத்தியா குறித்து நாம் நம்பிக்கை கொண்டிருந்தால் _ அதன் சிறப்புக்காக நாம் முயற்சிகள் மேற்கொண்டிருந்தால் மன்னிப்புக் கோர வேண்டியதில்லை. அந்த நிகழ்வுக்காக நாம் பெருமைப்பட வேண்டும். என்று பேசியுள்ளார்.<br /><br />சில நாட்களுக்கு முன்தான் உச்ச நீதிமன்றம் அத்வானி, உமாபாரதி உள்ளிட்ட 21 பேர்களின் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்ய தாமதம் ஏற்பட்டது ஏன்? என்று கேட்டு மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞரை பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருக்கிறது.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-89413675044413596542013-04-20T07:00:58.110+05:302013-04-20T07:00:58.110+05:30 நிர்வாணம்
செம்பரட்டைத் தலை
தலை முதல் கால் வரை
சா... நிர்வாணம்<br /><br />செம்பரட்டைத் தலை<br />தலை முதல் கால் வரை<br />சாம்பல் பூச்சு!<br />நிர்வாணக் கோலத்தில்<br />பெண்டிருடன் நீராடல்<br />இதற்குப் பெயரா<br />கங்கையின் கும்பமேளா?<br />சிறப்பு விளக்கம்<br />புரியாத புதிரே<br />அந்த நிர்வாணக்காட்சி!<br /><br />- உத்திரமேரூர் யு.கே.ராஜேந்திரன்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-57103698479867387932013-04-20T07:00:13.995+05:302013-04-20T07:00:13.995+05:30தலைவாழை இலை போட்டு அதில் கொஞ்சம் . . .
பாலாவின் ...தலைவாழை இலை போட்டு அதில் கொஞ்சம் . . .<br /><br /><br />பாலாவின் பரதேசி படம் பார்த்தேன். செழியனின் ஒளிப்பதிவும், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையும், வைரமுத்துவின் பாடல் வரிகளும் அற்புதக் கலவையாய் தலைவாழை இலைபோட்டு அருமையான விருந்து படைத்திருந்தார் பாலா!. விருந்தைச் சுவைக்க முற்பட்டபோதுதான் இலையின் ஓரத்தில் மலம் வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. பாலாவிற்கு என்னவாயிற்று?<br /><br />கல்வி மறுக்கப்பட்ட பார்ப்பனரல்லாத மக்களுக்குப் பெருமளவு கல்வி வழங்கியது கிறித்துவ மிஷன்கள்தான் என்றால் மிகையாகாது. பிளேக் நோய் பரவியபோது மக்களைக் காப்பாற்ற பெருமளவு கிறித்துவ பாதிரியார்கள் பணியாற்றியிருக்கிறார்கள். அந்தத் தொண்டில் பலர் மதம் மாறியிருக்கலாம். மாற்றப்பட்டும் இருக்கலாம். ஆனால், இந்துத்துவாவின் ஊதுகுழலாய் மாறி பாலா இப்படி ஒரு காட்சியை வலிய திணித்திருப் பதைத்தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு எனும் பார்ப்பனப் பரதேசிகளின் கேரக்டரை கிறித்துவ டாக்டர் மீது திணித்து அவர் ரொட்டியை மக்கள்மீது வீசுவதாக அமைத்திருக்கிறார்.<br /><br />பி.எச்.டேனியல் எழுதிய உழைக்கும் மக்களின் வரலாற்றில் மிக இருண்ட அத்தியாயத்தைப்பற்றிப் பேசும் எரியும் பனிக்காடு (ஸிணிஞி ஜிணிகி) கதைதான் பாலாவால் பரதேசியாக உருவாக்கப்பட்டுள்ளது.<br /><br />மூலக்கதையான எரியும் பனிக்காட்டில் வரும் கிறித்துவ மருத்துவர் ஆபிரஹாம் சிறந்த மனிதநேயராகவும் தொண்டுள்ளம் பெற்றவராகவும் சித்தரிக்கப்பட்டிருந்தார். எஸ்டேட் மருத்துவமனை மிகவும் மோசமான நிலையில் இருப்பதைக் கண்டும் கூலிகளின் நிலையைக் கண்டும் ஆபிரஹாம் வெகுண்டெழுந்தார். நாலணா கூலிக்காக இந்தப் பாவப்பட்ட ஜனங்கள் அரைப் பட்டினியிலும், நோய்க் கொடுமையிலும் நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிறது ஆப்ரஹாம் பாத்திரம். ஆனால் பரதேசியிலோ, கிறித்துவ மருத்துவர் பாத்திரம் ஒரு காமெடிப் பாத்திரமாக கூலிகளைக் கிறித்துவத்திற்கு மாற்றுவதையே முழு நோக்கமாகக் கொண்ட பாத்திரமாக மாற்றிவிட்டார் பாலா.<br /><br />வெறும் பஞ்சம் மட்டும் பிழைக்க அந்தச் சமுதாயம் டீ எஸ்டேட் நோக்கிப் போகவில்லை. ஆதிக்க சமுதாயத்தின் தீண்டாமைக் கொடுமையிலிருந்தும் விடுபடவே அவர்கள் சென்றார்கள் என்பது கங்கானியின் உரையாடலிலேயே தெரியும். நாய்க்கருகிட்டயும், தேவமாருகிட்டயும் நெலம் இருக்கு. அவங்க நம்மள என்ன பாடுபடுத்துறானுவோ? அவங்க வீட்டுப்பக்கம் கூட நம்மள விடமாட்டானுவோ. தண்ணீர் தாகத்துல நாக்கு வறண்டு செத்தாலும் அவுக கெணத்துல இருந்து சொட்டுத் தண்ணி எடுக்கவிட மாட்டானுவோ என்று வேலைக்கு ஆள் பிடிக்கும் கங்கானி கூலிகளைப் பார்த்துச் சொல்வதாக மூலக்கதையில் உள்ளது.<br /><br />ஆனால், பரதேசியில் பாலாவோ அவர்களை வெறும் பஞ்சம் பிழைக்கப் போனவர்களாகவே காட்டியுள்ளார். படத்தை ரசிக்கவோ பாராட்டவோ முனையும் போதெல்லாம் கிறித்துவ மருத்துவர் வந்துபோகும் காட்சியே கண்முன் வருகிறது.<br /><br />என்னதான் முக்கி முக்கி படம் எடுத்தாலும் 48 மதிப்பெண்ணுக்கு மேல் போடாத ஆனந்த விகடன் மார்க் அள்ளிப் போட்டிருந்ததைப் பார்த்ததுமே இதில் ஏதோ உள்குத்து இருப்பதை உணர முடிந்தது.<br /><br />- கி.தளபதிராஜ்<br /><br /> தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-55448577718075499212013-04-20T06:59:50.562+05:302013-04-20T06:59:50.562+05:30தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் 87 விழுக்காடு உள...தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் 87 விழுக்காடு உள்ளனர் என்றும், 1921 முதல் தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு தொடர்பான பெரிய வரலாறு இருக்கிறது என்றும், வளர்ந்து வரும் மக்களின் தேவைக்கு ஏற்ப இந்த 69 விழுக்காடு இடஒதுக்கீடு மிகவும் அவசியம் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அத்தகைய தமிழ்நாடு அரசின் அண்மைக்கால ஆசிரியர் பணி நியமனம் இடஒதுக்கீடுக்கு விரோதமாக நடைபெற்று இருப்பது அதிர்ச்சியை அளிக்கக் கூடியதாக உள்ளது என்பதையும் தமிழ்நாடு அரசு முதல் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.<br /><br />17) தந்தை பெரியார் பிறந்த சமூகநீதி மண்ணில் இவ்வளவு பெரிய சமூக அநீதி நடைபெற்றுள்ளது. முதல் அமைச்சர் அவர்கள் உடனடியாக இதில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். 69 சதவிகித இடஒதுக்கீடு சட்டரீதியாக உறுதி செய்யப்பட அந்தக் கால கட்டத்தில் முதல் அமைச்சராகவிருந்த ஜெயலலிதா அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையையும் (1993---_1994) இந்த நேரத்தில் நினைவூட்டி, அவசர கதியில் இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்.<br /><br />- கி.வீரமணி,<br />ஆசிரியர்<br /><br />நீதியரசர் நாகமுத்து அவர்களின் ஆணைக்குப் பிறகும் அதே தவறுகள்!<br /><br />“After the order was delivered in open court, the learned Additional Advocate General, made a request to this Court to withdraw the remarks made in paragraph No.230 against the Teachers Recruitment Board. He would submit that in future Teachers Recruitment Board will not commit any such error and since this was the first occasion such kind of examination was conducted, inadvertently those errors have occurred. In view of the said submission made by the learned Additional Advocate General, the remarks made against the Teachers Recruitment Board in the beginning or paragraph No.230 of this order are withdrawn.” (W.P. 21170 of 2012 dt. 1.10.2012)<br /><br />நீதிமன்றத்தில் நீதியரசர் நாகமுத்து அவர்கள் 1.10.2012 அன்று வழங்கிய தீர்ப்புக்குப் பிறகு, கூடுதல் அட்வகேட் ஜெனரல், நீதியரசர் அளித்த தீர்ப்பில் பாரா எண் 230-இல் உள்ள குறிப்பிட்ட சில கண்டனங்களைத் திரும்பப் பெறக் கோரி வேண்டுகோள் விடுத்தார். மேலும், இத்தேர்வு முறை முதன்முறையாக இம்மாதிரி நடத்தப்பட்டதால், தெரியாமல் சில தவறுகள் நடைபெற்றுள்ளன. இனி ஆசிரியர் தேர்வுக் கழகம் இது போன்ற தவறுகளை வருங்காலத்தில் செய்யாது என்று தெரிவித்ததைத் தொடர்ந்து நீதியரசர் பாரா 230இல் முதலில் குறிப்பிட்ட அந்த வாசகங்கள் திரும்பப் பெறப்பட்டன. இவ்வளவும் நடந்ததற்குப் பிறகும் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தேர்விலும் நியமனத்திலும் அதே தவறுகள் நடந்துள்ளது எப்படி? இதனை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? பொறுத்துக் கொள்ளத்தான் முடியும்?தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com