tag:blogger.com,1999:blog-1474608369333206681.post1068915179628653888..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: மனித ஜாதி ஒன்றாகித்தான் தீரவேண்டும்!-பெரியார்தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-71764173863616017822014-03-16T06:31:19.567+05:302014-03-16T06:31:19.567+05:30
மோகம் விடயத்தில் மோடிக்குச் சிக்கல்!
காந்திநகர்...<br />மோகம் விடயத்தில் மோடிக்குச் சிக்கல்!<br /><br /><br />காந்திநகர், மார்ச் 15- குஜ ராத்தில் கட்டடப் பொறியியல் வல்லுநரான இளம்பெண் ணைக் கண்காணித்த புகாரில் தற்காலிக பணிநீக்கம் செய் யப்பட்டவர் அய்.பி.எஸ் அதிகாரி பிரதீப் சர்மா. இவர் மீதுஆறு குற்ற வழக்குகள் உள்ளன.<br /><br />பயனில்லாமல் போனது<br /><br />சட்டவிரோத செயலான இளம்பெண்ணைக் கண் காணித்த இவ்வழக்கில் குஜ ராத் முதலமைச்சர் மோடி யின் தொடர்பு குறித்து மோடிமீது பிரதீப் சர்மா காந்திநகர் 7ஆம் செக்டார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்ய மறுத்துள்ள தாகத் தெரிகிறது. ஆனாலும், பிரதீப் சர்மா காவல்நிலை யத்தில் அளிக்கப்படும் புகா ரின் பேரில் வழக்குப்பதிவு செய்ய மறுக்கக் கூடாது என்கிற உச்சநீதிமன்றத்தின் அண்மையில் வழங்கப்பட்ட தீர்ப்பைக் கூறி குஜராத் மாநிலக் காவல் துறைத் தலைவர் பி.சி.தாக்கூர்,<br /><br />காந்திநகர் காவல்துறை கண்காணிப்பாளர் ஷரத் சிங்கால் ஆகியோரிடம் வழக் குப்பதிவு செய்ய உத்தரவிடு மாறு கேட்டுக் கொண்டும் பயனில்லாமல் போனது. இதனைத் தொடர்ந்து, அவர் குஜராத் உயர்நீதிமன் றத்தில் மோடி மீதான வழக்கைப் பதிவு செய்ய இது குறித்து அவர் வழக் குரைஞர் கூறும்போது, பிரதீப் சர்மாவின் புகார்மீது வழக் குப்பதிவு செய்ய காவல் துறை மறுத்துள்ள தால், அடுத்த வாரத்தில் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட உள்ளது என் றார்.<br /><br />நவம்பர் 26 இல்<br /><br />ஓர் அய்.ஏ.எஸ். அலு வலர் மோடியையும், அந்த இளம்பெண்ணை யும் நெருக்கமாக அறிந்த வர் என்பதாலேயே பாஜக அரசால் பாதிப்புக்குள்ளா னார். இளம் பெண் சட்ட விரோதமாகக் கண்காணிக் கப்பட்ட விவகாரம் குறித்து குஜராத் அரசு நவம்பர் 26 இல் இரு நபர் விசாரணைக் குழுவை ஓய்வுபெற்ற நீதிபதி சுக்னாபென் பட் என்பவர் தலைமையில் அமைத்தது. இன்னமும் விசாரணைக்குழுவின் அறிக்கை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.<br /><br />Read more: http://viduthalai.in/page-5/76996.html#ixzz2w5DRVjeD<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-51687450094098040602014-03-16T06:29:24.460+05:302014-03-16T06:29:24.460+05:30
செங்கற்பட்டில் தமிழ்நாட்டுச் சுயமரியாதை மகாநாடு!
...<br />செங்கற்பட்டில் தமிழ்நாட்டுச் சுயமரியாதை மகாநாடு!<br /><br /><br />தமிழ்நாடு சுயமரியாதை மகாநாட்டை செங்கல்பட்டு ஜில்லாவில் கூட்ட வேண்டு மென்று செங்கல்பட்டு ஜில்லா பிரமுகர்கள் முடிவு செய்திருப்பதாக பத்திரிகைகளில் காண நாம் மிகுதியும் மகிழ்ச்சியுடன் அவ்வபிப்ராயத்தை வரவேற்கின்றோம்.<br /><br />தற்காலம் அரசியல் புரட்டாலும், மதவியற் புரட்டாலும் கஷ்டப்பட்டும், பார்ப்பனர்களாலும் அவர்களது கூலிகளாலும் வஞ்சிக்கப்பட்டும், பகுத்தறிவும் தன்மதிப்பும் இழந்து தவிக்கும் நாட்டிற்கும் பாமர மக்களுக்கும் சுயமரியாதை இயக்கமே ஒருவாறு புத்துயிரளித்து வருகின்றது என்பது நடு நிலைமை கொண்ட அறிஞர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயமேயாகும்.<br /><br />அப்பேர்பட்ட இயக்கத்தை நாடு முழுவதும் பரவச் செய்வதன் மூலம், மக்களுக்கு உண்மையை உணர்த்தி தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பி ஊக்கமூட்டி நிலைத்த உணர்ச்சியை உண்டாக்கவும் அடிக்கடி ஆங்காங்கு மகாநாடுகள் கூட்டி, குறைகளை வெளிப்படுத்தியும் பல அறிஞர்களின் உபதேசத்தைக் கேட்கச் செய்தும் நாட்டில் தீவிர பிரச்சாரம் செய்யவும் வேண்டியது மிகவும் அவசியமானது என்பதும், இது ஆங்காங்குள்ள தலைவர்களுடையவும், பிரமுகர்களுடையவும் கடமையானது மான காரியம் என்பதும் நாம் சொல்லாமலே விளங்கும்.<br /><br />இதுவரை பல ஜில்லாக்களிலும், தாலூக்காக்களிலும் ஜில்லா, தாலூகா மகாநாடுகள் கூட்டப்பட்டிருக் கின்றதானாலும், தமிழ் நாட்டுக்கே தமிழ் மாகாண பொதுவான மகாநாடு கூட்டப்படவில்லை. இதற்காக சுமார் 4,5 மாதமாய் சில ஜில்லாக்காரர்கள் முயற்சி செய்து வருவதாகத் தெரிந்தாலும் நமது செங்கல்பட்டு ஜில்லாவில் தீவிர முயற்சி செய்து ரூபாய் 5000 -க்கு மேல் - வசூல் செய்யப்பட்டு வரவேற்பு சபை முதலியவைகளும் ஏற்படுத்தி வரவேற்பு சபை அக்கிராசனரை யும் தெரிந்தெடுத்து விட்டதாகத் தெரிய வருகின்றது.<br /><br />மகாநாட்டு தலைவரைத் தெரிந்தெடுப்பதில் தக்க கவலை செலுத்தி சுயமரி யாதையியக்கத்தில் மிகுதியும் கவலையும் உறுதியும் கொண்ட கனவான் களாகவும் சுயமரியாதை எல்லோருக்கும் மிக அவசியமானதெனக் கருதும் கனவான்களாகவும் பார்த்துத் தெரிந்தெடுக்க வேண்டும் என்றே விரும்புகின்றோம்.<br /><br />திருவாளர்கள் சவுந்தரபாண்டிய நாடார், எம். கிருஷ்ண நாயர், பி.சுப்பராயன், சர். கே. வி. ரெட்டி நாயுடு, எம். கே. ரெட்டி, பன்னீர் செல்வம், குமாரசாமி செட்டியார், ராஜன், சண்முகம் செட்டியார், முதலியவர்களைப் போன்றவர்களையே தெரிந்தெடுத் தால் மிகுதியும் பொருத்தமானதாக இருக்கும் என்பதை நாம் சொல்ல வேண்டியதே இல்லை.<br />நிற்க, தஞ்சாவூரும் மாகாண சுயமரியாதை மகாநாட்டை நடத்த முயற்சிப்ப தாய்த் தெரிகின்றது.<br /><br />தமிழ் நாட்டிலுள்ள ஜில்லா போர்டுகளில் செங்கல்பட்டும் தஞ்சாவூரும் உறுதியானதும் பயமற்றதுமான தன்மையுடன் பார்ப்பனரல்லாதார் நன்மைக்கு அனுகூலமாயுமிருக்கிறது. அதற்குக் காரணம், இந்த இரண்டு ஜில்லா போர்டு தலைவர்களையும் எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் தலைகீழாகப் பாடுபடுவதே போதியதாகும்.<br /><br />பார்ப்பனப் பத்திரிகைகளும் அவர்கள் கூலிகளும் இவர்களைப் பற்றி தூற்றாத - விஷமப் பிரச்சாரம் செய்யாத நாட்களைக் காண்பது மிகவும் அரிதாகும். சென்னை மாகாணம் முழுவதற்கும் பார்ப்பனர்கள் கண்களுக்கு நமது பனகல் அரசர் எப்படி ஒரு பெரிய இராட்சதராக காணப்படுகின்றாரோ அதுபோல் தஞ்சை செங்கல்பட்டு ஜில்லாப் பார்ப்பனர்களுக்கு நமது திருவாளர்கள் ஏ. டி. பன்னீர் செல்வம் அவர்களும், திரு. எம்.கே. ரெட்டி அவர் களும் இராட்சதர்கள் என்றால் பார்ப்பன ஆதிக்கத்தை அழிக்கத் தோன்றியவர்கள் என்பது தத்துவார்த்தம்.<br /><br />இந்த நிலையில் அவர்கள் சுயமரியாதை மகாநாடு கூட்ட முன்வந்தது யாருக்கும் அதிசயமாய்த் தோன்றாது. தஞ்சை ஜில்லாவில் பார்ப்பனரல்லாதார் மாகாண மகாநாடு கூட்டும் முயற்சியில் மாத்திரம் இருந்து கொண்டு சுயமரியாதை மகாநாட்டைச் செங்கல்பட்டு ஜில்லாவிற்கு விட்டு விட வேண்டுகிறோம். செங்கல்பட்டு ஜில்லா பிரமுகர்கள் இந்த முயற்சிக்குத் தாராளமாய் வெளியில் வந்து வேண்டிய உதவி செய்யக் கோருகின்றோம்.<br /><br />- குடிஅரசு - கட்டுரை - 16.12.1928<br /><br />Read more: http://viduthalai.in/page-5/76987.html#ixzz2w5CwnkrO<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-23154078683373390452014-03-16T06:28:47.669+05:302014-03-16T06:28:47.669+05:30
இதைவிட வேறு சாட்சி வேண்டுமா?
தென்னாட்டு பார்ப்பன...<br />இதைவிட வேறு சாட்சி வேண்டுமா?<br /><br />தென்னாட்டு பார்ப்பனர்கள் ஒத்துழையாமையை ஒழித்து திரு. காந்தியையும் மூலையில் உட்கார வைத்துவிட்டு ஒத்துழையாமையில் ஜெயிலுக்குப் போனவர்களுடையவும் திரு. காந்தியவர்களுடையவும் செல்வாக் கையும் உபயோகப்படுத்திக் கொண்டும், அவர்களுடைய பெயர்களைச் சொல்லிக் கொண்டும் ஒன்று இரண்டு வருஷம் சட்டசபைத் தேர்தல்களிலும ஜில்லா, தாலுகா முனிசிபாலிட்டி முதலிய ஸ்தலஸ்தாபனத் தேர்தல்களிலும் பார்பபனரல்லாதாருக்கு விரோதமாகவும் தங்கள் ஆதிக்கத்திற்கு அனுகூலமாகவும் எவ்வளவு தூரம் தலைக்கொழுப்புடன் காரியங்கள் செய்யலாமோ அவ்வளவும் செய்தார்கள்.<br /><br />இதற்குச் சில பார்ப்பனரல்லாத வயிற்றுச் சோற்றுக் கூலிகளும் தங்கள் சுயநலத்தை உத்தேசித்து தங்கள் மானத்தை விற்று பார்ப்பனருக்கு எவ்வளவு தூரம் அடிமையாய் இருந்துகொண்டு பார்ப்பனரால்லாதாருக்கு எவ்வளவு இடையூறு செய்யக் கூடுமோ அவ்வளவும் செய்தார்கள்.<br /><br />அந்தச் சமயத்தில் குடி அரசு ஒன்றுதான் தைரியமாய் தனி வீரனாக நின்று இந்தப் புரட்டுகளை எவ்வளவு தூரம் வெளியாக்கி அதனால் ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு தூரம் ஒழிக்கலாமோ அவ்வளவு தூரம் ஒழிக்க முன் வந்தது. இந்தக் காரணத்தால் குடி அரசும் அதன் ஆசிரியரும் திரு. ராமசாமி நாயக்கரும் பெரிய தேசத் துரோகிகளானதும் வாசகர்கள் உணர்ந்ததே யாகும்.<br /><br />ஆனால் கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் வெளியாய்விடும் என்பதுபோல் அடுத்து தேர்தல்கள் வருவதற்குள்ளாகவே பார்ப்பனர்களு டையதும் அவர்களது வால்களாகிய வயிற்றுச் சோற்று தேசபக்தர்களுடையவும் புரட்டுகள் வெளியாகி இப்போது இந்தக் கூட்டம் வெளியில் தலைகாட்டுவதற்குக் கூட யோக்கியதை யில்லாமல் முக்காடிட்டு மூலையில் உட்கார்ந்து கொள்ள நேரிட்டது.<br /><br />உதாரணமாக சென்னை கார்ப்பரேஷன் கவுன்சிலர் தேர்தல்களிலும் வெளி முனிசிபல் கவுன்சிலர்கள் தேர்தல்களிலும் சுயராஜ்யக் கட்சிக்கு வெற்றி காங்கிரசுக்கு வெற்றி என்று மொச்சைக் கொட்டை பருமனுள்ள எழுத்துக்களில் விளம்பரம் செய்துகொண்டு வந்த தேசிய பத்திரிகைகளும் தேசிய தலைவர்களும் இப்போது இருக்குமிடம் கூட தெரியவில்லை. ஒரு தேர்தலி லாவது சுயராஜ்யக் கட்சி சார்பாகவோ காங்கிரஸ் சார்பாகவோ ஆட்களை நிறுத்தியதாகவும் தெரியவில்லை.<br /><br />தேசத்துரோக கட்சியென்று பார்ப்பனர்களாலும் அவர்களது கூலிகளாலும் சொல்லப்பட்ட ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்களும் மற்றவர்களும் நின்றவிட மெல்லாம் வெற்றி பெற்று வருவதோடு அவர்களுக்கு போட்டியாக ஆட்களை நிறுத்து வதற்குக் கூட காங்கிரஸுக் காரருக்கு தைரியமில்லாமல் போய்விட்டது.<br /><br />இந்த வருடத்திய சென்னைத் தேர்தலில் திரு. எ. ராமசாமி முதலியார் அவர்கள் சென்னை கார்ப்பரேஷனில் இரண்டு இடங்களில் ஏக காலத்தில் அபேட்சகராய் நின்றதில் மேல் கண்ட இரண்டு ஸ்தானங்களிலும் போட்டியில் லாமலே வெற்றி பெற்றார் என்றால் மற்றபடி வேறு என்ன உதாரணம் வேண்டும்.<br /><br />நிற்க, காங்கிரஸ் பேரால் ஒரே ஒரு தொழிலாளர் நிறுத்தப்பட்டதில் அவர் மிகப்பெறுமித ஓட்டுகளால் நன்றாய் தோல்வியடைந்தார். சென்ற வருஷம் தொழிலாளர் சார்பாய் நின்ற கனவான் தனியாக தொழிலாளர் என்ற முறையில் நின்றதால் காங்கிரஸ்காரர்கள் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து அவரை எதிர்த்தும் கூட அத் தொழிலாளர் வெற்றி பெற்றார்.<br /><br />இவ்வருஷம் காங்கிரஸ் பெயரைச் சொல்லிக் கொண்டு நின்றதன் பயனாகவும், காங்கிரஸ் தலைவர்களாகி யவர்கள், காங்கிரஸ் வரவேற்புக் கமிட்டித் தலைவர், திரு. முத்துரங்க முதலியார், திரு. கல்யாண சுந்தர முதலியார் முதலியவர்களும் மற்றும் பல தேசிய வீரர்களும் பாடுபட்டும் தெருத்தெருவாய் பிரசங்கித்தும் தலையில் கையை வைத்துக் கொள்ள நேர்ந்து விட்டது. எனவே காங்கிரஸ் புரட்டும் தேசியப் புரட்டும் மக்களுக்கு நன்றாய் வெளியாய்விட்டதற்கு இதைவிட வேறு சாட்சி வேண்டுமா என்று கேட்கின்றோம்.<br /><br />- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 26.08.1928<br /><br />Read more: http://viduthalai.in/page-5/76986.html#ixzz2w5Cnz1zi<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-50877385280316647752014-03-16T06:28:14.177+05:302014-03-16T06:28:14.177+05:30
தம்பட்டம் மேயோக்கள் - சித்திரபுத்திரன்
ஆயிரக்கணக...<br />தம்பட்டம் மேயோக்கள் - சித்திரபுத்திரன்<br /><br />ஆயிரக்கணக்கான மேயோக்கள் தோன்றினாலும் நம் நாட்டு வைதீகர் களுக்கும், பண்டிதர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் புத்திவராது என்பது உறுதி! இந்த நாட்டில் பார்ப் பனியம் இருக்குவரையும், மனுதர்ம சாஸ்திரம் இருக்கும் வரையும் இராமாயணமும் பாரதமும் பெரிய புராணமும் இருக்கும விரையும் விஷ்ணு புராண மும், சிவமகாபுராணமும் சிவபராக்கிரம புராணமும் இருக்கும் வரையும், கெருட புராணமும், பராசரர் ஸ்மிருதியும் இருக்கும் வரையும், சுவாமியையும் அம்மனையும் படுக்கை வீட்டிற்குள் ஒரே கட்டிலின் மேல் படுக்க வைத்துவிட்டு பால் செம்பை கட்டிலின் கீழ் வைத்து கதவை மூடி விட்டு வருகின்ற கோவில்கள் இருக்கும் வரையும்.<br /><br />சுவாமி தாசி வீட்டிற்கு போகும் உற்சவங்கள் நடக்கின்ற வரையும், ஞானம் போதித்த சமணர்களைக் கழுவில் ஏற்றிய உற்சவங்கள் நடக்கின்றவரையும், ஒருவன் பெண்ணையும் ஒருவன் மனைவியையும் திருடிக் கொண்டு போனவர்களையும், திருட்டுத்தனமாக விபச்சாரம் செய்தவர்களையும் சுவாமியாக வைத்துக் கும்பிடும் கோவில்கள் உள்ள வரையும்.<br /><br />2 பெண் ஜாதி, 3 பெண் ஜாதி 100 வைப்பாட்டி 200 வைப்பாட்டி உள்ள சுவாமிகள் நமது நாட்டில் இருக்கும் வரையும், சுவாமி என்றும் அம்மனென்றும் நாச்சியாரென்றும். கல், செம்பு, பித்தளை பொம்மைகளுக்குப் பேர் வைத்து தேர் என்றும் ரதம் என்றும் பெயருள்ளது ஆயிரம் பேர், அய்யாயிரம் பேர், பத்தாயிரம் பேர் இழுத்தாலும் அசைக்க முடியாத வண்டிகளில் வைத்து இழுப்பதே பக்தியும் மோட்சமுமாயிருக்கும் வரையிலும், பட்டினி கிடந்து சாகப் போகிறவனுக்குக் கஞ்சி ஊற்றாமல் தின்று கொழுத்த சோம்பேறிகளுக்கு ஆக்கிப் படைப்பதே புண்ணியம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறவரையிலும்,<br /><br />குடிக்கப் பாலில்லாத குழந் தைகள் தேவாங்கைப் போலவும் குரங்குக் குட்டிகளைப் போலவும் தொத்திக் கொண் டும் எலிக் குஞ்சுகளாகக் கத்திக் கொண்டும், சாவதைக் கொஞ்சமும் கவனிக்காமல் குடம் குடமாய் பாலைக் கல்லுருவத்தின் தலையிலும் பாம்புப்புற்றிலும் ஊற்றிப் பாழாக்கும் வரையிலும், ஏழை மக்களை வருத்தி ஒன்றுக்கு இரண்டாக வட்டி என்றும் நிபந்தனை என்றும் கொள்ளைக்காரர்கள் போல் பணம் சேகரித்து கண்ணில்லாதக் குருடர்கள் என்று சொல்லத்தக்க மாதிரி கோடிக்கணக்கான மக்கள் எழுத்து வாசனை என்பதே ஒரு சிறிதும் இல்லாமல் தற்குறிகளாய் இருப்பதைச் சற்றும் கவனியாமல் கோவிலென்றும்,<br /><br />குளங்களென்றும் கும்பாபிஷேகமென்றும் வேத பாடசாலை என்றும் சமஸ்கிருத பாடசாலை என்றும் பார்ப்பனர்களுக்கு மாத்திரம் சாப்பாடு போடும் சத்திரமென்றும் சொல்லி பொருளைப் பாழாக்கும் அறிவிலிகள் மிகுந் திருக்கும் மட்டும், சாணியையும் மூத்திரத்தையும் கலக்கி குடிக்கும் சடங்குகள் உள்ள மட்டும் அறியாத பெண்களுக்கு சாமி பேரைச் சொல்லி கழுத்தில் கயிறு கட்டி அவர் களைப் பொது ஜனங்கள் அனுபவிப்பதற்காக முத்திரை போட்டு விபச்சாரிகளாக விட்டுக் கொண்டிருக்குமட்டும், அவர்களைக் கொண்டே கோவிலுக்கும் சாமிக்கும் உற்சவத்திற்கும் சேவை செய்யும் முறைகளை வைத்துக் கொண்டிருக்குமட்டும்,<br /><br />மனி தனுக்கு மனிதன் தொட்டால் பாவம் பார்த்தால் தோஷம் தெருவில் நடந்தால் கெடுதி என்கின்ற கொடுமைகள் இருக்கும் வரையும் மத ஆதாரம் என்பதை அந்த மதத்தைச் சேர்ந்த மக்களே படிக்கக்கூடாது கேட்கக்கூடாது என்கின்ற கொள்கையைக் கொண்ட ஆதாரங்கள் வேதமாக இருக்கும் வரையிலும், இனியும் அமெரிக்கா விலிருந்தும்,<br /><br />ஆஸ்திரேலியாவிலிருந்தும் மேயோக்கள் வராவிட்டாலும் இந்தியாவிலிருந்தே ஆயிரக்கணக்கான மேயோக்கள் புற்றீசல்கள் போல பொலபொலவென கலகல வெனப் புறப்படுவார்கள் என்பதைப் பார்ப்பனர்களும், பண்டிதர்களும் உணர்வ தோடு பார்ப்பனர்களுக்கும், வெள்ளைக்காரருக்கும் முறையே சமூகத்தையும் தேசத் தையும் காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்கும் தேசிய முடத் தெங்குகளும் உணர வேண்டுமாய் தம்பட்ட மடிக்கின்றேன்.<br /><br />- குடிஅரசு - கட்டுரை - 09.12.1928<br /><br />Read more: http://viduthalai.in/page-5/76985.html#ixzz2w5CeIPCI<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-14122059469396785852014-03-16T06:18:09.808+05:302014-03-16T06:18:09.808+05:30
அத்வானிக்கு ஜிலேபி
- குடந்தை கருணா
சமீபத்தில் ப...<br />அத்வானிக்கு ஜிலேபி<br /><br />- குடந்தை கருணா<br /><br />சமீபத்தில் புது தில்லியில் பாஜக சார்பில், முக்கிய தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட விருந்தில், சில தலைவர்கள் கலந்து கொண்டனர். அத்வானி தாமதமாக கலந்து கொண்டாலும், விவாதத்தில் கலந்து கொள்ளாமல் தனியே அமர்ந்து, அங்கே வைக்கப்பட்ட ஜிலேபியை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அரசியல் குறித்த கேள்விகளுக்கு, தனக்கு அது பற்றி ஒன்றும் தெரி யாது; ஜிலேபி சுவையாக இருக்கிறதா என்று வேண்டுமானால் கேளுங்கள்; சொல்கிறேன்.<br /><br />என்னை ஜிலேபி சாப் பிடத்தான் வரச் சொன்னார்கள் என அத்வானி கூறியதாக நேற்றைய செய் தித்தாள் ஒன்று செய்தி வெளியிட் டுள்ளது. யார் இந்த அத்வானி; சென்ற தேர்தல்களில், வாஜ்பாய் என்பவர் விகாஸ் புருஷர் அதாவது வளர்ச்சி மனிதர் என்றும், அத்வானி என்பவர் லோக் புருஷர் அதாவது இரும்பு மனிதர் என்றும் வர்ணிக்கப்பட்டார்.<br /><br />அத்தகைய அத்வானிக்கு, இன்றைய பாஜகவில் தரப்படும் மரியாதை இவ்வளவு தான். கர்நாடகாவில் சுரங்க ஊழலில் சிக்கி சிறையில் இருக்கும் பாஜகவின் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டியின் நெருங்கிய நண்பர் சீராமுலுவை மீண்டும் பாஜகவில் சேர்ப்பதற்கு, சுஸ்மா சுவராஜ், தெரி வித்த தனது கடுமையான எதிர்ப்பை யும் மீறி, சீராமுலு பாஜகவில் சேர்க்கப்பட்டுள்ளார்.<br /><br />பாஜகவின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியிடமிருந்து வாரணாசி தொகுதியைக் கைப்பற்றி மோடிக்கு தருவதற்கு ஆர்.எஸ்.எஸ். முயற்சி செய்து வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பை சுஸ்மா சுவராஜூம், முரளி மனோகர் ஜோஷியும் தெரிவித் துள்ளனர்.<br /><br />பாஜகவின் அரசியல் நடவடிக் கைகளில் ஆர்.எஸ்.எஸின் தலை யீட்டை அத்வானி விரும்பவில்லை என்கிற நிலையில் தான், அவர், கட்சி யில் முக்கியத்துவம் இழக்கக் காரண மாகி விட்டது. ஜிலேபி ருசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸின் தற்போதைய கருவியாக செயல்படும் மோடியை எதிர்க்கும் சுஸ்மா சுவராஜ், முரளி மனோகர் ஜோஸி, இருவரும், அத் வானியை அடுத்து, ஜிலேபி சாப் பிடும் நிலைக்கு விரைவில் தள்ளப் படலாம்.<br /><br />Read more: http://viduthalai.in/page-2/77019.html#ixzz2w5A6uVIi<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-54664343231714120232014-03-16T06:16:19.826+05:302014-03-16T06:16:19.826+05:30
இழிநிலை
உலகெங்கும் உள்ள மக்கள் விஞ் ஞான அறிவியல...<br />இழிநிலை<br /><br /><br />உலகெங்கும் உள்ள மக்கள் விஞ் ஞான அறிவியல் துறையில் தீவிர முன்னேற்ற மடைந்து கடவுள்களிடம் போட்டியிட்டு வருகையில், தமிழன் மட்டும் இன்னும் மாட்டு மூத்திரம் குடித்து, மோட் சம் போக எண்ணும்படியான காட்டு மிராண்டியாய் மானமற்று வாழ்வதேன்? புத்தரின் அறிவுப் பிரச்சாரத்தைக் கைவிட்டதன் பயனல்லவா இந்த இழிநிலை!<br /><br />(விடுதலை, 10.8.1961<br /><br />Read more: http://viduthalai.in/page-2/77016.html#ixzz2w59cjV3P<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-86318073433641939402014-03-16T06:13:49.172+05:302014-03-16T06:13:49.172+05:30அங்கு ஜிலேபி இங்கு அல்வாவா?
தினமலரில் இன்று ஒரு அ...அங்கு ஜிலேபி இங்கு அல்வாவா?<br /><br />தினமலரில் இன்று ஒரு அக்கம் பக்கம் செய்தி: மக்களவைத் தேர்தல் வருவதையொட்டி பி.ஜே.பி. சார்பில் நெருங்கிய பிரமுகர்களுக்கு டில்லியில் விருந்தொன்று அளிக்கப்பட்டது. அத்வானியும் அங்கு வந்தார்.<br /><br />தனக்கென ஒரு இருக்கையைத் தேடி அமர்ந்து யாருடனும் பேசாமல் தட்டிலிருந்த இனிப்புகளை சுவைத்துக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் அமர்ந்திருந்த பிரமுகர்கள் அரசியல் விவகாரங்கள் குறித்து அத்வானியிடம் கேட்டனர். அதற்கு அத்வானியோ ஜிலேபி சாப்பிட அழைத்தனர்! அதற்காகத்தான் இங்கு வந்துள்ளேன்.<br /><br />அதைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாது. ஜிலேபி டேஸ்ட் நன்றாக இருக்கிறதா எனக் கேளுங்கள் அதற்குப் பதில் சொல்லுகிறேன் எனக்குப் பதில் தெரியாத கேள்விகளையெல்லாம் கேட்க வேண்டாம்! (கூட்டத்தில் பலத்த சிரிப்பு) என்று கூறியுள்ளார் அத்வானி!<br /><br />அங்கு ஜிலேபி என்றால் தமிழ்நாட்டில் என்னவென்றால் தன்னிடம் கூட்டுச் சேர வந்துள்ள சில கட்சிகளுக்கு அல்வா கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் அதுவும் திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் (பலத்த சிரிப்பு!).<br /><br />சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் 14.3.2014<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/77010.html#ixzz2w591z98I<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-27193522490167078562014-03-16T06:10:06.276+05:302014-03-16T06:10:06.276+05:30
தி.மு.க. - அதிமுக தேர்தல் அறிக்கைபற்றிய கருத்தென்...<br />தி.மு.க. - அதிமுக தேர்தல் அறிக்கைபற்றிய கருத்தென்ன?<br /><br /><br />கேள்வி: வேத வகுப்புகளை இன்றும்கூட நடத்திக் கொண்டு இருக்கிறார்களே? - சு. சிவலிங்கம், ஜாபர்கான்பேட்டை, சென்னை<br /><br />பதில்: பார்ப்பனீயத்தின் வேரைப் பாதுகாப்பதுதானே அவா ளின் முதல் கவலை. அதனால் நடத்திக் கொண்டுள்ளார்கள்!<br /><br />கேள்வி: தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைக்கும் அதிமுகவின் தேர்தல் அறிக்கைக்கும் என்ன வித்தியாசம்? - அ. அய்ன்ஸ்டின், போரூர்<br /><br />பதில்: உண்மையான நீரோட்டம் - தி.மு.க. தேர்தல் அறிக்கை. கானல் நீரோட்டம் - அ.தி.மு.க.வின் அறிக்கை.<br /><br />கேள்வி : காந்தியாரைக் கொன்றவன் ஆர்.எஸ்.எஸ்.காரன் என்றால் ஏன் கோபம் வருகிறது அவர்களுக்கு? - பா. துக்காராம், அவினாசி<br /><br />பதில்: உண்மையைச் சொன்னால் உடம்பெரிச்சல் பலருக்கு என்ற பழமொழியைக் கேட்டதில்லையா?<br /><br />கேள்வி: பிள்ளையார் என்ற கடவுளை எப்படி வேண்டுமானாலும் பெயர் வைத்து எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாமா?<br />- வி. முருகேசுவரி, வேலூர்<br /><br />பதில்: எதுவும் கற்பனை என்கிறபோது அதை யார் எப்படியும் பயன்படுத்தலாமே!<br />சில பிள்ளையார் - திருமணம் ஆகாதவர்; சில பிள்ளையார் - திருமணம் ஆனவர்<br />இத்தியாதி! இத்தியாதி!<br /><br />கேள்வி: யாராலும் அழைக்கப்படாத விருந்தாளியாக தமிழ்நாடு காங்கிரஸ் ஆனதுபற்றி... - பி. மதிவாணன், சென்னை-112<br /><br />பதில்: அவர்கள் குறிப்பாக காங்கிரஸ் மேலிடம் சிந்தித்து, செய்த அல்லது செய்து வரும் தவறுகளுக்குப் பரிகாரம் - கழுவாய் - தேடிட முன் வந்தால் சரி!<br /><br />கேள்வி: பி.ஜே.பி. தே.மு.தி.க. - பா.ம.க. ம.தி.மு.க. கூட்டணி வைத்துக் கொண்டாலும் தேர்தலில் ஒருவருக்கொருவர் காலை வாரிக் கொள்வார்கள் என்றுதான் நினைக்கிறேன் - தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்? - துரை. பாண்டியன், அச்சிறுபாக்கம்<br /><br />பதில்: இயல்புக்கு ஒருவருக்கொருவர் எதிரும் புதிரும் என்பதால் என்னதான் ரிங்க்மாஸ்டர் இருந்தாலும், இயல்பை மாற்றிக் கொள்ள முடியுமா - அத்தகையவர்களால்?<br /><br />கேள்வி: ஒவ்வொரு இனத்தவரும் தங்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என கேட் கும் போது நாமும் நாத்திகர்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டால் என்ன? - எஸ். நல்லபெருமாள், வடசேரி<br /><br />பதில்: நாத்திகர்கள் ஏற்கெனவே தனிமையாக்கப் படுத்தப்பட்டுள்ளதால் தனி இடஒதுக்கீடே தேவையில்லை!<br /><br />கேள்வி: மோடி பிரதமராக வேண்டும்; இல்லாவிட்டால் ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்ற சோவின் கூற்று, எதனைக்காட்டுகிறது? - நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்<br /><br />பதில்: அவருடைய உள் ஆசை, வெளி ஆசை இரண்டையும் காட்டுகிறது!<br /><br />கேள்வி: இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு ரூ.44 ஆயிரம் கோடி உணவு பொருட்கள் வீணாவதாக மத்திய அமைச்சர் சரத்பவார் கூறியுள்ளாரே? (பழங்கள், காய்கறிகள் மட்டுமே ரூ.13,309 கோடி அளவு பாழாகிறதாம்).<br /><br />பதில்: அதைவிட அபிஷேகம் கல்லுக்கு என்ற முறையில் பாழாகும் பால், பழங்கள், காய்கறிகள் பற்றியும் சேர்த்தால் பல கோடி (தஞ்சை பெரிய கோயிலிலேயே ஆண்டுதோறும் பாழடிக்கப்படும் கணக்கும் சேர்த்தால்) எவ்வளவோ வரும்!<br />சட்டப்படி இவை குற்றமாக்கப்படல் வேண்டும்.<br /><br />கேள்வி: பன்றிமீது வாகனம் மோதி விபத்தானால் தரித்திரம் என்கிறார்களே? வாகனத்தைக்கூட விற்று விடுகிறார்களே - பன்றி என்ன அவ்வளவு மோசமான மிருகமா? - தி. இரமணன், த.பேட்டை, சென்னை-81<br /><br />பதில்: என்னங்க.. இப்படி கேட்கிறீங்க? அது வராக அவதாரமாயிற்றே! ஸ்ரீமான் ஸ்ரீஜத் மகாவிஷ்ணு அல்லவா பண்ணி ஆக மாறியுள்ளார்?<br /><br />அதெப்படி கடவுள் அபசகுனமாவார்? (அட அறிவுக் கொழுந்து பக்தர்களே!)<br /><br />Read more: http://viduthalai.in/page8/76966.html#ixzz2w57w8umD<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-40904940204398495872014-03-16T06:08:39.296+05:302014-03-16T06:08:39.296+05:30சுப்ரபாதம்
சுப்ரபாதத்தில் இன்னொரு லாஜிக்கும் இருக...சுப்ரபாதம்<br /><br />சுப்ரபாதத்தில் இன்னொரு லாஜிக்கும் இருக்கிறது. அதிலும் தமிழ்தான் வெற்றி பெறுகிறது. திருப்பதி வெங்கடாஜலபதி நின்று கொண்டிருக் கிறார். அவரை எழுப்புவது சரியாக இருக்குமா? இங்கே திருவரங்கத்தில் அரங்கன் படுத்துக் கொண்டிருக்கிறார்; இவரை எழுப்புவது சரியாக இருக்குமா? படுத்துக் கொண்டி ருப்பவரை எழுப்பும் வேலையை தமிழில் செய்தார் தொண்டரடிப் பொடியாழ்வார்.<br /><br />நின்று கொண்டிருப்பவரை எழுப்பும் வேலையை சமஸ்கிருதத்தில் செய்தார் அண்ணா. ஆனால்... நாமோ றீஷீரீவீநீ இல்லாத சமஸ்கிருத வெங்கடேச சுப்ரபாதத்தை தினந்தோறும் காலையில் போட்டுக் கேட்கிறோம். ஆனால்... மறுபடியும் நான் அழுத்திச் சொல்வேன். இதே பொருளை 600 ஆண்டுகள் முன்கூட்டியே சொன்ன தமிழை தள்ளி வைத்து விட்டார்களே.<br /><br />இன்றும் கோயில்களில் தினசரி சேவா காலத்தில் தொண்டரடிப் பொடியாழ்வா ரின் திருப்பள்ளியெழுச்சி ஒலிக்கிறது.<br /><br />ஆனாலும், சுப்ரபாதத்தைப் போல திருப்பள்ளியெழுச்சி என தமிழ் பெயரில் மாற்றி இனியாவது எவரேனும் அதற்கு நல்ல இசையமைத்து விடியற்காலையில் தமிழ் மணக்கச் செய்வார்களா?...<br /><br />(இந்து மதம் எங்கே போகிறது? அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் - பக்கம் 243)<br /><br />தொகுப்பு: க.பழனிசாமி, தெ.புதுப்பட்டி<br /><br />Read more: http://viduthalai.in/page6/76967.html#ixzz2w57kWkrd<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-90545266731261184202014-03-16T06:08:11.975+05:302014-03-16T06:08:11.975+05:30இலட்சியப் பெண் வளர்ந்த விதம்
1917 நீதிக்கட்சி அரச...இலட்சியப் பெண் வளர்ந்த விதம்<br /><br />1917 நீதிக்கட்சி அரசியல் பார்ப்பனரை ஒரு பொழுதும் நம்பாதீர்கள் - (சர்)பிட்டி தியாகராயர்<br /><br />1926 சுயமரியாதை இயக்கம் புரோகி தப் பார்ப்பனரைப் பணியாதீர் - ஈ.வெ. இராமசாமி<br /><br />1937 இந்தி எதிர்ப்பு இயக்கம் பார்ப் பனர் மொழிகளை (இந்தி, சமஸ்கிருதம்) ஏற்காதீர் - மறைமலை அடிகளார்<br /><br />1939 நாட்டுப் பிரிவினை இயக்கம் ஆரியர் ஆட்சி, கலை, மொழி, நாகரிகம் எதற்கும் இடம் கொடாதீர் - சர். ஏ.டி. பன்னீர்செல்வம்<br /><br />1944 திராவிடர் கழகம் ஆரியம் (வைதி கம்) ஆபத்து மிக்கது அரசியல், சமூக வியல், பொருளியல், வாழ்வியல் ஆகிய அனைத்திலிருந்தும் அதனை ஒழித்துக் கட்டுங்கள் - பெரியார் ஈ.வெ.இராமசாமி<br /><br />1949 திராவிட முன்னேற்றக் கழகம் ஆரியமே (வர்ணாஸ்ரம வைதிகம்) பாசிசத்தின் பிறப்பிடம் வளர்ந்து வரும் ஆரிய பாசிச ஆட்சியிலிருந்து விடுபட வாழ்வு பெற திராவிட நாடு திராவிட ருக்கே என்பதை நிலைநாட்டுங்கள்.<br /><br />- அறிஞர் அண்ணாதுரை (இனமானப் பேராசிரியப் டாக்டர் அன்பழகன் அவர்களின் வகுப்புரிமைப் போராட்டம், பக்கம் 15)<br /><br />Read more: http://viduthalai.in/page6/76967.html#ixzz2w57djztS<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-45222610128529656362014-03-16T06:07:44.991+05:302014-03-16T06:07:44.991+05:30தமிழன் யார்? பகுத்தறிவுத் திறன் இழந்ததேன்
உலகத்தி...தமிழன் யார்? பகுத்தறிவுத் திறன் இழந்ததேன்<br /><br />உலகத்தில் வளர்ச்சியும் வாழ்வும் பெற்றுள்ள மேல்நாட்டு மக்களும், சீன, சப்பானியரும் நாகரிகத்தின் முகப்பில் அடி எடுத்து வைக்கும் முன்னரே, நாகரிக வாழ்வு கண்டு, நானில வகை கண்டு, நாடாளும் முறைகண்டு, ஒரு தனித் தன்மையுடன் வாழ்வாங்கு வாழ்ந்த தமிழர்கள் - தென்னாட்டுத் திராவிட மக்கள் - கடந்த சில நூற்றாண்டுகளாகவே வாழ்விழந்து, வளமிழந்து, உரிமை மறந்து, தலை தாழ்ந்து கிடக்கின்றனர்.<br /><br />பத்தாயிரம் ஆண்டுகட்கு முன்னரே ஒரு மொழி கண்டு, எட்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே கூடி வாழும் வாழ்க்கைக்கு முறை கண்டு,<br /><br />அய்யாயிரம் ஆண்டுகட்கு முன்னரே கோனாட்சிக்கு வழி கண்டு, இயற்கையில் முத்தமிழாய் முகிழ்த்த தமிழின் திறன் கண்டு, சிந்தனையைச் செய்யுள் வடிவத்தில் கண்டு மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னரே இலக்கியங்கட்கு இலக்கணங்கண்டு, ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் உலகம் வியக்கும் திருக்குறள் என்னும் பொது அறம் விளக்கும் நூல் வடிவு பெறக்கண்டு, பண்பாட்டின் உயர் கோபுரத்தின் உச்சியில் ஏறி நின்று உலகுகண்டு, தென்னகத்தின் கிழக்கிலும், மேற்கிலும் அலைகடலுக்கு அப்பால் உள்ள நாடுகளின் துறைமுகங்களில் தமிழர் தம் வாணிகக் கலங்களின் கொடிகள் பறக்கக்கண்டு, இணையின்றி வாழ்ந்த இனந்தான், படிப்படியாய்ச் சரிந்து, பகுத்தறிவைப் பயன்படுத்தும் திறன் இழந்து அல்லலுற்று நிற்கின்றது இடைக்காலம் முதலாக.<br /><br />(பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் தமிழ்வானின் விடிவெள்ளி தந்தை பெரியார் நூலில் 69 ஆம் பக்கத்தில்)<br /><br />Read more: http://viduthalai.in/page6/76967.html#ixzz2w57Wvx3j<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-27088906854330312322014-03-16T06:07:21.711+05:302014-03-16T06:07:21.711+05:30பகுத்தறிவு என்பது
பகுத்தறிவு என்ற சொல்லுக்குப் பொ...பகுத்தறிவு என்பது<br /><br />பகுத்தறிவு என்ற சொல்லுக்குப் பொருள் என்ன? என்ற வினாவிற்கு ஓரிரு சொற்களில் பொருள் கூறுவது கடினமான செயலேயாகும்.<br /><br />அச்சொல்லுக்குரிய பொருளாக அகராதிகள் கூறும் பொருள்கள் சில பின்வருமாறு அமைந்துள்ளன.<br /><br />பகுத்தறிவு எனப்படுவது பொருட் களின் / நிகழ்வுகளின் / கருத்துக்களின் கூறுகளை அவதானித்து ஆய்ந்து அவற் றின் இயல்புகளில் இருந்து ஆதாரப்பூர்வ மான புறவய நோக்கில் நிரூபிக்கப் படக்கூடிய முடிவுகளை முன்வைக்கும் வழிமுறைகளையும் அதை ஏதுவாக்கும் மனித அறிவு ஆற்றலையும் குறிக்கின்றது.<br /><br />பகுத்தறிவின் நோக்கம் மெய்ப் பொருளை அல்லது உண்மையைக் கண் டறிவதே... என விளக்கம் தருகிறது விக்கிப்பீடியா.<br /><br />திருவள்ளுவர் அறிவு என்பதற்கு விளக்கம் கூறும் போது,<br /><br />எப்பொருள் யார் யார் வாய்க்கேட் பினும் அப்பொருள்<br />மெய்ப்பொருள் காண்பது அறிவு (குறள். 423) என்றும்,<br /><br />எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு (குறள். 355)<br />என்றும் அறிவுக்கு விளக்கம் கூறுகிறார்.<br /><br />அவர் அறிவுக்குக் கூறும் இவ்விளக் கம் பகுத்தறிவுக்கும் பொருந்துவது போலவே உள்ளது. பகுத்தறிவு வேறு; அறிவு வேறு என்பதாகக் கிடையாது.<br /><br />அறிவு என்றாலே பகுத்தறிவு என்று தான் பொருள். அதிகப்படியான அறிவைப் பயன்படுத்துகிற செலுத்துகிற முறையே பகுத்தறிவு என்பதாகக் கூறுகிறார்கள் என்றதொரு விளக்கமும் காணப்படுகிறது.<br /><br />நம்மால் நம்ப இயலாதவற்றை மூடநம்பிக்கை எனப் பெயரிட்டு அம்மூட நம்பிக்கைகளைப் புறம் தள்ளுவதே பகுத்தறிவு என்றொரு விளக்கத்தைத் தருகிறது இன்னொரு வலைத்தளம்.<br /><br />பகுத்தறிவு என்பது காரண காரியங் களை மனத்திற்கொண்டு விஷயங்களைத் தொடர்புபடுத்தி அல்லது பிரித்து அறிதல்.<br /><br />உயிரினங்களில் மனிதனுக்கு மட்டுமே பகுத்தறியும் ஆற்றல் உண்டு என்கிறது கிரியாவின் தற்காலத்தமிழ் அகராதி.<br /><br />பகுத்தறியும் திறன், நம்பிக்கையின் அடிப்படையில் அல்லாமல் எதையும் சிந்தித்து ஏற்றுக்கொள்வதை அடிப்படை யாகக் கொண்ட முறை என்கிறது மற்றோர் அகராதி.<br /><br />இவற்றை அடிப்படையாகக் கொண்டே பகுத்தறிவுச் சிந்தனைகளை அடையாளம் காணும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.<br /><br />பகுத்தறிவு சிந்தனைகள் செவ்வியல் படைப்புகளில் (உயர்திரு இரா.தாமோதரன் (அறவேந்தன்) அவர்கள் பாரதிதாசன் பல்கலைக்கழக வெளியீடு நூலில் 96 ஆம் பக்கம்)<br /><br />Read more: http://viduthalai.in/page6/76967.html#ixzz2w57QcTdt<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-51684239318570853982014-03-16T06:05:39.688+05:302014-03-16T06:05:39.688+05:30
சாக்ரட்டீஸின் பொன் மொழிகள்
தங்கத்தைக் கண்டுபிடி...<br />சாக்ரட்டீஸின் பொன் மொழிகள்<br /><br /><br />தங்கத்தைக் கண்டுபிடிக்கச் சுரங்கத்திற்குள் நுழைகிறவன் மரியாதையைப் பார்த்தால் முடியுமா? தங்கத்தை விட மேலான பொருளை அதாவது நீதியைத் தேடிக் கண்டுபிடிக்க நாங்கள் புறப்பட்டிருக்கிறோம். இதில் மரியாதையைப் பார்த்துக் கொண்டு முயற்சியைக் கைவிட்டு விடுவோமா?<br /><br />ஒரு மனிதனுக்கு எந்தத் தொழிலைச் செய்ய இயற்கையிலேயே ஒரு திறமை இருக்கிறதோ அந்தத் தொழிலை மட்டும் அவன் செய்து கொண்டு போனால் நல்லது<br /><br />விபரீதமான குற்றங்களைச் செய்கிற கடவுளர்களைச் சிருஷ்டித்து அந்தக் கடவுளர்களின் கதைகளைச் சிறுவர்களுக்குச் சொல்லிக் கொடுப்போமானால் அவர்கள் என்ன நினைத்துக் கொண்டு விடுகிறார்கள் தெரியுமா? கடவுளர்களே பல குற்றங்களைச் செய்திருக்கிறபோது நாமும் தாம் செய்தாலென்ன! என்று கருதி அதே மாதிரி செய்யத் தொடங்கி விடு கிறார்கள். இந்த மாதிரியான கதைகளை நாம் சொல்லிக் கொடுக்கக் கூடாது.<br /><br />தவிர, ஒரு தெய்வத்திற்கு விரோதமாக செய்வதாகவோ உள்ள கதைகளையும் நாம் சொல்லலாகாது. ராட்சதர்களோ அல்லது தேவர்களோ ஒருவருக்கொருவர் போராட்டங்கள் நடத்தியதாகவும் நாம் உபதேசிக்கலாகாது மனிதர்கள் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டுமென்றும் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டுமென்றும், இவை போன்ற நீதிகளைப் புகட்டுகிற கதைகளையே சொல்ல வேண்டும்.<br /><br />Read more: http://viduthalai.in/page5/76961.html#ixzz2w56yo66H<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-52687943805366885542014-03-16T06:03:53.480+05:302014-03-16T06:03:53.480+05:30
சொன்னார்கள்
நடைப்பாங்குகள் என்பவை மற்றவர்களுடைய ...<br />சொன்னார்கள்<br /><br />நடைப்பாங்குகள் என்பவை மற்றவர்களுடைய உணர்ச்சிகளை வசியத்தோடு தெரிந்து கொள்வது, அந்த முன்னுணர்வு உங்களுக்கு இருந் தால், உங்களுக்கு நல்ல பாங்குகள் உள்ளதென்று பொருள். நீங்கள் என்ன முள் கருவியைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப்பற்றிய பிரச்சினையில்லை.<br />- எமிலி போஸ்ட்<br /><br />மற்றவர்கள் தவறு காணக் கூடாது என்று ஒருவன் ஒன்றை நன்றாகச் செய்து முடிக்கும் வரை காத்திருப்பா னேயானால், அவன் எதையுமே செய்ய முடியாது.<br />- கார்டினல் நியூமென்<br /><br />பிரச்சினைகள் என்பது முன்னேற் றத்தின் விலை. தொந்தரவைத் தவிர என்னிடம் எதையும் கொண்டு வரா தீர்கள். நல்ல செய்திகள் என்னைப் பலவீனப்படுத்துகின்றன.<br />- சார்லஸ் எப் கெட்டரிங்<br /><br />ஒவ்வொருவரும் மற்றவர்களைப் பற்றி என்ன சொல்லுகிறார்கள் என்பது எல்லா மனிதர்களுக்கும் தெரிந்தால், உலகத்தில் நாலு நண்பர்கள்கூட இருக்க மாட்டார்கள்.<br />- பிளெய்ஸ் பாஸ்கல்<br /><br />நீண்ட விளக்கங்களுக்கு நான் எதிரி, அவை உண்டாக்குபவனையோ அல்லது கேட்பவனையோ பொதுவாக இருவரையும் ஏமாற்றுகிறது.<br />- கோத்தி<br /><br />பேரிடர் என்பது துல்லியமான கண்ணாடி, அதில் உண்மையிலேயே நாமே நம்மைப் பார்த்துத் தெரிந்து கொள்கிறோம்.<br />- டாவெநன்ட்<br /><br />எப்படிப் படிப்பது என்பதைத் தெரிந்த ஒவ்வொரு மனிதனும், தன் னுடைய சக்தியால், தன்னையே பெரிதாக்கிக் கொள்ள, தான் வாழ்ந்து கொண்டிருக்கும் வழிகளைப் பெருக் கிக் கொள்ள தன்னுடைய வாழ்க் கையை முழுமையானதாக, முக்கியத் துவமும் மகிழ்ச்சியும் உடையதாக ஆக்க முடிபவனாகிறான்.<br />- ஆல்டுவஸ் ஹக்ஸ்லி<br /><br />அதிக எச்சரிக்கையுள்ளவன் சிறிய அளவே நிறைவேற்றுவான்.<br /><br />@@@@@@@@@<br /><br />வெற்றி என்பது காலந்தவறாமை, திட்ப நுட்பம் என்ற இரண்டு மிக எளி மையான பெற்றோர்களின் குழந்தை.<br />- லாங்பெல்லோ<br /><br />கடமை என்ற அடித்தளத்தின் மேல் குடிகொண்டுள்ள ஒரு புன்முறுவல். உலகத்திலேயே மிகவும் மதிப்பு மிக்க பொருள்களில் ஒன்றாகும்.<br />- ஜே.டி. ராக்பெல்லர்<br /><br />மகிழ்ச்சிக்கு வழி மற்றவர்களை மகிழ்ச்சியுடைய வர்களக்குவது. இறந்த காலத்தை உங்களால் மாற்ற முடியாது. ஆனால், எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுவதன் மூலம் ஒரு குறைபாடற்ற நல்ல நிகழ்காலத்தை அழிக்க முடியும்.<br /><br />Read more: http://viduthalai.in/page4/76960.html#ixzz2w56XHCz4<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-69962937888880518812014-03-16T06:03:23.773+05:302014-03-16T06:03:23.773+05:30
மதம் ஏற்றுக்கொள்ள முடியாத இனவெறியைக் கொண்டது! ஹால...<br />மதம் ஏற்றுக்கொள்ள முடியாத இனவெறியைக் கொண்டது! ஹாலிவுட் நடிகர் சாட்டை!<br /><br />ஹாலிவுட் நடிகராகிய கிறிஸ் ஓடவ்ட் மதம் குறித்து கூறும்போது, மதமானது பிறரைத் தாக்கக்கூடிய ஏற்றுக்கொள்ள முடியாத இனவெறி கொண்டதாகும் என்றார்.<br /><br />பிரைய்ட்ஸ்மெய்ட்ஸ் படத்தின் நாயகன் கிறிஸ் ஓடவ்ட் அவருடைய நாத் திகக் கண்ணோட்டத்தில் இவ்வாறு கூறு கிறார். ஆனாலும், அவருடைய இளமைக் காலங்களில் குறைந்த சுதந்திரத்துடன்தான் இருந்ததாகக் கூறுகிறார்.<br /><br />இப்போது மதக்கோட்பாடுகள் மனிதனின் வளர்ச்சியை முடக்குகின்றன. வெள்ளை மாளிகையிலிருந்து அவர் இனத் தைச் சேர்ந்த கிறித்துவ மதவாதிகளைத் திருப்திபடுத்த எல்லைகளைக் கடந்து கிறித்துவத்தின் மீதான செயலைச் செய்வ தாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாமீது குற்றம் சாட்டுகிறார். கிறிஸ் ஓடவ்ட் மதம் சொல்லும் இயற்கைக்கு மேலானதாக சொல்லப்படும் கடவுள் மீதான நம்பிக் கையை பைத்தியக்காரத்தனம் என்கிறார்.<br /><br />கிறிஸ் ஓடவ்ட் பிரிட்டிஷ் ஜிக்யூ என்கிற இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரி வித்துள்ளதாவது: என் வாழ்நாளில் மற்ற வர் விருப்பத்தினுள் நுழைவதில்லை என்று இருந்துள்ளேன். மற்றவர் நம்பு கின்ற உரிமையை மதிக்கிறேன். கால ஓட் டத்தில் மதக்கருத்துக்களின் அழுத்தங் களால் சுதந்திர சிந்தனை குறைவதாகக் கருதுகிறேன்.<br /><br />மதக்கருத்துக்கள் உலகைப் பாழ்படுத்துவதைப் பார்த்துக் கொண்டி ருக்க முடியாது, மற்றவர்களும் தடுத்து நிறுத்தவேண்டிய தேவை ஏற்படுகிறது. மதத்தால் இனவெறி ஏற்படும்போது, திருப்பு முனையாக அது தடுத்து நிறுத்தப் பட வேண்டும்.<br /><br />இயற்கைக்கு மேலான தென்கிற மதக் கருத்துகள் பைத்தியக் காரத்தனமானவை என்று கூற அனுமதிக் கா விட்டால் அனைவரையும் பைத்தியக் காரர்களாக ஆக்குகிறார்கள் என்றுதான் பொருள். மத நம்பிக்கையாளரை, கடவுள் நம்பிக்கை உள்ளவரை அமெரிக்க அதிப ராக ஏற்றுக்கொள்ள முடியாது.<br /><br />ஆவி உல கில் மனிதன் இருப்பதாக நம்புகிறவர்கள் ஆவி உலகிற்கே போகட்டும்! பராக் ஒபாமா கடவுள்மீது நம்பிக்கை உள்ளவ ராக எந்தவகையிலும் நான் கருதவில்லை. இவ்வாறு ஹாலிவுட் நடிகர் கிறிஸ் ஓடவ்ட் கருத்து தெரிவித்துள்ளார்.<br /><br />Read more: http://viduthalai.in/page4/76959.html#ixzz2w56P2uUM<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-48259005468080782702014-03-16T06:02:52.380+05:302014-03-16T06:02:52.380+05:30
டாக்டர் முத்துலட்சுமியை அய்யர் ஆக்கி மகிழும் பார்...<br />டாக்டர் முத்துலட்சுமியை அய்யர் ஆக்கி மகிழும் பார்ப்பன ஏடுகள்<br /><br />பல நூற்றாண்டுகளாக பெண்களை இழிவாக நடத்திய தேவதாசி முறையை எதிர்த்து போராடி அதை ஒழித்துக் கட்டியவர் டாக்டர் முத்துலட்சுமி.<br /><br />அப்போது தேவதாசி முறையை ஆதரித் தும் டாக்டர் முத்துலட்சுமி அம்மையா கொண்டு வந்த மசோதாவை எதிர்த்தும் காங்கிரஸ்காரரான சத்தியமூர்த்தி அய்யர்,<br />மனித குலம் தோன்றியது நம்முடைய காலத்தில் அல்ல. வியாசர், பராசரர் காலத்திலிருந்து அந்தக் குலம் வாழ்ந்து கொண்டு வருகிறது.<br /><br />பலருக்கும் இன் பத்தை வாரி வழங்கிக் கொண்டும் இருக் கிறது. இப்படிக் கூறுவதால் என்னை தாசிக் கள்ளன் என்று கூறலாம். அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. தாசிகளை ஒழித்தால் பரத நாட்டியக் கலை அழிந்துவிடும். என்றார்.<br /><br />அப்படியானால், இனி அந்த புனித மான வேலையை உங்கள் சமூகப் பெண் களை வைத்துச் செய்து கொள்ளுங்கள் என்று பணிவோடு பதிலடி கொடுத்தார் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார்.<br /><br />ஆனால், இன்றைக்கு தினமணி, தினகரன் உட்பட பல பார்ப்பன பத்திரி கைகள், இந்த செய்திகளையும் பெரி யாரின் அரசியலில் அவரின் பங்களிப் பையும் இருட்டடிப்பு செய்து அவரின் தந்தை நாராயண சுவாமி அய்யர் என்று அவரை ஒரு பார்ப்பனராக சித்திரிக் கிறார்கள்.<br /><br />பெரியார் வழியாக அவர் அரசியல் அறிவு பெற்றதினால்தான் பெரியாருடன் இணைந்து இந்தி எதிர்ப்பு போராட்டம், தேவதாசி எதிர்ப்பு மசோதா, தமிழ் வளர்ச்சி, தமிழாசிரியர்களின் ஊதிய உயர் வுப் போராட்டம் முதலியவற்றை சிறப் பாக செய்தார்.<br /><br />பார்ப்பனர்களோ, டாக்டர் முத்து லட்சுமியின் தந்தை நாராயண சுவாமி அய்யர் என்று அழுத்திச் சொல்கிறார்கள்.<br /><br />ஆனால், டாக்டர் முத்துலட்சுமி திரும ணத்திற்கு முன்பும் பின்பும் தன் பெய ருக்கு பின் அய்யர் என்று போட்டுக் கொள்ளவில்லை. அதை இழிவாக கருதிய அவர்தான், தன் கணவருக்கு பின்னால் இருந்த ரெட்டி என்கிற பெயரை தன் பெயரோடு இணைத்துக் கொண்டார்.<br /><br />ஜாதி படிநிலையில் அய்யர் என்பதே உயர்ந்தது. ரெட்டி ஒரு சூத்திர ஜாதி.<br /><br />ஆனால், அய்யரை விட ரெட்டியை அவர் உயர்வாக அல்லது மரியாதையாக கருதியதற்கான காரணம் புரிய வேண்டு மானால் அவரின் அரசியலை புரிந்து கொள்ள வேண்டும். இசைவேளாளர் சமூகத்தை, தேவதாசி சமூகமாக நடத்திய பார்ப்பனக் கும்பல், இசைவேளாளர் சமூகத்திலிருந்து வந்த டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரை பார்ப்பனராக சித்தரிக்கிறது,<br /><br />இந்த நாட்டுக்காக பாடுபட்ட பார்ப் பன சமூக முற்போக்காளர்கள் வரிசை யில் கணக்கு வைத்துக் கொண்டு பார்ப் பனீயத்தின் சதியை மறைக்க முயற்சிக் கிறது. அவர் தன்னை பார்ப்பனராக உணர்ந்திருந்தால், சத்தியமூர்த்தி அய்யரை பார்த்து, உங்கள் சமூகப் பெண்களை வைத்துச் செய்துகொள்ளுங்கள் என்று ஏன் பேச வேண்டும்?<br /><br />அது மட்டுமல்ல அவர் பார்ப்பனராக இருந்திருந்தால், பெண் விடுதலைக் குறித் தும் பெண் கல்வி குறித்தும் தீவிரமாக எழுதிய பாரதி, 1912 ஆண்டே இந்தியா வின் முதல் பெண் மருத்துவராக பட்டம் பெற்ற டாக்டர் முத்துலட்சுமி குறித்து பாராட்டி பக்கம் பக்கமாக எழுதியிருப் பாரா? ஆனால், உலகத் தகவல்களை விரல் நுனியில் வைத்திருந்த நம் மஹாகவியோ, உள்ளுர் பெண்ணின் அகில இந்திய சாதனை குறித்து, ஒரே ஒரு வார்த்தைகூட எழுதவில்லை.<br /><br />- வே.மதிமாறன்<br /><br />Read more: http://viduthalai.in/page4/76958.html#ixzz2w56DtS1M<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-27436603312223631632014-03-16T06:01:35.675+05:302014-03-16T06:01:35.675+05:30
வேதங்களில் திராவிடர் ஒழிப்பு!
(வேத காலத்தில் ஆர...<br />வேதங்களில் திராவிடர் ஒழிப்பு!<br /><br /><br />(வேத காலத்தில் ஆரிய - திராவிடப் போராட்டம் எவ்வாறு நடைபெற்றது என்பதற்கு வேதங்களே தக்க சான்றாகும். வேதங்களுக்குக் காலம் இல்லை; கடவுள் அருளியது என்பதெல்லாம் அசல் பார்ப் பனக் கட்டுக் கதைகள் என்பது அதில் வரும் குறிப்புக்களைப் பார்க்கும் எவருக் கும் புரியும். ஆரியர்கள் படையெடுத்து வந்த பிறகு தான் அவை தொகுக்கப்பட்ட ஆரிய நூல்கள் என்பது சிந்திக்கும் எவருக்கும் தெளிவாய்த் தெரியும்.<br /><br />அவ்வேதங்களில் திராவிட மக்களை, பூர்வீகக் குடிகளை அவர்கள் எவ்வாறு அழித்தனர், ஒழித்தனர் என்பது கீழ்வரும் சுலோகங்கள் மூலம் எளிதில் விளங்கும் என்பதால் அவற்றை இங்கே திரட்டித் தருகிறோம்.<br /><br />ஓ, உலகம் போற்றும் இந்திரனே, ஸுஷ்வருவனை எதிர்த்த இருபது கறுப்பு அரசர்களையும் அவர்களது அறுபதினாயி ரத்துத் தொண்ணூற்றியொன்பது படை களையும் நீ உன் தேர்ச் சக்கரத்துக்கு இரையாக்கி நசுக்கிக் கொன்று ஆரியர் களுக்கு உதவி புரிந்தாய்.<br /><br />(ரிக்வேதம், மண்டலம் 1 மந்திரம் 53, சுலோகம் 9)<br /><br />ஆரிய அரசன் தாபிதியின் நன்மைக்காக முப்பதாயிரம் தாசர்களை உன் மந்திர சக்தியினால், ஓ! இந்திரனே! எமனுலகுக்கு அனுப்பினாய்!<br /><br />(ரிக் வேதம், மண்டலம் 4, மந்திரம் 30, சுலோகம் 21).<br /><br />ஓ, தீரனான இந்திரனே, உன் வலை பிரம்மாண்டமானது; ஆயிரக்கணக்கான வர்களைச் சிக்க வைக்கும் ஆற்றலு டையது; ஒன்று, பத்து, நூறு,ஆயிரமாகப் பெருகும் சக்தியுடையது. அத்தகைய வலையில் நூற்றுக்கணக்கான, லட்சக்க ணக்கானவர்களைக் கொன்றாயே!<br /><br />(அதர்வண வேதம், காண்டம் 8, மந்திரம் 8, சுலோகம் 7).<br /><br />ஓ, இந்திரனே! ஸோமனே! ராட்சசர் களை எரி! எரி!! நசுக்கு! நசுக்கு!! இருண்ட வனாந்திரங்களில் ஒன்று, பத்து, நூறாய்ப் பெருகி வருகிற அந்த அசுரக் கூட்டங் களை அடக்கு! அடக்கு!! சின்னா பின்னப் படுத்து; மடையர்களை அக்கினி ஜ்வாலை யால் சுட்டுப் பொசுக்கு! சித்திரவதை செய்! துண்டு துண்டாக வெட்டு!<br /><br />(இது ரிக்வேதம் 7ஆவது மண்டலம், 104வது மந்திரம், சுலோகம் 8).<br /><br />ஓ, இந்திரனே! ஸோமனே அந்த அசுரக் கூட்டத்தை, துரோகிகளை, தீமையே உருவானவர்களை அக்கினி குண்டத்தில் வைத்து நீர்ப்பானையில் வேக வைப்பது போல் அவித்துக் கொல்! பிராமண துரோகிகளான அந்தப் பச்சை மாமிசம் தின்னும் அரக்கர்களை மீளா நரகத்தில் தள்ளி ஹிம்சிப்பாயாக!<br /><br />(அதர்வண வேதம், காண்டம் 8, சுலோகம் 1).<br /><br />ஓ இந்திரனே! ஓ, ஸோமனே! வான மண்டலத்திலிருந்து கொடிய ஆயுதங் களைக் கீழே சொரிவீர்களாக; பூமியிலி ருந்து ஆயிரக்கணக்கான ஆயுதங்கள் கிளம்புமாறு கருணை புரிவீர்களாக! பிரதி தினமும் பெருகிவரும் ராட்சசக் கூட்டங் களை எதிர்ப்பதற்காக மலைகளிலிருந்தும் லட்சக்கணக்கான அக்கினி யாஸ்திரங்கள் தோன்றும்படி அருள்புரிவீர்களாக!<br /><br />அசுரர்கள் ஒழிக! பிள்ளை குட்டிகள் நசுக்க! பிற்கால சந்ததிகள் அழிக! பூமி தேவி அசுரக் கூட்டங்களை விழுங்கி விடட்டும்!<br /><br />(அதர்வண வேதம், காண்டம் 8, சுலோகம் 4).<br /><br />Read more: http://viduthalai.in/page3/76956.html#ixzz2w55xRWCi<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-7788718154561236552014-03-16T06:01:06.729+05:302014-03-16T06:01:06.729+05:30
கற்போம் கணினியை!
ஜிமெயில் தான் நிறைய பேர் பயன்ப...<br />கற்போம் கணினியை!<br /><br /><br />ஜிமெயில் தான் நிறைய பேர் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவை ஆகும். வெறும் மின்னஞ்சல் அனுப்புதல் பெறுதல் என்பதோடு மட்டுமின்றி மற்ற பல அரிய வசதி களையும் இதில் நாம் பயன்படுத்த முடியும். எல்லாமே மின்னஞ்சலுடன் தொடர்புடையது என்ற போதிலும் மற்ற மின்னஞ்சல் சேவை தளங் களில் இவற்றை நாம் பயன்படுத்தும் வசதி இல்லை. அவற்றை பற்றி பார்ப்போம்.<br /><br />1. ஈமெயில் forward/Redirect செய்வது எப்படி?<br />நம்மில் பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்னஞ்சல் முகவரிகளை வைத்து இருப்போம். சில நேரங் களில் சில மின்னஞ்சல் முகவரிகளை அடிக்கடி ஓபன் செய்து பார்க்கா விட்டால், கல்யாணத்துக்கு வரச் சொல்லி வந்த மின்னஞ்சலை நாம் வளைகாப்புக்கு பார்க்க வேண்டி வரலாம்(அனுபவம்). இதை தவிர்க்க ஒரே மின்னஞ்சல் முகவரியில் நம்முடைய அனைத்து மின்னஞ்சல் செய்திகளையும் படிக்க முடிந்தால்? அந்த வசதி பற்றிய பதிவு தான் இவை.<br /><br />2. From Address மாற்றி மின்னஞ் சல் அனுப்புவது எப்படி?<br />மேலே உள்ள பதிவில் ஒரு மின்னஞ் சல் முகவரிக்கு வரும் மின்னஞ்சல்களை எப்படி மற்றொன்றுக்கு Forward/Redirect செய்வது எப்படி என்று சொல்லி இருந்தேன். ஆனால் அப்படி forward/Redirect மின்னஞ்சலுக்கு பதில் அனுப்ப ண்டும் அந்த மின்னஞ்சல் முகவரிக்கு நுழைய வேண்டும். அப்படி இல்லாமல் நீங்கள் Receive செய்த முகவரியில் இருந்தே From Address மாற்றி அனுப்ப முடிந்தால்? அது எப்படி என்பது தான் இவை.<br /><br />3. To, Cc, Bcc என்ன வித்தியாசம்?<br /><br />நாம் பெரும்பாலும் ஒரு மெயில் compose செய்யும்போது அதை அனுப்ப To என்ற Field இல் நண்பர்களின் மெயில் அய்டிக்களை கொடுப்போம். ஆனால் இது மட்டும் Send செய்ய உள்ள வழி அல்ல மேலும் இரண்டு வழிகள் உள்ளன. அவைதான் Cc, Bcc அவற்றை பற்றிய பதிவு To, Cc, Bcc – என்ன வித்தியாசம் என்பதாகும்.<br /><br />4. Gmail ஜிமெயிலில் பயன்படும் Keyboard Shortcuts<br /><br />இணையத்தில் இன்று பெரும்பா லான பயனர்கள் பயன்படுத்தும் இமெயில் என்றால் அது ஜிமெயில் தான். இதில் நீங்கள் shortcut கள் பயன்படுத்த முடியும் என்று உங்களுக்கு தெரியுமா? இதன் மூலம் உங்கள் நேரம் குறையும். சில முக்கிய Shortcut களை Gmail /ஜிமெயிலில் பயன்படும் Keyboard Shortcuts என்ற பதிவில் காணலாம்.<br /><br />5. Gmail Filters என்றால் என்ன? அதனை பயன்படுத்துவது எப்படி?<br />நிறைய பேருக்கு இருக்கும் ஒரே பிரச்சினை தேவை இல்லாத நபர்களி டம் இருந்து நமக்கு மின்னஞ்சல்கள் வருவது. சில சமயம் உங்களுக்கு கோடி கோடியாய் பணம் கிடைத்துள்ளது என்று கூட வரும். ஒரு நாளைக்கு குறைந்தது 50 மெயில்கள் இது போன்று வந்தால் எரிச்சலாகதான் இருக்கும். அவற்றை எப்படிGmail Filters கொண்டு தடுப்பது மற்றும் அதன் மற்ற பலன்கள் என்ன என்பது பற்றிய பதிவு ஆகும்.<br /><br />6. Attach செய்ய முடியாத File-களை Attach செய்வது எப்படி?<br /><br />நண்பர்களுக்கு ஏதேனும் File -களை மின்னஞ்சல் மூலம் அனுப்ப முயலும் போது சில Format-களை ஜிமெயில் ஏற்றுக் கொள்ளாது, இதனால் வேறு வழிகளை நாம் தேட வேண்டி வரும். அப்படி இல்லாமல் எளிதாக அவற்றை ஜிமெயிலிலேயே இணைத்து அனுப்பும் மாற்று வழி பற்றிய பதிவாகும்.<br /><br />7. பாஸ்வேர்ட் கொடுக்காமல் உங்கள் ஜிமெயில் கணக்கை மற்றவர் கள் பயன்படுத்த Access கொடுப்பது எப்படி?<br /><br />சில நேரங்களில் ஒரு நிறுவனம், அமைப்பு போன்றவற்றுக்கு ஜிமெயில் மூலம் மின்னஞ்சல் கணக்கு வைத் திருக்கும் போது அதை ஒருவர் மட்டும் கண்காணிக்க முடியாத நிலை வரலாம். அப்போது இன்னும் பலருக்கு கணக் கின் பாஸ்வேர்ட் போன்றவற்றை தந்தால் தான் அவர்கள் பயன்படுத்த முடியும். ஆனால் அது பாதுகாப்பு இல்லை என்று சிலர் நினைப்பது உண்டு.<br /><br />இதுவே பாஸ்வேர்ட் எதுவும் கொடுக்காமல் குறிப்பிட்ட சிலர் உங்கள் கணக்கை கிநீநீமீ செய்ய அனுமதி கொடுத்தால் நன்றாக இருக் கும் அல்லவா? எப்படி என்பதை சொல்லும் பதிவு தான் இது.<br /><br />8. ஜிமெயிலை தமிழ் மொழியில் பயன்படுத்துவது எப்படி?<br /><br />இதில் சில நேரங்களில் மொழிப் பிரச்சினை காரணமாக நாம் பல வற்றின் அர்த்தம் தெரியாமல் இருப் போம். அதே ஜிமெயில் முழுவ தையும் தமிழில் மாற்ற முடிந்தால்? இது கொஞ்சம் பழைய வசதி தான் என்றாலும் இதன் பதிவின் இரண்டாம் பகுதி உங்களுக்கு உதவக் கூடும். எப்படி செய்வது என்பதை ஜிமெயிலை தமிழ் மொழியில் பயன்படுத்துவது எப்படி? என்ற பதிவில் அறியலாம்.<br /><br />9. ஜிமெயிலில் Undo Time Limit - அய் அதிகரிப்பது எப்படி?<br />ஜிமெயிலில் உள்ள பல முக்கிய வசதிகளில் ஒன்று Undo. ஒரு மின்னஞ்சலில் ஏதேனும் தவறு இருந்தாலோ அல்லது எதையேனும் சேர்க்காமல் விட்டு இருந்தாலோ உடனடியாக அது செல்வதை நிறுத்தி மறுபடி எடிட் செய்ய இது பயன்படு கிறது. அதே போல ஒரு மின்னஞ் சலை தவறுதலாக நீக்கி விட்டாலும் இதன் மூலம் மீட்க முடியும். இதன் Time limit – அய் எப்படி அதிகரிப் பது என்ற பதிவுதான் இது.<br /><br />Read more: http://viduthalai.in/page3/76957.html#ixzz2w55mo3g6<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-21749644203921115682014-03-16T06:00:05.242+05:302014-03-16T06:00:05.242+05:30
இந்து மதத்தில் பெண்கள் நிலை?
1. ஒரு கணவன் தன் ம...<br />இந்து மதத்தில் பெண்கள் நிலை?<br /><br /><br />1. ஒரு கணவன் தன் மனைவியைத் தனக்குத்தொண்டு செய்யவும், பிள்ளைகளைப் பெறவும் கடவுளால் கொடுக்கப்பட்டவள் என்று அதர்வண வேதத்தில் உள்ள ஒரு பாட்டிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.<br /><br />2. மனிதனுக்கு இன்பத்தை அளிக்கவே - காம வேட்கையைத் தணிக்கவே பெண்கள் பிறந்திருக்கிறார்கள் என்று உபநிஷதர்கள் நினைத்து வந்திருக்கிறார்கள்.<br /><br />3. இந்த உலகில் ஆண்களைக் கற்பழிக்கும் இயல்பைப் பெண்கள் பெற்றிருப்பதினால்தான் புத்திசாலிகள் பெண்களுக்கு மத்தியில் தற்காப்புடன் இருக்க வேண்டியவர்களாகிறார்கள். - மனு 2-213.<br /><br />4. பெண்ணாய்ப் பிறப்பதைவிட கெட்ட பிறப்பு வேறு எதுவுமில்லை. எல்லாக் கேடுகளுக்கும் வேர் பெண்களே. - பாரதம் அனுசான்ய பருவம்<br /><br />5. பெண்ணைவிடப் பாவகரமான பிராணி வேறு இல்லை. பெண் எரிகிற நெருப்பு போன்றவள்; பெண் மாய்கை (வஞ்சக) குணமுள்ளவள், க்ஷவரக் கத்தியின் கூர்மையான பதம் போன்றவள். இவை எல்லாம் உண்மையாகவே ஒரு பெண்ணின் தன்மையில் இருக்கின்றன. - பாரதம் 43-22.<br /><br />6. பெண்கள் உறுதியான பலம் இல்லாதவர்களானதால், அவர்கள் நிலையற்ற - ஸ்திரமற்றவர்கள் என்று கருதப்படுகிறது - மனு 9-15<br /><br />7. ஒரு பெண் தன் நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்குத் தனது கணவனையோ, குழந்தைகளையோ, சகோதரர்களையோ, யாரை வேண்டுமானாலும் கொலை செய்யத் தயங்க மாட்டாள். - பாகவதஸ்கந்தம் 4-14-42<br /><br />Read more: http://viduthalai.in/page2/76953.html#ixzz2w55Ze23e<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-46828407056926474332014-03-15T05:59:04.520+05:302014-03-15T05:59:04.520+05:30
சுயமரியாதைச் சுடரொளி மானமிகு சாந்தா இராமமூர்த்திக...<br />சுயமரியாதைச் சுடரொளி மானமிகு சாந்தா இராமமூர்த்திக்கு நமது வீர வணக்கம்!<br /><br /><br />திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பி னரும், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் பென்னாகரம் தோழர் பி.கே.இராமமூர்த்தி அவர்களின் வாழ்விணையரும், கோவை மண்டலத் திராவிடர் கழகத் தலைவர் குன் னூர் டாக்டர் இரா.கவுதமன் (பெரியார் மருத் துவர் அணி பொறுப்பாளர்) அவர்களின் அன் னையாரும், கழகப் பொருளாளர் டாக்டர் சு.பிறைநுதல் செல்வி அவர்களின் மாமியா ருமான சுயமரியாதைச் சுடரொளி மானமிகு திருமதி சாந்தா இராமமூர்த்தி அவர்கள் (வயது 82) குன்னூரில் இன்று (14.3.2014) விடியற் காலை 4.30 மணியளவில் டாக்டர் கவுதமன் இல்லத்தில் இயற்கை எய்தினார் என்பது மிகவும் துன்பத்திற்கும், துயரத்திற்குமுரியது ஆகும்!<br /><br />வாழ்நாள் முழுவதும் தந்தை பெரியார் வழியில் கொள்கை வாழ்வு வாழ்ந்தவர் அம்மா சாந்தா இராமமூர்த்தி அவர்கள் ஆவார்கள்.<br /><br />மாநாடுகள், போராட்டங்கள் எல்லாவற் றிலும் கலந்துகொண்டு உயிர் மூச்சடங்கும் நிலையிலும் கடவுள் மறுப்பாளராக வாழ்ந்து காட்டியவர் மறைந்த கொள்கைப் பற்றாளர் மானமிகு சாந்தா இராமமூர்த்தி அவர்கள்.<br /><br />பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறு வனம் என்ற அறக்கட்டளைக்குச் சொந்த மான தருமபுரி பெரியார் மன்றம் - தோழர் பி.கே.இராமமூர்த்தி அவர்களின் அயரா உழைப்பால் உருவானதாகும். அந்த மன்றத் தின் மேற்பார்வை பொறுப்பாளராக இருந்து, நாணயமாக கணக்குகளைத் தவறாமல் தலைமைக்கு அனுப்பி, மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் அம்மையார் மானமிகு சாந்தா இராமமூர்த்தி அவர்கள் ஆவார்கள்.<br /><br />ஒவ்வொரு கமிட்டி, மாநாடு, இயக்க நிகழ்வுகள் எது நடந்தாலும் குடும்பத்தாரோடு - தனது தளர்ந்த உடல் நிலையிலும் கலந்து கொள்ளத் தவறாதவர்.<br /><br />அவரை கடைசியாக நேரில் அரூர் திரு மணத்திற்கு 3.2.2014 அன்று சென்ற பொழுது தருமபுரியில் சந்தித்து உரையாடிடும் வாய்ப்புப் பெற்ற நிலையில், இப்படி அலைகிறீர்களே உங்கள் உடல்நிலை என்னாகும்? என்று உரிமையுடனும், அன்புடனும் கடிந்து கொண்டவர்.<br /><br />அவரது அருமைச் செல்வங்கள் மகன் டாக்டர் கவுதமன்-மருமகள் டாக்டர் பிறைநுதல்செல்வி, மகள் மலர்விழி-மருமகன் பழனியப்பன், மகன் டாக்டர் புகழேந்தி-மருமகள் மீனாட்சி, மூத்த மகள் மல்லி, பெயரப் பிள்ளைகள் அனைவரும் அவரை மிகவும் நன்றாகக் கவனித்து உடல்நலம் காக்க கடைசி வரை பாடுபட்டது, ஒரு சிறந்த குடும்பத்தின் கடமை உணர்வு எப்படி அமையவேண்டும் என்பதற்கானதோர் எடுத்துக்காட்டாகும்!<br /><br />அவரது மறைவால் வாடிடும் அவரது குடும்பத்தினர், அவரது சகோதர, சகோதரிகள் குடும்பத்தினர் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் இயக்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொண்டு, அவரது சிறந்த கொள்கை வாழ்வுக்கும், தொண்டுக்கும் நமது வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கி றோம்.<br /><br />சென்னை <br />14.3.2014<br /><br />- கி.வீரமணி,<br />தலைவர்,திராவிடர் கழகம்.<br /><br />குறிப்பு: நாளை (15.3.2014) மதியம் ஒரு மணிக்கு இறுதி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இறுதி நிகழ்ச்சியில் கழகத் தலைவர் பங் கேற்பார்.<br /><br />Read more: http://viduthalai.in/page-8/76936.html#ixzz2vzGoeXsg<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-35808864979546092042014-03-15T05:56:17.851+05:302014-03-15T05:56:17.851+05:30மத விபச்சாரம்
ஒரு மனிதன் புத்திரப் பேறு இல்லாமல் ...மத விபச்சாரம்<br /><br />ஒரு மனிதன் புத்திரப் பேறு இல்லாமல் இறந்தால், அவனது மனைவி தனது கணவனின் மூத்த சகோதரனைக் கலவி செய்து புத்திரப் பேறு பெறலாம். இந்த வழக்கத்துக்கு இந்து மதத்தில் நியோகா என்று பெயர். இது விபச்சாரத் தன்மையாகக் கருதப்படுவதில்லை. இதைவிட மிக மோசமான சம்பவம் மகாபாரதத்திலே காணப்படுகிறது.<br /><br />பாண்டு ஏதோ ஒரு சாபத்தால் மனைவியைத் தொட்டால் மரணமடைவான் என்று இருந்ததால் தன் மனைவியைப் பல கடவுள்கள் புணர்ந்து புத்திரப் பேற்றைப் பெற வலியுறுத்தினான். அதன்படியே அவள் அய்ந்து பிள்ளைகளைப் பெற்றாள்.<br /><br />Read more: http://viduthalai.in/page-7/76921.html#ixzz2vzG9rdlR<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-29954391338274297132014-03-15T05:55:28.374+05:302014-03-15T05:55:28.374+05:30நேருவின் எதிரிகள்!
எனக்கு மத நம்பிக்கை கிடையாது. ...நேருவின் எதிரிகள்!<br /><br />எனக்கு மத நம்பிக்கை கிடையாது. நான் இறந்த பிறகு எனக்கு மதச்சடங்குகளுடன் அடக்கம் செய்யக் கூடாது என்று நேரு தனது உயிலில் கூறியிருப்பது தெரிந்ததே. அப்படி இருந்தும் அவர் இறந்த பிறகு மதானுச் சாரங்களுடன் மதச் சடங்குகள் செய்யப்பட்டுத் தான் அவர் எரிக்கப்பட்டார்.<br /><br />நேருவின் விருப்பத்திற்கு எதிராக இப்படி நடந்ததற்கு இந்திராகாந்தியும், அன்றைய உள்துறை அமைச்சர் நந்தாவும் தான் காரணம் என்று நேருவின் அந்தரங்கச் செயலாளராக இருந்த எம்.ஓ. மத்தாய் தெரிவித்துள்ளார்.<br /><br />நேரு மறைவதற்கு முன்னர் நேருவின் சாவை முறியடித்து அவர் ஆயுள் நீள்வதற்காக 4,25,000 முறை ஆயுள் நீடிப்பு மந்திரங்கள் ஓதப்பட்டதாக நந்தா தெரிவித்துள்ளார்.<br /><br />இந்த நிகழ்ச்சிகளுக்கெல்லாம் நேருவின் தங்கை திருமதி விஜயலட்சுமி பண்டிட் எதிர்ப்பு தெரிவித்தும் அவரால் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் இருந்தார் என்று மத்தாய் தெரிவித்திருக்கிறார்.<br /><br />தகவல்: நேருவிற்குப் பிறகு இந்தியா என்ற நூலிலிருந்து<br /><br />Read more: http://viduthalai.in/page-7/76921.html#ixzz2vzFwEHoA<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-57919327351437152082014-03-15T05:54:51.584+05:302014-03-15T05:54:51.584+05:30ஒரு எடுத்துக்காட்டு!
19.6.1977 தேதிய ஆனந்த விகடனி...ஒரு எடுத்துக்காட்டு!<br /><br />19.6.1977 தேதிய ஆனந்த விகடனில் 77ஆம் பக்கத்தில், கம்ப்யூட்டரைத் தோற்கடித்த கணித மேதை! என்ற தலைப்பிட்டு இந்தியா டுடே என்ற ஏட்டில் வந்த கீழ்க்கண்ட செய்தியை வெளியிட்டுள்ளது.<br /><br />கணித மேதை சகுந்தலாதேவி அண்மையில் அமெரிக்காவுக்கு சென்று அங்குள்ள உலகிலேயே மிக வேகமாகக் கணக்குப் போடும் கம்ப்யூட்டர் ஒன்றை போட்டியில் தோற்கடித்து, 20ஆம் நூற்றாண்டின் இணையற்ற ஹீரோயின் என்ற பட்டப் பெயருடன் திரும்பியிருக்கிறார்.<br /><br />சகுந்தலாதேவி ஏன் தன்னுடைய கணவர் பெயரைத் தன் பெயருடன் சேர்த்துக் கொள்வதில்லை? நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்: கணவனும் மனைவியும் உண்மையிலேயே சரிசமமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவள் நான்.<br /><br />சாதாரணமாக திருமணமானதற்குக் அடையாளமான அணிகலன்களைக் கூட நான் அணிவதில்லை. இதைப் படித்த பிறகாகிலும் பெண்கள் ஆண்களுக்கு தாம் எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்பதை உணர்ந்து, தாலி கட்டிக் கொள்ளும் பழக்கத்தினை வெறுத்து ஒதுக்குவார்கள் என நம்புகிறேன்.<br /><br />-கிருஷ்ணவேணி, (தாலி கட்டிக் கொள்ளாமல் திருமணம் செய்து கொண்டவர்) பண்ருட்டி<br /><br />Read more: http://viduthalai.in/page-7/76921.html#ixzz2vzFmJckY<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-50249895264446650542014-03-15T05:54:21.325+05:302014-03-15T05:54:21.325+05:30
சாவில் கொட்டு ஏன்?
மனிதன் இறந்தவுடன் நம் நாட்டி...<br />சாவில் கொட்டு ஏன்?<br /><br /><br />மனிதன் இறந்தவுடன் நம் நாட்டில் மேளம், தாரை, தப்பட்டை முழக்கம் செய்கிறார்களே, அது ஏன் தெரியுமா? மனிதன் செத்தவுடன், அவன் உடலிலிருந்து பிரிந்த ஆன்மா பக்கத்தில் உள்ள மரம், செடி, கொடிகளில் ஒளிந்து இருக்குமாம், அது உயிருள்ள மற்ற மனிதர்களையும் தொந்தரவு செய்யுமாம்.<br /><br />அதற்காகத் தான் இந்தத் தாரை, தப்பட்டை முழக்கங்களாம். சத்தத்தைத் கேட்டு, அந்த ஆன்மா ஓடு ஓடு என்று ஓடிவிடுமாம்! இப்படி ஒரு மூட நம்பிக்கை.<br /><br />சரி, நமக்கு ஒரு சந்தேகம். பார்ப்பனன் வீட்டில் எழவு விழுந்தால் இத்தகைய சத்தங்கள் இல்லாமல், அடுத்த வீட்டுக்குக் கூட தெரியாமல் தூக்கிக் கொண்டு போகி றார்களே - அவாள் ஆத்மா மட்டும் பக்கத்தில் ஒளிந்து கொண்டு தொந்தரவு செய்யாதா?<br /><br />செத்தும், நம் மக்கள் செலவு செய்து, கடன்பட்டு அல்லல் பட வேண்டும் என்று எவ்வளவு நயவஞ் சகமாக இத்தகைய ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள் பார்த்தீர்களா?<br /><br />Read more: http://viduthalai.in/page-7/76921.html#ixzz2vzFdZoDZ<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-32382788491102053452014-03-15T05:53:33.297+05:302014-03-15T05:53:33.297+05:30பக்தி ஏன் வராது?
இடங்கொண்டு விம்மி யிணைக் கொண் டி...பக்தி ஏன் வராது?<br /><br />இடங்கொண்டு விம்மி யிணைக் கொண் டிறுகி<br />யிளகி முத்து வடங் கொண்டகொங்கை மலைகொண் டிறைவர் வலிய நெஞ்சை நலங்கொண்ட கொள்கை<br />நலங்கொண்ட நாயகி நல்லரவின் படங்கொண்ட வல்குல் பனிமொழி வேதப் புரியிறையே!<br />- அபிராமிபட்டன் எழுதிய அபிராமி அந்தாதி, பாடல் எண் 42.,<br /><br /> <br /><br />பொருள்: அகன்று, பருத்து, விம்மி, இணைந்து இறுகி வேண்டுங்கால் இளகி, முத்து வடமணிந்து இருக்கின்ற கொங்கையாகிய மலைகளைக் கொண்ட கல்லினும் வலிய கணவர் நெஞ்சை ஆடும்படிச் செய்த வெற்றி மாது யாரெனில், பாம்பின் படம் போன்ற அல்குலினை (பெண்குறி)யும் குளிர்ந்த மொழியினையும் உடைய வேதச் சிலம்பைத் தரித்த அபிராமியே!<br /><br />Read more: http://viduthalai.in/page-7/76920.html#ixzz2vzFSIHVs<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com