tag:blogger.com,1999:blog-1474608369333206681.post1031937216242638137..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: வாழ்க பெரியார்! வாழ்க அண்ணா!!தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-69931964298835920662012-02-03T20:57:56.991+05:302012-02-03T20:57:56.991+05:30ஈமச் சடங்கா?
அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப் பூர்வமான...ஈமச் சடங்கா?<br /><br />அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப் பூர்வமான னுச. நமது எம்.ஜி.ஆர். ஏட்டின் 4ஆம் பக்கத்தில்<br />வரலாற்றில்... இன்று என்னும் தலைப்பின்கீழ் 1969 - அறிஞர் அண்ணா மறைவு. அவரது ஈமச்சடங் கில் மிக அதிக மக்கள் 30 லட்சம் பேர் கலந்து கொ ண்டனர். இது கின்னஸ் சாதனையானது என்று எழுதப்பட்டுள்ளது - அண்ணா பெயரில் உள்ள கட்சியின் அதிகாரப் பூர்வ ஏட்டில்?<br /><br />ஈமச் சடங்கா? அப்படி ஒரு பார்ப்பனீய சடங்கு அண்ணா மறைவின்போது நடைபெற்றதா? அண் ணாவை இன்னொரு முறை சாகடிக்கலாமா?<br />--------"விடுதலை” 3-2-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-32053694877132986902012-02-03T20:40:54.845+05:302012-02-03T20:40:54.845+05:30அண்ணா நினைவு நாளில் கோவில்களில் சிறப்பு வழிபாடாம்!...அண்ணா நினைவு நாளில் கோவில்களில் சிறப்பு வழிபாடாம்! இதைவிட கேலிக் கூத்து ஏதேனும் உண்டா? அண்ணா நினைவு நாள் என்ற வரலாற்றுக் குறிப்பு நாளை இப்படி கொச்சைப்படுத்தலாமா?<br /><br />அண்ணா தலைசிறந்த பகுத்தறிவுவாதி. எந்தக் கோவிலுக்கும் சென்றதில்லை. காஞ்சீபுரத்தில் இல்லாத கோவில்களா? மழைக்குக்கூட அங்கு ஒதுங்கிய தில்லையே!<br /><br />தூத்துக்குடி துறைமுகம் தொடர்பாக நல்ல முடிவு எட்டப்பட்டதால், அன்றைக்கு மத்திய அமைச்சராகவிருந்த வி.கே.ஆர்.வி. ராவ் அவர்கள் அண்ணாவைக் கோவிலுக்குக் கூப்பிட்டபோதுகூட போக மறுத்தவர் ஆயிற்றே - அத்தகைய அண்ணாவின் நினைவு நாளில் கோவில்களில் சிறப்பு வழிபாடா?<br /> ---------"விடுதலை” 3-2-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-66067639815775886362012-02-03T20:33:18.703+05:302012-02-03T20:33:18.703+05:30அண்ணா நினைவு நாள் சூளுரை! தமிழர் தலைவர் அறிக்கை
ப...அண்ணா நினைவு நாள் சூளுரை! தமிழர் தலைவர் அறிக்கை<br /><br />பகுத்தறிவு, தன்மானம், இனமானம், பண்பாடு சுயமரியாதையைக் கட்டிக் காக்கும் பொது வாழ்வைப் புதுப்பிக்க அண்ணா நினைவு நாளில் சூளுரைபோம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் தெரிவித்துள் ளார். அறிக்கை வருமாறு:<br /><br />இன்று (பிப்ரவரி 3ஆம் தேதி) அறிஞர் அண்ணா வின் 43ஆவது நினைவு நாள்!<br /><br />தந்தை பெரியார் என்ற பாசறையில் உருவான பண்பட்ட பகுத்தறிவுப் போர்வாள் அவர்.<br />வற்றாத நன்றி உணர்வும், வரையறைக்குள் அடக்க முடியாத குரு பக்தியும் கொண்டவர் அண்ணா! இல்லையானால் நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் பெரியார்தான் என்று பிரகடனப்படுத்தியிருப்பாரா?<br /><br />பதவிக் காலத்தை வசந்தம் என்று கருதும் பலரது மத்தியில், பெரியாரிட மிருந்து கொள்கைப் புயலாய்ப் பிரச்சாரம் செய்த காலத்தையே தம் வாழ்வின் வசந்தம் என்று கருதி, கடைசி மூச்சுள்ளவரை, பெரியாரின் எளிமையே தனது அணிகலனாய் அணிந்து வாழ்ந்த அருள் சுரந்த அறிவுலக மேதை!<br /><br />அவரைப் பொறுத்தவரை ஆட்சி என்பது கொள்கை - லட்சியபுரிக்குச் செல்லும் ஈரோட்டுப் பாதை என்ற நினைவோடு இருந்தவர். தமது ஆட்சியை பெரியாருக்கே அர்ப்பணித்தவர்!<br />ஆரிய மாயை எப்படிப்பட்டது என்பதை அகிலத்திற் குப் புரிய வைத்த அய்யாவின் அருஞ்சீடர்!<br /><br />இன்றோ அரசியலில் அண்ணா முகத்திரையாகி உள்ள கொடுமையின் அரங்கேற்றம்! தனது நயத்தக்க நாகரிகத்தால், கடமை, கண்ணியம், கட்டுப்பாடுபற்றி தனது தோழர்களுக்குப் போதித்து வாழ்ந்து காட்டிய மனிதகுல மாமேதை!<br /><br />மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று உரைத்து மதித்து நடந்திட்ட மகத்தான மனிதநேயர்!<br /><br />அவரது இந்த நினைவு நாளில் பகுத்தறிவு, தன்மானம், இனமானம், பண்பாடு இவற்றைக் கட்டிக் காக்கும் பொது வாழ்வைப் புதுப்பிக்க சூளுரை எடுப்போம்!<br />சுயமரியாதை வாழ்வு வாழுவோம்!<br /><br />வாழ்க பெரியார்! வாழ்க அண்ணா!!<br /><br /> <br /><br />கி.வீரமணி<br />தலைவர்<br />திராவிடர் கழகம் 3-2-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com