Search This Blog

11.12.14

திரிபுவாதம் பண்ணி கிருஷ்ணனை காப்பாற்றலாமா?


நாட்டில் எத்தனையோ தொலைக்காட்சிகள் இருந்தாலும் இரவு 9 மணிக்கு இடம் பெறும் எத்தனைக் கோணங்கள் என்னும் கலைஞர் தொலைக்காட்சியின் விவாத மேடையும், நாள்தோறும் காலை 8.30 முதல் 9 மணி வரை இடம் பெறும் நாடும் ஏடும் நிகழ்ச்சிகளும் சிறப்பானவை.


நேற்று இரவு இடம் பெற்ற விவாத மேடையின் தலைப்பு திராவிடக் கொள்கைகள் தேவையற்றவையா? என்பதாகும் பேராசிரியர் அருணன், வழக்குரைஞர் இந்திரஜித், இராமசுப்பிரமணியன் ஆகியோர் விவாதத்தில் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளராக தம்பிராஜா சிறப்பாகச் செயல்பட்டார்.


நூறு ஆண்டு வரலாறு படைத்த திராவிடர் இயக்கத்தின் கொள்கைகள் தேவையா என்ற கேள்வி எழுப்புபவர்களின் மனப்பாங்கு என்ன என்பது  முக்கியமான வினாவாகும்.


இந்திய வரலாற்றில் தென்னகத்தில் அன்றைய சென்னை மாநிலத்தில் திராவிடர் இயக்கம் நிகழ்த்திக் காட்டிய சமூக மாற்றத்திற்கான ஆக்கப் பூர்வமான பணிகள் வேறு எந்தப் பகுதியிலும், வேறு எந்த இயக்கத் தாலும், அமைப்பாலும் நடத்திக்  காட்டப்பட்டுள்ளதா என்று சவால் விட்டுக் கேட்க முடியும். பொது இடங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் புழங்குவது என்பதில் தொடங்கி, கல்வி, வேலைவாய்ப்பு (சமூக நீதி), பெண்ணடிமைத் தகர்ப்பு, மொழி உணர்வு, இனவுணர்வு, சுயமரியாதை உணர்வு, சமதர்மம், சமத்துவம், கலையில் மறுமலர்ச்சி என்று அடுக்கடுக்காகச் சொல்லிக் கொண்டே போகலாமே!


பிரபல பொருளாதார மேதையான அசோக்மேத்தா ஒருமுறை மிகவும் செறிவாகக் குறிப்பிட்டாரே!


தென்னகத்தில் குறிப்பாக சென்னை மாநிலத்தில் ஆட்சி அதிகாரம் ஒடுக்கப்பட்ட மக்கள் கையில் வந்ததற்கு திராவிட இயக்கம் பெரும் பங்கு ஆற்றியிருக்கிறது, இப்பொழுதுதான் வடமாநிலங்களில் அதற்கான ஆரம்பம் துளிர்க்க ஆரம்பித்துள்ளது என்று சொன்னாரே - அதன் பொருள் என்ன?


பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு அவர்களாக இருக்கட்டும், அவரின் அரு மருந்தன்ன செல்வர் மருத்துவர் திரு. அன்புமணி இராமதாசு அவர்களாகவே இருக்கட்டும்; மருத்துவக் கல்லூரியில் சேருவதற்குச் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்று தடை உடைக்கப்பட்டதற்குக் காரணம் தந்தை பெரியார் நீதிக்கட்சி, பிரதமர் பனகல் அரசரும்தான் என்பதை முதலில் தெரிந்து கொள்ளட்டும்!


அந்த நிபந்தனைக்குள் அடங்கியிருக்கும் நஞ்சு என்ன என்பதைப் புரிந்து கொள்ளும் சக்தியிருந்தால் பார்ப்பனீயத்தைப்பற்றி இப்பொழுது அவர்கள் தெரிவிக்க முயலும் கருத்து சொத்தையானது என்பதை அறிந்து கொள்ளலாம்.
அந்தத் தடையை மட்டும் திராவிடர் இயக்கம் நீக்காமலிருந்தால் இருவரும் டாக்டர்களாக ஆக முடியாது என்பதை முதலில் தெரிந்து கொள்ளட்டும்!

பார்ப்பனர்கள் எவ்வளவு விவரமாக இருக்கிறார்கள்? கலைஞர் தொலைக்காட்சியில் விவாதம் புரிந்த திரு. என். இராம சுப்பிரமணியம் (அய்யர்) என்ன சொல்லுகிறார்?


ஆரியர் - திராவிடர் என்பது வெள்ளைக்காரன் கற்பித்தது என்கிறார். வெள்ளைக்காரன் இந்தியாவுக்குள் புகுந்து அதிகாரத்தைக் கைப்பற்றிய 5 நூற்றாண்டு களுக்குமுன்.


அதற்குமுன் ஆரியர் - திராவிடர் என்ற பேச்சோ, சொற்பதமோ கிடையாதா!  திரு. இராமசுப்பிரமணியம் - திரு ஞானசம்பந்தரை திராவிட சிசு என்று சொன்னதாகச் சொல்லுகிறார் - அது என்ன வெள்ளைக்காரன் இந்தியாவுக்குள் புகுந்து காலடி எடுத்து வைப்பதற்கு முன்பா? பின்பா?


மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகம் திராவிடர் நாகரிகம் என்று சொன்னது வெள்ளைக்காரன் மட்டும் தானா? ருசிய ஆய்வுக் குழுவினரே அப்படி அறிவிக்க வில்லையா?


ஆர்.எஸ்.எஸின் குருநாதரான எம்.எஸ்., கோல் வாக்கரே ஞான கங்கையில் ஆரியர்பற்றிப் பேசியுள்ளாரே வேதங்களும், மனு ஸ்மிருதியிலும் கூட திராவிட  என்பது இடம் பெற்றுள்ளதே!


ரவிந்திரநாத் தாகூர் என்ன தமிழ்நாட்டுக்காரரா? பெரியார் இயக்கத்துக்காரரா? அவரால் இயற்றப்பட்டு இந்தியாவின் தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டு நடைமுறையில் உள்ள ஜனகணமன பாடலில் திராவிட என்ற சொல் இடம் பெறவில்லையா?


இன்னொன்று எல்லோரும் ஏமாற்றும் தந்திரம் - கீதையில் பகவான் கிருஷ்ணன் சதுர்வர்ணம் மயா சிருஷ்டம் என்பது குணத்தில் அடிப்படையில் தான் என்று திசை மாற்றப் பார்க்கிறார்கள்; ஆனால், மறைந்த காஞ்சி மூத்த சங்கராச்சாரியார், சந்திரசேகரேந்திர சரஸ்வதி இதனை ஏற்றுக் கொள்வதில்லை.


குணத்தின் அடிப்படையில்  என்றால் எந்த வயதில் அடையாளம் காண முடியும்? என்ற கேள்வியை எழுப்புகிறார். முக்கியமாக பிராம்மணனின் தொழிலை எடுத்துக் கொண்டால் இவன் ஏழெட்டு வயசுக்குள் குருகுலத்தில் சேர்ந்தால் தானே அப்புறம் பன்னிரெண்டு வருஷங்களில் தன் தொழிலுக்கானவற்றை படித்துவிட்டு, பிறகு அவற்றில் தானே அனுஷ்டானம் பண்ண வேண் டியதைப் பண்ணவும், பிறருக்குப் போதிக்க வேண்டியதைப் போதிக்கவும் முடியும்? என்ற கேள்வியை எழுப்பி, கீதையில் சொல்லப்பட்ட சதுர்வர்ணம் மயா சிருஷ்டம் என்ற கிருஷ்ணன் சுலோகத்துக்குக் குறுக்கு வழியில் பதில் சொல்லிக் காப்பாற்ற முயலுகின்றவர்களின் வாதங்களைத் தவிடுப் பொடியாக்குகிறார்.


பூரி சங்கராச்சாரியாரோ போன ஜென்மத்தில் செய்த குணத்தின் அடிப்படையிலிருந்து கர்மாவைத் துணைக்கழைத்து வியாக்கியானம் செய்கிறார்.


பிராமணன் என்றும், சத்திரியன் என்றும், வைசியன் என்றும், சூத்திரன் என்றும் படைப்பிலேயே அமைத்து விட்டு, குணம், கர்மம் அடிப்படையில்தான் சம்பந்தப்பட்ட வர்ணத்துக்குரியவன் என்பது முரண்பாடு அல்லவா? இந்தப் பிரிவுகள்தான் படைப்பிலேயே கூறப்பட்டு விட்டதே!


ஒன்று மட்டும் உண்மை; கிருஷ்ணன் சொன்னதை எடுத்துச் சொல்லி, அதனைக் காப்பாற்ற முடியாத இடத்துக்குப் பார்ப்பனர்களும், அவருக்குத் துணை போகிறவர்களும் தள்ளப்பட்டு இருப்பது, திராவிடர் இயக்கத்துக்குக் கிடைத்த வெற்றியே!

                                         -----------------------”விடுதலை” தலையங்கம் 11-12-2014

32 comments:

தமிழ் ஓவியா said...

ஆன்மீகவாதிகளே அறிவியலைப் பாரீர்!


இங்கிலாந்தில் உள்ள நாட் டிங்காம் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும வானியல் துறையின் பணி ஓய்வு பெற்ற பேராசிரியர் ரோஜர் பவ்லே தம்முடைய தலைக்கு (திஷீக்ஷீமீலீமீணீபீ-நெற்றிப் பொட்டுக்கு) அருகில் ஒரு சாவியைக் கொண்டு செல்கிறார். அவர் மூளை இடும் கட்டளையை அச்சாவிமூலமாக காரில் பொருத்தப்பட்டிருக்கும் கருவி யுடன் தொடர்புகொண்டு அந்தக் காரைத் திறக்கச் செய் கிறது. சாவியை மார்புப்பகுதி வரையிலும் கொண்டு சென்றாலும் மூளையின் கட்டளையை ஏற்று செயல்படுகிறது.

நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தின் பணி ஓய்வு பெற்ற இயற்பியலாளர் ரோஜர் பவ்லே இத்தொழில்நுட் பத்தைக் கண்டுபிடித்துள்ளார்.

ஏற்கெனவே ரிமோட் கன்ட்ரோல் சிஸ்டம் முறையில் தனியே சாவிக் கொத்துடன் உள்ள கருவியைக் கொண்டு வாகனங்களின் கதவில் பொருத்தப்பட்டுள்ள பூட்டைத் திறக்கவும், மூடவும், அந்நியர் எவரும் வாகனங்களை நெருங்கி அசைத்தால் ஒலி எழுப்பவும், விளக்குகளை இயக் கவும் மற்றும் காரை இயங்க (ஸ்டார்ட்) செய்யவும் என பல்வேறு செயல்களை குறிப்பிட்ட தொலைவிலிருக்கும் போதே செயல்படுத்தும் வாய்ப்பு உள்ளது. தற்போது அதன் வளர்ச்சியாக மூளையின் கட்டளையை மின்காந்த அலைகளாக காருக்குள் பொருத்தப்பட் டிருக்கும் கருவிக்கு செலுத்தி அதன் மூலம் மூளையின் கட்டளைக்கிணங்க செயல்பாடுகள் நடைபெறுகின்றன. ஏற்கெனவே உள்ள வாய்ப்புகளைவிட பல்வேறு தொலைவுகளில் இச்செயல் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.

மூளையின் திறனைக்கொண்டு ரேடியோ டிரான்ஸ்மிட்டராக செயல் பட்டு தொலைவிலிருந்தே இயக்கு வதற்கு மின்காந்தஅலைகள்மூலமாக சமிக்ஞைகள் அனுப்பப்பட்டு காரில் உள்ள கருவிமூலம் கட்டளையைப் பெறுகிறது. அதன்மூலம் பூட்டப்பட்ட கார் திறக்கப்படுகிறது. இந்த ஆய்வை பேராசிரியர் ரோஜர் பவ்லே இணையத்தில் யூ-டியூப்பில் வீடியோ காட்சியாகப் பதிவுசெய்து வெளியிட்டுள்ளார்.

பேராசிரியர் ரோஜர் பவ்லே கூறும் போது, காரைவிட்டு விலகி நீண்ட தொலைவுக்கு செல்லும்போது படிப் படியாக சமிக்ஞை பலவீனமடைகிறது என்கிறார்.

தண்ணீர் மின்காந்த அலையை அதிக தூரத்துக்கு எடுத்தும் செல்லும் ஆற்றல் உள்ளது. மூளையும் முழு மையாக நீர்மத்தைக்கொண்டுள்ளது.

மின்காந்த அலைகள் நீரின்மூலம் செல்லும்போது நேர் மின்சாரமாக ஹைட்ரஜன் அயனிகள்மூலம் மாற்றப் படுகிறது. ஆக்சிஜன்அயனிகள்மூலம் எதிர் மின்சாரமாகவும் ஒன்றுக்கொன்று எதிரெதிர் திசைகளில் மேலும், கீழும் தள்ளப்படுவதுமாக இருக்கிறது என்று பாவ்லே கூறுகிறார்.

சாவி மின்காந்த அலைகளை காருக்கு அனுப்புகிறது. அதாவது, மூளையும், சாவியும் ரேடியோ டிரான் மிட்டர்கள்போல் செயல்படுகின்றன. மின்காந்த அலைகளை மேலும், கீழுமாக தொடர்ந்து அனுப்புவதன்மூலம் ஆற் றலை மிகைப்படுத்தியவண்ணம் உள்ளது.

தலையில் உள்ள நீர்மங்கள் மின் காந்த அலைகளைக் கொண்டு செல் கின்றன. அவை ஒரே அலைவரிசையில் நீண்ட தொலைவுக்குக் கொண்டு செல் கின்றன. அதன்படியே காரில் உள்ள சாவிவரையிலும் மின்காந்த அலைகள் கொண்டு செல்லப்படுகின்றன.

மின்காந்த அலைகளை ஒரு குவ ளையில் உள்ள தண்ணீர் தொலை வினை அதிகப்படுத்துகிறது.

நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் வானியல் துறையில் தம்முடைய ஆய்வை பவ்லே விளக்கிக் கூறும்போது, இணையத்தில் தம்முடைய யூ-டியூப் வீடியோ பதிவின்மூலமாக தம்முடைய கார் இருக்கும் பகுதியில் தொலைவில் சாலையிலிருந்து காருக்கு கட்டளைப்பிறப்பித்து அதன் செயல்பாட்டை நிரூபித்து விளக்கினார்.

இத்தொழில் நுட்பத்தை பயன்படுத் தும் ஒருவர் கூறும்போது, நான் முதலில் நம்பவே இல்லை. நான் என்னு டைய காருக்குத் தொலைவில் இருந்த போது காரின் பூட்டைத் திறக்க வேண் டியிருந்தது. அப்போது என் நண்பர் ஒருவர் டிரான்ஸ்மிட்டர் ஒன்றை தலைக்கு அருகில் கொண்டு செல்லு மாறு கூறினார். அதன்படி நான் செய்த போது அதன் வேலையை செய்தது.

காருக்கு தொலைவில் இருந்தபோது சாவியை என் தலைக்கு அருகில் கொண்டு சென்றபோது வேலை செய்தது. மார்பருகே கொண்டு சென்ற போதும் சாவி வேலை செய்தது. கால்பகுதிக்கு கொண்டுசென்றபோது சாவி வேலை செய்யவில்லை. ஆகவே, உயரத்தின் அடிப்படையிலேயே செயல்படுவதாக முதலில் நினைத்தேன். ஆனால் சாவி இயங்குவதற்கு உயரம் ஒரு பொருட்டாக இல்லை. என்னுடைய உடல் ஒட்டுமொத்தமாகவே ஆன்ட னாவாக செயல்படும்போது நான் சாவியை எங்கு வைத்திருப்பது? கை களில் வைத்திருப்பதைவிட தலைக்கு அருகில் வைத்துக்கொண்டால்தான் என்ன? என்று எண்ணுகிறேன் என்று கூறுகிறார்.

Read more: http://viduthalai.in/page8/92785.html#ixzz3Ls1rEouY

தமிழ் ஓவியா said...

ஒரு வித்தியாசமான தலைவர் - எப்படி?

2013 தஞ்சையில் தமிழர் தலைவர் பிறந்த நாள் விழா. வழக்கமாகப் பிறந்த நாள் என்றால் எவ்வித ஆர்ப்பாட் டங்கள், ஆடம்பரத்திற்கும் இடம் கொடாத தமிழர் தலைவர் இரண்டு முறை அன்புக் கட்டளைகளுக்குப் பணிந்து அன்பு விலங்கில் சிக்கிக் கொண் டது உண்டு. அதில் ஒன்று தமிழர் தலைவரின் 75-ஆம் ஆண்டு பிறந்த நாள். சிக்க வைத்தவர் தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர். வள்ளுவர் கோட்டத்தில் வாடிக்கையில்லாத பெருவிழா. ஆசிரியர் வீரமணியின் 75-ஆம் ஆண்டுப் பிறந்த நாள். அது மட்டுமல்ல. ஆசிரியரை மட்டும் சிறப் பிக்கவில்லை. முத்தமிழ் அறிஞர், ஆசிரியரைப்போலவே தன்னைச் சற்றும் எந்த விழாவிலும் முன்னிறுத்திக் கொள்ளாத மோகனா வீரமணி அம்மையாரையும் கலைஞர் அழைத்து மேடையில் வைத்துச் சிறப்பித்தது பசுமையாக இருக்கிறது.

அடுத்து 2013ல் தமிழர் தலைவரின் 81 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா 95 அடி உயரத்தில் தந்தை பெரியார் பேருருவச்சிலையை பெரியார் உலகத் திற்கு நிதியளிப்பு விழா திராவிடர் கழகக்கூட்டம் அன்று காலையில் தஞ்சை பெரியார் - மணியம்மை பல்கலைக்கழகத்தில் சிறப்பான கூட்டம். அதுவும் நிதியளிப்புக் கூட்டம் தான். ஆசிரியர்கள், மாணவர்கள், கழகத்தவர் என்று வரிசை வரிசையாக நிதியளிக்கக் கூடிச் சென்று விழா முடியவே மதியம் 2 மணி ஆகிவிட்டது.

அதன்வின் தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்ட பிறந்த நாள் பெருமங்கலம். அதிலும் ஒரு சிறப்புக் கூறு அந்த விழாவில் திராவிட முன் னேற்றக்கழகப் பொருளாளர் இளைஞர்களின் எழுச்சி நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்று வாழ்த்த வருகைப் புரிந்தார். அத்தோடு விடுதலைச் சிறுத்தைகளின் வீரம் மிகு தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். இவர்கள் வாழ்த்த வந்ததைக்காண விண்ணிலிருந்து மழைத்துளி துளிதுளியாக விழுந்தது கொட்டும் மழையாய்க் கொட்டிய போதும் கூட்டம் கலைந்து விடவேண்டுமே. கலைந்து நகர வேண்டுமே அதுதான் இல்லை. நின்ற இடத்திலேயே உட்கார இருந்த நாற்காலியைத் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு மழையிலிருந்து தலைமைய மட்டுமே காத்து நின்ற காட்சி மறக்கமுடியாத காட்சி. இப்படிக் கொட்டும் மழையில் கூடியது 1949-இல் ஜூலை 18 இல் திமுக தொடக்க விழாக் கூட்டம் இராபின்சன் பூங்காவில் கூடியபோது இருக்கலாம்.

தமிழ் ஓவியா said...


இந்த நேரத்தில் கொட்டும் மழையில் நன்றியுணர்வு மிக்கத் தமிழர் கூட்டம் கூடியது தஞ்சையில். ஆனால் தமிழர் தலைவர் வாழ்க்கையில் அவராலேயே மறக்கமுடியாத மழை நாள் கூட்டம் ஒன்று இந்தத் தமிழ் மண்ணில் அல்ல - ஆயிரத்திற்கும் மேற்பட்ட மைல்களுக்கு அப்பால் பீகார் மண்ணில் கூடியதை இந்த பிறந்த நாள் சிந்தனையாக நினைத்துப் பார்ப்பதோடு பதிவு செய்திட வேண்டும்.

பீகாரில் கர்ப்பூரி தாகூர் - முடி வெட்டும் மருத்துவர் குலத்தில் பிறந் தவர். மக்கள் தொண்டினால் அந்த மண்ணின் முதல்வராக உயர்ந்தவர். அவர் முதலமைச்சர், அவருடைய தந்தை, மகன் முதலமைச்சர் என்பதற் காகத் தாம் செய்து வந்த முடிதிருத்தும் தொழிலை சாகும் வரை விடாமல் செய்து வந்தவர். மகன் தாகூரின் முதலமைச்சர் கார் அந்தப் பக்கம் செல்லும். தந்தை அப்போதும் தன் தொழிலை விடாமல் செய்து வந்தார்.

அப்பேர்ப்பட்ட கர்ப்பூரி தாகூர் தம் மாநிலத்தில் தமிழர் தலைவரை அழைத்துப் பொதுக்கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார். கூட்டம் என்றால் அந்த மண்ணில் அவ்வளவு கூட்டம் கூடியது ஜே.பி. பேசும் போது மட்டும் கூடியது என்பர்.

அவ்வளவு சிறப்பு மிக்க மரியா தையைத் தமிழர் தலைவருக்குக் கொடுத் துக் கூட்டம் ஒன்றைக் கூட்டியிருந்தார். பலரும் பேசுவதாக ஏற்பாடு கூட்டம் தொடங்கியது. வரவேற்றுப் பேசிய கர்ப்பூர் தாகூர் மற்றவர்கள் எல்லாம் பேசவேண்டாம் - வீரமணிஜி மட்டும் பேசி னால் போதும் என்று கூறிவிட்டார்.

ஆசிரியர் பேச ஆரம்பித்தவுடன் இவருடைய சொற்பொழிவு மழை தொடங்கியதும் மழையும் போட்டிப் போட்டுக் கொண்டு கொட்டத் தொடங்கியது. கூட்டம் அப்படி இப்படி நகர வேண்டுமே. நகரவேயில்லை. ஆசிரியருக்குக் குடை பிடிக்க ஏற்பாடு செய்கின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் நனையும்போது எனக்கு மட்டும் குடை வேண்டாம் என்று மழையில் நனைந்தவாறே ஒன்றரை மணிநேரம் சொல்மாரி பொழிய மக்கள் கூட்டம் கலையாது கேட்ட அற்புதம் அயல் மண்ணில் நிகழ்த்தியிருக்கிறார், பேசி முடிக்கவில்லை. பேசிக்கொண்டேயி ருக்கிறார். துண்டுச் சீட்டு ஒன்று வருகிறது. விமானத்திற்கு தாமதமா கிறது என்று தகவல் இருந்தது துண்டுச் சீட்டில். ஆசிரியர் பேச்சை முடித்து ஈர ஆடையைக் களைந்து ஆடையை மாற்றி விமானத்தில் வர நேரம் சரியாக இருந்திருக்கிறது. விமானத்தில் ஏறி விட்டார் கதவுகள் சாத்தப்பட்டு விட்டன.

மறுபடியும் விமானம் புறப்படுவதற்கு முன் விமானக் கதவுகள் திறக்கின்றன. விமானத்தில் ஏறும் ஏணி இறக்கப் படுகிறது. கர்ப்பூரிதாகூர்தான் நனைந்த ஆடையுடன் வருகிறார். கட்டித்தழுவி வீரமணிஜி இதற்கு முன் அந்த மைதானத்தில் லோக்நாயக் ஜே.பி.ஜி. பேசும்போதுதான் மக்கள் அப்படி அசையாமல் இருந்திருக் கிறார்கள். இப்போது அப்படி எங்கள் ஊர் மக்களை ஒன்றரை மணி நேரம் மழையிலும் கட்டிப்போட்டுவிட்டீர்கள் என்று உணர்ச்சி பொங்க கூறியி ருக்கிறார்.

ஆசிரியர் அவரிடம் இந்தப் பாராட்டை என் பேச்சை மொழி பெயர்ப்புச் செய்தாரே அவருக்குத் தெரிவியுங்கள் என்று அடக்கமாகக் கூறி விட்டு விமானம் ஏறி வந்து சேர்ந்தார்.

இதுபோல் தமிழர் தலைவரைப் பாராட்டிய வடநாட்டுத் தலைவர் களில் ஒருவர் ஒரிசாவின் முதலமைச்சர் பிஜூபட்நாயக். இப்போதைய பட்நாயக்கின் தந்தை. ஒரிசாவில் அவர் ஒரு பார்ப்பன எதிரி. அவர் வீட்டினுள் பார்ப்பனரை நுழைய விடமாட்டாராம். வீட்டில் வாசலில் கோலமா போடுவது, மாடு குளிப்பாட்டுவது என்று வேலை களுக்கு அவர்களை வைத்திருப்பவர். அவர்களை வீட்டிற்குள் விடமாட் டாராம். அவருடைய இந்தப் பாப் பனரல்லாதார் பற்றுதான், எம்.ஜி.ஆர். திட்டமிட்டுத் திமுகழகத்தைப் பிளந்தபோது, திராவிட இயக்கம் பிளவு படக்கூடாது என்று சமரசம் செய்ய முன் வந்தது. அத்தகைய முதல்வரின் பாராட்டும் பெற்றவர் தான் தமிழர் தலைவர்.

இப்போது மூன்றாம் முறையாகப் பிறந்த நாள் விழாவில் மக்கள் அன்புக் கட்டளைக்குப் பணிந்து அதற்குச் சம்மதித்திருக்கிறார். அதுவும் கூட அவருடைய கனவுத் திட்டமான 95 அடி உயரத்தில் தந்தை பெரியார் பேருருவச்சிலை - பெரியார் உலகம் உருவாக்கும் திட்டத்தின் பொருட்டுத் தான் சம்மதித்திருக்கிறார். உண்மை யாகவே ஆசிரியர் ஒரு வித்தியாசமான தலைவரே!

Read more: http://viduthalai.in/page5/92780.html#ixzz3Ls2SiW23

தமிழ் ஓவியா said...

பத்திரிகையை நம்பி புண்ணியம் இல்லை - சிவாஜி கணேசன்

தினமணியில் பணியாற்றியபோது சிவாஜி கணேசன் அவர்களைப் பேட்டி காண சென்றிருந்தேன். தினமணி பிராமணப் பத்திரிகையாச்சே... என்னை எல்லாம் பேட்டி காண மாட்டாங்களே என்றார். அப்போது இராம். திரு.சம்பந்தம் ஆசிரியராக இருந்தார். எங்கள் ஆசிரி யரைப் பற்றி எடுத்துச் சொல்லி அவர் பெரியாரிஸ்ட் என்றேன். அப்படியானால் இனி பத்திரிகையை நம்பி புண்ணியம் இல்லை என்று முடிவு பண்ணிட்டாங்க போல என்றார்.

- முக நூலில் இருந்து நன்றி: தமிழ் மகன்

Read more: http://viduthalai.in/page4/92779.html#ixzz3Ls3nl3rN

தமிழ் ஓவியா said...

மதம் சாராத நாத்திகர் என அறிவித்துள்ள கருநாடக அமைச்சர்


ஒருவர் எந்த மதத்தில் இருப்பது என்பதைத் தீர்மானிக்கும் உரிமையில் எவரும் தலையிட முடியாது என்று கூறியுள்ள கருநாடக மாநில சமூக நலத்துறை அமைச்சர் எச்.ஆஞ்ச னேயா, 80 ஆண்டுகளுக்குப் பின் மாநிலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சாதிவாரிக் கணக்கெடுப்பில் மக்கள் எந்தவித அச்சமும் சார்புநிலைகளும் இல்லாமல் பங்கெடுக்க வேண்டு மென்று கூறியுள்ளார். இந்தக் கணக் கெடுப்பால் உண்மையான இடஒதுக்கீட்டுப் பலனுக்கு உரியோர் யாவர் என்பது உறுதியாவதுடன் அரசு வழங்கும் நலத் திட்டங்கள் உண்மையான பயனாளிகளைச் சென்றடையும் வாய்ப்புக் கிடைக்கும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். சாதியின் அடிப்படையில் மட்டுமே சலுகைகள் வழங்கப்படும் என்ப தாலும் மதம் அதற்குக் குறுக்கே நிற்காது என்பதாலும் இந்தக் கணக் கெடுப்பை, பாரதீய ஜனதா எதிர்க் கின்றது. இந்தக் கணக்கெடுப்பு தாழ்த் தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மதம் மாறுவதற்கு வழி வகுக்கும் என்னும் பி.ஜே.பி.யின் கருத்து உடை படும். என்று அமைச்சர் கூறினார்.

தான் இன்று எந்த மதத்தையும் சாராதவனாகவும் நாத்திகனாகவும் இருந்தாலும் எதிர்காலத்தில் தான் விரும்பினால் எந்த மதத்தையும் தழுவிடும் உரிமை தனக்குண்டு; அதில் எவரும் தலையிட முடியாது என்றும் கூறிய அமைச்சர், நமது நாட்டில் நாய், நரிகளுக்குக் கூட உரிய மதிப்பு அளிக்கப்படுகிறது. ஆனால், மனிதர்கள் தீண்டாமையைக் காரணம் காட்டி விலங்குகளைவிடக் கீழ்த்தர மாக நடத்தப்படுகின்றனர். பெங் களூரு போன்ற மாநகரங்களிலும் கூட, மாதிகா, தண்டோரா போன்ற வர்கள் கீழ்ழ்ச்சாதியினர் என்று காரணம் காட்டி வீடு கொடுக்கத் தயங்கும் நிலை உள்ளது. இதனால் மன வெறுப்படையும் மக்கள் தங்கள் தன்மானத்தைக் காப்பாற்றிக் கொள் வதற்காக, கிறித்துவம் உட்பட வேறு மதங்களுக்கு மாறிவிடுகிறார்கள். அதில் என்ன தவறுள்ளது? என்று கேட்டுள்ளார்.

அண்மையில், சாதிவாரிக் கணக் கெடுப்புப் படிவத்தில் கிறித்துவர் களும் கொள்ளா, குருபா, கவுடா. கிறித்துவர்கள் என்று குறிப்பிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால் இந்தக் கணக்கெடுப்பை எதிர்ப்பதாக பி.ஜே.பி. அறிவித்திருந்தது குறிப் பிடத்தக்கது.

நன்றி: தினகரன் 5.12.2014 பெங்களூரு பதிப்பு; 05.12.2014 கருநாடகத்தில் நடைபெறவுள்ள சாதிவாரிக் கணக்கெடுப்பின் போது நாத்திகர்கள் தங்களை நாத்திகர்கள் என்றும் மதம் சாராதவர்கள் என்றும் பதிவு செய்ய வழி வகுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page4/92777.html#ixzz3Ls403gTN

தமிழ் ஓவியா said...

இதுதான் மனுதர்மம்


அந்தப் பிரம்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம், தோள், துடை, பாதம் இவைக ளினின்றுமுண்டான பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம் மைக்கும் மறுமைக்கும் உபயோகமான கருமங்களைச் தனித் தனியாகப் பகுத்தார். -
_ அத்தியாயம் 1, சுலோகம் 87

பிராமணனுக்கு ஓதுவித்தல், ஓதல், எக்கியஞ்செய்தல், எக்கியஞ் செய்வித்தல், தானம் கொடுத்தல், தானம் வாங்குதல் ஆகிய இவ்வாறு தொழிலையும் ஏற்படுத்தினார்.
-_ அத்தியாயம் 1, சுலோகம் 88

சூத்திரனுக்கு இந்த மூன்று வருணத்தாருக்கும் பொறாமையின்றி பணி செய்வதை முக்கியமான தருமமாக ஏற்படுத்தினார். இதனால் அவனுக்குத் தான் முதலியவையுமுண்டென்று தோன்றுகிறது.
அத்தியாயம் 1, சுலோகம் 91

பிராமணன் முதல் வருணத்தானான தாலும், பிரம்மாவின் முகமாகிய உயர்ந்தவிடத்தில் பிறந்ததினாலும் இந்தவுலகத்தில் உண்டாயிருக்கிற சகல வருணத்தாருடைய பொருள்களையும் தாமன் வாங்க அவனே பிரபுவாகிறான்.
அத்தியாயம் 1, சுலோகம் 100

பிராமணன் சம்பளங் கொடுத் தேனும் கொடாமலேனும் சூத்திரனிடத் தில் வேலை வாங்கலாம். ஏனெனில், அவன் பிராமணன் வேலைக்காகவே பிரம்மனால் சிருஷ்டிக்கப்பட்டிருக் கிறானல்லவா?
-அத்தியாயம் 8, சுலோகம் 413

யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன், பக்தியினால் வேலை செய்கிறவன், தன்னுடைய தேவடியாள் மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், ஒருவனால் கொடுக்கப்பட்டவன், குல வழியாக தொன்று தொட்டு வேலை செய்கிறவன், குற்றத்திற்காக வேலை செய்கிறவன் என தொழிலாளிகள் எழு வகைப்படுவர்.
அத்தியாயம் 8, சுலோகம் 415

பிராமணன் சந்தேகமின்றி மேற் சொன்ன ஏழுவித தொழிலாளியான சூத்திரரிடத்தினின்று பொருளை வலிமையாலும் எடுத்துக் கொள்ளலாம். யஜமானனெடுத்துக் கொள்ளத்தக்கப் பொருளையுடைய அந்தச் சூத்திரர் தான் பொருளுக்குக் கொஞ்சமுஞ் சொந்தக்காரல்ல.
அத்தியாயம் 8, சுலோகம் 417

பிராமணன் தொழிலைச் செய்தா லும் சூத்திரன் பிராமண சாதியாகமாட் டான். ஏனென்றால்அவனுக்கு பிரா மண சாதித் தொழிலில் அதிகாரமில் லையல்லவா? சூத்திரன் தொழிலைச் செய்தாலும் பிராமணன் சூத்திர சாதியாக மாட்டான். ஏனென்றால், அவன் ஈனத் தொழிலைச் செய்தாலும் அவன் சாதி உயர்ந்ததல்லவா? இப் படியே இந்த விஷயங்களைப் பிரம் மாவும் நிச்சயஞ் செய்திருக்கிறார்.
அத்தியாயம் 10, சுலோகம் 73

ஏர் பிடிக்கக் கூடாது!
பிராமணனும் சத்திரியனும் வைசி யன் தொழிலினால் ஜீவித்தபோதிலும் அதிக இம்சையுள்ளதாயும் பாரதீநமாயு மிருக்கிற பயிரிடுதலை அவசியம் நீக்க வேண்டியது.
அத்தியாயம் 10, சுலோகம் 83

சிலர் பயிரிடுதலை நல்ல தொழி லென்று நினைக்கிறார்கள். அந்தப் பிழைப்புப் பெரியோர்களால் நிந்திக்கப் பட்டது. ஏனெனில், இரும்பை முகத்தி லேயுடைய கலப்பையும், மண்வெட்டி யும் பூமியையும், பூமியிலுண்டான பல பல ஜெந்துக்களையும் வெட்டுகிற தல்லவா?
அத்தியாயம் 10, சுலோகம் 84

பெண்களும் மனுதர்மமும்
மாதர் ஆடவரிடத்தில் அழகையும் பருவத்தையும் விரும்பாமலே ஆண் தன்மையை மாத்திரம் முக்கியமாக எண்ணி அவர்களைப் புணருகிறாள்.
அத்தியாயம் 2, சுலோகம் 14

மாதர்கள் கற்பு நிலையின்மையும், நிலையாமனமும், நட்பு இன்மையும் இயற்கையாகவுடையவராதலால், கணவனாற் காக்கப்பட்டிருப்பினும் அவர்களை விரோதிக்கின்றார்கள்.

அத்தியாயம் 9, சுலோகம் 15

மாதர்களுக்கு இந்தச் சுபாவம் பிரம்மன் சிருட்டித்தபோதே உண் டானதென்று அறிந்து ஆடவர்கள் அவர்கள் கேடுறாமல் நடப்பதற்காக மேலான முயற்சி செய்ய வேண்டியது.
அத்தியாயம் , சுலோகம் 16

படுக்கை,ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்.
அத்தியாயம் 9, சுலோகம் 17

தமிழ் ஓவியா said...

மாதர்களின் சுபாவமே மனிதர் களுக்கு சிருங்கார சேஷ்டைகளினால் தோஷத்தையுண்டு பண்ணும். ஆதலால், தெரிந்தவர்கள் அவர்களிடத்தில் அஜாக்கிரதையாயிரார்கள்.

அத்தியாயம் 2, சுலோகம் 213

ஜிதேந்திரியனாயிருந்தாலும், மூடனாயிருந்தாலும் அவனை மாதர்கள் தன் சம்பத்தினால் காமக் குரோதத்துக்கு உட்பட்டவனாகச் செய்கிறார்கள்.
அத்தியாயம் 2, சுலோகம் 214

தாய், தங்கை, பெண் இவர்களுடனும் தனியாய் ஒன்றாக உட்காரக் கூடாது. இந்திரியங்களின் கூட்டமானது மிகவும் பலமுள்ளது. அது தெரிந்தவனையும் மயக்கி விடும்.
அத்தியாயம் 2, சுலோகம் 215

தானியம், லோகம், பசு, இவைகளைத் திருடுதல், குடிக்கிற மனையாளைப் புணர்தல், ஸ்திரி, சூத்திரன், வைசியன், சத்திரியன் இவர்களைக் கொல்லுதல் இவையெல்லாம் தனித்தனியே உபபாத கமென்றறிக. (சிறிய குற்றம்)
அத்தியாயம் 11, சுலோகம் 66

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் அறிவை, கல்வியைக் கொடுக்கலாகாது. மனுதர்மம் என்பதுதான் இந்துலா என்ற இந்துச் சட்டத்திற்கு முக்கிய அடிப்படையாகும்.

இந்துலா என்ற இந்துச் சட்டத்தை, இந்திய அரசியல் சட்டத்தின் 372ஆவது விதி ஏற்று அமுல்படுத்த அனுமதி அளித்துள்ளது. எனவே, இந்த நாட்டின் பெரும் பான்மை மக்கள் சாஸ்திரப்படி, சட்டப்படி (இந்து லாபடி) சூத்திரர்கள் அதாவது பார்ப்பனரின் தேவடியாள் மக்கள்
சுலோகம் 415படி

இம்மனுநீதி மனித தர்ம நீதிக்கு முற்றிலும் முரணானதால்

எரிப்ம்! எரிப்போம்!! எரிப்போம்!!!

Read more: http://viduthalai.in/page2/92771.html#ixzz3Ls4mxi5i

தமிழ் ஓவியா said...

வெங்காயம்


* நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும்.

* வெங்காயத்தை வதக்கி சாப்பிட் டால் வெப்பத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.

* வெங்காய சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காய சாற்றை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவினால் பல்வலி, ஈறுவலி குறையும்.

* வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

* படை, தேமல் மேல் வெங்காயம் சாற்றை தடவினால் மறைந்துவிடும்.

* மாரடைப்பு நோயாளிகள், ரத்த நாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

Read more: http://viduthalai.in/page2/92772.html#ixzz3Ls5LrQ00

தமிழ் ஓவியா said...

பரப்புகளும் - அளவுகளும்


1 கிரவுண்ட் 2400 சதுர அடி
1 ஏக்கர் 4840 சதுர யார்டு
1 ஏக்கர் 43,560 சதுர அடி
1 சதுர மைல் 640 ஏக்கர்
1 ஹெக்டேர் 2.47 ஏக்கர்
1 சதுர மீட்டர் 10.76 சதுர அடி
1 சதுர மீட்டர் 1.2 சதுர யார்டு
1 ஏக்கர் 0.0015 சதுர மைல் 1 சதுர அடி 0.093 சதுர மீட்டர்
கன அளவு - அளவுகள்
1 லிட்டர் 0.035 கன அடி
1 கன மீட்டர் 35.3 கன அடி
1 கன அடி 28.57 லிட்டர்
1 கன அடி 0.0283 கன மீட்டர்
எடை - அளவுகள்
1 மெட்ரிக் டன் 1000 கிலோ
1 கிலோ கிராம் 2.2 எல்பிஎஸ்
1 கிலோ கிராம் 32.3 அவுன்ஸ்
1 அவுன்ஸ் 0.0283 கிலோ கிராம்

Read more: http://viduthalai.in/page2/92774.html#ixzz3Ls5cnbRm

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முரண்பாடே உன் பெயர்தான் ஜோதிடமா?

செய்தி: துலாம் ராசியில் பிறந்தவர். ஜென்ம சனி விலகி, பாதச் சனி துவங் குகிறது. ராசிக்கு இரண்டாம் வீட்டில் சனி பகவான் சஞ் சரிக்கும், இக்கால கட்டத்தில் புதிய கட்சியை உரு வாக்குவார்.

தினமலரில் வெளிவந்த சனி பெயர்ச்சி பலனில் ஜி.கே.வாசனுக்கு ஜோதிடர் பரணிதரன் கணிப்பு

சிந்தனை: கடந்த நவம்பர் 28 ஆம் தேதியே ஜி.கே. வாசன் திருச்சியில் புதிய கட்சியைத் தொடங்கி விட்டார். ஆனால், இப்பொ ழுதுதான் அவர் புதிய கட்சியை உருவாக்குவார் என்று சனி பெயர்ச்சி கணிப்பில் பரணிதரன் என்ற ஜோதிடர் கண்டு பிடித்திருக்கிறார்; முரண் பாடே, உன் பெயர்தான் ஜோதிடமா?

Read more: http://viduthalai.in/page1/92832.html#ixzz3Ls6wviBf

தமிழ் ஓவியா said...

மகிழ்ச்சியை விலை போட்டு வாங்கவா முடியும்?

வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி

மகிழ்ச்சியை விலை போட்டு வாங்கவா முடியும்?

மகிழ்ச்சி

மகிழ்ச்சி என்பதும் நிரந்தரமல்ல; துயரம், துன்பம் என்பதும் நிரந்தர மல்ல. நிரந்தரமாக அவை இருந்திடின், இரண்டின் தனித் தன்மை நமக்குத் தரும் அனுபவங்கள் காணாமற் போய்விடும்.

மகிழ்ச்சியின்மை - ஒவ்வொரு வரது வாழ்விலும் ஏற்படுவது இயற் கையே - தவிர்க்க முடியாததும்கூட.
சில நேரங்களில் மகிழ்ச்சிக்கு விலை கிடைக்காமலே அது நமக்குக் கிடைக்கிறது.

பல நேரங்களில் அதிக விலை கொடுத்துத்தான் அதைப் பெற்றாக வேண்டும்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் மேல் முறையீட்டு வழக்கில் அவர்கள் விடுதலை என்று ஒரு தீர்ப்பு வந்து அவர்களது சிறைக் கதவுகள் திறக்கும்போதும், 10 மாதம் சுமந்து பெற்று, தனக்காக இல்லா விடினும் தனது கருவினுள் உள்ள குழந்தைகளுக்காக எல்லாவித பத் தியங்களையும் கட்டுப்பாடுகளையும் கடைப்பிடித்து, பிரசவ வேதனை - அறுவை சிகிச்சை வரை சென்றும், குழந்தையின் நலன் காக்கும் தியாகம் - துன்பத்தைத் துடைத் தெறிந்து, மகிழ்ச்சியை, பிறந்த குழந்தையின் உச்சி மோந்து முத்தம் தருகின்ற போது, விலை கொடுத் தாலும் நல்லதைப் பெற்றோம் என்ற தாயின் மகிழ்ச்சியையும் அளவிட அளவுகோல்தான் உண்டா?

மகிழ்ச்சி ஏற்பட்டாலும், துன்பம் துயரம் நம்மைத் தாக்கினாலும்கூட, அதை நம்மில் சிலர் மறைத்து வைத்துக் கொள்ள முயலுகிறார்கள்; அது தேவையற்ற ஒரு தவறான அணுகு முறையாகும். எதையும் வெளிப்படையாக்கிக் கொண்டால் தான் கனத்த இதயம் லேசாகி நமக்கு நிம் மதியைத் தரும்! விரைந்து அது அகல வாய்ப்பு ஏற்படும்.

மகிழ்ச்சியைக் கண்டபோது சிலர் அளவு கடந்த துள்ளல், ஆட்டம், பாட்டம் போட்டு ஊரையே துவம்சம் செய்து விடுவார்கள். அதுபோலவே ஒரு சிறு அளவுக்குத் துன்பமோ, துயரமோ வந்தால் அதைத் தாங்கும் மன வலிமை இல்லாது மனந்தளர்ந்து, மூலையில் ஒடுங்கிக் கிடப்பர்.

இரண்டு எல்லை தாண்டிய நிலைப் பாடும் மகிழ்ச்சியான சராசரி பக்குவம் கொண்ட மனிதருக்குத் தேவையில்லை.
மகிழ்ச்சியை, எப்படிப் பெறுவது என்று ஏராளமான ஹிதோபதேசங்களும் - அறிவுரைகளும் - ஒலி நாடாக்களும், புத்தகங்களும் வியாபாரப் பொருள்களாகி சந்தையில் மலிந்து கிடக்கின்றன.

விற்றவருக்கு மகிழ்ச்சி - அது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு. மகிழ்ச்சி என்பது கடையில் விற்கும் சரக்கல்ல. நம் மனதில் நமக்குள்ள பக்குவத்தின் முதிர்ச்சி, முனைப்பு. அவ்வளவுதான்.

மகிழ்ச்சி என்பது தொட்டனைத் தூறும் மணற்கேணி போன்றதாக அமைய வேண்டும். அதை நாமே நமது ஏகபோகச் சொத்தாக்கி மகிழ்வதில் உண்மை இன்பம் இல்லை. மகிழ்ச்சியை நாம் மற்றவர் களுக்கு - அது தேவைப்படும் நிலையில் நமது உற்றார், நண்பர்களுக்கு வாரி வாரி வழங்கும்போதுதான் நமக்கு அது ஊற்றாக சுரக்கிறது! வற்றாத ஜீவ நதியாக என்றும் ஓடிக் கொண்டே இருக்கிறது.

அடுத்தவருக்குப் பயன்படாது அணை கட்டிக் கொண்டு இயற்கையைப் பங்கு போடும் ஈன புத்தியாளர்களைப் போல, பலர் மகிழ்ச்சியைக்கூட அணை கட்டித் தேக்கினால், அது அதன் இயல்பை இழந்து விடுவது உறுதி. மகிழ்ச்சிக்கும் நம் உடல் நலத்திற்கும் மிகவும் நெருங்கிய உறவு உண்டு. மறந்து விடாதீர்!

எதற்காகவும் கவலைப்படாமல், ஏற்பட்ட பிரச்சினைக்கு எப்படித் தீர்வு காணுவது என்பதை, விருப்பு, வெறுப்பற்ற முழுப் பகுத்தறிவுக் கண் கொண்டு ஆராயும்போது விடையும் கிடைக் கும், தடையும் நீங்கும். தீர்வு காண முடியாத பிரச்சினைகளே இல்லை. அறிவால், அனுபவத்தால் - பிறரின் உதவியால் தீர்க்கப்படலாம். துணி வுடன் அணுகுங்கள் - மீறி தோல்வி ஏற்பட்டாலும் அதையும் ஏற்று சுவைத்து அனுப விக்கப் பழகுங்கள் - பரங்கிக் காய் இனிப்புடன் உள்ள கறி ; எனவே இனிக்கிறது.

பாகற்காய் கசப்புடன் உள்ளது. பலருக்கு உட்கொள்ளவே தயக்கம் - ஆனால் அது தரும் சுக கசப்பு போல் பரங்கியின் இனிப்பு தருவ தில்லையே!

இனிப்பின் பெருமை - அருமை கூட கசப்பு என்று ஒன்று ஒன்பான் சுவையில் ஒன்றாக இருப்பதால் தானே! எண்ணுவீர்!

எனவே மகிழ்ச்சியை நாமே உருவாக்கிக் கொள்ளலாம் - நமது மூச்சை நாமே (சுவாசித்து) உள்ளே இழுத்து வெளியே தள்ளுகிறோமே அதுபோல; மகிழ்ச்சியை உள்ளே இழுத்து, துன்பத்தை வெளியே தள்ளுங்கள். இரண்டும் வாழ்வின் இரு இன்றியமையாக் கூறுகள் - தேவைகள் - மறவாதீர்!

Read more: http://viduthalai.in/page1/92676.html#ixzz3Ls7yaDgW

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

புனிதமாம்

அய்யப்பன் கோயில் பம்பை நதியில் குளித் தால் எல்லாப் பாவங் களும் நீங்குமாம். உண்மை நிலை என்ன? இந்தியா டுடே ஏடு (19.12.2007) அளிக்கும் விவரம் இதோ:

பம்பை நதியில் 100 மி.லி தண்ணீரில் 3 லட்சம் எம்.பி.என். கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள், 1995-1996இல் 9500 என்பதாக இருந்தது. இந்தப் பாக்டீரி யாக்கள் 500அய்த் தாண் டினாலே ஆபத்து என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறுகிறது. இந்த லட்ச ணத்தில் பம்பை நதி புனிதமாம்.

Read more: http://viduthalai.in/page1/92758.html#ixzz3Ls9iQBXd

தமிழ் ஓவியா said...

தேசிய நூலாக இருக்கத் தகுந்தது கீதையல்ல, இந்திய அரசமைப்பு சட்டமே! இந்து தலையங்கம்

மதத்தைப் பற்றிய கருத்து வேறு பாடுகளை உருவாக்கிப் பரப்புவதை மத்திய அமைச்சர்களும், மூத்த பா.ஜ.க. தலைவர்களும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ விரும்பி செய்து மகிழ்வதாகவே தோன்றுகிறது. பகவத் கீதையை ஒரு தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று அயல்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் முன்மொழிந்தபோது, இந்தியாவின் தேசிய நூலாக எது இருக்க வேண்டும் என்ற எந்த ஒரு விவாதத்தை அவர் தொடங்கி வைக்கவில்லை.

அதற்கு மாறாக, ஒரு இந்து மத நூலின் மீதான அரசியல் விவாதத்தின் மூலம், மத உணர்வின் அடிப்படையில் பிளவு படுத்துவதற்கான ஒரு களத்தையே அவர் உருவாக்கி விட்டார். எந்த ஒரு மதத்தினராலும் போற்றி வணங்கப்படும் ஒரு நூலை மதச் சார்பற்ற ஜனநாயக நாடான இந்தியாவினால் தேசிய நூலாக ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தியாவின் அயல்துறை அமைச்சராகத் தானாற்றும் பணியில் தனக்கு விடப்பட்ட சவால் களைக் கையாள்வதற்கு தனக்கு பகவத் கீதை உதவியது என்று அவர் கூறுவதை எவரும் மறுக்கவில்லை.

இப்போது விவாதத்திற்கு உள்ளாகியிருப்பது பகவத் கீதையில் என்ன இருக்கிறது என்பது பற்றியோ, அதன் ஸ்லோகங்களின் புனிதத் தன்மை பற்றியோ அல்லது அதன் கோட்பாடுகள் எவ்வளவு பொருத் தமானவை என்பது பற்றியோ அல்ல.

சுஷ்மா ஸ்வராஜ் கேள்விக்குரியதாக ஆக்கியிருப்பது இந்தியாவின் மதச் சார்பற்ற தன்மையைத்தான். பல மாறு பட்ட மத நம்பிக்கை கொண்ட இந்தியர் களின் தேசிய நூலாக ஒரு மதத்தின் புனித நூல் திணிக்கப்பட இயலுமா என்பதன் மூலம் இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையைப் பற்றிதான் சுஷ்மா ஸ்வராஜ் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறார்.

கீதை ஒரு மத நூலல்ல; ஒட்டுமொத்த மனித இனத்துக்குமே உரியது என்று பா.ஜ. கட்சியின் துணைத் தலைவர் தினேஷ் சர்மாவைப் போல வாதிடுவது நியாய மானதோ, நேர்மையானதாகவோ இருக்க முடியாது. மதத்தைக் கடந்து அனைத்து மதங்களுக்கும் பொருந்துவது போல தோன்றினாலும், மகாபாரத இதிகாசத்தின் ஒரு பகுதியான கீதை கடவுள் கிருஷ்ண னுடன் தொடர்பு கொண்ட ஒரு மத நூல் என்பதால், ஒரு தேசிய நூலாக வைக்கப் பட தகுதி பெற்றதல்ல அது.

கடவுளர்கள் மற்றும் கடவுளச்சிகள் பெயரால் தேசிய மக்கட் பண்பின் மாண்பைப் பற்றி பேசப்படக்கூடாது என்பது இந்திய அரசமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்ட நிலையிலேயே தெளி வாக்கப் பட்ட ஒன்றாகும். அரசமைப்பு சட்டத்தின் முன்னுரையின் தொடக்கத்தில் கடவுளின் பெயரால் என்ற சொற்றொடர் சேர்க்கப்பட வேண்டும் என்ற ஒரு ஆலோசனை கூறப்பட்டபோது, தங் களைக் கடவுள் நம்பிக்கையாளர்கள் என்று கூறிக்கொண்டவர்கள் பலர் உள்ளிட்ட அரசமைப்பு சட்ட மன்றத்தின் பல உறுப்பினர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு எழுந்தது.

இவ்வாறு கடவுளின் பெயரால் என்று சேர்ப்பது, சிந்தனை, கருத்து வெளிப்பாடு, நம்பிக்கை, மதம், வழிபாடு ஆகியவற்றில் ஒவ்வொரு வருக்கும் சுதந்திரம் அளிப்பதை வலி யுறுத்தும் முன்னுரைக்கு தொடர்பற்ற தாகவும், முரண்பட்டதாகவும் இருக்கும் என்று அக் கருத்தை எதிர்த்த ஓர் உறுப் பினர் கூறினார். அரசமைப்பு சட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ள, நன்மை தீமையை பகுத்தறியும் நேர்மை உணர்வு என்னும் மனச்சான்று சுதந்திரத்தில், எந்த ஒரு மதத்தை வேண்டுமானாலும் பின் பற்றவும், எந்த மதத்தையுமே சாராமல் இருக்கவுமான சுதந்திரமும் உள்ளடங்கிய தாகும். எனவே, ஒரு மதத்தின் புனித நூலை இந்தியாவின் தேசிய நூலாக உயர்த்துவது என்பது அரசமைபப்பு சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள மதச்சார்பற்ற தன்மையையே குலைப்ப தாகும். வளர்ச்சியை ஏற்படுத்தி நாட்டை முன்னேற்றுவேன் என்று நரேந்திரமோடி அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதைக் கேட்பதற்கான நேரம் இன்னமும் வரவில்லை என்றாலும், மக்களிடையே பிரிவினை உணர்வை உருவாக்கும் பழைய விஷயங்களில் ஈடுபடுவதிலேயே அரசின் ஆற்றல்களில் பெரும் பகுதி விரயமாகிறது என்பதில் மட்டும் சந்தேகமே இல்லை. புதியதாகப் பொறுப்பேற்றிருக்கும் இளைய அமைச் சர்கள் மட்டுமன்றி, ஒரு மூத்த தலைவரும் அமைச்சருமாக இருப்பவர் கூட மக் களிடையே மத உணர்வு ரீதியாக பிரி வினையை ஏற்படுத்தும் ஒரு வழியில் ஆலோசனை கூறுவது மிகுந்த கவலை அளிப்பதாக இருக்கிறது. தேசிய நூலாக ஏதேனும் ஒரு நூல் தேர்ந்தெடுக்கப்பட்டு தான் ஆகவேண்டும் என்றால், அது நாட் டின் அரசமைப்பு சட்டமாகத்தான் இருக்க வேண்டுமே அன்றி, வேறு எந்த ஒரு நூலாகவும் இருக்கக் கூடாது.

நன்றி: தி ஹிந்து 10-12-2014 தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

Read more: http://viduthalai.in/page1/92748.html#ixzz3Ls9zMKRQ

தமிழ் ஓவியா said...

வேண்டும்

பிறப்பதும், சாகின்றதும் இயற்கை. ஆனால், மக்கள் பாராட்டுதலுக்கு உகந்த வகையில் வாழ்தல் வேண்டும். மக்கள் ஒருவரைச் சும்மா போற்ற மாட்டார்கள். நாம் மற்ற மக்களும் போற்றும்படியான வகையில் காரியமாற்ற வேண்டும்.
(விடுதலை, 13.8.1961)

Read more: http://viduthalai.in/page1/92746.html#ixzz3LsADLGLy

தமிழ் ஓவியா said...

மானமிகு கி. வீரமணி அவர்களின் 82ஆம் பிறந்த நாள் மலர்பற்றி

ஆசிரியருக்குக் கடிதம் >>>

மானமிகு கி. வீரமணி அவர்களின் 82ஆம் பிறந்த நாள் மலர்பற்றி

வெளியூர் 2..12.2014-ல் வெளிவந்த மானமிகு அய்யா தோழர் வீரமணி அவர்களின் விடுதலை மலர் படித்தேன். அது அறிவியல் பெட்டகமாக அமைந்து விட்டது.

ஒரு பெரிய லட்சியத்தில் வாழ்ந்த பெரியார் அவர்களின் தத்து பிள்ளையாக, தேர்தலையும் வாக்குச் சாவடிகளையும் சந்திக்காமல் லட்சியத்தை மனதில் நிறுத்தி செயல்படுகின்ற செயல்பாடு என்னையே பிரமிக்க வைத்தது.

நான் பொதுவுடைமை தத்துவத்தில் வளர்ந்தவன், திராவிடர் கழக கொள்கை, செயல்பாட்டால் வீரமணி அவர்களால் ஈர்க்கப்பட்டேன். எத்தனை தத்துவத்தைப் பேசினாலும் சூழ்நிலையை ஒத்து நடைமுறைப்படுத்தினால்தான் வெற்றி பெறும். அதைத்தான் லெனின் கூறுகிறார்.

அதில் திராவிடர் கழக இயக்கம், செயல்பாடு, நடைமுறைகள் விடுதலை பத்திரிகை வாயிலாக அன்றாடம் வாசிப்பவன். தோழமை என்பது தங்கள் இயக்கத்தை தவிர வேறொரு இயக்கத்தில் இல்லை என்பதை நடைமுறை வாயிலாக கண்டு கொண்டவன்.

விடுதலையில் தமிழர் தலைவர் பிறந்த நாள் மலரில் பார்ப்பனியத்தைப்பற்றி 1978-ல் நெல்லையில் பேசிய செய்தியை படித்தவுடன் எவ்வளவு தீர்க்கமாக பேசி உள்ளார் என்று அறிந்தேன்.

விடுதலை பத்திரிகையில் வரும் செய்திகளை பார்த்தவுடன் எதிர் காலத்தில் ஒரு மாற்றம் உருவாகும் என்ற நம்பிக்கை ஏற்படுகின்றது. அரிய முத்துக்களாக 82 வாக்கியங்கள் மனதை ஈர்த்து விட்டன.

வைகோ அவர்களை பாரதிய ஜனதா தலைவர் ராஜா பேசிய பேச்சிற்கு துணிந்து பதில் சொன்ன ஒர் ஒப்பற்ற தோழர் எந்த நேரத்தில் எதைக் கூற வேண்டும் என்பதை எதிர்கால சிந்தனையுடன் கூறிய வாசகம் சிறப்பு. இயக்கத்திற்கு அப்படியொரு தலைவர் தேவை. பெரியாரின் லட்சியத்தை அடி பிறழாது. இளமைத் துடிப்போடு செயல்படுத்துவதைப் பார்த்து, நானும் அதை விட ஒரு படி தாண்டி செயல்படுவேன்.

நினது சாயல் யாவர்க்கும் வேண்டும் என்ற கட்டுரை தோழர் திருநாவுக்கரசு சிறந்த கண்ணோட்டதோடு எழுதியுள் ளார்கள். பெரியாருக்கு பிறகு திராவிடர் கழகம் என்ற தலைப்பில் ஜே.வி. கண்ணன் கட்டுரை ஓர் ஆய்வுரையாக செய்துள் ளார்கள்.

தோழர் அறிவுக்கரசு கவிதை ரொம்ப சிறப்பு. இறுதி மூச்சுவரை இந்தப் பணியை விட்டால் எனக்கு வேறு பணி ஏது? என்ற தலைப்பை படித்தவுடன் எனக்கே ஓர் உத்வேகம் பிறந்து விட்டது.

ஒவ்வொரு தோழரும் எழுதிய கட் டுரைகள் பாதுகாத்து வைக்கப்பட வேண்டிய பெட்டகம். சிவப்பாக இருந்த வனை கருப்பாக மாற்றிய பெருமை தலைவர் வீரமணிக்கு உண்டு. இறுதி வரை பெரியாரை நேசிப்பேன். மானமிகு தலைவரை நேசிப்பதோடு மறக்கவும் முடியாது.

தோழன் இரா. சண்முகவேல்,

ஜீவா படிப்பகம், கீழக்கலங்கல் - 627860

Read more: http://viduthalai.in/page1/92752.html#ixzz3LsAW9DD8

தமிழ் ஓவியா said...

மாஜிஸ்திரேட்டை விட புரோகிதன்..


மாஜிஸ்திரேட்டை விட புரோகிதன்..

பொருளாதார சக்தியே முக்கியமான சக்தி என்று சமூக சீர்திருத்த ஞானமுடைய எவனும் கூற முன்வரமாட்டான். சமூக வாழ்வில் ஒருவன் பெற்றிருக்கும் ஸ்தானத்தினாலும் அவனுக்குச் சக்தி ஏற்படுகிறது. இதற்கு மகாத்மாக்கள் சாமானிய மக்களை ஆட்டி வைப்பதே தக்க சான்றாகும்.

இந்தியாவிலே கோடீசுவரர்கள் சாதுக்களுக்கும் பக்கிரிகளுக்கும் அடி பணிந்து நிற்கக் காரணம் என்ன? ஏழை எளியோர் பாத்திர பண்டங்களை விற்றுக் காசிக்கும் மெக்காவுக்கும் யாத்திரை செய்யக் காரணம் என்ன? இந்தியாவில் மதமே அதிகாரத்துக்கு ஆஸ்பதமாயிருக் கிறது. இதற்கு இந்திய சரித்திரமே அத்தாட்சி. இந்தியா விலே மாஜிஸ்திரேட்டைவிட புரோகிதனே அதிக சக்தியுடைய வனாயிருக்கிறான்.
- டாக்டர் அம்பேத்கர்

Read more: http://viduthalai.in/page1/92728.html#ixzz3LsBpBgoM

தமிழ் ஓவியா said...

உலகப் படைப்பு பற்றிய பழைமையான மூட நம்பிக்கை

உலகப் படைப்பு பற்றிய பழைமையான மூட நம்பிக்கை


கிரேக்கப் புராணத்தின்படி குரோணோஸ் என்ற ஆகாய தேவனுக்கும் கே என்ற பூமி தேவிக்கும் இடையே நடை பெற்ற உடலுறவின் காரணமாகத் தான் உயிரினங்கள் உருவாயின. குரோ ணோசின் மகனான ஸ்யூஸ், தந்தை யின் பிறப்புறுப்பை வெட்டித்தான் இரண்டையும் பிரித்தான்.

ரிக்வேதம் இதை மற்றொரு வடிவில் கூறுகின்றது:

வருணன் ஆகாயத்தை மேலே உயர்த்தினான். சூரியன் ஆகாயத்தில் ஒளி வீசுவது வருணனின் பெருமையினால் தான். சமுத்திரம் கரை கவிழாமல் இருப்பதும் அதனால்தான்.

பைபிளிலுள்ள ஆதியாகமும் இதையே கூறுகின்றது:

பின்பு தேவன்: நீரின் மத்தியில் ஆகாய விரிவு உண்டாகக் கடவது என்றும், அது நீரினின்று நீரைப் பிரிக்கக் கடவது என்றும் சொன்னார். தேவன் ஆகாய விரிவை உண்டு பண்ணி, ஆகாய விரிவுக்குக் கீழே இருக்கிற நீருக்கும் மேலே இருக்கிற நீருக்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று. தேவன் ஆகாய விரிவுக்கு வானம் எனப் பெயரிட்டார்.

குர்ஆன் அதையே மீண்டும் கூறு வதைப் பாருங்கள்:

ஆகாயமும் பூமியை (அவற்றைப் படைத்த ஆதிநாளில்) ஒன்றுக் கொன்று ஒட்டிச் சேர்ந்தே நின்றன. பிறகு நாம் அவற்றை ஒன்றுக்கொன்று பிரித்து வைக் கவும் எல்லாப் பொருள்களையும் தண்ணீ ரிலிருந்து படைக்கவும் செய்தோம்
பண்டைய பாபிலோனியாவின் நம்பிக்கையின் படி உலகம் மர்துக் தேவனின் கட்டளைப்படி தண்ணீரிலிருந்து தோன்றியது. அமைப்பு வழிபட்ட மதங்கள் உருவாவதற்கும் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமூகத்தில் நல்ல செல்வாக்குடன் இருந்த நம்பிக்கைகளே இந்தக் குறிப்புகளில் அலையடிக்கின்றன. அவற்றை அமைப்பு வழிப்பட்ட மதங்கள் ஏற்றுக் கொண்டு அங்கீகாரம் அளித்தன.

இன்று செயற்கை உயிரையே அறிவியல் கண்டுபிடித்து விட்டதே!

Read more: http://viduthalai.in/page1/92729.html#ixzz3LsC6B23o

தமிழ் ஓவியா said...

ஆன்மா பற்றி மொக்கலவாத கருத்து

கடவுளை உண்டு பண்ணினவனை விட ஆன் மாவை உண்டு பண்ணினவனே அயோக்கியன் என தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடி கூறுவார்கள். இதே கருத்தை வலியுறுத்தும் வண்ணம் பவுத்தத்தைச் சார்ந்த மொக் கல வாதக் கருத்தும் (நை ராத்ம வாதம் அல்லது ஆன்மா இல்லை என்கின்ற வாதம்) அமைந்திருப்பதை நீலகேசி என்னும் நூலில் மொக்கல வாதசருக்கத்தில் காணலாம்.
ஆன்மா அடங்காத ஒன்றா?

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஞானேந்திரியங் களும், (அறிவுக்கருவிகள்) வாக்கு, பாணி, பாதம், குதம், குய்யம் ஆகிய கர்மேந்திரியங்களும் (தொழிற்கருவிகள்) இவ்வுடல் அடங்கும் பொழுது தானாகவே அடங்கி விடுகின்றன அல்லவா? அங்ஙனமிருக்க ஆன்மா மட்டும் ஏன் அடங்காது?

ஆன்மா ரூபமுடையது என்பீரேல்; சரீர பிரமாணத் ததா? அப்படியானால் சரீரத்துக்குள் புகாது. காரணம்? ஒரே அளவுள்ள இரு குடங்கள் ஒன்றினுள் ஒன்று புகமுடியாது போலாம் என்றறிக!

ரூபம் அற்றது என்றாலோ? ரூபமற்ற ஆன்மா ரூபமாகிய சரீரத்துக்குள் புக முடியாது.
ரூபமாகவும், அரூபமாகவும் உள்ளது என்றாலோ இரு வகைத்தும் குற்றமே என்றறிக! (நீலகேசி மொக்கலவாதச்சருக்கம், பக்கம்-3)
இதிலிருந்து ஆன்மா என்பதே ஒரு பொய்க் கற்பனை என்பதும், உடலுக்குள் புகுவதும், பிறகு உடல் செயலற்றுப் பிணம் என்றாகி விட்டால் அந்த உடலை விட்டு வெளியேறிவிடுகிறதென்பதும், மீண்டும் வேறு உடலை ஏற்றுக் கொள்கிறதென்பதும் சுத்தப் புரட்டு என்பதைப் புரிந்து கொள்ளலாம். - சேலம் ர.ஒந்தாட்சி

Read more: http://viduthalai.in/page1/92729.html#ixzz3LsCE28Ci

தமிழ் ஓவியா said...

கடவுள் நம்பிக்கை தேவையா?
அன்னை தெரசா

பல துயரங்களை மறைக்கும் பெரிய திரையாக என்னுடைய புன்னகை விளங்குகிறது. நான் எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருப்பதால் என்னுடை மத நம்பிக்கை, என்னுடைய அன்பு ஆகியவை நிரம்பி வழிவதாகவும், கடவுளுடன் எனக்கு இருக்கும் நெருக்கமும், அவருடைய விருப்பத்துடன் ஒன்றி இருப்பதாகவும், என்னுடைய உள்ளத்தில் நிறைந்திருப்பதாகவும் மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் உண்மையை அறியார். கடவுள் கடவுளேயல்லர். உண்மையில் அவர் இல்லை.
தி இண்டு, 30.11.2002

Read more: http://viduthalai.in/page1/92729.html#ixzz3LsCKTZ9G

தமிழ் ஓவியா said...

பெரியார் பேசுகிறார்

உலகில் சமதர்ம உணர்ச்சிக்கு விரோதமான தன்மைகளில் மற்ற தேசத்திற்கும் இந்தியாவுக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருந்து வருகின்றது. அதென்னவென்றால், மற்ற நாடுகளில் ஒரு விஷயந்தான் முக்கியமாய்க் கருதப்படுகின்றது. அதாவது முதலாளி (பணக்காரன்) - வேலையாள் (ஏழை) என்பதுவேயாகும். ஆனால் இந்தியாவிலோ மேல் ஜாதியார் - கீழ் ஜாதியார் என்பது ஒன்று அதிகமாகவும், முதன்மையாகவும் இருப்பதால் அது பணக்காரன் - ஏழை தத்துவத்திற்கு ஒரு கோட்டையாக இருந்து காப்பாற்றிக் கொண்டு வருகின்றது.

தந்தை பெரியார், 4.10.1931 பொது உடைமை வேறு; பொது உரிமை வேறு. பொது உடைமை என்பது சமபங்கு என்பதாகும்; பொது உரிமை என்பது சம அநுபவம் என்பதாகும். தனி உரிமையை முதலில் ஒழித்து விட்டோமானால், தனி உடைமையை மாற்ற அதிகப் பாடுபடாமலே இந்த நாட்டில் பொது உடைமை ஏற்பட வசதி உண்டாகும். பொது உரிமை இல்லாத நாட்டில் ஏற்படும் பொதுவுடைமை, மறுபடியும், அதிக உரிமை இருக்கிறவனிடந்தான் போய் சேர்ந்துக்கொண்டே இருக்கும் என்பது பொதுவுடமைத் தத்துவத்திற்குப் பாலபாடம் என்பதை மக்கள் உணர வேண்டும். - தந்தை பெரியார், 25.3.1944



Read more: http://viduthalai.in/page1/92730.html#ixzz3LsCRqEtQ

தமிழ் ஓவியா said...

அம்பலமாகும் இந்திய தேசியமும், இந்து புனிதமும்


- குடந்தை கருணா

நாட்டின் வெளிவிவகாரங்களை சமன் செய்யும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டுள்ள அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உள் விவகாரத்தை கிளப்புகிறார். டில்லி யில் சாமியார்கள் நடத்திய கூட்டத்தில் பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டியதுதான் பாக்கி என்கிறார். மதச்சார்பற்ற நாடு என அரசமைப்புச் சட்டம் சட்டத்தில் பிரகடனப்படுத்திய ஒரு நாட்டில் ஒரு மதத்துக்கான நூலை, எல்லா மக்களுக்குமான நூலாக அறிவிக்க முடியுமா? என்ற கேள்வியோடு, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தங்கள் பணியை முடித்துக் கொண்டன. அதனைக் கடந்து, பகவத் கீதை ஒரு புனித நூலா? என்ற கேள்வியை எழுப்புகிற துணிச்சல் தமிழ் நாட்டில் பெரியார் பிறந்த மண்ணில் மட்டும் தான் எழுந்துள்ளது.

சென்னை பெரியார் திடலில் நேற்று (12.12.2014) நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய தலைவர்கள் தேசியத்தை யும், புனிதத்தையும் அறுவை சிகிச்சை செய்து காட்டினர்.

பகவத் கீதை, நால்வகை வர்ணத்தை நிலை நாட்டும் ஒரு பிற்போக்கான வன்முறையைத் தூண்டும் நூல் என்பதுதான் சாராம்சம். ஆனால், அதன் உள்ளே சென்று ஆராய்ந்தால், இந்த நூல், பார்ப்பன மேலாண்மையை நிறுவுவதற் கான அத்தனையும் சொல்லப்படும் நூல் என்பது விளங்கும்.

கடமையைச் செய்; பலனை எதிர் பாராதே என்ற வாசகத்தை, கீதை சொல்கிறது என இன்றும் பலராலும் சொல்லப்படும் நிலையில், நால்வகை வர்ணத்தில் கடைநிலையில் இருக்கும் சூத்திரர்கள், பார்ப்பனர்களுக்கு ஏவல் செய்வதை தங்கள் கடமையாக செய்ய வேண்டும்; அதற்கு எந்தப் பலனையும் அவர்கள் எதிர்பார்ப்பதற்கு தகுதியும், உரிமையும் இல்லை என்பதுதான் பொருள் என்பது இன்று எத்தனைப் பேருக்கு தெரியும்?

நாட்டின் பெரும்பான்மை மக்களான சூத்திர மக்களை மீண்டும் பார்ப்பனர் களுக்கு ஏவல் செய்வதை கடமையாக்க வேண்டும் என்ற சூழ்ச்சியோடு அரங்கே றும் இந்த பகவத் கீதை நாடகம், அதை தேசிய நூலாக ஆக்கிடத் துடிக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, தேசியம் என்பதே, பார்ப்பன தேசியம் தான். அவர்களுக்கான அமைப்புகளை கட்ட மைப்பதுதான். அதற்கு பகவத் கீதை வழி செய்கிறது. ஆகவே, அது தேசிய நூல்.

பார்ப்பனர்களுக்கு பாதுகாப்பான அத்தனையும் புனிதம் நிறைந்தது. மாட் டில் பசு மாடு புனித மாடு, உலகிலேயே அதிக மாசு கொண்டுள்ள கங்கை, புனித கங்கை. அதை சுத்தப்படுத்துவதற்கு மோடி அரசு ஆயிரக்கணக்கான கோடி செலவிடுவதாகச் சொன்னாலும், அப் போதும் அந்த மாசு படிந்த ஆறு, புனித ஆறு. அது போலத்தான் பகவத் கீதை புனித நூல்!

அரசமைப்புச் சட்டத்தில் 22 மொழிகள் தேசிய மொழிகள் எனக் கூறப்பட்டிருக்கிறது. அதில் சமஸ்கிருதம் தவிர, மீதம் உள்ள அனைத்து மொழி களும், ஏதேனும் ஒரு மா நிலத்தில் அந்தப் பகுதி மக்களால், பேசப்படுகிறது. ஆனால், எந்த மாநிலத்திலும், எந்த மக்களாலும், பேசப்படாத மொழியான சமஸ்கிருதம் எப்படி தேசிய மொழி யாகும்? சமஸ்கிருதம் பார்ப்பனர்களின் மொழி. ஆகவே அது தேசிய மொழி, அது தேவ பாஷை, அப்படித்தானே?

இந்த பார்ப்பன மேலாதிக்கத்தை தோலுரித்தவர்கள் தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் தான். ஆனால், அம்பேத்கரின் சிந்தனையை கொண்டு செல்ல ஓர் இயக்கம் இல்லாத நிலையில், பெரியாரின் இயக்கம் அந்த பணியை கூடுதலாகச் செய்ய வேண்டிய தேவை இன்று அதிகம் ஆகியிருக்கிறது.

பார்ப்பனர்களுக்கே உரிய கிரிமினல் புத்தி எப்படிப்பட்டது என்றால், ஒரு விஷயத்தை இங்கே செய்து கொண்டே, இன்னொரு பக்கம் வேறொரு விஷ யத்தை சன்னமாகச் செய்வதுதான். அதைத் தான் இப்போது செய்து கொண்டிருக் கிறார்கள். ஒருபக்கம், சமஸ்கிருதம் கட்டாயம், பகவத் கீதை தேசிய நூல், காந்தியைவிட கோட்சே ஒரு தேசபக்தன், ராமனுக்கு கோவில் கட்டவேண்டும் என கோரிக்கை என நம்மை திசை திருப்பி விட்டு, இன்னொரு பக்கத்திலே, சத்த மில்லாமல், பொதுத்துறை நிறுவனங் களை தனியார்மயமாக்கும் பணியையும், தொழிலாளர் பாதுகாப்பு சட்டத்தில் அவர்களுக்கு விரோதமான, பனியா கும்பலுக்கு சாதகமான பல அம்சங்களை (ஷரத்து)களை சேர்க்கும் பணியையும் துவக்கி உள்ளார்கள். பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள இடஒதுக்கீட்டை ஓசையின்றி ஒழித்துக் கட்ட, வளர்ச்சி, தூய்மை என மயக்க பிஸ்கெட்டு கொடுத்து, தனியார் மயமாக் கும் போக்கை இந்த மோடி அரசு செய்து வருகிறது.

தமிழ் ஓவியா said...

இந்த பார்ப்பன பனியா கதியைத் தான், தன் ஆயுள் முழுவதும் தந்தை பெரியார் எதிர்த்து வந்தார். பார்ப்பனர் களை இட ஒதுக்கீட்டுக்கு மட்டும் எதிர்ப்பது, தங்கள் வீட்டு அத்தனை சடங்குகளையும் அவர்களைக் கொண்டு நடத்துவது, சரிப்பட்டு வராது. பார்ப்பனர் களை நம்முடைய அத்தனை நிகழ்வு களிலும், பிறப்பு முதல் இறப்பு வரை, அவர்களின் மேலாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று போராடினார்.

அதனால்தான், இன்று பகவத் கீதை ஒரு புனிதமும் இல்லை; தேசியமும் இல்லை என்று துணிந்து தமிழ் நாட்டில் சொல்ல முடிகிறது கட்சிகளுக்கு அப்பாற் பட்டு அந்த சிந்தனையை ஒன்றுபடுத்த முடிகிறது.

இந்தப் பணியை பெரியார் இயக்கத்தைத் தவிர வேறு யாரும் முன்னெடுத்துச் செல்ல முடியாது. முனைப்புடன் செயல்பட்ட ஆசிரியர் வீரமணி அவர்களைப் பாராட்ட வேண் டும் ஒவ்வொரு பார்ப்பனர் அல்லா தாரும். ஜனநாயக முறையில் ஆட்சிக்கு வந்து, சர்வாதிகாரமாக ஆட்சி செய்வது ஹிட்லர் பாணி; அதைத்தான் இன்றைய மோடி அரசு செய்து கொண்டு வருகிறது. ஆபத்தை புரிந்தவர்கள், புரியாமல் இருக்கும் இளைஞர்களுக்கு சொல்வ தற்கு, நேற்றைய கூட்டத்தில் பேசிய தலைவர்கள் பல விஷயங்களை தெளிவு படுத்தி உள்ளனர், பயன்படுத்திக் கொள்வோம். பார்ப்பன பனியா சதிகளை அம்பலப்படுத்துவோம்.

Read more: http://viduthalai.in/page1/92799.html#ixzz3LsDg44r7

தமிழ் ஓவியா said...

சிந்தித்துப் பார்

நீ கிணற்றுத் தவளையாக இருக்க விரும்புகிறாயா? அல்லது வேடந் தாங்கலில் வந்து இளைப்பாறிப் போகும் வெளிநாட்டுப் பட்சியாக இருக்க விரும்புகிறாயா? மனிதனே சிந்தித்துப் பார்.
_ (விடுதலை, 22.9.1967)

Read more: http://viduthalai.in/page1/92788.html#ixzz3LsDpHqs2

தமிழ் ஓவியா said...

12,04,00,000 ஆண்டுகளுக்கு முன்பே...!

பகவத் கீதையில் மனித குலத்துக்கு ஏற்ற கருத்துகள் உள்ளதாம். அது மனிதனுக்காக சொல்லப்பட்டதாம். அது மனிதனுக்காகத்தான் சொல்லப்பட்டது என்பதை ஒத்துக் கொள்கிறோம். அதாவது, உயர்ஜாதி மனிதன் கீழ்ஜாதி மனிதனை ஒடுக்க, ''இது கடவுளாலேயே உண்டாக்கப்பட்டது.அதனால் நீ(கீழ் ஜாதிக்காரன். இதற்குக் கட்டுப்பட்டே ஆகவேண்டும்'' என்ற காரணத்திற்காக சொல்லப்பட்டது.

அதெல்லாம் இருக்கட்டும், ''யாருமே இல்லாத கடையில யாருக்காக டீ ஆத்துறே?'' என்பது போல மனித குலமே தோன்றாத காலத்தில் மனிதனுக்காக சொல்லப்பட்டது என்பதை எப்படி ஏற்றுக் கொள்வது?

கீதையை அய்ந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு சொன்னான் என்பதைக்கூட நம்பித் தொலைத்து விடுகிறோம். ஆனால்.......

... மனுவின் தோற்றத்துக்கு முன்னால், பகவானால், அவரது சீடனான சூரிய தேவன் விவஸ்வானுக்கு கீதை உபதேசிக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ளும் நிலையில், கீதை, 12,04,00,000 (பன்னிரண்டு கோடியே நான்கு லட்சம்) ஆண்டுகளுக்கு முன், உபதேசிக்கப்பட்டதாக உத்தேசமாகக் கணக்கிடலாம். மனித சமுதாயத்திலோ, இது இருபது லட்சம் ஆண்டுகளுக்கு மேல் வழக்கில் இருந்து வந்துள்ளது. 5000 ஆண்டுகளுக்கு முன் இது மீண்டும் ஸ்ரீ கிருஷ்ணரால் அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்-பட்டது..........

இந்த செய்தி, பக்தி வேதாந்த புத்தக நிறுவனம் வெளியிட்ட; அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா (ஸ்தாபக ஆசாரியர் : அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்) (சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில்) எழுதி, ஆத்ம தத்வ தாஸ் தமிழாக்கம் செய்த பகவத் கீதை உண்மையுருவில் என்ற நூலில் அத்.4 பக்கம் 231 ல் உள்ளது.

சத்ய யுகம் 172800ஆண்டுகள், திரேதாயுகம் 1296000 ஆண்டுகள், துவாபரயுகம் 864000 ஆண்டுகள், கலியுகம் 432000ஆண்டுகள், மொத்தம் 4320000 (நாற்பத்து மூன்று லட்சத்து இருபதாயிரம்) ஆண்டுகள்தான்.

இதில், கலியுகம், பிறந்து 5000 ஆண்டுகள்தான் ஆகிறது,எனும்போது, கீதை, 12,04,00,000 (பன்னிரண்டு கோடியே நான்கு லட்சம்) ஆண்டுகளுக்கு முன்பே, மனிதனுக்காக உபதேசிக்கப்பட்டதாக சொன்னால், கடவுள் நம்பிக்கையுள்ள மூடனும் நம்ப மாட்டானே!

- க.அருள்மொழி

தமிழ் ஓவியா said...

ஏறி வரும் ஏணி!


திராவிட இயக்கச் சித்தாந்தம் காலாவதியாகி விட்டது என்று சொல்லியிருக்கிறாராம் அன்புமணி ராமதாஸ்.

மேலே ஏறிவந்து விட்டோம் என்பதற்காக ஏணியை எட்டி உதைக்காதீர்கள் அன்புமணி.

ஏணிக்கு ஆதரவாகச் சொல்லவில்லை. அந்த ஏணியின் உதவியுடன் மேலும் பலர் மேலே ஏறி வந்துகொண்டிருக்கிறார்கள் அல்லவா. அவர்களுக்காகச் சொல்கிறேன்!

- எழுத்தாளர் இரா.முத்துக்குமார், 11 டிசம்பர் 2014, அதிகாலை 2:19 மணி (முகநூலில்)

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?

ருசியாவிற்குச் செல்லுவதற்கு முன்பே இந்தியாவிலேயே முதன்முதலாக மார்க்ஸ் ஏங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கையை மொழிபெயர்த்துத் தமிழில் வெளியிட்டவர் தந்தை பெரியார் என்ற வரலாற்றுச் செய்தி உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

முக்தார் அப்பாஸ் நக்வி, ஷாநவாஸ் ஹுசேன், நஜ்மா ஹெப்துல்லா எப்பொழுது மதமாற்றம்?


சங்பரிவாரின் உதிரிகள் மறு மதமாற்றம் செய்வதாகக் கூறி பிரச்சினை செய்வதை பிஜேபியின் தலைமை விரும்புவதாக இருந்தால், முக்தார் அப்பாஸ் நக்வி, ஷாநவாஸ் ஹுசேன், நஜ்மா ஹெப்துல்லா போன்ற முஸ்லிம்களையும், கட்சியின் சிறுபான்மை அமைப்பி லிருக்கும் சில கிறிஸ்துவர்களையும், சீக்கியர்களையும் முதலில் மறு மதமாற்றம் செய்யலாமே! அவர்களும் மகிழ்ச்சியாக மீடியாவுக்கு போஸ் கொடுப்பார்கள். மாநிலங்களவை உறுப்பினர், அமைச்சரவை பொதுத் துறை நிறுவனத் தலைவர் பதவிகளைக் காட்டி இப்படி ஒரு முடிவை நோக்கி அவர்களை கவர்ந்திழுக்கலாமே!

- (முக நூலில் இருந்து: - விஜய் குரோவர்)

Read more: http://viduthalai.in/e-paper/92910.html#ixzz3LxpYaMl0

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

செவ்வாய் கிரகம்

நவக்கிரகங்களில் ஒருவரான செவ்வாய்க்கு, ஒன்றான வழிபடும் முறை களை பரத்வாஜ் முனிவர் சொல்லிக் கொடுத்தார். அதன்படி செவ்வாய், விநாயகரை நோக்கி கடும் தவம் இருந்தார். பக்திக்கு மகிழ்ந்த விநாயகர் அவர் முன்தோன்றி, செவ்வாய் நவக்கிரகங்களில் ஒன் றாக விளங்கும் வரம் கொடுத்தார். இந்த விரதம் செவ்வாய்க்கிழமையன்று சதுர்த்தி திதியில் நடந்த தால் செவ்வாய்க்கிழமை யும், சதுர்த்தி திதியும் சேர்ந்து வரும் நாளில் இவரை பூஜித்து விரதம் இருப்பவருக்கு கேட்கும் வரங்களை செவ்வாய் கொடுப்பதாக கூறப்படு கிறது. இதனால் சதுர்த்தி திதியும், செவ்வாய்க்கிழ மையும் சேர்ந்து வரும் நாளை சங்கடஹர சதுர்த்தி என்று மக்கள் வழிபட வேண்டுமாம்.

செவ்வாய்க் கிரகம் பூமிக்கு வந்து விநாயகரை நோக்கித் தவமிருந்ததா? 890 மில்லியன் மைல் தூரத்தில் உள்ள ஒரு கோள் விநாயகரை நோக்கித் தவமிருந்ததாம். செவ்வாய்க்கோள் என்ன இந்துக்களின் அஞ்சறைப் பெட்டிக்குள் அடக்கமோ!

Read more: http://viduthalai.in/e-paper/92911.html#ixzz3Lxpiyzyz

தமிழ் ஓவியா said...

குபேரனிடம் திருப்பதி ஏழுமலையான் வாங்கிய கடன் எவ்வளவு? தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் சரமாரி கேள்விகள்

உலகின் பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையான், தனது திருமண செலவுக்காக குபேரனிடம் எவ்வளவு கடன் வாங்கினார்? என சிலர் தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்டி அய்) மூலம் சரமாரியாக கேள்வி கேட்டுள்ளனர். இதற்கு பதில் கூற முடியா மல் திருப்பதி தேவஸ்தான அதி காரிகள் திக்குமுக் காடி வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலை யான், பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொள்வதற்காக குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணங்கள், இதிகாசங்கள் தெரிவிக் கின்றன. இதனால் பக் தர்கள் உண்டியல் மூலம் செலுத்தும் காணிக்கை களை குபேரனுக்கு வட்டி யாக செலுத்துகிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த நம்பிக்கை யில்தான் ஏழுமலையானுக்கு பக்தர்கள் கோடிக் கணக் கில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். நடப்பு வருவாய் ஆண்டில் உண்டியல் காணிக்கை ரூ. 1,000 கோடியை தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படு கிறது. இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத் தின் கீழ் சிலர் திருமலை-திருப்பதி தேவஸ்தானத் துக்கு மனு அனுப்பி வரு கின்றனர். ஏழுமலையான் தனது திருமண செலவுக் காக குபேரனிடம் எவ் வளவு கடன் வாங்கினார்? இந்தக் கடனில் பக்தர்கள் காணிக்கையாக செலுத் திய தொகையில் அவர் எவ்வளவு வட்டி செலுத்தி உள்ளார்? மீதம் உள்ள அசல், வட்டி தொகை எவ்வளவு? தேவஸ்தான நிர்வாகத் தினர் கடனை எவ்வாறு செலுத்தி வருகின்றனர்? இதுவரை பக்தர்கள் காணிக்கை செலுத்திய தொகை எவ்வளவு? என சரமாரியாக கேள்விக் கணைகளை தொடுத்து வருகின்றனர். பதில் கிடைக்காவிட்டால் நீதி மன்றத்தை அணுகப் போவதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர்.

பெங்களூருவைச் சேர்ந்த டி. நரசிம்ம மூர்த்தி என்பவர் இதே கேள்விகளை கேட்டு தேவஸ்தானத்துக்கு சமீபத் தில் கடிதம் அனுப்பி உள்ளார்.

இதுகுறித்து தேவஸ் தான அதிகாரிகள் கூறும் போது, புராண, இதிகாசங் களில் ஏழுமலையான் குபேரனிடம் கடன் வாங்கியதாக கூறப்பட் டுள்ளது. ஆனால் சிலர் இதற்கு சாட்சியங்கள் தேவை என்றும், இது வரை தேவஸ்தானம் சார்பில் குபேரனுக்கு கட்டிய வட்டி குறித்து கணக்கு காட்ட வேண் டும் என்றும் ஆர்டிஅய் சட்டத்தின் கீழ் கோரி உள்ளனர். சுய விளம் பரத்துக்காக கேட்கப்படும் இதுபோன்ற கேள்வி களுக்கு பதில் அளிக்கத் தேவையில்லை என்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/92913.html#ixzz3LxpskF86

தமிழ் ஓவியா said...

ஜாதி முள்காட்டில் பூத்த குறிஞ்சி மலர்!


விடுதலையில் வெளிவரும் வாழ் வியல் சிந்தனைகளையும் மற்ற ஏனைய புதுமைக் கருத்துக்களையும் - அமெரிக்காவில் வாழ்ந்து வந்தாலும் - இடையறாது படித்து, மனதில் அசை போட்டுப் பாராட்டி மகிழும் ஒரு புதுமையான வாசகர் அம்மையாரை, எனது நெருங்கிய குடும்ப நண்பரும், இந்தியாவின் தலைசிறந்த சிறுநீரக வியல் துறை மருத்துவருமான டாக்டர் ஏ. இராஜசேகரன் அவர்கள் எனக்கு 12.12.2014 அன்று பெரியார் திடலுக்கே அழைத்துவந்து நேரில் அறிமுகம் செய்து வைத்தார்.

நாங்கள் சந்தித்ததோடு, சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் உரையாடி மகிழ்ந்தோம். கண்ணுக்குத் தெரியாத நண்பர்கள் இப்படி உலகமெங்கும் பலரை பெரியாரியல் - அதன் முற் போக்குச் சிந்தனைகள் ஈர்த்துள்ளன.

இவரது சொந்த ஊர் விழுப்புரம் அருகில் உள்ள கண்டமானடி என்ற சிறு கிராமம். அங்கே வறுமை மிகுந்த சூழ்நிலையிலும் படித்து உயர்ந்தார் - பழைய மாதக் காலண்டர்களைச் சேகரித்து அதனை நோட்புக்காக இணைத்து, அதனையே பாடங்கள் எழுதப் பயன்படுத்தி ஆடிட்டராக - பட்டய கணக்கராக உயர்ந்தார் எப்படியோ பல ஆண்டுகளுக்குமுன் இவர் வெறும் 17 டாலர்களை வைத்துக் கொண்டு அமெரிக்காவிற்குச் சென்று அங்கு தொழில் நடத்தி கடும் உழை ப்பினாலும், அறிவு ஆற்றலாலும் உயர்ந்த நிலையில் உள்ளார்.

இவரது துணிவு மிக்கச் சிந்தனை, இவரை அமெரிக்க அரசின் வரு வாயில் தவறான ஒட்டைகள்பற்றிய ஆய்வு மூலம் பல கோடி வருவாய் - அரசுக்கு மிச்சமாகும் என்பதைக் கண்டறிந்து கூறியதைக் கேட்டு அமெ ரிக்க அரசு இவரைப் பாராட்டி விருதும் பரிசும்கூட அளித்திருப்பது பெருமை அல்லவா!

தமிழ்நாட்டுப் பெண் ஒருவருக்கு உலகின் முன்னேறிய வளர்ந்த நாடு என்கிற வரிசையில் உள்ள அமெரிக்க நாட்டின் அரசு இப்படிப் பெருமை செய்தது எவ்வளவு சிறப்பானது!

வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைக்கும் விந்தை மனிதர்களுக்கு இதைவிட நல்ல பாடம் வேறு உண்டா? - இவரது வாழ்க்கையே சிறப்பு அல்லவா?

இதைப்பற்றி நாங்கள்அன்று நேரில் பாராட்டியபோது, மிகுந்த தன்னடக்கமும், எளிமையும் தனது இனிய பண்புகளாகக் கொண்ட அந்த அம்மையார் திருமதி ஜானகி இராமதாஸ் அவர்கள் சொன்னார்:

இதற்கு ஒரு முக்கிய காரணம் - துணிவுக்கு நான் பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள்? புத்தகம் படித்தேன்.

பள்ளிப் பருவத்தில் நான் சிறுமியாக - மாணவியாக இருந்தபோதே, அப் பகுதிக்கு வந்து பேசும் பெரியார் பேச்சைக் கேட்பேன்; அது வீட்டாருக் கும், தெருவாருக்கும் தெரியாமல் சென்று, நீ அங்கேயா போய் விட்டு வருகிறாய் என்று அதிசயத்துடனும், சற்று எரிச்சலு மாய் என்னுடன் இருக்கும் பெண்களே கூட கேட்பர். அதனால் என்ன? பலரது கருத்துக்களைக் கேட்பதும், சிந்திப்பதும் எப்படி தவறு என்று அவர்களுக்குக் கூறுவேன்.

நீங்கள் (ஆசிரியர்) எழுதும் பல வற்றை நான் தவறாமல் இணையதளத்தில் படித்து மகிழ்வேன் என்று கூறி, சரசர வென்று பல வாழ்வியல் மற்றும் கட்டு ரைகளைப் பற்றி அப்படியே ஒப்புவிப்பது போலக் கூறி எங்களை அசத்தி விட்டார்!

அவரது வாழ்விணையர் திரு. இராமதாஸ் அவர்களும் இவருக்கு நல்ல ஊக்கந் தரும் இணையராக உள்ளார்; இவரது இரண்டு பிள்ளை களும் நல்ல கல்வி பெற்று, பெரு நிலையில் உள்ளனர் என்று தெரிவித்தார்.

நேரில் பார்க்க வாய்ப்பில்லாத அவர், என்னைச் சந்திக்க இம்முறை இங்கே வந்ததையொட்டி, ஏற்கெ னவே அறிமுகமான குடும்ப நண்பர் டாக்டர் இராஜசேகரனிடம் விருப் பத்தைத் தெரிவித்தார். அவர் அழைத்து வந்தார்.

அவரது நீண்ட நாள் விருப்பம் நிறைவேறியது. வாழ்வியல் சிந்தனை மற்றும் பெரியார் நூல்களைப் பெற்றுக் கொண்ட அவர் டெக்சாஸ் மாநிலத்தில், தான் வாழும் தமது வீட்டிற்கு அமெரிக்கா வரும் போது கட்டாயம் வர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

இதில் மேலும் ஒரு தனிச் சிறப்பு - இவரைப் பற்றியது என்னவென்றால், ஜாதி வர்ணம் என்ற கள்ளி, முள் காட்டில், உயர்ஜாதி என்று அழைக் கப்படும் பிறப்பால் பிறந்த அக்கிர காரத்து அதிசய மனுஷி இவர்!

பெரியார் அனைவருக்கும் உரியார்; அவர்தம் சுயமரியாதை ஒளி பலரையும் துணிச்சல் உள்ளவர் களாக்கி, ஆமைகளாய், ஊமைகளாய் இருந்த பெண்ணினத்தை - ஜாதி வேறுபாடு இன்றி உயர்த்தியுள்ளது. மனித நேயத்தின் மலர்ச்சியாக அது பூத்து, காய்த்து, கனிந்துள்ளது என்ப தற்கு இதைவிட சிறந்த வாழ்வியல் எடுத்துக்காட்டு வேறு என்ன வேண் டும்?

இவர் ஒரு ஜாதி முள்காட்டில் பூத்த அதிசய குறிஞ்சிமலர் அல்லவா!

இதுபோலவே உதகையில் பூத்த இன்னொரு குறிஞ்சி மலர் உண்டு. அது பற்றி நாளை எழுதுகிறேன்.

Read more: http://viduthalai.in/page-2/92921.html#ixzz3LxqJVfaC

தமிழ் ஓவியா said...

சிக்கலே மோடி அரசின் சாதனை!

- மு.வி.சோமசுந்தரம்

எரிமலை என்றவுடன், தீக்குழம்பும், அழிவும், அழுகுரலும் நம் சிந்தனைக்கு வரும். எரிமலைகளிலும் தரம் பிரித்துக் கூறப்படும் செயலற்றுப்போன எரிமலை (DEFUNCT) தூங்கும் எரிமலை (DORMANT) வெடிக்கும் தன்மைக் கொண்ட எரிமலை (ACTIVE) என்பவை அவை.

செழுமையையும், ஒற்றுமையையும், அமைதியையும், சீர்குலைக்கும் வகை யில் வெறுப்பு, வன்மை, மடமை என்ற தீக்குழம்பைத் தன் வயிற்றில் தக்க வைத்துக்கொண்டு தூங்கும் எரிமலை யாக இருக்கும் ஒரு அமைப்பைக் கண்டு அஞ்சவேண்டிய நிலையில் மனித நேய பற்றாளர்கள் உள்ளனர்.

குமுறும் தீக்குழம்பாக நாம் பார்க்க இருப்பது கள்ளிச்செடி என்ற ஆர். எஸ்.எஸ். என்ற அமைப்பின் ஒரு முள்ளாக உள்ள விசுவஇந்து பரிட்சத்தின் முதன்மைத் தலைவரான அசோக் ஷிங்காலின் உள்ளக்கிடக்கையும் நச்சு நினைப்பும்.

இந்திய துணைக்கண்டத்தின் இன் றைய பிரதமர் நநேரந்திர மோடி அவர்கள். அவர் இந்த பதவிக்கு வர வேண்டும் என்று ஏங்கிய தவமிருந்த நிலையை விளக்கும் வகையில் அசோக் ஷிங்கேல், அவுட்லுக் (Out Look)
9.9.2013 இதழில் அவர் அளித்த பேட்டியில் கூறி யுள்ள செய்தியாவது (தூங்கும் எரி மலையான மனநிலை)

அசோக் ஷிங்காலின் ஆசையும் ஆசியும்

இன்றைய நிலையில் எங்கள் மதக் குருக்களுக்கு, கோயில்களுக்கு, பசுக் களுக்கு, கங்கை நதிக்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒரு சங்கராச்சாரியார் மேல் கொலை குற்றம் உள்ளது. வேறு ஒருவர் மேல் பாலியல் குற்றம் உள்ளது. இவையெல்லாம் இந்துமதத்தைப் புரிந்து கொள்ளாத, மதிக்காத, நாத்திக, மதச் சார்பின்மைப் பற்றி பேசுகிற ஒரு கூட்டத் தினரால் ஏற்படும் பிரச்சனைகள். சோனியா காந்தி போன்ற வெளிநாட் டவர்கள் கூட இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசுகிறார்கள். 1990க்குப் பிறகு இந்து மதத்தில் ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்து மதத்தை எதிர்ப்பவர்கள் அழிக்கப்படு வார்கள். எங்கள் மதகுருக்களையும், மதத் தையும் கொச்சைப்படுத்தும் அசம்கான் போன்றவர்கள் பாகிஸ்தானில் தஞ்சம் புக வேண்டியவர்கள்.

ராமர் கோயில் கட்டுவதை ஆதரிப்ப வர்கள் புகழடைவார்கள். எதிர்ப்பவர்கள் இழிவுபடுத்தப்படுவார்கள். எங்களுக்கு அரசியல் கட்சிகளால் பயன் ஏதும் இல்லை. உண்மையில் அரசியல் கட்சிகள்தான் எங்களால் பயன் பெறுவர்.

மோடி நாட்டை வழிநடத்த வேண்டும் என்று கடவுளே விரும்புகிறார். கேதார் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குபோல 2002, கோத்ரா நிகழ்வு குஜராத்தில் ஏற்பட்ட பிறகு, இந்துக் களிடையே ஒரு வீரியம் ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆண்டுகளில் இந்துத்துவா வின் எழுச்சியைக் காணமுடியும். அதன் விளைவாக அரசியல் கட்சிகள், ராமர் கோயில் கட்ட தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்துக்கு வரவேண்டி யிருக்கும் (பி.ஜே.பி. அதன் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. அதன்படி அது செயல்பட 2019 வரை கால அவ காசம் கொடுக்கப்பட்டுள்ளதாக ஆர். எஸ்.எஸ். தலைவர் கூறுகிறார். ஏன் தமிழ்நாட்டில் அஇஅதிமுக கூட அதன் தேர்தல் அறிக்கையில் சேதுசமுத்திரத் திட்டம் தேவை பற்றி கூறியிருக்கிறது).

ஏற்பட்டிருக்கும் இந்துத்துவா அவை அரசியல் காரணத்துக்காகவோ, தேர் தலை கவனத்தில் கொண்டோ ஏற்பட வில்லை. இந்த முறை, இந்த நாட்டின் வெளிப்பாட்டை, ராமபக்தர்கள் தான் தீர்மானிக்க உள்ளார்கள். ராமர் கோயில் கட்டுவதில் ஈடுபாடு காட்டாதவர்களுக்கு பாதிப்புதான் வந்து சேரும். அத்த கையோர் ஆட்சி அதிகாரத்தின் வாசலைக்கூட மிதிக்க முடியாது. தேர்தல் முடிவு பலரை வியப்பிலாழ்த்தும் என்பது உறுதி.

அசோக் ஷிங்காலின் ஆசை, எதிர் பார்ப்பு கை கூடிவிட்டது. அவர் விருப்பப் படியும் கடவுள் விருப்பப்படியும் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராகி விட்டார். பிறகு என்ன? பலா பலன் என்ன? பலப்பல கூறலாம். எனினும் தற்போதைய நிலை யில், இந்தியாடுடே (டிசம்பர் 3, 2014) இதழில் வந்துள்ள கணிப்பை (பக்கம் 10) பார்ப்போம்.

ஆக மோடியின் எழுச்சி புத்தாயிர மாண்டில் பின்னோக்கி பாய்ச்சலை மேற்கொண்டு கடந்த காலத்துடன் தொடர்பு கொள்வதற்கான முதல் வாய்ப் பாகும். அல்லது இன்னும் கடுமையாக சொல்வதானால் கடிகாரத்தையும் நாட் காட்டியையும் பின்னோக்கி திருப்புவ தாகும். முற்போக்கை பாராம்பரியத்துடன், ஆர்வத்தை புராணங்களுடன் குழப்பிக் கொள்ளும் மனநிலை. இது மிகவும் சிக்கலாகிறது.

இது கடவுள் கொடுத்த மோடியின் ஆட்சி, அனுபவி ராஜா அனுபவி! அடுத்து வரும் அதிர்ச்சி ஆபத்து மோடி அரசு அறிவிப்புக்கு காத்திருப்போம்.

Read more: http://viduthalai.in/page-2/92922.html#ixzz3LxqfQoVY

தமிழ் ஓவியா said...

எளிய உணவு பொருள்களின் மருத்துவ குணங்கள் (தொடர்ச்சி)

மிக எளிய உணவு பொருள்களில் உள்ள மருத்துவ குணங்களால் உடலில் உண்டாகும் பல்வேறு நோய்களை தீர்க்கின்றன.

23. வயிற்றுவலியா? ஒரு டம்ளர் கொதிநீரில் ஒரு மேசைக் கரண்டி தேனைக் கலந்து குடித்தால் 15 நிமிடங்களில் வலி பறந்துவிடும்.

24. காய்ச்சிய பசும்பாலில் மஞ்சள், மிளகுப் பொடி பனங்கற்கண்டு சேர்த்து இரவில் அருந்தினால் இருமல் குணமாகும். கற்கண்டுடன் சீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் குணம் தெரியும்.

25. உடல் அசதியா? முருங்கை இலை ஈர்க்குகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டுக் கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் குணமாகும்.

26. காலையில் இருமல் வந்தால் கடுகை பட்டுப்போல் கரைத்து தேனில் ஒரு சிட்டிகை கலந்து இரண்டு வேளை சாப்பிட குணமாகும்.

27. மறதி தொல்லையா? ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைத்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும்.

28. இருமலால் அவதியா? உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் நீங்கும். ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலும் குணமாகும்.

29.. சளித் தொல்லையா? வெற்றிலை, 3 மிளகு, துளசி இலையை சேர்த்து மென்று விழுங்கவும் அல்லது உறங்கும் முன் சிறிது வெந்தயத்தை சாப்பிட்டு ஒரு டம்ளர் வென்னீர் அருந்தினால் குணமாகும்.

30. சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து மூன்று வேளை கொடுக்க குணமாகும்.

31. அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து நான்கு சிட்டிகை எடுத்து இஞ்சி சாற்றுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

31. உலர் திராட்சைப் பழத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

32. வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

33. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

34. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

35. புதினா விதையை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.

36. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை உணவை சாப்பிடக் கொடுக்கக்கூடாது.

37. கேரட் சாறும், சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.

38. எலுமிச்சை பழச்சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உடல்சூடு குறையும்.

39. நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

40. எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

41. கொழு கொழுவென குண்டாக இருப்பவருக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு கொடுக்கவேண்டும்.

42. எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைத்துக் காணப்படுபவர்கள், உடல் நலம் தேறி எடை அதிகரிக்கும்.

43. கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.

44. தினமும் குடிநீரைக் காய்ச்சும்போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப்பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், செரிமானத்திற்கு உதவும், வாயுவை அகற்றும், மலச் சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

45. வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.

46. பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

47. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

48. வெள்ளைப் பூசணிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொழுப்பு, தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

49. வால்மிளகின் தூளை பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் கலந்து சாப்பிட கபம் நீங்கும்.

Read more: http://viduthalai.in/page-7/92881.html#ixzz3LxseHQJm