Search This Blog

27.4.14

பிட்டி தியாகராயர் பிறந்தநாளில் உரத்தசிந்தனை தேவை


வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் அவர்களின் பிறந்த நாள் இந்நாள் (1852).

அரசியல் என்றாலே பதவி தேடி அலையும் மார்க்கம் என்று விமர்சிக் கப்படும் அளவுக்கு அதன் தன்மை சீர்கெட்டுக் குட்டிச் சுவராகி விட்டது!
இந்த நேரத்தில் நீதிக் கட்சியின் தலைவர் பிட்டி தியாகராயரையும், சமூகப் புரட்சித்  தலைவர்  தந்தை பெரியாரையும் ஒரே ஒரு கணம் நினைத்துப் பார்க் கட்டும்!

1920, 1923 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சென்னை மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்ற நிலையில் நீதிக்கட்சியின் தலைவராக விளங்கிய பிட்டி தியாகராயரை ஆட் சிப் பொறுப்பேற்க கவர் னர் அழைப்பு விடுத்த போது, தான் அந்தப் பத வியை ஏற்காமல் கட்சியில் உள்ள, தம் நண்பர்களுக்கு வழி விட்டார்.

அதே போல நீதிக் கட்சியின் தலைவராகவி ருந்த தந்தை பெரியார் அவர்களுக்கு முதல் அமைச்சர் (றிக்ஷீமீனீவீமீக்ஷீ) பொறுப்பை ஏற்க இரு முறை அழைப்பு விடுக்கப் பட்டும், அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
பதவிதான் அரசியல் என்ற எண்ணம் தவறு என்பதை நம் தலைவர்கள் வழிகாட்டிடவில்லையா? பிட்டி  தியாகராயர் பிறந்த நாளில் இந்த உரத்த சிந்தனை தேவை.

நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் இந்து அற நிலை யத்துறை என்ற ஒன்று உருவாக்கப்பட்டு, அதன் கட்டுப்பாட்டின்கீழ் அனைத்து இந்துக் கோவில்களையும் கொண்டு வர வழிகோலப் பட்டது - காரணம் கோவில்கள் எல்லாம் குறிப்பிட்ட ஜாதிக்காரர் களின் கொள்ளைக் கூடா ரமாகவே இருந்ததுதான்!

இந்தச் சட்டம் கொண்டு வராமல் தடுக்கப்பட வேண்டும் என்று பார்ப்பனர்கள் பெரும் கூச்சல் போட்டனர்.

அப்பொழுது திருப்பதி கோயிலை நிர்வகித்து வந்த ஒரு மடம் இருந்தது; அதன் பெயர் மகந்து என்பதாகும். அம்மடத்தின் தலைவர் மகந்து என்றே அழைக்கப்பட்டார்.

அவர் நீதிக் கட்சித் தலைவர் பிட்டி தியாக ராயரைச் சந்தித்து, இந்து அறநிலையத்துறை சட் டத்தைக்கொண்டு வரா மல் இருந்தால் பெருந் தொகையை அளிப்ப தாகப் பேரம் பேசினார்.

உடை மட்டும் வெள்ளையல்ல - உள்ளமும் வெள்ளையானதாயிற்றே! அந்த மகந்துவைக் கண் டித்ததோடு மட்டுமல்லாமல், வீட்டை விட்டு செல்லு மாறு எச்சரித்து வெளியே அனுப்பினார் தியாகராயர். (வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் வாழ்வும் பணியும் - முனைவர் பி.  சரசு. பக்கம் 53) அந்தப் பெருமகனாரின் பிறந்த நாளில் இந்த உன்னதப் பண்பாட்டை உயர்த்திப் பிடிப்போம்!    -

----------------- மயிலாடன் அவர்கள் “விடுதலை” 27-04- 2014 இல் எழுதிய கட்டுரை

25 comments:

தமிழ் ஓவியா said...


குறுஞ் செய்திகள்


தமிழ்நாட்டில் ஆண் களைவிட பெண்களே அதிகமாக வாக்களித் துள்ளனர். ஆண்கள் சதவிகிதம் 73.49, பெண் கள் சதவிகிதம் 73.85.

தமிழ்நாட்டில் 1967 தேர்தலுக்கு அடுத்து 2014இல் நடைபெற்ற தேர்தலில் தான் வாக்குப் பதிவு அதிகம். 1967- 76.09 2014இல் 73.67 சதவிகிதம்.

சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஆறுமுக சாமி அவர்கள் இன்று ஓய்வு பெறுவதால் நீதி பதிகளின் எண்ணிக்கை - 44 ஆகக் குறைந்தது (மொத்த நீதிபதிகள் 60).

மே 16ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்கு எண் ணிக்கை நடைபெறும். முதல் சுற்று முடிவு காலை 9 மணிக்கே தெரிய வரும்.

ஆரோக்கியம் என் பது மனித உரிமை; அந்த வுரிமையைப் பாதுகாப் பதில் இந்திய அறிவுசார் சொத்துரிமைச் சட்டங்கள் முக்கிய பங்காற்றுகின்றன என்று நீதிபதி கே.என். பாஷா குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஆசிரியர் இடம் மாறுதல் கலந்தாய்வு மே இறுதியில் நடைபெறும்.

காஞ்சீபுரம் மாவட் டத்தில் செங்கற்பட்டு, திருப்போரூர், திருக்கழுக் குன்றம், மதுராந்தகம், செய்யூர் பகுதிகளில் காடுகளில் உள்ள வன விலங்குகள் வறட்சியின் காரணமாகத் தண்ணீர் குடிக்க காடுகளைவிட்டு மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு வருவதைத் தடுக்க 20 தண்ணீர்த் தொட்டிகளைத்திறக்க வனத்துறை ஏற்பாடு செய்கிறது.

தமிழ்நாட்டில் அதிக பட்சமாக சனியன்று வெப்பநிலை - திருச்சியில் 107.24 டிகிரி.

பி.ஜே.பி. நயவஞ்சக மதவாதக் கட்சி. அதனைப் புறக்கணிப்பீர்! -அகிலேஷ்யாதவ் உ.பி. முதல் அமைச்சர்.

காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முகுந்த்வரதராசன் பலியா னார் என்பது சோகச் செய்தியாகும்.

இரயில் வழித்தடங் களில் அதிக தொலைவு மின்மயமாக்கும் பணியில் சென்னை இரயில்வே மின்மயமாக்கல் திட்ட அலுவலகத்திற்கு சிறந்த விருது அளிக்கப்படுகிறது.

போதுமான பராம ரிப்பு இன்றி நாய் ஒன்று இறந்ததால் சிங்கப்பூர் நீதிமன்றம் நாயின் உரிமை யாளருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

ஆளில்லா விமானம் மூலம் ஆயிரம் ஆண்டு பழமையான கிராமத் தினை அமெரிக்கா கண்டு பிடித்துள்ளது.

புரியுதா?

அஇஅதிமுக பொதுச் செயலாளரும், முதல் அமைச் சருமான செல்வி ஜெ. ஜெய லலிதா தேர்தல் பிரச்சாரத் தின் கடைசி நாளான ஏப்ரல் 22ஆம் தேதியன்று பிரச் சாரம் செய்யாமல் முதல் நாளே முடித்துக் கொண்ட தற்குக் காரணம் 22ஆம் தேதி அஷ்டமி திதியாம்! வாழ்க அண்ணா நாமம்!

Read more: http://viduthalai.in/e-paper/79384.html#ixzz308JeRrHD

தமிழ் ஓவியா said...


ஜோதிடம் பார்க்க வந்த இடத்தில் பெண்ணுக்கு முத்தம் கொடுத்த சாமி யார்?


ஜோதிடம் பார்க்க வந்த இடத்தில்
பெண்ணுக்கு முத்தம் கொடுத்த சாமி யார்?

பெங்களூர், ஏப்.27-பெங்களூரில் பிரபல சாமியா ராக வலம் வரும் தேவிசிறீ குருஜி என்பவர் பெண் பக்தர் களிடம் நெருக்கமாக இருந்த கேமரா காட்சிகள் தனியார் தொலைக்காட்சியில் வெளி யானதால் பரபரப்பு ஏற்பட் டுள்ளது.

பெங்களூர் எச்.எஸ். ஆர்.லே அவுட் பகுதியில் திவ்யாசிறீ ஜோதிட ஆலயம் என்ற பெயரில் மடம் நடத்தி வருபவர் ராமசாமி தேவிசிறீ குருஜி, பலரின் ஜாதகங்களை கணித்து கொடுத்து பல அரசியல் தலைவர்களுடனும் நெருக்கமாகி பிரபலமானார். இவரைத் தேடி குடும்ப பிரச்சினை, திருமண தடை, குழந்தையின்மைக்குத் தீர்வு, வியாபார வளர்ச்சி உள்பட பல குறைகளுக்குத் தீர்வு தேடி மக்கள் கூட்டம் அலைமோதியதாம். குறிப்பாக, பெண்கள் இவர் மீது அதிக நம்பிக்கை வைத்து ஜோதிடம் பார்த்துச் செல்வார்களாம்!

தற்போது இவர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. தன்னை தேடி வந்த பெண் பக்தையை கட்டி அணைத்து முத்தம் கொடுக்கும் காட்சி தனியார் தொலைக்காட்சியில் வெளியானது. குடும்ப பிரச் சினைக்காக ஜோதிடம் பார்க்க வந்த பெண் ஒருவ ருக்கு தனது அலுவலகத்தில் வேலை போட்டு கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் உறவு கொண்டதாகவும், அவர் கர்ப்பம் அடைந்தபின் மூலிகை மருந்து கொடுத்து கர்ப்பத்தை கலைத்தாக வும் புகார் வந்துள்ளது. இந்த காட்சிகளும் கேமராவில் பதிவாகியுள்ளது. தனியார் தொலைக்காட்சியில் இக்காட்சிகள் ஒளிபரப்பானதால் பெங்களூரில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள், பொதுமக்கள் சுவாமியின் திவ்யாசிறீ ஜோதிட ஆலயத்தை நேற்று சூறையாடினர். அலுவலக கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். அவரது படத்தைக் கிழித்தனர். கன்னட அமைப்பினர் அங்கு கூடி அவரது வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. தேவிசிறீ மீது எழுந்துள்ள புகார் தொடர் பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more: http://viduthalai.in/page-2/79368.html#ixzz308Js3Bje

தமிழ் ஓவியா said...

தோல்வி பயத்தால் 2 தொகுதிகளில் போட்டியிடும் மோடி
மம்தா காட்டம்

கொல்கத்தா, ஏப்.27-திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்காள முதல் அமைச்சருமான மம்தா பானர்ஜி வங்காள மொழி செய்தி சேன லுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

பெரும்பான்மையான அரசியல்வாதிகளிடையே வெளிப்படையான தன்மை இல்லை. மக்களின் நம்பகத்துக்கு உகந்தவர்களாகவும் அவர்கள் இருப்பதில்லை. குஜராத்தில் ஒரு தொகுதியிலும், உத்தரப்பிரதேசத்தில் ஒரு இடத்திலும் மோடி ஏன் போட்டியிட வேண்டும்?

இதில் இருந்து வெற்றி மீது அவருக்கு நம்பிக்கை இல்லை என்பது தெரிகிறது. அவர் இரண்டு இடத்தில் வெற்றி பெற்றாலும், ஒரு இடத்தில் ராஜினாமா செய்ய வேண்டும். இதன் மூலம் தன்னை வாக்களித்து தேர்வு செய்த மக்களுக்கு அவர் நீதி செய்யப்போவதில்லை என்பது தெளிவாகிறது.

அப்படி இருக்கையில், வெளிப்படைத் தன்மை யும், நம்பகத் தன்மையும் எங்கே இருக்கிறது? மோடி பெருமை அடித்த குஜராத் மாடலை நாடு முழுவதும் உருவாக்கிவிட முடியாது. அந்த வகையில் மேற்கு வங்காளம் மாநிலம் எவ்வளவோ நன்றாக உள்ளது.

பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம், கர்ப்பிணிகள் இறப்பு விகிதம் மற்றும் மனித வளர்ச்சி அளவுகோலின்படி, மேற்கு வங்காளத்தை விட குஜ ராத் இன்னும் பின்தங்கியே இருக்கிறது. கலவரத்தின் முகமோ, கலவரக்காரர்களின் கட்சியோ அதிகாரத் துக்கு வருவதை இந்த நாட்டு மக்கள் விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Read more: http://viduthalai.in/page-2/79368.html#ixzz308K3967A

தமிழ் ஓவியா said...


மேற்குவங்கத்தைவிட குஜராத் பின்தங்கியே இருக்கிறது


புதுடில்லி, ஏப். 27- சமீபத்தில் வெளியாகியுள்ள தேசிய மாதிரி சர்வேயின் ஆய்வறிக்கையின்படி தொழில்உற்பத்தி சார்ந்த தொழிற்சாலைகளில் (manufacturing sector) புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அனைத்து மாநிலங்களையும்விட மேற்கு வங்கமே முதலாவதாக உள்ளது என்பதும், இதில்குஜராத் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது என்பதும் தெரிய வந்திருக்கிறது. மேற்படி தேசிய மாதிரி சர்வேயின்படி தெரியவரும் உண்மைகள் வருமாறு:

2004ஆம் ஆண்டுக்கும் 2011ஆம் ஆண்டுக்கும் இடையிலான ஆறு ஆண்டுகளில் உற்பத்தித்துறை சார்ந்த தொழிற்சாலைகளில் (manufacturing sector)நாட்டில் உருவாக்கப்பட்ட புதிய வேலைவாய்ப்புகளில் 40 சதவீதம் மேற்குவங்கத்தில் முந்தைய இடது முன்னணிஆட்சி புரிந்த சமயத்தில் மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கின்றன.

ஒட்டுமொத்தத்தில் நாடுமுழுவதும் 58.7 லட்சம் வேலைவாய்ப்புகள் உற்பத்தித்துறை சார்ந்த தொழிற் சாலைகளில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதில், 24 லட்சம் வேலைவாய்ப்புகள் மேற்குவங்கத்தில் மட்டும் உருவாக்கப்பட்டவையாகும். பாஜக ஆளும் குஜராத்தில் இதே கால கட்டத்தில் உருவாக்கப்பட்டது 14.9 லட்சம் வேலைவாய்ப்புகள்தான். மேற்குவங்கத்தில் சிங்கூரில் டாட்டாவின் நானோ தொழிற்சாலை அமைக்கப்படுவதைப் பலவிதங்களிலும் முயற்சிகள் மேற்கொண்டுதடுத்து நிறுத்திய பின்னரும்கூட தொழில் வளர்ச்சியில் மேற்குவங்க இடது முன்னணிஅரசு சாதனை படைத்திருப்பதையே தேசிய மாதிரி சர்வேயின் ஆய்வுகள் புலப்படுத்துகின்றன என்பது மிகவும் குறிப் பிடத்தக்கது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாவோயிஸ்ட்டுகளுடன் சேர்ந்துகொண்டு 2007-2008இல்கட்டவிழ்த்துவிட்ட, தொழில்வளர்ச்சிக்கு எதிரான துஷ்பிரச்சாரத்தையும் மீறி, மேற்கு வங்கஇடது முன்னணி அரசு 12 சதவீதம் தொழில் வளர்ச்சியை அடைந்திருந்தது என்று அப்போது மேற்கு வங்க மாநில நிதி அமைச்சராக இருந்த அசிம் தாஸ் குப்தா கூறுகிறார்.சமீபத்தியத் தேர்தல் பிரச்சாரத்தின்போது குஜராத்தில் உற்பத்தித்துறையில், வேலை வாய்ப்புகளில் நாங்கள் சாதனை படைத்திருக்கிறோம் என்றும் குஜராத் மாடல் என்றும் நரேந்திரமோடி சரடு விட்டுக் கொண்டி ருக்கக்கூடிய நிலையில், தேசியமாதிரி சர்வே இந்த ஆய் வறிக்கையை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், ஆட்சியிலிருந்த கடைசி ஆண்டான 2010-2011ஆம் ஆண்டில் கூட சுமார் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருந்தோம் என்று அசிம் தாஸ் குப்தா கூறினார். 2006ஆம் ஆண்டு தேர்தலில் இடது முன்னணிக்குக் கிடைத்த வெற்றி, முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் தொழில்மய முன்னேற்றத்திற்குக் கிடைத்த வெற்றி என்றுவிரிவான முறையில் மக்களால் அறியப்பட்டது, என்றுஇடதுமுன்னணி தலைவர்களில் ஒருவர் கூறினார். சிறிய அளவிலான உற்பத்திப் பிரிவுகள் அதிக அளவில் இருப்பது மேற்கு வங்கத்தில்தான் என்றும் அசிம் தாஸ் குப்தா கூறினார். 1991-க்கும் 2011-க்கும் இடையேயான ஆண்டுகளில், தோழர் ஜோதிபாசு தலைமையின்கீழ் நாங்கள் எங்கள் தொழில் கொள்கையைத் திருத்தி அமைத்தபோது, புதிதாக 2,531 பெரிய மற்றும் நடுத்தர உற்பத்திப்பிரிவுகளை அமைத்தோம் என்றும் அசிம்தாஸ் குப்தா கூறினார்.

1960-களுக்குப் பின்னர், மேற்கு வங்க மாநிலத்தில் தொழில் மயம் மிகவும் சிறப்பாக இருந்தது 2004-2011ஆம்ஆண்டுகளில்தான் என்றும்,சிங்கூரில் திரிணாமுல் காங்கிரசும் மாவோயிஸ்ட்டுகளும் பிரச்சினைகளை உருவாக்குவதற்கு முன்னர் அக்கால கட்டத்தில் 1,872 நடுத்தர மற்றும் பெரிய தொழிற்சாலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார். நன்றி: தீக்கதிர் (26.4.2014)

Read more: http://viduthalai.in/page-3/79360.html#ixzz308KGO6ID

தமிழ் ஓவியா said...

சென்னை புத்தகச் சங்கமத்தில் புத்தகர் விருது பெற்றவர்களின் தன்நிலை விளக்க குறிப்பு


பழங்காசு ப.சீனுவாசன்

இவருக்கு இந்த பெயர் அடைமொழியாய் வந்ததற்கு அது மட்டும் காரணமில்லை அவர் நடத்திய காலாண்டு இதழின் பெயர்தான் பழங்காசு.

63 வயதான பழங்காசு.சீனி வாசன் அவர்கள் கும்பகோணம் திருவிடை மருதூரைச் சேர்ந் தவர். திருச்சி பெல் நிறுவனத் தில் முதுநிலைக்கூடுதல் பொறி யாளராக இருந்து 2010-ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றவர். ஊதியம் தரும் பணியிலிருந்து ஓய்வு பெற்றாரே தவிர, புத்தகத்தேடல் பணியில் மேலும் உற்சாகமாய் ஈடுபட்டு வருகிறார். இவருடைய பாரதி ஆய்வு நூலகத்தில், ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகம். காந்தியாரின் ஆங்கில நூல்கள் நூறு தொகுதிகள், தமிழ் தொகுதிகள் பதினேழு, புரட்சியாளர் லெனின் பற்றிய 47 தொகுதிகள், பொதுவுடமை சிற்பி காரல் மார்க்ஸ் நூல் 37 தொகுதிகள், இந்திய அரசியலைப்பு சட்டத்தந்தை டாக்டர் அம்பேத்கரின் 37 தொகுதிகள், புலவர் குழந்தையின் 17 தொகுதிகள், இராமலிங்க அடிகளார் திருவருட்பா பத்து தொகுதிகள், பாரதியாரின் பன்னிரெண்டு தொகுதிகள், ஜெயகாந்தனின் 12 தொகுதிகள், அயோத்திதாசப்பண்டிதரின் இரண்டு தொகுதிகள்,

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் களஞ்சியம் இன்றுவரை உள்ள அனைத்து தொகுதிகளும், இவரது நூலகத்தை அலங்கரித்து ஆய்வு செய்யும் மாணவர்களுக்கு ஆயுதங்களாய் விளங்குகின்றன. தமிழ், சமஸ்கிருதம், அய்ரீஷ், ஜெர்மன், மராட்டி என அத்தனை மொழிகளின் அகராதிகளும் இவரது நூலகத்தில் உள்ளன, விவிலியம் தொடர்பான அத்தனை தொகுப்புகளும் இவரிடம் உள்ளன.

சீதையின் கணவன் ராமன் என்கிற ராமாயணத்தில் இருந்து ராவணனின் மகள் சீதை என்ற இராமாயணம் வரை கற்பனையில் புனையப்பட்ட பர்மிய இராமாயணம், தாய்லாந்து இராமாயணம், ஜைன இராமாயணம் உள்ளிட்ட இராமாயணங்கள் இவரிடம் உள்ளன..

மேலும் இயற்கை, சித்த ஆயுர்வேத, யுனானி மற்றும் நவீன மருத்துவம் குறித்த அனைத்து நூலகளும் நூற்றாண் டிற்கும் பழமையான நூற்றுக்கணக்கான நூல்களை வைத் திருக்கின்றார். இவரிடமிருந்து இம் மாதிரியான வாங்கிக் கொண்டு போய் புதிய பதிப்புகளைக் கண்ட நூல்களும் உண்டு.

தற்போது தமிழ்ச்சொற்கள் உருவாக்கியவிதம் சீர்திருத்தம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வரும் இவர் சுடுமண் ஏடாக நம்முடைய முன்னோர்கள் பிராமி எழுத்துக்களை வடித்த விதத்தையும் பத்திரமாக பாதுகாத்து வைத்திருக் கிறார். பழங்கால நாணயங்களை சேகரிப்பதில் ஆர்வமுடைய இவர் இராஜ இராஜ சோழன் காலத்தைச் சேர்ந்த தங்க நாணயம் சேர, சோழ, பாண்டியர் காலத்தைச் சேர்ந்த பழமையான நாணயங்கள் உலகின் மிகப்பெரிய கரன்சியான ருஷ்யாவின் 100 ரூபாய் கரன்சி வரை இவரது நூலகத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறார்.

அக்கால ஓலைச்சுவடியில் இருந்து, இக்கால கணினியுகத் தில் பதிவிறக்கம் செய்த புத்தகங்கள் வரை தருவித்துக் புத்தகம் நுகர்வோருக்கு பயனளிக்கும் பழங்காசு சீனிவாசன் அவர்களின் சாதனைகளை பாராட்டி புத்தகர் விருது இப்புத்தகச் சங்கமத்தில் வழங்கப்பட்டது.

புத்தகத் தாத்தா தோழர் இரா.சண்முகவேல்

தோழர் இரா.சண்முகவேல் அப்படி அல்ல, 73 வயதில் ஒரு நாளைக்கு சுற்றுவட்டாரப் பகுதியில் ஏறத்தாழ 80 கி. மீட் டர் மிதிவண்டியில் கிராமம் கிராமமாக சுற்றி வருகிறார். ஒவ்வொரு கிராமத்திலும் இவர் போய் நிற்கும் போது சிவப்புச்சட்டை தாத்தா வந்து விட்டார் என்று குழந்தைக ளும் பெரியவர்களும் அன்பு டன் வரவேற்பார்கள் எதற்கு தெரியுமா? இவர் கொண்டு வரும் புத்தகங்களை எதிர்பார்த்துத்தான். அந்த அளவிற்கு புத்தங்களோடு பிரிக்கமுடியாத உறவை ஏற்படுத்திக் கொண்டவர். யார் என்ன புத்தகங்கள் கேட்டாலும் அதை எப்படியா வது, எங்கிருந்தாவது வாங்கி போய் அவர்களிடம் சேர்க்கும் போது அவர்கள் முகத்தில் ஏற்படும் மகிழ்ச்சி இருக்கிறதே அதைக் காண்பதில் தான் இவருக்கு மகிழ்ச்சி. இவ்வளவு பெருமை மிக்க அய்யா சண்முகவேல் 1941-ஆம்- ஆண்டு குடும்பத்தில் தலைமகனாக நெல்லை சங்கரன் கோவில் அருகில் உள்ள பெரியசாமிபுரத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். தகப்பனார் பெயர் நீ.ராமசாமி தாயார் பெயர்

தமிழ் ஓவியா said...

சண்முகவடிவு.

இவருடன் உடன் பிறந்தோர் 4 ஆண்கள் 3 பெண்கள் சிறிய வயதில் நன்றாக படித்துக்கொண்டு இருந்தவர், ஆனால் குடும்பச் சூழ்நிலையால் படிப்பைத் தொடர முடியாமல் போய்விட்டது. வாழ்க்கையின் மேம்பாட் டிற்காக விவசாயத்தை வாழ்க்கையில் மேற்கொண்ட இவர், ஒரு கட்டத்தில் விவசாயத்தில் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்ட போது இனி என்ன் செய்வது என்று சிந்தித்த நேரத் தில் தன்னைப் போன்றே புத்தகங்களை நேசிப்பவர்க ளுக்கு புத்தகங்க ளைக் கொண்டு போய்ச்சேர்ப்பதையே தனது தொழிலாக மாற்றிக்கொள்ளலாம் என்று முடிவெடித் தார்.

காலையில் 6.30 மணிக்கு மிதிவண்டியை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள பள்ளிக்கூடங் களுக்குச் செல்வார் அங்குள்ள ஆசிரியர்களும் மாணவர்களும் இவரை எதிர்பார்த்துக் காத்திருப்பர்.வந்தவுடன் தான் கேட்ட புத்தகங்களை வாங்கி வந்திருக்கிறாரா என்று ஒவ்வொருவரும் ஆவலாக தேடுவார்கள்.. அவரவர்கள் தான் கேட்ட புத்தகம் இருப்பதைப் பார்த்தவுடன் அவர்கள் முகத்தில் தெரியும் அந்த மகிழ்ச்சி யைப்பார்த்து இன்னும் ஆர்வமாய் இவர் அடுத்த கிராமத்தில் உள்ள பள்ளியை நோக்கிச்செல்வார். அடுத்தடுத்த கிராமங்களுச் செல்லும்போது அந்த ஊர் மக்களே இவரைபோதும் என்கிற அளவிற்கு உபசரிப்பர். எல்லாம் புத்தகங்கள் செய்யும் வேலை. வெயிலோ மழையோ வியர்க்க விறுவிறுக்க மிதிவண் டியை மிதித்துக்கொண்டு தன்னுடைய புத்தகம் சுமக்கும் பயணத்தை எந்த வித மனச்சோர்வோ, உடல்சோர்வோ இல்லாமல் கிடைத்த இடங்களில் உண்டும், உறங்கியும் இன்று வரை எந்த வித தடையுமில்லாமல் தொடர்கின்றார்.

இவருடைய இளமைக்காலங்களில் பொதுவுடமைக் கொள்கையில் ஏற்பட்ட ஈர்ப்பால், அடிக்கடி மக்கள் நலன் தொடர்பான போராட்டங்களில் ஈடுபட்டு சிறை செல் வதும் வாடிக்கையாகிவிட்டது. அப்போது அணியத் துவங்கிய சிவப்புச்சட்டைதான் இவரது அடையாளமாய் இன்றுவரை தொடர்கிறது.

நெல்லை மாவட்டத்தில் கீழக்கலங்கல் என்னும் ஊரில் இவர் மிகவும் நேசித்த பொது உடைமைவாதி தோழர் ஜீவானந்தம் அவர்கள் பெயரில் ஜீவா படிப்பகம் என்ற ஒன்றை ஏற்படுத்தி 27 ஆண்டுகளாக நடத்திக்கொண்டு வருகின்றார். அந்தப்பகுதியில் உள்ள சிறந்த ஆசிரியர்கள், சிறந்த பள்ளிகள், சிறந்த மாணவர்கள், சிறந்த கட்டுரை, நாவல், கவிதைகளுக்கு ஜீவாவின் பெயரிலேயே விருது வழங்கி மகிழ்வார். துவக்கப்பள்ளியில் இருந்து மேல் நிலைப் பள்ளி வரை அந்த பள்ளிகளுக்குச் சென்று புத்தகக் காட்சி நடத்தி வருகின்றார் . இவருடைய தொண்டறத்தைப் பாராட்டி நாளிதழிகளிலும், வார இதழ்களிலும் செய்திகள் பல வந்துள்ளன.

தமிழ் ஓவியா said...

நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட் டங்களுக்கும் மிதிவண்டியில் பயணம் செய்து இன்றுவரை புத்தகங்களை வழங்கிக்கொண்டு வருகிறார். புத்தகங்களைத்தேடி மற்றவர்களுக்கு உதவும் விதமாக மேற்கொள்ளும் பயணத்தில் இவருடைய குடும்பத்தில் உள்ள அனைவரும் உடன் நிற்கின்றனர். பார்த்து தாத்தா பத்திரமாக போய்ட்டுவாங்க என்று இவரிடம் புத்தகங்கலைப் பெற்றுக்கொண்டவர்கள் நன்றி கலந்த அன்புடன் சொல்வதைக்கேட்டு இன்னும் உற்சாக மாய் இந்த வயதிலும் மிதிவண்டியில் பயணம் செய்து மக்களுக்கு புத்தகங்களை கொடுப்பதே என் வாழ்நாள் பணி என்ற நல்லெண்ணம் கொண்டவர் தாத்தா சிவப்புச் சட்டை. இவ்வளவு சாதனைகளை தன்வசம் கொண்ட சிவப்புச் சட்டை புத்தகத்தாத்தா சண்முகவேல் அவர்க ளுக்கு புத்தகர் விருது புத்தகச் சங்கமத்தில் வழங்கப்பட்டது.
திருச்சி தி.மா.சரவணன்

இன்றைய கணினி யுகத்தில் எல்லோருக்கும் புத்தகங் கள் படிப்பதில் ஆர்வம் இருப்பதில்லை. ஆர்வம் இருப் பவர்களும்கூட படிப்பதோடு நிறுத்திக் கொள்கிறோமே தவிர புத்தகங்களை பாதுகாத்து வைப்பதில்லை, ஆனால், தான் படித்ததோடு நின்று விடாமல் மற்றவர்களுக்கும் பயன்படவேண்டும் என்று நினைத்து நூல்கள், நாளிதழ்கள், மாத இதழ்கள் போன்றவற்றை சேகரித்துப் பாதுகாத்து இன்றுவரை எந்த வித சுணக்கமும் இல்லாமல் செய்து வருபவர்.

திருச்சியைச்சேர்ந்த தி.மா.சரவணன் 10.7.1963 அன்று பிறந்தவர். தன்முயற்சியாக கலை நிலா என்ற பெயரில் பதிப்பகம் மூலமாக பல நூல்களை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார். சுமார் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட இதழ்களின் பிரதிகளைக் கொண்ட கலை நிலா இதழகம் அமைத்துள்ளார். இவர் எழுதிய நூல்கள் 1. வரலாறு காட்டும் சீரிதழ்கள்- 2003, 2. தமிழ் சீரிதழ்கள் நோக்கும் போக்கும் 2006, 3. தமிழில் இதழியல் நூல்கள் நூலடைவு 2006, 4. சிறுவர் இதழ்கள் 2007, 5. குறள் நெறியில் தமிழ் இதழ்கள் 2009, இணைந்து எழுதிய நூல்கள், நடந்தாய் வாழி திருச்சிராப்பள்ளி, புலனாய்வு இதழ்கள், வர இருக்கின்ற நூல்கள் மா.பொ.சி திரைப்பட இதழ்கள். இவருடைய படைப்புகள் எண்ணற்ற தமிழ் இதழ்களில் வந்துள்ளன. இவர் சேகரித்து பாதுகாத்து வைத்திருக்கும் நூல்களின் வரிசையில் ஜனவினோதினி 1883, பாரதியின் சக்கரவர்த்தினி (1905 ஆம் ஆண்டு), சுதந்திரச் சங்கு 1931, காந்தி 1934 தந்தைப்பெரியாரின் குடியரசு, பகுத்தறிவு, விடுதலை அண்ணாவின் திராவிட நாடு, காஞ்சி பாரதிதாசனின் குயில், முல்லை, கலைஞர் கருணாநிதியின் முரசொலி, நம்நாடு கண்ணதாசனின் தென்றல், முல்லை, இராமசாமியின் நாத்திகம், கி.ஆ.பெ. அவர்கள் நடத்திவந்த தமிழர் நாடு. பாலசுந்தரத்தின் தமிழ் அரசு, ம.பொ.சியின் தமிழ் முரசு, தமிழர் குரல் மித்திரன், நவசக்தி, ஜனதா கடிதம் கதிரவன் தமிழ் முரசு (பழையது) இதுமாட்டுமல்லாமல் இலக்கியம் சார்ந்த பல்துறை இதழ்கள் திரைப்படம் சார்ந்த இதழ்கள் தமிழகத்தை தாண்டியும் வேற்றுநாடுகளில் வெளியாகும் தமிழ் இதழ்களும் இவருடைய சேகரிப்பில் அடங்கும். மருத்துவம், விளையாட்டு, சிறுதொழில், கையெழுத்து, இதழ்கள், சினிமா, அறிவியல், வேளாண்மை, கவிதை உட்பட பலவகையான நூல்கள் இவரின் சேகரிப்பில் அடங்கும். பெற்ற விருதுகள்

படைப்பாளர் விருது, தமிழக சாதனையாளர்

சீரிதழ் பணிச்செல்வர் விருது சிற்றிதழ் தொகுப்பு இயக்க விருது பதிப்புச்செம்மல் விருது செந்தமிழ்த்தேனி விருது சிந்தனைப்பேரொளி விருது, குறள் நெறி அண்ணல் விருது, நூலக செம்மல் விருது போன்றவை இவரது நூல்சேகரிப்பு சாதனைகளைப் பாராட்டி வழங்கப்பட்ட விருதுகள் ஆகும்.

வெளிவந்த நேர்காணல்:- நாம், தாழம்பூ, நந்தவனம் மற்றும் பிரபல மாத வார தினசரி செய்த இதழ்கள் பல்வேறு தொலைக்காட்சிகளில் இவருடைய நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வளவு சாதனைகளைக் கொண்ட தி.மா.சரவணனுக்கு புத்தகர் விருது புத்தகச் சங்கமத்தில் வழங்கப்பட்டது.

Read more: http://viduthalai.in/e-paper/79352.html#ixzz308LY6QF1

தமிழ் ஓவியா said...


தாழ்த்தப்பட்டவர்களுக்கு கல்வி வழங்கியது நீதிக்கட்சியே



சுமார் 200 ஆண்டுகளுக்குமுன்பு நமது நாடு ஆங்கில ஆட்சிக்கு உட்பட்டு இருந் தது அப்போது நம் மக்களுக்கு கல்வி வழங்கச் செய்தார்கள் அப்போது பார்ப் பன ஜாதி மேலாதிக்கம் இருந்தது அவர் கள் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஜாதிகளுக்கு ஜென்ம விரோதிகளாகவே இருந்தனர். 1821, 1855, ஆகிய ஆண்டுகளில் கல்வி வழங்க உத்தரவிட்டனர். ஆனால் பல்கலைக் கழக மேலாண்மைக் கழக உறுப்பினர் பதவிகளை விலக இதற்காக எதிர்ப்புத் தெரிவித்தும் தாழ்த்தப்பட்டவர் களுக்கு கல்வி வழங்கக் கூடாது என்று தடுத்து விட்டனர்.

1923ஆம் வருடம் வரை சுமார் 100 ஆண்டுகள் தடுத்துவிட்டார்கள்.

சுமார் 102 ஆண்டுகளுக்கு முன்பு நம் மக்கள் கல்வி பெற மிகவும் தொல்லைப் பட்டார்கள் தங்கும் வசதி உணவு வசதி முறையாகக் கிடைக்கவில்லை. சென்னை யில் டாக்டர் சி. நடேசனார் அவர்கள் நிறைந்த மனதுடன் வெளியூரில் இருந்து வந்து படிக்கும் நம் மாணவர்களுக்கு பெரிதும் முயன்று சென்னை அக்பர் சாயபு தெருவில் பங்களா போன்ற பெரிய வீடு வாடகைக்குப் பிடித்து பல பெரிய மனிதர்கள் நன்கொடை உதவியுடனும் படிக்கும் வசதியை தொடர்ந்து செய்தார்.

10.11.1912இல் சென்னையில் 500 மாணவர்கள் உறுப்பினர்களாகக் கொண்ட திராவிடர் சங்கம் அமைத்தார் டாக்டர் சி. நடேசனார் அவருக்கு உதவியாக டாக்டர் டி.எம். நாயர் சர்.பி. தியாகராயர் போன்ற பல வள்ளல்கள் பெரும் வணிகர்கள் லட்சக்கணக்கில் உதவினார்கள்.

20.11.1916இல் தென் இந்திய நல உரிமைச் சங்கம் தொடங்கினார் சர்.பி. தியாகராயர்.

17.12.1916இல் நீதிக்கட்சி பிராமணரல் லாதார் அறிக்கை வெளியிட்டார். அது பற்றி பல மாநடுகள் நடத்தினார். நாடெங் கும் ஆதரவு பெருகும் சுமார் 4 ஆண்டு களில் நீதிக்கட்சிக்கு ஆதரவு பெருகியது.

17.12.1920இல் நடைபெற்ற மாகாண தேர்தலில் சென்னை நீதிக்கட்சி வெற்றி பெற்றது கடலூர் சுப்பராயர் பெரியார் அவர்களை கவர்னரிடம் பரிந்துரை செய்து பிரதமர் பதவியில் சர்.பி. தியாக ராயர் நியமித்தார்.

12.01.1921 சென்னை சட்டசபை நீதிக் கட்சி மந்திரி சபை கூடியது. இந்தியாவி லேயே முதல் முதல் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கும் சட்டம் நிறை வேறியது.

இடஒதுக்கீடு பதவி உயர்விலும் வழங்க சட்டம் நிறைவேறியது. ஆனால் பார்ப்பனர் சூழ்ச்சியால் 7 ஆண்டுகள் கவர்னரிடம் சொல்லி நிறுத்தி வைக்கப் பட் டது. பின்பு 744 13.9.1928இல் சர் முத் தைய்யா முதலியார் பெரு முயற்சியில் இடஒதுக்கீடு சட்டம் வந்தது. நீதிக்கட்சி ஆட்சியில் அடுத்து வந்த பிரதமர் பனகல் அரசர் பல நல்ல சட்டங்களை மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றினார். அதிலே ஒன்று தாழ்த்தப்பட்டோருக்கு கட்டாயமாக பள்ளியில் சேர்த்து கல்வி வழங்கும் சட்டம் நீதிக்கட்சி ஆட்சியில் மிகவும் பெரு முயற்சியுடன் அரசாணை எண் 376 9.3.1923இல் சுமார் 100 ஆண்டு களுக்குப்பிறகு தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது வரலாற்றில் சிறப்புடையது.

28.7.1929 அன்று சென்னை சட்ட சபையின் டாக்டர் சுப்பராயன் அவர்கள் நீதிக்கட்சி மந்திரி சபையில் கே.வி. சாமி அவர்கள் உறுப்பினர் கேள்வி பள்ளி கள் 1921 முதல் 1928 வரை இந்த அரசு புதிதாகத் தொடங்கிய பள்ளிகள் எத்தனை 19095 என்று கூறப்பட்டுள்ளது. நீதிக்கட்சி ஆட்சியில்லாதிருந்தால் நமக்கு படிப்பேது? அ. இனியன், பத்மநாதன், ஈரோடு

Read more: http://viduthalai.in/page7/79281.html#ixzz30B0Pi0iC

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டில் பிஜேபி கூட்டணியில் பெண் வேட்பாளர் இடம் பெறாதது ஏன்?


கேள்வி: எந்தத் தேர்தலுக்கும் இல்லாத வித்தியாசம் இந்தத் தேர்தலில் என்ன? - கு. வைஜெயந்தி, குன்னூர்

பதில்: (1) அகில இந்திய அளவில் பச்சையான வகையில் மதவெறிப் பேச்சு.
2) மாநில வகையில், ஆளுங் கட்சியால் பகிரங்கமாகவே பணப்பட்டுவாடா வாக்காளர்களுக்கு நடந்தது.

கேள்வி : மின்வெட்டுக்குக் காரணம் சதி என்கிறாரே முதல் அமைச்சர்? - மு.வே. ராசன், கே.கே. நகர் சென்னை

பதில்: சதி என்றால் கண்டுபிடிக்க வேண்டிய கடமை அவருடையதுதானே! சொல்லி பல நாள்கள் ஆகி விட்டதே! இதுவரை கண்டுபிடிக்காதது - ஏன்?

கேள்வி: வளர்ச்சி என்ற பெயரால் இந்துத்துவாவை அரங்கேற்றுவதுதான் பிஜேபியின் திட்டமா? - ம. சுரேஷ்குமார்,

பதில்: ஆமென்! ஆம் என்க!!

கேள்வி: கும்பகர்ணன் சதா தூங்கிக்கொண்டே இருப்பான் என்பதெல்லாம் அறிவுக்குப் பொருந்தக் கூடியதுதானா? - வா. மணிமாறன், வேடந்தாங்கல்

பதில்: தமிழர்களை - திராவிடர்களை இழிவுபடுத்த இப்படியெல்லாம் புராண, இதிகாசப் பாத்திரங்கள் பலவற்றிலும் செய்துள்ளார்கள்!

கேள்வி: வாசகர்களைக் குழப்புகிறேன் என்று சொல்லி திருவாளர் சோ ராமசாமி தலையங்கத்தில் குறிப்பிடுகிறாரே?

பதில்: குழப்பத்தின் மறுபெயர் தான் நண்பர் சோ என்ற ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர்!

கேள்வி: அய்.நா. விசாரணைக்கு ஒத்துழைக்கப் போவதில்லை என்று ராஜபக்சே கூறியுள்ளதுபற்றி... - க. தமிழழகன், திட்டச்சேரி

பதில்: அய்.நா.வின் மூலம் அமெரிக்கா போனற நாடுகள் உலக நாடுகளில் இனப்படுகொலையை எதிர்த்து பொருளாதாரத் தடையை உருவாக்கிட முன் வர வேண்டும்; உலக நாடுகளை அலட்சியப்படுத்தி விட்டு சுண்டைக்காய் இலங்கை, சீனா, பாகிஸ்தானை நம்பியே வாழ்ந்துவிட முடியாது என்பதை உணர்த்த சர்வதேச நாடுகளும் அய்.நா.வும் உலகறியச் செய்ய வேண்டும்!

கேள்வி : தாங்கள் தேர்தல் பரப்புரையில் சொன்ன கி டீம் ஙி டீம் எல்லோர் வாயிலும் புகுந்து புறப்பட்டு வந்தது தங்களுக்குத் தெரியுமா? - அ.கோ. முகிலன், அடையாறு சென்னை-20

பதில்: மிக்க நன்றி; இரண்டும் இரண்டும் நான்கு என்பது யார் கூட்டினாலும் ஒரே விடை தானே! அதுபோலத்தான்!

கேள்வி : மூன்றாவது அணி என்ற ஒன்று இல்லாதபோது மதச்சார்பற்ற தன்மை என்று வருகிறபோது காங்கிரஸ்தானே அகில இந்திய ரீதியில் தலைமை தாங்க முடியும்? - அ. முபாரக், நீடூர்

பதில்: பொறுத்திருந்து பார்ப்போம்!

கேள்வி: பி.ஜே.பி. தலைமையில் தமிழ்நாட்டில் போட்டியிடும் கட்சிகள் பெண்களை வேட்பாளராக நிறுத்தவில்லையே? (சிதம்பரம் தொகுதி ஒரு விபத்து) - சீனு. வளர்மதி, திண்டிவனம்

பதில்: ஆர்.எஸ்.எஸ். தத்துவத்தை அமுலாக்க முனைந்துள்ளது என்பதே உண்மை!

கேள்வி: மின்சாரம், குடிநீர் என்பவை அரசியல் பிரச்சினையாக்கப்படுவது சரியா? - வி. முரளி, சென்னை-40

பதில்: அரசியல் என்பது மக்களின் தேவை அத்தனையையும் உள்ளடக்கியது தானே! இவை இரண்டும் முக்கிய வாழ்வாதாரம் அல்லவா?

Read more: http://viduthalai.in/page8/79283.html#ixzz30B0flqFH

தமிழ் ஓவியா said...


உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் மொழிபெயர்ப்பு


கீழ் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சட்ட மாணவர்கள் வசதிக்காக, உச்சநீதிமன்றத் தின் முக்கிய தீர்ப்பு விவரங்கள், பொது மக்கள், மாண வர்கள் படிப்பதற்கு வசதிக் காக, தமிழில் மொழி பெயர்த்து வெளியிட, அம்பேத்கர் சட்ட பல்கலை. முடி வெடுத்துள்ளது.

புதிய தீர்ப்புகள்: சென்னையில் செயல்பட்டு வரும், அம்பேத்கர் சட்ட பல்கலை.யின் கீழ், தமிழகம் முழுவ தும், ஏழு, அரசு சட்ட கல்லூரிகள் உள்ளன. உச்ச நீதிமன்றம், தினசரி புதிய தீர்ப்புகளை வழங்கி வருகிறது. அவற்றை, சட்டக் கல்லூரி மாணவர்கள் முதல், கீழ் நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகள் என, அனைத்துத் தரப்பினரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. நீதிமன்றங்களில், காணொலி காட்சி வசதி வந் துள்ள நிலையில், கல்லூரி களிலும், பல வசதிகளை ஏற்படுத்த, சட்ட பல்கலை. நிர்வாகம் முடிவெடுத்துள் ளது.

இதுகுறித்து, அம்பேத்கர் சட்ட பல்கலை. துணைவேந்தர் வணங்காமுடி கூறிய தாவது: தமிழகம் முழுவ தும், 10 ஆயிரம் மாணவர்கள், சட்டக் கல்லூரி, சட்ட பல்கலை.யில் இளங்கலை, முது கலை, முனைவர் படிப்புகளில் சேர்ந் துள்ளனர். குறிப்பாக, பி.காம்., - பி.எல்., படிப்பிற்கு வரவேற்பு உள்ளது. பல்கலை. யில் படிக்கும் முதுகலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்களுக்கு, அவ்வப் போது, உச்சநீதிமன்றம் மற்றும் பிற நீதிமன்றங்களின் நீதிபதிகள், சிறப்பு வகுப்பு எடுக்கின்றனர்.

இதை, சட்டக் கல்லூரி மாணவர்களும் பார்க்க, காணொலி காட்சி வசதி செய்யப் பட உள்ளது. இது தவிர, இணைய தள, டிவி வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது.

நாட்டிலேயே, முதல் முறையாக, தமிழகத்தில், இவ்வசதி ஏற்படுத்தப்படு கிறது.திருச்சி, சிறீரங்கத்தில் உள்ள, தமிழ்நாடு சட்ட பள்ளியுடன் இணைந்து, தமிழகத்தில், சட்ட கல்வியின் தரம் உயர்த் தப்படும். சட் டம் படிக்கும் மாணவர்கள், யு.ஜி.சி., - நெட் - சிவில் நீதிபதி தேர்வுகளில் பங்கேற்க, சிறப்பு பயிற்சி அளிக்கப் படும். பொதுமக்களுக்காக, முக்கியமான, 20 சட்டப் பிரிவுகள், ஆங்கிலத்தில் இருப் பதை, தமிழில் மொழி பெயர்த்து, பல் கலை. இணையதளத்தில் வெளியிடப் படும். சட்டம் படிக்கும் மாணவர்களுக் காக, 27 மிக முக்கிய சட்ட நூல்கள், தமிழில் மொழிபெயர்க்கப் படுகின்றன.

கீழ் நீதிமன்ற நீதிபதி களுக்கு, உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்பு களின் ஆங்கில வரையறைகள், தமிழில் மொழிபெயர்க்கப் படுகின்றன. முதல் கட்டமாக, 2,000 ஆம் ஆண்டுக்கு பின் அளிக் கப்பட்ட, 30 ஆயிரம் தீர்ப்பு களில், 2,100 தீர்ப்புகளின் வரையறைகள், ஆங் கிலத்திலிருந்து, தமிழில் மொழி பெயர்க் கப்படுகின்றன. மீதமுள்ளவை, மூன்றாண் டுகளுக்குள், தமிழில் மொழி பெயர்க்கப் படும். இவ்வாறு அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/page8/79284.html#ixzz30B12smfF

தமிழ் ஓவியா said...


கட்டப்பட்டிருக்கின்றன



உலகில் உள்ள மதங்கள் எல்லாம், குருட்டு நம்பிக்கை என்ற பூமியின்மீதே கட்டப்பட்டிருக்கின்றன.
_ (விடுதலை, 12.10.1962)

Read more: http://viduthalai.in/page-2/79423.html#ixzz30EPlm9E5

தமிழ் ஓவியா said...


எப்படி சிரிப்பது?


நான் சொல்லலையா சார்? 144 தடை உத்தரவு, ஷாப்பிங் மால்கள், சினிமா தியேட்டர்கள் அடைப்பு...ன்னு அதிரடி நடவடிக்கைகள் எடுத்ததன் மூலமா, தேர்தல் கமிஷன் மீது மக் களுக்கு ரொம்பவே மதிப்பு அதிகமாயி டுச்சுதுன்னு...! - கருத்துக் கார்ட்டூன் - (தினமணி 27.4.2014).

தேர்தல் ஆணையம் மீது வாக்கா ளர்களுக்குக் கோபம் - இல.கணேசன், பாஜக ( தினமணி 25.4.2014).

வாக்காளர்களுக்குப் பணம் பட்டு வாடா செய்ததை கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை கள் வேதனை அளிக்கிறது - பொன். ராதாகிருஷ்ணன், பாஜக தலைவர் (தினமணி 25.4.2014).

தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வருவதை தடுக்க தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாகச் செயல்படுகிறது - தேமுதிக தலைவர் விஜயகாந்த் (தின மணி 20.4.2014).

தமிழகத்தில் பிறப்பிக்கப்பட் டுள்ள 144 தடை உத்தரவை உடன டியாக திரும்ப பெற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக் கப்பட்டுள்ளது. (புதிய தலைமுறை செய்தி 22.4.2014).

ஜனநாயகத்தைப் பணநாயகம் ஆக்கலாமா? நீதியை நிலை நிறுத்தும் தேர்தல் ஆணையம் கண்டும் காணா மல் இருக்கலாமா? என்று வினா எழுப் பினார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி (விடுதலை - 23.4.2014).

ஆளுங்கட்சிக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது - திமுக தலைவர் மு.கருணாநிதி (தினமணி 23.4.2014).

மக்களவைத் தேர்தல் அமைதியாகவும், நியாயமாகவும் நடைபெறு வதற்கு அரசியல் கட்சி களும், பொது மக்களும், தேர்தல் ஆணையத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - முதல்வர் ஜெயலலிதா (தினமணி 25.4.2014)

ஜெயலலிதாவைத் தவிர யாரும் தேர்தல் ஆணையத்தின் செயல் பாடுகளை பாராட்டி பேசவில்லை; தமிழகத்தின் ஆளுங்கட்சி தவிர்த்து, அனைத்து கட்சிகளும், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் ஆளுங் கட்சிக்கு சாதகமாக இருப்பதாக குற்றம் சாட்டின. இதையெல்லாம் மறைத்து விட்டு, தேர்தல் ஆணையத்திற்கு, மக் கள் சபாஷ் சொல்கின்றனர் என்கிறார், தினமணி வைத்திய நாத அய்யர். சூதாட் டத்தில் தனது மனைவியை பந்தயம் கட்டிய அயோக்கியன் பெயர் தருமன்;

தேர்தல் ஆணையத்தின் ஒருதலை பட்ச நடவடிக்கையைப் பாராட்டும் தினமணிக்கு நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் என்ற குறிக்கோளாம்.

எப்படி சிரிப்பது?

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page-2/79430.html#ixzz30EPtYwsc

தமிழ் ஓவியா said...

பிட்டி தியாகராயர்

ஏப்.27 பிட்டி தியாகராயர் அவர்களின் பிறந்த நாள் (1852). செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தவர். அந்தக் காலத்திலேயே பி.ஏ.படித்தவர். 1882 முதல் 1923 வரை நாற்பத்தொன்றரை ஆண்டுகள் சென்னை மாநகராட்சி உறுப்பினராக இருந்து சாதனை புரிந்தார். சென்னை மாநகரத்துக்கு அவர் ஆற்றிய அருந்தொண்டு பொன்னெழுத்துக்களால் பொறிக்கத் தக்கவையாகும். துவக்கத்தில் காங்கிரஸ்காரராக இருந்த அவர். பார்ப்பன ஆதிக்கத்தின் கொட்டத்தைச் சகிக்க முடியாத நிலையில் பார்ப்பனர் அல்லாதாருக்கு ஓர் அமைப்புத் தேவை என்று உறுதியான முடிவுக்கு வந்தார். டாக்டர் சி.நடேசனாரும், டாக்டர் டி.எம்.நாயரும் இதற்கு இரு கை நீட்டினார்கள். அதன் தொடக்கம் தான் 1916 டிசம்பர் 20-இல் அவர் வெளியிட்ட பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கையாகும். பார்ப்பனர் அல்லாதார் மத்தியிலே எழுச்சியையும், உரிமை உணர்வையும் தட்டி எழுப்பிட ஜஸ்டிஸ் என்ற ஆங்கில இதழும், திராவிடன் என்ற தமிழ் இதழும், ஆந்திர பிரகாசிகா என்னும் தெலுங்கு இதழும் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டன.

1920-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இரட்டை ஆட்சி முறையில் மொத்தம் உள்ள 65 பொதுத் தொகுதிகளில் 28 இடங்கள் பார்ப்பனரல்லாதா ருக்குப் போராடிப் பெறப்பட்டன. முதல் பொதுத்தேர்தலிலேயே நீதிக்கட்சி வெற்றி பெற்றது. இரண்டாவது முறையும் அக்கட்சியே வெற்றி பெற்றது. இரு முறையும் கேட்டுக்கொள்ளப்பட்டும், பிட்டி தியாகராயர் முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது அவர் எவ்வளவு பதவி ஆசையைத் துறந்த மாமனிதர் என்பதற்கான எடுத்துக்காட்டாகும். அதேநேரத்தில் வெளியில் இருந்து நீதிக்கட்சி ஆட்சியை வெகு சிறப்பாக வழி நடத்தினார் என்பது தான் முக்கியமாகும். வெள்ளை உடை உடுத்தியதால் மட்டும் அவர் வெள்ளுடை வேந்தர் அல்லர். உயர்ந்த உள்ளமும், ஒழுக்கமுள்ள அவரின் கண்ணிய மான பொதுவாழ்வும் கூடத்தான் அது காரணப் பெயராக அமைந்து விட்டதோ!

- விடுதலை 27.4.2003

Read more: http://viduthalai.in/page-2/79425.html#ixzz30EQVUgTm

தமிழ் ஓவியா said...



கல்கிகளின் வக்காலத்து!

கேள்வி: மோடியைச் செங்கோட்டைக்கு அனுப் பினால் பெற்ற சுதந்திரம் வீணாகி விடும் என்கிறாரே தா. பாண்டியன்?

பதில்: சுதந்திரம் பறி போய் விடும் என்பதெல்லாம் தேவையற்ற பயம். இந்திய மக்களிடையே இன்று ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்வும் அரசியல் தெளிவும் அபரிதமானது. அவ்வளவு சீக்கிரத்தில் நம் சுதந்திர வேட்கையும், உணர்வும் மழுங்கி விடாது. பா.ஜ.க.வே ஆட்சிக்கு வந்தாலும் எந்தவிதமான அதீத நடவடிக்கையும் எடுத்து விட முடியாது. அதற்கு அரசியல் சாசனம் இடம் தராது; மக்களும் அனுமதிக்க மாட்டார்கள். தேர்தல் ஆதாயத்துக்காகச் சொல்லப்படும் இதுபோன்ற அச்சுறுத்தல்களில் அர்த்தமில்லை. குழந்தைகளுக்கு பூச்சாண்டி காட்டி மிரட்டலாம். வாக்காளர்களை அல்ல! - கல்கி. 27.4.2014

பி.ஜே.பி.யைப் பற்றி தெரிந்தவர்களுக்கு தோழர் தா. பாண்டியன் தெரிவித்துள்ள கருத்து சரியானதே என்பது விளங்கும். மோடி முதல் அமைச்சராக இருந்த போது தானே இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறு பான்மை மக்கள் கொல்லப்பட்டார்கள். முதல் அமைச்சர் மோடிக்கு சம்பந்தமேயில்லாது அது நடந்துவிட்டது என்றால், இதை விட மோடியின் நிர்வாகப் பலகீனத்துக்கு வேறு சான்று தேவையேயில்லை!

மக்கள் விழிப்புணர்ச்சி அடைந்து விட்டார்கள் - ஏமாந்துவிட மாட்டார்கள் என்கிறது கல்கி, குஜ்ராத் கலவரத்துக்குப் பிறகு மோடி இருமுறை ஆட்சியைப் பிடித்தது என்பது மக்களின் விழிப்புணர்ச்சியாலா?

பிஜேபியின் உயர் மட்டத் தலைவர்கள் தலைமையில் தானே பாபர் மசூதி இடிக்கப்பட்டது!

கடப்பாறையைக் கொண்டு இடித்தபோது இது சட்ட விரோதம், நியாய விரோதம் என்று அந்தப் பெரும் தலைவர்களுக்குத் தெரியாதா?

சட்டத்துக்கு உட்பட்டு ராமர் கோயில் கட்டுவதாகச் சொல் லுகிறார்களே - இது என்ன கிச்சுக் கிச்சு விளையாட்டா?

கல்கிகளின் கபடம் நமக்குப் புரிகிறது! அனேகமாக ஒவ்வொரு பார்ப்பனரும் (சிறப்புப் புலனாய்வு காவல் துறை அதிகாரி இராகவன் உட்பட) மோடி தலைமையில் இங்கு ஒரு மனுதர்ம ராஜ்ஜியம் வர வேண்டும் என்பதிலே குறியாக இருக்கிறார்கள் என்பதை இன்னொரு முறை கல்கி அறிவித்திருக்கிறது -அவ்வளவுதான்!

Read more: http://viduthalai.in/e-paper/79422.html#ixzz30EQvZ0Eq

தமிழ் ஓவியா said...

சட்டம் ஒழுங்கு?

மயிலாடுதுறையிலிருந்து மைசூருக்கு சேலம் வழியே மைசூர் செல்லும் விரைவு இரயில் வண்டியில் இரவு ஒரு மணி அளவில் (சனியன்று நடைபெற்று இருக்கிற கொள்ளை அதிர்ச்சியையூட்டுகிறது.

பெண்களிடம் இருந்து நகைகளைப் பறித்துச் சென்றுள்ளனர். முன் பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்த பெண்களுக்கே இந்தக் கதியா என்று கேட்கத் தோன்றுகிறது.

ஓர் இரயிலுக்கு இரண்டு காவலர்கள் பாதுகாப்புக்காம்; இது ஏதோ சடங்காச்சாரமாக இருக்கிறதே தவிர, நடை முறையில் பயன் விளைவிக்கக் கூடியதாக இல்லையே!
சாலையில் பயணம் செய்தாலும் சரி, இரயிலில் பயணம் செய்தாலும் சரி பாதுகாப்பு குடி மக்களுக்கு - குறிப்பாகப் பெண்களுக்கு இல்லை - இல்லை என்பதில் இரண்டு கருத்துகளுக்கு இடம் இல்லை!

இதற்கிடையே இன்னொரு செய்தி - சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

இலஞ்சம் வாங்கினால் குண்டு வைப்போம் என்று இராயபுரம், ஆர்.கே. நகர், மயிலாப்பூர், இராயப்பேட்டை காவல் நிலையங்களுக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளதாம்.

இலஞ்சம் உள்ளிட்ட குற்றங்களை ஒழிப்பதற்காக உள்ள காவல்துறைக்கே குண்டு வைப்போம் என்ற மிரட்டல் கடிதம் என்றால் இதில் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? காவல் நிலையங்களில் இலஞ்சம் வாங்கப் படுகிறதா என்ற கேள்வி ஒரு பக்கம் - காவல்துறையையே மிரட்டும் அளவுக்கு நாட்டு நிலைமை மோசமாகி விட்டதா என்பது இன்னொரு பக்கம்! போகிற போக்கை பார்த்தால் தற்காப்பு இல்லா விட்டால் நடமாட முடியாது போலும்!

Read more: http://viduthalai.in/e-paper/79422.html#ixzz30ERCaUW1

தமிழ் ஓவியா said...

கூலி வேலை செய்கிறார் பாரத ரத்னா டெண்டுல்கர் - நம்புங்கள்!

நாட்டில் ஊழல்கள் கலர் கலராக நடக்க ஆரம்பித்து விட்டன. கோவாவில் பிஜேபி ஆட்சிதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் 100 நாள்கள் வேலை வழங்கப்படுகிறது. இதில் வேலை செய்பவர்களுக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.150. உள்ளூர்க் கட்சிக்காரர்கள் இதில் உள் குத்து வேலையில் ஈடுபட்டுகின்றனர். 150 ரூபாயைக் கொடுப்பதில்லை. 150 ரூபாய் கொடுத்ததாக கையொப்பம் வாங்கிக் கொள்கிறார்கள் என்று அவ்வப்போது செய்திகள் வெளி வருவதுண்டு.

ஆனால், பிஜேபி ஆளும் கோவாவில் நடந்துள்ளது கற்பனைக்கும் எட்டாத படுநாசமாக அல்லவா இருக்கிறது.

நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்து நாள் ஒன்றுக்கு ரூ.150 கூலி வாங்கும் தொழிலாளிகள் யார் யார் தெரியுமா?

இந்தி திரைப்பட உலகில் கொடி கட்டி ஆளும் நடிகர் அமிர்தாபச்சன், பாரத ரத்னா விருது பெற்ற கிரிக்கெட்டுக் காரர் சச்சின் டெண்டுல்கர் எம்.பி. டெண்டுல்கரின் மனைவி உள்ளிட்டோராம்.

நாடு எந்த யோக்கியதையில், தராதரத்தில் இருக்கிறது என்பதற்கு இது ஒன்று போதாதா? பிஜேபி ஆட்சியின் இலட்சணத்தையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

Read more: http://viduthalai.in/e-paper/79422.html#ixzz30ERMekOx

தமிழ் ஓவியா said...


கழகத்தின் பல்வேறு அணிகளின் பணிகள் சிறப்பாக நடக்கட்டும்!


தேர்தல் பணிகள் முடிவடைந்து விட்டன; அடுத்து...

பெரியார் உலகம் பணிகள், கழகத்தின்

பல்வேறு அணிகளின் பணிகள் சிறப்பாக நடக்கட்டும்!

உதவாதினி ஒரு தாமதம் உடனே செயல்படுக தோழர்களே! தோழியர்களே!!

தமிழர் தலைவர் அறிக்கை


மதவெறியை மாய்க்க ஜனநாயக முற்போக்கு அணியை ஆதரிப்பீர்! தமிழர் தலைவரின் முக்கிய அறிக்கை

தேர்தலில் நமது கடமையை நிறைவேற்றி யுள்ளோம்; வெற்றி - தோல்விகள் பற்றி கவலை யில்லை; அடுத்து நமது கழகப் பணிகள் வேகமாக நடைபெறட்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நம் கழகக் குடும்பத்தவர்களே, பொறுப்பாளர்களே,

கடந்த ஒரு திங்களுக்கு மேல் தேர்தல் பரப்புரை -பணிகளில் நாம் ஈடுபட்டோம் மும்முரமாக.

காரணம் நமக்கு அரசியல் ஆர்வம் அல்ல; மாறாக நம் கொள்கை, லட்சியங்களுக்கும், எதிர்கால சந்ததியினரின் வாழ்வினை அச்சுறுத்தும் அபாயங்களும் விளைவிக்கக் கூடிய சக்திகள் ஆட்சியைப் பிடித்து விடக் கூடாது; அதன் மூலம் பழைய மனுதர்மமும், பாசீசமும், நாட்டையும், சமுதாயத்தையும் நாசமாக்கி விடக்கூடாது என்ற பொறுப்பணர்வு, கவலை காரணமாகவே.

தேர்தல் முடிந்தது - நமது பணிகள் தொடரட்டும்!

பற்பல நேரங்களில் தேர்தல் சூதாட்டமாகவே நடைபெறுவதால், முடிவுகள் எப்படியிருந்தாலும், வெற்றி வந்தாலும் துள்ளிக் குதிக்கப் போவதில்லை; எப்போதும் வெற்றிக்கு ஆயிரம் தந்தைகள் உண்டு

தோல்விகள் என்றும் அனாதைதான்

என்ற ஆங்கில முதுமொழியை மாற்றுகிறவர்கள் நாம்! தோல்வி வந்தாலும் துவண்டு போய் மூலையில் முடங்கி விடப் போவதில்லை; நமது அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் முன்பு ஒரு முறை எழுதியது போல, தோல்வியைக்கூட, நம் கொள்கை வெற்றிக்குத் திருப்பி விடுவது எப்படி என்ற வித்தையும் விவேகமும் நமக்கு உண்டு. எனவே நமது வழக்கமான பிரச்சாரப்பணி, ஆக்கப்பணி, குறிப்பாக பெரியார் உலகத்திற்கு நன்கொடைகள் திரட்டும் பணி, சமூகநீதிக்கான அடுத்த கட்ட - தனியார் துறையிலும் இடஒதுக்கீடு உட்பட பல் முனைப் பணிகள், ஜாதி - தீண்டாமை ஒழிப்பு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் அய்யாவின் ஆணையை நடைமுறைக்குக் கொணரவிருக்கும் தடைகளை உடைத்தெறியும் பணி, போன்றவைகளை மிகுந்த ஆர்வத்துடன் செய்ய உடனடியாகத் துவக்கி விடுங்கள்.

களப்பணி பயிற்சி முகாம் உள்ளிட்ட பல்வேறு பணிகள்!

மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள், ஒன்றிய நகரப் பொறுப்பாளர்களுக்கான களப்பணி பயிற்சி முகாம்கள், இளைஞர்கள் - மாணவர்களுக்கான பிரச்சாரப் பயிற்சி வகுப்புகள், கிராமப்புறங்களில் தீவிர பிரச்சாரத் திட்டம், இளைஞர் அணி - கழக மகளிர் அணி, திராவிட மகளிர் பாசறைப் பணிகள் இவைகளை மேலும் வேகமாக முடுக்கி, முழு மூச்சுடன் செயல்பட வைத்தல் போன்ற பணிகளுக்கு முன்னுரிமை முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

உதவாதினி ஒரு தாமதம்!

தலைமைச் செயற்குழு பொறுப்பாளர்கள் அனைவரும் ஒருங்கிணைப்பாளர்களாக மேற்பார்வையிட்டு, தலை மைக்கு உடனடியாக அறிக்கை வழங்கிட வேண்டுகிறோம்.

உதவாதினி ஒரு தாமதம் உடனே செயல்படுக தோழர்களே! தோழியர்களே!!


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
28.4.2014

Read more: http://viduthalai.in/e-paper/79421.html#ixzz30ERVdoFs

தமிழ் ஓவியா said...



மன அழுத்தத்தை போக்க சில யோசனைகள்...

இந்த நூற்றாண்டு மனிதர்களிடம் உள்ள மிக முக்கியமான நோய், மன அழுத்தம். ரத்த கொதிப்பு, சர்க்கரை வியாதிக்கு அடுத்த இடத்தை மன அழுத்தம் பிடித்துள்ளது. இயல்பு வாழ்க்கையை பாதிப்பதோடு நிம்மதி இல்லாத சூழ் நிலையையும் பல்வேறு நோய்களையும் தரும் இந்த மன அழுத்த நோயினால் உலகின் 69 சதவீத மக்கள் பாதிப் படைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மன அழுத்தம் இரு வகைகளில் ஏற்படுகிறது. ஒன்று நம்மை சார்ந்த சமூகத்தின் செயல்பாடுகளாலும், மற்றொன்று நமது வாழ்க்கையில் நிகழும் சிந்தனைகள், ஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், வேலைப்பளு, அதிக சிரமத்தை சுமத்தல், குழப்பம், சுற்றுச் சூழல் மாசடைதல், எதிர்மறை சிந்தனைகள் நடைமுறை மாற்றங்கள் போன்றவற்றாலும் ஏற்படுகிறது.

இதுதவிர, பிறப்பு (பெண் குழந்தை, குறைபாடுடைய குழந்தை), இறப்பு, திருமணங்கள், விவாகரத்து, தொழில் பாதிப்பு, எதிலும் போட்டி சூழல், பதவிஇழத்தல், நல்ல பெயருக்கு ஏற்படும் பாதிப்பு, கடன் தொல்லை, தீராத நோய், வறுமை, தேர்வு பயம், போக்குவரத்து நெரிசல், கோபம், உறவு விரிசல், விரும்பத்தகாத மாற்றங்கள் என நம்மைச் சுற்றி நிகழும் எல்லா விதமான காரணிகளும் மனஅழுத்தத்திற்கு நம்மை இட்டுச் செல்கின்றன.

மன அழுத்தத்தை குறைப்பதற்கு அதிகாலையில் சீக்கிரம் எழுந்து ஒவ்வொரு செயலையும் திட்டமிட்டு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை தாமதம் செய்யாமல் முன் கூட்டியே திட்டமிடுவது நல்லது.

கடைசி நேரம் வரை தள்ளிப் போடாமல் சரியான நேரத்தை கடைபிடிக்க வேண்டும். அனைத்துக்குமே மாற்று யோசனை ஏதாவது ஒன்றை கைவசம் வைத்திருப்பது கடைசி நேர நெருக்கடியால் நிகழும் மன அழுத்தத்தை தீர்க்கும். சில தோல்விகள் ஏற்படும்போது, அத்தோடு எல்லாம் முடிந்து விட்டதாக நினைக்காமல் அடுத்த கட்ட முயற்சி மேற்கொள்ளுங்கள். தவறாக நடந்த விஷயத்தை பற்றியே எந்நேரமும் சிந்திக்காமல் நல்ல விஷயங்களை நினைத்து மகிழுங்கள். உடல் மற்றும் உள்ளத்திற்கு போதுமான ஓய்வை அளியுங்கள். எளிமையான வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள். கருத்து ஒற்றுமையுடைய நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுங்கள். நன்றாக அயர்ந்து தூங்குங்கள்.

Read more: http://viduthalai.in/page-7/79395.html#ixzz30ESlgzxr

தமிழ் ஓவியா said...

உடற்பயிற்சி மூலம்
எடையை குறைக்க முடியுமா?




எடையைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். ஏற்கெனவே மூட்டுவலி இருப்பதால் நடைப் பயிற்சி செல்வதும், உடற்பயிற்சி கூடத்திற்குச் செல்வதும் சாத்தியமில்லாமல் இருக்கிறது. சின்னச் சின்ன உடற்பயிற்சி மூலம் எடையைக் குறைக்க முடியுமா?

இதுகுறித்து பொது மருத்துவர் சுந்தர்ராமன் கூறியதாவது:- முதலில் உங்கள் உயரம் மற்றும் வயதுக்கேற்ற எடையில் இருக்கிறீர்களா என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள். சென்டிமீட்டரில் உள்ள உங்கள் உயரத்துடன் 100அய்க் கழித்தால் வருவது உங்கள் எடையின் தோராய அளவு. இதிலிருந்து கூடுதலாக அல்லது குறைவாக 5 கிலோ இருக்கலாம். அந்த அளவைத் தாண்டும்போது மட்டுமே எடையைக் குறைக்க முயற்சிக்க வேண்டும். உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை நீக்கும் சிகிச்சைகள் நிறைய இருக்கின்றன. மருத்துவர் ஆலோசனையுடன் பின்பற்றலாம். நடைப்பயிற்சி, ஜிம் உடற்பயிற்சி, சின்னச் சின்ன உடற்பயிற்சி ஆகியவை மட்டுமே பருமனைக் கட்டுப்படுத்திவிடாது. உணவுப் பழக்கம், வாழ்வியல் நடைமுறைகளில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும்.

காலையில் தேவையான அளவு உணவு, மதியம் அளவான உணவு, இரவு வேளையில் பாதி வயிறு உணவு என எடுத்துக் கொள்ளுங்கள். மூட்டுவலி இருப்பதால் உங்களால் கடினமான உடற்பயிற்சி செய்ய முடியாது. பதிலாக வீட்டு வேலைகளை குனிந்து, நிமிர்ந்து செய்து பாருங்கள். எடை தானாகவே குறையும்.

Read more: http://viduthalai.in/page-7/79395.html#ixzz30ET4binV

தமிழ் ஓவியா said...

பிளாஸ்டிக்கில் உணவு கொடுக்கலாமா?

பிளாஸ்டிக்கில் பல வகைகள் உண்டு. தரமானவற்றைப் பயன்படுத்துகிறோமா என்பதே முக்கியம். பிளாஸ்டிக் டப்பாவின் அடியில் எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அவற்றில் 1, 2, 5 குறியீடுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் உணவுப்பொருட்கள் வைப்பதற்காக தயாரிக்கப்பட்ட தரமான வகைகளே. அவற்றை தாராளமாக பயன்படுத் தலாம். இந்த ரக பிளாஸ்டிக் உருகாது... வண்ணம் கரையாது. மற்ற எண்கள் கொண்ட பிளாஸ்டிக்கில் காரீயம் கலந்திருப்பார்கள். இது மனித உடலுக்கு ஆபத்தானது. இவற்றில் பொருட்களை வைத்தால், அதில் உள்ள விஷம் உணவுப்பொருளில் ஏறி ஆபத்தை விளைவிக்கும்.

Read more: http://viduthalai.in/page-7/79395.html#ixzz30ETCNTjU

தமிழ் ஓவியா said...

சிறுநீரக கற்களை கரைக்கும் அத்தி பழம்

பழங்களில் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது, அத்திப்பழம். 8 மீட்டர் வரை உயரமாக வளரும் அத்தி மரத் தின் இலையை வாழை இலை போல் உணவு உண்ண பயன்படுத்துகின்றனர். அத்திப் பழம் கொத்தாக செடியின் அடிப்பகுதியிலோ தண்டின் எப்பகுதியில் வேண்டுமானாலும் கிளைகள் பிரியும் இடத்தில் தொங்கியபடி காணப்படும். பழுத்ததும் உட்புறம் சிவப்பாக இருக்கும். விதைகள் ஆலம் பழத்தில் இருப்பதுபோல் சிறியதாக காணப்படும். ஆண்டுக்கு இருமுறை அத்திப்பழம் அறு வடை செய்யப்படுகிறது. ஒரு மரத்தில் சுமார் 180 முதல் 300 கனிகள் கிடைக்கும் கனிகளை உலரவைத்து வெகுநாட்கள் வரை வைத்து பதப்படுத்தலாம்.

புத்தம் புதிய அத்தி பழத்தில் புரதச் சத்து 4 கிராம், சுண்ணாம்பு சத்து 200 மிலி கிராம், இரும்பு சத்து 4 மில்லி கிராம், வைட்டமின் ஏ, தயாமின் 0.10 மிலி கிராம் மற்றும் 260 கலோரி சத்துகள் உள்ளன. அத்தி பழத்தில் வைட்டமின் சி குறைந்த அளவில் உள்ளது. ஆனால் அதிக அளவு சர்க்கரை சுண்ணாம்புச் சத்து, இரும்பு, தாமிர சத்து உள்ளது. அத்திபழம் உலர வைக்கப்பட்டு டின்களில் அடைத்து ஏற்றுமதி செய்யலாம். அத்தி பழத்தில் ஜாம் தயாரிக்கலாம். உலர்ந்த பழத்தை பொடிபொடியாக்கி காபி பொடிக்கு பதில் உபயோகப் படுத்தலாம். காயில் இருந்து பால் எடுக்கப்பட்டு மருந்து பொருளாக பயன்படுகிறது.

அத்தி, செரிமானத்தை எளிதாக்கும், சிறுநீர் கற்களை கரைக்கும். மண்ணீரல், கல்லீரல் குறைபாடுகளை தீர்க்கும். மூல நோயை குணப்படுத்தும். காய்களில் இருந்து கிடைக்கும் பாலை வாய்ப் புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும். அத்தி பழத்தை சர்க்கரையுடன் கலந்து இரவு பனியில் படும்படி வைத்து காலையில் எடுத்து சாப்பிட 15 நாட்களில் உடம்பில் உள்ள வெப்பத்தன்மை குறைந்து குளிர்ச்சி ஏற்படும். மலச்சிக்கல் தீரும். ரத்த விருத்தி ஏற்படும். பித்தம் தணியும். வெள்ளைப் படுதலை தடுக்கும். ஆண்மையை பெருக்கும். அடுத்ததாக ஏழைகளின் ஆப்பிள் எனப்படும் கொய்யா, இந்திய பழ வகைகளில் 4 ஆவது இடத்தை பெற்றுள்ளது.

Read more: http://viduthalai.in/page-7/79395.html#ixzz30ETOZkis

தமிழ் ஓவியா said...


இந்து அறநிலையத்துறையின் வேலை மூடத்தனத்தைப் பரப்புவது தானா?


இந்து அறநிலையத்துறையின் வேலை
மூடத்தனத்தைப் பரப்புவது தானா?
மழை வேண்டி யாகம் நடத்த வேண்டுமாம்!

சென்னை, ஏப்.29- தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் முக்கிய கோயில் களில் மழை வேண்டி வருண ஜெப பூஜையை இந்து சமய அறநிலையத் துறை நடத்தியது.
கடந்த ஆண்டு தென் மேற்கு, வட கிழக்கு பருவ மழை பொய்த்ததால் அணைகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால், அணைகளின் நீர்மட்டம் வெகுவாக பாதிக் கப்பட்டுள்ளது. இது மட்டு மின்றி, ஏரி கண்மாய், குளங்களும் தண்ணீரின்றி வறண்டுள்ளது.

கோடைக் காலங்களில் பெய்யும் மழை கூட பொய்த்ததால் பல இடங் களில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். இந் நிலை யில் மழை வேண்டி தமி ழகம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்களில் சிறப்பு வருண ஜெபம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்தது. அதன்படி தமிழகம் முழுவதும் முக்கிய கோயில்களில் ஒரே நேரத் தில் இந்த பூஜை நடந்தது. இதில், சென்னையில் திரு வல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில், வடபழனி முருகன் கோயில் உட்பட 28 முக்கிய கோயில்களில் வருண ஜெபம் நடந்ததாம்.

நேற்று காலை 5.05 மணியளவில் கணபதி ஹோ மத்துடன் வருண ஜெபம் தொடங்கியதாம். தொடர்ந்து சுவாமிக்கு சீதாள ரூபன ஏகாதச ருத்ரஜப பாரா யணம், வருண ஜெபம், வருண சூக்த பாராயணம், தீபாராதனை உட்பட பல் வேறு அபிஷேகங்கள் நடந் தன. மேலும், இசைக் கல் லூரி மாணவர்களும், மழை வேண்டி அமிர்தவர்ஷிணி, மேகவர்ஷிணி, கேதாரம், ஆனந்த பைரவி, ரூப கல்யாணி உள்ளிட்ட இசை ஆராதணை நடத்தினராம். இதில், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியிடம் மழைபொழிய வேண்டி வழிபாடு செய்தனராம். ரகசிய ஏற்பாட்டால் பக்தர் கள் கூட்டம் இல்லை.

இந்துசமய அறநிலை யத்துறை சார்பில் மழை வேண்டி வழிபாட்டு நிகழ்ச்சி நடத்துவது வழக்கம்தானாம். இதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி எந்தவித அறிவிப்பும் இல்லாமல் ரகசியமாக இந்த நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இதனால், தமிழகத்தில் மழை வேண்டி வழிபாடு நடத்தப்பட்ட கோயில்களில் குறைவான பக்தர்களே கலந்து கொண் டனராம்.

Read more: http://viduthalai.in/e-paper/79451.html#ixzz30KN2KmWZ

தமிழ் ஓவியா said...


முக்கியம்


தைரியம் இருந்தால் நல்ல காரியங்கள் செய்யலாம். நல்ல காரியங்களைச் செய்யும்போது எத்தகைய எதிர்ப் பிருந்தாலும் பயப்படத் தேவையில்லை. தைரியமே முக்கியம். - (விடுதலை, 22.11.1964)

Read more: http://viduthalai.in/page-2/79443.html#ixzz30KONLc3v

தமிழ் ஓவியா said...


உலகை உலுக்கிய பெண்களின் புத்தகங்கள்


காலந்தோறும் பெண்களின் எழுத்து, ஒட்டுமொத்த உலகுக்கும் புத்துயிர் ஊட்டி வந்துள்ளது. பல புத்தகங்கள் உலகையே புரட்டிப் போட்டுள்ளன. உலகப் புத்தக நாள் (ஏப்ரல் 23) கடைபிடிக்கப்படும் இந்த நேரத்தில், பெண்கள் எழுதி உலகை உலுக்கியதாகக் கருதப்படும் நூல்கள் இங்கே நினைவுகூரப்படுகின்றன.

டேல்ஸ் ஆஃப் கெஞ்சி, 1021:

உலகின் முதல் நவீன நாவல் என்று கருதப்படும் இதை எழுதியவர் ஜப்பானியச் சீமாட்டி முரசாகி. ஒரு பேரரசனின் மகனுடைய வாழ்க்கை, காதலைப் பற்றிய கதை. அதேநேரம் வீழ்ச்சியடைந்துவரும் அரசாட்சியையும் இது பதிவு செய்துள்ளது. இந்தக் கதை ஆயிரம் ஆண்டு பழமையானதாக இருந்தாலும், வரலாற்றை அறிந்துகொள்வதற்கான சிறந்த ஆதாரமாகத் திகழ்கிறது.

எ விண்டிகேஷன் ஆஃப் தி ரைட்ஸ் ஆஃப் உமன், 1792

நவீனப் பெண் உரிமைச் சிந்தனைகளை முதலில் வெளிப்படுத்திய இந்த நூலை எழுதியவர் மேரி வோல்ஸ்டன்கிராஃப்ட். பெண்ணுக்கு உரிய சுதந்திரத் தையும், பெண்ணியத்தையும் உலகுக்கு உணர்த்திய நூல். பெண் என்பவள் முதலில் ஒரு சொத்து அல்ல, அவளும் மனுஷிதான்.

அவளுக்குக் கல்வி பெறவும், பொது வாழ்க் கைக்கு வரவும் உரிமை உண்டு என்று உரத்த குரலில் சொல்லி, ஆணாதிக்கச் சமூகத்துக்கு எழுத்து ரீதியில் சவால் விடுத்தது இந்தப் புத்தகம். இதனால் எரிச்சலடைந்த சிலர், மேரியைக் கழுதைப் புலி என்றெல்லாம் திட்டியிருக்கிறார்கள்.

அங்கிள் டாம்ஸ் காபின், 1852:

உலகுக்கெல்லாம் நீதி சொல்லும் அமெரிக்காவில் பல நூற்றாண்டுகளாக நிலவி வந்த மனிதனை மனிதன் அடிமைப்படுத்தி வைத்திருந்த இனவெறி வன்கொடுமை பற்றி முதலில் பேசிய இந்த நாவலை எழுதியவர் ஹாரியட் பீச்சர் ஸ்டோவ்.

முதலில் அமெரிக்காவையும் பிறகு உலகின் கண்களையும் இது திறந்தது. கறுப்பின அடிமை முறையை ஒழிக்க அமெரிக்காவில் நடந்த உள்நாட்டுப் போருக்கு இந்தப் புத்தகமும் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது

Read more: http://viduthalai.in/page-7/79489.html#ixzz30KQ80WLH

தமிழ் ஓவியா said...


பல துறைகளில் சிறந்து விளங்கும் சாதனைப் பெண்கள்


உறவுகளுக்கு உயிர் கொடுப்பது மட்டுமின்றி தாயாக, சகோதரியாக, தோழியாக, மனைவியாக, மகளாக... என பன்முக பந்தமாக நம்முள் கலந்திருக்கும் பெண்களை சிறப் பிக்கும் மகளிர் தினம். இந்த வேளையில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களை பற்றி அறிந்துகொள்வோம்.

தொழில்துறை: இந்திரா நூயி

சென்னையில் பிறந்த இந்திரா நூயி ஹோலி ஏஞ்சல் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த அவர் பின்னர் எம்.பி.ஏ. படிப்பையும் முடித்தார்.

முதன் முதலில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தில் தயாரிப்பு மேலாளராக பணியில் சேர்ந்த அவர், பின்னர் படிப்படியாக உயர்ந்து தற்போது பெப்சிகோ நிறுவனத்தின் தலைவராக உயர்ந்திருக்கிறார். உலக அளவில் அதிக சக்தி வாயந்த பெண்ணாகவும் நூயி கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

மல்லிகா சீனிவாசன்

தமிழகத்தை சேர்ந்த மல்லிகா சீனிவாசன், தற்போது டாஃபே அமைப்பின் இயக்குநராக பொறுப்பு வகித்து வருகிறார்.

கல்லூரிப் படிப்பை சென்னையில் முடித்த அவர் பின்னர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பயின்றார். கடந்த 25 ஆண்டுகளாக தரமான டிராக்டர் களை உற்பத்தி செய்து வரும் டாஃபே நிறுவனத்தில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவதிலும், வடிவமைப்பதிலும் மல்லிகா மிகுந்த அக்கறை செலுத்தி வந்துள்ளார்.

இதோடு மட்டுமல்லாமல் கல்வி மற்றும் சுகாதார வளர்ச்சிக்கு உதவும் நோக்கில் பிரபல கண் மருத்துவமனை அமைப்பான சங்கர நேத்ரால யாவுடனும், சென்னை புற்றுநோய் மருத்துவ மனையுடனும் இணைந்து செயலாற்றி வருகிறார்.

விவசாயம்: சின்னப்பிள்ளை

மதுரை மாவட்டத்தில் உள்ள புலிச்சேரி கிராமத்தில் பிறந்த அவர் விவசாய கூலி தொழிலாளர்களுக்கும் நில உரிமையாளர்களுக்கும் இடையே பாலமாக விளங்கி விவசாயம் செழித்து விளங்க நடவடிக்கை எடுத்தார்.

பின்னர் தன் பவுண்டேஷன் அமைப்பின் களஞ்சியம் என்ற இயக்கத்தில் இணைந்து செயல்படத் துவங்கினார். இந்திய நாட்டில் உள்ள பெண்களுக்கு இவர் முன்னுதாரணமாக விளங்கியது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page-7/79486.html#ixzz30KQGtGEg