Search This Blog

27.3.10

அண்டை வீட்டு நெய்யே அக்கிரகார மாமியின் கையே!

அவாள் அப்பன் வீட்டுச் சொத்தோ!


பார்ப்பான் பண்ணையம் கேட்பாரில்லை என்பது ஒரு பழமொழி, இன்றைக்கு இந்தியன் வங்கியும் இந்த வகையில் பூணூல் கயிற்றில் மனு நீதிக் கொடியை ஏற்றி பார்! பார்!! எங்கள் பார்ப்பன தர்பாரைப் பார்! என்று பழிப்புக் காட்டுகிறது தமிழர்களைப் பார்த்து

கடந்த வாரத்தில் இரு தகவல்கள் வெளிவந்துள்ளன. ஒரு சேதி இந்து ஏடு வெளியிட்டதாகும்.

Sankara Nethralaya Activities Hailed என்ற தலைப்பில்18.3.2010 அன்று வெளியானது.

The Bank donated Rs.1 crore to sankara Nethralaya for revamping infrastructure and introducing new services. இன்னொரு தகவல் தினமணியில் (18.3.2010) சங்கரா பல்கலைக் கழகத்துக்கு இந்தியன் வங்கி ரூ.1 கோடி நிதியுதவி என்பது தான் இந்த இரண்டாவது சேதியாகும்.

இந்தியன் வங்கியின் தலைவராக (Chairman) இருக்கும் எம்.எஸ். சுந்தர்ராஜன் என்ற பார்ப்பனர் இந்த நிறுவனங்களுக்கு அரசுடைமையாக்கப்பட்ட இந்தியன் வங்கியின் பணத்திலிருந்து அண்டை வீட்டு நெய்யே அக்கிரகார மாமியின் கையே! என்ற போக்கில் தூக்கிக் கொடுத்திருக்கிறார்.

இந்தப் பார்ப்பனர்மீது சி.பி.அய். விசாரணையெல்லாம் நடைபெற்றதுண்டு. எப்படியோ அவற்றிலிருந்து எல்லாம் தப்பித்து இந்தியன் வங்கியின் தலைவராகி, தங்கள் இனத்தைச் சேர்ந்த வாளுக்கு இப்படியெல்லாம் அள்ளிக் கொடுக்கிறார்.

இவ்வளவுக்கும் இந்தப் பார்ப்பனர் வரும் ஏப்ரலில் ஓய்வு பெற உள்ளார். அதற்குள் நம்மவாளுக்கு எதையாவது செய்து கொடுக்க வேண்டும் என்ற துரித வெறியில் ஈடுபட்டு இருப்பதாகத் தெரிகிறது.

சங்கரா நேத்திராலாயா நிறுவனத்தின் உரிமையாளரான எஸ்.எஸ். பத்ரிநாத் என்பவரும் ஆந்திராவைச் சேர்ந்த சங்கர மடத்தின் அத்தியந்த சிஷ்யக் கோடி.

இந்த நிறுவனத்தின் நிகழ்ச்சிகளில் எல்லாம் சங்கராச்சாரியார் தான் தலைமை விருந்தினர்.

அதேபோல காஞ்சி மடம் ஏனாத்தூரில் மறைந்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்பவர் பெயரில் நடத்தும் பல்கலைக் கழகத்துக்கும் கொலைக் குற்றத்தின்கீழ் திரிந்து கொண்டிருக்கும். ஜெயேந்திர சரஸ்வதியிடம் ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையை இந்தியன் வங்கித் தலைவர் சுந்தர்ராஜன் கொடுத் துள்ளார்.

வங்கித் தலைவரான சுந்தர்ராஜன் தன்னிச்சையாகத் தூக்கிக் கொடுத்திருக்க முடியாது. அதன் தலைமை அமைப்பின் (Board) ஒப்புதல் பெற்றுத்தான் கொடுத்திருக்க வேண்டும்.

மத்திய அரசின் பிரதிநிதி, ரிசர்வ் வங்கியின் பிரதிநிதி என்று பல இயக்குநர்கள் அடங்கிய கூட்டத்தில் இதனைத் தீர்மானித்திருப்பர் என்பது உண்மைதான்.

ஆனாலும் அந்த இயக்குநர்களும் யார்? எல்லாம் அக்கிரகாரத்து மடிசஞ்சிக் கூட்டம்தானே!

இந்தியன் இ.பி.கோ. குற்றப் பிரிவின்கீழ் (302, 120-பி, 34, 201) கொலை செய்யத் தூண்டுதல், கூட்டுச் சதி, பொய்யான சாட்சிகளைச் சமர்ப்பித்தல், கொலை உள்ளிட்ட பிரிவின்கீழ் குற்றம் சுமத்தப்பட்டு, கைதும் செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறைச்சாலையில் 61 நாள்கள் கம்பி எண்ணிக் கொண்டிருந்த ஓர் அசிங்கமான பிறவிதான் ஜெயேந்திரர் என்பது ஊர் சிரித்த செய்தியாகும்.

இந்த யோக்கியதையுள்ள ஒரு மனிதரிடம் நாட்டுடைமையாக்கப்பட்ட அரசு வங்கியின் தலைவர் மக்கள் பணத்தை ஒரு கோடி தூக்கிக் கொடுக்கிறார் கொஞ்சம்கூட கூச்ச நாச்சமின்றியென்றால், பார்ப்பனர்களின் இனவெறி எந்த நிர்வாணக் கோலத்தில் கட்டுத்தறியை அறுத்துக் கொண்டு கூத்தாடுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

கொலைக் குற்றம் மட்டுமல்ல; பெண்கள் விஷயத்திலும், எவ்வளவு பெரிய பச்சை இந்த ஜெயேந்திரர் சரஸ்வதி என்பதை, பார்ப்பனப் பெண்ணான அனுராதா ரமணன் என்ற எழுத்தாளரே தொலைக்காட்சியில் அம்பலப்படுத்தினாரே!

தன் எதிரிலேயே ஒரு பெண்ணுடன் இந்தப் பெரியவாளு உடலுறவு கொண்ட அகோரத்தை என்ன சொல்ல என்று தலையில் அடித்துக் கொண்டாரே!

ஆனாலும் பார்ப்பனர்களின் இனப்பற்று இருக்கிறதே அது மண்ணுக்கும் விண்ணுக்கும் தாவி நிற்கும் தடிமன் கொண்டது.

வேசியர்களிடத்தில்கூட வெட்கமிருக்கும்; ஆனால் இந்த வேதியக் குலக் கொழுந்துகளிடம் மருந்துக்கும்கூட வெட்கம், கூச்சம் என்பது கிடையவே கிடையாது என்பதற்கு ஜெயேந்திர சரஸ்வதிகளையும் இவர்களைத் தாங்கிப் பிடிக்கும் சுந்தர்ராஜன்களையும் பார்க்கும்பொழுது புரியவில்லையா?

இந்த ஏனாத்தூர் பல்கலைக் கழகத்திலும், விடுதிகளிலும் பச்சையாக தீண்டாமைப் பாம்பு படம் எடுத்து ஆடியதே நினைவிருக்கிறதா? திராவிடர் கழகம் அதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் கூட நடத்தியதே!

இந்தியன் வங்கி ஒரு கோடி ரூபாயை, தூக்கிக் கொடுத்துள்ளதே அந்தப் பல்கலைக் கழகம் யார் பெயரால் அமைந்தது? மறைந்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியான் பெயரால் அமைந்ததுதான்!

அவர் யார்? தீண்டாமை க்ஷேமகரமானது என்று கூறிய இந்திய அரசமைப்புக் சட்டத்தின் 17ஆவது பிரிவின்கீழ் தீண்டாமை ஒழிப்புக் குற்றத்தின்கீழ் கைது செய்யப்பட்டு இருக்க வேண்டியவர். அத்தகைய ஒருவரின் பெயரால் அமைந்திருக்கும் ஒரு பல்கலைக் கழகத்துக்கு அரசு வங்கி இவ்வளவு பெரிய தொகையைத் தானமாக வழங்கியுள்ளது. நாட்டில் உள்ள பொது நல விரும்பிகள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் எந்த அடிப்படையில் சங்கரா நிறுவனங்களுக்கு இந்தியன் வங்கி இவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்தது? இதற்குமுன் இந்த மடத்துக்கு எப்பொழுதெல்லாம் அரசு வங்கியின் பணம் தாரை வார்க்கப்பட்டது?

இப்படி நிதியைக் கொடுக்க இந்தியன் வங்கி வைத்துக் கொண்டிருக்கும் அளவுகோல், நிபந்தனைகள் என்னென்ன? வேறு யார் எல்லாம் இப்படி நன்கொடை கேட்டனர்? அவர்களுக்கெல்லாம் அளிக்கப்பட்டதா? மறுக்கப்பட்டதா? அதற்கான காரணங்கள் என்னென்ன? என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேளுங்கள்! கேளுங்கள்!!

கொலைக் குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டாலும் தங்கள் குலத் தலைவர் சங்கராச்சாரியார்! அவரை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பதில் பிடிவாதமாக இருக்கும் இந்தப் பார்ப்பனர்களை தமிழர்களே, தெரிந்து கொள்ளுங்கள்.

அவர்களின் இனநலம் எங்கே? நம் மக்களின் இனநலம் எங்கே? சிந்திப்பீர்! சிந்திப்பீர்!!

------------------ 27-3-2010 "விடுதலை” ஞாயிறுமலரில்

மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை



2 comments:

Unknown said...

Who got 95 lakhs from govt to make a film.Was it public money or private donation.The eye hospital is one of the best in India.They serve the poor also.It is not run by a family.Why cant minsaram or veeramani use RTI to ask for details which they want others to do.Those who supported Justice Dinakaran and ex-Justive Ramaswamy talk of corruption and morality.
Indian Bank was in doldrums.It incurred losses.Who was at the helm then.What is his caste.

Freethinker said...

அய்யா நீங்கள் விபசாரிக்கு பூ வாங்கி கொண்டு போவதும் மனைவிக்கு பூ வங்கி கொண்டு போவதும் ஒன்று என்பது மாறி உள்ளது உங்கள் ஒப்பீடு .....வேற வழி இல்லம்தான் இந்த ஒப்பீடு....மன்னிக்கவும்...