Pages

12.1.10

பெரியார் பிரச்சாரத்தால் தேச மத அபிமானிகள் மனம் புண்படுகின்றதா?



பெரியார்(நாயக்கர்) இப்பிரச்சாரத்தால் தேச மத அபிமானிகள் மனம் புண்படுகின்றது என்பது …..

இதற்கு நாம் என்ன செய்ய முடியும்? இமயமலை பனியால் மூடப்பட்டு குளிரால் அவஸ்தைபடுகின்றது என்று அதற்கு யார் கம்பளிப் போர்வையைப் போற்றி,குப்பை செத்தைகளை அரித்துப் போட்டு நெருப்பு வைத்து குளிர் காய வைக்க முடியும்?. எரிமலை நெருப்புச் ஜூவாலையில் கஸ்டப்படுகின்றது என்று அதற்கு யார் தண்ணீர் ஊற்றி குளிர்ச்சி செய்ய முடியும். அது போல அவரவர்கள் தன்மைக்கு ஏற்ற பலனை அவரவர் அடைய வேண்டியதுதானே ஒழிய வேறில்லை.

பேசாமல் உட்கார்ந்து கொண்டிருக்கும் எந்த தேச மத அபிமானியையும், யோக்கியமாய் நடந்து கொள்ளும் எந்த தேச மத அபிமானியையும் நாம் கனவிலும் நினைப்பதில்லை.நம்மால் அவர்கள் மனம் புண்படவும் நியாமில்லை. அப்படிக்கில்லாமல், மக்களை ஏமாற்றவென்றே வெளிவரும் போது மாத்திரம் நாம் சும்மா இருக்க முடியவில்லையே ஒழிய மற்றபடி நமக்கு யார் மனதையும் புண்படுத்த நினைத்து இத்தொண்டை நாம் ஆரம்பிக்க வில்லை என்பது உறுதி.

----------தூத்துக்குடி திரு.சோமசுந்தரம் பிளை 7-12-1927 “நவசக்தி” இதழில் எழுதிய “இந்து மதமும் வைக்கம் வீரரும்” என்ற கட்டுரைக்கு தந்தைபெரியார் அவர்கள் எழுதிய மறுப்புக் கட்டுரையிலிருந்து… “குடிஅரசு” 25-12-1927

3 comments:

  1. Podhuva Hindu Madhatha pathi mattume athiga karuthukkal soldreenga, Why Christian Muslim pathi Kadavul Illainu Opena solla vendiathu thana

    appatha neenge pandrathu sari

    ReplyDelete
  2. Periyar Piracharathal Ungalaipondravalkalin vaai than valikkume thavira ondrum maarapovathillai

    ReplyDelete
  3. // Podhuva Hindu Madhatha pathi mattume athiga karuthukkal soldreenga, Why Christian Muslim pathi Kadavul Illainu Opena solla vendiathu thana

    appatha neenge pandrathu sari

    January 13, 2010 7:49 PM
    Blogger KULIR NILA said...

    Periyar Piracharathal Ungalaipondravalkalin vaai than valikkume thavira ondrum maarapovathillai

    January 13, 2010 7:50 PM//

    இப்பிட சொல்லி சொல்லி பலர் மாறிவிட்டனர்...அப்படியே சொல்லி சொல்லி வாசித்து வந்து கொண்டிருந்தால் சீக்கிரமே மாறிவிடலாம்...அதற்கு நாங்களே சாட்சி...எல்லோரும் திணிக்கப்பட்டவைகளில் இருந்து வெளியேறியவர்கள்.

    ReplyDelete