Search This Blog

29.4.09

"பார்பன எதிர்ப்பு கண்மூடித்தனமானதா?" - 8


ஒரு சில வலைப்பதிவர்கள் "கடவுளற்ற,மதமற்ற,சாதியற்ற கூடவே காழ்ப்புணர்சியற்ற மனித சமுதாயம் படைப்போம்" என்ற முழக்கத்தை முன் வைத்து பார்ப்பன எதிர்ப்பு கண்மூடித்தனமானது என்று முழங்கி வருகிறார்கள். கடவுளற்ற,மதமற்ற,சாதியற்ற கூடவே காழ்ப்புணர்சியற்ற மனித சமுதாயம் படைக்க( எங்களின் நோக்கமும் இதுதான். இதில் எங்களுக்கு ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை.காழ்ப்புணர்வு உள்ளவர்கள் நாமா? பார்ப்பனர்களா? --விடை: உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்) தடையாய் இருப்பவர்கள் பார்ப்பனர்கள். பார்ப்பனர்களை ஒழிக்காமல் மேற்கண்டவைகளை ஒழிக்கவே முடியாது. அன்றிலிருந்து இன்று வரை பார்ப்பன ஆதிக்கம் இல்லாத துறையே கிடையாது. பெரியார் அதன் விசப் பல்லை பிடுங்கி எறிந்திருக்கிறார். மீதி மிச்ச சொச்சங்கள் இன்னும் இருக்கின்றன. அந்த மிச்ச சொச்சங்களையும் அம்பலப்படுத்த வேண்டிய அவசியம் பெரியாரின் தொண்டர்களுக்கு உண்டு.


தெய்வாதீனம் ஜகத் சர்வம்
மந்த்ராதீனம் துதெய்வதம்
தன்மந்த்ரம் பிரம்மணாதீனம்
தஸ்மத் பிரம்மணம் பிரபு ஜெயத்.

இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்; மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை எனவே பிராமணனே கடவுள்! அவனைத் தொழ வேண்டும்.

--------------ரிக் - 62 ஆவது பிரிவு 10ஆவது சுலோகம்

இப்படிப்பட்ட பார்ப்பனர்களின் கொடுமைகளையும், அட்டூழியங்களையும் மக்களிடம் எடுத்துச் சொல்லி பார்ப்பன எதிர்ப்பு என்பது கண்மூடித்தனமானது அல்ல என்பதை உணர வைப்பதற்காக பார்ப்பனர்களின் முகமூடிகளை கழற்றி உண்மை முகத்தை அடையாளப்படுத்தும் நோக்கத்துடன் இக்கட்டுரை வெளியிடப்படுகிறது. சான்றுகளுடன் கூடிய நாகரிகமான விவாதங்கள் வரவேற்கப்படுகிறது)

தொடர்ந்து "பார்பன எதிர்ப்பு கண்மூடித்தனமானதா?" என்ற தலைப்பில் கட்டுரைகள் வெளியிடப்படும்

------------------------------------------------------------------------------




அரைத்தார்கள்! கரைத்தார்கள்!! குழத்தார்கள்!!!

யார்? எதை? எங்கே? என்று ஆவலோடு கேட்பது காதில் விழுகிறது. ஒரு சிறிய முன்னுரை விளக்கம் நடந்த நிகழ்ச்சியைப் புரிந்துகொள்ள உதவும்.

திருவிசலூர் (திருவிசைநல்லூர்) கும்பகோணம் வட்டத்தில் திருவிடைமருதூரிலிருந்து மூன்று கல் தொலைவிலுள்ளது ஒரு சிற்றூர்.

அந்த ஊரில் 2.8.1930 அன்று தந்தைபெரியார் தலைமையில் - இரண்டாவது பார்ப்பனர் அல்லாதார் மாநாடு நடைபெற்றது. திருவிசலூரிலும், அருகே உள்ள வேப்பத்தூரிலும் வசதிமிக்க அக்கிரகாரங்கள் உண்டு. நடப்பதோ பார்ப்பனர் அல்லாதார் மாநாடு! மாநாட்டுத் தலைவரோ தந்தை பெரியார்! சும்மாயிருக்குமோ சுரர் கூட்டம்?

கல்லைக் கடவுளாக்கி, சாணத்தைச் சாமியாக்கி குரங்கையும், நாயையும், எலியையும் நம்மவர்களைக் கும்பிட வைத்த கூட்டமாயிற்றே!


பல்வேறு புரளிகளைப் பரப்பியது பூசுரர் கூட்டம்!

கோவிலில் ஆதிதிராவிடர்களை அழைத்து வந்து விடுவார்கள்? கோயிலில் நுழைந்து கொள்ளை அடிப்பார்கள்! அக்கிரகாரத்தில் நுழைந்து விடுவார்கள்!
விளைவு என்ன? மாநாட்டுத் தலைவர்கள் வரும் வழியிலுள்ள திருவாவடுதுறை சைவ ஆதினத்தாருக்குட்பட்ட திருவிடைமருதூர் கோவிலின் நான்கு கதவுகளும் அடைக்கப்பட்டன.

சுமார் 500 ஆட்கள் தடிக்கழிகளோடு காவல் புரிந்தனர். மாநாடு நடக்கும் நாளின் காலையிலேயே திருவிசலூர், வேப்பத்தூர் பார்ப்பனர்கள் தங்கள் தங்கள் அக்கிரகாரசந்துகளில் நூற்றுக்கணக்கான, உலகமறியா படிப்பில்லாத, நம்மினப் பாமரர்களைக் காவல் போட்டதுடன் தாங்களும் தடிகளோடு வரிந்து கட்டிக் கொண்டு காவல் காத்தனர்.

திருவிடைமருதூர் பார்ப்பன நீதிபதியும், பார்ப்பன காவல்துறை உதவி ஆய்வாளரும் தம்முடன் பல காவலர்களை வைத்துக் கொண்டு காவல் புரிந்தனர்.

இக்காட்சியைக் கண்ணுற்ற தந்தை பெரியாரின் கூற்றைக் கேளுங்கள்!

என்னுடைய இந்தப் பத்து பதினைந்து வருஷத்திய பொது வாழ்வு சுற்றுப் பயணத்தில் ஓர் இடத்திலாவது இந்த (திருவிசலூர் பார்ப்பனர்) மாதிரி பார்ப்பனர் வரிந்து கட்டிக் கொண்டு தடியுங்கையுமாய் நின்று கொண்டிருந்ததை யான் எங்கும் பார்த்ததில்லை (குடிஅரசு, 10.8.1930 பக்கம் 8)

என அய்யாவுக்கே திருவிசலூர் பார்ப்பனர்களின் ஆணவம் வியப்பை அளித்திருக்கிறது. இவ்வூர் பார்ப்பனர்கள் இவ்வளவு அகம்பாவம் கொண்டது ஏன்? அவர்கள் நூறு வேலி (500 ஏக்கர்) நஞ்சை நிலத்துக்குச் சொந்தக்காரர்கள்! அவர்கள் நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்தார்களா?

பார்ப்பனர் பார்வையில் உழைப்பது பாபம். பயிரிடும் பிழைப்பு பெரியோர்களால் நிந்திக்கப்பட்டது (மனுதர்மம், அத். 10, சுலோ. 84) என்பது மனு செய்த சட்டம். ஏர் பிடித்து ஓட்டியே மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த இரு பார்ப்பனர்களுக்கு - நடமாடிய தெய்வம் - காஞ்சி முனி - சந்திர சேகரேந்திரர் - ஆசி வழங்க மறுத்த செய்தி அனைவரும் அறிந்ததே! அரசன், தான் கண்டெடுத்த புதையலில் சரிபாதியை அவாளுக்கு அழவேண்டும் என்பது மனுதர்மம் (அத். 8, சுலோ. 38) அப்படி ஏதேனும் திருவிசலூர் பார்ப்பனருக்கு லட்சுமி கடாட்சம் கிடைத்ததோ? அப்படி வரலாறு ஏதுமில்லை.

அவ்வூர் பார்ப்பனர்கள் எப்படி நிலச்சுவான்தார் ஆனார்கள் என்ற வரலாற்றைத் தந்தை பெரியார் அவர்கள் தமக்கே உரிய முறையில் கூறுவதைக் கேளுங்கள்:

இந்தக் கிராமத்து அக்கிரகாரமானது தஞ்சாவூர் மகாராஜாவால் தனது முன்னோர்களின் எலும்புகளைக் கங்கையில் கொண்டு போய்ப் போடுவதை விட பிராமணர்கள் என்பவர்களின் வயிற்றில் போய்ச் சேரும்படி அரைத்துக் குடிக்கச் செய்துவிட்டால் அதிகப் புண்யமென்பதாகக் கருதி, பிராமணர்களும் அப்படியே அரைத்துக் குடித்ததற்காக அக்காலத்தில் சில பார்ப்பனர்களுக்கு இந்த அக்கிரகாரங்களையும் (வீடுகள்) கட்டிக் கொடுத்து 100 வேலி (500 ஏக்கர்) நஞ்சை நிலமும் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது (குடிஅரசு, 10.8.1930, பக்கம் 12).

நரமேதயாகம் செய்யும் பார்ப்பனர்கள் ஒரு நரனின் எலும்பை அரைத்து கரைத்து குடிக்கவா தயங்குவார்கள்?

இப்போது தெளிவாக அறிந்து கொண்டீர்களா - திருவிசைநல்லூர் வாழ் அந்தணர்களின் முன்னோர்கள் ஆற்றிய அருந்தொண்டு பற்றி!

விரைவில் வெளிவர இருக்கும் அருந்தொண்டு ஆற்றிய அந்தணர்கள் நான்காம் தொகுதியில் இப்பார்ப்பனர்களின் வரலாற்றை எதிர்பாருங்கள்!

------------------------மு.நீ. சிவராசன்- "உண்மை" –ஜனவர் 16-31 2008

2 comments:

Anonymous said...

சரி ஐயா, அதுக்கு அப்புறம். அங்க காவலுக்கு நின்றது யாரு?

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத்தான் நன்றாக தெரிந்திருக்குமே?

நான் உண்மையைச் சொன்னா கேட்கவாபோறீங்க?