tag:blogger.com,1999:blog-1474608369333206681.post98011527755906566..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: மொழிப்போர் : சங்கே முழங்கு!-காக்காவ தேசிய பறவையா மாத்திடலாமா?தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-3075994443863167642014-07-16T07:35:52.833+05:302014-07-16T07:35:52.833+05:30
பிராணி வதை தடுப்புச் சங்கத்தின் கவனத்திற்கு...
...<br />பிராணி வதை தடுப்புச் சங்கத்தின் கவனத்திற்கு...<br /><br /><br />அறிவியல் விஞ்ஞானம் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் ஊருக்கு ஊர் கொள்ளை சம்பவங்களும், சங்கிலிப் பறிப்பு சம்பவங்களும் நடந்து வருகின்றன.<br /><br />காவல்துறையினரும் வலைவீசி தேடிப் பிடித்து களவுபோன பொருள்களை மீட்கின்றனர். களவுபோன பொருளை மீட்க காவல்துறையை நாடினாலும், காவல்துறையினரைக் காட்டிலும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள கொல்லாபுரியம்மனைத்தான் பலரும் நம்புகின்றனராம்.<br /><br />ஆம்! தருமபுரியில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் செல்லும் வழியில் 18 கி.மீ. தொலைவில் உள்ள கொல்லாபுரியம்மன் சாமியிடம்தான் தங்கள் வீட்டில் திருடுபோன பொருள் கிடைக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு உயிருடன் ஒரு கோழியை கோயில் அருகே உள்ள ஒரு மரத்தில் சாகும் வரை தூக்கில் போட்டுவிட்டுச் சென்றால், திருடுபோன பொருள் மற்றும் திருடனும் கிடைத்துவிடுவான் என்பது ஆன்மிக நம்பிக்கையாக இருந்து வருகின்றதாம்.<br /><br />இந்த நம்பிக்கையின்படி சென்னை, பெங்களூரு, சேலம், மதுரை ஆகிய பகுதிகளில் இருந்துகூட கொல்லாபுரியம்மனை தேடி வந்து கோழியைத் தூக்கிலிடுகின்றனராம்.<br /><br />அதேபோல திருடுபோன பொருள் கிடைத்துவிட்டால் மீண்டும் கோயிலுக்கு வந்து, பூஜை செய்து கொல்லாபுரியம்மனுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்பது ஆன்மீக நம்பிக்கையாக உள்ளது.<br /><br />இந்த ஆன்மிக நம்பிக்கை கொல்லாபுரியம்மனின் புகழ் லாரி ஓட்டுநர்கள் மூலம் வெளி மாவட்டம், வெளி மாநிலங்கள் வரை பரவியுள்ளதால் நாள்தோறும் திருடுபோன பொருள்கள் கிடைக்கவேண்டும் என்று கோழிகளை தூக்குபோடுவது ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறதாம்.<br /><br />இதனால் கோழிகள் தூக்குபோடும் பகுதி சுகாதாரம் கெட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு நோய்கள் பரவி வருவதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.<br /><br />Read more: http://viduthalai.in/page-8/84086.html#ixzz37apnJrCx<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-49400922720487280052014-07-16T07:32:32.025+05:302014-07-16T07:32:32.025+05:30
காமராசருக்குச் செய்யும் உண்மையான மரியாதை எது? எழு...<br />காமராசருக்குச் செய்யும் உண்மையான மரியாதை எது? எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் கருத்து<br /><br /><br />சென்னை, ஜூன் 15_ அனைவருக்கும் உணவு; அனைவருக்கும் கல்வி என்னும் புரட்சிகரமான கொள்கையின் அடிப் படையில் தமிழகத்தில் நல்லாட்சி வழங்கிய பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளில், அவருக்கு விடு தலைச் சிறுத்தைகள் தமது செம்மாந்த வீர வணக்கத்தைச் செலுத்து கிறது.<br /><br />பெருந்தலைவரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசு கடைப்பிடித்து வரு கிறது. அதேவேளையில் கல்வி தனியார்மயமாகவும் வணிகமயமாகவும் மாறி, ஏழை எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகி வரு கிறது. கல்வியே சிறந்த செல்வம், கல்வியே மீட் சிக்கு வழி என்னும் உண்மையை அறிந்த நிலையிலும், எளிய மக்கள் எளிதில் பெற முடியாத அளவுக்கு கல்வியை மிகப் பெரும் விலைகொண்ட பொருளாக மாற்றி வரு வது பெரும் கவலையளிப் பதாக உள்ளது.<br /><br />மழலை யர் வகுப்புகளிலிருந்தே பல்லாயிரக் கணக்கில், இலட்சக் கணக்கில் கட் டணம் செலுத்தி கல்வி பெற வேண்டிய அவலம் பெருகியுள்ளது. அரசு பள்ளிகள் மற்றும் கல் லூரிகள் தனியார் கல்வி நிறுவனங்களோடு போட்டி போட இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த முரண்பாடுகள் புதிய தலைமுறையின ரிடையே மிகப்பெரும் முரண்பாடுகளையும் இடைவெளிகளையும் ஏற்படுத்தி வருகிறது.<br /><br />இந்நிலையில், மழலை யர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி அளிக்க முடியாது என்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் வெளிப் படையாக சவால் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய போக்குகள் தமிழகத்தின் எதிர்காலத் தைப் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.<br /><br />எனவே, தமிழக அரசு கல்வித் தளத்தில் ஏற் பட்டுள்ள தனியார்மயம் மற்றும் வணிகமயத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் நெறிப்படுத்துவதற்கும் முன்வர வேண்டும். தனி யார் கல்வி நிறுவனங் களை அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும். ஆசிரியர்கள், பேராசிரி யர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு அரசே ஊதியம் வழங்கவேண் டும்.<br /><br />கல்விக் கட்டணத் தையும் அரசே நிர்ணயிக்க வேண்டும். இத்தகைய சீர் திருத்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதன் மூலம் ஏழை எளிய மக் களும் எளிதில் கல்வி பெற வாய்ப்புகள் உருவா கும். அத்துடன், தமிழக அரசின் இலவசத் திட்டங் கள் அனைத்தையும் விலக்கிக்கொண்டு கல் வியை முழுமையாக கட் டணமில்லாமல் வழங்கு வதற்கு முன்வரவேண்டும்.<br /><br />இதுவே பெருந்தலைவர் காமராஜருக்கு செலுத்தும் உண்மையான மரியாதை யாக அமையும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.<br /><br />- இவ்வாறு எழுச்சித் தமிழர் தொல்.திருமாவள வன் தெரிவித்துள்ளார்.<br /><br />Read more: http://viduthalai.in/page-5/84078.html#ixzz37aoyjPEX<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-77180704327324418732014-07-16T07:06:47.297+05:302014-07-16T07:06:47.297+05:30
அழித்தாக வேண்டும்
மக்களைச் சுயமரியாதை இல்லாமல் ...<br />அழித்தாக வேண்டும்<br /><br /><br />மக்களைச் சுயமரியாதை இல்லாமல் செய்து மிருகங்களாக்கி நாய், பன்றிகளைவிட இழிவாய் நடத்த ஆதாரமாய் இருக்கும் மதம் எது வானாலும் அதை அழித்தாக வேண்டும்.<br />(குடிஅரசு, 18.12.1927)<br /><br />Read more: http://viduthalai.in/page-2/84081.html#ixzz37aiUx6nF<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-39151702750119565112014-07-16T07:05:38.745+05:302014-07-16T07:05:38.745+05:30
சாமி சாகுமா?
இன்றைய ஆன்மிகம்?
சாமி சாகுமா?
கு...<br />சாமி சாகுமா?<br /><br /><br />இன்றைய ஆன்மிகம்?<br /><br />சாமி சாகுமா?<br /><br />குஜராத் மாநிலம் துவார கையில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் கொடி மரம் (துவஜஸ்தம்பம்) இல்லை. இந்தக் கோயில் கருவறை யில் கண்ணபிரான கரிய நிறத்துடன், நான்கு கரங்க ளோடு, வெள்ளி மஞ்சத்தின் மீது நின்ற கோலத்தில் மேற்குமுகமாக அருள் புரிகிறார். இங்கு கிருஷ்னை கருவறைக்குள் சென்று துளசி இலைகளை வைத்து வழி படலாமாம்.<br /><br />சரி, தலைக்கொரு சீயக் காய் தாடிக்கொரு சீயக் காயா? மற்ற இந்துக் கோயில் களில் பக்தர்கள் கருவறைக் குள் சென்று வழிபடத் தடை ஏன்? அப்படி என்றால் தீட்டுப்பட்டு விடும் சாமி செத்துவிடும் என்பானேன்?<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/84079.html#ixzz37aiAVIOn<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com