tag:blogger.com,1999:blog-1474608369333206681.post9214979618393261991..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: பெரியார் தத்துவம் என்பது உயரிய தத்துவம் தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-21093662426518918012014-01-02T19:21:05.031+05:302014-01-02T19:21:05.031+05:30
பெருமை
மந்திரிப் பதவி பெரிதல்ல; பணக்காரனாக இரு...<br />பெருமை<br /><br /><br /><br />மந்திரிப் பதவி பெரிதல்ல; பணக்காரனாக இருப்பதும் பெரிதல்ல; மனிதனாக வாழ்வதுதான் பெருமை. இழிவற்றவனாக வாழ்வதுதான் பெருமை.<br />(விடுதலை, 10.10.1973)<br /><br />Read more: http://viduthalai.in/page-2/72990.html#ixzz2pFUrnz5O<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-54106064131990136502014-01-02T19:17:46.059+05:302014-01-02T19:17:46.059+05:30
செய்தியும், சிந்தனையும்!
கோபம் வராதது - ஏன்?
ச...<br />செய்தியும், சிந்தனையும்!<br /><br /><br />கோபம் வராதது - ஏன்?<br /><br />செய்தி: மக்களவைத் தேர்தலில் பிஜேபியோடு மதிமுக நிபந்தனையில்லாக் கூட்டணி - ஈழத் தமிழர்களைக் கொன்ற ராஜபக்சேவுக்கு துணை போன காங்கிரசைத் தோற்கடிக்க வேண்டும். - வைகோ, ம.தி.மு.க. பொதுச் செயலாளர்<br /><br />சிந்தனை: ஈழத் தமிழர்களைக் கொன்ற ராஜபக்சே மீது ஏற்படும் நியாயமான கோபம், சிறுபான்மை மக்களை பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்த நரேந்திர மோடியின் மீதும் ஏற்படாதது - ஏன்? தம்பிகளே பார்த்து ஓட்டுங்கப்பா!<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/72989.html#ixzz2pFU029I8<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-36584258368870298422014-01-02T07:32:17.659+05:302014-01-02T07:32:17.659+05:30மருத்துவ அறிவியலின் வெற்றி துடிக்கிறது.... உலகின் ...மருத்துவ அறிவியலின் வெற்றி துடிக்கிறது.... உலகின் முதல் செயற்கை இதயம்<br /><br />பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் 75 வயது முதியவருக்கு உலகின் முதல் செயற்கை இதய மாற்று அறுவைச் சிகிச்சையினைச் செய்து பாரிசில் உள்ள ஜார்ஜஸ் போம்பிடௌ மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.<br /><br />பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கார்மட் என்னும் உயிரி மருந்தியல் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இந்தச் செயற்கை இதயம் டென்மார்க்கைச் சேர்ந்த அய்ரோப்பிய ஏரோநாட்டிக் டிபன்ஸ் அன்ட் ஸ்பேஸ் (EADS) நிறுவனத்தால் மேம்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. லித்தியம் _அயன் பேட்டரியால் இயங்கக்கூடிய செயற்கை இதயத்தின் பேட்டரியினை உடலின் வெளிப்பகுதியில் அணிந்து கொள்ள வேண்டும்.<br /><br />உயிரிப் பொருள்களுடன் மாட்டின் திசுக்களைச் சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளதால் உடல் ஏற்றுக் கொள்ளாமலிருக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது. பிளாஸ்டிக் போன்ற செயற்கை இழைகள் பயன்படுத்தப்படாமல் மாட்டின் திசுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் ரத்தம் உறைந்து கட்டியாவதையும் தடுக்கும் சிறப்பம்சத்துடன்கூடிய செயற்கை இதயம் 5 ஆண்டுகள் இயங்கும் செயல்திறன் கொண்டது.<br /><br />ஆரோக்கியமான மனிதனின் இதயத்தின் எடை (250 கிராம் முதல் 300 கிராம்)யுடன் ஒப்பிடும்போது செயற்கை இதயம் மூன்று மடங்கு அதிகமாகும் (ஒரு கிலோவுக்குக் கொஞ்சம் குறைவு). இதற்கு முன்பு உருவாக்கப்பட்ட செயற்கை இதயங்கள் தற்காலிகப் பயன்பாட்டுக்கு மட்டுமே ஏற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-20724130858077177952014-01-02T07:27:24.229+05:302014-01-02T07:27:24.229+05:30தமிழ்ப் பல்கலையில் ஜோதிடக் கல்வியா?
தி இந்த...தமிழ்ப் பல்கலையில் ஜோதிடக் கல்வியா?<br /> <br /><br />தி இந்து தமிழ் நாளிதழில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் விளம்பரம் ஒன்று பார்த்தேன்.<br /><br />தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் திரு. திருமலை அவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்றாலும் .தந்தை பெரியார் பற்றாளர். அவரிடம் அன்பான வேண்டுகோள்: தயவுசெய்து ஜோதிட பட்டயப் படிப்பை நீக்கி சமுதாயம் சிறக்க உதவுங்கள்.<br /><br />ஜோதிடவியல் ஓராண்டு பட்டயப் படிப்பு அறிவிப்பு வந்துள்ளது. ஜோதிடவியல் படிப்பை ரத்து செய்ய வேண்டும். ஜோதிடம் என்பது அறிவியல் அன்று, மூடநம்பிக்கை. .அரசு, அறிவியல்பூர்வமான கருத்துகளை மட்டுமே மக்களிடம் கற்பிக்க வேண்டும் என்று இந்திய அரசியல் சட்டம் சொல்கின்றது. ஜோதிடம் மதம் சார்ந்தது; மதச் சார்பற்ற அரசு பல்கலைக்கழகம் ஜோதிடத்தைப் பாடமாக _ பட்டயப் படிப்பாக கற்பிப்பது சட்டத்திற்கு முரணானது .<br /><br />எனவே, அனைத்துப் பல்கலைக்கழகங்களும் ஜோதிடக் கல்வியை ரத்து செய்ய வேண்டும். பித்தலாட்ட ஜோதிடம், கல்வி அன்று. ஜோதிடம் அறிவியல் அன்று.<br /><br />ஒரு மனிதனின் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதுகின்றனர். பிறந்த நேரமே யாருக்கும் சரியாகத் தெரியாதபோது, ஜோதிடம் எப்படி உண்மையாகும்? பிறந்த சில நிமிடங்கள் கழித்து வந்து செவிலியர் சொல்லும் நேரத்தை பிறந்த நேரம் என்று குறிக்கின்றனர்; பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதுகின்றனர்.<br /><br />ஜாதகத்தை வைத்து திருமணப் பொருத்தம் பார்க்கின்றனர். எல்லாப் பொருத்தங்களும் உள்ளது என்று சொல்லித் திருமணம் செய்கின்றனர். சில நாட்களில் சண்டை வந்து மணவிலக்குக் கேட்கின்றனர். சிலர் எந்தப் பொருத்தமும், ஜோதிடமும் பார்க்காமல் திருமணம் செய்கின்றனர். பல்லாண்டுகள் சண்டை இன்றி ஒற்றுமையாக வாழ்கின்றனர்.<br /><br />ஒருவரின் ஜாதகத்தை மூன்று ஜோதிடர்களிடம் கொடுத்து ஜாதக பலன்களைத் தனித்தனியாக எழுதச் சொல்லிப் பாருங்கள். மூன்றும் ஒரே மாதிரி இருக்கவே இருக்காது. மூன்றும் மூன்று மாதிரியாகவே இருக்கும்.<br /><br />நாளிதழ்களில் வரும் ராசி பலனைப் படித்துப் பாருங்கள். ஒரே ராசிக்கு ஒரே மாதிரிதானே வர வேண்டும் ஒவ்வொரு நாளிதழிலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஜோதிடம் அறிவியல் என்றால் இப்படி வேறுபாடு ஒரே ராசிக்கு ஒரே நாளில் வருமா ? சிந்திக்க வேண்டாமா?<br /><br />சுனாமி வரும் என்று எந்த ஜோதிடரும் சொல்லவில்லை. சொல்லி இருந்தால் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாமே! ஜோதிடர்களுக்குத் தெரிந்தால்தானே சொல்வார்கள்.<br /><br />கண்ணன் என்ற ஜோதிடர் 5 கொலைகள் செய்து இப்போது சிறை சென்றுள்ளார். அவர் ஜாதகத்தை அவர் கணித்து இருக்கலாமே. இப்படித்தான் பல சாமியார்கள் ஜோதிடம் சொல்லி பித்தலாட்டம் செய்து வருகின்றனர். ஜோதிடர்கள் தொல்லை சாமியார்கள் தொல்லை தினசரி செய்தியாக வருகின்றது.<br /><br />ஜோதிட பட்டயப் படிப்பு வேறு படித்துவிட்டால் நாட்டில் பித்தலாட்ட ஜோதிடர்கள் பெருகி விடுவார்கள். நாட்டில் தொல்லை இன்னும் அதிகமாகி விடும் பணத்தாசை காரணமாக.<br /><br />பல்கலைக்கழகத்தினர் பித்தலாட்ட ஜோதிடத்தைப் பாடமாக கற்பிக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்.<br /><br />தந்தை பெரியார் சொன்னது போல எதையும் ஏன்? எதற்கு? எப்படி? எதனால் என்று கேட்டுப் பாருங்கள்.<br /><br />மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சொன்னது:<br /><br />எனக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால் ஆயிரம் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள கிரகங்கள் மனித வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும் என்பதில் எனக்குத் துளியும் நம்பிக்கை இல்லை.<br /><br />- இரா.இரவி, மதுரைதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-24514354161957349282014-01-02T07:26:35.467+05:302014-01-02T07:26:35.467+05:30சட்டம் கடமையைச் செய்யட்டும்
உச்சநீதிமன்ற நீதிபத...சட்டம் கடமையைச் செய்யட்டும்<br /> <br /><br />உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து, சில காலம் முன்பு ஓய்வு பெற்ற _- மேற்கு வங்கத்தைச் சார்ந்த ஜஸ்டிஸ் ஏ.கே.கங்குலி அவர்கள்பற்றி, பயிற்சி பெண் வழக்குரைஞர் கொடுத்த பாலியல் புகார்பற்றி உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் மூவர் (ஒருவர் பெண் நீதிபதி உட்பட) விசாரணை நடத்தி தலைமை நீதிபதியிடம் தங்களது விசாரணை அறிக்கையைத் தந்தனர்.<br /><br /> <br /><br />இவர்மீது சொல்லப்பட்ட புகார்களுக்கு முகாந்திரம் உள்ளது என்பதை விசாரணை செய்த மூன்று நீதிபதிகளின் அறிக்கை தெளி வாக்கி விட்டது.<br /><br />இதனை ஒளிவு மறைவின்றி உண்மைகளை விசாரித்து தக்க தண்டனையை குற்றம் புரிந்தவருக்கு வழங்கி நீதியை நிலைநாட்ட வேண்டியது _- நாட்டின் நிர்வாகத் துறையின் தலையாய கடமையாகும்.<br /><br />டில்லியில் பாலியல் நீதிக்காக பல நாள் நிர்வாகமே நிலை குலையும் அளவுக்கு மக்கள் திரண்டு கிளர்ச்சிகள் நடந்தன.<br /><br />வளர் இளம் பிராய வாலிபர்களுக்குக் கூட _ துள்ளித் திரியும் பொறுப்பற்ற வயது என்றால்கூட -_ சட்டம் அவர்களை மன்னிக்கத் தயாராக இல்லை.<br /><br />குற்றங்கள் நாட்டில் நடைபெறாது தடுக்க வேண்டிய பெருங் கடமை நீதித் துறைக்கே உண்டு; மக்களின் கடைசி நம்பிக்கையே இன்றைய நிலையில் நீதித்துறைதான்!<br /><br />நீதியரசர்கள், ஓர்ந்து கண்ணோடாது தேர்ந்து நீதி வழங்கினால்தான் நாட்டில் பொது ஒழுக்கமும், ஒழுங்கும் காப்பாற்றப்பட முடியும்.<br /><br />இந்த கங்குலி விவகாரத்தில் இதுவரை மறைத்து வைக்கப்பட்ட பல செய்திகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளன. பல தகவல்கள் மிகுந்த அதிர்ச்சியைத் தருவதாக உள்ளன.<br /><br />தனது பேத்தி வயதுள்ள _- பயிற்சி வழக்குரைஞரை தன்னுடைய அறையில் தங்கும்படி நீதிபதி கங்குலி வற்புறுத்தினார். உரையாடும்போது இரட்டை அர்த்தமுள்ள பேச்சாகவே அவரது பேச்சிருந்தது; தன்னுடன் மது அருந்தவும் அப்பெண்ணை வற்புறுத்தினார் என்றெல்லாம் தொலைக்காட்சி ஊடகங்களில் செய்தி வருவதைக் கேட்கும்போது, வெட்கமும் வேதனையும் படமெடுத்து ஆடுகின்றன!<br /><br />இந்த ஏ.கே. கங்குலி இப்போது மேற்கு வங்க மாநில மனித உரிமை ஆணையத் தலைவராகவும் உள்ளார். அவரை உடனே பதவி நீக்கம் செய்து, அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் வற்புறுத்தி வருகிறார்.<br /><br />16.12.2013 அன்று வந்துள்ள பல செய்திகளைக் கண்டு மத்திய சட்ட அமைச்சர் கபில்சிபல் அவர்கள், அவர்மீது உடனே நடவடிக்கையை எடுக்க உச்ச நீதிமன்றம் ஏற்பாடு செய்ய வேண்டுமென்று பேட்டி கொடுத்துள்ளார்!<br /><br />மகளிர் அமைப்புகள் பலவும் கிளர்ச்சிகளுக்கு முன்னோட்டமாகக் குரல் கொடுக்கத் துவங்கி விட்டன! ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் அவர்மீது பாயாமல் அவர் ராஜநடை போட்டு, நான் பதவி விலக மாட்டேன் என்று பிடிவாதமாகக் கூறுகிறார்!<br /><br />நீதி பரிபாலனத்தில், நீதியை வழங்கினால் மட்டும் போதாது; நீதி வழங்கப்பட்டுள்ளது என்று மற்றவர்களுக்குத் தெரியும் வகையில் அமைய வேண்டும் என்று கூறுவது உண்டு; (Not only Justice done; it is also important Justice appears to be done) இப்பிரச்சினை மேலும் நாடு தழுவிய கிளர்ச்சியாக, பெருந்தீயாக ஆகுமுன்பே நீதிபதி கங்குலி மீது கிரிமினல் நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும்.<br /><br />சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பால் இருக்க வேண்டும். அவர் நிரபராதி என்று காட்டி நிரூபித்துப் பிறகு வெளியே வரட்டும். அடிக்கடி நீதிபதிகள் தங்கள் தீர்ப்புரைகளில் எழுதுவார்களே சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்று.<br /><br />வெறும் சந்தேகத்திற்கே அவ்வளவு முக்கியத்துவம் அச்சொற்றொடரில் இருக்கையில், அதிர்ச்சியூட்டக் கூடிய தகவல்கள் மூன்று நீதிபதிகளின் விசாரணை மூலமே வெளியாகியுள்ள நிலையில், மவுனமாக நீதித்துறையும் உள்துறையும் இருக்கலாமா?<br /><br />அரசு இடத்தை ஆக்கிரமித்ததாகக் குற்றம் சுமத்தி உச்ச நீதிமன்ற நீதிபதியாக வந்திருக்க வேண்டிய ஒரு தாழ்த்தப்பட்ட (கிறித்துவ) நீதிபதியை அவருடைய தீர்ப்புகள் பலவும் மிகவும் சிறந்தவை என்ற நிலை இருந்தாலும், கட்டுப்பாடான பிரச்சாரத்தின் மூலமே அவரை விரட்டினரே!<br /><br />இங்கே என்ன அளவுகோல்? இந்தக் குற்றம் புரிந்ததாக குற்றச் செயல்கள் பற்றி பிரஸ்தாபிக்கப்படும் நபர் உயர் ஜாதி என்பதால் அவருக்கு இப்படி ஒரு மென்மையான அணுகுமுறையா?<br /><br />நாட்டில் மனுதர்ம ஆட்சியா பச்சையாக நடைபெறுகிறது என்று மக்கள் கேட்க மாட்டார்களா?<br /><br />எனவே நீதியின் மாண்பைக் காப்பாற்ற உடனடியாக சட்ட நடவடிக்கைகளைத் தொடர வேண்டும்; அவரிடமிருந்து பதவி பறிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர்மீது நடவடிக்கை சார்பின்றி நடைபெற வாய்ப்பு ஏற்படும்.<br /><br />உடனே செய்ய வேண்டும்; இதை வற்புறுத்தி திராவிடர் கழக மகளிரணியினர் சென்னையில் தந்தை பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24 காலை 11 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தினை தலைமைச் செயற்குழு உறுப்பினர் மானமிகு க. பார்வதி அவர்களின் தலைமையில் நடத்தியுள்ளனர்.<br /><br />ஆங்காங்கே தொடர் பிரச்சாரம் நடைபெறும்.<br /><br />- கி.வீரமணி,<br />ஆசிரியர்<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-58263500847291558642014-01-02T07:25:40.450+05:302014-01-02T07:25:40.450+05:30காலத்தை வீணடிக்கும் இந்து மதம்
நல்ல செயல் செய்ய...காலத்தை வீணடிக்கும் இந்து மதம்<br /> <br /><br />நல்ல செயல் செய்யக் கூடாத நாட்கள்....<br /><br />இராகுகாலம் 1 மாதத்திற்கு 1.30 X 30=45<br />ஒரு ஆண்டிற்கு 540 மணி<br /><br />எமகண்டம் 1 மாதத்திற்கு 1.30x30=45<br />ஒரு ஆண்டிற்கு 540 மணி<br /><br />அஷ்டமி (மாதத்திற்கு 2 நாள்)<br />ஒரு ஆண்டிற்கு 48x12=576 மணி<br /><br />நவமி (மாதத்திற்கு 2 நாள்)<br />ஒரு ஆண்டிற்கு 48x12=576 மணி<br /><br />மரணயோகம் 1 மாதத்திற்கு 1.30x30=45<br />ஒரு ஆண்டிற்கு 540 மணி<br /><br />கரிநாள் (மாதத்தில் 3 நாட்கள்)<br />ஒரு ஆண்டிற்கு 864 மணி<br /><br />பிரதமை (பாட்டிமை மாதம் 2 நாட்கள்)<br />ஒரு ஆண்டிற்கு 48x12=576 மணி<br /><br />சூரிய கிரகணம் ஒரு ஆண்டிற்கு<br />ஒரு நாள் 24 மணி<br /><br />சந்திரகிரகணம் ஒரு ஆண்டிற்கு<br />ஒரு நாள் 24 மணி<br /><br />மதம் சார்ந்த பண்டிகை ஆண்டிற்கு<br />33 நாட்கள் ஒரு ஆண்டிற்கு 33x24=792 மணி<br /><br />ஆக, மொத்தம் 5052 மணி<br />(5052/24 மணி = 210 நாட்கள்)<br /><br />ஆக ஆண்டிற்கு 365 நாட்களில் 210 நாட்கள் வீண்.<br /><br />இந்து மத நம்பிக்கை என்ற பேரால் விலை மதிக்கமுடியாத நம் நேரம் வீணடிக்கப்படுகிறது. நம் மூளையில் இடப்பட்ட இந்த விலங்கை உடை. சாதனை படை. காலம் பொன் போன்றது,<br /><br />-கடமை கண் போன்றது.<br /><br />வேர்ல்டு தமிழ் எம்பசி,<br />வழி: கோபால் கிருஷ்ணன்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-34397605852543683752014-01-02T07:24:07.018+05:302014-01-02T07:24:07.018+05:30கருத்து
அண்மைக் காலங்களில் கற்பழிப்புக் குற்றவா...கருத்து<br /> <br /><br />அண்மைக் காலங்களில் கற்பழிப்புக் குற்றவாளிகளுக்கு சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட தண்டனை வழங்கப்படாதது துரதிர்ஷ்டவசமானது. கற்பழிப்பு வழக்கில் குற்றவாளிகள் ஏற்கெனவே சிறையில் இருந்த காலங்களையே தண்டனையாகக் கருதி அவர்களை விடுவிக்கும் வழக்கம் உயர் நீதிமன்றம் மற்றும் கீழ் நீதிமன்றங்களில் உள்ளது. ஆனால், அவ்வாறு குறைந்த தண்டனை வழங்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் கிடையாது.<br /><br /> <br /><br />- பி. சதாசிவம், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி<br /><br /> <br /><br />திருநங்கைகளை, பெற்ற பெற்றோரே மதிக்காத சூழல் இருப்பதால் சமுதாயத்திலும் அவர்களை யாரும் மதிப்பதில்லை. காவல்துறையில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் குடும்பப் பொறுப்பு இருக்கிறது. எங்களுக்குக் குடும்பம் என்ற ஒன்று இல்லை. எனவே, 24 மணி நேரமும் எங்களால் சேவையாற்ற முடியும்.<br /><br />- அனுசியா சிறீ, திருநங்கை<br /><br />மருத்துவப் பராமரிப்புக்காக சீன அரசு செலவிடுவதில் நான்கில் ஒரு பங்கையே இந்திய அரசு செலவிடுகிறது. நமது மொத்த உற்பத்தி மதிப்பில் (ஜிடிபி) 1.2% நாம் செலவிடுகிறோம். சீன அரசோ கிட்டத்தட்ட 3% செலவிடுகிறது. எனவே, தனியார் துறை சிறப்பாகச் செயல்படும் என்பதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை.<br /><br />அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியாது என்றே நாம் நம்புகிறோம்; எல்லாவற்றையும் தனியாரிடம் கொடுக்கிறோம்; கூடுதல் பணத்தையும் அவர்களுக்குக் கொடுத்துவிட்டு நம்மாலேயே விடுவிக்க முடியாத கண்ணி ஒன்றை நாமே வைத்துவிட்டு அதில் நாமே அகப்பட்டுக் கொள்கிறோம்.<br /><br />- அமர்த்தியா சென், நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-4511270745535091642014-01-02T07:21:06.853+05:302014-01-02T07:21:06.853+05:30எம்மதமும் சம்மதம் இல்லை
நீங்கள் நாத்திகவாதியாக ...எம்மதமும் சம்மதம் இல்லை<br /> <br /><br />நீங்கள் நாத்திகவாதியாக இருப்பதில் மகிழ்ச்சியே... ஆனால் உங்கள் பகுத்தறிவு, மற்ற மதங்களை சாய்ஸில் விட்டுவிட்டு இந்து மதத்தை மட்டும்தான் கேள்வி கேட்குமா?- புகழேந்தி, கள்ளக்குறிச்சி<br /><br />என்னைப் போன்ற உண்மையான பகுத்தறி வாளனுக்கு எம்மதமும் சம்மதம் இல்லை!<br /><br />அமாவாசை மூலம் தமிழக அரசியல்வாதிகளுக்கு குறுக்குவழியில் முன்னேறும் உத்தியைக் கற்றுக் கொடுத்தீர்கள். ஆனால், நீங்கள் ஏன் அரசியலில் இறங்கவில்லை? - பாஸ்கரன், திருப்பூர்<br /><br />எனக்குனு ஒரு சமூகப் பார்வை இருக்கு. இப்ப குறிப்பிட்ட கட்சியில் சேர்ந்துட்டா, அந்தக் கட்சித் தலைமை என்ன சொல்லுதோ, அதுக்கு நான் கட்டுப்படணும். உதாரணத்துக்கு ஓட்டுக் கேட்கப் போகும்போது, பெண்கள் ஆரத்தி எடுத்துப் பொட்டு வைக்க வந்தால், இதெல்லாம் வேண்டாம், நம்பிக்கை இல்லைனு நான் சொல்லமுடியுமா? உங்க கொள்கையை எல்லாம் உங்களோடவே வெச்சுக்குங்க சார்னு கட்சி சொல்லாதா? இது எல்லாத்தையும்விட, நான் சுகவாசி. சினிமா நடிப்புக்காக மட்டும்தான் கஷ்டப்பட்டு இருப்பேன். மற்றபடி தேர்தல் பிரச்சாரத்துக்காக அலையிற மனோபாவம் எனக்கு இல்லை. என் கேரக்டரை நல்லா புரிஞ்சிக் கிட்டதாலதான் நான் அரசியலுக்கு வரலை!<br /><br />இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரித்த உங்களுக்கு, இப்போது இந்திப் படங்களில் நடிக்கும்போது மனநிலை எப்படி இருக்கும்? - சங்கர் குமார், நாசரேத்<br /><br />நண்பா சங்கர்... அப்போது இருந்து இப்போது வரை, இந்தியை யாரும் எதிர்க்கலை; இந்தித் திணிப்பைத்தான் எதிர்க்கிறோம். நான் தமிழன். எனக்குத் தமிழ் தெரியும். கணிப்பொறி, செல்போன்னு நவீன சாதனங்களை இயக்க நான் ஆங்கிலம் கத்துக்குவேன். ஆனா, ஆர்வத்தின் பேரில் நான் கத்துக்க வேண்டிய மூணாவது மொழி எது?னு நான்தான் தீர்மானிக்கணும். ஒருவேளை நான் கேரளாவில் வாழ்க்கையை நடத்த வேண்டி இருந்தா, மலையாளம் கத்துக்குவேன். ஹைதராபாத்ல செட்டில் ஆக வேண்டியிருந்தா தெலுங்கு கத்துக்குவேன். ஆனா, காலம் முழுக்க தமிழ்நாட்ல வாழப் போறவனுக்கு எதுக்கு இந்தி? அதனால் சங்கர், திணிப்புதான் தப்பு; மொழி தப்பு கிடையாது. இந்தப் புரிதல் இருந்ததால்தான், இந்திப் படத்தில் நடிக்கும்போது எனக்கு எந்த மனவருத்தமோ, கூச்சமோ இல்லை!<br /><br />நன்றி: ஆனந்த விகடன், 18.12.2013தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-19995646174370789382014-01-02T07:20:27.233+05:302014-01-02T07:20:27.233+05:30 உங்களுக்குத் தெரியுமா?
மனைவியை அடித்து, கையை உ... உங்களுக்குத் தெரியுமா?<br /> <br /><br />மனைவியை அடித்து, கையை உடைத்த கணவன் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது விசாரணை செய்த நீதிபதி முத்துசாமி அய்யர், மனுதர்மப்படி மனைவியை அடிப்பது குற்றமல்ல என்று தீர்ப்பளித்த வரலாறு உங்களுக்குத் தெரியுமா?தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-27398130913728062692014-01-02T07:19:27.067+05:302014-01-02T07:19:27.067+05:30இந்தியச் சமுதாயம் பற்றி ஆப்பிரிக்கப் பாதிரியார்
...இந்தியச் சமுதாயம் பற்றி ஆப்பிரிக்கப் பாதிரியார்<br /> <br /><br />டெஸ்மாண்ட் டுடு<br /><br />நோபல் பரிசு பெற்றவரும் தென் ஆப்பிரிக்காவின் நிற வேற்றுமை எதிர்ப்பாளருமான ஆர்ச்பிஷப் டெஸ்மாண்ட் டுடு, தான் அம்பேத்கரைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை என்று இந்து நாளிதழ் நிருபரிடம் கூறியுள்ளார். இந்திய அரசியல் சட்ட வரைவுக் குழுவின் தலைவராக அம்பேத்கர் பங்கு பெற்று இருந்தார் என்பதை அறிந்தவுடன் டுடு மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார்.<br /><br />மகாத்மா காந்திக்குச் செலுத்திய கவனத்தை நிற வேற்றுமைக்கு எதிராகப் போராடும் ஆப்பிரிக்கத் தலைவர்கள், அம்பேத்கர் மீது ஏன் செலுத்தவில்லை என்று டுடு-விடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், நாங்கள் தென் ஆப்பிரிக்காவில் இன அநீதிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும்போது நீங்கள் உங்கள் சக வாழ்வு நிலைமையை மாற்றி அமைப்பதற்கான போராளிகளைத் தேடிக் கொண்டிருந்தீர்கள். ஆகவே, வெளிப்படையாகவே அந்தந்த நாட்டின் செல்வாக்கும் சக்தியும் மிக்கவர்களை நாடிப்போக வேண்டியதாயிற்று என்று கூறினார்.<br /><br />டுடு, இன வேற்றுமை பாராட்டும் அரசுக்கு எதிராகப் போராடும் ஆப்பிரிக்கர்களுடன் ஜாதி வெறுப்புகளுக்கு எதிராகப் போராடும் தாழ்த்தப்பட்டவர்கள் கூட்டு வைத்துக்கொள்வது இயற்கைதான் என்று குறிப்பிட்டார்.<br /><br />நாம் எல்லோரும் ஜாதி வேற்றுமையைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். இந்திய சமூகத்தின் மற்றொரு பாதியினருக்கு நாம் ஏன் இந்தக் கொடுமையை அனுமதித்துக் கொண்டிருக்கிறோம் என்று கேள்வி எழுப்பிக்கொண்டு இருக்க வேண்டும், அது எல்லாம் எல்லோருக்கும் என்று எண்ணம் கொண்டு இருந்தால் உங்கள் அரசியல் அமைப்புச் சட்டம் கூறுவதைத்தான் நான் கூறுகிறேன்.<br /><br />ஆர்ச்பிஷப், தாழ்த்தப்பட்டவர்கள் நிலைமை பற்றி இந்தியச் சமுதாயம் சவாலுக்கு இழுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறார். அதற்குக் காரணம், அது மனிதத் தன்மையைப் பாதிப்பதுதான் என்றும் கூறினார்.<br /><br />நன்றி: தி இந்து 8.11.13தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-20455036832694185802014-01-02T07:07:15.476+05:302014-01-02T07:07:15.476+05:30
சிந்தித்துப் பார்
நீ கிணற்றுத் தவளையாக இருக்க வ...<br />சிந்தித்துப் பார்<br /><br /><br />நீ கிணற்றுத் தவளையாக இருக்க விரும்புகிறாயா? அல்லது வேடந்தாங்கலில் வந்து இளைப்பாறிப் போகும் வெளிநாட்டுப் பட்சியாக இருக்க விரும்புகிறாயா? மனிதனே சிந்தித்துப் பார். - (விடுதலை, 22.9.1967)<br /><br />Read more: http://viduthalai.in/page1/72838.html#ixzz2pCW5uqAL<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-61558191173966895642014-01-02T07:06:22.051+05:302014-01-02T07:06:22.051+05:30
பெரியார் உலகம் - பெரியார் பேருருவச் சிலை தோழர்களே...<br />பெரியார் உலகம் - பெரியார் பேருருவச் சிலை தோழர்களே, கவனம்! கவனம்!!<br /><br />கழகத் தோழர்களே! நமது நெஞ்சங்களில் ஒவ்வொரு நொடியும் உசுப்பி விட்டு இருப்பது பெரியார் உலகம்! பெரியார் உலகம்!! பெரியார் பேருருவச் சிலை! பெரியார் பேருருவச் சிலையே!!<br /><br />முதற்கட்டமாக தமிழர் தலைவரின் 81ஆம் ஆண்டு பிறந்த நாளில் (2.12.2013) தஞ்சையில் நமது இலக்கை விஞ்சியும் தங்கத்திற்கான நிதியைத் தந்து மகிழ்ந்தோம்.<br /><br />அந்த இலக்கு என்பது குறைந்தபட்சமே தவிர - அதுதான் முடிந்த இலக்கு அல்ல! தேவைக்கான அய்ந்து விழுக்காடே அது!<br /><br />பல மாவட்டங்கள் இலக்கை விஞ்சி இலச்சினை பதித்து விட்டன. சில மாவட்டங்கள் இன்னும் கணக்கையே தொடங்க வில்லை; வேறு சில மாவட்டங்கள் பாதிக் கிணறு தாண்டி யுள்ளன.<br /><br />வெளி நாட்டுச் சுற்றுப் பயணத்தில் இருக்கும் நமது தலைவர் ஜனவரி முதல் வார இறுதியில் தமிழகம் திரும்ப உள்ளார்கள்.<br /><br />அதற்குள் அவசர அவசரமாக, கச்சையை இறுக்கிக் கட்டி, கடமையைச் சக்கரமாக்கிச் சுழன்று சுழன்று; மற்றவர்களால் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் என்பதைச் செயலில் காட்டும் வகையில் கட்சிகளைக் கடந்து, தமிழ்ப் பெருமக்களை அணுகிப் பெரும் பொருள் திரட்டி, தந்தை பெரியார் தம் பெரும் பணிக்கு ஆயத்தமாவீர்! ஆயத்தமாவீர்!!<br /><br />மாநிலப் பொறுப்பாளர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் கழகத்தின் அனைத்து அணிகளைச் சேர்ந்தவர்களும் ஒரு மூச்சுப் பிடியுங்கள் - நீங்கள் எதிர்ப் பார்ப்பதைவிட தந்தை பெரியார் அவர்களுக்காக அளப்பரிய அன்புடனும், ஆர்வத்துடனும் நிதியினை அளித்திடக் காத்திருக் கிறார்கள், அஞ்சல் துறை ஊழியரைப் போல அதனை பெற்றுக் கொள்வதுதான் நமது வேலை.<br /><br />வெளிநாடு சென்று பிரச்சாரப் பணி ஆற்றி வருகை தரவிருக் கின்ற நமது தலைவரை வெறுங்கையோடு சந்திப்பதைவிட, 135 அடி உயரத்தில் (பீடத்தோடு) செம்மாந்து நிற்கவிருக்கும் சகாப்தத் தலைவருக்குச் சிலை எழுப்பும் - பெரியார் உலகம் படைக்கும் - பெரும் பணிக்கான நிதியோடு வருவீர்களேயானால், அது எவ்வளவு சிறப்பாக இருக்கும்! தலைவருக்கும் எத்தகைய மகிழ்ச்சியைக் கொடுக்கும்.<br /><br />எண்ணிப் பார்ப்போம் - இலக்கை முடித்து இறும்பூ தெய்துவோம்!<br /><br />- கலி. பூங்குன்றன்<br />துணைத் தலைவர்<br />திராவிடர் கழகம்<br />பெரியார் உலகம் நிதி ஒருங்கிணைப்பாளர்<br /><br />சென்னை<br />30.12.2013<br /><br />Read more: http://viduthalai.in/page1/72839.html#ixzz2pCVu9wJ3<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-56718977576515316992014-01-02T07:04:38.055+05:302014-01-02T07:04:38.055+05:30
எது ஹிந்து மதம்?
கேள்வி: ஹிந்து மதத்தின் பலம்...<br />எது ஹிந்து மதம்?<br /><br /> <br /><br />கேள்வி: ஹிந்து மதத்தின் பலம் என்ன? பலவீனம் என்ன?<br /><br />பதில்: பெரும் கூட் டத்தைச் சேர்ந்து அதன் மூலம் மதத்தின் பலத்தை வளர்க்க வேண்டும் என்று நினைக்காமல் ஒவ்வொரு தனி மனிதனும் தன்னை உயர்த்திக் கொள்ள வழி வகைகளைக் கூற வேண் டும் என்ற நினைப்பில் அமைந்துள்ளது ஹிந்து மதம். ஒவ்வொரு மனித னும் உயர்ந்தால் சமூகம் தானாக உயரும். அது ஹிந்து மதத்தின் வலு. ஆனால் இப்படிச் செய் தால் எந்தவொரு அமைப்போ, எந்தவொரு தலைமையோ இல்லாமல் பல்வேறு உபதேசங்கள் பல்வேறு ஸந்நியாசிகள், பல்வேறு போதகர்கள் எல்லாம் தங்கள் அமைப் புகளை உருவாக்கிக் கொள்ள ஹிந்து மதம் இடம் கொடுக்கிறது. அது அதனுடைய பலவீனம். அதாவது எது பலமோ அது பலவீனமாகவும் திகழ்கிறது. -(துக்ளக் 1.1.2014 பக்கம் 25)<br /><br />இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார் திருவாளர் சோ ராமசாமி அய்யர்? பலத்தைப் பல வீனமாகவும் பலவீனத் தைப் பலமாகவும் கருது கிறதா ஹிந்துமதம்? அவர் கருத்துப்படியே இதன் மூலம் உணரப் படுவது என்ன?<br /><br />ஹிந்து மதத்தின் அடிப்படையே தவறானது என்று ஆகி விட்டதா இல்லையா?<br /><br />தவறு என்று தெரிந்த பிறகும், அதனைத் திருத் துவது தானே? ஏன் அதற்கான முயற்சியில் பார்ப்பனர்கள் - சங்க ராச்சாரியார்கள் ஈடுபட வில்லையாம்? பதில் சொல்லுவாரா திருவாளர் சோ?<br /><br />அப்படி கை வைத்தால் வைக்கப்பட்ட கை துண் டாகி விடும் என்பதால் தானே?<br /><br />ஆதி அந்தமில்லா. ஆண்டவன் படைத்த மதமாயிற்றே - அதில் கை வைக்க முடியுமா?<br /><br />சரி, கடவுளால் கற்பிக் கப்பட்ட வழி என்பதை ஒரு வாதத்துக்காகவே ஒப்புக் கொள்வோம். அப் படி பகவானால் உற்பத்தி செய்யப்பட்ட மதம், பலத் தைப் பலவீனமாகவும், பலவீனத்தைப் பலமாக வும் எப்படி இருக்க முடி யும்? அப்படியானால் ஹிந்து மதத்தைப் படைத்த பக வானையே குறை கூறு கிறாரா திருவாளர் சோ?<br /><br />உண்மை என்னவென் றால் ஹிந்து மதம் என்ற பெயரில் யார் எதை வேண்டுமானாலும் கூற லாம், உளறலாம். நாத்தி கனும் ஹிந்துவாக இருக் கலாம்; ஆத்திகனும் ஹிந்துவாக இருக்கலாம் என்றால் இதற்குப் பெயர் என்ன? கட்டுக்கோப்பும், கருத்துத் தெளிவும் இல்லாத, தடி எடுத்தவன் எல்லாம் தண்டக்காரன் என்ற புறம்போக்கு மதம் தான் ஹிந்து மதம் என்று விளங்கிடவில்லையா? - மயிலாடன்<br /><br />Read more: http://viduthalai.in/page1/72822.html#ixzz2pCVTS6VA<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-9671086964768455032014-01-02T06:58:26.212+05:302014-01-02T06:58:26.212+05:30
தமிழ் பிரபாகரனை கைது செய்ததற்கு தமிழர் தலைவர் கண்...<br />தமிழ் பிரபாகரனை கைது செய்ததற்கு தமிழர் தலைவர் கண்டனம்<br /><br /><br /><br />ஜூனியர் விகடன் வார ஏட்டின் செய்தியாளர் திரு. தமிழ் பிரபாகரனை இலங்கை அரசு அங்கே அவர் ஏதோ நிழற்படம் எடுத்தார் என்ற சாக்கைக் காட்டி கைது செய்து நடவடிக்கை எடுக்க முனைந்ததை, நாம், வன்மையாகக் கண்டிக்கிறோம்.<br /><br />இதுபற்றி நமது நாடாளுமன்ற உறுப்பினர், வெளியுறவுத் துறை அமைச்சரிடம் பேசி, ஜனநாயக உரிமைப்படி பத்திரிகையாளர் சுதந்திரத்தைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொண்டு அவரை விடுவித்து இருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.<br /><br />ஏற்கெனவே அங்கே பல பத்திரிகையாளர்கள் காணாமற் போனதாக தகவல்கள் உண்டு. அவர்கள் சிங்களவர்கள் ஆன போதிலும்கூட!<br /><br />பிரபாகரன் என்ற பெயரேகூட அந்த ஆட்சியினருக்கு ஒவ்வாமையைத் தந்திருக்கக் கூடும்!<br /><br />உடனடியாக இதற்குரியவைகளைச் செய்து அவரைத் தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்திருப்பது நமது மத்திய அரசின் முதற் கடமையாகவே கருதுகிறோம்!<br /><br />பத்திரிகையாளருக்கு, தூதுவரைப் போல சில தனி உரிமைகளும் உண்டு அவர்கள் கடமையாற்றும்போது என்பது விளக்கப்பட வேண்டியதில்லையே!<br /><br /><br />கி.வீரமணி<br />தலைவர்,திராவிடர் கழகம்<br /><br />29.12.2013<br /><br />Read more: http://viduthalai.in/page1/72811.html#ixzz2pCTtSs6p<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-21137735601950019272014-01-02T06:57:28.695+05:302014-01-02T06:57:28.695+05:30தவறுகள் நடந்தால் மட்டுமே அரசுகள் குறுக்கிட உரிமையு...தவறுகள் நடந்தால் மட்டுமே அரசுகள் குறுக்கிட உரிமையும், அதிகாரமும் உண்டு.<br /><br />சமூக முன்னேற்றத்திற்கு உதவி<br /><br />எனவே தேவையில்லாத அடுத்த தேர்தல் இன்னும் சில மாதங்களில் வரவிருக்கும் நிலை யில், இருப்பவைகளை மாற்றி குழப்பங்களை கோலோச்ச செய்யும் முடிவுகளை கைவிட்டு, இயங்கும் பல்கலைக் கழகங்கள் - நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளை வளர்ச்சி யடைய வழி காட்டினால் அது சமூக முன்னேற்றத் திற்கு மத்திய அரசு உதவியதாகும்!<br /><br />அவசர அவசியம்!<br /><br />எனவே, மத்திய அரசு, பிரதமர் மன்மோகன் சிங், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் திருமதி. சோனியா காந்தி ஆகியோர் இதில் தலையிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுத்து, குளறுபடிகளைத் தவிர்ப்பது அவசரம் - அவசியம்.<br /><br /> <br /><br />கி.வீரமணி<br />தலைவர்,திராவிடர் கழகம்<br /><br />முகாம்: சிங்கப்பூர்<br /><br />29.12.2013<br /><br />Read more: http://viduthalai.in/page1/72810.html#ixzz2pCTL8kQXதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-80218467679337114472014-01-02T06:57:12.451+05:302014-01-02T06:57:12.451+05:30
இருக்கின்றபல்கலைக்கழகங்களைஊக்கப்படுத்தாமல் புதியப...<br />இருக்கின்றபல்கலைக்கழகங்களைஊக்கப்படுத்தாமல் புதியபல்கலைக்கழகங்களைதொடங்குவதா?<br /><br />மத்தியக் கல்வித் துறையில் நடைபெறும் குளறுபடி- குழப்பங்களை நீக்க<br />பிரதமர் மன்மோகன்சிங், திருமதி. சோனியா காந்தி தலையிடவேண்டும்<br /><br />திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை<br /><br />இருக்கின்ற பல்கலைக் கழகங்களை ஊக்கப்படுத்தாமல், புதிய பல்கலைக் கழகங்கள் தொடங்குவதற்கான அறிவிப்பா? மத்தியக் கல்வித் துறையில் நடைபெறும் குளறுபடி, குழப்பங்களை நீக்க பிரதமர் மன்மோகன்சிங், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் திருமதி.சோனியா காந்தி ஆகியோர் தலையிட்டு நடவடிக்கை எடுப்பது அவசர - அவசியம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.<br /><br />அவரது அறிக்கை வருமாறு:<br /><br />அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (U.P.A.) ஆட்சியில் மிகவும் குளறுபடிகளுக்கு ஆளான ஒரு துறை இருக்கிறது என்றால் அது, மனித வள மேம்பாட்டுத் துறை என்று அழைக்கப்படும் மத்தியக் கல்வித் துறையாகும். (மாநிலத்தில் அ.தி.மு.க. ஆட்சியின் கல்வித் திட்டங்கள் செயற்பாடுகள் அதற்குச் சற்றும் சளைத்ததல்ல. அது ஒருபுறம் இருக்கட்டும்).<br /><br />மிகப் பெரிய தவறு<br /><br />கல்வித்துறையை கபில்சிபல் அவர்களிடம் கொடுத்ததைவிட மிகப் பெரிய தவறு வேறு இல்லை. மக்கள் தொடர்போ, சமூகநீதிக் கொள்கை பற்றிய புரிந்துணர்வோ அறவே இல்லாத மேல்தட்டு வர்க்கத்தவர் அவர்.<br /><br />அவர் சில கல்வியாளர்கள் என்பவர்களிடம் பல விஷயங்களை விட்டு, அவர்களது விருப்பு வெறுப்புக்கேற்ப தத்தம் இஷ்டத்திற்கு உயர் கல்வித் துறை தொடங்கி, பல வகையிலும் பிரச்சினைகளை உருவாக்கும் நிலவரங்களையும், குழப்பங்களையுமே உருவாக்கி விட்டனர்!<br /><br />அவருக்கு அடுத்து வந்த திரு. பல்லம்ராஜூ அவர்கள் மேல்தட்டு அறிஞர். அவரது தெலங் கானா பிரிவினை பிரச்சினை காரணமாக அவர் கல்வி அமைச்சராக தொடர்ந்து பணியாற்றி கோப்புகளைப் பார்த்து, அதிகாரிகளிடம் வேலை வாங்குகிறாரா இல்லையா என்பதே நாட்டு மக்களுக்கு புரியாத புதிராக உள்ளது.<br /><br />மத்தியப் பட்டியலில் ஒன்றான பொதுப் பட்டியல் (Concurrent List) என்பதில் 1976இல் நெருக்கடி காலத்தில் கல்வியை இணைத்ததின் விளைவு, *(மாநிலப் பட்டியலிலிருந்து எடுத்து அதில் இணைப்பு).<br /><br />குழப்பங்களும், குளறுபடிகளும்!<br /><br />பல்வேறு குழப்பங்களும், முரண்பாடுகளும், குளறுபடிகளும் மத்திய கல்வித் துறையில் தொடர்ந்து அரங்கேறி தலைவலியை மக்களுக் கும், ஆட்சியாளருக்கும் ஏற்படுத்தவே செய் துள்ளன!<br /><br />எடுத்துக்காட்டாக, உயர்கல்வி என்பது சீனாவில் 20 விழுக்காடு என்றால், நம் நாட்டில் 6 முதல் 8 விழுக்காடுதான் என்ற பரிதாப நிலை!<br /><br />ஒருபுறத்தில் பல்கலைக் கழகங்கள் புதிதாக 1500 உருவாக வேண்டும் நம் நாட்டில் என்று அறிவுசார் கமிஷன் (Knowledge Commission)பரிந்துரை,<br /><br />1500-க்கு மேல் தேவை என்று 11ஆவது அய்ந்தாண்டு திட்டத்தில் மதிப்பீடு - பரிந்துரை,<br />ஆனால், தேவையற்று வெளிநாட்டில் போணி யாகாத சில பல்கலைக் கழகங்களை இங்கே நுழைப்பது என்ற தன்னிச்சையாக முடிவு செய்து மத்திய மனித வளத்துறை அமைச்சர், வேண்டு மென்றே இங்கே துவக்கப்பட்ட நிகர் நிலைப் பல்கலை கழகங்கள்மீது வீண்பழி தூற்றி, வழக்கு மன்றம் வரை சென்று கடந்த 4 ஆண்டுகளாக அவற்றின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட் டுள்ள வேதனையான நிலையில் இவ்வாண்டு மேலும் 269 புதிய பல்கலைக் கழகங்களைத் தொடங்க அறிவிப்பு!<br /><br />இதில் உள்ள சுய முரண்பாட்டைக் கவனிக்க வேண்டும்; இருப்பதை - வளருவதை ஊக்கப்படுத் தாமல் மூடி, புதியதைத் துவக்குவார்களாம்! என்னே விசித்திரம்!<br /><br />கண்டனத்திற்குரியது<br /><br />இந்த நிலையில் பல்கலைக் கழகங்களோ, கல்லூரிகளோ வெளிநாட்டு, உள்நாட்டுப் பல்கலைக் கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் எது செய்தாலும் மத்திய கல்வித் துறையின் முன் அனுமதி பெற்றாக வேண்டும் என்பதாக 2010 புதிய மசோதாவில் இணைத்து, புதியதாக அறிவிப்புகள் வந்திருப்பது மிகவும் கண்டனத் திற்குரியதாகும்.<br /><br />பல்கலைக் கழகங்களின் சங்கத் தலைவர் ஏ.ஐ.கூ வேந்தர் திரு. விசுவநாதன் அவர்களும், கல்வி யாளர்களும் இதனைக் கண்டித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்கள். (செய்தி கீழே காண்க)<br /><br />தான்தோன்றித்தன முடிவை திரும்பப் பெற...<br /><br />அவர்தம் கருத்து மத்திய கல்வித்துறைக்கு காலத்தால் தரப்பட்ட சரியான அறிவிப்பு ஆகும். கல்வியாளர்கள் எவரையும் கலந்து ஆலோசிக் காமல், தான் தோன்றித்தனமாக எடுத்த முடிவு இது. இது தவறானதாகும். திரும்பப் பெற காரணங்கள் வருமாறு:<br /><br />1. 2010 விதிகள் பற்றிய வழக்கு நீதிமன்றத் தில் விசாரணையில் உள்ளது.<br /><br />2. சில பேர் தடையாணையும் வாங்கியுள் ளனர்.<br /><br />3. பல்கலைக் கழகங்கள் என்றால் அவை தன்னாட்சி (Autonomous) உரிமை படைத் தவை. அதில் தேவையற்ற அரசியல் தலை யீடுகளோ, குறுக்கீடுகளோ இருக்கக் கூடாது.<br /><br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-9035192407379405242014-01-02T06:55:05.730+05:302014-01-02T06:55:05.730+05:30
சுயமரியாதை
சுயமரியாதை இயக்க மென்றோரியக்கம் தோன்ற...<br />சுயமரியாதை<br /><br />சுயமரியாதை இயக்க மென்றோரியக்கம் தோன்றிய காலத்தில் பலர் பல விதமாகப் பேசியதுண்டு. ஆனால், இப்பொழுதோவெனில், இவ்வியக்கம் பலரால் ஒப்புக் கொள்ளக்கூடிய தாயும், மனிதனுடைய வாழ்விற்கும் உலக முற் போக்குக்கும் இன்றியமையாததென நம்மக்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள். உணர்ந்தும் வருகிறார்கள். இப்பொழுது எங்கு பார்த்தாலும் சுயமரியாதைப் பேச்சாகத்தானிருக்கிறது. நம் நாடு, வெளிநாடு தேசியவாதிகளும்கூட இச்சுயமரியாதையென்னும் வார்த்தையை உபயோகிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஸ்ரீ காந்தியும் சுயமரியாதை யைப்பற்றி பேசுகிறார். ஒத்துழையாமையே சுயமரியாதைக்காக ஆரம்பித்ததே ஒழிய சுயராஜ்யத்திற்காக அல்ல. இப்பொழுது கொஞ்சகாலமாய் நமது நாட்டில் நடந்துவரும் ராயல் கமிஷன் பகிஷ்காரம் என்கின்ற கூச்சல்கூட சுயமரியாதைக் காகத்தான் என்று சொல்லுகிறார்கள்.<br /><br />இச்சுயமரியாதைச் சங்கத்தின் கொள் கைகள் என்னவெனிலோ, பிறப்பில் உயர்வு தாழ்வில்லை என்பதும், மேல் கீழ் இல்லை யென்பதும் தானேயல்லாமல் எந்தத் தனி வகுப்பாரையும் இழிவுபடுத்தவில்லை யென் பதையும் உங்களுக்கு நினைப்பூட்டு கின்றேன். ஆனால் நம் நாட்டுப் பார்ப்பனர்கள் தங்களை ஏதோ துவேஷிப்பதாகக் கூறி வருகின்றனர். இது அக்கூட்டத்தாரின் யோசனையின்மை யாலும், பேராசையாலுமே ஏற்படுகிறது. ஆனால் தாழ்த்தப்பட்டவர்களென்று சொல்லிக்கொள்கிறவர்களுக்கும் நமக்கும் சுயமரியாதை தத்துவம் எவ்வளவு பயன்படு கிறதோ அதைவிட அதிகமாக பார்ப்பனர் களுக்கும் பயனுண்டு.<br /><br />பார்ப்பனரல்லாதாராகிய நாம் எவ்வளவு தூரம் இழிவுபடுத்தி வைக்கப் பட்டிருக்கின் றோமோ, அந்த அளவுக்கு பார்ப்பனர்கள் சுகம் அனுபவித்து வருகிறார்கள். நாம் எவ்வளவுக் கெவ்வளவு கொடுமையுடன் நடத்தப்படு கின்றோமோ அவ்வளவுக்கவ்வளவு அவர் களுக்கு நன்மையாகவே இருக்கிறது. இவ்வியக்கத்தின் பயனால் நாம் மாத்திரம் சுகப்படுவதல்லாமல், பார்ப்பனர்களும் இதன் மூலமாய் தங்கள் இழிவைப் போக்கிக் கொள்ளுகிறவர்களாகிறார்கள். உண்மையாக, கடைசியாக இவ்வியக்கத்தால் யாருக்காவது கடுகளவாவது துன்பம் நேரிடுமா என்றால் இல்லவே இல்லை. ஆனால், அரசாங்கத் தாருக்கு மாத்திரம் கொஞ்ச காலத்திற்கு கஷ்டமாகத்தானிருக்கும். ஏனெனில், நாம் எவ்வளவு தூரம் சுயமரியாதையற்றிருக்கின் றோமோ, அவ்வளவு தூரம் நம்மை இழிவுபடுத்தி நம்மிடமிருந்து அவர்கள் கொள்ளையடித்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், அவர்களுக்குங் கூட கொஞ்ச நாளைக்குள் புத்தி வந்து விடும். எத்தனை நாளைக்குத்தான் தூங்குகிறவன் தொடையில் கயிறு திரிப்பதென்று சொல்லி விலகி விடுவார்கள். பின்னர் யாரும் சுதந்திரத் துடன் வாழலாம். ஆகையால், வாழ்க்கையின் பரிசுத்தத்திற்கும் சுயமரியாதையே அடிப் படையானது. இதைப்பற்றி எத்தனையோ பெரியார்கள் கூறியிருக்கின்றனர். கவரிமான் ஒரு மயிரிழப்பின் உயிர் வாழாது என்பதுபோல், மனிதனும் மானமிழந்து வாழ விரும்பான். ஆகவே, நம் மானத்தை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், மனிதத் தன்மை யோடிசைந்த வாழ்க்கை நடத்தவேண்டு மென்றால் சுயமரியாதைதான் வேண்டற்பாலது. இப்பொழுது மணி 12 ஆகிவிட்டது. மீண்டும் மாலையில் இம்மகாநாடு கூடவேண்டியிருப்ப தால் இத்துடன் எனது பிரசங்கத்தை முடித்துக் கொள்வதுடன் எனக்கு அன்புடன் இவ்வக் கிராசனப் பதவியை அளித்த அன்பர் களுக்கும் எனது மனமார்ந்த வந்தனத்தைச் செலுத்திக் கொள்ளுகிறேன்.<br />- குடிஅரசு - சொற்பொழிவு - 04.12.1927<br /><br />Read more: http://viduthalai.in/page1/72762.html#ixzz2pCSFNtjYதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-52022294205264310392014-01-02T06:55:01.094+05:302014-01-02T06:55:01.094+05:30திருநெல்வேலி ஜில்லா சுயமரியாதைச் சங்க மகாநாடு
இவ்...திருநெல்வேலி ஜில்லா சுயமரியாதைச் சங்க மகாநாடு<br /><br />இவ்வாண்டு விழாவுக்கு நான் தலைமை வகிக்க வேண்டுமென்று கட்டளை இட்ட கனவான்கள் எல்லாம் என்னைப்பற்றி அதிகம் கூறினார்கள். அது என்னை மிகுதியும் வெட்கப்படும்படி செய்துவிட்டது. அதனால் நான் என்ன பேசவேண்டு மென்று எண் ணினேனோ, அதை மறக்கச் செய்தது. அவர் களுக்கு என்னிடமும், எனது இயக்கத்திடமும் உள்ள பற்றும், அவர்களின் இயற்கையான பெருந்தன் மையும், அளவுக்கு மீறி என்னைப் புகழச்செய்தது. அப்புகழுரைகளுக்கு நான் சிறிதும் அருகனல்ல, ஆனாலும் (இல்லை இல்லை முழுதும் பொருந்தும் இன்னமும் அதிகமாயும் பொருந்தும் என்கின்ற கூச்சல்) அதற்கு வந்தனம் செலுத்துகின்றேன்.<br /><br />இயக்கம் ஆரம்பித்த காலத்தில் எதிர்ப்புகள் பலமாய் இருந்தது. இன்னும் யாவரும் ஏகமனதாய் ஆதரிப்பதாகவும் எண்ண இட மில்லை. இன்னும் அதிக எதிர்ப்பு இருக்கிறது. ஆயினும், இத்தகைய மகான்கள் எல்லாம் ஆதரவு அளித்து வருவதைக் கண்டு, மிக தைரியங்கொண்டு, அந்த ஆசையின்மீது அவர்கள் உரையை நான் சகித்துக் கொண்டி ருக்கிறேன். குடிஅரசைப்பற்றி மிக அதிக மாகக் கூறினார்கள். அதில் உள்ள குற்ற மெல்லாம் எனக்குத் தெரியும். அதில் உள்ள மெல்லின, வல்லினம் போன்ற பல இலக் கணப் பிழைகளும் மற்றும் பல பிழைகளும் எனக்குத் தெரியும். இதற்காக நான் இலக் கணம் கற்கப்போவதில்லை. இவ்வாண்டு விழாவுக்கு எனக்குக் கடிதம் அனுப்பா விட் டாலும் எங்கிருந்தாலும் ஓடி வந்துவிடுவேன். இந்த நிலையில் உள்ள என்னையே தலைமை வகிக்க வேண்டுமென்று கூறியது எனது பாக்கியமே யாகும். சிறந்த கல்வியாளர்களும், பெரியார்களும் நிறைந்த இந்த ஜில்லா வாசிகளான நீங்கள் இவ்வியக்கத்துக்கு இவ்வளவு ஆதரவு காட்டி வருவதைக் கண்டு நான் பெருமை அடைவது மட்டுமல்ல, மற்ற ஜில்லாவாசிகளும் உங் களுடன் போட்டியிட்டு தங்கள் சுய மரியாதையை நிலைநிறுத்துவதில் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டு மென்று மீண்டும் அறிவித்துக் கொள்ளு கிறேன்.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-67968906034221748012014-01-02T06:49:15.179+05:302014-01-02T06:49:15.179+05:30
கடவுள் சக்தி இவ்வளவுதான்
திருப்பதி சென்று திரும...<br />கடவுள் சக்தி இவ்வளவுதான்<br /><br /><br />திருப்பதி சென்று திரும்பிய பக்தர்கள் இருவர் சாவு<br /><br />சென்னை, டிச.28-திருத்தணி அருகே டேங்கர் லாரி மீது கார் மோதியதில் குழந்தை உள்பட இருவர் இறந்தனர். நால்வர் படுகாய மடைந்தனர்.<br /><br />சென்னை கீழ்கட்டளை அருள் முருகன் நகர் திருப்பரங்குன்றம் தெருவைச் சேர்ந்தவர் ராமாச்சாரி. இவரது மனைவி மனோரஞ்சிதம். இவர்களது மகன் பாலாஜி (46). இவரது மனைவி நாகமணி (34). இவர்களுக்கு விக்னேஷ் (16), நந்த குமார் (1) என்ற மகன்கள் இருந்தனர்.<br /><br />கடந்த 25ஆம் தேதி குடும்பத்தினர் அனைவரும் திருப்பதி கோயிலுக்கு சென்றுள்ளனர். அங்கு தரிசனம் முடிந்து, நேற்று முன்தினம் இரவு சென்னை புறப்பட்டனர். காரை, பாலாஜி ஓட்டி வந்தார். திருத்தணி அருகே கார் வந்துகொண்டு இருந் தது. அப்போது ஆந்திராவில் இருந்து புதுச்சேரிக்கு பாமாயில் ஏற்றி சென்ற லாரியின் பின்புறம், கார் மோதியது. காரின் முன்பகுதி நொறுங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே விக் னேஷ், நந்தகுமார் ஆகியோர் பரி தாபமாக உயிரிழந்தனர். மற்றவர்கள் படுகாயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.<br /><br />தகவலறிந்த திருத்தணி ஆய்வாளர் சிகாமணி, எஸ்அய் அண்ணாதுரை ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந் தனர். உயிருக்கு போராடியவர்களை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பினர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப் பினர். அவர்களுக்கு சிகிச்சை அளிக் கப்படுகிறது.<br /><br />திருத்தணி காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்து, தர்மபுரி மாவட்டம், அரூர், அக்ரஹாரம் தெருவை சேர்ந்த லாரி ஓட்டுநர் குமாரை (36) கைது செய்தனர்.<br /><br />Read more: http://viduthalai.in/page1/72750.html#ixzz2pCRXfLfh<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-81132938180880404712014-01-02T06:47:29.580+05:302014-01-02T06:47:29.580+05:30
விண்வெளித் துறை எட்டாத துறையா?
1975 ஆம் ஆண்டு ம...<br />விண்வெளித் துறை எட்டாத துறையா?<br /><br /><br />1975 ஆம் ஆண்டு முதற் கொண்டு இந்திய விண்வெளி ஆய்வு (i s r o) மற்றும் விண்வெளித் துறையும் நாடுமுழுவதிலும் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களை வேலைக்கு எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தது, ஆராய்ச்சி அல்லாத முன்னேற்றப் பணிகளைச் செய்வதற்கான அறிவியல் மற்றும் தொழில் நுட்ப முதல் தர நேரடிப் பணிகளுக்கான இட ஒதுக்கீடு ஆணைகள் பின்பற்றப்படுவதில்லை. 10 ஆண்டு கால நீண்ட போராட்டத்திற்குப் பிறகு டில்லியில் உள்ள தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் விண்வெளித் துறைக்கு ஒரு பரிந்துரையை அனுப்பியது. அதன் அடிப் படையில் 23-06-1975 தேதியிட்ட நிர்வாக சீர்திருத்த துறையின் O.M.No.9.02.1973ESST (SCT) தாழ்த்தப் பட்டோருக்கான இட ஒதுக் கீட்டாணையை நடைமுறைப்படுத்தி அது தொடர்பான அறிக்கையை தேசிய தாழ்த்தப் பட்டோருக்கான ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும், ஆனால் டில்லியில் உள்ள தாழ்த்தப் பட்டவர்களுக்கான தேசிய ஆணையத்திற்கு கீழ்ப்படியாமல் விண்வெளித் துறை புறக் கணிக்கிறது, இந்த அறிக்கை அனுப்பி 60 நாட்கள் கடந்து விட்ட நிலையில், டில்லி தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் ஆணையின் படி விண்வெளித் துறை உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கு மக்கள் எழுச்சியை வெளிப்படுத்த இந்த விவரத்தை அகில இந்திய அளவில் விளம்பரம் கொடுத்து தாழ்த்தப்பட் டோருக்கான இடஒதுக்கீட்டினை அமல் செய்ய ஆவன செய்யவேண்டும் என்ற குரல் எழுந் துள்ளது. திராவிடர் கழகம் தொடர்ந்து விதி விலக்கின்றி அனைத்துத் துறைகளிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறது. விதி விலக்கு என்று குறிப்பிட்ட துறைகளை ஒதுக்கி வைத்தால், நாளடைவில் விதி விலக்குப் பட்டியலில் உள்ள துறைகளின் எண்ணிக்கைதான் விரிவடைந்து போகும்.<br /><br />எந்தத் துறையாக இருந்தாலும் சரி, அதில் குறிப்பிட்ட உயர் ஜாதி வட்டத்தைச் சேர்ந்த வர்கள்தான் இடம் பெற முடியும்என்ற நிலை இருப்பது நியாயமாகாது; தகுதி, திறமை என்ற தந்திர வலையை உருவாக்கி, குறிப்பிட்ட உயர் ஜாதி யினர் மட்டுமே ஏக போகக் குத்தகை தாரர்களாக இருந்து வருவதை இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தான் அனுமதிக்க முடியும்?<br /><br />மின்னஞ்சலைக் (E-Mail) கண்டுபிடித்த சிவ. அய்யாதுரை என்பவர் திருவில்லிப்புத்தூரை யடுத்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்தான்.<br /><br />ஆனாலும் இந்தியப் பார்ப்பன ஊடகத்தார் அவரின் அருஞ் சாதனையை மூடி போட்டு மறைத்து விட்டனரே!<br /><br />மும்பையைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட பார்ப்பன ஆங்கில இதழின் ஆசிரியர் தன்னைப் பற்றி சொன்னதை சென்னை நிகழ்ச்சியில் விஞ்ஞானி சிவா அய்யாதுரை எடுத்துக் கூறிக் குமுறினாரே!<br /><br />பார்ப்பனர் அல்லாத சிவ அய்யாதுரை எப்படி இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்க முடியும் என்று கூறினாராம். இதுதான் இன்றைக்கும் இருக்கும் பார்ப்பன மனப்பான்மை.<br />தகுதி திறமை எல்லோருக்கும் பொது என்பதை ஒடுக்கப்பட்ட மக்கள் நிருபித்து வருகிறார்கள். எனவே விண்வெளித்துறை உட்பட அனைத்துத் துறைகளிலும் இடஒதுக் கீடு தேவை - இத்திசையில் திராவிடர் கழகம் தொடர்ந்து போராடும்.<br /><br />Read more: http://viduthalai.in/page1/72745.html#ixzz2pCQsvU88<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-26198175839527235582014-01-02T06:43:20.358+05:302014-01-02T06:43:20.358+05:30
பி.ஜே.பி.யின் இரட்டை வேடம் : கிழிக்கிறார் கபில்சி...<br />பி.ஜே.பி.யின் இரட்டை வேடம் : கிழிக்கிறார் கபில்சிபல்<br /><br /><br />வேவு பார்ப்பு விவகா ரத்தில் பாஜக இரட்டை நாக்குடன் இருவேறு விதமாக பேசி வருகிறது என்று மத்திய அமைச்சர் கபில் சிபல் குற்றம் சாட்டியுள்ளார்.<br /><br />இதுதொடர்பாக அவர் தனது இணையதளத்தில் கூறியிருப்பதாவது:<br /><br />கோத்ரா கலவரம் தொடர்பாக விசாரிக்க முதல்வர் நரேந்திர மோடி, நானாவதி ஆணையத்தை நியமித்தார். அந்த ஆணை யம் 4 மாதங்களில் விசா ரணை அறிக்கையை தாக் கல் செய்திருக்க வேண்டும். ஆனால், சுமார் 11 ஆண்டு கள் ஆகிவிட்டன. இன் னும் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. பெண் பொறியாளர் வேவு பார்க்கப்பட்ட விவகா ரம் தொடர்பாகவும் முதல்வர் மோடி விசா ரணை ஆணையம் நியமித்துள்ளார். இந்த ஆணையமும் நானா வதி ஆணையம் போல் தான் செயல்படும்.<br /><br />பெண் பொறியா ளர் வேவு பார்க்கப் பட்டதில் இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டம், டெலிகிராப் சட்டம் ஆகியவை அப்பட்டமாக மீறப் பட்டுள்ளன. ஒரு இளம்பெண்ணின் தனிப்பட்ட உரிமை யும் பாதிக்கப்பட்டி ருக்கிறது.<br /><br />இதன் காரண மாகத் தான் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆணையம் பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட் லியின் தொலைப்பேசி உரையாடல் விவரங்கள் வெளியான விவகாரம் குறித்தும் விசாரணை நடத்தும்.<br /><br />மேலும் இமாசலப் பிரதேச முதல்வர் வீர பத்ர சிங், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது அவரது தொலைப் பேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் குறித்தும் விசாரணை நடத்தும்.<br /><br />மாறி மாறி பேசும் பா.ஜ.க.<br /><br />அருண் ஜேட்லியின் தொலைப்பேசி உரை யாடல் விவரம் வெளி யானபோது, அதுதொடர் பாக விசாரணை ஆணை யம் அமைக்க வேண்டும் என்று பாஜக தலை வர்கள் குரல் எழுப்பினர். அதேநேரம் இளம் பெண் வேவு பார்ப்பு விவகாரம், இமாசலப் பிரதேச முதல்வர் வீர பத்ர சிங்கின் தொலைப் பேசி உரையாடல் ஒட் டுக் கேட்பு ஆகியவை குறித்து ஆணையம் அமைக்க பாஜக தலை வர்கள் எதிர்ப்பு தெரி விக்கின்றனர்.<br />இது, மாறி மாறி பேசும் அந்தக் கட்சியின் இரட்டை நாக்கை வெளிப்படுத்துகிறது. ஒரு மாநில முதல்வர் மக்களின் அந்தரங் கத்தை எட்டிப் பார்ப் பதை சட்டம் ஒரு போதும் அனுமதிக்காது என்று கபில் சிபல் கூறி யுள்ளார். -பி.டி.அய்.<br /><br />Read more: http://viduthalai.in/page1/72740.html#ixzz2pCQ5KkzS<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-2498800730506803032014-01-02T06:43:14.999+05:302014-01-02T06:43:14.999+05:30
நாம் மனிதர்களை மாற்றுபவர்கள்! மூளைக்குள் நுழைந்து...<br />நாம் மனிதர்களை மாற்றுபவர்கள்! மூளைக்குள் நுழைந்து பணி செய்பவர்கள்!!<br /><br /><br />மலேசிய திராவிடர் கழக மாநாட்டில் தமிழர் தலைவரின் சிறப்புரை தமிழர் தலைவருக்குப் பொன்னாடை அணிவித்து, நினைவுக் கேடயம் வழங்கப்பட்டது. அருகில் மலேசிய இந்திய காங்கிரசின் தேசிய உதவித் தலைவர் டத்தோ சி.பாலகிருஷ்ணன், மலேசியத் திராவிடர் கழகத் தலைவர் பி.எஸ்.மணியம், துணைத் தலைவர் காந்தராஜ், பொதுச் செயலாளர் மு.சு.மணியம், தோழர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் உள்ளனர். (மலேசியா - 21.12.2013)<br /><br />கோலாலம்பூர், டிச.28- நமது பணியின் களம் மனித மூளை என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.<br /><br />மலேசியத் திராவிடர் கழகத்தின் சார்பில் 67 ஆவது மூவாண்டு தேசியப் பேராளர் மாநாடு 21.12.2013 அன்று மலேசியத் தலைநகர் கோலாலம்பூர், கிராண்ட் பசிபிக் தங்கும் விடுதியில் நடைபெற்றது. மாநாட்டின் சிறப்பு அழைப்பாளராகத் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்று, ஆற்றிய சிறப்புரை வருமாறு:<br /><br />மிகுந்த எழுச்சியோடு இம்மாநாடு நடைபெறுகிறது. தொடர்ந்து பல வரலாற் றுச் சாதனைகளை நிகழ்த்தி வரும் மலேசியத் திராவிடர் கழகத்திற்கு தமிழகத் திராவிடர் கழகம் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். பெரியார் கருத்துகளை எடுத்துரைத்து, மனிதர்களை மனிதர்களாக்கி, அவர்களை மாமனிதர்களாகவும் ஆக்குவதே திராவிடர் கழகத்தின் பணி. மற்றவை எல்லாம் பிரிக்கும், நம் அமைப்பு ஒன்றுதான் இணைக்கும். உங்களைச் சந்திப்பதிலே எனக்கு எப்போதும் மகிழ்ச்சி. உங்களைப் பார்த்து நாங்களும், எங்களைப் பார்த்து நீங்களும் புத்துயிர் பெற்று வளர்வோம்.<br /><br />உலகெங்கும் பெரியார்<br /><br />மலேசியா மட்டுமின்றி, பர்மாவில் சுயமரியாதை இயக்கம், அமெரிக்காவில் பெரியார் பன்னாட்டு அமைப்பு, சிங்கப்பூரில் பெரியார் சேவை மன்றம், துபாயில் மனிதநேய அமைப்பு, கானாவில் பெரியார் ஆப்பிரிக்கப் பவுண்டேசன் என நம் இயக்கம் உலகளாவிய அளவில் விரிந்து வருகிறது. தனிப்பட்ட மனிதர்களுக்காக இந்த அமைப்புகள் உருவாக்கப்படவில்லை. மாறாக உலகில் எந்த மனிதரும், இன்னொரு மனிதருக்குக் கீழானவர் அல்ல என்பதை வலியுறுத்தவே தோற்றுவிக்கப்பட்டது. ஒவ்வொரு முறை அடி வாங்கினாலும் எழுந்து நிற்கும் பந்து போல, இந்த இயக்கமும் உலகில் வளர்ந்து செழிக்கும். நாம் அரசியல்வாதிகள் அல்ல; சமூக மாற்றத்திற்கான மனிதநேய அமைப்பில் பணி செய்பவர்கள். அவர்களுக்குத் தேர்தல் குறித்தும், நமக்குத் தலைமுறைகள் குறித்தும் கவலைகள் உள்ளன. மலேசியாவில் பெரியார் எனப் பகுத்துப் பார்த்தால் இந்நாட்டின் வரலாற்றை நாம் அறியலாம். கல்வியற்று, உரிமைகளற்று, தோட்டத் தொழிலாளர்களாக, வெறும் கூலி மக்களாகவே தமிழர்கள் நிலை இருந்தது. மலேசியாவிற்குப் பெரியார் 1929 இல் வந்து, ஒவ்வொரு தோட்டத்திற்கும் சென்று, கருத்துகளை விதைத்தார். அந்த விதை நாளடைவில் பகுத்தறிவு மரமாக வளர்ந்தது. பெரியார் வருகை தந்த பலன் என்ற தலைப்பில் தமிழ்முரசு பத்திரிகை ஆசிரியர் திருநாவுக்கரசர் ஒரு நூலே எழுதினார். மலேசிய மக்களின் மூடநம்பிக்கை களுக்குப் பெரியாரின் கருத்து மருந்தாக இருந்தது. அதுமட்டுமின்றி, தமிழர்கள் மலேசியக் குடியுரிமைப் பெறவும் இந்த இயக்கம்தான் காரணம். சீனர்களுக்கு நிக ராக வரவேண்டும் எனப் பெரியார் நம்பிக் கையை வளர்த்தார். அதன் விளைவாய் முத்தன் மகன் முனியனும், குப்பன் மகன் சுப்பனும் மலேசியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பரந்து விரிந்தார்கள். விஞ்ஞானிகள் நாம்<br /><br />அரசியலில் உள்ளவர்கள் இன்னது செய்தோம் எனக் கூறி தங்களை அளவிட்டுக் கொள்வார்கள். திராவிடர் கழகத்திற்கு என்ன அளவுகோல்? நமக்கு நம் தரம்தான் அளவுகோல். உண்மைகளைக் கண்டு பிடித்துச் சொல்பவர்கள் நாம். இங்கு எண்ணிக்கைப் பொருட்டல்ல. தரம் முக்கியம். சமூக விஞ்ஞானத்தை எடுத்துச் சொல்கிற நாம் ஒவ்வொருவரும் ஒரு விஞ்ஞானி. பாலம் கட்டியதையும், சாலை அமைத்ததையும் அவர்கள் கணக்கில் வைப்பார்கள். ஆனால் நாம் மனிதர்களை மாற்றுபவர்கள். இதைச் செய்வது அவ்வளவு சுலபமல்ல. மற்றப் போராட்டங்கள் போல் கைகளிலும், கால்களிலும் நடப்பவை அல்ல இது, மூளையில் நடக்கும் போராட் டம். அதை உடைத்தெறியும் ஈரோட்டுச் சம்மட்டியை நாம்தான் வைத்திருக்கிறோம். இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பை முறிக்க வேறு யாரும் வரமாட்டார்கள். நாம்தான் தொடர்ந்து போராட வேண்டும்.<br /><br />மானம் பொது வாழ்வில் தேவையில்லை<br /><br />எனவே மூடநம்பிக்கை இருட்டில் யாரையும் இருக்க விடாதீர்கள். வெளிச்சத் திற்கு அழைத்து வாருங்கள். உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம். இயக்கத்திற்குச் சோதனைகள் வரும். அதைச் சாதனைகளாக மாற்றுங்கள். மானம் பாராது தொண்டு செய் யுங்கள்.<br /><br />மானம், தனி வாழ்வில் பாருங்கள்; பொது வாழ்வில் வேண்டாம். நாம் வெற்றி பெற்றே தீர வேண்டும். மனிதத்துவமும், சமத் துவமும் கொண்ட சமூகத்தை நாம் உருவாக் குவோம். உங்களுக்கு என் வாழ்த்துகள் எனத் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பேசினார்.<br /><br />Read more: http://viduthalai.in/page1/72739.html#ixzz2pCPmzlct<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-6675462729536295452014-01-01T19:21:47.141+05:302014-01-01T19:21:47.141+05:30
கலைஞர் தொலைக்காட்சி
தொலைக்காட்சி என் றாலே, அறிவ...<br />கலைஞர் தொலைக்காட்சி<br /><br /><br />தொலைக்காட்சி என் றாலே, அறிவியல் மனப் பான்மை - பகுத்தறிவு மனப் பான்மை உள்ளவர்களுக்கு ஒரு குமட்டல் உண்டு.<br /><br />விஞ்ஞான சாதனம் ஒன்றில் அஞ்ஞானத்தைக் கொட்டும் குப்பைத் தொட்டி யாக ஆக்கிவிட்டார்களே என்ற சமுதாயக் கவலை அவர்களுக்குண்டு.<br /><br />விஞ்ஞான சாதனத்தில், அஞ்ஞானத்தைப் பரப்புவது அறிவு நாணயம்தானா? என்ற வினாவையும் எழுப்பி வருகிறோம்.<br /><br />பெரும்பாலான மனித நேரத்தை இந்தத் தொலைக் காட்சி என்னும் கரையான் தின்று அழிக்கின்றதே என்ற ஆதங்கம் கண்டிப்பாக உண்டு.<br /><br />குறிப்பாக சிறுவர்களைச் சீரழித்துக் கொண்டிருக் கிறது. சக்திமான் என்ற ஒரு நபர் ஆபத்துக் காலத்தில் வந்து உதவுவான் என்கிற முறையில் தொலைக்காட்சி யில் ஒளிபரப்பாகிக் கொண் டிருந்தது.<br /><br />அதனைத் தொடர்ந்து, பார்த்துக் கொண்டிருந்த திருவாரூரை அடுத்துள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிறுவன், வீட்டு மாடியிலி ருந்து சக்தி மான் என்று குரல் கொடுத்துக் கீழே குதித்தவன் பரிதாபகரமாக மரணமடைந்தான்.<br /><br />அமரிக்காவைச் சேர்ந்த ஸ்டேன் போர்டு பல்கலைக் கழக மருத்துவர் டான் ராபின்சன் குழந்தைகளின் எதிர்காலத்தை தொலைக் காட்சிகள் முடிவு செய்கின் றன என்றார். எட்டு வயது முதல் 18 வயதுக்குள் பத்து வருடங்களுக்குள் இரண்டு இலட்சங்களுக்கு அதிகமான வன்முறைக் காட்சிகளைக் காண்பதாக ஆய்வுகள் கூறு கின்றன.<br /><br />அந்த ஆய்வாளர் ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள் ளார். இரு பள்ளிக்கூடங் களைத் தேர்வு செய்தார்; முதல் பிரிவில் 105 மாண வர்கள், மாணவிகள்; இவர் கள் தொலைக்காட்சிகளைப் பார்க்க அனுமதிக்கப்பட்டார் கள். இன்னொரு பிரிவில் 120 இருபால் மாணவர்கள்; இவர் கள் தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்கப்படவில்லை; இதற்காக, ஆறு மாதம் ஒதுக்கப்பட்ட பின் ஆய்வுகள் செய்யப்பட்டன.<br /><br />தொலைக்காட்சி பக்கம் தலை வைக்காத இருபால் மாணவர்களிடம் இயல்பான போக்குகளும், நாகரிகமான நடவடிக்கைகளும் இருந்த தைக் காண முடிந்தது. எப் பொழுதும் தொலைக்காட்சி யைப் பார்த்தவர்களோ, கேலி செய்வது, தகாத சொற் களைப் பயன்படுத்துவது, வன்முறை என்ற நிலையில் இருந்தனர் என்பதை பெற் றோர் கவனித்துக் கொள்ள வேண்டும்.<br /><br />மூட நம்பிக்கையை எடுத் துக்கொண்டால், இராமாய ணம், மகாபாரதங்களை ஒளி பரப்பும் வேலை சரியானது தானா?<br /><br />இன்று கலைஞர் தொலைக் காட்சியில் மக்களைப் பெரிதும் மயக்குவது மூட நம்பிக்கைகளா? திரைப் படங்களா? என்ற அருமை யான பட்டிமன்றம் நடை பெற்றது.<br /><br />இதற்காகக் கலைஞர் தொலைக்காட்சியைப் பாராட் டுகிறோம். இந்த நிலை தொடரட்டும்! மற்ற மற்ற தொலைக்காட்சிகளும் இத னைப் பின்பற்றுமா? தொலைக்காட்சிகளுக்கு ஒரு நினைவூட்டல்! ஒரு சித்திரம் என்பது ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம் என்பதை உணர்ந்து கொண் டால், அவர்களின் பொறுப்பு கத்தி முனையில் நடப்பது என்பதை உணர முடியும்.<br /><br />2014 புத்தாண்டிலாவது புதிய சிந்தனைகள் பூக் கட்டுமே!<br /><br />- மயிலாடன்<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/72917.html#ixzz2p9dUmzAP<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-13963853135465603872014-01-01T19:17:45.145+05:302014-01-01T19:17:45.145+05:30
இந்தியாவில் விவசாயிகள் வளமையாக வாழ்கிறார்கள் எனும...<br />இந்தியாவில் விவசாயிகள் வளமையாக வாழ்கிறார்கள் எனும் நிலை, நிலை நிறுத்தப்பட்ட நாள்தான் இந்தியா பொருளாதாரத்தில் - சமத்துவத்தில் புன்னகை பூக்கிறது என்பதற்கான அத்தாட்சியாகும்.<br /><br /><br />இந்தியாவின் பெருங்குடி மக்களான விவசாயிகள் வறுமைக்கோட்டுக்குள் மூச்சுத் திணறிக் கொண்டுள்ள சூழ்நிலையில், அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் அய்.ஏ.எஸ். ஆக முடியும்; உச்சநீதிமன்ற நீதிபதியாக முடியும் என்று கனவுகூடக் காண முடியாதே!<br /><br />மாநில, மத்திய அரசுகள் வருணாசிரமக் கண் ணோட்டத்தில் பாவப்பட்ட தொழிலாக நசுங்கிப்போன வேளாண் மக்களின் வாழ்வுக்கு வளமைகூட்ட அனைத்து முயற்சிகளையும் முனைந்து, மும்முரமாக செய்யட்டும்! செய்யட்டும்!!<br /><br />சமவாய்ப்புப்பற்றியும், திராவிடர் கழகத் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய அளவில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்க்குக் கல்வி, வேலை வாய்ப்புகள் உரிய சதவிகிதத்தில் கிடைக்கப் பெறவில்லை.<br /><br />மண்டல் குழு பரிந்துரைக்காக, திராவிடர் கழகம் 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தியுள்ளது. வேலை வாய்ப்பில் 27 சதவிகிதம் என்று சொல்லப்பட்டாலும், நடைமுறையில் இன்னும் எட்டு சதவிகிதத்தைக் கூடத் தாண்டவில்லை. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான தேசிய ஆணையத்திற்கு, இன்னும் சட்ட வலிமை அளிக்கப்படவில்லை.<br /><br />கல்வியில் இட ஒதுக்கீடு என்பது வெறும் ஏட்டுச் சர்க்கரையாகவே இருக்கிறது. பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் இந்திய அளவில் பெரும் விழிப்புணர்ச்சி ஊட்டப்படவேண்டும் என்பதைத்தான் இது காட்டுகிறது.<br /><br />அனைத்துத்துறைகளிலும் விதிவிலக்கின்றி இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும்; குறிப்பாக உடனடியாக நமது கவனம் - தனியார்த் துறைகளில் இட ஒதுக்கீடு சட்டப்படி கிடைக்கச் செய்வதே!<br /><br />இந்தியாவில் ஆயிரம் கார்ப்பரேட் நிறுவனங்களில் 9052 போர்டு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்களில் 44.6 சதவிகிதம் பார்ப்பனர்கள். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 3.5 சதவிகிதம்.<br /><br />சம வாய்ப்புத் தேவை என்று தமிழர் தலைவர் கூறியிருப்பதன் பொருள் இதன்மூலம் வெளிப்படும்.<br /><br />திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பது 2014 ஆம் ஆண்டு மிக முக்கியத்துவம் உள்ளதாக அமையும்.<br />பகுத்தறிவுச் சிந்தனை பெருகவேண்டும் என்றும் கூறியுள்ளார்; மனி<br /><br />தன் என்பதற்கே அடையாளம் பகுத்தறிவுச் சிந்தனைதானே! மதவாத சக்திகளை மக்கள் மனதிலிருந்து வேரோடு கெல்லி எறிந்திடவும் வேண்டும்.<br /><br />நம் நாட்டுப் படிப்புக்கும் பகுத்தறிவுக்கும் ஏதாவது தொடர்புண்டா? வயிற்றுப் பிழைப்புக்கு ஒரு லைசென்சாகத்தானே நம் கல்வி உள்ளது.<br /><br />இந்த நிலையில் பெரியாரியலை உலக மயமாக்கும் பணி - பெரியார் உலகம் பணியை முன்னெடுப்போம்!<br /><br />வருக புத்தாண்டே, வளமுடன்!<br /><br />Read more: http://viduthalai.in/page-2/72921.html#ixzz2p9dMwQ4tதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-82344304753162592472014-01-01T19:17:41.760+05:302014-01-01T19:17:41.760+05:30பழையன கழிதலும்...
2013 ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. ...பழையன கழிதலும்...<br />2013 ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. பழையன கழியட்டும்! 2014 ஆம் ஆண்டு பிறந்துவிட்டது. புதியன பூத்து மலரட்டும்! பழைய பஞ்சாங்கங்களைப் புரட்டி, புரட்டுகளை எழுதிக் குவிக்கும் அஞ்ஞானமும் ஒருபுறத்தில் அரங்கேறிக் கொண்டுதானிருக்கிறது.<br /><br />தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் புத்தாண்டு வாழ்த்தில் குறிப்பிட்டுள்ள வாசகக் கருத்துகள் மிக முக்கியமானவை.<br /><br />மனிதநேயம், சமத்துவம், சம வாய்ப்பு, பகுத்தறிவுச் சிந்தனை வளம் பெருகி, வாழ வைக்கும் புதுஉலகப் புத்தாண்டாக அமையட்டும்! என்பவை மிகமிகச் சிறப்புக்கும், வரவேற்புக்கும் உரியவை.<br /><br />இந்தச் சொற்களில் அடங்கியுள்ள மகரந்தங்கள் புதிய ஒப்புரவுச் சமனிய சமுதாயத்தை மலர்விக்கும் என்பதில் அய்யமில்லை.<br /><br />பெற்றோர்களைப் பராமரிக்காவிட்டால், அவர்களுக்குத் தண்டனை என்று ஓர் அருமையான சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது - வரவேற்கத்தக்கதேயானாலும், இப்படியொரு சட்டம் நிறைவேற்றப்பட நேர்ந்தமைக்கு, எல்லோரும் வெட்கப்படவேண்டாமா?<br /><br />கைநிறைய சம்பாதிக்கிறோம் என்ற அகந்தையில் அதற்குக் காரணமான தங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பி வைக்கின்றனரே - எங்கே போயிற்று மனிதநேயம்?<br /><br />சமத்துவம், சம வாய்ப்பு என்று தமிழர் தலைவர் கூறியுள்ளதில் சமதர்ம மணம் கமழ்கிறது, இன்னும் மாத வருவாய் ரூ.20 ஈட்டக்கூடியவர்கள் நாட்டில் 70 விழுக்காடு என்றால், வெட்கப்படவேண்டாமா?<br /><br />நாடு சுதந்திரம் அடைந்தால் தேனாறும், பாலாறும் கரைபுரண்டு ஓடும் என்றார்களே - அதற்கான மறுப்புதான் மேற்கண்ட சென்குப்தா குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள புள்ளி விவரம்.<br /><br /><br />இந்தியாவில் விவசாயம் என்பது மிக முக்கியமான உயிர்நாடித் தொழில். பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள்தான் ஆண்களும், பெண்களுமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் வயிற்றுக்குச் சோறு போட்டு உயிரை நீட்டித்துக் கொண்டிருக்கும் அந்தத் தொழில் பாவப்பட்ட தொழிலாகத்தானே கருதப்படுகிறது - ஆக்கப்படுகிறது.<br /><br />இந்திய விவசாயி கடனிலே பிறந்து, கடனிலே வாழ்ந்து,கடனிலே சாகிறான் என்ற வாசகங்களை இன்னும் எவ்வளவுக் காலத்துக்குத்தான் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார்கள்?<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com