tag:blogger.com,1999:blog-1474608369333206681.post9063819387500537790..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: தினமலருக்கு வீரமணி அவர்களைப் பற்றித்தான் கவலை!தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-19491587697822204912011-05-19T18:56:17.974+05:302011-05-19T18:56:17.974+05:30நாகரிகம் தெரியுமா நரிகளுக்கு?
தி(இ)னமலர் ஏடு இன்ற...நாகரிகம் தெரியுமா நரிகளுக்கு?<br /><br />தி(இ)னமலர் ஏடு இன்று இப்படியொரு கார்டூனை வெளியிட்டுள்ளது. (கார்டூனைப்<br />பார்க்க http://viduthalai.in/new/page-8/9738.html சுட்டவும்)<br /><br />எதைச் சொல்லியாவது திராவிடர் கழகத் தலைவர் மீது சேற்றை வாரி இறைக்க<br />வேண்டும் என்பதுதான் இனமலரின் அடங்காத வெறி.<br /><br />தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவரைக் கொச்சைப் படுத்துவதாக நினைத்துக்<br />கொண்டு, ஆத்திரம் அறிவுக்குச் சத்ரு என்கிற முறையில் நடந்துகொண்டு<br />வருகிறது.<br /><br />திராவிடர் கழகத்தை தினமலர் வகையறாக்கள் எதிர்க்கின்றன - சீண்டுகின்றன<br />என்றால் அது நற்சான்றே தவிர வருத்தப்பட என்ன இருக்கிறது? பார்ப்பனர்கள்<br />சரியாக இருக்கிறார்கள். நம் இனமக்களிடத்தில்தான் குழப்பமோ குழப்பம்!<br />திராவிடர் கழகம் ஒன்றும் அரசியல் கட்சியல்ல. தேர்தலில் நிற்கக் கூடியதும்<br />அல்ல.<br /><br />வரவேற்கவேண்டியதை வரவேற்றும், எதிர்க்க வேண்டியதை எதிர்த்தும்<br />செயல்படுவது என்பது திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு என்பது புத்தியுள்ள<br />ஒவ்வொருவருக்கும் தெரியுமே!<br /><br />வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பது என்பது நாகரிகத்தின்<br />அரிச்சுவடி! அதேபோல் நல்லது செய்தால் வரவேற்க வேண்டியது என்பது அறிவு<br />நாணயத்தின் பாலபாடம். இவையெல்லாம் தினமலர் பார்ப்பனக் கும்பலுக்கு<br />எங்கேயிருந்து தெரியப் போகிறது?<br /><br />எங்கே சாவு வரும் - தர்ப்பணம் பண்ணிப் பணம் பறிக்கலாம் என்று கருதும்<br />கழுகுகள் ஆயிற்றே!<br /><br />தமிழ் செம்மொழியானால் வீட்டுக்கு வீடு பிரியாணி கிடைக்குமா என்று<br />எழுதுகிற சோற்றுப் பண்டார - வயிற்றுப் பிழைப்புக் கூட்டம் இப்படித்தான்<br />கார்ட்டூன் போடும்.<br /><br />ஆளும் பொறுப்பில் இருந்த எம்.ஜி.ஆர். அவர்களை 13 வருடம் திராவிடர் கழகம்<br />எதிர்த்துத்தான் செயல்பட்டது என்கிற பொது அறிவு கூட இல்லாததுகள் எல்லாம்<br />பேனா பிடிக்கின்றனவே!<br /><br />இப்பொழுதே தி.மு.க. ஆட்சிக்கு ஆதரவாக இருந்த அதிகாரிகள் யார் யார் என்று<br />ஆள் காட்டி வேலையில் இறங்கிவிட்டது இந்த இனமலர் - இந்தக் கூட்டத்திடம்<br />அரசு எச்சரிக்கையாக இல்லையானால் அரசு வாகனத்தை அதல பாதாளத்தில்<br />இறக்கிவிட்டுவிடும் - எச்சரிக்கை!<br /><br /> ---------------"விடுதலை” 19-5-2011தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-8895519725605175502011-05-14T20:52:03.073+05:302011-05-14T20:52:03.073+05:30மனுதர்மம்
வழக்கம் போலவே தினமலர் வளரும் சமூக நீதி...மனுதர்மம்<br /><br /><br />வழக்கம் போலவே தினமலர் வளரும் சமூக நீதிச் செடியின் மீது நெருப்புத் துண்டங்களை அள்ளிக் கொட்டுகிறது.<br /><br />அண்ணா பல்கலை துணை வேந்தர் மன்னர் ஜவகர்: வரும் 16 ஆம் தேதி முதல், பொறியியல் விண்ணப் பங்கள் வழங்கப்படுகின்றன. இதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இரண் டரை லட்சம் விண்ணப்பங் கள் அச்சடிக்கப்பட்டுள்ளன<br /><br />டவுட் தனபாலு: ஏன் ரெண்டரை லட்சத்தோட நிறுத்திட்டீங்க . . .? பிளஸ் 2 பாஸ் பண்ணின ஆறேகால் லட்சம் பேரையும் இன்ஜினீ யரிங்ல சேர்த்துக்க வேண்டி யதுதானே . . . அதான். அந்தப் படிப்புக்கு எந்தத் தகுதியும் தேவையில்லைன்னு ஆகிப் போச்சே. (தினமலர் 14.5.2011)<br /><br />தி.மு.க. ஆட்சியில் பொறி யியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்குத் தகுதி மதிப்பெண்கள் கடந்த ஆண்டு 2010-2011 அறிவிக் கப்பட்டன.<br /><br />பொதுப் பிரிவுக்கு 50 விழுக்காடு மதிப்பெண்கள், பிற்படுத்தப்பட்டோருக்கு 45 விழுக்காடு மதிப்பெண்கள்; பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர்களுக்கு 40 விழுக் காடு மதிப்பெண்கள். தாழ்த் தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களுக்கு 35 விழுக்காடு மதிப்பெண்கள் என்று அறிவிக்கப்பட்டன.<br /><br />இதன் காரணமாக கடந்த ஆண்டு மட்டும் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்காக விண்ணப்பித் தோர் எண்ணிக்கை 1, 63, 131. இதில் பொதுப் பிரிவினர் களுக்குக் கிடைத்த இடங் கள் 5,662; மீதி இடங்கள் பிற்படுத்தப் பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர், தாழ்த்தப் பட்ட, மற்றும் மலைவாழ் குடும்பங்களைச் சேர்ந்த வர்களுக்குக் கிடைத்தன.<br /><br />இவர்கள் எல்லாம் யார்? முதல் தலைமுறையாக பொறி யியல் கல்லூரிகளில் காலடி எடுத்து வைத்தவர்கள்<br /><br />போதும் போதாதற்கு - தொழிற்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கிடையாது என்று வெறும் ஆணையாக அல்ல; சட்டத்தையே முதல் அமைச்சராக இருந்த கலை ஞர் நிறைவேற்றிவிட்டார். நீதி மன்றம் வரை சென்று முட்டிப் பார்த்தார்கள். முடிய வில்லை. கலைஞர் சமூக நீதிச் சிம்மாசனத்தில் அந்தச் சட்டம் இன்று வரை ஒளி வீசும் மரகதக் கல்லாகவே நிகழ்கிறது.<br /><br />பொறுக்குமா பூணூல் கோத்திரக் கும்பலுக்கு? தினமலரின் அவுட்டுத் திரி ஆத்திரக் கூத்து ஆடாதா?<br /><br />அதன் வெளிப்பாடாகத் தான் டவுட் தனபாலாக இன்று தினமலரில் வெளி வந்திருக்கிறது.<br />தகுதி திறமை போய் விடுமாம்! என்ன அந்த தகுதி, திறமை? தேர்வில் வெற்றி பெறாதவர்களுக்கா பொறி யியல் பட்டதாரி சான்றி தழைக் கொடுக்கப் போகி றார்கள்?<br /><br />எனக்கு வேதமும் தெரி யாது, வெங்காயமும் தெரி யாது என்று சொல்லும் தந்திரியைத்தானே அய்யப் பன் கோயிலில் அர்ச்சகராக நியமிக்கிறார்கள்?<br /><br />கருமாதி மந்திரத்தைக் கல்யாண வீட்டில் சொல்கிற பார்ப்பானுக்கெல்லாம் தகுதி தேவையில்லை.<br /><br />சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்பதுதான் பார்ப்பனர்களின் மனுதர்மம். இவற்றிற்கு மாறாக நடந்த காமராசரை ராட்சசர் என்ற னர். இப்பொழுது கலைஞ ரையும் அதே பார்வையில பார்க்கின்றனர். தமிழா, இன் னும் எவ்வளவு காலத்துக்கு ஏமாறப் போகிறாய்?<br /><br />- மயிலாடன் -"விடுதலை”14-5-2011தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com