tag:blogger.com,1999:blog-1474608369333206681.post8924976139011487495..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: இதுதான் வால்மீகி இராமாயணம் - 46 தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-40772113519041391922014-12-06T20:39:33.512+05:302014-12-06T20:39:33.512+05:30ஆர்.எஸ்.எஸ். பற்றி காமராஜர்
குறிப்பாக அவர்களுக்கு...ஆர்.எஸ்.எஸ். பற்றி காமராஜர்<br /><br />குறிப்பாக அவர்களுக்கு (ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களுக்கு) பயம் என்னைப் பற்றித்தான். இந்த காம ராஜ்தான் சோசியலிச சமுதாயத்தினை அமைத்தே தீருவேன் என்று சொல் கின்றான். அவன்தான் அதிலே தீவிர மாக இருக்கின்றான் என்று நினை கின்றார்கள். என் வீட்டுக்கு தீ வைக் கின்றான். ஆனால் நான் இதற்கெல் லாம் பயப்பட மாட்டேன். கடமையை நான் செய்தே தீருவேன்....<br /><br />- 11.12.1966 சேலம் பேருரையிலிருந்து நவசக்தி - 15.12.1966<br /><br />Read more: http://viduthalai.in/page3/92420.html#ixzz3L8AJ2BSt<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-60235148881232314732014-12-06T20:38:58.401+05:302014-12-06T20:38:58.401+05:30புராணம் என்றால் புருடா என்று பொருள்
860,00,00,0...புராணம் என்றால் புருடா என்று பொருள்<br /> <br /><br />860,00,00,000 (860 கோடி) ஆண்டு களுக்கு ஒரு முறை எந்த நோக்கத் திற்காக பகவான் சிறீ கிருஷ்ணர் இவ்வுலகத்திற்கு வருகிறாரோ அந்த நோக்கத்திற்கு சிறைப்பட்ட ஜீவாத்மாவை வழி நடத்துவதற்காக, பகவத் கீதையை உள்ளது உள்ளபடி அளிப்பதே எமது ஒரே லட்சியமாகும்.- இந்த செய்தி, பகவத் கீதை உண்மை யுருவில் என்ற; பக்தி வேதாந்த புத்தக நிறுவனம் வெளியிட்ட; அ. ச. பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா (ஸ்தாபக ஆசாரியர்: அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்) (சமஸ் கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில்) எழுதி, ஆத்ம தத்வ தாஸ் தமிழாக்கம் செய்த 1971 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நூலில் (முன்னுரையில்) உள்ளது. சத்ய யுகம் 172800ஆண்டுகள் திரேதாயுகம் 1296000ஆண்டுகள் துவாபரயுகம் 864000ஆண்டுகள் கலியுகம் 4,32,000 ஆண்டுகள் மொத்தம் 43,20,000 ஆண்டுகள்தான். எனும்போது, நமது 860,00,00,000 (860 கோடி) ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறீ கிருஷ்ணர் இவ்வுலகத்திற்கு வருகிறார் என்பது எப்படி சரியாகும்?<br /><br />கடவுள் கதை என்றால் ஆராய்ந்து பார்க்கக் கூடாது என்று சொல்லி விடுவதால் யாரும் யோசிப்பதில்லை. ஆனால் நாம் யோசிப்போமே?!<br /><br />- க.அருள்மொழி குடியாத்தம்<br /><br />Read more: http://viduthalai.in/page3/92419.html#ixzz3L8A9fihR<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-37439060597668307182014-12-06T20:38:26.327+05:302014-12-06T20:38:26.327+05:30தமிழர் தலைவர் வாழிய நீடு!
அய்யா அடிச்சுவடே ஆயுளு...தமிழர் தலைவர் வாழிய நீடு!<br /><br /><br />அய்யா அடிச்சுவடே ஆயுளுக்கும் நெஞ்சினிலே<br />பொய்யா அரிச்சுவடி என்றிட்டீர்! - மெய்ம்மை<br />வகுத்த நெறிகளை வாழ்விக்க வந்த<br />பகுத்தறிவே! வாழிய நீடு!<br />திருவள் ளுவரின் குறள்போல் புவியில்<br />பெரியார் குரலாய் ஒலித்தீர் - வரிப்புலியுன்<br />வேட்டையில் வீழும் விலங்காய் மடமையிருள்<br />ஓட்டிடவே வாழிய நீடு!<br />சுமையாம் மடத்தைச் சுடும்நின் அறிவே;<br />இமய மனமும் இறங்கும் - உமதாம்<br />அறிவுச் சுரங்கத்தை ஆளுகின்ற தந்தை<br />பெரியார் ஒளிவாழி நீடு!<br />மண்ணையும் மண்ணின் மொழியையும் காத்திடும்<br />திண்தோள் தமிழர் தலைவரே! - கண்ணை<br />இமையெனக் காக்கும் இனமானச் சிங்கத்<br />தமிழுணர்வே! வாழிய நீடு!<br />அறிவுலக மேதை பெரியார் தமக்குப்<br />பெரியார் உலகமொன்று கண்டீர்! - நிறைநிலா<br />மண்வந் திறங்கி மதிஒளி தந்து வாழ்த்தும்<br />நின்பெயர் நிற்கும் நிலைத்து<br /><br />Read more: http://viduthalai.in/page3/92418.html#ixzz3L8A1BvLC<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-54632863956313752432014-12-06T20:33:23.293+05:302014-12-06T20:33:23.293+05:30பெரியார் - அண்ணா மண்ணில் மதவாதம் எடுபடாது கோவையில்...பெரியார் - அண்ணா மண்ணில் மதவாதம் எடுபடாது கோவையில் வைகோ பேச்சு<br /><br />கோவை, டிச.6_ தந்தை பெரியார் _அறிஞர் அண்ணா மண்ணில் உங்கள் மத வாதம் செல்லாது என்று ஆவேசமாக பேசினார் மதிமுக பொதுச் செய லாளர் வைகோ.<br />மதிமுக சார்பில் பினாங்கு (மலேசியா) பிரகடன விளக்கப் பொதுக் கூட்டம் கோவை, பீளமேடு புதூரில் 2.12.2014 செவ்வாய் மாலை 5.30 மணியளவில் துவங்கி நடைபெற்றது.<br /><br />சார்க் மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசும் போது இலங்கையில் நடை பெறவிருக்கிற அதிபர் தேர்தலில் ராஜபக்சே வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.<br /><br />120 கோடி இந்திய மக்களின் பிரதிநிதி ஒரு இனப்படுகொலையாள னுக்கு வாழ்த்துத் தெரி விப்பதா? என்று கண்டனம் தெரிவித்தேன். பிரதமர் பதவியையே தாழ்த்தி விட்டீர்கள் என்று சொன் னேன்.<br /><br />எதற்கு வாழ்த்து? தமிழின அழிப்பை வேக மாக செய்வதற்கா? தமிழ்ப் பெண்களைக் கற்பழிக்க வா? கோயில்களை இடிக் கவா? தமிழர்களின் நிலங் களைப் பறிக்கவா? நெஞ்சம் கொதித்துத்தான் பேசு கிறேன். பெயரைச் சொன் னால் ஒருமையா?<br /><br />தூசிக்குச் சமமானவர் களுக்கெல்லாம் நான் பதில் சொல்லமாட்டேன். நான் மதயானைக் கூட்டத்தைக் கண்டுபிடித்து அடிப்பவன். பாரத ரத்னா விருது இனப்படுகொலையாளன் ராஜபக்சேவுக்கு வழங்கப் பட வேண்டும் என்று சொல்லுமளவுக்கு சுப்பிரமணியசாமிக்கு அதிகாரம் கொடுத்தது யார்? இவர்கள் நாளை, காந்தியைக் கொன்ற கோட்சேவுக்கும் விருது கொடுக்கச் சொல்வார்கள். இது நாதி இல்லா நாடா? தமிழர்களுக்கு நாதி இல் லையா?<br /><br />நான் இரண்டு நாட்டு ராணுவத்துக்குள் போய் வந்தவன்! என்னை வீட்டுக்கு திரும்ப முடியாது என்று சொல்வதா? இதைக் கட்சி மாச்சரியங் களுக்கு அப்பாற்பட்டு கண்டித்த வர்களுக்கு நன்றி! நன்றி! இவன் தமிழினத்திற்கு தேவை என்று நினைக்கும் அளவுக்கு நான் தலைவர் களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறேன்.<br /><br />ஆர்.எஸ்.எஸ்.ன் கொள் கைகள் அடங்கிய புராணப் பாடத்திட்டத்தை குஜராத் தில் கொண்டு வந்துவிட் டார்கள். இந்தியாவின் பல இடங்களுக்கும் கொண்டு செல்லத் திட்டமிட்டிருக் கிறார்கள். இந்த ஆக்டோ பஸ் முயற்சிதான் பெரியார், அறிஞர் அண்ணா மண் ணான தமிழ்நாட்டில் நடக்காது.<br /><br />கூட்டுக் குற்றவாளிகள்<br /><br />ராஜபக்சேவுடன் உறவு கொள்ளும் ஏற்பாடு எதற்கு எதிர்காலத்தில் நீங்களும் இனப்படுகொலையில் கூட்டுக் குற்றவாளியாக மாறப்போகிறீர்களா? மோடி அவர்களே நட வடிக்கையை மாற்றிக் கொள்ளுங்கள்.<br /><br />இலட்சியத்தைக் காக்க வாருங்கள் என்று இளை ஞர்களை அழைப்பேன். உலக மக்களிடையே பொது வாக்கெடுப்பை வலியுறுத்தி தனி ஈழ ஆதரவைத் திரட்டுவேன். ஈழப்பிரச் சனையில் நியாயம் நம்மிடம் இருக்கிறது. பொது வாக் கெடுப்பை யாரும் கூடாது என்று சொல்ல முடியாது. இளைஞர்களே சிந்தி யுங்கள்! மாணவர்களே சிந்தியுங்கள்! என்று பேசிய தோடு, பினாங்கில் தான் கலந்து கொண்ட கூட்டத் தின் நிகழ்வுகளையும் பகிர்ந்து கொண்டு உரையாற்றினார்.<br /><br />Read more: http://viduthalai.in/page-7/92446.html#ixzz3L88kFp3p<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-55342021387458802482014-12-06T20:32:49.594+05:302014-12-06T20:32:49.594+05:30தந்தை பெரியார் பொன்மொழி
ஜாதியின் பேரால் உயர்வு தா...தந்தை பெரியார் பொன்மொழி<br /><br />ஜாதியின் பேரால் உயர்வு தாழ்வு, மதத்தின் பேரால் வேற்றுமை உணர்ச்சி, தேசத்தின் பேரால் குரோதத் தன்மை முதலான இழி குணங்களை மனிதனிடமே அதிகமாகக் காண்கிறோம். மற்றும், கடவுளின் பேரால் மேல் - கீழ் நிலை முதலாகிய அயோக்கியத் தன்மைகள் மனித ஜீவனிடமே உண்டு. பகுத்தறிவின் காரணமாக மனித ஜீவன் உயர்ந்தது என்று சொல்ல வேண்டுமானால் மேற்கண்ட கெட்ட, தீய, இழிவான, அயோக்கியத்தனமான குணங்கள் என்பவைகள் எல்லாம் மனிதனிடம் இல்லாமல் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மற்ற பகுத்தறிவில்லா ஜீவராசிகளைவிட மனித ஜீவன் மூளை விஷேசம் முதலிய அவயவத்தை நன்மைக்காகப் பிரயோகித்துக் கொண்ட ஜீவன் என்று சொல்லப்படும். அதில்லாத நிலையில், எவ்விதத்திலும் மனித ஜீவன் மற்ற ஜீவப் பிராணிகளை விட உயர்ந்த தல்ல என்பதோடு பல விதத்தில் தாழ்ந்தது என்றும் சொல்ல வேண்டியிருக்கிறது. ஜாதியின் பேரால் உயர்வு தாழ்வு, மதத்தின் பேரால் வேற்றுமை உணர்ச்சி, தேசத்தின் பேரால் குரோதத் தன்மை முதலான இழி குணங்களை மனிதனிடமே அதிகமாகக் காண்கிறோம். மற்றும், கடவுளின் பேரால் மேல் - கீழ் நிலை முதலாகிய அயோக்கியத் தன்மைகள் மனித ஜீவனிடமே உண்டு.<br /><br />பகுத்தறிவின் காரணமாக மனித ஜீவன் உயர்ந்தது என்று சொல்ல வேண்டுமானால் மேற்கண்ட கெட்ட, தீய, இழிவான, அயோக்கியத்தனமான குணங்கள் என்பவைகள் எல்லாம் மனிதனிடம் இல்லாமல் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் மற்ற பகுத்தறிவில்லா ஜீவராசிகளைவிட மனித ஜீவன் மூளை விஷேசம் முதலிய அவயவத்தை நன்மைக்காகப் பிரயோகித்துக் கொண்ட ஜீவன் என்று சொல்லப்படும். அதில்லாத நிலையில், எவ்விதத்திலும் மனித ஜீவன் மற்ற ஜீவப் பிராணிகளை விட உயர்ந்த தல்ல என்பதோடு பல விதத்தில் தாழ்ந்தது என்றும் சொல்ல வேண்டியிருக்கிறது.<br /><br />Read more: http://viduthalai.in/page-7/92445.html#ixzz3L88d2hmu<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-58821030246633840842014-12-06T20:31:36.135+05:302014-12-06T20:31:36.135+05:30யார் செயல்? யாருக்கு நன்றி!
காங்கிரசில் உள்ள பார்...யார் செயல்? யாருக்கு நன்றி!<br /><br />காங்கிரசில் உள்ள பார்ப்பனர்கள் அனைவரும், வருணாசிரம தருமத்தையும், மதத்தையும், கடவுளையும், வேதங்களையும், புராணங்களையும் பிரசாரம் புரிந்து, நமது இயக்கத்தால் சிறிது கண்திறந்து வருகின்ற பாமர மக்களை மீண்டும் மூட நம்பிக்கையில் கட்டுப்படுத்தி வைக்கவே காங்கிரசை உபயோகப்படுத்திக் கொண்டு வருகின்றனர் என்று நாம் அடிக்கடி கூறிவருவதில் சிறிதும் தவறில்லையென்பதற்கு மற்றொரு உதாரணம் கிடைத்திருக்கிறது.<br /><br />தென்னாட்டுக் காந்தி எனக் காங்கிர கூலிகளால் கொண்டாடப்படும் திரு.சி. இராஜகோபாலாச்சாரியார் அவர் களைப் பற்றி நாம் ஒன்றும் அதிககமாகக் கூற வேண்டியதில்லை. அவர் ஒரு பழுத்த வருணாசிரம தருமவாதியாகிய கடவுள் பக்தர் ஆக விளங்குகிறார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயமாகும். குடுகுடுப்பைக்காரன் போகுமிடந்தோறும், தனது குடுகுடுப்பை யையும், தன் தோளின் மேல் ஒரு மூட்டைக் கந்தைத்துணியையும் சுமந்து கொண்டு போவதைப்போல, திரு. ராஜகோபாலாச்சாரி யாரவர்களும் எங்கே போனாலும் புராணங்களையும், கடவுளையும் சுமந்தே தான் செல்லுவார். அவர் எந்த அறிக்கை வெளியிட்டாலும், எங்கே என்னென்ன பேசினாலும், கடவுளைப் பற்றியும் புராணங்களைப்பற்றியும் பேசாமல் விடவே மாட்டார். அவருடைய அரசியல் பிரச்சாரத்துடன் கூடவே கடவுள் பிரச்சாரமும், புராணப்பிரசாரமும் நடந்து தான் தீரும். அவருடைய சகாக்களாகிய மற்ற அய்யர், அய்யங்கார், ஆச்சாரியார்களும் இம்மாதிரியே பிரச்சாரம் பண்ணிக்கொண்டே வருகின்றனர். இதற்கு உதாரணமாகச் சமீபத்தில் அவர் வெளிட்டிருக்கும் ஒரு அறிக்கையைக் கவனிக்க வேண்டுகிறோம். அவ்வறிக்கை வருமாறு:-<br /><br />நாளது டிசம்பர் மாதம் 28ஆம் தேதி மகாத்மா காந்தி பம்பாய் வந்து சேருவார். அன்றையதினத்தைத் தமிழ்நாடெங்கும் திருநாளாகக் கொண்டாட வேண்டுமென்று கேட்டுக்கொள்ளு கிறேன். அன்று மாலை ஜாதி, மத கட்சி பேதங்கள் எல்லா வற்றையும் மறந்து, தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள், பெண்கள் அனைவரும் பொதுக் கூட்டத்தில் கூட வேண்டும். நமது ஒப்பற்ற தலைவர் அளவில்லாத தேக சிரமங்களுக்கு உள்ளாகியும், சௌக்கியமாகத் திரும்பி வந்ததைக் குறித்து ஆண்டவனுக்கு நன்றி செலுத்திப் பிரார்த்தனை செய்யவேண்டும். அன்றைய தினம் நமது மகிழ்ச்சிக்கு அறிகுறியாகச் சொந்த வீடுகள், பொதுக்கட்டடங்கள் எல்லாவற்றிலும் தேசியக்கொடி பறக்க விடண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறேன். (இந்தியா) என்பது அவ்வறிக்கையாகும். இந்த அறிக்கையின் சுருக்கமான கருத்து, திரு. காந்தியவர்கள் பிரயாணஞ் செய்த காலத்தில் உடம்பு சௌக்கியமாக இருந்தது ஒன்று, பிரயாணஞ் செய்து திரும்பி வந்தது ஒன்று, ஆகிய இந்த இரண்டு காரியங்களைச் செய்து விட்டார். இதற்காக ஆண்டவன் என்பவனுக்கு நன்றியும் பிரார்த்தனையும் செய்வது ஒன்று, தேசியக்கொடி பறக்க விடுவது ஒன்று. ஆகிய இந்த இரண்டு காரியங்களையும் செய்ய வேண்டும் என்பதாகும்.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-43740930430848343082014-12-06T20:29:45.526+05:302014-12-06T20:29:45.526+05:30"என் வாழ்வு - மூச்சு - சர்வமும் என் இன மக்கள்..."என் வாழ்வு - மூச்சு - சர்வமும் என் இன மக்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள், முன்னேற முடியாமல் அழுத்தி வைக்கப்பட்ட மக்கள் மனிதத் தன்மை அடையவேண்டும்; மானம் உடையவர்களாக ஆக வேண்டும் என்பதைத் தவிர வேறு சுயநலம் என்ன?"<br /><br />- தந்தை பெரியார்<br /><br />Read more: http://viduthalai.in/page-7/92443.html#ixzz3L87r6xWj<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-90428380744989159322014-12-06T20:29:15.739+05:302014-12-06T20:29:15.739+05:30சுயமரியாதை உதயம் பெண்கள் சுதந்திரம் சொத்து உரிமை
...சுயமரியாதை உதயம் பெண்கள் சுதந்திரம் சொத்து உரிமை<br /><br /><br />மைசூர் சமஸ்தானத்தில் பெண் மக்களுக்குச் சொத்து உரிமை அதாவது தகப்பன் சொத்தில் பெண்களும் பங்கு பெறவும், சொத்துக்களை வைத்து, சுதந்திரமாய் அனுபவிக்கவும் உரிமை பெற்று விட்டார்கள். கல்யாண ரத்து<br /><br />பரோடா சமஸ்தானத்தில் ஆணும், பெண்ணும் கல்யாண ரத்து செய்து விலகிக் கொள்ள சட்டம் கொண்டுவர அனுமதிக்கப்பட்டாய் விட்டது.<br /><br />அதாவது, தம்பதிகளில் ஆணோ, பெண்ணே 7வருஷ காலம் இருக்குமிடம் தெரியாமல் பிரிந்து இருந்தாலும், வேறு மதத்தைத் தழுவிக் கொள்வதால் இஷ்ட மில்லாவிட்டாலும், சன்னியாசியாகி விட்டாலும், 3 வருஷ காலம், ஒற்றுமை யின்றி சதா குடும்பத்தில் கண்டிப்பாயிருந்தாலும், வேண்டாம் என்று பிரிந்து போய்விட்டாலோ, குடியில் மூழ்கினவர்களாயிருந்தாலோ, சதா பிறர் மீது காதலுள்ள வர்களாக இருந்தாலோ ஆகிய காரணங்களால் துன்பப் படும் புருஷனோ, மனைவியோ தங்கள் விவாகங்களை சட்ட மூலம் ரத்து செய்து கொள்ளலாம்.<br /><br />மற்றும் கல்யாணமாகும் சமயத்தில் தம்பதிகளில் யாராவது செவிடு, ஊமை, வியாதி, குருடு, பைத்தியம், ஆகியவைகள் இருந்ததாகவோ அல்லது மைனராக இருந்ததாகவோ தெரிய வந்தாலும், இஷ்டப்படாதவர்கள் தன்னைக் கல்யாணப்பந்தத்தில் இருந்து விலக்கிக் கொள்ளலாம். இந்தப்படி விலக்கிக்கொண்ட 6 மாதம் பொறுத்து அவரவர்கள் இஷ்டப்படி வேறு கல்யாணம் செய்து கொள்ளலாம்.<br /><br />மைசூரில் கல்யாண வயது<br /><br />மைசூர் சமஸ்தானத்தில் பெண்களுக்கு 14வயது ஆனபிறகு தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று சட்டம் கொண்டு வர ஏற்பாடாயிருக்கிறது.<br /><br />செங்கல்பட்டு தீர்மானங்களைப் பார்த்த கனவான்கள் - ஜஸ்டிஸ் பேப்பர் உள்பட சுயமரியாதை இயக்கம், மத சமூகத்தைக் கட்டுத்திட்டமில்லாமல் செய்கின்றது என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் இப்போது இந்திய சமஸ்தானங்களைப் பார்த்தாவது புத்தி பெறுவார்கள் என்று கருதுகின்றோம்.<br /><br />குடிஅரசு - செய்திக்கட்டுரை - 21.06.1931<br /><br />Read more: http://viduthalai.in/page-7/92443.html#ixzz3L87d8bd1<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-85359494448463344062014-12-06T20:27:40.266+05:302014-12-06T20:27:40.266+05:30பாபாசாகிப் அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்- டிசம்பர்...பாபாசாகிப் அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்- டிசம்பர் 6<br /><br /><br />அண்மையில் மகாராஷ்டிரா நவநிர்மாண் கட்சியின் தலை வரும், பால் தாக்கரேயின் தம்பியின் மகனுமான ராஜ்தாக் கரேயின் மகள் ஊர்வசி தாக்கரே, தனது டிவிட்டரில் பாபாசாகிப் அம்பேத்கரைச் சிறுமைபடுத்தி, கருத்து தெரிவித்திருந்தார்.<br /><br />தாழ்த் தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பங்கி அதாவது தோட்டி சமுதாயத்தைச் சேர்ந்த அம்பேத்கருக்கு நினைவகம் இருக்கும்போது, பால் தாக்கரே போன்ற மிகப்பெரிய தலைவருக்கு ஏன் நினைவகம் அமைக்கக்கூடாது எனக் கூறியிருந்தார்.<br /><br />இந்திய அரசியல் சட்டத்தை இயற்றிய அம்பேத் கரை, சுதந்திர இந்தியாவின் சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கரை, பொருளாதாரத் துறையில் எனது தந்தை என நோபல் பரிசு பெற்ற அமர்தயா சென்னால் போற்றப்பட்ட அம்பேத்கரை, பழமைவாதிகளான ஷ்யாம் பிரசாத் முகர்ஜியின் பேச்சைக் கேட்டு, இந்து சட்ட திருத்த மசோதாவை அம்பேத்கர் விரும்பியபடி கொண்டு வர மறுத்த நேரு அமைச்சரவையிலிருந்து கொள்கைக்காக விலகிய அம்பேத்கரை, 1935இ-ல் உருவான ரிசர்வ் வங்கி அமைவதற்கு காரணமான அம்பேத்காரை, தாமோதர் பள்ளத்தாக்கு, ஹிராகுட் திட்டம் அமைவதற்கு அடித்தளம் இட்ட அம்பேத்காரை, தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரத்திலிருந்து 8 மணி நேர வேலை என மாற்றப் படுவதற்குக் காரணமான அம்பேத்கரை விட, மக்களிடையே மத வெறியைத் தூண்டி அரசியல் செய்த பால் தாக்கரே சிறந்த தலைவர் என மராட் டியத்தில் இன்று கூற முடிகிறது என்றால், மதவெறி ஆட்சிகள் அமைந்தது தானே காரணம்.<br /><br />ஆனால், அம்பேத்கர் மறைவு குறித்து, தந்தை பெரியார் வெளியிட்ட அறிக்கையில் அம்பேத்கரின் சிறப்புகளை எவ்விதம் கூறியுள்ளார் என்பதை இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும்.<br /><br />பெரியாரின் அறிக்கை 8.12.1956-இல் விடுதலையில் வெளியானது. அந்த அறிக்கையில், இந்தியாவின் சிறந்த அறிஞர்களில் முன்னணியிலுள்ள அறிஞரும், ஏராளாமான விஷயங்களைக் கற்றுத் தேர்ந்த கலாநிதியுமான அம்பேத்கர் அவர்கள் முடிவெய்தி விட்டார் என்று செய்தி கேட்டவுடன் திடுக்கிட்டுப் பதறிவிட்டேன்.<br /><br />உண்மையில் சொல்ல வேண்டு மானால், டாக்டர் அம்பேத்கருடைய மறைவு என்னும் ஒரு குறைபாடானது எந்தவிதத்திலும் சரி செய்ய முடியாத ஒரு மாபெரும் நஷ்டமேயாகும். அவர் சிறப்பாகத் தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்குத் தலைவர் என்று சொல்லப்பட்டாலும், பகுத்தறிவுக்கு எடுத்துக்காட்டாகவுள்ள ஒரு பேரறிஞராக விளங் கினார். எப்படிப்பட்டவரும் எடுத்துச் சொல்லப் பயப்படும்படியான புரட்சிகரமான விஷயங்களை எல்லாம் வெகு சாதாரணத்தன்மையில் எடுத்துச் சொல்லும்படியான வீரராகவும் விளங்கினார்.<br /><br />உலகத்தாரால் மதிக்கப்படும் மாபெரும் தலைவரான காந்தியாரை, வெகு சாதாரணமாக மதித்த தோடு, அவருடைய பல கருத்துக்களைச் சின்னா பின்னமாகும்படி மக்களிடையில் விளக்கும் மேதாவியாக இருந்தார்.<br /><br />இந்துமதம் என்பதான ஆரிய ஆத்திக மதக்கோட்பாடுகளை வெகு அலட்சி யமாகவும், ஆபாசமாகவும், அர்த்தமற்றதாகவும் மக்கள் கருதும்படியாகப் பேசியும், எழுதியும் வந்தார்.<br /><br />உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், காந்தியாரையே ஒரு பத்தாம்பசலி, பிற்போக்குவாதி என்றும், அவரால் பிரமாதமாகப் படிக்கப்பட்டுவந்த கீதையை, முட்டாள்களின் உளறல்கள் என்றும் சொன்னதோடு, காந்தியாரின் கடவுளான இராமனை மகாக் கொடியவன் என்றும், இராமாயணக் காவியம் எரிக்கத் தகுந்தது என்றும் சொல்லி, பல்லாயிரக் கணக்கான மக்களிடையில் இராமாயணத்தைச் சுட்டு எரித்துச் சாம்பலாக்கிக் காட்டினார்.<br /><br />இந்துமதம் உள்ளவரையிலும் தீண்டாமையும் சாதிப் பிரிவும், அவற்றால் ஏற்பட்ட கொடுமையும் ஒழியவே ஒழியாது என்றும் ஓங்கி அறைந்தார். மேற்கண்ட இந்தக் கருத்துக்கள் தவழும்படியாக ஏராளமான புத்தகங்களை எழுதி வெளியிட்டார். இப்படியாக அனேக அரிய காரியங்களைச் செய்த ஒரு மாபெரும் பகுத்தறிவுவாதியும், ஆராய்ச்சி நிபுண ரும், சீர்திருத்தப் புரட்சிவீரருமான டாக்டர் அம் பேத்கர் முடிவு எய்தினது இந்தியாவுக்கும், தாழ்த் தப்பட்ட மக்களுக்கும், பகுத்தறிவு வளர்ச்சிக்கும் எளிதில் பரிகரிக்க முடியாத பெரியதொரு குறைவேயாகும்.<br /><br />அம்பேத்கரின் மறைவு என்னும் செய்தி திடீரென்று மொட்டையாக வெளியானதிலிருந்து அவருடைய மரணத்துக்குப் பின்னால் சில இரகசியங்கள் இருக்கலாமென்று கருதுகிறேன். அதாவது, காந்தியார் மரணத்துக்கு உண்டான காரணங்களும், அதற்கு ஆதாரமான பல சங்கதிகளும் டாக்டர் அம்பேத்கர் மரணத்துக்கும் இருக்கக் கூடும் என்பதே ஆகும். அண்ணல் அம்பேத்கரின் மறைவு நாளில், பெரியார் சுட்டிக்காட்டியபடி, பாசிச இந்துக் கும்பல் குறித்து அம்பேத்கரின் கருத்துக்களை நெஞ்சில் ஏந்தி போராட உறுதி ஏற்போம்.<br /><br />-_-குடந்தை கருணா<br /><br />Read more: http://viduthalai.in/page-3/92439.html#ixzz3L87JBL51<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-10072436866848694702014-12-06T20:26:52.192+05:302014-12-06T20:26:52.192+05:30சூழ்நிலை
பிறவியில் மனிதன் அயோக்கியனல்ல; அறிவற்றவ...சூழ்நிலை<br /><br /><br />பிறவியில் மனிதன் அயோக்கியனல்ல; அறிவற்றவனல்ல; ஒழுக்கக் கேடான வனல்ல; சூழ்நிலை, சுற்றுச் சார்பு, பழக்க வழக்கங்களால்தான் மனிதன் அயோக்கிய னாகவும், மடையனாகவும் ஆகின்றான்.<br /><br />(விடுதலை, 11.11.1968)<br /><br />Read more: http://viduthalai.in/page-2/92465.html#ixzz3L877F5gM<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-34547617148643056162014-12-06T20:14:57.094+05:302014-12-06T20:14:57.094+05:30மருந்து, மாத்திரை களின் பெயர்களை புரியும் படியும்,...மருந்து, மாத்திரை களின் பெயர்களை புரியும் படியும், தலைப்பு எழுத்து களிலும் எழுத வேண் டும் என்று மருத்துவர் களுக்கு உத்தரவிடும் வகையில், இந்திய மருத் துவக் கவுன்சில் விதி முறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித் துள்ளது.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/92468.html#ixzz3L846iYY6<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-40699893982822286022014-12-06T20:14:11.058+05:302014-12-06T20:14:11.058+05:30பிஜேபியின் ஒழுக்கம் - பாரீர்!
டில்லியில் ஆளப் போ...பிஜேபியின் ஒழுக்கம் - பாரீர்!<br /><br /><br />டில்லியில் ஆளப் போவது ராமன் மகனா - முறை கேடாகப் பிறந்தவரின் மகனா?<br /><br />என்று பேசிய மத்திய பிஜேபி அமைச்சர் நிரஞ்ஜன் ஜோதி பதவி விலக வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு வெடித்துக் கிளம்பிபுள்ள நிலையில், அந்த மத்திய அமைச்சர் நிரஞ்ஜன் ஜோதி தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் - அவர் பிரச்சாரத்தை ரத்து செய்யும் பேச்சுக்கே இட மில்லை என்று பிஜேபி அமைச்சர் வெங்கையா நாயுடு கூறுகிறார்.<br /><br />இதன் பொருள் என்ன? இதைவிட மோசமாகப் பேசுக என்று தூண்டி விடுவதுதானே! இது தான் பிஜேபியின் ஒழுக்கமா!<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/92468.html#ixzz3L83tonzA<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-50047354175200389742014-12-06T20:12:33.277+05:302014-12-06T20:12:33.277+05:30இந்த நினைவு நாளில்...
அண்ணல் அம்பேத்கர் பிம்பமல்ல...இந்த நினைவு நாளில்...<br /><br />அண்ணல் அம்பேத்கர் பிம்பமல்ல பின்பற்றப்பட வேண்டியவர்!<br /><br />சமூகப் புரட்சியா ளரும், தலைசிறந்த சிந்தனையாளருமான அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள் இன்று. வரலாற்றுச் சுவடான இந்த நாளைத்தான். சங்பரிவாரக் கும்பல், 450 ஆண்டு பழைமை வாய்ந்த பாபர் மசூதியை, இராமன் பிறந்த இடத்தில் பாபர் மசூதி கட்டலாமா? என்று பொய்யுரை புகன்று, அன்றைய மத்திய - மாநில ஆட்சிகளின் கண் ஜாடையோடு, இடித்து, இந்தியாவில் மதக் கலவரத்திற்கு வித்தூன்றினர்.<br /><br />ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்து 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி நடந்த அந்தக் குற்றத்தினைச் செய்தவர்கள் இன்றும் மார்தட்டி நிற்கின்றனர். சட்டம் ஊமையாக, ஆமையாக உள்ளது!<br /><br />எத்தனையோ கமிஷன்களும், வழக்குகளும் மவுன ராகங்கள் வாசிக்கின்றன! தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்ற அறிவுரைகள் ஒரு புறம் - இந்த லட்சணத்தில் அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளை (டிச.6) அவர்கள் தேர்வு செய்ததே, அவரின் நினைவை திசை திருப்பவே.<br /><br />இன்றோ அதே கூட்டம் அம்பேத்கரையும் முகத்திரையாக வாக்கு அறுவடைக்குப் பயன்படுத்த திட்டமிடுகின்றனர்!<br /><br />இந்துமதம்தான் ஜாதி - தீண்டாமையின் ஊற்று - பாதுகாவல் அரண் என்ற அவரது கருத்துக்கு நேர் எதிரானவர்கள் அவரைத் தங்கள் முகபடாமாக அணிந்து பவனி வந்து அப்பாவி தாழ்த்தப்பட்டோரை ஏமாற்றிட முயலுகின்றனர்!<br /><br />சில இளைஞர்களை - அவர்தம் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று பசப்பு மொழிகளால் ஈர்க்க முயலும் கொடுமை, பக்தி மயக்க மருந்து மூலம் நடைபெறுகிறது.<br /><br />ஒடுக்கப்பட்டோர் உரிமை அமைப்புகள் எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டிய முக்கிய தருணம் இது!<br /><br />இராமனையும், கிருஷ்ணனையும், மனு தர்மத்தையும், ஏற்காதவர் அம்பேத்கர்.<br /><br />அவரை வெறும் படமாக்கி - பிம்பமாக்கி - பெருத்தமாலைகள் சிலைகளின் முகத்தை மறைப்பது போல், அணிவித்து, போலிப் பாராட்டுகளால் அவரது கொள்கையை மறைத்து அழித்து விட முயலு கிறார்கள்!<br /><br />அண்ணல் அம்பேத்கர் வெறும் சிலை அல்ல. சீலத்தைத் தந்தவர் அவர் பிம்பமல்ல - பின்பற்றப்பட வேண்டியவர்!<br /><br />மறவாதீர்!<br /><br /><br />சென்னை <br />6-12-2014<br /><br />- கி.வீரமணி<br />தலைவர், திராவிடர் கழகம்<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/92474.html#ixzz3L83SUfgU<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-34413251745390708422014-12-06T07:29:33.140+05:302014-12-06T07:29:33.140+05:301956 அக்டோபர் 14 ஆம் நாள் பார்ப்பன ஆதிபத்திய வருணா...1956 அக்டோபர் 14 ஆம் நாள் பார்ப்பன ஆதிபத்திய வருணாசிரம இந்து மதத்திலிருந்து 5 லட்சத்துக்கும் அதிகமான தாழ்த்தப்பட்ட தோழர்களும் பவுத்தம் தழுவியபோது அண்ணல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களும், மற்றவர்களும் எடுத்துக் கொண்ட உறுதி மொழிகள் இதோ:<br /><br />1. பிரம்மனையோ, விஷ்ணுவையோ, சிவனையோ நான் கடவுள் என்று கருத மாட்டேன். அவர்களை வழிபாடு செய்யவும் மாட்டேன்.<br /><br />2. இராமனையோ, கிருஷ்ணனையோ நான் கடவுள் என்று கருதமாட்டேன்; அவர்களை வழிபாடு செய்யவும் மாட்டேன்.<br /><br />3. இந்துத் தெய்வங்களான கவுரி, கணபதி, இத்தியாதிகளை நான் கடவுள் என்று ஏற்க மாட்டேன்; அவைகளை வழிபாடு செய்யவும் மாட்டேன்.<br /><br />4. கடவுள் பிறவி எடுத்ததாகவோ, எந்தவொரு உருவத்தில் அவதாரம் செய்ததாகவோ நான் நம்பமாட்டேன்.<br /><br />5. பகவான் புத்தர்; மகா விஷ்ணுவின் அவதாரம் என்பதை நான் நம்பமாட்டேன். அப்படிப்பிரச்சாரம் செய்வது விஷமத்தன மானது, தவறானது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.<br /><br />6. சாவு சம்பந்தப்பட்ட இந்து மதச் சடங்கான சிரார்த்தத்தை நான் ஒருபோதும் செய்யமாட்டேன்; இறந்தவர்களின் பெயரால் நான் பிண்டம் கொடுக்கவும் மாட்டேன்.<br /><br />7. பவுத்தத்தின் கோட்பாடுகளுக்கு எதிராக நான் என்றுமே நடக்க மாட்டேன்.<br /><br />8. பார்ப்பனர்களால் நடத்தப்படும் சமஸ்காரங்கள் எதனையும் நான் என்றுமே ஏற்றுக்கொள்ளமாட் டேன்.<br /><br />9. அனைவரும் சமம் என்ற கொள்கையை நான் நம்புகிறேன்.<br /><br />10. சமத்துவத்தை நிலைநாட்ட நான் முயல்வேன்.<br /><br />11. பகவான் புத்தர் காட்டிய எட்டு அம்ச வழியை நான் பின்பற்றுவேன்.<br /><br />12. தம்மதத்தின் 12 பரமிதங்களையும் நான் பின்பற்றுவேன்.<br /><br />13. எல்லா உயிர்ப் பிராணிகளிடத்தும் நான் கருணை காட்டுவேன்; அவைகளைக் காக்க முயலுவேன்.<br /><br />14. நான் பொய் சொல்லமாட்டேன்.<br /><br />15. நான் திருட மாட்டேன்.<br /><br />16. காமத்தில் நான் உழல மாட்டேன்; பாலுணர்வில் அத்துமீற மாட்டேன்.<br /><br />17. போதைக்குக் காரணமான குடியையோ, மதுவையோ நான் அருந்த மாட்டேன்.<br /><br />18. ஞானம், கருணை, அறிவுரை ஆகியவற்றின் அடிப்படையிலான புத்தரின் போதனைகளுக்கு இணங்க என் வாழ்வை உருவாக்க நான் முயலுவேன்.<br /><br />19. பார்ப்பனர் தவிர்த்த பிற மனிதர்களை கீழான பிறவிகள் என்று கருதுவதும், சமத்துவமற்ற நிலையில் நம்பிக்கை உடையதும், மனிதர்களின் விடுதலைக்குக் கேடாக இருப்பதுமான இந்து மதத்தை நான் கைவிட்டு விட்டு இன்று புத்த மதத்தைத் கைக் கொள்ளுகிறேன்<br /><br />20. புத்த தம்மமே சிறந்த மார்க்கம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.<br /><br />21. இன்று புதிய பிறவி எடுக்கிறேன் என்று நான் நம்புகிறேன்.<br /><br />22. புத்த தம்மத்துக்கு இணங்கவே இன்று முதல் நான் செயல்படுவேன் என்று உறுதி கூறுகிறேன்.<br /><br />நான் இந்துவாக சாக மாட்டேன் என்று சொன்னவர் தம் வாழ்நாளில் அதனைச் சாதித்துக் காட்டினார்.<br /><br />- “விடுதலை” 16-2-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-41524630680964462112014-12-05T20:12:52.927+05:302014-12-05T20:12:52.927+05:30மகிழ்ச்சியும் துயரமும்
வீரமணி
கேள்வி : தங்கள் வ...மகிழ்ச்சியும் துயரமும்<br /><br /><br />வீரமணி<br /><br />கேள்வி : தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியில் திளைத்த தருணம் எது? துயரத்தில் துவண்டுபோன தருணம் எது? - - நா.இராமண்ணா, சென்னை<br /><br />பதில்: மகிழ்ச்சியில் திளைத்த நேரம். அறக்கட்டளை என்று பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தை, வருமான வரித்துறை டிரிபியூனல் அறிவித்து, 80 லட்ச ரூபாய் அறியா வரியைத் தள்ளுபடி செய்து அறிவித்ததைக் கேட்ட-போது.<br /><br />துன்பம், நம் அய்யா - அம்மா மறைவின்போது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-52189057354754158152014-12-05T20:12:02.444+05:302014-12-05T20:12:02.444+05:30புராணங்களில் அறிவியலைத் தேடலாமா?
வீரமணி
தற்போதுள...புராணங்களில் அறிவியலைத் தேடலாமா?<br /><br />வீரமணி<br /><br />தற்போதுள்ள பா.ஜ.க. ஆட்சியை முழுமையாக வழிநடத்தும் அமைப்பு ஆர்.எஸ்.எஸ். என்ற ஆரியக் கலாச்சாரப் போர்வையில் அரசியல் நடத்தும் ஏற்பாட்டாளர்கள் ஆவார்கள்.<br /><br />அவர்களது கொள்கையைத் திணித்து, மதச்சார்பின்மை, சமூகநீதி, ஜனநாயகம் என்ற தத்துவங்களை கரையான்கள் எப்படிப் புகுந்து அமைதியாகவே புத்தகங்களை அரித்துத் தின்று விடுகின்றவோ அதேபோல், பல்வேறு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.<br /><br />புல்லட் ரயில் வேகத்தில் செய்துவிட ஆங்காங்கே முக்கியப் பதவிகளில் எல்லாம் அமைச்சரவை தொடங்கி, ஆர்.எஸ்.எஸ். மயமாகி அதன்மூலம் பச்சையாக ஹிந்துத்துவாவை ஆட்சிப் பீடமேற்றிட ஆலாய்ப் பறக்கின்றனர்!<br /><br />ஹிந்துத்வா என்பதை உருவாக்கிய வி.டி.சாவர்க்கர், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் முக்கியமான கோல்வால்கர் போன்றவர்களின் தத்துவங்களை ஆட்சியின்மூலம் அமலாக்கிட அதிவேக அவசரம் காட்டுகின்றனர்.<br /><br />அதற்கான முன்னேற்பாடாக, முக்கிய அறிவியல், வரலாறு, கல்வி போன்ற அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் ஆர்.எஸ்.எஸ்.காரர்களைக் கொணர்ந்து அமர்த்தி, அதை நிறைவேற்றிட துடியாய்த் துடிக்கின்றனர்.<br /><br />இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சில் என்ற அமைப்பிற்கு வி.சுதர்சனராவ் என்ற ஒரு பச்சை ஆர்.எஸ்.எஸ்.காரரை நியமனம் செய்து அவர் புராணங்கள், இதிகாசங்கள் இவைகளை, வரலாறுகளாக மாற்றிடத் திட்டமிட்டு, பிரச்சார திட்டத்தைச் செயல்படுத்துகிறார்.<br /><br />வரலாற்றுப் பாடப் புத்தகங்களையே புரட்டிப் போட்டு ஹிந்துத்வாவின் கையேடுகளாக்கிட முனைப்புடன் செயலாற்றி முனைந்து நிற்கின்றனர்.<br /><br />நாட்டின் பிரபல வரலாற்றுப் பேராசிரியர்களான ரொமிலா தாப்பர், இர்பான் ஹபீப் போன்றவர்களுக்கு மார்க்சிய இடதுசாரி முத்திரை குத்திவிட்டு, தமது கருத்துகளை வலுக்கட்டாயமாகத் திணிக்கும் முயற்சியில் கூச்சநாச்சமின்றி ஈடுபட்டுள்ளனர்!<br /><br />ஹிந்துத்துவா கருத்தியலையும் சொல்லையும் உருவாக்கிய வி.டி.சாவர்க்கர் அவரது நூலில் ஒரு சொற்றொடரைப் பயன்படுத்தியுள்ளார்.<br /><br />‘Hinduise Military<br />Militarise Hindus’<br /><br />இராணுவத்தை ஹிந்து மயமாக்கு<br />ஹிந்துக்களை இராணுவமாக்கு<br />என்பதே அவ்விரு கட்டளைகள். அதுபோலத்தான் இப்போது,<br />வரலாற்றைக் காவிமயமாக்கு<br /><br />காவி(இந்து)_புராண இதிகாசங்களை வரலாறாக்கு என்ற முயற்சியோடு முன்பு வாஜ்பேயி ஆட்சிக்காலத்தில் முயன்றதைத் தொடருகிறார்கள்.<br /><br />அதிகப் பெரும்பான்மை வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு அதற்குமேல் ஒருபடி சென்று, இப்போது, ஹிந்துத்துவ புராண, இதிகாச கற்பனைப் புரட்டுகளை அறிவியலுக்கு முன்னோடி என்ற ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் சுதர்சன ராவ் போன்றவர்களும் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர்கள்வரை கட்டவிழ்த்துவிட்டு நடத்தி வருகின்றனர்.<br />இராமாயணம் நடந்த கதை என்கிறார்கள்.<br /><br />மரபணு ஆராய்ச்சி மஹாபாரதத்திலேயே உள்ளது.<br /><br />பிளாஸ்டிக் சர்ஜரிக்கு முன்னோடி - (Transplantation) உறுப்பை வெட்டி இணைத்தல் வினாயகர் கதை மூலம் நமது பரமசிவனே செய்துள்ளார்.<br /><br />ராக்கெட்டுகளுக்கு முன்பே புஷ்பக விமானம் _ இராமாயணத்திலேயே உள்ளது என்று கூறி கொயபெல்ஸின் குருநாதர்களாக ஆகியுள்ளன!.<br /><br />இதை எதிர்த்து கரன் தாப்பர் போன்ற விமர்சகர்கள் கேள்வி கேட்கத் துவங்கியுள்ளனர்.<br /><br />ரொமிலா தாப்பர் போன்ற வரலாற்று ஆசிரியர்கள் இதனை மறுத்துக் கூறுகின்றனர்.<br /><br />இந்திய வரலாற்று ஆய்வு மய்யத்தின் வரலாற்றாளர்களுக்கே அதிக அறிமுகமில்லாத ஆர்.எஸ்.எஸ். நபரான ஆந்திரத்து சுதர்சனராவ் என்பவர் பொறுப்பேற்றதிலிருந்து, தாப்பர் போன்றோர்மீது மார்க்சிஸ்டுகள் என்று சாயம் பூசுவதோடு, வெள்ளைக்காரர்கள் புராணங்களை கட்டுக் கதைகள் என்று கூறிவிட்டனர். இதனை மாற்றி 'விணீளீமீ வீஸீ மிஸீபீவீணீ' இந்தியாவின் வரலாறு இதிகாச புராணங்களிலிருந்து உருவாக வேண்டும் என்று மனம் போனபடி பேசியுள்ளார். எப்படி இனி செய்யப் போகிறார்கள் என்பதற்கான மணியோசை இது. இதனை அத்தனை முற்போக்கு சக்திகளும் ஒன்று திரண்டு எதிர்த்தாக வேண்டும். இந்த பத்தாம் பசலித்தன புதுப்பித்தலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க ஆங்காங்கு கருத்தரங்கங்களை நடத்திட முன்வர வேண்டும்.<br /><br />இந்நாட்டு அறிவியலாளர்கள் (Scientists) ஏன் மறுத்து அறிக்கைகள் விடவில்லை என்றுகூட கரன் தாப்பர் போன்றவர்கள் கேட்கின்றனர்.<br /><br />அதற்கு விடை வெளிப்படையானது. பெரும்பாலான விஞ்ஞானிகள் மத்திய அரசு ஊழியர்கள். பிரதமரும் உள்துறை அமைச்சரும் இப்படி அபத்தமான கருத்துகளைக் கூறும்போது அவர்களால் மறுத்துப் பேச முடியாதே; தனியார் துறை விஞ்ஞானிகளும்கூட, பல முதலாளிகளின் அமைப்புகளில் அல்லவா பணிபுரிகிறார்கள்? இவர்கள் அதனால் வாய்மூடி மவுனத்தில் புழுங்கிக் கொண்டிருப்பவர்களாகவே உள்ளார்கள் என்பதே யதார்த்த நிலையாகும்!<br /><br />கி.வீரமணி,<br />ஆசிரியர்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-33729979723403313092014-12-05T20:11:31.118+05:302014-12-05T20:11:31.118+05:30சாதாரணமான பொதுஅறிவின்படி பார்த்தாலும், உயிரினத் தோ...சாதாரணமான பொதுஅறிவின்படி பார்த்தாலும், உயிரினத் தோற்ற வளர்ச்சி நிகழ்ந்தது என்றால், அப்போது கடவுள்தான் அனைத்து உயிர்களையும் படைத்தார் என்ற கோட்பாட்டை அது பொய்யானது என்று மெய்ப்பித்துவிடுகிறது; அதனால் ஆதாம், ஏவாள் கோட்பாடும் மறுக்கப்பட்டுவிடுகிறது. ஆதாமும் ஏவாளும் இல்லாமல் போனால் முதல் பாவம் என்பதோ, பிறப்புமூலம் என்பதோ இல்லை. சிலுவையில் அறையப்படுவதற்கான ஒரு பலி ஆடு தேவையில்லை! தலைமுறை தலை-முறையாக நிலைத்து தொடர்ந்து வரும் சில பாவங்களில் இருந்து மன்னிப்பு அளித்து மீட்கப்படுவதற்கான தேவையும் இல்லை! ஒட்டுமொத்த மதம் என்னும் மாபெரும் கட்டமைப்பு சீட்டுக் கட்டினால் கட்டப்பட்ட கோபுரம் போல் சரிந்துவிடுகிறது! அது ஒட்டு மொத்த கிறித்தவ மதத்தையும் மற்றும் ஆப்ரகாமைப் பின்பற்றும் இதர மத நம்பிக்கையாளர்களையும் தேவைப்படாததாக ஆக்கிவிடுகிறது. பிறப்புமூலம் என்னும் கருத்து எப்போது ஓர் உருவகக் கதையாக ஆகிவிடு-கிறதோ, பின்னர் பைபிளில் உள்ள எதனை உண்மையென்று கருதமுடியும்? பைபிளில் உள்ள அனைத்தையும் உருவக, கற்பனைக் கதை என எடுத்துக் கொண்டு ஓரினச் சேர்க்கையாளர்களை ஏன் அவர்கள் சகித்துக் கொண்டு நேசிக்கக்-கூடாது? குடும்பக் கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்டு, கருக்கலைப்புக்கு பெண்களுக்கு ஏன் உரிமை அளிக்கப்படக்கூடாது? கதைப் புத்தகங்களுக்குப் பதிலாக ஆப்பிரிக்க நாடுகளில் ஏன் கருத்தடை சாதனங்களை விநியோகிக்கக்-கூடாது? மாதவிலக்கு ஆகும் பெண்களை பாதிரியார்களாகவும் போப்புகளாகவும் ஏன் நியமிக்கக்கூடாது?<br /><br />அறிவியலும் மதமும் எப்போதுமே ஒன்றுக்கு ஒன்று எதிரானதாக, முரண்பட்டதாக இருப்பவையாகும். உயிரினத் தோற்ற வளர்ச்சி மற்றும் பெருவெடிப்புக் கோட்பாடுகள் பற்றிய அவரது அறிக்கையை போப் மனப்பூர்வமாக வெளியிட்டிருந்தாரானால், அவர் தனது போப்பாண்டவர் பதவியைத் துறக்க வேண்டும்; அந்தப் பதவிக்கான சலுகைகளை, வசதிகளை அவர் துறக்க வேண்டும்.<br /><br />மதம் எப்போதெல்லாம் அறிவியலை எதிர்கொள்ளுகிறதோ, அப்போதெல்லாம் இறுதி வெற்றி அறிவியலுக்கே கிடைக்கிறது. அதனால் ஏற்படும் அவமானங்களை மதங்கள் அமைதியாக விழுங்கிக் கொண்டு, அறிவியல்-தான் சரியானது என்று தயக்கத்துடன் ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதன் பிறகு, இரண்டாம் நிலைப் பகுத்தறிவு மற்றும் உள்நோக்கம் கொண்ட காரண காரிய விளக்கங்களினால், அறிவியலுக்கும் மதத்துக்கும் இடையே வேறுபாடு இல்லை, முரண்பாடு இல்லை என்று கூறி மக்களை எவ்வாறாவது ஏமாற்றவே அவர்கள் முனைகின்றனர்.<br />இறுதியாக ஒன்றைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். நாம் எங்கிருந்து வந்தோம் என்பதைப் பற்றி மதங்கள் கூறுவது தவறாக இருக்கும் நிலையில், இறப்புக்குப் பிறகு எங்கே நாம் போகப்போகிறோம் என்பதைப் பற்றி அவர்கள் கூறும் அடிப்படை ஆதாரமற்ற கதைகளை நாம் ஏன் நம்ப வேண்டும்?<br /><br />- தமிழில்: த.க.பாலகிருட்டிணன்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-4862934311146708782014-12-05T20:11:26.292+05:302014-12-05T20:11:26.292+05:30உயிரினத் தோற்ற வளர்ச்சிக் கோட்பாட்டுக்கான சான்றுகள...உயிரினத் தோற்ற வளர்ச்சிக் கோட்பாட்டுக்கான சான்றுகளும், ஆதாரங்களும் ஏராளமாக இருக்கின்றன. நல்ல நிலையில் உள்ள மனம் கொண்ட எவர் ஒருவராலும் அதனை மறுக்க இயலாது. வட்டமான ஒரு ஓட்டையில் சதுரமான ஆப்பு ஒன்றினை அடிக்கவே போப் முயல்கிறார். அறிவியலின் சாதனைகளைப் பறித்துக் கொள்ள போப் முயல்கிறார். தங்களின் நம்பிக்கைக்கும் அறிவியலுக்கும் இடையே எந்தவிதப் பிணக்கும் இல்லை என்று தன்னைப் பின்பற்றுபவர்கள் நினைக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அறிவியலுக்கும் மதத்திற்கும் இடையே எந்தவித ஒத்திசைவின்மையும் இல்லாமல் இருப்பது போன்று நடிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.<br /><br />இதுவே ஒரு மாபெரும் தவறாகும். மதமும் அறிவியலும் எதிர்எதிர் துருவங்களாகும். அவை சந்திப்பதற்கான வாய்ப்பே இல்லை. அறைகுறை அறிவு ஆபத்தானது என்பதை நாமனைவரும் அறிவோம். இப்போது சற்று கற்பனை செய்து பாருங்கள். அறைகுறை அறிவே இவ்வளவு ஆபத்து நிறைந்தது என்றால், அறியாமை என்பது எவ்வளவு பேராபத்தானதாக இருக்கும்? அறிவியல் = மாற்றமுடியாத 100 விழுக்காடு சான்றுகளும் ஆதாரங்களும் கொண்டது; எப்போதுமே திறந்த மனம் கொண்டது; தவறு என மெய்ப்பிக்கப்பட்டால் மாற்றிக் கொள்ளத் தயாராக இருப்பது; விமர்சனங்களைத் தாங்கிக் கொள்வது; தன்னைத் தானே திருத்திக் கொள்ள இயன்றது.<br /><br />மதம் = எந்தவித சான்றுகளோ ஆதாரமோ இல்லாத நிலையிலும், 100 விழுக்காடு முட்டாள்தனமான, கட்டுக் கதைகளை உண்மையெனக் கூறுவது; எதைப் பற்றியும் கேள்வி கேட்க அனுமதிக்காதது; எப்போதுமே மூடிய மனம் கொண்டது; விமர்சனத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாதது.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-47890258887733987812014-12-05T20:11:17.076+05:302014-12-05T20:11:17.076+05:30அவர் ஏற்றுக் கொள்வதால் மட்டுமே எந்த ஒரு அறிவியல் க...அவர் ஏற்றுக் கொள்வதால் மட்டுமே எந்த ஒரு அறிவியல் கோட்பாடும் மிகச் சரியானதாக ஆகிவிடப்போவதில்லை. உயிரினத் தோற்ற வளர்ச்சி மற்றும் பெருவெடிப்பு ஆகிய கோட்பாடுகளை அவர் ஏற்றுக் கொண்ட போதிலும், படைப்பாளி கடவுள் என்ற காலாவதியாகிப் போன கருத்தை அவர் இன்னமும் முற்றிலுமாகக் கைவிட்டுவிட-வில்லை. இந்த இரு கோட்பாட்டு நடைமுறை-களையும் தொடங்கி வைத்ததாகக் கருதப்படும் கற்பனைப் படைப்பாளியான கடவுள் இவற்றுக்குத் தேவை என்றே இன்னமும் அவர் வலியுறுத்தி வருகிறார். இது எப்படி இருக்கிறது என்றால், கோல் கம்பங்களை இடம் மாற்றி வைப்பது போலவும், ஒக்காமின் சவரக் கத்தியால் அறுத்து சரிசெய்யப்பட வேண்டியது போலவும் இருக்கிறது.<br /><br />ஆனால் உண்மையிலேயே போப் பிரான்சிசின் கருத்துகள், உயிரினத் தோற்ற வளர்ச்சி என்ற கருத்துக்கான கதவைத் திறந்தவரும், பெருவெடிப்புக் கோட்பாட்டை ஆர்வத்துடன் 1996இல் வரவேற்றவருமான பயஸ் 12ஆம் போப்பின் முன்னேற்றப் பணிகளை ஒட்டியே அமைந்துள்ளன; ஜான் பால் 2ஆவது போப் ஒரு படி மேலே சென்று உயிரினத் தோற்ற வளர்ச்சிக் கோட்பாடு ஒரு கருதுகோள் என்பதைவிட உயர்ந்தது என்றும் நிறைந்த பயனளிக்கும் வகையில் மெய்ப்பிக்கப்-பட்ட உண்மை என்றும் தெரிவித்துள்ளார்.<br /><br />அறிவியலைப் பொறுத்தவரை, அவர் என்ன கூறுகிறார், நான் என்ன கூறுகிறேன், நீ என்ன கூறுகிறாய், அதிகாரம் பெற்ற எவர் ஒருவரும் (அது டார்வினாக இருந்தாலும் சரி, அய்ன்ஸ்டீனாக இருந்தாலும் சரி அல்லது வேறு எவராக இருந்தாலும் சரி) என்ன சொல்கிறார் என்பதோ, முக்கியமானதோ அல்ல. இதில் முக்கியமானது என்னவென்றால், சான்றுகளும், ஆதாரங்களும் என்ன காட்டுகின்றன என்பதும் எதன் அடிப்படையில் அவர்கள் கூறுகிறார்கள் என்பதும்தான்.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-65564266824894599872014-12-05T20:11:05.928+05:302014-12-05T20:11:05.928+05:30பதவி விலகுவாரா போப்?
- மருத்துவர் கணேஷ் வேலுச்சா...பதவி விலகுவாரா போப்?<br /><br /><br />- மருத்துவர் கணேஷ் வேலுச்சாமி<br /><br />உயிரினத் தோற்ற வளர்ச்சிக் கோட்பாட்டுக்கோ, பெருவெடிப்புக் கோட்-பாட்டுக்கோ ஒப்புதல் தருவதற்கு போப் யார்? அவரைக் கேட்பதைவிட ஒரு பிச்சைக்காரரையோ, ஒரு குழாய்ப் பணியாளரையோ, பெருக்கிச் சுத்தம் செய்யும் ஒரு பணியாளரையோ அல்லது ஒரு ஜோதிடரையோ நீங்கள் கேட்டிருக்கலாம்.<br /><br /> <br /><br />எப்போதுமே அறிவியலைத் தோற்கடிப்-பதற்காக தங்களால் இயன்ற அனைத்தையும் கிறித்தவ தேவாலய அமைப்புகள் தொடர்ந்து செய்துகொண்டுதான் இருக்கின்றன.<br /><br />பைபிளைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று சொல்வதுடன் போப் நிறுத்திக் கொள்ள வேண்டும்; அறிவியலைப் பற்றி என்ன நினைக்கிறார் என்று அவர் கூறத் தேவையில்லை; அந்த வேலை அவருடையதும் அல்ல. தியோடிசி என்று நகைச்சுவையாக அழைக்கப்படும் சமய ஆய்வியல் என்ற அவருக்கே உரித்தான பொருளைத் தாண்டி மற்ற எந்த ஒரு பொருளைப் பற்றியும் பேசுவதற்கு அவருக்குத் தகுதி இல்லை; அவர் பேசக்கூடாது.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-40574571320125521702014-12-05T20:10:23.523+05:302014-12-05T20:10:23.523+05:30ராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்குச் சூட்ட...ராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்குச் சூட்டப்பட்ட புகழ்மாலைகளில் சில...<br />திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்குச் சூட்டப்பட்ட புகழ்மாலைகளில் சில...<br /> <br /><br />1. 1944 - திராவிட இயக்கத்தின் திருஞானசம்பந்தர் என அண்ணாவின் பாராட்டு.<br /><br />2. 1950 - இளம் பேச்சாளி பொதுமக்கள் பாராட்டு.<br /><br />3. 1969 - குருவுக்கேற்ற சீடர்தான் வீரமணி என்ற தந்தை பெரியார் பாராட்டு.<br /><br />4. 1993 - நாகையில் திராவிடர் பெண்கள் மாநாட்டில் இனமானப் போராளி பட்டம் அளிக்கப்பட்டது.<br /><br />5. 1996 - தந்தை பெரியார் சமூக நீதி விருது தமிழக அரசு (ஜெ.ஜெயலலிதா) வழங்கியது.<br /><br />6. 2000 - புதுதில்லி குளோபல் பொருளாதார கவுன்சில் பாரத் ஜோதி விருது வழங்கியது.<br /><br />7. 2003 - மியான்மரில் பேரளிவாளர் விருது வழங்கியது.<br /><br />8. 2003 - ஆக்சுபோர்டு தமிழ்ச் சங்கம், ஆக்சுபோர்டு தமிழ் விருது வழங்கி பாராட்டியது.<br /><br />9. 2010 - விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் பெரியார் ஒளி விருது.<br /><br />10. 2010 - கோவை கே.ஜி.அறக்கட்டளை சார்பில் ஆயிரமாண்டின் செயலாற்றல் மிக்க தலைவர் விருது அளிக்கப்பட்டது.<br /><br />11. 2011 - ஆந்திர மாநிலத்தில் ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ. சுவாமி விருது வழங்கப்பட்டது.<br /><br />12. சென்னை லயோலா கல்லூரி வரலாற்றுத் துறை ஆய்வு மய்யம் சமூகத் துறையில் தொண்டாற்றியமைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது.<br /><br />13. 2003 - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.<br /><br />14. மலேசிய திராவிடர் கழகம் கருத்துக்கனல் என்ற பட்டத்தை வழங்கியது.<br /><br />15. 2009 - சென்னையில் முரசொலி அறக்கட்டளை 2008ஆம் ஆண்டுக்கான கலைஞர் விருதினை வழங்கியது.<br /><br />16. 2009 - காஞ்சியில் தி.மு.க. சார்பில் அண்ணா நூற்றாண்டு விழாவில தந்தை பெரியார் விருது வழங்கப்பட்டது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-12469916465047739092014-12-05T20:08:24.227+05:302014-12-05T20:08:24.227+05:30
டிச.2 : தமிழர் தலைவர் பிறந்த நாள் சிந்தனை :
“பெ...<br /><br />டிச.2 : தமிழர் தலைவர் பிறந்த நாள் சிந்தனை :<br /><br />“பெரியார் உலகம்” படைக்கும் பகுத்தறிவுச் சிற்பியே!<br /><br />அய்யாவின் கொள்கைகளை<br />அடுத்த தலைமுறைக்கும்<br />அப்படியே கொண்டுசெல்லும்<br />அய்யாவின் தத்துப் பிள்ளை அல்ல;<br />அவரது தத்துவப் பிள்ளை நீ!<br /><br />உன் கையளவு இதயத்தில்<br />உலகளவு விரியும்;<br />வழியும் சிந்தனையால்<br />விழிமூட மறக்கின்றோம்!<br />தத்துவம் முகிழ்க்கும்<br />புத்தாக்கப் புதுஉலகில்...<br /><br />அறிவியல் கண்காட்சி<br />ஆய்வரங்கம்<br />கோளரங்கம்<br />மெழுகுச் சிலையரங்கம்<br />மாநாட்டு மண்டபம்<br />மழலையர் பூங்கா<br /><br />மண்ணில் மனிதம் தழைக்க<br />தன்னையழித்துக் கொண்ட<br />தலைவனின் இணையில்லாப் புகழை<br />இளைய தலைமுறையும்<br />இன்புற்றுக் காணவேண்டி<br />உலகமகா புருஷரின்<br />உன்னத வாழ்க்கையை<br />ஒலி-ஒளி காட்சியாய்<br />அகலத்திரையில் விரியும் மாட்சி!<br /><br />சிந்துச் சமவெளியின்<br />சிம்மாசனமாயிருந்த<br />திராவிடத் தமிழினத்தை<br />பெரியாருக்கு முன் -<br />பெரியாருக்குப் பின் என<br />வகைப்படுத்தும்<br />வண்ணமிகு<br />எண்ணக் குவியல்கள்!<br /><br />வேடந்தாங்கல் பறவையாய்<br />வந்து குவியும்<br />வெளிநாட்டுப் பயணியரின்<br />சிந்தையைக் குளிர்விக்கும்<br />சங்கதிகள் நிறைந்திருக்கும்!<br />நிறைகுடமாய் உந்தனுழைப்பும்<br />உறைந்திருக்கும்; கலந்திருக்கும்!<br /><br />விழிமலரின் பாவைகளை<br />விரியவைக்கும் பிரமிப்பு!<br />குருதியின் உயிரணுக்களை<br />உசுப்பிவிடும் பரவசம்!<br />இப்படியொரு அதிசயமா?<br />இதுவும் சாத்தியமா!<br />எப்படி முடியும் - இது<br />யாரால் நடக்கும்!<br /><br />வெண்மேகங்கள் விளையாடும்<br />வானத்தைத் தொட்டுவிடும்<br />பிரமாண்டத்தின் எல்லையாய்<br />புத்தருக்கும், ஏசுவுக்கும்<br />பேருருவச் சிலைகளைப் படைத்து<br />புகழேணியின் உச்சியில்<br />அரச குடும்பத்தினரும்; ஆட்சியாளர்களும்<br />அயல்நாட்டில்!<br /><br />மரபுவழி ஆட்சிகளே - இந்த<br />மண்ணை ஆண்டுவந்தும் - தமிழ்<br />மண்ணை மணந்த<br />மணாளரின் மாப்புகழை<br />விண்ணும் மண்ணுமாய்<br />நீடித்து நிலைத்திருக்க;<br />நிலையான நினைவுபோற்ற<br />மனமில்லையோ மார்க்கம் தேட!<br /><br />சாமானியன் உன் கரம்பட்டே<br />சாசுவதமாகப் போவுது<br />பெரியார் புது உலகம்<br />உருபெற்று; மாசுமருவற்று!<br />சாதனைச் சரிதம் காணும்<br />வரலாறாய் மாறினாய்!<br />மாரிக்காலத்து<br />மழைமேகமாய் நீ ஆனாய்!<br /><br />அய்யாவின் மண்டைச் சுரப்பை<br />அகிலம் தொழச் செய்யும்<br />உந்தன் மண்டைச் சுரப்பால்<br />உலகத் தமிழரெல்லாம்<br />உன்னிடம் புகலிடம்!<br /><br />எண்ணியதை எண்ணியாங்கு<br />திண்ணியமாய் செய்துமுடிக்கும்<br />தேனீயொத்த தொண்டர்களைத்<br />தன்னகத்தே கொண்டவரே!<br />செவ்வாயில் கால்பதித்தாலும்<br />அய்யாவைப் பரப்பத்தான்<br />செல்வாய் நீ!<br /><br />நாளைய உலகின்<br />வரலாறு சொல்லும்<br />பொன்னேட்டில்<br />உன் பெயரும்<br />வைரமாய் மின்னும்!<br />இப்புவியில் பெரியார் புகழ்<br />இருக்கும் மட்டும்<br />இணைந்து நீயும்<br />இறவாமல் இருந்திடுவாய்!<br /><br />- சீர்காழி கு.நா.இராமண்ணாதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-1775506945993844292014-12-05T20:07:51.764+05:302014-12-05T20:07:51.764+05:30
2014ஆம் ஆண்டுக்கான சமூகநீதிக்கான கி.வீரமணி விருது...<br />2014ஆம் ஆண்டுக்கான சமூகநீதிக்கான கி.வீரமணி விருது வழங்கும் விழா ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேசு வரத்தில் 23.11.2014 அன்று நடைபெற்றது. ஒடிசா மாநில பகுத்தறிவாளர் மன்றத்தின் தலைவரும், சமூகநீதியை வாழ்வியல் நெறியாகக் கொண்டு வாழ்ந்து வருபவருமான தத்துவப் பேராசிரியர், தானேஸ்வர் சாகு அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. விருது வழங்கும் விழாவிற்கு ஒடிசா மாநில பகுத்தறிவாளர் மன்றத்தின் துணைத் தலைவர் உளவியல் பேராசிரியர் முனைவர் பிரதாப் குமார் நாத் தலைமை வகித்தார். சமூகநீதிக்கான கி.வீரமணி விருதினை பேராசிரியர் தானேஸ்வர் அவர்களுக்கு பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் முனைவர் இலக்குவன் தமிழ் வழங்கினார். விருது பட்டயமும், விருது தொகையான ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் விருது நாயகருக்கு வழங்கப்பட்டது விருது வழங்கும் நிகழ்வு தமிழர் தலைவர் ஆசிரியர் முன்னிலையில் நடைபெற்றது. விருது நாயகரைப் பாராட்டி, சிறப்புச் செய்து தமிழர் தலைவர் சமூக நீதி பற்றிய சிறப்புரை ஆற்றினார். பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வீ.குமரேசன் வாழ்த்திப் பேசினார். நிகழ்ச்சியின் நன்றியுரையினை ஒடிசா மாநில பகுத்தறிவாளர் மன்றத்தின் செயலாளர் தேவேந்திர சுதார் வழங்கினார்.<br /><br />சமூகநீதி விருது நாயகர் பேராசிரியர் தானேஸ்வர் சாகு தமது ஏற்புரையில், சமூக நீதிக்கு அரும்பணி ஆற்றிய சமூக புரட்சியாளர் தந்தை பெரியாரின் பங்கு மகத்தானது. தந்தை பெரியா ரது கொள்கைச் சீடர் டாக்டர் கி.வீரமணியின் பெயரில் சமூக நீதி விருது பெற்றது எனக்குப் பெருமையாக உள் ளது. சாதி மறுப்புத் திருமணம் செய்து, தாழ்த்தப்பட்ட சமு தாயத்தை சார்ந்தவரை துணை வியாக ஏற்றுக் கொண்டதால் சமுதாயத்தில் உறவினர்களாலும், எனது சமுதாய மக்களாலும் புறக்கணிக்கப்-பட்டவன் நான். இருப்பினும் கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறேன். சாக்ரடீசின் கொள்கைகளுக்கு இறவாப் புகழைச் சேர்ந்தவர் பிளாட்டோ. அதுபோல பெரியாரின் பகுத்தறி வுக் கொள்கைகளை உலகளாவிய அளவில் பரப்புரை செய்து வருபவர் டாக்டர் கி.வீரமணி. அவர் அளித்த ஊக்கத்தில் தந்தை பெரியாரது கொள்கைகளை ஒடியா மொழியில் மொழியாக்கம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இன்று வழங்கப்பட்ட விருதினைப் பெற்று எஞ்சிய வாழ்நாளையும் சமூக நீதிக் கொள்கைகள் நடைமுறை காண, பரந்துபட பாடுபடுவேன். என்று குறிப்பிட்டார்.<br /><br />- தொகுப்பு: கோவிந்தன்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-77353605108026126802014-12-05T20:07:47.388+05:302014-12-05T20:07:47.388+05:302. சீதாராம் கேசரி - காங்கிரஸ் கட்சியின் முன்னாள் த...2. சீதாராம் கேசரி - காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் - இந்தியா _- 1997<br /><br />3. சந்திரஜித் - முன்னாள் மத்திய அமைச்சர் - இந்தியா -_ 1998<br /><br />4. மாயாவதி - முன்னாள் உத்திர பிரதேச முதல்வர் -_ இந்தியா -_ 2000<br /><br />5. எஸ்.டி.மூர்த்தி - பெரியார் பெருந்தொண்டர் -_ சிங்கப்பூர் -_ 2002<br /><br />6. ஜி.கே.மூப்பனார் - தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் _- இந்தியா _- 2003<br /><br />7. பி.எஸ்.ஏ.சாமி - உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி - ஆந்திரப் பிரதேசம் _- இந்தியா _- 2005<br /><br />8. வீரா.முனுசாமி - மியான்மர் _- யாங்கூன் -_ 2006<br /><br />9. டாக்டர் கலைஞர் - தி.மு.க. தலைவர், முன்னாள் முதல்வர் - தமிழ்நாடு _- இந்தியா _- 2008<br /><br />10. பேரா.ரவிவர்மகுமார் -_ அட்வகேட் ஜெனரல் கர்நாடகா - இந்தியா _- 2009<br /><br />11. செல்லபெருமாள் _- சமூகத் தொண்டர் - குவைத் -_ 2010<br /><br />12. கோ.கருணாநிதி -பொதுச் செயலாளர் - - (All India OBC) _- 2011<br /><br />13. கலைச்செல்வம் _- தலைவர் -_ பெரியார் சமூகச் சேவை மன்ற -_ சிங்கப்பூர் -_ 2011<br /><br />14. அனுமந்த்ராவ் எம்.பி _- அமைப்பாளர் பிற்படுத்தப்பட்ட எம்.பி.க்கள் அமைப்பு _- இந்தியா _- 2012<br /><br />15. ஜகன் சி.புஜ்பால் - மராட்டிய மாநில முன்னாள அமைச்சர் - மகாராஷ்டிரா -_ இந்தியா _ 2013<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-48562638546746587262014-12-05T20:07:38.698+05:302014-12-05T20:07:38.698+05:30தொடக்க விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ...தொடக்க விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, சமூக நீதி மய்யத்தின் தலைவர் திரு.சந்திரஜித் யாதவ் மற்றும் அமெரிக்காவிலுள்ள இந்தியத் தூதரக அலுவலரான சின்காவும் விழாவில் கலந்துகொண்டனர்.-<br /><br />இதன் முதன்மைப் பணிகளுள் ஒன்றாக, சமூகநீதிக்காக உழைப்பவர்களுக்கும், பெரியாரியலைப் பரப்புவோருக்கும் சிறப்பு செய்யும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒருவருக்கு சமூக நீதிக்கான கி.வீரமணி விருது அளிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு,<br /><br />முதன்முதலில் பெரியார் பன்னாட்டமைப்-பினர் சமூகநீதியை நிலைநாட்ட தன் ஆட்சியை இழந்த மேனாள் பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங் (வி.பி.சிங்) அவர்களுக்கு வழங்க முடிவு செய்து 24.12.1996 அன்று சென்னை பெரியா திடலில் சமூக நீதிக்கான கி.வீரமணி விருது அளிக்கும் விழா வை நடத்தினர். மாண்புமிகு வி.பி.சிங் அவர்கள் உடல் நலிவு காரணமாக வர இயலாவிட்டாலும் அவரது கட்சியின் பிரதிநிதியான தமிழக ஜனதா தள முன்னணி வீரர் திரு.கா.ஜெகவீர பாண்டியன் அதனைப் பெற்றுக் கொண்டார்.<br /><br />முதல் விருதைப் பெரும் மாமனிதரான மாண்புமிகு வி.பி.சிங் அவர்கள், மண்ணுக்குள் புதைக்கப்பட்டதாகக் கருதப்பட்ட மண்டல் குழுப் பரிந்துரையைச் சட்டரீதியாக அமல்-படுத்திக் காட்டியவர் திரு.வி.பி.சிங் அவர்கள். அதற்காக ஆட்சியையும் இழந்தவர்! சமூக நீதிக்காக எத்தனை நாற்காலிகளையும் இழக்கத் தயார் என்று குரல் கொடுத்த இலட்சிய வீரராக அவர் காட்சி அளித்தார்.<br /><br />இரண்டாவதாக, விருதுபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திரு.சீதாராம் கேசரி அவர்கள் சமூக நீதிக்கான கி.வீரமணி விருது பெற்றுக்கொண்டு அவர்கள் வழங்கிய உரையில், இணையற்ற தலைவராகிய பெரியாரைப் பின்பற்றுவோரிடமிருந்து சமூக நீதிக்கான விருதினைப் பெற்றுள்ள இந்த நாள் என்னுடைய வாழ்க்கையில் பெருமிதமும் மகிழ்ச்சியும் நிறைந்த நாளாகும். குறிப்பாக மகிழ்ச்சி அடைவது எதற்காக என்றால், பெரியாரின் மிகச் சிறந்த சீடரும் என்னுடைய நெடுநாளைய நண்பருமாகிய திரு.வீரமணி பெயரில் இந்த விருது வழங்கப்பட்டு இருப்பது என்பதற்காகத்தான் என்றார்.<br /><br />இதே போன்று, பல்வேறு மாநிலத்திலும், பல்வேறு நாடுகளிலும் சமூக நீதிக்காக பாடுபட்ட தலைவர்களுக்கு இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இதுவரை வழங்கப்பட்ட விருது பெற்றவர்களின் பட்டியலைப் பாருங்கள்.<br /><br />பெரியார் பன்னாட்டு அமைப்பு வழங்கிய சமூக நிதிக்கான கி.வீரமணி விருது பெற்றவர்கள் பட்டியல் :<br />1. வி.பி.சிங் - முன்னாள் பிரதமர் -_ இந்தியா- 1996<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com