tag:blogger.com,1999:blog-1474608369333206681.post8480853268631542609..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: அய்.பி.எல். போட்டியைத் தடை செய்!கிரிக்கெட் பார்ப்பனர்களின் விளையாட்டு?தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-84169427387855147572013-05-28T05:23:43.757+05:302013-05-28T05:23:43.757+05:30
கடமை வீரர் மனோகரனுக்கு நமது புகழ் அஞ்சலி!
எத்தன...<br />கடமை வீரர் மனோகரனுக்கு நமது புகழ் அஞ்சலி!<br /><br /><br />எத்தனை பேர் நம் நாட்டில் கடமையாற்றுவதில் தவறாதவர்கள்? என்ற ஒரு கணக்கெடுத்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சும்! பெரும்பாலும் பணியாற்றும் பலரும் - எந்த நிறுவனமும் நம் நாட்டில் எளிதில் விலக்கல்ல - கடியாரத்தையும் காலண்டரையும் தான் பார்த்துப் பணியாற்றுகிறார்களே தவிர, தங்கள் மனச் சாட்சிக்குக்கூட அவர்கள் நீதி வழங்குவதில்லை! எப்போது இடை வெளி - மணி - வருவதேகூட கால தாமதம் பல சாக்குப் போக்குகள்! சமாதானங்கள்! விளக்கங்கள் - வியாக்யானங்கள் இத்தியாதி! இத்தியாதி!<br /><br />நெருக்கடி நிலை பிரகடனத்தைக் கூட இன்னமும் நம் வயதானவர்கள் சிலர் சிலாகித்துப் பேசுவதற்கே ஒரு முக்கிய காரணம் - அப்போது எல்லாம் அரசு பணிமனைகள் சரியாக இயங்கின. எவரும் தாமதித்து வர மாட்டார்கள். லஞ்சம் கேட்டதில்லை. திருமணங்களைக்கூடச் சிக்கனமாக நடத்தினர்; காரணம் சாப்பிட்டுப் போட்ட எச்சில் இலைகளைக்கூட அதிகாரிகளை விட்டு கணக்கெடுத் தது அரசு - அபராதம் - சிறை வருமே என பயந்து எல்லோரும் கடமையாற்று வதில் கண்ணும், கருத்துமாக இருந்தனர் என்பர்.<br />உண்மைதான்!<br /><br />மனிதர்களுக்கு சுதந்திரக் காற்று - சுயக்கட்டுப்பாடும் அல்லவா தனி அடையாளம் - அவர்களது ஆறாம் அறிவு காரணமாக. அதை விடுத்து எப்போதும் கட்டுப்பாடு! கடுமையான அடக்குமுறை இருந்தால்தான் ஒழுங்கீனத்தைத் தவிர்க்க முடியும் என்றால் அது என்ன வாழ்க்கை? சிறைக்கூட வாழ்வு அல்லது சர்க்கஸ் கூடார மிருக வாழ்க்கை! இல்லையா?<br /><br />தானே கடமையாற்றும் நல்லவர் பலர் இன்னும் நாட்டில் இல்லாமல் இல்லை!<br /><br />இதோ ஒரு அருமையான உடல் புல்லரிக்கும் செய்தி. கடமையாற்றி விட்டு உயிரைவிட்ட ரயில் என்ஜின் ஓட்டுனர் மனோகரன்!<br /><br />இதோ அந்தச் செய்தியைப் படியுங்கள்! கும்மிடிப்பூண்டி, மே.25- கும்மிடிப்பூண்டி- சென்னை இடையே சென்ற மின்சார ரெயிலில் என்ஜின் டிரைவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. சாகும் முன் ரெயிலை நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர். கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்டிரல் ரயில் நிலையத் திற்கு மின்சாரரெயில் நேற்று முன்தினம் மாலை 3.50 மணிக்கு புறப்பட்டது. அந்த ரெயிலை மனோகரன் (வயது 48) ஓட்டி வந்தார்.<br /><br />ரெயில் கவரைப்பேட்டை ரெயில் நிலையத்தில் நின்றது. பயணிகள் ஏறிய தும் ரெயில் புறப்பட்டது. கவரைப் பேட்டையில் இருந்து சிறிது தூரம் சென்றதும் ரெயில் என்ஜின் டிரைவர் மனோகரன் திடீர் என்று ரெயிலை நிறுத்தினார். நடுவழியில் ரெயில் நிறுத்தப் பட்டதால் பயணிகள் என்னவோ ஏதோ என்று பயந்து கீழே இறங்கினார்கள். அதற்குள் டிரைவர் மனோகரனும் கீழே இறங்கினார். வலியால் நெஞ்சை பிடித்த படி மனோகரன் தரையில் சாய்ந்தார்.<br /><br />உடனடியாக அதிகாரிகள் மனோகரனை மீட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மனோகரனின் உயிர் பிரிந்தது. மரணத்தின் பிடியில் இருந்த போதும் ரெயிலில் இருந்த ஆயிரத்துக்கும் மேற் பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற் றுவதற்காக சிரமப்பட்டு ரெயிலை நிறுத்தி விட்டு கீழே இறங்கி இருக்கிறார் மனோகரன்.<br /><br />ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட மனோகரன் இறந்து விட்டார் என்ற தகவலை அறிந்ததும் அந்த ரெயிலில் வந்த பயணிகள் கண்ணீர் மல்க மனோகரனின் மனிதாபிமானத்தை நெகிழ்ந்து பாராட்டினார்கள். மரணம் அடைந்த மனோகரனின் சொந்த ஊர் திருவள்ளூர் ராஜீவ்நகர் என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். பல நூற்றுக்கணக்கான ரயில் பயணிகளின் உயிர்களைக் காப்பாற்றி விபத்து நேராமல், ஸ்டேஷன் கவரைப் பேட்டை அருகில் கொண்டு வந்து ரயிலை நிறுத்தி விட்டார்.<br /><br />அவருக்கு நெஞ்சு வலி. மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்தார் அந்த கடமை வீரர் மனோகர்! அவருக்கு நமது வீர வணக்கம். விபத்தினை தவிர்த்தார். இவருக்கு ரயில்வே துறையினர் தனி சிறப்பு விருது - வழங்க வேண்டும் குடும்பத் தினருக்கு - செய்வார்களா?தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-8164821940253359922013-05-28T05:23:01.419+05:302013-05-28T05:23:01.419+05:30
பார்ப்பனன் செத்தான்
நாம் ஒரு சிறிதாவது அறிவு பெ...<br />பார்ப்பனன் செத்தான்<br /><br /><br />நாம் ஒரு சிறிதாவது அறிவு பெற்ற பகுத்தறிவுவாதிகள் ஆகி விட்டோமானால், கொல்லுவாரின் றியே பார்ப்பனன் செத்தான்.<br /><br />(விடுதலை, 14.3.1970)<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-64293826955834858612013-05-28T05:21:08.991+05:302013-05-28T05:21:08.991+05:30
பாராட்டத்தக்க பகுத்தறிவாளர் நியமனம்! கர்நாடக அரசி...<br />பாராட்டத்தக்க பகுத்தறிவாளர் நியமனம்! கர்நாடக அரசின் அட்வகேட் - ஜெனரலாக சட்டமேதை ரவிவர்மக் குமார் நியமனம்!<br /><br /><br />பெங்களூரு - 27.5.2013 கர்நாடகாவின் மேனாள் பிற்படுத்தப்பட்டோர் நலக் குழுத் தலைவரும், பிரபல வழக்கறிஞருமான சட்டமேதை பேராசிரியர் ரவிவர்மக்குமார் அவர்கள் கர்நாடக அரசின் தலைமை வழக்குரைஞராக (Advocate General) அரசால் நியமிக்கப்பட்டார். கடந்த மூன்று நாள்களுக்கு முன் பொறுப்பேற்றார்.<br /><br />அவருக்குக் கழகத் தலைவர் அவர்கள் தொலை பேசியில் வாழ்த்துத் தெரிவித்தார்!<br /><br />சமூக நீதி வழக்குரைஞர் ஃபோரத்தின் டிரஸ்டிகளில் ஒருவர் இவர்.<br /><br />சிறந்த சமூக நீதியாளர். அமெரிக்காவின் பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும். கி.வீரமணி சமூக நீதி விருது இவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-53317266423773371562013-05-28T05:08:44.525+05:302013-05-28T05:08:44.525+05:30
பிள்ளையார் உடைப்பு!
1953 - இதே நாளான மே 27 இல் ...<br />பிள்ளையார் உடைப்பு!<br /><br /><br />1953 - இதே நாளான மே 27 இல் தமிழ்நாடே - ஏன் இந்(து)திய நாடே திடுக்கிடக் கூடிய ஒரு போராட்டத்தை நடத்தி யவர் தந்தை பெரியார்.<br /><br />ஆம்! பிள்ளையார் உடைப்புப் போராட்டம் தான் அது. புத்தர் விழா வில் தந்தை பெரியார் பேசிய உரையை ஒலி பரப்புவதாக ஒப்புக் கொண்டு ஒலிப் பதிவும் செய்த அகில இந்திய வானொலி நிலையம், உறுதியளித்தபடி நடந்து கொள்ளவில்லை. நட்டக் கணக்குப் பெரியார் வரலாற்றுப் பேரேட்டில் ஏது? முக்கிய அறிவிப்பினைக் கொடுத்தார். புத்தர் ஜெயந்தியன்று நாடெங் கும் பிள்ளையார் பொம் மைகளை உடையுங்கள் கழகத் தோழர்களே என்று ஆணையிட்டார்.<br /><br />ஆட்சியோ ஆச்சாரி யாருடையது - பொது மக்கள் பார்த்துக் கொள் வார்கள் என்று வன் முறைக்குத் தூபம் போட்டார். ஆனாலும் அய்யா அவர்கள் அறிவித்த வாறே நடத்தியும் காட் டினார்.<br /><br />இவ்வளவுப் புரட்சிகர மான போராட்டத்தை நடத்தினாலும் தந்தை பெரியார் எப்படி வழி காட்டினார்? போராட்டம் என்றாலே வன்முறை வெறியாட்டம் என்ற அகராதியைத் தயாரித் துள்ள தலைவர்கள் (?) தெரிந்து கொள்ள வேண் டும்.<br /><br />இதோ பெரியார் கூறுகிறார்:<br /><br />விக்ரகங்களை உடைக் கிறேன் என்றவுடன் கோயிலுக்குள் போய் புகுந்துஉடைப்போம் என்று யாரும் கருத வேண்டாம்; இந்தப்படி கோயிலுக்குள் புகுந்து கலாட்டா செய்வோம் என்று யாரும் அஞ்சத் தேவையில்லை - கோயிலுக்குள் யாரும் போக மாட்டோம். குயவரிடத்தில் மண் கொண்டு வந்து இன்றைய கோயி லில் இருக்கிற சாமியைப் போல செய்து தரச் சொல்லி, அல்லது கடை களில் விற்கிறதே, வர்ணம் அடித்த பொம்மை கள், அதைக் கடையிலே வாங்கிக் கொண்டு வந்து, ஒரு தேதியில் இப்படி இதை உடைக்கப் போகிறோம் என்பதாக எல்லோருக்கும் தெரிவித்துவிட்டு நடு ரோட்டிலே போட்டு உடைப் போம்! (விடுதலை 4.5.1953) என்றார்.<br /><br />வருணாசிரம ஜாதி ஏற்பாட்டையும் அதற்குக் காரணம் என்று சொல்லப்பட்ட கடவுளையும் எதிர்ப்பதற்கும், மறுப்பதற்கும் இந்தப் பிள்ளையார் உடைப்புப் போராட்டம் என்ற முறையில் நடத்தப்பட்ட போராட்டம் இது. - மயிலாடன் 27-5-2013தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-52796830697972678962013-05-27T19:19:31.892+05:302013-05-27T19:19:31.892+05:30
ஓடி விளையாடும் ஆட்டமா?
நெய்வேலி நிலக்கரி நிறுவன...<br />ஓடி விளையாடும் ஆட்டமா?<br /><br /><br />நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்கு களைத் தனியாருக்கு விற்பது தொடர்பான பிரச்சினை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.<br /><br />ஒவ்வொரு முறையும் மத்திய அரசு இப்படி ஓர் அறிவிப்பைக் கொடுப்பதும், அதனை எதிர்த்துத் தமிழ்நாட்டில் கண்டனக் குரல் கொடுப்பதும், திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என்பதும் வழமையான ஒன்றாகி விட்டது. ஓடி விளை யாடும் தன்மை கொண்டதாகவும் இருக்கிறது.<br /><br />2004ஆம் ஆண்டில் மத்தியில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த போதே குறைந்தபட்ச செயல் திட்டம் (Common Minimum Programme) ஒன்று அறிவிக்கப்பட்டதே நினைவிருக்கிறதா?<br /><br />இலாபம் தரும் பொதுத் துறை நிறுவ னங்கள் எதுவும் அரசின் கையை விட்டுப் போகாது; அதன் பங்குகளை விற்பது என்ற கேள்விக்கே இடமில்லை என்று அதில் கூறப்பட்டதே - மக்கள் மறந்து விடுவார்கள் என்ற எண்ணமா?<br /><br />பிரதமர் உள்ளிட்டவர்கள் இதுபற்றியெல்லாம் பொறுப்போடு சிந்திக்க வேண்டாமா? அரசு ஒரு வார்த்தையைச் சொன்னால் அதனைக் காப்பாற்றும் பண்பாட்டைக் கை கொள்ள வேண்டாமா?<br /><br />1930இல் ஆய்வுப் பணி தொடங்கப்பட்டு கர்ம வீரர் காமராசர் அவர்களின் முயற்சியினால் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தமிழ்நாட் டுக்குக் கிடைத்தது!<br /><br />டி.டி.கே. போன்ற பார்ப்பனர்கள் இது பயன்படாத திட்டம் என்று சொன்ன நிலையில், வெளிநாட்டு நிபுணர்கள் சிறந்த திட்டம் என்று கூறினர்.<br /><br />1957இல் தொடங்கப்பட்டாலும், அது இலாபம் தரும் நிறுவனமாக மாறியது - 1976ஆம் ஆண்டு முதல்தான். 1976இல் கிடைத்த லாபமும் வெறும் மூன்று கோடி ரூபாய்தான்.<br /><br />தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; ஆந்திரா, கருநாடகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்கள் வரை - இந்த நெய்வேலி அனல் மின்சாரத்தால் தான் வெளிச்சம் பெற்றுக் கொண்டு இருக்கின்றன.<br /><br />தனக்கு மிஞ்சிதான் தான தருமம் என்பார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதெல்லாம் பழைய மொழிதானே தவிர, வேறு ஒன்றும் இல்லை. பொதுத்துறை நிறுவனங் களின் பங்குகளை விற்பது என்பது ஒரு கொள்கையாகவே ஆகிவிட்டது.<br /><br />பிஜேபி ஆட்சியில் இருக்கும் பொழுது பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதற்கென்றே ஒரு தனித்துறையும், அதற்கென ஓர் அமைச்சருமே இருந்து வந்தார்.<br /><br />அய்க்கிய முற்போக்குக் கூட்டணியானாலும், தேசிய ஜனநாயக கூட்டணியாக இருந்தாலும் பொருளாதாரக் கொள்கையில் சம எடை உள்ளவர்களாகவே இருந்து வருகின்றனர்.<br /><br />சோப்பு, சீப்பு விற்க வந்த வெள்ளைக்காரன், பிறகு இந்தியாவையே 350 ஆண்டுகள் வரை ஆண்டான்; அவனை விரட்டி சுதந்திரம் பெற்றதாக மார் தட்டினோம்.<br /><br />இப்பொழுது என்னடா என்றால் சோப்பு, சீப்பு, காய்கறிகள், மளிகை சாமான்கள் வரை விற்பதற்கு வெளிநாட்டுக்காரர்களை சிகப்புக் கம்பளம் போட்டு, பூர்ண கும்பமும் அளித்து, வரவேற்கத் தயாராகி விட்டோம்! இதற்குப் பெயர் சுதந்திர நாடாம்.<br /><br />புதிய பொருளாதாரம் என்பதன் உண்மை யான பொருள் என்னவென்றால் ஒரு நாட்டின் சுதந்திரத்தை சூட்சமமான முறையில் இன்னொரு நாட்டுக்கு விலை பேசுவதே!<br /><br />தனியார்த் துறைகளில் இருந்தவற்றை நாட்டுடைமையாக்குவது தான் சோசலிசம் என்று ஒரு காலத்தில் கூறப்பட்டது. இப்பொழுது என்னடா என்றால் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை, அதன் பங்குகளை தனியா ருக்கும், வெளிநாட்டுக் காரர்களுக்கும் விற்பது என்ற தலைகீழ் நிலை ஏற்பட்டுள்ளது. இது என்ன இசமோ தெரியவில்லையே!<br /><br />மக்கள் விழிப்புணர்வுதான் இதற்கெல்லாம் முடிவை ஏற்படுத்தும் என்பது மட்டும் அசைக்க முடியாத உண்மையாகும். 27-5-2013தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-54394372812905595572013-05-27T07:18:55.634+05:302013-05-27T07:18:55.634+05:30
இலாபம் தரும் என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளை வி...<br />இலாபம் தரும் என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளை விற்பதா? தமிழர் தலைவர் கண்டனம்!<br /><br /><br />இலாபம் தரும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்கு களைத் தனியாருக்கு விற்பது பொன் முட்டை யிடும் வாத்தினை அறுப்பதாகும். இந்த முயற்சியினை மத்திய அரசு கைவிட வேண் டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:<br /><br />நெய்வேலி நிலக்கரி நிறுவனம் என்பது லாபந்தரும் பொதுத்துறை நிறுவனம். நவரத்தினங்களில் ஒன்று. முன்பே 10 சதவிகித பங்குகளை விற்கும் யோசனை வெளிவந்தபோது, திராவிடர் கழகம், அதுபோலவே தி.மு.க. அத்துணைக் கட்சி தொழிற் சங்கங்கள் எல்லாம் கண்டனங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தின! தி.மு.க. அய்க்கிய முற் போக்குக் கூட்டணியிலிருந்து விலகுவதாக எச்சரிக்கை விடுத்தது; அதன் விளைவு அன்று இத்திட்டம் கை விடப்பட்டது.<br /><br />மீண்டும் இப்போது வேதாளம் முருங்கை மரம் ஏறிற்று என்ற பழமொழி போல் 5 சதவிகிதப் பங்கினை விற்கும் ஆபத்தான யோசனை முளைவிட்டுக் கிளம்பியுள்ளது.<br /><br />இதனை மத்திய அரசு கைவிட வேண்டும். தி.மு.க.வும் அதன் தோழமைக் கட்சிகள் மட்டுமல்ல; அ.தி.மு.க.வும் தமிழக அரசும் அதன் தோழமைக் கட்சிகளும்கூட இதனை எதிர்த்துள்ள நிலையில், இந்த வகை யில் விபரீத முயற்சியில் ஈடுபட்டு, (காங்கிரஸ்) தேவையின்றி தமிழ் நாட்டில் உள்ள கொஞ்ச நஞ்ச செல்வாக்கையும் அழித்துக் கொள்ள முடிவு செய்து விட்டது போலும்!<br /><br />நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனத்தைக்கூட லாபத்தில் இயங்க வைக்க முன் வருவதுதான் ஒரு நல்ல அரசின் கடமையாக இருக்க வேண்டுமே தவிர, லாபத்தில் இயங்கும் நிறுவனப் பங்குகளை இப்படி தனியாருக்குத் தாரை வார்ப்பதா?<br /><br />பொன் முட்டையிடும் வாத்தினை கொல்லும் பேதைமைத்தனம் அது என்பதல்லாமல் வேறு என்ன?<br /><br />எனவே இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.<br /><br />கொள்கை முடிவுகள் கோணல் இல்லாமல் இருக்க வேண்டும்; தனியார் கொள்ளைக்குக் கதவு திறந்து விடுவதாக இருக்கக் கூடாது!<br /><br />சென்னை <br />26.5.2013<br /><br />கி. வீரமணி<br />தலைவர், திராவிடர் கழகம்<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-20084201488385183642013-05-27T07:18:17.695+05:302013-05-27T07:18:17.695+05:30
கா. அப்பாதுரையார்
பன்மொழிப் புலவர் என்று சொன்னா...<br />கா. அப்பாதுரையார்<br /><br /><br />பன்மொழிப் புலவர் என்று சொன்னால் முதன்மையாக கா. அப்பாதுரையார் அவர் களைத் தான் குறிக்கும். அவரது ஏழாம் பாட்டனார் 40 மொழிகளை அறிந்தவர் என்றால் நம் அப்பாதுரையார் 10 பத்து மொழிகளில் பண் பட்ட புலமையாளர் ஆவார். தமிழிலும் ஆங்கிலத்திலும் 170 நூல்களை யாத்தவர் இவர். ஜஸ்டிஸ் லிபரேட்டர், திராவிடன், விடுதலை முதலிய ஏடுகளில் பணியாற் றியவர் ஆவார். இவர் சென்னை வருவதற்கு முதற் காரணம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆவார்கள்.<br /><br />இவர் எழுதிய இந்தியா வில் மொழிச் சிக்கல் எனும் ஆங்கில நூலுக்கு மறைமலை அடிகள் நாற்பது பக்கம் முன் னுரை எழுதினார் என்றால், அது என்ன சாதாரணமா?<br /><br />சென்னை பல்கலைக் கழகத்தின் சார்பில் டாக்டர் அ. சிதம்பரநாதர் அவர் களின் தலைமையில் தொகுக் கப்பட்ட ஆங்கில - தமிழ் அகராதித் துறையில் இணை ஆசிரியராகப் பணியாற்றிய பெருமையும் பன்மொழி புலவருக்கு உண்டு.<br /><br />தந்தை பெரியார் அவர் களிடம் நெருக்கமான தொடர்பு இருந்தது. திராவி டர் கழகத்தின் பொதுச் செயலாளராக ஆகும் அள வுக்குக்கூட அவர் பேசப்பட்ட துண்டு. தென் சென்னையில் கழகத்தை வளர்க்கும் பொறுப்பில் அமர்த்தப்பட்டவர் என்றால் யாருக்கும் ஆச் சரியமாக இருக்கலாம்.<br /><br />மதச் சார்பற்ற முறையில் குறளுக்கு ஓர் உரையினை எழுதுமாறு தந்தை பெரியார் கேட்டுக் கொள்ள, முப்பால் ஒளி எனும் பெயரில் திங்கள் இதழ் ஒன்றைத் தொடங்கி திருக்குறளுக்கு விளக்க வுரை எழுதினார். இருபது அதிகாரங்களுக்கு அவர் எழுதிய உரை ஆறு தொகுதி யானது.<br /><br />திராவிடர் இயக்க ஆர்வ லரும், பதிப்பக உரிமையாளரு மான வெள்ளையம்பட்டு சுந்தரம் அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்றில் கா. அப்பா துரையார் குறிப்பிடும் கருத் தினை வெளியாக்கியுள்ளார்.<br /><br />மொழி வகை மூன்று<br /><br />1) திராவிட மொழிக் குடும்பம்<br /><br />2) ஆசியாவை உள்ளடக் கிய ஆரிய மொழிக் குடும்பம்<br /><br />3) மேலை நாட்டார் மொழிக் குடும்பம் அறிஞர் கால்டுவெல், மறைமலை அடிகளார், தேவ நேயப்பாவாணர் மூவரும் தமிழ் தந்த மூவர் என்றார்; படித்தவர்களைவிட தந்தை பெரியார் சிந்தனையும் செய லாற்றலும் மிக மிகச் சிறந்தது - ஈடு இணையற்றது என்று குறிப்பிடுகிறார் புலவர்.<br /><br />சென்னை பெரியார் திடலில் சங்கராச்சாரி யார்? எனும் தொடர் சொற் பொழியை ஆறியவர் அன் றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள். ஒரு தொடருக்கு அப்பாதுரையார் தலைமை வகித்தார் (5.6.1983) அப்பொழுது அவர் சொன்னார்.<br /><br />ஆதி சங்கரர் எழுதிய மனேசாப் பஞ்சகம் எனும் நூலில் கடவுள் மறுப்புக் கூறப்பட்டுள்ளது. மதச் சடங்குகள் கூடாது, உருவ வணக்கம் தவறு என்றும் ஆதிசங்கரர் கூறியுள்ளார் என்று குறிப்பிட்ட அப்பாதுரை யார் ஆதி சங்கரரைக் கொன்றது பார்ப்பனர்களே என்கிறார்.<br /><br />கா. அப்பாதுரையின் நினைவு நாள் இன்று (1989).<br /><br />- மயிலாடன்<br /><br />குறிப்பு: முகம் மாமணி எழுதிய அறிவுச் சுரங்கம் அப்பாதுரையார் நூலினைப் படியுங்கள்.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-61380193632019747292013-05-27T07:17:35.394+05:302013-05-27T07:17:35.394+05:30
என்.எல்.சி. பங்குகள் தனியாருக்கு விற்பனை மத்திய அ...<br />என்.எல்.சி. பங்குகள் தனியாருக்கு விற்பனை மத்திய அரசுக்கு கலைஞர் எச்சரிக்கை<br /><br /><br />என்.எல்.சி. நிறுவன பங்குகளைத் தனியா ருக்கு விற்க முற்படுவது, தமிழர்களை வீண் வம் புக்கு இழுக்கும் செயல் என்று மத்திய அரசுக்கு திமுக தலைவர் கலைஞர் எச்சரித்துள்ளார்.<br /><br />இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:<br /><br />பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா மே 23-ஆம் தேதி ஒரு கடிதம் எழுதி னார். அந்தக் கடிதத்தில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்ய முயற்சிப்பதாக வும், அது கூடாது என்று எழுதியுள்ளார்.<br /><br />ஆனால் என்.எல்.சி. நிறுவனத்தின் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 13 ஆயிரம் பேர் 10 அம்சக் கோரிக்கை வலியுறுத்தி 2012 ஏப் 21-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத் தில் ஈடுபட்டனர்.<br /><br />ஆனால் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.<br /><br />தொழிலாளர்களின் போராட்டத்துக்குத் தீர்வு காண மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்தும் என்று மட்டும் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் கூறினார்.<br /><br />ஒப்பந்தத் தொழி லாளர்கள் தொடர்பாக அதிகாரிகள் நிலையில் நாள் கணக்கில் பேச்சு வார்த்தை நடந்ததே தவிர, முதல்வரோ, அமைச்சர்களோ இதில் ஈடுபடவில்லை.<br /><br />இறுதியாக இந்தப் போராட்டம் 2012 ஜூன் 5 -ஆம் தேதி முடிவுற்றது.<br /><br />இதற்கிடையில் மத்திய அமைச்சர் நாரா யணசாமி என்.எல்.சி. பங்குகளை விற்பதில் தவறு ஒன்றுமில்லை என்று வெள்ளிக்கிழமை கூறியுள்ளார்.<br /><br />இந்தக் கருத்து புதுவை உள்பட தமிழ கத்துக்கும், குறிப்பாக தொழிலாளர்களுக்கும் விரோதமானதாகும். எனவே, என்.எல்.சி. பங்குகளை விற்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடக் கூடாது.<br /><br />அது தேவையின்றி, தமிழர்களை, குறிப்பாக நெய்வேலி தொழிலாளர் களை வீண் வம்புக்கு இழுக்கும் செயல்.<br /><br />அப்படிப்பட்ட செயலில் மத்திய அரசு ஈடுபட்டு, மேலும் ஓர் எதிர்ப்பை தேடிக் கொள்ள வேண்டாம் என கலைஞர் எச்சரித் துள்ளார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-43727963756271358152013-05-27T07:17:02.112+05:302013-05-27T07:17:02.112+05:30முக்கிய தகவல் கல்லீரல் புற்று நோயை தடுக்க தடுப்பூச...முக்கிய தகவல் கல்லீரல் புற்று நோயை தடுக்க தடுப்பூசி<br /><br /> <br /><br />சென்னை, மே 26- சர்வதேச ஜீரண (கேஸ்ட் ரோஎன்டராலஜி) ஆரோக்கிய தினம் ஆண்டு தோறும் மே மாதம் 29ம் தேதி உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, உலக கேஸ்ட்ரோஎன்டராலஜி அமைப்பின் இயக்குனர் டாக்டர் கே.ஆர்.பழனிச்சாமி, இந்திய கேஸ்ட்ரோ என்டராலஜி சங்கத்தின் தமிழ்நாடு கிளையின் தலைவர் டாக்டர் வி.பாலசுப்பிர மணியன் ஆகி யோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உலகம் முழுவதும் கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.<br /><br />இந்நோய் வர காரணமாக இருப்பது உடல் பருமன், சர்க்கரை நோய், மது அருந்துவது மற்றும் ஹெபடைடஸ் பி, ஹெபடைடஸ் சி வைரஸ்தான். கல்லீரலை சுற்றி கொழுப்பு படர்ந்து அதனால் கல்லீரல் வீக்கம் ஏற்பட்டு புற்றுநோய் வர அதிக வாய்ப்புள்ளது. ஹெபடைடஸ் பி வைரசுக்கு தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.<br /><br />ஆனால் ஹெபடைடஸ் சி வைரசுக்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட வில்லை. தற்போது தமிழகத்தில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தை களுக்கு ஹெபடைடஸ் பி தடுப்பூசி போடப்படுகிறது. இந்த தடுப்பூசி போட்டுக்கொள்ள ரூ.1000 மட்டுமே செலவு ஏற்படும்.<br /><br />இதுவரை ஹெபடைடஸ் பி தடுப்பூசி போட்டுக் கொள்ளாத சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இப்போதும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இதனால் பக்க விளைவுகள் எதுவும் இல்லை. இதனால் கல்லீரல் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-27940905320419447422013-05-27T07:15:48.720+05:302013-05-27T07:15:48.720+05:30செய்தியும் சிந்தனையும்
அச்சம்
செய்தி: திருப்ப...செய்தியும் சிந்தனையும்<br /><br /> <br /><br />அச்சம்<br /><br />செய்தி: திருப்பதி கோயில் நகைகள் அனைத் தும் சரியாகவே உள்ளன. பக்தர்கள் அச்சம் அடைய வேண்டாம்.<br /><br />- திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை<br /><br />சிந்தனை: இந்த அறிக் கையைப் பார்க்கும்பொழுதே அச்சப்பட வேண்டிய அள வுக்கு ஏதோ நடந்திருக் கிறது என்பது புரிகிறதே!தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-86659120657972175402013-05-26T05:23:28.511+05:302013-05-26T05:23:28.511+05:30தமிழ் சர்வகலாசாலைக் கமிட்டி
தமிழ்நாட்டிற்கென ஒரு ...தமிழ் சர்வகலாசாலைக் கமிட்டி<br /><br />தமிழ்நாட்டிற்கென ஒரு சர்வகலாசாலை ஏற்படுத்துவான் வேண்டி சின்னாட்களாகப் பல தமிழர்கள் கிளர்ச்சி செய்து வருகின்றார்கள். இக்கிளர்ச்சியை ஒடுக்குவான் வேண்டியும், தமிழ் கலாசாலையே ஏற்படாதிருக்க பார்ப்பனர்கள் செய்துவரும் சூழ்ச்சி முறைகளையும் அனேகர் அறிந்திருக்கலாம். கடைசி யில் இக்கிளர்ச்சியை ஒடுக்குவதற்கு வழியில்லாது போய் தமிழ் சர்வகலா சாலை ஏற்படுத்த வேண்டு மென்று ஏற்பட்டுவிட்டது. இதற்கென ஒரு கமிட்டியும் நியமிக்கப்படலாயிற்று.<br /><br />இக்கமிட்டியும் பெருங் கபடத்துடனேயே நியமிக் கப்பட்டுள்ளதெனக் கூறவேண்டும். ஏனெனில் தமிழ் மொழியின் ஆணிவேர் நுனி வரை நுணுகி ஆராய்ந்து தமிழ் மொழியே உயர் தனிச் செம்மொழி யெனக்கொண்டு, தமிழையே உயிரினும் பெரியதாய் ஓம்பி வளர்த்து, அதற்கெனவே அருந்தொண்டாற்றி வரும் திருவாளர்கள் சுவாமி வேதாச்சலனார்,, ந.மு.வேங்கடசாமி நாட்டார், த.வே.உமாமகேசுவரம் பிள்ளை, பா.வே.மாணிக்க நாயக்கர், கா.சுப்பிரமணிய பிள்ளை, மு.சா.பூரணலிங்கம் பிள்ளை முதலியோரை நியமிக்காது, ஆரியத்திற்கும், தமிழுக்கும் உள்ள பேதத்தை ஒரு சிறிதும் உணராத பலரையும் தமிழில் பற்றுடைய மிகச் சிலரையும் நியமித்திருக்கிறார்கள். இவ்வாறு அடிப்படையிலேயே கையை வைத்து நியமிக்கப்பட்ட கமிட்டியால் தமிழ்த் தாய்க்கு எவ்வித ஆக்கமும் அளிக்கப் பெறாதென்பதே நமது கருத்து.<br /><br />- குடிஅரசு - செய்திக்குறிப்பு, 01.08.1926தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-21947917953013012882013-05-26T05:22:50.577+05:302013-05-26T05:22:50.577+05:30
தமிழ் சுயராஜ்யா
பார்ப்பனர்களின் நயவஞ்ச ஆதிக்கம்...<br />தமிழ் சுயராஜ்யா<br /><br /><br />பார்ப்பனர்களின் நயவஞ்ச ஆதிக்கம் பொங்கித் ததும்பி பூரணமாய்த் தாண்டவம் ஆடப்பெறும் தமிழ் சுயராஜ்யா பார்ப்பனரல்லாதார் கொடுத்த தமிழ்நாட்டு காங்கிரஸ் பணத்தைக் கொண்டு நடைபெறுகிற தென்பதைப் பலரும் அறிவர். அன்னமிட்டவர் வீட்டில் கன்னமிடும் படுபாவிகளைப்போல் பார்ப்பனரல்லா தாரின் பணத்தாலேயே பிறந்து, பார்ப்பனரல்லாத சந்தாதாரர்களாலேயே வளர்க்கப்பட்ட தமிழ் சுயராஜ்யா பார்ப்பனரல்லாதாருக்கே கேடு விளைவித்து வருகிறது. இப்பத்திரிகை பார்ப்பனரல்லாதாரின் க்ஷீணத்தைக் கோரி பார்ப்பனரல்லாதாருடன் போர் புரிந்து வருவதை உலகமறியும்.<br /><br />சின்னாட்களுக்குமுன் பார்ப்பனரல்லாத கட்சியின் கூட்டம் சென்னை சௌந்தரிய மகாலில் நடைபெற்றது. சுயராஜ்யா பத்திரிகை அக்கூட்டத்தில் கூடியிருந்தோர் அனைவரையும் உத்தியோகம் நக்கிப் பொறுக்கிகள் என்று மானங்கெட்டத்தனமாய் பெயரிடுகிறது. ஊரூராய்த் திண்டாடித் தெருவில் நின்று பார்ப்பனரல்லாதார் வீடுதோறும் அலைந்து திரியும் உத்தியோகம் நக்கிப் பொறுக்கிகள் சுயராஜ்யா பத்திரிகை ஆசிரியரின் இனத்தைச் சேர்ந்த பார்ப்பனக் கூட்டமேயன்றி, சௌந்தரிய மகாலில் அன்று குழுமியிருந்த பார்ப்பனரல்லாதவர் களன்று. இதைப்பற்றி திராவிடன் கூறியுள்ள முத்து போன்ற எழுத்துக்களைக் கவனிப்போம்.<br /><br />தமிழ் சுயராஜ்யா அற்பத்தனமாயும் அயோக்கியத் தனமாயும் எழுதத் துவங்கிவிட்டது மிகவும் வருந்ததக் கதாகும். உத்தியோகம் நக்கிப் பொறுக்கிகள் சௌந் தரிய மகாலில் பெருந்திரளாய்க் கூடியிருந்தவர்கள் அனைவருமாம். வீடுதோறும் பிறப்புக்கும், கலி யாணத்துக்கும், இழவுக்கும் அழையா விட்டாலும் நாய்போல் வந்து பல்லைக் காட்டி அரையணா, ஒரு அணா பெற்றுப் பொறுக்கித் தின்பவர்கள் பார்ப்பனர் களே, நிருவாகசபை உத்தியோ கங்கள் முதல், கேவலம் செருப்புத் துடைத்தல், கும்ப கோணம் வேலையில் ஈடுபடல் ஆகிய இழிதொழில்கள் செய்து கால்களை நக்கிப் பொறுக்கித் தின்று வயிறு பிழைப்பவர்கள் பார்ப்பன மாக்களேயன்றி பார்ப்பனரல்லாத மக்களல்ல.<br /><br />இதைப்பார்த்த பின்னும்- இவ்வாறு அந்த பார்ப்பனப் பத்திரிகையால் பார்ப்பனரல்லாதாரை ஏழேழு ஜென்மத்திற்கும் மறையாத மாசுடையோராய் இழித் துரையாடப் பெற்ற நக்கிப் பொறுக்கிகள் என்ற வார்த்தையைக் கேட்டபிறகும் - தன் நரம்பிலே பார்ப்பனரல்லாதாரின் சுத்த ரத்தம் ஓடப் பெறும் எவராவது - பார்ப்பனரல்லாதாராய்ப் பிறந்த எந்த ஆண்மையுடையோராவது இனி சுயராஜ்யாப் பத்திரி கையை கையில் தொடுவாரா? கண்ணில் பார்ப்பாரா? மானம், வெட்கம், ரோஷம், சுயமதிப்பு உடைய எந்த பார்ப்பனரல்லாதாரும் இனி அப்பத்திரிகையைப் பார்க்கவும் தொடவுமாட்டார்களென்றே நம்புகிறோம்.<br /><br />- குடிஅரசு - கட்டுரை, 18.07.1926தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-17271759773491449842013-05-26T05:18:20.378+05:302013-05-26T05:18:20.378+05:30
நமது பணி...
மதச் சம்பந்தமான, கடவுள், புராண, இலக...<br />நமது பணி...<br /><br /><br />மதச் சம்பந்தமான, கடவுள், புராண, இலக்கியச் சம்பந்தமான விஷயங்களில் மக்களுக்கு உள்ள மூட நம்பிக்கை களைப் போக்கித் தெளிவு ஏற்படுத்தி அவர்களை ஒழுக்கம் உள்ளவர்களாக, மான உணர்வுள்ளவர்களாக ஆக் குவதே நமது முக்கிய வேலை.<br /><br />(விடுதலை, 2.4.1973)<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-89563940144596014612013-05-26T05:13:04.762+05:302013-05-26T05:13:04.762+05:30 எந்த பொந்தில் எந்த பாம்போ! குருநாத் மெய்யப்பன் கை... எந்த பொந்தில் எந்த பாம்போ! குருநாத் மெய்யப்பன் கைது!<br /><br /> <br /><br />மும்பை, மே 25- அய்பிஎல் சூதாட்டம் தொடர்பாக மும்பை காவல்துறையில் குருநாத் மெய்யப்பன் நேற்று ஆஜரானார். அவ ரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். கைதும் செய்யப்பட் டார். அய்பிஎல் கிரிக் கெட் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் சிக்கிய இந்தி நடிகர் வின்டு தாராசிங் அளித்துள்ள வாக்கு மூலம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் குருநாத் மெய்யப்பனுக்காக சூதாட்டத்தில் ஈடுபட் டதாக காவல்துறையில் அவர் தெரிவித்துள்ளார்.<br /><br />இதனால், விசாரணைக் காக நேற்று ஆஜராகும்படி குருநாத்துக்கு மும்பை காவல்துறையினர் சம்மன் கொடுத்தனர். திங்கட் கிழமை வரை அவகாசம் வழங்க குருநாத் கேட்டார். ஆனால், காவல்துறையினர் மறுத்து விட்டனர். இதையடுத்து, கொடைக்கானலில் தங்கி இருந்த குருநாத், நேற்று மாலை அவசரமாக மதுரை வந்தார். அங்கிருந்து தனி விமானத்தில் மும்பை சென்றார்.<br /><br />அங்கிருந்து நேராக குற்றப்பிரிவு காவல் துறை அலுவலகத்துக்கு சென்று ஆஜரானார். அவரி டம் சூதாட்டம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதன்பின் அவரைக் கைது செய்தனர்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-62786534253928721712013-05-26T05:11:49.329+05:302013-05-26T05:11:49.329+05:30
காவிரி கண்காணிப்பு தற்காலிகக் குழு அமைப்பு காவிரி...<br />காவிரி கண்காணிப்பு தற்காலிகக் குழு அமைப்பு காவிரி மேலாண்மைக் குழு எப்பொழுது?<br /><br /><br />புதுடில்லி, மே 25- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படு வதற்கு முன்னோடியாக, காவிரி கண்காணிப்பு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இதில், காவிரி நதிநீர் பங்கீட் டில் சம்பந்தப்பட்ட தமி ழகம், கருநாடகா உட் பட 4 மாநிலங்களின் தலைமை செயலாளர் கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.<br /><br />கடந்த 2007ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடப் பட்டது. இந்த தீர்ப்பு கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து, காவிரி மேலாண்மை வாரியத்தையும் காவிரி ஒழுங்கு முறை ஆணை யத்தையும் உடனடியாக அமைக்க மத்திய அர சுக்கு உத்தரவிட வேண் டும் எனக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.<br /><br />இந்த வழக்கு கடந்த 10ஆம் தேதி நீதிபதிகள் ஆர்.எம். லோதா, குரியன் ஜோசப் அடங்கிய அமர்வு முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் குரு கிருஷ்ண குமார், ஜூன் மாதத்தில் பயிர் சாகுபடி தொடங்க இருப்பதால், இந்த 2 குழுக்களையும் மத்திய அரசு எப்போது அமைக்கும் என்பதை யும், எவ்வளவு அவகா சம் தேவை என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.<br /><br />இரு தரப்பு வாதங் களையும் கேட்ட நீதிபதி கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் படும் வரை தற்காலிக மாக காவிரி கண்காணிப்பு குழு அமைக்க வேண் டும். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் கரு நாடகாவைச் சேர்ந்த தலைமை செயலாளர் கள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். குழுவுக்கு மத்திய நீர் வளத் துறை செயலாளர் தலைமை ஏற்க வேண் டும் என்று உத்தர விட் டனர்.<br /><br />அதன்படி, காவிரி கண்காணிப்பு குழுவை மத்திய அரசு நேற்று அமைத்தது. இக் குழு வில் தமிழகம், கரு நாடகா உட்பட 4 மாநி லங்களின் தலைமை செயலாளர்கள் உறுப் பினர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர். மத்திய நீர் ஆணை யத்தின் தலைமைப் பொறியாளர், இந்த குழுவின் உறுப்பினர்- செயலாளராக இருப்பார்.<br /><br />கண்காணிப்பு குழு வின் தலைமையகம், டில்லியில் செயல்படும்.<br /><br />காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் படும் வரை, இது முற்றி லும் ஒரு தற்காலிக நட வடிக்கை என்று மத்திய அரசு கூறி உள்ளது.<br /><br />காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அமல் படுத்தும் பொறுப்பை இந்த கண்காணிப்பு குழு கவனிக்கும். இதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட் டால், மேற்பார்வை குழுவின் தலைவரோ அல்லது சம்பந்தப்பட்ட மாநிலங்களோ உச்ச நீதிமன்றத்தில் அணுக லாம். மற்ற மாநிலங் களுக்கு எதிராக உத் தரவை பெறலாம்.<br /><br />புதிதாக அமைக் கப்பட்ட காவிரி நீர் கண்காணிப்பு குழுவின் முதல் கூட்டம், ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்று மத்திய அரசு வட்டாரங் கள் தெரிவித்து உள்ளன.<br /><br />நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அமல்படுத்தும் பணியில், இது ஒரு மிகப்பெரிய நடவடிக் கையாக கருதப்படுகிறது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-4044676756442596752013-05-25T17:53:04.358+05:302013-05-25T17:53:04.358+05:30
மழைக்கு வழி தொழுகையா?
கடும் வறட்சி பருவத்தில் ம...<br />மழைக்கு வழி தொழுகையா?<br /><br /><br />கடும் வறட்சி பருவத்தில் மட்டுமல்ல; மக்களின் அறிவிலும் இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக நாள்தோறும் செய்திகள் வெளிவந்து கொண்டுள்ளன.<br /><br />தருமபுரி மாவட்டம் மொரப்பூர் வட்டாரத்தில் ஜாடையாம் பட்டி என்னும் குக்கிராமம். 300 குடும்பத்தினர் அவ்வூர் மக்கள். என்ன செய்தார்கள்?<br /><br />தத்தம் வீடுகளைப் பூட்டி விட்டு ஊருக்கு வெளிப்புறத்தில் உள்ள ஏரிக்கரைக்குச் சென்றுள்ளனர் (23.5.2013).<br /><br />எதற்காக அப்படிச் சென்றார்களாம்? ஊரைக் காலி செய்துவிட்டு வெளியே சென் றால் மழை கொட்டுமாம் - வறட்சி நீங்குமாம். அப்படி ஒரு மூடநம்பிக்கை அப்பகுதி மக்களுக்கு.<br /><br />மூடநம்பிக்கைகளில் உள்ள பலப்பல ரகங்களை நினைத்துப் பார்த்தால் நகைச்சுவை மட்டுமல்ல; பாழும் மூடநம்பிக்கையால் இந்த 2013ஆம் ஆண்டிலும்கூட நம் மக்கள் அறிவைப் பயன்படுத்த மறுக்கிறார்களே என்ற பரிதாப உணர்வும் ஏற்படத்தான் செய்கிறது. பெரம்பலூரில் நூற்றுக்கணக்கான முசுலிம் மக்கள் சிறப்புத் தொழுகை நடத்தியுள்ளனர். மழை வேண்டி. (குடையை எடுத்துக் கொண்டு போகவில்லை).<br /><br />கழுதைக்கும் கழுதைக்கும் கல்யாணம். கல்யாணப் பத்திரிக்கை அடித்து - பார்ப்பனப் புரோகிதர்களை அழைத்து முறைப்படி கல்யாண மந்திரங்களை ஓதி நடைபெறுகிறது.<br /><br />அரச மரத்துக்கும் வேப்ப மரத்துக்கும் கல்யாணம் நடத்தி வைக்கிறார்கள். இப்படி எல்லாம் செய்தால் மழை பொழியும் என்ற நம்பிக்கையாம். ஏதோ நம்பிக்கையின் அடிப்படையில் செல்வதாகவே வைத்துக் கொள்வோம். அப்படியாவது மழை பொழிந்ததா - வெப்பம் குறைந்ததா? குடிநீர் கிடைத்ததா?<br /><br />இன்னும் சில இடங்களில் வருண பகவானை வேண்டி யாகம் நடத்துகிறார்கள். அமிர்த வர்ஷினி ராகத்தை இசைக்கிறார்கள் எம்.ஜி.ஆர். ஆட்சியில் புழல் ஏரியில் நின்று கொண்டும் சென்னை மயிலாப்பூர் சித்திரக் குளத்திலும் குன்னக்குடி வைத்தியநாதய்யர் அம்ச வர்த்தினி ராகத்தில் வயலின் வாசித்த துண்டு; விளக்கெண்ணெய்க்குக் கேடானதே தவிர, பிள்ளை பிழைத்த பாடில்லை.<br />இந்த ராகத்தில் பாடினால், பிரார்த்தனை தொழுகை நடத்தினால் வருண பகவான் மனமிரங்கி மழையைக் கொட்டுவார் என்ற நம்பிக்கையாம்.<br /><br />ஒரு கேள்விக்கு யாராக இருந்தாலும் பதில் சொல்லட்டுமே பார்க்கலாம். கருணையே வடிவானவன் கடவுள் என்று ஒரு பக்கத்தில் மதவாதிகள், பக்தர்கள் கூறுகிறார்கள். அது உண்மையானால், பிரார்த்தனை செய்தால்தான் மழையைக் கொடுப்பாரா? தொழுகை செய்தால் தான் கடவுளின் கருணைக் கண்கள் திறக்குமா?<br /><br />மாடுகூட பால் நினைந்தூட்டும் என்று சொல்கிறார்கள் - பகவானுக்கு அந்த ஈர நெஞ்சம் இல்லாது போனது ஏன்?<br /><br />காரணம் தெளிவானது - கடவுள் என்ற ஒன்று இல்லை - அதனால் மழையைக் கொடுக்கவில்லை என்பதுதானே உண்மை!<br /><br />மழை எப்படி பொழிகிறது? அதற்கான அறிவியல் காரணம் என்ன? என்பதை நான் காம் வகுப்பில் படிக்கும் ஒரு சிறுவனையோ, சிறுமியையோ கேட்டால் பட்டென்று பதில் சொல்லி விடுவார்கள்.<br /><br />மதப்பாசி ஏறிய மதியுடையோர் அறிவைப் பயன்படுத்த வேண்டிய இடத்தில் மவுடீகத்தைப் பயன்படுத்துவதால்தான் இத்தகைய மூடநம்பிக்கை வழிகளைப் பின்பற்றுகின்றனர்.<br /><br />யாகம் நடத்தி நெருப்பை வளர்க்க மரங் களை வெட்டிப் போடுவதற்குப் பதிலாக, மரங்களை வளர்த்தால், ஏரி, குளங்களைத் தூர் செய்து வைத்திருந்தால், நிலத்தடி நீரைக் காப்பாற்றி வைத்தால், தண்ணீர்ப் பஞ்சத்துக்கு இடம் இருக்காதே!<br /><br />மரங்களைக் கும்பிடுவதைவிட்டு மரங்களை வளர்க்க முனையுங்கள். அதுதான் மழையைக் கொடுக்கும் - மறவாதீர்கள்! 25-5-2013தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-899056442793342472013-05-25T17:51:09.334+05:302013-05-25T17:51:09.334+05:30
பூனை கெட்ட சகுனமா?
மனிதர்கள் எந்த காரியத்தை செய...<br />பூனை கெட்ட சகுனமா?<br /><br /><br />மனிதர்கள் எந்த காரியத்தை செய்ய வெளியே கிளம்பி னாலும் பாதையின் குறுக்கே ஒரு பூனை கடந்து போனால் உடனே அதை கெட்ட சகுனமாக நினைத்து நின்று விடு வார்கள். உண்மையில் பூனை கெட்ட சகுனமா?<br /><br />பூனைகள் எப்போதும் மனித சமூகத்தோடு சேர்ந்து வாழ்பவை. மன்னர்கள் காலத்தில் போருக்குச் செல்லும் படைகள் மனித நடமாட்டமே இல்லாத நீண்ட காடுகளையும், பாலைவனப் பகுதிகளையும் கடந்து செல்லும். அப்படி போகும் போது தங்கள் பாதையின் குறுக்கே பூனை போவதைப் பார்த்தால் உடனே நின்று விடுவார்கள். காரணம், அருகில் குடியிருப்புகள் இருப்பதை பூனைகள் காட்டுகின்றன. அருகில் உள்ள அந்த கிராமத்தில் இருப்பவர்கள் தம்மை எதிரியாக கருதி தாக்குதல் நடத்தலாம். எனவே படை வீரர்கள் சிறிது நேரம் கழித்து, தங்களை தயார் செய்து கொள்வார்கள். எனவே பூனைகள் எதிரியை அடையாளம் காட்டுவதாக மாறின.<br /><br />இதுவே நாளடைவில் பூனையைப் பார்த்தாலே படை வீரர்களுக்கு எதிரி நினைவு வரும் நிலையை ஏற்படுத்தியது. படை வீரர்கள், பூனையை எதிரியாகவே பார்க்கத் தொடங்கினார்கள். இன்னும் கொஞ்சம் காலம் போகப் போக பூனையைப் பார்த்தால் தங்களுக்கு கெட்டதாக, அதாவது தாக்குதல் நடக்கப் போகிறது என்று எண்ணத் தொடங்கினார்கள்.<br /><br />இந்த எண்ணம் படை வீரர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. அவர்கள் நாட்டிற்கு வந்த பின்னும் தங்கள் பாதையில் பூனை சென்றால் போருக்கு செல்வது போலவே கெட்ட நிகழ்வாக பார்க்கத் தொடங்கினார்கள். இப்படித்தான் பூனை ஒரு கெட்ட சகுனமாக மாறத் தொடங்கியது.<br /><br />இன்றைக்கு மன்னர்கள் ஆட்சி செய்யவில்லை. மக்கள் போருக்கு குதிரை மேல் அமர்ந்து போகவில்லை. எல்லாம் மாறி விட்டது. ஆனால் அன்று உருவான பூனை மீதான பயம் மட்டும் இன்னும் தொடர்கிறது. பூனை ஒரு கெட்ட சகுனமாகவே மக்கள் மனதில் நிரந்தர இடம்பிடித்து விட்டது. இன்றைய காலத்துக்கு ஒத்துவராத மூடநம்பிக்கை தான் இது.<br /><br />தினத்தந்தி 29.4.2013<br />தகவல்: சீ. இலட்சுமிபதி, தாம்பரம்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-53741390770028365722013-05-25T17:47:52.465+05:302013-05-25T17:47:52.465+05:30தீர்மானம்
1920ஆம் வருடம் திருநெல்வேலி யில் நடந்த ...தீர்மானம்<br /><br />1920ஆம் வருடம் திருநெல்வேலி யில் நடந்த 26ஆவது ராஜீவ் மாகாண கான்பிரன்சின்போது பிரதிநிதிகள் சாப்பாட்டு விடுதியில், ஈ.வெ. ராமசாமி நாயக்கருடைய அக்கிராசனத்தின் கீழ்ப் பிராமணரல்லாதார் கூட்டம் ஒன்று கூடிச் சட்டசபைகள் முதலிய தேர்தல் ஸ்தானங்களுக்கு வகுப்புவாரிப் பிரதி நிதித்துவம் ஏற்படுத்துவதோடு, அரசாங்க உத்தியோகங்களிலும் வகுப்பு ஜன சங்கைக்குத் தகுந்தபடி வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்த வேண் டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-56041305962948770962013-05-25T17:47:18.888+05:302013-05-25T17:47:18.888+05:30
குருபார்வையும் குருபெயர்ச்சியும்...!
கோபுர தரி...<br />குருபார்வையும் குருபெயர்ச்சியும்...!<br /><br /><br /><br />கோபுர தரிசனம்..<br />கோடி புண்ணியமாம்...?<br />குரு பார்க்க...<br />கோடி நன்மையாம்...?<br />பக்தர்களுக்கு...!<br />குரு பெயர்ச்சி<br />கோடி வருமானம்<br />கோயில்களுக்கு!<br />கோடி கோடியாய்<br />குவியுது உண்டியலில்!!<br />புது பழமொழி<br />நாதியற்ற நாடாக இருந்தாலும்<br />நதியற்ற நாடா இருக்கக் கூடாது!<br />-_ கோ. கலியபெருமாள், மன்னார்குடிதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-18993158651392505512013-05-25T17:45:11.975+05:302013-05-25T17:45:11.975+05:30
ஜெயலலிதா போற்றி வணங்கும் இராம கிருஷ்ண பரமஹம்சரின்...<br />ஜெயலலிதா போற்றி வணங்கும் இராம கிருஷ்ண பரமஹம்சரின் கதை<br /> <br /><br />மூளைக் குழப்ப வியாதியால் பைத்தியமாகிவிட்ட கடாதரின் பூர்வாசிரப் பெயர் மாற்றப்பட்டு ராமகிருஷ்ண பரமஹம்சர் என்று நாமம் சூட்டப்பட்டு உச்சாணிக் கொம் பில் ஏற்றி வைக்கப்பட்டார். அவரே கூறுகிறார். இறுதியில் தேவியின் ஆணை எனக்கு அருளப்பட்டு விட்டது.<br /><br />மானுடம் பயன் பெறுவதற்காக உணர்ச்சிகளை மட்டுப்படுத்திக் கொள் என்று மதப்பைத்தியம் பிடித்த மக்கள் கடாதரரை வேடிக்கை பார்ப்பதற்குக் கூட்டங் கூட்டமாகத் தானேஸ்வரம் தேடிச் சென்றார்கள். படித்த இளைஞர்கள்கூட விவேகானந்தராக ஆகப் போகும் நரேந்திர தத்தா உட்பட அனைவரும் குருவின் காலடியில் அமர்ந்து ஆத்ம தரிசனம் அடைந்தார்கள். நான் படிப்பற்றவன் இருந்தும் என்னைக் காண்பதற்கு மக்கள் இங்கே அலை மோதுகிறார்கள் என்னே விந்தை?<br /><br />நிரஞ்சன்தர் தனது ஆய்வின் முடிவில் கூறுகிறார் தன்னளவில் ராமகிருஷ்ணர் நேர்மையானவர்தான் ஆனால் அவரது மூளை ஏணல் கோணலாக செயல்பட்டது. அவரது வாழ்க்கை முழுதும் இயற்கைக்கு மாறான நெறிபிறழ்ந்த செயல்கள் மட்டுமே நிரம்பி வழிந்தன. அவரது இயற்கைக்கு மாறான நெறி பிறழ்ந்த செயல்களின் கட்டுமீறிய வெளிப்பாடுகள்தான் அவர் அவ்வப் பொழுது கிறுக்குப் பிடித்த நிலைக்குத் தள்ளப்படுவது.<br /><br />அவர் வாழ்ந்த காலத்தில் நவீன நோயாளியான அவரது செயல்களுக்குத் தெய்வீகத் தன்மை கொடுக்கப்பட்டு விட்டது. வாய்ப்பை வளமாகப் பயன்படுத்திக் கொண்ட ஒரு கூட்டம் அவரை வைத்து ஆதாயம் அடைந்தது கடாதரர் கடவுளாக்கப்பட்டார். இதில் அவலம் என்னவென்றால் கடாதரரும் தன்னைக் கடவுள் என்று நம்பும் அளவுக்கு நரம்பியல் நோய் தீவிரமாக இருந்தது.<br /><br />நரம்பியல் நோய் வாய்ப்பட்ட ஒரு மனிதனுக்குத் தனது உண்மையான நிலவரம் தெரிய வாய்ப்பில்லை. புற்று நோயால் அவதிப்பட்ட ராமகிருஷ்ணர் மரணப் படுக்கையில் கிடந்தார். தனது யோக சக்தியைப் பயன்படுத்தி நோயின் பிடியிலிருந்து மீண்டு கொள்ளுமாறு நரேந்திர விவேகானந்தர் உட்பட அவரது சீடர்கள் அவரை வேண்டினர்.<br /><br />இராமகிருஷ்ணர் பொருள் பொதிந்த பொழிப்புரை ஒன்றை எரிச்சலுடன் எடுத்தோதினார். நான் இவ்வாறு வேதனையில் அவதியுறுவது தலைவிதியா என்ன? நோயில் இருந்து விடுபட வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்.<br /><br />ஆனால் தேவியின் திருவுளம்பற்றி னாலன்றோ எனது நோய் தீர முடியும் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என்று இராமகிருஷ்ணர் தணியாத தாகம் கொண்டிருந்தார். ஆனால் புற்றுநோயின் கொடுமையால் நீண்ட காலமாக இழுபறியில் தத்தளித்த அவர் 1886-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதியன்று இறந்தார். மிகுதியான யோக சக்திகள் கொண்டிருப்பதாக நம்பப்பட்ட அவரது விருப்பத்தை நிறைவேற்ற யோக சக்திகள் கை கொடுக்கவில்லை.<br /><br />(இந்திய வரலாற்றில் பகவத்கீதை என்ற நூலில் ஆராய்ச்சி அறிஞர் பிரேம் நாத் பசாஸ்)<br /><br />தகவல்: பரமத்தி சண்முகம், கரூர்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-89629728174087952622013-05-24T19:12:08.281+05:302013-05-24T19:12:08.281+05:30
சோதிட அறியாமை
சூரியக் குடும்பத்தில் வெகு தொலைவி...<br />சோதிட அறியாமை<br /><br /><br />சூரியக் குடும்பத்தில் வெகு தொலைவிலுள்ள கிரகங்கள் மீது ஏன் மக்களுக்கு இவ்வளவு ஆர்வமும் அக்கறையும் வந்திருக்கிறது? அவற்றுடன் தங்கள் வாழ்க்கையை எதற்காக இப்படிப் பிணைத்துக் கொண்டிருக்கிறார்கள்? என்பதையெல்லாம் என்னால் நிஜமாகவே புரிந்து கொள்ள முடியவில்லை.<br /><br />அறிவியலை ஒதுக்கி வைத்து விட்டு அதை (சோதிடத்தை) ஏற்றுக் கொள்வது என்பதில் எனக்கு உடன்பாடில்லை.<br /><br />தங்கள் வாழ்க்கையை அவை (கிரகங்கள்) ஆட்டிப்படைக் கின்றன என்று எப்படி நம்புகிறார்கள் என்பது பற்றி எனக்கு எதுவுமே புரியவில்லை.<br /><br />விண்கோள்களின் (கிரகங்களின்) இயக்கங்கள் பற்றிய சிக்கலான கணிப்புகளைக் கூட்டிக் கழித்துப் பகுத்துப் பார்த்து இட்டுக் கட்டி ஒரு முடிவுக்கு வருவது என்பதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது.<br /><br />ஏ.பி.ஜெ. அப்துல்கலாம்<br />முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர்<br />(அக்கினிச் சிறகுகள் நூலில்)<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-70575362483883738362013-05-24T19:11:20.566+05:302013-05-24T19:11:20.566+05:30பயந்த மனிதனும் - பரிகாரமும்!
பயந்த மக்கள் பரிகார...பயந்த மனிதனும் - பரிகாரமும்!<br /><br />பயந்த மக்கள் பரிகாரம் காண முற்படுகிற போது அந்த இடத்திற்கு வந்து விடுகிறது சோதிடம்! சோதிடர்கள் பிழைப்பாக்கிக் கொள்கிறார்கள்!<br /><br />திருமணத்தை நடத்தி வைக்க, புதுக்கணக்கு எழுத, கடையை தொழிற்சாலையை திறந்து வைக்க, அடிக்கல் நாட்ட என்று நல்ல காரியத்திற்கெல்லாம் கைராசி பார்க்கக் கூடியவர்கள் நம் மக்கள்! குடு குடுப்பைக்காரன் சொல்லும் குறியையும், குறத்தி கூறும் வாக்கையும், சோவி உருட்டிச் சோதிடம் கூறுபவனையும், கிளி ஜோசியத்தையும் நம்புகிற நம் மக்களிடத்தில் ஜோதிடமும் இடம் பெற்றுவிட்டது.<br /><br />மதவாதிகள் செல்வாக்குப் பெற்றிருந்த காலத்தில் ஜோதிடம் பரப்பப்பட்டது. அவர்கள் சொல்வதை நம்ப வேண்டும், ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தினார்கள்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-61682551408176620662013-05-24T19:10:56.119+05:302013-05-24T19:10:56.119+05:30
உண்மை
உண்மைதான் உலகத்தின் அறிவுச் செல்வம். தொழில...<br />உண்மை<br /><br />உண்மைதான் உலகத்தின் அறிவுச் செல்வம். தொழில்களிலெல்லாம் தலை சிறந்த தொழில் உண்மையை நாடுவதேயாகும். உண்மை தான் மனித சமுதாய வளர்ச்சியின் அடிப்படை, மேல் கட்டடம், உச்சி மண்டபம் எல்லாம். உண்மையே இன்பத்தின் தாய். உண்மையைக் கடைப்பிடிப்பவன் நன்மை யைச் செய்யும் மாபெரும் சக்தியைப் பெறுகிறான்.<br /><br />ஆராய்ச்சியினாலும், சோதனையினாலும், பகுத்தறிவினாலும் உண்மையைக் கண்டு பிடிக்க முடியும். துணிவு பெற்றவனால்தான் உண்மை யோடு நடக்க முடியும். கடவுளுக்கோ, மனிதனுக்கோ அஞ்சாத முழு உரிமையுடன் உண்மையை நாட வேண்டும். தடையோ, மறைவோ, இரகசியமோ இல்லாமல் உலக இலக்கியம் எதையும் படிக்கும் உரிமை வேண்டும்.<br /><br />உண்மையைக் கண்டுபிடிப்பவன் உலகுக்கு வெளிச்சத்தைக் காட்டுபவன் ஆவான்.<br /><br />-ஆர்.ஜி.இங்கர்சால் தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-57743500531586496202013-05-24T19:10:16.352+05:302013-05-24T19:10:16.352+05:30
அரசும் - அமைச்சும்
அக்காலத்தில் சுயராஜ்யம் கேட்...<br />அரசும் - அமைச்சும்<br /><br /><br />அக்காலத்தில் சுயராஜ்யம் கேட்ட நமது பார்ப்பனத் தலைவர்கள் அரு வருக்கத் தகுந்த தங்கள் சமயத்தைப் பாட்டிற் பொதிந்து, நமது வேதத்தில் அரசு முறையைக் குறித்து வெகுவாகக் கூறியிருக்கிறது. கவுடில்யர் தமது அர்த்த சாஸ்திரத்தில் குடிகளுக்கு இணங்கியே அரசன் நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.<br /><br />முற்காலத்திய அரசர்களும் குடிகளின் கருத்துக்கிணங்கிய ஆட்சிபுரிந்து வந்தார்கள். கவுடில்யர் ராஜ்யம் அல்லது இராம ராஜ்யம் தான் நமக்குத் தேவை என்று கூறுகிறார்களே; நம்மவர்களிற் சிலரும் இவர்களின் பாட்டிற்கு இசைந்து கூத்தாடுகிறார்களே!<br /><br />இது முறையன்று. நமது நிலைமை சீர்படாதவரையில் (பிறப்பினால் உயர்வு-தாழ்வு என்கிற வேற்றுமை ஒழிந்து போமளவும்) பிரிட்டிஷ் ஆட்சியே தேவை. கவுடில்ய ராஜ்யமும், ராம ராஜ்ஜியமும் பார்ப்பனர்களுக்கே இருக்கட்டும்.<br /><br />அமைச்சுத் தன்மைக்கு உரியவன் பார்ப்பனனே என்பதற்கு மனுவின் கூற்று வருமாறு:<br /><br />ஜாதிமாத்ரோபஜீ வீவா காமம்ஸ்யாத்<br />ப்ராஹ் மணப்ருவ;<br />தர்மப்ரவக்தா, ந்ருபதேர்<br />நது சூத்ர; கதாசன<br /><br />(மனு)<br /><br />பொருள்: (பஞ்சமா பாதகங்களுக்கு விளை நிலமாயிருந்தாலும்) பிறவியினா லேனும் பிராமண குலத்தில் பிறந்த ஒருவனை அரசன் மந்திரியாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அறிவில் மிகுந்தவனாயினும், சூத்திரன் ஒரு போதும் அரச சபைக்கு உரியவனாக மாட்டான்.<br /><br />இதை மீறிச் சூத்திரன் மந்திரியாயி ருந்தால், அந்நாடு சீர்கெடுமெனபதற்கு மனு கூறியதாவது:-<br /><br />யஸ்ய சூத்ரஸ்து குருதே<br />ராஜ்யே தர்ம விவேசனம்<br />தஸ்ய ஸீததிதத்ராஷ்ட்ரம்<br />பங்கே கௌரிவ பஸ்யத;<br />யத்ராஜ்யம் சூத்ர பூயிஷ்டம்<br />நாஸ்தி காக்ராந்தமத்விஜயம்,<br />வினஸ்யத்யாசு தத்ச்ரித்ஸ்னம்<br />துர்ப்பிக்ஷம் வ்யாதி பீடிதம்<br /><br />பொருள்: எந்த நாட்டில் சூத்திரன் மந்திரியாயிருக்கிறானோ, அந்த நாடு சேற்றில் முழுகின பசுவைப்போலப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அழிந்துபோகும். எந்த இடம் சூத்திரர் களாலும், வேதத்தை நம்பாதவர்களாலும் நிறைந்து வேதியர்கள் இல்லாததாகவும் இருக்கிறதோ, அந்த நாடு பஞ்சநோய் முதலிய கேடுகளால் விரைவில் அழிந்து போகும்.<br /><br />கல்வியை விரும்புகிற சூத் திரன் மனுவின் சட்டப்படி தண்டிக்கத் தக்கவனாவான். இத்தகைய சட்டம் அமலில் இருக்கு மிடத்து, எங்ஙனம் முன்னேற்றம் அடைய முடியும்? சூத்திரன் என்கின்ற சொல்லி லேயே தாழ்ந்தோன்; அடிமை, முன்னேற் றத்திற்கு உரிமையில்லாதவன் இவை முதலிய இழிவுப் பொருட்களும் மற்றும் அடங்கியிருக்கின்றன.<br /><br />(ஞானசூரியன்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-14452269988415608092013-05-24T19:09:43.742+05:302013-05-24T19:09:43.742+05:30
சிந்தனைப் பூக்கள்
நமது புராணக்காரர்களுக்கு பாரத...<br />சிந்தனைப் பூக்கள்<br /><br /><br />நமது புராணக்காரர்களுக்கு பாரதத்தில் திருதராஷ்டிரனும், பாண்டுவும் அவர்களின் தகப் பனுக்குப் பிறந்தவர்கள் அல்ல என்று சொன்னால் யாரும் கோபித்துக் கொள்ளுவதில்லை. ஆனால், ராமாயணத்தில் ராமன் பிறந்தது அவனது தகப்பனுக்கா என்பது சந்தேகமாயிருக்கின் றது என்றால் உடனே கோபித்துக் கொள்ளுகின்றார்கள். இதன் ரகசியம் தெரியவில்லை.<br /><br />##############<br /><br />மார்ச்சு மாதம் 31ஆம் தேதியின் ரயில்வே கெய்டானது ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி பிரயாணத்தில் ரயில் தப்பும்படி செய்து விட்டது. ஆனால், நாம் திரேதாயுகத்து கெய்டைப் பார்த்து, கலியுகத்தில் பிரயாணம் செய்ய வேண்டுமென்கின்றோம்.<br /><br />##############<br /><br />பத்து மாதக் குழந்தையைக் கக்கத்தில் வைத்து சாமியைக் காட்டி, அதைக் கும்பிடு என்று கைகூப்பச் செய்வதைவிட, இருபது வருஷத்து மனிதனைப் பார்த்து, நீ கடவுளைக் கும்பிடுவது முட்டாள்தனம் என்று சொல்வது குற்றமாகாது.<br /><br />##############<br /><br />மேல்நாட்டானுக்கு பொருளாதாரத்துறையில் மாத்திரம் சுயமரியாதை வேண்டும். நமக்கு மதம், சமூகம், கல்வி, அறிவு ஆராய்ச்சி, கைத்தொழில், அரசியல், பொருளாதாரம் முதலாகிய பல துறைகளிலும் சுயமரியாதை வேண்டும்.<br /><br />##############<br /><br />அரசியல் இயக்கம், முதலில் நாங்கள் இந்தியர்கள்; பிறகுதான் பார்ப்பனர்கள் பறையர்கள் என்று பார்க்க வேண்டும் என்று சொல்லுகின்றது. ஆனால், சுயமரியாதை இயக்கமோ, முதலில் நாங்கள் மனிதர்கள்; பிறகுதான் இந்தியர்கள், அய்ரோப்பியர்கள் என்று பார்க்க வேண்டும் என்பதாகச் சொல்லுகின்றது.<br /><br />- தந்தை பெரியார்<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com