tag:blogger.com,1999:blog-1474608369333206681.post8409930007123953602..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: அயோத்திதாசரைப் பெரியார் மறைத்தாரா?-பறையன் கட்சி, பள்ளன் கட்சி என்று பெயர்! - 4தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-46283120959395486202012-05-20T16:52:39.396+05:302012-05-20T16:52:39.396+05:30எனவே, தமிழக அர சின் தலைமைச் செய லாளர் அவர்கள் நீதி...எனவே, தமிழக அர சின் தலைமைச் செய லாளர் அவர்கள் நீதிமன்ற, அரசு உத்தரவுகளைச் செயல்படுத்தும் வகை யில் உடடினயாக அரசு அலுவலக வளாகங்க ளில் அமைக்கப்பட்டுள்ள மதவழிபாட்டுச் சின் னங்களை அகற்றும் நடவடிக்கைக்கு உத்தரவு பிறப்பித்தும் ஆயுத பூஜை கொண்டாடும் அரசு அலுவலகங்களுக்கு குறிப்பாக காவல்நிலை யங்களுக்கு மதச்சார்பின் மையை வலியுறுத்தும் வகையில் சுற்றறிக்கை அனுப்பியும் ஆவன செய்க!<br />தவறுகளைச் சுட்டிக் காட்டுவது எங்கள் கடமை<br /><br />தவறுகளைக் களை வது அரசின் கடமை!<br /><br />இந்தியா மதச்சார் பற்ற நாடா? இந்து மதச் சார்புள்ள நாடா? மேற்கண்ட வளாகத் திற்கு தென்புறம் உள்ள காவல் குடியிருப்பின் முகப்பில் பிள்ளையார் கோவில் கட்டப்பட்டு தினசரி பூசை நடை பெற்று வருகிறது. மேலும் காங்கேயத்திலுள்ள கீழ் பவானி பாசன வசதி அலுவலகத்தில் பூசை நடைபெற்று வருகிறது.<br /><br />ஊராட்சியில் மத ஆட்சி<br /><br />வெள்ளகோவில் ஊராட்சி மன்ற வளா கத்தில் கிழக்கு முகமாக சிமெண்ட் அட்டை வேய்ந்து சுவர் எழுப்பி தற்சமயம் புதியதாக பிள் ளையார் கோவில் மெரு கூட்டப்பட்டுள்ளது. தினமும் கற்பூர ஆரா தனைகள், நீராட்டுதல், பட்டுடுத்தல், போன்ற புனஸ்காரங்களுக்கு இங்கு பஞ்சமில்லை.<br /><br />ஒவ்வொரு ஆண்டும் அரசு அலுவலகங்களில் குறிப்பாக காவல்நிலை யங்கள் வாழை மரங்கள், மாவிலைத் தோரணங் கள், தேங்காய், பழம், சந்தன குங்குமம் விபூதிப் பட்டை சகிதமாக ஆயுத பூசை கொண்டாடப் பட்டு மதச்சார்பின்மை குழி தோண்டிப் புதைக் கப்பட்டு வருகிறது.<br /><br />அரசு உத்தரவு அறிக்கை<br /><br />தமிழ்நாடு அரசு பொது இலாகா (ஜெனரல் எம்) நினைவுக் குறிப்பு எண் 7553.66-2 நாள் 29 ஏப்ரல் 1968இல் வெளியிடப் பட்ட இலாகா தலை வர்களுக்கான அறிவிப் புப்படி மதச்சார்பற்ற ஆட்சி நாடு ஆகையால் எந்த மதத்தைச் சார்ந்த சாமியார்கள் (சாதுக்கள், மகான்கள், அவதாரங் கள் உள்பட) கடவுள் கள், பெண் கடவுள்கள் ஆகியவற்றின் படங்கள், சிலைகள் முதலியவற்றை அரசாங்க அலுவலகத் தில் அல்லது அரசுக்குச் சொந்தமான இடத்தில் வைத்திருப்பது சரியல்ல என்று அரசாங்கம் கருது கிறது. இந்தக் கட்டடங் களில் இப்போது இவை இருக்குமாயின் அவற் றைப் படிப்படியாகவும், எவ்வித ஆடம்பரமுமில் லாமல் பிறர் கவனத்தை ஈர்க்காத வகையிலும் அல்லது எவ்வித அசம் பாவிதம் நிகழாத வகை யிலும் அகற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-64311802831687872352012-05-20T16:52:31.554+05:302012-05-20T16:52:31.554+05:30ஆட்சியர் அலுவலகமா? ஆச்சாரக் கூடமா? திருப்பூரில் உச...ஆட்சியர் அலுவலகமா? ஆச்சாரக் கூடமா? திருப்பூரில் உச்சநீதிமன்ற ஆணை மீறல்<br /><br /><br />திருப்பூர், மே 20- திருப்பூர் மாவட்ட ஆட் சியர் அலுவலகம் - அலு வலகமாக இல்லாமல் ஆச்சாரக் கூடமாக வழிபாட்டுக் கூடமாக ஆகியிருக்கிறது. இது உச்ச நீதிமன்ற ஆணைக்கு விரோதமானதாகும்.<br /><br />திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தற்போது பஞ்சு ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில் செயல் பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 8.9.2011 அன்று சிறீ கற்பக விநாயகர் ஆலயம் என்ற மத வழிபாட்டுச் சின்னம் மாவட்ட ஆட்சியர் தலைமையிலேயே இங்கு நிறுவப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட் சியர் அலுவலகத்திலேயே மதச்சார்பின்மைக்கு இந்தக் கதி என்றால் மற்ற இடங்களில் கேட் கவா வேண்டும்.<br /><br />கிடாவெட்டு காவல் நிலையம்<br /><br />காங்கேயம் வட் டாட்சியர் அலுவலக வளாகத்தில் காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம் ஆகியவை ஒருங்கே அமைந்துள் ளன. அந்த வளாகத்தி லேயே கச்சேரி கறுப் பண்ண சாமி கோவில் என்ற மத வழிபாட்டுச் சின்னம் உள்ளது. இக்கோவிலில் தினமும் பூசைகள் நடத்தப்பட்டு ஆடு, கோழி பலியிடும் மூடநம்பிக்கை நிகழ்வும் பக்தர்களால் நடத்தப் படுகிறது. இதில் சிறப் பம்சமாக மதுவகை களை வைத்தும் பூசை செய்யப்படுகிறது. இந்தக் கற்பனை காவல் கடவுளுக்கு நிஜ காவல் நிலையத்தின் சார்பில் வருடத்திற்கு ஒரு முறை மதுவுடன் கூடிய கிடா வெட்டு நிகழ்வும் நடை பெற்று வருகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த ஆண்டு கிடாவெட்டு நிகழ்வு 9.5.2012 புதன் கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. காங்கே யம் காவல் நிலையத்தின் சார்பில் முக்கியப் பிர முகர்கள் விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். காங்கேயம் பழைய கோட்டை சாலையி லுள்ள அண்ணாமலை மண்டபத்தில் அனை வருக்கும் கறி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது.<br /><br />இப்படி காங்கேயம் காவல்நிலையத்தில் மூடநம் பிக்கை கூத்தாடுவதற்கு காரணம் காங்கேயம் காவல் துறையினருக்கு அவர்கள் மீதும், அவர் கள் வைத்திருக்கும் துப் பாக்கிகளின் மீதும் நம் பிக்கை இல்லை போலும் மாறாக கச்சேரி கறுப் பண்ணசாமியின் மீது அதீத நம்பிக்கை.<br /><br />அரசு அலுவலகங்க ளில் மத வழிபாட்டுத் தலங்களை அமைக்கக் கூடாது என்று ஏற்கெ னவே அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டி யது அரசின் கடமை. ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அதை அமல்படுத்த அரசு தேவையான நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசு அலு வலக வளாகங்களில் மத நல்லிணக்கம் பாதுகாக் கப்படவேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் (கிளை) ஒரு பொது நல வழக்கில் 17.3.2010 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.<br />ஆகவே, அரசு நீதி மன்ற உத்தரவுக்கு கட் டுப்படாத, அவ்வுத்தரவு களை அவமதிக்கத் தக்க முறையில் மேற்கண்ட மதச்சார்புச் செயல்கள் மிகுந்து கொண்டேயி ருப்பதால் தற்போது புதியதாகக் கட்டப் பட்ட, இனி புதியதாகக் கட்டப்படுகிற அரசு கட்டிட வளாகங்களி லும் இது போன்ற மதச் சார்பின்மையை எள்ளி நகையாடுகிற, கேலிக் கூத்தாக்குகின்ற மதவழி பாட்டுச் சின்னங்கள் அமையவிருக்கிறதோ? என்ற அய்யப்பாடு மதச் சார்பின்மையாளர்கள், பகுத்தறிவாளர் மத்தியில் தோன்ற மேற்கண்ட சம் பவங்கள் காரணமாகின் றன.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-54595261657890711372012-05-20T16:33:34.224+05:302012-05-20T16:33:34.224+05:30ஆன்மீக சிதறல்கள்!
எது வேண்டும் சொல் மனமே?
பலன் ...ஆன்மீக சிதறல்கள்!<br /><br /><br />எது வேண்டும் சொல் மனமே?<br /><br />பலன் தரும் ஸ்லோகம்<br /><br />(தீய கனவுகள், எதிரி பயம், மரண பயம் நீங்க..)<br /><br />ஓம் ருத்ரம் பஸுபதிம் ஸ்தானும் நீலகண்டம் உமாபதிம்<br /><br />நமாமி ஸிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு: கரிஷ்யதி<br /><br />கால கண்டம் காலமூர்த்திம் காலஜ்ஞம் காலநாஸனம்<br /><br />நமாமி ஸிரஸா தேவம் கிம் நோ ம்ருத்யு: கரிஷ்யதி<br /><br />- மார்க்கண்டேயர் அருளிய மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோம்ரம்<br /><br />பொதுப் பொருள்: பாவம் செய்பவர்களுக்கு துக்கத்தைக் கொடுத்து வருந்தச் செய்கிறவரே, விவேகமற்றவர்களுக்கு விவேகத்தைத் தருபவரே, புகழ் மங்காதவரே மகாதேவா நமஸ்காரம், கறுத்த கழுத்தைக் கொண்டவரே, பார்வதியின் கணவரே மகாதேவா, தலை தாழ்த்திய நமஸ்காரம். உம்மை நம்பும் என்னை, யமன் முதலான எந்த பயம்தான் அணுக முடியும்? விஷத்தைக் கண்டத்தில் கொண் டவரே, கால வடிவினரே, காலத்தை நிர்ணயிப்பவரே... யமனை அழித்த வரே மகாதேவா நமஸ்காரம்.<br /><br />(இந்த துதியை திங்கட்கிழமை தோறும் துதித்து வந்தால் யம பயம் அகலும். துர்க்கனவு தோஷங்கள் நீங் கும். சத்ரு உபாதைகள் தொலையும்).<br />- தினகரன் ஆன்மீக மலர் 19.5.2012<br /><br />யமபயம் நீங்குமா?எத்தனை வயதில் நீங்கும்? தமிழ்நாட்டில் ஆண்களின் சராசரி வயது 68 ஆகவும் பெண்களின் சராசரி வயது 71.5 ஆகவும் உள்ளதே. இதற்கும் இந்தத் துதிக்கும் சம்பந்தா சம்பந்தம் உண்டா?<br /><br />இந்தத் துதி தமிழ்நாட்டுக்கா? இந்தியாவுக்கா? உலக நாடுகள் அத்தனைக்குமா?<br /><br />திருக்கடையூரில் மார்க்கண் டேயன் என்பவன் என்றும் 16 வயதில் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே - அவன் இப்பொழுது எங்கே இருக் கிறான்? கொஞ்சம் கண்டுபிடித்துச் சொல்லுங்கள் பார்க்கலாம்.<br /><br />திங்கள்கிழமை தோறும் இந்தத் துதியைப் பாடினால் எமபயம் நீங்கும் என்றால், எதற்கு மருத்துவமனைகள் மருத்துவர்கள் - இழுத்து மூடி விட லாமா?<br /><br />இதோ ஒரு நரம்பியல் நிபுணர்<br /><br />நரம்புக்கோளாறு நீக்கும் சோளீஸ்வரர்<br /><br />நரம்புக் கோளாறுகள் நீக்கும் சிறந்த பரிகாரத் தலமாக விளங்கு கிறது பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோயில். இவ்வூரில் உள்ள முதியவர் ஒருவர் நரம்புக் கோளாறினால் பெரிதும் பாதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவம் பார்க்க மூன்று லட்ச ரூபாய் வரை செலவாகும் என்று தெரிந்தது. ஆனால் முதியவரோ சோளீஸ்வரர் மீது நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்து கொண்டார். அவரது பிரார்த்தனை பலித்தது.<br /><br />மருத்துவமனைக்குச் செய்திருக்க வேண்டிய செலவை, கோயிலுக்குப் புதிய கொடிமரம் அமைத்துத் தந்து பிரார்த்தனையை நிறைவேற்றினார். நரம்புக் கோளாறு, நரம்புத் தளர்ச்சி நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் சோளீஸ்வரரை நாடி வருவதும், அவர்கள் நலமடைந்தபின் நன்றிக் கடன் செலுத்த வருவதும் பெருகி வருவது கண்கூடு. இவ்வாலயம் காஞ்சிபுரத்திற்கு வடக்கே 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.<br />- தினகரன் ஆன்மீகமலர் 19.5.2012<br /><br />இப்படிப்பட்ட ஒரு நரம்பியல் நிபுணர் - மருத்துவர். எளிதாக எங்கே கிடைக்கப் போகிறது? மருத்துவத் துறையில் நரம்பியல் துறையையே எடுத்து விடலாமே! சுகப்பிரசவம் வேண்டுமா? புதுக்கோட்டை மாத்ரூ பூதேஸ்வரர் இருக்கவே இருக்கிறார். (குங்குமம் 23.4.2009).<br /><br />எப்படிப்பட்ட மகப்பேறு மருத்துவர் பார்த்தீர்களா? மருத்துவத் துறையில், கண் மருத் துவர், பல் மருத்துவர், இதய நோய் மருத்துவர் எலும்பு முறிவு மருத்துவர், உணவு செரிமானத்துறை மருத்துவர் என்று இருப்பதுபோல இந்து மதக் கடவுள்களிலும் நரம்புக்கோளாறு நீக்கும் சோளீஸ்வரர், ஆயுள் விருத்தி செய்யும் அசகாய சூரர்கள் உள்ளனரோ!<br /><br />மக்களின் மூடப் பக்தியை எப்படி யெல்லாம் தூண்டில் போட்டுப் பிடிக் கின்றனர் பார்த்தீர்களா?<br /><br />நேபாளத்துக்குப் பக்தி யாத்திரை சென்ற கும்பகோண கோயில் குருக் களே விமான விபத்தில் பலியானாரே!<br /><br />இவற்றை வெளியிடுவதும் இந்த ஏடுகள்தான்! என்னே, இரட்டை வேடம்!<br /><br />நோய் தீர்க்கும் துறைகள் மட்டு மல்ல - சகல நிவாரணங்களும் அளிக் கும் பண்டக சாலையாக (ளுரயீநச ஆயசமநவ) இந்து மதம் இருப்பதைப் படித்தால் வெகுவாக வயிறு குலுங்கச் சிரிக்க லாம். கேட்டதெல்லாம் தருவாள் பழ வந்தாங்கல் எல்லை முத்தம்மன் (ஆனந்தவிகடன் 8.4.2009).<br /><br />வழக்குகளில் வெற்றி பெற வேண் டுமா? கொல்லங்குடி (சிவகங்கை) வெட்டுடையாள் காளியை அணுக வேண்டும்.<br />(ராணி 7.3.2010)<br /><br />பேசாமல் அரசாங்கம் என்ற ஒன்றே தேவையில்லை நீதிமன்றங் களும் தேவையில்லை. ஊருக்கு ஊர் இதுபோன்ற கோவில்களைக் கட்டி பார்ப்பனர்களை அர்ச்சகர்களாக்கி, துதிப் பாடல்களை அவிழ்த்துக் கொட் டினால், ஆகா ஆனந்த சாம்ராஜ்ஜியம் ஓகோ என்று கொழிக்குமே - அப்படித்தானே!<br /><br />ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே! ஆலயங்கள் இருக்க என்ன பயம் என்று துள்ளுவோமே!<br /><br />குறிப்பு: மக்களை மூடத்தனத்தின் பக்கம் திருப்பி மோசமான ஆபத்து களில் சிக்க வைக்கும் இந்தப் போக் கிரித்தனத்தை அனுமதிக்கலாமா? இவற்றைக் கண்டிக்க இந்த இயக் கத்தைத் தவிர வேறு எது? 20-5-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-78307900967630400902012-05-20T16:32:42.908+05:302012-05-20T16:32:42.908+05:30அயோத்தி தாசர்
பண்டிதமணி அயோத் திதாசரின் பிறந்த ப...அயோத்தி தாசர்<br /><br /><br />பண்டிதமணி அயோத் திதாசரின் பிறந்த பொன் னாள் இந்நாள் (1845).<br /><br />ஒடுக்கப்பட்ட மக் களின் உரிமைச் சங்கநாதம் இவர். இரட்டைமலை சீனிவாசன் இவரின் நெருங்கிய உற வினர் ஆவார். 1891 டிசம் பரில் திராவிட மகா ஜனசபை யின் சார்பாக முதல் மாநாடு நடை பெற்றது. இதற்கு முன் முயற்சி எடுத்தவர்கள் அயோத்திதாசரும், இரட்டைமலை சீனிவா சனும் ஆவர்.<br /><br />கல்வி கற்கக் கூடிய வாய்ப்புகளுக்கு உள்ள சமூகத் தடையை நீக்க வேண்டும்; கிராம ஒன்றி யங்கள், நகராட்சிகள் ஆகி யவற்றில் பிரதிநிதித்துவம் தரவேண்டும்; முன்சீப், மணியக்காரர் வேலை தரப்பட வேண்டும்; இந்துக் கள் பணி புரியும் நீதிமன் றங்களில் செல்வதற்கான தடையையும், பொது நீர் நிலைகளைப் பயன்படுத் துவதற்கான சமூகத் தடை களையும் நீக்க வேண்டும்; பறையர் என்பதைக் கேவலப்படுத்தும் நோக்கில் சொல்வதோ, பறையர்க்கு இழிவான சிறு பணிகளைத் தருவதோ கூடாது என்று அம்மாநட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.<br /><br />தாழ்த்தப்பட்டவர்களுக் குக் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்பதில் அயோத்திதாசர் முக்கிய மாகக் கவனம் செலுத்தி னார். கல்விதானே உண் மையான கண் - அதனை இந்துத்துவ வருணாசிரம சமுதாயம் அவித்து விட்டதல்லவா?<br /><br />அவருக்குக் கிடைத்த ஒரு பவுத்த சிந்தனையா ளர்தான் - அமெரிக்க இராணுவத்தில் கர்னலாகப் பணியாற்றி, ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்விக் கண் கொடுத்தவர் கர்னல் ஆல்காட்!<br /><br />1894 இல் சென்னை யில் தீண்டப்படாத மக் களுக்காக தனிப் பள்ளிக் கூடங்களைத் திறந்தார். அவருக்கு அயோத்திதாசர் அளித்த விண்ணப்பம் முக்கியமானது. தமிழ் நாடெங்கும் தாழ்த்தப்பட்ட பிள்ளைகளுக்குக் கல்விச் சாலைகளைத் திறக்க வேண்டிய விருப்பத்தை அதில் வெளியிட்டிருந்தார்.<br /><br />அந்த விண்ணப்பத்தில் சில வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கின்றன. பஞ்ச மர்கள்தான் ஆரம்ப காலத் தில் திராவிடர்களென அழைக்கப்பட்டதை அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.<br /><br />ஆரியர்களுக்கும், திராவிடர்களுக்குமிடையே ஏற்பட்ட பகை உணர்வு களை எல்லாம் அதில் வெளிப்படுத்தியுள்ளார்.<br />ஆரியராவது திராவிட ராவது என்று பேசும் அறிவு ஜீவிகள் முதலில் அயோத்திதாசரைப் படிக் கட்டும்.<br /><br />- மயிலாடன் 20-5-2012<br /><br />.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com