tag:blogger.com,1999:blog-1474608369333206681.post837526280913573880..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: பக்தியும் - ஒழுக்கமும் தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-33422157628754714982013-06-10T19:27:05.890+05:302013-06-10T19:27:05.890+05:30
நோயின்றி நாம் வாழ...
இயற்கை நமக்களிக்கும்
இனிமை...<br />நோயின்றி நாம் வாழ...<br /><br /><br />இயற்கை நமக்களிக்கும்<br />இனிமையான பிறப்பு<br />புன்னகை பூத்து - இன்முகம்<br />சிவக்க அரியதோர் வாய்ப்பு<br />அழுகை ஒலியுடன் அகிலத்தில்<br />அடிவைத்து அரவணைக்கும்<br />தாயிடம் - கண்டதோ<br />ஆனந்தக் களிப்பு<br /><br />இந்த ஆனந்தக்களிப்பு - நம் வாழ்வில் தொடர நோயின்றி இவ்வுலகில் நாம் வாழ வேண்டும். நோயின்றி மனிதன் தன் வாழ்நாளில் வாழ முடியுமா? இது இன்றைய நவீன வாழ்க்கையில் ஓர் ஆச்சரியக் கேள்விக்குறி? ஏனென்றால் நம் மனமானது.<br /><br />நோயுடனே வாழ்வதற்கு தன்னைத்தயார்படுத்திக் கொண்டு விட்டது என்று தான் நினைக்க வேண்டி உள்ளது. இயற்கை நமக்களித்த அய்ந்து உயிர் இயக்க சக்திகளான மண், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகியவற்றை பஞ்ச பூதங்கள் எனக்கூறி அதன்மீது ஓர் மாயை என்னும் பய உணர்வை ஏற்படுத்தி இந்த அய்ந்து உயிர் சக்திகளையும், உயிர்களைக் கொல்லும் உயர் சக்தி என்று பயப்பட்டு, படாதபாடுபட்டு, நல்லதோர் மானிடனை மனித நேயமற்று நமக்குள்ளே பகை உணர்வை பரப்புவதிலே குறியாக செயல்பட்டு குதூகலம் அடைந்த ஒரு கூட்டம் செய்த சதியே இன்று நாம் அடையும், மனநோய்க்கும், உடல் நோய்க்கும், சமூக நோய்க்கும் அடிப்படை என்பதை மனித இனம் அறிவுசார் விளக்கங்கள் மூலமாக தெள்ளத்தெளிவாக புரிந்து கொண்டு வருகிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.<br /><br />பெற்றதாய் நமக்கு பாலூட்டி வளர்ப்பாள் இயற்கை தாய் நம்மை நலமாக வளர்ப்பாள். நம் தந்தை நம்மை நல்வழியில் வளர்ப்பார். இருளர் நம்மை எவ்வாறு வளர்ப்பார்? இன்னுமா புரியவில்லை இயற்கையின் சிறப்பை!<br /><br />மனிதன் நலமாக வாழ ஆறு அடிப்படைத் தேவைகள்<br /><br />1. சிறந்த சூரிய ஒளி<br />2. தூய காற்று<br />3. சுத்தமான நீர்<br />4. சீரிய பயிற்சி (உடற்பயிற்சி, மனப்பயிற்சி)<br />5. சத்தான உணவு<br />6. அமைதியான தூக்கம்<br /><br />இவை ஆறும் சிறப்பாக அமைந்தால் உடலும் மனமும் ஆறுதல் அடையும். இவ்வாறு சிறப்புப்பெற்றால் நோய் ஆறும் நம்மைவிட்டு அகலும், இவற்றில் நாம்தினம் குளித்தால் எவ்வாறு நோய் உண்டாகும்?<br /><br />1. சிறந்த சூரிய ஒளி<br /><br />நம் முன்னோர்கள் இயற்கையை ஆராய்ந்து கூறியதில், காலையில் சூரிய உதயத்தின் முன்பே எழுந்து காலைக்கடன்களை முடித்து பின், சூரிய உதயத்தின் போது திறந்த வெளியில், சில அடிப்படை உடல் பயிற்சிகளை, காலைக்கதிரவன் ஒளிப்படச் செய்தால், பலவிதமான நோய்கள் வராமல் தடுக்க முடியும் என்பதை நவீன மருத்துவ ஆராய்ச்சிகள் தெளிவுபடக் கூறுகின்றன.<br /><br />2. தூயக்காற்று<br /><br />மனிதனின் நோயில்லா வாழ்விற்கு மிக முக்கியமான தேவை சுத்தமான பிராணவாயு, இன்று அந்த பிராண வாயுவிற்கே களங்கம் ஏற்படும் வகையில் நவீன வாகனங்களின் புகைகளும், தொழிற்சாலைகளிலிருந்து வரும் கலப்படமான விஷ வாயுக்களும் கலந்து பூமியில் வாழும் உயிரினங்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக முக்கிய காரணமாகிப் பல்வேறு நோய்களுக்கும் அடிப்படை காரணமாகின்றது.<br /><br />3. சுத்தமான நீர்<br /><br />நீரில்லையேல் இவ்வுலகே இல்லை. இவ்வுலகே இல்லையேல், இவ்வுலகில் உயிர்கள் வாழ முடியவில்லை. எல்லா உயிர்களின் அடிப்படை வாழ்வாதாரமே நீர்தான் தண்ணீர் இல்லையேல் கண்ணீர் கூட தோன்றாது. எனவே ஆனந்தக் கண்ணீர் வர தண்ணீர் தேவை அடிப்படை தண்ணீர் ஆதாரங்களை நாம் அழித்தால் கண்ணீர் விட்டு அழும் காலம் வெகு விரைவில் இல்லை. விலை கொடுத்து தண்ணீர் வாங்குவது இன்று கவுரவமாகத் தோன்றுகிறது. இன்று பாட்டில்களில் வரும் தண்ணீரே நோய்களுக்கு காரணமாகிறது என்பதை நாம் அறிந்து கொண்டு, விழிப்படைய வேண்டும்.<br /><br />4. சீரிய பயிற்சி (உடற்பயிற்சி, மனப்பயிற்சி)<br /><br />அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும், அடியெடுத்து நாம் நடந்தால் நோய் நம்மை விட்டு அகலும்<br />நல்லதோர் நடைப்பயிற்சி<br />நோயின்றிவாழும் முயற்சி<br />நல்லதோர் ஓட்டப்பயிற்சி<br />நோய்களை ஓட்டும் முயற்சி<br />நல்லதோர் மனப்பழக்கம்<br />நோயின்றி வாழ பழக்கம்<br />இனியும் ஏன் தயக்கம்<br />இன்னும் வேண்டுமோ விளக்கம்?<br /><br />5. சத்தான உணவு<br /><br />சுத்தமான, சத்தான உணவு தான் ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை இயற்கை உணவுகளான கீரை, காய்கறிகள், மீன், முட்டை, கலப்படமில்லா இறைச்சிகள், பயிறு வகைகள், தானியங்கள், இளநீர் போன்ற இயற்கையிலிருந்து கிடைக்கும் உணவுகளை உண்டால் நாம் நோயின்றி வாழலாம். செயற்கை உணவுகளைத் தவிர்த்தால் செயற்கை சுவாசம் பெற்று உயிர்வாழ கருவிகளிலிருந்து நாம் பிராண வாயு பெறாமல் இயற்கையான காற்றை சுவாசித்து இனிமையாக நோயின்றி வாழலாம்.<br /><br />6. அமைதியான தூக்கம்<br /><br />அமைதியான தூக்கமே அனைத்து வித<br />நோய்களுக்கு அருமருந்து<br />தூங்காத கண்கள் சோர்வடைந்து தோன்றும்<br />தூங்காத மனமும் நிலை தளர்ந்து போகும்.<br />தூக்கமில்லா வாழ்க்கை துக்கமான வாழ்க்கை<br />சீக்கிரம் தூங்கி விடியற்காலை எழுந்தால் புதுக்காலை<br />தினமும் பொலிவுடன் புலரும் புதியதாய்<br />சிந்தனைகள் பூக்களாய் மலரும், நோயில்லா புதுவாழ்வு<br />நித்தமும் நிகழும் நல்ல நித்திரை முத்திரை<br />பதிக்கும், அறிவார்ந்த உலகம் அனுதினம்<br />உதிக்கும், நோயில்லா அகிலம் விரைவில்<br />பிறக்கும் அனைவரும் முயன்றால்<br />அகிலமே சிறக்கும்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-91692763480488091712013-06-10T19:22:46.497+05:302013-06-10T19:22:46.497+05:30
ஆசிரியர் பணி நியமனத்தில் மோசடி! கல்வியாளர்கள் - ந...<br />ஆசிரியர் பணி நியமனத்தில் மோசடி! கல்வியாளர்கள் - நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வர்<br /><br /><br />சென்னை, ஜூன் 10-ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய டிஇடி தேர்வில் இடஒதுக்கீடு மோசடி நடந்துள்ளது என்றும், அதனால் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.<br />பேராசிரியர்கள் மார்க்ஸ், சிவக் குமார், திருமாவளவன் ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர் களை சந்தித்து கூறியதாவது:<br /><br />கடந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய டிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்றதாக 19000 பட்ட தாரிகளுக்கு ஆசிரியர் பணியிடம் வழங்கப்பட்டது. அதில் மிகப்பெரிய இட ஒதுக்கீடு மோசடி நடந்துள்ளது. இதனால் தகுதியுள்ள 3 லட்சம் பேருக்கு விதிமுறைப்படி அளிக்க வேண்டிய ஆசிரியர் தகுதித் சான்று மறுக்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு பெறவேண்டிய 15000 பேர் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். தேசிய ஆசிரியர் கல்விக் கழகம்(என்சிடிஇ) விதிமுறைகள், நீதிமன்ற தீர்ப்பு ஆகிய வற்றை ஆசிரியர் தேர்வு வாரியம் அப்பட்டமாக மீறியுள்ளது.<br /><br />ஆசிரியர் பணி நியமனம் செய்யும் போது முறையாக தனி அறிவிப்பு வெளியிட வேண்டும். அதில் ஒவ் வொரு பாடத்துக்குமான காலி இடங்கள் எண்ணிக்கை, வகுப்பு இனவாரியாக ஒதுக்கப்பட்ட பணி யிடங்களின் எண்ணிக்கை, தேர்ந் தெடுக்கும் முறை ஆகியவை குறிப் பிட வேண்டும். ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த முறையான அறிவிப்பும் செய்யாமல் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பியுள்ளது. என்சிடிஇ நெறிமுறைகளின்படி ஒவ்வொரு இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் தனித்தனி தகுதி மதிப்பெண் நிர்ணயிக்க வேண்டும். அதை ஆசிரியர் தேர்வு வாரியம் கடைபிடிக்கவில்லை.<br /><br />இட ஒதுக்கீடு மோசடி குறித்து நீதிமன்றம் கண்டித்த பிறகும், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் சுர்ஜித் கே சவுத்ரி, 19000 ஆசிரியர் பணி நியமனத்தின்போது, பொதுப் பிரிவின் அனைத்து இடங்களையும் முற்பட்ட ஜாதியினருக்கு தாரை வார்த்துள்ளார். எஸ்.சி, எஸ்டி பிரிவினருக்கு கிடைக்க வேண்டிய வேலை எண்ணிக்கையை குறைத்துள் ளார். இது மிகப்பெரிய இட ஒதுக்கீடு மோசடி. இதை செய்த ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே சவுத்ரியை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது விசா ரணை நடத்தி உரிய தண்டனை வழங்க வேண்டும். கடந்த ஆண்டு அவர் நியமனம் செய்ததை ரத்து செய்துவிட்டு இட ஒதுக்கீடுபடி மதிப்பெண்கள் நிர்ணயித்து புதிய பட்டியல் தயாரித்து 35 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இதை அரசு செய்யாவிட் டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர் வோம்.<br /><br />இவ்வாறு பேராசிரியர்கள் தெரி வித்தனர்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-247259574940153942013-06-10T19:22:02.174+05:302013-06-10T19:22:02.174+05:30
மோடிக்குப் புதுப் பதவி: எச்சரிக்கை! (1)
கோவாவி...<br />மோடிக்குப் புதுப் பதவி: எச்சரிக்கை! (1)<br /><br /><br /><br />கோவாவில் கூடிய பிஜேபியின் செயற்குழுவில் குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி கட்சியின் பிரச்சாரக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.<br /><br />இதுகுறித்து வெளியில் உள்ள கட்சிகள் என்ன கருதுகின்றன என்பதுகூட இரண்டாம் பட்சம்தான். கட்சிக்குள்ளேயே எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. பிஜேபியின் கூட்டணிக் கட்சிகளும் எதிர்ப்புக் குரலை உயர்த்தியுள்ளன.<br /><br />தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டு விட்டது பிஜேபி என்று காங் கிரஸ் தரப்பில் கருத்துக் கூறப்பட்டுள்ளது.<br /><br />மோடியை பிஜேபி பிரதமருக்கான வேட்பாளர் என்று அறிவிக்க விரும்புகிறது;<br /><br />அதற்கு முன்னோட்டமாகத்தான் கட்சியில் இந்தப் பதவி மோடிக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதற்குப் பெரிய ஆய்வுகள் தேவைப்படாது.<br /><br />2002இல் கோத்ரா நிகழ்வைக் காரணம் காட்டி குஜராத் மாநிலத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக அரசப் பயங்கரவாதம் என்பதற்கு நூற்றுக்கு நூறு பொருத்தமான வகையில் வேட்டையாடப்பட்டனர்.<br /><br />2000-த்துக்கும் மேற்பட்ட சிறுபான்மையின மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1 லட்சத்து 70 ஆயிரம் சிறுபான்மையினர்களின் வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன; 230 தர்காக்கள் இருந்த இடம் தெரியவில்லை; 4000 நான்கு சக்கர வாக னங்கள், 20 ஆயிரம் இரு சக்கர வாகனங்கள் சாம்பல் குவியலாகக்கப்பட்டன. சிறுபான்மையினருக்கு ஏற்பட்ட இழப்பின் அளவு ரூ.3800 கோடி என்று மதிப்பிடப்பட்டது.<br /><br />இந்த கலவரத்தில் மலைவாழ் மக்கள் உட்பட 12 லட்சம் பேர் களத்தில் இறக்கி விடப்பட்டனர் என்றால் அந்த உக்கிரம் எத்தகையதாக இருக்கும் என்பதை ஒரு கணம் கற்பனை செய்து பாருங்கள்.<br /><br /><br />குஜராத்தில் இனப் படுகொலை செய்யப்பட்டது பற்றி முதல் அமைச்சர் மோடி சொன்ன பதில் என்ன தெரியுமா?<br /><br />எந்த ஒரு செயலுக்கும் எதிர்வினை உண்டு என்ற நியூட்டன் தியரியை நினைவூட்டினார். ஒரு முதல் அமைச்சர் வாயிலிருந்து வரக் கூடிய வார்த்தைகள் தானா இவை? அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பாதுகாப்புக் கொடுக்கக் கடமைப்பட்டுள்ள ஒரு முதல் அமைச்சர் இந்த மனப் போக்கில் இருந்தால் இந்துக்களைத் தவிர்த்த மற்ற மக்களுக்குக் குஜராத்தில் பாதுகாப்பை எங்கே போய்த் தேடுவது? வேலியே பயிரை மேய்ந்தால் பயிருக்குப் பாதுகாப்பு எங்கே? எங்கே?<br /><br />கோத்ரா சம்பவத்தை நேரில் பார்த்த முதல் அமைச்சர் அந்தக் கணத்தில் எடுத்த முடிவு மிக மிக விபரீதமானது. செத்தவர்களின் உடல் சம்பந்தப் பட்டவர்களின் ஊர்களுக்கு எடுத்துச் செல்லுவது என்ற முடிவை மாற்றி, அனைத்துப் பிணங்களையும் ஊர்வலமாக எடுத்துச் செல்ல ஆணையிட்டு, ஏற்பாடு செய்தவர் முதல் அமைச்சர் மோடி. இதன் நோக்கம் என்ன என்பது எளிதிற் புரிந்து கொள்ளத்தக்கதே.<br /><br />கோத்ரா ரயில் எரிப்பை திட்டமிட்டு நடத்தினார் கள் முசுலிம்கள் என்று பரப்பி, அந்தச் சூழலில் ரயில் பெட்டியில் எரிக்கப்பட்ட 56 பிணங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்றால் இந்துக்களின் வெறித்தனம் இஸ்லாமியர்கள் மீது திரும்ப வேண்டும் என்ற கெட்ட எண்ணம் இதற்குள் இருக்கிறதா - இல்லையா? ஆக இனக் கலவரத்துக்கான விதையை அந்த இடத்திலேயே விதைத்த விஷமிதான் இந்த மோடி.<br /><br />உடனே அன்றே அரசு அதிகாரிகளைக்கூட்டி நாளை மாநிலத்தில் நடக்க இருக்கும் கொலை, கொள்ளை, தீ வைப்பு, சூறையாடல்களை காவல் துறை கண்டு கொள்ளக் கூடாது என்று வாய் மொழி உத்தரவு போட்டவர்தான் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி.<br /><br />அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட உளவுத் துறை அதிகாரிகள் சிறீகுமார், ஷர்மா, சஞ்சீவ்பட் ஆகியோர் இதனை உறுதிபடுத்தியுள்ளனரே.<br /><br />இந்த மோடியைப் பற்றி வேறு எவர் சொன்னதை யும்கூட கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம். மோடி சார்ந்துள்ள பிஜேபியைச் சேர்ந்த சட்டப் பேரவை பெண் உறுப்பினர் ரமிலாபென் ஆன் லுக் இதழுக்கு அளித்த பேட்டி ஒன்று போதுமே!<br />ஹிட்லர் தன் சொந்த நாட்டு மக்களைப் படுகொலை செய்யவில்லை. ஆனால் மோடியோ தன் அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள சொந்த நாட்டு மக்களையே கொன்று குவித்தவர். பொய்களையே பிரகடனங்களாக வெளியிட்டவர் என்று கூறியதைவிடவா மோடிக்கு நற்சான்றுப் பத்திரம் தேவை?<br /><br />உச்சநீதிமன்றமே இந்த மனிதருக்குக் கொடுத்த பட்டம் நீரோ மன்னன்!<br /><br />இந்த நிலையில் உள்ளவர்தான் பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் - அதற்கு முன்னோட்டம் தான் பிஜேபி பிரச்சாரக் குழுத் தலைவராக மோடி நியமிக்கப்பட்டு இருப்பது.<br /><br />இதன் மூலம் பிஜேபி என்ற அமைப்பே பாசிசத்தின் கொடிய தாய் என்பது அம்பலமாகி விடவில்லையா?<br /><br />இந்திய ஜனநாயக நாடாக இருக்க வேண்டுமா? மதச் சார்பற்ற நாடாக இருக்க வேண்டுமா? அல்லது இனப்படுகொலை மய்யமாக்கப்பட்ட குஜராத்தாக ஆக்கப்பட வேண்டுமா? சிந்திக்க வேண்டியது இந்தியத் துணைக் கண்டத்து வெகு மக்கள்தான்!10-6-2013தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-42454583569084056312013-06-10T19:21:13.574+05:302013-06-10T19:21:13.574+05:30
ஐ.பி.எல். கிரிக்கெட்டைத் தடை செய்க!
குப்பைத் தொ...<br />ஐ.பி.எல். கிரிக்கெட்டைத் தடை செய்க!<br /><br /><br />குப்பைத் தொட்டியாகிவிட்டது ஐ.பி.எல். கிரிக்கெட், சூதாட்டக்குப் பையைக் கிளறக் கிளற அழுக்கும் துர்நாற்றமுமே வெளிவருகிறது. தரகர் கள், தொழிலதிபர்கள், சினிமாக் காரர்கள், அரசியல்வாதிகள், ஐ.பி.எல். அணி முதலாளிகள் என நீளும் தொடர்புடையோர் பட்டியல், நம் சமூகம் தொலைத்துள்ள நேர்மை, நாணயம், தனிமனித ஒழுக்கம் ஆகியவற்றின் தொகுப்பு. சூதாட்டத்தரகர் தொடர்புக் காக குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டவுடன், சூப்பர் கிங்ஸில் அவருக்கு முக்கிய பதவி ஏதும் கிடை யாது என்று பூசிமெழுகி என்.சீனி வாசன் வெளியிட்ட அறிக்கை, ஒழுக்கக் கேட்டின் உச்சம்.<br /><br />தம் மருமகன் இச்சர்ச்சையில் ஈடுபட்டிருப்பினும், பி.சி.சி.ஐ. தலைவர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்றும் மூன்று பேர் குழு அமைத்து விசாரிப்பேன் என்றும் என்.சீனிவாசன் சொல்வது, அதர்மத்தின் கொடுமுடி. தம் மருமகன் இத்தகைய தவறுகளில் ஈடுபட்டிருப்பார் என்று சீனிவாசன் எதிர்பார்க்காமல் இருக்கலாம். அப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்தவுடன் தார்மீகப் பொறுப்பேற்று தம் பதவியை ராஜினாமா செய்து, நேர்மையான விசாரணைக்கு வழி செய்திருக்க வேண்டும் சீனிவாசன். பவன்குமார் பன்சாலின் உறவினர் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு எழுந்தவுடன் பன்சால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது சமீபத்திய எடுத்துக்காட்டு.<br /><br />ஐ.பி.எல்.லின் ஆரம்பமே தவறு. கால்பந்தாட்டக் குழுக்களை உருவாக்கி, போட்டிகள் மூலம் வருமானமும் கண்டன, வெளிநாட்டு நிறுவனங்கள். அதை அப்படியே அடியொற்றி, ஐ.பி.எல். அணிகள் உருவாக்கப்பட்டன. ஒரு மாநிலத்துக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாத வெளிநாட்டு வீரர்கள், அந்த அணியில் இடம்பெறுவது போன்ற நகைச்சுவை வேறு எதுவும் இல்லை. அதுவும் வீரர்களை, ஏலத்தில் எடுப்பது போல் தேர்வு செய்யும் நடைமுறை உருவானபோதே, பணத்தாசை வேர் கொள்ளத் தொடங்கிவிட்டது. வீரர்கள் மேன்மேலும் தங்கள் இஷ்டப்படி பொரு ளீட்ட நல்ல, அல்ல வழிகளைப் பின்பற்றத் தொடங்கிவிட்டனர். இந்தியாவிலும் சூதாட்டத்தைச் சட்டபூர்வமாக்க வேண் டும் என்ற கோரிக்கை நம் மதிப்பீடு வீழ்ச்சிக்கு சரியான உதாரணம். இத னால் விளையாட்டில் முறைகேடுகள் அதிகரிக்குமே தவிர குறையாது. இங்கே விளையாட்டுக்கான உத்வேகம், ஈடு பாட்டு உணர்வு ஆகியவை செத்துப் போய்விட்டன. கிரிக்கெட் மீது ரசிகர்கள் கொண்ட தீராத ஆர்வத்தை மூலதன மாக்கி, சோரம் போன அத்தனை பேர் களுமே இதில் குற்றவாளிகள். பி.சி.சி.ஐ. விஷயத்தில் அரசு தலையிடாது என்று கபில்சிபல் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். மக்கள் பணமே பி.சி.சி.ஐ., ஐ.பி.எல். ஆகியவற்றின் முதுகெலும்பு. இவ் வமைப்புகளைக் கேள்வி கேட்க மக்கள் மன்றம் அனைத்து உரிமையும் பெற் றுள்ளது.<br /><br />மக்களை ஏமாற்றும் எந்த அமைப்பும், நிறுவனமும், திட்டமும் சமூக விரோத மானதே. ஐ.பி.எல்.மக்களின் ஆர் வத்தைக் கொச்சைப்படுத்தியது: அவர்களுடைய பொன்னான நேரத்தை, பணத்தைக் கபளீகரம் செய்தது; மன வேதனையை ஏற்படுத்தியது. ஐ.பி.எல். கிரிக்கெட்டை ஒழிப்பதன் மூலமே இந்திய கிரிக்கெட்டைக் காப்பாற்ற முடியும்.<br />நன்றி: கல்கி 9.6.2013 (பக்கம் 7)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-32251588803437920142013-06-10T19:20:23.022+05:302013-06-10T19:20:23.022+05:30
அரசியல் வாழ்வு
நமது அரசியல் வாழ்வு என்பதைப் பொ...<br />அரசியல் வாழ்வு<br /><br /><br /><br />நமது அரசியல் வாழ்வு என்பதைப் பொதுவுடைமை வாழ் வாக ஆக்கிக் கொண்டால்தான் மக்கள் சமுதாயம் கவலையற்றுச் சாந்தியும், சமாதானமும் பெற்று வாழ முடியும். இல்லாவிட்டால், மக்கள் சித்திரவதைக்கு ஆளாகத் தான் நேரிடும்.<br />(விடுதலை, 29.5.1973)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-50262138904508730642013-06-10T19:18:48.734+05:302013-06-10T19:18:48.734+05:30
தெரிந்து கொள்க....
நீங்கள் பயணம் செய்யும் ரயில...<br />தெரிந்து கொள்க....<br /><br /><br /><br />நீங்கள் பயணம் செய்யும் ரயில் பெட்டியில் உள்ள கழிவறை சுகாதார கேடு உடையதாக இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. பயணச்சீட்டின் பி.என்.ஆர். எண்ணைக் குறிப்பிட்டு குறுஞ்செய்தி அனுப்பினால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.<br />காவல்நிலையத்தில் கொடுக்கப்படும் புகாரைப் பதிவு செய்ய மறுத்தால் சம்பந்தப்பட்ட போலீசாருக்கு ஓராண்டு தண்டனை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-44601913069762986812013-06-10T19:14:49.145+05:302013-06-10T19:14:49.145+05:30
ஜெ பாராட்டு
கோவாவில் நடை பெற்ற பிஜேபியின் செய...<br />ஜெ பாராட்டு<br /><br /><br /><br />கோவாவில் நடை பெற்ற பிஜேபியின் செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் பிரச்சாரக் குழுத் தலைவராக நரேந்திரமோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர்களின் கட்சிக்குள்ளேயே மோதல் இருக்கிறது. ஆனால் தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் - அண்ணா பெயரையும், திராவிடப் பெயரையும் கட்சியில் வைத்துக் கொண்டிருக்கும் அண்ணா திமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முதல் அமைச் சருமான ஜெயலலிதா அவர்கள், இன்று விமான நிலையத்தில் செய்தியா ளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது; குறிப் பாக திராவிட இயக்கத்த வர்களும், மதச் சார்பற்ற தன்மையில் மதிப்புடைய வர்களும், சிறப்பாக சிறு பான்மையினரும் கவனிக் கத்தக்கதாகும்.<br /><br />நரேந்திரமோடி பிஜேபி யின் பிரச்சாரக் குழுத் தலைவராகத் தேர்வு செய் யப்பட்டதற்குத் தம் வாழ்த் துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். வெறும் வாழ்த்தோடு நிறுத்திக் கொண்டு இருந்தாலும், ஏதோ சம்பிரதாயம் என்கிற கோட்டுக்குள் அடக்கி விடலாம்.<br /><br />ஆனால் அதையும் தாண்டி அவர் சிறந்த ஆட்சியாளர் - சிறந்த நிர்வாகி, குஜராத் மாநிலத் தில் நல்லாட்சி புரிகிறார் என் றெல்லாம் சகட்டு மேனிக்கு புகழ்ந்து வார்த் தைகளைக் கொட்டியுள்ளார் - இவ் வளவையும் தெரிவித்து விட்டு, இது எனது தனிப்பட்ட கருத்து என்று பாதுகாப்பு வளையம் தேடுவது - ஆகா, எவ்வளவு சாமர்த்தியம்!<br /><br />தனிப்பட்ட கருத்து என்றால் வெறும் வாழ்த்து களோடு நின்று இருக்க வேண்டும். அதையும் தாண்டி மோடியை இந்திரன் சந்திரன் என்று புகழ்வது - அதுவும் அவரின் ஆட் சியை வானளாவ சிலாகிப் பது என்பது எப்படி தனிப் பட்ட கருத்தாகும்? மறை முகமாக மோடியின் இந் துத்வா ஆட்சிக்குக் கொடுக்கும் சான்று பத்திரம் தானே இது! இதனை அ.இ.அ.தி.மு.க. வில் கூட்டு வைத்துள்ள முசுலிம் பிரிவினரும் (மனித நேயக் கட்சி), இடதுசாரிகளும் ஏற்றுக் கொள்கிறார்களா?<br /><br />பி.ஜே.பி. மோடியின் குஜராத் இனப்படு கொலையை துப்பட்டிப் போட்டு மறைப்பதற்குக் கையாளும் யுக்தி - குஜராத் மாநிலத்தை வளர்ச்சி அடையச் செய்திருக்கிறார் என்பதுதான்.<br /><br />அதே பாணியைத் தானே நம்மூர் ஜெயலலி தாவும் செய்திருக்கிறார்? மோடி பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டதற்கு இரு முறை தனி ஹெலிகாப்டரில் ஜெயலலிதா அவர்கள் சென்றதையும், ஜெயலலிதா வின் முதல் அமைச்சர் பதவிப் பிரமாணத்திற்குத் தனி அழைப்பின் பேரில் மோடி வந்து கலந்து கொண்டதையும், தனது போயஸ் தோட்டத்துக்கு மோடியை அழைத்து 40 வகைகளில் சிறப்பு விருந்து அளித்ததையும் நினைவு கொண்டால், மோடியும் ஜெயலலிதாவும் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள் வது தனிப்பட்ட பிரச் சினையா? அதையும் தாண் டிய இந்துத்துவா உணர்வா என்பதை மக்கள்தான் எடை போட்டுத் தீர்மானிக்க வேண்டும்.<br /><br />- மயிலாடன் 10-6-2013தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-63601280969492180282013-06-09T17:31:50.874+05:302013-06-09T17:31:50.874+05:303 3/4 நாழிகை விழித்திருப்பானாம்! இதில் முதல் 3/4 ந...3 3/4 நாழிகை விழித்திருப்பானாம்! இதில் முதல் 3/4 நாழிகையில் குளிப்பானாம்! இரண்டாவது 3/4 நாழிகையில் பூசை செய்வானாம்! மூன்றாவது 3/4 நாழிகையில் சாப்பிடுவானாம்! நான்காவது 3/4 நாழிகையில் தாம்பூலம் போடுவானாம்! (பான்பராக் இருந்திருந்தால் அதனையும் போட்டுக் கொள் வானோ?) அய்ந்தாவது 3/4 நாழிகையில் அரச பரிபாலனம் செய்வானாம்! பிறகு? மீண்டும் பழையடி ஜோர் ஆகப்படுத்து உறங்கி விடுவான்!<br /><br />ஆகாதய்யா! ஆகாது! வாஸ்து புருஷன் படுத்துக்கிடக்கையில், கால் இருக்கும் பகுதியில் வாசல்கால் விட்டால் மனைவிக்குப் பொல்லாங்கு! தலையில் விட்டால் கணவனுக்கு ஆகாது! முதுகில் விட்டால் அரசால் பயம்! வயிற்றில் வாசல்கால் விட்டால் நல்வாழ்வு! இவ்வாறு வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. என்னே கண்டுபிடிப்பு!<br /><br />மாதம் ஓர் இராசியில் தலை வைத்தும் அதற்கு 7ஆம் இராசியில் காலை நீட்டியும் வாஸ்து புருஷன் படுத்துக்கிடக்கும் நிலையறிந்து மனை கோலாவிட்டால் வீட்டுக்குரிய தலைவனும், மனைவியும் வீட்டைத் தொடங்கி வைத்த சிற்பியும் இறந்து போய் விடுவார்கள்! என்கிறது வாஸ்து சாஸ்திரம்! முற்றிலும் மூடநம்பிக்கை அடிப்படையில், அமைந்த இந்த வாஸ்து புருஷனின் கிடக்கை, இருக்கை, எழுகை, இவற்றிற்கேற்ப வீட்டுமனை கோலுதல், வாசல் வைத்தல் முதலான செயல்கள் பகுத்தறிவுக் கும், கட்டடக் கலைக்கும் சற்றும் தொடர்பற்றவை யாகும்.<br /><br />கற்பனைக் கதாநாயகன்! வாஸ்து புருஷன் என்பதே ஒரு கட்டுக்கதை! வாஸ்து புருஷன், எப்போது எப்போது எழுவான்? எப்போது விழிப்பான்? எப்போது பல் துலக்குவான்? எப்போது சாப்பிடுவான்? எப்போது பூசை பண்ணுவான்? எப்போது வெற்றிலைப் பாக்கு போடுவான்? என்பனவற்றையெல்லாம் படித்துப் பார்க்கும் போது இப்படிப்பட்ட வாஸ்து புருஷனை, உண்மையில் இருக்கிறான் என நம்பி, வீடு கட்டத் தொடங்கு வதைப் போல கொடுமை! மடமை! வேறு உண்டா?<br /><br />அச்சுறுத்துவதா? வாஸ்து புருஷனின் நிலையறிந்து, இயலறிந்து, செயலறிந்து மனை கோலாவிட்டால் வீட்டுக்காரன், அவன் மனைவி, இவர்களோடு பாவம், மனைக்கோலும் சிற்பியும் செத்துப் போவார்கள் என்று அச்சுறுத்தும் அவலப் போக்கைப்பற்றி என்ன சொல்ல? எப்படிச் சொல்ல?<br /><br />இதைவிட முட்டாள்தனமாக எந்த மதத்திலா வது உளறத்தான் முடியுமா? (நூல்: வாஸ்து அறியலையா? - பேரா.வெற்றியழகன்)<br /><br />ஏற்கெனவே அவன் பைத்தியம், அவன் சாராயம் குடித்திருந்த நேரத்தில், தேள் கொட் டினால் எப்படி எல்லாம் உளறுவான் என்ற தந்தை பெரியார் கூறியதுதான் இந்த இடத்திற்குப் பொருத்தமானது.<br /><br />பொறியியல் பட்டம் பெற்ற கிறுக்கர்கள்கூட வாஸ்து பார்க்கிறார்களே அவர்களை நோக்கி ஒரே ஒரு கேள்வி. வாஸ்து சாத்திரத்தில் கழி வறைக்கு (Toilet) இடம் உண்டா! கட்டடக் கலைபற்றிய வரலாற்றைப் படிப்பவர் கள் பழங்காலத்தில் வாஸ்து சாஸ்திரம் என்ற ஒன்று இருந்தது. கட்டடம் கட்டுவோர் சிலர், அதனைப் பின்பற்றி கட்டடங்களை எழுப்பினர் என்ற அளவுக்கு அறிந்து கொள்ளலாமே தவிர, வாஸ்து சாஸ்திரத்தை இன்னும் பின்பற்றுவதும் அதனடிப்படையில் இருக்கின்ற கட்டடத்தை இடித்து தகர்த்துப் புதிதாகக் கட்டுவதும் அறிவு டைமை ஆகாது<br /><br />- அய்தராபாத் ஜே.என். தொழில் நுட்பப் பல்கலைக் கழக கட்டடக் கலைத்துறைப் பேராசிரியர் ஆர்.வி. கோல்ஹ் தாட்தார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-82030109977924127592013-06-09T17:30:52.268+05:302013-06-09T17:30:52.268+05:30ஒரு முறை அண்டகாசுரன் என்னும் அசுரனுக்கும், சிவபெர...ஒரு முறை அண்டகாசுரன் என்னும் அசுரனுக்கும், சிவபெருமானுக்கும் பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டுகளாகக் கடும் போர் நடந்ததாம். சளைக்காமல் இருவரும் சண்டை போட்டார்களாம். சிவன் உடலிலிருந்து வியர்வை வெள்ளமாக ஓடியதாம். சிவன் வழித்து எறிந்தானாம். அது பூமியில் விழுந்த தாம் - பூமிதான் பூமா தேவியாயிற்றே - இரண்டும் ஒன்று கலந்தனவாம். அதில் பிறந்தவன் தான் வாஸ்து புருஷனாம்.<br /><br />இந்த அர்த்தமுள்ள இந்து மதத்தில்தான் பூமிக்கும், பன்றிக்கும் பிள்ளை பிறக்கும்.<br /><br />உடல் மயிரிலும், கொட்டாவியிலும்கூட ரிஷிகள் பிறப்பார்கள்! வெட்கக் கேடு!<br /><br />இந்த யோக்கியதையில் இந்த வாஸ்து புருஷன் வீடு கட்டும் காலிமனையில் அந்தந்த மாதத்துக்குரிய இராசியில் காலை நீட்டி, அதற்கு எதிரான ஏழாவது இராசியில் தலை வைத்தும்; இடக்கை கீழும், வலக்கை மேலுமாகப் படுத்துக் கிடப்பானாம்.<br /><br />எப்பொழுது பள்ளி எழுவான் இவன்?: படுத்து கிடந்த வாஸ்து புருஷன் எப்பொழுது எப்பொழுது படுக்கை விட்டு எழுந்திருப்பான்? அந்தப் பள்ளி எழும் பாங்கினையும் வாஸ்து சாஸ்திரம் விளம்புகிறதே! வாஸ்து புருஷன் கீழ்க்கண்ட தேதிகளில் குறிப்பிட்ட நாழிகையில் எழுந்திருப்பானாம்.<br /><br />மாதம் தேதி நாழிகை<br />சித்திரை 10 5ஆவது<br />வைகாசி 21 8ஆவது<br />ஆடி, அய்ப்பசி 11 2ஆவது<br />ஆவணி 6 1ஆவது<br />கார்த்திகை 8 10ஆவது<br />தை 12 8ஆவது<br />மாசி 20 8ஆவது<br /><br />எஞ்சியுள்ள ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதங்களில் எல்லாம், எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! என்று பூபாள ராகத்தில் திருப்பள்ளி எழுச்சி பாடினாலும் வாஸ்து புருஷன் எழுந்திரான் போலிருக்கிறது! அன்றாட அலுவல் திட்டம்: இவ்வண்ணம் வாஸ்து புருஷன் குறிப்பிட்ட மாதங்களில் குறிப்பிட்ட நாழிகையில் எழுந்ததும், தன் காலைக் கடன்கள் உள்ளிட்ட அன்றாட அலுவல் திட்டங்களை வகுத்துக் கொண்டு அவ்வண்ணமே பணிபுரிவானாம்! அதனையும் பார்ப்போமா?<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-29762402158658467682013-06-09T17:30:36.410+05:302013-06-09T17:30:36.410+05:30
வாஸ்துவமானதா வாஸ்து?
ஏடுளில் ஒரு செய்தி. அது கர...<br />வாஸ்துவமானதா வாஸ்து?<br /><br /><br />ஏடுளில் ஒரு செய்தி. அது கருநாடக மாநிலத் திலிருந்து வெளிவந்த ஒன்று.<br /><br />கருநாடக மாநில வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக இருக்கக் கூடியவர் ரமாநாத்ராய்.<br /><br />கருநாடகத்தில் உள்ள புகழ் பெற்ற சட்டமன்ற கட்டடமான விதான் சவுதாவில் இவருக்கு ஓர் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த அறை வாஸ்து சாஸ்திரப்படி சரியில்லை என்று எவனோ ஒரு கிறுக்கன் அளந்துவிட, அமைச்சர் ஆடிப் போய் விட்டார். தனது அறைக்கு அடுத்த அறைக்கும் இடையே உள்ள சுவரை இடிக்கும்படி ஆணை பிறப்பித்துள்ளார். அதன்படி இடிக்கவும்பட்டது. வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு கட்டடத்தில் அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கை அதிர்ச்சியை ஏற்படுத் தியது.<br /><br />பிரச்சினையை பிஜேபி கையில் எடுத்துக் கொண்டுள்ளது. அமைச்சர் ஏதோ சமாளித்து பதில் சொல்லிக் கொண்டுள்ளார்.<br /><br />இவ்வளவுக்கும் முதல் அமைச்சர் சித்தராமையா இது போன்ற மூடநம்பிக்கைகளை எதிர்க்கக் கூடியவர். பதவிப் பிரமாணத்தில்கூட கடவுளை அவர் துணைக்கழைத்துக் கொள்ளாத பகுத்தறிவுவாதி.<br /><br />இந்த வாஸ்துக் கிறுக்கு, படித்தவர்களுக்கிடையே கூட உண்டு; கருநாடகத்தில் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டுள்ள பிஜேபி - டில்லியில் என்ன செய்தது?<br /><br />வாஸ்து சரியில்லை என்று டில்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் கட்டடத்தின் வாயிலேயே மாற்றி அமைக்கவில்லையா?<br /><br />இதே பெங்களூருவில் பிஜேபியின் சார்பில் முதல் அமைச்சராக இருந்த பி.எஸ். எடியூரப்பா வாஸ்து கிறுக்கில் சிக்கி, தமது அறையையே மாற்றி அமைக்கவில்லையா? அதனால் கண்ட பலன் என்ன? பதவி பறி போனது மட்டுமல்ல; இலஞ்சப் பேர் வழி என்ற பட்டம்தானே நிலைத்தது? வாஸ்து பார்த்து தலைமைச் செயலகத்தில் நுழைவு வாயிலை வேறு திசையில் அமைத்தாரே என்.டி. ராமராவ் - அவர் பதவி நாற்காலியை அவருடைய மருமகனே பறித்துக் கொண்டு விடவில்லையா? அப்பொழுது வாஸ்து எங்கே போனதாம்?<br /><br />வாஸ்துப்படிதானே கோயில்கள் பார்த்துப் பார்த்துக் கட்டப்பட்டன. அய்யப்பன் கோயில் தீப்பற்றி எரிந்ததே ஏன்? சீரங்கம் ரெங்கநாதன் தீயில் சிக்கி வெடித்துச் சிதறியது மறந்து போய் விட்டதா?<br /><br />காளகஸ்தி கோயில் கோபுரம் விழுந்தது - ஏன்? கலசம் தூள் தூளாக நொறுங்கியது ஏன்?<br /><br />யார் இந்த வாஸ்து? அதுபற்றிய புராணக் கதையை கேட்டால், கூவம் கூட தூக்கு மாட்டிக் கொள்ளுமே!<br /><br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-64143851239188455482013-06-09T17:29:08.137+05:302013-06-09T17:29:08.137+05:30நேர்த்திக் கடன் செலுத்த கோவிலுக்கு சென்ற போது பரித... நேர்த்திக் கடன் செலுத்த கோவிலுக்கு சென்ற போது பரிதாபம்! கணவன் கண் முன் மனைவி, மாமனார் பலி<br /><br /> <br /><br />துவரங்குறிச்சி, ஜூன் 9- நேர்த்திக்கடன் செலுத்த கோவிலுக்கு செல்லும் வழியில், இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், கணவன் கண் முன்னே மனைவி, மாமனார் பரிதாபமாக பலியாயினர்.<br /><br />திருச்சி மாவட்டம், சுக்காம்பட்டியைச் சேர்ந்த விவசாயி தங்கபாண்டி. இவரது மனைவி முத்துலட்சுமி, 32. இவர்களுக்கு, போதும் பொன்னு என்ற, 2 வயது மகள் உள்ளார். முத்துலட்சுமியின் அப்பா, மலையாண்டி, 50. இவர்கள் குடும்பத்துடன், புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள பிடாரியம்மன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்த, நேற்று காலை, 8:30 மணிக்கு புறப்பட்டனர்.<br /><br />மலையாண்டி, முத்துலட்சுமி, போதும்பொன்னு ஆகிய மூவரும், இருசக்கர வாகனத்திலும்; தங்கப்பாண்டி, இவரது தம்பி பொன்னுசாமி ஆகியோர், வேறொரு இருசக்கர வாகனத்திலும் சென்றனர்.<br /><br />திருச்சி புறவழிச் சாலை, வலசுப்பட்டி பிரிவு சாலை அருகே, மதுரையிலிருந்து, திருச்சி நோக்கி சென்ற, டவேரா' கார் படுவேகமாக, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் மலையாண்டி, முத்துலட்சுமி இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். கண் முன்னே மனைவியும், மாமனாரும் இறந்ததால், தங்கபாண்டி அதிர்ச்சியடைந்தார்.<br /><br />அக்கம் பக்கத்தினர், ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். 108' அவசர கால ஆம்புலன்ஸ் மூலம், இருவரது உடல்கள், மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. துவரங்குறிச்சி காவல்துறையினர் விசாரிக்கின்றனர். விபத்துக்கு காரணமான கார் ஓட்டுநர் வேலு (40), என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-85777956687335204732013-06-09T17:28:12.653+05:302013-06-09T17:28:12.653+05:30தினமலரே கூறுகிறது திருமலையில் காணாமல் போனால், கோவி...<br />தினமலரே கூறுகிறது திருமலையில் காணாமல் போனால், கோவிந்தா...கோவிந்தா...!<br /><br /><br />திருப்பதி, ஜூன் 9- திருமலையில் காணாமல் போவோரின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. தேவையான பாதுகாப்பு ஏற்பாடு இருந்த போதிலும், காணாமல் போனவர்களை கண்டு பிடித்ததாக, இதுவரை தகவல் இல்லை.<br /><br />திருமலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட, டவுன் ஒன்று, டவுன் இரண்டு என, இரண்டு காவல் நிலையங்கள் உள்ளன. இது தவிர, கிரைம் மற்றும் சட்டம் - ஒழுங்கு என, இரண்டு காவல்துறை பிரிவுகளும் உள்ளன. இப்பணிகளை கவனிக்க, 400 முதல், 450 காவலர்கள் உண்டு.<br /><br />ஆனால், தினசரி, 200 காவலர்கள் மட்டுமே, பணியில் இருப்பர். விழா காலங்களில், 1,000 காவல்துறையினரும், பிரமோற்சவ விழா காலத்தில், 4,000 காவல்துறையினரும், பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இதுதவிர, ராணுவத்தை சேர்ந்த, "ஆக்டோபஸ்' என்ற படைப்பிரிவு, விஜிலென்ஸ், சிறப்பு காவல் படை, குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட, முக்கிய பிரமுகர்கள் வரும் போது, காட்டு பகுதியில் சென்று சோதனை செய்ய தனிப்பிரிவு என, திருமலையில், பாதுகாப்பு பணியில் போதிய அளவில், ஆட்கள் உள்ளனர்.<br /><br />எனினும், திருட்டு, குழந்தைகள் கடத்தல், பெரியவர்களே காணாமல் போவது போன்ற சம்பவங்கள், அடிக்கடி நடந்து வருகின்றன. அந்த வகையில், டவுன் - 1 காவல் நிலையத்தில், 300 வழக்குகளும், டவுன் - 2 காவல் நிலையத்தில், 243 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.<br /><br />திருமலையில் கூட்ட நெரிசல் சமயத்தில், தங்குவதற்கு வாடகை அறைகள் கிடைக்காததால், வெளியிடங்களில் பக்தர்கள் உறங்க நேரிடுகிறது. அந்த நேரத்தில், குழந்தைகள் காணாமல் போவதும், கடத்தப்படுவதும், அதிகமாக நடக்கிறது. பெற்றோரும், உறவினர்களும் புகார் அளித்தாலும், காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை. இரவு வேளையில், பெற்றோர் அருகில் உறங்கும் குழந்தைகளையும், கூட்ட நெரிசல் சமயத்தில், காணாமல் போனவர்களையும் கண்டுபிடிக்க, பாதுகாப்பு பிரிவினர் மற்றும் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.<br /><br />கடந்த ஆண்டு, திருமலையில் காணாமல் போன சென்னையை சேர்ந்த, மூன்று வயது சிறுவன் பிரத்யுத்தை, இன்று வரை கண்டுபிடிக்க வில்லை. மூன்று நாட்களுக்கு முன், நடைபாதை வழியில் காணாமல் போன, அய்ந்து வயது சிறுமி ரோஷினியை கடத்திச் சென்றவன் குறித்த, புகைப்பட தகவல் கிடைத்தும், காவல்துறையினர் எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை.<br /><br />திருமலைக்கு வரும், முக்கிய பிரமுகர்களின் தரிசன ஏற்பாட்டையும், அவர் களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் வசதிகளையும் கவனிக்கவே, காவல்துறையினருக்கு நேரம் போதவில்லை. இதனால், பக்தர்களிடம் விலை உயர்ந்த பொருட்கள், ரொக்க பணம் திருடு போவது அதிகரித்துள்ளது. காணாமல் போனவர்கள் குறித்து, உறவினர்கள் தகவல் அளித்த உடனே, தேடியிருந்தால், பலன் கிடைக்க வாய்ப்பு அதிகம்.<br /><br />ஆனால், காவல்துறை யினரிடம் புகார் அளிக்க சென்றால், "உங்களால் முடிந்தவரை தேடி பாருங்கள்; கிடைக்கவில்லை என்றால், அப்போது புகார் அளிக்க வாருங்கள்' என்று அறிவுரை கூறி, அவர்களை அனுப்பி விடுகின்றனர்.<br /><br />திருமலை முழுவதும், 2,000 கண்காணிப்பு கேமராக்களை தேவஸ்தானம் பொருத்தி உள்ளது. ஆனால், அதிக திருட்டு சம்பவங்கள் நடைபெறும், முடி காணிக்கை அளிக்கும், "கல்யாண கட்டா' பகுதி, சப்தகிரி வாடகை அறைகள் உள்ள பகுதி, பக்தர்கள் தங்கும் மண்டபம் ஒன்று, இரண்டு, மூன்று ஆகிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை.<br /><br />ஒரு சில இடங்களில் இருந்த போதும், அது சரியாக இயங்காத நிலையிலேயே இருக்கும். திருமலையில், கணினி உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளை, ஜி.எம். ஆர்., குழுமம் பராமரித்து வருகிறது. கண்காணிப்பு கேமராக்களில் பழுது ஏற்பட்டால், அதை சரி செய்ய, ஜி.எம்.ஆர்., குழுமம் தயாராக உள்ளது. ஆனால், அதற்கு அனுமதி அளிக்காமல், தேவஸ்தான நிர்வாகம் அமைதி காக்கிறது.<br /><br />திருமலையில் காணாமல் போனவர்கள் பற்றி புகார் கிடைத்தவுடன், காவல் துறைக்கு உடனே தகவல் தெரிவிக்க, ஒரு தனி குழுவை அமைக்க வேண்டும். பொருட்களை திருடர்களிடம் பறி கொடுத்தவர் அளிக்கும் ஆதாரத்தின் அடிப் படையில் செயல்பட்டால், சுலபமாக இதற்கு ஒரு வழி பிறக்கும். தேவஸ்தான நிர்வாகம், இதற்கு முயற்சி எடுக்க வேண்டும்.<br /><br /> தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-23140587001683084502013-06-09T17:26:06.529+05:302013-06-09T17:26:06.529+05:30
செய்தியும் - சிந்தனையும்!
எழுத்துரு அளவு Larger F...<br />செய்தியும் - சிந்தனையும்!<br />எழுத்துரு அளவு Larger Font Smaller Font<br />ஞாயிறு, 09 ஜூன் 2013 14:43<br />E-mail Print<br /><br />காவிக் கொண்டாட்டம்<br /><br />செய்தி: குஜராத் முதல் அமைச்சராக நரேந்திர மோடியை பிரதமருக்கான வேட்பாளராக அறிவிக் கக்கோரி நாடு முழுவதும் யாத்திரை செய்யப் போகிறேன். - யோகா குரு ராம்தேவ்<br /><br />சிந்தனை: காவிகளும், பணத் திமிங்கலங் களும் கொடுக்க வேண்டாமா ஆதரவு? சும்மா ஆடுமா சோழியன் குடுமி?தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-69175748963061836152013-06-08T19:46:08.310+05:302013-06-08T19:46:08.310+05:30மீண்டும் விழுந்து விழுந்து சிரித்ததாம் டாக்டர் குழ...மீண்டும் விழுந்து விழுந்து சிரித்ததாம் டாக்டர் குழு. இதைக் கலைஞர் எனக்குச் சொன்னபோது மட்டுமல்ல, இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது என்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.<br /><br />வள்ளுவனுக்குக் கோட்டமும், சிலையும் அமைத்தவர், குறளோவியம் வரைந்தவர் குறள் நெறியில்தானே செல்வார்.<br /><br />வசனத்தை மாற்றமுடியாது; நடிகையை மாற்று<br /><br />குறவஞ்சி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நேரம். வில்லனிடம் சிக்கிய இளம்பெண், அவனிடமிருந்து தப்பிட அவள் எவ்வளவோ முயற்சிக்கிறாள். பயனில்லை. இந்தக் கட்டத்தில் அவள், கடவுளே! உனக்குக் கண்ணில்லையா? என்று சொல்லிக் கதற வேண்டும். இளம்பெண்ணாக நடித்த நடிகை, இந்த வசனத்தைச் சொல்ல மாட்டேன். வேறு ஏதாவது மாற்றுங்கள் என்றார் திடீரென்று.<br /><br />நல்லவேளையாக அப்போது செட்டில் கலைஞர் இல்லை.நாங்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம், பயனில்லை. கடவுளைத் தூஷிக்கும் அந்த வசனத்தை நான் பேசமாட்டேன் என்று அடியோடு மறுத்து விட்டார். பக்கத்து செட்டில் வேறொரு படப்பிடிப்பில் இருந்த பண்டரிபாய், நிலைமையை உணர்ந்து, இது ஆண்டவனிடம் முறையிடுவது போல்தானே தவிர, தூஷிப்பதாகாது. அந்த வசனத்தைப் பேசி நடியும்மா! என்று எவ்வளவோ சொல்லியும், அவரது அறிவுரைக்கும் அந்த நடிகை இணங்கவில்லை.<br /><br />அந்த நேரம் பார்த்து, கலைஞர் எதேச்சையாக வந்து விட்டார். நிலைமையை விளக்கினோம். என்ன, அந்த வசனத்தைப் பேசி நடிக்க மாட்டீர்களா? என்று கலைஞர் கேட்டார்.<br /><br />வேறு ஏதாவது மாற்றி எழுதுங்கள். பேசுகிறேன்! என்று கலைஞரிடமே கூறிவிட்டார் அந்த நடிகை.<br /><br />என் வசனத்தையே மாற்றச் சொல்கிற அளவுக்கு இருக்கிற நீங்கள் இந்தப் படத்தில் நடிக்கவே தேவையில்லை. உங்களை மாற்றி வேறு யாரையாவது போட்டுக் கொள்கிறோம். நீங்கள் வீட்டுக்குப் போகலாம்! என்று கூறிவிட்டார் கலைஞர்.<br /><br />இந்த நடிகையைப் போட்டு அய்யாயிரம் அடி வரை எடுத்திருக்கிறோமே...... என்று அச்சத்துடனேயே கலைஞரிடம் சொன்னேன். அந்த ஃபிலிமைக் கொளுத்திவிட்டு, இந்த காரெக்டருக்கு வேறு நடிகையைப் போட்டுப் படம் எடுங்கள் என்று கூறிவிட்டுப் போய் விட்டார். தன்னுடைய உயிரான எழுத்துகளை நம்மைவிட உயர்வாக மதிப்பவர் கலைஞர் என்பதற்கு இது ஓர் உதாரணம் என்கிறார் மாயூரம் சௌந்தர்.<br /><br />தொகுப்பு : சபீதா ஜோசப்<br />நன்றி : கலைஞர் 100 - நக்கீரன் வெளியீடு<br /><br /> <br /><br />கலைஞர் மொழி :<br /><br />பிழைப்பு<br /><br />வயிற்றுப் பிரச்சினையை மட்டும் கவனித்துக் கொண்டால் போதும் எனக் கருதுவது வாழ்வாகாது! அதற்குப் பெயர் பிழைப்பு! வாழ்க்கை அல்ல!<br /><br />ஆண்டவன்<br /><br />புலிக்கு ஆட்டை இரையாகப் படைத்தவனுக்குப் பெயர்தான் ஆண்டவன் என்றால்.....<br />ஆண்டவன் அவ்வளவு இரக்கமற்றவனா?<br /><br /><br />அனுதாபம்<br /><br />ஒருவன் சாணத்தை எடுத்து நம்மீது வீசுகிறான். அது நமது சட்டையில் படுகிறது.<br />அப்போது நமக்கு ஏற்பட வேண்டியது ஆத்திரமல்ல. அதற்குப் பதிலாக சாணம் வீசியவன் தன் கையையல்லவா கறைப்படுத்திக் கொண்டிருக்கிறான் என்ற அனுதாபம்தான் ஏற்பட வேண்டும்.<br />இழிமொழிக்கு இழிமொழி எதிர்த்துக் கூறிவிடுவது சுலபம்! அதைத் தாங்கிக் கொள்வதுதான் கடினம்!<br />அந்தக் கடினமான வேலைக்கு நம்மை நாமே பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.<br /><br /><br />புகழ்<br /><br />புகழே! நீ பனிக்கட்டி, உன்னைக் கைக்குள்ளே வைத்துக் கெட்டியாகப் பிடித்திருந்தாலும் நீராகக் கரைந்து மறைந்து விடுகிறாய், புகழே! நீ ஒரு மதுக்கலயம், உன்பால் விழுந்தவர்கள் எழுந்ததே இல்லை! புகழே! நீ நிழல், உன்னைப் பற்றிக் கவலைப்படாதவர்களைத் தொடர்ந்து கொண்டே இருப்பாய்!<br /><br />தகுதி<br /><br />மனிதர்கள் பேசுகின்ற வார்த்தைகளிலேயிருந்து அவர்களின் தகுதிகள் நிர்ணயிக்கப்படுகின்றன.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-11581114668392191672013-06-08T19:45:59.794+05:302013-06-08T19:45:59.794+05:30கலைஞர் - 90
இந்திய அரசியல் வரலாறு காணாத அதிசயமாய...கலைஞர் - 90<br /><br /><br />இந்திய அரசியல் வரலாறு காணாத அதிசயமாய் இடைவிடாமல் இயங்கிக்கொண்டிருக்கும் தி.மு.க தலைவர் கலைஞர். இந்த ஜூன் 3இல் 90 அகவையையைத் தொட்டிருக்கிறார். கலைஞரின் வாழிவில் நடந்த சுவையான நிகழ்வுகள் சில இங்கே :<br /><br />வாரியாரைத் திணறடித்த மாணவர்<br /><br />திருவாரூர் கோயில் கதாகாலட்-சேபத்தின் போது திருமுருக கிருபானந்த வாரியார் உயிர்க்கொலை செய்து உண்பதைத் தவிர்க்க வேண்டும். உயிர் உள்ளவைகளை உயிரோடு இருக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.<br /><br />அப்போது கூட்டத்திலிருந்து ஒரு மாணவர் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பது தங்களுக்குத் தெரியாதா-? என்றார்.<br /><br />வாரியார்: கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி போன்றவைகளைப் பறித்துத்தான் சாப்பிடுகிறோம். இது உயிர்க்கொலை ஆகாது. ஆட்டையும், மாட்டையும் கொலை செய்து சாப்பிடக்கூடாதென்பதற்காகத்தான் ஆண்டவன் தாவரங்களைப் படைத்தார். தளதளவென்றிருக்கும், வாழைமரத்தை வெட்டி, வாழைத்தண்டை உண்பதும், தழைத்து நிற்கும் கீரைத் தண்டைப் பிடுங்கிச் சாப்பிடு-வதும், உயிர்க்கொலை அல்லவா? நமக்குத்தான் தாவரங்களை ஆண்டவன் படைத்தார் என்றால் சிங்கம், புலி போன்ற மிருகங்களுக்காக எவைகளைப் படைத்தார்? என்று அந்த மாணவர் கேட்டதும், வாரியார் திக்குமுக்-காடினார் _ திகைத்தார். தன் கையில் அணிந்திருந்த _ முருகா! முருகா! எனப் போட்டிருந்த தங்கச் சங்கிலியைத் தடவிக் கொண்டார். வெள்ளிக் கூஜாவில் வைத்திருந்த தண்ணீரைக் குடித்தார்.<br /><br />மேலும் தர்க்கம் நடவாமல் இருக்க, கோயில் அறங்காவலர் வடபாதிமங்கலம் மைனர் வி.எஸ். தியாகராச முதலியார் சில பிரமுகர்களை அனுப்பி அந்த மாணவரை வெளியே அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தார். 1943ஆம் ஆண்டு நடந்த இந்த வாக்கு-வாதத்தின் விளைவாகத் திருவாரூர் இளைஞர்-களிடையே உற்சாகமும், பெரியோர்களிடையே பரபரப்பும், தி.க. தோழர்களிடையே மேலும் நெருக்கமான தொடர்பும், ஒற்றுமையும் ஏற்படுத்திவிட்ட அந்த மாணவர்தான் இன்றைய கலைஞர் என்கிறார் டாக்டர் இரா.விஜயராகவன்.<br /><br />மூச்சுக்கு மூச்சு நகைச்சுவை<br /><br />இடுக்கண் வருங்கால் நகுக என்றார் வள்ளுவர். ஆனால் துன்பம் வரும்போது சிரிக்க முடிவதில்லை. துன்பத்திலும் சிரிக்கிற _ சிரிக்க வைக்கிற ஆற்றல் சிலருக்கே உண்டு. அதில் கலைஞர் முக்கியமானவர். 2004இல் அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதனை செய்தபோது டாக்டர் ஒருவர் தம் பிடிக்கச் சொல்லிவிட்டு, மூச்சை நிறுத்துங்கள் என்றாராம். உடனே கலைஞர், மூச்சை நிறுத்தக் கூடாது என்பதற்காகத்தானே மருத்துவமனைக்கே வந்திருக்கேன் என்றாராம். டாக்டர் குழுவே வாய்விட்டுச் சிரித்ததாம்.<br /><br />சோதனை முடிந்த பிறகு, இப்போது மூச்சை விட்டுவிடுங்கள் என்றாராம் டாக்டர்.<br /><br />மூச்சை விட்டுவிடக்கூடாது என்பதற்காகத்-தானே உங்களை அழைத்திருக்கிறோம் என்றாராம் கலைஞர்.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-19035797025793783932013-06-08T19:43:31.372+05:302013-06-08T19:43:31.372+05:30கருத்து
இடஒதுக்கீடு என்பது ஏழ்மையைப் போக்குவதற்...கருத்து<br /> <br /><br />இடஒதுக்கீடு என்பது ஏழ்மையைப் போக்குவதற்கான கருவி அல்ல. நூற்றாண்டுகளாக உரிய வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூக ரீதியாகவும் கல்வி நிலையிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அரசியல் சட்டம் வழங்கிய உரிமையே இடஒதுக்கீடு என்பதாகும்.<br /><br />- கலைஞர், தி.மு.க. தலைவர்<br /><br />ஒரு மருமகள், புகுந்த வீட்டில் மதிக்கப்பட வேண்டும். ஆனால் சில நேரங்களில் கணவராலும், அவரது குடும்பத்தினராலும் மருமகள்கள் நடத்தப்படும் விதத்தைக் கண்டு சமூகமே அதிர்ச்சியில் உறைந்து போகிறது.<br /><br />மருமகள் என்பவர் அன்புடனும் பாசத்துடனும் ஒரு குடும்ப உறுப்பினராக நடத்தப்பட வேண்டும். அவரை அன்னியரைப் போல் அலட்சியத்துடன் நடத்தக் கூடாது. வேலைக்காரியைப் போலும் நடத்தக் கூடாது. புகுந்த வீட்டை விட்டு அவர் எந்த நேரமும் துரத்தி அடிக்கப்படலாம் என்ற நிலைமை ஏற்படுத்தப்படக் கூடாது.<br /><br />-கே.எஸ்.ராமச்சந்திரன், தீபக் மிஸ்ரா<br /><br />உச்ச நீதிமன்ற நீதிபதிகள்<br /><br /><br />கழிவறைகளில் தேவையைவிட பல மடங்கு தண்ணீர் வீணடிக்கப்படுகிறது. தண்ணீரைச் சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்தும் முறை நம்மிடையே இல்லை. மாற்றுத் திட்டம் கண்டறியப்பட வேண்டும். விண்வெளியில் தண்ணீரற்ற முறையில் கழிவுகள் வெளியேற்றப்-படுகின்றன. நிலத்திலும் இதே போன்றதொரு திட்டம் தேவை.<br /><br />- சாந்தா ஷீலா நாயர், மாநில திட்டக்குழுத் துணைத்தலைவர்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-3196948374595511632013-06-08T19:42:50.034+05:302013-06-08T19:42:50.034+05:30கலைஞரின் தேவை
செய்தி : கடந்த ஆட்சியில் கலைஞர் க...கலைஞரின் தேவை<br /> <br /><br />செய்தி : கடந்த ஆட்சியில் கலைஞர் கொண்டு வந்த 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் பயனாளி களின் எண்ணிக்கை நான்கு மடங்கு உயர்ந்துள்ளது.<br /><br />சிந்தனை : கலைஞர் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு இதுவே தக்க சான்று. கலைஞரின் திட்டங்களை முடக்காமல் தொடரவேண்டும் என்பதையே மக்கள் விரும்புகிறார்கள் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்வார்களா?தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-3573485264118452482013-06-08T19:41:25.067+05:302013-06-08T19:41:25.067+05:30உங்களுக்குத் தெரியுமா?
1921இல் நீதிக்கட்சி ஆட்ச...உங்களுக்குத் தெரியுமா?<br /> <br /><br />1921இல் நீதிக்கட்சி ஆட்சி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை அமல்படுத்தியபோது - பார்ப்பன அதிகாரிகளை பி என்றும், பார்ப்பனரல்லாத அதிகாரிகளை என்.பி. என்றும் அரசு ஃபைல்களைக் குறிப்பிட்டுப் - பார்ப்பனரல்லாதாரை இனம் கண்டு, வாய்ப்புகளைத் தந்தது என்பதும், அதன் காரணமாக பார்ப்பனர்கள் தங்கள் ஜாதிப் பட்டத்தைப் போட அஞ்சினர் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-52386925421135100672013-06-08T19:40:43.050+05:302013-06-08T19:40:43.050+05:30இதோ...! ஒடுக்கப்பட்டோரின் தகுதியும் திறமையும்
பட...இதோ...! ஒடுக்கப்பட்டோரின் தகுதியும் திறமையும்<br /><br /><br />படிக்கக்கூடாத ஜாதி என்று ஒதுக்கிவைக்கப்-பட்ட ஒடுக்கப்பட்ட மக்களாகிய தாழ்த்தப்-பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், இன்னும் பார்ப்பன உயர் ஜாதி ஆணவம் தகுதி- திறமை என்று பிதற்றிவருகிறது. இந்தியாவில் தமிழகத்தில்தான் திராவிட இயக்க உழைப்பின் பயனை இன்று கண்கூடாகக் காணும் வாய்ப்பைப் பெற்றுள்ளோம். திராவிட இயக்கம் என்ன செய்தது என்று கூவித் திரியும் துரோகிகளுக்கும் இந்த விவரங்கள் சமர்ப்பணம். 100 க்கு 90 மதிப்பெண்ணுக்கு மேல் எடுப்பது எப்படி என்பதில் போட்டி உருவாகிவருகிறது. அந்த அளவுக்கு கல்வி ஆர்வம் ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த சில ஆண்டுகளின் ஒப்பீடு இது.<br /><br />2008 மற்றும் 2011ஆ-ம் ஆண்டுகளை ஒப்பிடும் போது<br /><br />OC பிரிவினரின் cut off மதிப்பெண் 1.5% அதிகரித்துள்ளது.<br /><br />BC பிரிவினரின் cut off மதிப்பெண் 3.25%அதிகரித்துள்ளது.<br /><br />BCM பிரிவினரின் cut off மதிப்பெண் 3.5% அதிகரித்துள்ளது.<br /><br />MBC பிரிவினரின் cut off மதிப்பெண் 4.75%அதிகரித்துள்ளது.<br /><br />SC பிரிவினரின் cut offமதிப்பெண் 6.25% அதிகரித்துள்ளது.<br /><br />ST பிரிவினரின் cut off மதிப்பெண் 18% அதிகரித்துள்ளது.<br /><br />35% மார்க் வாங்கிய தலித் மாணவர்கள்.... தகுதி இல்லாத மாணவர்கள் எல்லாம் இடஒதுக்கீட்டில் வருகிறார்கள்.. திறமைக்கு மதிப்பில்லை என்றெல்லாம்.... இப்படிப் பேசுபவர்களை எல்லாம் பார்த்தா காறித் துப்பனும் போல இருக்கு - இந்த கட்_ஆஃப் லிஸ்ட் பாத்ததும்!!!<br /><br />(கட்_ஆஃப் என்றால் இந்த மதிப்-பெண்ணுக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே இடம்பெற முடியும் என்று பொருள். எடுத்துக்காட்டாக 2011 ஆம் ஆண்டை எடுத்துக் கொண்டால், ஷிசி பிரிவினரில் 192.25 மதிப்-பெண்களுக்கு மேல் எடுத்தவர்கள்தான் இடம்பெற முடியும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால், இடஒதுக்-கீட்டுக்கு எதிராகப் பேசும் மே(ல்)தாவிக் கும்பல் ஏதோ வெறும் பாஸ் மார்க் மட்டும் எடுத்தவரை எல்லாம் மருத்துவராக்கி உயிருடன் விளையாடுகிறார்கள் என்று பச்சையாகப் பொய் பேசி வருகின்றனர். அதை முறியடிக்கின்றன இந்தப் புள்ளி விவர உண்மைகள்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-50444574148791846742013-06-08T19:39:55.698+05:302013-06-08T19:39:55.698+05:30குழந்தைத் திருமணங்கள் : தமிழகத்தில்
பெண்ணுக்கு 18...குழந்தைத் திருமணங்கள் : தமிழகத்தில்<br /><br />பெண்ணுக்கு 18 வயதிலும் ஆணுக்கு 21 வயதிலும் திருமணம் செய்ய வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் உள்ள போதிலும் 12 வயதிலிருந்து 15 வயதிற்குள் குழந்தைத் திருமணங்கள் வினோதமான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன ஜவ்வாது மலைக்கு அருகிலுள்ள நம்மியம்பட்டு, ஜமுனாமாத்தூர் கிராமங்களில்.<br /><br />வயதுக்கு வந்த (12-15 வயது) பெண்கள் மணப்பெண் போல் அலங்காரம் செய்துகொண்டு நம்மியம்பட்டு கிராமத்தில் புதன்கிழமை நடைபெறும் சந்தையிலும், திங்கட்கிழமை ஜமுனாமாத்தூரில் நடைபெறும் சந்தையிலும் கூடுகிறார்கள். அப்போது 16லிருந்து 20 வயதுக்குள் இருக்கும் ஆண் பிள்ளைகள் வர, அவர்களுக்குள் பார்வைப் பரிமாற்றம் நடைபெறுகிறது. பின்பு, இருவரும் சேர்ந்து பையனின் வீட்டிற்குச் செல்கின்றனர். மூன்று அல்லது ஆறு மாதங்கள் வரை இருவரும் ஒன்றாக - கணவன் மனைவியாக வாழ்ந்துவிட்டு, விரும்பினால் திருமணம் செய்து கொள்வார்களாம். இல்லையென்றால், அந்தப் பெண் அம்மா வீட்டிற்கு வந்துவிடுவாளாம்.<br /><br />வாழ்க்கையைத் தொடர விரும்பினால், திருமணம் செய்து வைப்பதற்கும் விரும்பவில்லை என்றால் பிரித்து வைப்பதற்கும் 14 வயது நிரம்பிய தலைவர் செத்தியராஜ் இருக்கிறார்.<br /><br />தாத்தாவுக்குப் பின் பேரன் நாட்டாரா வர வேண்டும் என்று 9 வயதிலேயே பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு செத்தியராஜ்க்கும் நாட்டாரா பட்டம் கட்டியிருக்கிறார்கள். சுற்றியுள்ள 18 கிராமங்களில் உள்ள மக்களில் யார் திருமணம் செய்தாலும் இந்த நாட்டாரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி, இவர் கையால் தாலி எடுத்துக் கொடுத்தால் மட்டுமே மாப்பிள்ளை தாலி கட்டுவாராம். கணவன் மனைவிக்கிடையில் கருத்து வேறுபாடு என்று வந்தால் பிரித்து வைத்துவிடுவாராம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நஷ்டஈடாக 5,000 ரூபாய் வரை வாங்கிக் கொடுப்பார்களாம்.<br /><br />இதனால் கைக்குழந்தைகளுடன் போராடிக் கொண்டிருக்கும் பெண்களும் இளம் விதவை களும் அதிகம் காணப்படுகின்றனர். சிறு வயதி லேயே திருமணம் செய்து கொள்வதால் ஆண்கள் குடும்பப் பொறுப்பைச் சமாளிக்க முடியாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி மரணமடைவதாக பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் கூறியுள்ளார்.<br /><br />தமிழகத்தில் இது நடப்பது மிகவும் தலைக் குனிவானது அல்லவா? ஆண்டாண்டு கால வழக்கம் என்றும்,கடவுள் கட்டளை என்றும் சொல்லி இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதை நியாயப்படுத்த முடியாது.அதற்கு சட்டமும் இடம் கொடுக்காது. அரசும் அதிகாரிகளும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-68139704773567346142013-06-08T19:39:36.416+05:302013-06-08T19:39:36.416+05:30ஆன்மிகம் சொல்லும் அர்த்தமற்ற விளக்கம்
- அருப்ப...ஆன்மிகம் சொல்லும் அர்த்தமற்ற விளக்கம்<br /><br /> <br /><br />- அருப்புக்கோட்டை செந்தமிழ்க்கிழார்<br /><br />கோயிலில் பக்தர்கள் பொங்கல் வைக்கிறார்கள். கடவுள் சாப்பிடுவது இல்லை. ஏன் தெரியுமா? வீட்டில் பிள்ளைகள் பட்டினி கிடக்கும்போது எந்தத் தாயாவது சாப்பிடுவாளா? உலகில் கோடிக்கணக்கான பக்தர்கள் பட்டினி கிடக்கும்போது கடவுள் எப்படிச் சாப்பிடுவார்? - சுகி சிவம்<br /><br />புதிய விளக்கம்:<br /><br />சரியான சப்பைக்கட்டு வாதம் இது. உலகில் பலபேர் சாப்பிடாமல் கிடக்கும்போது எனக்கெதற்குப் பொங்கல் வைக்கிறீர்கள் என்றல்லவா கடவுள் மறுத்திருக்க வேண்டும். உண்மையில் கடவுள் வந்து உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்துவிட்டால் பக்தர்கள் கோயிலில் பொங்கல் வைக்கமாட்டார்கள். வீட்டிலேயே பொங்கல் வைத்து ருசித்துச் சாப்பிடுவார்கள்.<br /><br />கோயிலில் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செய்வதில் பல ரகசியங்கள் இருக்கின்றன. மற்ற நேர்த்திக்கடன் எல்லாம் கோவில் சொத்தாகிவிடும். பொங்கல் நேர்த்திக்கடன், முழுவதும் தங்கள் சொத்தாகி விடும். இதில் இன்னொரு ரகசியமும் இருக்கிறது. கோயிலில் சர்க்கரைப் பொங்கல்தான் வைக்கிறார்களே தவிர, தை மாதம் மாட்டுப் பொங்கல் அன்று வைப்பதுபோல உப்புப் பொங்கல் வைப்பதில்லை. அதனால், கோயிலில் சர்க்கரைப் பொங்கல் வைப்பவர்கள் அனைவருமே இனிப்பு விரும்பிகளாகத்தான் இருப்பார்கள்.<br /><br />வீட்டில் பிள்ளைகள் பட்டினி கிடந்தால் அம்மா சாப்பிடாமல் பட்டினி கிடப்பதுபோல் கடவுள் சர்க்கரைப் பொங்கல் சாப்பிட வராதது இருக்கட்டும். தாய் குழந்தைக்கு அன்போடு ஊட்டிவிடுகிறாளே, அதுபோல கடவுள் வந்து பக்தர்களுக்கு ஊட்டிவிடலாம் அல்லவா?<br /><br />குழந்தை அளைந்து கெடுத்த உணவைத் தாய் சாப்பிடுகிறாள். சில கோயில்களில் பொங்கல் பிரசாதத்தை எல்லாம் குப்பையில் கொட்டப் பார்த்திருக்கிறேன். அதையாவது சாப்பிட வரலாம் அல்லவா?<br /><br />கடவுள் என்பது ஒரு நம்பிக்கைதானே. அப்படி ஒரு சக்தி எங்கும் இல்லை. இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு ஆன்மீகவாதிகள் கதை அளப்பதெல்லாம் பக்தர்களை மூளைச் சலவை செய்வதற் காகவே தவிர, வேறு காரணம் இல்லை.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-91337093249248159262013-06-08T19:12:35.047+05:302013-06-08T19:12:35.047+05:30
மாக்கடலாய் மதுக்கூரில் எழுவீர்! எழுவீர்!!
மதுக்...<br />மாக்கடலாய் மதுக்கூரில் எழுவீர்! எழுவீர்!!<br /><br /><br />மதுக்கூர் என்றால் சுயமரியாதைச் சுடரொளி நாகை என்.பி.காளியப்பன் தான் நினைவிற்கு வருவார்.<br /><br />நாகை இரயில்வே பணிமனையில் பணியாற்றியதால் அவர் நாகை காளியப்பன் ஆனார்.<br /><br />அய்யாவின் நம்பிக்கைக்கு உரிய அந்தப் பெரியார் பெருந்தொண்டர் மலேசியாவுக்கு தந்தை பெரியார் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டு, குடிஅரசு இதழுக்குச் சந்தாக்களை அங்கு திரட்டினார்.<br /><br />அவருடைய நூற்றாண்டு விழாவை கழகம், மதுக்கூரில் சீரும் சிறப்புமாக நடத்தியது.<br /><br />அதே மதுக்கூரில் நாளை மறுநாள் (10.6.2013) வட்டார மாநாடு நடைபெற உள்ளது. தமிழர் தலைவர் தன்மான முரசறைய உள்ளார்.<br /><br />திண்டுக்கல் பொதுக் குழுவுக்குமுன் நடைபெறும் மாநாடு இது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.<br /><br />மாநாட்டில் இன்றைய பிரச்சினைகள் குறித்து கழகத்தின் ஆற்றல் வாய்ந்த சொற்பொழிவாளர்கள் கருத்து வாள்களைச் சுழற்ற இருக்கின்றனர்.<br /><br />ராஜபாளையம் மாநாட்டில் கழகம் அறிவித்த அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைபற்றியும், தமிழர்களின் உயிர்நாடிப் பிரச்சினையான காவிரி நீர் சிக்கல் குறித்தும், தமிழர்களின் நீண்டநாள் கனவுத் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம், மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று புராணம் புளுகும் ராமன் பெயரால் முடக்கப்படும் அநீதி குறித்தும், பற்றி எரியும் ஈழம் பற்றியும் கருத்துக்களம் சூடு பறக்க உள்ளது.<br /><br />தமிழ்நாட்டில் கழகப் பேரணி எங்கு நடந்தாலும் அதில் மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சிகளை அரங்கேற்றக் கூடிய அத்திவெட்டி தோழர்கள் அங்குதானே இருக்கிறார்கள்? அப்படி இருக்கும்பொழுது மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணிபற்றிக் கேட்கவா வேண்டும்?<br /><br />கழகம் என்றால் இளைஞர்களின் சங்கமம் என்பதை ராஜபாளையம், ராஜபாட்டையில் நடத்திக் காட்டியது.<br /><br />பட்டுக்கோட்டை மாவட்டத்தில் பம்பரமாகச் சுழன்று பணியாற்றும் இளைஞர் பட்டாளம் இருக்கவே இருக்கிறது. அவர்களின் கைத்திறனைக் காணப்போகிறோம்.<br /><br />தஞ்சை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, புதுக்கோட்டை தோழர்கள் குடும்பம் குடும்பமாக வருகை தர இருக்கிறார்கள்.<br /><br />அலை அலையாக மாநாடுகளை நடத்திக் கொண்டி ருக்கும் உயிர்ப்புள்ள இயக்கமாக (டுஎந றுசைந) திராவிடர் கழகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.<br /><br />தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான போராட்ட நாளை, போர்த் தலை வர் தமிழர் தலைவர் ராஜபாளை யம் மாநில இளைஞரணி மாநாட் டில் அறிவித்துவிட்டார். அறி வித்த அந்த சில மணித் துளி களுக்குள் ரத்தக் கையொப்ப மிட்டு ஆயிரக்கணக்கான இளை ஞர்கள் போராட்டக் களத்திலே குதிக்கப் பட்டியலைக் கொடுத்து விட்டனர். எந்த இயக்கத்தில் இப்படி நடக்கும் - எதிர்பார்க்கத் தான் முடியும்?<br /><br />மதுக்கூர் மாநாட்டிலே பெரும் எண்ணிக்கையில் பட்டியலைத் தர இருக்கிறார்கள்.<br /><br />தமிழர்கள் இன்னும் நாலாஞ் ஜாதிகளா? தந்தை பெரியாரின் சகாப்தத்திலும் இன்னும் நாம் சூத்திரர்களா?<br /><br />உங்களைச் சூத்திரர்களாக விட்டுவிட்டுச் சாகப் போகிறேனே என்று குரல் கொடுத்த தந்தை பெரியார் அவர்களின் கொள்கைக் குரல் இன்னும் நம் காதுகளில் ஒலிக்கவில்லையா?<br /><br />தந்தை பெரியார் நாட்டுக்கு விட்டுச்சென்ற சொத்துக் களிலேயே விலை மதிக்க முடியாத பெருஞ்செல்வம் நமது தலைவர் - தமிழர் தலைவராக வையத்தில் உயர்ந்து நிற்கும் ஆசிரியர் அவர்களின் காலத்திலே சூத்திர இழிவை ஒழிப்போம்! ஒழிப்போம்!!<br /><br />தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு என்று தந்தை பெரியார் பெயர் கொடுத்ததற்கு அதுதான் காரணம்.<br /><br />அந்த இழிவு என்பது தமிழன் வீதிகளிலே தமிழன் கட்டிய கோவில்களின் கருவறைக்குள்ளே ஆணவமாக அட்டாணிக்கால் போட்டு உட்கார்ந்துகொண்டு இருக்கிறது. இந்தப் போரிலே நாம் தோற்கக் கூடாது - தோற்கவும் மாட்டோம்.<br /><br />சட்டம் ஒரு பக்கம் சவாரி செய்யட்டும் - மக்கள் மத்தியிலே நாம் ஏற்றும் சூடுதான் - நாம் எழுப்பும் உணர்ச்சி எரிமலைதான் நம்மைச் சூழ்ந்துள்ள இன இழிவை - சூத்திர இழிவைச் சுட்டெரிக்க முடியும்.<br /><br />ஆங்காங்கே நாம் நடத்திக் கொண்டுவரும் மாநாடு கள், அதற்கான ஒத்திகைதான் - போடும் அஸ்திவாரம்தான்.<br /><br />மதுக்கூர் மாநாடு மகத்தானதாக அமையட்டும்!<br /><br />மான மீட்க, தமிழர்களே மதுக்கூர் நோக்கி மாக்கடலாய்ப் பொங்கி எழுவீர்! எழுவீர்!!<br /><br />- மின்சாரம் -<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-59735876874439514832013-06-08T19:11:47.397+05:302013-06-08T19:11:47.397+05:30ஜஸ்டிஸ் கட்சி அரசின் சாதனைகள்! (ஆவணக் குறிப்புகளில...ஜஸ்டிஸ் கட்சி அரசின் சாதனைகள்! (ஆவணக் குறிப்புகளிலிருந்து)<br /><br />விடுதலை பவள (75-ஆம் ஆண்டு வெளி யீட்டில், 90ஆம் பக்கத்தில் இருப்பது)<br /><br /> <br /><br />சில உறுதியான உண்மைகள்<br /><br />தாங்கள் எவ்வளவோ முயற்சி செய்து அர சாங்கத்தின் அதிகாரிகள் பார்வைக்கு வடார்க்காடு மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பணி யிடங்கள் எல்லாச் ஜாதியார்க்கும் அளிக்கப்பட வில்லை என்று தாங்கள் தங்கள் பத்திரிகையில் ஆசிரிய உரை எழுதியும் வேறு பல கட்டுரைகள் அவ்வப்போது வெளியாகி இருந்தும் நிலைமை மாறவில்லை என்பது குறித்துத் தாங்கள் பத்திரிகையில் எழுத இடம் அளிக்க வேண்டுகிறேன்.<br /><br />நிலைமை சீரடையவில்லை என்பது மட்டுமின்றி இன்னும் மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது என்பதை அடியிற் கண்டவற்றிலிருந்து அறியலாம்.<br /><br />1. மாவட்டத்தின் 5 டிவிஷன்களிலும், ஹூசூர் கருவூலத்திலும் ஆறு டெபுடி கலெக்டர்கள் பிராமணர்களாகவே இருக்கிறார்கள்.<br /><br />2. ஹூசூர் சிரஸ்தார் ஒரு பிராமணரே.<br /><br />3. மொத்தமுள்ள ஏழு தாசில்தார்களும் பிராமணர்களே.<br /><br />4. மொத்தமுள்ள பதினைந்து டெபுடி தாசில்தார்களில் பத்துப்பேர் பிராமணர்களே.<br /><br />5. மொத்தமுள்ள நான்கு தலைமைக் கணக்கர்களும் பிராமணர்களே.<br /><br />6. மொத்தமுள்ள 39 வருவாய் ஆய்வாளர்களில் (Revenue Inspector) 30 பேர் பிராமணர்களே.<br /><br />7. கோட்ட (டிவிஷனல்) அலுவலகங்களில் உள்ள அய்ந்து தலைமை எழுத்தர்களில் மூவர் பிராமணர்களே.<br /><br />8. செட்டில்மெண்ட் பணி பார்க்கும் அலுவ லர்களில் மொத்தமுள்ள அய்ந்து துணைத் தாசில்தார்களும் இருபது வருவாய் ஆய்வாளர்களில் பதினைந்து ஆய்வாளர்களும் பிராமணர்களே.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-31233413323930240032013-06-08T19:11:16.581+05:302013-06-08T19:11:16.581+05:30
நீதிக்கட்சி அரசு பாடுபட்டது யாருக்காக?
பேராசிரி...<br />நீதிக்கட்சி அரசு பாடுபட்டது யாருக்காக?<br /><br /><br />பேராசிரியர், முனைவர் பு.இரா சதுரை எம்.ஏ.பிஎச்.டி., அவர்களின் நூலில் (இரண்டாம் பதிப்பு 77 ஆம் பக்கத்தில் இருப்பது)<br />என்றும் போரே எதிலும் வெற்றியே!<br /><br />1950ஆம் ஆண்டு இந்திய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு பார்ப்பனர்கள் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இட ஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பு வாங்கினார்கள். தான் நிலைநாட்டிய வகுப்புரிமைக்கு அரசியல் சட்டத்தின் பேரால் தீங்கு வந்தபோது பெரியார் பொங்கி எழுந்தார்.<br /><br />எதற்கும் துணிந்து விட்டோம்;<br /><br />எதிரிகள் முட்டுக்கட்டை கண்டு கவலையுறோம்;<br /><br />நம் நாட்டின் வசதிகளில் நமக்குரிய பங்கைக் கேட்பதை யாரும் அநீதி என்று கூறவி யலாது;<br /><br />எனது அரசியல் வாழ்வில் ஏற்பட்ட முக்கிய திருப்பத்திற்கு இந்த வகுப்புப் பிரச்சினையே காரணம்;<br /><br />நமது உண்மைத் தகுதிக் கும், திறமைக்கும் எந்தப் பார்ப்பானும் ஈடாக மாட்டான் என்று கூறிப் போர் தொடுத் தார். ஊர்தோறும் வகுப்புரிமைப் போர் முரசொலித்துப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.<br /><br />விருதுநகர் செந்திற்குமார் நாடார் கல்லூரியில் 1950இல் இதற்கான போராட்டத்தை நடத்தியவர்களுள் இந்நூலாசிரியரும் ஒருவர்.<br /><br />- க.பழனிசாமி<br /><br /> தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-13555810420906447342013-06-08T19:10:35.671+05:302013-06-08T19:10:35.671+05:30டாக்டர் நாயுடுகாரின் வீர கர்ச்சனை
இந்து தேவதான மச...டாக்டர் நாயுடுகாரின் வீர கர்ச்சனை<br /><br />இந்து தேவதான மசோதவைப் பற்றி பார்ப்பனர்கள் தங்கள் சுயநலத்திற்காக எதிர்க்கக் கடமைப் பட்டிருந்தாலும் அதைத் தாங்களே எதிர்ப்பதற்குப் போதுமான தைரியமும் யோக்கியதையும் இல்லாததால், குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போல், தங்கள் கையில் சிக்கி நசுக்குண்டு கொண்டிருக்கும் காங்கிரசை இதற்காக உபயோகப்படுத்திக் கொண்டு காங்கிரசின் பெயரால் இந்துமத தர்ம பரிபாலன மசோதாவை சுயராஜ்யக் கட்சியார் எதிர்க்க வேண்டுமென்று ஒரு பொருளற்ற உத்திரவைப் போட்டுக் கொண்டு வரப்போகும் சட்டசபையில் பல பார்ப் பனரும் அவர்களது சிஷ்ய கோடிகளும் எதிர்க்கப் போகிறார்களாம். இதையறிந்து நமது டாக்டர் வரதராஜுலு நாயுடுகார் அவர்கள் வீர கர்ச்சனை முழங்கியுள்ளார்.<br /><br />அதாவது:-<br /><br />இப்பொழுது சட்டசபையில் வரப்போகும் சீர்திருத்தம் பெற்ற இந்துமத பரிபாலன மசோதா சம்பந்தமான விவாதம் அரசியல் கட்சிப் பிரச்சினை அல்ல. ஸ்ரீமான் ஆர்.கே.ஷண்முகம் செட்டியார் உள்பட காங்கிரஸ் காரர்கள் இம்மசோதாவை ஆதரிக்கிறார்கள். மசோதாவை சுயராஜ்யக் கட்சியார் சட்டசபைக்குப் போய் எதிர்ப்பது இம்மாகாணத்தில் காங்கிரசுக்கே அழிவு தேடுவதாகும்.<br /><br />ஆதலால் சட்டசபையிலுள்ள சுயராஜ்யக் கட்சி சட்டசபை அங்கத்தவர்கள் கண்டிப்பாய் இது விஷயத்தில் நடுநிலைமை வகிக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகிறேன். அரசியலில் வேற்றுமை இருந்தாலும் சென்னை அரசாங்கத்திற்குக்கூட இது சம்பந்தமாய் நான் ஒரு தந்தி அனுப்பியிருக்கிறேன்.<br /><br />அதாவது, வெளியிடப்பட்டிருக்கும் இந்துமத பரிபாலன மசோதாவை எல்லா பார்ப்பனரல்லாதாரும் முழு மனதுடன் ஆதரிக்கிறார்கள். மசோதாவுக்கு விரோதமாய் செய்யப்படும் கிளர்ச்சியானது சுயநலத்தை உத்தேசித்து சில சுயநலக்காரரால் நடத்தப்படும் பொய்க் கிளர்ச்சியாகும். இது விஷயமாய் அரசாங்கத்தாரோடு ஒத்துழைக்கவும் தயாராயிருக்கிறேன் என்று பார்ப்ப னருக்கும் அரசாங்கத்திற்கும் தந்தி கொடுத்திருக்கிறார்.<br /><br />ஆனால் இதற்கு மேல் ஸ்ரீமான் ஆர்.கே.ஷண்முகம் செட்டியார் என்ன செய்யப் போகிறாரோ தெரியவில்லை. எப்படியிருந்தாலும் இதை நாம் முழு மனதோடு போற்றுவதோடு மனப்பூர்வமாய் ஆதரிக்கவும் செய் கிறோம். இப்பார்ப்பனர்களின் கொடுமையானது அதிலிருந்து தப்புவதற்குத் தீவிர தேசியவாதிகளை ஜஸ்டிஸ் கட்சியாரோடு சேரும்படி செய்வது மாத்திரமல்லாமல் சர்க்காரோடும் ஒத்துழைக்கச் செய்கிறது.<br /><br />இனியும் நமது பார்ப்பனர்களின் சூழ்ச்சியும் கொடுமையும் வெளியாக வெளியாக இன்னமும் என்னென்ன செய்யச் சொல்லுமோவென்பதை இப்பொழுது நம்மால் நிர்ணயிக்க முடியவில்லை. இயற்கை தேவிதான் அறிவாள்.<br /><br />- குடிஅரசு - கட்டுரை - 15.08.1926தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com