tag:blogger.com,1999:blog-1474608369333206681.post8189201325818298415..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: ஈழத் தமிழர் பிரச்சினயில் காங்கிரஸ் மட்டும்தான் துரோகம் செய்கிறதா?தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-5364085334077123572013-03-28T06:49:34.311+05:302013-03-28T06:49:34.311+05:30
பரிதாபமே!
இந்து மத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எத...<br />பரிதாபமே!<br /><br />இந்து மத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பனத் துவேசம் காரணமல்ல. மக்கள்மீதுள்ள பரிதாபமே காரணம். - (குடிஅரசு, 8.9.1940)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-71807050396813951582013-03-28T06:49:02.326+05:302013-03-28T06:49:02.326+05:30
கச்சத்தீவுப் பிரச்சினை
கச்சத்தீவை மீட்கவேண்டும்...<br />கச்சத்தீவுப் பிரச்சினை<br /><br /><br />கச்சத்தீவை மீட்கவேண்டும் என்ற ஒரு வேண்டு கோளைத் தமிழக முதலமைச்சர் நேற்று சட்டப் பேரவையில் அறிவித்தார். இல்லையேல் உச்சநீதி மன்ற வழக்கின்மூலம் அதனைச் சாதிப்போம் என்றும் கூறியுள்ளார்.<br /><br />இந்தப் பிரச்சினையைப்பற்றிக் கருத்துத் தெரிவித்தபோது தேவையில்லாமல் தி.மு.க.வையும், அதன் தலைவரையும் குறைகூறியது தேவையானது தானா? அப்படி சொன்ன தகவல்களும் சரியானவை தானா? என்பதைச் சிந்திக்கவேண்டும்.<br /><br />1974 இல் கச்சத்தீவை இலங்கைக்கு இந்திய அரசு தாரை வார்த்தபோது, அன்றைய சட்ட அமைச்சர் மாதவன் (தி.மு.க.) அவர்கள் டில்லிக்கு அனுப்பப்பட்டு, நேரிலும், எழுத்து வடிவத்திலும் எதிர்ப்புத் தெரி விக்கப்பட்டதெல்லாம் ஆவண ரீதியான சான்றாகும்.<br /><br />1974 இல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில்கூட தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமை உறுதி செய்யப்பட்டு இருந்தது.<br /><br />நெருக்கடி நிலை காலத்தில் - 1976 இல் அந்த உரிமை பறிக்கப்பட்டது என்பதுதான் உண்மை. 1976 முதல் 1989 வரை அ.இ.அ.தி.மு.க.தானே ஆட்சியில் இருந்தது -அதுவும் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டுதானே இருந்தது. அந்தக் காலகட்டத்தில் தம் செல் வாக்கைப் பயன்படுத்தி கச்சத்தீவை மீட்டிருக்க லாமே; செல்வி ஜெயலலிதா மூன்றாவது முறை முதலமைச்சர் ஆகியுள்ளாரே - இந்தப் பிரச்சினை யில் தமிழக மீனவர்களுக்கு மீன் பிடி உரிமையைப் பெற்றுத் தந்திருக்கவேண்டியதுதானே!<br /><br />முதன் முதலில் (1991 இல்) இவர் முதலமைச்சராக வந்த நிலையில், ஆகஸ்ட் 15 அன்று கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றியபோது கச்சத்தீவை மீட்பேன்! என்று சூளுரைத்தாரே - அதற்குப் பின் எத்தனைத் தடவை தேசியக் கொடியை ஏற்றி யிருப்பார்? 22 ஆண்டுகளுக்குமுன் கொடுத்த அந்த முழக்கம் என்ன ஆனது என்ற கேள்வி எழாதா?<br /><br />2008 இல் எதிர்க்கட்சியாக இருந்தபோது அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் கச்சத்தீவை மீட்பதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார்.<br /><br />அதற்கு 11 ஆண்டுகளுக்கு முன்பே 1997 ஆம் ஆண்டிலேயே திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளார் (29.7.1997).<br /><br />அதற்கு இரு நாள்களுக்கு முன்பாக, திராவிடர் கழகத்தின் சார்பில் இராமேசுவரத்தில் நடத்தப்பட்ட தமிழக மீனவர் பாதுகாப்பு - கச்சத்தீவு மீட்பு மாநாட்டில் அறிவித்தபடி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு அது.<br /><br />நீதியரசர் ஜெயசிம்மபாபு அவர்களால் விசா ரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, எதிர்மனுதார ருக்குத் தாக்கீது அனுப்பப்பட்டது.<br /><br />ரிட் மனுவில் தெளிவான சட்டப் பிரிவு சுட்டிக் காட்டப்பட்டது.<br /><br />அரசமைப்புச் சட்டப் பிரிவு 3(சி) என்ன கூறுகிறது?<br /><br />எந்த ஒரு மாநிலத்தின் எல்லைகள் சுருக்கப்பட வேண்டுமானாலும், குடியரசுத் தலைவரின் பரிந் துரைப்படி நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படவேண்டும் என்று இந்திய அரசமைப்புப் பிரிவு 3 இல் இணைப்புப் பகுதியில் குறிப்பிடப்பட் டுள்ளது.<br /><br />நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப் படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட மாநில சட்டப் பேரவையின் அனுமதியையும் பெற்றிருக்கவேண்டும்.<br /><br />சட்ட ரீதியான இந்த வழிமுறைகள் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்த பிரச்சினையில் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதும், தமிழர் தலைவர் தாக்கல் செய்த ரிட் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.<br /><br />தமிழ்நாட்டு மீனவர்களின் உயிருக்கும், உடைமைக்கும் முழுமையான பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் கச்சத்தீவு இந்தியாவுடன் இணைந்த ஒரு பகுதி என்ற அடிப்படையில் கச்சத்தீவின் உள்ளும், புறமும் உள்ளிட்ட இந்தியக் கடல் எல்லைக் குள் மீன் பிடிக்கும் வகையிலும் மாண்புமிகு நீதி மன்றம் உடனடியாக இடைக்கால ஆணை பிறப்பிக் குமாறும் அந்த ரிட் மனுவில் கேட்டுக்கொள் ளப்பட்டது.<br /><br />16 ஆண்டுகாலமாக சென்னை உயர்நீதி மன்றத்தில் இது நிலுவையில் உள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் இந்தக் காலகட்டத்தில் இந்த வழக்கின்மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!27-3-2013தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-82606150046221707482013-03-27T06:26:45.351+05:302013-03-27T06:26:45.351+05:30
சென்னை சரவணா ஸ்டோர்சின் சிங்கள விளம்பரம்!
சென்ன...<br />சென்னை சரவணா ஸ்டோர்சின் சிங்கள விளம்பரம்!<br /><br /><br />சென்னை, மார்ச் 26- இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும் என்று தமிழக முதல்வர் வலி யுறுத்தி வரும் நிலையில் சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர் நிறு வனம் சிங்களத்தில் துண்டறிக்கை அச்சடித்து விநியோகித்து வருகிறது. இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சரவணா ஸ்டோர் நிறுவனத்திற்கு சென்னை தியாகராயர் நகர் ரங்கநாதன் தெருவிலும், புரசைவாக்கத்திலும் கடைகள் உள்ளன. தமிழர்களுக்கு எதிரான பிரச்சினையில் சரவணா ஸ்டோர் சிக்கியுள்ளது.<br /><br />இந்தக் கடைகளில் பலவகையான சிங்களப் பொருள்களை விற்பதோடு இப்போது சிங்களவர்களுக்கு சந்தை விரிக்கிறது என்ற குற்றச்சாற்று எழுந்துள்ளது. இந்தக் கடைக்கு ஏராளமான சிங்களவர்கள் பொருள்களை வாங்க வருகிறார்கள். அப்படி வரும் சிங்கள வாடிக்கையாளர்களுக்காக இப்போது சரவணா ஸ்டோர்ஸ் நிருவாகம் அங்காடி பற்றிய தகவல் துண்டறிக்கையை சிங்களத்தில் அச்சடித்து மக்களிடம் கொடுக்கிறது.<br /><br />கடையின் பெயர் முதற்கொண்டு கடைகளில் கிடைக்கும் பொருள்கள் மற்றும் எந்தத் தளத்தில் அவை கிடைக்கும் போன்ற தகவல்களையும் சிங்கள மொழியிலேயே அச்சடித்து தமிழர்களின் உணர்வுகளைச் சீண்டி வருகிறது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-87450987437272084832013-03-27T06:25:23.980+05:302013-03-27T06:25:23.980+05:30
தமிழினப் பொறுக்கிகளை அழித்து முடிக்க பார்ப்பனப் ப...<br />தமிழினப் பொறுக்கிகளை அழித்து முடிக்க பார்ப்பனப் படையைத் திரட்டுகிறாராம் பார்ப்பன சு.சாமி<br /><br />துரோணாச்சாரி என்ற பார்ப்பனர் யுத்தத்திற்கு அர்ஜுனனைத் தயார் செய்ததுபோல தமிழர்களைத் தீர்த்துக் கட்ட பார்ப்பனப் படை ஒன்றைத் தயாரிக்கப் போகிறாராம்! தமிழர்கள் யார் தெரியுமா? பொறுக்கிகளாம்- சொல்லுவது யார்? ஒரு பூணூல் திருமேனி!<br /><br />இது வன்முறை தூண்டுதல் அல்லவா? தமிழ்நாடு அரசு அடக்கப் போகிறதா? அல்லது தமிழர்கள் அடக்க வேண்டுமா? (வன்முறையால் அல்ல!)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-84019551238496756472013-03-27T06:19:40.389+05:302013-03-27T06:19:40.389+05:30
போகாதே!
அட முட்டாள்களா! எதற்காகக் கோயிலுக்குப் ...<br />போகாதே!<br /><br /><br />அட முட்டாள்களா! எதற்காகக் கோயிலுக்குப் போகிறீர்கள்? அங்கே உன்னைப் பார்ப்பான் வெளியே நில், உள்ளே வரக்கூடாது என்கின்றானே! உனக்குமானமில்லையா?ரோசமில்லையா? அங்கு இனியாவது போகாதே!<br />விடுதலை, 20.11.1969தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-75313706758987495442013-03-26T06:44:09.248+05:302013-03-26T06:44:09.248+05:30
ஜெகத் குரு என்று விளம்பரப்படுத்தப்பட்ட சங்கராச் ச...<br />ஜெகத் குரு என்று விளம்பரப்படுத்தப்பட்ட சங்கராச் சாரியார்கள் கொலைக் குற்றத்தில் சிக்கி சிறைச்சாலைக்குச் சென்று வந்து விட்டார்கள். இவர்களின் காவி வேடம் என்பது இவர்கள் செய்யும் காலித்தனங்களுக்கு, மோசடிகளுக்கு மூடு திரையாக உள்ளது என்பதுதான் உண்மை.<br /><br />அதேபோல சோதிடம் என்பதும் இந்த நாட்டைப் பீடித்த கேடாகும். மக்களைச் சோம்பேறித்தனத்தில் ஆழ்த்தும் மூடத்தனத்தின் மொத்த உருவமாகும்.<br /><br />பூமியிலிருந்து எத்தனையோ லட்சம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் நட்சத்திரங்களும், கோள்களும் இங்குள்ள மனிதனின் வாழ்வை நிர்ணயிக்கின்றன என்பதெல்லாம் எத்தகைய பைத்தியக்காரத்தனம்?<br /><br />சோதிடத்துக்கும், அறிவியலுக்கும் ஏதாவது சம்பந்த முண்டா? கோள்களின் பட்டியலில் நட்சத்திரமாகிய சூரியனை இணைத்து சோதிடம் கூறிக் கொண்டு திரிகிறார்களே - இதைவிட நகைச்சுவை வேறு ஏதேனும் உண்டா?<br /><br />பூமியின் துணைக் கோளான சந்திரனைக் கோளின் பட்டியலில் சேர்த்து பூமியைக் கை விட்டுவிட்ட இந்தப் புத்திசாலிகள்பற்றி எப்படி மதிப்பிடுவது!<br /><br />உலகில் ஒரே ஒரு இந்து ராஜ்ஜியம் நடைபெற்ற நேபாளத்தில் இந்து மன்னர் குடும்பமே சோதிட நம்பிக்கை யால் படுகொலை செய்யப்பட்டதை எல்லாம் பார்த்த பிறகும் கூட சோதிடத்தை அனுமதிக்கலாமா?<br /><br />பிஜேபி மத்தியில் ஆட்சியில் இருந்த போது சோதி டத்தைப் பல்கலைக் கழகப் பாடத் திட்டத்தில் சேர்த்தது. தமிழ்நாட்டில் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் சோதிடத்தைப் பாடமாக வைக்க முனைந்ததும் (திராவிடர் கழகத்தின் போராட்டத்தால் அது தடுக்கப்பட்டது) நாம் இன்னும் காட்டு விலங்காண்டி காலத்தில் வாழ்கிறோம் என்பதற்கான அடையாளம் அல்லவா!<br /><br />இந்திய அரசமைப்புச் சட்டத்தில் (51(ய)) மக்களிடத்தில் விஞ்ஞான மனப்பான்மை ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதே. அதன்படி சோதிடம், சாமியார் குப்பை களை அறிவியல் கருவியான தொலைக்காட்சிகளில், ஊடகங்களில் வெளியிடலாமா?<br />திரிபுரா முதல்வர் மாணிக்சர்க்காரை வெகுவாகப் பாராட்டுகிறோம். பல எதிர்ப்புகள் வரும், விமர்சனங்கள் வெடிக்கும்; அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் உறுதியாக நின்று முறியடித்து இந்தியாவுக்கே பகுத்தறிவு வெளிச்சம் கொடுத்த பெருமையை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். இதற்குப் பிறகாவது மத்திய - மாநில ஆட்சிகள் அறிவுக் கொள்முதல் பெறட்டும்! செயல்படட்டும்!!தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-7463810873282685032013-03-26T06:44:04.908+05:302013-03-26T06:44:04.908+05:30திரிபுரா வழிகாட்டுகிறது!
ஜோசியர்களும், சாமியார்க...திரிபுரா வழிகாட்டுகிறது!<br /><br /><br />ஜோசியர்களும், சாமியார்களும் மக்களை ஏமாற்று கின்றனர். எனவே அவர்களின் நிகழ்ச்சிகளை தொலைக் காட்சியில் ஒளிபரப்ப தடை விதிக்கலாம் என திரிபுரா அரசு முடிவு செய்துள்ளது.<br /><br />திரிபுரா மாநிலத்தில் சில ஜோசியர்கள் தொலைக் காட்சியில் விளம்பர நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இதே போல சாமியார்கள் என்றும் மந்திரவாதிகள் என்றும் தங்களை அழைத்துக் கொள்ளும் சிலரும் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்துகின்றனர்.<br /><br />இந்த நிகழ்ச்சிகளின் மூலம் இவர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர் என்று திரிபுரா அரசு கூறியுள்ளது.<br /><br />சில மாதங்களுக்கு முன்பு அகர்தலாவில் உள்ள ஒரு வீட்டில் ஒரு பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. குடும்பத்தின் நலனுக்காக சில சித்து வேலைகளை செய்ய வேண்டும் என்று கூறி பாபா கமால் ஜேடி என்ற மந்திரவாதியை அழைத்து வந்தனர். ஆனால் இந்த நபர் அந்த வீட்டிலிருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை எடுத்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார்.<br /><br />சாமியார்களும், மந்திரவாதிகளும், ஜோசியர்களும் கேபிள் டி.வி. நடத்துபவர்களிடம் நிகழ்ச்சி நடத்த உரிமை பெறுகின்றனர்.<br /><br />இவர்கள் நகரில் உள்ள ஓட்டல்களில் அறை எடுத்து தங்கிக் கொள்கின்றனர். தொலைக்காட்சி நிகழ்ச்சி களில் இவர்கள் தங்களுக்கு தெய்வீக சக்தி இருப்பதாக விளம்பரம் செய்கிறார்கள். சில மந்திர, தந்திர நிகழ்ச் சிகளை தொலைக்காட்சியில் செய்து காட்டுகின்றனர். தொலைபேசியில் கேள்வி கேட்டு இறுதியில் தங்களை நேரில் சந்திக்கும்படி சாமியார்களும், ஜோசியர்களும், மந்திரவாதிகளும் அழைப்பு விடுக்கின்றனர்.<br /><br />இவர்களால் பொது மக்கள் ஏமாற்றப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. எனவே இத்தகைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க திரிபுரா அரசு முடிவு செய்துள்ளது.<br /><br />சட்டமன்ற தேர்தல் போன்ற சில முக்கிய பிரச்சினை களால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றும் தற்போது சட்டமன்ற தேர்தல் முடிந்து விட்டதால் இத் தகைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேற்கு திரிபுரா மாவட்ட மாஜிஸ்திரேட் கிரண்கிட்டி கூறியுள்ளார்.<br /><br />இந்தத் தகவல் இந்தியா முழுமையும் நல்லதோர் சிந்தனை - பகுத்தறிவு மனப்பான்மை முகிழ்த்துக் கிளம்புவதற்கு வித்திடும் என்று எதிர் பார்க்கிறோம். இதற்குக் காரணமாக இருக்கக்கூடிய திரிபுரா மாநில அரசையும் முதல் அமைச்சரையும் வெகுவாகப் பாராட்டுகிறோம்.<br /><br />சாமியார்கள்பற்றி ஒவ்வொரு நாளும் வெளிவரும் தகவல்கள் அவர்கள் மோசக்காரர்கள். காமக் கொடூரர்கள் என்பதை சந்தேகமற்ற முறையில் நிரூபித்துக் கொண் டுள்ளன.<br /><br />விளம்பரம் பெற்ற சந்திரா சாமியார் போன்றவர்கள் அரசியல்வாதிகளின் - அதிகாரப் பீடத்தில் உள்ளவர்களின் ஆலோசகர்களாக இருந்து ஆயுத பேர ஊழல் வரைக்கும் சம்பந்தப்பட்டவர்களாக இருந்து வருகின்றனர் என்பது கண்கூடு!<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-70449467944774041422013-03-26T06:41:51.900+05:302013-03-26T06:41:51.900+05:30இசை இயக்குநர் இளையராஜா
எனக்கு மிகவும் நம்பிக்கையா...இசை இயக்குநர் இளையராஜா<br /><br />எனக்கு மிகவும் நம்பிக்கையான நண்பர் என்று நான் நம்பியிருந்த ஒருவரிடம் என்னுடைய வியாபாரம் சம்பந்தமான விஷயங்கள் அனைத் தையும் ஒப்படைத்திருந்தேன். ஆனால், அவரோ என்னை மோசம் செய்துவிட்டு ஒரு கணிசமான தொகையுடன் ஓடித் தலைமறைவாகி விட்டார். நல்லவனாய் நடித்து இதுபோல் மோசம் செய்யலாமா? தெய்வம் இதைக் கேட்காதா?<br /><br />- ராமசாமி, கோபிசெட்டிபாளையம்<br /><br />இளையராஜா பதில்: இதை நாம் எடுத்துக் கொள்ளும் விதம்தான் நம்மை பாதிக்காமல் இருக்க வைக்கும். பகவான் சிறீ ரமண மகரிஷியிடம் - அவருடன் அருகில் இருந்து நாட்களைக் கழிக்க முடிவு செய்த ஒரு அயல் நாட்டுப் பெண் மணி, பகவானிடம் புகார் செய்தாள், பாவம் ஏழைப் பையனாய் இருக் கிறானே என்று என்னுடனேயே தங்க வைத்து எனக்கு ஏவல் வேலை செய்ய வைத்திருந்த பையன் என் நகையைத் திருடிக் கொண்டு ஓடி விட்டான் என்று.<br /><br />பகவான் சொன்னார். பார்த் தாயா? நீ எப்போதோ போட்டுக் கொள்வதற்காக வாங்கி வைத்த நகையே - உன்னுடன் எப்போதும் துணைக்கு இருந்த பையனை நீ பிரியக் காரணமாகி விட்டது? என்று; ஆக எல்லாமே நாம் எடுத்துக் கொள்ளும் விதத்தில்தான இருக் கிறது! என்கிறார் இளையராஜா. (குமுதம் 27.3.2013)<br /><br />அர்த்தம் கொழுத்த இந்து மதத்தில் தத்துவார்த்தங்களை இப்படி எல்லாம் இசை இயக்குநர் இளையராசா தொடர்ந்து குமுதத் திலே உதிர்த்துத் தள்ளுகிறார்.<br /><br />இருந்தும் இருந்தும் ரமண ரிஷியைத் துணைக் கழைத்தாரே - அதுதான் படு தமாஷ்!<br />தம்முடன் தங்கி இருந்த சீடர் தன் நகைகளை திருடிக் கொண்டு ஓடியதற்கு ரமண ரிஷியையா எடுத் துக் காட்டுக்காகக் கூற வேண்டும்? - அவர் என்ன ஆசா பாசமற்றவரா? - பொருள்கள்மீதான பற்றினைத் துறந்தவரா?<br /><br />ரிஷி வேடம் போட்டு ஏராளமான சொத்துக்களைக் குவித்த அந்த ஆசாமி, அத்தனை திரண்ட சொத் துகளையும், தன் சகோதரர் மகனுக் குத்தானே எழுதி வைத்தார்.<br /><br />வழக்குத் தொடுக்கப்பட்டதே - துறவிக்கு அண்ணன் தம்பி பாச மெல்லாம் இருக்கலாமா? என்று நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது நான் எப்பொழுது துறவி யானேன்? அதெல்லாம் ஒரு மண் ணாங்கட்டியும் கிடையாது! என்று நீதிமன்றத்தில் சொல்லவில்லையா ரமண ரிஷி?<br /><br />(நோய்களிலிருந்து பக்தர்களைக் காப்பாற்ற அருள்பாலித்த அந்த ரமணரிஷி எந்த நோய் கண்டு இறந் தார் என்றெல்லாம் சொல்லுவது உகந்ததல்ல என்பதால் அதனைப் புறந்தள்ளுகிறோம்).தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-8869974826111590762013-03-26T06:41:16.582+05:302013-03-26T06:41:16.582+05:30புதிய போப்
வாடிகன் நகரத்தில் அமளி முடிந்து விட்டத...புதிய போப்<br /><br />வாடிகன் நகரத்தில் அமளி முடிந்து விட்டது - மூப்பின் காரண மாக பெனெடிக்ட் தாமாக முன் வந்து பதவி விலகி வழி விட்டார். அடுத்த போப் யார் என்பது உலக அரங்கில் கேள்வியாக எழுந்தது. ஜனநாயக அடிப்படையில் போப் தேர்வு என்பது கூட ஒரு சிறப்புதான் (அது என்ன சங்கராச்சாரி மடமா?)<br /><br />புதிய போப் ஜார்ஜ் மேரியோ பெர் கோக்லியோ (இப்பொழுது பிரான் சிஸ் என்று பெயர் மாற்றம்!) எளிமையானவர், பேருந்தில் பயணம் செய்யக் கூடியவர் என்பதெல்லாம் வித்தியாசமானதுதான்.<br /><br />பக்தர்களுக்கு இவர் வாழ்த்துச் சொல்லுவதற்குப் பதிலாக பக்தர்கள் இவருக்கு வாழ்த்துச் சொல்லியிருக் கிறார்கள்.<br /><br />மற்றவர்களைவிட போப் உயர் வானவர் என்பதற்காக ஸ்டூல்மீது போப் நிறுத்தப்படுவது வழக்கமாம் - அதையும்கூட இவர் தவிர்த்து இருக்கிறார்.<br /><br />இந்தப் பக்கம் கொஞ்சம் கவனத் தைத் திருப்புக! எங்கே உட்கார்ந் திருந்தாலும் சங்கராச்சாரியார் உயரமான மேடையில்தான் பீடத்தில் உட்கார்ந்திருப்பார் - காரணம் ஜகத் குருவாம்.<br /><br />சென்னையில் 1983இல் இந்திய சமய கலை விழாவை காஞ்சி சங்கராச்சாரியார் நடத்திய போது முதல் அமைச்சர் எம்.ஜி.ஆரும் அவ்விழாவில் பங்கு கொண்டார். அப்பொழுதுகூட சங்கராச்சாரி யாருக்கு உயரமான மேடை!<br /><br />முதல் அமைச்சருக்கு சால்வை யைக்கூட அவர் கையால் போர்த் திடவில்லை தம் சிஷ்யர் ஒருவரிடம் கொடுத்துதான் போர்த்தச் செய்தார்.<br /><br />போப்பையும் - சங்கராச்சாரி யாரையும் ஒப்பிட்டுப் பாருங்கள்!தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-74806667996902575882013-03-26T06:40:27.594+05:302013-03-26T06:40:27.594+05:30நெஞ்சுக்கு நஞ்சு
கேள்வி: திருநீறு, சந்தனம், குங்க...நெஞ்சுக்கு நஞ்சு<br /><br />கேள்வி: திருநீறு, சந்தனம், குங்குமம் திவ்யமா மணக்குது உங்க நெத்தி யில. நீங்க எப்படி அல்லா.. அல்லானு பாட்டுப் பாடினீங்க?<br /><br />எம்.எஸ்.வி: அல்லா, இயேசு, கிருஷ்ணர் எல்லாருமே எப்போதும் நல்லவங் களுக்குப் பக்கத்துலேயே இருப் பாங்க. முகமது பின் துக்ளக் படத்துல அல்லா.. அல்லா பாட்டை நான் நாகூர் ஹனீபாவைப் பாட வைக்கணுங்கிற முடிவோடதான் இருந்தேன். அவர் குரல்தான் அந்தப் பாட்டுக்குப் பொருத்தமான குரல்னு நிச்சயமா நம்பினேன்.<br /><br />ஆனா, சோ அந்தப் பாட்டை நான் தான் பாடனும்னு ஒரே பிடிவாதமா இருந்தாரு. நான் முடியவே முடியா துன்னு சொல்லிட்டேன். சரி... யாரையெல்லாம் நீ பாட வைக் கணும்னு விரும்புறியோ அவங்க பேரோட, உன் பேரையும் சீட்டு எழுதிப் போட்டுக் குலுக்கி எடுப் போம்னார் சோ. அது மாதிரியே குலுக்கிப் போட்டு எடுத்தா, என் பேர் எழுதுன சீட்டுதான் வந்துச்சு. சரி.. ஆண்டவன் சித்தம் அதுதான் போலனு நானும் பாடினேன். அந்தப் பாட்டு வெளியாகி பட்டிதொட்டிலாம் பிரபலமான பிறகு, சோ ஒரு உண் மையைச் சொன்னார் அது. சீட்டு எழுதுனப்போ எல்லா சீட்டு லயுமே என் பேரைத்தான் எழுதி வெச்சிருக் கார் அந்த மனுஷன்!<br /><br />இசை இயக்குநர் எம்.எஸ். விசுவநாதன் ஆனந்தவிகடன் இதழுக்கு (27.2.2013) அளித்த பேட்டி தான் மேலே கண்டது.<br /><br />மேம்போக்காக பார்த்தால் இதில் மறைந்திருக்கும் நாகப் பாம்பு என்ன என்று தெரியாது.<br /><br />அந்தப் பாடல் நாகூர் அனிபா வால் பாடப்பட்டால் சிறப்பாக இருக் கும் என்று இசை இயக்குநர் எம்.எஸ்.வி. நினைக்கிறார். விட்டு விட வேண்டியதுதானே? எம்.எஸ்.வி.யைவிட இசை மேதையா திருவாளர் சோ ராமசாமி?<br /><br />நாகூர் அனிபா முசுலிம் ஆயிற்றே - அவரைக் கொண்டு பாடச் செய்தால் எப்படி என்கிற இந்துத் துவா விஷப்பூனை தான் சோ மன தின் ஆழத்தில்.<br /><br />யார் பாடுவது என்ற முடிவைச் செய்ய சீட்டுக் குலுக்கிப் போடும் தந்திரம் கையாளப்பட்டு, எல்லா சீட்டிலும் எம்.எஸ்.வி. பெயரையே எழுதி வைத்திருந்தார் சோ என்றால் இவர்களின் அறிவு நாணயத்தையும், மோசடியையும் நம் தமிழர்கள் என் றைக்கு உணரப் போகிறார்களோ!தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-37096052658092996392013-03-26T06:39:38.170+05:302013-03-26T06:39:38.170+05:30
செய்தியும் சிந்தனையும்
சி.பி.அய்.
செய்தி: மாணவ...<br />செய்தியும் சிந்தனையும்<br /><br /><br />சி.பி.அய்.<br /><br />செய்தி: மாணவர்களாகிய நீங்கள் நடத்திய போராட்டம்தான் தி.மு.க.வை மத்திய அரசிலிருந்து வெளியேறச் செய்தது. 2009இல் வெளியேறியிருந்தால் இலங்கைத் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள்; அவர்களைப் பாதுகாத்திருக்க முடியும். அவ்வளவு சீர்குலைவு ஏற்பட்டிருக்காது. - இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணு<br /><br />சிந்தனை: 2009 மக்களவைத் தேர்தலில் ஈழப் பிரச்சினையை முன்வைக்க மாட்டோம் என்று சொன்னது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. இப்பொழுதோ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.அய்.டி.யூ.சி.யின் பொதுச் செயலாளர் தோழர் குருதாஸ் தாஸ் குப்தா அவர்கள், மக்களவைத் தலைவர் மீராகுமார் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திருவாய் மலர்ந்தருளிய கருத்து என்ன தெரியுமா?<br /><br />இலங்கைப் பிரச்சினை - மத்திய அரசுக்கும் தி.மு.க.வுக்குமிடையே உள்ள பிரச்சினை - இது குறித்தெல்லாம் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கூடாது என்று கறாராகச் சொல்லி விட்டாரே!<br /><br />நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினை விவாதத் துக்கு எடுத்துக் கொண்ட போதே இவ்வாறு சொல்லி நாடாளுமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடிக்காமல் காப்பாற்றியிருக்கலாமே?<br /><br />ஆக, கம்யூனிஸ்டு பார்வையில் இலங்கைப் பிரச்சினை ஒட்டு மொத்தமான நாட்டுப் பிரச்சினை இல்லை, அப்படித்தானே? இனி மேலாவது தோழர் தா.பா. நீட்டி முழக்க மாட்டார் என்று நம்புவோமாக! ஈழத் தமிழர் பிரச்சினையை ஏகடியம் செய்யும் கட்சியினர் தி.மு.க.வையே சதா குற்றம் சுமத்துவது தான் வேடிக்கை - விநோதம்!தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-13551260107226642052013-03-26T06:36:48.352+05:302013-03-26T06:36:48.352+05:30
கடவுள்கள் காப்பாற்றவில்லையே! பெண்களிடம் செயின் வழ...<br />கடவுள்கள் காப்பாற்றவில்லையே! பெண்களிடம் செயின் வழிப்பறி திருட்டு<br /><br /><br />ஆவடி, மார்ச் 24- ஆவடி காந்தி நகர் வேதவிநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அரவிந்தன். இவரது மனைவி ராதா (53). நேற்று இரவு ராதா தனது மாமியார் அம்முகுட்டியுடன் அங்குள்ள அம்மன் கோயிலுக்குச் சென்றார். பிறகு அங்கிருந்து இரவு திரும்பினர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர், அவர்களை மறித்து நிறுத்தினர். ராதா அணிந்திருந்த அய்ந்து பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பி விட்டனர்.<br /><br />திருநின்றவூர் லட்சுமிபுரம் 4ஆவது மெயின் ரோட்டை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவி ராகிணி (40). இவர் ரயில்வேயில் பணியாற்றுகிறார். ராகிணி, மகன் கார்த்திக்குடன் முருகேசன் நகரில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு இரவு திரும் பினார். 12ஆவது குறுக்கு தெருவில் உள்ள ரேஷன் கடை பகுதியில் அவர்களை இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் மறித்தனர். ராகிணியிடம் இருந்து 3 பவுன் சங்கிலியைப் பறித்து தப்பிவிட்டனர். இரண்டு வழிப்பறியிலும் ஈடுபட்டவர்கள் ஒரே நபர்களாகத் தான் இருக்க வேண்டும் என்று தெரிகிறது. இது குறித்து ஆவடி, திருநின்றவூர் காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.<br /><br />அம்மன் கோவிலில் நகை கொள்ளை<br /><br />திருப்போரூரை அடுத்த தண்டலம் கிராமத்தில் பழண்டியம்மன் கோயில் உள்ளது. நள்ளிரவு 2 மணியளவில் கொள்ளையர்கள் கோயில் கதவை உடைத்து உள்ளே புகுந்து அம்மன் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை திருடினர். பின்னர் உண்டியலை கடப் பாரையால் உடைக்க முயற்சித்தனர். சத்தம்கேட்டு அருகில் வீட்டில் வசிக்கும் ஒருவர் குரல் கொடுக்கவே கொள்ளையர்கள் தப்பிசென்று விட்டனர்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-2743052873681394522013-03-26T06:34:36.847+05:302013-03-26T06:34:36.847+05:30
மக்களை ஏமாற்றும் ஜோசியர் மற்றும் சாமியார் நிகழ்ச்...<br />மக்களை ஏமாற்றும் ஜோசியர் மற்றும் சாமியார் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை!<br /><br /><br />திரிபுரா அரசு முடிவு!!<br /><br /><br />அகர்தலா, மார்ச் 24- ஜோசியர்களும், சாமி யார்களும் மக்களை ஏமாற்றுகின்றனர். எனவே அவர்களின் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை விதிக்கலாம் என திரிபுரா அரசு முடிவு செய்துள்ளது.<br /><br />திரிபுரா மாநிலத் தில் சில ஜோசியர்கள் தொலைக்காட்சியில் விளம்பர நிகழ்ச்சி களை நடத்து கின்றனர். இதே போல சாமியார்கள் என்றும் மந்திரவாதிகள் என் றும் தங்களை அழைத் துக் கொள்ளும் சில ரும் தொலைக்காட்சி யில் நிகழ்ச்சி நடத்து கின்றனர்.<br /><br />இந்த நிகழ்ச்சி களின் மூலம் இவர்கள் மக்களை ஏமாற்றுகின் றனர் என்று திரிபுரா அரசு கூறியுள்ளது.<br /><br />சில மாதங்களுக்கு முன்பு அகர்தலாவில் உள்ள ஒரு வீட்டில் ஒரு பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. குடும் பத்தின் நலனுக்காக சில சித்து வேலை களை செய்ய வேண் டும் என்று கூறி பாபா கமால் ஜேடி என்ற மந் திரவாதியை அழைத்து வந்தனர். ஆனால் இந்த நபர் அந்த வீட்டிலிருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை எடுத் துக் கொண்டு தப்பி ஓடி விட்டார்.<br /><br />சாமியார்களும், மந் திரவாதிகளும் ஜோசியர் களும் கேபிள் டி.வி. நடத்துபவர்களிடம் நிகழ்ச்சி நடத்த உரிமை பெறுகின்றனர்.<br /><br />இவர்கள் நகரில் உள்ள ஓட்டல்களில் அறை எடுத்து தங்கிக் கொள்கின்றனர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவர்கள் தங்களுக்கு தெய்வீக சக்தி இருப்பதாக விளம் பரம் செய்கிறார்கள். சில மந்திர, தந்திர நிகழ்ச்சி களை தொலைக்காட்சி யில் செய்து காட்டுகின் றனர். தொலைபேசி யில் கேள்வி கேட்டு இறுதி யில் தங்களை நேரில் சந்திக்கும்படி சாமியார்களும், ஜோசி யர்களும் மந்திரவாதி களும் அழைப்பு விடுக் கின்றனர்.<br /><br />இவர்களால் பொது மக்கள் ஏமாற்றப்படு கின்றனர் என்ற குற்றச் சாட்டு எழுந்தது. எனவே இத்தகைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க திரிபுரா அரசு முடிவு செய் துள்ளது.<br />சட்டமன்ற தேர் தல் போன்ற சில முக் கிய பிரச்சினை களால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என் றும் தற்போது சட்ட மன்ற தேர்தல் முடிந்து விட்டதால் இத்தகைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேற்கு திரிபுரா மாவட்ட மாஜிஸ்தி ரேட் கிரண்கிட்டி கூறியுள்ளார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-26778316431143995742013-03-26T06:33:55.965+05:302013-03-26T06:33:55.965+05:30
ஆணவம் அடங்கவில்லை அய்.நா. மனித உரிமை ஆணையத் தாக்க...<br />ஆணவம் அடங்கவில்லை அய்.நா. மனித உரிமை ஆணையத் தாக்குதல் மூலம் எங்களை அடக்கி விட முடியாது அமெரிக்கத் தீர்மானம் வெற்றிபற்றி ராஜபக்சே ஆணவப் பேச்சு<br /><br /><br />கொழும்பு, மார்ச்.24- அய்.நா. மனித உரிமை ஆணை யத்தில் அமெரிக்க தீர்மானம் வெற்றி கண்டது குறித்து இலங்கை அதிபர் ராஜ பக்சே கருத்து தெரிவிக் கையில், தொடுக்கப் பட்ட தாக்குதல்கள் எங்களை அடக்கி விட முடியாது என ஆணவத் துடன் கூறியுள்ளார். அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத் தின் மீது கடந்த 21-ஆம் தேதி ஓட்டெடுப்பு நடந் தது. இதில் 25 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் வெற்றி பெற்றது. இது குறித்து கருத்து தெரிவிக்காமல் கடந்த 2 நாட்களாக இலங்கை அதிபர் ராஜபக்சே மவுனம் காத்து வந்தார்.<br /><br />இந்த நிலையில், இலங்கையின் வடமேற்கு மாகாணம், குருணேகலா ராணுவ தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராஜபக்சே கலந்து கொண்டு பேசுகையில், அமெரிக்க தீர்மானம் குறித்து கருத்து வெளியிட் டார். அப்போது அவர் ஆணவத் துடன் கூறியதாவது:-<br /><br />இந்த தாக்குதல் (அமெரிக்க தீர்மான ஓட்டெடுப்பில் இலங்கைக்கு ஏற்பட்ட தோல்வி) எங்களுக்கு வியப்பை அளிக்கவில்லை. இந்த தாக்குதல் எங்களை அடக்கி விட முடியாது. இவை எங்களை தோற்கடித்து விடவும் இயலாது. எந்த விதத்திலும் எங்களுக்கு அச்சுறுத்தலாகவும் அமையாது. விடுதலைப்புலிகளை எனது தலைமையிலான ராணுவம் வீழ்த்தி விட்ட நிலையில், இந்த தாக் குதல்களை விடுதலைப் புலிகள் ஆதரவு அமைப் பிடம் இருந்தும், இலங்கை எதிர்ப்பு சக்தி களிடமிருந்தும் எதிர் பார்த்தேன். எனது அரசு மீதான அனைத்து குற்றச் சாட்டுகளும் தவறானவை. உண் மைக்கு அப்பாற்பட்ட நோக்கம் கொண்டவை.<br /><br />இந்த நாட்டின் ஒரு பகுதி 2009-க்கு முன்பு (தமிழ்) ஈழம் என அடையாளம் காணப்பட்டது. இது போர் நிறுத்த உடன்படிக்கையிலும் ஏற்கப்பட்டு, சிறிது அங்கீகரிக்கப்பட்டது. சர்வதேச சமூகம் வழிவகுத்த போர் நிறுத்த உடன்படிக்கையை நாங்கள் ஒழிக்க முடியாமல் போயிருந்தால், இன்றைய நிலை எப்படி இருந்திருக்கும்?<br />இவ்வாறு ராஜபக்சே பேசியுள்ளார்.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-83629881229507362902013-03-24T18:10:27.097+05:302013-03-24T18:10:27.097+05:30தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத காங்கிரஸ் துரோக...தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத காங்கிரஸ் துரோகம் செய்கிறதா?"விசாரணை நடத்தி வருகின்றனர்<br />VOICE OF INDIANhttps://www.blogger.com/profile/12172327989133841005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-2163202957902427422013-03-24T06:32:58.550+05:302013-03-24T06:32:58.550+05:30மோதல் தொடங்கியது
நேற்று மதியம் கோவில் பகுதியில் இ...மோதல் தொடங்கியது<br /><br />நேற்று மதியம் கோவில் பகுதியில் இந்த பிரச்சினை தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் களுக்குள் மோதல் ஏற்பட்டு ஒரு ஆட்டோ சேதப்படுத்தப்பட்டது. மாலை 4 மணியளவில் மேட்டுத்தெருவை சேர்ந்த விநாயகமூர்த்தி என்ற ஆட்டோ ஓட்டுநர், பக்தர்களை ஏற்றிக்கொண்டு தனுஷ்கோடிக்கு சென்றார். அவர் வேர்க்கோடு சென்றபோது அங்கிருந்த மற்றொரு தரப்பு ஆட்டோ ஓட்டுநர்களில் சிலர் விநாயகமூர்த்தி யையும், மற்றும் ஒரு ஓட்டுநரையும் பிடித்து அடித்து உதைத்தனர். அவர்கள் தங்கள் உறவினர் களுக்கும், மற்ற ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் தகவல் கொடுத்தனர். காவல்துறையினருக்கும் தகவல் பறந்தது. காவல்துறையினர் வேர்க்கோடுக்கு விரைந்தனர்.<br /><br />அதற்குள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அரிவாள், கம்புகளுடன் ராமேசுவரம் கீழவாசலில் இருந்து வடக்குவாசல், மேல வாசல், நடுத்தெரு, கடைத் தெரு பகுதிகளுக்குச் சென்று கடைகளை அடைக்குமாறு சத்தம் போட்டுக்கொண்டே வந் தனர். பதற்றம் ஏற்பட்ட தால் வியாபாரிகள் கடை களை அடைத்தனர். பக்தர்களும் பயத்தில் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.<br /><br />அப்போது தனுஷ் கோடியில் இருந்து அரசு பேருந்து ஒன்று கோவி லுக்கு வந்தது. கலவர கும்பல் அந்தப் பேருந்தை வழிமறித்து நிறுத்தி கண் ணாடியை உடைத்தது.<br /><br />ராமேசுவரம் காவல்துறையினர் அந்தப் பகுதிக்கு விரைந்து கலவரத்தை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் கலவர கும்பல் திட்டக்குடி பகுதியில் புதிதாக கட்டப்படும் தனியார் தங்கும் விடுதி கட்டடத்தின் முன்பகுதியில் இருந்த கூரைக்கு தீ வைத்தனர்.<br />வேர்க்கோடு பகுதியில் தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் விநாயகமூர்த்தி உள்பட 2 பேரை காவல் துறையினர் மீட்டு ராமேசுவரம் மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு கலவரத்தை கட்டுப்படுத்தப் போராடினர். கலவர கும்பல் வேர்க்கோடு பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கை அடித்து நொறுக்கியது. அப்போது கலவர கும்பல் இரு தரப்பும் ராமேசுவரம் நகராட்சி அலுவலகம் அருகே பெட்ரோல் குண்டுகளை வீசி பயங்கரமாக மோதிக்கொண்டது. இதில் ஒரு வீடு தீப்பிடித்து எரிந்தது. கற்களும், பாட்டில்களும் சரமாரியாக வீசப்பட்டன.<br /><br />காவல்துறை டி.அய்.ஜி.ராமசுப்பிரமணியன், காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் ஆகியோர் அதிரடிப்படை, கலவர தடுப்பு பிரிவு காவல்துறையினருடன் அங்கு வந்தனர். அவர்கள் கண்ணீர் புகை குண்டுகளை 3 முறை வீசியும், தடியடி நடத்தியும் கலவர கும்பலை விரட்டினர். வரலாறு காணாத வகையில் நடந்த இந்தக் கல வரத்தால் ராமேசுவரத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது. 4 அடி உயரமுள்ள கடவுளர் சிலை திருட்டு கும்பகோணம் அருகே 4 அடி உயரமுள்ள கடவுளர் சிலை திருட்டு போனது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பணி தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த தேவனாஞ்சேரி ஊராட்சி இணைப்பிரியாள் வட்டத்தில் வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் காலை தர்மலிங்கம் (வயது 50) கோவிலுக்குச் சென்றபோது அந்த சிலைகளை வைத்து வழிபட்ட குடிசையின் கதவு திறந்த கிடந்தது. மெகூம்வரதராஜபெருமாள், சிறீதேவி, பூதேவி ஆகிய மூலவர் சிலைகளில் சுமார் 4 அடி உயரமுள்ள சிறீதேவி சிலையைக் காணவில்லை. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் கிராம மக்களிடம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து கிராம மக்கள் சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.<br /><br />தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத கடவுள், பக்தர்களை எப்படி காப்பாற்றுவார்?தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-81231984621058863902013-03-24T06:32:44.221+05:302013-03-24T06:32:44.221+05:30வாஸ்து சரியில்லையாம் - நாவல்மரம் வெட்டி சாய்ப்பு
...வாஸ்து சரியில்லையாம் - நாவல்மரம் வெட்டி சாய்ப்பு<br /><br />கோவை, கவுண்டம்பாளையம் சட்டசபை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், துடி யலூர் ரயில்வே நிலைய சாலையில் உள்ளது. இந்த அலுவலகக் கட்டுமான பணியின் போதே, அப்பகுதி யில், நாவல் மரங்கள் இருந்தன. இந்த மரங்கள், அலுவலகத்துக்கு அழகு கொடுத்தன. அலுவலகம் கட்டியபின், ச.ம.உ.களாக இருந்த, எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், கண்ணப்பன், கந்தசாமி பயன்படுத்தி வந்தனர். தற்போது, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., வான ஆறுகுட்டி, இந்த அலுவலகத்தை பயன்படுத்தி வருகிறார்.<br /><br />இந்நிலையில், வாஸ்துப்படி நாவல் மரங்கள் இருந்தால், பிரச்சினை ஏற்படும் என, எம்.எல்.ஏ., விடம், சிலர் ஆலோசனை கூறியுள்ளனர். இதை யடுத்து, ச.ம.உ. அலுவலக வளாகத்தில் உள்ள நாவல் மரங்களை, வெட்டும் பணி துவங்கியது. இதற்கு, அப்பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, மரம் வெட்டுவது கைவிடப்பட்டது.<br /><br />இது குறித்து, ச.ம.உ. ஆறுகுட்டி கூறுகையில், மரம் வெட்டுவதற்கும், வாஸ்துக்கும் தொடர் பில்லை. இருந்தாலும், இயற்கை ஆர்வலர்களின் கருத்தை ஏற்று, மரம் வெட்டுவது கைவிடப் பட்டுள்ளது என்றார்.<br /><br />ராமேசுவரம் கோவில் தீர்த்தம் பெட்ரோல் குண்டுகள் வீச்சு; பக்தர்கள் ஓட்டம்! ராமேசுவரத்தில் நேற்று தீர்த்தக் கிணற்றில் தண்ணீர் எடுத்து ஊற்றுவது தொடர்பாக இரு தரப்பினர் பயங்கர கலவரத்தில் ஈடுபட்டு பெட் ரோல் குண்டுகளை வீசினர். காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கும்பலை விரட்டி அடித்தனர். நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன் ராமேசுவரம் கோவிலில் தீர்த்தக் கிணறுகளில் பக்தர்கள் நீராடுவதற்காக தண்ணீரில் நனையாத அடையாள வில்லை அணிவிக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவரிடம் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி யாத்திரை பணியாளர் சங்கத்தினர் தண்ணீர் ஊற்றும் பணியை மேற்கொள்ள தங்களுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-37327107603935761032013-03-24T06:32:30.562+05:302013-03-24T06:32:30.562+05:30
பக்தியின் பன்னாடைத் தனம் பாரீர்!
ராமேசுவரத்தில் ...<br />பக்தியின் பன்னாடைத் தனம் பாரீர்!<br /><br />ராமேசுவரத்தில் தீர்த்தக் கிணற்றில் தண்ணீர் எடுத்து ஊற்றுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கலவரத்தில், ராமேசுவரம் - தனுஷ்கோடி சாலையில் உள்ள ஒரு திருமண மண்டப முகப்பிலிருந்த பந்தல், ஜெனரேட்டர் உள்ளிட்டவை கொளுத்தப்பட்டன<br /><br />சென்னை, மார்ச் 23- பக்தியின் பெயரால் அன்றாடம் அவலங்கள் நடைபெற்று வருகின்றன.<br /><br />அவற்றில் சில,<br />அம்மன் சிலையில்<br />தாலி சங்கிலி திருட்டு<br />சென்னையை அடுத்த குரோம்பேட்டை லட்சுமி புரத்தில் புவனேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. நேற்று காலை கோவில் நிர்வாகியின் உறவுக்காரப் பெண், கோவிலை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்திறங்கிய ஒரு நபர், சாமி கும்பிட்டாராம். பின்னர் கோவிலைச் சுத்தம் செய்து கொண்டிருந்த பெண்ணிடம், குங்குமம் எடுத்துத் தரும்படி கேட்டாராம்.<br /><br />எனவே, அந்தப் பெண் குங்குமம் கொடுக்க முயன்றாராம். அப்போது அந்த நபர், திடீரென்று அம்மன் சிலையின் கழுத்தில் கிடந்த அய்ந்தரை பவுன் தாலி சங்கிலியைத் திருடிக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டாராம்.<br /><br />இதுகுறித்து குரோம்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.<br /><br />திருமலை: பெண் பக்தரின்<br /><br />உடல் வெந்தது திருமலையில் வெந்நீர் என்று தெரியாமல் குளித்த கோவை பெண் பக்தரின் உடல் வெந்தது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.<br /><br />திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய கோவையை சேர்ந்த பெண் பக்தர் சத்யா என்பவர் தனது குடும்பத்தினருடன் திருமலை வந்திருந்தார். அங்கு அவர் தேவஸ்தானத்தின் வராகசாமி தங்கும் விடுதியில் 16 ஆம் எண் அறையை எடுத்து குடும் பத்துடன் தங்கி இருந்தார். கடந்த வியாழக்கிழமை அவர் சாமி தரிசனம் செய்வதற்காக தனது தலை முடியை காணிக்கை செலுத்திவிட்டு குளிப்பதற்காக தண்ணீர் குழாயை திறந்தார். அப்போது அவர் குளிர்ந்த தண்ணீருக்கு பதில் வெந்நீர் வரும் சுடுநீர் குழாயை திறந்து விட்டதாக கூறப்படுகிறது. வாளியில் பெருகிய அந்தத் தண்ணீரை குளிர்ந்த தண்ணீர் என நினைத்துப் பிடித்து அதனை தலையில் ஊற்றிக்கொண்டார். தண்ணீர் கொதி நிலையில் இருந்ததால் அவரது கை, முதுகு உள்பட பல இடங்கள் வெந்துவிட்டது. இதனால் அவர் வெப்பம் தாளாமல் கதறி துடித்தார். அக்கம் பக்கம் பக்தர்கள் ஓடிவந்து பார்த்தபோது அவரது உடலில் கொப்பளங்கள் தோன்றி இருந்தன. உடனடியாக தேவஸ்தான பாதுகாப்பு ஊழியர்கள் ஆம்புலன்ஸ் வரவழைத்து அவரை திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பதி ருயோ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-53937571870433687772013-03-24T06:28:51.059+05:302013-03-24T06:28:51.059+05:30
ஆதாரமே இல்லை
சரித்திரத்தைப் புராணத்தை எடுத்துக...<br />ஆதாரமே இல்லை<br /><br /><br /><br />சரித்திரத்தைப் புராணத்தை எடுத்துக்கொண்டால் பார்ப்பனர்கள் மற்றெவரையும் வாழ வைத்ததாக ஆதாரமே இல்லை.<br />(விடுதலை, 26.8.1967)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-11853482031055054742013-03-24T06:28:29.343+05:302013-03-24T06:28:29.343+05:30
இப்படிச் செய்வதால் ஏற்படும் விளைவுகள் எவை? (3)
...<br />இப்படிச் செய்வதால் ஏற்படும் விளைவுகள் எவை? (3)<br /><br /><br />5. கோபத்தோடு நாளைக் கழித்தால் என்ன விளைவு ஏற்படும்?<br /><br />வாழ்வில் கோபப்படுவதும் எப்போ தாவது ஒருமுறை தேவைதான். இவருக்குக் கோபமே வராதுங்க. எப்பவும் எதைச் சொன்னாலும் கோபப்படாமல் சிரித்துக் கொண்டே இருப்பாருங்க.. என்று ஒருவரை எமக்கு அறிமுகப்படுத்தினால் நான் அவரை எளிதில் நம்ப மாட்டேன். காரணம் மனித இயல்புக்கு மாறாகச் சிலர் நடந்து கொண்டால் அது ஏதோ ஒரு வகைச் சுதேசி நடிப்பு என்று கருதியே ஒதுக்கி வைப்பேன்.<br /><br />ஒப்பனை மனிதர்களுக்கும், உண்மை மனிதர்களுக்கும் உள்ள வேறுபாட்டை நாம் கண்டறியும் அறிவுத்திறன் கொண்டவர்களாக இருந்தால்தான் வாழ்க்கையில் பிறரிடம் எளிதில் ஏமாறாதவர்களாக நாம் வாழ முடியும்.<br /><br />மனதும், சுற்றுப்புறத்தவர்களும் கோபப்படும் நம்மைக் கண்டு எப்படி மதிப்பீடு செய்கிறார்கள் என்பது அப்புறம் இருக்கட்டும். நமது உடல் நலம் அதனால் பெரிதும் பாதிப்பது உறுதி.<br /><br />சர்க்கரை நோயும், எடை அதிகரித்தலும் அதனால் அதிகமாகும்; காரணம் கோபம் என்பது ஒரு வகையான உணர்ச்சி பூர்வ மனஉளைச்சல். (Mental Emotional Stress) - இது நமது உடலில் அட்ரினலைன் (Adrenaline and other Stress hormones)<br /><br />இதனால் கோபப்படுவதினால் - ரத்தக் கொதிப்பு (B.P.) ) ஏறுகிறது.<br /><br />அது மட்டுமா? சில தவறான பழக்க மான - விரும்பத்தகாத உணவுகளை (Junk food) இவைகளையும் உண்ணும் வாய்ப்பு ஏற்பட்டு நமது உடல் நலம் அதன் மூலமும் கெடுவதற்கும் வாய்ப்புள்ளது.<br /><br />எனவே கோபத்தை சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லிக்கு இடம் தராது வாழ முயலுங்கள்.<br /><br />6. மகிழ்ச்சியுடனேயே ஒரு நாள் முழுவதும் செலவழித்தால் என்ன - விளைவுகள்?<br /><br />நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பின் அப்போது உங்கள் உடல் முழுவதும் அமைதியாக இருப்பதால், மன அமைதி, உற்சாகம், ஊக்கம் புது வெள்ளம் பாய்வது போல் பாய்கிறது!<br /><br />மன உளைச்சலுக்கு இடமே இல்லை! இதயம் சீராக இயங்குகிறது!<br /><br />மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், மகிழ்ச்சியுடன் இருக்கும்போது தொற்று நோய்கள் எளிதில் பற்றிக் கொள்ளாது! எதிர்ப்பு சக்திக்குப் பெரிதும் துணை புரிகிறது.<br /><br />பிரபல அமெரிக்க கார்னிக மெலான் பல்கலைக் கழகம் இதுபற்றிய மிகப் பெரிய ஆராய்ச்சி ஒன்றினைச் செய்துள்ளது.<br /><br />இப்படி மகிழ்ச்சிகரமாக உள்ள போது, உடலில் (Cytokines) சைக் டோக்கின்ஸ் என்ற ஒரு வகை புரதச் சத்து ஊறி, நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடும் வலிமையை அதற்கு ஊட்டுகிறது என்று அப்பல் கலைக் கழகத்தினர் கூறுகிறார்கள்!<br /><br />நம்முடைய நடத்தையையும்கூட அந்த மகிழ்ச்சி மேம்படுத்துகிறது;<br /><br />சரியான மகிழ்வுடன் வாழுகிறவர் கள் எவரும் உடற்பயிற்சியிலும், உணவுக் கட்டுப்பாட்டிலும் தங்களது எல்லையுடன் நிற்பார்கள் வேலி தாண்டிய வெள்ளாடாக, ஒரு போதும் ஆக மாட்டார்கள்!<br /><br />சிரிக்கும்போது நமது தசைகள் விரிந்து ஒளிர்கின்றன; கோபப்படும் போது அதற்கு நேர்மாறாக அல்லவா ஆகி விடுகிறது?<br /><br />7. ஒரு நாளில் 5 மணி நேரம் மட்டுமே தூங்கினால் அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன?<br /><br />நம் அனைவர் உடலுக்கும் உணவு எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம், தூக்கமும், உடற்பயிற்சியும் கூட; குறைந்த தூக்கம் என்றால் அதன் பாரதூர விளைவுகள் மிகவும் விபரீதமானவை.<br /><br />பசியின்மை, உடற்சோர்வு, அல்லது அதிகமாக உண்ணுதல் (சிற்சில நேரங்களில்)<br /><br />தூக்கமின்மை, உடலில் மன உளைச் சலை ஏற்படுத்தும் ஹார்மோன்களைத் தூண்டி விட்டு, உற்சாகமின்மைக்கு வித்திடுகிறது!<br /><br />குளுக்கோஸ் என்ற சர்க்கரைச் சத்தை இரத்தத்திற்கு அதிகமாக அனுப்புகிறது. சர்க்கரை நோயை அதிகப்படுத்துகிறது; காரணம் இன்சூ லினின் (சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் தன்மைக்குரியது -செயல்படாமல் தடுக்கப்படுகிறது)<br /><br />நமது உடலின் நோய் எதிர்ப்புத் தன்மைகளில் இராணுவ வீரர்களைப் போன்ற சில ரசாயனக் கலவைகள் (Certain Chemicals) உற்பத்தியையும் தூக்கமின்மை வெகுவாகக் குறைத்து நோய் தடுப்பை குறைத்துவிடும் அபாயத்திற்கு நம் உடலை ஆக்கி விடுகிறது.<br /><br />2002இல் ஒரு ஆய்வு. 7 மணி நேரத் திற்குக் குறைவாகத் தூங்கும் பலருக்கு சளித் தொல்லை - தடுமன் அதிகமாக வர வாய்ப்பு ஏற்படுகிறதாம் (மூன்று மடங்கு).<br /><br />எனவே 8 மணி நேரம் தூங்கா விட்டாலும் குறைந்தது ஏழு மணி (7 மணி) நேரமாவது தூங்குங்கள்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-7442123387237748432013-03-24T06:26:41.166+05:302013-03-24T06:26:41.166+05:30
இன்னும் எத்தனைக் கொடுமைகளோ - இன்னல்களோ?
கடைசி ந...<br />இன்னும் எத்தனைக் கொடுமைகளோ - இன்னல்களோ?<br /><br /><br />கடைசி நேரத்தில் இந்தியா எப்படியும் எங்களை ஆதரிக்கும் - எதிராக வாக்களிக்காது என்று இலங்கை எதிர்பார்க்கும் அளவுக்குத்தான் இந்தியாவின் போக்குகள் இருந்தன.<br /><br />இலங்கை எதிர் பார்த்ததற்கு மாறாக இந்தியா ஜெனிவா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் நடந்து கொண்டாலும் அடிப்படையில் இலங்கைக்கு விரோதமாக நடந்து கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.<br /><br />இந்தப் பிரச்சினை தொடர்பாக மத்திய அமைச்சர்கள் மூவர், தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களைச் சந்தித்து இரண்டரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார்கள். தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்ற முறையில் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் தெரிவித்த கருத்துகள் சற்று நம்பிக்கை அளிப்பது போல் இருந்தன.<br /><br />இந்தப் பிரச்சினை பெரும் நெருக்கடியில் சிக்கியதற்கானக் காரணங்களுள் ஒன்று போதிய அவகாசம் இருந்தும், குறித்த நேரத்தில் பிரச்சினை மீது கவனம் செலுத்தி செயல்படாததேயாகும். கடைசி நேரத்தில் தான் மத்திய அரசுக்கு ஞானோதயம் ஏற்பட்டது போலும்.<br /><br />போக்குகளை மிகவும் துல்லியமாகக் கணித்த கலைஞர் அவர்கள் அவருக்கே உரித்தான அனுபவம், முதிர்ச்சி காரணமாக, மத்திய அரசிலிருந்தும், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தும் விலகுவதாக அறிவித்து, இந்திய துணைக் கண்டத்தை மட்டுமல்ல உலக நாடுகளிடையிலும் பெரும் அதிர்வை ஏற்படுத்தினார்.<br /><br />கலைஞர் அவசரப்பட்டு விட்டார்; மேலும் காத்திருந்திருக்க வேண்டும், இந்தியா அமெரிக்கா வின் தீர்மானத்தில் திருத்தத்தைக் கொண்டு வரும் என்றெல்லாம் கூடப் பேச ஆரம்பித்து விட்டார்கள்.<br /><br />நடந்ததைப் பார்க்கும் போது கலைஞர் அவர்கள் எடுத்த முடிவு மிகவும் சரியானதே - மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் சொன்னபடி எதுவும் நடக்கவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது. அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்ததில் இந்தியாவின் கை இருந் திருக்கிறது என்று பேசப்படும் நிலை ஆகிவிட்டது.<br /><br />இந்தியாவின் சார்பில் மனித உரிமை ஆணையத் தில் பேசிய திலிப் சின்கா சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறவில்லை; வெறும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சொல் லுவது - திருடன் கையில் சாவியை ஒப்படைத்த கதைதான்.<br /><br />மறு சீரமைப்பு நடவடிக்கைகளையும், அரசியல் ரீதியான பிரச்சினைகளையும் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை<br /><br />இலங்கை அரசே மேற்கொள்வதை நாங்கள் ஊக்குவிக்கிறோம் என்று செல்லமாகத் தாலாட்டுப் பாடியிருக்கிறார்.<br /><br />கேரளாவைச் சேர்ந்த இரு மீனவர்களை, இத்தாலிய கடற்படைக்காரர்கள் கடற் கொள்ளைக் காரர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சுட்டுக் கொன்றதற்கு உலகத்தையே குலுக்கியதும் இதே இந்தியாதான்!<br /><br />அதே நேரத்தில் ஈழத் தமிழர்களாக இருந்தாலும் சரி, தமிழினத்தைச் சேர்ந்த - தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களாக இருந்தாலும் சரி, படுகொலை செய்யப்படும் பொழுது ஏனிந்த பதற்றம் இல்லை? என்ற கேள்வி நியாயமானதல்லவா? இதனைக் குறுகிய பார்வை என்ற குண்டாந்தடியால் அடிக்க நினைக்கக்கூடாது; தமிழர்கள் ஒன்றும் ஏமாந்தவர்களோ, புரியாதவர்களோ இல்லை.<br /><br />ஆக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் இந்திய மத்திய அரசு கணக்கிடவே முடியாத அளவுக்குக் கடும் கோபத் தீக்கு இரையாகி விட்டது. அது சார்ந்த அரசியல் கட்சியான காங்கிரசும் பெரும் சேதாரத்துக்கு ஆளாகி விட்டது.<br /><br />உலக நாடுகளும் இந்தியாவைக் கேலியாகப் பார்க்கும் பரிதாப நிலைக்கும் தள்ளப்பட்டு விட்டது.<br /><br />இதற்கிடையில் ஒன்றைத் தவறாமல் குறிப்பிட்டாக வேண்டும்; இந்தப் பிரச்சினையில் காங்கிரஸ் மட்டுமல்ல; அகில இந்தியக் கட்சிகளின் முகத்திரையும் கிழிந்து விட்டது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டு இருப்பது கோடி பொன் பெறும் கணிப்பாகும்.<br /><br />உலகில் தமிழர்களுக்கென்று ஒரு நாடு இல்லா விட்டால் இன்னும் என்னென்ன இன்னல்களோ - கொடுமைகளோ தெரியவில்லை.23-3-2013தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-21298995266424581082013-03-24T06:25:35.280+05:302013-03-24T06:25:35.280+05:30
இதனை உச்சநீதிமன்றத்தில், கர்நாடக அரசு மீதும் மத்த...<br />இதனை உச்சநீதிமன்றத்தில், கர்நாடக அரசு மீதும் மத்திய அரசு மீதும் தமிழ்நாடு அரசு வழக்குப் போட்டு வாதாடியபோது மறுத்தது; மறைத்தது - தேவையற்ற முறையில்; தமிழ்நாட்டில் இதுவரை 10 விவசாயிகள் பயிருக்குத் தண்ணீர் வராததால் மனமுடைந்து தற் கொலை செய்துள்ளனர் என்று கூறியிருந்தால், அதற்குப் பலன் மேலும் கிடைத்திருக்கலாம்; உச்சநீதிமன்றமும் இன்னமும் தாராளமான நீர்ப் பங்கீடு பற்றிக் கூறியிருக்கக் கூடும்; ஏனோ தமிழகத்து அதிமுக அரசு தவறியது! அதன் பிறகு ஒரு முறை தமிழக சட்டமன்றத்தில் நிதியமைச்சர் - அவை முன்னவர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள், பட்டினிச் சாவே நிகழவில்லை என்று கூறினார். டெல்டா விவசாயிகளின் நிலைமையை ஆராய்ந்து அறிக்கை தர, முதல் அமைச்சர் 4 சக அமைச்சர்கள் குழுவை, நிதியமைச்சர் தலைமையில் அனுப்பி, பயிர்ப் பாதிப்பு சம்பந்தமாக அறிக்கை தருமாறு பணித்தார்.<br /><br />அவர்கள் தந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு டெல்டா விவசாயிகளுக்கு அளித்த நிவாரணம் பெரும்பாலான, உண்மையாக பாதிக்கப்பட்ட ஏழை, எளிய விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் அமையவில்லை.<br /><br />இதனை தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் அரசுக்குப் பல முறை சுட்டிக்காட்டி அறிக்கை விடுத்தார்.<br /><br />அவர்கள் மட்டுமல்ல; பல அரசியல் கட்சிகள் அறிக்கை - வேண்டுகோள் விடுத்தன முதல் அமைச்சருக்கு.<br /><br />தஞ்சையில் முதல் அமைச்சருக்கு மிகப் பெரும் பாராட்டு விழாவை நடத்தினார்களே, அப்பொழுது ஏதாவது அறிவிப்பார் முதல்வர் என்று எண்ணி ஏமாந்தார்கள் டெல்டா விவசாயிகள்.<br /><br />இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த விவசாயிகள் சங்கத் தலைவர் தோழர் முத்தரசன், முதல்வர் தஞ்சை விழாவிற்கு வருவதற்கு சில நாள்கள் முன்பு, தஞ்சை விழாவில் ஏதாவது அறிவியுங்கள் என்று கேட்டுக் கொண்டு கடிதம் எழுதினார்; இது ஜனசக்தி நாளேட்டில்கூட வெளி வந்துள்ளது.<br /><br />முதல் அமைச்சருக்கு நமது வேண்டுகோள்!<br /><br />விழாவில் வெளிச்சம், பாண்டியன்களின் பலமான பாராட்டு மழைகள் எல்லாம் இருந்தன; ஆனால் விவசாயிகளுக்கு பசியைப் போக்க, புதிய நிவாரணம் கிஞ்சித்தும் அறிவிக்கப்படவில்லை. அதிகாரிகளைக் கொண்டு ஒரு புதிய சர்வே செய்து, இனிமேல் நடவடிக்கை எடுப்போம் என்று கூட எந்த அறிவிப்பும் அம்மையாரிடம் இருந்து வரவில்லை.<br /><br />சரி போகட்டும்; டெல்டா விவசாயிகள் மீண்டும் மீண்டும் நாமம் போட்டு, கோவணம் கட்டிக்கூட போராடி விட்டார்களே - அதற்குப் பிறகாவது, பட்ஜெட் உரையில் ஏதாவது மின்னல் போன்று நிவாரணம் பற்றிய அறிவிப்பு இருந்ததா என்றால் அதுவும் ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது போலவே ஆயிற்று!<br /><br />முதல் அமைச்சருக்கு நமது வேண்டுகோள்: இன்னமும் காலந் தாழ்ந்துவிடவில்லை; சட்டமன்றத்தில் அறிவிப்புச் செய்ய வேண்டும் என்பது தான் நமது வேண்டுகோள்!<br /><br />ஏப்ரல் முதல் வாரத்தில் பேரணி - ஆர்ப்பாட்டம்<br /><br />இதனை வலியுறுத்தி, காவிரி டெல்டா திராவிட விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வரும் ஏப்ரல் (முதல் வாரத்தில்) விவசாயிகள் பேரணி, ஆர்ப்பாட்டம் காலையில் 11 மணியளவில் திருவாரூரிலும் (கீழ்த் தஞ்சை சார்பில்) மாலை தஞ்சை நகரிலும் நடைபெறும்.<br /><br />இரண்டு ஊர்களிலும் அநேகமாக நான் கலந்து கொள்ளக் கூடும். கழக விவசாய அணிப் பொறுப்பாளர்கள் மாவட்ட, வட்ட நகர, கிராமக் கிளைக் கழகத்தினர் அனைவரையும் ஒன்று திரட்டும் பணியை நாளை முதலே துவக்கிட வேண்டும்.<br /><br />நகரங்களில் தெருமுனை, கிராமப் பிரச்சாரம் இவைகளை நமது பிரச்சாரகர்களும், பொறுப்பேற்று இதை மய்யப்படுத்தி அடைமழை பொழிவதுபோல செய்து கொண்டே இருக்க வேண்டும்<br /><br />கடமையாற்றுவோம் வாரீர்! விவசாயம் சூத்திரர்களின் தொழிலாகவே மனு கால முதல் இன்றைய நவீன இராம இராஜ்ய காலம் வரை இருப்பதால் இப்படி பசி, பட்டினி, ஏழ்மை, தற்கொலை எல்லாம்!<br /><br />கஞ்சி குடிப்பதற்கிலார் - அதன்<br />காரணங்கள் எவை என்ற அறிவுமில்லார்<br /><br />என்று பாடி வாடிடும் விவசாயிகள் கண்ணீர் துடைக்க கடமையாற்றுவோம் - வாரீர்! வாரீர்!!<br /><br />கி.வீரமணி<br />தலைவர், <br />திராவிடர் கழகம்<br /><br />23.3.2013தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-44669020785527373262013-03-24T06:25:29.926+05:302013-03-24T06:25:29.926+05:30தமிழ்நாட்டில் விவசாயிகளின் தற்கொலைகள் உச்சநீதிமன்ற...தமிழ்நாட்டில் விவசாயிகளின் தற்கொலைகள் உச்சநீதிமன்றத்தில் மறைக்கப்பட்டது - ஏன்?<br /><br /><br /> தமிழ்நாட்டு டெல்டா விவசாயிகளின் பரிதாப நிலை!<br /><br /> விவசாயிகளுக்குப் போதிய நிவாரணமும் அளிக்கப்படவில்லை<br /><br />ஏப்ரல் முதல் வாரத்தில் காலை திருவாரூரிலும், மாலை தஞ்சையிலும் தி.வி.தொ.ச. சார்பில் பேரணி - ஆர்ப்பாட்டம்! தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை<br /><br /><br /><br />தமிழ்நாட்டில் டெல்டா விவசாயிகள் விவசாயம் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. முதல் அமைச்சரின் நிவாரணம் போதுமானதாக இல்லை - உதவிடும் வகையிலும் இல்லை. தஞ்சைப் பாராட்டு விழாவிலும் அறிவிப்புகள் இல்லை. இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி திராவிடர் விவசாய தொழிற் சங்கத்தின் சார்பில் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் முற்பகல் திருவாரூரிலும், பிற்பகல் தஞ்சாவூரிலும் பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிவித்துள்ளார். அறிக்கை வருமாறு:<br /><br />காவிரி நதி நீர்வரத்து தமிழக டெல்டா விவசாயி களின் வாழ்வாதாரத்தை நிர்ணயிப்பதாகும்.<br /><br />இடைக் காலத் தீர்வுப்படி ஒருமுறைகூட கர்நாடக அரசு காவிரி நீரைத் தமிழ்நாட்டிற்கு முறையாக அளித்ததே இல்லை.<br /><br />இதனைத் தொடர்ந்து நாம் சுட்டிக்காட்டி வந்துள்ளோம்.<br /><br />இந்த ஆண்டு குறுவை சாகுபடி, சம்பா சாகுபடி - இரண்டுமே டெல்டா விவசாயிகளுக்கு பெரும் சோதனையாகவும், வேதனையாகவுமே முடிந்தது.<br /><br />இதன் விளைவாக, கொஞ்ச நஞ்சம் உள்ள முதலீட்டையும் இறுதிப் பந்தயத்தில் வைத்து இழக்கும் போட்டியாளன்போல் காவிரி டெல்டா விவசாயிகள் தங்கள் கை முதலை இழந்தனர்.<br /><br />கருகிய பயிர்களைக் கண்டு மனமுடைந்த ஏழை விவசாயிகள் இதுவரை 13 பேர்களுக்கு மேல் தற்கொலை செய்து கொண்டு மாண்டனர்!<br /><br />தமிழ்நாட்டில் விவசாயிகளின் தற்கொலைகள் உச்சநீதிமன்றத்தில் மறைக்கப்பட்டது - ஏன்?<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-81449219237645292412013-03-24T06:24:24.735+05:302013-03-24T06:24:24.735+05:30
பகத்சிங்
இந்நாள் மனித குல வரலாற்றில் குறிப்பிடத...<br />பகத்சிங்<br /><br /><br />இந்நாள் மனித குல வரலாற்றில் குறிப்பிடத்தக்க நாள் பகத்சிங், ராசகுரு, சுகதேவ் ஆகிய உண்மை யான மாவீரர்கள் தூக்க லிடப்பட்ட நாள் (1931)<br /><br />1924 - பகத்சிங் பி.ஏ. படித்துக் கொண்டிருந்த கால கட்டம். வழக்கம் போல் பெற்றோர் திருமண ஏற்பாட் டைத் தொடங்கினார்கள்.<br />பகத்சிங் என்ன சொன் னான் தெரியுமா? இது திருமணம் செய்து கொண்டு மகிழும் கால கட்டம் அல்ல; என் உடல் உள்ளம், பொருள், ஆவி அத்தனையையும் நாட்டுக்கே உரித்தானவை என்ற எண்ணத்தில் நானி ருக்கிறேன் என்று சொன்னான்.<br /><br />சினிமாவே உலகம் என்றும் சீட்டி அடித்துக் கொண்டு திரியும் இளைஞர் கள் இவற்றையெல்லாம் தெரிந்து கொள்வார்களாக!<br /><br />நவஜவான் சபை ஒன்றையும் தொடங்கினான். அந்த அமைப்பில் உள்ளவர் கள் பூணூல், நாமம், விபூதிப்பட்டை, குடுமி, தாடி, தலைப்பாகை முதலிய மதத் தொடர்புடைய அனைத்துச் சின்னங்களையும் தூக்கி எறிந்தனர்.<br /><br />வெறிபிடித்த இந்துத்து வாவாதிகள் முட்டாள்தன மாகப் புரட்சியாளர்கள் என்று கருதப்பட்ட காலம் அது.<br /><br />மணியாச்சியில் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் எனும் பார்ப்பனர் சனாதன வெறிக் கண்ணோட்டத்தோடுதான் அதனைச் செய்தான்.<br /><br />1908இல் வங்காளத்தில் ஆங்கிலேய அதிகாரியைச் சுட்டுக் கொன்ற குதிர்ராம் போஸ் தூக்கிலிடப்பட்ட போது, பகவத் கீதையைத் தன் கழுத்தில் தொங்க விட்டுக் கொண்டு இருந்தான்.<br /><br />ஆனால் பகவத்சிங் எப்படி? சிறைக் கொட்டடியில் தூக்குக் கயிறை முத்தமிட இருந்த அந்த நேரத்தில், சீக்கியரான சிறை அதிகாரி ஒருவர் சீக்கியர்களின் புனித நூலைக் கொடுத்து, கடைசி நேரத்திலாவது பிரார்த்தனை செய் என்று கேட்டுக் கொண்டபோது, பகவத் சிங் மறுத்து விட்டான்! (இளை ஞர்களே எண்ணிப் பாருங்கள்!)<br /><br />ஜாலியன் வாலாபாக் படுகொலை - அவனைப் புரட்சிவாதியாக்கிற்று.<br /><br />தாங்கள் பயங்கரவாதி கள் அல்லர் - புரட்சியா ளர்கள் என்ற முறையில் இந்திய நாடாளுமன்றத்தில் யாருக்கும் உயிர் சேதத்தை ஏற்படுத்தாமல் வெடி குண்டுகளை வீசி, காவல் துறையிடம் தங்களை ஒப் படைத்துக் கொண்டு நீதிமன்றத்தில் புரட்சிக் கருத்துக்களை எடுத்துக் கூறும் வாய்ப்பாகத்தான் இதனை செய்தனர் என்பது சாதாரணமா?<br /><br />இந்திய மக்களுக்கு, ஏன் உலக மக்களுக்கே உண்மை யான சமத்துவமும், சாந்தமும் அளிக்கத்தக்கப் பாதையை பகத்சிங் காட்டியுள்ளார் என்று குறிப்பிட்ட தந்தை பெரியார் - எவரும் அடைய முடியாத பேரை பகத்சிங் அடைந்தார் என்று குறிப் பிட்டு விட்டு பகத்சிங்கை மனமார, வாயார, கையாரப் பாராட்டுகிறோம் என்று எழுதினார்.<br /><br />மாகாணத்துக்கு இது போன்ற 4 பேர்களைத் தூக்கிலிட வேண்டுமென்று நமது அரசாங்கத்தை மனமார வேண்டுகிறேன் என்ற (குடிஅரசு 29.3.1931) தந்தை பெரியாரின் சிந்தனை சாதாரணமானதுதானா? இளை ஞர்களே எண்ணிப் பாரீர்!<br /><br />- மயிலாடன் 23-3-2013தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-58532012688691461962013-03-24T06:23:00.548+05:302013-03-24T06:23:00.548+05:30
யக்ஞவல்கியா கூறுகிறார்!
ஒரு பிராமணன் சண்டாளனுடை...<br />யக்ஞவல்கியா கூறுகிறார்!<br /><br /><br />ஒரு பிராமணன் சண்டாளனுடைய கிணற்றிலிருந்து தண்ணீரைக் குடித்தால், அல்லது சண்டாளன் பாத்திரத்தில் தண்ணீர்க் குடித்தால் சாந்த பானா செய்ய வேண்டும். இவ்வாறு யக்ஞவல்கியா இயற்றிய அங்கிரா என்ற நூல் கூறுகிறது.<br /><br />சாந்தபானா செய்வதென்றால், செய்த பாவம் அல்லது தீட்டுத் தீர ஒரு இரவும், ஒரு பகலும் பட்டினி கிடக்க வேண்டும். அதன்பின் முதலில் பஞ்சகவ்யம் அருந்த வேண்டும்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com