tag:blogger.com,1999:blog-1474608369333206681.post818478988589596897..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: அய்யா - அம்மா - அண்ணா! இயக்கம் - ஒரு குடும்பம் என்பது இதுதானோ!தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-11220871567271485622014-04-04T06:13:37.572+05:302014-04-04T06:13:37.572+05:30
துக்ளக் தர்பார்!
கேள்வி: நரேந்திர மோடி பிரதமர் ...<br />துக்ளக் தர்பார்!<br /><br /><br />கேள்வி: நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளர் என்று முடிவு ஆன நிலை யிலும், பா.ஜ.க.வில் அத்வானி, சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத்சிங், அருண்ஜேட்லி என பிரதமர் கனவு வேட்பாளர்கள் உள்ளார்களே?<br /><br />பதில்: இதைவிடக் கவலைக்கு இட மளிக்கக்கூடியது - தேர்தலுக்குப் பின் தோன்றக்கூடிய நிலை. மோடி பிரதமர் இல்லையென்றால், நம்மை ஆதரிக்கப் பல கட்சிகள் தயாராக இருக்கின்றன என்று ஒரு புரளியைக் கிளப்பிவிட்டு, வேறு யாராவது சிலர் தங்களை முன்னி றுத்திக் கொள்ளலாமே! அதை நினைத் தால்தான் கவலையாக இருக்கிறது.<br />(துக்ளக், 9.4.2014)<br /><br />இதன்மூலம் மோடிக்கு இரு பக்கமும் இடி என்பதை திருவாளர் சோ ராம சாமியே ஒப்புக்கொள்கிறார். பி.ஜே.பி. என்பது உள்கட்சிக் குழப்பம் மலிந்த நெல் லிக்காய் மூட்டை என்பதை ஒப்புக் கொண்டு விட்டார்.<br /><br />சோவே மனம் விட்டு விட்டார் என்பதுதான் உண்மை.<br /><br />கேள்வி: காங்கிரசையும், தி.மு.க.வை யும் மட்டும்தானே ஜெயலலிதா கடுமை யாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்கிறார். தனக்குக் கடும் போட்டி தரும் பா.ஜ.க. வையோ, அதன் கூட்டணி கட்சி களையோ விமர்சிப்பதில்லையே, ஏன்?<br /><br />பதில்: அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்திருந்தால், அது வரு கின்ற தேர்தல் வெற்றிக்கு மட்டுமின்றி, அது சீரான, சிக்கல் இல்லாத வகையில் மத்திய ஆட்சி அமைப்புக்கும் உதவியி ருக்கும் என்ற எண்ணமுடைய என் னிடம் - இந்தக் கேள்வியைக் கேட்பதும் ஒன்றுதான்; கேட்காமல் இருப்பதும் ஒன்றுதான்.<br />(துக்ளக், 9.4.2014)<br /><br />கேட்ட கேள்விக்குப் பதில் இருக் கிறதா?<br /><br />இதற்குப் பெயர்தான் பார்ப்பனப் புத்தி. இந்த நழுவல் பேர்வழிதான் அவாள் மொழியில் அறிவு ஜீவியாம்!<br /><br />இவர்களின் அறிவு நாணயம் எந்தத் தரத்தில் இருக்கிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டே!<br /><br />ஜெயலலிதா அம்மையார் தன்னை எதிர்த்து நிற்கும் பி.ஜே.பி.யைப்பற்றி விமர் சிக்காதது - அரசியல் நேர்மையற்ற - சூது - தந்திரம்! இதை ஒப்புக்கொள்ள சோவுக் குத் தயக்கம். பூணூல் பாசம் பொல்லாதது ஆயிற்றே!<br /><br />கேள்வி: பா.ஜ.க. தனிப் பெரும்பான்மை பெறுவது அவ்வளவு எளிதல்ல - என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளாரே, சரியா?<br /><br />பதில்: உண்மைதான். பா.ஜ.க. மட்டுமே (கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கை இல்லாமல்) பாராளுமன்றத்தில் 272 இடங் களைப் பெறுவது எளிதல்லதான்.<br />(துக்ளக், 9.4.2014)<br /><br />மோடி அலை வீசுகிறது - மோடி அலை வீசுகிறது! என்று பீலா விட்டது எல்லாம் அசல் டூப்பு என்பதை சோ அய்யர் ஒப்புக்கொண்டுவிட்டாரே!<br /><br />Read more: http://viduthalai.in/page-8/78063.html#ixzz2xsFC5Sz9<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-91320439880705221822014-04-04T06:12:28.205+05:302014-04-04T06:12:28.205+05:30
நான் செய்தது குற்றமல்ல; புரட்சி முன்னாள் மத்திய அ...<br />நான் செய்தது குற்றமல்ல; புரட்சி முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா<br /><br /><br />உதகை, ஏப்.3- தொலைத் தொடர்புத் துறையில் நான் செய்தது குற்றமல்ல; புரட்சி என்று உதகை பிரச்சாரக் கூட் டத்தில் ஆ.இராசா பேசினார்.<br /><br />நீலகிரி மக்களவைத் தொகுதியில் 2 ஆவது முறை யாக போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.இராசா புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். அதன் பின், ஆட்சியர் அலுவலகம் அருகே கூடியிருந்த திமுக தொண்டர்களிடையே பேசி யதாவது:<br /><br />நீலகிரி தொகுதிக்கு கலை ஞரால் மீண்டும் ஒப்படைக் கப்பட்டுள்ளேன். கடந்த 5 ஆண்டுகளில் இத்தொகுதி யில் நான் ஆற்றிய பணிகளை திரும்பத், திரும்ப பட்டியலி டுவதில் அர்த்தமில்லை. ஆனால், அந்த பணிகளின் போதுதான் எனக்குச் சோதனை ஏற்பட்டது. அமைச்சர் பத வியிலிருந்து விலகவேண் டிய நிலை உருவானது.<br /><br />அதன்பின், இதுவரை யிலும் நான் அளித்த அனைத்து வாக்குமூலங்களி லும் எந்தவிதமான மாற்ற முமில்லை. ஆனால், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததாக கூறப்பட்ட வற்றை ஜெயலலிதா தற் போது பேசி வருகிறார். அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக ஏற்கெனவே சிபிஅய்யும், நாடாளுமன்றக் கூட்டுக்குழுவும் விசாரணை நடத்தி முடித்த பின், அது தொடர்பான விளக்கத்தை யும் அளித்திருந்தேன்.<br /><br />ஆனால், அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் எனக்கு எழுதிய கடிதத்தில் இருந்த அறிவுரையை கேட்காமல் நான் செயல்பட்டதாக ஜெய லலிதா கூறிவருவது உண் மைக்குப் புறம்பானது.<br /><br />இது தொடர்பாக, நாடா ளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு நான் அனுப்பிய 102 பக்க விளக்க அறிக்கை மீது விவா தம் நடத்தப்பட்டபோது, அதில் அதிமுக சார்பில் தம்பிதுரையும், மைத்ரேய னும் பங்கேற்றிருந்தனர்.<br /><br />ஆனால், அது எதுவுமே தெரியாமல் ஜெயலலிதா தற்போது பேசி வருகிறார். இதுதொடர்பாக, என்னுடன் நேரடியாக விவாதிக்க அவர் தயாரா என்பதை அறிவிக்க வேண்டும். அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக நான் எந்தக் குற்றமும் செய்ய வில்லை. நான் செய்தது புரட்சியேயாகும். புரட்சிக் காரனை எவ்வகையிலும் குற்றம் சாட்டக்கூடாது.<br /><br />ஸ்பெக்ட்ரம் அலைக் கற்றை ஒதுக்கீடு தொடர்பாக நடைபெற்ற சம்பவங்களை துண்டறிக்கையாக தயாரித் துள்ளேன். இது அனைத்து வாக்காளர்களின் வீடுகளுக் கும் தேடி வரும். அப்போது அனைவருக்கும் உண்மை தெரியும் என்றார்.<br /><br />Read more: http://viduthalai.in/page-8/78059.html#ixzz2xsEiqkt3<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-32504173799177964392014-04-04T06:09:49.347+05:302014-04-04T06:09:49.347+05:30உங்கள் மூளை சுத்தமா இல்லையா...?
இரவில் நன்றாக தூங...உங்கள் மூளை சுத்தமா இல்லையா...?<br /><br />இரவில் நன்றாக தூங்குவதால் மூளை சுத்தமாகிறது என்பது ஆய்வில் உறுதியாகியுள்ளது. ஆழ்ந்த உறக்கத்தில் தான் மூளையின் நச்சு கழிவுகள் வெளியேறுவதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.<br /><br />ஒருவர் தூங்கும் போது அவரது மூளையின் அணுக் களிடையே உள்ள இடைவெளி அதிகரிப்பதால் இந்த கழிவுகள் வெளியேறுகின்றன என்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.<br /><br />உறக்க நேரத்தில்தான் மூளை தன்னை தானே சுத்திகரிக்கிறது என்பதை விஞ்ஞானிகள் குழு தங்களது ஆய்வில் தெரிந்துக் கொண்டது. ஒரு எலியின் தலையில் மய் போன்ற திரவத்தை செலுத்திய விஞ்ஞானிகள், அந்த எலி உறங்கும்போது அந்த திரவம் வெளியேறியதை கண்டறிந்தனர்.<br /><br />அதுவே அந்த எலி விழித்திருக்கும்போது திரவம் வெளியே வராத நிலை இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனோடு மூளை அணுக்களுக்கு இடையே உள்ள இடைவெளியும், உறக்கத்தின்போது 60 சதவீதம் அதிகரிப்பதும் தெரியவந்துள்ளது.<br /><br />Read more: http://viduthalai.in/page-7/78073.html#ixzz2xsEIIOrb<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-63010993532382464042014-04-04T06:00:36.364+05:302014-04-04T06:00:36.364+05:30
பொருளல்ல...
மனக் குறையில்லாமல் வாழ வேண்டுமென்றால...<br />பொருளல்ல...<br /><br />மனக் குறையில்லாமல் வாழ வேண்டுமென்றால், வசதி தேடிக் கொள்ள வேண்டுமென்பது பொருளல்ல; இருப்பதைக் கொண்டு குறையில்லாமல் வாழவேண்டும். - (விடுதலை, 10.6.1970)<br /><br />Read more: http://viduthalai.in/page-2/78038.html#ixzz2xsBwqgHP<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-12999310340941282472014-04-04T05:59:56.504+05:302014-04-04T05:59:56.504+05:30
சிங்கள அரசு திருந்தப் போவதில்லை நவநீதம்பிள்ளையை இ...<br />சிங்கள அரசு திருந்தப் போவதில்லை நவநீதம்பிள்ளையை இலங்கைக்குள் அனுமதிக்கமாட்டார்களாம்<br /><br />கொழுப்பு, ஏப்.3- அய்நாவில் அமெரிக்காவி னால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ள நிலையில் இலங் கைக்கெதிரான சர்வதேச விசாரணையை துவங்குவ தற்கு ஒருபோதும் இடம ளிக்கமாட்டோம் என வெளி யுறவுத்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரி வித்தார்.<br /><br />சர்வதேச விசாரணை களை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள தயாரில்லாத நிலையில் மனித உரிமை கள் தலைவர் நவநீதம் பிள்ளையினால் எங்கள் மீது பலவந்தமாக விசாரணை நடத்தமுடியாது. அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளால் இலங்கைக் கெதிராக தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு முன்பு அரசாங்கம் எந்த நிலைப் பாட்டிலிருந்ததோ அதே நிலைப்பாட்டிலேயே தொடர்ந்தும் இருக்கிறது.<br /><br />சர்வதேச விசாரணை யில் எமக்குத் துளியளவும் நம்பிக்கை இல்லை; விசா ரணைகளை இலங்கை அரசே முன்வந்து தீவிரப் படுத்தியுள்ள இந்த நிலை யில் சர்வதேச விசாரணை என்ற மிரட்டல் மூலமாக உண்மையை நிலைநிறுத்த முடியாது.<br /><br />இலங்கை அரசின் விசா ரணைகள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடந்து சிங்கள அரசு திருந்தப் போவதில்லை<br /><br />வரும் நிலையில், இலங்கை அரசாங்கத் திற்கு சர்வதேச விசாரணை அவசியப் படாது எனவும் அமைச்சர் சமரசிங்க வலியுறுத்தினார்.<br /><br />சர்வதேச விசாரணையென்ற பெயரில் எமது செயற்பாடுகளுக்குள் தலையிட்டு குழப்ப நிலையினை உண்டுபண்ண வேண்டுமென்பதே மேற்குலக நாடு களின் விருப்பமாகும். இதற்காகவே, இவர்கள் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை வேண்டுமென ஒரேபிடியாக இருப் பதுடன் பலவந்தமாக ஏனைய நாடுகளையும் தமது தீர்மானத்திற்கு சார்பாக வாக்களிக்க வைத்துள்ளனர்.<br /><br />சர்வதேச விசாரணை இலங்கைக்கு பொருத்தமில்லாத ஒன்றாகும். இதனை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது டன் பொறுப்பேற்கப் போவது மில்லை. நவநீதம்பிள்ளை தலைமையிலான விசார ணைகளுக்கு நாம் எந்த வகையிலும் நாங்கள் அனுமதி வழங்கப் போவ தில்லையெனவும் அமைச் சர் உறுதியாக தெரிவித்தார். நவநீதம்பிள்ளை இலங்கை வருவதற்கு அரசாங்கம் ஏற்கெனவே அனுமதி வழங்கியிருந்த போதிலும், அவர் இங்கு வந்து இலங்கை குறித்த தவறான கருத்துகள் அடங்கிய அறிக் கையினையே சர்வதேசத்திற்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் முன் வைத்திருந்தார்.<br /><br />இந்நிலையில், எதற்காக அவர் மீண்டும் இலங்கை வர அனுமதிக்க வேண்டுமெனவும் அவர் கேள்வியெ ழுப்பினார். அப்படியே எமது நாட்டிற்கு வந்தாலும் இலங்கை குறித்த தவறான அறிக்கையினையே அவர் மீண்டும் முன் வைப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே அவர் மீண்டும் நாட்டிற்குள் வருவதற்கு இலங்கை அரசாங்கம் அனு மதி வழங்காது. நவநீதம் பிள்ளை மட்டுமல்ல, எந்தவொரு வெளிநாட்டுப் பிரதிநிதியும் இலங்கை அரசாங்கத்தின் அனுமதியின்றி நாட்டிற் குள் வர முடியாது எனவும் அமைச்சர் கூறினார்.<br /><br />இலங்கை அரசு திருந்தாத சிங்கள வெறிப் பாசிச அரசு என்பதற்கு இதைவிட வேறு சாட்சியம் தேவைப்படாது. இத் தகையவர்களுக்குத்தான் இந்தியா வக் காலத்து வாங்குகிறது.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/78045.html#ixzz2xsBfc9i6<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-61639866305392338582014-04-04T05:49:27.658+05:302014-04-04T05:49:27.658+05:30அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிற்கு எதிராக மாணவர்களையு...<br />அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிற்கு எதிராக மாணவர்களையும், முன்னேறிய ஜாதி என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் (ABVP) தூண்டி கலவரங்களைத் திட்டமிட்டு நடத்தியது; காங்கிரசும் மறைமுகமாக இதை ஆதரித்து சமூகநீதிக்காக ஆட்சியை இழந்த வி.பி. சிங்கை ஜாதிமூலம் நாட்டைத் துண்டாடுபவர் “He is a Castesist” என்று பழி தூற்றினர்!<br /><br />உ.பி.யிலோ புதிய ராகம் ஏன்?<br /><br />ஆனால் அதே உ.பி.யில் 22 ஆண்டுகளுக்குப் பின், அங்கு வேகமாக வீசும் மண்டல் சமூக நீதிக் காற்றைப் பயன்படுத்தி, அதே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, மோடி தனது முதல் பிரச்சாரத்தினைச் செய்யத் துவங்கும்போதே, நான் மிகவும் பிற்படுத்தப்பட்டவன். இனி (OBC & Dalits) பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் தான் முனைப்பான எதிர்காலம் என்கிறபடி நடப்பேன்! என்று புதிய ராகம் பாடினார்!<br /><br />காரணம்; முலாயம்சிங், மாயாவதி ஆகியோர் இந்த சமூக நீதி - மண்டல் காற்று வீசியதைப் பயன்படுத்தி அல்லவா ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றினர் என்று கணக்குப்போட்டு, அதே குரலில் முன்பு வி.பி. சிங்மீது எந்தக் குற்றச் சாற்றினைக் கூறினார்களோ, அதற்கு மாறாகச் சிறிதும் லஜ்ஜை இல்லாமல், இப்போது ஏதோ சமூகநீதிக்காகவே திடீர் அவதாரம், எடுத்ததுபோல வாக்காளர்களை ஏமாற்றிட முனைந்து, அதற்கே வீர வசனங்கள் பேச ஆரம்பித்துள்ளனர்.<br /><br />சமூகநீதியைக் கொள்கையாக ஏற்று பிஜேபி. அறிவிக்குமா?<br /><br />இது ஒரு தேர்தல் உத்தி, வியூகம். அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்திற்கு நேர் விரோதமாகும்.<br /><br />குஜராத் வளர்ச்சி மாடல் என்று கூறுகிறார்களே அங்கே இடஒதுக்கீடு - சமூகநீதி ஓட்டங்கள் - எவ்வளவு விழுக்காடு அமலில் உள்ளன? ஆர்.எஸ்.எஸ். இதை ஒரு கொள்கை முடிவாக ஏற்று ஒரு தேர்தல் அறிக்கையை - பா.ஜ.க. பெயரில்- வெளியிடத் தயாரா?<br /><br />மிகப் பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட மக்களின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவி, அவர்கள் கையில் உள்ள வாக்குகளைப் பறிக்கும் திட்டம் இது என்பதல்லாமல் வேறு என்ன?<br /><br />கலைஞர்ஆட்சியில் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு<br /><br />சமூகநீதி - இடஒதுக்கீடு என்பது அனைவர்க்கும் அனைத்தும் என்பதால்தானே தமிழ்நாட்டில் - கலைஞர் ஆட்சியில் - இந்தியாவுக்கு முன்னோடியாக இஸ்லாமியச் சிறுபான்மையினருக்கு முதல் கட்டமாக மூன்றரை விழுக்காடு இடஒதுக்கீடு தரப்பட்டது; அதுபோலவே பிற்படுத்தப்பட்ட கிறித்துவர்களுக்கும் முன்பே இடஒதுக்கீடு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.<br /><br />உ.பி.யில், குஜராத்தில் பிஜேபி சார்பில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர்கூடக் கிடையாது!<br /><br />குஜராத்தில் என்ன நடக்கிறது? மக்கள் தொகையில் 9 சதவிகிதமாக உள்ள இஸ்லாமியர் இதுவரை சட்டமன்றத்தில் ஒருவர்கூட கிடையாது. இதைவிடக் கொடுமை வேறு உண்டா? இதைப் பெருமையான சாதனை என்றும், இனி இப்படித்தான் எல்லா இடங்களிலும் நடைபெற வேண்டும் என்றும் இந்து நாளேட்டில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் (18.10.2013இல்) பேட்டி கொடுத்து மகிழ்கிறாரே!<br /><br />உத்தரப்பிரதேசத்தில் பெருவாரியான இடங்களை மோடியின் ஆர்.எஸ்.எஸ். (பாஜக என்பது வெளி வேஷம்) வென்றால்தானே நாடாளுமன்றத்தில் அதன் இலக்கு 272 இடங்கள் என்பதுமுடியும்?<br /><br />அதற்காக 80 இடங்களில் 78 இடங்கள் மோடி கட்சி போட்டியிடுகிறது; (இரண்டு கூட்டணிக் கட்சிக்கு)<br /><br />இந்த 78 இடங்களில் ஒரே ஒரு இஸ்லாமியர்கூட வேட்பாளராக நிறுத்தப்படவில்லை; இதுதான் குஜராத் மாடல் புரிந்து கொள்ளவேண்டும் பொது வாக்காளர்கள்!<br /><br />அங்குள்ள மக்கள் தொகையில் 17 விழுக்காடு இஸ்லாமியர்கள்; அவர்களுக்கு ஒரு இடம்கூட கிடையாது - பா.ஜ.க. வேட்பாளர் பட்டியலில்.<br /><br />பார்ப்பனர்களுக்கு 20 சதவிகிதம் வாய்ப்பு!<br /><br />ஆனால், சுமார் 12 விழுக்காடு உள்ள உ.பி. பார்ப்பனர்களுக்கு - 80 இடங்களில் இவர்களது வேட்பாளர்கள் 16 பேர்! - அதாவது 20 விழுக்காடு!<br /><br />இன்னொரு வேடிக்கை - விசித்திரம் - மாய வலை. பிற்படுத்தப்பட்டவருக்கு (ளிஙிசி) 24 இடம் அதாவது ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதி (33 விழுக்காடு) பிற்படுத்தப்பட்டோர்மீது திடீர் கரிசனம்!<br /><br />இவர்களது தந்திரம் வியூகம் - பிற்படுத்தப்பட்டவர்களை, தாழ்த்தப்பட்டவர்களை முன்னிறுத்தி, சிறுபான்மையோரை முதலில் ஒதுக்கிவிட்டால், பிறகு ஆட்சியைப் பிடித்த பிறகு, மற்றவர்களை அடுத்த கட்டத்தில் பிடித்துக் கீழே தள்ளிவிட அதிக காலம் பிடிக்காது என்பதுதான்.<br /><br />தேவை பெரியார் நுண்ணாடி!<br /><br />இதை பெரியார் கண்ணாடி என்ற நுண்ணாடி போட்டுப் பார்த்தால் தான் புரியும்.<br /><br />இது புரியாமல், சில சீட்டுகளுக்காக மோடி வலையில் விழுந்தவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள் என்பது போகப் போகப் புரியும்.<br /><br />சமூகநீதியில்கூட போலிகளும், கள்ள நாணயங்களும் பெருகி விட்டன - எச்சரிக்கை! எச்சரிக்கை!!<br /><br /> <br /><br />கி.வீரமணி <br />தலைவர், திராவிடர் கழகம்<br /><br /><br />முகாம் : திண்டுக்கல்<br /><br />3.4.2014<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/78037.html#ixzz2xs8h7AKlதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-13986341249953095702014-04-03T07:29:57.770+05:302014-04-03T07:29:57.770+05:30 நீங்களே சொல்லுங்க சார்....!
- டான் அசோக்
ஸ்ரீ... நீங்களே சொல்லுங்க சார்....!<br /> <br /><br />- டான் அசோக்<br /><br />ஸ்ரீநிவாச வெங்கட்ராமனுக்கு ஒரு 30 வயது இருக்கும். எனக்கும் அவ்வளவுதான். அலுவலகத்தில் சேர்ந்த முதல் நாள், எங்கிருந்து வர்றேள்? என்று மரியாதையாகத்தான் கேட்டான்.<br /><br />அடுத்து ஒன்றிரண்டு முறை பன்மையில் மரியாதையாகத்தான் அழைத்தான். திடீரென ஒருநாள், முகிலா... அந்தப் பாட்டிலை எடுத்துக்கொடு என்றான். என்னடா இது பார்த்த இரண்டே நாளில் ஒருமையில் அழைக்கிறானே என்று அதிர்ச்சி.<br /><br />ஆனாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் பாட்டிலை எடுத்துக்கொடுத்தேன். அடுத்து சில நாட்கள் அவன் வந்தாலே நான் பேசுவதில்லை. ஒருநாள் அவனாகவே, டேய்... அந்த சேரை எடுத்துக்கோ. எனக்கு இது வேணும், என்றான். எனக்கு இப்போது இரட்டிப்பு அதிர்ச்சி என்றாலும் சென்றமுறையைப் போலவே இப்போதும் அமைதியாக சேரை எடுத்துக்கொண்டு நகர்ந்தேன். அடுத்தமுறை இதே போல் மரியாதையில்லாமல் பேசினால், இல்லடா சீனிவாசா என பதில் சொல்லவேண்டும் என முடிவு செய்திருந்தேன். ஆனால் அவன் அதற்குப் பிறகு பலமுறை என்னிடம் ஒருமையில் பேசியும் என்னால் அவனிடம் ஒருமையில் பேச முடியவில்லை. எனக்கும் அது காலப்போக்கில் பழகிவிட்டது. ஒருநாள் பைக் நிறுத்தும் இடத்தில் பயங்கர சண்டை. ஸ்ரீநிவாசன் ஒரு இளவயது காவலாளியிடம் செமத்தியாக அர்ச்சனை வாங்கிக் கொண்டிருந்தான். ஓடிச்சென்று அங்கு நின்று மனம் நிறைய மகிழ்ச்சியோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.<br /><br />திடீரென அந்தக் காவலாளி என் பக்கம் திரும்பி, நீங்களே சொல்லுங்க சார். நான் மரியாதையா சாரி சார்னு சொன்னேன். ஆனா இவன் எடுத்தவுடன, அவனே இவனேனு திட்றான். ஆஃபீஸ்ல வேலை பாத்தா நாங்கள்லாம் இவனுக்கு என்ன அடிமையா? என்றான். இல்லை, எனச் சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டேன்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-70648368925642098072014-04-03T07:29:25.978+05:302014-04-03T07:29:25.978+05:30புதுப்பாக்கள்
ஆண்டவரும்
அளவுகோலும்!
நான் எப்போ...புதுப்பாக்கள்<br /> <br /><br />ஆண்டவரும்<br />அளவுகோலும்!<br /><br />நான் எப்போதும்<br />உன்னைக் கைவிட மாட்டேன்<br />என்று சொன்ன<br />என் ஆண்டவரே!<br />அனைத்தையும்<br />சுனாமி வந்து சுருட்டி<br />வாயில் போட்டுக்கொண்டுவிட<br />தனிமரமாய்<br />தன்னந்தனியே தவிக்கிறேனே!<br />நெஞ்சிலே நஞ்சை வைத்து<br />நாவிலே தேனைத் தடவி<br />நயவஞ்சகமாய்ப் பேசி<br />நம்பவைத்துக் கழுத்தறுப்பது<br />தனிமனித ஒழுக்கக்கேட்டின்<br />அடையாளம் மட்டும்தானா?<br />ஆண்டவராகிய உமக்கு - அந்த<br />அளவுகோல் கிடையாதா?<br /><br />- சீர்காழி கு.நா.இராமண்ணா<br /><br /> <br /><br />மகாத்மா மண்ணில்<br />மதம் எனும் மலத்தை<br />தேர்தல் களமாய்<br />தின்னுகின்றன<br />நாகரிகப் பன்றிகள்<br /><br />செய்திகளும் தின்பண்டங்களாக<br />தின்னுகின்றன மாயைகளை...<br />(மோடி... மோடி<br />ஜாடி... ஜாடி)<br /><br />ஜனநாயகம் என்னும் குடிசையை<br />அயோத்திய அனுமான்கள்<br />தீவைக்கின்றன...<br />மீண்டும்<br />பதாகை ஆட்சி<br />வேண்டுமென்று...<br /><br />நம் இராவணனின் விபீசனர்கள்<br />கூட்டாஞ்சோறு எனும்<br />தேர்தல் பந்தியில்<br />பாத்தி கட்டுகிறார்கள்<br /><br />இந்திய வாக்காளனுக்கு<br />நோட்டா எனும்<br />வாக்குச் சீட்டில்<br />வாக்குச் சாவடி<br /><br />ஜனநாயகமே<br />உனது மறுமலர்ச்சி<br />எப்போது?<br /><br />- சின்னவெங்காயம், சென்னைதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-34051582765304209282014-04-03T07:27:05.152+05:302014-04-03T07:27:05.152+05:30 ஜாதகம் அது பாதகம்
இது நண்பர் ஒருவர் மூலமாகக் கே... ஜாதகம் அது பாதகம்<br /><br /><br />இது நண்பர் ஒருவர் மூலமாகக் கேள்விப்பட்ட உண்மைச் செய்தி. ஊர், பெயர் மாற்றப்பட்டுள்ளது.<br /><br /><br />என் நண்பருக்கு வேண்டியவர் ஒரு முதியவர். அவர் மனைவி மற்றும் அவர்களின் ஒரே மகன் (சுமார் 25 வயது) ஆகிய மூவரும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்தி வந்தனர். ஒரு சில ஆண்டுகளுக்கு முன் வயோதிகத்தின் காரணமாக முதியவர் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகி மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஒரு சிலர் சொல் கேட்டு அந்த முதியவரின் மகன் மாயவரத்தில் உள்ள ஒரு ஜாதகக்காரரைச் சந்தித்து தன் ஜாதகத்தைக் காட்டி தன் தகப்பனாரின் ஆயுளைப்பற்றி விசாரித்திருக்கிறார். அந்த ஜாதகத்தைப் பார்த்து நன்கு கணித்து அந்தப் பையனின் தகப்பனார் அதிகபட்சமாக 2 மாதம்தான் இருப்பார் என்றும், 2 மாதத்திற்குப் பின் பெரிய கண்டம் இருப்பதாகவும் எனவே அவர் இரண்டு மாதத்தில் இறந்துவிடுவார் என்றும் கூறினார். ஆனால் டாக்டர்களின் சிறந்த வைத்தியத்தாலும் மனைவி, மகன் பராமரிப்பாலும் பெரியவர் பூரண குணமடைந்து இன்றுவரை நலமாக உள்ளார்.<br /><br />பெரியவரின் மகன் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் அந்த ஜாதகக்காரரைப் பார்த்து, தன் தகப்பனார் நலமுடன் இருப்பதாகவும், ஜாதகத்தைக் கணித்துக் கூறியது தவறு என்றும் கூறியுள்ளார். அதற்கு ஜாதகக்காரர், தான் கணித்துச் சொன்னது உண்மை என்றும், ஜாதகம் பொய்க்காது என்றும் கூறியதுடன் அந்த 2 மாத காலத்தில் அந்தத் தெருவில் யாராவது பெரியவர் இறந்துவிட்டாரா என்று அந்த இளைஞரைக் கேட்டதற்கு அந்த இளைஞர் தன் வீட்டுப் பக்கத்து வீட்டில் ஒரு முதியவர் இறந்துவிட்டதாகச் சொன்னதாகவும், அதற்கு ஜாதகக்காரர், அப்படி என்றால் அவர்தான் உன் உண்மையான தந்தை என்று கூறி அந்த இளைஞரை அனுப்பிவிட்டார். பின் அந்த இளைஞன் தன் வீட்டில் வந்து விவரத்தைச் சொல்ல மூவரும் நிம்மதி இழந்து தவிப்பதாகவும், ஒருவரையொருவர் சந்தேகத்துடன் பார்ப்பதாகவும், நண்பர் சொன்னார். இந்த விஞ்ஞான காலத்திலும், படித்த, படிக்காத பாமரர்களும் அறிவைப் பயன்படுத்தாமல் ஜாதகத்தையும் ஜாதகக்காரர் சொல்வதையும் நம்பியதால் இதுபோல் அனேக குடும்பங்கள் நிம்மதியற்றுத் தவிக்கின்றன. எனவே, யாரும் ஜாதகத்தையோ ஜாதகக்காரர் கூறுவதையோ உண்மை என்று நம்பி வாழ்க்கையைப் பாழ்படுத்திக் கொள்ளலாமா?<br /><br />- ஆர்.டி.மூர்த்தி, திருச்சி<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-137033914628082272014-04-03T07:26:27.318+05:302014-04-03T07:26:27.318+05:30சில்லறை யு(பு)த்தி
கேள்வி : சூரிய கிரகணம், சந்த...சில்லறை யு(பு)த்தி<br /><br /><br /><br />கேள்வி : சூரிய கிரகணம், சந்திர கிரகணம் போன்றவை நிகழும்போது, புண்ணிய நதிகளில் நீராடி, கடவுளை வணங்க வேண்டும் - போன்றவை விஞ்ஞான ரீதியில் அவசியமா..?<br /><br />பதில் : அவசியமில்லை. கிரகணங்கள் கிரகங்களின் நிழல்கள் என்றுதான் அறிவியல் சொல்கிறது. புண்ணிய நதிகளில் நீராடல் கடவுளை வணங்குதல் என்பதெல்லாம் மத நம்பிக்கையைக் காரணம் காட்டி பணம் பகிர்ந்து கொள்ளும் உத்தியே! கோவிலுக்கு வருமானம்... நதிக்கரை புரோகிதர்களுக்கு சில்லறை புரளும்!தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-40407911183260776322014-04-03T07:25:57.841+05:302014-04-03T07:25:57.841+05:30கலைஞரின் சுளீர்
செய்தியாளர்கள்: நரேந்திர மோடியின்...கலைஞரின் சுளீர்<br /><br />செய்தியாளர்கள்: நரேந்திர மோடியின் அலை வீசுவதாகக் கூறப்படுகிறதே?<br /><br />தி.மு.க. தலைவர் கலைஞர்: எனக்குத் தெரிந்த வரையில் இங்கே வங்காள வரிகுடா அலையைத் தான் காணமுடிகிறது.<br /><br />- தி.மு.க.வின் நாடாளுமன்ற வேட்பாளர்கள் பட்டியிலை வெளியிட்டபோது... (10.3.2014)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-70325027490512855582014-04-03T07:25:33.979+05:302014-04-03T07:25:33.979+05:30குஜராத்தில் மோடி ஆதரவாளர்கள் தோல்வி!
இணையத்தைச் ச...குஜராத்தில் மோடி ஆதரவாளர்கள் தோல்வி!<br /><br />இணையத்தைச் சொடுக்கினால் அனைத்து வணிகத்தளங்களிலும் மோடியே காட்சி தருகிறார். நிச்சயம் பல நூறு கோடியைச் செலவழித்தால் ஒழிய இத்தகைய முரட்டுத்தனமான விளம்பரத்தைச் செய்ய முடியாது. இன்னொரு பக்கம் நாடெங்கும் நடத்தப்படும் மோடியின் கூட்டங்களுக்கு பல நூறு கோடிகள் கொட்டப்படுவதாக செய்திகள் கூறுகின்றன.எங்கிருந்து வருகிறது இந்தப் பணம்? தேர்தல் ஆணையம் முழுமையாகக் கண்காணிக்கிறதா என்பதே வாக்காளர்களின் கேள்வி. இந்த உருவாக்கப்பட்ட செய்தியையே அனைத்து ஊடகங்களும் கிளிப்பிள்ளைபோல சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில்,அந்த விளம்பரங்கள் அத்தனையும் பொய் நிரப்பிய பலூன்கள் என்பதை எடுத்துக்காட்டுவதாய் இருக்கிறது இந்தச் செய்தி.<br /><br />குஜராத் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தேர்தலில் மோடியின் ஆதரவு பெற்ற சங் பரிவாரின் அகில பாரத வித்யார்தி பரிஷத் படுதோல்வியைச் சந்தித்துள்ளதாம்.<br /><br />8 இடங்களில் போட்டியிட்ட என்.எஸ்.யூ.அய். என்ற காங்கிரஸ் மாணவர் சங்கம் 6 இடங்களில் அமோக வெற்றி பெற்றுவிட்டதாம்.<br /><br />மொத்தமுள்ள 10 இடங்களில் காங்கிரஸ் கட்சியின் என்.எஸ்.யூ.அய். 6 இடங்களிலும், ஏ.பி.வி.பி 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்தார்.<br /><br />இதுகுறித்து மாநில காங்கிரஸ் மாணவர் அமைப்புத் தலைவர் தன்ராஜ் சிங் வகேலா கூறுகையில் :<br /><br />குஜராத்தின் 10 மாவட்டங்களில் உள்ள குஜராத் பல்கலைக் கழகங்களின் மாணவர்கள் காங்கிரஸ் கட்சியின் பின்னால் அணிவகுத்து நிற்பதையே, இவ்வெற்றி பறை சாட்டுவதாக உள்ளது, என்றார். இந்த இளைஞர்களின் இதே மனநிலை நீடித்தால் 7 பாராளுமன்றத் தொகுதிகளில் பாஜக தோற்பது உறுதி என்றார், தன்ராஜ்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-31954279302257956062014-04-03T07:24:43.346+05:302014-04-03T07:24:43.346+05:30குஜராத் வளர்ச்சியா? வீழ்ச்சியா?
இந்தியாவின் ஜப்...குஜராத் வளர்ச்சியா? வீழ்ச்சியா?<br /> <br /><br />இந்தியாவின் ஜப்பான், குஜராத் என்று குட்டிக்கரணம் அடித்து சத்தியம் செய்யும் அறிவு ஜீவிகள் இந்தியாவில் அனேகம்!<br /><br />குஜராத் மாநிலத்தின் லட்சணம் என்னவென்று கீழ்க்காணும் பட்டியலைப் படித்துவிட்டு இனி குஜராத் ஜப்பான், சிங்கப்பூரு என்று அளந்துவிடாமல் இருப்பது நல்லது....!!!<br /><br /> இந்தியாவில் தனி நபர் வருமானத்தில் குஜராத்திற்கு 10 ஆம் இடம்.<br /><br /> இந்தியாவில் ஹூயூமன் டெவலப்மெண்ட் (527 புள்ளிகள்) குஜராத்திற்கு 14ஆம் இடம்.<br /><br /> ஜிடிபி (Gross Domestic Product) இந்தியாவில் குஜராத்திற்கு 5ஆம் இடம்.<br /><br /> வளர்ச்சி என்ற சொல் அறியாத உத்தரப் பிரேதசம்கூட 3ஆம் இடத்தில் உள்ளது.<br /><br /> எழுத்தறிவில் குஜராத்திற்கு 18ஆம் இடம்.<br /><br /> ஏழைகள் குறைந்த மாநிலத்தில் குஜராத்திற்கு 10ஆம் இடம்.<br /><br /> சாலைகள் பராமரிப்பில் குஜராத்திற்கு 11ஆம் இடம்.<br /><br /> தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த மாநிலத்தின் பட்டியலில் முதல் நான்கு மாநிலங்களில் குஜராத்தின் பெயர் இல்லை.<br /><br /> பிரவசக் கால குழந்தைகள் இறப்பு விகிதம்: ஆயிரத்திற்கு 62 குழந்தைகள் இறக்கின்றன. பிற மாநிலங்களில் 12 முதல் 14 வரை.<br /><br /> மனிதர்களின் சராசரி ஆயுள் காலம்:<br /><br />ஆண்கள் 63..12, பெண்கள் 64.10<br /><br />பிறமாநிலங்களில் சராசரியாக ஆண்களுக்கு 71.67 பெண்களுக்கு 75 வயது வரை உயிர் வாழ்கின்றனர்.<br /><br />(இன்னும் ஏராளமான தகவல்களுடன் வெளியிடப்பட்டுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எழுதிய 16ஆம் மக்களவைத் தேர்தல்: வாக்காளர்களே சிந்திப்பீர் எனும் நூலிலிருந்து.)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-43220997940477070632014-04-03T07:23:43.279+05:302014-04-03T07:23:43.279+05:30கருத்து
தற்போது இலங்கையில் மின்சாரம், தண்ணீர் உ...கருத்து<br /> <br /><br />தற்போது இலங்கையில் மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் விலை உயர்ந்துள்ளன. உண்மையான பொருளாதார வளர்ச்சி நடைபெறவே இல்லை. போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிலை படுமோசமாக உள்ளது. அதிலும் வன்னி போன்ற பகுதிகளில் வாழும் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பல கிராமங்களில் 80 சதவிகித பெண்களே உள்ளனர். அவர்களுக்கென வாழ்வாதாரம் குறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.<br /><br />மனித உரிமை சபைக்கு வந்திருக்க வேண்டிய அய்.நா.வின் வல்லுநர்கள் அறிக்கையை அய்.நா. செயலாளர் சமர்ப்பிக்கவே இல்லை. அய்.நா. இப்படிச் செய்ய நாம் அனுமதிக்கக் கூடாது. உலக அளவில் மனித விவகாரங்களைப் பேச அய்.நா.வின் மனித உரிமை சபை மட்டுமே இருக்கிறது என்ற நிலையில் அது செயலூக்கம் உள்ளதாக இருக்க வேண்டும். அரசுகள் கையில் மனித உரிமை சபையின் செயல்பாடுகளை முடக்கிவிடக் கூடாது.<br /><br />- நிமல்கா பெர்னாண்டோ,<br />இலங்கை மனித உரிமைப் போராளி<br /><br />மனித உரிமை ஆணையத்தின் ஒப்புதலின் பேரில் இலங்கைமீது சர்வதேச விசாரணை நடத்த ஆணையர் அலுவலகத்தால் முடியும். மனித உரிமை மீறல் தொடர்பான புகாரின்பேரில் அந்நாட்டில் விசாரணை மேற்கொள்ள எனக்கு அதிகாரம் உள்ளது.<br /><br />- நவநீதம் (பிள்ளை), அய்.நா. மனித உரிமை அமைப்பின் ஆணையர்<br /><br />பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துவிட்டதால் பள்ளிகளிலேயே தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொடுப்பது அவசியம். வீட்டில் உள்ளவர்களையும் வீட்டுக் காரியங்களையும் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்ளும் பெண்கள் பலர் தங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துவதில்லை. பெண்களுக்குச் சுயமாக முடிவெடுக்கும் திறன் வேண்டும். இந்தத் திறனே அவர்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது.<br /><br />- டாக்டர் சாந்தா,<br />சென்னை அடையாறு புற்றுநோய் மய்யத் தலைவர்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-67494800249628088002014-04-03T07:23:02.497+05:302014-04-03T07:23:02.497+05:30கமலைப் பிறாண்டும் பூணூல்கள்
கோவில் உண்டியலில் பண...கமலைப் பிறாண்டும் பூணூல்கள்<br /><br /><br />கோவில் உண்டியலில் பணம் போடுவதை விட வருமான வரி செலுத்துங்கள் நாட்டிற்காவது நன்மை உண்டாகும் என்று கலைஞானி கமல்ஹாசன் பொறுப்புணர்ச்சியோடு கூறியுள்ளார். அவ்வளவுதான் கல்கி, தினமலர் உள்ளிட்ட பார்ப்பன வகையறாக்கள் கமல் மீது விழுந்து பிறாண்டுகின்றன.<br /><br />நாட்டில் நிதிச் சிக்கல் ஏன் ஏற்படுகிறது? அயல்நாடுகளிலும், உலக வங்கியிடமும் ஏன் கடன் வாங்க வேண்டியுள்ளது? எல்லாம் ஒழுங்காக வருமான வரி கட்டததால்தானே! மறுக்க முடியுமா?<br /><br />கமல்ஹாசன் ஒழுங்காக நாட்டை ஏமாற்றாமல் வருமான வரி கட்டுபவர்.அதனால் வரி செலுத்தும் விழிப்புணர்வை மக்களுக்கு ஊட்ட அவரை அழைத்துப் பேசவைத்தது வருமான வரித்துறை. அந்த நிகழ்ச்சியில்தான் பேசினார். இதில் இந்தப் பூணூல்களுக்கு ஏன் கோபம் வரவேண்டும். நம் முன் கண் முன்னேயே பார்த்தோமே. சிதம்பரம் கோவில் கடந்த முறை இருந்த கலைஞர் ஆட்சியில் அரசுடமை ஆக்கப்பட்டது. அப்போது இலட்சக்கணக்கில் உண்டியல் வசூல் அரசு கஜானாவுக்குக் கிடைத்தது. ஆனால் அதே கோவில் தீட்சிதர்களின் பிடியில் இருந்தபோது வெறும் 35 ஆயிரம் ரூபாய் மட்டுமே கணக்குக் காட்டப்பட்டதே, பேனா பிடிக்கும் கல்கி-தினமலர் பூணூல்களுக்குத் தெரியாதா?<br /><br />நீதிக்கட்சி ஆட்சி, கோவில்களின் வருமானத்தை நிருவகிக்க இந்து அறநிலையச் சட்டம் நிறைவேற்றி, அரசுத்துறையை உருவாக்காமல் போயிருந்தால் மக்கள் பணம் அனைத்தும் அக்ரஹாரங்களின் தொப்பைகளுக்கே போயிருக்குமே!<br /><br />இப்போதும் பெரும் பணக்காரர்கள் தமது கணக்கில் வராத கறுப்புப் பணங்களை கோவில் உண்டியல்களில் கொட்டுகிறார்களே.அதற்குப் பதில் அரசுக்கே வரியாகச் செலுத்தினால் மக்களுக்குத் திட்டங்களாகத் திரும்பி வருமே.அதைத்தானே கமல்ஹாசன் சொன்னார்.இதிலென்ன தவறு?<br /><br />- பெரியாரிடிதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-86274111101638583062014-04-03T07:21:42.042+05:302014-04-03T07:21:42.042+05:307. நேற்று ஒரு செய்தி _- பா.ஜ.க. எப்படிப்பட்ட கட்சி...7. நேற்று ஒரு செய்தி _- பா.ஜ.க. எப்படிப்பட்ட கட்சி என்பதை விளக்கும் வகையில்!<br /><br />லால்கிஷன் அத்வானிஜிக்கு மத்தியப் பிரதேசம் போபாலில் போட்டியிட அதற்கு முன் அங்கே எம்.பி.யாக இருந்தவர் விட்டுக் கொடுக்க, ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கேட்டார் என்று காங்கிரஸ்காரர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளாரே, அது உண்மையானால் அதைவிட வெட்கித் தலைகுனியும் நிலை உண்டா?<br /><br />கருப்புப் பணப் பட்டியலில் இல்லாத உத்தமர்கள் எத்தனைப் பேர்? உண்மையான தேர்தல் செலவைக் காட்டுபவர்களின் கணக்குகளைச் சொல்லுங்கள் பார்க்கலாம்; தான் நடித்த திரைப்படங்களுக்காக வாங்கும் தொகையை மறைக்காமல் தெரிவிக்கும் நடிகர், நடிகைகள் யார்? யார்? மனசாட்சியைக் கொல்லாமல் சொல்லட்டும் பார்க்கலாம்.<br /><br />2ஜி ஊழல் என்று திரும்பத் திரும்ப தி.மு.க. மீது அமைச்சராக இருந்த ஆ. இராசாமீது குற்றம் சுமத்துகிறார்களே, மத்தியில் அத்துறை அமைச்சராக உள்ள கபில்சிபல் நாடாளுமன்றத்திலேயே 2ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டதில் ஏற்பட்ட இழப்பு ஒன்றுமில்லை. பூஜ்யம் என்று கூறவில்லையா?<br /><br />இந்த ஏற்படாத நஷ்டம் பற்றிய கொயபெல்ஸ் பிரச்சாரத்தின் மூலம் தி.மு.க.வை, இராசாவை வீழ்த்த நினைப்போரால், இதுவரை அந்த இழப்பின் கற்பனை மதிப்பைக்கூட ஒரே மாதிரியாகக் கூற முடியவில்லையே! அருண்ஷோரி முதல் சி.பி.அய். அறிக்கை வரை வழக்குப் போடப்பட்டதாலேயே குற்றம் சுமத்தப்பட்டோர் குற்றவாளிகள் ஆகிவிடுவார்களா? பக்கத்தில் புதிதாய் இணைந்துள்ளவர்கள்மீது சி.பி.அய். ஊழல் வழக்கு இல்லையா? உறுதியாகக் கூறட்டும் பார்க்கலாம்.<br /><br />அவர்கள் தண்டிக்கப்பட்டவர்களா? என்று கூறுவார்களேயாயின் அதே பதில் _- லாஜிக் தி.மு.க.வுக்கும் பொருந்தாதா?<br /><br />அ.தி.மு.க. பொதுச் செயலாளரான அம்மையார் தி.மு.க. மீது ஊழல் குற்றச்சாட்டை வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று கூறி வருகிறார்; 2ஜி அலைகற்றை ரூ.1 கோடியே 80 லட்சம் கோடி இழப்பு என்று ஒரு பொய்யையே பல ஆண்டுகளாகத் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்!<br /><br />மேற்காட்டிய பதில் இவருக்கும் பொருந்தும், ஆ. இராசா அவர்கள் ரூ.3000 கோடி மொரிஷிஸ் மற்றும் வெளி நாடுகளில் பதுக்கி வைத்துள்ளார் என திட்டமிட்ட ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டனரே, எங்காவது எப்போதாவது ஒரு சல்லிக் காசையாவது கண்டு எடுத்ததா _- விசாரணை அமைப்புகள்?<br /><br />சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு ஹாலிவுட் நடிகரின் சொகுசு பங்களாவைப் படம் போட்டு, இது ஆ. இராசாவின் பங்களா என்று உச்சப் புளுகை ஊரெல்லாம் பரப்பியதே சில வெட்கங் கெட்ட ஊடகங்கள் _- உண்மை அம்பலமானதும் அவர்கள் எங்குப் போய்ப் புதைந்தனர்?<br /><br />சொத்து சேர்த்த அம்மையார் மீதான வழக்கு உட்பட பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திலும் மற்றவைகளிலும் மூன்று நான்கு உட்பட உள்ளனவே! இதையெல்லாம் பற்றிக் கவலை இல்லாமல், பாமர வாக்காளரிடம் இதே தவறான பிரச்சாரம் செய்தால் அது எவ்வளவு நாள் தாங்கும்?<br /><br />மேலே காட்டப்பட்டுள்ளபடி மற்றவர்களைக் குற்றம் சுமத்துபவர்கள் பரிசுத்த யோவான்களா? அவதாரங்களா? என்று நாட்டு மக்கள் கேட்க மாட்டார்களா?<br /><br />கண்ணாடி வீட்டிலிருந்து கொண்டு கற்கோட்டைகள் மீது கல்லெறிவது புத்திசாலித்தனமா?<br /><br />தமிழ் மக்கள் ஏமாளிகள் அல்லர்; மீண்டும் காவியைக் கொணர முயற்சிக்கும் கங்காணிகளை சரியான அடையாளம் காணுவார்கள் _- சரியானபடி பதிலடி கொடுப்பார்கள் -_ வெகுமக்கள் வாக்குச்சீட்டின் மூலம் இது உறுதி! உறுதி!!<br /><br />கி.வீரமணி,<br />ஆசிரியர்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-89538164638513867442014-04-03T07:21:37.103+05:302014-04-03T07:21:37.103+05:30
4. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிமீது நம்பி...<br />4. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிமீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தபோது, வாக்களிக்க லஞ்சம் வாங்கியவர்களில் பா.ஜ.க. எம்.பி.களும் ஆயிற்றே! ஆள் மாறாட்டம் செய்து வெளிநாட்டுக்கு அனுப்பியதில் சிக்கியவர் பி.ஜே.பி. எம்.பி. அல்லவா!<br /><br />5. மோடி ஊழலுக்கு அப்பாற்பட்ட ஆட்சியை குஜராத்தில் தந்துள்ளார்; எனவே அவரே பிரதமராகி இந்தியாவை ஆள வேண்டும் -_ ஊழல் ஒழியும் என்று ஊரெல்லாம் பிரச்சாரம் செய்யப் புறப்பட்ட உத்தமர்களைப் பார்த்து ஒரு கேள்வி:<br /><br />அண்மையில் சி.ஏ.ஜி. வெளியிட்ட அறிக்கையில் ரூ.16,70,699 கோடி நிதி மற்றும் நில மோசடி குஜராத் மாநில ஆட்சியில் நடைபெற்றுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளதுபற்றி தி வீக் ஆங்கில இதழில் (23.2.2014) மல்லிகா சாராபாய் விரிவாக ஆதாரத்துடன் எழுதியுள்ளாரே _- இதுவரை மோடி தரப்பில் மறுப்பு வந்ததுண்டா?<br /><br />6. கேத்தன் தேசாய் என்ற மருத்துவக் கவுன்சிலின் தலைவராக இருந்து பல கோடி ரூபாயாகவும், தங்கக் கட்டிகளாகவும் வாங்கி, பல மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் தந்தார் என்பதால் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டு, பிறகு MCI என்ற மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியாவிலிருந்து அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சி.பி.அய். விசாரணை மூலம் விரட்டப்பட்டு வழக்கு நிலுவையில் இன்னமும் இருக்கிறதே! அந்த கேத்தன் தேசாய் என்ற பார்ப்பனரை _- குஜராத்திற்கு வரவழைத்து, அரவணைத்து, அவருக்கு ஒரு புதிய நுழைவு வாயிலாக ஒரு மருத்துவக் கல்லூரித் தலைவராக்கி, அதன் மூலம் மறுபடியும் MCI என்ற மருத்துவக் கவுன்சிலுக்குப் பட்டணப் பிரவேசம் செய்ய வழி வகைசெய்து கொடுத்தவர் குஜராத் முதல்வராக இருக்கும் நரேந்திர மோடி அல்லவா!<br /><br />ஊழல் சக்ரவர்த்திகளின்மீது சி.பி.அய். வழக்கு இருந்தபோதிலும், அவரையே மீண்டும் புதுவாழ்வு பெற வைத்து, நாளைக்கு மத்தியில் மோடி ஆட்சி வந்தால் இந்த திருப்பதி ஏழுமலையானுடன் தங்கம் சேர்ப்பதில் போட்டி போட்ட கேத்தன் தேசாய்தானே மருத்துவ ஆலோசகர் _- வழிகாட்டியாக இருப்பார்?<br /><br />ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை என்ற பழமொழி போல, தங்கள் முதுகை மறந்து மற்றவர்கள் பற்றிப் பேசலாமா?<br /><br />தங்கள் கண்களில் - (விவலிய மொழியில் சொன்னால்) உத்திரங்கள் இருக்கையில் பிறர் தூசிபற்றி பழிதூற்ற முன்வரலாமா?<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-83283781781548585812014-04-03T07:21:26.565+05:302014-04-03T07:21:26.565+05:30ஊழல் கறை படிந்த காவி உத்தம வில்லன்கள்
ஈழத் தமிழர...ஊழல் கறை படிந்த காவி உத்தம வில்லன்கள்<br /><br /><br />ஈழத் தமிழர், தமிழக மீனவர் பிரச்சினைகளில் காங்கிரஸ், பிஜேபி நிலைப்பாட்டில் வேறுபாடு கிடையாது!<br /><br />பா.ஜ.க. தலைமையில் தமிழ்நாட்டைக் காவி மண்ணாக்க அரும்பாடுபட்டு, ஒரு அய்ந்து கட்சிகள் சேர்ந்த ஒரு கூட்டணி -_ எந்தப் பொதுக்கொள்கையும் இல்லாமல், மோடி பிரதமரானால் அதுவே சர்வரோக நிவாரணி என்பது போல பிரச்சாரம் செய்யப் புறப்பட்டுள்ளது.<br /><br />அவர்கள் ஊழலை ஒழிக்க ஒன்றுபட்டுப் பாடுபடுவோம் என்று குரல் கொடுத்து, பிரச்சாரம் செய்யப் புறப்பட்டுள்ளனர்.<br /><br />எந்த மேடையில், யாரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு எப்படிப் பேசுகிறார்கள் என்பதை அறிவுள்ள தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் சிந்திக்க மாட்டார்கள் என்ற எண்ணம் போலும் அவர்களுக்கு!<br /><br />தி.மு.க. ஊழல் _- காங்கிரஸ் ஊழல் என்ற இவர்களது வாதம்பற்றிப் பின்னால் ஆராய்வோம்.<br /><br />1. முதலில் இவர்கள் யாருடன் இருந்து கொண்டு ஊழல் ஒழிப்பு முழக்கம் செய்கிறார்கள்? ஊழல் செய்த கர்நாடக எடியூரப்பா, சுரங்கங்களையே கொண்டு சென்றதாக குற்றம் சுமத்தப்பட்ட ரெட்டி சகோதரர்கள், அமைச்சர் சிறீராமுலு போன்றவர்களையெல்லாம் முன்பு நீக்கி விட்டு, இப்போது கட்சியில் சேர்த்தால் எப்படி என்று பா.ஜ.க.விலேயே போர்க் கொடி தூக்கிய திருமதி சுஷ்மா சுவராஜ் போன்றவர்களின் ஆட்சேபத்தையெல்லாம் பற்றிக்கூட கவலைப்பட வில்லையே! இப்போது புதிதாக ஞானஸ்நானம் தந்து எடியூரப்பா அண்கோ சிறீராமுலு போன்றவர்களுடன் கைகோர்த்து நிற்கும் ஆர்.எஸ்.எஸ். (பா.ஜ.க.) அமைப்புகளுடன் நின்று கொண்டு, சில சீட்டுகளுக்காக ஊழலை ஒழிக்க அவதாரம் எடுத்துள்ளனரே -_ உண்மைகள் இவர்களைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறதே _- அதைக் கவனித்தார்களா?<br /><br />2. அடல்பிகாரி வாஜ்பேயி பிரதமராக இருந்தபோதே தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் கார்கில் போரில் இறந்தவர்களை அடக்கம் செய்ய வாங்கிய சவப்பெட்டிகளுக்குக்கூட கமிஷன் வாங்கிய ஊழல் உலகத்தில் சிரிப்பாய் சிரித்ததே -_ அது மறந்து விட்டதா?<br /><br />சவப் பெட்டியில்கூட ஊழல் செய்ய முடியும் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர்கள்தானே பி.ஜே.பி.யினர்!<br /><br />3. பா.ஜ.க.வின் தலைவராக இருந்த பங்காரு லட்சுமணன் அவர்கள் லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக காமிராவால் படம் பிடிக்கப்பட்டு, வழக்குப் போட்டு, தண்டனையும் பெற்று சிறையிலிருந்து வெளியே வந்ததெல்லாம் (அண்மையில் மறைந்தார்!) மறந்துபோய் விட்டதா?<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-25531228085492743032014-04-03T07:19:32.436+05:302014-04-03T07:19:32.436+05:30இந்தியாவில் பெண்கள் மீதான வன்முறை
இந்தியாவில் பெ...இந்தியாவில் பெண்கள் மீதான வன்முறை<br /><br /><br />இந்தியாவில் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறை தீராத பிரச்சினையாகி அதிகரித்துக் கொண்டே செல்வதாக அய்.நா. பெண்கள் அமைப்பின் பிரதிநிதி ரெபக்கா ரிச்மென் தாவாரெஸ் கூறியுள்ளார்.<br /><br />இந்தியாவில் ஆண், பெண் சமமாகக் கருதப்படுவதில்லை. பெண் சிசுக்களைக் கருவிலேயே அழிப்பது கடுமையான சட்டத்தின் மூலம் குறைக்கப்பட்டிருப்பினும் குழந்தைத் திருமணங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் சமூக அமைப்பானது ஆணைவிட பெண்ணைத் தாழ்ந்த நிலையிலேயே பார்க்கிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ளதால் பெண்கள் பிறரைச் சார்ந்து வாழவேண்டிய நிலையில் உள்ளனர்.<br /><br />வரதட்சணைக் கொடுமையாலும், குடிப் பழக்கத்துக்கு ஆளான ஆண்களாலும் குடும்ப வன்முறை அதிகரித்துள்ளது. கிராமப்புறப் பெண்களின் நிலையோ, வீட்டு வேலை, விவசாயம் போன்றவற்றில் ஆண்களுடன் பங்கெடுக்கும் நிலையில் உள்ளது.<br /><br />வெளி உலகமே தெரியாமல் வாழும் கிராமப்புறப் பெண்களின் சுகாதார நிலையும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. போதுமான தண்ணீர் மற்றும் கழிப்பறை வசதி இன்மையால் பேறுகாலத்தின்போது பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.<br /><br />வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், விதவைகள் மற்றும் நோயாளிகள் மற்றும் தனியாக இருக்கும் பெண்கள் வறுமையில் இருப்பதால் இவர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. இப்பெண்களுக்குப் போதிய பாதுகாப்புக் கொடுக்கும் செயல்திட்டங்கள் அரசிடம் எதுவும் இல்லை. இதற்கான தனித் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். தேசிய அளவில் 10 சதவிகிதப் பெண்கள் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். இந்நிலை மாறி சட்டமியற்றும் இடங்களில் பெண்கள் வரவேண்டும் என்று அய்.நா. பெண்கள் அமைப்பு கூறியுள்ளது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-36999054614728155342014-04-03T07:16:26.528+05:302014-04-03T07:16:26.528+05:30
சொன்ன ஞாபகம் இல்லையோ...
திருத்தணியை அடுத்த அத்த...<br />சொன்ன ஞாபகம் இல்லையோ...<br /><br /><br />திருத்தணியை அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் சுகந்தி (வயது 28) மகள் மேனகா (வயது 8), மகன் ஹேமசந்தர் (வயது 7) மூவரும் கிணற்றில் விழுந்து வறுமையால் தற்கொலைசெய்து கொண்டனர் என்பது செய்தி.<br /><br />இன்றைய அ.இ.அ.தி.மு.க ஆட்சியின் மிக முக்கிய சாதனை இது. இந்தச் செய்தியைப் படிக்கும் பொழுது 8 ஆண்டுகளுக்கு முன் நம் ஞாபகம் சென்றாக வேண்டும். திருத்துறைப்பூண்டிக்கு அருகில் ஆதிச்சபுரம் என்னும் கிராமம். பட்டினியால் அந்த கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் மரணம் அடைந்தார்.<br /><br />இதுகுறித்து திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோ.பழனிச்சாமி (இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி) சட்டமன்றத்தில் எடுத்துச் சொன்ன பொழுது - முதல் அமைச்சர் ஜெயலலிதாவிற்கு வெடித்துக் கிளம்பியது கோபத் தீ!<br /><br />என்ன சொன்னார் முதல் அமைச்சர் தெரியுமா?<br /><br />மாண்புமிகு உறுப்பினர் பழனிச்சாமி சபைக்குத் தவறான தகவலை திரும்பத் திரும்ப சொல்லி எனது அரசுக்கு களங்கம் கற்பிக்க முயல்கிறார். நான் மாண்புமிகு உறுப்பினர் பழனிச்சாமியைக் கேட்கிறேன். பிரகாஷ் பட்டினியால் செத்தது உண்மை என்று சொன்னால் மற்ற மூன்று குழந்தைகள் எப்படி உயிரோடு இருக்கின்றன? என கேட்டாரே பார்க்கலாம்.<br /><br />என்னே மனிதாபிமானம் பார்த்தீர்களா?<br /><br />இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ ஏடான ஜனசக்தி 19.3.2006 அன்று என்ன எழுதியது தெரியுமா?<br /><br />குழந்தை இறந்ததற்கு எனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். குழந்தைகளை இழந்த குடும்பத்திற்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.<br /><br />இனி ஒரு பட்டினிச்சாவு நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன் என்று முதல் அமைச்சர் குறிப்பிட்டு இருப்பாரேயானால் அவரது பெருந்தன்மையைப் பாராட்டலாம், போற்றலாம். மாறாக மற்ற மூன்று குழந்தைகள் ஏன் இன்னும் உயிரோடு இருக்கின்றன என்று கேட்ட மனிதாபிமானமற்ற பேயாட்சியினை இனியும் அனுமதிக்க முடியுமா? என்று அன்று ஜனசக்தி எழுதியதே.<br /><br />அத்திப்பட்டுக் கிராமத்தில் இரு குழந்தைகளோடு ஒரு தாயும் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறாரே - அதே கேள்வியையே இன்றைக்கு கேட்க வேண்டாமா?<br /><br />சிந்திப்பீர் வாக்காளர்களே!<br /><br />Read more: http://viduthalai.in/page-8/78013.html#ixzz2xmeHt2IM<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-21432299923917428202014-04-03T07:15:52.522+05:302014-04-03T07:15:52.522+05:30
இவாள் அவாள்!
முன்னாள் தமிழக டி.ஜி.பி. ஆர்.நட்ரா...<br />இவாள் அவாள்!<br /><br /><br />முன்னாள் தமிழக டி.ஜி.பி. ஆர்.நட்ராஜ் அதிமுகவில் இணைந்துள்ளார். இவாள் எல்லாம் அதிகாரத்தில் இருந்தபோது அவாளுக்குச் சாதமகமாக எப்படி நடந்திருப்பார்கள் என்பதை ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டும்.<br /><br />பதவியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தின் தலைவராக்கப்பட்டார். இவர் அந்தப் பொறுப்பில் இருந்தபோதுதான் தேர்வுத் தாள் அவுட்டானது. தேர்வில் தமிழுக்கு என்று இருந்த மதிப்பெண்கள் குறைக்கப்பட்டன.<br /><br />இப்பொழுது அதிமுகவிலேயே சேர்ந்து விட்டார். அடுத்தடுத்துப் பெரிய பதவிகளில் அமர்த்தப்படுவார் அதிமுக ஆட்சியில்.<br /><br />சென்னையில் ஏற்கெனவே அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் ஒருவர் விலக்கிக் கொள்ளப்பட்டு, அந்த இடத்தில் இவர் நிறுத்தப்படுவார் என்கிறது தினமலர் எதுவும் நடக்கலாம்.<br /><br />அவாள் ஆயிற்றே! அண்ணா தி.மு.க. அக்ரகார தி.மு.க. தான் என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டே!<br /><br />Read more: http://viduthalai.in/page-8/78012.html#ixzz2xme9Rbji<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-25256977551540187512014-04-03T07:13:54.765+05:302014-04-03T07:13:54.765+05:30
குஜராத்தில் கல்வி வளர்ச்சி லட்சணம்?
தேசிய கல்வி ...<br />குஜராத்தில் கல்வி வளர்ச்சி லட்சணம்?<br /><br />தேசிய கல்வி திட்டம் மற்றும் நிர்வாக பல்கலைக்கழகம், மாநிலங் களின் கல்வி வளர்ச்சி பற்றிய அறிக் கையினை டிசம்பர், 2013 இல் வெளி யிட்டுள்ளது. அந்த அறிக்கையில் உள்ள தகவலின்படி, கல்வி குறியீட் டில், குஜராத் மாநிலம் இதற்கு முன் னர் இருந்த 9 ஆவது இடத்திலிருந்து 18 ஆவது இடத்திற்கு பின்னோக்கி சென்றுள்ளதாக அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.<br /><br />தொடக்கப்பள்ளி அளவில், 12 ஆவது இடத்திலிருந்து 28 ஆவது இடத்திற்கும், உயர் நிலைப்பள்ளி அளவில், 8 ஆவது இடத்திலிருந்து, 14 ஆவது இடத்திற்கும் குஜராத் பின்ன டைந்துள்ளதை அறிக்கை சுட்டிக் காட்டி, இரண்டையும் இணைத்து சராசரி பார்க்கையில், மாநிலங்கள் வரிசையில் 18 ஆவது இடத்திற்குச் சென்றுள்ளதை அறிக்கை தெளிவாக கூறியுள்ளது.<br /><br />மகாராஷ்டிர மாநிலம் 8 ஆவது இடத்திலும், தமிழ்நாடு 3 ஆவது இடத்திலும் தொடர்ந்து உள்ளதை யும் தேசிய கல்வி திட்டம் மற்றும் நிர்வாகப் பல்கலைக்கழகம் அளித்த அறிக்கை கூறுகிறது.<br /><br />இந்த தரவரிசை, மாநிலங்கள் கல்வித்துறையில் செய்த சாதனையின் அடிப்படையில் தரப்பட்டுள்ளது. அடிப்படைக் கல்வி, பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை, பள் ளிக்கு வராமல், நின்றுவிடும் குழந்தை களின் எண்ணிக்கை, இவற்றின் அடிப் படையில் இந்தத் தரவரிசை தேசிய பல்கலைக்கழகத்தின் அறிக்கையில் அடிப்படையாகக் கொள்ளப்பட்டது.<br /><br />முதல் இடத்தை சிறிய தீவான லட்சதீபமும், இரண்டாவது இடத்தை, புதுச்சேரி மாநிலமும் பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தை தமிழகம் பெற் றுள்ளது. மிகப்பெரிய மாநிலம் என எடுத்துக்கொண்டால், தமிழகம் முத லிடத்தைப் பெற்றுள்ளது என நாம் பெருமையோடு கூறிக்கொள்ளலாம்.<br /><br />நீதிக்கட்சிக் காலத்தில் தொடங்கி, பெரியாரின் போராட்டத்தால், தமிழ கம் கல்வி வளர்ச்சி பெற்று, கல்வி வள்ளல் காமராசர் காலத்தில், கல்வி புரட்சி ஏற்பட்டு தொடர்ந்து, தமிழ கம் கல்வியில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது.<br /><br />மோடியின் ஆட்சியில், குஜராத் மாநிலம், 9 ஆவது இடத்திலிருந்து, 18 ஆவது இடத்திற்கு பின்னடைந்துள் ளது. (ஆதாரம்: Gujarat drops in educational index - DNA - 5.12.2013)<br /><br />குஜராத் மாடல், மோடியின் நல் லாட்சி என தமிழ் நாட்டில் பாஜகவு டன் கூவிக் குலாவும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், இந்தப் புள்ளி விவரத்திற்கு, பதில் சொல்லி விட்டு, தேர்தலை சந்திக்கட்டும். பார்ப்போமே இவர்களின் நாண யத்தை?<br /><br />- - குடந்தை கருணா<br /><br />Read more: http://viduthalai.in/page-2/78018.html#ixzz2xmdeKIuK<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-985367560170639592014-04-03T07:12:30.584+05:302014-04-03T07:12:30.584+05:30
சுயராஜ்யமா? சுயமரியாதையா?
சுயமரியாதை இல்லாத ஒரு ...<br />சுயராஜ்யமா? சுயமரியாதையா?<br /><br />சுயமரியாதை இல்லாத ஒரு மனிதனுக்குச் சுயராஜ்ஜியம் அவசியமே இல்லாததாகும். சுயராஜ்ஜியம் இல்லாத எந்த மனிதனுக்கும்கூட சுயமரியாதை என்பது அவசியமானதேயாகும். சுயமரியாதையற்றவனைப் பிணமென்றுதான் சொல்லவேண்டும்.<br /><br />- (குடிஅரசு, 24.1.1926)<br /><br />Read more: http://viduthalai.in/page-2/78006.html#ixzz2xmdIoEk4<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-57706576497170152082014-04-03T07:00:29.974+05:302014-04-03T07:00:29.974+05:30
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளரும் மோடி மஸ்தானே!
...<br />பொய்யிலே பிறந்து பொய்யிலே வளரும் மோடி மஸ்தானே!<br /><br /><br />அகமதாபாத், ஏப்.2-எங் களுடைய மாநிலத்தில் விவ சாயிகள் தற்கொலை செய்து கொள்ள வில்லை என்று குஜராத் அரசு அறிக்கை வெளி யிட்டு மாட்டிக்கொண்டது.<br /><br />கடந்த மாதம் தேர்தல் பிரச்சாரத்திற்காக குஜராத் சென்ற ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த கெஜ்ரி வால் அந்த மாநிலத்தின் உண்மை நிலவரத்தை வெளிக்கொண்டுவந்து இது வரை மோடி நடத்திக் கொண்டு இருந்த குஜராத் வளர்ச்சி என்ற பிரச்சாரம் எல்லாம் பொய் என்பதை நிருபித்தார்.<br /><br />தனது பிரச்சாரத்தின் இறுதியில் மோடிக்கு எதி ராக 17 கேள்விகள் வைத் தார். இந்தக் கேள்விகளுக்கு மோடி எந்த ஒரு பிரச்சார மேடையிலும் பதில் அளிக்கவில்லை. புதன் கிழமையில் இருந்து மோடி தனது இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை ஆரம் பிக்க ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவா தேவி கோவிலுக்குச் சென்றுள் ளார். இந்த நிலையில் அர விந்த கெஜ்ரிவாலின் கேள் விக்கு பதில் அளிக்காமல் சென்றால் தமது இரண்டாம் கட்டத் தேர்தல் சுற்றுப் பய ணப் பிரச்சாரத்தில் தொய்வு ஏற்படும் என்ற நிலையில் அவசர அவசரமாக குஜராத் அரசு மூலமாக சில விளக் கத்தை கொடுத்துள்ளார். அதில் முக்கியமாக குஜராத் தில் அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் விளைநிலங் களை இழந்து புலம் பெயர்ந்தனர். புலம் பெயரவழியில் லாத விவசாயிகள் தற் கொலை செய்துகொண்ட னர். குஜராத் அரசு முன் னணி மாநிலமாக இருந்தால் இந்த நிலை ஏன் என்று கேள்வி எழுப்பி இருந்தார். அந்த கேள்விக்கான பதிலில் குஜராத் மாநிலத்தில் இது வரை விவசாயிகள் தற் கொலை செய்யவே இல்லை, சமீபத்தில் ஒரே ஒரு விவ சாயி தற்கொலை செய்து கொண்டார். அதுவும் அவ ருடைய குடும்பப் பிரச் சினை காரணமாக என்று குறிப்பிட்டிருந்தது.<br /><br />ஆனால் 2013 ஆம் ஆண்டு குஜராத் அரசின் உள்துறை அமைச் சகம் வெளியிட்ட பத்தி ரிக்கை குறிப்பிலேயே 2012-2013 வரை சுமார் 60 விவ சாயிகள் சரியான பயிர் வளர்ச்சி மற்றும் விவசாயக் கடன் கொடுக்காத காரணத் தால் தற்கொலை செய்துள் ளனர் என்று இருந்தது. இதுகுறித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியன் எக்ஸ்பிரஸ் அக மதாபாத் பதிப்பில் வெளி வந்த செய்தி குஜராத்தின் சவுராஷ்டிரா பகுதியில் உள்ள விவசாயிகள் வறட்சி மற்றும் விவசாயக்கடன் சுமையால் தற்கொலை செய்வது பற்றி அப்பகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தேஜஸ்சிறீ குஜராத் மாநில உள்துறை அமைச்சகத்தி டம் முழு விவரம் கேட்டி ருந்தார். அதற்கு எழுத்து மூலம் பதில் அளித்த உள் துறை அமைச்சகம் நடப்பு ஆண்டில் சுமார் 60 விவ சாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.<br /><br />அவர்களில் 25 பேர் விவசாயக் கடன் சுமை யால் தற்கொலை செய்து கொண்டனர். அதில் ஜூனா கட் மாவட்டத்தில் 10, அம் ரேலியில் 4, ராஜ்கோட் 7 மற்றும் ஜாம் நகரில் 2 என விவசாயக்கடன் சுமையால் தற்கொலை செய்துள்ளனர் என்று தகவல் தெரிவித்தி ருந்தது. மேலும் விவசாயத் தொழில் நலிவினால் கடந்த 10 ஆண்டுகளில் 17 லட்சம் குடும்பங்கள் விவசாயத்தை விட்டு வேறு தொழிலிற்கு சென்று விட்டன. 2008 ,முதல் 2012 வரை முழுக்க சரியான நீர்ப்பாசன வசதியின்றியும், கால்வாய்கள் தூர்வாறாமல் சவுராஷ்டிரா பகுதியில் மட் டும் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டது. முக்கிய மாக வறட்சிப் பகுதியில் வாணிகப் பயிர்களான பருப்புவகை பயிர்கள் முற் றிலும் பாதிக்கப்பட்டதால் அதனை நம்பி இருந்த பல குடும்பத்தினர் நகரத்திற்கு இடம்பெயர்ந்து விட்டனர் என அந்த நாளிதழ் அரசு ஆவணங்களை ஆதாரமாக வைத்து செய்தி வெளியிட் டிருந்தது.<br /><br />ஆனால், அதே அரசு இன்று அவசர அவசரமாக குஜராத்தில் விவசாயிகள் தற் கொலை செய்யவே இல்லை என்று பதில் அறிக்கை விடுகிறது.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/77996.html#ixzz2xmaGQWBS<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-4619461052148429772014-04-03T06:59:25.960+05:302014-04-03T06:59:25.960+05:30
மோடியை பெரியாருடன் ஒப்பிடுவதா? நிதானமாகத்தான் பேச...<br />மோடியை பெரியாருடன் ஒப்பிடுவதா? நிதானமாகத்தான் பேசுகிறாரா விஜயகாந்த்?<br /><br />தமிழகத்தில் வெண்தாடி வேந்தர் பெரியார் என்றால், அது தந்தை பெரியார். குஜராத்தில் வெண்தாடி வேந்தர் மோடிதான்!<br /><br />- இப்படிப் பேசி இருக்கிறார் சினிமா நடிகர் விஜயகாந்த்.<br /><br />அரசியலிலே நிதானமின்றி அவர் எப்படி யாவது உளறித் தொலைக்கட்டும்!<br /><br />சமுதாயப் புரட்சி வீரரான ஒரு சகாப்த தலை வர்பற்றி வாய்க்கு வந்தவாறு விமர்சிக்கலாமா?<br /><br />பாலும், நஞ்சும் ஒன்று என்று பேசலாமா?<br /><br />கோட்சேயும், காந்தியும் ஒன்றே என்று கூறலாமா?<br /><br />எலியும், பூனையும் இணையற்ற நண்பர்கள் என்று உளறலாமா?<br /><br />பெரியார் யார்?<br /><br />பேதங்கள் எந்த வடிவில் இருந்தாலும், அவற் றைப் பூண்டற்றுப் போகச் செய்யவேண்டும் என்று வெடித்துக் கிளம்பிய புரட்சியாளர் அல்லவா!<br /><br />மனிதநேயத்தை வளர்த்த மாமனிதர் அல்லவா!<br /><br />யானைக்கு மதம் பிடித்தாலும் சரி, மனிதனுக்கு மதம் பிடித்தாலும் சரி, இரண்டும் ஆபத்தே என்று அறிவுறுத்திய அறிவுலக ஆசான் அல்லவா பெரியார்!<br /><br />அவரைப் போய் நரவேட்டை மனிதன் நரேந்திர மோடியுடன் ஒப்பிடலாமா?<br /><br />மதவெறியர் மோடி! மனித நேயர் பெரியார்!<br /><br />மனநோயாளிகளைத் தவிர இவ்விருவரையும் வேறு யாரால் இப்படி ஒப்பிட முடியும்?<br /><br />இரண்டாயிரம் இஸ்லாமியர்கள் கொன்று குவிக்கப்படுவதற்குக் காரணமாகவிருந்த ஹிட்லர் அல்லவா இந்த மோடிமஸ்தான்!<br /><br />மதவெறிக் கலவரத்தில் மருண்டு உயிருக்குப் பயந்து முகாம்களில் பதுங்கிக் கிடந்த முஸ்லிம் களைப் பார்த்து குழந்தை உற்பத்தி வேலையில் இறங்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்று ஈவிரக்க மற்ற முறையில் விமர்சித்த விஷமத்தின் ஊற்றுக் கண்ணல்லவா மோடி!<br /><br />பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, இந்துக் கள் அலிகள் அல்ல - ஆண்மை மிக்கவர்கள் என்று நிரூபித்துக் காட்டி விட்டார்கள் என்று காட்டுமிராண்டிக் கருத்தை உதிர்த்த மோடி எங்கே?<br /><br />சமூகநீதியின் தந்தை பெரியார் எங்கே?<br /><br />சமூகநீதிக்காக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு தந்த பிரதமர் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்த பி.ஜே.பி.யின் பிரதிநிதி யல்லவா மோடி எங்கே?<br /><br />உலக மக்களை எல்லாம் சகோதரத்துவம், சமத்துவம் என்ற பார்வையில் பார்த்து மனித நேயத்தையும், பகுத்தறிவையும் போதித்த புத்தரின் மறுவடிவமாம் தந்தை பெரியாரை விளையாட் டுக்குக்கூட இப்படி ஒப்பிட்டுப் பேசலாமா?<br /><br />நிதானம் இழந்து பேசும் விஷம விளையாட்டு வேலைகளையெல்லாம் அரசியலோடு நிறுத்திக் கொள்ளட்டும்! கருஞ்சட்டைப் படையினரிடம் வைத்துக்கொள்ள வேண்டாம்.<br />ஏன்?<br /><br />தந்தை பெரியார்பற்றி பொறுப்பற்றுப் பேசுவதை தமிழ்நாட்டு மக்களே பொறுத்துக் கொள்ளமாட்டார் கள். பெரியார் இந்த மண்ணை மணந்த மணாளர்; ஒடுக்கப்பட்ட மக்களின் உயிர் மூச்சு! அடக்கப்பட்ட மக்களுக்காக பொங்கி எழுந்த அரிமா!<br /><br />சுண்ணாம்புக்கும், வெண்ணெய்க்கும் வித்தி யாசம் தெரியாத வெண்ணெய் வெட்டி வீரர் கள் விபரீதத்தை ஏற்படுத்தும் வார்த்தை களைக் கொட்டவேண்டாம் - எச்சரிக்கை! எச்சரிக்கை!!<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/77998.html#ixzz2xmXJFmLY<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com