tag:blogger.com,1999:blog-1474608369333206681.post8123445709369835365..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: அய்யப்பன் நோயைத் தீர்க்கும் லட்சணம் இதுதானா?தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-7000463759690092112014-01-14T04:38:34.942+05:302014-01-14T04:38:34.942+05:30
பெரியார் உலகம் தருமபுரி மாவட்டம் வழிகாட்டுகிறது!
...<br />பெரியார் உலகம் தருமபுரி மாவட்டம் வழிகாட்டுகிறது!<br /><br /><br />சிறுகனூரில் அமையவிருக்கும் பெரியார் உலகத்திற்கான நிதி திரட்டுவதில் தருமபுரி மாவட்டம் வழிகாட்டுகிறது.<br /><br />தந்தை பெரியார் அவர்களால் நேரிடையாகப் பலன் பெற்ற தமிழர் கள் இலட்சக்கணக்கில் உண்டு. அவர்களின் கதவுகளைத் தட்டுங்கள் - நிதி தாராளமாகக் கிட்டும் என்று நமது கழக அமைப்புக் கூட்டங் களில் பேசியதுண்டு.<br /><br />அதனைச் செயல்படுத்திக் காட்டுவோம் என்ற முனைப்போடு தருமபுரி மாவட்டத் தோழர்கள் களத்தில் இறங்கினர்.<br /><br />பெரியார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் படித்து ஆசிரியர் களாகப் பணிபுரிவோர் தருமபுரி, கிருட்டிணகிரி மாவட்டத்தில் ஏரா ளம் உண்டு. அவர்களை அணுகு வது என்று திட்டமிட்டுக் களத்தில் இறங்கினர் கழகத் தோழர்கள்.<br /><br />திருச்சி பெரியார் நூற்றாண்டுக் கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ப.சுப்பிரமணியம் அவர்களும் துணை நின்றார்.<br /><br />தருமபுரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் புலவர் வேட்ராயன் (அவரும் முன்னாள் ஆசிரியர்தானே!) மாவட்டக் கழகச் செயலாளர் வீ.சிவாஜி, மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஊமை செயராமன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் கிருட்டிணமூர்த்தி, மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் கரு.பாலன், மாநிலப் பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் அண்ணா சரவணன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கதிர் செந்தில், மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் பீம.தமிழ் பிரபாகரன், பகுத்தறிவாளர் கழக ஒன்றியச் செயலாளர் தீ.சிவாஜி, பென்னாகரம் ஒன்றியக் கழகத் தலைவர் சின்னராசு, த.மணிவேல் ஆகியோர் இணைந்தனர்.<br /><br />ஏ, அப்பா, இப்படியொரு படை புறப்பட்டால் எதைத்தான் சாதிக்க முடியாது.<br /><br />41 ஆசிரியர்களின் பட்டியலைத் தேர்வு செய்தனர். அதில் உடனடியாக ஒரு சவரன் தங்கத்துக்கான தொகையான ரூபாய் 25 ஆயிரத்தை மூன்று பேர் அளித்து நன்னம்பிக்கை முனையைக் கொடுத்தனர். தொடர்ந்து அவர்களின் பயணம் - மேலும் 23 பேர் அந்தத் தொகையை அளிக்க ஒப்புதல் அளித்தனர்.<br /><br />அதன் விவரம் இதோ:<br /><br />தங்கத்திற்கான ரூ.25 ஆயிரத்தை உடனடியாக வழங்கியவர்:<br /><br />1. மு.பிரபாகரன், ஆசிரியர், தேக்கல் நாயக்கன்பட்டி<br /><br />2. கே.எம்.திலகவதி, தலைமை ஆசிரியர், கே.எம்.அருள்மொழி, கூத்தப்பாடி<br /><br />3. தனசேகரன் - காளியப்பன், ஒகேனக்கல்<br /><br />தங்கம் வழங்க ஒப்புதல் வழங்கியவர்கள்<br /><br />1. அண்ணாதுரை, தலைமை ஆசிரியர், சிகரலஹல்லி 2 பவுன்<br /><br />2. தீ.சிவாஜி, தலைமை ஆசிரியர், சந்தப்பட்டி 1 பவுன்<br /><br />3. வி.குமார், தலைமை ஆசிரியர், பாப்பாரப்பட்டி 1 பவுன்<br /><br />4. எஸ்.கே.பாலகிருஷ்ணன், ஆசிரியர், தருமபுரி 1 பவுன்<br /><br />5. தங்கதுரை, ஆசிரியர், தருமபுரி 1 பவுன்<br /><br />6. முருகவேல், ஆசிரியர்,கூத்தப்பாடி 1 பவுன்<br /><br />7. ந.வெங்கடேசன், ஆசிரியர், பி.அக்ரகாரம் 1 பவுன்<br /><br />8. எஸ்.மோகன்குமார், ஆசிரியர், அய்குந்தம் 1 பவுன்<br /><br />9. அழகிரி, ஆசிரியர், சந்தப்பட்டி 1 பவுன்<br /><br />10.புஷ்பராஜ், ஆசிரியர், புதுப்பட்டி 1 பவுன்<br /><br />11. அருள்முருகன், ஆசிரியர், ரெட்டியூர் 1 பவுன்<br /><br />12. சா.சிற்றரசு, ஆசிரியர், ராமியம்பட்டி 1 பவுன்<br /><br />13. எஸ்.கே.சி. அழகிரிசாமி, சந்தப்பட்டி 1 பவுன்<br /><br />14. ஜெ.சோலைராஜா, ஆசிரியர், ராமியம்பட்டி 1 பவுன்<br /><br />15. பொன்.சிவகுமார், ஆசிரியர், பாண்டவர் குட்டை 1 பவுன்<br /><br />16. சே.ஆனந்த், ஆசிரியர், ஊற்றங்கரை 1 பவுன்<br /><br />17. சங்கர், தலைமை ஆசிரியர், ஓட்டப்பட்டி 1 பவுன்<br /><br />18. சி.செந்தில்குமார், ஆசிரியர், கவுண்டம்பட்டி 1 பவுன்<br /><br />19. நீலமேகம், ஆசிரியர், நத்தமேடு 1 பவுன்<br /><br />20. குமார்-ஜான் பாஷா, ஒகேனக்கல் 1 பவுன்<br /><br />21. மணிவண்ணன் - மாவு பாஷா, ஒகேனக்கல் 1 பவுன்<br /><br />22. சுந்தரேசன் - சந்துரு, ஒகேனக்கல் 1 பவுன்<br /><br />23. தருமபுரி பெரியார் மன்ற வணிக நிறுவனங்கள் 2 பவுன்<br /><br />மொத்தம் 28 பவுன்<br /><br />தோழர்களே!<br /><br />தருமபுரி மாவட்டம் வழிகாட்டுகிறது. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? அவர்களால் முடிந்தது, உங்களால் முடியாதா?<br /><br />முயலுங்கள், முயற்சி திருவினை ஆக்கும்!<br /><br />Read more: http://viduthalai.in/page-8/73586.html#ixzz2qK4qZvow<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-27561446029567143572014-01-14T04:36:17.755+05:302014-01-14T04:36:17.755+05:30
ஊழல், வறுமையைவிட வகுப்புவாதம் கொடுமையானது-தேசத்து...<br />ஊழல், வறுமையைவிட வகுப்புவாதம் கொடுமையானது-தேசத்துக்கு ஆபத்தானது! செய்தியாளர்களிடையே தொல்.திருமாவளவன்<br /><br />சென்னை, ஜன.13- ஊழல், வறுமையைவிட வகுப்புவாதம் கொடுமை யானது, தேசத்திற்கே ஆபத்தானது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.<br /><br />விடுதலைச் சிறுத்தை கள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சென்னையில் நேற்று (12.1.2014) செய்தியாளர் களுக்கு பேட்டியளித் தார். அப்போது அவர் கூறியதாவது:-<br /><br />முதலில் தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கு எனது பொங்கல் நல் வாழ்த்துக்களைத் தெரி வித்துக் கொள்கிறேன். இந்தப் பொங்கல் திரு நாளில் தமிழக மக்கள் யாவரும் ஓர் உறுதி மொழியை ஏற்க வேண் டும். அதாவது, நடை பெற உள்ள நாடாளு மன்ற தேர்தலில் சாதிய வாத சக்திகளை, மதவாத சக்திகளைப் புறக்கணிப் போம் என்ற உறுதி மொழியை ஏற்க வேண் டும்.<br /><br />ஊழல், வறுமையை விட வகுப்புவாதம் கொடுமையானது. தேசத் திற்கே ஆபத்தானது. இதையே நேற்று தே.மு. தி.க. தலைவர் விஜய காந்தை சந்தித்து வேண் டுகோள் விடுத்தேன். ஏற் கெனவே, தி.மு.க.வுக்கு இதே வேண்டுகோளை வைத்தேன். மேலும், ம.தி. மு.க.வும் தனது முடிவை பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள் கிறேன்.<br /><br />பாதுகாப்பு இருக்காது<br /><br />நரேந்திரமோடி பிரத மரானால், அரசியல் அமைப்பு சட்டத்தையே அடியோடு மாற்றி விடு வார்கள். சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைத்து விடுவார்கள். சிறுபான் மையினருக்கும், பின்தங் கிய மக்களுக்கும் பாது காப்பு இருக்காது. ஆகவே, இந்தக் கோரிக் கையை விடுதலைச் சிறுத் தைகள் கட்சி முன்வைக் கிறது.<br /><br />தமிழகத்தில் பிப்ர வரி 20 ஆம் தேதி சிங் கள மீனவர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடைபெற உள்ளதாக கூறுகி றார்கள். சிங்கள அர சுக்கும், இந்திய அரசுக் கும் இடையே நடை பெற வேண்டிய பேச்சு வார்த்தையை மீனவ பிரதிநிதிகளை வைத்து நடத்துவது எந்த பய னும் தராது. மீனவ பிர திநிதிகளுக்கு வேண்டு கோள் ஒன்றை வைக்கிறேன்.<br /><br />மீனவர்கள் இடையே முரண் பாட்டை உருவாக்க இரு நாட்டு ஆட்சியா ளர்களும் திட்டமிட் டுள்ளனர். எனவே, மீன வர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.<br /><br />மார்ச் 7 ஆம் தேதி ஜெனிவாவில் அய்.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டம் கூடு கிறது. அதில், அமெ ரிக்கா சிங்கள அரசுக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிய இருக் கிறது. போர்க் குற்றம் குறித்தும் விவாதிக்க இருக்கிறது. இந்த நிலை யில், இந்திய அரசு சிங் கள அரசுக்கு எதிராக போர் குற்ற விசார ணையை நடத்த மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் முன் மொழிய வேண்டும்.<br /><br />- இவ்வாறு தொல். திருமாவளவன் கூறி னார்.<br /><br />Read more: http://viduthalai.in/page-5/73591.html#ixzz2qK4Pc4SE<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-11476518053567666792014-01-14T04:27:25.045+05:302014-01-14T04:27:25.045+05:30செம்மொழித் தமிழில் சிரித்திடும் பொங்கல்!
-பகுத்தற...செம்மொழித் தமிழில் சிரித்திடும் பொங்கல்!<br /><br />-பகுத்தறிவுப் பாவலர் தென்மொழி ஞானபண்டிதன்<br /><br />செங்கதிர் ஒளியில் திகழும் கீழ்த்திசை வங்கக் கடலலை வரிசையாய் வணங்கும்<br /><br />பொங்கல் திருநாள்! பூமியின் பெருநாள்!<br /><br />பசும்புல் குளிர்மை பாரெலாம் பரவச்<br /><br />செம்மொழித் தமிழில் சிரித்திடும் பொங்கல்!<br /><br />தமிழர் தம்மைத் தலைநிமிர்த் திடும் நாள்!<br /><br />பெருமைக் குரியதாய்ப் பெரியார் உரைத்த<br /><br />அமுதப் பொங்கல்! அனைத்துயிர்க் கெல்லாம்<br /><br />இனியபுத் தாண்டின் இயற்கைப் பொங்கல்!<br /><br />இன்பந் தரும்இப் பொங்கல் திருநாள்<br /><br />உழவர் உழைப்பை உலகோர்க் குணர்த்திக்<br /><br />கழனிச் செந்நெல் கரும்பு மஞ்சள்<br /><br />விளைவைக் காட்டும் விடியல் பொங்கல்!<br /><br />அழகுப் பெண்கள் குலவை ஒலிக்க,<br /><br />பழகும் சிறுவர் முதியோர் பாட,<br /><br />இளைஞர் வீரம் கவிஞர் வாழ்த்தக்<br /><br />களைப்பெலாம் போக்கித் திளைத்திட வைத்தே<br /><br />என்றும் மகிழ்வைத் தருவதால்<br /><br />நன்றியின் பொங்கலை நாம்வாழ்த் துவமே!<br /><br />Read more: http://viduthalai.in/page4/73574.html#ixzz2qK2BRjU4<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-60574645587911527032014-01-14T04:26:47.023+05:302014-01-14T04:26:47.023+05:30
கும்பகோணம் மகாமகம் ஓர் எச்சரிக்கை
கும்பகோணத்தில...<br />கும்பகோணம் மகாமகம் ஓர் எச்சரிக்கை<br /><br /><br />கும்பகோணத்தில் சுற்று வட்டாரத்தில் உள்ள கேடிகள், பிக்பாக்கெட்டுகள் ஒரு மாதத்துக்கு முன்னரே கை அரிக்குதம்மா என்று பேசிக் கொள்வார்களாம். லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடங்களில் இவர்கள் கை வரிசையைக் காட்டுவது சுலபமாயிற்றே...<br /><br />மற்றும் கூட்டத்தைக் சாக்காக வைத்து பெண்களிடம் சில்விஷமம் செய்யும் இடி ராஜாக்கள்.<br /><br />நன்றி: கல்கி 9.2.1992<br /><br />Read more: http://viduthalai.in/page4/73574.html#ixzz2qK20YMeN<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-43277066682432398602014-01-14T04:25:02.647+05:302014-01-14T04:25:02.647+05:30
இன்பவீடு
தலைவி:
பொற்கோலப் பானையிலே மஞ்சள் கட்ட...<br />இன்பவீடு<br /><br /><br />தலைவி:<br /><br />பொற்கோலப் பானையிலே மஞ்சள் கட்டிப்<br />பொங்கியநற் சோற்றினிலே நெய்யை யூற்றிக்<br />கற்கண்டு, தேன் பருப்பு, வெல்லம் இட்டுக்<br />கலந்துவைத்தேன் அத்தானே! உண்ண வாரீர்!<br /><br />தலைவன்:<br /><br />சொற்கரும்பே! என்னன்பே! மக்களைத்தான்<br />சோறுண்ண அழைத்தனையோ? அவர்க ளெங்கே?<br /><br />தலைவி:<br /><br />நற்கரும்பின் சுவைசுவைத்துக் கொண்டிருப்பார்<br />நானழைத்து வருகின்றேன்! இருங்க ளிங்கே!<br />(தலைவி மக்களை அழைத்து வந்தாள்)<br /><br />பெண்:<br /><br />அப்பா! நம் செந்தமிழில் வளரு கின்ற<br />ஆரியத்தை மறைமலையார், களையும் செய்கைக்(கு)<br />ஒப்பாக அண்ணனின்று கரும்பின் தோகை<br />ஒருவெட்டில் விழவைத்தார். மேலும் அந்தத்<br />தப்பான ஆரியத்தின் முதுகுத் தோலைத்<br />தாமுரித்தல் போற்கரும்பின் பட்டை நீக்கிக்<br />கைப்பகற்றித் தனித் தமிழைத் தருதல் போலே<br />கரும்புவெட்டித் தந்திடநான் சுவைத்திட்டேனே!<br /><br />மைந்தன்:<br /><br />தன்மானக் கொடிகட்டி வீட்டின் உச்சி<br />தனில்உயர்த்திப் பறக்கவிட்டேன்; வந்துபாரீர்!<br />என்மானங் காத்ததமிழ்த் தாய்க்கிந் நாளில்<br />என்படையல், எப்படிநீர் சொல்லும், அப்பா!<br /><br />தலைவன்:<br /><br />பொன்மானே! நம்மக்கள் இருவரும்தான்<br />புவிபுகழும் பாவரசி, வீர னென்று<br />பின்நாளில் இலங்கிடுவார் என்று காணப்<br />பெருமகிழ்வால் என்நெஞ்சம் விரிந்த தன்றே!<br /><br />தலைவி:<br /><br />தமிழ்ச்சுவையில் திளைத்திருக்கும் அத்தானே! நான்<br />தரும்பொங்கற் சுவைகாண எழுந்துவாரீர்!<br />எமதருமை மக்காள்நீவிர் எழுந்துவாரீர்!<br />இனியவெல்லச் சோறுண்டு மகிழலாமே!<br />(உணவுண்ணச் சென்றார்)<br /><br />தலைவன்:<br /><br />நமதருமைப் பிள்ளைகட்கும் படைத்துச் சற்று<br />நறுநெய்யும் ஊற்றிவிட்டு நீயும் உட்கார்!<br />(உண்ணும்போது)<br /><br />மிகவினிது! மிகவினிது! வெல்லச்சோறு<br />மேலுமொரு சுரண்டியிட்டுக் கொள்ளுவோமே!<br />(உணவுண்டுகூடம் சென்றார்)<br /><br />வாழ்வினியே சுவைதந்தாய்! இன்பந்தந்தாய்!<br />வடிவழகே! நல்லசுவைப் பொங்கலிட்டாய்!<br />யாழுடனே தமிழிசையைச் சேர்த்து நல்கின்<br />அதுதானே பேரின்பம்! தொடங்குவாயே!<br /><br />தலைவி:<br /><br />யாழுடனே தமிழிசைக்கும் முன்னர் என்றன்<br />அகத்தெழுமோர் அய்யத்தைத் தீர்த்துவைப்பீர்!<br />வாழ்வளிக்கும் பொங்கலினை மறந்துவிட்டு<br />வண்டமிழர் தீவாளி கொண்ட தேனோ?<br /><br />தலைவன்:<br /><br />ஆரியத்தின் சூழ்ச்சியினால் தமிழர் இந்நாள்<br />அவர்க்கிழிவு தருநாளைத் திருநாள் என்று<br />பாரினிலே கொண்டாடித் தம்மா னத்தைப்<br />பறிகொடுத்து பெறவுழைக்கும் இராம சாமிப்<br />பெரியாரின் தன்மான இயக்கம் இன்று<br />பேரியக்க மாய்வளர்ந்து செய்யுந்தொண்டு<br />பெரு நாட்டில் விழிப்பருளும்! பாடுவாயே!<br /><br />தலைவி, யாழெடுத்துப் பாடினாள்:<br />பொன்னாய் விளைந்த நெல்லைக் குற்றி<br />அன்னம் ஆக்கிப் படைக்கும் பொங்கல்<br />அன்னம் ஆக்கிப் படைக்கும் பொங்கல்<br />என்னே நல்கிற் றின்பம் இன்பம்!<br /><br />இன்னா நீக்கிக் கைகள் நிறையப்<br />பொன்னாய்க் குவிக்கும் பொங்கல், நன்னாள்<br />பொன்னாய்க் குவிக்கும் பொங்கல் நன்னாள்<br />என்னே நல்கிற் றின்பம் இன்பம்!<br /><br />தமிழர் வாழ்வில் மகிழ்வே தோன்ற<br />அமிழ்தாய் இன்பம் ஆக்கும் பொங்கல்<br />அமிழ்தாய் இன்பம் ஆக்கும் பொங்கல்<br />எமக்கே நல்கிற் றின்பம் இன்பம்!<br /><br />- நாரா. நாச்சியப்பன்<br />(பொன்னி பொங்கல் மலர் 1948)<br /><br />Read more: http://viduthalai.in/page4/73573.html#ixzz2qK1YLYLn<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-50229949009454282622014-01-14T04:24:12.443+05:302014-01-14T04:24:12.443+05:30கம்பன் தொண்டு
பொன்னும் மாமணியும் புனை சாந்தமும்
...கம்பன் தொண்டு<br /><br />பொன்னும் மாமணியும் புனை சாந்தமும்<br /><br />கன்னி மாரொடு காசினி ஈட்டமும்<br /><br />இன்ன யாவையும் ஈந்தனள் அந்தணர்க்கு<br /><br />அன்னமும் தளிர் ஆடையும் நல்கினாள்.<br /><br />தன் மகன் இராமனுக்கு முடிசூட்டப் போவதைக் கேட்டுக் கோயிலுக்குப் போய்ப் பார்ப் பனர்க்குத் தானமாகப் பொன் னையும் பெருமை பெற்ற மணிகளையும், பூசுதற்குரிய சந்தனத்தையும், இளம் பெண் களையும், பல ஊர்களையும் இவை போன்றவைகளையும், சோற்றையும் ஆடை களையும் அளிக்கின்றாள்.<br /><br />இராமாயணத்தைத் தமிழாக்கிய கம்பன், தமிழ்ப் பண்பாடு கெடாமல் - தக்கவாறு மாற்றியமைந்துள் ளான் என்கின்றனர்.<br /><br />எங்கே மாற்றியமைத்தான்? - பார்ப்பானுக்கு இளம் பெண்களையும் கொடுப்பதென்பது தமிழர் பண்பாடா? - அந்த இழி செயல் ஆரியர்க்கு ஏற்கும். அதை அப்படியே தமிழர் முன்வைக்கும் கம்பனின் செயல் எத்தகையது? எண்ணுக!<br /><br />- புரட்சிக் கவிஞர் - (குயில் 28.10.1958)<br /><br />Read more: http://viduthalai.in/page4/73572.html#ixzz2qK1JU2qH<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-55388453569947051192014-01-14T04:23:19.831+05:302014-01-14T04:23:19.831+05:30
நரம்பியல் நிபுணர் டாக்டர் ராமமூர்த்தி சொல்கிறார்
...<br />நரம்பியல் நிபுணர் டாக்டர் ராமமூர்த்தி சொல்கிறார்<br /><br /><br />எனக்கு ஜோசியத்திலோ கிரகங்களினால் கெடுதல், அல்லது நன்மை ஏற்படுவதாகச் சொல்வதிலோ நம்பிக்கை கிடையாது.<br /><br />செவ்வாய்தோசம் என்றால் என்ன என்று யாருக் காவது சந்தேகமறத் தெரியுமா?<br /><br />செவ்வாய்க்கிரகம் எத்தனையோ தொலை தூரத் துக்கு அப்பால் - _ கோடிக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ளது. உயிரினங்கள் வசிக்க இயலாததாகக் கருதப்படும் உஷ்ணமான கோளம் அது.<br /><br />அவ்வளவு தூரத்தில் உள்ள ஒரு கிரகத்தினால், இங்குள்ள ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்றால் எப்படி நம்ப முடியும்?<br /><br />இதெல்லாம் சுத்த அபத்தம் மூடநம்பிக்கையை வளர்க்கும் எந்த விஞ்ஞான ஆராய்ச்சியையும் நாம் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.<br /><br />எந்த விஞ்ஞான ஆராய்ச்சியும், ஒரு தடவைக்கு (முதல் முறையாக மற்றவர்களாலும் அந்த கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டு போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அதை முழு மையான ஆராய்ச்சி என்று ஒப்புக் கொள்ள இயலும்.<br /><br />சில வருடங்களுக்கு முன்பு ஒரே கோட்டில் எட்டுக் கிரகங்கள் ஒன்று சேரப் போவதாகவும், அதனால் உலகில் பல விபரீதங்கள் நடைபெறப் போவதாகவும் அமர்க்களப்பட்டதே கடைசியில் என்ன ஆயிற்று?<br /><br />ஒன்றுமே நடக்கவில்லை என்பதுதான் நாம் கண் கூடாகப் பார்த்த விஷயம்.<br /><br />Read more: http://viduthalai.in/page4/73572.html#ixzz2qK17q6Y8<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-1126690628935207712014-01-14T04:19:31.511+05:302014-01-14T04:19:31.511+05:30
திருவாரூர் கமலாலயம்
திருவாரூரில் சரண கமலாலயம் எ...<br />திருவாரூர் கமலாலயம்<br /><br /><br />திருவாரூரில் சரண கமலாலயம் என்ற 16 ஏக்கரில் உள்ள குளம் இருக்கிறது. அங்கு முதலில் சமணர்கள்தான் இருந்தார்கள். சமணர்களை அடியோடு வெட்டிக் கொன்றனர். அந்த இடத்தைக் குளமாகவும் ஆக்கினர்.<br /><br />- கி.வீரமணி<br />(நூல்: பெரியாரியம் (கடவுள்) பக்கம் 212<br /><br />Read more: http://viduthalai.in/page4/73569.html#ixzz2qK09yd85<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-85109853514486725702014-01-14T04:13:40.864+05:302014-01-14T04:13:40.864+05:30
தமிழர் திருநாளில் வெளியிடுவோம் புதிய சமத்துவப் பு...<br />தமிழர் திருநாளில் வெளியிடுவோம் புதிய சமத்துவப் புத்தகம்!<br /><br /><br />- கவிஞர் கண்ணிமை<br /><br />இலை, தழை<br /><br />கிழங்கு, காய்கனிகள், நீர்<br /><br />இவைகளே குமரிக் கண்ட<br /><br />முதல் மனிதனின் உணவு!<br /><br />நிலத்தின் கன்னிமை கழிய உழுது<br /><br />விந்து வியர்வையை விதைத்தான்!<br /><br />அகர முதல் னகர இறுவாய்<br /><br />அனைத்தும் பெற்றுக் கொடுத்தது நிலம்!<br /><br />உணவுப் பழக்கம்<br /><br />தலைமுறை நமக்குத்<br /><br />திரட்டிக் கொடுத்த திரு!<br /><br />பூமிக்குத் தமிழன்<br /><br />கொடுத்த பரிசு<br /><br />புட்டும் தோசையும்!<br /><br />கோடை வெயிலுக்குக்<br /><br />கொங்கு மண்டலம்<br /><br />கொடுத்த கொடை<br /><br />கம்பங் கூழ்!<br /><br />கிண்டிய கழியும், கீரையும்<br /><br />ஆன சோறு<br /><br />உமிழ்நீர்ச்சுரப்பி மகிழ்ந்து<br /><br />ஊற்றெடுக்கும்!<br /><br />நோய் நீங்கி ஆயுள் நீளும்!<br /><br />சிக்கிமுக்கிக் கல்லைக்<br /><br />கண்டுபிடித்ததே<br /><br />உணவின் பொற்காலம்!<br /><br />அறிவுஆழ்ந்த அகன்றபோது<br /><br />உணவு<br /><br />அறுசுவையானது!<br /><br />தமிழ்ச்சித்தன்<br /><br />உணவே மருந்து என்றான்!<br /><br />ஈன்றாள்பசி குழந்தைகளின் பசி<br /><br />மூத்தோர் பசி<br /><br />இவை போக்கும் மனிதனைக்<br /><br />கையெடுத்துக் கும்பிடலாம்!<br /><br />விருந்தோம்புதல் என்ற<br /><br />சொல்லுக்கு ஈடான வினைச்சொல்<br /><br />உலகமொழிகளில் இல்லை!<br /><br />கைகுலுக்குதல் கட்டித் தழுவுதல்<br /><br />மனிதகுலத்தின்<br /><br />பண்பாட்டுப் பதிவுகள்!<br /><br />ஒழுக்கக் கட்டமைத்தபோது<br /><br />வானுயர் தோற்றம்<br /><br />வசப்பட்டது!<br /><br />வழிகிற கண்ணீரைத்<br /><br />துடைக்கும் விரல்கள் இருந்தால்<br /><br />அது<br /><br />வாழக் கிடைத்த கொடை!<br /><br />கல்லைக் கடவுளாக்க<br /><br />சிலை வடிக்காதே!<br /><br />மனிதனை வள்ளலாக்கி<br /><br />வாழவை!<br /><br />புகழை நிறுத்திவிட்டுப்<br /><br />போக வேண்டும் என்றால்<br /><br />அறம்செய்!<br /><br />வெடித்துச் சிதறிய<br /><br />வன்முறைகளால்<br /><br />மரண வாசலில் கிடக்கிறது<br /><br />மனிதம்!<br /><br />அன்பும் பரிவும்<br /><br />விரவிய சொற்களைக் கொண்டு<br /><br />தமிழர் திருநாளில்<br /><br />வெளியிடுவோம்<br /><br />புதிய சமத்துவப்<br /><br />புத்தகம்!<br /><br />Read more: http://viduthalai.in/page3/73565.html#ixzz2qJyfccmY<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-87552378544499740222014-01-14T04:12:21.314+05:302014-01-14T04:12:21.314+05:30வானலோகத்தில் காற்றே இல்லை
வானலோகம் சென்றுவிட்டால்...வானலோகத்தில் காற்றே இல்லை<br /><br />வானலோகம் சென்றுவிட்டால், ஊர்வசி, ரம்பை சகிதம் சுகமாய் இருக்க லாம் என்று நாம் சொல்லுகிறோம். அங்கு மூச்சுத் திணறும்படி காற்றே இல்லை என்று ஐரோப்பியர்கள் சொல்லுகிறார்கள்!<br /><br />குரு பூஜை தான் நடக்கிறது<br /><br />புத்தர்களை ஒழிக்க கடவுள் சங்கரராக அவதரித்தாராம். சங்கரருக்கு இப்போது, குருபூஜைதான் நடக்கிறது. 40 - 50 கோடி புத்தர்கள் வாழ்கிறார்கள்.<br /><br />- பாரதிதாசன் கதைகள்<br /><br />என்ன அர்த்த புஷ்டி<br /><br />வருந்தி அழைத்தாலும் வாராது வாரா!<br /><br />பொருந்துவன போமின் என்றாற் போகா<br /><br />என்ன அர்த்த புஷ்டி! இந்த வரிகளைப் பொன் தகட்டில்<br /><br />செதுக்குமுன், ஈய எழுத்தால் அச்சடித்து விட்டார்கள்.<br /><br />- பாரதிதாசன் கதைகள்<br /><br />மோக்ஷ வழி காட்டுங்கள்<br /><br />அடிகள்: பணம் கொடுங்கள், இதோ மோக்ஷம்.<br /><br />குடிகள்:எப்போதும் இது ஓர் கவலையா? வேண்டிய பணம் மொத்த மாய் கொடுக்கிறோம். மோக்ஷத்துக்கு முன்னே போய் வழிகாட்டித் தொலை யுங்கள்.<br /><br />- சிரிக்கும் சிந்தனைகள்<br /><br />அவர்கள் நினைப்பது சரி<br /><br />சர்வ வல்லமையுள்ள கடவுளுக்குப் பரிந்துகொண்டு கோபிக்கும் தொண் டர்கள். அந்தக் கடவுள் பேரால் நடக் கும் அட்டூழியங்களைக் கண்டிப்ப வரைப் பற்றிப் போலீஸின் உதவியை நாடுவதுண்டு. கடவுளைவிடப் போலீஸ் காரன் அதிக வல்லமையுடையவன் என்று அவர்கள் நினைப்பது சரி.<br /><br />- சிரிக்கும் சிந்தனைகள்<br /><br />அழிப்பது அரிது தான்<br /><br />ஒன்றை ஆக்குதல் அரிது, அழித்தல் எளிது என்பது முதுமொழி. இது எல்லா விஷயத்திலும் சரியில்லை. கடவுள் பெயரால் வெகு எளிதாகப் புளுகி வைத் துள்ளார்கள். அவைகளை அழிப்பது மிக அரிதாக முடிகிறது.<br /><br />- சிரிக்கும் சிந்தனைகள்<br /><br />ஒற்றுமைக்கு வழியேது<br /><br />பிற நாட்டினர் இயற்கை முறையில் தமது முகப்பொலிவை உண்டாக்கி, உருவத்திலும் சமூக ஒற்றுமை கொண்டிருக்கின்றனர். நம் நாட்டினர், சரக்குக் கேடாயிருந்தாலும் அதனுடைய டப்பி யை அழகு படுத்துவது போல் வற்றிய முகத்தில் நாமம், விபூதி முதலி யவைகளை எழுதிக் கொண்டு சமூக பேதத்தை வளர்த்துக் கொண்டு போகின்றார்கள்.<br /><br />- சிரிக்கும் சிந்தனைகள்<br /><br />Read more: http://viduthalai.in/page2/73576.html#ixzz2qJyNzFhm<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-23094960052684230342014-01-14T04:11:40.772+05:302014-01-14T04:11:40.772+05:30படைத்தது யார்?
(ஒரு சிற்பி கோயிலில் வினாயகருக்...படைத்தது யார்?<br /><br /> <br /><br />(ஒரு சிற்பி கோயிலில் வினாயகருக் கெதிரில் நின்று வணங்கிய வண்ணம்) அப்பனே! (ப்ரபூ)! என்னை ரக்ஷிக்க வேண்டும். கை, கால்கள் நோயில்லாமல் இருக்க கிருபை செய்ய வேண்டும். எல் லாவற்றையும் படைத்த கருணாநிதியே!<br /><br />அண்மையிலிருந்த ஒருவன்: சிற்பியாரே! இந்த வினாயகரை யார் செய்தது? அமைப்பாக இருக்கிறது.<br /><br />சிற்பி: நான்தான் செய்தேன்!<br /><br />ஒருவன்: எல்லாவற்றையும் அது படைத்ததாய் சொன்னீர்களே! அதற் காகக் கேட்டேன்.<br /><br />- பாரதிதாசன் கதைகள்<br /><br />போலீஸ் காபந்து இல்லாமல் வைகுண்டத்திற்குப் போக வேண்டாம்<br /><br />ஒருவன் பல கொலைக் குற்றம் செய்து வந்ததின் பயனாய்ச் சர்க்காரால் தூக்கில் இடப்பட்டான். அவன் மகன் வெளியிட்ட கருமாதிப் பத்திரிகையின் படி, அந்தக் கொலைகாரன் வைகுண் டம் போனதாய்த் தெரிகிறது. தக்க போலீஸ் காபந்து இருந்தாலொழிய வைகுண்டத்திற்கு எவரும் போக வேண்டாம்!<br /><br />- பாரதிதாசன் கதைகள்<br /><br />Read more: http://viduthalai.in/page2/73576.html#ixzz2qJyEkhgf<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-26550063975116287102014-01-14T04:11:07.690+05:302014-01-14T04:11:07.690+05:30பிள்ளை வளர்க்கும் முறை
ஆஸ்திகர்: பிள்ளைகளைச் ச...பிள்ளை வளர்க்கும் முறை<br /><br /> <br /><br />ஆஸ்திகர்: பிள்ளைகளைச் சிறுவய திலேயே ஒழுக்க முறையில் வளர்க்க வேண்டும்.<br /><br />சுய.மரி: அதோ நிர்வாணமாக நிற் கிறானே. அவன் தான் உங்கள் பிள் ளையோ?<br /><br />ஆஸ்திகர்: ஆம், பார்த்தீர்களா? பக்கத்திலுள்ள பையன் (தலை சீவி நன்கு உடுத்தி இருந்தவனைக் காட்டி) ஒரு நாளாவது நெற்றியில் நாமம் வைத்துக் கொள்வதில்லை.<br /><br />ஆயிரம் வருடமாக அடித்துக் கொண்டு போகிறான்<br /><br />மேல் நாட்டில் பிறந்து வளர்ந்த ஓர் இந்தியர்<br /><br />(தோட்டியைக் காட்டி) இவர் யார்?<br /><br />உள்ளூரார்: இவர் வீட்டிலுள்ள அசுத்தங்களை எடுத்துப் போகின்றார்.<br /><br />மே இந்தி: (வண்ணானைக் காட்டி) இவர் யார்?<br /><br />உள்: இவர் வீட்டிலுள்ள அழுக்குத் துணிகளையெல்லாம் எடுத்துப் போகிறார்.<br /><br />மே. இந்: திரும்பவும் சலவை செய்து வந்து கொடுப்பாரா?<br /><br />உள்: ஆமா!<br /><br />மே. இந்: (புரோகிதரைக் காட்டி) இவர் யார்?<br /><br />உள்: இவர் வீட்டிலுள்ள அரிசி, பருப்பு முதலியவைகளை மூட்டை கட்டிக் கொண்டு போகிறார்.<br /><br />மே. இந்: சமையல் செய்து கொண்டு வந்து கொடுப்பாரா?<br /><br />உள்: திரும்பிக் கொடுப்பதில்லை.<br /><br />மே. இந்: அடித்துக் கொண்டா போகின்றான்?<br /><br />உள்: ஆம்<br /><br />மே. இந்: அடித்துக்கொண்டு போவ தைப் பார்த்துக் கொண்டா இருப் பார்கள்?<br /><br />உள்: ஓய்! எத்தனை தரம் சொல் லுவது! அடித்துக் கொண்டு தான் போகின்றான்! 100 வருடமாக இப்படி.<br /><br />சீக்கிரம் வெளுத்துவிடும்<br /><br />புரோகிதன்: சென்ற தடவையில் திவசத்துக்கு வந்தேன். நீர் கொடுத்த அரிசி கறுப்பாக இருந்தது. இப்போதும் அதற்கு மேல் இருக்கிறது. என் மந்திர மும் உங்களுக்கு கறுப்பாக முடிந்துவிடும்.<br /><br />வீட்டுக்காரர்: சீக்கிரம் எல்லாமே வெளுத்துவிடும். போய் வாருங்கள்.<br /><br />- பாரதிதாசன் கதைகள்<br /><br />Read more: http://viduthalai.in/page2/73576.html#ixzz2qJy5mLsX<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-14668201427491384872014-01-14T04:08:31.316+05:302014-01-14T04:08:31.316+05:30
புரட்சிக் கவிஞரின் நகைச்சுவை ஒவியங்கள்
ஒரு சந்த...<br />புரட்சிக் கவிஞரின் நகைச்சுவை ஒவியங்கள்<br /><br /><br />ஒரு சந்தேகம்<br /><br />சரியாய் இரவு 1 மணி, தூக்கம் வரவில்லை. நமது புரோகிதரிடம் போனாலும் ஏதாகிலும் சந்தேகத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று தோன்றிற்று. மூன்றாவது வீதியிலுள்ள எங்கள் புரோகிதர் வீடு போய்க் கதவைத் தட்டினேன். உள்ளே குறட்டைவிடும் சத்தம் கேட்டதைத் தவிர, ஏன் என்று கேட்கவில்லை. பிறகு, ஐயர் அலறி எழுந்து யார்? யார் என்றார். கதவை இரண்டு உதை விட்டதினால்.<br /><br />புரோகிதர்: யார் இந்நேரத்தில்?<br /><br />நான்: நான்தான் கிண்டல்காரன்<br /><br />புரோ: என்ன அப்பா, நல்ல தூக்கம்! நடுநிசி!<br /><br />நான்: ஒரு முக்கியமான விஷ யத்தை நாடி வந்திருக்கிறேன். உங் களுக்கு மிக்க கீர்த்திக்குரிய விஷயம். ஐயர் விளக்கேற்றிக் கொண்டு வேஷ் டியைத் திருத்தமாய்க் கட்டிக்கொண்டு என் எதிரில் திண்ணையில் வந்து உட்கார்ந்தார்.<br /><br />ஐயர்: என்ன விஷயம்? இந்நேரத் தில் வந்ததைப் பார்த்தால் நூதனமான செய்தியாகத்தான் இருக்க வேண்டும். (ஒரு சிட்டிகைப் பொடி போட்டுக் கொண்டு, என்னிடமும் நீட்டி) பொடி போடுகிறீரா? என்ன நூதனம்? அதை முன்னதாகச் சொல்?<br /><br />நான்: எனக்கேற்பட்டிருக்கும் கவலையில் பொடியும் ஒரு கேடா? ஐயர்: (ஆச்சரியமாய்) அப்படி என்ன?<br /><br />நான்: விஷயம் அதற்கு... அதற்குச் சொந்த அர்த்தம் இன்னதென்று தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. உங்களிடம் அகராதி இருக்கிறதா?<br /><br />ஐயர்: நீர் சொல்லுமே! எனக்குத் தெரியாவிட்டால் பிறகு அகராதி கொண்டு வருகின்றேன்.<br /><br />நான்: அப்படியானால் சரி. விஷயம் என்னவென்றால் புரோகிதர் வீட்டுக்கு வீடு சென்று அரிசி, பருப்பும் மரக்கறி கள் மற்றும் சாமான்கள், சொர்ணப் புஷ்பம், இவைகளெல்லாம் வாங்கிக் கொண்டு வருகிறார்கள். இந்த விஷயம் பகலில் தானே நடக்கிறது?<br /><br />ஐயர்: ஆம்<br /><br />நான்: பகலில் நடத்தும் இதற்குப் புரோகிதம் என்றல்லவா பெயர்?<br /><br />ஐயர்: புரோகிதம் என்று தான் பெயர்<br /><br />நான்: புரோகிதம் என்ற பெயர் இதற்காகிவிட்டது.பகற் கொள்ளைக்கு என்ன பெயரிடுவது? யோசித்து, காலையிலாவது சொல்லுங்கள், நான் போய் வருகின்றேன்.<br /><br />- புதுவை முரசு விசேஷ அநுபந்தம்<br /><br />Read more: http://viduthalai.in/page2/73576.html#ixzz2qJxPoUXZ<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-36925188753639109302014-01-14T04:06:37.363+05:302014-01-14T04:06:37.363+05:30
சிவத்தம்பி பார்வையில் திராவிடர் இயக்கம்
சமுதாய ...<br />சிவத்தம்பி பார்வையில் திராவிடர் இயக்கம்<br /><br /><br />சமுதாய மாற்றத்தைக் கொண்டுவருவதில் கலைப்படைப்புக்கு முக்கியப் பங்குண்டு என்பதனைத் திராவிட இயக்கத்தினர் நன்கு அறிந்திருந்தனர். எனவே மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளைக் கலையாகவும் இலக்கிய மாகவும் படைக்க விரும்பினர்.<br /><br />தாங்கள் கொண்ட கொள்கைகளைக் குறிப்பாக மேடைப் பேச்சின் வாயிலாகவே மக்களிடம் சேர்ப்பித்தனர். இருப்பினும் இவர்கள் திரைப்படம், கதை, கட்டுரை, நாடகம் போன்றவற்றின் வழியாகவும் கொண்டு சென்றனர். இவர்கள் மேற்கொண்ட சமூகச் சீர்திருத்தத்திற்கு இலக்கிய வடிவங்கள் பெரிதும் துணை நின்றன.<br /><br />-கா. சிவத்தம்பி<br />தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், பக்கம் 83-90<br /><br />பார்ப்பனர் அல்லாதார் இயக்கம்!<br /><br />தென்னிந்திய வரலாற்றில் இந்த நூற்றாண்டின் மிகச் சிறப்பான நிகழ்ச்சி, திராவிட இயக்கம் என்று கூறப்படுகின்ற பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தின் எழுச்சியும் அதன் வளர்ச்சியுமாகும். இந்திய வரலாற்றில் முதன் முறையாக மதமோ, இனமோ அன்றிச் சாதியே பெருஞ்சக்தியாக அரசியலுள் நுழைந்தது.<br /><br />திராவிட இயக்கம் இந்திய வரலாற்றில் ஓர் அண்மைக்கால அத்தியாயமெனினும் இவ்வியக்கத்தின் தொடக்கம் குறித்து அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது. இப்போது இதுஒரு வரலாற்று ஆய்வுப் பொருளாகவே ஆகிவிட்டது.<br /><br />- ஏ.என். சட்டநாதன்,<br />தமிழ்நாட்டில் திராவிட இயக்கமும் அதன் பாரம்பரியமும், ப.3<br /><br />Read more: http://viduthalai.in/page2/73564.html#ixzz2qJwvhiuP<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-20570755592176360652014-01-14T04:05:13.880+05:302014-01-14T04:05:13.880+05:30
சிறகை விரி - செவ்வானமும் சிறிதாகும்!
நாள்தோறும்
...<br />சிறகை விரி - செவ்வானமும் சிறிதாகும்!<br /><br />நாள்தோறும்<br />தேதியைக்<br />கிழிக்கும்<br />நண்பனே, நண்பனே!<br /><br />புதிய தேதியில்<br />புத்தாக்க<br />ஓவியத்தைத்<br />தீட்டு!<br /><br />நேற்றைக்கு<br />விடுமுறை<br />இன்றைக்குப்<br />புதுநடை!<br /><br />உன் வீட்டில்<br />பஞ்சாங்கம்<br />இருக்கிறதா?<br />போ(க்)கியில் எரி!<br /><br />புராணப்<br />புத்தகங்கள்<br />உண்டா?<br />பொங்கலுக்கு<br />விறகைத் தேடாதே!<br /><br />சாமிப் படங்கள்<br />உண்டா?<br />சவரம் செய்யத்<br />தேவைப்படும்!<br /><br />மிக மிகப்<br />பழைமையா?<br />மிக மிகத் தேவை<br />திருத்தம் - இது<br />பெரியார் கொடுத்த<br />அழுத்தம்!<br /><br /><br />காகித ஊருக்குக் கரையானா<br />பேருந்து?<br /><br />காலத்தை வெல்ல<br />கடவுளா<br />படை மருந்து?<br /><br />சனி சரியில்லை<br />யென்று<br />வெள்ளியைத்<br />தேடினால்<br />நட்டம் அய்ந்து<br />நாட்கள்!<br /><br />செவ்வாய்<br />தோஷமென்றால்<br />செவ்வாய்க்கிரகம்<br />செல்பவன்<br />சிரிப்பானே!<br /><br />உன் காலை<br />உன் கையாலா<br />கட்டுவது?<br />உள்ளத்தில்கோழை<br />குடிகொண்டால்<br />உன் பகைவன்<br />நீயேதான்!<br /><br />செவ்வாயன்று<br />பொங்கல்!<br />சிரித்தபடி<br />பொங்கலிடு!<br /><br />சிறகைவிரி<br />செவ்வானமும்<br />சிறிதாகும்!<br />பொங்கலோ<br />பொங்கல்!<br /><br />- கவிஞர் கலி.பூங்குன்றன்<br /><br />Read more: http://viduthalai.in/page-1/73563.html#ixzz2qJwYTlx5<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-66283696917260072012014-01-13T06:48:58.496+05:302014-01-13T06:48:58.496+05:30சுய விருப்பத்துடன் மதம் மாற உரிமை உண்டு! பெண் தொடர...சுய விருப்பத்துடன் மதம் மாற உரிமை உண்டு! பெண் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு!!<br /><br />மதுரை, ஜன. 12- தூத்துக்குடி மாவட்டம், காயல் பட்டினம் பகுதியைச் சேர்ந்த கீதா என்பவர் தாக்கல் செய்த ஆள்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், வி.எஸ்.ரவி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவு பிறப்பித்தது.<br /><br />கீதா தனது மனுவில், எனது மகள் பவித்ராவை (வயது 19), தபிவீத் என்பவர் கடத்திச் சென்று கட்டாயப் படுத்தி இஸ்லாமிய மதத்துக்கு மாற்றம் செய்து திரு மணம் செய்து கொண்டார். மகளை மீட்க காயல் பட்டினம் காவல்துறையினருக்கு உத்தரவிட வேண் டும் எனக் குறிப்பிட்டு இருந்தார்.<br /><br />இம்மனு விசாரணைக்கு வந்த போது காவல்துறை யினர் பவித்ராவை ஆஜர்படுத்தினர். அவரிடம் விசா ரித்த பிறகு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு. மனு தாரரின் மகள் பவித்ராவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் சட்ட விரோதமாக தங்கவைக் கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.<br /><br />மேலும் தனது விருப்பத்தின் பேரிலேயே இஸ்லாம் மதத்துக்கு மாறி திருமணம் செய்து கொண்டுள்ளார். இஸ்லாம் மதத்துக்கு மாற யாரும் கட்டாயப்படுத்த வில்லை என்றும் தெரிவித்துள்ளார். இது தனது பெற் றோருக்கும் தெரியும் என தெரிவித்துள்ளார்.<br /><br />பவித்ரா திருமண வயதை அடைந்தவர் என்பதால் அவர் விரும்பும் நபரை திருமணம் செய்து கொள்ள உரிமை உள்ளது. மேலும் ஒருவர், தான் விரும்பும் மதத்துக்கு மாறுவது என்பதும் சட்டப்பூர்வ உரிமை யாகும். எனவே திருமணம் மற்றும் மதமாற்றம் ஆகிய விஷயங்களில் தவறு காண அடிப்படைக் காரணம் ஏதுமில்லாததால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.<br /><br />- இவ்வாறு அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது<br /><br />Read more: http://viduthalai.in/page-5/73527.html#ixzz2qElHot2d<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-41472881250539540202014-01-13T06:46:29.485+05:302014-01-13T06:46:29.485+05:30
தை தக்கா தை தக்கா!
தை முதல் நாள்தான் தமிழ்ப் பு...<br />தை தக்கா தை தக்கா!<br /><br /><br />தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் அறிக்கை வெளியிட்டதற்கு அஇஅதிமுக சார்பில் ஏதாவது பதில் சொல்ல வேண்டுமல்லவா! அதனால்தான் தை தக்கா தை தக்கா! என்று குதிக்கிறது. அக்கட்சியின் அதிகாரபூர்வ ஏடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். ஒரு பதில் எழுத முயற்சித்துள்ளது. குளிக்கப் போய் சேற்றில் விழுந்த கதை தான் அது.<br /><br />திமுக தலைவர் கலைஞர் அறிக்கையில் தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்பதற்கு தமிழ் அறிஞர்களும், தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்களும் கூறிய கருத்துக்களை எடுத்துக் கூறியிருந்தார் (முரசொலி, 11.1.2014).<br /><br />ஆனால் நமது எம்.ஜி.ஆர். ஏடு எவற்றை ஆதாரமாக எடுத்துக் காட்டியுள்ளது? தேவி பாகவதம், புராணங்கள், இதிகாசங்கள் இவற்றை எடுத்துக் காட்டியுள்ளது (புராணங்கள் வரலாறு அல்ல என்கிற அடிப்படை கூடத் தெரிய வில்லையே, அந்தோ பரிதாபம்!).<br /><br />பிர்மா, விஷ்ணு என்னும் இந்து மதக் கடவுள் களையும் துணைக்கழைத்துள்ளது. (இதற்குப் பெயர்தான் இந்துத்துவா என்பது)<br /><br />ஆரிய மாயை பற்றி அறிஞர் அண்ணா எழுதியுள்ளதைப் படித்தால் இந்த ஆரிய மாயையின் அடிப்படை அப்பட்டமாகப் புரியும்.<br /><br />பூணூலின் மகத்துவத்தைப் பற்றி பிரஸ் தாபிக்கும் அண்ணா திமுக ஏடல்லவா! வேறு எப்படித் தான் எழுதும்?<br /><br />ஆரியம் ஒரு நடமாடும் நாசம் திராவிடத் தோழா வேண்டாம் அதனிடம் பாசம்<br /><br />அதனால் வருமே அந்தகக்காசம்!<br /><br />- அறிஞர் அண்ணா (ஆரிய மாயை நூல்)<br /><br />Read more: http://viduthalai.in/page-2/73534.html#ixzz2qEkcA9OW<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-89116531234318843652014-01-13T06:44:39.022+05:302014-01-13T06:44:39.022+05:30
முத்தமிழ்ப் பொங்கல்
பொங்கல் விழா! முத்தமிழ்ப் ப...<br />முத்தமிழ்ப் பொங்கல்<br /><br /><br />பொங்கல் விழா! முத்தமிழ்ப் பொங் கல் விழா! முப்பால் பொங்கல் விழா! ஆரியத்தால் புராண மத மூட இதி காசத்தால், முதலாளித்துவத்தின் ஆணவ அடக்கு முறைகளால் தீண்டப் படாத, மங்காத தமிழர் பண்டைத் தனித் தமிழ் வாழ்வின் நந்தாத நறுஞ் சின்னம்! தனித் தமிழ் விழா! தன்மான விழா!<br /><br />உழவர் விழா! நிலத்தின்மீது காத லற்று, அதனைப் பிறர் உழுவித்துத் தான் தன்மானமற்று, உழையா உழைப்பை உண்ணும் நில முதலாளி அல்லது ஜமீன், மிராசுதாரர் ஆகிய முதலாளித்துவக் கடவுளால் படைக் கப்பட்டு முன்னிருந்த, தானே தன் நிலத்தின் உரிமையாளனாய், தானே அதைத் தனித் தமிழ்க் காதலனாய் உழுது உழைத்துப் பயிரிடுபவனாய், தானே அதன் இன்பமும் பயனும் நுகர்பவனாய், தானே அதன் பண்டம் பரிமாறும் வணிகனாய், தானே ஊராளும் குடியரசன் குடிமொழிக்குரிய குடியாட்சி உரிமையாளனாய், தானே அக்குடியரசன் குடிப்படையின் வீரனாய், தன் குடும்பத்தின் தொழுகைக் கூட மாகிய கோயில் வீடு அல்லது அரங்கில் தானே தன் குடும்பத் தலைவனாய் வழிபாடாற்றும் வழிபாட்டுத் தலை வனாய் வாழ்ந்த பண்டைப் பொது வுடைமைப் பெருந்தமிழன் காலத் திலிருந்து இன்றுவரை பண்பு மாறாது கொண்டாடப்பட்டு வரும் உழவர் விழா! வேளாளர் விழுத் தமிழ் விழா! பொதுவுடைமைப் பண்பாட்டு விழா! தனித் தமிழர் திராவிடப் பெருவிழா!<br /><br />யானை எருத்தம் பொலியக் குடை நிழற் கீழ் சேனைத் தலைவராய் வள்ளு வப் பெருமகன் தன் திண்டோள்கள் இரண்டும் புடைக்க, மகிழ்ச்சி முகத்தில் பெருக்கெடுத்து இருகண்வழி ஓடி ஒளிவீச, குன்றென நின்று கறங்கும் இரு முரசங்களை யானையின் இருபுறமும் ஞாற்றிக் கால்களால் அவற்றைத் தாங்கிக் கையிலுள்ள குணில்களால் புடைத்து, மன்னன் வளம் பாடி, மழை வளம், புகழ்பாடி, கொண்டல் வண் ணன் மழைவேந்தனுக்கு விழாவயர்வீர் மதுரை மன்னரீர்! என்று முழங்கி விழா வாட்டழைத்த பண்டைத் தமிழர் இந்திர விழா எங்கே! எங்கே! அது பொங்கல் விழாவின் பொங்கலில்தான் புதைந்து எஞ்சியுள்ளது! செஞ்சிலம்பார் சிலப்பதிகாரமும் பொன்மணியார்க்கும், வண்ண மணிமேகலையும் முழங்கும் இந்திர விழாவை நாம் இழந்தோம், இதனிற் கலந்தோம்!<br /><br />வெள்ளைத் தீவைப் படையெடுத்து அதனில் வெண்கடப்பந் தார்சூடிக் கடம்பமரத் தடியிருந்து மேல்கட லாண்டு அக்கடலில் கலஞ்செலுத்திய மேல் நாட்டு வணிகரைச் சூறையாடிய கடம்பன் என்ற கடற்கொள்ளை இனத்தைத் தவிடுபொடியாக்கிய சேரரின் கடற்காவலனாய் மங்களூரைத் தலைநகராகக் கொண்டு தென் கன்னடத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட வேளிர் கோமான் நன்னன் தன் பெயரிட்டு மதுரையில் நடத்திய திருவோண விழா எங்கே! எங்கே! அத்தமிழர் தமிழ் விழா மறைந் தது! அது இந்தப் பொங்கல் விழா வில்தான் எஞ்சி உறைந்து கிடக்கின் றது.<br /><br />தமிழகத்தில் மறைந்த திருவோண விழா பண்டைச் செந்தமிழ்ச் சேரல நாடான கேரள நாட்டில் இன்றும் தேசியத் திருவிழாவாக, மலையாள நாட்டுத் திராவிடத் திருநாளாகக் கொண்டாடப்பட்டுத் தான் வருகிறது. இன்றைய தமிழ் நாட்டுத்திராவிட இயக்கத்தார் கண்களுக்கு இன்னும் புலப்படாமல்! அது மாவலி மன்னன் தென்னாடெங்கும் ஒரே சக்கரவர்த் தியாய், ஆரியம் தென்னாட்டில் புகுமுன், ஒரு மொழி வைத்து ஒரு முத்தமிழ் இலக்கியம் கொண்டு ஒரு குல மக்களாய் ஒரு பெருங்கடவுள் போற்றி ஆண்ட காலத்தின் நினைவு நாள். ஆரியம் புகுந்தது குள்ளமான வாமன முனி உருவில், சூழ்ச்சி செய்தது,தானங் கேட்கும் உருவில்!<br /><br />பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க<br />நாகரிகம் வேண்டு பவர்<br /><br />என்ற வள்ளுவர் பண்பின்படி, வஞ்சனை என்று தெரிந்த வாமனன் சூழ்ச்சியில் தானேசென்று சிக்கி அழிந்தான் ஆனால் அவன் மாவலி. சிரஞ்சீவி, அழியா அறிவுருவினன். அவன் கூறினான், தென்னாட்டவரே! நீவிர் இன்று சீர்குலைகிறீர். ஆனால் பின்னால் சீர்ப்படுவீர். அதுகாறும் என் நினைவாக ஓணவிழாக் கொண்டாடுக. ஒருகாலம் வரும், ஓண விழாத்தோறும் நாடு உலா வரும் யான் ஒரு ஓண நாளில்மீண்டுந் தென்னாட்டை ஆள வருவேன் என்று. அதனைப் பாடி ஆணும் பெண்ணும் ஆரியமின்றி, ஆரிய வினை முறையின்றிக் கொண்டாடி வருகின்றனர் மலையாளத் திராவிடர்.<br /><br />மாவலியின்பின் அவன் பிள்ளைகள் ஐவர், பாண்டியன், சோழன், சேரன், கருநாடன், ஆந்திரன் போராடி அய்ந்தரசராய் நாளடைவில் ஐந்து மொழி நாடுகளாண்டனர். சாதி சமய மூடம் புகுந்தது.<br /><br />இத்திராவிடத் திருநாளுக்கும் பொங்கல் நாள் உடன் பிறந்த தங்கை நாள். பொங்குக பால்! பொங்குக தேன்! பொங்குக வருங்காலத் திராவிடப் பொங்கல்!<br /><br />(திராவிடத் திருநாள் கலைமன்றம் சென்னை-1)<br /><br />Read more: http://viduthalai.in/page-2/73526.html#ixzz2qEk39uCK<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-54113079919066491492014-01-13T06:42:56.644+05:302014-01-13T06:42:56.644+05:30இந்நாள்... இந்நாள்....
பகுத்தறிவுச் சிந்தனையாள...இந்நாள்... இந்நாள்....<br /><br /> <br /><br />பகுத்தறிவுச் சிந்தனையாளர் திராவிடர் இயக்கத்தின் தீரர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் மறைவு (2000).<br /><br />நாவலர் கடைசியாகக் கலந்து கொண்ட நிகழ்ச்சி பெரியார் திடலில் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த புத்தாயிரம் தொடக்க விழாவில்தான் (31.12.1999 நள்ளிரவு).<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/73520.html#ixzz2qEjoQalr<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-26135092364106178682014-01-13T06:40:09.962+05:302014-01-13T06:40:09.962+05:30
அயல் பற்று
தமிழிசை ஆய்வாளரான மம்முது சொன்ன கருத...<br />அயல் பற்று<br /><br /><br />தமிழிசை ஆய்வாளரான மம்முது சொன்ன கருத்து புதிய தலைமுறை இதழில் (16.1.2014) வெளி வந்துள்ளது.<br /><br />முத்தமிழ் என்று நாம் சொல்கிறோமே தவிர, இதில் இயற்றமிழ் தவிர்த்து இசை, நாடகத் தமிழ் பரவலாக யாருக்கும் தெரிவதில்லை. ஒரு முறை அமெரிக்கா சென் றிருக்கும்போது, அங்குள்ள பல்வேறு நண்பர்களின் வீடு களுக்குச் செல்ல வேண்டி இருந்தது.<br /><br />அங்கு எல்லா ருடைய வீட்டிலும் ஏதாவது ஓர் இசைக் கருவியை வைத்திருக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் ஒரு இசைக்கருவி வாசிக்கத் தெரிந்திருக்கிறது. அங்கு இசையைக் கொண்டாடுகின் றனர். ஆனால் நம்மிடையே இந்தப் பழக்கம் தலைகீழாக உள்ளது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் தமிழிசை அழியும் வாய்ப்புகள் அதிகம்.<br /><br />தமிழிசையைக் காப் பாற்றுவது நம் ஒவ்வொரு வரின் கையில்தான் உள்ளது. இன்று திருமணங்களில் நாதஸ்வரம், தப்பாட்டம் போன்ற தமிழிசைகள் இடம் பெறுவதில்லை.<br /><br />வேறு மாநில இசைக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் கூட தமிழிசைக் கலைஞர்களுக்கு தமிழர் களால் வழங்கப்படுவதில்லை. இந்த நிலையை மாற்ற வேண் டும். தமிழிசைக் கலைஞர் களுக்கான பொருளாதார வாய்ப்புகள் உறுதி செய் யப்பட்டாலே தமிழிசையை பெருமளவில் காப்பாற்ற முடியும். கர்நாடக சங்கீத சபாக்கள் போல தமிழிசைக் காக சபாக்கள் உருவாக் கப்பட வேண்டும். அங்கு நடக்கும் தமிழிசை நிகழ்ச்சி களில் தமிழர்கள் கலந்து கொள்ள வேண்டும்.<br /><br />மேலே கண்டுள்ள மம்முது அவர்களின் கருத்தில் பல உட் பொருள்கள் பொதிந்து கிடக்கின்றன.<br /><br />தமிழர் வீட்டுத் திரும ணங்களில் நாதஸ்வரம், தப்பாட்டம் போன்ற தமிழிசை காணப்படவில்லையே என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி யுள்ளார்.<br /><br />விவசாயம் போலத்தான் இந்தத் தமிழ் இசைக் கலை களும்; விவசாயம் உடலு ழைப்பைப் பெரிதும் சார்ந்தது என்பதால் அதனைப் பாவத் தொழில் என்று மனுதர்மம் ஒதுக்கி விடவில்லையா? அதன் விளைவை இன்று வரை கூட நம் மக்கள் அனு பவித்துக் கொண்டு தானி ருக்கிறார்கள்.<br /><br />நாதஸ்வரம், தப்பட்டம் போன்ற கலைகள் உடலு ழைப்பைக் கூடுதலாக உறிஞ் சக் கூடியதாகும். அதனாலே ஆரியம் அதனை ஒதுக்கி விட்டது. தவில் போன்ற கருவிகள் பக்கம்கூட அவர் கள் நெருங்க மாட்டார்களே!<br /><br />வேறு மாநில இசைக் கலைக்கு வழங்கப்படும் இசை வாய்ப்புகள்கூட தமிழிசைக் கலைஞர்களுக்கு வழங்கப் படுவதில்லை என்று மம்முது அவர்கள் குறிப்பிட்டு இருப் பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.<br /><br />இப்பொழுது புதிதாக ஒரு வியாதி கிளம்பி இருக்கிறது. தமிழ்நாட்டில். அது கேரளா விலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. செண்டை மேளமாம். இது குறித்துத் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர் களும் இ(அ)டித்துக் கூறி இருக்கிறார்.<br /><br />தமிழர்கள் தங்களுக் குரிய மதிப்பைவிட அயல் வழக்குகளில் தங்களைப் பறி கொடுப்பது பல வகைகளி லும் நடந்து கொண்டு இருப்பதுதானே தமிழர்களின் இழப்புகளுக்குக் காரணம்.<br /><br />- மயிலாடன்<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/73522.html#ixzz2qEj5m5AX<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-41702052500177033542014-01-12T06:01:56.576+05:302014-01-12T06:01:56.576+05:30
யார் வார்த்தைகள் கடினம்?
பார்ப்பனர்களுக்கு அனுக...<br />யார் வார்த்தைகள் கடினம்?<br /><br /><br />பார்ப்பனர்களுக்கு அனுகூலமில்லாத மந்திரிகளைக் கண்டிப்பதற்கு என்று பார்ப்பனர்கள் காங்கிரசின் பேரால் கோகலே ஹாலில் ஸ்ரீ பெசண்டம்மையின் தலைமையில் ஒரு கூட்டம் கூடியபோது ஒருவர் பேசுகையில் மந்திரிகள் தங்கள் பெண் ஜாதிகளை விட்டுக்கொடுத்து மந்திரி வேலைகளைச் சம்பாதிப் பார்கள் என்று சொன்னாராம்.<br /><br />இது யோக்கியமான வார்த்தையா என்று கேட்கின்றோம். இவ்வார்த்தைகளை எந்த யோக்கியர் களாவது கண்டித்தார்களா என்று கேட் கின்றோம். ஸ்ரீ வரதராஜுலுவாவது அவரது பத்திரிகையாவது தமது தலைவர் களுடைய இம் மாதிரி வார்த்தைகளை கண்டித்தாரா என்று கேட்கின் றோம்.<br /><br />ஸ்ரீமான் குழந்தை கடற்கரையில் மந்திரிகளைக் கொடும்பாவி கொளுத் தியதற்கு கோபித்துக்கொண்டதாக வேஷம் போட்ட ஸ்ரீவரதராஜுலுவுக்கும் தமிழ்நாடுக்கும் பெண்ஜாதிகளை விட்டுக் கொடுப்பார்கள் என்று சொன்ன வார்த்தை அவ்வளவு கடினமானதாக தோன்றவில்லைபோல் இருக்கின்றது. இதனால் அக்கோஷ்டியின் அற்பத்தனமும் காலித்தனமும் எவ்வளவு என்பது விளங்க வில்லையா?<br /><br />சாதாரணமாக ஹைகோர்ட் ஜட்ஜுகளில் யாருக்காவது மேகவியாதி இருக்குமானால் அது மைலாப்பூர் காங்கிரஸ்வாதிகள் தேசியவாதிகள் உபயமேயாகும். இம்மாதிரி யோக்கியர்கள் மிகுதியும் நிறைந்த சென்னை காங்கிரஸ் வாதிகள் தங்கள் யோக்கியதைகளை மறைத்துக் கொண்டு இம்மாதிரிப் பேச அயோக்கியர்களைத் தூண்டிவிடுவதும், அதை கண்டிக்காமல் இருக்கச் செய்வதும் ஒரு ஆச்சரியமல்ல.<br /><br />தவிர, வேறு ஒரு காங்கிரஸ் தலைவராகிய ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அவர்களும், அவரது ஆயுளில் இம்மாதிரியாக அநேக தடவை களில் அதிகப்பிரசங்கித் தனமாய்ப் பேசிவிட்டு மன்னிப்பு கேட்டுக் கொண்ட தானது ஸ்ரீவரதராஜுலு மன்னிப்பு கேட்டுக் கொண்டதைவிட நூறு பங்கு அதிகமாகவே இருக்கும்.<br /><br />ஆகவே யாரு டைய வார்த்தைகள் கடினமானதென்பதும் முழுவதும் அக்கிரமமானதும், பொய்யா னதும் என்பதும் இழிவானது என்பதும் இதிலிருந்தாவது பொது ஜனங்கள் உணர வேண்டுமாய் எதிர்பார்க்கின்றோம்.<br /><br />அன்றியும் பார்ப்பனர்களுக்கு அனு கூலமான, உத்தியோகங்கள் என்ன வேலை செய்து யார் பெற்றாலும் பத்திரி கைகள் என்ன வேலை செய்து யார் நடத்தி னாலும் அவைகள் எல்லாம் யோக்கியமான தேசியமென்பதும் பார்ப்பனர்களுக்கு அனுகூலமில்லையானால் அவைகளைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பதுமே தேசியமாகவும் காங்கிரஸ் சட்டமாகவும் இருக்கின்றது என்பதையும் உணரவேண்டுமாய் விரும்புகின்றோம்.<br /><br />- குடியரசு - கட்டுரை - 25.03.1928<br /><br />Read more: http://viduthalai.in/page-7/73485.html#ixzz2q8iwV2DX<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-82913385271121735622014-01-12T06:00:26.534+05:302014-01-12T06:00:26.534+05:30
இன்னுமா சந்தேகம்? இரகசியம் வெளியாய் விட்டது
பார...<br />இன்னுமா சந்தேகம்? இரகசியம் வெளியாய் விட்டது<br /><br /><br />பார்ப்பனர்கள் காங்கிரஸின் பேராலும் தேசியத்தின் பேராலும் ஸ்ரீ வரதராஜுலு போன்ற ஆசாமிகளைச் சுவாதீனம் செய்து கொண்டு பார்ப்பனரல் லாதாருக்குக் கெடுதி செய்து வருவதைப் பற்றியும் சென்ற சட்டசபைத் தேர்தல் முடிந்தவுடன் காங்கிரசுக்கும் தேசியத்திற்கும் விரோதமாய்ப் பொய்க்கால் மந்திரிகளைச் சிருஷ்டித்ததும், அவர்களை ஆதரித்ததும் பார்ப்பனரல்லாதார் களுக்குக் கெடுதி உண்டாகச் செய்யவே என்பதாகவும் பலமுறை எழுதிவந்திருக்கின்றோம்.<br /><br />இதற்கு சரியன ருசு கொடுக்க சமீபத்தில் சென்னை சட்ட சபையில் விலக்கப்பட்ட மந்திரியாகிய ஸ்ரீமான் ரங்கநாதமுதலியார் சொன்ன வாசகமே போதுமானதென்று நினைக்கின்றோம்.<br /><br />அவர் சொன்னதாவது 1926-ல் நாங்கள் மந்திரி பதவிகளை ஏற்றுக் கொண்டவுடன் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் எங்களை ஆதரிப்பதாக காங்கிரஸ் கட்சியாரிடமிருந்து ஒப்பந்தம் வெளியாயிற்று.<br /><br />அந்த ஒப்பந்த நிபந்தனை என்னவென்றால் ஸ்தல ஸ்தாபனங்களுக்கும், கமிட்டி களுக்கும் மற்ற நியமனங்களுக்கும் ஜஸ்டிஸ் கட்சியாரை நியமிக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான், இந்த வாசகம் ஸ்ரீமான் எ. ரங்கநாத முதலியார் அவர்கள் சொன்னதாக 23.03.1928இல் சுதேசமித்திரனிலேயே இருக்கிறது.<br /><br />இதைக் காங்கிரஸ் கட்சி சட்டசபைத் தலைவர்கள் ஸ்ரீமான்கள் சாமி வெங்கிடாசலமும், சத்தியமூர்த்தியும் சட்டசபையில் மறுக்கவில்லை என்பதினாலேயே இது உண்மை என்பது ஒரு சிறிதும் சந்தேகமில்லை.<br /><br />இப்படி இருக்க ஜனாப் அமீத்கான் சாயபு காங்கிரஸ் கட்சியாருக்கு அம்மாதிரி நிபந்தனை செய்து கொள்ள யாரும் அதிகாரம் கொடுக்கவில்லை என்பதினாலேயே ஸ்ரீரங்கநாத முதலியார் சொல்வது பொய்யாகி விடுகிறதா? என்பதை வாசகர்களே யோசித்துப் பார்த்துத் தேசியமென்பதும், காங்கிரசென்பதும் பார்ப்பனரல்லாதாருக்கு ஆபத்தா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டுகிறேன்.<br /><br />- குடிஅரசு - கட்டுரை - 25.03.1928<br /><br />Read more: http://viduthalai.in/page-7/73483.html#ixzz2q8iZSZ80<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-44129902537765400032014-01-12T05:58:10.372+05:302014-01-12T05:58:10.372+05:30
தமிழ்நாடு அரசு சிந்திக்குமா?செயல்படுமா?
சென்னை ...<br />தமிழ்நாடு அரசு சிந்திக்குமா?செயல்படுமா?<br /><br /><br />சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் தமிழ்நாடு அரசு தொடங்கவிருக்கும் பல்நோக்கு சிறப்பு உயர் மருத்துவமனைக்கான மருத்துவ பேராசிரியர்கள் தொடர்பான பணி நியமனத்தில் இடஒதுக்கீட்டை அறவே புறக்கணித்ததன் மூலம் அடிப்படைத் தவறினைச் செய்துவிட்டது; அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும் தமிழ் நாடு அரசின் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கான சட்டத்திற்கு முரணாகவும் நடந்து கொண்டு இருக்கிறது.<br /><br />இதுபற்றிக் கடுமையான விமர்சனங்கள், எதிர்ப்புகள் கிளர்ந்து எழுந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு தரப்பில் எந்தவித விளக்கமும் சொல்லப்படாததிலிருந்தே ஒன்று தெளிவாகவே தெரிகிறது. தமது தரப்பில் தவறு நடந்திருக் கிறது என்று அரசுக்கு நன்கு தெரிந்து விட்டது என்பதை அறிய முடிகிறது. இல்லாவிட்டால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்கிற முறையில் எதையாவது தெரிவித்திருப்பார்கள்.<br /><br />சரி, தவறு நடந்து விட்டது என்று அறிந்த மாத்திரத்தில் விளம்பரத்தை மாற்றி வெளியிட வேண்டியதுதானே, அதில் என்ன தயக்கம்?<br /><br />எந்த இடத்தில் இந்தத் தவறு நடந்திருக் கிறது என்று துறை ரீதியான விசாரணைகள் ஒரு பக்கம் நடத்தப்படட்டும், மற்றொரு பக்கம் சட்ட ரீதியாக இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனத்துக்கான அறிவிக்கையை விளம்பரமாகக் கொடுப்பதில் ஏன் தாமதம்?<br /><br />நீதிமன்றம் சென்று அது தலையில் குட்டியதற்குப் பிறகுதான் திரு(ந்)துவது என்ற நிலைப்பாடு ஒரு நல்லரசுக்கு உகந்ததாக இருக்க முடியாது.<br /><br />மெடிக்கல் சர்வீசஸ் ரெக்ரூட்மென்ட் போர்டு (MRB) சார்பில்தான் விளம்பரம் வெளியிடப் பட்டது. அதன் சட்ட விதிகளிலேயே நான்காம் பகுதியிலேயே (Chapter- 4) கீழ்க்கண்டவாறு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.<br /><br />Number of posts reserved for scheduled castes, scheduled tribes and other backward classes in a cadre having morethan 13 posts shall be determined by multiplying the cadre strength by the percentage of reservation prescriped for the respective categories while during so fraction if any shall be ignored” என்று தெளிவாகவே கூறப்பட்டுள்ளதே.<br /><br />13 இடங்கள் காலியாக உள்ள எந்த ஒரு பணியிடத்துக்கும் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.<br /><br />அதன்படி பார்க்கப் போனால் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசின் விளம்பர அறிக்கையில் மூத்த ஆலோசகர்கள் (Senior Consultants) 14 இடங்கள், இணை ஆலோச கர்கள் 13 இடங்கள், இளநிலை ஆலோசகர்கள் 23, நிலைய மருத்துவர்கள், 19 பதிவாளர்கள் 14 இடங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லாம் 13 இடங்களுக்கு மேற்பட்டது என்பதால் விதிமுறைகளின்படி கண்டிப்பாக இடஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டே ஆக வேண்டும்.<br /><br />கட்சிகளைக் கடந்து திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னையில் கூட்டப்பட்ட சமூகப் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அத்தனைப் பேரும், ஒருமித்த எண்ணத்தோடு இடஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளனர்.<br /><br />அந்த வகையில் தீர்மானமும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பல்வேறு கட்சிகள் சமூக நீதி அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்கும் சிறப்புப் பொதுக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் வரும் 13ஆம் தேதி மாலை ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.<br /><br />இந்தப் பிரச்சினையில் தந்தை பெரியார் அவர்களால் பக்குவப்படுத்தப்பட்ட தமிழ்நாட்டு மக்கள் சமூக நீதியின் பக்கம் பெரும் அளவில் திரண்டு நிற்பர் என்பதில் அய்யமில்லை.<br /><br />காலம் கடந்துவிடவில்லை - தமிழ்நாடு அரசு சமூக நீதித் திசையில் சிந்திக்குமா? செயல் படுமா? எங்கே பார்ப்போம்!<br /><br />Read more: http://viduthalai.in/page-2/73470.html#ixzz2q8hzn8Wn<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-57731973366177963782014-01-12T05:57:31.165+05:302014-01-12T05:57:31.165+05:30
சிறிதும் இராது
பார்ப்பனருக்கு நோக்கமெல்லாம் பதவ...<br />சிறிதும் இராது<br /><br /><br />பார்ப்பனருக்கு நோக்கமெல்லாம் பதவி, உத்தியோகம் ஆகியவற்றில் தங்களுக்கு ஏகபோகம் இருக்கவேண்டும் என்பதுதானே ஒழிய, மற்றபடி நாணயம், நீதி, நேர்மைபற்றியோ பார்ப்பனர் தவிர்த்த மற்றவர்பற்றியோ கவலை சிறிதும் இராது.<br /><br />- (விடுதலை, 10.6.1968)<br /><br />Read more: http://viduthalai.in/page-2/73469.html#ixzz2q8hq97uu<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-25183046889809202682014-01-12T05:56:26.574+05:302014-01-12T05:56:26.574+05:30டாக்டர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு புறக்கணிப்பா? எ...<br />டாக்டர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு புறக்கணிப்பா? எதிர் வழக்கை ஏற்றது உயர்நீதிமன்றம்<br /><br /><br />மதுரை, ஜன.11- சென்னை அரசு சிறப்பு மருத்துவமனை டாக் டர்கள் நியமனத்தில், இட ஒதுக்கீடு முறையை புறக்கணித்துள்ளதால், அறிவிப்பை ரத்து செய்ய தாக்கலான வழக்கில், தமிழக அரசுக்கு தாக் கீது அனுப்ப, மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.<br /><br />சிவகங்கை மாவட்ட தி.மு.க., துணைச் செய லாளர் மணிமுத்து தாக் கல் செய்த பொது நல மனு: தமிழ்நாடு மருத்து வப் பணியாளர்கள் தேர்வு வாரியம் 2013 டிச., 27 ல் அறிவிப்பு வெளி யிட்டது. அதில், 'சென்னை அரசு சிறப்பு மருத்துவ மனைக்கு (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இயக்குநர், டாக்டர்கள், இதர பணிக்கு 84 பேர் தேர்வு செய்யப்படுவர். பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், ஆதிதிரா விடர், பழங்குடியினர், இதர பிற்பட்டோர் விண்ணப்பிக்கலாம்.<br /><br />இந்நியமனத்திற்கு, இட ஒதுக்கீட்டு விதிமுறை கள் பொருந்தாது' என உள்ளது. மருத்துவ பணி யாளர்களுக்கு மக்களின் வரிப் பணத்திலிருந்து, அரசு சம்பளம் வழங்கு கிறது. நியமனத்தில் இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றாதது, அரசிய லமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. பணி நியமன அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.<br /><br />நீதிபதிகள் ஆர்.சுதா கர், வி.எம்.வேலுமணி பெஞ்ச் முன், மனு விசா ரணைக்கு வந்தது. மனு தாரர் தரப்பில் வழக்குரை ஞர் கே.சஞ்சய்காந்தி ஆஜரானார். தமிழக சுகாதாரத்துறை செயலர், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலருக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், ஜன., 27 க்கு ஒத்தி வைத்தனர்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/73465.html#ixzz2q8hZ8x9C<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com