tag:blogger.com,1999:blog-1474608369333206681.post7802537854931504042..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: ஜாதி வெறி வளருவதற்கு இடம் அளிக்காது S.C., S.T., S.C.(A)., MBC., OBC., OBC(M) என்று குறிக்கவும்!தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-61289560480501501062013-06-20T19:22:37.787+05:302013-06-20T19:22:37.787+05:30நம் நிலை என்பது திறந்த மனநிலை. இவைகளைப் பார்த்துதா...நம் நிலை என்பது திறந்த மனநிலை. இவைகளைப் பார்த்துதான் மக்கள் பூரித்து, வியக்கிறார்கள். 91767 57083, 91767 57084 இந்த எண்கள் தமிழ்நாடு முழுக்கவும் பிரபலமாகி வரு கின்றன. ஒவ்வொரு மாநகராட்சியிலும் நூற்றுக்கணக்கானோர் தங்கள் கைப் பேசிகளில் சேமித்து வைத்திருக்கிறார் கள். காரணம் அவர்கள் வாழ்விற்கான வழி அங்கே இருக்கிறது. கைகோத்த பயணம்! கோவை மன்றலை அங்குள்ள லயன்ஸ் கிளப்பில் சொன்னதும், அடடா! என்னே ஒரு வாய்ப்பு! எங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் என்றார் கள். வாருங்கள் இணைவோம் என்றோம். இணைப்பில்தானே நம் மகிழ்ச்சியே இருக்கிறது.<br /><br />அதேபோல மன்றலில் பங் கேற்கும் மணமக்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்றதும், தமிழ்நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவன இயக்குநர் காரையடி செல்வன் என்பவர் அந்த வாய்ப்பை எனக்கே தாருங்கள் எனக் கேட்டு வாங்கிக் கொண்டார். மன்றல் நிகழ்ச்சிக்கு அரங்கம் வடிவ மைக்கும் அந்த இளைஞரை நாம் மறக்க முடியாது. ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அவர்தான் வடிவமைக்கிறார். எவ்வளவோ விழாக்கள், என்னென்னமோ விழாக்கள் பார்த்தாயிற்று. எனினும் வாழ்க்கை இணை தேடல் பெரு விழாவை, தன் வீட்டுத் திருமணமாய் அலங்கரிக்கிறார். ஊடகங்கள் குறித்தும் சொல்ல வேண்டும். மன்றல் நடைபெறுவதை முன்கூட்டியே அறிவிப்பதில் அவர்கள் பங்கும் அளப் பரியது. குறிப்பாக தினத்தந்தி, வானொ லிகள் கைகோத்துப் பயணிக்கிறார்கள். நம்பிக்கைதான் பெரியார் சொத்து!<br /><br />மன்றல் நிகழ்ச்சியில் பங்கேற்றோர்<br /><br />மன்றலில் ஜாதி மறுப்பு, மத மறுப்பு, மணமுறிவு பெற்றோர், துணை இழந்தோர், மாற்றுத் திறனாளிகள் என அய்ம்பெரும் பிரிவுகள் உள்ளன. இதில் மற்ற பிரிவினர் பொது இடங்களுக்கு அதிகம் செல்வதும், பத்திரிகை விளம்பரங்கள் பார்ப்பதும் மிகுதி. மாற்றுத் திறனாளிகளுக்கு அந்த வாய்ப்புகள் குறைவு. ஆனாலும் நண்பர்களே! நம் மன்றல் நிகழ்சிகளுக்கு மாற்றுத் திறனாளிகள் அதிகமாகவே வருகின்றனர். அவர் களுக்குச் செய்தி போகும் வண்ணம் நம் செயல்பாடுகள் அமைந்துள்ளன. இதில் இன்னொரு சிறப்பு, சில ஊர்களில் மாற் றுத் திறனாளிகள் தனியாகவே வந்தனர். கோவையில் கூட இரண்டு கால்களையும் முற்றிலும் இழந்த ஒரு நண்பர் தனியாகவே வந்தார். பெரியார் நிகழ்சிகளுக்குத் தனியாகவும், தைரியமாகவும் செல் லலாம் என்கிற அவர்கள் நம்பிக்கை. பொதுவாகக் கூட்ட நெரிசல் இருக்கிற இடங்களுக்கு இவர்களைப் போன் றோர் துணையுடன் கூட செல்வ தில்லை. மாறாக நம் நிகழ்ச்சிகளின்மீது அவர்கள் பெரும் நம்பிக்கை வைத் துள்ளனர். இதுபோன்ற நம்பிக்கைகள் தான் பெரியாரின் சொத்து! அதிரச் செய்து, குலுங்கச் செய்த மக்கள்!<br /><br />அதேபோல பக்தி கொண்ட மக்கள் நம் மீது காட்டும் ஆர்வமும், ஆதரவும் அதிகமாகவே இருக்கிறது. கோவை மன்றலில் நாள் முழுக்க நம் கூடவே இருந்தார்கள்.<br /> <br />இடையிடையே நம் தோழர்கள் பேசும் கருத்துகளை மிகுந்த உற்சாகத்தோடு வழிமொழி கிறார்கள். எல்லாக் கருத்துகளையும் பொறுமையோடு கேட்கிறார்கள். மக்கள் பழைமையில் ஊறிப் போயுள் ளனர், அவர்களுக்குப் புதுமைகள் பிடிப்பதில்லை என ஊடகங்களும், திரைத்துறையினரும் சொல்லி வருவது மகா மோசடி என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இதற்கு இன் னொரு எடுத்துக்காட்டையும் நம்மால் எழுத முடியும். கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் மன்றல் நிறைவில் ஒரு திருமணத்தை நடத்தி வைத்தார். பிரவீன்குமார் - அமுதா என்பது அந்தத் தோழர்களின் பெயர். அவர்கள் இருவரையும் அறி முகம் செய்துவிட்டு, மாப்பிள்ளை கேரளா நாயர் சமூகத்தைச் சார்ந்தவர் என்று கூறினார். உடனே மக்கள் கரவொலியால் அரங்கை அதிரச் செய்தனர். பெண் தாழ்த்தப்பட்ட என்று சொல்லக் கூடிய அருந்ததி இனத்தைச் சார்ந்தவர் என்று சொன்னதுதான் தாமதம், மக்கள் அரங்கத்தையே குலுங்கச் செய்தனர். இதற்கு என்ன பொருள்? அவர்கள் எல்லாவற்றையும் விட்டு வெளிவந்து பல நாட்களாகிறது. ஆனாலும் உள்ளேயே இருக்கிறார்கள். வாய்ப்பிருக்கும் போது வெடித்து வெளிவருவார்கள். அப்படி வெடித்து, வெடித்துத்தான் இவ்வளவு தூரம் சமூக மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் வெடிப் பொருளாக, கருப் பொருளாக நம் பெரியார் இருக்கிறார்.<br /><br />மக்களிடம் கேளுங்கள்!<br /><br />இவ்வளவு சிறப்பு வாய்ந்த மன்றல் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு எதுவுமே இல் லையா எனக் கேட்கிறீர்கள்? இருக் கிறது. அங்கொன்றும், இங்கொன்று மாகக் கைப்பேசி வழியாக வருகிறது. கோவையில் கூட ஒரு நண்பர் கோப மாகக் கேட்டார், ஜாதி மறுப்புத் திரு மணங்கள் செய்ய நீங்கள் யார்? என்றார். நாங்கள் யார் என்பதை மண் டபத்தில் வந்து மக்களிடம் கேளுங்கள் என்றோம், இணைப்பைத் துண்டித்து விட்டார். அவர் மீது நமக்குக் கோபமில்லை. ஏனெனில் வேறொரு மன்றல் நிகழ்ச்சிக்குத் தன் மகளோடும் அவர் வரக்கூடும். 20-6-2013தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-43134671921131691632013-06-20T19:22:32.327+05:302013-06-20T19:22:32.327+05:30
வேலையைக் கச்சிதமாக முடித்துவிட்டு போய்க் கொண்டே இ...<br />வேலையைக் கச்சிதமாக முடித்துவிட்டு போய்க் கொண்டே இருக்கின்றனர். களைப்பும் இல்லை; மலைப்பும் இல்லை! மக்களின் விழிகள் விரிய!<br /><br />மன்றல் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாற்றுத் திறனாளி<br /><br />இப்படித்தான் முடிந்தது கோவை மன்றலும்! கோயம்புத்தூர் பெரிய நகரம்தான். எனினும் சுவர்கள் முழுக்க மன்றல் வாசகங்கள் அவ்வூரையே அழகுபடுத்தி இருந்தன. திருமணத் துக்குத் தேவை நல்ல மனசுதாங்க... ஜாதி எதுக்குங்க?, மதத்தை விடுங்க, நல்ல மனுசங்களா இருந்தா போதும், துணையை இழந்தால் துவண்டு போவதா? புது வாழ்க்கையை இழந்து விடுவதா?, மணமுறிவு முடக்கமல்ல... புதிய தொடக்கம், மாற்றுத் திறனாளி யுடன் மணவாழ்க்கை அமைத்துக் கொள்ள விருப்பமா? போன்ற வாச கங்களைக் கண்ட கோவை மக்கள் பலருக்கும் விழிகள் விரிய, சமூக ஆர்வலர்கள் உற்சாகத்தில் மிதக் கின்றனர். காரணம் இதுபோன்ற நிகழ்ச்சிகள் செய்திட யாரும் முன்வரு வதில்லை. கூடவே தைரியமும் வேண்டும். அதை நாம் செய்கிற போது அவர்களின் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. மற்றொரு முக்கியமான விசயம், நாம் செய்வது முழுக்கவும் பொதுக் காரியம். மற்ற பலரும்தான் செய்கிறார்கள், அவை ஒரு ஜாதி ஜாடிக்குள் மூழ்கிப் போகிறது. சிலரோ பொதுவாகச் செய்கிறோம் எனக் கூறிப் பயனாக்காமல், பணமாக்கி விடுகின்றனர். மன்றலைப் பொறுத்தவரை ஒரு பெரும் சிறப்பு என்ன தெரியுமா? சென்னை மன்றலில் 300 பேர் வந்தார்கள். இந்த 300 பேர் விவரங்களும் திருச்சி மன்றலில் வழங்கப்பட்டன. அடுத்து மதுரையில் நடந்தது. அங்கு சென்னை, திருச்சி விவரங்கள் வழங்கப் பட்டன. இப்போது கோவை. இங்கு மூன்று ஊர்களின் விவரங்களும் வழங்கப் பட்டன. ஆக இந்த விவரங்களின் தொகுப்பை வைத்துதான் பலரும் இங்கே வணிகம் செய்கிறார்கள். நமக்கோ அது நோக்கமல்ல.<br /><br />மன்றல் நிகழ்ச்சியில் கழகப் பொதுச்செயலாளர் பிறைநுதல் செல்வி உரை<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-74262860041997959992013-06-20T19:22:16.771+05:302013-06-20T19:22:16.771+05:30
கோவை மன்றல் - ஓர் பார்வை
- வி.சி.வில்வம்
சென்...<br />கோவை மன்றல் - ஓர் பார்வை<br /><br /><br />- வி.சி.வில்வம்<br /><br />சென்னை மன்றல், திருச்சி மன்றல், மதுரை மன்றல் என ஒவ் வொன்றும் வரலாற்றுப் பதிவுகளான நிலையில், இப்போது கோவை மன்றல் முடிந்துள்ளது. அடுத்த மன்றல் எங்கே எனக் கேட்டுப் போகும் தமிழர்கள் நிறைந்து வருகிறார்கள். சரியான திட்டமிடுதலுக்குச் சாதனைகள் தூரமில்லை. இந்த தேதியில், இந்த ஊரில் மன்றல் என முதலில் முடி வாகிறது. அதற்கான ஆயத்தங்கள் சில ஆகின்றன. குறிப்பிட்ட நாளில், வெவ்வேறு இடங்களில் இருந்து சிலர் ஒன்று சேர்கின்றனர்.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-73612863482674804752013-06-20T19:11:59.666+05:302013-06-20T19:11:59.666+05:30
எருமை போவதுபோல்...
எவன் ஒருவன் முன்னோர்கள் சொன...<br />எருமை போவதுபோல்...<br /><br /><br /><br />எவன் ஒருவன் முன்னோர்கள் சொன்னபடி, பெரியோர்கள் சொன்னபடி, புராணங்கள் சொன்னபடி, சாத்திரங்கள் சொன்னபடி என்று நடக்கின்றானோ அவன் எருமைக்கு ஒப்பாவான். அடித்து ஓட்டுகின்றவன் சொல்கின்ற பக்கம் எல்லாம் எருமை போவது போன்றே இவனும் செல்பவன் ஆவான்.<br />_ (விடுதலை, 13.8.1961)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-4961199935547940942013-06-20T19:10:49.749+05:302013-06-20T19:10:49.749+05:30
மோடி அலையை உருவாக்குவது யார்? நிதிஷ் அம்பலப்படுத்...<br />மோடி அலையை உருவாக்குவது யார்? நிதிஷ் அம்பலப்படுத்துகிறார்<br /><br /><br />பாட்னா, ஜூன் 20- நரேந்திர மோடிக்கு ஆதரவாக அலை வீசவில்லை என்றும் தொழில் நிறுவனங்கள்தான் அது போன்ற தோற்றத்தை உரு வாக்குகின்றன என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.<br /><br />பீகார் சட்டப் பேரவையில் நிதிஷ் குமார் அரசு மீது நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. தீர்மானத்த்தின் மீது நிதிஷ்குமார் பதிலளிக் கையில், நரேந்திர மோடியை அவரது பெயரை குறிப் பிடாமல் மறைமுகமாகத் தாக்கியும், குற்றம் சாட்டியும் பேசினார். நிதிஷ் பேசியதாவது:<br /><br />தங்கள் கட்சியைச் சேர்ந்த தலைவர்களில் ஒருவருக்கு (நரேந்திர மோடி) ஆதரவாக அலை வீசிவருவதாக பா.ஜ. தொண்டர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆனால், அப்படி எதுவும் அலை வீசவில்லை. பெரிய தொழில் நிறுவனங் கள்தான் இதுபோன்ற தோற்றத்தை உருவாக்குகின்றன. இந்த போலித்தோற்றம் நீண்ட காலம் நீடிக்காது. 2014 மக்களவைத் தேர்தலில் இதனால், எந்த அற்புதமும் நடக்காது.<br /><br />பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்ததாலேயே யாரும் அவர்களது தலைவராகி விட முடியாது. பெரிய தொழில் நிறுவனங்களின் நலனை விரும்புகிறவர் பிற்படுத்தப் பட்டோரின் தலைவராக முடியாது. அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று பா.ஜ.க. கனவு காண்கிறது. பீகாரின் வளர்ச்சிக்காக அவர்கள் கூறிய ஆலோசனைகளை நாங்கள் கேட்டோம். ஆனால், எங்கள் யோசனைகளை பா.ஜ.க.வினர் நிராகரித்தனர். கூட்டணி முறிவதற்கு இதுதான் முக்கிய காரணம்.<br /><br />- இவ்வாறு நிதிஷ் குமார் பேசினார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-90968234157470670052013-06-20T19:09:35.339+05:302013-06-20T19:09:35.339+05:30
தமிழக அரசின் தவறான முடிவால் காலியான இடங்கள்
சமூ...<br />தமிழக அரசின் தவறான முடிவால் காலியான இடங்கள்<br /><br /><br />சமூகநீதித் திசையில் அ.இ.அ.தி.மு.க. அரசின் போக்குப் பார்ப்பனீயத்தன்மை கொண்டதாகவே இருக்கிறது.<br /><br />குறிப்பாக ஆசிரியர் தகுதித் தேர்வில் பார்ப்பன ஏடுகள் அனைத்தும் அ.தி.மு.க. அரசின் நிலைப் பாட்டை மிகவும் தூக்கிப் பிடிக்கின்றன.<br /><br />சமச்சீர் கல்வியைச் செயல்படுத்துவதில் இன்றைய மாநில அரசு தொடக்கம்முதலே எதிர்நிலையில் தான் இருந்துவந்தது.<br /><br />உச்சநீதிமன்றம்வரை சென்று பார்த்த அரசு கடைசியில் வேறு வழியின்றி சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தியே தீரவேண்டும்என்ற நிலைக் குத் தள்ளப்பட்டது.<br /><br />சமச்சீர் கல்வி காரணமாக இவ்வாண்டு பத்தாம் வகுப்புத் தேர்வில் சாதனை படைத்துள்ளனர் இருபால் மாணவர்களும்; அதிக மதிப்பெண்களையும் ஈட்டியுள்ளனர். இதனைக் கண்டு மகிழ்வதற்குப் பதிலாக மார்பில் அடித்துக்கொண்டு ஒப்பாரி வைக்கின்றன தினமணி உள்ளிட்ட அவாள் ஏடுகள்.<br /><br />ஒரு காலகட்டத்தில் தேர்வில் பெறும் மதிப் பெண்கள்தான் தகுதி திறமைக்கான அளவுகோல் என்று ஆணி அடித்து எழுதினர்; அந்தக் கால கட்டத்தில் அதிக மதிப்பெண்கள் பெறும் அபார ஆற்றல் அவர்களிடம்தான் இருந்தது.<br /><br />இப்பொழுது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வர்கள் அதிக மதிப்பெண்கள் பெற ஆரம்பித்த நிலையில், மதிப்பெண் தகுதியின் அளவுகோலா என்று பேச, எழுத ஆரம்பித்துவிட்டனர்.<br /><br />ஆசிரியர் தகுதித் தேர்வில் அ.இ.அ.தி.மு.க. அரசு சமூக நீதியின் அடிப்படை ஆணிவேரில் வெந்நீரை ஊற்றிவிட்டது.<br /><br />மருத்துவக் கல்லூரியாக இருந்தாலும் சரி, பொறியியல் கல்லூரியாக இருந்தாலும் சரி, தகுதி மதிப்பெண்கள் (கட் ஆஃப் மார்க்) தனித் தனியேதான் இருக்கிறது.<br /><br />அப்படி இருக்கும்போது, ஆசிரியர் தகுதித் தேர்வில் மட்டும் தாழ்த்தப்பட்டோர் உள்பட அனைவருக்கும் (உயர்ஜாதிக்காரர்கள் உள்பட) ஒரே அளவு தகுதி மதிப்பெண்கள் - 60 சதவிகிதம் பெறவேண்டும் என்பது சமூகநீதிக்கே நேர் விரோதம் அல்லாமல் வேறு என்னவாம்?<br /><br />இப்படி அனைவருக்கும் ஒரே அளவு மதிப் பெண்களை வரையறை செய்ததால் ஏற்பட்ட விளைவு என்ன தெரியுமா?<br /><br />தாழ்த்தப்பட்டோருக்கான பணியிடங்கள் 1470 இல் 659 காலியாகவே உள்ளன. பழங்குடியினர்க் கான 99 இடங்கள் காலியாகவே உள்ளன. அருந்ததியருக்கான 131 இடங்கள் பூர்த்தி செய்யப் பட முடியவில்லை. முசுலிம்களுக்கான 153 இடங்கள் காலியாகவே உள்ளன.<br /><br />தமிழ்நாடு அரசின் குளறுபடியான - சமூகநீதிக்கு விரோதமான அணுகுமுறைகளால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இவ்வகையில் பெரிய அநீதி நடந்துள்ளது. கேட்டால் இதுதான் அ.இ.அ.தி.மு.க. அரசின் கொள்கை முடிவு என்று சொல்லுகிறார் கல்வி அமைச்சர் - எங்கே போய் முட்டிக்கொள்வது?<br />இன்னும் சொல்லப்போனால், ஆசிரியர் கல்விக் கழகம் அகில இந்திய ரீதியில் தகுதித் தேர்வு எப்படி நடத்தப்படவேண்டும் என்ற வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ள சமூகநீதிக் கண்ணோட்டத் துக்கே விரோதமானது தமிழக அரசின் செயல்பாடு.<br /><br />ஆந்திரா, கேரளா, பிகார் முதலிய மாநிலங்களில் தனித்தனியே தகுதி மதிப்பெண்களை நிர்ண யித்துள்ளபோது, சமூகநீதி பிறந்த பெரியார் மண்ணில், பெரியார், அண்ணா பெயரை உச்சரித்துக்கொண்டு இருக்கும் அண்ணா தி.மு.க. ஆட்சியில் இப்படியொரு கொடுமை - அநீதி இழைக் கப்பட்டுள்ளதே - இதனை எப்படிப் பொறுப்பது?<br /><br />சமூகநீதியாளர்கள் களம் காணவேண்டிய காலகட்டம் வந்துவிட்டது.<br /><br />தவறைத் திருத்திக் கொள்ளுமா தமிழக அரசு?<br /><br />எங்கே பார்ப்போம்? 20-06-2013தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-90789996478173043172013-06-19T19:25:36.020+05:302013-06-19T19:25:36.020+05:30திண்டுக்கல் மாநகரில் மிகப் பெரிய புத்தக விற்பனையா...திண்டுக்கல் மாநகரில் மிகப் பெரிய புத்தக விற்பனையாளர்களாக இருக்கும் அய்யனார் புத்தக விற்பனை நிலைய உரிமையாளர்கள் பெரியவர் பூவலிங்கம், முத்து மாணிக்கம் தந்தையும் தனயனும் ஆவர்.<br /><br />பெரியார் பற்றாளர்கள் - பகுத்தறி வாளர்கள் அவ்விருவரும்.<br /><br />அய்யா எனது பேத்தி நல்ல மார்க் வாங்கியிருந்தும், மருத்துவக் கல்லூரிக்கு சேர்ப்பதில் வரிசைப்பட்டியல் வந்தததில் - முறைப்படி தேர்வு செய்ய 100 இடங்கள் - கலைஞரின் ஆட்சியில் சென்ற முறை தர்மபுரியில் மருத்துவக் கல்லூரி அறிவிக்கப்பட்டு, கட்டுமானங்கள் எல்லாம் முடித்து துவக்க மத்திய அரசு அனுமதி கிடைக்கவில்லையாதலால் நூறு இடங்களை பூர்த்தி செய்யாமல் நிறுத்தி வைத்து விட்டனர்.<br /><br />இது குறிப்பிட்ட கல்வி ஆண்டே துவக்கப்பட்டால் தான் கிராமப்புற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஏழை, எளிய கிராமப் பிள்ளைகள் படிக்க வாய்ப்பு ஏற்படும், என்று மாநில அரசும், மத்திய அரசும் முயற்சிகள் மேற் கொண்டு உடனடியாக இவ்வாண்டே துவக்க வேண்டும் என்று விடுதலையில் எழுதினீர்கள்.<br /><br />தர்மபுரியில் அறப்போராட்டத்தை யும், திராவிடர் கழகம் நடத்திட அறிவித்து நடத்தினீர்கள். அதனால் அவ்வாண்டே மருத்துவக் கல்லூரி துவக்கப்பட்டது. 100 இடங்கள் கூடுத லாக வந்ததால், கிடைக்கவில்லை என்று வேறு வேலைக்குச் சென்ற என் பேத்திக்கு M.B.B.S. அட்மிஷன் கார்டு வந்தது - எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது! எங்கள் குடும்பத்தில் முதல் டாக்டர் இப்பெண். இது விடுதலையாலும், கழகத்தாலும் தான் சாத்தியமானது என்று நன்றி பொங்கக் குறிப்பிட்டார்கள்.<br /><br />இப்படிப் பலப்பல நிகழ்வுகள்! பெரியார் என்ற பேராசானின் உழைப்பு என்றுமே பலன் தராமல் சென்ற தில்லை, என்றாலும் பயனடைந்தவர் களில் பலர் இல்லாவிட்டாலும் - சிலராவது கூறுகிறார்களே - அது நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.<br /><br />நன்றிப் பெருக்கின் நாயகர்கள் வாழ்க! .<br /><br />- கி.வீரமணிதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-55917524808299381992013-06-19T19:25:29.729+05:302013-06-19T19:25:29.729+05:30நன்றி மறவா நாயகர்கள் இதோ! (2)
சில மாதங்களுக்கு ம...நன்றி மறவா நாயகர்கள் இதோ! (2)<br /><br /><br />சில மாதங்களுக்கு முன்பு (ஏன் ஓராண்டுக்கு மேலாகவே கூட இருக்கலாம்); என்னுடன் முன்பு அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தில் விடுதியில் தங்கியிருந்தவர் திரு. லட்சுமி நாராயணன் என்ற நண்பர். இவர் சீர்காழியைச் சேர்ந்தவர்; பி.ஏ. வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார்; அதற்கு முன்பும் இண்டர்மீடீயெட் என்ற இடைநிலை வகுப்பும் அங்கேயே படித்து அறிமுகமான நண்பர் திராவிடர் இயக்கப் பற்றாளர்.<br /><br />எப்போதும் என்னிடத்தில் அன் புடன் பழகுபவர்; நாங்கள் இருவருமே ஒருவரை ஒருவர் அண்ணாச்சி என்றுதான் அழைத்துக் கொள்வோம்! எனது அறைக்கே வந்து விடுதலை படிப்பார்; பல்வேறு செய்திகளை விவாதிப்பார்.<br /><br />அதன்பிறகு அவர் பணிக்கு சென் னையில் சேர்ந்தபிறகு அடையாறு காந்திநகர் பகுதியில் குடியிருந்தார்; அவருடைய மகனும், என் மகனும் அங் குள்ள பள்ளியில் வகுப்புத் தோழர்கள்!<br /><br />சிற்சில நேரங்களில் எங்கள் வீட் டிற்கு வந்து உரையாடிச் செல்வார்; பிறகு அதிக தொடர்பு இல்லை.<br /><br />திடீரென்று ஒரு நாள் ஒரு கடிதம் அலுவலக முகவரிக்கு வந்தது. அத் துடன் முப்பாதாயிரம் ரூபாய்க்கான காசோலையும் இணைக்கப்பட்டு, நான் லட்சுமிநாராயணன் எழுது கிறேன் என்று எழுதி, விடுதலையை நாளும் படித்து வருகிறேன். ஓய்வு பெற்ற நிலையில் விடுதி ஒன்றில் தங்கி யுள்ளேன் சென்னை புறநகர் பகுதியில்.<br /><br />தங்களின் பணிகள் சிறக்க விரும்பி, இந்தத் தொகையை நன்கொடையாக அனுப்பியுள்ளேன் பெற்றுக் கொண்டு, தங்கள் விருப்பப்படி இதனை பணி களுக்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். குறிப்பிட்ட முகவரிக்கு நான், நன்றி தெரிவித்துக் கடிதமும்கூட எழுதினேன்.<br /><br />இதுபோல் கண்ணுக்குத் தெரிந்த உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் நண்பர் களைவிட நேரடிப் பார்வையில் இல்லா மலேயே நமது பணிகளைப் பாராட்டி ஊக்க மூட்டி நன்றி தெரிவிக்கும் நண்பர்கள் ஏராளம்! ஏராளம்!! அநேகர் அந்தப் பட்டியலில் உண்டு.<br /><br />அதுபோலவே மருதூர் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் - மறைந்தா லும் எப்போதும் நம் நெஞ்சங்களில் நிறைந் தவரான நாகை மாவட்ட முன்னாள் தி.க. தலைவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் - அவர்களது குடும்பம் அம்மா, பிள்ளைகள் உட்பட அனைவருமே மிகுந்த பற்றும் மரியாதையுடன் கழகப் பணிகளைப் பாராட்டிடுவர்.<br /><br />சில ஆண்டுகளுக்கு முன் விடுதலை வளர்ச்சி நிதி திரட்டப்பட்ட கால கட்டத்தில் தங்கள் பங்கு என்று கூறி தந்தது சந்தாக்கள் அல்லாமல், ஒரு தொகையை என்னிடம் நேரில் வந்து தந்து, எதற்குப் பயன்படுத்திட தாங்கள் எண்ணுகிறீர்களோ, அதற்கு இந்த எளிய தொகையைப் பயன்படுத்திக் கொள்ளுங் கள் என்று கூறி சென்று விட்டார்கள்!<br /><br />விடுதலையின் எழுத்தாலும் கழகத் தின் போராட்டத்தினாலும் தங்களது குடும்பத்தில் ஒரு பெண் இன்று தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து M.B.B.S. பட்டம் வாங்க இருப்பதாக திண்டுக்கலில் நான் நமது கெழுதகை நண்பரும் பெரியார் சுயரியாதைப் பிரச்சார நிறுவனம் என்ற பெரியார் டிரஸ்ட்டின் நிர்வாக உறுப்பினருமான வழக்குரைஞர் மானமிகு கொ. சுப்ரமணியம் இல்லத்தில் 15.6.2013 - பொதுக் குழுவுக்குப் போன போது நான் தங்கியிருந்த இடத்தில் - நேரில் வந்து இருவர் கூறி, நன்றி தெரிவித்தனர்.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-33070442934009540902013-06-19T18:58:45.753+05:302013-06-19T18:58:45.753+05:30
அரசு என்ன செய்ய உத்தேசமோ!
திண்டுக்கல்லில் நடைபெ...<br />அரசு என்ன செய்ய உத்தேசமோ!<br /><br /><br />திண்டுக்கல்லில் நடைபெற்ற (15.6.2013) திராவிடர் கழகப் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களுள் குறிப்பிடத்தக்கது - சமூகநீதித் தொடர்பான ஒன்றாகும். அதிலும் குறிப்பாக தமிழ்நாடு ஆசிரியர் பணி நியமனத்துக்கான தகுதித் தேர்வு பற்றியதாகும். இதுவரை தமிழ்நாட்டில் நடந்திராத அளவுக்கு சமூக அநீதி இதில் கொடி கட்டிப் பறக்கிறது.<br /><br />தீர்மானம் வருமாறு:<br /><br />ஆசிரியர் தகுதி தேர்வு - சமூகநீதிக்கு விரோதமான தமிழக அரசின் செயல்பாடு<br /><br />தமிழ்நாடு அரசு ஆசிரியர் தகுதி தேர்வில், சமூக நீதிக்கு விரோதமாகவும், தேசிய கல்விக் கழகத்தின் வழிகாட்டுதலுக்கு விரோதமாகவும், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், உயர்ஜாதி அனைவருக்கும் ஒரே அளவு தகுதி மதிப்பெண்ணை (60 சதவிகிதம்) நிர்ணயித்து இருப்பதை திராவிடர் கழகம் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும், கல்வியாளர்களும் சுட்டிக்காட்டியும், அதுகுறித்துச் சிந்திக்காமல் கொள்கை முடிவு என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது - சமூகநீதிக்கு வெட்டப்படும் படுகுழி என்பதை இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது.<br /><br />இதில் வீண் பிடிவாதம் காட்டாமல், செய்த தவறைத் திருத்திக் கொண்டு, தமிழ் மண்ணுக்கே உரிய சமூகநீதி உணர்வைக் கட்டிக் காக்குமாறு தமிழ்நாடு அரசை - குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை இப்பொதுக் குழு கேட்டுக்கொள்கிறது.<br /><br />இந்தச் சமூக அநீதி கமுக்கமாகக் கழுத்தறுப்பது போல, மிக மிகத் தந்திரமாக அரங்கேற்றப்பட்டுள்ளது.<br /><br />முதன் முதலில் இந்தப் பிரச்சினையை வெளிச்சத் துக்குக் கொண்டு வந்தவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்தான்; வெளிப்படையாக்கியது விடுதலை - எனும் சமூக நீதிப் போர் வாள்தான்.<br /><br />அதன் பிறகு தமிழ்நாடு சட்டப் பேரவையில் இடதுசாரிகள் இந்தப் பிரச்சினையைக் கிளப்பினார்கள். தொடக்கத்தில் இந்தப் பிரச்சினை முதல் அமைச்சர் பரிசீலனையில் இருக்கிறது என்று சொல்லி சமாளித்த கல்வி அமைச்சர், தவறு நடந்ததை ஒப்புக் கொண்டு திருத்திக் கொள்ளாமல், இது அரசின் கொள்கை முடிவு என்று ஏதோ சில வார்த்தைகளை பிறகு வெளியிட்டார்.<br /><br />இது இன்னும் ஆபத்தானது. அ.இ.அ.தி.மு.க. அரசின் கொள்கை முடிவு - சமூகநீதிக்கு விரோத மானதே என்பதே கல்வி அமைச்சர் கூறுவதற்கான பொருளாகும்.<br />தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களும் இதுகுறித்து விளக்கமாக அறிக்கையினை வெளியிட்டுள்ளார்; கல்வியாளர்களும் களத்தில் குதித்துள்ளனர்.<br /><br />ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்னும் கதையாக, ஏற்கனவே 19 ஆயிரம் ஆசிரியர் பணிகள் நியமனத்தில் செய்த அதே தவறினை - வரும் ஆகஸ்டில் நடக்க இருக்கும். ஆசிரியர் தகுதித் தேர்விலும் பின்பற்றும் வகையில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.<br /><br />தவறுகளைத் திருத்திக் கொள்ளும் மனப்பான்மை அ.இ.அ.தி.மு.க. அரசிடம் இல்லை என்பது இன்னும் விரிவாக வெளிச்சமாகத் தெரிந்து விட்டது.<br /><br />இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் சென்றால், தமிழ்நாடு அரசு பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்ளும்.<br /><br />பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வருமான வரம்பு என்ற ஆணையைப் பிறப்பிக்கப் போய் - 1980 நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 39 இடங்களில் 37 இடங்களில் தோல்வியை வாரி அணைத்துக் கொண்டார் - முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். சமூகநீதிக்கு எதிரான அவரது ஆணையை மக்கள் மத்தியில் வலுவாக திராவிடர் கழகம் எடுத்துச் சென்றது - இநதத் தோல்விக்குக் காரணம் என்பதை எம்.ஜி.ஆர். அவர்களே ஒப்புக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.<br /><br />69 சதவீத இடஒதுக்கீட்டைக் காப்பாற்றிக் கொள்ள திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் அரிய ஆலோசனை அன்றைய முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு தேவைப்பட்டது.<br /><br />அதே முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள்தான் இன்றைக்கும் முதல் அமைச்சர் - சமூக நீதிப் பிரச்சினை யில் விழிப்பாக நடந்து கொள்ள வேண்டாமா? கோட்டை விட்டு விட்டாரே!<br /><br />தாழ்த்தப்பட்டோருக்கும், முன்னேறியவருக்கும் இடையே உள்ள இடைவெளி கூடத் தெரியாதவரா முதல் அமைச்சர் ஜெயலலிதா? பாதிக்கப்பட்டுள்ள தாழ்த்தப் பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், சிறுபான்மை யினரும் கையணைத்து வீதிகளில் உரிமை முழக்கமிடக் களத்தில் குதிக்க ஆரம்பித்தால் இந்த ஆட்சியின் நிலை என்னாகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?<br /><br />குதிரை காணாமற் போன பின்பு தான் இலாயத்தை இழுத்துப் பூட்டப் போகிறதா அ.இ.அ.தி.மு.க. அரசு? தமிழ் மண் போராட்டக் களமாக மாற வேண்டுமா?<br /><br />பந்து அவர்கள் பக்கம்தான் இப்பொழுது இருக்கிறது; என்ன செய்ய உத்தேசம்?தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-59041742296168902482013-06-19T18:57:16.559+05:302013-06-19T18:57:16.559+05:30
செய்தியும் சிந்தனையும்
சந்தி... சிரிக்கிறது!
ச...<br />செய்தியும் சிந்தனையும்<br /><br /><br />சந்தி... சிரிக்கிறது!<br /><br />செய்தி: அத்வானியை நரேந்திர மோடி சந்தித்தார்.<br /><br />சிந்தனை: விடயம் சந்தி சிரிக்கிறதே - சந்திக்காமல் என்ன செய்வாராம்?தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-16942573640297946012013-06-19T18:55:05.021+05:302013-06-19T18:55:05.021+05:30
சு...தந்திரம்
நாடு ஆனந்த சுதந் திரம் பெற்று விட...<br />சு...தந்திரம்<br /><br /><br />நாடு ஆனந்த சுதந் திரம் பெற்று விட்டது என்று ஆடினார்கள் - பாடினார்கள். ஒவ்வொரு ஆகஸ்டு 15 அன்றும் பிள்ளைகளுக்கு மிட்டாய் கொடுக்கப்படுகிறது - (மன்னிக்கவும், கொஞ்சம் முன்னேறி - சாக்லெட் கொடுக்கப்படுகிறது)<br /><br />ஆனாலும்.. ஆனாலும்... 2012ஆம் ஆண்டு குறித்து தேசிய குற்ற ஆவணக் காப்பகம் எனும் அமைப்பு வெளியிட் டுள்ள ஒரு தகவல் நமது தலையை 360 டிகிரியில் சுற்றச் செய்கிறது.<br /><br />இந்தியத் துணைக் கண்டத்தில் 2012ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடத் தப்பட்ட வன்கொடுமை வழக்குகள் 33,655; 1.10 லட்சம் வழக்குகள் இன் னும் நிலுவை என்னும் ஊறுகாய்க் கலயத்தில் குறட்டை விட்டுத் தூங் கிக் கொண்டிருக்கின் றன - 5.6 சதவீத வழக் குகளில் மட்டும் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண் டனை வழங்கப்பட்டுள்ளது.<br /><br />இதுதான் இந்திய நாட்டின் சுதந்திரத்துக் கான தங்கப்பூண் அணி விக்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழ்!<br /><br />இந்த லட்சணத்தில் சில ஜாதீயவாதிகள் இப் பொழுது அக்னியைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டுள்ளார்கள். தலித்களுக்கு எதிரான அணியைத் திரட்டப் போகிறார்களாம். தமிழ் நாட்டில், தந்தை பெரியார் மண்ணில் அது வேகாது என்பதற்கு அடையாளம் அந்த நெருப்பு அதற்குள் அணைந்து சுருண்டது என்பதுதான்.<br /><br />தீண்டாமைக் குற்றம் செய்பவர்களைத் தண்டிப் பதற்காக இருப்பது வன் கொடுமைத் தடுப்புச் சட்டம்; அது தவறாகப் பயன்படுகிறது என்றும், அந்தச் சட்டத்தை அறவே நீக்கிவிட வேண்டும் என்றும் நீட்டி முழங்கிக் கொண்டுள்ளனர்.<br /><br />அவர்கள் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அளிக்கும் புள்ளி விவ ரத்தை ஒரு முறை கவனிக்க வேண்டும்.<br /><br />இன்னும் இரட்டைக் குவளை முறைகள் இருக் கின்றன. இன்னும் ஜாதி சுடுகாடுகள் இருக் கின்றன. இன்னும் கரு வறைக்குள் சென்று பூசை செய்யும் உரிமை தாழ்த் தப்பட்ட மக்களுக்குக் கிடையாது. இன்னும் கவுரவக் கொலைகள் - தருமபுரிகள் - நடந்து கொண்டுதான் இருக் கின்றன.<br /><br />இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டதா? சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டில் சுதந் திரம் இருக்குமா? என்ற தந்தை பெரியார் அவர்களின் வினாவுக்கு விடை எங்கே? எங்கே?<br /><br />- மயிலாடன் தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-40397570061181975972013-06-18T19:08:15.192+05:302013-06-18T19:08:15.192+05:30
பகுத்தறிவு
பகுத்தறிவு என்று சொல்வதும் மாறி மாறி...<br />பகுத்தறிவு<br /><br /><br />பகுத்தறிவு என்று சொல்வதும் மாறி மாறி வருவதாகும்.<br /><br />இன்று எவைகளை அறிவுக்குப் பொருத்தமானவை என எண்ணு கிறோமோ, அவை நாளைக்கு மூடப் பழக்க வழக்கங்கள் என தள்ளப்படும்.<br /><br />நாம் கூட பல பொருள்களை ஏன் மகான்கள் என்று புகழப்படுபவர்கள் சொன்னவற்றையே, பழைய கருத்துக்களெனத் தள்ளி விடவில்லையா?<br /><br />-குடிஅரசு, தொகுதி 32, பக்கம் 22தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-62136025180837231972013-06-18T19:07:36.662+05:302013-06-18T19:07:36.662+05:30தீர்மானம்
அடுத்தாற்போல் வரும் மக்கள் எண்ணிக்கை...தீர்மானம்<br /><br /> <br /><br />அடுத்தாற்போல் வரும் மக்கள் எண்ணிக்கைக் கணக்கெடுக்கும் சென்ஸஸ் என்பதில் திராவிட மக்கள் தங்களைத் திராவிடர்கள் என்றே சொல்ல வேண்டுமென்றும், இந்துக்கள் என்று சொல்லக் கூடாது என்றும் கேட்டுக் கொள்வதோடு எண்ணிக்கைக்காரர்கள், மதம் என்ன என்று கேட்டால் திராவிட சமயம் என்று சொல்லலாமே ஒழிய இந்து சமயம் என்று சொல்லக் கூடாது என்றும் வேண்டிக் கொள்கிறது.<br /><br />(4.8.1940 அன்று திருவாரூரில் பெரியார் ஈ.வெ.ரா. தலைமையில் நடந்த தென்னிந்திய நல உரிமைச் சங்க 15ஆவது மாகாண மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 18 ஆவது தீர்மானம்)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-34870150607442110642013-06-18T19:06:43.410+05:302013-06-18T19:06:43.410+05:30
பவுத்தம் விடுத்த பகுத்தறிவுக் கேள்விகள்
அரசர்கள...<br />பவுத்தம் விடுத்த பகுத்தறிவுக் கேள்விகள்<br /><br /><br />அரசர்களைக் கைக்குள் போட்டுக்கொண்டு ஜைனர்களையும், பவுத்தர்களையும் கழுவிலேற்றிச் சித்திரவதை செய்து கொன்ற கொலை பாதகங்களைத் திருவத்திபுரம், காஞ்சிபுரம் கோயில்களில் இன்றைக்கும் சிற்பங்களாகக் காணலாமே!<br /><br />யதாஹிசவ்ர;<br />ஸ்யத தயாஹி புத்த;<br />ததாகதம் நாஸ்திக மத்ரவித்தி<br /><br />என்று வால்மீகி ராமாயணம் கூறுகிறதே - இதற்குப் பொருளென்ன?<br /><br />திருடனும் புத்தனும் ஒன்றாவான். அவன் நாத்திகன் என்று இந்துமதத்தின் இதிகாசம் கூறி இருக்கிறதே. இந்த நிலையில் மாஜி சங்கராச்சாரியார் புத்தரின் நாத்திகவாதத்தையும், ஜைனர்களின் நாத்திகத் தத்துவத்தையும் போற்றிப் புது அகவல் பாடுகின்றார் என்றால், பார்ப்பனர்களின் சந்தர்ப்பவாதப் பாசாங்குத் தனத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.<br /><br />பவுத்தர்களையும், ஜைனர்களையும் வாதில் வெல்ல யோக்கியதை இல்லாத திருஞான சம்பந்தப் பார்ப்பனர் - சூழ்ச்சி வலைகளைப் பின்னி, சூதாக அவர்களைக் கொன்றொழித்த கதை எல்லாம் வரலாற்றில் சுவடு தெரியாமல் மறைந்துவிட்டன என்று சங்கர மடங்கள் மனப்பால் குடிக்கின்றனவா?<br />கையில் சரக்கு இருந்திருந்தால் உட்கார்ந்து மணிக்கணக்கில் பவுத்தர்கள், ஜைனர்களுடன் விவாதப் போர் நடத்தி இருக்கலாம்.<br /><br />கையாலாகாத் திருஞான சம்பந்தரோ கடவுளிடம் போய் அல்லவா மன்றாடுகின்றார், மடிப்பிச்சைக் கேட்கின்றார்.<br /><br />வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆதமில்லிய மணோடு தேரரை<br />வாதில் வென்றழிக்கத்<br />திருவுள்ளமே.<br /><br />இவர்களோடு வாதில் வெல்லக் கடவுள் அருள்புரிய வேண்டும் என்று மன்றாடுவதிலிருந்து இவர்களின் கோழைத்தனம் புரியவில்லையா?<br /><br />வாதில் வெல்ல மட்டுமா ஆண்டவனிடம் அடிபணிந்து கிடக்கின்றார்? ஜைன பவுத்தர்களின் அழகிய பெண்களின் கற்பினை அழிக்கவும் கடவுளிடம் வரம் கேட்கின்றார் திருஞான சம்பந்தர்.<br /><br />மண்ணகத்திலும் வானிலும் எங்குமாய்த்<br />திண்ணகத் திருவால வாயருள்<br />பெண்ணகத் தெழில் சாக்கியப் பேயமண்<br />பெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே<br /><br />என்று பாடுகின்றார் என்றால், பர்ப்பனீய வேதமதக் கொடுங்கோலர்களின் கேவலப் புத்தி எந்த எல்லை வரை தறிகெட்டு நிர்வாணக் கூத்தாடியிருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளலாம். பக்தியின் யோக்கியதையையும் தெரிந்து கொள்ளலாம்.<br /><br />இவ்வளவும் செய்துவிட்டு, இன்றைய தினம் ஆரியம் மாஜி சங்கராச்சாரியார் உருவில் பவுத்த, ஜைன நாத்திக வாதங்கள் பற்றிக் கசிந்துருகுகிறது என்றால்-இது எவ்வளவு நீலித்தனம்! போலித்தனம்!! போக்கிரித்தனம்!!!<br /><br />பவுத்தர்களும், ஜைனர்களும், புனல்வாதம், அனல்வாதம், புத்திவாதம் எல்லாம் செய்தனர் என்று மாஜி சங்கராச்சாரியார் கூறியுள்ளார்.<br /><br />பவுத்தர்கள் எழுப்பிய வினாக்களுக்கு விடை அளிக்க முடியாமல் விழி பிதுங்கினார்கள்.<br /><br />யாகத்தில் கொல்லப்படுகின்ற பசு சொர்க்கத்தை அடைவது உண்மையானால் யாகம் செய்கிறவன் தன் தந்தையைக் கொன்று சொர்க்கத்தை அடைவிக்காததன் காரணம் என்ன? யூபம் (யாகத்தில் வதைத்துக் கொல்லப்படுகின்ற பசுவைக் கட்டி வைக்கின்ற தூண்) உண்டுபண்ணிப் பசுக்களைக் கொன்று ரத்தச் சேற்றை உண்டுபண்ணுபவன் சொர்க்கத்தை அடைவானாயின், நரகத்தை அடைபவன் யாவன்?<br /><br />என்பதுபோன்ற அறிவு பொருந்திய ஆற்றல் கணைகளை அடுக்கடுக்காக ஆரியத்தை நோக்கிப் பவுத்தம் விடுத்தது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-43385291728945913562013-06-18T18:56:18.127+05:302013-06-18T18:56:18.127+05:30அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதற்கு ...அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதற்கு ஆகமவிதிகள் தடையாக இல்லை என்றும் அந்த அறிக்கை காரண காரியத்துடன் தெளிவுபடுத்தியது.<br /><br />அந்த அறிக்கையின் அடிப்படையில் அர்ச்சகர் பயிற்சி அளிப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி என். கிருஷ்ணசாமி ரெட்டியார் தலைமையில் 13 பேர் கொண்ட குழுவையும் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். நியமித்தார் (செய்தி, சுற்றுலா மற்றும் (தமிழ்) பண்பாட்டுத் (செ.வை) துறை - செய்தி வெளியீடு எண் 339 நாள்: 8.9.1984).<br /><br />அந்தக் குழுவும் மூன்று மாதத்தில் அதற்கான அறிக்கையைத் தயாரித்துக் கொடுத்தது. பழனி கோயிலில் ஆகமக் கல்லூரி அமைக்கப்பட்டு அனைத்து ஜாதி யினருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்படும் என்று எம்.ஜி.ஆர். ஆட்சியில், இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்த ஆர்.எம். வீரப்பன் அவர்கள் தமிழ்நாடு சட்டப் பேரவையிலேயே அறிவித்தார்.<br /><br />அறிவிப்புகள் இருந்தாலும் எந்தக் காரணத்தாலோ அது நடைமுறைக்கு வராமல் தள்ளிக் கொண்டே போனது. முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களின் உடல் நல பாதிப்பும் ஒரு காரணம். சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு அரசு சார்பில் முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களின் தலைமையில் நடைபெற்ற தந்தை பெரியார் 113 ஆம் ஆண்டு விழாவில் அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்கள், தந்தை பெரியார் அவர்களின் இறுதி விருப்பமான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் வாய்ப்பினை உருவாக்கும் கோரிக்கையினை முதல் அமைச்சர் முன் வைத்தார். (17.9.1991).<br /><br />அ.இ.அ.தி.மு.க.வின் 20ஆம் ஆண்டு தொடக்க விழாவில் ஹேமமாலினி மண்டபத்தில் கலந்து கொண்ட முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கீழ்க்கண்ட அறிவிப்பினை வெளியிட்டார்.<br /><br />தமிழக அரசு சார்பில் வேதாகமக் கல்லூரி திறக்கப்பட உள்ளது. அதுபற்றிப் பல பிரச்சினைகளும் எழுப்பப் பட்டுள்ளன. அதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அரசால் திறக்கப்படவிருக்கும் வேத ஆகம கல்லூரியில் தாழ்த்தப் பட்டவர்களும் இடஒதுக்கீட்டுக் கொள்கைப்படி 18 சதவீதம் சேர்த்துக் கொள்ளப்படுவர். அவர்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டு, கோயில் அர்ச்சகர்களாக ஆக்கப் படுவார்கள். இதன் மூலம் பெரியார், அண்ணா கனவுகள் நனவாக்கப்படும் என்று பேசினார். (17.10.1991).<br /><br />அது ஆகமக் கல்லூரியாக இருக்க வேண்டுமே தவிர வேத ஆகமக் கல்லூரியாக இருக்கக் கூடாது என்று கழகப் பொதுச் செயலாளர் கூறினார். அதனை முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் ஏற்றுக் கொண்டு தமிழ்நாடு சட்டப் பேரவையில் இந்து அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்மீது உரையாற்றிய போது தெளிவாக திட்டவட்டமாக அறிவித்தார்.<br /><br />இந்தக் கல்லூரியை அமைப்பதற்குத் தேவையான நிலம் மற்றும் நிதி உதவி அளிக்க சில பெரியவர்களும் முன் வந்திருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கல்லூரியை அமைதி சூழ்ந்த இடத்தில் ஆன்மீக உணர்வுக்குத் தகுந்த இயற்கைச் சூழலில் அமைத்திட வேண்டும் என்றும், அப்படி தேர்ந்தெடுக்கப்படும் இடம் ஆழ்ந்த தியானத்திற்கும், வழிபாட்டிற்கும் உகந்ததாக இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் இதற்குத் தேவைப்படும் 40 ஏக்கர் நிலத்தைத் தேர்வு செய்யும் பணி நடந்து கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீட்டு முறை இந்தக் கல்லூரியிலும் பின்பற்றப்படும் என்று சட்டப் பேரவையிலேயே முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தாரே! (9.4.1992) திருச்சியை அடுத்த கம்பரசம் பேட்டையில் அதற்கான இடமும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் தேர்வு செய்யப்பட்டதே!<br /><br />இவ்வளவையும் எடுத்துக்காட்டுவதற்குக் காரணமே - இந்தப் பிரச்சினை அஇஅதிமுகவுக்கு - அதன் ஆட்சிக்கு - முதல் அமைச்சருக்கு உடன்பாடான ஒன்றே என்பதை நினைவூட்டவும், செயல்படுத்திட தார்மீகக் கடமை இருக்கிறது என்பதை வலியுறுத்தவும்தான்; உச்சநீதிமன்றத் தில் நிலுவையில் இருக்கும் வழக்கைத் துரிதப்படுத்தி வெற்றிகரமாக இந்தத் திட்டத்தை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்பதே நமது மிக முக்கியமான வேண்டுகோள்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-36135041669345194392013-06-18T18:56:12.752+05:302013-06-18T18:56:12.752+05:30முதல் அமைச்சர் ஜெயலலிதா ஏற்றுக் கொண்ட முடிவுதான்!
...முதல் அமைச்சர் ஜெயலலிதா ஏற்றுக் கொண்ட முடிவுதான்!<br /><br /><br /><br />திண்டுக்கல் திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் பேசிய திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பது ஜாதி - தீண்டாமை ஒழிப்பை மய்யமாகக் கொண்டது என்றும், இதில் எந்தவித அரசியல் பிரச்சினையும் கிடையாது என்றும் தெளிவுபடுத்தியதோடு, அதனைத் தமிழக அரசு செயல்படுத்தினால், மகிழ்ச்சியோடு வரவேற்பதோடு, பாராட்டவும் தயங்க மாட்டோம் என்று மனந்திறந்து பேசினார்.<br /><br />தி.மு.க.வோடு சம்பந்தப்படுத்தி அரசியல் கண்ணோட் டத்தோடு பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்த போது, அதற்கான போராட்டத்தை அறிவித்த நேரத்தில், உங்களுடைய சீடர்கள் ஆட்சியில் இருக்கும் பொழுது நீங்கள் போராட்டம் நடத்த வேண்டுமா? அதற்கான சட்டத்தை தி.மு.க. அரசு கொண்டு வரும் என்று சொல்லி அதற்கான சட்டம் நிறை வேற்றப்பட்டது.<br /><br />அதன் தொடர்ச்சியாக எம்.ஜி.ஆர். அவர்களும், அதனை ஏற்றுக் கொண்டு தந்தை பெரியார் நூற்றாண்டையொட்டி நீதியரசர் எஸ். மகராஜன் தலைமையில் 12 பேர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு, பரிந்துரையும் பெறப்பட்டது.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-64692031767439436272013-06-18T18:54:46.975+05:302013-06-18T18:54:46.975+05:30
தனிச் சலுகை
ஏழைகள் வாழ்வு மலரவே சமதர்மம் விழைக...<br />தனிச் சலுகை<br /><br /><br /><br />ஏழைகள் வாழ்வு மலரவே சமதர்மம் விழைகிறோம். எல்லா வகுப்பினரும் சம வாய்ப்புப் பெறும் வரையில் திட்டமிட்டுப் பரம்பரையாய்த் தாழ்ந்துள்ள சமூகத்தினர்க்குத் தனிச் சலுகை தரப்படவேண்டும்.<br />(விடுதலை, 8.12.1967)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-64796531511135771502013-06-18T18:53:35.453+05:302013-06-18T18:53:35.453+05:30
எழுத்தாளர் இராமகிருஷ்ணன் :
எழுத்துரு அளவு Larger ...<br />எழுத்தாளர் இராமகிருஷ்ணன் :<br />எழுத்துரு அளவு Larger Font <br /><br /> <br /><br />சென்னை நாரத கான சபாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் கூறியதாவது:<br /><br />கோயில்களில், சிலைகளின் அழகைப் பார்க்காமல் குங்குமமும், விபூதியும் அவற்றில் கொட்டிப் பாழாக்குகிறோமே என்றார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-46594303470898018982013-06-18T18:52:42.807+05:302013-06-18T18:52:42.807+05:30இந்த மனுவை நீதிபதி சி.எஸ்.கர்ணன் விசாரித் தார். அவ...இந்த மனுவை நீதிபதி சி.எஸ்.கர்ணன் விசாரித் தார். அவர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-<br /><br />தனது உத்தரவால் ஒரு பாவமும் அறியாத குழந்தைகளுக்கு சமுத யத்தில் பாதிப்பு ஏற் படும் என்பதை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி கவனிக்கவில்லை.<br /><br />இந்த இரண்டு குழந் தைகளையும், முகம துக்கு முறைதவறிப் பிறந்தவை என்று குடும்பநல நீதிமன்றம் நீதிபதி கூறியுள்ளார். குழந்தை பிறப்பின் போது, கணவன், மனை வியிடம் மருத்துவமனை நிர்வாகம் ஒப்புதல் கையெழுத்து பெறுவ துண்டு. அந்த ஆவணத் தில் கணவன், மனை விக்காக குறிக்கப் பட்டு இருக்கும் இடத்தில் இரண்டு பேரும் கையொப்பமிட்டு இருப்பதால், அவர்களுக்குப் பிறந்த குழந்தையை முறையற்ற பிறப்பு என்று கூற முடியாது.<br />திருமணத்தை நடத்துவது, சமுதாயம் மற்றும் சடங்குகளுக்காக வைக்கப்படும் ஒன்று. ஆனால் சட்டத்தின் அடிப்படையில் அவை கட்டாயமல்ல.<br />இந்த வழக்கில் முகமது மற்றும் பாத்திமாவை, வித்தியாசமாக சுய அடையாளமிட்டுக் கொண்ட கணவன், மனைவி என்றே இந்தக் நீதிமன்றம் கருதுகிறது. எனவே அவர்களுக்குப் பிறந்த அந்த குழந்தைகளும் முறையானவைதான்.<br /><br />பாலியல் உறவு முக்கியம்<br /><br />ஒரு பெண்ணுக்கு 18 வயது, ஒரு ஆணுக்கு 21 வயதும் பூர்த்தியாகி, (ஏற்கனவே திருமணம் ஆகாத நிலையில்) அவர்கள் பாலியல் தொடர்பு வைத்துக் கொள்வதன் மூலம், அந்தப் பெண் கர்ப்பம் தரித்தாள் என்றால், அவள் மனைவி என்றும் அவன் கணவன் என்றும் கருதப்பட வேண்டும் என்பது இந்த நீதிமன்றத்தின் கருத்து.<br /><br />ஒருவேளை அவள் கர்ப்பம் தரிக் காமல் போனாலும், அவர்களுக்குள் பாலியல் தொடர்பு இருந்தது என்பதற்கான ஆதாரம் இருந்தால், இருவருமே கணவன், மனைவி உறவுக்கு உட்பட்டவர்கள்தான். எனவே அப்படிப்பட்ட பாலியல் தொடர்புடைய இரண்டு பேருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால், சட்ட பூர்வமாக மனைவியிடம் இருந்து நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்ற பிறகுதான், மற்றொரு வரை கணவன் திருமணம் செய்ய முடியும்.<br /><br />ஒரு பெண்ணுடன் உடல் ரீதியான தொடர்பு ஏற்பட்டுவிட்டது என்ப தால், அவரிடம் இருந்து சட்ட பூர்வமான விவாகரத்து பெறாமல் மற்றொரு திருமணத்தை கணவன் செய்ய முடியாது.<br /><br />சட்ட பூர்வமான வயதை அடைந்த இரண்டு பேரும் பாலியல் ரீதியான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டாலே, பின் விளைவுகளைக் கொண்ட ஒரு அர்ப்பணிப்புக்கு உள்ளாகி விடு கின்றனர்.<br /><br />அப்படி சட்டபூர்வ வயதை அடைந்த ஆண், பெண் இரண்டு பேர் (ஏற்கெனவே திருமணம் ஆகாத வர்கள்), பாலியல் உறவுகளை வைத்துக் கொண்டால், அவர்களின் செயல்பாட்டை திருமணம் என்றும் அவர்கள் இருவரையும் கணவன் மனைவி என்றும் கருதலாம். சட்ட பூர்வமான வயதைக் கடந்த பிறகு கிடைக்கும் சுதந்திரத்தின் அடிப் படையில் அவர்கள் விருப்பப்படி தேர்வு செய்துகொள்கின்றனர்.<br /><br />தாலி கட்டுவதும் சடங்குகளும் மட்டும் திருமணமல்ல<br /><br />தாலி கட்டுவது, மாலை, மோதிரம் மாற்றுவது, தீக்குழியை சுற்றுவது அல்லது அரசு அலுவலகத்தில் போய் பதிவு செய்வது போன்றவை எல்லாம், மதச் சடங்குகளை பின்பற்றி சமு தாயத்தை திருப்திப்படுத்துவதற்காகத் தான் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து மதச் சடங்குகளை பின் பற்றி திருமணம் செய்த பிறகும், கணவன், மனைவிக்குள் பாலியல் ரீதி யான உறவு இல்லாவிட்டால், அந்தத் திருமணம் சட்டப்படி செல்லாது.<br /><br />எனவே ஒரு திருமணத்தின் முக்கிய மான சட்ட பூர்வமான ஆதாரம் என்னவென்றால், அது அந்த இணை யர்க்கு இடையே உள்ள பாலியல் உறவுதான். இந்த வழக்கில் அப்படிப் பட்ட உறவு நடந்தேறியுள்ளது. எனவே தங்களுக்கு இடையே பாலி யல் உறவு இருந்ததற்கான ஆதாரங் களை குடும்பநல நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, திருமணம் நடந்ததை அவர்கள் நிரூபிக்கலாம்.<br /><br />அப்படி திருமணம் நடந்ததை நிரூபிக்கும் பட்சத்தில், தன்னை முகமதுவின் மனைவி என்று அரசு ஆவணங்களில் பாத்திமா பதிவு செய்து கொள்ளலாம். சடங்குகளு டன் திருமணம் செய்த தம்பதிகளுக்கு என்ன சட்ட உரிமைகள் உள்ளதோ, அதே உரிமைகளை, தங்களுக்கு இடையே இருந்த பாலியல் உறவை நிரூபிக்கும் தம்பதியினரும் பெற்றுக் கொள்ளலாம்.<br /><br />திருமண சடங்குகள் முடிந்து, அதன் பிறகு பாலியல் உறவு நடந்தால் தான் சட்டப்படி அந்த திருமணம் செல்லும். பாத்திமா விவகாரத்தில், திருமண சடங்குகள் இல்லாமலேயே பாலியல் உறவு நடந்திருக்கிறது. எனவே அது திருமணம்தான்.<br /><br />பராமரிப்புக்காக பணம் வழங்கப்பட வேண்டும்<br /><br />ஆகவே, கணவன் முகமது தனது மனைவி பாத்திமாவுக்கு மாதம் ரூ.500-அய் பராமரிப்புச் செலவுக்காக வழங்க வேண்டும். 2000-ஆம் ஆண்டு செப்டம்பரில் அதற்கான வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்ததால், அந்த ஆண்டில் இருந்து கணக்கிட்டு 3 மாதங்களுக்குள் பாக்கித் தொகையை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-52353874727167117572013-06-18T18:52:36.301+05:302013-06-18T18:52:36.301+05:30
திருமணம் என்பது வெறும் தாலி கட்டுவதும், சடங்கும் ...<br />திருமணம் என்பது வெறும் தாலி கட்டுவதும், சடங்கும் அல்ல!<br /><br /><br />ஆண் - பெண் இருபாலருக்குமிடையே நிலவும் பாலியல் உறவே!<br /><br /><br />சென்னை, ஜூன் 18- திருமணம் என்பது தாலி கட்டுவதும், மதச் சடங் குகள் செய்வது அல்ல. ஆண் - பெண் இருவருக் கிடையே நிலவும் பாலி யல் உறவே கணவர் மனைவி என்பதை நிச்ச யிக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் புதிய சிந்தனையின் அடிப் படையில் தீர்ப்பை வழங்கியுள்ளது.<br /><br />கோவை பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா (வயது 35). இவருடைய கணவர் முகமது. (இரண்டு பேரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன). முகமது செருப்பு தயா ரித்து விற்பனை செய் பவர். இவர்களுக்கு 16.9.94 அன்று இஸ்லா மிய முறைப்படி திரு மணம் நடந்ததாக கூறப்படுகிறது. திருமண வாழ்க்கையின் பலனாக 23.12.96 மற்றும் 1.1.99 அன்றும் முறையே இரண்டு பெண் குழந் தைகள் பிறந்தன.<br /><br />1999-ஆம் ஆண்டு மனைவி, குழந்தைகளை விட்டு முகமது பிரிந்து சென்றுவிட்டார். மீண் டும் அவர்கள் சேர்ந்து வாழ்வதற்கான முயற் சிகள் மேற்கொள்ளப் பட்டன. ஆனால் அனைத்தும் வீணாய்ப் போய்விட்டன. முகமது வுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் வருமானம் வரு கிறது. எனவே அவரிடம் இருந்து மாதம் ரூ.5 ஆயிரம் கேட்டு கோவை குடும்பநல நீதிமன்றத்தில் பாத்திமா வழக்கு தாக் கல் செய்தார்.<br /><br />இந்த வழக்கை குடும்பநல நீதிமன்றம் விசாரித்தது. விசார ணையின்போது, புகைப் படங்கள், முகமதுக்கு குழந்தைகள் எழுதிய கடிதங்கள், குழந்தை களின் கல்விச் சான்றிதழ், பிறப்புப் பதிவு, ரேஷன் அட்டை பெறுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் ஆகியவை பாத்திமா தரப்பு ஆதா ரங்களாக தாக்கல் செய்யப்பட்டன. செருப்பு குடோனில் வேலை பார்த்தபோது தன்னுடன் பழகி, அதன் பிறகு தன்னை முகமது திருமணம் செய்ததாக பாத்திமா தரப்பில் வாதி டப்பட்டது.<br /><br />கையொப்பமே ஆதாரம்<br /><br />இரண்டாவது குழந் தைக்கான பிறப்பு அறிக் கையில், தந்தை முகமது என்றும், தாய் பாத்திமா என்றும் குறிப்பிடப்பட் டுள்ளதை டாக்டர் சாட் சியாகக் கூறினார்.<br /><br />இரு தரப்பு வாதங் களையும், ஆதாரங் களையும் பரிசீலித்த குடும்பநல நீதிமன்ற நீதிபதி, இரண்டு குழந் தைகளும் முகமதுக்குத் தான் பிறந்தவர்கள் என்றும் அதனால் இரண்டு பேருக்கும் தலா ரூ.500 தொகையை பராமரிப்புக்காக வழங்க வேண்டும் என்றும் 2006-ஆம் ஆண்டு உத்தர விட்டார்.<br /><br />ஆனாலும், முகம துவை திருமணம் செய் ததற்கான ஆதாரம் எது வும் இல்லை என்பதால் பாத்திமாவுக்கு பரா மரிப்புத் தொகை வழங்க உத்தரவிட முடியாது என்றும் நீதிபதி உத்தர விட்டார். இந்த உத்த ரவை எதிர்த்து நீதிமன் றத்தில் பாத்திமா மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார்.<br /><br />நீதியரசர் கர்ணன்<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-19341705254672348682013-06-18T18:49:51.716+05:302013-06-18T18:49:51.716+05:30மீண்டும் ஹிந்து சாம்ராஜ்ஜியப் பேராசை?
- ஊசி மிளகா...<br />மீண்டும் ஹிந்து சாம்ராஜ்ஜியப் பேராசை?<br /><br />- ஊசி மிளகாய்<br /><br />ஆர்.எஸ்.எஸ்.சின் ஏடு ஒன்றில் கீழ்க் கண்டவாறு எழுதப்பட்டுள்ளது (21.6.2013).<br /><br />ஜூன் 21ஆம் தேதி, ஜேஷ்ட, சுக்ல த்ரேயோதசி (ஆனி மாதம் சுக்லபட்சம், த்ரயோதசி திதி) புனித நாளாகும்! இதே நாளில்தான் 1674 ஜூன் 6ஆம் தேதி, சத்ரபதி சிவாஜி ஹிந்து சாம்ராஜ்யத்தின் மன்னனாக முடி சூட்டிக் கொண்டார்.<br /><br />பிரபல சரித்திர ஆராய்ச்சியாளரான ஸ்ரீ ஜதுநாத சர்க்கார் சிவாஜியைப் பற்றி எழுதியுள்ளதில் தங்களுக்கு உகந்த சில பகுதிகளை மட்டும் (இதுதான் ஆரியத்தின் கைதேர்ந்த டெக்னிக்குகளில் ஒன்றாயிற்றே!)<br /><br />...சிவாஜி ஒரு அவதார புருஷரல்ல. நம்மைப் போன்ற ஒருவர்தான் என்பதை நினைப்போம்!<br /><br />...சிவாஜி மகாராஜாவைப் போலவே சுதந்திரமான ஹிந்து ராஷ்டிரத்தை உருவாக் குவோம் என்று இந்த மங்களகரமான நன்னாளில் விரதமேற்போம் ........என்று முடித்துள்ளார்கள்.<br /><br />அதே வரலாற்று ஆசிரியர் ஜதுநாத் சர்க்காரின் எழுத்துக்களையும், இன்னும் சில சரித்திர நூல்களையும் ஆதாரமாகக் கொண்டே அறிஞர் அண்ணா அவர்கள், தானே எழுதி நடித்த சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் -<br /><br />பார்ப்பனர்களின் பக்திச் சுரண்டல்கள், எப்படி சிவாஜியின் கஜானாவையே, யாகயோகம் என்று கூறி மொட்டையடித்தது என்பதை மிகத் துல்லியமாக, தானே ஏற்று நடித்த காகபட்டர் வேடத்தின் மூலமும் அவரது சீடன் கங்குபட்டர் மூலமும் விளக்கி யுள்ளார்களே!<br /><br />தோனார், புரந்தர், கல்யாண் போன்ற எண்ணற்ற மலைக்கோட்டைகளை வென்ற மலைஎலி என்று புகழப்பட்ட சிவாஜி முடி சூட்டிக் கொள்ள முனைந்த நேரத்தில், அது முடியாத காரியம் என்று தடுத்தது ஹிந்துமத சனாதன சாம்ராஜ்யம் அல்லவா!<br /><br />சிவாஜி நீ சூத்திரன் - நாலாம் ஜாதிக் காரன் அடிமை வேலையை பிராமணருக்குச் செய்ய ஆண்டவனால் உண்டாக்கப்பட்டவன், நீ எப்படி மன்னனாக முடியும்?<br /><br />க்ஷத்திரியர்கள் அல்லவோ நாடாளப் பிறந்தவர்கள். நாடாள அவர்கள் ஆசைப்பட்டால் அதுதான் வர்ண தர்மப்படி நியாயமானது; நீ விரும்புவது அதர்மம், என்றவுடன், மனம் வெதும்பி, இதை மாற்ற வேறு மார்க்கமில்லையா குருதேவா? என்று கேட்க, கங்கை நதிப் புரத்திலிருந்து காகபட்டர் என்ற பெரும் பிராம்மண முனிவரை அழைத்து வந்து பெருத்த யாகம் செய்து, அவர் அழைக்கும் ஆயிரக்கணக்கான பிராம்மணர் களுக்கும் பொன்னும், வைரமும், மற்றவை களையும் தானமாக தாராளமாகக் கொடுத்து, 45 நாள் யாகம் தொடர்ந்து செய்தால் உன்னைத் தற்காலிகமாக க்ஷத்திரி யனாக்கி மன்னனாக்கி முடி சூட்டலாம் என்று ஆசைகாட்டி மோசம் செய்யப்பட்ட அந்த சிவாஜி பரம்பரை எப்படி வீழ்ந்து, பார்ப்பன சாம்ராஜ்யமாகவே - பேஷ்வாக்களே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி பச்சை வர்ணாசிரம ஆட்சியாகியது என்ற வரலாற்றை அருமையாக 3 மணி நேரத்தில் நாடகமாக்கினார் - அறிவு வெளிச்சம் ஏற்பட்டது.<br /><br />அதில் சிவாஜி ஒப்பனையோடு சிவாஜி யாகவே மாறி சிறப்பாக நடித்த வி.சி. கணேசனுக்கு தந்தை பெரியார் இன்று முதல் சிவாஜிகணேசன் என்று கூற, அதுவே அவரது பெயராக இறுதிவரை ஆகிவிட்ட கதை சில பேருக்காவது தெரிந்தால் நல்லது.<br /><br />சிவாஜி கண்ட ஹிந்து ராம்ராஜ்யம் பார்ப்பனர்களின் பகற் கொள்ளை சாம்ராஜ்யம், யாகங்கள் என்ற பெயரால் சோம்பேறிப் பார்ப்பனர்கள் கூட்டம் பொன்னையும், பொருளையும் அள்ளிச் சென்று அக்கிர காரத்தில் ஆட்டம் போட்டு, செல்வச் செழிப்பில் புரண்ட காலம் தான் ஹிந்து சாம்ராஜ்ய வர்ணதர்மக் கொடி பறந்த கொடுமையான காலம்!<br /><br />அந்த நாடகத்தில் மிக அருமையாக எளிய முறையில் அண்ணா காகபட்டராக நடித்துக் காட்டுவார்! கங்குபட்டர் என்ற ஒரு அப்பாவி சீடன் கேள்வி கேட்பான்.<br /><br />அவனை வைத்து அருமையான பாடங்களை கூறுவார்.<br /><br />டேய் கங்கு, நான் எதன்மீது அமர்ந்துள்ளேன் பார்த்தாயா?<br /><br />ஹம் தெரியாதா - ஆசனத்தில்....<br /><br />டே - மண்டு அதல்லடா - ஆசனத்தில் எதன்மீது?<br /><br />புலித்தோல்மீது...!<br /><br />பார்த்தாயா அந்த புலியை உயிருக்குத் துணிந்து வேட்டையாடியவன் எவனோ?<br /><br />நான் புலித்தோல்மீது சுகமாய் அமர்ந்துள்ளேன் இதுதாண்டா நம்மவாளின் சாமர்த்தியம் புரிந்ததோ என்பார்.<br /><br />இப்படி ஆரியத்தின் தோலை உரித்து மறைந்த வரலாற்று உண்மைகளை நாடகமாக்கி சிந்திக்க வைத்து எழுச்சி உண்டாக்கினார் அண்ணா.<br /><br />சிவாஜிக்கு நல்ல புத்தி கூறிய தளபதி சந்திரமோகனை விரட்டி விட்டான் சிவாஜி ஆரியர் பேச்சைக் கேட்டு.<br /><br />அதுபோல ஹிந்து சாம்ராஜ்யம் மீண்டும் வர வேண்டுமாம்<br /><br />எவ்வளவு பேராசை பார்த்தீர்களா?<br /><br />'' பேராசைக்காரனடா பார்ப்பான்!<br /><br />பிச்சுப்பணங் கொடு என்றே தீர்ப்பான்?"<br /><br />- பார்ப்பன பாரதியார் தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-86764871305290731522013-06-18T07:29:44.501+05:302013-06-18T07:29:44.501+05:30விஞ்ஞானிக்கும் . . .
பிரபல விஞ்ஞானி அய்ன்ஸ்டீன்...விஞ்ஞானிக்கும் . . .<br /> <br /><br />பிரபல விஞ்ஞானி அய்ன்ஸ்டீன் ஒரு சமயம் ரெயிலில் பயணம் செய்துகொண்டு இருந்தார். அவர் மனதிற்குள் ஒரு கஷ்டமான கணக்கிற்கு விடை தேடிக் கொண்டு இருந்தார். அப்போது டிக்கெட் பரிசோதகர் வந்தார்.<br /><br />அவர் ஒவ்வொருவரிடமும் டிக்கெட் வாங்கிச் சோதித்துக் கையெழுத்துப் போட்டார். பிறகு ஆல்பர்ட் அய்ன்ஸ்டீனிடம் டிக்கெட் கேட்டார். அவர் தான் அணிந்திருந்த கோட்டுப் பைக்குள் கையை விட்டு டிக்கெட்டைத் தேடினார். அது எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. டிக்கெட் பரிசோதகர் அவரை உற்றுப் பார்த்தார். அவர் அறிவியல் மேதை அய்ன்ஸ்டீன் என்பதை அறிந்து கொண்டார். பரவாயில்லை அய்யா, டிக்கெட்டைத் தேட வேண்டாம் என்று சொல்லிக் கொண்டே அடுத்த நபரிடம் டிக்கெட்டை வாங்கிப் பரிசோதித்தார்.<br /><br />அப்பொழுதும் தனது சூட்கேசைத் திறந்து அய்ன்ஸ்டீன் கவனமாக டிக்கெட்டைத் தேடிக் கொண்டு இருந்தார். அதன் உள்ளே இருந்த புத்தகங்களை எல்லாம் எடுத்து வெளியே போட்டுத் தேடினார். துணிகளிலும் டிக்கெட் இருக்கிறதா என்று ஒவ்வொன்றாக உதறிப் பார்த்தார். அப்பொழுதும் கிடைக்கவில்லை .<br /><br />அப்போது மீண்டும் டிக்கெட் பரிசோதகர் அந்த வழியாக வந்தார். அய்யா, தாங்களோ உலகப் புகழ் பெற்ற பெரிய விஞ்ஞானி. தங்களிடம் டிக்கெட் இல்லாவிட்டால்தான் என்ன? ஏன் வீணாகத் தேடிக் கொண்டு கஷ்டப்படுகிறீர்கள்? உங்களால் இந்த நாட்டிற்கே பெருமை. டிக்கெட் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. என்று மீண்டும் சமாதானப்படுத்தினார்.<br /><br />அய்ன்ஸ்டீன் மீண்டும் தேடிக்கொண்டே, உங்களுக்குப் பரவாயில்லை. நான் எந்த ஊருக்குப் போக வேண்டும் என்ற விவரம் டிக்கெட்டில் அல்லவா இருக்கிறது? நான் என்ன செய்வது? எனக்கு இப்போது டிக்கெட் வேண்டுமே..! என்றார்.<br /><br />- சந்திரன் வீராசாமிதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-74449070657531183882013-06-18T07:28:54.468+05:302013-06-18T07:28:54.468+05:30மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தமிழ்நாட்டின் மக்கள் 7,...மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தமிழ்நாட்டின் மக்கள் 7,21,38,958<br /> <br /><br />10 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கடந்த 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. இந்தியாவில் முதன்முதலாக 1872 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது. அதனைத் தொடக்கமாகக் கொண்டு தற்போது 2011ஆம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பு 15 ஆவது கணக்கெடுப்பாகும். அதன் விவரங்களைத் தற்போது அரசு வெளியிட்டுள்ளது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி (2011 மார்ச் 1 அன்று உள்ளவாறு) தமிழகத்தில் 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 பேர்கள் உள்ளனர். இதில், ஆண்களின் எண்ணிக்கை 36,158,871 பெண்களின் எண்ணிக்கை 35,980,087 மொத்த மக்கள்தொகையில் பெண்களைவிட 1,78,784 ஆண்கள் அதிகமாக உள்ளனர்.<br /><br />நகர்ப்புறங்களில் 3,49,17,440 பேர்களும் கிராமங்களில் 3,72,29,590 பேர்களும் வசிப்பதாகப் பதிவாகியுள்ளது. அதாவது, 2011ஆம் ஆண்டில் கிராமப்புறங்களில் 23 லட்சம் பேர்களும் நகர்ப்பகுதிகளில் 74 லட்சம் பேர்களும் அதிகரித்து தற்போது 97 லட்சம் மக்கள் அதிகரித்துள்ளனர்.<br /><br />46.5 லட்சம் மக்களுடன் சென்னை மாவட்டம் மாநிலத்தில் முதலாவது இடத்திலும் 39.99 லட்சம் மக்களுடன் காஞ்சிபுரம் மாவட்டம் 2ஆம் இடத்திலும், 39.3 லட்சம் மக்களுடன் வேலூர் மாவட்டம் 3ஆம் இடத்திலும் உள்ளன. பெரம்பலூர் மாவட்டம் 5.6 லட்சம் மக்களுடன் கடைசி இடத்தில் உள்ளது.<br /><br />மக்கள் தொகை வளர்ச்சியில் கிராமப் பகுதிகள் 15.6 சதவிகிதத்தையும் நகர்ப்பகுதிகள் 27 சதவிகித வளர்ச்சியையும் பெற்றுள்ளன. நீலகிரி மாவட்டத்தின் மக்கள் தொகை 3.5 சதவிகிதமாக குறைந்துள்ளது. தற்போது, 6 வயதிற்குட்பட்ட 68,94,821 ஆண் குழந்தைகளும் 35,42,351 பெண் குழந்தைகளும் உள்ளனர். 33,52,470 தாழ்த்தப்பட்டோர் (ஷெட்யூல்டு வகுப்பினர்) உள்ளனர். இது, 2001ஆம் ஆண்டைவிட 26 லட்சம் அதிகரித்திருப்பதுடன் வளர்ச்சி விகிதமும் 21.8 சதவிகிதமாக பதிவாகியுள்ளது.<br /><br />பழங்குடியினர் 7,94,697 பேர்கள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் 1.4 லட்சமாக அதிகரித்துள்ள இவர்களின் வளர்ச்சி விகிதம் 22 சதவிகிதமாக பதிவாகியுள்ளது.<br /><br />எழுத்தறிவுள்ளவர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் முதலிடத்தில் கன்னியாகுமரியும் (91.7%), இரண்டாமிடத்தில் சென்னையும் (90.2%), மூன்றாமிடத்தில் தூத்துக்குடியும் (86.2%) உள்ளன. கடைசி மூன்று இடங்களில் கிருஷ்ணகிரி (71.5%), அரியலூர் (71.3%), தர்மபுரி (68.5%) மாவட்டங்கள் உள்ளன.<br />சென்னை மாவட்டத்தில் ஒரு சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் 26,553 பேர்களும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,111 பேர்களும், திருவள்ளூரில் 1,098 பேர்களும் வசித்து வருகின்றனர்.<br /><br />நீலகிரியில் ஒரு சதுரகிலோ மீட்டருக்கு 287 பேர்களும், சிவகங்கையில் 316 பேர்களும் வசித்து வருகின்றனர்.<br /><br />தமிழகத்தில் எழுத்தறிவுள்ளவர்கள் 5,18,37,507 பேர்கள் உள்ளனர். இது 80.1 சதவிகிதமாகும். வேலை செய்யும் 28,84,681 பேர்களில் 42.5 சதவிகித மக்கள் விவசாயம் செய்பவர்களாகவும் 96 லட்சம் மக்கள் விவசாயக் கூலிகளாகவும் உள்ளனர். 2001ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 8.7 லட்சம் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்தும் விவசாயக் கூலி வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 9.7 லட்சமாக அதிகரித்தும் காணப்படுகிறது. மேலும் வீட்டில் இருந்து தொழில் செய்வோர் எண்ணிக்கை 1.4 லட்சமாக குறைந்தும் மற்ற வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 50 லட்சமாக அதிகரித்தும் பதிவாகி உள்ளதாக மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் துறையின் தமிழ்நாடு இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.<br /><br />தமிழகத்தில், 1,000 ஆண்களுக்கு நிகரான பெண்கள், 996 என்று உள்ளது. இந்த விகிதம் கிராமப்புறங்களில், 993 எனவும், நகர்ப்புறங்களில், 1,000 எனவும் உயர்ந்துள்ளது. கோவை, சிவகங்கை, பெரம்பலூர், வேலூர், விருதுநகர், திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, கரூர், திருவாரூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, நாகப்பட்டினம், நீலகிரி, தஞ்சை ஆகிய 16 மாவட்டங்களில், ஆண்களைவிட பெண்கள் எண்ணிக்கையில் அதிகரித்துள்ளனர்.<br /><br />பெண்கள் அதிகமாக உள்ள மாவட்டங்களில், நீலகிரி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இம்மாவட்டத்தில், 1,000 ஆண்களுக்கு, 1,042 பெண்கள் உள்ளனர். தஞ்சையில், 1,035 பேரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1,025 பெண்களும் உள்ளனர்.<br />பெண்கள் குறைவாக உள்ள மாவட்டங்களில், தருமபுரி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இம்மாவட்டத்தில், 1,000 ஆண்களுக்கு, 946 பெண்களே உள்ளனர். அடுத்து, சேலத்தில், 954 பெண்களும், கிருஷ்ணகிரியில், 958 பெண்களும் உள்ளனர் என்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பதிவாகியுள்ளதாக அதன் இயக்குநர் கிருஷ்ணராவ் தெரிவித்துள்ளார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-91700432862858617612013-06-18T07:28:23.999+05:302013-06-18T07:28:23.999+05:30ஆனால், நாம் உயிர்களின் அதிகம் வளர்ந்தவற்றைப் பற்றி...ஆனால், நாம் உயிர்களின் அதிகம் வளர்ந்தவற்றைப் பற்றிப் பேசும்போது, நுண்ணோக்கியின் உதவியில்லாமல் பார்க்கக்கூடிய பெரிய அமைப்புகளை (Macro structures) யூகார்யோடிக் செல்களினால் (Eukaryotic cells) பார்க்க முடியும். அவற்றைத் தயாரிப்பது மிகமிகக் கடினமான ஒன்று. பூமியில் உயிரினங்கள் தோன்றுவதற்கு ஆயிரக்கணக்கான மில்லியன் ஆண்டுகள் ஆயின. பூமியில் தோன்றிய மனித வாழ்க்கை வரலாறு, மிகவும் கவர்ச்சிகரமானது. ஏனென்றால், அது ஒரு கிட்டத்தட்ட இயற்பியல் சட்ட ஒழுங்குகளைப் போன்று, அது ஓர் உயிரியல் மற்றும் ரசாயனக் கலவை ஆகும். அதாவது, அணுக்களை ஒன்றுபடுத்தி மோளகுயூல்கள் (Molecules) ஆக்கி அவற்றை மேலும் மேலும் சிக்கலுள்ளதாக வளர்ச்சி பெறச் செய்து, மேலும் அவற்றைப் பேரழிவு (Cataclysmic) நிகழ்ச்சிகளுக்கு உட்படுத்தி, கோள்களை மோதச் செய்து, பெரும் பூதாகரமான எரிமலை வெடிப்புகளை உண்டாக்கி, அந்தப் பூதாகரமான அழிவுகள் இயற்பியலுடனும் உயிரியலுடனும் தொடர்பில்லாதனவாக விளைந்தவை. இவை தற்செயல்களாக நிகழ்ந்தன. இந்த தற்செயல் விளைவுகள் பலமுறை வேர் வரை கவர்ந்து செய்யப்பட்ட நமது உயிர் வாழ் வழித்தடம் (Tree of Life) உயிரியல் பரிணாம வளர்ச்சியையும் கொண்டு திரும்பவும் ஒரு புது வழியில் வளர்கிறது.<br /><br />நாம், பூமியில் உள்ள எல்லா உயிரினங்களும், அந்தத் தற்செயல் விளைவின் பல கிளைகள் ஒன்றில் வாழ்கிறோம். மற்ற கோள்கள் உயிர் வாழ் வழித்தடங்களைக் கொண்டிருக்கலாம். ஆனால், அவைகள் மிகவும் வேறுபட்டிருக்கும்.<br /><br />கேள்வி: நீங்கள் குழந்தைகளுக்கு அண்டத்தைப் பற்றிச் சொல்லிக் கொடுப்பதற்குப் பள்ளிக்கூடங்களுக்குப் போகிறீர்கள். அது கடினமாக உள்ளதா?<br /><br />பதில்: ஆம். ஒரு பொருளைச் சரியாகப் புரிந்துகொள்வது கடினமானதுதான்.<br /><br />ஏனென்றால், நமது புத்தி (Mind) நியூட்டனுடையது போல, நேர்கோடுகளிலோ, முப்பரிமாணத்திலோ, குறுகிய காலங்களுக்குள்ளான நேரம், வெளி ஆகியவைகளிலேயே செலவிடப்படுகிறது. நாம் ஒரு நூற்றாண்டுகளைப்பற்றியோ வருங்காலத்தையோ அல்லது சென்ற காலத்தையோதான் நினைக்க முடியும். ஆனால் நாம் ஆயிரக்கணக்கான மில்லியன் ஆண்டுகளை நினைக்க ஆரம்பித்தால் நாம் நமது கால அளவைத்திறனை இழந்து விடுகிறோம். இவைகளைப்பற்றி விளக்குவதற்காக நான் கண்டுபிடித்துள்ள ஒரு வழி, கால அளவீட்டின் வரிசைப்படியானதாகும். 14 மீட்டர் நீளமுடைய ஒரு கயிறை நான் வைத்துள்ளேன். அண்டத்தின் கால வரிசையை இன்று நாம் கொண்டுள்ளது போல, அந்த 14 மீட்டர் கயிறானது, 14 ஆயிரம் மில்லியன் ஆண்டுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ஒரு மில்லி மீட்டர் கயிறு, மில்லியன் ஆண்டுகளைக் குறிப்பதாக நாம் கருதிக் கொண்டால், அண்டத்தின் முழு வரலாறும் கொண்டுள்ளதாகச் சொல்லலாம். நான் குழந்தைகளை ஒரு மில்லி மீட்டர் நீளக்கயிற்றை ஒரு மில்லியன் ஆண்டுகளாக கற்பனை செய்துகொள்ளச் சொல்வேன். அதில் நான் முக்கிய நிகழ்வுகளைக் குறிப்பிடும் வண்ணம், அண்டவெடிப்பு (Big Bang) விண்மீன்களின் தோற்றம், சூரியக் குடும்ப அமைப்பு, பூமியில் உயிரினம் உண்டாதல், Eukaryotic செல்கள் தோன்றுதல், டைனோசரஸ் தோற்றம் வரை அவற்றைக் குறிப்பிட ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு பொருளைத் தொங்க விடுவேன். அந்த அளவையில் கடைசியிலிருந்து 0.2 மில்லி மீட்டர் இடத்தில் மனித இனம் வருகிறது. ஒரு சிறு துண்டுக் காகிதத்தின் அளவில் மனிதகுல வரலாறு அடங்கிப் போகிறது. இந்த உலகத்தில் நம்முடைய தோற்றத்தைக் கற்பனையில் பார்ப்பதற்கு இது உதவுகிறது. குழந்தைகளும் எளிதில் புரிந்து கொள்கிறார்கள். அது மிகவும் எளிமையானது. சிலருக்கு அது சோர்வு கொடுக்கக்கூடியதாக இருக்கும். அண்டத்தைப் பற்றி அறிந்துகொள்வது, நம்மைப்பற்றியே நாம் அறிந்து கொள்வதாகும். நாம் நம்மை அழித்துக் கொள்ள இன்னமும் ஆரம்பிக்கவில்லை. ஆனால், நான் அவர்களிடம், இந்தத் துண்டுக் காகிதத்தின் அடுத்த மடிப்பு வரும் வரை நாம் உயிர் வாழ்வோம். அண்டத்தைப் பற்றி மேலும் அறிந்து கொண்டிருப்போம் என்று சொல்வேன்.<br /><br />நேர்காணல்: ஜோஸ் கான்சால்வ்ஸ்<br /><br />தமிழில்: ஆர். ராமதாஸ்<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-58880108022344311512013-06-18T07:28:17.872+05:302013-06-18T07:28:17.872+05:30
கேள்வி: ஆனால் அறிவியலால் எல்லாவற்றையும் விளக்க மு...<br />கேள்வி: ஆனால் அறிவியலால் எல்லாவற்றையும் விளக்க முடியாது. இல்லையா?<br /><br />பதில்: உலகத்தைப் பற்றிய பல விவரங்களை நம்மால் விளக்க முடியாது. இருந்தாலும், உண்மையில் நாம் சில விஷயங்களுக்கு விலக்களிக்க முடியாதவர்களாக இருக்கிறோம். ஆனால், அதற்காக ஸ்டீபன் ஜே.கோல்டு (Stephen J. Gould) இடைவெளியில் கடவுள் என்று சொன்னதைப் போல, நாம் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள முடியாது. ஆனால் உலகத்தின் தோற்றத்தை நம்மால் விளக்க முடியாது. அல்லது வெளிப்படையாக கண்களுக்குத் தெரிகிற முறையில் உள்ள 96 விழுக்காட்டு உலகத்தைப்பற்றியும்கூட நம்மால் விளக்க முடியாது. இந்த இடைவெளிகளை நிரப்ப முடியுமென்று எனக்குத் தோன்றவில்லை. ஸ்டீபன் ஹாகிங் (Stephen Hawking) பேசிய கூட்டத்திற்கு நான் போயிருந்தேன். அங்கே யாரோ ஒருவர் கேட்டார்; உலகத்தில் உள்ள எல்லாவற்றையும்பற்றி, நாம் எப்பொழுதாவது தெரிந்துகொள்ளுவோமா? என்று. அதற்கு அவர்,.<br /><br />அப்படி நான் நம்பவில்லை மனித அறிவு அதன் பயிற்சி, கண்டுபிடிக்கும் திறன், கருத்துகளை வளர்த்துக்கொள்ளுதல்பற்றி அறிந்துகொள்ளுதல் அல்ல. அவை நமக்குச் சவால் விடக்கூடியன. நாம் எல்லாவற்றையும் அறிந்து கொண்டிருந்தால் வாழ்க்கை மிகவும் சுவை குறைந்ததாகிவிடும்.<br /><br />கேள்வி: அண்டத்தின் பிற பகுதிகளில் உயிர் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?<br /><br />பதில்: ஆம். அண்டத்தின் பல பகுதிகளில் ஆரம்பகால உயிரினங்கள் உள்ளன. அநேகமாக கோடிக்கணக்கான இடங்களில். ஆரம்பகால உயிரினங்கள் என்று நான் குறிப்பிடுவது ஆரம்பகால உயிரிகள் (Bacteria) அளவில் உள்ளவை. எந்த ஒரு அதீதமான நிலையிலும் உயிரிகள் உயிர் வாழ முடியும். அதற்கான ஆதாரங்கள் பூமியிலேயே பல இடங்களில் கிடைத்துள்ளன. ஆகவே, நிலவிலும் உயிரிகள் உண்டு. வியாழன் மற்றும் சனி கோள்களில் உள்ள பல நிலவுகளிலும், நிச்சயமாக செவ்வாய்க்கோளிலும் உயிரிகள் உண்டு. நாம் இப்போது நமது பால்வீதி கோள் கோட்டத்தில் (Milky Way galaxy) பல கோடி கோள்கள் இருப்பதற்கான ஆதாரங்களைப் பெற்றுள்ளோம். அவற்றில் சில உயிரிகள் அளவில் சில உயிர்கள் தோன்றுவதற்கான நிலைமைகளைப் பெற்றுள்ளன.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com