tag:blogger.com,1999:blog-1474608369333206681.post7567108394645201441..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: காவல்துறையினர் வசூலுக்குக் கிளம்பினால்!-துப்பாக்கிகளுக்கெல்லாம் சந்தனப் பொட்டு - குங்குமப் பொட்டுதமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-38607548589614165252014-01-01T07:51:01.762+05:302014-01-01T07:51:01.762+05:30பெரியார் பெண்ணியம் மூன்று நாள் பயிற்சி: ஒரு பார்வை...<br />பெரியார் பெண்ணியம் மூன்று நாள் பயிற்சி: ஒரு பார்வை<br /><br /><br />தந்தை பெரியாரின் நினைவு நாளான டிசம்பர் 24 ஆம் தேதி காலை 6 மணி முதல் அய்யா நினை விடத்தில் கூடத் தொடங்கினர் பயிற்சிக்கு வந்த பெண்கள், பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவி கள், வேலை பார்க்கும் பெண்கள், திருமணம் முடித்து குடும்பப் பொறுப்பை ஏற்றவர்கள் என வரு கைக்கு சிலர். திராவிடர் கழக மகளிரணியும், மகளிர் பாசறையும் இணைந்து நடத்திய பெரியார் பெண் ணியப் பயிற்சி பட்டறை சரியாக காலை 7 மணிக்குத் தொடங்கியது.<br /><br />பங்கேற்பாளர்களின் அறிமுகத் திற்குப் பின், கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்அவர்கள் எளிமையாக உரையாற்றி துவக்கி வைத்தார். முதல் நாள் காலை முதல் மதியம் வரை புத்தர் கலைக்குழு வின் இயக்குநர் மணிமாறன் குழுவினரோடு பறை இசை, பாடல், தாளம் என அடிப்படைப் பயிற்சி யைத் தொடங்கி வைத்தார்.<br /><br />திரைப்பாடகர் மகிழினி அவர்கள் கொடுத்த பாடல் பயிற்சியோடு நாடக வடிவத்திற்குள் நுழைந்தார்கள். மதியம் முதல் மாலை 6 மணி வரை கூத்துப்பட்டறை நாடக இயக்கத்தைச் சேர்ந்த தம்பிச்சோழன் பல் வேறு பயிற்சிகளோடு நாடகம் அமைப்பதற்கான தயாரிப்பை பயிற்சியாளர்களுக்கு அளித்தார்.<br /><br />முதல் நாள் இரவு 7.30 மணி முதல் 9 மணி வரை Not one less என்ற சீனமொழித் திரைப்படம் திரையிடப்பட்டது.<br /><br />டிசம்பர் 25-ஆம் தேதி காலை 6.30 மணி முதல் 10 மணி வரை பறை இசைப் பயிற்சி நடைபெற்றது.<br /><br />தொடர்ந்து தன் வாழ்வியல் அனுபவங் கள் குறித்து வனத்துறை அலுவலரும், நரிக்குறவர் சமூகத்தின் முதல் பெண் பட்டதாரியுமான இந்திரா காந்தி அவர்களும், இன் றைய பெண்கள் எதிர் கொள்ளும் சவால்களைப் பற்றி சிறப்புக்குழந்தை களின் ஆசிரியரான நிர்மலா அவர்களும், பிரச் சினைகள் அவற்றின் தீர்வுகள் என்ற தலைப்பில் மனநல மருத்துவர் நப்பின்னை அவர்களும் பயிற்சியாளர்களோடு இயல்பாகப்பேசி, கலந்துரையாடல் முறையில் ஆலோசனைகளை அளித்தார்கள்.<br /><br />மீண்டும் நாடகப் பயிற்சியில் புதிய அனுபவங்களைப் பெற்றனர். மாலை மற்றொரு திரைப்படம் அதுவும் சீனத் திரைப்படமே, அதன் பெயர் “To Live” (வாழ்வதற்காக) மூன்றாம் நாள் பறைப்பயிற்சியைத் தொடர்ந்து குஜராத்தில் 2002-ஆம் ஆண்டு நடந்த கோரக் கொலைகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பதிவு செய்து ராகேஷ்சர்மா உருவாக்கிய The Final Solution "இறுதித் தீர்வு" என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது.<br /><br />இந்தியா எதிர்கொள்ள இருக்கும் மதவெறி வன்முறை பற்றிய இந்த ஆவணப்படம் பற்றி பங்கேற்பாளர்களுடன் கழகப் பிரச்சாரச் செயலா ளர் அருள்மொழி கலந்துரையாடல் நடத்தினார்.<br /><br />மாலை 4 மணிக்கு நிறைவு விழாவில் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பாராட் டுரையும், பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழும் வழங்கினார். திராவிட மகளிர் பாசறையின் செயலாளர் டெய்சி மணியம்மை இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்.<br /><br />பெரியார் நூலக வாசகர் வட்ட தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், பரமேஸ்வரி அம்மையார், தலை மைச் செயற்குழு உறுப்பினர்கள் க.பார்வதி, க.திரு மகள், மகளிர் பாசறை உமா, வி.வெற்றிச்செல்வி முதலியோர் பங்கேற்றனர்.<br /><br />Read more: http://viduthalai.in/page1/72697.html#ixzz2p6qcHcI3<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-76945391879997468452014-01-01T07:50:14.641+05:302014-01-01T07:50:14.641+05:30கண்ணன் எங்கே போனான்?
திரவுபதையின் மானத்தைக் காத்த...கண்ணன் எங்கே போனான்?<br /><br />திரவுபதையின் மானத்தைக் காத்த கண்ணனுக்கு நாம் உற்சவங்கள் கொண் டாடுகிறோம். கவிகள் அவனைப் பற்றி காவியங்கள் பாடுகிறார்கள். தத்துவ ஞானிகள் அவனைப் பூர்ணாவதாரம் என்கிறார்கள்.<br /><br />ஆனால், அந்தக் காலத் தில் ஒரு திரவுபதையின் மானத்தைக் காப்பாற்ற ஓடி வந்த கண்ணன், இன்றைய தினம், உடுக்க ஒரு முழக்கந்தலுமின்றித் தவிக்கின்ற லட்சக்கணக்கான ஏழைப் பெண்களைக் காப்பாற்ற ஏன் முன் வரவில்லை? தெய்வமே குருடாகிவிட்டது என்று எனக்குக் தோன்றுகிறது?<br /><br />- காண்டேகர்<br /><br />Read more: http://viduthalai.in/page1/72714.html#ixzz2p6qQLijm<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-1152657308377781642014-01-01T07:49:20.452+05:302014-01-01T07:49:20.452+05:30ஜாதி
புதிய தமிழகத்தின் முதல் சீர்திருத்தம் ஜாதி ஒ...ஜாதி<br /><br />புதிய தமிழகத்தின் முதல் சீர்திருத்தம் ஜாதி ஒழிப்பே! அந்தணர், வீரர், வைசியர், தொண்டர் என்ற பாகுபாடு கூட எனக்கு உடன்பாடில்லை.<br /><br />இப்படிப் பிரித்தே வேத காலத்தில் வாழ்ந்த ஆரியர், பிறகு வருணபேதம் ஏற்படுத்தி, அது ஜாதியாகி, நாலு ஜாதி நாலாயிரம் ஜாதியாகி, நமது நாட்டையே வாழ வொட்டாமல் அடித்தது. ஜாதி என்ற மொழியே நமது அகராதியில் தேவை இல்லை.<br /><br />- சுத்தானந்த பாரதியார்<br /><br />Read more: http://viduthalai.in/page1/72715.html#ixzz2p6qCyzLp<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-17020714348810317292014-01-01T07:49:00.300+05:302014-01-01T07:49:00.300+05:30கோபுரங்கள் ஏன்?
வருணாசிரமத் தர்மங்களைக் கடைப்பிடி...கோபுரங்கள் ஏன்?<br /><br />வருணாசிரமத் தர்மங்களைக் கடைப்பிடித்தொழுகும் இந்துக்களில் சில ஜாதியார் கோயிலுக்குள் பிரவேசித்து, இறைவன் உருவினைக் கண்டு தொழுவதற்கு இயலாதவராய் இருத்தலின், அன்னார் நெடுநிலைக் கோபுரங்களைக் கண்டு தொழுது நற்பிறப்பெய்துந் திருப் பெறவே வானளாவுங் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.<br /><br />ஆதாரம்: இராஜ ராஜ சோழன், ஆசிரியர்: இரா.சிவ. சாம்பசிவ சர்மா, நூல் பக்கம்: 93<br /><br />கோபுரங்கள் கட்டப்பட்ட தன் தத்துவம் புரிகிறதா? நந்தன்கூட தில்லைத் தேரடியில் நின்று தரிசித்தால் போதும் என்று தரிசித்தால் போதும் என்று மனநிறைவு கொண்டதன் தத்துவமும் இதுதானே!<br /><br />இப்போது கூட பார்ப்பனர்கள் அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகராகத் தகுதி இல்லை - சூத்திரப் பசங்கள் கோபுரத்தைத் தரிசித்தால் போதும் என்ற எண்ணத்தில்தானே அதை எதிர்க்கிறார்கள்!<br /><br />Read more: http://viduthalai.in/page1/72715.html#ixzz2p6q6hSkv<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-75805710045452385342014-01-01T07:48:33.979+05:302014-01-01T07:48:33.979+05:30
மதுரை வீரா! காத்தவராயா!!
ஜாதி உணர்வு நம் நாட்டி...<br />மதுரை வீரா! காத்தவராயா!!<br /><br /><br />ஜாதி உணர்வு நம் நாட்டில் செய்திருக்கிற கொடுமைகளுக்கு, உயிர்ப்பலிகளுக்கு அளவே இல்லை. அதில் இன்னும் என்ன வேடிக்கை என்றால், ஜாதி வெறிக்குப் பலியான வீரர்களை இன்றைக்கும் நாம் குலதெய்வமாக ஆடு வெட்டி, கோழி வெட்டிப் படைத்துக் கொண்டி ருக்கிறோமே தவிர, அந்த மனித உயிர்ப்பலி களால் நாம் பெற வேண்டிய பாடத்தைப் பெறத் தவறிவிட்டோம்.<br /><br />அந்த வீரர்கள் பலியிடுவதற்கு - கழுமரம் ஏறுவதற்கு காரணமாக இருந்த ஜாதி உணர் வைப் பழிவாங்காமல் அந்த வீரர்களை ஜாதிக் கடவுளாக்கி வழிபாடு செய்து வருகிறோம். அந்த வீரர்களைக் கடவுளாக்கிய நோக்கமே ஒருக்கால் அந்த உணர்வு நமக்கு வராமல் இருக்க வேண்டும் என்ற திட்டத்தாலேயே இருக்கும்.<br /><br />காத்தான் என்ற ஆதித் திராவிடன் அப்பாப் பட்டர் மகள் ஆரியமாலாவைக் காதலித்தான். ஆரிய மாலாவும் அவனைக் காதலித்தாள். காத்தான் ஆரியமாலாவைச் சிறை எடுத்தான். (தாலி கட்டிக் கூட்டிக் கொண்டு போய் விட்டான்)<br /><br />ஜாதி கெட்டுப் போனதென்றும், ஆசாரங் குலைந்ததென்றும் ஆறாயிரம் வேதியர்கள், ஆரியப்பூ ராஜனிடம் முறையிட்டார்கள். அரசன் காத்தானைப் பிடித்து இழுத்து வந்து கழுவேற்றிக் கொன்றான். வீரன் என்ற சக்கிலியர் குலத்திலே பிறந் தவன் மதுரை மன்னன் மகள் வெள்ளையம் மாளையும், பொம்மியம்மாளையும் நேசித்தான்.<br /><br />அரசிளங் குமாரிகளும் காவல்காரனான வீரனை உயிராகக் காதலித்தார்கள்.<br /><br />வீரன் இருவரையும் சிறை எடுத்துச் சென்றான்.<br /><br />காலையில் செய்தி தெரிந்தது. நாடே கிடுகிடுத்தது. ஆட்கள் பறந்தனர்.<br /><br />வீரனைக் கையும் களவுமாகப் பிடித்து இழுத்து வந்தனர். ஆம்! வீரன் துடிக்கத் துடிக்க மாறுகை மாறுகால் வாங்கப்பட்டான்.<br /><br />கழுவேற்றிக் கொல்லப்பட்ட காத்தான் காத்தவராயன் சாமியாகி, மாறுகை, மாறுகால் வாங்கப்பட்ட வீரன் மதுரை வீரனாகி, அவர்கள் ஜாதியினரால் இன்றைக்கும் குலதெய்வமாக வழிபாடு செய்யப்படுகிறார்கள்.<br /><br />காத்தவராயன் சரித்திரமும் மதுரை வீரன் சரித்திரமும் இன்றைக்கும் சேரிகளிலே பாட்டாய்ப் படிக்கப்படுகிறது.<br /><br />அந்தோ! அந்தப் பாட்டுக்குள் இருக்கும் கருவை உணர்ந்து அவர்கள் விழிப்புறும் நாள் எந்நாளோ!<br /><br />Read more: http://viduthalai.in/page1/72715.html#ixzz2p6pyqntV<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-67747506365326798982014-01-01T07:45:01.841+05:302014-01-01T07:45:01.841+05:30
தமிழர் தலைவருக்கு விஞ்ஞானி ஆ. சிவதாணுப்பிள்ளை நன்...<br />தமிழர் தலைவருக்கு விஞ்ஞானி ஆ. சிவதாணுப்பிள்ளை நன்றிக் கடிதம்<br /><br /><br />பெருமதிப்பிற்குரிய அய்யா,<br /><br />ரஷ்ய நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் ஃப்ரெண்ட்ஷிப் (டீசனநச டிக குசநைனேளாயீ) விருதை பெற்ற மைக்கான தங்களின் வாழ்த்துச்செய்தி கிடைக்கப் பெற்றது. தமிழினத்தலைவராகிய தங்களிடமிருந்து இத்தகைய வாழ்த்துச் செய்தி கண்டு மிகப்பெருமையடைகிறேன். தமிழுக்காகவும், தமிழின மேன்மைக்காகவும் பாடுபடும் தங்களிடம் இத்தனை ஆண்டுகளான என்னுடைய நட்புறவை நான் பெற்ற பெரும்பேறாக கருதுகிறேன்.<br /><br />இந்த விருது இந்திய - ரஷ்ய கூட்டமைப்பான ப்ரம் மோஸ், டி.ஆர்.டி.ஓ. என்.பி.ஓ.எம் ஆகிய நிறுவனங்களில் பங்காற்றும் விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்களின் ஒத்துழைப்பாலும், இருநாட்டின் அரசாங்கத்தின் ஆதர வாலும் மேலும் தங்களைப் போன்ற நலம் விரும்புவோர்களின் நல்லாசிகளின் மூலமும் 60 ஆண்டுகால இந்திய - ரஷ்ய நட்புறவை, ப்ரம்மோஸ் நிறுவனத்தின் மூலம் மென்மேலும் வலிமை பெறு முடிந்தது.<br /><br />தங்களுடைய பல வேலைகளுக்கு இடையில், சிங்கப்பூரில் இருந்து அனுப்பிய இந்த வாழ்த்து, மேலும் சாதிக்கத் தேவையான மனத்திட்பத்தையும் உறுதியையும் தருகிறது.<br />வாழ்க தமிழ், வளர்க திராவிடர் இனம்.<br /><br />நன்றியுடன்<br />ஆ.சிவதாணுப்பிள்ளை<br /><br />Read more: http://viduthalai.in/page1/72694.html#ixzz2p6p6HQg2<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-68992271694964583672014-01-01T07:43:08.704+05:302014-01-01T07:43:08.704+05:30
மூடனே!
கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிச் சோம்ப...<br />மூடனே!<br /><br /><br />கடவுள் ஒருவர் உண்டு என்று சொல்லிச் சோம்பித் திரிந்துகொண்டு, தொட்டதற்கெல்லாம் கடவுள்மீது பழிபோட்டுத் திரிகின்றவன் ஒரு மூடனே!<br /><br />(விடுதலை, 1.2.1969)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-316391123609394002014-01-01T07:41:33.836+05:302014-01-01T07:41:33.836+05:30விவசாயம் என்பது பாவப்பட்ட தொழிலா?
> விவசாயம் ...<br />விவசாயம் என்பது பாவப்பட்ட தொழிலா?<br /><br /><br />> விவசாயம் என்பது பாவப்பட்ட தொழிலா? <br /><br />> கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள பரிதாப நிலை!<br /><br />கீழத்தஞ்சைமாவட்டவிவசாயிகளுக்குநிவாரணம்கோரி<br /><br />31ஆம் தேதி திருவாரூரில்மாபெரும் ஆர்ப்பாட்டம்!<br /><br />தமிழர் தலைவர் அறிக்கை<br /><br />நாகை, திருவாரூர் மாவட்டங்களில் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் களுக்கு நிவாரணம் கோரி வரும் 31ஆம் தேதி திருவா ரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகமுன் ஆர்ப்பாட்டம் நடை பெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:<br /><br />திருவாரூர், நாகை மாவட்டங்களில் விவசாயிகள் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இன்றைய பொழுது எப்படி போகும் என்ற கேள்விக் குறியே அன்றாட வாழ்க்கையாகி விட்டது.<br /><br />திருவாரூர் ஒன்றியத்தில்...<br /><br />குறிப்பாக திருவாரூர் ஒன்றியத்தில் வெட்டாறு பாசனம், சிற்றாறின் கிளை வாய்க்கால்கள் சென்றாண்டு தூர் வாரப்படாத காரணத்தினால் கடைமடைப் பாசனப் பகுதிகளான நடப்பூர், செருகுடி, வைப்பூர், சூரனூர், திருவாதிரை மங்கலம், பழையவலம், ஓடாச்சேரி, ஆமூர், வடகுடி, சோழங்கநல்லூர், கீழத் தஞ்சாவூர், நெடுங் காட்டாங்குடி, எழு முக்கால், ராஜாங்கட்டளை உட்பட பல கிராமங்களில் 3500 ஏக்கர் சாகுபடி நிலங்களில் மஞ்சள் நோயினால் பயிர்கள் சூறையாகி விட்டன.<br /><br />கால்நடைகள் நோயால் பாதிப்பு<br /><br />விவசாயிகளின் கால்நடைகளும் கோமாரி (குடிடிவ ஹனே ஆடிரவா) நோயினால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலை.<br /><br />விவசாயம் என்றால் பாவத் தொழில் என்று மனுதர்மத் தில் அன்று எழுதி வைத்தனர். இன்று அதன் கோர வடிவத்தில் ஏழை எளிய மக்கள் அல்லாடுகின்றனர்.<br /><br />கிராமங்களின் பரிதாப நிலை<br /><br />கிராமங்களில் வேறு தொழிலுக்கு வகையில்லை. குறிப்பாக திருவாரூர், நாகை மாவட்டங்களில் வேலை வாய்ப்புகளுக்குக் கதவு திறந்து விடும் தொழிற்சாலைகள் ஏதுமில்லை. நாகை துறைமுகம் என்பது காட்சி சாலையாகி விட்டது. இந்த நிலையில் கிராமப்புற ஏழை, எளிய மக்கள் (பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மக்கள்) விவசாயத்தைக் கட்டிக் கொண்டே மாரடிக்கும் பரிதாப நிலைதான்!<br /><br />மத்திய, மாநில அரசுகளின் காருண்யக் கண்களும் இவர்கள் மீது படுவது கிடையாது.<br /><br />மாநில அரசின் கவனத்துக்கு...<br /><br />இன்றைய சூழலில் மாநில அரசின் கவனத்துக்குக் கீழ்க்கண்ட கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன.<br /><br />1) ஏக்கருக்கு ரூ.15000 என்கிற அளவுக்குக் கடன் வாங்கி முற்றிலும் நட்டப்பட்டுள்ள மக்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்கப்பட வேண்டும். கூட்டுறவு மற்றும் அனைத்து வங்கிகளிலும் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.<br /><br />2) சென்றாண்டுக்கான பயிர் காப்பீட்டு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.<br /><br />3) வரும் ஆண்டிலாவது நீர்ப் பாசனம் கடைகோடி மக்களுக்குக் கிடைக்கும் வகையில் வாய்க்கால்கள் தூர் வாரப்பட வேண்டும்.<br /><br />4) கால்நடைக் கிளை நிலையங்கள் அதிகமான அளவில் கிராமப் பகுதிகளில் தொடங்கப்பட்டு, பருவத்துக் கேற்ற தடுப்பூசி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண் டும் - கோமாரி நோயினால் உயிரிழந்த கால்நடைகளுக் கான இழப்பீட்டுத் தொகையையும் வழங்க வேண்டும்.<br /><br />திருவாரூரில் ஆர்ப்பாட்டம்<br /><br />மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 31.12.2013 செவ்வாய் காலை 10 மணியளவில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகமுன் திராவிடர் கழகத்தின் சார்பில், திராவிடர் கழக விவசாய தொழிலாளரணி சார்பில் திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் மானமிகு சு. அறிவுக்கரசு அவர்களின் தலைமையில் நடைபெறும்.<br /><br />நாகை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மயிலாடுதுறை மாவட்டக் கழகத் தோழர்கள் கிளர்ந்தெழுந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.<br /><br /> <br /><br />கி.வீரமணி<br />தலைவர்,திராவிடர் கழகம்<br /><br /> <br /><br />முகாம்: சிங்கப்பூர்<br /><br />27.12.2013<br /><br />Read more: http://viduthalai.in/page1/72675.html#ixzz2p6oDyqHT<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-80617863776267043912014-01-01T06:30:47.388+05:302014-01-01T06:30:47.388+05:30
இறந்த பின்...
ஒரு மனிதனுடைய சொந்தத்துக்காக என்ற...<br />இறந்த பின்...<br /><br /><br />ஒரு மனிதனுடைய சொந்தத்துக்காக என்று ஒன்று இருக்குமானால், அது அவன் இறந்த பின், அவனை மற்றவர்கள் மறக்காமல் புகழ்ந்து பேசுவதுதான்.<br />(விடுதலை, 31.3.1950)<br /><br />Read more: http://viduthalai.in/page1/72620.html#ixzz2p6WNsNPy<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-8182639323092800222014-01-01T06:29:13.340+05:302014-01-01T06:29:13.340+05:30
சிந்தனைக்கு...
26-12-2013
இன்று தாத்தா பாட்டி தின...<br />சிந்தனைக்கு...<br />26-12-2013<br />இன்று தாத்தா பாட்டி தினமாக உலகில் கொண்டாடப்படுகிறது. மூத்தோர்களை மதிப் பதும், அன்பு செலுத்து வதும் பராமரிப்பதும் நமது தலையாய கடமை! நன்றி உள்ளவர்களாக மனிதாபிமானம் உள்ள வர்களாக இருக்கி றோம் என்பதற்கான அடையாளம். முதியோர் இல்லம் என்பது இளை யோரின் மனிதாபிமான மற்ற நிலையை விளக் கும் நிலையமாகும்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-57140499054399192572014-01-01T06:22:36.093+05:302014-01-01T06:22:36.093+05:30
தமிழர் நலம் பெற...
தமிழ்நாடும், தமிழ்மொழியும், ...<br />தமிழர் நலம் பெற...<br /><br /><br />தமிழ்நாடும், தமிழ்மொழியும், தமிழர் தன்மானமும், விடுதலையும் பெற்று வளர்ச்சியடைய வேண்டுமானால், தமிழன் காரியத்தில் தமிழனல் லாதவன்- அவன் எப்படிப்பட்டவன் ஆனாலும் தலையிடுவது முதலில் ஒழிந்தாக வேண்டும். இதை வேறு எதை ஒழித்தாவது ஒழிக்கவேண்டும்.<br /><br />- (குடிஅரசு, 19.2.1944)<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-86589412132838577002014-01-01T06:20:02.349+05:302014-01-01T06:20:02.349+05:30
இன்று தந்தை பெரியார் நினைவு நாள்
தந்தை பெரியார்...<br />இன்று தந்தை பெரியார் நினைவு நாள்<br /><br /><br />தந்தை பெரியார் கொள்கைகள் - இலட்சியங்கள் ஓங்கி உலகாள உறுதி எடுப்போம்!<br /><br />2013 டிசம்பர் 24ஆம் நாளாகிய இன்று அறிவாசான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் உடலால் மறைந்த 40ஆம் ஆண்டு ஆகும்!<br /><br />டிசம்பர் 24 தந்தை பெரியாரின் நினைவு நாள் என்பது நமக்கெல்லாம் ஒரு வரலாற்றுக் குறிப்பை பதிவு செய்யும் நாள் தான்; மற்றபடி ஒப்பாரும் மிக் காரும் இல்லாத ஒரே தலை வரான நம் அய்யாவை நினைக் காத நாளோ, மணித் துளியோ ஏது?<br /><br />அவர்தம் பெருமைகளை - பயன்களைப் பேசா நாட்கள் எல்லாம் நமக்குப் பிறவா நாட்களே!<br /><br />கடந்த சில நாட்களில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மலேசிய திராவிடர் கழகம் மூன்றாண் டுகளுக்கு ஒரு முறை நடத்தும் தேசிய மாநாடு மிகச் சிறப்பாக, கடந்த 21,22 ஆகிய தேதிகளில் நடந் தேறியபோது, தற்போதுள்ள மத்தியக் கூட்டரசின் அங்கமான மலேசிய இந்தியக் காங்கிரசின் அமைச் சர்களும், பொறுப்பாளர்களும், தந்தை பெரியார் இல்லாவிட்டால் நாம் இந்நிலைக்கு - மலேசியாவில் - உயர்ந்திருக்க முடியாது; பெரியார் தம் கருத்துக்கள் இன்றும் தேவை; காரணம் அது ஒரு சமூக விஞ்ஞானம்.<br /><br />விஞ்ஞானத்தை என்றும் ஒதுக்க முடியாது என்பது எப்படி உண்மையோ, அது போன்றதே பெரியார் கொள்கைகள்? என்பதை இரண்டு நிகழ்ச்சிகளிலும் விளக்கிப் பேசியதைக் கேட்ட பொழுது பெரிதும் உவந்தோம்! உலகப் பெரியார் அய்யா பெரியார் ; அனைத்து மக்களுக்கும் உரியார். காரணம் அவர் உயர் நெறியார், நரியார்களை விரட்டி சமுதாயத்தைப் பாதுகாப்பது; அந்தத் தலைவரின் மண்டை சுரப்பு என்பதை அகிலமும் ஏற்றுக் கொண்டுள்ளது.<br /><br />நேற்று (23.12.2013) மலேசியாவின் முக்கியப் பெரு நகரங்களில் ஒன்றான ஈப்போ நகரில் மலேசிய திராவிடர் கழகத்தின் கொள்கைப் பிரச்சார சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.<br /><br />பிரபல ரிவர்வியூ ஓட்டல் சிறப்பு மண்டபத்தில், விந்தை யான ஒரு வரலாற்று நிகழ்வு! இதே நாளில் 1929இல் தந்தை பெரியார் ஈப்போ நகரில் (23.12.1929) உரையாற்றியதை, நம் வெளியீடான மலேசியா, சிங்கப்பூரில் பெரியார் என்ற நூலில் இருந்து எடுத்துக் காட் டினேன். அம் மக்கள் வியந்தனர். பெரியார் அவர்கள் வருகை தந்து 84 ஆண்டுகளுக்குப் பிறகும் அவர்தம் கொள்கைக் குரல் மலேசிய திராவிடர் கழகத்தின் மூலம் இங்கே முழங்குகிறது. பெரியாரின் கொள்கைகள் காலத்தை வென்றவை.<br /><br />புத்தாக்கத்திற்கான புதிய தேவையும்கூட; அய்யா மறைந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகும் உலகை அக்கொள்கை ஆளுகிறது.<br /><br />எனவே வரும் ஆண்டுகளில் திருச்சி - சிறுகனூரில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைய இருக்கும் 95 அடி உயர தந்தை பெரியார் பேருருவச் சிலை 40 அடி பீடம், 135 அடி உயரத்தில் செம்மாந்து நிற்கப் போவது போல அவர்தம் கொள்கைகளும், லட்சியங் களும் சிறப்புடன் ஓங்கி உயர்ந்து நிற்கும் என்பது உறுதி. அவை உலகாள வழி வகுப்போம்.<br /><br />அதற்கான உறுதியைச் சூளுரையாக புதுப்பிப்பது பெரியார் தொண்டர்களின் தலையாய கடமை.<br /><br />வெல்க பெரியாரியம், வருக பெரியார் உலகம்!<br /><br />கி.வீரமணி<br />தலைவர், திராவிடர் கழகம்<br /><br /><br />முகாம்: பினாங்கு (மலேசியா)<br />24.12.2013தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-38952075016668085392014-01-01T06:14:24.550+05:302014-01-01T06:14:24.550+05:30
சொல்லவேண்டும்
பார்ப்பனியமும், மத ஆதிக்கமும் ஒழிந...<br />சொல்லவேண்டும்<br /><br />பார்ப்பனியமும், மத ஆதிக்கமும் ஒழிந்தாலொழிய இந்தியாவில் யோக்கியமான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர்பார்க்க முடியாது. பார்ப்பனிய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன்னாலும் தீராது என்றுதான் சொல்லவேண்டும்.<br /><br />- (குடிஅரசு, 17.8.1930)<br /><br />Read more: http://viduthalai.in/page1/72514.html#ixzz2p6SFx4tE<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-24244977975801478682014-01-01T06:12:50.181+05:302014-01-01T06:12:50.181+05:30எச்சரிக்கை!
ரயிலில் அய்யப்பப் பக்தர்கள் கற்பூரம் ...எச்சரிக்கை!<br /><br />ரயிலில் அய்யப்பப் பக்தர்கள் கற்பூரம் ஏற்ற தடை விதிக் கப்பட்டுள்ளது. மீறி ஏற்றினால் உடனே ரயில்வே காவல் துறையினருக்குத் தெரிவிக்கலாம்.<br /><br />Read more: http://viduthalai.in/page1/72508.html#ixzz2p6RtRQMh<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-10149939947921246522014-01-01T06:12:22.559+05:302014-01-01T06:12:22.559+05:30பெண்களைஇழிவுப்படுத்திசொற்பொழிவு நடத்துவதுநீதிமன்றங...<br />பெண்களைஇழிவுப்படுத்திசொற்பொழிவு நடத்துவதுநீதிமன்றங்களின்வேலையல்ல! டில்லி உயர்நீதிமன்றம் எச்சரிக்கை<br /><br /><br />புதுடில்லி, டிச.23- வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் வழக்குக்குள் நின்று தீர்ப்புகளை வழங்க வேண்டுமே தவிர வழக்குக்கு அப்பால் சென்று பெண்களை இழிவுபடுத்தும் வகை யிலும், அவர்களின் உரிமைகளைப் பறிக்கும் தன்மையிலும் தேவை யில்லாத சொற்பொழிவு களை நீதிமன்றங்களில் நிகழ்த்தக் கூடாது என்று டில்லி உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. டில்லியில் பாலியல் வன்கொடுமை தொடர் பான ஒரு வழக்கின் தீர்ப்பில், "19 முதல் 24 வயது வரை உள்ள இளம் பெண்கள் அவர்களு டைய காதலர்களுடன் தன்னிச்சையாக வீட்டை விட்டு ஓடிப் போய்விடு கின்றனர்' என்று நீதிபதி குறிப்பிட்டிருந்தார். மேலும், பெண்கள் ஒரு வரையறைக்கு உட்பட்டு, குறிப்பிட்டபடிதான் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துவது போன்ற வகையிலும் நீதிபதி கருத்து தெரிவித்திருந் தார்.<br /><br />விசாரணை விரைவு நீதிமன்ற நீதிபதியின் இத் தீர்ப்பை அறிந்த டில்லி உயர்நீதிமன்றம், தானே முன்வந்து விசாரணை நடத்தியது. விசாரணை யின் முடிவில் அந்த நீதி பதியின் கருத்துகளுக்கு, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிரதீப் நந்த்ர ஜோக், வி.கே.ராவ் ஆகி யோர் அடங்கிய அமர்வு கண்டனம் தெரிவித்தது.<br /><br />"வழக்கில் முன் வைக் கப்படும் சாட்சியங்கள், ஆதாரங்களின் அடிப் படையில்தான் தீர்ப்பு வாசகங்கள் இருக்க வேண்டுமே தவிர, தங்க ளது சொந்த அல்லது சமூகப் பார்வைகளைத் தீர்ப்புகளில் தெரிவிக்கக் கூடாது' என்று நீதிபதி கள் தெரிவித்தனர்.<br /><br />தீர்ப்பில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ள தாவது: இந்த வழக்கின் தீர்ப்பில் நீதிபதி தெரி வித்த கருத்துகள் பொது வான தன்மையிலானவை.<br /><br />பெண்களுக்கு எதிரான கருத்துகள்<br /><br />பெண்களுக்கு எதி ரான கருத்துகளையும், அலட்சியமான விமர் சனங்களையும் நீதிபதி தீர்ப்பில் தெரிவித்துள் ளார். முடிவு எடுப்பதில் பெண்களின் நிலை குறித்து தனது சொந்த அபிப்ராயத்தை நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார். அது தவறானது.<br /><br />மாறி வரும் இந்திய சமூகத்தில் முடிவு எடுப் பதில் பெண்கள் குழப்ப நிலையில் உள்ளனர். வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் அவருக்குள்ள விருப்பம் மற்றும் ஆணாதிக்கம் மிகுந்த சமூகச் சூழல் ஆகியவற்றுக்கு இடையே பெண்கள் சிக்கிக் கொண்டு வதை படுகின்றனர். அதை கவ னத்துடனும் கருணை யுடனும்தான் பார்க்க வேண்டுமே ஒழிய, சொற் பொழிவு போன்ற அறி வுரைகளைத் தரக் கூடாது.<br /><br />இந்த வழக்கின் தீர்ப் பில் விசாரணை நீதிமன்ற நீதிபதி, அப்பெண் குறித்து தெரிவித்த கருத்துகள், "அப் பெண் எப்படி சமூகத்தில் நடந்து கொள்ள வேண்டும்' என பிரசங்கம் செய்வதைப் போல உள்ளது. அது நீதிபதியின் வேலையல்ல.<br /><br />சமூக வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க ஒவ்வொரு தனி நபருக்கும் உரிமை உள்ளது. சிலர் அவ்வாறு தேர்வு செய்யும்போது விரும்பத்தகாதவை நடந்துவிடுகின்றன. அதற்காக நீதிமன்றங்கள், "உன் வாழ்க்கையை கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும். அப் படி இல்லாவிட்டால் இந்த சமூகம் உனக்காக கண்ணீர் வடிக்காது' என்று சொல்லக் கூடாது.<br /><br />அலட்சியமான பார் வையுடன் நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்புகள், காவல் நிலையங்களில் பெண்களைத் துன்புறுத் தவே உதவும். மேலும், அலட்சியமான முறை யில் விசாரணைகள் நடைபெறுவதுடன், குற் றச்சாட்டுகளுக்குப் போது மான, முழுமையான சாட் சியங்கள் நீதிமன்றத்தின் முன்பு கொண்டுவர முடியாத சூழல் ஏற்படும்.<br /><br />காவல்துறையினருக்குப் புது வசதி!<br /><br />நீதிமன்றங்களின் இது போன்ற தீர்ப்புகள், பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் மீது காவல் துறையினருக்கு ஒரு வசதியை ஏற்படுத்திக் கொடுத்து அதன்படியே விசாரிக்க வழி வகுத்து விடும். மேலும், இது போன்ற தீர்ப்புகளை முன்வைத்து, பாதிக் கப்படும் பெண்களுக்கு எதிராக வழக்குரைஞர் கள் வாதிடக் கூடும்' என்று நீதிபதிகள் கூறி யுள்ளனர்.<br /><br />Read more: http://viduthalai.in/page1/72508.html#ixzz2p6Rk8KnG<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-72207697536408361522014-01-01T06:11:42.618+05:302014-01-01T06:11:42.618+05:30
செய்தியும் சிந்தனையும்
ஊழலோ ஊழல்!
செய்தி: ஊழலை...<br />செய்தியும் சிந்தனையும்<br /><br /><br />ஊழலோ ஊழல்!<br /><br />செய்தி: ஊழலைப் பற்றிப் பேச காங்கிரசுக் குத் தகுதியில்லை.<br />- மும்பையில் மோடி பேச்சு<br /><br />சிந்தனை: ஆமாம் பிஜேபிக்கே ஒட்டு மொத்தமாக சொந்தமான ஒன்றை மற்றவர்கள் அபகரிக்க அனு மதிக்கலாமா?<br /><br />(கருநாடக மாநில பிஜேபி ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த ரெட்டி சகோ தரர்களுக்கு உபயம்!).<br /><br />ம்ம்ம் தர்மம்<br /><br />செய்தி: இளைஞர் களிடையே தர்மம் பற்றிய சிந்தனையை வளர்க்க வேண்டும். - ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி<br /><br />சிந்தனை: அவர் கூறினால் அந்தத் தர்மம் கண்டிப்பாக வர்ணா சிரம தர்மமாகத்தான் இருக்கும்.<br /><br />Read more: http://viduthalai.in/page1/72509.html#ixzz2p6RbEfA4<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-90133263428881831682014-01-01T06:10:23.392+05:302014-01-01T06:10:23.392+05:30
முன்னாள் நீதிபதி திரு. சந்துரு அவர்களுக்கு....
ச...<br />முன்னாள் நீதிபதி திரு. சந்துரு அவர்களுக்கு....<br /><br />சென்னை உயர்நீதிமன்ற முன் னாள் நீதிபதி திரு. சந்துரு அவர்கள் தி இந்து தமிழ் நாளேட்டில் (22.12.2013) ஏன் இந்த தடுமாற்றம்? என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.<br /><br />எடுத்த எடுப்பிலேயே திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிவித்துள்ள ஆர்ப்பாட் டத்தைப் பற்றிக் குறை கூறியுள்ளார்.<br /><br />எதற்காக? மேற்கு வங்க மாநில மனித உரிமை ஆணைய தலைவர் பதவியிலிருந்து நீதிபதி கங்குலி பதவி விலகக் கோரி வரும் 24ஆம் தேதி திராவிடர் கழக மகளிரணி நடத்தும் போராட்டம்பற்றித் தான் அந்தக் குறை.<br /><br />அதற்காக அவர் எடுத்து வைக்கும் காரணம் ஆச்சரியமானது. ஒரு நீதிபதியா இப்படி ஒரு காரணத்தைக் கூறுவது? என்ற வினா எழுகிறது.<br /><br />சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பின்னும் தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்துக்குத் தலைவரை நியமிக்காமலும், இரண்டு வருடங்களாகப் பதவியை நிரப்பாமலும் உள்ள தமிழக அரசை அவர் ஏன் கண்டிக்கவில்லை? என்று ஒரு வினாவை எழுப்பியுள்ளார்.<br /><br />கேள்வியை வரவேற்கிறோம் - தமிழ்நாடு அரசை எதிர்த்து ஒரு போராட்டத்தை நடத்த வேண்டும் என்று சொன்னதற்காக வரவேற்கலாம். அதே நேரத்தில் அதற்காகப் போராட்டம் நடத்தவில்லை என்பதற் காக, வேறு எந்தப் போராட்டத்தையும் நடத்தக் கூடாது என்று முன்னாள் நீதிபதி கூற வருகிறாரா?<br /><br />இதற்கு மட்டுமல்ல திராவிடர் கழகம் நடத்தும் ஒவ்வொரு போராட் டத்தின்போதும் இதே கேள்வியை அவர் எழுப்புவாரோ! இனிமேல் ஏதாவது ஒரு போராட் டம் நடத்துவதாக இருந்தால் தமிழ் நாட்டில் மனித உரிமை ஆணையத் திற்குத் தலைவர் பதவியை நியமிக்க வேண்டும் என்ற ஒரு போராட்டம் நடத்தாமல் வேறு எந்த ஒரு போராட் டத்தையும் நடத்தக் கூடாது - இதுதான் நீதியரசரின் கருத்தோ!<br /><br />அப்படியானால் கடந்த இரண்டு வருடங்களாக திராவிடர் கழகம் எத்தனையோ போராட்டங்களை நடத்தி இருக்கிறதே - அப்பொழு தெல்லாம் இந்த நிபந்தனையை முன் வைக்கவில்லையே - முன்னாள் நீதிபதி சந்துரு அவர்கள்.<br /><br />நீதிபதி கங்குலியை எதிர்த் துப் பல கட்சித் தலைவர்களும், அமைப்புகளும் குரல் கொடுத் துள்ளனரே - அவர்களைப் பற்றிக் குறை கூறாத திரு. சந்துரு அவர்கள் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தை மட்டும் ஏன் குறை கூறுகிறார்? எங்கேயோ இடிக்கிறதே! கங்குலியின்மீது நடவடிக்கை என்றதும் இந்த நிபந்தனையை முன் வைப்பதும் - எங்கேயோ இடிக்கிறதே!<br /><br />உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மூன்று நீதிபதிகள் அடங்கிய விசா ரணைக் குழுவை நியமனம் செய்தார் என்றும் அந்தக் குழு, புகாரில் முதல் தோற்றச் சான்று உள்ளதாகக் கூறியதையும் ஒப்புக் கொண்டு எழுதி இருக்கும் நீதியரசர் - அவர் பதவி விலக வேண்டும் என்பதில் மட்டும் நந்தியாகக் குறுக்கே நிற்பது ஏன்?<br /><br />குற்றச்சாற்று நிரூபிக்கப்பட்ட பிறகுதான் பதவி விலகுவது என்பது தவிர்க்க முடியாதது - வெளியே கழுத்தைப் பிடித்துத் தள்ளும் தருணம் அது. அதற்கு முன்பாகவே பூர்வாங்கக் காரணம் இருக்கிறது என்ற விசாரணைக் குழு சொன்ன நிலையிலேயே தார்மீகப் பொறுப் பேற்று ஏ.கே. கங்குலி பதவி விலகி இருக்கலாம் என்றுகூட எழுதிட நீதிபதி சந்துரு அவர்களுக்குத் தார்மீக ரீதியான உணர்வு ஏற்படாதது - ஏன்?<br /><br />பாதிக்கப்பட்ட பெண்ணைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்றத் தில் பார்கவுன்சில் உதவித் தலைவர் தலைமையில் ஊர்வலம் நடத்தியுள் ளனர் என்ற தகவலையும் தவறாமல் குறிப்பிட்டிருக்கும் போது பாதிக்கப் பட்ட ஒருவர் புகார் தெரிவிப்பதை எதிர்த்து இப்படிப்பட்ட ஊர் வலத்தை நடத்தலாமா? என்ற வினாவை ஏன் எழுப்பிடவில்லை திரு. சந்துரு அவர்கள்?<br /><br />பாதிக்கப்பட்டவர்களை எதிர்த்துப் போராடலாம் - பாதிப்புக்குக் காரண மானவரை எதிர்த்துப் போராடக் கூடாது என்பதுதான் திரு. சந்துரு அவர்களின் நியாயத் தராசா?<br /><br />அப்படியானால் டெகல்கா ஏட்டின் ஆசிரியர் தருண்தேஜ்பால்மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு விட்டதா? அதற்கு முன்பே அவர் ஏன் கைது செய்யப்பட்டார் - சிறையில் அடைக் கப்பட்டார்?<br /><br />அவர் கைது செய்யப்பட்டபோது திரு. சந்துரு அவர்கள் ஏன் மவுன விரதம் இருந்தார்?<br /><br />உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி என்றால் அவர் சட்டத்திற்கு அப்பாற் பட்டவரா? நவீன மனுதர்மமா? முன்னாள் நீதிபதிக்கு முன்னாள் நீதிபதி வக்காலத்தா? முன்னாள் நீதிபதிகள் சங்கம் ஒன்று இருக் கிறதா? என்றும் தெரியவில்லை!<br /><br />- மின்சாரம்<br /><br />Read more: http://viduthalai.in/page1/72513.html#ixzz2p6REx0N8<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-49998202916968719132014-01-01T06:04:40.872+05:302014-01-01T06:04:40.872+05:30
2014-ஆம் ஆண்டு துவக்கத்தில்...! விடுதலை வாசக நேயர...<br />2014-ஆம் ஆண்டு துவக்கத்தில்...! விடுதலை வாசக நேயர்களுக்கு அரிய பகுத்தறிவுப் போட்டி<br /><br />திராவிடர் கழகமும், அதன் தலைமையும் இந்த 2014-ஆம் ஆண்டில் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான 10 பணிகள் என்பதை 1,2,3 என்று வரிசைப்படுத்தி வாசக நேயர்கள் ஒரே பக்கம் (டெம்மிசைஸ்) ஒன்றின்பின் ஒன்றாக 10 பணிகளைச் சுட்டிக்காட்டி எழுதுங்கள்.<br /><br />அதில் சிறந்த கட்டுரைக்கு ரூபாய் 1,000/- முதல் பரிசாகவும், இரண்டு, மூன்றாம் இடம் பெறுவோர்க்கு ரூ. 500/-, ரூ. 300/- பரிசுகளும் வழங்கப்படும்.<br /><br />விடுதலை அலுவலகத்திற்குக் கிடைக்க வேண்டிய கடைசி நாள்: 12.1.2014 ஆகும். அவசரப் பணிகள் 10 என்று உறையில் தலைப்பிட்டு எழுதவும்.<br /><br />- ஆசிரியர், விடுதலை<br /><br />Read more: http://viduthalai.in/page-8/72889.html#ixzz2p6PpDCDx<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-54642103810795385112014-01-01T06:04:08.485+05:302014-01-01T06:04:08.485+05:30
மத்திய அரசே, மாநில அரசே!
பாதிக்கப்படும் விவசாயிக...<br /><br />மத்திய அரசே, மாநில அரசே!<br />பாதிக்கப்படும் விவசாயிகளைக் காப்பாற்று! கடன்களை ரத்து செய்! இழப்பீடு வழங்குக!<br />திருவாரூரில் தி.க. விவசாய சங்கத் தோழர்கள் ஆர்ப்பாட்டம்!<br /><br />திருவாரூர், டிச.31- எல்லா வகையிலும் பாதிப்புக்கும், இழப்பிற்கும் ஆளாகும் ஏழை, எளிய விவசாயிகளைக் காப்பாற்றுமாறும், கடன்களை ரத்து செய்யுமாறும், இழப்பீடுகளை வழங்குமாறும் கோரிக்கைகளை முன்வைத்து, கீழத்தஞ்சை திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்களின் தலைமையில், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப் பாட்டம் இன்று (31.12.2013) காலை 10 மணியளவில் எழுச்சியுடன் நடை பெற்றது.<br /><br />ஆயிரக்கணக்கான தோழர்கள் (ஆண்களும், பெண்களும்) ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்று கோரிக்கைகளை முன்வைத்து முழக்கமிட்டனர்.<br /><br />ஆர்ப்பாட்டத்தில் முழங்கப்பட்ட முழக்கங்கள் வருமாறு:<br /><br />போராட்டம் போராட்டம்<br />விவசாயிகளின் போராட்டம்<br />திராவிடர் விவசாயிகளின் போராட்டம்<br />போராட்டம் போராட்டம்<br />வஞ்சிக்கப்படும் வஞ்சிக்கப்படும்<br />விவசாயிகளின் விவசாயிகளின்<br />போராட்டம், போராட்டம்<br />தமிழக அரசே, தமிழக அரசே!<br />வழங்குக வழங்குக!<br />நஷ்டப்படும் நஷ்டப்படும்<br />விவசாயிகளுக்கு விவசாயிகளுக்கு<br />இழப்பீடு இழப்பீடு<br />வழங்குக வழங்குக!<br />ஏக்கருக்கு ஏக்கருக்கு<br />25 ஆயிரம் ரூபாய்<br />25 ஆயிரம் ரூபாய்<br />இழப்பீடு இழப்பீடு<br />வழங்குக வழங்குக!<br />தள்ளுபடி செய், தள்ளுபடி செய்!<br />விவசாயிகளின் கடன்களை<br />விவசாயிகளின் கடன்களை<br />தள்ளுபடி செய் தள்ளுபடி செய்!<br />வழங்குக வழங்குக! சென்றாண்டுக்கான<br />சென்றாண்டுக்கான பயிர் காப்பீடுத் தொகையினை பயிர் காப்பீடுத் தொகையினை<br />வழங்குக வழங்குக!<br />கடைக்கோடி பகுதிகளுக்கு<br />கடைக்கோடி பகுதிகளுக்கு<br />நீர்ப்பாசனம் கிடைத்திட<br />நீர்ப்பாசனம் கிடைத்திட<br />தூர்வாருக, தூர்வாருக!<br />கால்நடைக் கிளை நிலையங்களை<br />கால்நடைக் கிளை நிலையங்களை<br />கிராமம் தோறும் கிராமம் தோறும்<br />ஏற்படுத்துக, ஏற்படுத்துக!<br />கோமாரி நோயால் கோமாரி நோயால்<br />இறந்து போன இறந்து போன<br />கால்நடைகளுக்கு கால்நடைகளுக்கு<br />இழப்பீடு தருக, இழப்பீடு தருக!<br />ஒடுக்கப்பட்ட மக்களின்<br />ஒடுக்கப்பட்ட மக்களின்<br />உயிர் போன்ற விவசாயத்தை<br />உயிர் போன்ற விவசாயத்தை<br />சாகடிக்காதீர், சாகடிக்காதீர்!<br />பாவப்பட்ட தொழிலா?<br />பாவப்பட்ட தொழிலா?<br />ஏழை எளிய மக்களின்<br />ஏழை எளிய மக்களின்<br />விவசாயத் தொழில், விவசாயத் தொழில்<br />பாவப்பட்ட தொழிலா? பாவப்பட்ட தொழிலா?<br />வேண்டும் வேண்டும்<br />வேலை வாய்ப்புப் பெற்றிட<br />வேலை வாய்ப்புப் பெற்றிட<br />தொழிற் சாலைகள், தொழிற் சாலைகள்<br />வேண்டும், வேண்டும்.<br />மாநில அரசே, மத்திய அரசே!<br />காப்பாற்று, காப்பாற்று<br />விவசாயிகளை விவசாயிகளை<br />காப்பாற்று, காப்பாற்று!<br />போராடுவோம், போராடுவோம்!<br />வெற்றி கிட்டும் வரை, வெற்றி கிட்டும் வரை<br />போராடுவோம், போராடுவோம்!<br /><br />மேற்கண்ட முழக்கங்களை முன்வைத்தனர். ஆர்ப்பாட்டத் தின் நோக்கங்களை விளக்கி ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்த திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, தி.மு.க. மாவட்ட செயலாளர் கலைவாணன், மாநில விவசாய தொழிலாள ரணி செயலாளர் குடவாசல் கா.கணபதி, திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மண்டல தலைவர் இராயபுரம் கோபால் முதலியோர் உரையாற்றினர்.<br /><br />ஆர்ப்பாட்ட முடிவில், திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவி யாளர் ரவிச்சந்திரனைச் சந் தித்து கோரிக்கை மனு அளிக் கப்பட்டது.<br /><br />Read more: http://viduthalai.in/page-8/72897.html#ixzz2p6PfXaVd<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-23410138787163414422014-01-01T05:59:21.574+05:302014-01-01T05:59:21.574+05:30
டிசம்பர் 31 (1993)
சமூகநீதி வரலாற்றில் இந்நாளை...<br />டிசம்பர் 31 (1993)<br /><br /><br /><br />சமூகநீதி வரலாற்றில் இந்நாளையும் மறக்க முடி யாது. இந்த நாளில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் 31(சி) சட்டம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட நாள்.<br /><br />அ.இ.அ.தி.மு.க. ஆட் சியே உருவாக்கிய சட்டமா என்றால், அதுதான் இல்லை;<br /><br />மண்டல் குழு தொடர்பான இந்திரா சகானி வழக்கில் உச்சநீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பு ஒன்றில் (25.8.1993) இடஒதுக் கீடு 50 சதவீதத்திற்குமேல் போகக் கூடாது என்று கூறியதால் தமிழ்நாட்டில் நாம் போராடிப் போராடிப் பெற்ற 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்த நிலையில், அந்த விபத்திலிருந்து தமிழ்நாட்டு ஒடுக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றிட, தனக்கே உரித் தான சட்ட ஞானத்தால் மசோதா ஒன்றை உருவாக்கிக் கொடுத்தவர் திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.<br /><br />இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 31 (சி) பிரிவின்கீழ் மாநில அரசே சட்டம் இயற்றி நாடாளுமன்றத்தில் அது நிறைவேற்றப்பட்டு, 9ஆவது அட்டவணையில் இணைக்கப் பட்டால் நீதிமன்றம் தலை யிடவே முடியாது என்ற முறையில் சடடத்தின் நக லைத் தயாரித்துக் கொடுத் தவர் திராவிடர் கழகத் தலைவர்.<br /><br />அதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்ட குறிப் பிடத்தக்க நாள்தான் டிசம்பர் 31 (1993).<br /><br />பிறகு நாடாளுமன்றத் தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலும் பெறப் பட்டது (19.7.1994).<br /><br />முதல்வர், பிரதமர், குடியரசு தலைவர் ஆகிய மூன்று பார்ப்பனர்களைச் செயல்பட வைத்து வரலாற் றில் வெற்றி கண்டவர் நம் தலைவர்.<br /><br />இன்றைக்கு இந்தியாவிலேயே இடஒதுக்கீடு சட்டத்தில் (ACT) அடிப்படையில் வலிவாக இருப்பது தமிழ் நாட்டில் தான்; மற்ற மற்ற மாநிலங்களில் அரசு ஆணை (G.O.) யால்தான் நின்று கொண்டு இருக்கிறது என் பது அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவலாகும்.<br /><br />அன்றைக்கு முதல் அமைச்சர் செல்வி ஜெய லலிதா இந்தச் சட்டம் நிறை வேற்றப்பட ஒத்துழைப்புக் கொடுத்தார் என்பது ஒருபுறம்; அப்படியொரு சட்டத்தைப் பிறப்பித்து 69 சதவீதம் காப்பாற்றப்படவில்லையானால் அம்மையாரின் ஆட்சி காப் பாற்றப்பட்டு இருக்காது என் பதும் கசப்பான உண்மை யாகும்.<br /><br />அதே அம்மையார் ஜெய லலிதா இப்பொழுது எப்படி இருக்கிறார்? பட்டதாரி ஆசிரியர்களின் பணி நிய மனம், இடைநிலை ஆசிரியர் கள் நியமனங்களிலும், ஆசிரியர் கல்விக்கான தேசியக் கவுன்சில் கொடுத்த மதிப்பெண் தளர்வினைக் கூட கொடுக்காமல் சமூக நீதிக்குச் சவக்குழி வெட்டி விட்டாரே!<br /><br />சமூகநீதிக்கு எதிராக செயல்பட முடியாத அளவுக் குத் தடுப்பு அரணாக திராவிடர் கழகத் தலைவரும், திராவிடர் கழகமும் அன்று இருந்த காரணத்தால்தான் 1993இல் அப்படியொரு சட்டம் வர வாய்ப்பு இருந்தது என் பதுதான் உண்மை.<br /><br />- மயிலாடன்<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/72871.html#ixzz2p6OSqkP5<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-60977277003020184142014-01-01T05:57:32.147+05:302014-01-01T05:57:32.147+05:30
கலைஞர் புத்தாண்டு வாழ்த்து
2014ஆம் ஆண்டிற்கு வர...<br />கலைஞர் புத்தாண்டு வாழ்த்து<br /><br /><br />2014ஆம் ஆண்டிற்கு வரவேற்புக் கூறி; எனது அருமைத் தமிழக மக்க ளுக்கு ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.<br /><br />மூன்று மாதங்களில் மின்சாரப் பிரச்சினையைத் தீர்ப்போம் எனப் பொய் கூறி வந்த ஆட்சியின் மூன்றாம் ஆண்டிலும் மக்கள் இருளில் தவிக்கும் நிலை தொடர்கிறது.<br /><br />அனைத்து வகைத் தொழில்களும் முடங்கி விட்டன; புதிய தொழில்களும் இல்லை.<br /><br />தொழிலாளர் சமுதாயம் அல்லல்படுகின்றது; வேளாண்மை நாளுக்கு நாள் குன்றி வருகிறது. நெல்லுக்கும், கரும்புக்கும் நியாய விலை இல்லை; விவசாயம் செய்ய முடியவில்லை என விவசாயிகள் குமுறுகின்றனர். ஆளுவோரின் தவறான கொள்கை யால் மணல் கிடைப்பதில்லை; கட்டுமானப் பணிகள் முடங்கி, கட்டுமானத் தொழிலாளர் வாழ்வு கேள்விக் குறியாகிறது.<br /><br />ஆட்சிக்கு வந்தபின் செயின் பறிப்பவர் எல்லாம் ஆந்திராவுக்கு ஓடிவிட்டனர் என்றார்கள். செயின் பறிப்பு மட்டுமல்ல; கொலை, கொள்ளை, கற்பழிப்பு எனும் கொடிய குற்றங்கள் எல்லாம் தினமும் பெருகிக் கொண்டுள்ளன.<br /><br />சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டியவர்கள் உண்மைகளைக் கட்டிப் போட்டு விட்டு; பொய்களுக் குச் சாமரம் வீசி - ஜனநாயகக் கடமையாற்று வோர்க்குச் சிறைகளைக் காட்டி, ஏறி வா நீதிமன்றப் படிகளை என இழுத்தடிக்கும் எதேச்சாதிகாரப் போக்கு தலைவிரித்தாடுகிறது.<br /><br />விலைவாசி உயர்வு எல்லா வகை மக்களுக்கும் வேதனையையே பரிசாகத் தந்துள்ளது. வேதனை யைத் தீர்க்க வேண்டியவர்கள் - மத்திய அரசு மீதும், கழகத்தின் மீதும் பழி சுமத்தியே தப்பிக்கப் பார்க்கின் றனர். பத்திரிகைகளும், ஊடகங்களும் உண்மை நிலையை உரைத்தால் அரசின் அடக்கு முறைக்கு ஆளாவோம் என்று அஞ்சுகின்றன.<br /><br />இவையும் இவை போன்ற பலவும்தான் 2013இல் நாம் கண்டவை. இவையெல்லாம் களையப்பட வேண்டும்.<br /><br />கடந்த காலத்தில் செய்யத் தவறியவைகளை நினைவுகூர்வோம். தமிழுக்கும், தமிழருக்கும், தமிழகத் திற்கும் பயன் தந்திடும் பணிகளோடு - இந்தியத் திருநாடு முழுமைக்கும் வலிவையும், பொலிவையும் தந்திடத்தக்க கடமைகள் ஆற்றிட - களம் கண்டிட - புறப்பகை நோக்கி, உட்பகை நீக்கி ஒன்றுபட்டு உழைத்திடுவோம்! புத்தாண்டு புத்துணர்வு வழங்கட்டும்!<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/72877.html#ixzz2p6NycGmS<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-48642281212001535572014-01-01T05:56:47.446+05:302014-01-01T05:56:47.446+05:30
தமிழர் தலைவர் அவர்களின் 2014-புத்தாண்டுவாழ்த்து!
...<br />தமிழர் தலைவர் அவர்களின் 2014-புத்தாண்டுவாழ்த்து!<br /><br /><br />பிறக்கும் புத்தாண்டு (2014) - மனித நேயம், சமத்துவம், சம வாய்ப்பு, பகுத்தறிவுச் சிந்தனை வளம் பெருகி வாழ வைக்கும் புது உலகப் புத்தாண்டாக அமையட்டும்!<br /><br />அனைவருக்கும் நமது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!<br /><br />கி.வீரமணி <br />தலைவர், திராவிடர் கழகம்<br /><br />முகாம்: சிங்கப்பூர்<br /><br />31.12.2013<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/72872.html#ixzz2p6Np262c<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-37942636047157840712013-12-22T17:58:08.752+05:302013-12-22T17:58:08.752+05:30
100 கோடிக்கும் அதிகமான சூரியன்களை படம் பிடிக்கும்...<br />100 கோடிக்கும் அதிகமான சூரியன்களை படம் பிடிக்கும் செயற்கைக்கோள்<br /><br /><br />பாரீஸ், டிச. 22- விண்வெளியில் கோள் கள் மற்றும் சூரியன் களை ஆய்வு செய்ய அய்ரோப்பிய யூனியன் ஹப்பிள் என்ற செயற் கைக்கோளை விண் ணுக்கு அனுப்பியது. அது விண்வெளியின் அதிசயங்களை படம் பிடித்து பூமிக்கு அனுப்பி வந்தது.<br /><br />இந்த நிலையில், ஹப் பிள் செயற்கைக்கோள் தனது செயல்பாட்டை இழந்து விட்டது. எனவே, அதை காட்டிலும் பல மடங்கு சக்தி வாய்ந்த கையா என்ற செயற் கைக்கோளை அய்ரோப் பிய யூனியன், விண்ணில் செலுத்தியுள்ளது.<br /><br />அந்த செயற்கைக் கோளுடன் சக்தி வாய்ந்த டெலஸ்கோப்பும் இணைக்கப்பட்டுள்ளது. இது 100 கோடிக்கும் அதி கமான சூரியன்களை துல்லியமாக படம் பிடித்து அதன் தகவல் களை பூமிக்கு அனுப்பும் திறன் கொண்டது.<br /><br />சக்தி வாய்ந்த கையா செயற்கைக்கோள் கோயுஸ் ராக்கெட் மூலம் பிரெஞ்ச் கயானா வில் உள்ள ஏவு தளத்தில் இருந்து நேற்று முன் தினம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.<br /><br />இந்த செயற்கை கோளை உருவாக்க 1991இல் முடிவெடுக்கப் பட்டது. ஆனால், 2006ஆம் ஆண்டு தான் இதன் கட்டுமான பணி களுக்கு மற்ற நாடுகளு டன் ஒப்பந்தம் ஏற்பட் டது. உலகம் முழுவதும் உள்ள 16 நாடுகளைச் சேர்ந்த 70 தொழிற் சாலைகள் கட்டுமான பணியில் ஈடுபட்டன.<br /><br />கையா செயற்கைக் கோள் ஹப்பிள் செயற்கை கோளை விட பல மடங்கு அதிக தூரத் தில் நிலை நிறுத்தப்படு கிறது.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/72464.html#ixzz2oCqDuLTm<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-15272488492442654412013-12-22T17:57:22.747+05:302013-12-22T17:57:22.747+05:30
அஞ்சல் மூலம் ஆசீர்வாதமாம்
திருமலை ஏழுமலை யானின்...<br />அஞ்சல் மூலம் ஆசீர்வாதமாம்<br /><br /><br />திருமலை ஏழுமலை யானின் ஆசீர்வாதத்தை அஞ்சல் மூலம் பெறும் திட்டத்தை அஞ்சல்துறை மீண்டும் தொடங்கியுள்ளது.<br /><br />திருமலை ஏழுமலையா னுக்கு உண்டியலில் காணிக்கை செலுத்த விரும்பும் பக்தர்கள் இனி அஞ்சல் மூலம் அனுப்பலாம்.<br /><br />இத்திட்டம் 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம் செயல் அதிகாரி, திருமலை திருப்பதி தேவஸ்தானம், திருப்பதி என்ற பெயரில் பணவிடை (மணியார்டர்) அனுப்பினால் பக்தர்களின் காணிக்கைகள் திருமலையை அடைந்தவு டன் 3 நாள்களுக்கு பின் மணியார்டர் பெறப்பட்டதற் கான ரசீதும், ஏழுமலையா னின் திருவுருவப் படமும், கல்யாண உற்சவ அட்சதை யும் தேவஸ்தான கவரில் அனுப்பி வைக்கப்படும். இதற் காக தலைமை அஞ்சலகத் தில் ஆசீர்வாதம் என்று ஒரு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.<br /><br />சுமார் ஒன்றரை ஆண்டு களாக சரிவர செயல்படாமல் இருந்த இந்த திட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ள னர். மேலும் மாவட்ட வாரி யாக செயல்பட்ட இந்த திட் டம் தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங் களுக்கும் விரிவுபடுத்தப்பட் டுள்ளது. முன்னர் 10 ஆயிரம் பக்தர்கள் பயன் பெற்ற இந்த திட்டத்தின்மூலம் தற்போது 40 ஆயிரம் பக்தர்கள் பயன்பெறுகின்றனர்.<br /><br />மேலும் திருப்பதிக்கு அருகில் உள்ள ஸ்ரீகாள ஹஸ்தி கோயிலிலும் வெகு விரைவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அஞ்சலக அதிகாரிகள் தெரிவித்தனர் - என்று செய்தி தினமணியில் வெளி வந்துள்ளது (21.12.2013).<br /><br />பக்தி என்பது ஒரு வியாபாரம், சுரண்டல் என்பது அதன் தொழில் என்று நாம் சொன்னால் பற்களை நறநற வென்று கடிப்போர் உண்டு.<br /><br />இப்பொழுது திருப்பதி தேவஸ்தானம் இந்தச் செய லுக்கு என்ன நாமகரணம் சூட்டப் போகிறதோ!<br /><br />துக்ளக் இதழில் திருவாளர் சோ ராமசாமி எழுதிய பதில்தான் இந்த நேரத்தில் நினைவிற்கு வந்து தொலைக்கிறது.<br /><br />கேள்வி: சென்னை தீவுத் திடலில் திருப்பதி ஏழுமலை யான் சீனிவாச திருக்கல்யா ணம் உற்சவம் நடைபெற்றது பற்றியும், அதில் லட்சக்கணக் கான பக்தர்கள் பங்கு பெற் றது பற்றியும் தங்கள் கருத்து?<br /><br />சோ பதில்: இவ்வளவு கட்டணம் செலுத்தினால் வெங்கடேஸ்வரப் பெரு மாளை உங்கள் வீட்டிற்குக் கொண்டு வந்து ஒரு நாள் தங்க வைக்கிறோம் என்ற ஒரு புதிய திட்டம் வராத ஒன்றுதான் குறை! (துக்ளக் 23.4.2008 பக்கம் 17) என்று அவரே வெட்கத்தை விட்டு எழுதினாரே அதுதான் நினைவிற்கு வருகிறது.<br /><br />இதையும் தாண்டி காஞ்சி (மாஜி) சங்கராச்சாரி யார் காஞ்சிபுரத்தில் 1976 மே மாதத்தில் நடைபெற்ற அகில இந்திய இந்து மாநாட்டில் ஒரு உண்மையை ஒப்புக் கொண் டார்.<br />கோயிலுக்குப் போவதை மக்கள் ஒரு ஃபேஷனாகக் கருதுகிறார்கள் பெரும்பா லோரிடம் வர்த்தக மனப் பான்மை காணப்படுகிறது என்று குறிப்பிட்டார்.<br /><br />நமக்கு ஏன் வீண் வம்பு? அவாளே ஒப்புக் கொண்டு விட்டனர்.<br /><br />கடைசியாக ஒரு கேள்வி இப்படி வெள்ளைக்காரன் கண்டுபிடித்த அஞ்சல் முறை யில் எல்லாம் பணம் வசூ லித்து பிரசாதம் அனுப்புவது அவாளின் எந்த ஆகமத்தில் எத்தனையாவது அத்தியா யத்தில் இருக்கிறதாம்?<br /><br />- மயிலாடன்<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/72461.html#ixzz2oCq0LTU4<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-8242023514404095552013-12-22T06:41:24.585+05:302013-12-22T06:41:24.585+05:30
அர்ச்சகர் என்ன கூறுகிறார்?
தேவாரம் படித்த, பாடிவ...<br />அர்ச்சகர் என்ன கூறுகிறார்?<br /><br />தேவாரம் படித்த, பாடிவரும் ஒரு தலித் தமிழச்சிக்கு அரசு உத்தரவு கிடைத்தும் ஓதுவார் பணிக்கு செல்ல இயலாமல் தடுமாறும் நிலையில்... அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் முடிவைப்பற்றி... வேதவிற்பன்னரும் தமிழ் அர்ச்சனைக்காக பல்லாண்டு காலம் போராடி வருபவருமான அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியாரிடம் கேட்டோம். மகாஜனஹா ஏன கதாஹா சபந்தஹா - என்கிறது வேதம் அதாவது... பொதுஜனம் என்ன சொல்கிறார்களோ, கேட்கிறார்களோ அதன்படி செல் என அர்த்தம். அதுப்படி பார்த்தால் பொதுஜனங்கள் இப்போது தேர்ந்தெடுத்திருக்கிற கருணாநிதி மந்திரிசபை எல்லா ஜாதிக்காரர்களும் அர்ச்சகர்கள் ஆகலாம் என முடிவெடுத்து அறிவித்திருப்பது வேதவாக்கு. ஆகமத்தைச் சொல்லி மற்ற ஜாதிக்காரர்களை பிராமணர்கள் கோயிலுக்குள் விடாமல் இருந்தார்கள் ஆனால் உண்மை என்னவென்றால் பிராமணனுக்கும் ஆகமத்துகுமே முரண்பாடு தான்.<br /><br />ஆகமம் உருவ வழிபாட்டைச் சொல்கிறது. ஆனால், பிராமணனுக்கு வேதம் சொன்னது உருவ வழிபாடு அல்ல. இயற்கை வழிபாடுதான். அருகம்புல் முதல் சூரியன் வரை பிராமணனின் வழிபாடுகள் எல்லாம் இயற்கை வழிபாடே. அப்படிப்பட்ட பிராமணன் தனக்கு எதிரான ஆகமத்தின் பெயரைச் சொல்லியே மற்ற ஜாதிக்காரர்களை உள்ளே விட மறுத்து வந்தான். ஆனால் உண்மையில் பாஞ்சராத்ர ஆகமப்படி ஜாதி தத்துவமே இல்லை. பிராமணர்கள் வேதத்தை எதிர்த்த ஆகமத்தையே, தங்களுக்காக பயன்படுத்திக் கொண்டனர். அதனால் ஆகமப்படியே பார்த்தாலும், யார் வேண்டுமானாலும் பூஜை செய்யலாம், பிராமணர் இதையே தன் தொழிலாக்கிக் கொண்டதால் மற்ற யாரையும் உள்ளே விடவில்லை. ராமசாமி நாயக்கர் அந்தக்காலத்தில் என்னிடம் ஒரு வார்த்தை கேட்டார். தாத்தாச்சாரியாரே எங்க கையால ஒரு பூவை எடுத்து உங்க சாமிக்கு போடக்கூடாதாய்யா? என்று அந்தப்பூவை இப்போது கருணாநிதி எடுத்துப் போட வைத்திருக்கார். இது வரவேற்க வேண்டிய ஒரு சீர்திருத்த விஷயம். இதை யாராவது ஆட்சேபித்தால் அவர்கள் மக்கள் முன்னேற்றத்தை தடுக்கிறார்கள்னு அர்த்தம். அவர்களுக்கு நாம்தான் நல்ல புத்தி சொல்லி திருத்த வேண்டும் என்று கையை உயர்த்தி இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்தார் தாத்தாச்சாரியார்.<br /><br />- ஆரா, நக்கீரன் 27.05.2006, பக்கம் 25<br /><br />Read more: http://viduthalai.in/page5/72400.html#ixzz2oA5qLRS0<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com