tag:blogger.com,1999:blog-1474608369333206681.post7519243534799077059..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி!-23தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-89392989195299040512011-12-18T17:02:06.956+05:302011-12-18T17:02:06.956+05:30சமதர்மவாதிகளுக்கோர் நற்செய்தி ருசியாவில் கீதைக்குத...சமதர்மவாதிகளுக்கோர் நற்செய்தி ருசியாவில் கீதைக்குத் தடை! இந்தியாவும் பின் தொடருமா?<br /><br /><br /> வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று கூறும் தத்துவ நூல் என்று உலகெங்கும் திட்டமிட்டுப் பரப்பப்படும் இந்து மதத்தின் பகவத் கீதை ரஷ்ய நாட்டில் தடை செய்யப் படவுள்ளது. இது தீவிரவாத உணர்வைத் தூண்டும் ஓர் இலக்கியமா என்பதைப் பற்றிய தீர்ப்பை சைபீரிய நீதிமன்றம் ஒன்று நாளை (19.12.2011) வழங்க உள்ளது.<br /><br />இஸ்கான் என்றழைக்கப்படும் ஹரே கிருஷ்ணா இயக்கத்தைத் தோற்றுவித்த பக்திவேதாந்தசாமி என்பவர் உள்ளபடியே பகவத் கீதை என்ற தலைப்பில் எழுதி யுள்ள நூலின் ரஷ்ய மொழிபெயர்ப்புக்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரும் வழக்கு ஒன்று டோமாஸ்க் நகரில் கடந்த ஜூன் மாதம் முதல் நடைபெற்று வருகிறது.<br /><br />சமூக நல்லிணக்கமின்மையைப் பரப்பும் இலக்கியம் என்று அறிவித்து அதை ரஷ்ய நாட்டில் வெளியிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் பிராசிகியூஷன் தரப்பில் கோரப்பட்டுள்ளது.<br /><br />ரஷ்யாவில் வாழும் இந்திய சமூகத் திரிடையே உள்ள இஸ்கான் அமைப்பைச் சேர்ந்தவர்கள், கீதையைத் தடை செய்யும் முயற்சியைக் கைவிட ரஷ்யா நாட்டை இந்திய அரசு ராஜதந்திர உறவு மூலம் வலியுறுத்தவேண்டும் என்று கோரியுள் ளனர். ரஷ்யாவில் வாழும் இந்துக்களின் மத உரிமைகளைப் பாதுகாக்க இந்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற் கொள்ளவேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.<br />கீதையைப் பற்றிய டோமாஸ்க் பல்கலைக் கழக நிபுணர் குழுவின் கருத்தை இந்த வழக்கில் நீதிமன்றம் அக் டோபர் 25 அன்று கேட்டுள்ளது. போர்க் களத்தில் கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு போதனை அளிப்பது இந்த பகவத் கீதை. கீதையைத் தடை செய்வது மட்டுமன்றி, இஸ்கான்சின் மத நம்பிக்கைகள் பற்றிய பிரபுபாதாவின் பிரச்சாரத்தையும் தடை செய்யவேண்டும் என்று கேட்கப் பட் டுள்ளது. இது தீவிரவாத உணர்வைத் தூண்டுவதாக உள்ளது என்றும், மற்ற மதநம்பிக்கைகள் மீது வெறுப்பை ஏற்படுத்துவதாகவும் உள்ளது என்பதே இதன் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.<br /> ---"விடுதலை” 18-12-11தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-6000559412291514812011-12-17T19:28:09.743+05:302011-12-17T19:28:09.743+05:30போஜனம் கிடைக்காதோ!
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி...போஜனம் கிடைக்காதோ!<br /><br /><br />திராவிடர் கழகத் தலைவர் வீரமணி:- டிசம்பர் 15இல் கூட்டப்பட்ட சிறப்பு சட்ட சபைக் கூட்டம், ஓர் அருமையான, எடுத்துக் காட்டான கூட்டம், முதல்வரின் முயற்சி சிறப்பானது. உரையும், தீர்மானமும் தெளி வானவை. ஒத்துழைப்பு நல்கிய அனைத்து அரசியல் கட்சிகளும், அதன் தலைமைகளும் பாராட்டுக்குரியவை.<br /><br />டவுட் தனபாலு:- அனைத்துக் கட்சிகளின் ஒற்றுமையைப் பார்த்து, உங்க பெருந் தன்மையைக் காட்டுறீங்களாக்கும்... இதுல, கடைசி வரியைத் தவிர்த்து, முதல்ல சொன்ன மூணு வரியும், உங்க அருமைத் தனயன், தி.மு.க., தலைவருக்கு உடன்பாடு தானான்னு கொஞ்சம் கேட்டுச் சொல்ல முடியுமா...? - தினமலர், 17.12.2011<br /><br />தி.மு.க. தலைவருக்கு உடன்பாடு இருந்ததால்தான் சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா முன்மொழிந்த தீர்மானத்திற்கு தி.மு.க. ஒத்துழைப்பைக் கொடுத்தது; சட்டமன்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தீர்மானத்தை ஆதரித்தும் உரையாற்றினார்.<br /><br />ஹி, ஹி இந்த அரிச்சுவடி கூடத் தெரியாமல் பேனா பிடிக்கலாமா? ஒவ்வொரு நாளும் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்களை இழுத்துக் குளிர் காயாவிட்டால் போஜனம் கிடைக்காதோ!<br /> 17-12-2011தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-21899348638579840362011-12-17T19:19:05.004+05:302011-12-17T19:19:05.004+05:30மீனாட்சி பட்டாபிராமன் பேசுகிறாராம்
செய்தியும் - ...மீனாட்சி பட்டாபிராமன் பேசுகிறாராம்<br /><br /><br />செய்தியும் - சிந்தனையும்!<br /><br />மீனாட்சி பட்டாபிராமன் பேசுகிறாராம்<br /><br />தினமலரில் வெளிவரும் இது உங்கள் இடம் பகுதி என்பது கற்பனையாக இட்டுக்கட்டி எழுதப்படும் பகுதி என்பதை தக்க ஆதாரத்துடன் விடுதலை முகத்திரையைக் கிழித்ததுண்டு. அதற்குப் பிறகாவது அதன் பார்ப்பனப் புத்தி மாறவில்லை - மாற்றிக் கொள்ளவும் மாட்டார்கள்; காரணம் அவர்கள் மறையவர்கள். மறைந்து இருந்து சூழ்ச்சி செய்யும் பார்ப்பனர்களாயிற்றே!<br /><br />யாரோ மீனாட்சி பட்டாபிராமனாம் - மதுரையில் இருந்து எழுதியிருக்கிறார் (தினமலர் 16.12.2011 பக்கம்8)<br /><br />என்ன எழுதுகிறார்? சிறீரங்கத்தில் பார்ப்பன அர்ச்சகர்களைத் தூக்கிச் செல்லுவது மனித உரிமை மீறல் என்று திராவிடர் கழகத் தலைவர் அறிக்கை வெளியிட்டுவிட்டாராம்.<br /><br />அத்திரிபாட்சா கொழுக்கட்டை என்று துள்ளிக் குதிக்கிறது தினமலர்.<br /><br />மகிழ்ச்சியாக - பல்லக்கைத் தூக்குகிறார்களாம் - இறைத் தொண்டாக செய்பவர்களின் உரிமையில் வீரமணி குறுக்கிட்டுவிட்டாராம்.<br /><br />அடேயப்பா!<br /><br />பல்லக்கில் பவனி வருவதும், பல்லக்கைத் தூக்குவதும் அவர்களின் உரிமைப் பிரச்சினையாம்.<br /><br />சிறீரங்கத்தில் பல்லக்கைத் தூக்குபவர்களே எதிர்க் குரல் கொடுத்துள்ளார்களே, அதனை வசதியாக மறந்து விட்டு அக்கிரகார ஏடு வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளுகிறதே. இதற்குப் பெயர்தான் பார்ப்பனப் புத்தி.<br /><br />அது என்ன சுமப்பவர்கள் எல்லாம் சூத்திராள். பவனி வருபவர்கள் எல்லாம் பிராமணாள். எங்காவது ஒரு சூத்திரன் பல்லக்கை ஒரு பார்ப்பானாவது சுமந்திருப்பானா?<br /><br />சமயக் குரவர் மூவரில் கூட வயது முதிர்ந்த திருநாவுக்கரசர் (அப்பர்) தானே பொடிப்பையனான திருஞானசம்பந்தனை - அவன் பார்ப்பான் என்கிற காரணத்தால் பொதி சுமந்து இருக்கிறார்.<br /><br />கொள்கைப் பிடிப்போடு வாழ்ந்த ஈ.வெ.ரா. இதைச் சொல்லியிருந்தால் ஏற்றுக் கொள்ளலாமாம். வீரமணி சொன்னால் ஏற்றுக் கொள்ளக்கூடாதாம். என்னே முரண்பாடு?<br /><br />சங்கராச்சாரியார் பல்லக்கில் சென்றதையே பெரியார் கண்டிக்கவில்லையா?<br /><br />பெரியார் சொன்னதை எல்லாம் அவர் காலத்தில் இந்தக் கூட்டம் ஏற்றுக் கொண்டதா?<br /><br />தந்தை பெரியார்- சீடருக்கிடையே கூட மித்திரபேதம் செய்ய முயலும் இந்த வேலை ஏன்?<br /><br />அது இங்கு நடக்காதம்மா, நடக்காது.<br /><br />இறந்தவர்களுக்கு சூடம், சாம்பிராணி போடலாமா என்று கேள்வி வேறு. திராவிடர் கழகத்தவர்கள் யாரும் அப்படி செய்வதில்லை என்பது கூடத் தெரிந்து கொள்ளாமல் உளறலாமா?<br /><br />அடேயப்பா, அடுத்த அணுகுண்டைப் பாருங்கப்பா!<br /><br />பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்பதே உண்மை. பிறக்கும்போது மனிதர்களாகப் பிறப்பவர்கள்தான் பின் பார்ப்பார், ஆகின்றனராம்.<br /><br />பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருவள்ளுவரின் கொள்கையும் பெரியார் கொள்கைதானே?<br /><br />அதை ஏற்றுக் கொள்ளாததால்தானே பிரச்னையே!<br /><br />பிறப்பில் எதுவோ அதுவேதான் கடைசி வரை என்பதுதானே இந்து மதம்!<br /><br />பிறக்கும்பொழுது மனிதனாகப் பிறந்தவன், பிறகு எப்படி பார்ப்பான் ஆனானாம்? விளக்கம் இல்லையே.<br /><br />பார்ப்பனத்தி வயிற்றில் பிறந்த காரணத்தால்தானே அவன் பார்ப்பான்.<br />பார்ப்பனத்தி வயிற்றில் பிறந்தவனுக்குத்தானே பூணூல் கல்யாணம் நடத்தப்படுகிறது - பிராமணாள் என்று நாமகரணம் சூட்டப்படுகிறது.<br /><br />எந்தக் கவுண்டர், எந்தத் தேவர் பிராமணாள் ஆகிறான்?<br /><br />தினமலரே - திரிநூலே - திராணி இருந்தால் பதில் சொல் பார்க்கலாம்.<br /><br /><br />- கருஞ்சட்டை- 17-12-2011தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com