tag:blogger.com,1999:blog-1474608369333206681.post7333790233575218509..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: இதுதான் வால்மீகி இராமாயணம் - 26தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger71125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-68758837847343477532014-09-07T11:25:50.188+05:302014-09-07T11:25:50.188+05:30இன்றைக்கு 'ஓணம்' கதையை பார்ப்போமா?
சோழ நா...இன்றைக்கு 'ஓணம்' கதையை பார்ப்போமா?<br /><br />சோழ நாட்டில் திருமரைக்காடு (வேதாரண்யம்); அங்கு ஒரு சிவன் கோயில். அங்குள்ள சிவனின் மனைவிக்குப் பெயர் ஞானம் பழுத்த நாயகி என்பதாகும்.<br /><br />ஒரு நாள் தன் மனைவியோடு சிவன் புணர்ந்து கொண்டு இருந்தானாம்.(அர்த்தமுள்ள இந்து மதம்.....ம்)<br /><br />அந்த நேரத்தில் எரிந்து கொண்டிருந்த தீபம் ஒளி குன்றி எரிந்து கொண்டிருந்ததாம். அந்த சமயத்தில் அங்கு வந்த எலி விளக்கில் இருந்த நெய்யைக் குடித்துவிட்டு, எலியின் வால் திரியின் மேல் பட்டதால், தூண்டப்பட்டு ஒளி பிரகாசமாகிவிட்டதாம்.<br /><br />உடனே எலியைப் பார்த்து சிவன், நீ மூவுலகையும் அரசாட்சி செய்வாய்! என்று வரம் கொடுத்தானாம்.<br /><br />அந்த எலி,<br />மாவலி என்னும் பெயரோடு பிறந்த அசுர குல அரசன் மண்ணுலகம், விண்ணுலகம், பாதாள உலகம் மூன்றையும் கட்டி ஆண்டானாம்.<br /><br />விண்ணுலகையும் மாவலி ஆண்டதால், இந்திர லோகத்தின் அதிபதியாகிய இந்திரன் கூட மாவலிக்குக் கட்டுப்பட்டவனாகிவிட்டான். பொறுக்குமா அவர்களுக்கு?<br /><br />அதே நேரத்தில் யாருக்கும் எந்த கேட்டையும் செய்யாமல் நல்லாட்சி புரிந்து, நல்ல பெயர் எடுத்தான் மாவலி!<br />அசுர குலத்தவன் நல்லாட்சி செய்வதாவது! நல்ல பெயர் எடுப்பதாவது! விட்டுவிடுவார்களா? இந்திரனின் தகப்பனாகிய காசிப முனிவன், விஷ்ணுவிடம் மனு போட்டானாம். கடும் தவமிருந்து விஷ்ணுவிடம் வரம் வேண் டினானாம். விஷ்ணு தமக்கு மகனாகப் பிறந்து மாவலியை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று மன்றாடினானாம். அதன்படியே வரமும் கிடைத்தது.<br /><br />(மூன்று உலகத்தையும் மாவலி கட்டி ஆள வேண் டும் என்று சிவன் கொடுத்த வரம் என்னவாயிற்று? சிவனை விட வைணவக் கடவுளுக்குச் சக்தி அதிகம் என்று காட்டுவதற்கு இதுபோன்ற கதைகள் போலும்!)<br /><br />ஒருமுறை யாகம் செய்த மாவலி தான தருமங்களைச் செய்தான். இதுதான் சந்தர்ப்பம் என்று கருதி காசிப முனிவருக்குப் பிறந்த வாமனன் (குள்ளப் பார்ப்பான் - சூழ்ச்சி என்று வந்தால் புராணங்கள் கூட பார்ப்பானைத்தான் தேடிப் பிடிக்கின்றன.) பிச்சைக்காரனாக (யாசகம் புருஷ லட்சணம் என்பதே பார்ப்பன தருமம் ஆயிற்றே!) சென்று மூன்று அடி மண்ணைக் கேட்டானாம். கேட்பாருக்கு இல்லை என்று சொல்லிப் பழக்க மில்லாத அந்தத் தர்மப்பிரபுவாகிய மாவலி எனும் அசுர அரசன் சம்மதித்தான்.<br /><br />சூழ்ச்சிக்காரக் குள்ளப் பார்ப்பனனாகிய வாமனன் பேருரு எடுத்து (விசுவரூபம்) ஓரடியை மண்ணுலகத்திலும் மற்றொரு அடியை விண்ணு லகத்திலும் வைத்து, மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று கேட்டானாம். என் தலையில் வை! என்றானாம் அந்த அப்பாவி; அவ்வளவுதான். தலையில் காலை வைத்து மிதித்து சிறையிலும் அடைத்தானாம்.<br />இந்த நாளில் மாவலி வீட்டுக்கு வீடு வருகி றானாம். கேரளத்தில் அப்படி ஒரு நம்பிக்கை. வீட்டு வாசலில் கோலம் போட்டு வைக்கிறார்கள்- மாவலியின் வருகைக்காக. ஓணம் பண்டிகை என்பது இதுதான்.<br /><br />இந்தக் கதை மூடத்தனத்தின் மொத்தக் குத்தகை என்பது ஒருபுறம். இந்து மதத்தில் விஷ்ணு அவதாரம் எடுப்பதெல்லாம் அசுரர்களை அழிக்கத் தான் என்பதை மறந்துவிடவேண்டாம்.<br /><br />தீபாவளிக் கதையும் இந்த ரகத்தைச் சேர்ந்ததே!<br /><br />நல்லவனாக இருந்தாலும் அவன் அசுர குலத்தவன் என்றால் - சூத்திரன் என்றால் அவனை ஆளவிடாதே- அழித்துவிடு! என்கிற ஆரிய தத்துவம்தான் இந்த வாமன அவதாரக் கதை!<br /><br />இங்கு மதம், கடவுள், பக்தி என்பதெல்லாம் நம்மை ஒழிப்பதற்கே! இந்தச் சூழ்ச்சி புரியாமல் கடவுள், காடாத்து என்று அலைவது பரிதாபமே!<br /><br />(நன்றி: விடுதலை 29.08.2012)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-81894067841831559212014-09-07T07:47:09.759+05:302014-09-07T07:47:09.759+05:30புனைப்பெயரில் திரியும் ஜனநாயகம்
அழுதுகொண்டிருந்த...புனைப்பெயரில் திரியும் ஜனநாயகம்<br /><br /><br />அழுதுகொண்டிருந்தான் அவன்.<br />யாரும் கவனிக்கவில்லை!<br />பரட்டைத் தலை<br />அழுக்கான முகம்<br />வருவார் போவோரெல்லாம்<br />அடித்த வாசனைத் திரவியம்<br />ஆறியும் ஆறாமலும்<br />உடல் முழுவதும் தீப்புண்கள்<br />சிகரெட்டால் சுட்ட வடுக்கள்<br />அங்கங்கே வெட்டுக் காயங்கள்<br /><br />சில சமயம்<br />புதுச் சட்டையோடு அரண்மனையிலிருப்பான்<br />பல சமயம்<br />கிழிந்த சட்டையோடு தெருவிலிருந்தான்<br /><br />பிச்சைக்காரனுக்குப் பிச்சையிட்டான்<br />அதே தெருவில் அவனே பிச்சையெடுத்தான்<br />அவன் ஊமையென்று சந்தேகித்தார்கள்<br />அவன் வாய் தைக்கப்பட்டிருந்தது<br />கையை யாரோ முறித்திருந்தார்கள்<br /><br />பரிதாபப்பட்டவர்கள் கூட்டிச் செல்வார்கள் வீட்டிற்கு<br />அடுத்த நாள்<br />தெருவில் தென்படுவான்.<br />அவனோடு புகைப்படம்<br />எடுத்துக்கொண்டார்கள்<br /><br />பெயரைக் கேட்டேன்<br />சிரித்துக்கொண்டே நின்றான்<br />சர்வாதிகாரம் தன்னை<br />ஜனநாயகமென்பதால்<br />அடக்கு முறை பாசிசம்<br />ஜனநாயகமென்று சொல்லிக்கொண்டு திரிவதால்<br />மத வன்முறை அடிப்படைவாதம்<br />ஜனநாயகமென்று சொல்லிக்கொள்வதால்<br />தன் நிஜப்பெயரை தலைமறைவு வாழ்வுக்குக் கொடுத்துவிட்டு<br />புனைப்பெயரில் திரிகின்றான் ஜனநாயகம்.<br /><br /> <br /><br />- கோசின்ராதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-36826999963788098292014-09-07T07:46:34.287+05:302014-09-07T07:46:34.287+05:30பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிறுவர்களின் பங்கு...பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிறுவர்களின் பங்கு<br /><br /><br />பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிறுவர்கள் ஈடுபடுவது கடந்த ஆண்டு 13.2 விழுக்காடு அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.<br /><br />பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான குற்றங்கள் 70.5 விழுக்காடும் பாலியல் குற்றங்கள் 60.3 விழுக்காடும் அதிகரித்துள்ளது. இந்தக் குற்றங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களில் 66.3 விழுக்காட்டினர் 16 முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்கள்.<br /><br />பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக 2013ஆம் ஆண்டு சிறுவர்கள்மீது மொத்தம் 31,725 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது, 2012ஆம் ஆண்டு 27,936ஆக இருந்துள்ளது. திருட்டு வழக்குகளில் 7,969 சிறுவர்களும், தாக்குதல் சம்பவங்களில் 6,043 சிறுவர்களும் கொள்ளை வழக்குகளில் 3,784 சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.<br /><br />ஆண்டு வருமானம் 25 ஆயிரம் ரூபாய் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 50 விழுக்காட்டுச் சிறுவர்கள் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-42694867687501129382014-09-07T07:46:01.075+05:302014-09-07T07:46:01.075+05:30மத்திய அமைச்சரவையில் மாமிசம் கூடாது!
மிகவும் அம...மத்திய அமைச்சரவையில் மாமிசம் கூடாது!<br /><br /><br /><br />மிகவும் அமைதியாக ஒரு மாற்றம் டில்லியில் நடந்ததிருக்கிறது, அமைச்சரவை நிகழ்ச்சிகளில் இனிமேல் அசைவம் கிடையாது என்பதுதான் அது. இந்தச் செய்தி பலருக்குத் தெரியாது. அமைச்சரவைக் கூட்டம் என்பது பார்ப்பனர்களின் யாகமேடை கிடையாது. அமைச்சரவைக் கூட்டத்தின் போது பல்வேறு மாநிலங்களில் உள்ள அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொள்வார்கள். அவர்களின் உணவு முறை அசைவத்துடன் சேர்ந்ததாக இருக்கலாம். மேற்கு வங்கப் பார்ப்பனர்கள்கூட மீன் இல்லாமல் சாப்பிடமாட்டார்கள். அப்படி இருக்க அமைச்சரவை நிகழ்ச்சிகளில் அசைவ உணவை நிறுத்தியது ஏன்? இதுவரை யாரும் கேள்வி கேட்கவில்லை. தமிழ்நாட்டிற்கு வருவோம். இங்கு என்ன நடக்கிறது? ஒரு பத்திரிகை அலுவலகம் அசைவ உணவு கொண்டு வருவதால் சைவம் சாப்பிடும் மற்றவர்களுக்கு அருவருப்பாக இருக்கிறதாம். ஆகையால் இனிமேல் அலுவலகத்திற்கு யாரும் அசைவ சாப்பாடு கொண்டுவர வேண்டாம் என்று கூறி அனைத்துப் பணியாளர்களுக்கும் சுற்றறிக்கை விட்டு, அலுவலக தகவல்பலகையிலும் ஒட்டிவிட்டனர். பொதுவாக ஊடக அலுவலகங்களில் அசைவம் கொண்டுவருவதை பல பத்திரிகை நிறுவனங்கள் நேரடியாக இல்லாமல் மறைமுகமாகத் தடுக்கின்றன. புதிதாகச் சேர்ந்தவர்கள் அசைவம் கொண்டுவந்தால் உடனே நாசுக்காக சரஸ்வதி வசிக்கும் இடம் என்று மறைமுகமாகக் கூறிவிடுவார்கள். அப்படி இருந்தும் கொண்டுவந்தால் உடனே தூக்கிவிடுவார்கள். திடீரென இந்த அசைவ எதிர்ப்பு ஏன் கிளம்பியது என்று தெரிகிறதா? இதற்கு உணவு முறையை நன்கு கவனித்தால் தெரியும். பார்ப்பனர்களின் அன்றாட உணவில் அதிக அளவு புரதம், கால்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் வைட்டமின்கள் இருக்கும். மிகக்குறைந்த அளவே மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் இருக்கும். அவர்கள் சேர்க்கும் கொழுப்பு உணவு மிகவும் எளிதில் உடலில் ஆற்றலாக மாற்றமடையும் தாவரக்கொழுப்பு உணவுதான். பார்ப்பனர்களுக்கு அதிகம் உடலுழைப்பு கிடையாது. ஆனால், பார்ப்பனரல்லாத பெரும்பான்மை மண்ணின் மைந்தர்களுக்குத் தேவையான உணவு. அதுவும் இந்த மண்ணின் பாரம்பரிய உணவு என்பது, அசைவ உணவு வகையைச் சார்ந்ததே. இது விவசாய நாடு. பெரும்பான்மை மக்களின் உணவுத்தேவையை நிறைவு செய்ய மாமிசம் மிகவும் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. மனித குல வரலாற்றைப் பார்த்தாலே உணவுச் சங்கிலிமுறை நமக்குத் தெரியவரும். மாட்டை மனிதன் உணவிற்காகத் தேர்ந்தெடுத்தது என்பது அதிகமான மக்கள் பங்கிட்டு உண்ணக்கூடியதும் அதே நேரத்தில் அவனது உடலுழைப்பிற்குத் தேவையான அனைத்து ஆற்றலும் மாட்டு மாமிசத்திலிருந்து கிடைக்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை குடும்ப வாழ்க்கை அமைப்பில் ஆடு, கோழி மற்றும் மாட்டு மாமிசம் பொதுவாக இருந்தது. விழா நாட்களில் மாட்டை உணவிற்காக அறுப்பது, விருந்தினர் வரும்போது கோழி, ஆடுகளை அறுப்பது என்பது காலம் காலமாகத் தொடர்வதாகும்.<br /><br />கோமத யாகம், அசுவமேத யாகம், நரமேத யாகம் என்ற பெயர்களில் உயிரினங்களைத் தீயில் இட்டுப் பொசுக்கிய பார்ப்பனர்கள் இன்று மாமிசம் கொண்டுவராதே என்று கூறுகின்றனர். சரி உங்கள் ஆட்சி உங்கள் அலுவலகம் என்று விட்டால் இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் கருவாடு விற்க தடை விதித்துவிட்டார்கள். கேட்டால் கருவாட்டு நாற்றம் அங்குவரும் வியாபாரத் தரகர்களுக்குப் பிடிக்கவில்லையாம். கருவாட்டு விற்பனையாளர்களை எல்லாம் கடையைக் காலிசெய்துவிடச் சொல்லிவிட்டார்களாம். மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மட்டுமல்ல... மோடி பதவியேற்பு விழாவிலேயே இந்த முயற்சி செய்யப்பட்டு பின்னர் பன்னாட்டுத் தலைவர்களுக்காக மாற்றடப்பட்டதும் அது கிண்டலுக்கு உள்ளானதையும் நாம் அறிவோம். இப்போது நடந்தேவிட்டது அவ்வளவுதான்.<br /><br />ஏதேது இனிமேல் மாமிசம் சாப்பிடுபவர்கள் எல்லாம் இந்தியர்களே அல்ல என்று சட்டமியற்றிவிடுவார்கள் போலும்! விழிப்பாய் இரு தமிழா! இனி உனது உணவைக்கூட பார்ப்பானைக் கேட்டுத்தான் சாப்பிடும் நிலை வரப்போகிறது!<br /><br />- சரவணா ராஜேந்திரன்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-27002406570186758242014-09-06T20:33:05.450+05:302014-09-06T20:33:05.450+05:30பவுத்த திருப்பதிகள் இந்துக் கோவில்களான சூழ்ச்சி!
...பவுத்த திருப்பதிகள் இந்துக் கோவில்களான சூழ்ச்சி!<br /><br /><br />காஞ்சீபுரத்தில் கச்சீஸ்வரர் கோவிலென்று வழங்கும் ஆலயம் பூர்வத்தில் புத்தர் கோவில் எனத் தெரிகிறது. இக்கோவிலின் முன் கோபுரத்தின் அஸ்திவாரக் கல் கட்டடத்தில் சில புத்த விக்கிரகங்கள் இப்போதும் இருக்கின்றன. இன்னும் சில, முன்பு இருந்த உருவம் தெரியா மலிருக்குமாறு அழிக்கப்பட்டிருக் கின்றன.<br /><br />கோவில் உள்மண்டபத் திலும்` சில கல்தூண்களில் புத்த விக்கிரகங்கள் இப்போதுமிருக்கின்றன. இது புத்தர் கோவில் என்பதற்கு மற் றொரு ஆதாரமிருக்கிறது. அஃதாவது: இக்கோவில் மேல்புறம் வீதிக் கடைசியிலிருந்து வரும் ஏரிக்கு புத்தேரி என்றும், வீதிக்கு புத்தேரித்தெரு என்றும் பெயர்கள் ஏற்பட்டு இப்போதும் வழங்கி வருகின்றன.<br /><br />கச்சீஸ்வரர் கோவிலுக்கு நான் சென்று பார்த்த போது, தூண்களில் மட்டும் புத்தர் உருவங்களைக் கண் டேன், கோபுர அஸ்திவாரத்தில் இருந்த புத்த விக்கிரகங்கள் காணப்படவில்லை. புத்தேரித்தெரு என்று இப்போது வழங்கப்படுகிற தெரு முற்காலத்தில் புத்தர் தெரு என்று வழங்கப்பட்டு அவ்வாறே விக்கிரயபத்திரங்களிலும் எழுதப்பட்டு வந்தன. புத்தேரித் தெருவின் மேற்குக் கோடியில் உள்ள கயிலாசநாதர் கோவில் என்னும் இராஜ சிம்மேச்சுரம் ஆதியில் புத்தர் கோவி லாக இருக்க வேண்டும் என்பதற்கு அக் கோவிலின் புராண ஆதாரங்களால் யூகிக்கப்படுகிறது.<br /><br />காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில் வெளிமதில் சுவரில் சில புத்த விக்கிரகங்கள் பலகைச் சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மதிற்சுவர் விஜயநகர அரசனான கிருஷ்ணதேவராயரால் 1509இல் கட்டப்பட்டது. பழைய புத்தர் கோவில்களை இடித்து அக்கற்களைக் கொண்டு இந்த மதிற்சுவர் கட்டியிருக்க வேண்டும். அதனால்தான் இப்புத்த விக்கிரகங்கள் இச்சுவரில் காணப் படுகின்றன.<br /><br />காஞ்சி ஏகாம்பர ஈசுவரர் கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் கட்டடத்தில் ஒரு புத்த விக்கிரகம் இருக்கிறது. இது பூமியைத் தோண்டியபோது கிடைத்தது. புத்தர் பரிநிர்வாணம் அடையும் நிலை யில் உள்ளதுபோன்ற கற்சிலையொன்று ஏகாம்பர ஈசுவரர் கோவில் மதிற்சுவ ரின் கீழே வைத்துக் கட்டப்பட்டி ருக்கிறது.<br /><br />காஞ்சீபுரத்தில், கச்சிக்கு நாயகர் கோவில் என்னும் புத்தர் கோவில் இருந்தது. அதற்கு மானியமாக செங் கற்பட்டு ஜில்லாவில் உள்ள நாவலூர் கிராமம் விடப்பட்டிருந்தது. இந்தக் கோவில் இப்போது காணப்படவில்லை. காஞ்சி, கருக்கினில் அமர்ந்தாள் கோவில் என்னும் கோவிலில் இரண்டு புத்தர் சிலைகள் உள்ளன; அவை, முன்பு காஞ்சி மேட்டுத் தெருவில் இருந்தனவாம்.<br /><br />காமாட்சியம்மன் கோவில் ஆதியில் பவுத்தரின் தாராதேவி ஆலயம். இவ்வாலயத்தில் பல புத்தவிக்கிரகங்கள் இருந்தன. அவைகளில், 6 அடி உயரம் உள்ள நின்ற வண்ணமாக அமைக்கப்பட்ட சாஸ்தா (இது புத்தர் உருவம்) என்னும் உருவம் இப்போது சென்னைப் பொருட்காட்சி சாலையில் இருக்கிறது. காமாட்சி அம்மன் குளக்கரையில் இருந்த புத்தர் சிலைகள் இப்போது காணப்படவில்லை. இக்கோவிலில் இருந்த வேறு புத்தவிக்கிரகங்கள் (கருங்கல் சிலைகள்) சில ஆண்டு களுக்குமுன் நன்னிலையில் இருந்ததைக் கண்டேன். ஆனால் அவை பிறகு துண்டு துண்டாக உடைக்கப்பட்டுக் கிடந்ததைக் கண்டேன். இப்போது அவை இருந்தவிடமே தெரியவில்லை.<br /><br />காமாட்சி யம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு தோட்டத்தில் புத்தவிக் கிரகம் ஒன்று இப்போதும் நன்னி லையில் இருக்கிறது. இத்தோட்டத்தில் உள்ள மண்டபத்தைக் காட்டியபோது, அதன் அடியில் சில புத்த விக்கிரகங் களைப் புதைத்து இருக்கிறார்களாம்.<br /><br />(நூல்: பவுத்தமும் தமிழும் மயிலை சீனிவேங்கடசாமி பக்கம் 53,54,55<br /><br />Read more: http://viduthalai.in/page8/87224.html#ixzz3CY2q17du<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-12197110748118427132014-09-06T20:30:11.307+05:302014-09-06T20:30:11.307+05:30வெற்றி! வெற்றி!!
வைக்கம் சத்தியாக்கிரகப்போர் கடைச...வெற்றி! வெற்றி!!<br /><br />வைக்கம் சத்தியாக்கிரகப்போர் கடைசியாக வெற்றி பெற்றுவிட்டது. திருவிதாங்கூரிலுள்ள எல்லாப் பொது ரஸ்தாக்களிலும், சத்திரங்களிலும், பள்ளிக்கூடங்களிலும் எல்லா ஜனங்களும் ஜாதி மத வித்தியாசமின்றிப் பிரவேசிக்கலாமென்று திருவிதாங்கூர் மகாராஜா உத்தரவு பிறப்பித்து விட்ட தாகத் தெரிகிறது. சமீபகாலத்தில் திருவி தாங்கூரில் எத்தனையோ சீர்திருத் தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.<br /><br />தேவதாசி ஏற்பாட்டை முதன்முதலில் ஒழித்த பெருமை திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கே உரியது. கப்பல் பிரயாணம் செய்த ஜாதி இந்துக்களும் கூட ஆலயங்களில் பிரவேசிக்கக் கூடாது என்றிருந்த தடையும் நீக்கப் பட்டது.<br /><br />நாயர்களுக்கு மட்டும் பிர வேசனமளிக்கப்பட்டு வந்த சர்க்கார் பட்டாளத்தில் எல்லாச் ஜாதியாரும் சேர அனுமதியளிக்கப்பட்டுவிட்டது. இப்பொழுது அவர்களுக்கு சிவில் உரிமைகளை அளித்திருக்கும் திருவி தாங்கூர் மகாராஜாவைப் பாராட்டுகிறோம்.<br /><br />குடிஅரசு - பெட்டிச் செய்தி - 31.05.1936<br /><br />Read more: http://viduthalai.in/page7/87221.html#ixzz3CY27YdSN<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-89815374817170744742014-09-06T20:28:48.524+05:302014-09-06T20:28:48.524+05:30சொல்லுவது தினமலர் மன அமைதிக்காக சென்று நிம்மதி இழக...சொல்லுவது தினமலர் மன அமைதிக்காக சென்று நிம்மதி இழக்கும் பக்தர்கள் திரிசுதந்திரர்கள் பிடியில் சிக்கித்தவிக்கும் திருச்செந்தூர்<br /><br /><br />முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆவது படை வீடு திருச்செந்தூர். இங்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக உலகம் முழுவதிலும் இருந்தும் பக்தர்கள் வருவதால் ஆண்டு முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். திருச்செந்தூர் ஸ்தலம் குரு பரிகார ஸ்தலமாக இருப்பதால் அங்குவரும் பக்தர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட் டில் உள்ள மிகப்பெரிய 5 கோவில்களில் இதுவும் ஒன்று.<br /><br />திருச்செந்தூர் மூலவரான பால சுப்பிரமணிய சுவாமியை தொட்டு பூஜை செய்பவர்கள் போத்திகள் இவர்கள் மூலவரைத் தவிர்த்து வேறு எந்த கடவுளுக்கும் பூஜை செய்ய மாட்டார்கள். கோவிலுக்குள் இருக்கும் சண்முகர் மற்றும் பரிவார தேவதை களுக்கு பூஜை செய்பவர்கள் சிவாச் சாரியார்கள்.<br /><br />இவர்களைத் தவிர்த்து கோவிலில் தேங்காய் பழம் உடைத்து அர்ச்சனை செப்வர்கள் திரிசுதந்திரர்கள். இவர்கள் தான் கோவிலுக்குள் நடத்தப்படும் யாகசாலை பூஜையை செய்வார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்களின் பரிகார பூஜையையும் இவர்கள் தான் செய் கிறார்கள்.<br /><br />கைங்கரியம் செய்பவர்கள் என்று அழைக்கப்படும் திரிசுதந்திரர்கள் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் முறைகேடாக, அளவுக்கதிகமாக கட்டாய வசூலில் ஈடுபடுவது பக்தர்களை அதிருப்தி அடையச்செய்கிறது.<br /><br />திருச்செந்தூர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய பொது தரிசனம் தவிர 2 விதமான கட்டண தரிசனம் உள்ளது. அதில் ஒன்று அமர்வு தரிசனம். இதற்கு ரூ. 250 கட்டணம். மற்றொன்று சிறப்பு தரிசனம். இதற்கு ரூ. 100 கட்டணம். இந்த கட்டண தரிசனத்தில் அரசியல் வாதிகளையே மிஞ்சும் அளவுக்கு திரிசுதந்திரர்கள் மோசடி செய்வதால் கோவிலின் வருமானத்தில் தினமும் ரூ. 1 லட்சம் முதல் 1.50 லட்சம் வரை இழப்பு ஏற்படுகிறது.<br /><br />கோவிலுக்குள் நடக்கும் தங்கத்தேர் மற்றும் பிற தேர்த்திருவிழாவின் போது உற்சவர் ஜெயந்திநாதரை தூக்கி வருபவர்கள் சீர் பாதம், என அழைக்கப்படுகிறார்கள். கோவில் நிர்வாகம் சார்பாக தங்கத்தேர் இழுக்க கட்டணமாக 1,500 ரூ.பாய் இருந்தது. இந்த தொகையை சில மாதங்களுக்கு முன்பு கோவில் நிர்வாகம் ரூ.2,500ஆக அதிகரித்துள்ளது.<br /><br />அவ்வளவு... சீர்பாதத்தினர் அதி கரிக்கப்பட்ட கட்டணத் தொகையில் தங்களுக்கும் பங்குதர வேண்டும் என கொடி பிடித்தனர். அதற்கு நிர்வாகமே எதிர்ப்பு தெரிவித்ததால் தங்கத்தேருக்கு ஜெயந்தி நாதரை எழுந்தருளச் செய்ய மறுப்புத் தெரிவித்தனர். விளைவு தங்கத்தேர் ஓடவில்லை. கோவில் நிர்வாகத்துகும், சீர்பாதத்தினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அதில் சமரசம் ஏற்பட அதன்பின் உற்சவரை, தேருக்கு எழுந்தருளச் செய்தனர் என்பது தனிக்கதை.<br /><br />கோவில் தக்காராக திரிசுதந்திரர்கள் தரப்பினரே நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் இவர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் பணம் பறிப்பதில் மட்டுமே குறியாக இருப்பதால் மன ஆறுதலுக்காக சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் இருக்கும் நிம்மதி யையும் பறிகொடுத்துவிட்டு செல்லும் நிலையே தொடர்கிறது.<br /><br />தகவல்: கு.பஞ்சாட்சரம் பொதுக்குழு உறுப்பினர்,திருவண்ணாமலை, தினமலர் 30.6.2014<br /><br />Read more: http://viduthalai.in/page7/87223.html#ixzz3CY1l3W92<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-45754286519729878242014-09-06T20:28:01.164+05:302014-09-06T20:28:01.164+05:30கலிலியோவின் முக்கியக் கண்டுபிடிப்பு!
கலிலியோ தலைச...கலிலியோவின் முக்கியக் கண்டுபிடிப்பு!<br /><br />கலிலியோ தலைசிறந்த இத்தாலிய விஞ்ஞானி தனது காலத்தில் வேறெந்த விஞ்ஞானியையும் விட மிகச் சிறந்த அறிவியல் முறைகளைக் கண்டுபிடித்ததற்காக இவர் உலகப் புகழ் பெற்றார். இவர் பைசா நகரில் 1564-இல் பிறந்தார். இளமையில் பைசா பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றார்.<br /><br />ஆனால், வறுமையால் பாதியிலேயே படிப்பை விடடார். எனினும் அதே பல்கலைக் கழகத்தில் 1589இல் இவருக்கு ஆசிரியப் பணி கிடைத்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு இவர் படுவர் பல்கலைக் கழகத்தில் பணியில் சேர்ந்து 1610 வரையில் அங்கு பணிபுரிந்தார். இந்தக் காலத்தின்போது தான் இவர் தமது அறிவியல் கண்டுபிடிப்புகளில் பெரும்பாலானவற்றைக் கண்டுபிடித்தார்.<br /><br />இவருடைய முக்கியக் கண்டுபிடிப்புகளில் முதலாவது, எந்திரவியல் தொடர்புடையதாகும். லேசான பொருள்களைவிடக் கனமான பொருள்கள் வேகமாக கீழே விழும் என அரிஸ்டாட்டில் கூறியிருந்தார். அந்தக் கிரேக்கத் தத்துவஞானியின் இக்கூற்றை தலைமுறை தலைமுறையாக அறிஞர்கள் நம்பிவந்தார்கள். ஆனால், கலிலியோ இந்தக் கூற்றைச் சோதனை செய்து பார்க்க விரும்பினார்.<br /><br />பல தொடர்ச்சியான பரிசோதனைகள் மூலம் அரிஸ்டாட்டிலின் இந்தக் கூற்று தவறானது என்பதை கலிலியோ விரைவிலேயே கண்டுபிடித்தார். காற்றின் உராய்வினால் வேகம் சற்று குறையலாம் என்பதைத் தவிர, கனமான பொருள்கள், லேசான பொருள்கள் இரண்டுமே ஒரே வேக வீதத்தில்தான் கீழே விழுகின்றன என்று அவர் கூறினார்.<br /><br />இதைக் கண்டுபிடித்த பின்னர் கலிலியோ அடுத்த நடவடிக்கையில் இறங்கினார். ஒரு குறிப்பிட்ட கால அளவின்போது பொருள்கள் எவ்வளவு தூரம் விழுகின்றன என்பதை மிகக் கவனமாக அளவீடு செய்த இவர். கீழே விழும் ஒரு பொருள் செல்லும் தொலைவானது, அது கீழே விழுகின்ற வினாடிகளின் எண்ணிக்கையில் இருபடி வர்க்கத்துக்குச் சரிசம வீத அளவில் இருக்கும் என்பதைக் கண்டுபிடித்தார். இது வேக வளர்ச்சி வீதம் ஒரே சீராக இருக்கும் என்பதை உணர்த்துகிறது.<br /><br />கலிலியோவின் இந்தக் கண்டுபிடிப்பு மிக முக்கியமானதாக அமைந்தது. இவர் தமது பரிசோதனைகளின் முடிவுகளைக் காண, கணிதச் சூத்திரங்களையும், கணித முறைகளையும் விரிவாகப் பயன்படுத்தியது நவீன அறிவியலின் முக்கிய அம்சமாகும்.<br /><br />Read more: http://viduthalai.in/page6/87226.html#ixzz3CY1ZJpyd<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-78308193348974933722014-09-06T20:21:22.171+05:302014-09-06T20:21:22.171+05:30கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபம் என்ற பண்டிகை வ...கார்த்திகை தீபம்<br /><br /><br />கார்த்திகை தீபம் என்ற பண்டிகை வரப்போகின்றது. இதற்காக அருணாசல மென்னும் திருவண்ணாமலை முதலிய பல ஊர்களில் பெரும் பெரும் உற்சவங்கள் நடைபெறும் அதற்காக பதினாயிரக்கணக்கான மக்கள் யாத்திரை போவார்கள்.<br /><br />இது மாத்திரமல்லாமல் பல பல குடங்கள் நெய்யை டின் டின்னாய் கல் பூரத்தைக் கலந்து நெருப்பில் கொட்டி எரிப்பார்கள். சில இடங்களில் கட்டைகளை அடுக்கி அல்லது தட்டுகளைப் போராகப் போட்டு நெருப்பு வைத்து சட்டிசட்டியாக வெண்ணைகளை அந்த நெருப்பில் கொட்டுவார்கள்.<br /><br />இவைகள் தவிர வீடுகளிலும், கோவில்களிலும் 10, 50, 100, 1000, 10000, 100000 என்கின்ற கணக்கில் விளக்குகள் போட்டு நெய், தேங்காய்எண்ணெய், நல்ல எண்ணெய், இலுப்பை எண்ணை முதலியவைகளை ஊற்றியும், எள்ளுபொட்டணம், பருத்திவிதை பொட்டணம் ஆகியவைகளை கட்டியும், பெரும் பெரும் திரிகள் போட்டும் விளக்குகள் எரிப்பார்கள்.<br /><br />இந்த சடங்குகள் செய்வதே மேற்படி பண்டிகையின் முக்கிய சடங்காகும். ஆகவே இந்தச் சடங்குகளுக்கு எத்தனை லட்சம் ரூபாய் செலவு என்பதையும் இதற்காக செல்லும் மக்களின் ரயில் செலவு, மற்ற வீண் செலவு, நேரச்செலவு ஆகியவைகளால் எத்தனை லட்சம் ரூபாய் செலவாகும் என்பதையும் கவனித்துப் பார்த்து பிறகு இப்படிப்பட்ட இந்த பெருந் தொகைச்செலவில் நாட்டுக்கோ, மக்க ளுக்கோ, அல்லது மதத்திற்கோ, மக்களின் அறிவிற்கோ சுகாதாரத்திற்கோ அல்லது வேறு எதற்காவது ஒரு அம்மன் காசு பெறுமான பிரயோஜனமாவதுமுண்டா என்பதையும் யோசித்துப் பார்த்தால் நமது மக்களின் பாரம்பரியமான முட்டாள் தனம் விளங்காமற்போகாது.<br /><br />அர்த்தமற்ற தன்மையில் நமது செல்வம் கொள்ளை போகின்றதே, கொள்ளை போகின்றதே என்று கூச்சல் போடுகின்றோம். ஜவுளிக்கடையில் போய் மறியல் செய்து ஜெயிலுக்குப் போவதைப் பெரிய தேசபக்தியாய்க் கருதுகிறோம். ஆனால் இந்த மாதிரி நமது செல்வம் நாசம் போவதைப் பற்றி நமக்கு சிறிதும் கவலையில்லை.<br /><br />அதைப் பற்றி நினைப்பது மில்லை. அதைப் பற்றிப் பேசுவதே மதத் துரோகமாகவும், நாத்திகமாகவும் சொல்லப்படு கின்றது. இம்மாதிரி செல்வம் நாசமாவதை விட்டுக் கொண்டு வருவதால் எத்தனை பத்து லட்சக்கணக்கான மக்கள் தலைமுறை தலைமுறையாக முட்டாள்களாகிக் கொண்டு வருகின்றார்கள் என்பதை நாம் கவனிப்பதில்லை.<br /><br />ஆகவே ஆங்காங்குள்ள சுயமரியாதைத் தொண் டர்கள் இதை கவனித்து இம்மாதிரியான மூடத்தனங்களும், நாசகார வேலைகளும் சிறிதாவது குறையும்படியாக வேலை செய்வார்களானால் அது மற்ற எல்லா முயற்சி களையும் விட எத்தனையோ மடங்கு பயன் தரக்கூடியதும் பல வழிகளிலும் அவசியமானதுமான முயற்சிகளாகும் என்பதை ஞாபகமூட்டுகின்றோம்.<br /><br />- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 30.11.19<br /><br />Read more: http://viduthalai.in/page-7/87189.html#ixzz3CXztzQma<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-56013123017521829002014-09-06T20:20:47.274+05:302014-09-06T20:20:47.274+05:30கே.பி.கே.மேனனுக்கு ஜே! பார்ப்பனத் தொல்லைக்கு உதாரண...கே.பி.கே.மேனனுக்கு ஜே! பார்ப்பனத் தொல்லைக்கு உதாரணம்<br /><br />உயர்திரு பாரிஸ்டர் கே.பி.கேசவமேனனவர்கள் இந்தியாவில் சிறப்பாகத் தென்னிந்தியாவில் ஒரு பிரபல வக்கீலாகவும், ஒரு பெரிய தேச பக்தராகவும் தியாகி யாகவும் இருந்து வந்ததும் அவரது தேசபக்தி காரணமாக மாதம் 1000 கணக்கான ரூபாய்கள் வரும்படி உள்ள தமது வக்கீல் தொழிலை நிறுத்தி தனது செல்வமெல்லா வற்றையும் இழந்து, மனைவியையும் இழந்து மிக்க கஷ்டமான பரிசோதனைக்கெல்லாம் ஆளான ஒரு உண்மை தேசபக்தர் என்பதும், திரு. காந்தியவர்களுக்கும் மிகவும் நம்பிக்கை உள்ள சகாவாகவும், கேரள காங்கிரசு தாபனத்தின் டிக்டேட்டராகவும் இருந்த ஒரு யோக்கியமும், கீர்த்தியும் வாய்ந்தவர்.<br /><br />அஹிம்சையில் மிக்க நம்பிக்கை யுடையவர். சமுதாய சீர்திருத்த விஷயத்தில் திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் தமது சமுகத்திற்கே விரோதமாக வைக்கம் கோவில் தெருவில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிமை வாங்கிக் கொடுக்க தீர்மானித்து மற்றும் சில பாரிஸ் டருடனும், பி. எ. பி. எல். வக்கீல்களுடனும் சத்தியாக்கிரகம் துவக்கி அவ்வரசாங்கத்தாரால் 6 மாதம் காவலில் வைக்கப் பட்டாலும் சிறையில் மிக்க கௌரவமாய் நடத்தப்பட்டு தண்டனை காலம் தீருவதற்கு முன்பாகவே விடு தலை செய்யப்பட்டு அவர் கோரிய படியே திருவாங்கூர் அரசாங்கம் இணங்கி வந்து வைக்கம் தெருக் களைப் பொது ஜன நடமாட்டத் திற்கு எல் லோருக்கும் பொதுவாய் விட்டு விட்டதுடன் மற்றும் பல ரோட்டு களையும் எல்லா ஜாதி யாருக்கும் பொதுவாக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது.<br /><br />ஆகவே இவைகளிலிருந்து திரு. கே.பி. கேசவ மேனன் அவர்களின் யோக்கியமும், முயற்சியும் எப்படிப்பட்ட தென்பது யாரும் நன்றாய் உணரலாம். அன்றியும் அவர் தென்னிந்தியாவிலுள்ள கௌரவமான கனவான்களில் ஒருவராகவும், எல்லா கௌரவமான கனவான்களின் சிநேகிதராகவும், அய்கோர்ட் ஜட்ஜ், திவான். நிர்வாக சபை மெம்பர்கள் முதலியவர்களுடன் நெருங்கிப் பழகினவராக வுமிருந்து வந்ததும் இம்மாகாணத்தாருக்கு நன்றாய்த் தெரியும்.<br /><br />இந்தப்படி உள்ள இவர் இங்கு வக்கீல் தொழில் நடத்துவது என்பது பிடிக்காமல் ஏனெனில், இவ்விடத்திய நியாயாதிபதிகள் பெரிதும் பார்ப்பனர்களாக ஏற்பட்டு வருகின்ற படியாலும், அவர்களில் பெரும்பாலோர் பார்ப்பனச் சலுகையிருப்பதாகவும் மற்றும் பல காரணங்களாலும் அவருக்கு ஏற்பட்ட சில குடும்ப துக்கத்தாலும் இந்தியாவிலிருக்க மனமில்லாமல் மலேயா நாட்டுக்குப் போய் தனது தொழிலை கண்ணியமாய் நடத்திவரலாமென்று கருதி அங்குள்ள நியாயாதிபதிகளின் நேர்மை குணத்தை நம்பி மலேயா நாட்டுக்குச் சென்றால் அங்கும் இவ்விடத்திய பார்ப்பனர்களே தொல்லை கொடுக்க ஆரம்பித்து அவருக்குப் பல உபத்திரவம் செய்து வருவ தாகத் தெரிகிறது. இதைப்பற்றி முன்னோரு தடவையும் குறிப்பிட்டிருக்கின்றோம்.<br /><br />அதாவது திரு. கே. பி. கேசவமேனனவர்கள் மீது மலாய் நாட்டு வக்கீல்களில் சிலர் பொறாமை காரணமாக குறிப் பாய் சொல்ல வேண்டு மானால் ஒரு பார்ப்பனரின் கிருத்திரிமம் மீது அவரை F.M.S. கோர்டு களின் வக்கீல்கள் சங்கத்தில் சேர்க்கக் கூடாதென்று பல முயற்சிகள் செய்யப்பட்டன.<br /><br />அதென்னவெனில் திரு. கே. பி. கே. மேனன் ராஜத்துரோகி என்றும் அவர் சிறை சென்றவர் என்றும் வக்கீலாயிருக்க லாயக் கற்றவரென்றும் தொழிலாளர் களை தூண்டிவிட்டு கலகம் செய்பவரென்றும் பல மாதிரி யான விஷமப் பிரசாரங்கள் செய்து அவரை அங்கு அனு மதிக்காமல் இருக்கும்படியாகச் செய்யப் பல விதத்திலும் பலமாக முயற்சித்தார்கள் எவ்வளவு சூழ்ச்சி செய்தும் கடைசியாக திரு. மேனன் அவர்கள் ஆதியில் எதிர்ப் பார்த்தது போலவே மலாய் நாட்டு ஜட்ஜிகளின் நேர்மை குணத்தால் வெற்றி பெற்று அந்த நாட்டு நீதிவாத வக்கீலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டார் என்ற சேதி கேட்டு மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.<br /><br />திரு. கே.பி.கே. மேனன் அவர்களையும் பாராட்டுவ தோடு மலாய் நாட்டுத் தலைமை நீதிபதி அவர்கள் பார்ப்பது போலவே நாமும் அவர் மலாய் நாட்டுத் திலகமாய் விளங்க வேண்டுமென்று ஆசைப்படுகின்றோம்.<br /><br />- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 14.12.1930<br /><br />Read more: http://viduthalai.in/page-7/87187.html#ixzz3CXziCM6D<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-84834434857273009582014-09-06T20:14:01.653+05:302014-09-06T20:14:01.653+05:30வாழ்வியல் சிந்தனைகள் கருத்துக்கள் பயனுடையவை
'...வாழ்வியல் சிந்தனைகள் கருத்துக்கள் பயனுடையவை<br /><br />'நன்றி காட்டுவதின் மூலம் உயருங்கள்' என்ற தலைப்பில் 28.08.2014 அன்றைய விடுதலையில் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந்தனை களை படித்தேன்.<br /><br />உதவி செய்தவர்கள் தான் செய்த உதவியை மறந்து விடுவது நல்லது என்றும் உதவியை பெற்ற ஒருவர் அந்த நிகழ்வை என்றும் நினைவில் வைத்து வாழ்வது மிகச் சிறந்த மனிதப்பண்புகளில் ஒன்றாகுமென்றும் திருவள்ளுவர், தந்தை பெரியார், ஸிலீஷீஸீபீணீ ஙிஹ்ஸீக்ஷீமீ போன்ற அறிஞர்களின் கருத் துக்கள் மூலம் விளக்கியது அருமை.<br /><br />உதவி செய் கின்றவர்களுக்கும் உதவியை பெறுகின்ற வர்களுக்கும் அவர் கூறும் கருத்துக்கள் பயனுடையவை மட்டுமல்ல. மனிதப் பண்பை செழுமைப்படுத்து பவையுமாகும்.<br /><br /> - ஞான. அய்யாப்பிள்ளை, மும்பை<br /><br />Read more: http://viduthalai.in/page-2/87196.html#ixzz3CXy1aSt7<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-90285077087589116082014-09-06T20:13:25.279+05:302014-09-06T20:13:25.279+05:30திருக்குறள்
நம் நாட்டினருக்கு என்ன கலை, என்ன குற...திருக்குறள்<br /><br /><br />நம் நாட்டினருக்கு என்ன கலை, என்ன குறிக்கோள், என்ன நாகரிகம் என்று கேட்டால் அதற்கு ஆதாரமாகத் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் ஒன்றைத்தான் எடுத்துக்காட்ட முடியும்.<br />(விடுதலை,3.10.1958)<br /><br />Read more: http://viduthalai.in/page-2/87191.html#ixzz3CXxtSyfA<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-60882052145377048712014-09-06T20:12:51.799+05:302014-09-06T20:12:51.799+05:30ஒரு கொலை நூல்தான் பரிசுக்குத் தகுதியானதா?
ஜப்பான்...ஒரு கொலை நூல்தான் பரிசுக்குத் தகுதியானதா?<br /><br />ஜப்பான் சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டுப் பிரதமருக்குக் கீதையை அளித்து, அதன் மூலம் ஒரு சர்ச்சைக்கு அடியெடுத்துக் கொடுத்துள்ளார்.<br /><br />கீதை - பகவான் கிருஷ்ணனால் அருளப்பட்டது என்று கதைக்கிறார்கள். இந்து மதத்தை அமெரிக்கா வரை கொண்டு சென்ற விவேகானந்தர்கூட ஒரு கேள்வியை எழுப்பியதுண்டு ஒரு யுத்தக்களத்திலே கீதா உபதேசம் நிகழ்த்த முடியுமா?<br /><br />அது இயலக் கூடியதுதானா? கிருஷ்ணன் சொல்லச் சொல்ல அவற்றையெல்லாம் சுருக்கெழுத்து மூலம் எழுதியவர் யார் என்ற கேள்வியோடு மட்டும் அவர் முடிக்கவில்லை; கீதையைப் படிப்பதைவிட கால்பந்து விளையாடுவது நல்லது என்கிற அளவுக்குச்சென்று இருக்கிறார்.<br /><br />உலகத்தில் எங்காவது கேள்விப்பட்டதுண்டா? கடவுள் என்று சொல்லக்கூடிய ஒருவர் யுத்தம் செய் - மனிதர்களைக் கொலை செய்! கொன்று குவி! என்று உத்தரவிட்டதாகக் கேள்விப்பட்டதுண்டா?<br /><br />தன் எதிரே இருக்கும் உற்றார் உறவினர்களோடு போர்தொடுக்க அர்ச்சுனன் தயங்கியபோது, கிருஷ்ணன் என்ன சொல்கிறான்?<br />இந்த உடலில் வாலிபப் பருவமும், யவனப் பருவமும் எவ்வாறு வந்து சேருகின்றனவோ அம் மாதிரியே, ஆத்மாவுக்கு பேச உடலும் வருகிறது. அறிவாளி இதைப் பார்த்து மயங்க மாட்டான்.<br /><br />எந்த ஆத்மாவானது எங்கும் பரவியுள்ளதோ அது அழிவற்றது என்று அறிவாயாக! இவ்வாறு அழிவற்ற இந்த ஆத்மாவுக்கு எவரும் அழிவை ஏற்படுத்த முடியாது; ஓ, பரதவம்சத்தவனே! என்றென்றும் இருப்பதும், அழிவற்றதும், அளவிற்கு அடங்காததுமான ஆத்மாவால் தாங்கப்படுகின்ற இந்த உடல்கள் அழிவுள்ளவை என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன ஆகவே இதனை நன்கறிந்து போர் செய்வாயாக? என்று அர்ச்சுனனுக்கு ஆணையிடுகிறார் அவர்கள் கூறும் பகவான் கிருஷ்ணா!<br /><br />உலகத்திலேயே இவ்வளவுப் பச்சையாகக் கொலையைத் தூண்டுகிற, நியாயப்படுத்துகின்ற ஒருவன்தான் இந்துத்துவாவாதிகள் போற்றுகின்ற பகவான் கிருஷ்ணன், அதைச் சொல்லுவதுதான் கீதை. புரியும்படிச் சொல்ல வேண்டுமானால் கீதை என்பது ஒரு கொலைகார நூலே!<br /><br />காந்தியாரைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சேகூட தனது படுகொலையை நியாயப்படுத்து கிற வகையில் இந்தக் கீதையைத்தான் எடுத்துக் காட்டினான்.<br /><br />தர்மத்தைக் காப்பாற்றுவதற்கு அதர்மத்தையும் செய்யலாம்; அப்படி செய்வதும் தருமமே! என்று கீதை சொல்லுவதை எடுத்துக்காட்டி கொலைக்கு நியாயம் கற்பிக்கும் கொடுமையை என்னென்று சொல்லுவது?<br /><br />இந்தச் கீதையை இந்தக் கொலைகார நூலைத்தான் ஜப்பான் பிரதமருக்கு இந்தியப் பிரதமர் மகிழ்ச்சியோடு பரிசாக அளித்துள்ளார்.<br />ஒரு வகையில் நரேந்திரமோடி கீதையைப் போற்றுவதற்கு வழிகாட்டியாகக் கொள்ளுவதற்கு நியாயம் இருக்கிறது.<br /><br />மோடி முதல் அமைச்சராக இருந்தபோதுதானே சிறுபான்மை மக்கள் ஆயிரக் கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். எனவே மோடி கீதையைப் போற்றுவதில் ஓர் அர்த்தம்கூட இருக்கிறது.<br /><br />ஆனால் ஜப்பான் பிரதமருக்குக் கீதையைப்பற்றி தெரிந்திருக்குமா என்பது கேள்விக் குறியே! அது கொலை நூல் என்று தெரிந்திருந்தால், அந்தக் கணமே இந்தியப் பிரதமரிடம் திருப்பியே கொடுத்திருப்பார்.<br /><br />இது ஒருபுறம் இருக்க, கிருஷ்ணன் என்ற கடவுளே இந்து மதத்தில் கற்பிக்கப்பட்டதே கவுதமப் புத்தர் தோன்றி நாட்டு மக்கள் மத்தியில் வைதிக ஆரியப் பார்ப்பன வருணாசிரமத்தை எதிர்த்து மக்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்திய பிறகுதான்.<br /><br />இதுகுறித்துப் பிரபல வரலாற்று ஆசிரியர் ராம்சரண் சர்மா 11ஆவது வகுப்புக்கான என்.சி.ஆர்.பி. வெளியிட்டுள்ள தொன்மை இந்திய வரலாறு (கிஸீநீவீமீஸீ மிஸீபீவீணீஸீ பிவீஷீக்ஷீஹ்) எனும் நூலை எழுதியவர் அந்த நூலில் தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.<br /><br />கிருஷ்ணன் மகாபாரதத்தில் முக்கியப் பங்கு ஆற்றியதாகக் கூறப்பட்டிருந்தாலும், மதுரா நகரில் கி.மு. 200 முதல் கி.பி. 200 வரை கிடைக்கப் பெறும் சிற்பத் துண்டுகள் கிருஷ்ணன் பற்றிய தகவலைத் தரவில்லை.<br /><br />இதன் காரணமாக இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றின் அடிப்படையில் இதிகாச காலம் எனும் கருத்தைப் பற்றிப் பேசுவதைக் கைவிட வேண்டும் என எழுதப் பட்டுள்ளது.<br /><br />ஒரு பொய்யான கதைப் பாத்திரத்தை உண்டாக்கி, அதையும் கொலையைத் தூண்டும் ஒன்றாகச் சித்தரித்து இருப்பது எல்லாம் அசல் கழிசடைத்தனம் அல்லவா?<br /><br />125 கோடி மக்களின் பிரதமர் இந்த வேலையைச் செய்யலாமா? இந்தியா என்றால் பாம்புகளின் நாடு என்பது போய், பொய்யர்களின் கூடாரம் என்ற புது நாமகரணம் இந்தியப் பிரதமரால் கிடைக்கும் போல் தோன்றுகிறது - இன்னும் 4 ஆண்டு 9 மாதம் எப்படித்தான் கழியுமோ என்று தெரியவில்லை.<br /><br />Read more: http://viduthalai.in/page-2/87192.html#ixzz3CXxhYBeG<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-35585928782829294212014-09-06T20:11:47.897+05:302014-09-06T20:11:47.897+05:30கருப்புச்சட்டை ஏன்?
- தந்தை பெரியார்
இனி நான் இற...கருப்புச்சட்டை ஏன்?<br /><br />- தந்தை பெரியார்<br /><br />இனி நான் இறந்தாலும் ஏனையத் திராவிடத் தோழர்கள் ஏமாந்து விட மாட்டார்கள். எனது வேலையை அப்படியே விட்டுவிடமாட்டார்கள். தொடர்ந்து போராடி, வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுவிட்டது. நமது கொள்கைகள் ஒரு அளவுக்குப் பொது மக்களின் செல்வாக்கைப் பெற்றுவிட்டது. இன்னும் கொஞ்ச காலத்திற்குள் நம் இஷ்டம் போல் நடக்காத மந்திரிகளுக்கு மந்திரிசபை நாற்காலி இடம் கொடுக்காது, நம் இஷ்டப்படி நடக்காத அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடைக்காது.<br /><br />நம் இஷ்டப்படி நடக்காத சட்டசபை மெம்பர்களுக்கு சட்டசபை இடங்கொடுக்காது என்கிற நிலை ஏற்பட்டுவிடும். இந்நிலை வெகு சீக்கிரமே ஏற்பட வேண்டுமானால் நாம் எல்லோரும் கருப்புச் சட்டைக்காரர்களாக வேண்டும். நீங்கள் என்ன சட்டைக்காரர்களோ என்று நம்மைச் சிலர் கேட்கக் கூடும். நம் நாட்டில் சட்டைக்காரர்கள் என்றொரு கூட்டம் இருந்து வருவது உண்மைதான். அவர்கள் பல ஜாதிக்குப் பிறந்தவர்கள், ஆகவே வெறும் சட்டைக்காரர்கள் என்று மட்டும் அழைக்கப்பட்டு வருகிறார்கள்.<br /><br />நாம் அப்படிக்கல்ல, நாம் ஒரே ஜாதிக்குப் பிறந்தவர்கள். ஆகவே கருப்புச்சட்டைக்காரர்கள் என்று நம்மை அழைத்துக் கொள்கிறோம். கருப்புச் சட்டை ஒரு படையமைப்பின் சின்னமல்ல. அது இழிவின் அறிகுறி, இழிவிற்காக அவமானப்படுகிறோம், துக்கப்படுகிறோம், அதைப் போக்கிக் கொள்ள முடிவு செய்துவிட்டோம் என்பதன் அறிகுறி. பாடுபட்டுப் படி அளந்துவிட்டுப் பட்டினி கிடக்கும் நானா பஞ்சமன்? என் பாட்டின் பலனால் நோகாமல் உண்டு வாழும் நீயா பார்ப்பனன் இது நியாயமா?<br /><br />கேள்விகளின் அறிகுறி கருப்புச்சட்டை<br /><br />பாடுபடும் எங்களுக்கெல்லாம் இழிவான வேலைகள், பாடுபடாத உங்களுக்கெல்லாம் மந்திரி வேலையா? இது நியாயமா? பாடுபடாத நீங்கள் எல்லாம் அய்.சி.எஸ். படிப்பதா? கலெக்டர் ஆவதா? இது நியாயமா? நாங்கள் எவ்வளவுதான் பாடுபட்டாலும், எவ்வளவுதான் உங்களுக்கு வாரிக் கொடுத்தாலும், எவ்வளவுதான் சுத்தமாய் இருந்தாலும், எவ்வளவுதான் ஒழுக்கமாய் நடந்து கொண்டாலும் நாங்கள் சூத்திரர்கள், பஞ்சமர்கள்?<br /><br />நீங்கள் எவ்வளவுதான் பாடுபடாத சோம்பேறி வாழ்வு நடத்தினாலும், எவ்வளவோ எங்களை மோசம் செய்து எங்களிடம் பிச்சை எடுத்துப் பிழைத்தாலும், நீங்கள் எவ்வளவுதான் அழுக்குப் பிடித்து, சொறி பிடித்துக் குஷ்டரோகியாகக் கிடந்தாலும், எவ்வளவுதான் ஒழுக்க ஈனர்களாக திருடர்களாக, கொலைக்காரர்களாக, கொள்ளைக்காரர்களாக, தூது செல்பவர்களாக இருந்தாலும் நீங்கள் உயர் ஜாதிப் பார்ப்பனர்களா? இது நியாயமா? என்ற கேள்விகளின் அறிகுறிதான் இந்தக் கருப்புச் சட்டை?<br /><br />தோழர்களே! நீங்கள் விரும்பி அணியுங்கள் இதை! அடுத்த மாநாட்டிற்குள்ளாவது நம் சூத்திரப்பட்டம் ஒழிந்து போகும். அடுத்த மாநாட்டிற்குள் இந்த இழி ஜாதிப் பட்டம் கட்டாயம் ஒழிக்கப்பட்டேயாக வேண்டும். அதற்காக ஒரு 2000, 3000 பேர்களாவது பார்ப்பனர்களின் பலி பீடத்தில் தம் உயிரை இழக்கத் தயாராக இருக்க வேண்டும்.<br /><br />நானா சூத்திரன்? என் தாய்மார்களா சூத்திரச்சிகள்? இனி இந்நிலை ஒரு நிமிட நேரமேனும் இருக்க இடங்கொடேன்? இதோ என் உயிரை இதற்காக அர்ப்பணிக்கவும் துணிந்து விட்டேன் என்கிற உணர்ச்சி ஒவ்வொரு திராவிடனுக்கும் ஏற்படவேண்டும்.<br /><br />இழிஜாதிபட்டத்தை ஒழிப்பதென்பது சுலபமான காரியமல்ல என்றாலும் உலக அறிவு முன்னேற்றம், ஜாதி உயர்வு தாழ்வுகளே இனி இருக்க கூடாது. ஆகவே உறுதி பெற்றெழுங்கள், செத்தாலும் சரி இழிவு நீக்கம்தான் முக்கியம் என்று. சாகாமலே கூட வெற்றி பெற்று விடலாம்.<br /><br />ஆதாரம்: குடிஅரசு 5.6.1948<br /><br />Read more: http://viduthalai.in/page-1/87235.html#ixzz3CXxTLEFb<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-86677974283645980122014-09-06T20:11:01.898+05:302014-09-06T20:11:01.898+05:30தண்டனைக் காலத்தில் பாதிக்குமேல் சிறையில் அனுபவித்த...தண்டனைக் காலத்தில் பாதிக்குமேல் சிறையில் அனுபவித்த விசாரணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும்<br /><br /><br />உச்சநீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு மனிதநேயம் மிக்க வரலாறு படைக்கும் தீர்ப்பாகும்<br /><br />தண்டனை காலத்தில் பாதிக்குமேல் சிறையில் தண்டனை காலத்தில் பாதிக்குமேல் சிறையில் அனுபவித்த விசாரணை கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்றும், 2 மாதங்களுக்குள் இந்த பணியை முடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மனிதநேயம் மிக்க வரலாறு படைக்கும் தீர்ப்பை வரவேற்றும், உச்சநீதிமன்றத்தைப் பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:<br /><br />நேற்று (5.9.2014) உச்சநீதிமன்றம் அளித்துள்ள ஒரு தீர்ப்பு மனிதநேயம் மிக்க, வரலாறு படைக்கும் ஒரு தீர்ப்பாகும். இதற்காக உச்சநீதிமன்றத்தைப் பாராட்டுகிறோம்.<br /><br />நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் உள்ள முழு விசாரணை - அல்லது விசாரணையே நடைபெறாது ரிமாண்டை - தற்காலிகக் காவலை - நீட்டித்துக் கொண்டே பல ஆண்டுகள் சிறையில் கழிக்கும் இள வயதுடைய வர்கள் (பெரிதும்) எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் அதிகமாகும் என்பது நம் நாட்டு ஆட்சியாளர்களுக்கோ, நீதிபரிபாலனம் நடத்தும் அமைப்புகளுக்கோ பெருமை தரும் ஒன்றாக ஆகாது.<br /><br />அக்கைதிகள் - விசாரணைக் கைதிகள் என்று அழைக்கப்படும்(Undertrial Prisoners) பலரும், குற்றங்கள் ஏதும் செய்யாமல் சிக்கிக் கொண்டவர்கள் அல்லது சிக்க வைக்கப்பட்ட பகடைக் காய்களே ஆவர்.<br /><br />சிறைச்சாலைகளுக்குச் சென்று நிலவரத்தை அறிந்த வர்களும் அதனை ஆய்வு செய்தவர்களும்தான் இது ஒரு முக்கிய சமூகப் பிரச்சினை என்பதைப் புரிந்து கொண்டு, இதற்கு ஒரு நல்ல தீர்வு காணுவது அவசியம் என்று கருத முடியும்.<br /><br />விசாரணையின்றி இருக்கக் கூடியவர்கள் பலரையும் சந்தேகக்கேஸ் என்ற பெயரிலும், வீட்டை விட்டு ஓடி வருபவர்கள், புதிதாகத் திருட்டு போன்ற குற்றங்களிலும் அனுபவபட்டவர்களின் ஆயுதங்களாகப் பயன்படுத்தப் பட்ட அப்பாவிகள், இவர்கள் திருந்தி வாழ உதவிட முடியாத அளவுக்கு சிறைக்குள்ளே நடக்கும் பல்வேறு நடத்தைகளும், ஒழுங்கீனங்களும் அவர்களை ஆக்கி விடுகின்றன.<br /><br />ஆயுள் தண்டனைக் கைதிகளாக உள்ளவர்கள்தான் சிறைக்குள் மூத்த முன்னோடிகளும், செல்வாக்கு உள்ளவர்களும் ஆவார்கள். அவர்கள் இந்த சிறு இளைஞர்களை உள்ளே வந்தவுடன் மிரட்டி, தங்கள் எடுபிடிகளாக்கிக் கொள்வதோடு அவர்களைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஒழுக்கத் தவறுகளும்(Sodamise) சர்வ சாதாரணமாக்கும் வெட்ககரமான நிலைதான்! சிறைக்குள்ளே பணப் புழக்கம், போதை (கஞ்சா) போன்றவை உள்ளதால், இந்த இளவயது விசாரணைக் கைதிகளை அத்தீய வழக்கத்திற்கு அடிமையாகும் சூழ்நிலை திட்டமிட்டே உருவாக்கப்படுகிறது.<br /><br />விடுதலை ஆகிச் செல்லவிருக்கும் இளைஞர்கள் பலர், நான் திரும்பி வந்து விடுவேனுங்க, இங்கே கிடைக்கிற வாழ்வும், வாய்ப்பும் எங்களுக்கு வெளியே கிட்டுமா என்பது சந்தேகம் என்றுகூட, வெளிப்படையாக (மிசா காலத்தில் எங்களுக்கு பணி செய்த இந்த விசாரணைக் கைதிகள், அல்லது குறைந்த தண்டனை பெற்றவர்கள்), கூறியதை நேரில் கேட்டு அதிர்ந்து போனோம்.<br /><br />இவர்களை விடுதலை செய்தால் சிறையில் கூட்டமும், குறையும்; சிறை நிர்வாகமும் செம்மையான அளவில் நடக்க வாய்ப்பு ஏற்படும்.<br />இவர்களை வெளியே அனுப்பினால் மட்டும் போதாது. இது ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்சினையானபடியால், அத்தகையவர்களுக்குரிய தொழில் கற்றுத் தருதல், அல்லது வேலை வாய்ப்புத் தந்து, வெளியே வந்த அவர்கள் கண்ணியமான முறையில் வாழுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தரும் திட்டங்களைப் பற்றியும் ஆராய்ந்து செயல்படுத்த முன் வர வேண்டும்.<br /><br />தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஏராளம் உள்ளன. பிரதமர் மோடி அவர்கள் ‘Corporate Social Responsibility’ பெரிய கம்பெனிகள் சமூகப் பொறுப்பாளர்களாக மாறிடும் திட்டம் என்று கூறுகிறாரே, அதில்கூட இதனையும் இணைத்து அத்தகைய இளைஞர்களை மனிதம் பூத்துக் குலுங்கும் நல்ல மனிதர்களாகவும் மாற்றிட யோசிக்க வேண்டும்.<br /><br /> <br /><br />சென்னை <br />6.9.2014<br /><br />கி.வீரமணி<br />தலைவர், திராவிடர் கழகம்<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/87186.html#ixzz3CXxHzuVg<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-85201898632407332212014-09-06T20:10:19.549+05:302014-09-06T20:10:19.549+05:30இன்றைய ஆன்மிகம்?
ஆயுள்
நம் ஆயுளை நிர்ண யிப்பது ந...இன்றைய ஆன்மிகம்?<br /><br /><br />ஆயுள்<br />நம் ஆயுளை நிர்ண யிப்பது நாம் அல்ல - பிறக்கும் பொழுதே நமக்கு மேலே இருக்கக் கூடியவன் எழுதி வைத்த ஒன்று அது - அதனை மாற்ற யாராலும் முடியாது - முடியவே முடியாதாம்.<br /><br />அப்படியென்றால் 50 ஆண்டுகளுக்குமுன் நம் மக்களின் சராசரி வயதை விட இப்பொழுது மிகவும் உயர்ந்துள்ளதே! இது ஆண்டவன் எழுதி வைத்ததாலா அறிவியல் - மருத்துவ சாதனையாலா?<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/87171.html#ixzz3CXx6HxiZ<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-69334895227512375802014-09-05T19:42:14.250+05:302014-09-05T19:42:14.250+05:30
பக்குவமடையாதவன்
அறிவுக்கும், அனுபவத்திற்கும் ஒத...<br />பக்குவமடையாதவன்<br /><br /><br />அறிவுக்கும், அனுபவத்திற்கும் ஒத்து வராததைப் பயத்தால் நம்புகிறவன் பக்குவமடைந்த மனிதனாகான்.<br /><br />- (விடுதலை, 3.4.1950)<br /><br />Read more: http://viduthalai.in/page1/87074.html#ixzz3CRzX91Xm<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-84726190935712073272014-09-05T19:41:34.120+05:302014-09-05T19:41:34.120+05:30
டெசோவின் இன்றியமையாமை!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்...<br />டெசோவின் இன்றியமையாமை!<br /><br />தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியைச் சந்தித்தனர். அங்கு என்ன பேசப்பட்டது? பிரதமர் எந்த உறுதியைக் கொடுத்தார்? என்பது போன்ற தகவல்கள் உருப்படியாக ஏதும் கசியவில்லை.<br /><br />ஆனால், இலங்கையின் பிரபல இதழான வீரகேசரி சில முக்கியப் பிழிவுகளை வெளிச்சத் திரையில் ஓட விட்டு இருக்கிறது.<br /><br />இலங்கையில் நிகழும் அரசியல் மாற்றங்களைக் கண்காணிக்க தனியார் ஆணையம் ஒன்றை இந்தியா நியமிக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக இருந்தது.<br /><br />ஆனால், பிரதமர் நரேந்திர மோடி ஒரே வரியில் இலங்கையின் உள்நாட்டு அரசியலில் இந்தியா தலையிட முடியாது; அரசியல் தொடர்பான விவரங்கள் அனைத்தும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் தலைமையில் உள்ள இலங்கை அரசு கவனித்துக் கொள்ளும்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசுடன் இனப் பிரச்சினை தொடர்பாக பேச்சு வார்த்தையை ஆரம்பிக்க வேண்டும்.<br /><br />மேலும் நாடாளுமன்ற விவாதங்களில் கலந்து கொண்டு இனப் பிரச்சினைபற்றி எடுத்துரைத்து, அவற்றிற்கான தீர்வுகளை அங்குள்ள அரசிடமிருந்தே பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி இதோபதேசம் செய்துள்ளார்; இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இலங்கை அரசு பற்றி சரியான புரிதல் இல்லாமல் இந்தியப் பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்துங்கள் என்று சொல்லுகிறார்.<br /><br />இலங்கை அரசு நாங்கள் கூறுவதை செவிமடுத்துச் செயல்பட்டிருந்தால், நாங்கள் ஏன் இந்திய அரசை நாடப் போகிறோம்? என்ற நியாயமான வினா மூலம் தங்கள் ஆதங்கத்தை அதிருப்தியை நாகரிகமாக வெளிப்படுத்தியுள்ளார்.<br /><br />இந்திய ஏடுகள் வெளிப்படுத்தாத தகவல்களை இலங்கையின் வீரகேசரி வெளிப்படுத்தி விட்டது.<br /><br />இலங்கை அதிபர் ராஜபக்சேபற்றி தமிழ்நாட்டுத் தலைவர்கள் குறை சொன்னால், அதற்குள் புகுந்து உள்நோக்கம் கற்பித்து, பிரச்சினையை நீர்த்துப் போக வைக்கும் முயற்சியில் இறங்கும் இந்திய நாட்டு ஊடகங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டு மக்களின் பிரதிநிதி என்னும் முறையிலும், இலங்கையிலிருந்து வெளிவரும் ஏடு என்ற தன்மையிலும் வெளிப்படுத்தப் பட்டுள்ள இந்த நுட்பமான தகவல்களுக்கும், கருத் துக்கும் தங்கள் வசம் எந்த நியாயங்களை வைத் துள்ளனர்?<br /><br />அய்.நா. மன்றத்தால் அதிகாரப் பூர்வமாக அறி விக்கப்பட்ட விசாரணைக் குழுவையே அனுமதிக்க மறுக்கும் ராஜபக்சேயிடம் எல்லா வகைகளிலும் வீழ்த்தப்பட்டு, நொந்து நூலாகிக் கிடக்கும் ஈழத் தமிழர் தம் பிரநிதிதிகளின் குரல் எடுபடுமா? இந்தப் பொது தகவல் - புரிதல்கூட இல்லாமலா நம் நாட்டு தலைமைப் பீட அமைச்சர்கள் இருக்கிறார்கள்?<br /><br />தேடி வந்தவர்கள் எடுத்து வைக்கும் குறை பாடுகளைக் கேட்டுக் கொண்டதற்காக, எதையாவது சொல்ல வேண்டும் என்ற சம்பிரதாய வார்த்தைகளை இந்தியப் பிரதமர் சொல்லியிருக்கிறார் என்பது தான் இதன் மூலம் தெரிய வருகிறது.<br /><br />ராஜபக்சே அளவுக்குப் போவானேன்? அய்.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக் குழு இந்தியாவில் வந்து விசாரணை நடத்துவதற்கே விசா மறுக்கும் இந்திய அரசை - அதன் பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி என்ன நினைப்பது?<br /><br />ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் இந்தியா ஏதாவது உருப்படியான முயற்சிகளை மேற்கொண்டால்தான் ஏதாவது முன்னேற்றம் கிடைக்க வாய்ப்புண்டு என்று ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல; உலகத் தமிழர்களும் சரி, உலகெங்கும் உள்ள மனித உரிமை அலுவலர்களும் சரி எதிர்பார்க்கும் நிலையில் ராஜபக்சேவுக்கு அப்பனாக இங்குள்ள ஆட்சியாளர்கள் நடந்து கொள்கிறோர்களே! இது நியாயமா? சரியா?<br /><br />இத்தகையதோர் கால கட்டத்தில் கலைஞர் அவர்களின் தலைமையில் அமைந்த டெசோ உருப்படியான திசையில் காலத்தின் தேவையான - அவசியமான நகர்வுகளை மேற்கொண்டுள்ளது. காலத்தாற் மேற்கொள்ளப்பட்ட டெசோவின் இந்தச் செயற்பாடுகள் காலத்தால் என்றென்றும் பேசப்படும் என்பதில் அய்யமில்லை.<br /><br />ஈழத் தமிழர்கள் பிரச்சினையைத் தங்கள் அரசிய லுக்குக் கிடைத்த மூலதனமாகக் கொண்டு முழக்க மிட்டவர்கள், இந்த முக்கியமான கால கட்டத்தில் வெளியில் தலை காட்ட முடியாத ஒரு இறுக்கமான நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்களோ என்று நினைக்க நிறைய நியாயம் உண்டு<br /><br />தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அடிக்கடி வலியுறுத்துவாரே - நம்மைப் பிளவுப்படுத்துவதை தூர வைத்து நம்மை இணைப்பவற்றைப் பற்றிக் கொண்டு ஓரணியாய்த் திரள்வோம் என்று உன்னதமான நல்வழிகாட்டுதலை தமிழகத் தலைவர்கள் சற்று யோசிக்கக் கூடாதா?<br /><br />இதில் கொஞ்சம் மானப் பிரச்சினை தட்டுப் படுமேயானால் பொதுத் தொண்டில் மானம் பாராதே என்ற தத்துவத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் உரையை ஒருமுறை அசை போட்டுப் பார்க்கலாமே!<br /><br />Read more: http://viduthalai.in/page1/87075.html#ixzz3CRzN1ik3<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-42962824971708428922014-09-05T19:41:11.365+05:302014-09-05T19:41:11.365+05:30இந்த செயல் இலங்கை அரசுக்கு உதவியாக இருப்பதையே காட்...இந்த செயல் இலங்கை அரசுக்கு உதவியாக இருப்பதையே காட்டுகிறது. அதனால் ஈழப்பிரச் சினையில் காங்கிரஸ் அரசுக்கும் பா.ஜ.க. அரசுக்கும் பெரிய வித்தியாசமெல்லாம் இல்லை. இந்தியாவில் அரசுகள் மாறியி ருந்தாலும் வெளியுறவு கொள்கையில் மாற்றம் ஏதுமில்லை. ஆக, இரண்டு அரசுகளின் அணுகு முறையும் இலங்கைக்கு அணுசரணை யாக நடந்துகொள்வதாகத்தான் இருக் கிறது. டெசோ அமைப்பு பல சமயங்களில் கூடி விவாதித்து இப்போது போலவே பல தீர்மானங்களை அழுத்தமாக நிறை வேற்றியிருக்கிறது. ஆனால், அதற் கெல்லாம் எந்த பலனும் கிடைத்த மாதிரி தெரியவில்லையே?<br /><br />ஜனநாயக நாட்டில் அழுத்தமான போராட்டங்களும் வலிமையான வலி யுறுத்தல்களும் தான் ஆட்சி அதிகாரத் தில் இருப்பவர்களை நடவடிக்கை எடுக்க வைக்கும். ஈழத்தமிழர்களின் பிரச்சினை களுக்கு இந்திய அரசின் மூலமாகத்தான் நடவடிக்கை எடுக்க வைக்க முடியும். அந்த வகையில் இந்திய அரசின் ஒரு அங்கமாக இருக்கும் தமிழகம், தன் தொப்புள் கொடி உறவான ஈழத்தமிழர் களைப் பாதுகாக்கவும் ஈழத்தமிழினச் சிக்கல்களுக்கு அரசியல் தீர்வு காணவும் தனது உணர்வுகளை இந்திய அரசுக்கு வெளிப்படுத்த வேண்டிய கடப்பாடு இருக்கிறது. அதனைத்தான் டெசோ அமைப்பு தொடர்ச்சியாக செய்து வருகிறது.<br /><br />டெசோவின் தொடர் போராட் டங்களால் தான் இந்திய அரசு இந்தளவுக் காவது ஈழத்தமிழர் பிரச்சினையில் அக்கறையோடு நடந்துகொள்கிறது இந்திய அரசு. இல்லையெனில், இலங் கைக்கான தனது ஆதரவை இன்னும் அதிகரித்திருக்கும். அதனால் இடை யறாதப் போராட்டங்களால்தான் நமது இலக்கை வென்றெடுக்க முடியுமென்ப தால் போராட்டங்களை நடத்தி வருகிறது டெசொ. இதற்கு உடனடி பலன் இப்போது தெரியாதது போல ஒரு தோற்றம் இருப் பினும் இதன் நிரந்தர பலன் எதிர் காலத்தில் எல்லோரின் கண்களுக்கும் புலப்படும்.<br />தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள், ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு என்பதை முன்வைக்கும் நிலையில், பொது வாக்கெடுப்பின் மூலம் தனித்தமிழீழம்தான் நிரந்தர அரசியல் தீர்வுக்கு வழிவகுக்கும் என்பதாக டெசோவின் தீர்மானம் இருக்கிறதே?<br /><br />தனித் தமிழ்நாட்டை வலியுறுத்திய அறிஞர் அண்ணா, பிரிவினையை கை விட்டபோது, "பிரிவினையை கைவிடு கிறேன். ஆனால், அதற்கான காரணங்கள் அப்படியேத்தான் இருக்கின்றன' என்றார். அதேபோலத்தா'ன் தமிழீழத்திற்கான காரணங்களும் அப்படியே இருக்கிறது. அது எப்போதும் நீர்த்துப் போகாது. ராஜபக்சேவின் சர்வாதிகார நாட்டில் இருக்கும் தமிழ் எம்பி.க்கள், "ஒன்று பட்ட இலங்கை' என்றுதான் சொல்ல முடியும்.<br /><br />அதற்கு மாறாகச் சொன்னால் தமிழர்கள் இலங்கையில் உயிர் வாழ முடியாது. அதனால்தான் நிரந்தர அரசியல் தீர்வுக்கான உண்மையான காரணங்களை அவர்களால் வெளிப் படுத்த முடியவில்லை. ஆனால், அவர்களுக்கும் தெரியும் "தனித் தமிழீழம் மட்டுமே நிரந்தர தீர்வு' என்பது. ஆக, அவர்களால் சொல்ல முடியாததை டெசோ சொல்கிறது. தமிழீழம் நிச்சயம் அமையும். அது காலத்தின் கட்டாயம்.<br /><br />இலங்கையை சர்வதேச நாடுகள் வெறித்தனமாக ஆதரிக்கும் நிலையில், இனப்படுகொலை செய்த ராஜபக்சே அரசுக்கு தண்டனை கிடைக்கும் என்கிற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?<br /><br />அமெரிக்காவில் செப்டம்பர் 11இ-ல் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட பயங்கரவாதத்தை அடுத்து உலகெங் கும் நடந்து வந்த விடுதலை போராட் டங்களையும் பயங்கரவாதமாக பார்க்கும் நிலையை சர்வதேச நாடுகள் வரித்துக்கொண்டன. அதில் விடு தலைப்புலிகளின் விடுதலைப் போராட் டமும் சிக்கிக்கொண்டது.<br /><br />அதனா லேயே ராஜபக்சேவின் நரித்தனத்திற்கு அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவுக் கரம் நீட்ட, விரும்பத்தகாத பல சம்பவங்கள் நடந்தன. ஆனால், இப்போது அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகள் அனைத்தும் ராஜபக்சேவின் இனப்படுகொலையை புரிந்து தெளிவு பெற்று வருகின்றன. இலங்கைக்கு எதிரான நடவடிக்கை களையும் முன்னெடுக்கின்றன. அத னால், போர்க்குற்றங்களுக்கான தண் டனையிலிருந்து ராஜபக்சே தப்ப முடியாது.<br /><br />சந்திப்பு : இரா.இளையசெல்வன்<br />படங்கள் : அசோக்<br />நன்றி: நக்கீரன் 2014 செப் 03-05<br /><br />Read more: http://viduthalai.in/page1/87079.html#ixzz3CRzBuLLEதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-19614349514486654262014-09-05T19:41:04.117+05:302014-09-05T19:41:04.117+05:30ராஜபக்சே தப்ப முடியாது - ஓங்கிச் சொல்லும் ஆசிரியர்...ராஜபக்சே தப்ப முடியாது - ஓங்கிச் சொல்லும் ஆசிரியர் கி.வீரமணி!<br /><br /><br />ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வு, 13-ஆவது சட்டதிருத்தம் அமல் படுத்துதல் உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஆகியோ ரிடம் விரிவாக விவாதித்திருக்கிறார்கள் இலங்கை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள். அவர்களிடம் சில உறுதி மொழிகளைத் தந்திருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு. இந்த சூழலில், கலைஞர் தலைமையில் டெசோ அமைப்பு கூடி, மத்திய அரசை வலி யுறுத்தி 3 தீர் மானங்களையும் அய்.நா. மன்றத்தை வலியுறுத்தி ஒரு தீர்மா னத்தையும் நிறைவேற்றியிருக்கிறது.<br /><br />இந்த தீர்மானங்களை முன்னிறுத்தி, மக்கள் பெரும் திரள் போராட்டத்தை செப்டம்பர் 3-ஆம் தேதி தமிழக முழுவதும் நடத்துகிறது டெசோ. இந்த நிலையில், டெசோ உறுப்பினர்களில் ஒருவரான தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணியை பெரியார் திடலில் சந்தித்தோம். ஈழப்பிரச்சினையில் முந்தைய காங்கிரஸ் அரசின் அணுகு முறையையும் தற்போதைய பா.ஜ.க. அரசின் அணுகுமுறையையும் எப்படிப் பார்க்கிறீர்கள்? இலங்கை தமிழ் எம்.பி.க்களிடம், "ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு இந்தியா உறுதுணை யாக இருக்கும்' என பிரதமர் மோடி கூறியிருப்பதாக வரும் செய்திகள் சற்று ஆறுதலை தருகிறது.<br /><br />ஆனால், வடக்கு மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட அமைப்புக்கும் முதல்வர் விக் னேஸ்வரனுக்கும் எந்த ஒரு அதிகாரத் தையும் தராமல் அனைத்து அதிகாரத்தையும் இலங்கை அரசே வைத்துக் கொண்டிருக்கிறது. சிறிய மரியாதைகூட மாகாண கவுன் சிலுக்கு தரப்படவில்லை. இது குறித்தெல்லாம் விவாதிக்காமல் மவுனமாக இருக்கிறது மோடி அரசு. எல்லாவற்றிற்கும் மேலாக, இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணையை இலங்கையின் நெருங்கிய நாடு களிலிருந்து தொடங்க அய்.நா. குழு முடிவு செய்து அதனை இந்தியாவிலிருந்து தொடங்க நினைத்த மாத்திரத்தில் அக்குழுவிற்கு விசா கொடுக்கவில்லை இந்திய அரசு.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-83194719637291958922014-09-05T19:39:39.012+05:302014-09-05T19:39:39.012+05:30சித்திரவதைகளை ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவா...சித்திரவதைகளை ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவானாலும், அவைகளை யெல்லாம் சாதாரணமாக மதித்து தமிழன் வாழ வேண்டும், அவனை வாழ வைக்க வேண்டும், பக்கத்து தீவிலே உள்ள தமிழனை வாழ வைக்க முடியாமல், இங்கே உள்ள தமிழன் வாழ்ந்தால் என்ன, வாழா விட்டால் என்ன என்கின்ற அந்தச் சூளுரையை ஏற்க வேண்டுமென்பதற்காகத் தான் இன்றையதினம் இங்கு மாத்திரமல்ல, தமிழகத்திலே இன்றைக்கு மாத்திர மல்ல,<br /><br />தொடர்ந்து இது போன்ற அணி வகுப்புகள் நடைபெறும், நடைபெற வேண்டும், அப்படி நடை பெற்றால் தான் அது கேளாக் காதினருடைய காது களைத் திறக்கும் என்பதற்காகத் தான் நாம் இன்றைய தினம் இந்த முழக்கத்தை தமிழகத்தின் தலைநகராம் சென்னையிலே நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த முழக்கம் கேட்டு ராஜபக்ஷேயின் செவிப்பறைகள் கிழியட்டும் என்பதல்ல; ராஜபக்ஷேவை நாம் அமைதியான முறையிலே தான், அறவழியிலே தான் கேட்கிறோம்.<br /><br />ராஜபக்சே வழி வன்முறை வழி - படுகொலை வழி<br /><br />அவர் வழியிலே அல்ல. ராஜபக்சேயின் வழி வன்முறை வழி. பலாத்கார வழி. படு கொலை வழி. தமிழர்களுடைய பிணங்களைக் காணுகின்ற வழி. அந்த வழியை நாம் மேற்கொள்ளாமல் அறவழியில், அண்ணா வழியில், அய்யா வழியில், தமிழர்களுடைய நெறிப்படி ஏற்றுக் கொண்ட அந்த வழியில் சந்திக்கின்றோம்.<br /><br />இந்தச் சந்திப்பில் நீங்கள் இந்தக் கொளுத்துகின்ற வெயிலில் கூட, எங்கள் பக்கம் என்றைக்கும் இருப்போம் என்பதைக் காட்டுகின்ற வகையில் நீங்கள் உங்களுடைய உணர்வை வெளிப் படுத்தியிருக்கின்ற காரணத்தால், அச்சம் இல்லை, அச்சம் இல்லை, அச்சம் என்பது இல்லையே, உச்சிமீது வானிடிந்து வீழ்கின்ற போதிலும், அச்சம் என்பது இல்லையே என்ற அந்தப் பாரதியின் பாடலுக்கு எடுத்துக் காட்டாக நாம் நிற்போம்.<br /><br />நின்று வென்றிடு வோம். இன்றைக்கு நாம் முழு வெற்றியைப் பெற முடியாவிட்டாலுங்கூட, வெற்றிக்கான அடையாளங் கள் தெரியத் தொடங்கியிருக்கின்றன. அந்த வெற்றிக் கான அடையாளங்களை, நம்பிக்கை நட்சத்திரமாகக் கொண்டு இந்த டெசோ அமைப்பின் சார்பில் எடுக்கப் பட்டு வரும் முயற்சிகளுக்கெல்லாம் தமிழர்களுடைய ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்ற நம்பிக்கையோடு உங்களைச் சந்தித்த இந்த அருமையான நிகழ்ச்சியிலே நானும் நம்பிக்கை பெற்று,<br /><br />உங்களையும் நம்பிக்கை பெறுங்கள் என்று கேட்டுக் கொண்டு, அனைவரும் சேர்ந்து ஒத்துழைத்தால், அனைவரும் சேர்ந்து போராடினால் நாம் அடையவிருக்கின்ற சுதந்திரத்தை - இந்தியாவிற்கு மாத்திர மல்ல; இந்தியாவுக்கு அருகே உள்ள ஈழத்திலே வாழ்கின்ற தமிழனுக்கு உண்மை யான சுதந்திரத்தை, சுயமரியாதை வாழ்வைப் பெறுவ தற்கு நாம் நிச்சயமாக நம்முடைய போராட்டத்திலே வெல்வோம், வெல்வோம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.<br /><br />Read more: http://viduthalai.in/page1/87043.html#ixzz3CRymb1nUதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-51726769232623228932014-09-05T19:39:33.060+05:302014-09-05T19:39:33.060+05:30விடிவு காலமே இல்லையா?
இவற்றை விட அதிகமான செய்திகள...விடிவு காலமே இல்லையா?<br /><br />இவற்றை விட அதிகமான செய்திகளை இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லப் போவ தில்லை, சொல்லவும் தேவையில்லை. ஏனென்றால் இந்தப் பிரச்சினை குறித்து இன்று நேற்றல்ல;<br /><br />பல ஆண்டுகாலமாக திராவிட இயக்கத்தின் சார்பாக உங்களோடு தொடர்பு கொண்ட போதெல்லாம் விளக்கங்களைத் தந்திருக் கிறோம். நம்முடைய தமிழ் இனத்திலே ஒரு பகுதி இலங்கையிலே வாழ்கின்ற பகுதியிலே உள்ளவர்கள் எந்த அளவுக்கு இன்றைய தினம் அடிமைகளாய், தொழும்பர்களாய் வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது, விடிவு காலமே தெரியாதா, தமிழனாகப் பிறந்தால், அதுவும் இலங்கையிலே பிறந்தால், இலங்கைத் தமிழன் என்ற நிலையிலே வாழ வேண்டிய அளவுக்கு ஒரு நிலை ஏற்பட்டால், அவன் பொட்டுப்பூச்சிகளாய், புன்மைத்தேரைகளாய் வாழ வேண்டுமா என்ற அந்தக் கேள்விக்கு எப்பொழுது தான் நாம் விடை காணப் போகிறோம் என்று விட்ட பெரு மூச்சினுடைய அடையாளம் தான் இன்று நடைபெறுகின்ற இந்த அணிவகுப்பு.<br /><br />அணிவகுப்பு என்பதால், நாம் படை கொண்டு இலங்கைக்குச் செல்லப் போகிறோம் என்பதல்ல. ஆனால் படை கொண்டு காட்டுகின்ற வல்ல மையை விட அதிக வல்லமை நம்முடைய இயக்கங்க ளுக்கு உண்டு. நம்முடைய பேச்சுக்கு உண்டு. நம்முடைய செயலுக்கு உண்டு. நாம் பெரியார் வழியில், பேரறிஞர் அண்ணா வழியில், தமிழகத்திலே இருந்த தலைவர் கள் வழியில் இலங்கைத் தமிழனைக் காப்பாற்ற வேண்டும் என்ற அந்த முடிவை நிறைவேற்றுகின்ற வகையில் தொடர்ந்து போராட வேண்டும்.<br /><br />நமது அணிவகுப்பு தொடரும்!<br /><br />ஒரு போராட்டத்திலே தான் மக்கள் திரள் கிளர்ந்தெழுந்தால் தான் நாம் கோரியது கிடைக்கும். இன்றைக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்ற நம்முடைய இனம், அது இந்தியாவிற்கு மிக அருகில் அடிமைப்பட்டுக் கிடக்கின்ற அந்த இனம், சிலிர்த்தெழ தமிழகத்திலிருந்து எழுந்த இந்த முழக்கமெல்லாம் சிங்கள வெறியர் களுடைய காதுகளிலே விழுகிறதோ இல்லையோ, தமிழ் ஆர்வலர்களுடைய காது களிலேயாவது விழுந்தால், அவர்களுடைய ஒற்றுமை, அவர்களுடைய சக்தி, அவர்களுடைய வல்லமை நம்மை வழி நடத்தும் என்ற அந்த அளவிலே தான் நாம் தொடர்ந்து என்ன தான் அடக்குமுறைகளுக்கு ஆளானாலும்,<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-24465542044765468022014-09-05T19:39:22.084+05:302014-09-05T19:39:22.084+05:30டெசோவுக்கு ஆதரவினைத் தாரீர்! தாரீர்!! ஈழத் தமிழர்க...டெசோவுக்கு ஆதரவினைத் தாரீர்! தாரீர்!! ஈழத் தமிழர்களின் உண்மையான சுதந்திரப் போரில் நாம் உறுதியாக வெல்வோம்! வெல்வோம்!!<br /><br /><br />பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் முத்தமிழ் அறிஞர் சூளுரை<br /><br />சென்னை, செப். 3- ஈழத் தமிழர் உண்மையான சுதந்திரம், சுயமரியாதை பெறுவதற்கு நாம் போராடுவோம் - அதில் வெற்றி பெறுவோம் - டெசோவிற்கு ஆதரவு தாருங்கள் என்றார் டெசோ தலைவர் கலைஞர் அவர்கள்.<br /><br />நடைபெறுகின்ற இந்தப் பெருந்திரள் ஆர்ப் பாட்டத்தில் கொளுத்துகின்ற வெயிலிலேகூட; இதைவிட அதிகமாக வாடிக் கொண்டிருக்கின்ற தமிழ் இனத்தை இலங்கையிலே வாடிக் கொண்டிருக்கின்ற தமிழ் இனத்தை காப்பாற்றுவதற்காக கூடியிருக்கின்ற உங்களுடைய ஆர்வத்தை நீங்கள் மேற்கொண்டுள்ள அக்கறையை நாம் எடுத்துள்ள தமிழர்களை வாழ்விக்கின்ற செயலுக்கான தீவிரத்தைக் காட்டுகின்ற வகையில் இந்த பெருந்திரள் அமைதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை எனக்கு முன்னால் பேசிய நம்முடைய தலைவர்கள், நண்பர்கள் எடுத்துக்காட்டியிருக்கிறார்கள்.<br /><br />இந்தியா இன்றையதினம் கடந்த காலத்திலே இருந்த பல பிரதமர்களால் சாதிக்க முடியாதவைகளை யெல்லாம் சாதிக்கின்ற வல்லமை வாய்ந்த பிரதமரை தற்போது பெற்றிருக்கின்றது என்று பலரும் நம்புகின்ற ஒரு பிரதமர் வாய்த்திருக்கிறார் என்ற நம்பிக்கை நமக்கெல்லாம் இருந்த போதிலும் கூட, அந்தப் பிரதமர் அண்மையிலே வெளியிட்ட கருத்தை அதிலும் குறிப்பாக ஈழத்திலே இருந்து டெல்லிக்கு வந்து எந்தக் குழுவினரை சந்திக்கின்ற வாய்ப்பைப் பெற்றார்களோ, அந்தக் குழுவினர் கொண்ட நம்பிக்கைக்கு ஏற்றவகையில் இந்தியாவினுடைய புதிய அரசும் நிச்சயமாக நடந்து கொள்ளும்.<br /><br />நடப்பதற்கு ஏற்ற சூழ்நிலைகளை உருவாக்கும் என்ற அந்த நம்பிக்கையை நாம் பெற்றுள்ள இந்தக் காலகட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் மற்றும் தோழமைக் கட்சிகளும் இணைந்து இயக்குகின்ற டெசோ அமைப்பின் சார்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நினைவுகூர்ந்து அந்த தீர்மானங்களுடைய மைய கருத்துக்களைப் புரிந்துகொண்டு உலகத் தமிழர்கள் ஆறுதல் பெறுகின்ற வகையில், நம்பிக்கை பெறுகின்ற வகையில், தங்களுடைய செயல்பாடுகளை அமைக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்ற முறையில் இந்த நிகழ்ச்சியிலே எனக்கு முன்னால் பேசிய நம்முடைய விடுதலை ஆசிரியர், தமிழர் தலைவர் வீரமணி அவர்களும் தம்பி திருமாவளவன் அவர்களும் மற்றும் சுப. வீரபாண்டியன் அவர்களும் ஸ்டாலின் அவர்களும் தங்களுடைய கருத்துக்களையெல்லாம் எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.<br /><br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-52495337539103914002014-09-05T19:37:46.821+05:302014-09-05T19:37:46.821+05:30
ஈழத்தமிழர்களுக்கான அரசியல்தீர்வை விரைவு படுத்த வே...<br />ஈழத்தமிழர்களுக்கான அரசியல்தீர்வை விரைவு படுத்த வேண்டும். சீனாவையும், பாகிஸ்தானையும் கையில் வைத்துக்கொண்டு இந்தியாவை மிரட்டிக்கொண்டு இருக்கிறது இலங்கை அரசு. மீனவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட படகுகளை திருப்பி அளிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டார்.<br /><br />சுப.வீரபாண்டியன்<br /><br />திராவிட இயக்க தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பேசும் போது குறிப்பிட்டதாவது:<br /><br />நான்கு தீர்மானங்களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. குற்றவாளி என்று நிறுத்தப்பட்ட ஒருவரை அய்நா அவையில் பேசுவதை அனுமதிக்க முடியாது. மீனவர்களுக்கு வாழ்வாதாரமே படகுதான். மீனவர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட வேண்டும். செப்டம்பர் 25-_க்குள் கலைஞர் பற்றவைத்த இந்த நெருப்பு, நாடுமுழுவதும் பரவும். உலகெங்கும் பரவும் என சுப.வீரபாண்டியன் பேசினார்<br /><br />தொல்.திருமாவளவன்<br /><br />விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பேசும்போது குறிப்பிட்டதாவது:<br /><br />செப்டம்பர் 25 அன்று அய்.நா பொதுப்பேரவையில் ராஜபக்சே பேச அழைக்கப் பட்டிருக்கிறார். இதன் மூலம் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சி உள்ளது. சர்வதேச விசாரணைக்குழு அய்.நா.வின் மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம்பிள்ளை, போர்க் குற்றவாளி என்று விசாரணை செய்யும்போது அய்.நாவில் ராஜபக்சேவை பேசவைப்பதற்கு அய்.நா மட்டும் காரணமல்ல. அமெரிக்க ஏகாதிபத்தியமும் காரணமாக உள்ளது.<br /><br />இதற்கு இந்திய அரசுக்கும் பொறுப்பு உள்ளது. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி நிலைப்பாட்டிலிருந்து மோடி அரசின் நிலைப்பாடு எந்த அளவில் இருக்கிறது. ராஜபக்சேவை அழைத்து பதவி ஏற்றார் மோடி. கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கு உரிமை கிடையாது என்று மோடி அரசு அபிடவிட் செய்கிறது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சார்பில் சம்மந்தம் மோடியை சந்தித்தவுடன், டெசோவைக் கூட்டி கலந்தாய்வு செய்துள்ளார் கலைஞர்.<br /><br />தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களின் கோரிக்கைகுறித்து கலைஞர் எடுத்த முடிவுதான் இந்த ஆர்ப்பாட்டம். முள்ளிவாய்க்கால் சம்பவம் நடந்து 5 ஆண்டுகள் ஆகின்றன. ஒரு லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இப்போது கலாச்சார சீரழிவில் இலங்கை அரசு ஈடுபட்டுவருகிறது.<br /><br />இராணுவ மயமாக்கி வருகிறது. தமிழர் பகுதியில் சிங்களக் குடியேற்றம் நடை பெற்று வருவது உலக அளவில் செய்திகள் வெளிவரவில்லை. 91 வயதுள்ள கலைஞர்தான் ஈழத்தமிழர்களுக்காகப் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். இன வெறியன், சிங்கள இட்லர் ராஜ பக்சேவை அய்நாவில் பேச வைப்பது, சர்வதேசப் போர்க்குற்றவாளி என்று நிறுத்தப்படும் சூழல் பாதிக்கப்படும் என்றார் தொல்.திருமாவளவன்.<br /><br />நிறைவாக இம்மாபெரும் பெருந்திரள் ஆர்ப் பாட்டத்திற்கு தலைமை உரையை தி.மு.க. தலைவர் கலைஞர் நிகழ்த்தினார்.<br /><br />Read more: http://viduthalai.in/page1/86999.html#ixzz3CRyGPihvதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-10437280820740576332014-09-05T19:37:39.455+05:302014-09-05T19:37:39.455+05:30மு.க.ஸ்டாலின்
பெருந்திரள் ஆர்ப் பாட்டத்தில் மு.க....மு.க.ஸ்டாலின்<br /><br />பெருந்திரள் ஆர்ப் பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசும்போது குறிப்பிட்ட தாவது: கடந்த 26ஆம் தேதி கலைஞர் தலைமையில் கூடிய டெசோ கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இந்த ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது. அய்.நா. பொது உறுப்பினர் கூட்டத்தில் இலங்கையின் சார்பில் யாரும் பங்கேற்க அனுமதிக்கக்கூடாது. இந்த ஆர்ப் பாட்டம் அரசியல் நோக்கத்துக்காக அல்ல. மிச்சமுள்ள தமிழர்களை பாதுகாக்கவே.<br /><br />இலங்கை அரசு சாசனத்தில் 13 ஆவது சட்ட திருத்தம் 1987 ஆம் ஆண்டில் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி, இலங்கை அதிபராக இருந்த ஜெயவர்த்தனே போட்ட ஒப்பந்தம் 27 ஆண்டுகளாக இன்றுவரை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உள்ளது. வாழும் உரிமை இழந்து உலகெங்கும் அகதிகளாக உயிர்வாழும் நிலையில் தமிழர்கள் உள்ளனர். தமிழர்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படும் என்ற ராஜபக்சே வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com