tag:blogger.com,1999:blog-1474608369333206681.post7274912016927004475..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: இதுதான் வால்மீகி இராமாயணம் - 34தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger68125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-71460802554780270572014-10-13T06:58:36.473+05:302014-10-13T06:58:36.473+05:30பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் உலக பெண் குழந...பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் உலக பெண் குழந்தைகள் நாள் விழா கொண்டாடப்பட்டது<br /><br /><br />சி.கார்த்திகா (3 ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவர் இளைஞர் நீதி குழுமத் தலைவர்), ஏ.ஆனந்த ஜெரார்டு (சைல்டுலைன் நோடல் நிறுவன இயக்குநர், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம், இயக்குநர் சி.வி.சுப்பிரமணியம், பி.பாத்திமாராஜ் (இயக்குநர், சைல்டு லைன், நோடல் நிறுவன செட் இண்டியா), எம்.தவமணி (இணை துணைவேந்தர், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம்),<br /><br />டி.மலர்வாலண்டினா (மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலாளர், சார்பு நீதிபதி), எஸ்.ஞானராஜ் (சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்), எஸ்.சுவேதா, எஸ்.முகிலா (முதலாம் ஆண்டு மாணவிகள், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம்), தஞ்சை, அக்.12_பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மனித நேய கழகம், இலவச சட்ட ஆலோசனை மய்யம், சைல்டுலைன் நோடல் நிறுவனம் மற்றும் மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழு இணைந்து வளர் இளம் பெண்களின் மேம்பாடு: வன்முறை சுழற்சிக்கு எதிராக முற்றுப்புள்ளி வைத்தல் என்ற கருத்தை மய்யமாக கொண்டு சர்வதேச பெண்குழந்தைகள் நாள் விழா பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் கொண்டாடப்பட்டது.<br /><br />இதில் பல்கலைக்கழகப் பொறியியல் துறை முதலாம் ஆண்டு மாணவி சுவேதா வரவேற்புரையாற்ற, சைல்டுலைன் நோடல் நிறுவன இயக்குநர் முனைவர் ஆனந்த் ஜெரார்டு சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா பற்றிய அறிமுகவுரையாற்றினார். இவ்விழாவிற்கு பல்கலைக்கழக இணை துணைவேந்தர் முனைவர் தவமணி தலைமை வகித்தார். அவர் தமதுரையில், குழந்தைகளின் உரிமைக்காக பாடுபட்ட இந்தியாவைச் சேர்ந்த கைலாஸ் சத்தி யார்த்திக் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலவுக்கு இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.<br /><br />இது மிகவும் பாராட்டுக்குரிய மற்றும் பெண் குழந்தைகளின் உரிமைக்காக பாடுபட்ட இவர்களுக்கான மிகப்பெரிய அங்கீகாரம் என்றார். இதுபோல் பெண் குழந்தைகள் அனைவரும் தன்னம்பிக்கையோடு உழைத்து சமுதாயத்தில் இன்னும் பல சாதனைகள் புரியவேண்டும் என்றார். தஞ்சை மாவட்ட 3 ஆவது குற்றவியல் நீதித் துறை நடுவரும் இளைஞர் நீதி குழுமத் தலைவர் மாண்பமை நீதிபதி கார்த்திகா சிறப்புரையாற்றினார்.<br /><br />அவர் தமதுரையில், பெண்குழந்தைகள் தங்களுக்கு வரும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஆற்ற லையும், ஆளுமை திறனையும் வளர்த்துக் கொண்டு தன்னம்பிக்கையோடு செயல்பட முடியும் என்றும், வளர்ந்து வரும் நவீன பொருள்களை உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளும் விதத்தில் நல்லமுறையில் பயன்படுத்தவேண்டும் என்று கூறினார். அதனையடுத்து மாவட்ட சட்டப்பணி கள் ஆணை குழு செயலாளர் / சார்பு நீதிபதி மலர்வலண்டினா கருத்துரையாற் றினார்.<br /><br />அவர் தமதுரையில், பெண்கள் குழந்தைகள் நல்ல நண் பர்களுடைய தொடர்பை வைத்துக்கொள் வதன்மூலம் அவர்களுக்கு வரும் பிரச் சினையை எளிதில் அவர்களால் எதிர் கொள்ள முடியும் என்றார். வளர் இளம் பருவத்தில் ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப்படு கிறார்கள் என்றும் பெண் குழந்தைகள் வளர் இளம் பருவத்தில் கல்வியறிவில் கடின உழைப்பையும், விடாமுயற்சியையும் கொண்டு அறிவில் சிறந்து நல்ல தலைமை பண்புகளை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று கூறினார்.<br /><br />சைல்டுலைன் இணை நிறுவன செட் இன்டியா இயக்குநர் பாத்திமாராஜ் வாழ்த் துரை வழங்கினார். இந்நிகழ்வில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக மாணவர் மற்றும் நிருவாக மய்ய இயக்குநர் சுப்பிரமணியன், பல்கலைக் கழக இலவச சட்ட உதவி மய்ய ஆலோ சகர் விஜயலஷ்மி மற்றும் சைல்டுலைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஞானராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.<br /><br />பல்கலைக்கழக அனைத்துத் துறை முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்துகொண்டனர். இறுதி யாக பல்கலைக்கழக பொறியியல் துறை முதலாம் ஆண்டு மாணவி முகிலா நன்றி யுரையாற்றினார்.<br /><br />Read more: http://viduthalai.in/page-8/89134.html#ixzz3Fz5B4YFo<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-68594041696879463022014-10-13T06:57:48.512+05:302014-10-13T06:57:48.512+05:30பாராட்டத்தக்க செயல் வீட்டுக்கு ஒருவர் கண் கொடையாக ...பாராட்டத்தக்க செயல் வீட்டுக்கு ஒருவர் கண் கொடையாக அளிக்க முடிவு<br /><br /><br />கன்னியாகுமரி, அக்.12- கன்னியாகுமரி மாவட்டத்தில் வீட்டுக்கு ஒருவர் விழிக் கொடை செய்ய முன்வந்து பதிவு செய் துள்ளனர்.<br /><br />கன்னியாகுமரி மாவட்டம், வில்லுக் குறி அடுத்த மாடத்தட்டுவிளை கிராமம் 9 ஆம் தேதியன்று களைகட்டி இருந்தது. காரணம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோ பர் இரண்டாவது வியாழக்கிழமை உலக விழிக்கொடை நாளாகக் கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது.<br /><br />பண்டிகைக் கொண்டாட்டங்களை யும் பின்னுக்கு தள்ளிவிட்டு மாடத்தட்டு விளை கிராமத்தில் உலக விழிக்கொடை நாள் வெகு விமர்சையாக கடைப்பிடித்து வருவது காண்போரின் பார்வையைக் கவர்ந்தது. சின்னஞ் சிறிய இக்கிராமத்தில் இதுவரை 137 பேர் விழிக்கொடை செய்தி ருப்பது விழி உயர்த்துகிறது. இங்குள்ள செபஸ்தியார் கோவிலில் இயங்கிவரும் திருக்குடும்ப திரு இயக்க அங்கத்தினர் கள்தான் இந்த மிகப்பெரிய சேவையை செய்து வருகின்றனர்.<br /><br />இயக்க செயலாளர் ரெக்ஸின் ராஜ குமார் (40) கூறியதாவது:<br /><br />மறைமாவட்டம் சார்பில் எங்களுக்கு கடந்த 2003 ஆம் ஆண்டு விழிக்கொடை, குருதிக்கொடை குறித்து விழிப்புணர்வு பயிற்சி கொடுத்தனர். அப்போது ஏதோ ஒரு ஆர்வத்தில் 80 பேர் விழிக்கொடை செய்ய பெயர் கொடுத்தோம்.<br /><br />கடந்த 2007- ஆம் ஆண்டு எங்கள் சங்க உறுப்பினரின் பெரியப்பா மரிய செபஸ்தியான் என்பவர் இறந்தார். சங் கத்தில் பேசி அவரது கண்களை கொடை யளிக்க முடிவு செய்தோம். அவர்கள் வீட்டிலும் சம்மதித்தனர். அதில் இருந்து படிப்படியாக விழிக்கொடை செய்வோர் எண்ணிக்கை பெருகிவிட்டது. இதுவரை எங்க ஊருல 137 பேர் விழிக்கொடை செய்துள்ளனர்.<br /><br />ஆசாரிபள்ளத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வந்ததும், முதன் முதலில் உடற்கொடை பெறப்பட்டது, எங்க ஊரைச் சேர்ந்த சுசீலா என்ற பெண்ணின் உடல்தான். இதுவரை 15 பேர் உடற்கொடை அளிக்கப் பதிவு செய்துள்ளனர். வீட்டுக்கு ஒருவர் விழிக் கொடையளிக்க எழுதிக் கொடுத்துள் ளனர்.<br /><br />முளமுமூடு வட்டார இளைஞர் பணிக்குழு இயக்குநராக உள்ள டைட் டஸ் மோகன் என்பவரின் பெரு முயற்சிக்கு கிடைத்த வெற்றிதான் இது. அவரது முயற்சியால் இப்போது எங்கள் சுற்றுவட்டாரக் கிராமங்களில் 57 பேரி டம் விழிக்கொடை பெறப்பட்டுள்ளது என்றார்.<br /><br />மாடத்தட்டுவிளை அருட்தந்தை இயேசு ரத்தினம் கூறியதாவது:<br /><br />இந்தக் கிராமத்தையே விழிக் கொடை கிராமம் என்றுதான் சொல் கின்றார்கள். இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விழிக்கொடை அளிக்கப் பதிவு செய்துள்ளனர். இளை யர் அமைப்பு, திருக்குடும்ப திரு இயக் கத்தை சேர்ந்தவர்கள் இதுகுறித்து விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது மாடத்தட்டுவிளையை சுற்றி யுள்ள கிராமங்களிலும் இதுபோல் முயற்சி நடப்பது இந்த சேவைக்கு கிடைத்த வெற்றி என்றார் அவர்.<br /><br />இதுபோல் ஒவ்வொரு கிராமம் உறுதி யெடுத்துக் கொண்டால், தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா மட்டுமல்ல உல கிலுள்ள அனைவருக்கும் பார்வை கிடைக்குமாறு வழிவகை செய்ய முடியும்!<br /><br />Read more: http://viduthalai.in/page-8/89133.html#ixzz3Fz4zy21Q<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-21287618341717902502014-10-13T06:56:55.833+05:302014-10-13T06:56:55.833+05:30நோபல் பரிசு வென்ற இந்தியர்கள்
இந்தியக் குடிமக்கள...நோபல் பரிசு வென்ற இந்தியர்கள்<br /><br /><br />இந்தியக் குடிமக்கள்<br /><br />மகாகவி ரவீந்திர நாத் தாகூருக்கு, இலக்கியத்துக்கான நோபல் பரிசு 1913-இல் வழங்கப்பட்டது. இதுவே இந்தியர் ஒருவருக்குக் கிடைத்த முதல் நோபல் பரிசு.<br /><br />தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி சர் சி.வி.ராமனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு 1930-ஆம் ஆண்டில் அளிக்கப்பட்டது.<br /><br />அல்பேனியாவில் பிறந்து, இந்தியக் குடியுரிமை பெற்றவரான அன்னை தெரசாவுக்கு அமைதிக் கான நோபல் பரிசு 1979-இல் வழங்கப்பட்டது.<br />அமர்த்தியா சென்னுக்கு பொருளாதாரத்துக் கான நோபல் பரிசு 1998-ஆம் ஆண்டு வழங் கப்பட்டது.<br /><br />கைலாஷ் சத்யார்த்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு, இந்த ஆண்டு (2014) அறிவிக்கப் பட்டுள்ளது<br /><br />வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள்<br /><br />இந்தியாவில் பிறந்து, அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற ஹர்கோவிந்த் குரானாவுக்கு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு 1968-இல் வழங்கப்பட்டது.<br /><br />இந்தியாவில் பிறந்து, அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர், இயற்பியலுக்கான நோபல் பரிசை 1983-இல் வென்றார்.<br /><br />இந்தியாவில் பிறந்து, பிரிட்டனிலும் அமெரிக் காவிலும் குடியுரிமை பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் 2009-இல் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றார்.<br /><br />இந்தியாவில் பிறந்து, பிரிவினைக்குப் பின் பாகிஸ்தானியரான அப்துஸ் சலாமுக்கு 1979-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.<br /><br />இந்தியாவில் பிறந்து, பிரிவினைக்குப் பின் முதலில் பாகிஸ்தானியராகவும், பின்னர் வங்கதேச நாட்டினராகவும் ஆன முகமது யூனுசுக்கு 2006-இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப் பட்டது.<br /><br />இந்தியாவில் பிறந்த வெளிநாட்டினர்<br /><br />இந்தியாவில் பிறந்த, பிரிட்டிஷ் குடிமகனான ரொனால்டு ராசுக்கு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு 1902-இல் வழங்கப்பட்டது.<br /><br />இந்தியாவில் பிறந்த, பிரிட்டிஷ் குடிமகனான ரூட்யார்டு கிப்ளிங், இலக்கியத்துக்கான நோபல் பரிசை 1907-இல் பெற்றார்.<br /><br />இந்தியாவில் வாழ்பவர்<br /><br />திபெத்தைச் சேர்ந்த புத்த மதத் தலைவரான தலாய் லாமா, இந்தியாவில் 1959 முதல் வசித்து வருகிறார். இவருக்கு 1989-இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.<br /><br />Read more: http://viduthalai.in/page-7/89149.html#ixzz3Fz4lcsn9<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-23713187812021434862014-10-13T06:55:19.344+05:302014-10-13T06:55:19.344+05:30
நாட்டுக்குத் தேவை இந்துத்துவா கல்வி முறையாம்!
ஆர...<br />நாட்டுக்குத் தேவை இந்துத்துவா கல்வி முறையாம்!<br /><br />ஆர்ப்பரிக்கிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்<br /><br />புதுடில்லி, அக்.12-_ இந்துத்துவம் என்பது இந்தியர்களின் உரிமையே! யார் ஏற்றுக் கொண்டா லும், மறுத்தாலும் இந்தி யாவில் உள்ள அனை வரும் இந்துத்துவத்திற்கு உரிமை கொண்டாட வேண்டியவர்கள் தான்; உடனடியாக இந்துத்துவா கல்வி முறையைக் கற்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மோகன் பகவத் கூறியுள்ளார். டில்லியில் நடந்த இந் துத்துவ என்சைகிளோ பீடியா என்ற அமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத் தில் பேசிய மோகன் பகவத் மீண்டும் இந்தியர் கள் இந்துக்கள் என்ற பிரச் சினையைக் கிளப்பியுள்ளார். 10.10.2014 அன்று தனி யார் அமைப்பு நடத்திய கூட்டம் ஒன்றில் பேசிய மோகன்பகவத் இந்தியா வில் உள்ள மக்கள் அனை வரும் இந்துத்துவத்தை கடைபிடிக்க வேண்டும்,<br /><br />இது அவர்களின் உரிமை, ஏதோ ஒரு காலத்தில் அந்நிய மதத்தவரின் கொடுமைக்கு ஆட்பட்டு நமது மக்கள் பிற மதங் களை பின்பற்றத் துவங் கினர். இருப்பினும் அவர்கள் இந்துக்களே, இந்துக்கள் என்பதற்கு ஏன் பலர் எதிர்ப்பு தெரி விக்கின்றனர். எனத் தெரியவில்லை. இந்துமத வரலாற்றின் வேரை அனைவரும் அறிந்து கொள்ள வேண் டும், அப்போதுதான் தெளிவு பிறக்கும். தற் போதுள்ள கல்விமுறை யில் இந்துத்துவத்தின் மதிப்பு காணாமல் போய் விட்டது. இது நம்மை பல நூறு ஆண்டுகளாக ஆண்ட அந்நிய ஆட்சியா ளர்களினால் ஏற்பட்ட பாதிப்பு ஆகும்.<br /><br />இந்துத் துவத்தை வளர்க்க வேண் டுமானால், முதலில் மாணவ மாணவியர்களி டம் இருந்து ஆரம்பிக்க வேண்டும். இளைய வயதினரிடையே நமது இந்துத்துவத்தைப் பற்றி கற்றுக் கொடுக்க இதை விட எளிதான வேறு வழி இருப்பதாகத் தெரிய வில்லை. அந்நிய மதங்கள் கல்வி என்ற போர்வை யில் தான் அவர்களது மதத்தை நமது நாட்டில் பரப்பியது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நமது பாடத் திட்டத் தில் நமது இதிகாசங்கள், மற்றும் மகாபுருஷர்களின் வரலாறுகள் எழுதப்பட வேண்டும் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கற்பதன் மூலம் எதிர் காலத் தலைமுறைகள் சிறந்த முறையில் தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள், நமது அரசு இந்துத்துவக் கல்வி முறையை மீண்டும் கொண்டு வருவதில் முனைப்போடு செயல்பட வேண்டும்.<br /><br />இந்துத்துவக் கல்வி முறையை உலக நாடுகள் பல மறைமுகமாக நடை முறைப்படுத்தி வரு கின்றன. ஆனால் அக் கல்வி முறை தோன்றிய நமது நாட்டில் அது அழியும் நிலையில் உள் ளது. இருப்பினும் தற் போது பாரம்பரிய கல்வி அமைப்புகள் ஒரு சில அந்தக் கல்வி முறையை இன்றளவும் காப்பாற்றி வருகின்றன.<br /><br />விரைவில் நாடுமுழுவதும் அக்கல்வி முறை நடைமுறைப்படுத் தப்படும் என்று மோகன் பகவத் கூறினார். மேலும், இந்துத்துவம் குறித்த உலகப் பார்வை யில் இதுவரை எழுதி வரும் பொய்யான கருத் துக்களை மறுத்து புதிய பதிப்புகளை இந்துத்துவ என்சைக்ளோ பீடியா விரைவில் கொண்டுவர முன் வர வேண்டும், இதன் மூலம் மீண்டும் இந்துத்துவம் புத்து ணர்ச்சி பெறும் என்றும் கூறினார். இக்கூட்டத்தில் பரமார்த்த நிகிகேதன் ஆசிரமத் தலைவர் சித் தானந்த சரஸ்வதி, மற்றும் பல் வேறு மடக் கல்வி நிறுவத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/89167.html#ixzz3Fz4KWOXW<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-67807559229257829472014-10-13T06:54:16.124+05:302014-10-13T06:54:16.124+05:30ஸ்லீப்பர் செல் (sleeper cell) கள் தமிழகத்திலும் இர...ஸ்லீப்பர் செல் (sleeper cell) கள் தமிழகத்திலும் இருக்கிறார்களா? அவர்களை எப்படி கண்டு கொள்வது?<br /><br /><br />- குடந்தை கருணா<br /><br />கேள்வி: ஸ்லீப்பர் செல்கள் தமிழகத்திலும் இருக்கிறார்களா? அவர்களை எப்படி கண்டு கொள்வது?<br /><br />கிளிமூக்கு அரக்கன் பதில்: என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள்? இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மிக அதிகமாக இருக்கிறார்கள். பெரியாருக்கு முன்பு தமிழகத்தில் வர்ணபேதம், மனுதர்மம், மதம், ஜாதி போன்றவற்றை வெளிப்படையாக முன்னெடுக்க முடிந்தது. ஆனால் பெரியார் காலத்தில் அவற்றை எல்லாம் வெளிப்படையாக முன்னெடுத்த ராஜாஜி தமிழகத்தில் அரசியல் செல்வாக்கற்றுப் போனதை நினைவில் கொள்க. ஆக பெரியாருக்குப் பிறகு தமிழக வெகுஜன மக்களை என்ன செய்தும் கூட மனுதர்ம மக்களாக மாற்ற முடியவில்லை. பற்றாக்குறைக்கு வெளிப்படையாக பஜகோவிந்த பெருமைகளைப் பேசினால் அருவருப்பாக வேறு பார்க்கத் துவங்கிவிட்டார்கள்.<br /><br />அதனால் பஜகோவிந்தங்கள் வேறு வழியே இல்லாமல் கையில் எடுத்ததுதான் ஸ்லீப்பர் செல் தாக்குதல்.<br /><br />இந்த ஸ்லீப்பர் செல் பஜகோவிந்தங்களை கண்டுபிடிப்பது சுலபமல்ல. எந்த கட்சிக்காரராகவும் தங்களை காட்டிக்கொள்ள மாட்டார்கள்.<br /><br />சேஷாத்ரி, ஷர்மா, ஸ்வாமி, பாண்டே போன்ற கிரந்தப் பெயர்களை தங்கள் பெயருடன் மறக்காமல் தூக்கிக்கொண்டு வருவார்கள். பதிப்பகம், பத்திரிக்கை, இணையதளங்கள் நடத்துவார்கள்.<br /><br />மனுதர்மத்தை தூக்கிப்பிடிக்கும் ஆட்சி யாளர்களை தூக்கிப்பிடிப்பதை வெளிப்படையாகக் காட்டாமல் ஆனால் தங்களை நடுநிலையாளர் களாக வெளிக்காட்டிக்கொண்டே இருப்பார்கள்.<br /><br />கிரிக்கெட் பேசுவார்கள். சினிமா பேசுவார்கள். ஷங்கரைப் புகழ்வார்கள்; பாலாவை புகழ்வார்கள் அப்துல் கலாம் போன்ற இஸ்லாமிய அறிஞர் உண்டா என்பார்கள்? சிந்து பைரவிக்கு பின்னர் தான் இளையராஜா இசைக் கலைஞர் ஆனார் என்று புகழ்வார்கள். வட மொழி கிரந்தத்தை வலியுறுத்திக் கொண்டே தமிழ் இலக்கணம் கூட எழுதுவார்கள். திடீரென அறிஞர் அண்ணா சொக்கத்தங்கம் என புகழ்வார்கள். திமுக , திராவிட இயக்கத்தையே குலைத்துவிட்டது என வருந்துவது போல் பேசிவிட்டு ஆர்.எஸ்.எசுக்குக் கொடி பிடிப்பார்கள். காவிப்பண்டாரங்கள் உயிரோடு கொளுத்த விரும்பிய காமராசரை புகழ்வார்கள். இடஒதுக்கீடு பொருளாதார ரீதியாக கல்வியில் வேண்டும் என்பார்கள், விவரம் புரியாமல் நீங்களும் கைத்தட்டுவீர்கள்.<br /><br />சாமானியர்களுடன் சாமானியராக இருக்கும் இவர்களை எப்படி கண்டுபிடிக்கலாம் என்றால், பேச்சு வாக்கில் விபி சிங் என்று சொல்லிப்பாருங்கள். அலறுவார்கள். அலறலை அதிகப்படுத்த உங்களுக்குப் பெரியாரை பிடிக்கும் என்றும் சொல்லுங்கள். சமகாலத்தில் ஜீவா படம் பிடிக்கும் என்று சொல்லிப்பாருங்கள்.<br /><br />இவ்வகை ஸ்லீப்பர் செல்கள், திமுக- _ அதிமுக என வந்தால் அதிமுகவையும், அதிமுக- _ பாஜக என வந்தால் பாஜகவையும் முழுமூச்சாக ஆதரிப்பார்கள்.<br /><br />இந்த ஸ்லீப்பர் செல்களின் சிறப்பம்சம் நம் ஆட்களையே நமக்கெதிராக பேச வைத்து நம்மை செல்லரிக்க வைப்பதுதான் . திராவிட இயக்கத்தின் முதல் தலைமுறைக்கு அதன் எதிரிகள் கண்ணுக்குத் தெரியும் வண்ணம் எதிரிலேயே இருந்தார்கள். அடுத்தடுத்த தலைமுறைகளில் இந்த ஸ்லீப்பர் செல்கள் நம்மிடையே கலந்து, நமக்காகவே பேசுவது போல நடித்து, அவர்களுக்காக மட்டுமே செயல்படுகின்றவர்கள்.<br /><br />ஸ்லீப்பர் செல்களை புறந்தள்ளுவதும் சுலபம் தான். பெரியாரின் பூதக்கண்ணாடியை கையில் வைத்துக்கொண்டு விழிப்பாக இருந்தால் சமூகவியல் உரிமை மீறல் தாக்குதல்களில் இருந்து நான் தப்பித்ததைப் போல நீங்களும் தப்பிக்கலாம்.<br /><br />Read more: http://viduthalai.in/page-2/89163.html#ixzz3Fz45EIkp<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-73001827513686317652014-10-11T20:51:54.448+05:302014-10-11T20:51:54.448+05:30தந்தை பெரியாரின் பொன்மொழிகள்
ஏழை மக்களுக்கு ...தந்தை பெரியாரின் பொன்மொழிகள்<br /><br /><br /> ஏழை மக்களுக்கு உதவி செய்வது என்பது, ஏழைத் தன்மையிலிருந்து மற்றவர்களுடன் உயர்த்துவதே யொழிய, அங்கொருவனுக்கும், இங்கொருவனுக்கும் உணவளிப்பதல்ல.<br /><br /> சேவை என்பது கூலியை உத்தேசித்தோ, தனது சுயநலத்தை உத்தேசித்தோ செய்வதன்று. மற்றவர்கள் நன்மை அடைவதைப் பார்த்து மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவதற்காகவே செய்யப்படும் காரியம்தான் சேவை.<br /><br /> பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து. பக்தி இல்லாவிட்டால் ஒன்றும் நட்டமில்லை. ஆனால் ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ்.<br /><br /> நாளைக்கு வேண்டும் என்று தேடும் தன்னம்பிக்கையற்ற தன்மையும், எவ்வளவு கிடைத்தாலும் போதாது என்கிற ஆசை அடிமைத் தன்மையும், மனிதனின் பிறப்புரிமையாகிய தன்மானத்திற்கு இயற்கைத் தடைகள்.<br /><br /><br />Read more: http://viduthalai.in/page8/88682.html#ixzz3Fqlzl6uI<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-15130090753930264122014-10-11T20:51:25.854+05:302014-10-11T20:51:25.854+05:30பொறியியல் பட்டம் பெற்ற பெண்களின் பரிதாப நிலை
பொறி...பொறியியல் பட்டம் பெற்ற பெண்களின் பரிதாப நிலை<br /><br />பொறியியல் பட்டம் பயிலக்கூடிய பெண்கள் குறித்த ஆய்வுத்தகவல் வெளியாகி உள்ளது. அந்த ஆய்வில் பொறியியல் பட்டம் முடித்த பெண்கள் அந்தப்படிப்பிற்குரிய பணிவாய்ப்புகளுக்கு செல்லாமல் இருப்பதும், அதற்கான தொழிலிலும் ஈடுபடுவ தில்லை என்றும் தெரிய வந்துள்ளது. பொறியியல் பட்டம் படித்து முடித்த பெண்களில் 40 விழுக்காட்டினர் உரிய கல்வித்தகுதி இருந்தும், அவர்கள் முறை யாக நடத்தப்படாததாலும், குறைந்த அளவிலேயே பணிசெய்யுமிடம், சூழல்கள் இருப்பதாலும், உடன் பணி யாற்றுபவர்களாலும், மேலாளர்களா லும் தவறாக நடத்தப்படுவதாலும் பொறியியல் பட்டம் பெற்ற பெண்கள் பணிக்கு செல்லமுடியாத சூழல்கள் உள்ளனவாக ஆய்வுத்தகவல்கள் கூறு கின்றன.<br /><br />அமெரிக்காவில் உள்ள விஸ்கான் சின் மில்வாக்கி பல்கலைக்கழகத்தின் முனைவர் நாட்யா ஃபோவுட் ஆய்வுத் தகவலை வெளியிட்டுள்ளார்.<br /><br />ஆய்வின் முதற்கட்டமாக மூன்று ஆண்டுகளில் தேசிய அறிவியல் அறக்கட்டளை (National Science Foundation)<br />ஆய்வுக்காக 5,300 பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஆறு தலைமுறை களில் படித்தவர்களைக் கணக்கெடுத் துக்கொண்டது. அதிக அளவில் பெண்கள் பயின்ற 30 பல்கலைக் கழகங்களிலிருந்து அதிக எண் ணிக்கையிலான பொறியியல் பட்டம் பயின்றவர்களைக் கணக்கில் எடுத் துக்கொண்டது. ஆய்வில் 62 விழுக் காட்டினர் பொறியாளர்களாக உள் ளனர். 11 விழுக்காட்டினர் துறைக் குள்ளேயே நுழையவில்லை. 21 விழுக்காட்டினர் துறையில் பணி யாற்றியவர்கள் அய்ந்து ஆண்டு களுக்குமுன் துறையைவிட்டு விலகி உள்ளனர். 6விழுக்காட்டினர் கடந்த அய்ந்து ஆண்டுகளுக்குள்ளாக துறை யைவிட்டு விலகியுள்ளனர். மூன்றில் இரண்டு பங்கினர் நல்ல வாய்ப்பு மற்ற துறைகளில் கிடைத்து சென்று விட்ட தாக கூறியுள்ளனர். மற்றவர்கள் பணிசெய்யுமிடங்களில் உரிய அளவில் ஏற் பாடுகள் இல்லாமையால், குழந்தைகளைப் பெற் றுக்கொண்டு வீட்டி லேயே இருந்துவிட்டனர். பொறியியல் பட்ட தாரிப் பெண்கள் பணிக்கு செல்வோரில் 54 விழுக் காட்டினர் நிறுவனங்களின் நிர் வாகிகளாகவும், 22 விழுக் காட்டினர் மேலாண்மைப்பணிகளிலும், 24 விழுக் காட்டினர் அலுவலக ஊழியர்களாக வும் உள்ளனர்.<br /><br />அய்ந்து ஆண்டுகளுக்குமுன்பாக பொறியியல் பட்டம் முடித்த பெண்கள் துறையைவிட்டு விலகியதற்கு 17 விழுக் காட்டினர் பாதுகாப்பு பொறுப்பின்மை யையும், 12 விழுக்காட்டினர் போதுமான முன்னேற்றமின்மையையும், 12 விழுக் காட்டினர் துறையின்மீது ஆர்வமின் மையையும் காரணங்களாகக் குறிப் பிட்டுள்ளனர். அவர்களில் மூன்றில் இரு பங்கினர் தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் 55 விழுக்காட்டினர் நிர்வாகிகளாகவும், 15 விழுக்காட்டினர் மேலாளர்களாகவும், 30 விழுக்காட்டினர் அலுவலக ஊழியர் களாகவும் உள்ளனர்.<br /><br />பெண்கள் பொறியாளர்களாகப் பணிபுரியும்போது, வாரத்தில் 44 மணிநேரங்கள் பணிபுரிந்தார்கள் என்றால் ஓர் ஆண்டில் 76ஆயிரம் டாலர் முதல்125ஆயிரம் டாலர்வரை (இந்திய மதிப்பில் ரூ.46,55,700 முதல் ரூ.76,57,500வரை) ஊதியம் பெறு கின்றனர். அதேபோல் 15 விழுக்காட் டினர் நிர்வாகிகளாக இருப்பவர்கள், திட்ட மேலாளர்களாக இருப்பவர்கள், மற்றவர்கள் அலுவலக ஊழியர்களாக பணிபுரிந்துவருகின்றனர்.<br />ஆதரவாக இருக்கக்கூடிய முத லாளிகள், உடன் பணியாற்றுபவர்கள் மற்றும் நிறுவனங்கள் ஒத்துழைப்போடு பயிற்சி பெற்று, முன்னேற்றத்துக்கு உரிய வழிமுறைகளைக்கண்டு வாழ்க்கையை நடத்துவதற்குத் தேவையானவையாக இருப்பதால் பெண்கள் பணிகளில் தொடர்கின்றனர் என்று ஆய்வுத் தகவல்கள் கூறுகின்றன.<br /><br />Read more: http://viduthalai.in/page8/88681.html#ixzz3FqlprUpB<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-4176493701141939382014-10-11T20:49:49.073+05:302014-10-11T20:49:49.073+05:30தந்தை பெரியாரின் பொன்மொழிகள்
பிறர் உங்களிடம்...தந்தை பெரியாரின் பொன்மொழிகள்<br /><br /><br /> பிறர் உங்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ அவ்வாறே நீங்கள் மற்றவர்களிடம் நடந்து கொள்வதே ஒழுக்க நெறியாகும்.<br /><br /> படிப்பு எதற்கு? அறிவுக்கு. அறிவு எதற்கு? மனிதன் மனிதத் தன்மையோடு வாழ்ந்து மற்ற மனிதனுக்கு உதவியாய் - தொல்லை கொடுக்காதவனாய் -நாணயமாய் வாழ்வதற்கு. கல்வி என்பது ஒரு மனிதனுக்குக் கற்பிக்கப்பட வேண்டிய அவசியமெல்லாம் அவன் தன் வாழ்நாளில் சுதந்திரத் தோடு வாழ்வதற்குத் தகுதிப்படுத்தவே.<br /><br /> மனிதனுக்கு உள்ள பண ஆசையும், பதவி ஆசையும் எப்படிப்பட்டவனையும் கெடுத்து, ஒழுக்கமற்ற காரியங்களைச் செய்யத் தூண்டுகின்றன.<br /><br /> பொதுவுடைமை வேறு, பொது உரிமை வேறு. பொதுவுடைமை என்பது சமபங்கு என்பதாகும். பொது உரிமை, என்பது சம அனுபவம் (சமவாய்ப்பு) என்பதாகும்.<br /><br /> கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.<br /><br /> அறிவிற்கும் அனுபவத்திற்கும் ஒத்து வராததை பயத்தால் நம்புகிறவன் பக்குவமடைந்த மனிதனில்லை.<br /><br /> பகுத்தறிவுக்கும் தன்மானத்திற்கும் முரண்பட்ட எதையும் நீக்க வேண்டும்<br /><br /> மனிதனின் கடவுள் உணர்ச்சி மாறமாறத்தான் அறிவு வளர்ச்சியடைகிறது.<br /><br /><br />Read more: http://viduthalai.in/page7/89123.html#ixzz3FqlSgqNM<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-29925284873132546332014-10-11T20:49:19.731+05:302014-10-11T20:49:19.731+05:30காந்தியாரும் ஹிட்லரும்
ஹிட்லர் முடிவெய்திவிட்டதாக...காந்தியாரும் ஹிட்லரும்<br /><br />ஹிட்லர் முடிவெய்திவிட்டதாக வெளிவந்த சேதி உறுதியாக்கப் பட்டு விட்டது. இது பொது உடைமைக்கு வெற்றி என்று கருதப்பட வேண்டும். ஹிட்லர் காந்தியாரைப் போலவே ஒரு பைத்தியக்காரக் கொள்கையை மேற்போட்டுக் கொண்டவர். அதாவது 1930 இல் தமிழ்நாட்டில் பொது உடைமைக் கொள்கை நல்ல முறையில் பிரச்சாரம் நடந்து கொண்டு இருக்கும்போது காந்தியார் உப்பு சத்தியாக்கிரகம் ஆரம்பித்துவிட்டு அந்தப்படி ஆரம்பித்ததற்குக் காரணமாக.<br />நான் இந்த சத்தியாகிரகம் ஆரம்பிக்காமல் இருந்தால் நாட்டில் பொதுவுடைமைக் கிளர்ச்சி வலுத்து மக்களுடைய சமாதானமும் பாதுகாப்பும் பாழ்பட்டு விடும் என்று கூறினார்.<br /><br />பாவம்! பரிதாபத்திற்குரிய ஹிட்லரும் அதுபோலவே.<br /><br />பொது உடைமைப்பேயில் இருந்து உலகத்தைக் காப்பாற்றவே இந்தப் போரைத் துவக்கி இருக்கிறேன் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே வந்தார். இவர்கள் இப்படிச் சொன்னதின் பயனாக இந்திய முதலாளிகள், பிரபுக்கள், இவர்களுக்கு சமமான வாழ்க்கை நடத்தும் பார்ப்பனர்கள் ஆகியவர்களின் உதவியாலும் ஆதரவாலும் காந்தியார் அபரி மிதமான செல்வமும், போகமும், விளம்பரமும் செல்வாக்கும் பெற்றார். வெறிகொண்டவரின் சர்வாதிகாரம் போல் தன் வாயில் இருந்துவந்த வார்த்தைகள் எல்லாம், கையில் இருந்துவந்த எழுத்துக்கள் எல்லாம் அசரீரி வாக்குப்போல் ஏராளமான மக்கள் கருதும்படியான தன்மையும் பெற்றார். அதுபோலவே ஹிட்லரும் ஜெர்மன் மக்களுக்கு விளங்கினார்.<br /><br />- குடிஅரசு - துணைத் தலையங்கம் - 5.5.1945<br /><br />Read more: http://viduthalai.in/page7/89122.html#ixzz3FqlLT4F5<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-33535012849220928142014-10-11T20:48:08.766+05:302014-10-11T20:48:08.766+05:30ஜவஹர்லாலும் சமதர்மமும்
பண்டித ஜவஹர்லால் நேரு தலைவ...ஜவஹர்லாலும் சமதர்மமும்<br /><br />பண்டித ஜவஹர்லால் நேரு தலைவராய் இருப்பதால், தாங்கள் காங்கிரசில் சேருவதில்லை என்று பம்பாய் வர்த்தகர்கள் சொல்லி அறிக்கை வெளியிட்டதற்குப் பதிலாக, நேரு பம்பாய்க்கு ஓடிவந்து வர்த்தகர்களைக் கண்டு தனது சமதர்மம் இன்னது என்று சொல்லி வர்த்தகர்களுக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.<br /><br />அதாவது, தனது சமதர்மமானது ஒரு தேசத்தாரையோ, ஒரு சமுகத்தாரையோ, ஒரு கோஷ்டியாரையோ எவ்வித நிர்ப்பந்தமும் செய்வதல்லவென்றும், ஆனால், நாளா வட்டத்தில் தமது அபிப்பிராயம் பொது ஜனங்களிடை பரவுமாறு செய்யலாம் என்று நம்பி இருப்பதுதான் என்றும் சொல்லி இருக்கிறார். மற்றும் ரகசியமாய் அவர்களுடன் பேசி ஏதேதோ வாக்குக் கொடுத்து இருக்கிறார். (21-05-1936 தமிழ்நாடு முதல் பக்கம் 2, 3 காலம்) இதுதான் ஜவஹர்லால் சமதர்மமாகும். இதை அறியாமல், அனுபவமற்ற வாலிபர்கள் ஜவஹர்லாலை சமதர்ம வீரர் என்று கூப்பாடு போடுவதன் மர்மம் முட்டாள் தனமேயாகும்.<br />குடிஅரசு - துணைத் தலையங்கம் - 31.05.1936<br /><br />Read more: http://viduthalai.in/page5/89119.html#ixzz3Fql3NF7N<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-87986935727832372062014-10-11T20:45:35.403+05:302014-10-11T20:45:35.403+05:30ஆதிசங்கராச்சாரி அவதார ரகசியம்
ஆதிசங்கராச்சாரி ஏன...ஆதிசங்கராச்சாரி அவதார ரகசியம்<br /><br /><br />ஆதிசங்கராச்சாரி ஏன் இவ்வுல கில் அவதரித்தார்? அவர் அவதரித்த தன் உள்நோக்கம் என்ன? அந்த ரகசியத்தை, பரமசிவனே காதோடு காதாக தனது ஒய்ப் (மனைவி) பார்வதிதேவியிடம் கீழ்க்கண்டவாறு கிசுகிசுக்கின்றார்! நாமும் ஒட்டுக் கேட்போம்.<br /><br />கலியுகத்திலுண்டாகும் பக்தர் களுடைய சரித்திரத்தைச் சுருக்க மாகச் சொல்லுகின்றேன். பார்வதியே! கேட்பாயாக! முயற்சியுடன் மறைத்து வைத்துக்கொள்ளத் தக்கது. ஒருவர்க்குஞ் சொல்லத்தக்கது அன்று. அம்பிகையே! பாவகர்மத்தில் இரமிப்பவர்களும், கருமங்கள் அனைத்திலும் பிரியமற்றவர்களும், வருணாசிரமக் கருமங்களில் பிறந்தவர்களும், தருமத்தில் மாறி ஒழுகுபவர்களுமான கலியில் மூழ்கிய அந்த சனங்களைப் பார்த்து ஆக்குரோசத்தினாற்கலியுகத்தில் எனது அம்சத்தாலுண்டாகுபவரும் தபோதனருமாகிய விப்பிரரை (பார்ப்பனரை)க் கேரள தேசத்தில் உண்டாக்குவேன் மகேசுவரியே! அவருடைய சரிதத்தையே சொல் வேன், கேட்பாயாக!<br /><br />இக்கலியுகத்தில் இரண்டாயிரம் வருஷங்களுக்குப் பின் ... சப்தார்த்த ஞான நிபுணர்கள், தர்க்கத்தில் கூரிய புத்தியுடைய சைனர்கள், அறிவுடைய புத்தர்கள் மீமாம்சையில் இரமிப்ப வர்கள்; வேதபோதக வாக்கியங் களுக்கு மாறுபாடாகப் பிரீதி உண்டாக்குபவர்கள்; பிரத்தியட்ச விவாதத்தில் குசலர்கள், மிசிரர்கள்; பெரிய சாத்திரங்களால் அத்வை தத்தைக் கெடுப்பவர்கள்; கருமமே மேலானது, பலதாயகன் சிவன் அல்லன் என்னும் யுக்தி கருதிய வாக்கியங்கொண்டு போதிப்பவர் களாகிய இவர்களால், குல ஆசா ரங்கள் கெடுக்கப்பட்டு, அவ்வாறே ஜனங்களுக்கும் கர்மமும் பாரமாகி விடும்.<br /><br />அப்போது அவர்களைக் கரை யேற்றுதற் பொருட்டு ஈஸ்வர அம்சத்தை உண்டாக்குவேன். மகாதேவியே! கேரள தேசத்தில் சசலம் என்னும் கிராமத்தில் எனது அம்சமாகிய அந்தணமாதின் வயிற் றில் சங்கரர் என்னும் திருநாம முடைய அந்தண சிரேஷ்டர் பிறப்பார்.<br />(சங்கர திக்கு விஜய காவிய வசனம் நூல், பக்கம் 2) - மருதவாணன் புரிகிறதா சூட்சமம்?<br /><br />Read more: http://viduthalai.in/page3/89116.html#ixzz3FqkP4UmI<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-27279913545951317232014-10-11T20:42:46.644+05:302014-10-11T20:42:46.644+05:30அடடா... என்ன... சாமர்த்தியம்!
தமிழ்நாடு முன்னாள்...அடடா... என்ன... சாமர்த்தியம்!<br /><br /><br />தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குத் தண்டனை அளிக்கப்பட்டது தொடர்பாக ஏடுகள் வெளியிடும் தளுக்கும், குலுக்கும் அடடா, சொல்லி முடியாது.<br /><br />ஒரு மாலை ஏடு எழுதுகிறது (ஜெயலலிதாவுக்குச் சாதகமாக) ................................... என்று பிரபல சட்ட வல்லுநர் கூறினார்.<br /><br />ஏன் அந்த நீதிபதியின் சட்ட வல்லுநரின் பெயரைச் சொல்லுவதில் என்ன சுளுக்கு?<br /><br />அப்படி ஒருவர் சொல்லியிருந்தால்தானே அவர் பெயரைச் சொல்ல முடியும்.<br /><br />பத்திரிகைகாரர்களின் ஆசையையே குதிரையாக்கி சவாரி செய்து பார்க்கிறார்கள், அவ்வளவுதான்!<br /><br />துக்ளக்கை எடுத்துக் கொள்வோம்.<br /><br />கோர்ட் வளாகத்தில் கண் கலங்கியபடி இருந்த மூத்த அமைச்சர்களைப் பார்த்து, இப்படி கோழை போல அழாதீர்கள்; சட்டமன்ற கட்சிக் கூட்டத்தை உடனடியாக நடத்தவேண்டும். சென்னைக்குப் புறப்பட்டுச் செல்லுங்கள் என்று கூறியதோடு, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், பழைய அமைச்சர்களே நீடிக்கட்டும் என்றும் அவர் தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது.<br /><br />7 ஆம் தேதி மனு தள்ளி வைக்கப்பட்டது என்ற செய்தி தெரிய வந்த பிறகும், ஜெயலலிதா வருந்தவில்லை என்று சொல்கிறார், உள்விவகாரங்களை அறிந்த ஒருவர்.<br /><br />பார்த்தீர்களா... பார்த்தீர்களா...?<br /><br />தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது என்றும், சொல்கிறார் உள்விவகாரங்களை அறிந்த ஒருவர்....<br /><br />இந்த வெற்று வார்த்தைகளுக்கு ஏதாவது அர்த்தம் உண்டா?<br /><br />இந்தச் சாமர்த்தியம் அவாளையன்றி வேறு யாருக்கு வரும்?<br /><br />Read more: http://viduthalai.in/page-8/89086.html#ixzz3FqjhNM1P<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-23688632047768814952014-10-11T20:41:39.361+05:302014-10-11T20:41:39.361+05:30நல்வாழ்வு வாழ்வதென்பதற்கும் சுக வாழ்க்கை அடைவதென்ப...நல்வாழ்வு வாழ்வதென்பதற்கும் சுக வாழ்க்கை அடைவதென்பதற்கும் வாழ்க் கைத் தரம் உயர வேண்டும் என்பதற்கும் ஆசைப்படுவதில் மனிதனுக்குக் குறிப்பிட்ட எல்லையே கிடையாது. நேற்று அடைந்த தைவிட இன்று ஒரு படி அதிகச் சுகம் கண்டால் இன்னமும் இதைவிட அதிகச் சுகம் காண வேண்டுமென்று முயற்சிப்பான்.<br /><br />இப்படியே படிப்படியாக நாளுக்கு நாள் தங்கள் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்ற எண்ணத்திலேயே கவலை கொள்கிறார்கள். இதற்கு முடிவே கிடையாது. தான் சாகும்வரை இந்த ஆசை இருக்கத்தான் செய்யும். அதனால் கவலை அழியாது.<br /><br />- தந்தை பெரியார் பொன்மொழி<br /><br />Read more: http://viduthalai.in/page-7/89093.html#ixzz3FqjRRn1j<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-47644534869417359782014-10-11T20:41:03.671+05:302014-10-11T20:41:03.671+05:30எதார்த்தவாதியும் - கிறிஸ்தவ மத போதகரும் பேசியது: ஓ...எதார்த்தவாதியும் - கிறிஸ்தவ மத போதகரும் பேசியது: ஓர் சம்பாஷணை<br /><br /><br />எதா : அய்யா தங்கள் வேதம் என்று சொல்லப்படும் பைபிள் யாரால் எப்பொழுது எழுதப்பட்டது?<br /><br />போதகர் : பழைய காலத்திலே தேவ ஆவியால் ஏவப்பட்ட பல தீர்க்க தரிசிகளைக் கொண்டும் கிறிஸ்துவின் சீடர்களைக் கொண்டும் பிந்திய அப்போஸ்தலரைக் கொண்டும் எழுதப்பட்டது.<br /><br />எதா : சரி தீர்க்கதரிசிகள் என்பவர் சிலவிடங்களில் தெய்வத்திற்கு பயப்படாதவர்கள் தானே?<br /><br />போதகர் : இல்லை சார் எப்பொழுதும் தெய்வத்துக்கு பயப்படுகிறவர்கள்தான்.<br /><br />எதா : நல்லது அப்படியானால் ஆபிரகாம் ஒரு தீர்க்கதரிசிதானே?<br /><br />போதகர் : ஆம். வாஸ்தவம்தான். ஆனால், அவனை(ரை) சில ஆராய்சி யாளர் தன் தகப்பனின் மறு மனையாட்டியின் மகளைக் கல்யாணம் செய்ததாகக் குறை கூறுவார்கள்<br /><br />எதா : அதைப்பற்றி இப்பொழுது கவலை இல்லை. மானிடன் இயற்கையில் சகோதரியைக் கல்யாணம் செய்தேதான் உற்பத்தி ஆகி இருக்கலாம்.<br /><br />போதகர் : அப்படியானால் ஆபிரகாமைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியதென்ன?<br /><br />எதா : உண்மையாக அவன் ஒரு தீர்க்கதரிசிதானே.<br /><br />போதகர் : ஆம், வாஸ்தவம்தான். ஆதியாகமம் 2ஆம் அதிகாரம் 7ஆம் வசனத்தில் (கடவுளே) தேவனே அவன் ஒரு தீர்க்கதரிசி என்பதாய் சொல்லியிருக்கிறார்<br /><br />எதா : அந்த ஆபிரகாமே தானே ஆதியாகமம் 21ஆம் அதிகாரம் 11ஆம் வசனத்தில் இவ்விடத்தில் தெய்வபயம் இல்லையென்றும் பொருள்படப் பேசியதை தாங்கள் வாசித்ததுண்டா?<br /><br />போதகர் : அ. ஆ.. ஆம் வாசித்ததுண்டு ஆனால், அவன் மனைவி சாரா அழகுள்ளவள். அதற்காகப் பயந்து சொல்லியதுண்டு.<br /><br />எதா : மனைவி அழகானால் மனிதர்கள் மனிதர்களுக்குப் பயந்து தெய்வத்திற்குப் பயப்பட வேண்டியதில்லையா?<br /><br />போதகர் : சார் அது பழைய ஏற்பாட்டில் உள்ளது. புதிய ஏற்பாட்டில் உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள்.<br /><br />எதா : சரி அய்யா நான் படிக்கிறேன். அப்படிப்பட்டவர் களாலேதானே உங்கள் பைபிள் எழுதப்பட்டது.<br /><br />போதகர்: தெய்வமில்லாத காலமிது (என்பதாய் முணுமுணுத்துக்கொண்டு நழுவி விடுகிறார்.)<br /><br />எதா: பைபிள் காலத்தில் தெய்வப் பயமில்லாத இடமிருந்து இப்பொழுது காலம் வந்து விட்டது என்பது உங்கள் அனுபவம். ஆனால் எங்களுக்குத் தெய்வ கவலையில்லாத (காரியமே) வாழ்க்கையே வேண்டும் என்பது எங்கள் துணிபு.<br /><br />குடிஅரசு - கற்பனை உரையாடல் - 05.04.1931<br /><br />Read more: http://viduthalai.in/page-7/89095.html#ixzz3FqjDNh6X<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-24908479244097866952014-10-11T20:40:20.049+05:302014-10-11T20:40:20.049+05:30ருஷியாவைப் பற்றி சர். டாகூர் அபிப்பிராயம்
உயர்திர...ருஷியாவைப் பற்றி சர். டாகூர் அபிப்பிராயம்<br /><br />உயர்திரு. சர். ரவீந்திரநாத் டாகூர் அவர்கள் ருஷியா மாஸ்கோவுக்குச் சென்றிருந்த சமயம் அங்கு ஒரு பத்திராதிபருக்குப் பேட்டி அளித்துப் பேசியதில், நீங்கள் குடியானவர்கள் விஷயத்தில் மிக்க சிரத்தை எடுத்து அவர்களுக்குக் கல்வி பரவும்படி நல்ல வேலை செய்திருக்கிறீர்கள்.<br /><br />எங்கள் தேசத்தில் கல்வி கோடிக்கணக்கான மக்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. உங்களிடமிருந்து ஏராளமாகக் கற்றுக் கொண்டேன். தேக பலம், கல்வி இவை இல்லாதவர்களையும், உபயோகித்துக் கொள்ளும் விஷயம் மிக்க சாமர்த்தியமானது. இங்குள்ள தாய் தகப்பனற்ற சிறுவர்கள், புது உலக வாழ்வுக்குத் தகுந்த சக்தியையும் நம்பிக்கையையும் உடையவர்களாய் இருக்கிறார்கள்.<br /><br />விவசாயிகள் கஷ்டத்தைப் போக்க நீங்கள் போட்டிருக்கும் திட்டம் திருப்தியாய் இருக்கின்றது. வைத்தியம், சுகாதாரம் நல்ல நிலையில் இருக்கின்றதென்று வைத்தியர்கள் சொல்லுகிறார்கள் என்று சொன்னார்.<br /><br />இதிலிருந்து ருஷியாவின் மேன்மை யாவருக்கும் நன்றாக விளங்கும். இதைத் தவிர மற்றொரு விஷயமும் சொன்னார். அதாவது மதம், செல்வ நிலை. சமுக வாழ்வு ஆகிய விஷயங் களில் உங்களினின்று மாறுபட்டவர்கள் இடம் கோபியாமல் விவசாயிகளைக் கல்வி மூலம் திருத்த முயற்சிப்பது போல் இவர்களையும் கல்வி மூலம் திருத்தும்படியான முறையை அனுஷ்டிக்க வேண்டாமா? என்றும் சொன்னாராம்.<br /><br />இதை மாத்திரம் நம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ஏனெனில் மதப்பித்தர்களையும், செல்வச் செருக்கர்களையும், சமூக வாழ்வில் உயர்தனம் பெற்ற அனுபவக்காரர்களையும் நல்லவார்த்தையாலோ, பிரச்சாரத்தாலே, கல்வியாலோ திருத்துவதென்பது சுலபமான காரியம் என்பது நாம் கருதவில்லை. இவர்களுக்கு ருஷியக்காரர் செய்யும் ஏற்பாடுகள் தான் பொருத்தமானது என்பது நமது அபிப்பிராயம்.<br /><br />ஆகவே, எல்லா விஷயத்திலும் ருஷிய அரசாங்க சீர்திருத்த முறை மேலானது என்றே சொல்லுவோம்.<br /><br />குடிஅரசு - துணைத் தலையங்கம் - 01.02.1931<br /><br />Read more: http://viduthalai.in/page-7/89094.html#ixzz3Fqj6OSIA<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-65798226154715767612014-10-11T20:39:59.411+05:302014-10-11T20:39:59.411+05:30சீக்கிரத்தில் சட்டசபை கலையப் போகிறதாம்
சீக்கிரத்த...சீக்கிரத்தில் சட்டசபை கலையப் போகிறதாம்<br /><br />சீக்கிரத்தில் இந்தியச் சட்டசபை கலையப் போகின்றது என்று ஸ்டேட்ஸ்மென் பத்திரிகை எழுதியிருப்பதாகத் தமிழ்நாடு பத்திரிகையில் 10ஆம் தேதி உப தலையங்கத்தில் காணப்படுகின்றது. அதாவது<br /><br />இந்தியா அரசியல் மகாநாட்டில் காங்கிரஸ் பிரதிநிதிகள் ஒத்துழைக்கப் போகின்றார்களாதலால் அதை உத்தேசித்து டில்லி சட்டசபையைக் கலைத்து விட்டு புதிய தேர்தல்கள் நடக்கப் போகின்றது என்று ஸ்டேட்ஸ்மென் பத்திரிகைக்கு அதன் டெல்லி நிருபர் எழுதியிருப்பதாகக் காணப்படு கின்றது. இதைப் பற்றி ஏற்கனவே நாம் 1.02.1931 குடி அரசு தலையங்கத்தில் எழுதி இருக்கின்றோம் அப்போது சிலருக்கு அதுஆச்சரியமாகவும், உண்மையற்றதாகவும் தோன்றி இருக்கலாம்.<br /><br />எப்படியிருந்தாலும் இது உண்மையானால் காங்கிரஸ்காரர்களுக்குச் சமீபத்தில் நடந்த காந்தி - இர்வின் ஒப்பந்தத்தின் பலனாய் ஏதாவது பயன் உண்டு என்று சொல்வதானால், சட்டசபைகள் கலைக்கப்பட்டு, காங்கிரஸ்காரர்கள் வெற்றி பெற்று சட்டசபைகளில் நுழைய ஒரு அகால சந்தர்ப்பம் ஏற்படுவதை தவிர, வேறு ஒன்றும் இருக்க முடியாது.<br /><br />ஆதலால் இந்த ஒப்பந்தமோ அல்லது இந்த அபிப்பிராயம் தொக்கி இருப்பதான குறிகளோ, ராஜிய சம்பாஷணையில் கலந்திருக்க வேண்டுமென்று நாம் யூகிக்க பல வழிகளிலும் இடம் மேற்படுகின்றது.<br /><br />ஆனால், காங்கிரஸ்காரர்களுக்குத் தங்களுக்கு வெற்றி ஏற்படுவது நிச்சயம் என்கின்ற தைரியமில்லாவிட்டால் கராச்சி காங்கிரஸ் சட்டசபைப் பிரவேசத்தை ஒரு சமயம் மறுத்து விட்டாலும், மறுத்துவிடக்கூடும். ஆகையால் எதுவும் கராச்சி காங்கிரசில்தான் முடிவு பெறலாம்.<br /><br />ஆனாலும், அதுவரை அடுத்த தேர்தலுக்குச் செய்யப்பட வேண்டிய முஸ்தீப்புகளில் ஒன்றாகக் கள்ளுக்கடை மறியலும், ஜவுளிக்கடை மறியலும் அங்குமிங்குமாக தலை நீட்டிக் கொண்டு இருக்க வேண்டியதுதான். ஆனால் தீண்டாமை விலக்கு விஷயமாக மாத்திரம் எதுவும் தலைகாட்டப்பட மாட்டாது.<br /><br />ஏனெனில், தீண்டாமை விஷயம் பேசினாலோ, அதற்காக மறியல் முதலியவைகள் துவக்கப் பட்டாலோ ஓட்டுக்கிடைப்பது கஷ்டமான காரியமாகி விடுமாதலால், அது கிணற்றில் போடப்பட்ட கல்லுபோல் பேசாமல் இருந்து கொண்டு இருக்கும். ஆதலால், இப்போது சட்டசபைகளில் இருப்பவர்கள் கூட, தீண்டாமை சம்பந்தமாகப் பேச பயப்படுவதுடன், ஜவுளி மறியலுக்கும், கள்ளு மறியலுக்கும் கூட தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொண்டாலும் கொள்ளுவார்கள்.<br /><br />தீண்டாத வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்பட்ட சட்டசபை அங்கத்தினர்கள் கூட அடுத்த தடவை தேர்தலின் மூலம் சட்ட சபைக்கு வரவேண்டியவர்களாக இருப்பதால் அவர்களுக்கும் கூட தீண்டாமைக் கொடுமையைப்பற்றிப் பேசுவது சற்று கஷ்டமாகத்தான் இருக்கும். ஏனெனில், ஒன்று தீண்டாமை யைக் கடிந்து பேசுகின்ற வர்களுக்கு ஓட்டுக் கிடைக்காமல் போகும்.<br /><br />இரண்டு, தீண்டாமை ஒழிந்து விட்டால் தீண்டாதவர்களின் பெயரால் இப்போது சிலருக்குக் கிடைத்து வரும் சௌகரியங்கள் பிறகு கிடைக்காமல் போகலாம். ஆகவே இரண்டு காரணங்களால் அவர்களும் பயப்படுவார்கள்.<br /><br />ஆகவே இந்தக் காரணங்களால் காங்கிரசுக்கு இருக்கும் மதிப்பை நாம் இல்லை என்று சொல்ல வரவில்லை. ஆனால் காங்கிரசினால் பொதுமக்களுக்குப் பயன் உண்டு என்பதையும் அந்தக் காரணத்தால்தான் காங்கிரசுக்கு மதிப்பு இருக்கின்றது என்பதையும் மாத்திரம் தான் நாம் ஒப்புக் கொள்ள முடியவில்லை. பிறத்தியாரையும் நம்பச் செய்யமுடியவில்லை.<br /><br />குடிஅரசு - துணைத் தலையங்கம் - 15.03.1931<br /><br />Read more: http://viduthalai.in/page-7/89094.html#ixzz3FqizwETO<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-46561689825187176022014-10-11T20:39:25.816+05:302014-10-11T20:39:25.816+05:30நாடார்கள் துன்புறுத்தப்படுகின்றார்கள் அருப்புக்கோட...நாடார்கள் துன்புறுத்தப்படுகின்றார்கள் அருப்புக்கோட்டை போலீஸ் மாற்றப்படுமா?<br /><br />இராமநாதபுரம் ஜில்லா அருப்புக்கோட்டையில் நாடார்கள் தெருவில் நடக்காமல் தடைப்படுத்தப்பட்டதும், அதனால் ஒரு நாடார் இளைஞர் கொலை செய்யப்பட்டதும் யாவரும் அறிந்த விஷயமாகும். மற்றும் அவர்கள் சில தெருக்களில் உரிமை கொண்டாட முடியாமல் சர்க்கார் 144 போட்டுத் தடுத்து உபத்திரவப்படுத்தினதும் யாவரும் அறிந்ததாகும்.<br /><br />இதற்கு எவ்வித கேள்வியில்லாமல் போகும்படி பார்ப்பன போலீஸ் அதிகாரிகள் செய்து வரும் நடவடிக்கைகளும் சர்க்கார் வரை தெரியப்படுத்தியும் கவனிக்கப்படாமல் இருந்து வருகின்றது.<br /><br />போதாக் குறைக்குத் திருநெல்வேலி ஜில்லா சிந்தாமணியென்னும் கிராமத்தில் நாடார்கள் தங்கள் சுவாமியை ஊர்வலமாய் எடுத்துக் செல்ல வொட்டாமல் கலகம் செய்து பெரிய அடிதடி கலகங்கள் நடந்து அதன் பயனாய் சர்க்கார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டியதாகிப் பலர் கொல்லப்பட்டும், பலர் காயப்பட்டும் இருக்கின்றார்கள்.<br /><br />சர்க்காரார் இவ்விஷயத்தில் காட்டி வரும் கவனம் மிகவும் கவலையற்றதாகவும் மக்களுக்குள் எப்படி ஒருவித கலவரம் இருக்க வேண்டியது அவசியம் என்று கருதுவ தாகவும், இருப்பதாகவே கருத வேண்டியிருக்கின்றது. பார்ப்பனியப் போலீசும் இந்த நிலைமைக்கு மெத்த உதவி செய்வதாகவே செய்திகள் கிடைத்து வருகின்றன.<br /><br />போலீஸ் இலாகாவும், சட்ட இலாகாவும் 30 நாள் கணக்கெண் ணுவதும் அது முடிந்ததும் 5333-5-4 கணக்கு எண்ணு வதுமான வேலையிலேயே கவனம் செலுத்துவதாயிருக் கின்றதேயொழிய மக்கள் இப்படி உதை போட்டுக்கொண்டு கொல்லப்படுவ தற்கு ஒரு பரிகாரம் செய்வதற்குக் கவலை எடுத்துக் கொண்டதாகத் தெரிய வில்லை என்று வருத்தத்துடன் எழுதுகின்றோம்.<br /><br />இந்தச் சமயத்தில் இன்னும் ஒரு விஷயத்தைப் பற்றியும் எழுதாமலிருக்க மனமில்லை. அதாவது இந்த மாதிரியான கலகங்கள் பெரிதும் சுவாமியைத் தூக்கிக் கொண்டு செல்லுவதிலும் பஜனை பாடிக்கொண்டு செல்லுவதிலுமே ஏற்படுவதாய் இருப்பதால் இந்தப் பாழும் சாமி சங்கதியை விட்டுத் தொலைக்கக் கூடாதா? என்று நாடார் சமூகத்தையும் கேட்டுக்கொள்ளுகின்றோம்.<br /><br />குடிஅரசு - கட்டுரை - 29-03-1931<br /><br />Read more: http://viduthalai.in/page-7/89093.html#ixzz3FqiqiRqn<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-36675144145714149232014-10-11T20:37:41.095+05:302014-10-11T20:37:41.095+05:30சாக்ரட்டீஸ் முதல் பெரியார் வரை
பெரியார், சாதிய ...சாக்ரட்டீஸ் முதல் பெரியார் வரை<br /><br /><br /><br />பெரியார், சாதிய அமைப்பு, மத அமைப்பு, மூடநம்பிக்கை நொறுக்கப்பட வேண்டும் என்ற வாழ்நாள் லட்சியத்தோடு வாழ்ந்து செயல்பட்டார்கள். அதில் மக்கள் திருந்துவதில் சில கோளாறினால் வெறி கொண்டு சிலை உடைப்பு, அவமரியாதை செய்தார்கள். நம் மக்கள் ஏக்கத்தோடு உளறிய செயல்பாடுகள் மக்கள் என்றும் நல்லவைகளை ஏற்றுக் கொண்டதில்லை எத்தனையோ ஞானிகளும் சித்தர்களும் சொல்லியபடி நடந்ததில்லை அதைத்தான் பட்டுக்கோட்டையார்<br /><br />சித்தர்களும் யோகிகளும்<br />சிந்தனை ஞானிகளும்<br />எத்தனையோ உண்மைகளை<br />எழுதி எழுதி வைச்சாங்க<br />எல்லாம் தான் படிச்சீங்க<br />என்ன பண்ணி கிழிச்சீங்க<br /><br />மனிதர்கள் நடவடிக்கையால் எல்லோ ரும் மனம் நொந்துதான் செத்த கதை. சாத்திர சம்பிரதாயங்களை மாற்ற முடிய வில்லை அதன் விளைவு பிராமணியம் கொடி கட்டிப் பறக்கிறது. பிராமணீய மனிதர்களும் ஒழுக்கக் கேடானவர்களாக மாறி விட்டனர். இன்னமும் சொர்க்கம், நரகம் என்று பேசி அத்தனையும் தலை விதிப்படி தான் நடக்கும் என்று புலம்பித்திரிவதைப் பார்க்கின்றோம்.<br /><br />படித்த மக்களிடம், ஜாதி, மத உணர்வு, மூடநம்பிக்கைகள் கூடி விட்டதின் காரண மாக, இயற்கையை நேசிக்க முடியவில்லை. எந்த கஷ்டத்தையும் கடவுள் காப்பாற்ற வில்லை. காப்பாற்றாத கடவுளைக் கூவி அழைத்துக் கொண்டிருப்பதை பார்க்கிறோம்.<br /><br />காலையிலிருந்து எல்லா மதத்தின் வழிபாட்டு இடங்களில் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.<br /><br />சாக்ரட்டீஸ் காலத்திலிருந்து, பெரியார் ஜீவா காலம் வரை எத்தைனயோ முழக் கங்கள்!<br /><br />நாட்டில் இடதுசாரி இயக்கம், அதன் தலைவர் தொண்டர்கள்கூட அதைக் கடைப்பிடிக்காத நிலைமை. மனிதன் மனிதனாக வேண்டுமென்றால் நல்ல மனித சிந்தனை, மனிதப் பண்பு என்று ஏற்படப் போகிறது? இப்படி ஒரு அரசியல் அமைப் பிற்கு விடுதலை தேவைதானா? என்ற கேள்விக்குறி எழுகிறது. இன்றைய இளை ஞர்கள் தெளிவு பெற வேண்டும் கல்வி அமைப்பும் விஞ்ஞானத்தை போதித்து அஞ்ஞானத்தை ஒதுக்க வேண்டும்.<br /><br />- இரா. சண்முகவேல், ஜீவா படிப்பகம், கீழக்கலங்கல்<br /><br />Read more: http://viduthalai.in/page-2/89074.html#ixzz3FqiPMGQo<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-11560118032153945982014-10-11T20:35:18.949+05:302014-10-11T20:35:18.949+05:30மனிதன்
பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும...மனிதன்<br /><br /><br /><br />பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.<br /><br />- (விடுதலை, 9.6.1962)<br /><br />Read more: http://viduthalai.in/page-2/89067.html#ixzz3FqhoYStd<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-6717410759988767872014-10-11T20:34:32.481+05:302014-10-11T20:34:32.481+05:30பிரபாகரன் கடல் வளத்தை பாதுகாத்தார் வட மாகாண மீன்பி...பிரபாகரன் கடல் வளத்தை பாதுகாத்தார் வட மாகாண மீன்பிடித்துறை அமைச்சர் டெனிஸ்வரன்<br /><br /><br />கொழும்பு, அக்.11-- தமிழீழ விடுதலைப் புலி களின் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரன் கடல் வளத்தை பாது காத்ததாக மீனவர்களி டையே வடக்கு மாகாண மீன்பிடித்துறை அமைச் சர் டெனிஸ்வரன் தெரி வித்துள்ளார்.<br /><br />வல்வெட்டித்துறை கிழக்கு அய்க்கிய மீனவர் கள் சங்கம் சார்பில் அமைச்சரிடம் கோரிக்கை மனுவை யளித்த போது அவர் இவ்வாறு கூறி யுள்ளார்.<br /><br />கைத்தடியில் உள்ள வடக்கு மாகாண சபைக்கு எதிரில் மீன வர்கள் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இதன் பின்னர், தமக்கு ரோலர் படகு களை பயன்படுத்த அனுமதி வழங்க வேண் டும் எனக் கோரி அமைச் சர் டெனிஸ்வரனிடம் மனுவை அளித்தனர்.<br /><br />ரோலர் படகுகள் காரண மாக வடக்கின் கடல் வளம் அழிந்து போகும் என்பதால், அதற்கு அனு மதி வழங்க முடியாது என அமைச்சர் கூறியுள்ளார்.<br /><br />இதன் காரணமாகவே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கூட அதற்கான அனுமதியை வழங்கவில்லை எனவும் அமைச்சர் டெனிஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/89057.html#ixzz3FqhbhRHV<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-21393512180691014692014-10-11T20:33:57.076+05:302014-10-11T20:33:57.076+05:30உலகிலே பலப்பல தீவிரவாதிகள் தோன்றியது பற்றிய வரலாறு...உலகிலே பலப்பல தீவிரவாதிகள் தோன்றியது பற்றிய வரலாறுகள் எனக்குத் தெரியும். நாத்திகம் பேசும் நாவலரையும் நான் அறிவேன்.<br />நெருப்பாறு தாண்டும் வீரரும் எனக்குத் தெரியும். ஆனால் அவர் களுக்கும் பெரியாருக்கும் உள்ள ஒரு பெரிய வித்தியாசத்தை உணர வேண்டுகிறேன்<br /><br />விசித்திர வைதீகர்களை வீதி சிரிக்கச் செய்தார் சாக்ரடீஸ்! உலகம் உணராதவர்களுக்கு அது உருண்டை என்று உரைத்து உதைபட்டார் கலிலியோ! வைதீகத்தின் மடமையை வாட்டினார் வால்டேர்! மக்கள் மன்றத் திற்கு மதிப்புத் தர வேண்டுமென்றார் ரூஸோ!<br /><br />வேதப் புத்தகத்தை விற்று விபச்சார விடுதிக்குப் பணம் தரும் போகிகளைக் கண்டித்தனர் விக்ளிப் ஜிவிங்லி, மார்டின் லூதர் போன்றோர்!<br /><br />அடிமைகளை விடுவித்தார் ஆபிர காம் லிங்கன்! முதலாளிகளின் கொடு மையை எடுத்துரைத்தார் காரல் மார்க்ஸ்! அதற்காகப் போராடினார் லெனின்!<br /><br />சீனரின் சிறுமதியைப் போக்கினார் சன்யாட் சென்! துருக்கியரின் மதி தேய்வதைத் தடுத்தார் கமால் பாட்சா! இறைவன் பெயரைச் சொல்லி ஏழையை வஞ்சித்தவரைச் சந்தி சிரிக்க வைத்தார் இங்கர்சால்! பேதைமையைப் போக்கும் பணியை மேற்கொண்டார் பெர்னாட்ஷா!<br /><br />வாழ்க்கையில் வாட்டம், வேதனை, வறுமையின் கொடுமை, வஞ்சகத்தின் ஆட்சி - இவைகளிருப்பதைப் படம் பிடித் துக் காட்டினர் கோர்க்கி, டால் டாவஸ்கி, சிங்கனோ போன்றவர்கள்!<br /><br />இவர்களும் இன்னும் எண்ணற்றவர் களும் தோன்றி தொல்லைப்பட்டு, தூற்றப்பட்டு, கொடுமைக்கு ஆளாகி மனித சமூகத்தின் மறுமலர்ச்சிக் கொள்கைகளை, புதுகோட்பாடுகளை எவர்க்கும், எதற்கும் அஞ்சாது எடுத்துக் கூறி பாமரனுக்காகப் போராடியதனால் - இன்று பல்வேறு நாடுகளிலே மக்களின் மனம் விடுதலை பெற்றது; அடிமை மனப்பான்மை அகன்றது. அதனால் அங்கு ஒரு நாட்டை, இன்னோர் நாடு அடக்க முடியவில்லை! அடக்கினால் எரிமலை கக்குகிறது; மக்கள் மனம் எனும் கடல் பொங்கி வழிகிறது. புரட்சிப் புயல் வீசுகிறது! அதன் முன்பு எந்தக் கொடியவனாலும் நிற்க முடியவில்லை. இங்கே நடக்கும் கொடுமைகளைக் கண்டித்து எடுத்துக் கூறி எதிர்த்தவர் பெரியார் ஒருவர் தானே!<br /><br />எனவேதான், பெரியாருடைய பெரும் பணியை, நான் ஒரு தனி மனிதரின் வரலாறு என்றல்ல, ஒரு சகாப்தம் - ஒரு கால கட்டம் - ஒரு திருப்பம் - என்று கூறுவது வாடிக்கை.<br /><br />---------தந்தை பெரியார் 89ஆம் ஆண்டு பிறந்த நாள் மலரில் அண்ணாதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-74866797295481329232014-10-11T20:31:45.017+05:302014-10-11T20:31:45.017+05:30இன்றைய ஆன்மிகம்?
மனமது செம்மை?
மனமது செம்மையா னா...இன்றைய ஆன்மிகம்?<br /><br />மனமது செம்மை?<br /><br />மனமது செம்மையா னால் மந்திரம் ஜபிக்க வேண்டாம் என்கிறார் களே,<br /><br />அப்படியென்றால் மந்திரம் ஜெபிப்பவர் களும், கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்பவர்களும் மனமது செம்மை இல்லாதவர்கள் - அப்படித்தானே?<br /><br />Read more: http://viduthalai.in/e-paper/89060.html#ixzz3FqguYcUc<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-78787176252621165772014-10-11T07:18:13.181+05:302014-10-11T07:18:13.181+05:30பெரியார் நூலக வாசகர் வட்டக் கூட்டத்தில் 1948 காந்த...பெரியார் நூலக வாசகர் வட்டக் கூட்டத்தில் 1948 காந்தி கொலையும், 1975 காமராசர் மறைவும் வரலாற்றுத் <br /><br />சென்னை, அக்.5- சென்னை பெரியார் திடலில் அன்னை மணியம் மையார் அரங்கில் பெரியார் நூலக வாசகர் வட்டக் கூட்டத்தில் 1948 காந்தி கொலையும், 1975 காமராசர் மறைவும் வரலாற்றுத் தகவல்கள் என்ற தலைப் பில் வழக்குரைஞர் சு.குமார தேவன் உரையாற்றினார். பெரியார் நூலக வாசகர் வட்டச் செயலாளர் சத்திய நாராயணசிங் தலைமையில் துணை செயலாளர் சுப்பிர மணியன் வரவேற்றார். பொருளாளர் மனோகரன் இணைப்புரை வழங்கினார். புலவர் வெற்றியழகன், மண்டல மாணவரணி செயலாளர் மணியம்மை, மருத்துவர் க.வீரமுத்து, வை.கலையரசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.<br /><br />வழக்குரைஞர் சு.குமார தேவன் சிறப்புரையில், 1948 ஜனவரி மாதம் 30 ஆம் தேதி அன்று ஆர்.எஸ்.எஸ். மத வெறியர்களின் திட்ட மிட்ட சதியால் காந்தி கொல்லப்பட்டார். அந்தக் கொலை சதியில் ஆர்.எஸ். எஸ். அமைப்பினரின் தொடர்ச்சியான திட்ட மிட்ட செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்து ரைத்தார். காந்தி கொலை சதியில் வீரசவர்க்கர் மூளையாக செயல்பட்டவர் என்ப துடன் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப் பட்டவர்களில் தப்பி ஓடிய வர்களாக உள்ள மூன்று பேர்குறித்த தகவல் இன்று வரை ஏதும் வெளிவர வில்லை என்று குறிப் பிட்டார்.<br /><br />கொலைவழக்கு விசார ணைகள், குற்றம் சுமத்தப் பட்டவர்கள், அவர்களின் மதவெறிப் பின்னணி கொலைக்கான நோக்கங் களாக கோட்சே குறிப்பிட் டவை உள்ளிட்ட பல் வேறு தகவல்களை எடுத்துக் கூறினார். காந்தி கொலையுண்டபோது, தமிழ்நாட்டில் சில இடங்களில் ஏற்பட்ட கல வரசூழலை அடக்குவதற்கு பார்ப்பன எதிர்ப்பாளராக இருக்கும் தந்தை பெரியார் வானொலியில் மக்களிடம் உண்மையை எடுத்துக்கூறி அமைதி திரும்ப காரண மாக இருந்ததையும், அதே நேரத்தில் மகாராட்டி ரத்தில் பார்ப்பனர்கள் காங்கிரசைவிட்டு வெளி யேற்றப்பட்டு தாக்கப்பட்ட தையும் குறிப்பிட்டார்.<br /><br />1975 ஆம் ஆண்டில் அக்டோபர் 2ஆம் நாளில் கல்வி வள்ளல் காமராசர் மறைவுக்கு முக்கியக்காரண மாக இந்திரா காந்தியின் நெருக்கடிக் காலமே இருந் துள்ளது என்றும், நெருக் கடிக்காலத்தில் காங்கிர சுக்கு எதிரானவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கொடு மைகள், அச்சுறுத்தல்கள் மற்றும் தமிழ்நாட்டில் நெருக்கடிக்காலத்தில் காமராசரைக் கைது செய்யமறுத்த கலைஞரின் உறுதியால், திமுக ஆட்சிக் கலைப்பு, அதைத் தொடர்ந்து தலைவர்கள் கைது செய்யப்பட்டது குறித்தும், மொத்தத்தில் நெருக்கடிக்காலம் என்பது குறித்து சுருக்கமாகக் கூறும் போது, பத்திரிகைகள், நீதித்துறை, அரசு நிர்வாகத் துறை அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்ததைக் கூறினார். நெருக்கடிப் பிரகடனத் துக்கு காரணமாக இந்திரா காந்திமீதான வழக்கு, அவ்வழக்கில் நீதிபதி சின்கா, மேல்முறையீட்டில் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய் யர் ஆகியோர் அளித்த தீர்ப்பே பெரிதும் காரண மாக அமைந்தது என்பதை விரிவாக வழக்குரைஞர் சு.குமாரதேவன் குறிப் பிட்டார். கூட்ட முடிவில் மல்லிகா ராவணன் நன்றி கூறினார்.<br /><br />Read more: http://viduthalai.in/page1/88762.html#ixzz3FnT9Y3dw<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-28357385456662641632014-10-11T07:17:28.949+05:302014-10-11T07:17:28.949+05:30இன்றைய ஆன்மிகம்?
கபாலம்
திருக்கண்டியூரில் உள்ள த...இன்றைய ஆன்மிகம்?<br /><br />கபாலம்<br /><br />திருக்கண்டியூரில் உள்ள தீர்த்தத்தில் சிவன் நீராடியதால் கபாலம் நீங்கியது. இதற்கு திரு மாலுக்கு நன்றி தெரிவிக்க சிவபெருமான் தானே இவ்விடத்தில் கோயில் கொண்டார். இங்குள்ள சிவபெருமான் திருமால் அருளால் துயர் நீங்கி ய தைக் கண்டு மன மகிழ்ந்து சரஸ்வதி தேவியுடன் பிரம்மதேவர் கோவில் கொண்டுள்ளாராம்.<br /><br />-வைணவர்களின் இந்தக் கதையை ஸ்மார்த் தர்கள் சைவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?<br /><br />Read more: http://viduthalai.in/page1/88749.html#ixzz3FnSzwAeF<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-55501996454696126832014-10-11T07:17:17.046+05:302014-10-11T07:17:17.046+05:30எல்லாவற்றையும்விட, இக்கட்சியினர் தமிழகத்தில் ஆளுங்...எல்லாவற்றையும்விட, இக்கட்சியினர் தமிழகத்தில் ஆளுங்கட்சி என்ற பொறுப்பில் இருந்துகொண்டு ஆட்சி நடத்துகின்ற நிலையில், அவர்களுக்குச் சட்டம் - ஒழுங்கு, பிரச்சினையை ஏற்படுத்தலாமா? அன்றாட அரசியல் ஆளுமை, மின்வெட்டு முதலான பல்வேறு பிரச்சினை களுக்குத் தீர்வு காண்பதல்லவா அவசியம்!<br /><br />இவ்வாட்சியை இவர்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமா? வேண்டாமா? என்பதுபோல மத்திய அமைச் சர்கள் இங்கே விடுக்கும் எச்சரிக்கைகளை - எல்லாம் மனதிற்கொண்டு, தங்களது நடவடிக்கைகளை ஆளும் கட்சியினர், ஒழுங்குபடுத்திக் கொள்ளவேண்டியதே இப்போது அவசியமாகும்!<br /><br />எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும்!<br /><br />மீறி நீதிமன்ற நடவடிக்கைகள், தாறுமாறான விமர் சனங்கள் - அவர்களது தலைவி வெளியே வருவதற்கு இத்தகு நடவடிக்கைகள் உதவுவதற்குப் பதிலாக, எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்; ஊடகங்கள்மூலம் நீதித் துறையும், உலகமும், பொதுவானவர்களும் பார்த்துக் கொண்டு, முகம் சுளிக்கவும் செய்கின்றனர்!<br /><br />நாம் இப்படி எழுதுவது அக்கட்சியினருக்குக் கசப்பாகக் கூட இருக்கலாம். முதியவர்கள் சொல்லும் முதுநெல்லிக் கனியும் முன்னே கசந்து பின்னே இனிக்கும் என்பது பழமொழி. அ.தி.மு.க.வினரின் நடவடிக்கை எதுவாயினும் - இந்த இக்கட்டான தருணத்தில் அவர்கள் தலைவிக்கு உதவுமா? கேடு செய்யுமா? என்றே யோசிக்கவேண்டுமே தவிர, ஆத்திரக்காரர்களுக்கு அறிவு மட்டு என்ற முறை யில் ஆவேசம், ஆர்ப்பாட்டம், தரமற்ற வசைமாரிகளால் கேடுகளும், எதிர்விளைவுகளும்தான் மிஞ்சும்.<br /><br />யார் வழக்குப் போட்டது என்று ஆத்திரப்படுவதைவிட, ஏன் வழக்கு வந்தது? என்று சம்பந்தப்பட்டவர்கள் சுயபரிசோதனை செய்து, இனி எதிர்கால பொதுவாழ்க்கை எப்படி அமைத்துக் கொள்ளப்படவேண்டும் என்று முடிவு எடுத்துச் செயல்பட்டால், அது பயனுறு விடையாக, தீர்வாக உண்மையிலே அமையும்!<br /><br />அரசியல் பார்வை இல்லை!<br /><br />இப்போது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் தைரியத்தில் விரும்பத்தகாத செயல்கள் மேலும் மேலும் பிரச்சினைகளை சிக்கலாக்கும் என்பதை உணர்ந்து, அத்தலைமையே முன்வந்து இவர்களுக்கு அறிவுரை கூறினால், அது அவருக்கும், கட்சிக்கும், ஆட்சிக்கும் பயன்படக் கூடும்.<br /><br />அரசியல் பார்வை இதில் ஏதுமில்லை!<br /><br />கி.வீரமணி<br />தலைவர், திராவிடர் கழகம்.<br /><br />சென்னை<br />5.10.2014<br /><br />Read more: http://viduthalai.in/page1/88747.html#ixzz3FnSqem00தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com