tag:blogger.com,1999:blog-1474608369333206681.post7058653665632932276..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: திராவிடர் - வார்த்தை விளக்கம்தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-68094773070894579192012-05-20T19:18:48.426+05:302012-05-20T19:18:48.426+05:30பெரியார் அம்பேத்கர் உழைப்பு
அம்பேத்கர் பிறந்த மா...பெரியார் அம்பேத்கர் உழைப்பு<br /><br /><br />அம்பேத்கர் பிறந்த மாநிலத்தில் அவர் படித்த பள்ளியில்கூட அவருக்கு தண்ணீர் மறுக்கப்பட்டது. அந்த காலத்தில் அந்த அளவுக்கு ஜாதி வேற்றுமை இருந்தது. அதனால்தான் அவர் படித்து முடித்தவுடன் பொருளாதாரத்தில் பின்தங்கிய அடிதட்டு மக்களுக்காக பாடுபட்டார்.<br /><br />எத்தனையோ மாற்றங்களும் வளர்ச்சியும் இரட்டை குவளை முறை இன்னும் இருக்கத்தான் செய்கிறது. தமிழகத்தின் பெரியாரின் தீவிர முயற்சியால் ஜாதி வேற்றுமை ஒரு சில கிராமங்களை தவிர முற்றிலும் ஒழிக்கப் பட்டுள்ளது.<br /><br />பெரியாரின் முயற்சியால்தான் இடஒதுக்கீடு முறை தமிழகத்தில் முதன்முதலில் அமலுக்கு வந்தது. அதனால்தான் ஒடுக்கப்பட்ட பின்தங்கிய மக்கள் கல்வி கற்று பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு களை பெற்றுள்ளனர். தீண்டா மை இருக்கும் வரை அம்பேத்கர் மாதிரியான பெருமக்கள் போராடிக்கொண்டுதான் இருப்பார்கள். எவராலும் பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு ஜாதி வேறுபாடுகளும், ஒடுக்குமுறைகளும் கடந்த காலத்தில் நிலவின என்பதை எவராலும் மறுக்க முடியாது. இந்திய வரலாற்றில் அவை இருண்ட காலமாகும். தமிழ்நாட்டிலும், இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் சில கிராமங்களில், அடக்கு முறை அல்லது இரட்டைக் குவளை முறை தொடர்ந்து நிலவுகிறது; அனைத்து வழிகளிலும் இக்கொடிய மறை ஒழிக்கப்பட வேண்டும்.<br /><br />- எம்.ஒய்.இக்பால், தலைமை நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்<br /><br /> <br />அரவிந்தரின் ஆன்மீகம்<br /><br />புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில் ஏற்கெனவே பாலியல் புகார்கள் உள்ளன. இப்போது அரவிந்தர் பற்றிய நூல் புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளது. தி லைவ்ஸ் ஆஃப் அரபிந்தோ என்ற அரவிந்தரின் வாழ்க்கை குறித்த நூலை அமெரிக்காவைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர் பீட்டர் ஹீஸ் என்பவர் 2008இல் எழுதி வெளியிட்டுள்ளார். இந்நூலில், அரவிந்தரின் சுதந்திரப் போராட்டம் மதச்சாயத்துடன் கூடியது; அவர் தனது உளவியல் சிக்கல்களில் இருந்து விடுபடவே ஆன்மீகத்திற்குள் நுழைந்தார்; அவருக்கும் ஸ்ரீ அன்னை என்றழைக்கப்படும் மிரா அல்ஃபசாவுக்கும் இடையிலான உறவு முற்றிலும் காமம் சாராத உறவு என்றெல்லாம் சொல்லிவிட முடியாது என பீட்டர் ஹீஸ் குறிப்பிட்டுள்ளார். இதனை அரவிந்தர் பக்தர்கள் எதிர்க்கின்றனர். இந்த நூலாசிரியர் பீட்டர் ஹீஸ் 30 ஆண்டுகள் அரவிந்தர் ஆசிரமத்தில் தங்கியிருந்தவர். ஆன்மீகவாதி, புரட்சி செய்தவர், துறவி என்றெல்லாம் போற்றப்பட்டவருக்கு வாழ்வில் இப்படி ஒரு முகம் இருந்ததா என நூலைப் படிப்பவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-79129969895903281842012-05-20T19:15:16.196+05:302012-05-20T19:15:16.196+05:30நான்கு மொழிக்காரர்களுக்கிடையே தொடரும் ஒற்றுமை
நான்...நான்கு மொழிக்காரர்களுக்கிடையே தொடரும் ஒற்றுமை<br />நான்கு மொழிக்காரர்களுக்கிடையே தொடரும் ஒற்றுமை<br /><br /><br />இப்போது திராவிடம் என்ற கருத்தாக்கம் கேள்விக்குள்ளாவது சமூகக் காரணங்களால் அல்ல. அது வாக்குவங்கி அரசியல் சார்ந்தது. இதை இந்த முறை தொடங்கி வைத்திருப்பது ராமதாஸ். கட்சி அரசியல் சார்ந்த குழப்படியாக இது உள்ளது. திராவிடம் என்பது அரசியல் என்பதைத் தாண்டிய பண்பாட்டு அடையாளச் சொல்லாடல் ஆகும். அந்தப் பண்பாட்டு அர்த்தம் இன்றும் உயிர்ப்புடனேயே தொடர்கிறது. நான்கு தென்மாநிலங்களில் உள்ள பண்பாட்டுக் கூறுகளுக்கிடையில் ஒற்றுமைக்கூறுகள் நிலவுகின்றன. மூன்று பொதுக்கூறுகளைச் சுட்டிக்காட்டலாம் என்று நினைக்கிறேன். தாய் மாமனுக் கான மரியாதை என்பது இந்த நான்கு மொழிக்காரர்களுக் கிடையே இன்றும் தொடர்கிறது. இரண்டாவது தாய்தெய்வ வழிபாடு. மூன்றாவது இறந்த உடலுக்கான மரியாதை. இது நான்கு மொழிக்காரர்களிடமும் இருக்கிறது.<br /><br />இன்றைக்கும் பிராமணர்கள் சடலத்துக்கு மரியாதை கொடுப்பதில்லை. பிராமணர் களுக்கும் பிராமணர் அல்லாதவர் களுக்கும் இன்னும் நீடித்திருக்கும் வித்தியாசங்கள் உள்ளன. பிராமணர்கள் இன்றும் கருப்பட்டிக் காப்பி சாப்பிடுவ தில்லை. ஏனெனில் கீழ்ஜாதியின ராகக் கருதப்படுபவர்கள் கையில் தொட்டுச் செய்யும் பொருள் என்பதால், அவர்கள் அதை விரும்புவதில்லை. பிராமணர் வீடுகளில் பீன்ஸ்கூட போய்விட்டது. ஆனால் இன்னமும் பனங்கிழங்கு செல்லமுடியவில்லை. ஏனெனில் பூமிக்குக் கீழே விளையும் பொருளை சூத்திரனும், பன்றியும் சாப்பிட்டு விடுகிறார்கள். அதனால் அதை அவர்கள் தொடுவதில்லை. ஆம்லேட் சாப்பிடுகிறார்கள். உருளைக்கிழங்கு சாப்பிட ஆரம்பித்துவிட்டனர். ஏனெனில் அவையெல்லாம் துரைமார் கொண்டு வந்த பொருட்கள். சங்கீத சீசனை டிசம்பரில் வைப்பது அவர்களது கண்டுபிடிப்புதானே. ஏன் தொண்டைக் கட்டுகிற டிசம்பரில் சங்கீத சீசன் வருகிறது? கோடையில்தானே வைக்க வேண்டும்? வெள்ளைக்காரர்களை மகிழ்விக்க அவர்களுக்கு உகந்த டிசம்பரில் சங்கீத கச்சேரிகளை வைத்தார்கள். அவர்களுடைய கிறிஸ்துமஸ் விடுமுறையில் மகிழ்விக்கத்தானே இந்த ஏற்பாடு? இது இன்றும் தொடர்கிறது.<br /><br />அவர்களின் சாமிக்குக்கூட திரையை மூடித்தானே தளிகை வைக்கிறார்கள். ஆனால் கடலைமாடனுக்கு முன்னால் பகிரங்கமாக ஆட்டை அறுத்துப் போட்டிருப்பார்கள். அதை எல்லாரும் பார்க்கலாம். அதனால் பல வழக்கங்கள் உயிரோடுதான் இருக்கின்றன.<br /><br />பெரியார் நிறைய அதிர்ச்சி மதிப்பீடுகளை வைத்தார். ராமன் படத்தை செருப்பால் அடித்தார். பிள்ளையார் சிலையை உடைத்தார். ஆனால் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை பெரியார் தானே செய்தார். வேறு எந்த தமிழறிஞரும் முன்வரவில்லையே. அவர் காலத்து தமிழறிஞர்களான மறைமலை அடிகளோ, தெ.பொ.மீயோ, மு.ராகவையங்காரோ செய்ய வில்லையே. காட்டுமிராண்டி பாஷையைத் திருத்துவதற்கு அவர் முயற்சி எடுத்தவர் இல்லையா, உரைநடை என்பது மணிக்கொடியால் தான் வளர்ந்தது என்று வேதவசனம் மாதிரி சொல்கின்றனர். ஆனால் 1925இல் பெரியாரின் தலையங்கங்களைப் பார்க்கவேண்டும். பெரியாரின் உரைநடை அத்தனை அற்புதமாக இருக்கிறது. இதுவெல்லாம் பெரியாரைத் திட்டி அதிகாரத்தைத் தக்கவைக்கிற முயற்சிகள்தான்.<br /><br />பார்ப்பனர்கள் சமூக, அரசியல், பொருளாதாரத் துறைகளில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய ஒரு காலகட்டத்தில் பார்ப்பனரல்லாதார் அரசியலை முன்வைத்து உண்மையான சமூக அதிகாரத்தையும் அரசியல் அதிகாரத்தையும் வென்றெடுப்பதற்கான அரசியலைச் செய்தவர் பெரியார். அதை வெறுப்பரசியல் என்று குறுக்கக் கூடாது. இன்று மாறியிருக்கும் தமிழ்ச் சமூகநிலையை வைத்து, அவர் செய்த அரசியல் வெற்றி பெற்றிருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.<br /><br />- தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளர் பேரா.தொ.பரமசிவன்<br />நன்றி: த சன்டே இந்தியன், 29.04.2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-57627431361912145612012-05-20T16:51:03.230+05:302012-05-20T16:51:03.230+05:30கருத்தரங்கில் தி.க. பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங...கருத்தரங்கில் தி.க. பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங் குன்றன் கலந்து கொண்டு திராவிடரா? தமிழரா? என்ற தலைப்பில் உரையாற்றினார். அவர் பேசும் போது: திரா விடர் இயக்கம் தான் தமிழர் களுக்கு பாடுபட்டு வருகிறது. திராவிடரா? தமிழரா? என் பதில் பார்ப்பனர்களிடமிருந்து தமிழரை பாதுகாக்கும் குறிச் சொல், திராவிடர் என்பது திரா விட இயக்கம்தான் என்றைக் கும் தமிழுக்காகவும், தமிழின மக்களின் உணர்வுக்காகவும் பாடுபட்டு வருகிறது. திராவிடர் இயக்கத்தால் வீழ்ந்தோம் என்று சொல்லக் கூடிய தமிழ் தேசியவாதிகள், பார்ப்பனர் களின் கைக்கூலிகளாகவும், ஆர். எஸ்.எஸ்.சின் ஒலிபெருக்கிகளா கவும் செயல்படுகின்றனர்.<br /><br />திராவிடர் இயக்கமும், தந்தை பெரியாரும் இல்லாமல் இருந்திருந்தால் தமிழரின் கதி என்னவாகியிருக்கும்? சற்று யோசித்து பாருங்கள். இன் றைக்கு திராவிடர் இயக்கத்தை யும், திராவிடர் இயக்க கொள் கையையும் கொச்சைப்படுத்தி பேசுகிறவர்கள், இந்த இயக்கத்தால்தான் சமுதாயத் தில் உயர்ந்திருக்கிறார்கள். இந்த நாட்டில் கல்விப் புரட் சியை செய்த கல்வி வள்ளல் காமராசரின் ஆட்சிக்கு தந்தை பெரியார் அவர்கள் பெரும் உறுதுணையாக திகழ்ந்தார்கள். எம்.ஜி.ஆர் கொண்டு வந்த பொருளாதார உச்சவரம்பு சட் டத்தை கடுமையாக எதிர்த்தது முதல் தமிழர்களுடைய வாழ் வுக்கும், சமூக நீதிக்கும், இட ஒதுக்கீட்டிற்கும் என்றைக்கும் திராவிடர் கழகம் தான் போராடி வந்துள்ளது. அதில் வெற்றியும் கண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். 20-5-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com