tag:blogger.com,1999:blog-1474608369333206681.post6970023025842786997..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: திருமணங்கள் எல்லாம் பெரியார் வழியில் நடக்க வேண்டும்!-இராஜகோபாலாச்சாரியார்தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-21704596550422474462015-06-27T22:34:20.678+05:302015-06-27T22:34:20.678+05:30அறிவு ஆசான் தந்தை பெரியாருக்கு யுனெஸ்கோ விருது வழங...அறிவு ஆசான் தந்தை பெரியாருக்கு யுனெஸ்கோ விருது வழங்கிய நாள்- இந்நாள்!<br /><br />1970 ஜூன் 27 நினைவிருக்கிறதா? அன்று ஒரு பொன்னாள் - அறிவு மலர்ந்து மணம் வீசிய நாள் -அன்றுதான் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களுக்கு அய்.நா.வின் யுனஸ்கோ தேடி வந்து விருது அளித்து பெருமை என்னும் விருதினை அணி கலனாக பூண்டநாள்!<br />பெரியார் - புதிய உலகின் தொலை நோக்காளர்<br />தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ்<br />சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை<br />அறியாமை, மூடநம்பிக்கை,<br />பொருளற்ற பழக்க வழக்கங்கள் மற்றும்<br />கீழான நடவடிக்கைகளுக்கு கடும் எதிரி என்ற விருது வழங்கப்பட்ட நாள்! மத்திய அமைச்சர் திரிகுணசென் தலைமையில், தமிழக முதல்வர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களால் அறிவு ஆசான் பெரியாரின் திருக்கரங்களில் அந்த விருது வழங்கப்பட்டது.<br /><br />குறிப்பு: இத்தகு பெருமைமிக்க பாராட்டுரைகளை ஆய்வு செய்து கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கடந்த ஆண்டு நான்கு நாள்கள் கட்டணத்துடன் கூடிய ஆய்வு சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இவ்வுரைகள் தொகுக்கப்பட்டு சிறந்த ஆய்வு நூலாக விரைவில் வெளிவர உள்ளது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-40444339990262621382015-06-27T22:26:39.886+05:302015-06-27T22:26:39.886+05:30இனியாவது போகாதே!
அட முட்டாள்களா! எதற்காகக் கோயிலு...இனியாவது போகாதே!<br /><br />அட முட்டாள்களா! எதற்காகக் கோயிலுக்குப் போகிறீர்கள்? அங்கே உன்னைப் பார்ப்பான் வெளியே நில், உள்ளே வரக்கூடாது என்கின்றானே! உனக்குமானமில்லையா?ரோசமில்லையா? அங்கு இனியாவது போகாதே!<br />விடுதலை, 20.11.1969தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-12248316921110366372015-06-27T22:24:29.656+05:302015-06-27T22:24:29.656+05:30நீங்கள் விடும் செமிக்காத ஏப்பம் அதை என் முகத்தில் ...நீங்கள் விடும் செமிக்காத ஏப்பம் அதை என் முகத்தில் விடாதே!<br /><br /><br /><br />யோகாவை யாரும் தடை செய்யக் கோரவில்லை. யார் யாருக்கு என்ன முடியுமோ அப்படி மகிழ்ச்சியாக வாழலாம்.<br /><br />ஆனால், இப்போது மோடி நடத்திய யோகா நாடகம், தனது மத்திய தர வர்க்க வாக்காளர் களிடையே கிழியத் தொடங்கும் நல்லாட்சி எனும் முகமூடியை ஒட்ட வைக்க நடத்தப்படும் ஒட்டுப் பிளாஸ்திரி வேலை என்பதால் இதை நாம் எதிர்க்க வேண்டி யிருக்கிறது.<br /><br />ஏழைகளை இன்னும் விலக்கி வைக்கிற ஒரு பொருளாதார திட்டத்தை முன்னிறுத்தும் மோடி, பத்து பதினைந்து பணக்காரர்களை இன்னும் பணக்காரர்களாக்குவதே வளர்ச்சித் திட்டம் என்று சொல் லும் மோடி, ஏழைகளுக்கு பாது காப்பாக இருக்கிற நலத்திட்டங் களை எல்லாம் இழுத்து மூடிக்கொண்டிருக்கும் மோடி, தனது இந்துத்துவ அடியாட்கள் அடிக்கும் லூட்டிகளை அமைதி யாக இருந்து ஆமோதிக்கும் மோடி, கலர் கலராக உடையணிந்து நம்மைக் கேவலப்படுத்தும் மோடி, இந்தியாவில் இருக்கும் அறிவு சார்ந்தஅரசு நிறுவனங்களில் தனது ஜால்ராக்களை முக்கியஸ்தர் களாக்கி அவற்றை நீர்த்துப் போகச்செய்யும் மோடி, ஆதிவாசி, தலித், முஸ்லீம், கிறிஸ்தவர், ஹிந்தி அல்லாத பிற இந்திய மொழி பேசுபவர், விவசாயி, கைவினைஞர், மீனவர், பாலியல் சிறுபான்மை யினர், மாற்றுத் திறனாளி என்று எல்லோரையும் அந்நியனாக்கும் மோடி, யோகா என்ற பெயரில் நம்மை வைத்து காமெடி பண்ணுவ தாக சுயமரியாதை உள்ள எனக்குப் படுகிறது.<br /><br />அதனால் நான் இந்த யோகா நாடகத்தை எதிர்க்கிறேன். சிலருக்கு வடக்கிருத்தல் உசிதம் என்றால் நான் அதையும் வரவேற்பேன்.<br /><br />ஆன்மா சுத்தி அடையும், அதனால் கரண்ட் கம்பியில் தொங்க விருப்பமென்றாலும் நான் தடுக்க மாட்டேன். எனது பெருமை என்று என்னை உங்கள் விளையாட்டில் மட்டும் தயவு செய்து சேர்க்காதீர்!<br />இந்திய ஞானமரபு என்பது நீங்கள் விடும் செமிக்காத ஏப்பம். அதை என் முகத்தில் விடாதே என்று சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது.<br /><br />(முக நூலிலிருந்து குடந்தை கருணா)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-20495326487431474452015-06-27T22:12:44.941+05:302015-06-27T22:12:44.941+05:30குஜராத் : பாலியல் வன்முறை மற்றும் கொலை வழக்கு குற்...குஜராத் : பாலியல் வன்முறை மற்றும் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்தது நீதிமன்றம்<br /><br />சனி, 27 ஜூன் 2015 <br /><br /><br />அகமதாபாத் ஜூன் 27_ குஜராத் கலவரத்தில் சொந்தப் பகைக்காக பாலி யல் வன்புணர்வு செய்து கொலை செய்த குற்ற வாளிகளுக்கு எதிராக சாட்சிகள் இல்லாததைக் காரணம் காட்டி மூன்று குற்றவாளிகளையும் அகமதா பாத் நீதிமன்றம் விடுதலை செய்தது. குஜராத் மாநிலத்தில் மோடியின் ஆட்சியின் போது 2002-ஆம் ஆண்டு மதக்கலவரம் நிகழ்ந்தது, இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் படு கொலை செய்யப்பட்ட னர். இஸ்லாமியர்களின் வசிப்பிடம் தொழில் நிறு வனம் மற்றும் சொத்துக் கள் சேதப்படுத்தப்பட் டன. இன்றுவரை இந்த கலவரத்திற்காக நீதி கிடைக்காத பட்சத்தில் முதன்மைக் குற்றவாளிகள் அனைவரும் விடுவிக்கப் பட்டு விட்டனர். கடந்த ஆண்டு மோடி, அமித் ஷா போன்றவர்களை சிறப்பு புலனாய்வு நீதி மன்றம் இந்தவழக்கில் இருந்து விடுவித்தது. இதனை அடுத்து கலவர வழக்கில் நேரடித் தொடர்புடையவர்கள் தற்போது விடுவிக்கப் பட்டு வருகின்றனர். கலவரத்திற்கு தொடர் பில்லாத ஆனந்த மாவட் டத்தில் ஆடே என்ற ஊரில் நிலத் தகராறு தொடர்பாக அங்குள்ள முஸ்லீம் குடும்பத்தின் மீது அந்த ஊரில் உள்ள சிலர் வன்மம் வைத்திருந் தனர். கோத்ரா சம்பவம், அதைத் தொடர்ந்து அகமதாபாத் வரை கலவரம் பரவியதைச் சாதகமாகக் கொண்டு அந்த ஊரைச் சேர்ந்தவர் கள் முஸ்லீம் குடும்பத்தி னரைக் கொலை செய் தனர், முஸ்லீம் குடும்பப் பெண்களான ஆயிசா, நூரி ஆகியோரை அன்கூர் படேல் மோகன் படேல், நிகுல் படேல் போன்றவர் கள் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய் தனர், நூரியின் சகோதர ரான காதர் என்பவரை உயிருடன் எரித்துக் கொலை செய்தனர். சம்பவம் நடந்த பிறகு அனைத்து பிணங்களை யும் வீட்டிற்குள் போட்டு எரித்து விட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஆடே ஊரைச் சேர்ந்த 20 பேர்கள் மீது சிறப்பு புலனாய்வுத்துறை வழக் குப் பதிவு விசாரணை செய்து வந்தது. கடந்த ஆண்டு 14 பேர், சாட் சிகள் இன்றி விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிலையில் நேரடித் தொடர்புடைய அங்கூர், மோகன், நிகுல் ஆகி யோரை அகமதாபாத் நீதி மன்ற நீதிபதி எ.எஸ்.பட்டு விடுதலை செய்தார். தனது தீர்ப்பில் அவர் கூறியுள்ளதாவது, சிறப்புப் புலனாய்வுத்துறை குற்றம் தொடர்பானவர்கள் மீதான சான்றுகளை வைக்கவில்லை. மேலும் சாட்சிகள் யாரும் இவர் கள் இந்தச் சம்பவத்தில் தொடர் புடையதாகக் கூறவில்லை. ஆகையால் இவர்கள் அனைவரும் இந்த வழக் கில் இருந்து விடுதலை செய்யப்படுகிறார்கள் என்று கூறியிருந்தார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-44858251529713945532015-06-27T22:12:07.325+05:302015-06-27T22:12:07.325+05:30ஈழத் தமிழர்களுக்கு எதிரான உச்சக் கட்டப் போரில் வெள...ஈழத் தமிழர்களுக்கு எதிரான உச்சக் கட்டப் போரில் வெள்ளைக் கொடியுடன் சரண் அடைந்தவர்கள் கொல்லப்பட்டது ஏன்?<br /><br />சனி, 27 ஜூன் 2015 <br /> <br /><br />ஜெனீவா மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் விடுதலைப்புலிகளின் மனைவிகள் கண்ணீர்ப் பேட்டி<br /><br /><br /><br />ஜெனீவா, ஜூன் 27_ இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான உச்சக்கட்டப் போரில் வெள்ளைக் கொடியுடன் சரண் அடைந்தவர்களை இலங்கை சிங்கள ராணுவம் கொன்றது ஏன் என்று ஜெனீவா நகரில் நடைபெற்ற அய்.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் மனைவிகள் கண்ணீர் மல்க கேள்வி கேட்டனர்.<br /><br />அய்.நா. மனித உரிமைப் பேரவையின் 29ஆவது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் கடந்த 15ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. அடுத்த மாதம் (ஜூலை) 3ஆம் தேதி முடிய இந்த கூட்டம் நடைபெறுகிறது.<br /><br />இந்த கூட்டத்தில் இலங்கையில் 2009ஆம் ஆண்டு விடுதலைப்புலி களுக்கு எதிரான உச்சக் கட்டப்போரில் மனித உரிமைகள் மீறப்பட்டது தொடர்பாக இலங்கை அரசு மீது பல்வேறு நாடு களின் உறுப்பினர்களும் கடுமையாக குற்றம் சாட் டினர்.<br /><br />அவர்கள் பேசும் போது: வெள்ளைக்கொடி யுடன் சரண் அடைந்த விடுதலைப்புலிகள் இயக் கத் தலைவர்கள் புலித் தேவன், நடேசன், மல ரவன், விடுதலைப்புலிகள், அப்பாவித் தமிழர்கள் உள்ளிட்ட 18 ஆயிரம் பேரின் நிலை என்ன ஆயிற்று? அவர்கள் உயி ருடன் இப்போது இருக் கிறார்களா? என்பதை சொல்ல இலங்கை அரசு ஏன் மறுக்கிறது? என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.<br /><br />முன்னதாக பசுமை தாயகம், இங்கிலாந்து தமிழர் பேரவை, அமெ ரிக்க தமிழர் அரசியல் செயற்பேரவை ஆகிய அமைப்புகள் இணைந்து இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள் குறித்த சிறப்பு இணை கூட்டத்தை நடத்தின.<br />கூட்டத்துக்கு இங்கி லாந்து முன்னாள் எம்.பி. யும், தமிழர்கள் நீதிக்கான நல்லெண்ண தூதுவரு மான லீ ஸ்காட் தலைமை தாங்கினார்.<br /><br />சர்வதேச மனித உரி மைகள் சட்ட நிபுணரும், இங்கிலாந்து வழக்குரை ஞர்கள் பேரவையின் மனித உரிமை குழு தலை வருமான ஜெனைன் கிறிஸ்டி பிரிமெலோ கியூசி, தமிழக வழக்குரை ஞர்கள் சமூக நீதி பேரவை தலைவர் க.பாலு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.<br />இலங்கை போரின் போது வெள்ளைக்கொடி யுடன் சரண் அடைந்த விடுதலைப்புலிகள் இயக்க தலைவர்களான மலரவன் மனைவி சுசிலாம்பிகை, புலித்தேவன் மனைவி குறிஞ்சி மற்றும் நடேச னின் மகன் உள்ளிட்ட பல ருடைய உறவினர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.<br /><br />இலங்கையில் மனித உரிமை மீறல் தொடர்பாக அய்.நா. சபையில் செப் டம்பர் மாதம் இறுதி அறிக்கை தாக்கல் செய் யப்பட இருக்கிறது. அப் போது அய்.நா.வின் நேரடி சாட்சிகளாக உள்ள இந்த மூவரின் சாட்சியங்களால் இலங்கை அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் என்று கருதப்படுகிறது.<br /><br />மலரவன் மனைவி சுசிலாம்பிகை கண்ணீர் மல்க ஜெனீவா அய்.நா. வளாகத்தில் கூறும்போது, 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி முல் லைத்தீவு வட்டுவாய்க்கால் பகுதியில் பல போராளி களுடன் எனது கணவரை சரணடைய வைத்தேன். அதன்பிறகு 6 ஆண்டுகள் ஆகியும் அவரைப்பற்றி எந்த தகவலும் இல்லை. இலங்கை ராணுவம் எந்த பதிலையும் தெரிவிக்க மறுக்கிறது என்றார்.<br /><br />புலித்தேவனின் மனைவி குறிஞ்சி கூறும் போது, இலங்கை அரசு அனுமதியுடன் சர்வதேச நாடுகளுக்கு தெரிவித்த பிறகு ராணுவ கட்டுப் பாட்டு பகுதிக்குள் புலித் தேவன், நடேசன் உள் ளிட்ட போராளிகள் வெள்ளைக்கொடியுடன் சென்று சரண் அடைந் தனர். அதன்பிறகு அவர் களின் உயிரற்ற உடல் களைத்தான் இலங்கை மீடியா காட்டியது. வெள்ளைக்கொடியுடன் சரண் அடைந்தவர்கள் என்ன காரணத்துக்காக கொல்லப்பட்டனர் என்பதற்கு பதில் கிடைக்க வேண்டும் என்றார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-15706467875574549752015-06-27T22:11:23.163+05:302015-06-27T22:11:23.163+05:30ஏழுமலையான் சக்தி வெத்து வேட்டுதானா? கோயில்மீது விம...ஏழுமலையான் சக்தி வெத்து வேட்டுதானா? கோயில்மீது விமானம் பறக்க தடையாம்!<br /><br />சனி, 27 ஜூன் 2015<br /><br />திருமலை, ஜூன் 27_ திருப்பதி ஏழுமலை யான் கோயில் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ய்பு இருப்பதாக மத்திய புலனாய்வு துறை பலமுறை எச்சரிக்கை செய்துள்ளதாம்!. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருப்பதியை ஆய்வு செய்த எம்பிக்கள் குழு, ஏழுமலையான் கோயில் மீது விமானம் பறக்க தடை விதிக்க பரிந்துரை செய்தனர். இந்நிலையில் பாதுகாப்பு கருதி கோயில் மீது விமானங்கள் பறக்க தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்த தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-82054859550783082842015-06-27T22:09:21.298+05:302015-06-27T22:09:21.298+05:30ஆகவே, தந்தை பெரியாருக்கும் வங்கிக்கும் பெரிய தொடர்...ஆகவே, தந்தை பெரியாருக்கும் வங்கிக்கும் பெரிய தொடர்பு இருந்தது. அதிலே முழுமையாகச் சொல் வதானால், பெரியார், பெரியாருடன் வாழ்ந்துள் ளோம்.<br /><br />ஆனால், இங்கே நடக்கின்ற நிகழ்வுகளைப் பார்க்கின்றபோது, யாராவது பணி ஓய்வு பெற்றால் வழியனுப்புகின்ற விழாவாகத்தான் செய்வார்கள். எனக்கும்கூட இதே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலு வலர்கள் சங்கம் எல்லாம் சேர்ந்து பெரிய அளவில் செய்தார்கள். ஆனால், தனக்கு உதவியவர்களை அழைத்து அவர்களுக்கு மரியாதை செய்வது என்பது இதுவரைக்கும், நான் கேள்விப்படாதது. குமரேசன் அவர் சார்ந்த இயக்கத்தை மறக்காமல் ஆசிரியர் அவர்களை அழைத்துள்ளார். அதுமட்டு மன்றி இந்த விழாவை பெரியார் திடலில் நடத்து கிறார். மிகப்பெரிய தன்னம்பிக்கை உள்ளவர்கள், ஆழ்ந்த சிந்தனை உடையவர்கள் என்பதை இதி லிருந்து பார்த்துவிடலாம். எனக்கும், குமரேசன் அவர்களுக்கும் வங்கி வழியாகத்தான் தெரியும். இருந்தாலும் என்னை இந்த விழாவுக்கு வரவேண்டும், உங்களை, நான் போற்ற வேண்டும் என்று சொன் னவுடனே அதிர்ச்சி அடைந்தேன். நான் ஆடிப் போய்விட்டேன் முதலில். நம்மை எதற்காக கூப்பிடு கிறார்கள் என்று முதலில் தெரியவில்லை.<br /><br />நான் முதல் சம்பளம் வாங்கியபோது என்னுடைய பள்ளிக்கூடத்து ஆசிரியரிடம்தான் கொடுத்தேன். பேராசிரியர் அன்பழகன்கூட ஒரு முறை ஆசிரியர்கள் ஸ்டிரைக் நடந்துகொண்டிருந்தபோது சொன்னார். கூட்டத்தில் சொன்னாராம். நீங்கள் எல்லாம் படிக் கும்போதே பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத் திருந்தீர்கள் என்றால் நமச்சிவாயம்போல் முதல் சம்பளத்தை உங்களுக்கு அனுப்பிவிடுவார்கள். ஒவ் வொரு ஆசிரியரும் பெரிய பணக்காரர் ஆகியிருக்க லாம் என்று சொன்னார். அதுமாதிரி பெரிய மரியாதைக்கு உரியவர் நம்முடைய ஆசிரியர் வீரமணி அவர்கள்.<br /><br />தந்தை பெரியாருக்கும், நம்முடைய வங்கிக்கும் இருக்கின்ற ஒரு பெரிய தொடர்பு அதிகமாக இருந்த காரணத்தால், குமரேசன் இந்த இடத்தைத் தேர்ந் தெடுத்ததும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆகவே, குமரேசனை நாம் பாராட்டியாக வேண்டும். ஆனால், நம்மையெல்லாம் அழைத்து பாராட்டி இருக்கிறார்.<br /><br />பாராட்டுதலுக்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன். நான் வேறு எந்த விதத்திலும் அவருக்குக் கடமைப்பட்டவன் அல்லன். ஆனால், அவர் வங்கியிலிருந்து ஓய்வு பெற்று, இந்த கழகப் பணிகளையும், மற்றும் ஏனையத் தொண்டுகளையும் செய்து, சிறப்பான வாழ்க்கையை வாழ வாழ்த்துகிறேன். _ இவ்வாறு நமச்சிவாயம் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-48403375728381458012015-06-27T22:09:12.235+05:302015-06-27T22:09:12.235+05:30தந்தை பெரியாருக்குப் பிறகு - அறக்கட்டளைகளைக் காப்ப...தந்தை பெரியாருக்குப் பிறகு - அறக்கட்டளைகளைக் காப்பாற்ற வீரமணியால்தான் முடியும்:<br /><br />இந்தியன் ஓவர்சீஸ் வங்கியால் பாதுகாக்கப்பட்ட அன்னை மணியம்மையாரின் கடிதம் உறுதி செய்தது வரலாற்றை சுட்டிக்காட்டி அய்.ஓ.பி. முன்னாள் இயக்குநர் நமச்சிவாயம் பெருமிதம்<br /><br /><br /><br />சென்னை, ஜூன் 27_ தந்தை பெரியாருக்குப் பிறகு, அறக்கட்டளைகளைக் காப்பாற்ற வீரமணியால்தான் முடியும் என்று அன்னை மணியம்மையார் அவர்கள் கடிதம் எழுதி, அப்பொழுதைய இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் இயக்குநர் நமச்சிவாயம் அவர்களிடம் வழங்கி, பாதுகாக்க சொல்லியதைப்பற்றி சுட்டிக் காட்டினார் நமச்சிவாயம் அவர்கள்.<br /><br />பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளரும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதுநிலை மேலாளரும், வங்கி அதிகாரிகள் அமைப்பின் இணைப் பொதுச் செயலாளருமான வீ.குமரேசன் அவர்களின் வங்கிப் பணி நிறைவு, நன்றி செலுத்தும் விழா 25.6.2015 அன்று மாலை பெரியார் திடல் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்றது. இவ்விழாவில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேனாள் செயல் இயக்குநர் நமச்சிவாயம் பேசும்போது குறிப்பிட்ட தாவது:<br /><br />தந்தை பெரியாருக்கும், எங்களுக்கும் மிகுந்த தொடர்பு உண்டு. அது நிறைய பேருக்குத் தெரியாது; தந்தை பெரியார் அவர்கள் நம்முடைய வங்கியிலே கதீட்ரல் கிளையில் ஓர் உறுப்பினராக இருந்தவர்கள். தந்தை பெரியார் விடுதலை பத்திரிகை பெரிய பத்திரிகை ஆவதற்காக வேண்டிய மெஷினை நாம் தான் இறக்குமதி செய்து கொடுத்தோம். அதுமட்டு மல்ல. மணியம்மையார் அம்மாவின் பெரிய நம்பிக்கைக்கு நாம் பாத்திரமானோம். மணியம்மையார் அம்மாவும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு வைத்திருந்தார்கள்.<br /><br />தந்தை பெரியாருக்கு அப்புறம் யார் என்று சின்ன சந்தேகம் வந்தது. யாரை நிய மிப்பது என்று மணியம்மையார் அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அவர்கள் ஒரு சீட்டில் எழுதி கவரில் போட்டு எனக்கு பின்னால் இவர்கள் என்று சொல்லி வேறு யாரிடமாவது கொடுத்திருக்கலாம்.<br /><br />என்னிடம் கொடுத்து நம்முடைய இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பெட்டகத்தில் (சேஃப்டி பாக்சில்) வைத்திருக்குமாறு சொன்னார்கள். அதில் யார் பெயர் இருந்தது என்று எனக்கும் தெரியாது. பெட்டகத்தில் வைத்திருங்கள். நான் போனபிறகு அதைத் திறந்து பாருங்கள் என்று கூறிவிட்டார். ஆகவே, அதை நம்முடைய வங்கியிலே சேஃப்டி பாக்சில் பத்திரமாக வைத்துவிட்டோம். அவர்கள் இறந்தபிறகு அதை எடுத்து ஒரு நாலைந்து பேருக்கு முன்னால் பிரித்துப் பார்த்ததால், வீரமணி அவர்களுடைய பெயர் இருந்தது. அவருக்கு அப்பொழுதே தெரியும், இவ் வளவு பெரிய டிரஸ்டை காப்பாற்ற வேண்டுமானால், தந்தை பெரியாருக்குப் பிறகு வீரமணி அவர்களால் தான் முடியும் வேறு யாராலும் முடியாது என்று.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-47807873357808157092015-06-27T22:04:59.004+05:302015-06-27T22:04:59.004+05:308 தமிழர்களை கொலை செய்த சிங்கள ராணுவ அதிகாரிக்கு மர...8 தமிழர்களை கொலை செய்த சிங்கள ராணுவ அதிகாரிக்கு மரண தண்டனை கொழும்பு உயர்நீதிமன்றம் உத்தரவு<br /><br />சனி, 27 ஜூன் 2015 <br /><br /><br />கொழும்பு, ஜூன், 27_ இலங்கையில் 4 குழந் தைகள் உள்பட 8 தமிழர் களை கொலை செய்த ராணுவ அதிகாரிக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.<br /><br />இலங்கையில் தமிழர் களுக்கு எதிராக இழைக் கப்பட்ட போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து, சர்வ தேச விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.<br /><br />இந்த நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட 8 தமிழர்களை, சுனில் ரத்னாயகே என்ற சிங்கள ராணுவ அதிகாரி கடந்த 2000ஆம் ஆண்டு பிடித் துச் சென்று அவர்களது கழுத்தை அறுத்து கொடூர மாக கொலை செய்ததாக புகார் கூறப்பட்டது.<br /><br />இலங்கையில் ஈழத் தமிழர்கள் மத்தியில் மிகவும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத் திய இந்த சம்பவம் தொடர்பாக கொழும்பு உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. சுமார் 15 ஆண்டு களாக நடந்து வந்த இந்த வழக்கில், ராணுவ அதி காரி சுனில் ரத்னாய கேவுக்கு மரண தண் டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.<br />இந்த தீர்ப்பை அரசு வழக்குரைஞரும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலு மான சரத் ஜெயமன்னா வரவேற்றுள்ளார். ஒரு நம்பகமான விசார ணையை எங்களால் நடத்த முடியும் என்பது இதன் மூலம் தெளிவு படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.<br /><br />புத்த மதத்தினரை பெரும்பான்மையாக கொண்ட நாடான இலங் கையில், கடந்த 1976ஆம் ஆண்டுக்குப்பிறகு யாருக் கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. அங்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி கள் சுமார் 400 பேர், தண் டனை நிறைவேற்றத்துக் காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.<br />இனவாதம் மீண்டும் தலைதூக்குகின்றது<br /><br />மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரிக்கு சமூக வலைத் தளமான டுவிட்டர் பக் கத்தில் 10000 பேர் தமது ஆதரவினை தெரிவித்துள் ளனராம்.<br /><br />கடந்த 2000ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் மிருசுவிலில் 8 தமிழ் மக்களைப் படுகொலை செய்த வழக்கில் குற்ற வாளியாக நிரூபிக்கப்பட்டு கொழும்பு மேல் நீதிமன் றத்தால் நேற்றுமுன்தினம் மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிபர் சுனில் ரத்னாயக் கவுக்கு ஆதரவாக டுவிட் டர் தொடங்கப்பட்ட பக்கத்திற்கு முதல் நாளி லேயே 10 ஆயிரம் பேர் ஆத ரவு தெரிவித்துள்ளனர்.<br /><br /><br />'போர் வெற்றி வீரர் சுனில் ரத்னாயக்கவை பாதுகாப்போம்' என்ற பொருள்படும் ஆங்கில வார்த்தைகளால் தொடங் கப்பட்ட இந்தப் பேஸ்புக் பக்கத்திற்கே பல்லாயிரக் கணக்கான சிங்களவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளன ராம்!<br /><br />படைவீரர்களைப் பாதுகாப்போம் என அரசு மீண்டும் மீண்டும் கூறி வரும் நிலையில், சிங்கள மக்கள் மத்தியில் படை வீரர்கள் தொடர்பில் நிலவும் எண்ணத்தைப் பிரதிபலிப்பதாகவும் இந்த ஆதரவு அமைந்துள்ள தாக டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டவர் கள் குறிப்பிட்டுள்ளனர். ஈழத் தமிழர்மீது சிங்களர்களின் இனவாதம் மீண்டும் தலைதூக்குகின் றது என்ப தற்கு சான்றாக இதுவும் ஒன்றாக அமைந் துள்ளதாக சமூக வலைத் தள பதிவர்கள் தமது கருத் துக்களை பதிவிட்டிருக் கிறார்கள்.<br /><br /><br /><br />Read more: http://www.viduthalai.in/headline/104041-8-----------.html#ixzz3eHUPqUFOதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-11291143571961208712015-06-27T22:01:18.942+05:302015-06-27T22:01:18.942+05:30சென்னை பெண்கள் சங்கத்தின் அறியாமை
சென்னையில் இந...சென்னை பெண்கள் சங்கத்தின் அறியாமை<br /><br /><br /><br />சென்னையில் இந்திய பெண்கள் சங்கம் என்பதாக ஒரு சங்கம் இருக்கின்றது. அது சென்னை செல்வவான்கள் பெண்களும் அதிகாரிகள் மனைவிகளும், வக்கீல் மனைவி களும், பெரும்பான்மையாகக் கொண்டதாக ஒரு சில ஸ்திரீகளைக் கொண்டதாக இருந்து வருகின்றது.<br /><br />இந்த நாட்டு பணக்காரர்கள் ஜமீன்தார்கள் ஆகியவர் களுக்கு எப்படி உண்மையான விடுதலை தேவை இல்லையோ அதேபோல் இந்தப் பெண்களுக்கும் உண்மை யான விடுதலை தேவை இல்லை என்பதோடு தெரிவதற்குக் கூட முடியாத நிலைமையில் இருந்து வருகிறார்கள். இந்த லட்சணத்தில் இவர்கள் அரசியல் துறையில் பிரவேசித்து தோழர் சத்தியமூர்த்தியை ஆதரிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார்கள் என்றால் பெண்கள் சமூகத்துக்கு அதைவிட வெட்கக் கேடு வேறு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.<br /><br />தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் ஆண்களும் பெண்களும் சரிசமமான சுதந்திரத்திற்கு அருகதையுடை யவர்கள் என்பதையே ஒப்புக்கொள்ளுவதில்லை என்பதோடு சாஸ்திரங்களிலும், புராணங்களிலும் பெண்களுக்குள்ள இழிவையும், தாழ்வையும் அப்படியே நிலைநிறுத்தப்பாடு படுகின்றவர் என்பது யாவரும் அறிந்ததேயாகும்.<br /><br />உதாரணமாக தேவதாசி தொழிலை ஒழிக்கக் கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து தேவதாசித் தொழிலை ஆதரித்தார். தேவதாசிகள் இல்லாவிட்டால் தெய்வங்களுக்குச் சக்தி குறைந்துவிடும் என்றும், ஆகமங்கள் கெட்டு விடும் என்றும் பேசினார்.<br /><br />இரண்டாவதாக - குழந்தைகளுக்கு கலியாணம் செய்யக்கூடாது என்றும், குழந்தை பருவத்திலேயே பிள்ளை பெற விடக்கூடாது என்றும் கொள்கையுள்ள சாரதாசட்டத்தை ஹ. ராமசாமி முதலியார் ஆதரித்து இந்தியா முழுவதும் சுற்றி அபிப்பிராயம் தெரிந்து வரும் காலத்தில் தோழர் சத்திய மூர்த்தி அவர்கள் குழந்தை கலியாணம் கூடாது என்று சட்டம் செய்தால் நான் அந்தச் சட்டத்தை மீறி என் மகனுக்கு கலியாணம் செய்து சிறை செல்லுவேன் என்று தைரியம் சொல்லி மற்றவர்களையும் குழந்தைக் கலியாணம் செய்யத் தூண்டினார்.<br /><br />இப்படிப்பட்டவருக்குப் பெண்கள் சங்கம் ஆதரவு கொடுப்ப தென்றால் அச்சங்கம் பெண்கள் சமூகத்தின் உண்மையான பிரதிநிதித்துவம் பொருந்தியதா என்பதைக் கவனிக்கும்படி வாசகர்களை வேண்டிக் கொள்கிறோம். - பகுத்தறிவு - வேண்டுகோள் - 04.11.1934தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-81913496018035846242015-06-27T22:00:37.563+05:302015-06-27T22:00:37.563+05:30மற்றுமொரு தொல்லை
மதங்களின் பெயரால், கடவுளின் பெயர...மற்றுமொரு தொல்லை<br /><br />மதங்களின் பெயரால், கடவுளின் பெயரால், ஜாதிகளின் பெயரால் மனிதனை மனிதன் பிய்த்துப் பிடுங்கித் தின்னும் இந்நாட்டில், ஒரு கவளம் சோற்றுக்கு வழியின்றி எச்சிகல்லை நாயோடு சண்டை போட்டுழலும் ஏழைமக்கள் பல்லாயிரக் கணக்காயுள்ள இந்நாட்டில் மத சம்பந்தமான தெய்வ சம்பந்தமான ஆடம்பரத் தொல்லைகள் வாரம் தோறும் மாதம்தோறும் வந்து கொண்டுள்ளன.<br /><br />தீபாவளித் தொல்லை வந்து இன்னுந் தீர்ந்தபாடில்லை. முதலாளிகள் கோடியாடை களின்னும் மழுங்கவில்லை. பலகார பட்சணங்களின் மப்பு மந்தாரம் இன்னும் வெளியாகவில்லை.<br /><br />மயிலாடுவதைக் கண்டு கோழியாடிய மாதிரி, தாமும் அம்முதலாளிகளைப் பின்பற்றி இமிடேஷன் கொண்டாட்டம் நடத்திய ஏழைகள், கூலிகள், அடிமைகள், பாட்டாளி மக்கள் அதனால் பட்டகடன் தொல்லைகள் இன்னும் தீர்ந்தபாடில்லை.<br /><br />இந்த லட்சணத்தில் கார்த்திகை தீபம் என்று மற்றொரு தொல்லையும் சமீபத்தில் வந்துவிட்டது; தீபாவளி தொல்லையாவது இருந்த இடத்திலேயே மக்களை பிடித்தாட்டி விட்டு போய்விட்டது.<br /><br />இதுவோ (அண்ணாமலை தீபமோ) கடவுளே (சிவன்) ஜோதி மயமாகக் கிளம்புகிறா ரென்பதாக அண்ணாமலை மண்திடலுச்சியில் பெரிய கொப்பரையில் குடம் குடமான நெய்யும், ஆயிரக்கணக்கான ஜவுளிகளும் போட்டு பயித்தியக்காரத்தனமாகத் தீயை வைத்துவிட்டு அந்த நெருப்பு கொழுந்து விட்டெரிவதைப் பார்த்து அரகரா சிவசிவா என்று கன்னத்திலும், கண்ணிலும் அடித்துக் கொள்வதும், அதன் சாம்பலையும், குழம்பையும் எடுத்துப் பூசிக் கொள்வதும், போனவர்களெல்லாம் நெய்யையும், ஜவுளிகளையும் குடங்குடமாக, மூட்டை மூட்டையாகக் கொப்பரையில் கொட்டி நெருப்புக்கிரையாகத் திருப்தியடைவதுமான களியாட் டத்தைக் காண 20, 30, 50, 100 செலவழித்துக் கொண்டு போய் அண்ணாமலையென்னும் மண் திடலையும், அதன் உச்சியிலெரியும் நெருப்பையும் ஜோதிமயமான கடவுளென்று வணங்கி ஆகாய விமான சகாப்தமாகிய இந்த 20ஆம் நூற்றாண்டிலும் நம்பிக் கொண்டும் திருவண்ணாமலை தீபம், கார்த்திகை தீபம், திருப்பரங்குன்றம் பெரிய கார்த்திகை தீபத்திருவிழா என்றெல்லாம் மக்கள் பாமரத் தன்மையாய் பிதற்றிக் கொண்டும் திரிவார்களானால் இவர்களுக்கு எக்காலந்தான் விமோசனமென்பது விளங்கவில்லை.<br /><br />மனிதன் முதல் முதலாக நெருப்பைக் கண்டுபிடித்த காலத்தில் அக்காலக் காட்டுமிராண்டிகளுக்கு அது ஒரு தெய்வீகமாகத் தோன்றியிருக்கலாம்.<br /><br />நெருப்பின் உதவியேயில்லாமல் ஒரு பொத் தானைத் தட்டினால் லட்ச தீபம் போல அதுவும் பட்டப்பகல் போலப் பிரகாசிக்கும் விளக்குகளைக் கண்டுபிடித்து அனுபவித்து வரும் விஞ்ஞான காலம் இதுவென்பதைச் சிந்தித்து, அத்தகைய காட்டு மிராண்டித்தனமான காரியங்களில் மக்கள் வீணாக ஈடுபட்டு அறிவையும், பொருளையும், காலத்தையும் பாழாக்காமல் இக்காலத்திய விஞ்ஞான விஷயங்களில் மூளையைச் செலுத்துவதுடன் இத்தகைய பாமரத்தனமான கார்த்திகை தீபம், திருவண்ணாமலை தீபம், திருப்பரங்குன்ற தீபம் சொக்கப்பானை கொளுத்தல் முதலிய தொல்லைகளை அறிவுள்ள மக்கள் விட்டொழிக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்.<br />- பகுத்தறிவு - கட்டுரை - 11.11.1934தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-35536421730642618652015-06-27T17:08:59.414+05:302015-06-27T17:08:59.414+05:30அட நடராஜா!
சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் நேற...அட நடராஜா!<br /><br />சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த நடராஜக் கட வுளின் தாத்பரியம்பற்றி அள்ளி விடுவார்கள். இந்த நடராஜனை ஆகாய லிங்க வடிவில் வழிபடு கிறார்களாம். கோவில் என்றாலே, அது சிதம் பரம் நடராஜன் கோவி லைத்தான் குறிக்குமாம்.<br /><br />நடராஜர் நடனக் கலை வல்லுநராம். 108 வகை நடனங்களை ஆடு பவராம். நடராஜர் சிலை கனகசபையில் உள்ளது. மூலஸ்தானத்துக்கும், இதற்குமிடையே திரை ஒன்றுள்ளது. அந்தத் திரைக்குப் பின்புறத்தில் தான் ஆகாய வடிவம் இருக்கிறது. அதிலிருந்து தான் நடராஜப் பெருமான் தோன்றி பதஞ்சலி, வியாக்கிரபாதர் என்னும் இருடிகளுக்காக நடனம் ஆடினாராம்.<br /><br />அடேயப்பா, இப்படிப் பட்ட சிதம்பரம் நடராஜன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத கையா லாகாத்தனத்தை எண்ணி னால் வயிறு முட்ட சிரிப்புதான் மிஞ்சும்.<br /><br />இதோ அந்த வரலாறு<br /><br />முப்பத்தேழு ஆண்டு, பத்து மாதம், இருபது நாள்கள் (24.12.1648 முதல் 14.11.1686) வரை சிதம்பரம் கோவிலில் உள்ள நட ராஜர் சிலை சிதம்பரத்தி லிருந்து வெளியேறியி ருந்தது என்னும் உண்மை இப்போதுதான் தெரிய வந்துள்ளது. சிதம்பரத்தி லிருந்து எடுத்துச் செல் லப்பட்ட நடராஜர் சிலை, முதல் நாற்பது மாதங்கள் குடுமியான்மலையிலும், பின்னர் மதுரையிலும் இருந்திருக்கிறது. இந்தச் செய்தி, இப்போது திரு வாரூரில் கிடைத்திருக் கும் மூன்று வடமொழிச் செப்பேடுகளிலிருந்து தெரிய வருகிறது.<br /><br />தில்லையை விட்டு நடராஜர் சிலை அகற்றப் பட்டதற்கு என்ன கார ணம் என்பது சரிவரத் தெரியவில்லை. இருந் தாலும், அக்காலச் சூழ் நிலைகளை வைத்து ஆராயும்போது, பீஜப்பூர் சுல்தானுடைய படையெ டுப்புக்கு பயந்து கொண்டோ அல்லது 1647 ஆம் ஆண்டு தமி ழகத்தின் வடபகுதியில் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தின் காரணமா கவோ சிதம்பரத்திலுள்ள நடராஜருக்குச் சரிவர பூஜை நிகழ்த்த முடியாது என்று நினைத்த சில பக்தர்கள் இப்படி நட ராஜர் சிலையை எடுத்துச் சென்றிருக்கலாம் என்று யூகிக்கலாம்.<br /><br />கடைசியில் மதுரை யில் இருந்த நடராஜரை மீண்டும் சிதம்பரத்திற்குக் கொண்டு வந்தது, மராட் டிய மன்னன் சகசி காலத் தில்தான் என்றும் தெரி கிறது.<br /><br />ஆதாரம்: தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர்<br /><br />(இந்தச் செய்தி இத யம் பேசுகிறது இதழிலும் எடுத்துப் போடப்பட்டுள் ளது).<br /><br />இப்பொழுது சொல் லுங்கள், இந்த சிதம்பரம் நடராஜக் கடவுள்பற்றி அளப்பதெல்லாம் அசல் கட்டுக்கதைகளா இல் லையா? - மயிலாடன்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-74985295416920861202015-06-27T17:02:03.689+05:302015-06-27T17:02:03.689+05:30தந்தை பெரியாரின் பெண்ணுரிமைக் கருத்து உலகிற்கே தேவ...தந்தை பெரியாரின் பெண்ணுரிமைக் கருத்து உலகிற்கே தேவை!<br /><br /> <br /><br />பெண்ணடிமைத்தனம் என்பது இந்தியாவுக்கு மட்டும் உள்ள தனிச் சொத்தல்ல; உலகம் முழுவதுமே இது நீக்கமற நிறைந்திருக்கிறது.<br /><br />சென்னை - திருவொற்றியூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் (10.5.2007) நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் கூறுகிறது.<br /><br />குடும்பச் சொத்தை உத்தேசித்தும், பெண்களின் உடல் நலனை முன்னிட்டும் கருத்தடை அவசியம் என்பதைவிட, பெண்கள் விடுதலை அடையவும், சுயேச்சை பெறவும் கருத்தடை அவசியம் என்ற தந்தை பெரியார் அவர்களின் கருத்தின் அடிப்படையில், ஒரு குழந்தைக்குமேல் இன்னொரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதுபற்றி முடிவு செய்யும் உரிமை பெண்களுக்கு மட்டுமே தனி உ,ரிமையாக இருக்க வேண்டும் என்பதை இம்மாநாடு வலியுறுத்துகிறது. தேவைப்பட்டால் இதற்கான தனிச் சட்டத்தையும் அரசு இயற்ற வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது என்பதுதான் திருவொற்றியூர் தீர்மானமாகும்.<br /><br />இந்தத் தீர்மானம் ஏதோ இந்தியாவுக்கு மட்டும் தேவைப்படும் என்று நினைத்து விடக் கூடாது; அயர் லாந்து நாட்டில் நிலவும் ஒரு சட்டத்தைப் பார்க்கும் போது திருவொற்றியூர் மாநாட்டுத் தீர்மானத்தின் முக்கியத்துவம் புலனாகும். ஒரு பெண் கருவுற்றிருக்கிறாள். மருத்துவர் அந்தக்கரு சரியாக உருவாகவில்லை என்கிறார். ஆனால், அய்ரிஷ் சட்டமோ அந்தக் கருவை மகப் பேறு காலம்வரை அப்பெண் சுமந்தே தீரவேண்டும் என்கிறது.<br /><br />ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறாள். அதனால், கருவுற்றிருக்கிறாள். அவள் அந்தக் கருவை சுமந்திருக்கும் ஒவ்வொரு நாளும் அவளுக்கு நேர்ந்த கொடுமையை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது. இன்னமும் அய்ரிஷ் சட்டம் அவளை அந்தக் கருவை சுமந்தேயிருக்குமாறு கூறுகிறது.<br /><br />அவளுக்குத் தேவை கருக்கலைப்பு. ஆனால் எந்தப் பெண்ணையும் கருக்கலைப்பு செய்து கொள்ள அயர்லாந்து அனுமதிப்பதில்லை. ஆகவே, அவள் அந்நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயத் துக்கு ஆளாகிறாள். அதுவும் அவள் உடல் அதற்கு இடம் கொடுத்தால்தான். அப்படி நாட்டைவிட்டு வெளியேற முடியாமல் அங்கேயே இருந்துகொண்டு கருக்கலைப்புக்கான முயற்சிகளைச் செய்தார் என்றால், அவருக்கு 14 ஆண்டுகள் சிறைவாசம் என்கிற அச்சுறுத்தல் இருக்கிறது.<br /><br />அவர் குற்றவாளி இல்லை. அவருக்கு கருவைக் கலைத்துக்கொள்ளும் மனித உரிமை உள்ளது.<br />இவ்வாறு பன்னாட்டு பொதுமன்னிப்பு சபையின் சார்பில் அயர்லாந்து அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.<br />மேலும், மேற்கண்ட கோரிக்கையை இணையத்தின் வாயிலாக வலியுறுத்தும் மனிதநேயர்களுக்கு நன்றியையும் தெரிவித்துக்கொண்டுள்ளது.<br />நன்றியறிவிப்பில் குறிப்பிடும்போது, கருக்கலைப்புச் சட்டத்தில் மாற்றம் கோரியமைக்கு நன்றி. அதேபோல் பெண்கள் மற்றும் இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளை குற்றவாளிகளாக்குவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.<br />அதுமட்டுமன்றி, அயர்லாந்தில் உள்ள பெண்கள் மற்றும் இளம்பெண்கள், சிறுமிகளுக்கான சுகாதாரக் கவனிப்பு மற்றும் மருத்துவ உதவிகள் தேவைப்படு கின்றன. அவர்களுக்கான மருத்துவர்கள், செவிலியர் மற்றும் மருத்துவ ஆலோசகர்கள் தேவை! அயர்லாந்து அரசுக்கு மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி அழுத்தம் கொடுத்துள்ளோம்.<br /><br />இக்கோரிக்கைகளை இப்பொழுதே உங்கள் நண்பர்களுடன் இணைந்து பகிர்ந்துவிடுங்கள்.<br /><br />இவ்வாறு அயர்லாந்து அரசுக்கு கருக்கலைப்புச் சட்டத்தில் மாற்றத்தை செய்திட இணையத்தின் வாயிலாக வலியுறுத்தும் கோரிக்கையாக பன்னாட்டு பொது மன்னிப்பு சபை வெளியிட்டுள்ளது.<br /><br />பன்னாட்டுப் பொது மன்னிப்பு சபையின் வேண்டுகோள் மிகவும் நியாயமானது.<br />அதே நேரத்தில் இது போன்ற கருத்துக்களை தந்தை பெரியாரும் திராவிடர் கழகமும் வெகு நீண்ட காலத் திற்கு முன்பிருந்தே கூறி வருவதை இந்த நேரத்தில் நினைவூட்டுகிறோம்.<br /><br />ஆம், மற்ற மற்ற கருத்துக்களில் சிலருக்கு மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம். பெண்ணுரிமைப் பிரச்சி னையில் தந்தை பெரியாரியல் என்பது உலகிற்கே தேவைப்படக் கூடியது என்பதில் அய்யமே இல்லை.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-69263569588409927672015-06-27T17:01:15.016+05:302015-06-27T17:01:15.016+05:30மவுடீக எண்ணங்கள்
இந்தியா தன்னுடைய மத மவுடீகங்களைக...மவுடீக எண்ணங்கள்<br /><br />இந்தியா தன்னுடைய மத மவுடீகங்களைக் களைந்து விஞ்ஞானப் பாதையில் திரும்ப வேண்டும். தேவையற்ற, பொருளற்ற எண்ணங்களும், சமூகப் பழக்கவழக்கங்களும் இந்தியதாய்க்கு சிறைச்சாலை எழுப்பியிருக்கின்றன. இவைகளே இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கின்றன.<br /><br />இந்த மதக்கோட் பாடுகள் சமூக உறவு ஏற்படத் தடையாகவிருக்கின்றன. சமுதாய நடவடிக்கையில் குறுகிய எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. ஒரு வைதீக ஆசார இந்து என்பவரின் மதமே, எதைச் சாப்பி டுவது; எதைச் சாப்பிடக்கூடாது; யாருடன் உணவருந்தலாம்; யாருடன் இருந்து உண்ணக் கூடாது என்பதில் தானே,<br /><br />மற்ற ஆன்மிகக் கருத்துக்களைவிட அக்கறை காட்டுவதாயிருக் கிறது? இந்த ஆசார இந்துவின் சமூக வாழ்வை சமயலறையின் சட்ட திட்டங்கள்தான் ஆதிக்கஞ் செலுத்திவருகின்றன ! முஸ்லீம்கள் இதுமாதிரியான பழக்கங்களிலிருந்து விடு பட்டாலும் அவனுக்கும் குறுகிய மதக்கோட்பாடுகளும் சடங்கு களும் இருக்கின்றன.<br /><br />அவைகளை அவன் அடுத்தடுத்து அனுசரிக்க வேண்டும். இவைகளை எல்லாம் கடைப்பிடிக்கும் அவன் தன் மதம் போதிக்கும் பாடமான சகோதரத்துவத்தை தருணத்தில் மறந்துவிடுகிறானே! -நேரு டிஸ்கவரி ஆஃப் இந்தியாதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-49765061948271468552015-06-27T17:00:22.240+05:302015-06-27T17:00:22.240+05:30சங்கராச்சாரியாரை சந்தித்த ரஷ்யர்!
இந்தியாவுக்கு 1...சங்கராச்சாரியாரை சந்தித்த ரஷ்யர்!<br /><br />இந்தியாவுக்கு 1964இல் வந் திருந்த ஒரு ரஷ்யப் பிரமுகரிடம், ஒரு பார்ப்பனர் -இந்தியாவுக்கு யார் வந்தாலும் சங்கராச்சாரியாரைப் பார்த்துவிட்டு வருவதுதான் முக்கியமான காரியம் என்று சொல்லி, அவரைச் சங்கராச் சாரியாரிடம் அழைத்துப்போனார்.<br /><br />அந்த ரஷ்யர், பல விஷயங்களைப் பற்றி சங்கராச்சாரியாரிடம் பேசிவிட்டுக் கடைசியில் உங்கள் நாட்டில் உங்கள் சம்பிரதாயத்திற்கும் உங்கள் மத சம்பிரதாயத்திற்கும் விரோதமாகப் பெரியார் ஒரு இயக்கம் நடத்துகிறாரே, அதைப் பற்றி உங்களுடைய கருத்து என்ன? என்று கேட்டார்.<br /><br />அதற்குச் சங்கராச்சாரியார் ஆமாம் ! அப்படி ஓர் இயக்கம் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது என்றாலும், அது இன்றைக்குப் பதினேழுவருடங்களுக்கு முன்வரையில் நாங்கள் மிகக் கவலை கொள்ள வேண்டிய அளவுக்கு நடந்தது. இப்போது அதைப்பற்றிக் கவலைபடவேண்டிய அவசியமில்லாத நிலை ஏற்பட்டு விட்டது. அது பாட்டுக்கு அது நடைபெறுகிறது என்றாலும் அதனால் இன்று எங்களுக்கு எந்தவிதத் தொந்தரவும் இல்லை என்றாராம்.<br /><br />அந்த ரஷ்யர் அதற்குப் பின் தந்தை பெரியாரையும் சந்தித்தார்; சங்கராச்சாரியார் கூறியது பற்றியும் கேட்டார். அவர் இப்படி கேட்கும்போது ஒரு பார்ப்பனரும் கூட இருந்தார். அப்போது தந்தை பெரியார்அதற்குப் பதில் சொன்னார். அது ஒரு நல்ல அளவுக்கு உண்மைதான். எப்படி என்றால், நம் நாட்டுக்குச் சுதந்திரம் வந்து 17 ஆண்டுகள் ஆகிறது. அது பார்ப்பனருக்கு வந்த சுதந்திரமே ஆகும்.<br /><br />நம்மிலிருந்து விளம்பரமும் செல்வாக்கும் பெற்ற ஒரு கூட்டம் பார்ப்பனர்க்கு நிபந்தனையற்ற அடிமையாகக் கிடைத்துவிட்டது. அதனால் பார்ப்பனர்கள், இடையில் இழந்ததை யெல்லாம் திரும்பவும் பெற்றுக்கொண்டு மேலேற வசதி ஏற்பட்டது. -என்று தந்தை பெரியார் பதில் கூறினார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-74240170395940460882015-06-26T22:29:22.108+05:302015-06-26T22:29:22.108+05:30தினமணியின் மூக்கில் வியர்ப்பது ஏன்?
வடலூரில் நடைப...தினமணியின் மூக்கில் வியர்ப்பது ஏன்?<br /><br />வடலூரில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில், தினமணி ஆசிரியர் திரு.வைத்தியநாதய்யரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு பேராசிரியர் மோகன ராசு கீதையையும், திருக்குறளையும் ஒப்பிட்டுக் கீதையின் முகத்திரையைக் கிழித்து எறிந்தார் அல்லவா!<br /><br />அதற்குப் பதில் சொல்ல முடியாத தினமணி அய்யர்வாள் திருக்குறளிலே கொல்லாமை கூறப்பட்டுள்ளதே - அதைக் கடைப்பிடிக்காதவர்கள் திருக்குறளைப்பற்றிப் பேசலாமா? என்று பிரச்சினை யைத் திசை திருப்பிப் பேசினார்; மக்கள் சலசலப்பைக் காட்டினார்கள்.<br /><br />ஒரு நூலைப் போற்றவேண்டும் என்றால், அந்நூலில் உள்ள அத்தனையையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுவது அசல் விதண்டாவாதமே! வடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியை விடுதலை விரிவாக வெளியிட்டு இருந்தது (23.6.2015, பக்கம் 8) அல்லவா!<br /><br />அதைக்கண்டு ஆத்திரப்பட்ட தினமணி அய்யர்வாள் இன்றைய தினமணி ஏட்டில் ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளார். மீண்டும் அந்தப் புலால் உண்ணாமைப் புராணம்தான்.<br /><br />திருவாளர் தினமணி அய்யரைக் கேட்கிறோம். பார்ப்பான் பிச்சை எடுத்துதான் சாப்பிடவேண்டும்; அத்தகையவன்தான் பூணூல் போட்டுக்கொள்ள அருகதை உடையவன்; அப்படி இருக்கும்பொழுது, நீங்கள் ஏன் பூணூல் போட்டுக்கொண்டு பிராமணன் என்று மார்தட்டுகிறீர்கள் என்று நாங்கள் கேட்டால் உங்கள் பதில் என்ன?<br /><br />சங்கராச்சாரியார் என்றால் கால்நடையாகத்தான் ஊர் சுற்றவேண்டும். உங்கள் லோகக் குரு ஜெயேந்திர சரசுவதி விமானத்தில் பறக்கிறாரே அது எப்படி? என்று நாங்கள் கேட்டால், உங்கள் பதில் என்ன?<br /><br />அய்தீக முறைப்படி திருவாளர் வைத்திய நாதய்யர் உச்சிக்குடுமி வைத்துக்கொண்டுள்ளாரா? அப்படி வைத்துக் கொண்டால்தானே அவர் பூணூல் தரிக்க முடியும்.<br /><br />இந்த வகைகளில் கேள்விக் கணைகளைத் தொடுக்க ஆரம்பித்துவிட்டால், ஒரு பார்ப்பான்கூட தேறமாட்டானே.<br /><br />ஆக, வடலூர் நிகழ்ச்சி - தினமணியாரின் ரத்தக் கொதிப்பை அதிகரிக்கச் செய்துவிட்டது என்பது மட்டும் உண்மை. தினமணி கட்டுரை அதைத்தான் வெளிப்படுத்துகிறது.<br /><br /><br /><br />Read more: http://www.viduthalai.in/page1/103950.html#ixzz3eBk6rVbsதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-44952406075411365052015-06-26T20:28:58.775+05:302015-06-26T20:28:58.775+05:30சிந்தித்துப் பார்
நீ கிணற்றுத் தவளையாக இருக்க விர...சிந்தித்துப் பார்<br /><br />நீ கிணற்றுத் தவளையாக இருக்க விரும்புகிறாயா? அல்லது வேடந்தாங்கலில் வந்து இளைப்பாறிப் போகும் வெளிநாட்டுப் பட்சியாக இருக்க விரும்புகிறாயா? மனிதனே சிந்தித்துப் பார்.<br />_ (விடுதலை, 22.9.1967)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-53747254868272780532015-06-26T20:23:47.395+05:302015-06-26T20:23:47.395+05:30மக்கள் உலகம் முழு வதும் ஒன்றுபட வேண்டும்; மற்ற சீவ...மக்கள் உலகம் முழு வதும் ஒன்றுபட வேண்டும்; மற்ற சீவன்களுக்குத் தன்னால் கெடுதி இல் லாத வாழ்வு பெற வேண்டும். மனிதனி டத்தில் பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாது சாந்தி வாழ்வுக்கு வகை தேட வேண்டும். இது தான் எனது ஆசை.<br />- தந்தை பெரியார்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-68296440426745207772015-06-26T20:23:24.529+05:302015-06-26T20:23:24.529+05:30பார்ப்பனர் பற்றி அம்பேத்கர்
பகுத்தறிவு தந்தை பெ...பார்ப்பனர் பற்றி அம்பேத்கர்<br /><br /><br /><br />பகுத்தறிவு தந்தை பெரியாரவர்கள் 1924-ஆம் ஆண்டில் பங்கேற்று நடத்திய வைக்கம் போராட்டம் அறிஞர் அம்பேத்கரின் உள்ளத்தில் ஓர் அரும் தாகத்தினை விளைவித்தது !<br /><br />திருவாங்கூர் நாட்டின் வைக்கத்தில் தீண்டத்தகாதோர் நுழையலாகாது எனத் தடுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட பாதையை பயன்படுத்துவதற்கு அவர்களுக்கு உரிமையுண் டென்று நிலைநாட்ட, இராமசாமி நாயக்கர் அமைதியான எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொண்டார் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான போராட்டத்தில் அந்த ஆண்டின் மிகச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி அதுவே.<br /><br />மிகவும் கவலையோடு இக்கிளர்ச்சியைக் கவனித்துக் கொண்டிருந்த அம்பேத்கர் மகாத் அறப்போரையொட்டி எழுதிய ஒரு தலையங்கத்தில் வைக்கம் கிளர்ச்சிபற்றி உள்ளம் நெகிழும் வண்ணம் குறிப்பிட்டார் என்னும் செய்தியை அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளிப்படுத்துகிறது.<br /><br />புரட்சி மனப்பான்மையுடையவன் போப் ஆகவே மாட்டான். இக்கருத்து இந்திய பார்ப்பனர்கட்கும் பொருந்தும் போப் ஆகிறவன் புரட்சி செய்ய விரும்ப மாட்டான் என்றால் பார்ப்பானாகப் பிறந்தவனும் புரட்சி செய்ய விரும்ப மாட்டான் என்பது உறுதி. பார்ப்பானாகப் பிறந்தவன் சமூகப் புரட்சிக்காரனாக இருப்பான் என்று எதிர்பார்ப்பது நல்லகண்ணுடைய குழந்தைகளை யெல்லாம் கொன்றுவிட வேண்டுமென ஆங்கில பாராளுமன்றம் சட்டம் இயற்றும் என்று எதிர்பார்ப்பதற்கு ஒப்பேயாகும் !<br /><br />- சாதியை ஒழிக்க வழி எனும் நூலிலிருந்து. மக்கள் உலகம் முழு வதும் ஒன்றுபட வேண்டும்; மற்ற சீவன்களுக்குத் தன்னால் கெடுதி இல் லாத வாழ்வு பெற வேண்டும். மனிதனி டத்தில் பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாது சாந்தி வாழ்வுக்கு வகை தேட வேண்டும். இது தான் எனது ஆசை.<br /><br />- தந்தை பெரியார்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-49178134101898947282015-06-26T20:22:39.106+05:302015-06-26T20:22:39.106+05:30தந்தை பெரியார் பொன்மொழிகள்
இன்றைய சுதந்திரம் வடநா...தந்தை பெரியார் பொன்மொழிகள்<br /><br />இன்றைய சுதந்திரம் வடநாட்டானுக்கும் அவன் மொழிக்கும் தென்னாட்டவர் அடிமையாய் வாழ வேண்டு மென்றே ஆக்கப்பட்டுவிட்டது. வெள்ளையரிடமிருந்து பெற்ற சுதந்திரத்தைவிட வடவரிடமிருந்து சுதந்திரம் பெறுவதே மிகமிக முக்கியமானது.<br />கம்பராமாயணக் கதை வெறும் பொய்க் களஞ்சியமே யாகும். அதன் கற்பனையை எடுத்துக் கொண்டால் அது ஒரு சிற்றின்பச் சாகரம். ஒரு மாதிரி காமத்துப் பால் ஆகும். நடப்பை எடுத்துக் கொண்டால் காட்டுமிராண்டித் தனத்தின் உருவகமே அது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-15177411069152385272015-06-26T20:22:16.934+05:302015-06-26T20:22:16.934+05:30கடவுள் இல்லை இந்திய விடுதலை போராட்ட வீரர் லாலா.லஜப...கடவுள் இல்லை இந்திய விடுதலை போராட்ட வீரர் லாலா.லஜபதிராய் கருத்து<br /><br /><br /><br />(தோழர் லஜபதிராய் அவர்கள் தனது நண்பர் தோழர் டி .பிர்லாவுக்கு எழுதிய கடிதம் ஒன்று பீபிள் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதின் மொழிபெயர்ப்பு.) ஒரு காலத்தில் கடவுளை நான் நம்பியதுண்டு. கடவுளை நோக்கிப் பிரார்த்திப்பதால், அவர் நமது வேண்டுகோளைக்கேட்டு நமக்கு நன்மை செய்கிறாரென நம்பினேன்.<br /><br />நன்மையான தர்ம கைங்கர்யஞ் செய்கிறவர்களுக்குக் கடவுள் நன்மையையே செய்கிறார். என்றும், துஷ்டர்களை அடியோடு அழித்து நிக்கிரகஞ் செய்கிறாரென்றும் எண்ணினேன். இந்த நம்பிக்கையில் நான் மகா உறுதிகொண்டிருந்தேன். ஆனால் படிப்படியாக என் நம்பிக்கை குறைந்து கொண்டு வந்துஇப்பொழுது அந்த நம்பிக்கையே எனக்கில்லாமல் போய்விட்டது.<br /><br />இந்த மாயவஞ்சகம்நிறைந்த ஒரு உலகத்தை ஆண்டு நடத்திக் காப்பாற்றி வரும் ஒரு கடவுளை நான் எப்படி நம்ப முடியும்? அக் கடவுள் மகா அன்புடையவர் மகா கருணாநிதி, சத்தியவந்தர், சர்வ வல்லமையுள்ளவர், எங்கும் பரம்பொருளாக நிறைந்திருப்பவர் என்பதை நான் எப்படி நம்பக்கூடும்? மகா தயாநிதியாகி,<br /><br />சத்தியமே ஒரு உருவான மெய்க்கடவுள் இருந்தால் இந்த உலகத்தைச் சிருஷ்டித்திருக்க முடியுமா? இந்த உலகம் அநீதி,நிறைந்தது சமத்துவத்திற்குப் பரம விரோதியாய் இருக்கிறது. சகல கொடுமைகளுக்கும் உறைவிடம்.<br /><br />மிருகத்தனமானது<br /><br />வஞ்சகம், சூது, ஏமாற்றம் முதலியவை உருவெடுத்த மனிதர்கள் நிறைந்தது. இந்த நாசமான இந்த உலகத்தை சத்திய வந்தரான கடவுள் எப்படி உண்டு பண்ணியிருக்க முடியும்? பல ஆயிரக்கணக்கான கொடியர் ஜீவிக்கிறார்கள். இவ்வுலகில் இன்னும் பலர் முட்டாள்கள். மூளை என்பதே கிடையாது அன்பு, சத்தியம் நிறைந்த.<br /><br />இருதயத்தை இழந்த துஷ்டர்கள் பல ஆயிரம். ஏழைகளை இம்சிக்கும் ராஷதர்களும், சத்ய வந்தரை தொல்லைப்படுத்தி, அடக்கி, நசக்கி, மண்ணுக்கும் இரையாக்கும் மிருகத்தனம் படைத்தவர்களும் இன்னும் பல ஆயிரம். கொள்ளை அடிக்கும் திருடர்கள் பலர், சுயநலமே உருக் கொண்ட தீயர்கள் எத்தனையோ லட்சம் இந்த சுயநலப் பேய்களே மகாசொகுசாக, உல்லாச வாழ்க்கை நடத்தி வரு கிறார்கள், ஏழைகளை வஞ்சித்து இம்சித்துத் துன்புறுத்து கிறார்கள்.<br /><br />ஏழைகளின் கதியோஅதோ கதிதான். அவர்கள் மானமிழந்து அடிமைகளாகிய, தரித்திரத்திற்குள்ளாகி, உண்ண உணவின்றி, உடுக்க ஆடையின்றி பசியால் வாடி மடிகின்றனர். முடிவில் மண்ணோடு மண்ணாகிப்போகிறார்கள். உலகில் இந்தக் கொடுமைகள் ஏன்? சத்தியமும், உண்மையும் உருக்கொண்ட ஒரு தெய்வம் இந்த கொடிய உலகத்தை உண்டு பண்ணி யிருக்கமுடியுமா?<br /><br />வேதங்கள் பொய்<br /><br />சத்தியம் என்பது என்ன? சத்தியம் எங்கிருக்கிறது? வேதங்களிலாவது உண்மை இருக்கிறதா அல்லது நம்பிக் கையாவது உண்டா? வேதங்களில் சத்தியத்தைக்கண்டுபிடித்து விட்டதாக சிலர் பறை சாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.<br /><br />அதெல்லாம் வெறும் பொய்க்கூற்று. அவர்கள் ஏதோ மாய்கையில் மூழ்கி அவ்வாறு அல்லற்படுகிறார்கள் வெறும் மத வெறி கொண்டவர்களே உண்மையிருப்பதாக உளறிக் கொண்டிருப்பதுண்டு. புத்த பகவா, கிறிஸ்துவோ, முகமது நபியோ உண்மையை கண்டு பிடித்திருக்கிறார்களா?<br /><br />அவர்கள் கண்டுபிடித்த சத்தியம் எங்கே? அந்த சத்தியம் மறைந்து விட்டதா? அல்லது அதை போதிக்கப்புறப்பட்டவர்கள் திரித்து சத்தியத்தையே மறைத்து விட்டார்களா? இவர்கள் மனிதர் களைப் பாகுபாடுபடுத்தி பிரித்து வைத்தது ஏன்? சத்திய மென்றால் ஒற்றுமையின்றி பல பாகுபாடு உண்டு பண்ணி சுயநலத்துடன் வாழ்வதென்று அர்த்தமா?<br /><br />லாலாஜி வாழ்க்கை<br /><br />இவ்விதம் கூறும் நான் ஏன் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்டுவந்தேனெனக் கேட் கலாம். உண்மையைக் கூறுமிடத்து நான் சுயநல நோக்கங் கொண்டே பொது சேவையில் ஈடுபட்டேனென்று கூறுவேன். அதாவது நான் உள்ளவரை ஏதேனும் ஒரு காரியம் செய்து கொண்டிருக்கவேண்டும். இது மனித சுபாவம் ஒரு குணம். அதுசதா என்னைக் கிளர்ச்சி செய்யத் தூண்டிக் கொண்டிருக்கிறது.<br /><br />(பகுத்தறிவு, 1933)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-12962151177784614802015-06-26T20:21:45.880+05:302015-06-26T20:21:45.880+05:30மவுடீக எண்ணங்கள்
இந்தியா தன்னுடைய மத மவுடீகங்களைக...மவுடீக எண்ணங்கள்<br /><br />இந்தியா தன்னுடைய மத மவுடீகங்களைக் களைந்து விஞ்ஞானப் பாதையில் திரும்ப வேண்டும். தேவையற்ற, பொருளற்ற எண்ணங்களும், சமூகப் பழக்கவழக்கங்களும் இந்தியதாய்க்கு சிறைச்சாலை எழுப்பியிருக்கின்றன. இவைகளே இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கின்றன.<br /><br />இந்த மதக்கோட் பாடுகள் சமூக உறவு ஏற்படத் தடையாகவிருக்கின்றன. சமுதாய நடவடிக்கையில் குறுகிய எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. ஒரு வைதீக ஆசார இந்து என்பவரின் மதமே, எதைச் சாப்பி டுவது; எதைச் சாப்பிடக்கூடாது; யாருடன் உணவருந்தலாம்; யாருடன் இருந்து உண்ணக் கூடாது என்பதில் தானே,<br /><br />மற்ற ஆன்மிகக் கருத்துக்களைவிட அக்கறை காட்டுவதாயிருக் கிறது? இந்த ஆசார இந்துவின் சமூக வாழ்வை சமயலறையின் சட்ட திட்டங்கள்தான் ஆதிக்கஞ் செலுத்திவருகின்றன ! முஸ்லீம்கள் இதுமாதிரியான பழக்கங்களிலிருந்து விடு பட்டாலும் அவனுக்கும் குறுகிய மதக்கோட்பாடுகளும் சடங்கு களும் இருக்கின்றன.<br /><br />அவைகளை அவன் அடுத்தடுத்து அனுசரிக்க வேண்டும். இவைகளை எல்லாம் கடைப்பிடிக்கும் அவன் தன் மதம் போதிக்கும் பாடமான சகோதரத்துவத்தை தருணத்தில் மறந்துவிடுகிறானே! -நேரு டிஸ்கவரி ஆஃப் இந்தியாதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-21684095685179088812015-06-26T20:17:41.959+05:302015-06-26T20:17:41.959+05:30காவல்துறை கவனிக்குமா?
இந்தியாவில் அதிகமாக இருப்பத...காவல்துறை கவனிக்குமா?<br /><br />இந்தியாவில் அதிகமாக இருப்பது ஓரல் கேன்சர் என்னும் வாய்ப்புற்று நோயும், மார்பகப் புற்று நோயும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.<br /><br />அடையாறு புற்றுநோய் மருத்துவ மனைத் தலைவர் மருத்துவர் சாந்தா அம்மையார், சமீபத்தில் அறிக்கை ஒன்றில் இந்த வாய்ப்புற்றுநோய் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் அதுவும் சென்னையிலேயே அதிகமாக உள்ளது என அபாய அறிவிப்பு விடுக்கிறார்.<br /><br />சமீபத்தில் புகையிலை எதிர்ப்பு நாள் கொண்டாடப்பட்டபோது, சென்னை மாநகரக் காவல்துறை ஆணையாளரும், டாக்டர் சாந்தா அம்மையாரோடு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது புகையிலைப் பழக்கத்தின் கெடுதியை வலியுறுத்தியிருப் பதைப் பார்த்தபோது மகிழ்ச்சியாக விடிவு காலம் பிறக்கும் என்றுதான் எண்ணி னோம். ஆனால் சென்னை நகர வீதிகளில் எட்டுத்திசைகளிலும் சுற்றிப்பார்த்தால் தமிழ்ச்சமுதாயத்தைச் சீரழிக்கும், தமிழ்க் குடும்பங்களின் அமைதியை அழிக்கும், சோகத்தை ஏற்படுத்தும் போதைப் பொருள் தாராளமாக, எவ்வித பயமுமின்றி, தயக்க முமின்றி விற்கப்படுவதைக் காணலாம்.<br /><br />அதிலும் கல்லூரிகளில் இன்றைய மாணவர்களின் பையைச் சோதனை செய்தால் தவறாமல் காணலாம். சென்னை நகர வீதிகளில் தடை செய்யப்பட்ட பான்பராக் விற்பனை ஒருபுறம் நடைபெறுகிறது என்றால் தடையிலில்லாமல் மலிவு விலையில் விற்கப் படும் போதைப் பொருட்கள் மற்றொருபுறம்.<br /><br />வட்டமான வண்ணக்குடை, அதன் கீழே வடநாட்டுக்காரன் ஒருவன் வட்டத்தட்டில் வரிசையாக மூடிபோட்ட டப்பாக்கள், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது பீடாக்கடை. ஆனால் அங்கு விற்கப்படும் போதைப்பொருள் பெயர் மாவா<br /><br />பத்து ரூபாய் சில இடங்களில் ஒன்பது ரூபாய்க்கும் கிடைக்கிறது. மாவா என்று கேட்டால் போதும் ஒரு சிறு பிளாஸ்டிக் கவரில், பொடிபோல் மேலே ஒரு ரப்பர் பேண்டு சுற்றி உடனே கிடைக்கிறது.<br /><br />இந்த மாவா போடுகிறவன் வாய்குளறும். ஒரு மயக்கமூட்டும் வாசனை வரும். இதைப்போட்டால் மூளை மந்தமாகும். மூளைக்குப் போகும் ரத்தக்குழாயில் ரத்தத்தை உறைய வைக்கும். இது போட்டால் மது அருந்திய அளவிற்குத் தள்ளாட்டமும் இருக்கும். இந்த சுகம் பத்து ரூபாய்க்குள் சாலையின் ஓரங்களில் மட்டுமல்ல, முதன்மையான இடங்களில் காவலர் எதிரேயே விற்கப்படுவதுதான் கொடுமை. திருவல்லிக்கேணி பாரதிசாலை தொடக்கத் தில் எக்ஸ்பிரஸ் அவின்யூ எதிரில் மயிலாப் பூரில், வடசென்னையில் தாராளமாக விற்கப்படுகிறது. இவ்வாறு விற்பவர்கள் தவறாமல் மாமூல் கொடுத்து விடுவதாகவும் கேள்வி.<br /><br />மதுரவாயலில் உள்ள பொறியியல் பல்கலைக்கழகம், கேளம்பாக்கம் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் அருகில் மிகத் தாரா ளமாக விற்பனை ஜோராக நடைபெறுகிறது.<br /><br />இது போல் புகார் செய்யப்படும்போது ரெய்டு என்று ஏமாற்றுவது நடைபெறும். எங்கிருந்து வருகிறதோ அங்கேயே வராமல் தடுப்பதை விட்டு இது போல் ஏமாற்று வேலை. இதனால் பாதிப்பிற்குள்ளாவது மாணவர்கள் மட்டுமில்லை. நம் திராவிடச் சமூகத்தின் உழைக்கும் வர்க்கமான கட்டடக் கலைஞர்கள் சிறுசிறு பணியாளர்கள் என்று பலரும் அடக்கம்.<br /><br />தலைக்கவசம் போடவேண்டும் என்று வலியுறுத்தும் நீதிமன்றம் இதைத்தடுக்கும் படி அரசுக்கு எச்சரிக்கக்கூடாதா?<br /><br />அண்டை மாநிலமான கேரளத்தில் இந்த ஆபத்தான பொருள் விற்பனை கிடையாது. இங்கே அரசாங்கம், காவல்துறை பற்றிய அச்சமோ, கவலையோ இல்லாமல் ஒளிவு மறைவு கூட இல்லாமல் விற்கிறார்கள்.<br /><br />இது இப்படியென்றால் வெற்றிலை பாக்குக் கடைகளில் பகிரங்கமாக விற்கப் படும் போதைப்பொருள் பெட்டி பெட்டியாக விற்கப்படும் போதைப் பொருளின் ஹான்ஸ் என்பது. மஞ்சள் வண்ண பிளாஸ்டிக் உறையில், முகர்ந்து பார்த்தாலே ஒரு வித மயக்கம் தரும் புகையிலைப் பொருள் வெளிப்படையாக விற்கப்படு கிறது. இதன் விலையும் மலிவு தான்.<br /><br />ஏற்கெனவே தெருவிற்கு இரண்டுகடை என்று மதுபானக்கடையைத் திறந்து போதையை பரப்பும் அரசு மாவா, ஹான்ஸ் விஷயத்தில் மட்டும் நட வடிக்கை எடுத்து விடுமா?<br /><br />சமூக ஆர்வலர்கள் என்போர் மது வுக்கு எதிராக மட்டும் குரல் கொடுத்தால் போதாது?<br /><br />இந்தப் போதைப்பொருள் விற் பனையை முழுமையாக ஒழிக்க நீதிமன்றம் தான் செல்ல வேண்டுமா?<br /><br />சென்னை நகரில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் பணியாளர்கள், பிரபல மான கடைகளில் பணிபுரியும் ஏராளமான வடநாட்டவர்கள் வருகையால் ஏற்பட்ட சமூகத் தீமை இது.<br /><br />கழிவறை, யோகா என்றெல்லாம் பரப்புரை செய்யும் மய்ய அரசு, சமுதாயத்தை மெல்லக் கரையான் போல் அரித்துப் புற்றுநோய்க்கு வழிகாட்டும் இந்தத் தீமைக்கு, மனித மூளையைச் செயல்படாமல் தடுக்கும் நஞ்சை அகற்ற நடவடிக்கை எடுக்குமா?<br /><br />வெற்றிலை பாக்குக் கடைகளில் பதினெட்டு வயதுக்குட்பட்டவர்களுக்குப் புகையிலைப் பொருட்கள் விற்பனை கிடையாது எனும் விளம்பரத்தைப் பார்க்கையில் இந்தக் கேலிக்கூத்தை நினைத்துச் சிரிப்பு வருகிறது.<br /><br />- முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்<br />செயலாளர், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-31617786537356791292015-06-26T20:16:58.788+05:302015-06-26T20:16:58.788+05:30வாழ்க்கை
ஒருவன் வாழ்வது என்பது அவனுடைய வாழ்க்கையா...வாழ்க்கை<br /><br />ஒருவன் வாழ்வது என்பது அவனுடைய வாழ்க்கையால் பிறர் நன்மையடைந்தார்கள், மற்றவர்கள் சுகங் கண்டார்கள் என்று அமைய வேண்டும்.<br />_ (விடுதலை,20.3.1956)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-44945853485588169312015-06-26T20:13:00.021+05:302015-06-26T20:13:00.021+05:30மாலேகான் குண்டுவெடிப்புக் குற்றவாளிகளைத்
தப்பிக்கவ...மாலேகான் குண்டுவெடிப்புக் குற்றவாளிகளைத்<br />தப்பிக்கவிட மத்திய - மாநில அரசுகள் அழுத்தம்!<br /><br />அரசு வழக்குரைஞரே அம்பலப்படுத்துகிறார்<br /><br /><br />டில்லி, ஜூன் 26_ மாலேகான் குண்டுவெ டிப்பில் கைதாகி சிறையில் உள்ள கைதிகளின் வழக்கை தீவிரமாக கையாளக் கூடாது என்றும், அவர் களை விரைவில் விடு விக்கும் வகையில் வழக் காட வேண்டுமென்றும் தனக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்ததாக அரசுத் தரப்பில் ஆஜராகி வழக்காடி வரும் ரோகினி செலியன், ஆங்கிலப் பத் திரிகை ஒன்றிற்குப் பேட்டி யளித்துள்ளார்.<br /><br />இதன் விவரம்: 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி மகாராஷ்டி ராவில் உள்ள மாலேகான் பகுதியில் வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 37 பேர் பலியானார்கள், 140-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கை விசாரித்த காவல் துறை, உள்ளூரைச் சேர்ந்த சில முஸ்லீம் இளைஞர் களைக் கைது செய்தது. அதன் பிறகு இந்த வழக்கு சிறப்பு புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்ட பிறகு இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த் தியது தெரியவந்தது. தொடர் விசாரணைக்குப் பிறகு பிரங்யா சிங் தாக் கூர் என்ற சாமியாரினி, சிவ்நாராயண் கோபால், ராணுவ அதிகாரியான சிரிகாந்த் புரோகித், கல சஹரா, ஷ்யாம் போன் றோர் கைது செய்யப்பட் டனர். இவர்களுடன் மேலும் 12 காவி பயங்கர வாதிகள் கைது செய்யப் பட்டனர். அதில் நான்கு பேர் தற்போது பிணையில் வெளியே வந்து விட்டனர். இவர்கள் இந்து அமைப் பான அபினவ் பாரத் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. இந்த அமைப்பிற்கும் ஆர்.எஸ். எஸ்.க்கும் தொடர்பு உள்ள தாக மும்பை தாக்குதலில் மரணமடைந்த காகரே புலனாய்வு செய்து கூறி யிருந்தார். தொடர்ந்து இந்த வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கின் அரசுத் தரப்பு வழக்குரைஞரான ரோகினி செலியன் பத்தி ரிகைக்கு அளித்த பேட் டியில் கூறியதாவது.<br /><br />மோடி அரசு வந்த உடனேயே தேசிய புல னாய்வு அமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் என்னை நேரில் சந்தித் தார். தொலைபேசியில் கூட பேசவேண்டாம் என்று கூறி நேரில் வந்த அந்த அதிகாரி, உங்க ளுக்கு ஒரு செய்தி இருக் கிறது. இந்த வழக்கில் தீவிரமாக வாதாட வேண் டாம் என்று கூறினார்.<br /><br />பிறகு இந்த ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி வழக் கின் விசாரணை நாளன்று, அதே அதிகாரி மீண்டும் வந்து மேலிடத்தின் விருப்பப்படி இந்த வழக் கில் நீங்கள் வாதாட வேண்டாம். உங்களுக்கு பதில் வேறு வழக்குரை ஞர் நீதிமன்றத்தில் வாதா டுவார் என்று வெளிப் படையாகவே மிரட்டினார்.<br /><br />இதற்குப் பதிலளித்த நான் நல்லது, ஏற்கெ னவே நீங்கள் சொல்லியி ருப்பதால் இதைத் தான் எதிர்பார்த்தேன். எனது கணக்கு வழக்கு களை முடியுங்கள். மேலும் இந்த வழக்கிலிருந்து என்னை விடுவிப்பதாக அறிவித் தால்தான் தேசிய புல னாய்வு அமைப்பிற்கு எதிரான வழக்குகளில் -_ இந்த வழக்கில் அல்ல -_ ஈடுபட முடியும் என்று கூறினேன்.<br /> <br />அதற்கு பிறகு அந்த அதிகாரி மற்றும் புலனாய்வு அமைப் பிலிருந்து யாரும் பேச வில்லை என்றார் அவர். ரோஹினி செலிய னுக்கு அரசு தரப்பில் தரவேண்டிய சலுகைகள் அனைத்தும் கடந்த சில மாதங்களாக குறைக் கப்பட்டுவிட்டன. அரசு தரப்பு ஓட்டுநர் திடீரென உடல் நிலை சரியில்லை என்று விடுப்பு எடுத்து விட்டார். அதனை அடுத்து நீங்களே ஓட்டுநரை வைத்துக் கொள்ளுங்கள் அதற்கு தேவையான பணத்தை அரசு வழங்கும் என்று கூறிய நிலையில் வழக்குரைஞர் தனக்கான ஓட்டுநரை வைக்க நடை முறையில் செய்ய இயலாத வகையில் பல்வேறு விதி களை புதிதாகப் புகுத்தியது. மேலும் பயணச் செலவு, வழக்குச் செல வுகள் தொடர்பான விவ காரங்களில் தொடர்ந்து அலைக்கழிக்க வைக்கப் பட்டார். மத்திய அரசின் போக்கிற்கு துணைபோ காத காரணத்தால் வேறு வழியில் அவருக்கு தொந் தரவுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக வழக்குரைஞர் கூறியதாவது என்னை இந்த வழக்கில் இருந்து அவ்வளவு சாமா னியத்தில் விடுவிக்க முடியாது ஆகவே நானாக விலகிக்கொள்ளும் வகை யில் பல்வேறு வழிகளில் தொந்தரவு கொடுக் கிறார்கள். அதே நேரத்தில் ஒரு புதிய வழக்குரைஞர் இதை விசாரித்து வாதா டுவது சிரமம். அவர் எதுவும் செய்ய முடியாது. இந்த வழக்கை திரும்பப் பெற முடியாது என்பதால் அரசு தரப்பு தோல்வி யுற்று வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் இதைத்தான் மத்திய அரசு விரும்புகிறது என்று கூறினார். தேசிய புலனாய்வுத் துறை அமைப்பு, பிரதம ரின் கட்டுப்பாட்டில் உள்ள ஓர் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com