tag:blogger.com,1999:blog-1474608369333206681.post664294403309673156..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: ஆடிக் கூத்து!பக்திப் படுகுழியில் விழுந்து மதியையும் நிதியையும் இழக்கலாமா? தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-64063997798262147792013-08-07T05:37:59.624+05:302013-08-07T05:37:59.624+05:30
இறந்தும் வாழ இதோ ஓர் அற்புத வழி?
நம்மில் பலருக்...<br />இறந்தும் வாழ இதோ ஓர் அற்புத வழி?<br /><br /><br />நம்மில் பலருக்கும் இருக்கும் அல்லது அடிக்கடி வரும் பயங் களிலேயே மிகப் பெரிய பயம் (சாவு) மரண பயம்தான்!<br /><br />எவ்வளவு காலம் நாம் வாழு கிறோம் என்பதா முக்கியம்? எவ்வளவு (குறுகிய) காலம் வாழ்ந்தாலும் அதில் நாம் செய்த நற்பணிகள் - தொண் டறம் - நமது சுயநலம் தாண்டிய பொதுத் தொண்டு, மக்கள் நலம் சார்ந்த செயல்கள் இவைதானே உண்மையானவை?<br /><br />அறத்தால் வருவதே இன்பம் என்னும் போது அவ்வின்பத்திற்கு எது தேவை - தூய உள்ளம், தொண்டு உள்ளம், தொல்லுலக மக்கள் எலாம் எமது குடும்பத்தவரே - யாவரும் கேளீரே - என்ற சிந்தனை!<br /><br />மனத்துக்கண் மாசு இல்லாதது தான் தூய உள்ளம்! அதுதானே அறம் - அது தானே நம்மை பிறருக்கு உதவிடச் செய்யும் ஊற்று? - இல்லையா?<br />மாசுபடிந்த மனம் சுயநல<br /><br />தூசுபடிந்த உள்ளம் அல்லவா?<br /><br />பொறாமைக் கிருமிகளும் அந்த மனத்தினை<br />கெட்டமனத்தினை ஆக்கிரமித்துக் கொள்ளுமே!<br /><br />வாழ்வில் மரண பயத்தை விட்டொ ழித்து, வாழுவதைப் பொருள் உள்ள வாழ்வாக நாம் ஆக்கிக் கொள்ளுவதே சாலச் சிறந்தது.<br /><br />இந்தப் பொருள் பணம் காசு சேர்ப்பதிலேயே சர்வகாலமும் எண்ணி எண்ணி ஓடிஓடி தேடிச் சேர்த்து - கேடு கெட்ட மானிடராக வாழும் வகைக்கான பொருள் பணம் அல்ல; அர்த்தமுள்ள - பயனுறு வாழ்வாக வாழ்வது என்பதே முக்கியம்!<br /><br />தனக்கு இறுதியில் ஆறடி மண்கூட உறுதியில்லை; (அது இப்போது தேவையு மில்லை; காரணம் மின்மயானத்தில் - நொடிப் பொழுதில் பிடி சாம்பலாகி அவற்றை எங்கும் தூவிடலாம் - என்ற கதை போன்று ஆகிவிட்டது நவீன வாழ்க்கை) அப்படி இருக்கும்போது சுயநலத்திற்காக பல வீடுகள் - கண்ணுக்குத் தெரிந்து ஊரை அடித்து உலையில் போடும் வேலைக்கே தமது 24 மணி வாழ்வு போதவில்லை - பல சோற் றாலடித்த சுயநலப் பிண்டங்களுக்கு.<br /><br />பலர் பதவியை, அதிகாரத்தை, இதற்காகவே கண் மண் தெரியாமல் ஆட்டம் ஆடி பிறகு நீதிமன்றம், வக்கீல், ஜெயில், பெயில் என்று ஓடித் திரியும் நிலையைக் கண்டும் பாடம் கற்கத் தெரியாத - அல்லது விரும்பாத - பம் மாத்து மனிதர்களாகவே வாழுகின்றனர்!<br />அவர்களைப் போல் இல்லாமல், நமது நற்செயல்களால் - தொண்டறத்தால் இறந்தும் உயிர் வாழ எண்ணிட வேண்டும்; அது எளிதும் கூட!<br /><br />என்ன அப்படியா என்கிறீர்களா? இன்று உலக உறுப்புக் கொடை நாள்; நம் வீட்டில் யாருக்காவது ஏதோ எதிர்பாராத விபத்துக் காரணமாக மூளைச் சாவு (Brain Death) ஏற்பட்டு விட்டால் - அவர்களது உடல் உறுப்பு களை கொடையாக மருத்துவமனை களுக்கு வழங்கினால் அது பிறரது - தேவைப்படுவோர் -உடலில் பொருத்தப் பட்டு அதன் மூலம் தொடர்ந்து இறந்தவர் வாழலாம்!<br /><br />நாமும் இறந்த பிறகும் வாழலாம், நமது உடல் உறுப்புகளைக் கொடையாக கொடுப்பதன் மூலம். நம் உடலிலோ, நாம் அளிக்கும் உடலிலோ உடனடியாக உறுப்புகளை (அதற்குரிய கால அவகாசம் உண்டு) வழங்கலாம்.<br /><br />1. கண் விழிகளை (கார்னியா) - 2 வாரம் 2. சிறுநீரகம் - 24 மணி நேரம்<br /><br />3. கல்லீரல் - 12 மணி நேரம்<br /><br />4. கணையம் - 12 மணி நேரம்<br /><br />5. இருதயம் - 3 மணி நேரம்<br /><br />6. நடுக்காது - தோல் - 5 ஆண்டுகள்<br /><br />(Bone Marrow)<br /><br />7. தோல் - 3 மணி நேரம்<br /><br />இந்தக் கால அவகாசத்திற்குள் அவற்றை தேவைப்படும் மனிதர்களுக் குப் பொருத்தி விடுவார்கள் - பொருத்திவிட வேண்டும்.<br />அந்த உறுப்புகள் மூலம் - வாழு கிறார்கள் - செத்துவிடவில்லை. சத்து உள்ளவர்களாக அவர்கள் உறுப்பு மூலம் வாழ்க்கைப் பயணத்தைத் தொடரு கிறார்கள். பயணங்கள் முடிவதில்லை என்று பாருக்குப் பறை சாற்றுகிறார்கள் என்றுதானே பொருள்?<br />பெரியார் உறுப்புக் கொடை கழகத் தில் உறுப்பினராகுங்கள்; உடல்கள், உடல் உறுப்புகளை கொடையாக வழங்கிட உறுதி மேற்கொள்ளுங்கள்.<br />அது கொடையாளனை நிரந்தரமாக வாழ வைக்கும்! -veramaniதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-52680058876120790972013-08-07T05:37:05.404+05:302013-08-07T05:37:05.404+05:30
சிவ- அய்யாதுரை பேசுகிறார்
தமிழர்கள் பெருமைப்படக...<br />சிவ- அய்யாதுரை பேசுகிறார்<br /><br /><br />தமிழர்கள் பெருமைப்படக் கூடிய தமிழர் - இராஜபாளையத்தைச் சேர்ந்த சிவ. அய்யா துரை. தொலைத் தொடர்புத்துறையில் மின் அஞ்சலைக் கண்டுபிடித்து அறிவியல் உலகத் தில் மிக உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.<br /><br />நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, ஊராட்சி, நகராட்சிப் பள்ளியில் படித்தவர் இவர். கல்விப் பாரம்பரியம் உள்ளவர் என்ற பின்னணி யெல்லாம் இவருக்குக் கிடையாது. சென்னை அரிமா சங்கத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் தெரிவித்த கருத்து கவனிக்கத்தக்கது - கருத்தூன்றத்தக்கது.<br /><br />எப்பொழுது தமிழர்கள் ஜாதியினைத் துறந்து ஒரே இனமாகச் சிந்திக்கத் தொடங்கு கிறார்களோ அப்பொழுதுதான் தமிழர்கள் முன்னேற முடியும் என்று அவர் தெரிவித்த கருத்தினை வரவேற்கிறோம் - பாராட்டு கிறோம்!<br /><br />தமிழர்களின் ஒற்றுமையைச் சிதைத்தது ஜாதிதானே! தமிழன், தாம் ஓர் இனம் என்ற உணர்வைப் பெறுவதற்குத் தடையாக இருப்பது ஜாதி தானே? நீ யார் என்று கேட்டால் முதலியார், செட்டியார், நாடார், வன்னியர் என்று சொல்லுகிறானே தவிர நான் தமிழன் என்று சொல்லுவதில்லையே!<br /><br />இந்த உணர்வு வழி ஒற்றுமை இல்லாத காரணத்தால் தமிழன் பல உரிமைகளை இழந்து கொண்டு இருக்கிறான் - போராடும் உணர்வினையும் தொலைத்துக் கொண்டு இருக்கிறான் என்பதை மறுக்க முடியுமா?<br /><br />இன்னொரு கருத்து அவர் குறிப்பிட்டுள்ளது மிக முக்கியமானது. நமது நாட்டுக் கல்வி முறை என்பது வெறும் மனப்பாடக் கல்வியாகத் தானிருக்கிறது. அறிவியல் சிந்தனையை வளர்ப்பதாக இல்லை என்று அவர் குறிப்பிட்டது மிகச் சரியானது.<br /><br />நம் நாட்டுக் கல்வி முறை - மதிப்பெண்கள் என்பதெல்லாம் பார்ப்பனர்களுக்கு எளிதான வசதியான மனப்பாட முறை. மந்திரங்களை மனப்பாடம் செய்து மனப்பாடம் செய்து பரம்பரைப் பரம்பரையாக மரபு வழித் திறன் களை வளர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்தக் கல்வி முறை கண்டிப்பாக மாற்றப்பட வேண்டும். சுய சிந்தனையைத் தூண்டக் கூடியதாகவும், மாணவர்களின் தனித் திறனை அடையாளங் கண்டு, அதனை வளர்க்கக் கூடியதாகவும் அல்லவா கல்வி முறை இருக்க வேண்டும்.<br /><br />நம் நாட்டில் அறிவியல் பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளனவே தவிர அறிவியல் மனப்பான்மையை வளர்க்கக் கூடிய தன்மையில் அவை இல்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.<br /><br />மதிப்பெண்கள் அதிகம் வாங்குவது எப்படி என்ற கலையைக் கற்றுக் கொடுக்கும் கல்வியால் என்ன பயன்?<br /><br />பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தோழர் சிவ. அய்யாதுரையின் மனதைக் காயப்படுத்தும் அளவுக்கு ஒரு நிகழ்வு - அதனையும் அரிமா சங்கக் கூட்டத்தில் தெரிவிக்கத் தயங்கவில்லை அவர்.<br /><br />ஹைதராபாத்தைத் தலைமையிடமாகக் கொண்டு வெளிவரக் கூடிய ஓர் ஆங்கில இதழ் வெளியிட்ட செய்திதான் அது.<br /><br />பார்ப்பனர் அல்லாதார் இவ்வளவுப் பெரிய அறிவியல் கண்டுபிடிப்பை கண்டுபிடித்திருக்க முடியாது என்று அந்தப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டு இருந்த தகவலை இளம் விஞ்ஞானி சிவ. அய்யாதுரை கூறியது எத்தகைய அதிர்ச்சிக்கு உரியது! நம் நாட்டுப் பார்ப்பனர்களின் மனப்பான்மை, எத்தகைய இனத் துவேஷ நஞ்சை உள்ளடக்கிக் கொண்டு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். சிவ. அய்யாதுரை அவர்கள் ஒன்றும் திராவிடர் கழகத்துக்காரர் அல்லர்; அத்தகைய ஒருவரே இதனை எடுத்துச் சொல்லிக் குமுறி இருக்கிறார் என்றால் இதைவிடப் பார்ப்பனர் களைத் தெரிந்து கொள்ள வேறு என்ன ஆதாரம் தேவை?தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-15083965524347333502013-08-07T05:35:26.935+05:302013-08-07T05:35:26.935+05:30
ஆயுதம்!
கொஞ்சத் தண்டனையா னாலும், அதிகத் தண்டனை...<br />ஆயுதம்!<br /><br /><br /><br />கொஞ்சத் தண்டனையா னாலும், அதிகத் தண்டனையா னாலும் அது எதற்காக ஏற்பட்டது என்றால், ஒரு குற்றத்தைச் செய்தவன் மேலும் (மறுமுறை) அக்குற்றத்தைச் செய்யாமல் இருப்பதற்குப் பயன்படும் ஆயுதம்தான் அது.<br />(விடுதலை, 13.01.1965)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-90388520757095738052013-08-07T05:34:33.298+05:302013-08-07T05:34:33.298+05:30
செய்தியும் சிந்தனையும்
அட புத்தி கெட்ட...
செய்...<br />செய்தியும் சிந்தனையும்<br /><br /><br />அட புத்தி கெட்ட...<br /><br />செய்தி: இறைவன் அருளால் உயிர் பிழைத்தோம்! - ஒகேனக்கல் வெள்ளத்தில் உயிர் பிழைத்தோர் பேட்டி<br /><br />சிந்தனை: அரும்பாடுபட்டு அவர்களை மீட்டது இராணுவமா? கடவுளா? அடபுத்தி கெட்ட மக்களே!தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-7941079099751507962013-08-07T05:33:31.582+05:302013-08-07T05:33:31.582+05:30ஒன்பது நீதிபதிகளின் தீர்ப்பு
மண்டல் கமிஷன் வழக்கு...ஒன்பது நீதிபதிகளின் தீர்ப்பு<br /><br />மண்டல் கமிஷன் வழக்கு - இந்திரா சகானி வழக்கினை - அரசியல் சட்டத்தில் இடஒதுக்கீடு பற்றிய எல்லா அம்சங்களையும் ஆராய்ந்து தீர்ப்பு அளிக்கும் வகையில் ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட முழு பெஞ்ச் விசாரித்தது. இடஒதுக்கீடு செல்லும் - செயல்படுத்தப்படல் வேண்டும் என்று தீர்ப்பும் கூறியுள்ளது; இந்நிலையில் மீண்டும் மீண்டும் தனித்தனியே இப்படி வழக்குகளைப் போட்டு, அவைமீது தீர்ப்பு வழங்கி, கட்டடத்தின் மூலக் கல்லை - கட்டடத்தையே இடிக்க முனைவதற்குப் பதிலாக கற்களை மெதுவாகப் பிடுங்கி - உடைத்துக் கொண்டே இருப்பது - என்பது சமூகநீதிக்கெதிரான ஒரு சதியாக நடைபெற்று வருகிறது.<br /><br />80 விழுக்காடு மக்களுக்கு விரோதமான மக்கள் விரோதப் போக்குத்தான் இது என்பதை நாம் சுட்டிக் காட்ட விழைகிறோம்.<br /><br />நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சி ஒடுக்கப்பட்ட, உரிமை பறிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளும் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்து, இது போன்ற பிற்போக்கான சமூகநீதிக்கு எதிரான தீர்ப்புகளின் விளைவுகளிலிருந்து பாதுகாக்க முன் வர வேண்டிய தருணம் இது!<br /><br />வரவேற்கத்தக்க நாடாளுமன்றத்தில் சமூகநீதிக் குரல்!<br /><br />நேற்று நாடாளுமன்றத்தில் ஜீரோஅவர் (Zero hour) என்ற கேள்வி நேரத்தின்போது இதை வலியுறுத்திய அய்க்கிய ஜனதா தளத் தலைவர் சரத்யாதவ் சிறப்பாகச் சுட்டிக் காட்டியுள்ளார்!<br /><br />எய்ம்ஸ் அமைப்பு பற்றிய இத்தீர்ப்பு இதற்கு மட்டுமல்லாது இதுபோன்ற பிற உயர் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றும் கூறப் படுகிறது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.<br /><br />இதுபோலவே சமாஜ் வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் (யாதவ்) அவர்களும், காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த பி.எல். பூனியா எம்.பி., அவர்களும், பகுஜன்சமாஜ் கட்சியைச் சார்ந்த தாராசிங் சவுகான் எம்.பி. அவர்களும், இடஒதுக்கீட்டுக்கு எதிரான இத்தீர்ப்பைக் கண்டித்து, இதற்கு நாடாளுமன்றமும், மத்திய அரசும் விடிவு, தீர்வு - காண வேண்டியது அவசர அவசியம் என்பதை வலியுறுத்தி உள்ளனர்!<br /><br />இது கட்சி அரசியல் பிரச்சினை அல்ல; சமூகநீதியைக் காப்பாற்ற வேண்டிய மிக இன்றியமையாத வாழ்வுரிமை, (கல்வி உரிமை - உத்தியோக உரிமைப் பிரச்சினைகளை உள்ள டக்கியது) பிரச்சினை ஆகும்!<br /><br />திராவிடர் கழகம் முன்னின்று டில்லியில் போராட்டம்!<br /><br />உடனடியாக இத்தீர்ப்பின் தீய விளைவான - இடஒதுக்கீடு மறுதலிப்பினை எதிர்த்து அனைவரும் சேர்ந்து, ஓரணியில் நின்று போராட உடனடியாக முன் வர வேண்டும்.<br />தி.மு.க., அ.தி.மு.க., போன்ற அமைப்பு களும் இதில் உடனடியாகக் குரல் கொடுக்க முன் வர வேண்டும்.<br /><br />இதை வலியுறுத்தி நாடாளுமன்றம் நடைபெறும் நாள்களுக்குள்ளேயே ஒரு நாள் விரைவில் டில்லியில் திராவிடர் கழகம் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் அமைப்பு ஆகிய அமைப்புகளும், ஒத்த கருத்துடன் நம்முடன் போராட முன்வரும் சமூகநீதிக் கட்சிகள், அமைப்புகளையும் இணைத்து மாபெரும் போராட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்துள்ளோம்.<br /><br />டில்லி சமூக நீதிப் போராட்டத்தில் திராவிடர் கழகம் - (அநேகமாக நானே சென்று) கலந்து கொள்ளுவோம்!<br /><br />இன்னும் ஒரு சில நாள்களில் - கால தாமதம் செய்யாமல் நடத்திட சமூகநீதியைப் பாதுகாக்கும் மாபெரும் பணி செய்ய பருவம் பாராது புறப்படத் தயாராகி விட்டோம்!<br /><br />தோழர்களே தயாராவீர்!<br /><br />வாய்ப்புள்ள அத்துணைத் தோழர்களும், அமைப்புகளும் டில்லி நோக்கி வரத் தயாரா குங்கள்!<br /><br />காலதாமதம் கூடாது; ஆறிய கஞ்சி பிறகு பழங் கஞ்சியாகிவிடும்,<br /><br />எனவே ஆயத்தமாவோம்! தேதி விரைவில் அறிவிக்கப்படும்.<br /><br />கி.வீரமணி<br />தலைவர், திராவிடர் கழகம்<br /><br />சென்னை <br />6.8.2013தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-27182314877371151772013-08-07T05:33:26.841+05:302013-08-07T05:33:26.841+05:30எய்ம்ஸ் போன்ற நிறுவனங்களில் இடஒதுக்கீடு கிடையாதா?
...எய்ம்ஸ் போன்ற நிறுவனங்களில் இடஒதுக்கீடு கிடையாதா?<br /><br /><br /> எய்ம்ஸ் போன்ற நிறுவனங்களில் இடஒதுக்கீடு கிடையாதா?<br /><br /> டி.பி. யாதவ், முலாயம்சிங் போன்றோர் எதிர்க்குரல் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது!<br /><br />ஒத்த கருத்துக்கள் கொண்டவர்களையெல்லாம் ஒருங்கிணைத்து<br /><br />டில்லியில் திராவிடர் கழகம் முன்னின்று போராட்டம் நடத்தும்!<br /><br />தோழர்களே தயாராவீர்! தயாராவீர்!!<br /><br />தமிழர் தலைவர் அறிவிப்பு<br /><br />8ஆம் தேதி தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை எழுச்சியுடன் நடத்திட அணி திரண்டு வாரீர்! வாரீர்!!<br /><br />டில்லியில் உள்ள எய்ம்ஸ் போன்ற உயர் கல்வி மருத்துவ நிறுவனங்களில் இடஒதுக்கீடு கூடாது என்று உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை எதிர்த்து டில்லியில் போராட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிவித் துள்ளார்; அறிக்கை வருமாறு:<br /><br />மத்திய அரசின் சார்பாக, டில்லியில் நடைபெறும் மிகப் பெரிய மருத்துவக் கல்வி அமைப்பு (எய்ம்ஸ்) என்ற அகில இந்திய மருத்துவ அறிவியல் ஆய்வுக் கழகம் ஆகும்.<br /><br />அதில் உள்ள உயர்ஜாதி வர்க்க நிர்வாகத்தின் தலைவர்கள், அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமையான இடஒதுக்கீடு, சமூக நீதியைப் புறக்கணித்து, இடஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்தாமல் உள்ளனர். இதன் காரணமாக நீண்ட காலமாகவே சமூகநீதிப் போராளிகள் போராட் டங்களை நடத்தி வருகின்றனர்!<br /><br />உச்சநீதிமன்றத்தில் உயர்ஜாதி வர்க்கம்!<br /><br />உச்சநீதிமன்றத்தில் உள்ள உயர்ஜாதி வர்க்கம் பல நேரங்களில் இந்த சமூக நீதியை அது அரசியல் சட்டத்தின் மாற்றப்பட முடியாத, மறுக்கப்பட முடியாத அடிக்கட்டுமானப் பகுதி (Basic Structure of the Constitution) என்ற போதிலும், வேலியே பயிரை மேய்ந்த கதை போல,<br /><br />உச்சநீதிமன்றத்தில் அரசியல் சட்ட அமர்வு, (5 நீதிபதிகளைக் கொண்டது) எய்ம்ஸ் (AIIMS) போன்ற அமைப்புகளில் இடஒதுக்கீடு தேவை யில்லை என்று தீர்ப்பு அளித்திருப்பது - கோடானுகோடி ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு இழைக்கப்பட்ட மாபெரும் சமூக அநீதியாகும்.<br /><br />இந்திய அரசியல் சட்டத்தின் விதிகளை - அதுவும் பறிக்கப்படாத உரிமைச் சாசனப் பகுதியான சமூகநீதியாம் இடஒதுக் கீட்டினை - இப்படி மறுத்து உச்சநீதி மன்றம் தீர்ப்பளிப்பது - அரசியல் சட்ட விரோதப் போக்கு மட்டுமல்ல;<br /><br />அரசியல் சட்ட விதிகளையே செயல்படாமல் செய்யும் (Fraud on the Constitution) செயலாகும் இது!<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-61578368224360590352013-08-06T06:53:09.669+05:302013-08-06T06:53:09.669+05:30
தொடரும் தமிழக மீனவர் துயரம்! தி.மு.க. தலைவர் கலைஞ...<br />தொடரும் தமிழக மீனவர் துயரம்! தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கை<br /><br />சென்னை, ஆக. 5- ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் இலங்கைக் கடற்படையினரால் மீண்டும் சிறை பிடிக்கப்பட்டிருப்பதாகச் செய்தி வந்துள்ளது. எப்போதோ ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெற்று வந்த சம்பவம், தற்போது இரண்டொரு நாட் களுக்கிடையே அரங் கேறும் கொடுமையாக மாறிவிட்டது. தமிழகத்தில் 13 கடலோர மாவட் டங்கள் உள்ளன. 20 ஆயிரத் திற்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள், விசைப்படகுகள் ஒருநாள் விட்டு ஒருநாள் மீன் பிடிப்பதில் ஈடுபடுகின்றன.<br /><br />ராமேஸ்வரம், நாகப்பட்டினம், மண்டபம், கோடியக்கரை, புதுக் கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் எல் லைத் தாண்டி மீன் பிடிப்பதாகச் சாக்கு சொல்லி இலங்கைக் கடற்படையினர் அவர்களை வேண்டுமென்றே கைது செய்து சிறையிலே அடைக்கிறார்கள். கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் ராமேஸ்வரம் மீனவர்கள் பத்து முறை இலங்கைக் கடற் படையினரால் சிறைப் பிடிக்கப் பட்டுள்ளனர்.<br /><br />இரண்டு நாட் களுக்கு முன்பு இலங்கைக்கும், நாகைக்கும் இடையே சர்வதேசக் கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் கள் 65 பேர் இலங்கைக் கடற் படையினரால் சிறை பிடிக்கப் பட்டார்கள். அதன்பிறகு கோடி யக்கரை அருகில் மீன்பிடித்துக் கொண்டி ருந்த 74 மீனவர்களை, பத்துக்கும் மேற்பட்ட படகு களுடன் இலங்கைக் கடற்படை சிறை பிடித்து, அவர்களை திரி கோணமலை கடற் படைப் போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளார்கள். ஏற்கனவே கைதாகி அனுராதபுரம் சிறையிலே 21 மீனவர்கள் அடைக்கப்பட்டு உள்ளார்கள். இந்த வரிசையில் தான் 3-8-2013 அன்று ராமேஸ்வ ரம் மீனவர்கள் 20 பேர் சிறை பிடிக்கப்பட் டுள்ளார்கள்.<br /><br />அமைச்சர் நாராயணசாமி சொல்கிறார்<br /><br />மீனவர்களின் இந்தப் பிரச் சினை பற்றி மத்திய அமைச்சர் நண்பர் நாராயணசாமி செய்தி யாளர் களிடம் கூறும்போது, மீனவர்களை விடுவிப்பது பற்றி இலங்கை அமைச்சர்கள் ஆறு முகம் தொண்டைமான், செந்தில் தொண்டைமான் ஆகியோருடன் பேசி, மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியிருப்பதாகவும், பிரதமரிடம் பேசி, கைது செய் யப்பட்டவர்களை ஓரிரு நாட் களில் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கு மென்றும், மீனவர்கள் இலங்கைக் கடற் படையால் கைது செய்யப்படா மல் இருக்க மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த முயன்ற தாகவும், இதுகுறித்து நட வடிக்கை எடுக்க மத்திய அரசு இரண்டு மூன்று முறை தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியும் இதுவரை பதில் இல்லை என் றும், அதனால் மத்திய அரசு இப் பிரச்சினையில் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றும் கூறியதாக தினமணி நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.<br /><br />எனவே தமிழக மீனவர்களின் இந்தத் தொடர்ந்து வரும் துயரம் குறித்து மத்திய அரசும், மாநில அரசும் வெறும் கடித பரிமாற் றத்தை மட்டும் செய்து கொண்டி ராமல் பயனுள்ள முறையில் நேரடி நடவடிக்கை எடுக்கக் கூடிய அளவிற்கு விரைவில் முடி வெடுத்துச் செய்தா லொழிய, நம் முடைய மீனவர்களின் துன்பங் கள் குறையப் போவதில்லை. இந்தப் பிரச்சினை வெளிநாட்டுப் பிரச்சினை என்பதால் தமிழகத் திலே உள்ள அரசியல் கட்சிகள் மத்திய, மாநில அரசுகளிடம் முறையிடவும், இலங்கைக் கடற் படையினரின் மனிதாபிமான மற்ற போக்கைக் கண்டித்திட வும்தான் முடிகிறதே தவிர, வேறு எதுவும் செய்ய இயலாத நிலை யில் இருக்கிறோம். மத்திய அரசு என்ன செய்ய வேண்டும்!<br /><br />எனவே மாநில அரசு ஒவ் வொரு முறை நமது மீனவர்கள் கைது செய்யப்படும் போது, பிரதமருக்குக் கடிதம் எழுது வதும், மத்திய அரசு உடனடியாக இலங்கைத் தூதுவருக்கோ, இலங்கை அரசுக்கோ கடிதம் எழுதுவதும், அத்துடன் காரியம் முடிந்து விட்டதாகக் கருதுவதும் சரியல்ல. மத்திய அமைச்சரிடம் முறையிட்ட மீனவர்கள், தாங்கள் கடந்த இரண்டு மாதங்களாக இந்தியக் கடல் பகுதியிலேயே மீன் பிடித்து வந்ததாகவும், அதனால் அந்தப் பகுதிகளில் மீன் வளம் குறைந்துவிட்ட தாகவும், பெரும் நட்டம் ஏற்பட்டு குடும்பம் நடத்த முடியாத நிலை இருப்ப தாகவும், மீன்கள் அதிகம் இருக் கும் பகுதி நோக்கிச் செல்லும் போது இலங்கைக் கடற்படை யினரின் தாக்குதலுக்குள்ளாக வேண்டியுள்ளது என்றும், எனவே இலங்கைப் பகுதியில் குறிப்பிட்ட மாதங்களில் மீன் பிடிக்க உரிமை பெற்றுத் தர வேண்டும் என்றும் கேட்டிருக் கிறார்கள். இந்தக் கோரிக்கை களை அப்படியே அலட்சியப் படுத்திவிடாமல் மத்திய, மாநில அரசுகள் அக்கறையோடு ஆழ்ந்து பரிசீலித்து எந்த முறையிலே மீன வர்களின் துயரத்தைக் களைய லாம் என்பதற்கான முயற்சியிலே ஈடுபட வேண்டுமென்று வலி யுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.<br /><br />- இவ்வாறு அறிக்கையில் திமுக தலைவர் கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-48323619103939607282013-08-06T06:50:18.470+05:302013-08-06T06:50:18.470+05:30
இராணுவத்தினர்க்கு நம் வணக்கமும் - நன்றியும்!
எ...<br />இராணுவத்தினர்க்கு நம் வணக்கமும் - நன்றியும்!<br /><br /><br /><br />எல்லாத் துறைகளையும்விட இராணுவத்திற்குக் கூடுதல் மதிப்பு ஏன் என்ற கேள்வி எழலாம். இந்தியாவின் பாதுகாப்புக்கு இராணுவத்துறை தானே மிக மிக முக்கியமானது என்று பதில் கூறலாம். அது உண்மைதான்.<br /><br />அதன் சேவை நாட்டுப் பாதுகாப்புடன் முடிந்து விடக் கூடியதல்ல. இயற்கைச் சீற்றங்களால் மக்கள் அவதிப்படும் பொழுது, உயிருக்குப் போராடும் போது, தம் உயிரைத் துச்சமாக மதித்து மக்களைக் காப்பாற்றுவதற்காக அவர்கள் தரும் உழைப்பு, மேற்கொள்ளும் மயிர்க் கூச்செறியும் அபாயகரமான செயல்பாடுகள் போற்றத் தகுந்தவை!<br />ஊடகங்கள் வாயிலாக ஒரு செய்தி - அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஒகேனக்கல்லில் நீரின் சுழற்சியில் சிக்கிய நால்வரை நமது இராணுவ வீரர்கள் மீட்ட சாகசம் சாதாரணமானதல்ல. மூடநம்பிக்கைவாதிகள் மறுபிறவி என்று சொல்லுவது ஏமாற்று வேலை; உண்மையிலேயே மறுபிறப்பு என்பது ஒகேனக்கல்லில் நடத்திருக்கிறது.<br /><br />இரவு முழுவதும் மரக்கிளையில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களை சாகசச் செயலால் அதே நேரத்தில் சாமர்த்தியமான அணுகுமுறையால் மீட்டுக் கொடுத்துள்ளனர் இராணுவ வீரர்கள்.<br /><br />உயிர் பிழைத்தவர்களின் குடும்பத்தவர் நன்றி தெரிவிப்பது மட்டும் முக்கியமல்ல; மனிதநேயம் உள்ள ஒவ்வொருவரும் நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.<br /><br />இதே ஒகேனக்கல் வெள்ளத்தில் இதற்கு முன்பெல்லாம் பல முறை உயிரிழப்பு நடந்ததுண்டு; முதன் முதலாக இராணுவம் தலையிட்டு உயிரைக் காப்பாற்றியது இதுதான் முதல் தடவை என்று அறிகிறபோது புதிய நம்பிக்கை பிறந்திருக்கிறது.<br /><br />ஒகேனக்கல்லிலும் சரி, கடலிலும் சரி, ஏரிகளிலும் சரி, இன்பச் சுற்றுலா செல்லக் கூடியவர்கள் நீரில் மூழ்கி மரணிக்கும் செய்தி அடிக்கடி வந்து கொண்டு தானிருக்கிறது.<br /><br />தமிழ்நாடு அரசு இத்தகைய சுற்றுலா இடங்களில் தக்க பாதுகாப்பு எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மிகவும் அவசியமும் முக்கிய முமாகும். மனித உயிர் என்பது மலிவான ஒன்றல்ல என்பது எப்பொழுதும் அரசுக்கு நினைவிருக்கட்டும்!<br /><br />அண்மையில் வடநாட்டில் உத்தரகாண்டில் கோயில்களை நாடிச் சென்ற அப்பாவிப் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கில் கடும் வெள்ளத்தால் காவு கொடுக்கப்பட்ட கொடுமையை இப்பொழுது நினைத்தாலும் நம் குருதியெல்லாம் உறைந்து விடும். இன்னும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரிதாப கரமான முறையில் இருந்தவர்களை மரணிக்காமல் காப்பாற்றியதற்கும் காரணம் இந்திய இராணுவமே.<br /><br />உயிர் பிழைத்து மீண்டு(ம்) வருவோம் என்று அந்தப் பக்தர்களேகூட சிறிதும் நினைக்கவில்லை; நம்பிக்கை இழந்து கதறினார்கள். அவர்களையெல் லாம் இந்திய இராணுவத்தினர் காத்தவிதம் இருக்கிறதே சாதாரணமானதல்ல!<br /><br />இரு மலைக்குன்றுகளின் இடையே கம்பிகளை இணைத்து அதில் இராணுவ வீரர்கள் குறுக்கே படுத்துக் கொள்ள, பக்தர்கள் அந்த இராணுவ வீரர்கள் முதுகில் நடந்து வெள்ளத்தைக் கடந்து வர.. சினிமாவில் இடம் பெறும் ஜோடனைக் காட்சியல்ல அவை. உண்மையில் நடந்தது. இதற்காக எவ்வளவு தூரம் இராணுவ வீரர்களைப் பாராட்டினாலும் வெகுமதிகள் அளித்தாலும் தகும்.<br /><br />ஆனால் இப்படி மனித உயிர்களைக் காப்பாற்றிய இராணுவ வீரர்களுக்கு அந்தச் சாதனையின் பெருமை நம் நாட்டில் செல்லுவதில்லை. கடவுள் கிருபையால் பிழைத்தோம் என்று அறிவு நாணய மின்றி, நன்றி உணர்ச்சி சிறிதுமின்றி கூறியதைக் கேட்ட போது வேதனைதான் மிஞ்சியது.<br /><br />அந்தக் கடவுளை வழிபடச் சென்ற இடத்தில் தானே இந்தத் துயரங்கள் நடந்தன.<br /><br />தன்னுடன் வந்த உற்றார் உறவினர்களை, நண்பர்களை இழந்தனர் என்பதைக்கூட மறந்துவிட்டு, உயிர் பிழைத்தவர்கள் தாங்கள் உயிர் பிழைத்ததற்குக் காரணமாக இருந்த - தங்கள் உயிரை பணயம் வைத்துச் செயல்பட்ட இராணுவத்தினருக்கு நன்றி தெரிவிப்பதை மறந்து, மீண்டும் கடவுள்மீது தங்கள் நம்பிக்கையைத் திணிப்பது எவ்வளவுப் பெரிய மோசமான செயல். அந்த அளவிற்குக் கடவுள் பக்திப் போதை நம் மக்களின் அறிவைப் பாழ்படுத்திவிட்டிருக்கிறது என்று தானே பொருள்?தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-59752048526449202432013-08-06T06:48:54.190+05:302013-08-06T06:48:54.190+05:30
மனிதன்
மனிதன் ஒருபோதும் தனித்து வாழக்கூடியவன் ...<br />மனிதன்<br /><br /><br /><br />மனிதன் ஒருபோதும் தனித்து வாழக்கூடியவன் அல்ல; அப்படி வாழவும் அவனால் முடியாது; அதனால்தான் கூட்டமாகக் கூடி வாழ்கிறான். சமுதாயத் திற்குத் தேவையான ஒவ்வொரு காரியத் தையும் ஒவ்வொருவன் செய்கிறான்.<br />(விடுதலை, 10.02.1960)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-18481156305881262632013-08-06T06:47:39.874+05:302013-08-06T06:47:39.874+05:30
வரலாறு பேசும்!
கேள்வி: சென்னையில் ஒரே நாளில் ஏழ...<br />வரலாறு பேசும்!<br /><br /><br />கேள்வி: சென்னையில் ஒரே நாளில் ஏழு தற் கொலைகள் என்று தின மலர் நாளேடு கொட்டை எழுத்துக்களில் செய்தி வெளியிட்டிருக்கிறதே!<br /><br />கலைஞர்: அ.தி.மு.க. ஆட்சியின் வரலாறு பேசும் சாதனைகளில் இதுவும் ஒன்று என்று அவர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.<br /><br />- (முரசொலி 2.8.2013)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-64632492377795054882013-08-06T06:47:04.385+05:302013-08-06T06:47:04.385+05:30
சாமி பிரசாதம் சாப்பிட்டோர் பிழைப்பார்களா?
ராங்க...<br />சாமி பிரசாதம் சாப்பிட்டோர் பிழைப்பார்களா?<br /><br /><br />ராங்கியா, ஆக.5 அசாமில், வீட்டில் நடத்தப்பட்ட பூஜையில் வழங்கப்பட்ட பிரசாதத்தைச் சாப் பிட்ட 60 பேருக்கு வயிற்று வலி, வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர் களின் 10 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. நேற்று, அசாம் மாநிலம் காம்ரப் மாவட்டத்தில் நபாபூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மதச் சடங்கு நிகழ்ச்சி நடந்தது. பிரார்த்தனையின் முடிவில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பிரசாதத்தை சாப் பிட்ட சிறிது நேரத்தில் அவர்களுக்கு வயிற்றுவலியும், அதனைத் தொடர்ந்து வாந்தி, மயக்கமும் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உதவி யோடு அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். அவர்களில் 10 குழந் தைகள் மொத்தம் 60 பேர் பாதிக்கப் பட்டிருந்தனர். அவர்களில் 10 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித் துள்ளனர். தகவல் அறிந்த காவல்துறை யினர் மற்றும் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங் கிருந்த பிரசாதத்தை ஆய்வுக்கு அனுப் பியுள்ளனர். மேலும் நடந்த சம்பவத் தின் பின்னணியில் சதிச்செயல் உள் ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரசாத மாதிரியின் ஆய்வு முடிவு வெளிவந்த பிறகே, பாதிக்கப் பட்டவர்களின் வாந்தி, மயக்கத்திற்கான காரணம் புலப் படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-10577626487837454112013-08-06T06:46:10.818+05:302013-08-06T06:46:10.818+05:30திருச்சி அருகே பெண்களுக்கு பேய் விரட்டும் விழாவாம்...திருச்சி அருகே பெண்களுக்கு பேய் விரட்டும் விழாவாம்<br /><br />திருச்சி, ஆக.5- திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே சோழராஜா கோவிலில் பெண்களுக்கு பேய் விரட்டும் விழா நடை பெற்றதாம்.<br /><br />திருச்சி மாவட்டம், தா.பேட்டையை அடுத்த சோளம்பட்டி கிராமத் தில் உள்ள சோழராஜா கோவிலில் நேற்று முன் தினம் முதல் நாள் மாவிளக்கு பூஜை, காவிரி ஆற்றுக்கு சென்று கரகம் பாலித்தல், கோவில் முன்பு பக்தர்கள் பொங் கல் வைத்தல் உள்ளிட் டவை நடைபெற்றன வாம்.<br /><br />நேற்று காலை குழந்தைகள், பெரியவர்கள் மொட்டை அடித்து தங்களது வேண்டுதல் களை நிறைவேற்றினர். அதனை தொடர்ந்து கோவிலின் முன்பு பேய் பிடித்திருப்பதாக கூறப் படும் பெண்கள், பக் தர்கள் ஈரத்துணியுடன் தலைவிரி கோலமாக அமர்ந்திருந்தனர். உலா சென்ற பூசாரிகள் கோவி லுக்கு வந்ததும் சோழ ராஜா சுவாமிக்கு தேங் காய் உடைத்து பூஜைகள் நடத்தப்பட்டதாம். பின்னர் பேய் பிடித்ததாக கூறப்படும் பெண்களின் முகத்தில் கோவில் பூசா ரிகள் தண்ணீர் தெளித்து ஊதுவத்தி புகையை காட்டி பேய் பிடித்துள் ளதா என்று விசாரித்தன ராம்.<br /><br />அப்போது தெளிவாக பதில் கூறிய பெண் களுக்கு பூசாரிகள் தீர்த்தம் தெளித்து ஆசி வழங்கி அனுப்பினராம். தன்னை மறந்த நிலையில் பேய் பிடித்திருப்பதாக கூறி ஆடிய பெண்களின் உச்சி தலைமுடியை எடுத்து முடிச்சு போட் டனராம் மேலும் அந்த முடியை மட்டும் துண் டித்து ஊரின் எல்லைப் பகுதியில் உள்ள புளிய மரத்தில் ஆணி கொண்டு அடித்து வருமாறு அனுப்பி வைத்தனர். பின்னர் வேல், கம்பு, சாட்டை ஆகியவற்றின் மீது சத்தியம் வாங்கினர்.<br /><br />இக்கோவிலில் வந்து வழிபடுவதால் குழந்தை பாக்கியம், திருமண தடை, பில்லி சூனியம் ஆகிய தடைகள் நீங்கு மாம்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-65820886155976959462013-08-06T06:45:42.733+05:302013-08-06T06:45:42.733+05:30கள்ளக்குறிச்சியில் மழை வேண்டி தண்ணீர் தொட்டியில...கள்ளக்குறிச்சியில் மழை வேண்டி தண்ணீர் தொட்டியில் அமர்ந்து வருண பகவானுக்கு மகா யாகமாம்<br /><br /> <br /><br />கள்ளக்குறிச்சி, ஆக.5- கள்ளக்குறிச்சியில் மழை வேண்டி தண்ணீர் தொட்டியில் அமர்ந்து வருண பகவானுக்கு மகா யாகம் நடைபெற்றது.<br /><br />தமிழகத்தில் தற் போது நிலவி வரும் கடும் வறட்சி நீங்க வருண பகவான் கருணை மழை பொழிய வருண மகா யாகம் கள்ளக்குறிச்சி குளத்துமேட்டு தெரு அரசமரத்தடியில் உள்ள விநாயகர், களரி முனியப்பன் கோவிலில் நேற்று நடைபெற்றதாம். இதையொட்டி அதி காலை 5 மணிக்கு 108 கட ஸ்தாபனம், அனுக்ஞை, மகா சங்கல்பம், விக்னேஷ் வர பூஜை ஆகிய நிகழ்ச் சிகள் நடந்ததாம்.<br /><br />தொடர்ந்து 6.15 மணிக்கு சூர்ய நமஸ்கார மும், 6.30 மணிக்கு விசேஷ கோ பூஜையும், கஜ பூஜை, அஸ்வ பூஜை, அஸ்வத்த பூஜையும், 9 மணிக்கு அபூப சிறீமகா கணபதி ஹோமம், சிறீசண்முக ஹோமம் உள்பட பல் வேறு ஹோமங்கள் நடந்தனவாம்.<br /><br />20 ஆயிரம் மந்திரங் கள் காலை 10.30 மணி யளவில் திருவையாறு கல்யாணபுரம் சிறீனிவாச ஜோதிடர் தலைமையில் ஹோம குண்டத்தில் செங்கல் அளவிலான தேங்காய் பர்பி, அருகம் புல், கொப்பரைத் தேங் காய், தாமரை, கரும்பு, அவல், கடலை, நெய், தேன் மற்றும் 108 நாட்டு மூலிகைகளை கொண்டு ஹோமம் நடைபெற்ற தாம்.<br /><br /><br />தொடர்ந்து பெரிய அளவிலான தண்ணீர் தொட்டியில் 5 பேர் உள்ளே அமர்ந்து 10 ஆயிரம் மந்திரங்கள் கூறி வருண ஜெபம் நடத்தின ராம். இதேபோல் ஹோம குண்டத்தில் 10 ஆயிரம் வேதங்கள் ஓதி மகா யாகம் நடைபெற்றதாம்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-86940434811815584852013-08-06T06:45:15.132+05:302013-08-06T06:45:15.132+05:30பத்து பேர் உயிரைக் குடித்த ஆடிப் பெருக்கு!
பரமத்த...பத்து பேர் உயிரைக் குடித்த ஆடிப் பெருக்கு!<br /><br />பரமத்திவேலூர், ஆக. 5- தஞ்சை, சேலம், நாமக்கல், நீலகிரி மாவட்டங்களில் வெவ்வேறு இடங்களில் காவிரியாறு கால்வாய் வெள்ளத்தில் மூழ்கி 10 பேர் இறந்தனர்.<br /><br /> நாமக்கல் மாவட் டம், பரமத்திவேலூரில் விசைத்தறி தொழிலாளி மாதேஸ்வரன் (25), ராஜூ, நீரில் இழுத்து செல்லப் பட்டனர். மாதேஸ்வரன் உடல் மீட்கப்பட்டது. ராஜூ என்ன ஆனார் என்று தெரியவில்லை.<br /><br /> தர்மபுரி மாவட் டம், நெருப்பூரை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் அருள்குமார்(17) மேட்டூர் காவிரியாற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது தண்ணீரில் மூழ்கி இறந் தார்.<br /> சேலம் பள்ளப் பட்டியைச் சேர்ந்த சாக்கு தைக்கும் தொழிலாளி முருகன் (37) நண்பர்களு டன் மது குடித்து விட்டு மூலப்பாறை என்னுமி டத்தில் காவிரியாற்றில் குளித்தபோது முருகன் ஆற்றில் மூழ்கி இறந்தார்.<br /> தர்மபுரி மாவட் டம், மாட்லாம்பட்டி அருகே ஊர்காவல் படை வீரர் பிரபு (23). நண்பர் களுடன் தேவர்முக்குலம் என்ற பகுதி குட்டையில் டைவ் அடித்த போது கல் இடுக்கில் தலை மோதி உயிரிழந்தார்.<br /> திருவையாறு அடுத்த தென் பெரம்பூ ரில், வெண்ணாறு மதகு அருகில் நேற்று குளித்து கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் சரவணன் , ராஜராஜன் ஆகியோர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு நீரில் மூழ்கினர்.<br /> கேரள மாநிலம் பாண்டிக்கடவு பகு தியைச் சேர்ந்த சகோத ரர்கள் குஞ்சுஅப் துல்லா (65), மொய்து(63), அசன்ஹாஜி (60) சென்ற கார், முதக்கரை பகுதி பாலத்தை கடந்த போது வெள்ளம் அடித்து சென் றது. இதில் மொய்து, குஞ்சு அப்துல்லா, அசன் ஹாஜி, கார் ஓட்டுநர் சித்திக் ஆகியோர் உயிரி ழந்தனர்.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-31270141161394493192013-08-06T06:43:52.109+05:302013-08-06T06:43:52.109+05:30டெசோவின் உறுப்புகளான தி.மு.க., தி.க. விடுதலைச் சிற...டெசோவின் உறுப்புகளான தி.மு.க., தி.க. விடுதலைச் சிறுத்தைகள், திராவிட இயக்கத் தமிழர் பேரவை போன்ற அமைப்புகளும், தமிழ் இனவுணர் வாளர்கள், பற்றாளர்கள் அனைவரும் பல லட்சக் கணக்கில் திரண்டு இந்த அறப்போராட்டத்தின் மூலம் உலக நாடுகள், மனித உரிமை அமைப்புகள் ஆகியவை களுக்கு உணர்த்திடும் அரிய வாய்ப்பு நிச்சயம் ஏற்படும்!<br /><br />கடந்த ஆண்டு டெசோ மாநாடு!<br /><br />சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டைடெசோ சென்னையில் பிரம்மாண்டமான முறையில் நடத்தியதிலிருந்து ஓராண்டு காலத்தில் - அடுக்கடுக்காக அதன் செயல்பாடுகள் உலக அய்.நா. மன்றம் தொடங்கி, உள்ளூர் மக்களின் உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு வடிவம் கொடுத்தது வரை, செய்து வரும் சாதனைகள் அடை மழை போன்ற அடுக்கடுக்கான அறப் போராட்டங்கள்!<br /><br />என்றாலும் நமது ஈழத் தொப்புள் கொடி உறவுகள் உண்மையான விடுதலையையும், சமத்துவ சம வாழ்வுரிமையையும் பெறும்வரை, நம் பணி தொடர் பணியாகவே இருக்கும் இருந்தே தீரும்!<br /><br />கட்சியில்லை - ஜாதியில்லை!<br /><br />தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் ஒரு தனி வரலாறு படைக்கும் வண்ணம் குடும்பம் குடும்பமாகக் கலந்து கொள்ள வேண்டும்!<br /><br />இதில் கட்சியில்லை,<br /><br />இதில் ஜாதியில்லை,<br /><br />இதில் மதமில்லை,<br /><br />இதில் மனிதநேயம் உண்டு.<br /><br />மனித உரிமைப் போர்க் குரல் உண்டு,<br /><br />நாதியில்லாதவர்கள் அல்ல எம் ஈழத்துத் தமிழ்ச் சொந்தங்கள் - அறுபடாத பந்தங்கள்<br />அவர்கள் உரிமைகளை பெறும் வரை<br />நம் பணி ஓயாத பணி; ஒழியாத பணி!<br /><br />90 வயதிலும் களத்தில் கலைஞர்<br /><br />சென்னையில் இந்த 90 வயதிலும் களம் காணுகிறார் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கழகத்தில் வற்புறுத்தும் நம் இனத்தின் ஒப்பற்ற பாதுகாவலர் மானமிகு கலைஞர் அவர்கள்!<br /><br />சென்னையில் அவருடன் சகோதரர் பேராசிரியர் மானமிகு சுப. வீரபாண்டியன் அவர்களும் மற்றும் கழகச் செயல் வீரர், வீராங்கனைகளும் கலந்து கொள்கின்றனர்.<br /><br />திருச்சியில் தமிழ்நாட்டின் நம்பிக்கை ஒளிவீசும், செயல் வீரர் தளபதி செம்மல் மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்து கொள்கிறார்.<br /><br />திருவள்ளூரில் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் கலந்து கொள்கிறார்.<br /><br />மதுரை மாநகரில் என்னைக் கலந்து கொள்ள டெசோ பணித்துள்ளது. அதன்படி பங்கேற்க விருக்கிறேன்.<br /><br />எச்சரிக்கை ஒலி!<br /><br />தோழியர் திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள் கோவை பெருநகரில் தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறார்.<br /><br />இப்படி தமிழ்ப் பூமியே குலுங்கும் வண்ணம் எழுச்சி முரசு கொட்ட கழகத்தவர்கள் ஆயத்தமாகி நிற்கின்றனர்!<br /><br />மக்கள் கடல் பொங்குமாங்கடலென பொங்கிக் காட்டி, பொல்லாங்கு மனம் படைத்த சிங்கள இனவெறித் தனத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க முனைப்புடன் அறவழியில் களங்கண்டு தமிழர் பெருந்திரள் எச்சரிக்கை மணியை ஓங்கி ஒலித்திடுவீர்!<br /><br />வாரீர்! வாரீர்!!<br /><br />அனைவரும் கலந்து கொள்ளுங்கள்! குடும்பம் குடும்பமாக அணி வகுத்துப் பணி முடிக்க ஆயத்தமாவீர்!<br /><br />இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? என்று இன எதிரிகளுக்குக் காட்டி, எம் இனம் மானமும், அறிவும், உரிமையும் பெற, நாளும் போராடுவோம் வாரீர்! வாரீர்!!<br /><br />வெற்றி பெறுவோம் வாரீர்! வாரீர்!!<br /><br /> <br /><br />கி.வீரமணி<br />தலைவர், திராவிடர் கழகம்<br /><br />சென்னை <br />5.8.2013தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-26476517283762180762013-08-06T06:43:44.312+05:302013-08-06T06:43:44.312+05:308ஆம் தேதி தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை எழுச்ச...8ஆம் தேதி தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை எழுச்சியுடன் நடத்திட அணி திரண்டு வாரீர்! வாரீர்!!<br /><br /><br />அடுத்த கட்டப் பணி நோக்கி டெசோ!<br /><br />ஈழத் தமிழினம் மானமும், அறிவும், உரிமையும் பெற்றிட<br /><br />8ஆம் தேதி தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை<br /><br />எழுச்சியுடன் நடத்திட அணி திரண்டு வாரீர்! வாரீர்!!<br /><br />தமிழர் தலைவர் விடுத்துள்ள அழைப்பு - அறிக்கை!<br /><br />ஆகஸ்டு 8ஆம் தேதி தமிழ்நாடு தழுவிய அளவில் டெசோ சார்பில் நடத்தப்பட உள்ள தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை எழுச்சி யுடன் நடத்திட அணி வகுத்து அனைவரும் வருமாறு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:<br /><br />கடந்த 16.7.2013 அன்று டெசோ கூட்டம் அதன் தலைவர் மானமிகு கலைஞர் அவர்களது தலைமையில் நடைபெற்றது. அவ்வமயம் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான பாதுகாப்புக்காக 4 முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி, மத்திய மாநில அரசுகளுக்கும், இலங்கை சிங்களப் பேரினவாத அரசுக்கும் தமிழர்களின் உரிமைக் குரலைப் புரிய வைத்துள்ளது.<br /><br />ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்கள்<br /><br />இக்கோரிக்கைகளை வற்புறுத்திடும் வகையில் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை 8.8.2013 அன்று நடத்திடுவது என்று முடிவு செய்யப்பட்டது.<br /><br />1) இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தியும்.<br /><br />2) இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தியும்,<br /><br />3) தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டியும்,<br /><br />4) இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தைத் தடுக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டியும்,<br /><br />நிறைவேற்றப்பட்டுள்ள இந்த நான்கு தீர்மானங் களையும் தமிழக மக்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லவும் அரசுகளுக்கு அழுத்தம் தரவும்.<br /><br />ஆகஸ்ட் 8இல் தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் என்ற அறப் போராட்டம் நடைபெறவிருக்கிறது!<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-91281078013914828132013-08-06T06:28:05.219+05:302013-08-06T06:28:05.219+05:30
வேண்டவே வேண்டாம் மோடி
ஜாதிமத பேதமற்ற தன்மை...<br />வேண்டவே வேண்டாம் மோடி<br /><br /> <br /><br />ஜாதிமத பேதமற்ற தன்மைகள் அவரிடம் இல்லாத காரணத்தால், நான் மோடி பிரதமர் ஆவதை விரும்பவில்லை என்று பொருளியல் அறிஞரும், நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்யா சென் கூறியுள்ளார்.<br /><br />தொலைக்காட்சி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு அமர்த்யா சென் பதில் கூறுகையில், பிரதம மந்திரியாக மோடியை நான் விரும்பவில்லை. மைனாரிட்டி மக்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர வைக்க அவர் தவறி விட்டார். அவர் முதலில் ஜாதிமத பேதங்களுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும்.<br /><br />அவரைப்பற்றிய பதிவுகள் நன்றாக இருப்பதாக நான் நம்பவில்லை. பாதுகாப்பின்மையை உணர்வதற்கு நான் மைனாரிட்டியாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. மைனாரிட்டிகளுக்கு எதிரான ஒரு வன்கொடுமை 2002இல் திட்டமிட்டே நடத்தப்பட்டுள்ளது. அத்தகைய குறை இயல்பு உள்ளவரைப் பிரதமராக என்னால் ஏற்க இயலாது என்று அமர்த்யா சென் கூறியுள்ளார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-52214505186758168692013-08-06T06:24:45.724+05:302013-08-06T06:24:45.724+05:30 புதுப்பாக்கள்
மனிதம் தழைக்க!
கரம் கொடுப்போம... புதுப்பாக்கள்<br /><br /> <br />மனிதம் தழைக்க!<br /><br />கரம் கொடுப்போம்<br />அறம் செய்ய!<br />மரம் நடுவோம்<br />மழை பொழிய!<br />குறை தவிர்ப்போம்<br />உறவுகள் வளர!<br />தோள் கொடுப்போம்<br />பணி முடிக்க!<br />போர் தொடுப்போம்<br />பகை வெல்ல!<br />இணை தேடுவோம்<br />இல்லறம் சிறக்க!<br />விலை கொடுப்போம்<br />விடுதலை அடைய!<br />தொண்டறம் செய்வோம்<br />மனிதம் தழைக்க!<br /><br />- சீர்காழி கு.நா.இராமண்ணா<br /><br /> <br /><br /><br />ஒரு நாள் வரும் ஒளி<br /><br />கைத்தடியால் தட்டித்தட்டி<br />நடந்து வந்த பார்வையற்ற ஒருவன்<br />பக்தர்களின் ஆரவாரம்<br />காதில் கேட்டு நின்றான்.<br />இல்லாத கடவுளை எண்ணி எண்ணி<br />கருத்துக் குருடராய் காலம் தள்ளுகிறார்<br />என்று சொல்லிச் சென்றான்! அடடா!<br />ஒளியற்றவன் விழித்திருக்கிறான்!<br /><br />- மலர்மன்னன், முசிறி<br /><br /> <br /><br /><br />முரண்பாடு<br /><br />குடும்ப ஒற்றுமைக்காக<br />வணங்குகிறான்<br />ஒற்றுமையில்லா<br />கடவுளை<br />பக்தன்<br /><br />- ப.நாகராஜன், மாராச்சேரி<br /><br /> <br /><br /><br />மாற்றம்<br /><br />நேற்று<br />குப்பைக்குப் போன<br />மாட்டுச்சாணி!<br />இன்று<br />பூஜை அறைக்கு<br />வந்தது பிள்ளையாராய்!<br /><br />-த. செண்பகம், அய்யம்பாளையம்<br /><br /> <br /><br /><br />கலவர தினம்<br /><br />இந்துவும் முசுலீமும்<br />இணைந்து கொண்டாடினர்<br />மதக் கலவர தினமாய்<br />விநாயகர் சதுர்த்தி<br />-_த. செண்பகம், அய்யம்பாளையம்<br /><br /> <br /><br /><br />ஏழுமலையான் நிலை<br /><br />தன் சன்னதியில்<br />திரும்பும் இடமெல்லாம்<br />உண்டியல் வைத்து<br />கையேந்தி நிற்கிறது!<br />உலகின்<br />பணக்கார தெய்வம்<br />திருப்பதி ஏழுமலையான்!<br /><br />- த. செண்பகம், அய்யம்பாளையம்<br /><br /> <br /><br /><br />ரதயாத்திரை<br /><br />கிறித்தவன் கண்டுபிடித்த வாகனம்!<br />அரபு நாட்டு முசுலீம் தந்த பெட்ரோலில் ஓடியது<br />இந்து மதவாதியின்<br />ரத யாத்திரை!<br /><br />- த.செண்பகம், அய்யம்பாளையம்<br /><br /><br />தப்புத் தாளம்<br /><br />கடவுள் ஏன்<br />கல்லானான்?<br />கேள்வியே<br />தப்புன்னே..<br />கல்தான்<br />கடவுளாச்சு!<br /><br />- சிவகாசி மணியம்<br /><br /> <br /><br />முரண்<br /><br />அம்மன் கோவில்<br />ஒலிபெருக்கியில்...<br />தாயிற் சிறந்த<br />கோவிலுமில்லை<br />தந்தை சொல்மிக்க<br />மந்திரமில்லை!<br /><br />-_ த.செண்பகம், அய்யம்பாளையம்<br /><br /> <br /><br />காசா? கடவுளா?<br /><br />காசியில் இருக்கும் கடவுளுக்கும்<br />காசினியில் வாழும் மனிதனுக்கும்<br />காசுமட்டும் இருந்தால் ஏகமதிப்பு!<br />காசுமட்டும் இல்லாவிடில் ஏதுமதிப்பு!<br />கடவுளுக்கும் காசுக்கும் ஓட்டம்<br />கண்டுகழிக்க மானுடக் கூட்டம்<br />காசிடம் கடவுள் தோற்கிறது<br />காசைத்தான் அதுகள் ஏற்கிறது<br />(பிச்சையெடுத்தல்)<br />காசுபணம் பறிப்பதற் காகவே<br />கற்பனைக் கடவுள்களை விதைத்தனர்<br />விண்ணையும் மண்ணையும் காட்டியே<br />விற்பனையில் மனிதநேயத்தைப் புதைத்தனர்<br />காசுபொருள் இருக்கும் கோவிலில்<br />கடல்போல் மனிதக் கூட்டம்<br />காசில்லா கோவில் என்றாலே<br />காணலையே மக்கள் நடமாட்டம்<br /><br />_மின்சாரம் வெ.முருகேசன், விருதுநகர்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-52721293209515030562013-08-06T06:23:33.837+05:302013-08-06T06:23:33.837+05:30
நாத்திக அறிவியலாளர் கார்ல் சாகன் - நீட்சே
...<br /><br />நாத்திக அறிவியலாளர் கார்ல் சாகன் - நீட்சே<br /><br /> <br /><br />கார்ல் எட்வர்டு சாகன் (1934-_1996) ஒரு அமெரிக்க வானவியலாளர். வானவியல் இயற்பியலாளர், நூல் ஆசிரியர், அறிவியல் பரப்புநர்; வானவியல் மற்றும் இயற்கை அறிவியல் செய்திகள் அறிவிப்பாளர்.<br /><br />அறிவியல் ஆய்வுப் பகுப்பையும்(?) அறிவியல் முறைகளையும் வெளிநிலை உயிரியல் ஆய்வு முன்னோடியாகவும், வெளிக்கோள் உயிரின அறிவைத் தேடுபவராகவும் இருந்துள்ளார். சாகன் அவரது வெகுஜன அறிவியல் (Popular Science) புத்தகங்களாலும் அண்டவெளி (Cosmos) என்று 1980களில் வந்த தொலைக்காட்சித் தொடராலும் தனிப்பட்ட பயணம் (Personal Voyage) என்ற நூலின் இணை ஆசிரியராகவும் தொடர்பு (Contact) என்ற புதினத்தின் ஆசிரியராகவும் நன்கு அறியப்பட்டுள்ளார். (இந்த நாவல் 1997இல் அதே பெயரில் திரைப்படமாக்கப்பட்டுள்ளது).<br /><br />கார்ல் சாகன் நியூயார்க்கில் உள்ள ப்ருக்ளினில் பிறந்தார். அவரது தந்தை சாமுவேல் சாகன் (இன்றைய உக்ரேன்) ரஷ்யாவிலிருந்து வந்து குடியேறிய ஒரு ஆடைஅகப் பணியாளர். அவரது தாய் ராட்சேல் மோலி க்ரூபர் நியூயார்க் நகரைச் சேர்ந்த ஒரு குடும்பத் தலைவி. தனது சிந்தனை ஊக்கத்திற்கு குடும்பத்தின் தாக்கமே காரணம் என்று சாகன் கூறியுள்ளார்.<br /><br />அவர்கள் அறிவியலாளர்கள் அல்லர்; அதைப்பற்றி அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால், அறிவியல் முறைக்கு நடுமையான இரண்டு முரண்பட்ட கருத்துகளை ஒன்றுபடுத்திச் சமன் செய்யும் வழிகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர்கள்.<br /><br />நியூஜெர்சி ரஹ்வே உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்த பிறகு, சிகாகோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, ரயர்சன் வானவெளி இயல் அமைப்பில் உறுப்பினராகச் சேர்ந்தார். 1954இல் இளங்கலை அறிவியல் பட்டமும், 1955இல் இயற்பியல் அறிவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார். 1960இல் வானவியல் மற்றும் விண்வெளி இயற்பியலில் முனைவர் பட்டமும் பெற்றார்.<br /><br />சாகன் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் 1968 வரை பணியாற்றியுள்ளார். பிறகு நியூயார்க் இதாகாவில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் 1971 முதல் 1981 வரை பேராசிரியராகப் பணிபுரிந்தார். அங்கே 1972 முதல் 1981 வரை அவர் கோள்கள்பற்றிய ஆய்வுச் சாலையை அமைத்தார். கார்னெல் பல்கலைக்கழகத்தில் சாகன் ரேடியோ இயற்பியல் மற்றும் விண்வெளி ஆய்வு மய்யத்தின் கூட்டு டைரக்டராகவும் பொறுப்பேற்றிருந்தார்.<br /><br />விண்வெளித் திட்டப் பணிகளில் ஆரம்ப முதலே சாகன் தன்னை இணைத்துக் கொண்டிருந்தார். அவர் நாசாவின் ஆலோசகராகப் பணி புரிந்துள்ளார். நிலவிற்குப் போவதற்கு முன்பு அப்பல்லோ விண்வெளி வீரர்களுக்கு விளக்க உரை கொடுப்பதும், அவருக்கு அங்குள்ள பணிகளில் ஒன்று. சூரிய அமைப்பு முறையை ஆய்வு செய்வதற்கான ரோபோக்கள் செயல்படும் விண்கலத்தின் பயணங்களுக்காகவும் சாகன் கருத்துதவி புரிந்துள்ளார். அதற்காகப் பல பயணங்களின்போது பரிசோதனைகளையும் மேற்கொண்டுள்ளார். சூரிய அமைப்பை விட்டுப் புறப்படும் விண்கலம், மாற்ற முடியாத ஒரு உலகப் பொதுவான செய்தியை அங்கேயே விட்டுவரும் ஒரு கருத்தை உருவாக்கிய அவர், அதன்மூலம் வெளிக்கோள் உயிர்கள் அதனைப் பார்த்துப் புரிந்துகொள்ளக் கூடும் என்று கருதினார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-24863210212282671232013-08-06T06:22:34.434+05:302013-08-06T06:22:34.434+05:30 துளிச் செய்திகள்
நிலத்துக்கு அடியில் உள்ள ... துளிச் செய்திகள்<br /> <br /><br /> நிலத்துக்கு அடியில் உள்ள கனிமங்கள் நில உரிமையாளருக்கே சொந்தம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.<br /><br /> புற்றுநோய் பாதித்த திசுக்களை மூன்றே நிமிடத்தில் துல்லியமாகக் கண்டுபிடிக்கும் அய்நைப் என்ற கருவியினை லண்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.<br /><br /> விவாகரத்தின்போது கணவரின் பரம்பரைச் சொத்தில் பெண்களுக்கு இழப்பீடு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.<br /><br /> அய்ரோப்பிய நாடான பெல்ஜியத்தின் புதிய மன்னராக பிலிப் ஜூலை 21 அன்று பொறுப்பேற்றுள்ளார்.<br /><br /> ஆள் நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெருவிளக்குகளை நெதர்லாந்து நாட்டின் டெல்ஃப்ட் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் படித்துவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிந்தன் ஷாசி கண்டு பிடித்துள்ளார்.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-8653710520321808742013-08-06T06:21:46.827+05:302013-08-06T06:21:46.827+05:30ஜாதியைத் துறந்தால்தான் முன்னேற முடியும்!
மின்னஞ...ஜாதியைத் துறந்தால்தான் முன்னேற முடியும்!<br /> <br /><br />மின்னஞ்சல் தமிழர் சிவா சுளீர்!<br /><br />- வெளிச்சம்<br /><br />உலகில் பல அரிய அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்தவர்கள் தமிழர்கள். ஆனால், முறையாகப் பதிவு செய்யாத காரணத்தால் பலவற்றை இழந்து இருக்கிறோம். இந்த இழப்புகளை இனி இல்லை என்று கூறுமளவுக்கு உலகம் வியக்க ஒரு தமிழர் உயர்ந்து நிற்கிறார்.<br /><br /> <br /><br />அவர் பெயர் சிவா அய்யாதுரை. இராஜபாளையத்தைப் பூர்வீகமாகக் கொண்டு, அமெரிக்காவில் வாழும் தமிழரான, சிவா அய்யாதுரை தொலைத் தொடர்புத் துறையில் உலகையே உலுக்கிப் போட்டிருக்கும் மின்னஞ்சலை(email)க் கண்டுபிடித்தவர் என்று அறியும் பொழுது தமிழராய் பெருமிதம் கொள்ளத் தோன்றுகிறது. ஜூலை 22 அன்று சென்னையில் ரோட்டரி மற்றும் அரிமா சங்கங்கள் சவேரா ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் திரு. சிவா அவர்கள் பேசும்பொழுது பல அரிய சிந்தனைகளை வெளிப்படுத்தினார்.<br /><br />பகுத்தறிவுவாதிகள், முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் மகிழும் அளவுக்கு அந்தக் கருத்துகள் அமைந்திருந்தன. ``மேற்கத்திய நாடுகளில் அறிவியலார் மற்றும் விஞ்ஞானிகள் என்றால் வெள்ளைத் தோல் உடையவராகவும், இந்தியாவில் பார்ப்பனராகவும் இருக்க வேண்டும் என்ற மூட நம்பிக்கை உள்ளது என்றவர், சமீபத்தில் தனக்கு ஏற்பட்ட வேதனையான சம்பவத்தை விவரித்தார்.<br /><br />ஹைதராபாத் நகரைத் தலைமையகமாகக் கொண்டு சென்னையிலிருந்து வரும் ஆங்கில நாளிதழின் முக்கியப் பொறுப்பில் உள்ள ஒருவர், பார்ப்பனர் அல்லாதார் இவ்வளவு பெரிய அறிவியல் கண்டுபிடிப்பினைச் செய்திருக்க முடியாது என்று உறுதியாக நம்பியதாகவும், சிவா அய்யாதுரைப் பற்றிய செய்தி தம் நாளிதழில் வராமல் பார்த்துக் கொண்டாராம்.<br /><br />சென்னையிலிருந்து வெளியாகும் முன்னணி ஆங்கில நாளிதழ் மும்பையினைச் சேர்ந்த இந்தியர் என்று வெளியிட்டு பூணூலால் தன் முதுகைச் சொறிந்து கொண்டது. (சிவா சில காலம் மும்பையில் வாழ்ந்தவர்.)<br /><br />எப்பொழுது தமிழர்கள் ஜாதியினைத் துறந்து, ஒரே இனமாகச் சிந்திக்கத் தொடங்குகிறார்களோ அப்பொழுதுதான் முன்னேற்றம் காண முடியும். தமிழர்களின் வளர்ச்சிக்கு ஜாதி பெரும் தடையாக உள்ளது என்று ஆதங்கப்பட்டார் சிவா அய்யாதுரை. மேலும், இன்றைய கல்வி முறை மாற வேண்டும். -மனப்பாடம் செய்து, மதிப்பெண் பெறுவது, அடிமையாய் வேலை செய்யும் ரோபோ இயந்திரங்களாகத்தான் உருவாக்க முடியும். இப்பொழுதுள்ள கல்வி முறை, ஆதிக்க ஜாதிகள், தங்களை இன்னும் பலப்படுத்திக்கொள்ளவே உதவுகிறது. தற்போதைய கல்வி முறை ஒழிக்கப்பட்டு மாணவர்களுக்கு அறிவியல் சிந்தனைகள் வளர களம் அமைக்க வேண்டும். மரபுகளை உடைத்தால்தான் புத்தாக்கத்தினைப் படைக்க முடியும். சுய சிந்தையினை உருவாக்கும் பெற்றோர், ஊக்குவிக்கும் வழிகாட்டி, நல்ல கட்டமைப்புடன் கூடிய சூழ்நிலை இவைகள் இருந்தால் ஆராய்ச்சிக்கு உகந்ததாக இருக்கும் என்றார் திரு. சிவா.<br /><br />எந்த ஆராய்ச்சியின் முடிவும் மக்கள் பயன்பாட்டிற்குத் தேவையானதாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் சந்தைப்படுத்த முடியும், பொருள் ஈட்ட முடியும் என்று கூறியவர், உலகில் இன்றைக்கு 180 கோடி மக்களுக்கு வேலை தர வேண்டியுள்ளது. வேலையில்லா திண்டாட்டம் உலக அமைதிக்குப் பெருங்கேடாய் முடியும் என்று எச்சரித்தார். ஆதிக்க ஜாதியினர் தம் பிடியினைத் தளர்த்தி அனைவரையும் உள்சேர்த்து ஒருங்கிணைந்த சமுதாயம் அமையத் தழைப்பட்டால் மட்டுமே அமைதிக்கு வழிகோலும். இல்லையென்றால் எகிப்து நாட்டில் உண்டான புரட்சியினைப் போல இந்தியாவிலும் உண்டாகும் என்கிறார் சிவா.<br /><br />தொடர்ந்து 45 நிமிடங்கள் உரையாற்றிய பின், பார்வையாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் அய்யங்களுக்கும் விடையளித்தார். பதினான்கு வயதிலேயே மின்அஞ்சல் என்கிற சேவையைக் கண்டுபிடித்து தகவல் தொழில்நுட்பத்தில் மாபெரும் புரட்சியினை உண்டாக்கிய சிவா அய்யாதுரை தமிழர் என்பதில் மட்டும் நமக்குப் பெருமையல்ல. உச்சிக்குச் சென்றவுடன் பார்ப்பன அடிவருடியாக மாறிவிடும் தமிழர்களிடையே சிவா அவர்கள் நிச்சயம் வித்தியாசமானவர்தான்.<br /><br />ஊரெங்கும், வீதியெங்கும் தமிழர்கள் இவரைச் சுமந்து சென்று இவருக்குப் பெருமை சேர்க்க வேண்டும். பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களிடம் உரையாற்ற வேண்டும் - அவர்களை ஊக்குவிக்க வேண்டும். பல சிவா அய்யாதுரைக்கள் உருவாக வேண்டும். அப்போது அய்யா பெரியார் கண்ட கனவு நனவாகும்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-87195197960037629962013-08-06T06:19:02.901+05:302013-08-06T06:19:02.901+05:30 கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சி ஏன்?
நீயும் ந... கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சி ஏன்?<br /> <br /><br />நீயும் நானும் கோவிலுக்குள் போக ஆரம்பித்தால் - நாம் பூசை செய்கிறாப்போல, தொட்டுக் கும்பிடுகிற மாதிரி ஏற்பட்டுவிட்டால், பார்ப்பான், கோவிலுக்குள் சாமி இல்லை; கல்தான் இருக்கிறது என்று அவனே பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விடுவான்.<br /><br />இன்றைக்கு பார்ப்பான், சூத்திரன் என்கின்ற பேதத்தைக் காட்டுவதற்கு கர்ப்பக்கிரகம் ஒன்னுதான் இருக்கிறது. மற்ற எல்லா இடங்களிலும் ஒழிந்ததுபோல் இந்த இடத்தில் இருக்கிற பேதத்தையும் ஒழித்தாக வேண்டும். சாமி இருக்கிறதோ இல்லையோ, வெங்காயம் அதைப்பற்றிக் கவலை மனிதனுக்கு மனிதன் ஜாதிபேதம் இருக்கக் கூடாது என்பதுதான். வேறு எந்த மதத்திலும் இதுபோன்ற தடை கிடையாது. யார் வேண்டுமானாலும் அந்த மதத்தைச் சார்ந்தவன் எதுவரையில் வேண்டுமானாலும் செல்ல உரிமை உண்டு. இந்து மதம் ஒன்றில் மட்டும்தான் பார்ப்பானைத் தவிர மற்றவன் கர்ப்பக்கிரகத்திற்குள் போகக்கூடாது என்கின்ற தடை இருக்கின்றது. இந்தத் தடைதான் நம்மைச் சூத்திரனாகவும் பார்ப்பானைப் பிராமணனாகவும் வைத்திருக்கின்றது.<br /><br />(திருச்சியில் நடைபெற்ற தீபாவளிக் கண்டனப் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றிய உரையிலிருந்து)<br /><br />- (விடுதலை -16.11.1969)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-72625863540925092402013-08-06T06:18:55.168+05:302013-08-06T06:18:55.168+05:30ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 2 அல்லது 3 பெண்கள...ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 2 அல்லது 3 பெண்களாவது தங்களின் மேலதிகாரிகளால் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதை அறிய முடிந்தது. பாலியல் தொந்தரவு என்பதை படுக்கைக்கு அழைத்தார் என்று மட்டுமே அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. இரட்டை அர்த்தத்தில் பேசுவது, அருவருப்பாக திட்டுவது, ஆபாசப் படங்களைக் காட்டுவது, ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது போன்ற விஷயங்களும் பாலியல் வன்முறையாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். என்னிடம் புகார் தெரிவித்த பெண்கள் தயங்கித் தயங்கி பூடகமாகத்தான் சொன்னார்கள்.<br /><br />குடும்பச் சூழலும் சமூகமும்தான் தனக்கு ஏற்பட்ட பாலியல் குற்றங்களை வெளிப்படையாக _ புகாராக சொல்ல பெண்களைத் தடுக்கிறது. இருப்பினும், பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தரவில்லையென்றாலும்கூட, சம்பந்தப்பட்ட மேலதிகாரிகளிடம் விவரத்தைத் தெரிவித்து பாலியல் தொந்தரவுகளைச் செய்யும் நபர்களை அதிரடியாக ட்ரான்ஸ்பர் செய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறேன்.<br /><br />- திலகவதி இகாப,<br />தமிழகக் காவல்துறை மேனாள் தலைவர்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-59352915094446635822013-08-06T06:17:37.261+05:302013-08-06T06:17:37.261+05:30
கருத்து
மனிதநேயம் எல்லாவற்றையும் விடப் பெரியது....<br /><br />கருத்து<br /><br />மனிதநேயம் எல்லாவற்றையும் விடப் பெரியது. ஆனால் உலக அளவில் அதைப் பார்க்க முடிவதில்லை. ஜாதி என்னும் குறுகிய வட்டாரத்திலிருந்து மக்கள் விழித்தெழ வேண்டும். பெண்கள் சமுதாயத்தில் முன்னேற்றம் அடைந்தால்தான் சமுதாயம் வளர்ச்சியடையும்.<br /><br />- எஸ்.தமிழ்வாணன்,<br />நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்.<br /><br />கால அவகாசம் அளிக்கும் நீதிமன்ற உத்தரவுகளை கிடப்பில் போடும் எண்ணத்தில் சில அதிகாரிகள் இருக்கின்றனர். மக்களை அங்கும் இங்கும் அலைய வைக்கும் மனம் படைத்தவர்களாக அதிகாரிகள் உள்ளனர். மக்களின் எஜமானர்கள் என்று நினைத்துச் செயல்படுகின்றனர். ஒவ்வொரு அரசு ஊழியரும் மக்களின் ஊழியர் என்பதை மறந்துவிட்டனர். தற்போதைய ஆட்சி முறையின்படி மக்கள்தான் எஜமானர்கள்.<br /><br />- கே.கே.சசீதரன்,<br />நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-25816968253672659452013-08-06T06:16:23.083+05:302013-08-06T06:16:23.083+05:30
உலக அளவில் ஊழலிலும் லஞ்சத்திலும் இந்தியா முதலி...<br /> <br /><br />உலக அளவில் ஊழலிலும் லஞ்சத்திலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 107 நாடுகளில் வசிக்கும் 1,14,270 பேர்களிடம் கருத்துக் கேட்டதில், கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவில் ஊழல் பல மடங்கு அதிகரித்துள்ளதாக 70 சதவிகித இந்தியர்கள் கூறியுள்ளனர்.<br /><br />ஊழலை ஒழிக்க சரியான முறையில் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்று 68 சதவிகிதத்தினரும், இங்குள்ள அரசியல் கட்சிகள் ஊழல் படிந்தவை என்று 86 சதவிகிதத்தினரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.<br /><br />மேலும் ஊழலைப் போல லஞ்சம் பெறுவதிலும் இந்தியா முதலிடத்தில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. உலக அளவில், தங்களது காரியத்தைக் குறுக்கு வழியில் 27 சதவிகிதம் பேர் (கடந்த 12 மாதங்களில்) லஞ்சம் கொடுத்துள்ளனர். இந்தியாவில் மட்டும் 54 சதவிகிதம் பேர் லஞ்சம் கொடுத்துக் காரியத்தைச் சாதித்துள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.<br /><br />இந்தியாவின் காவல் துறையில் 62 சதவிகிதமும், பதிவுத்துறை மற்றும் அனுமதி வழங்கும் துறையில் 61 சதவிகிதமும், கல்வித்துறையில் 48 சதவிகிதமும், நில அளவை மற்றும் நிலம் சம்பந்தப்பட்ட துறையில் 38 சதவிகிதமும், நிதித்துறையில் 36 சதவிகிதமும் லஞ்சம் இருப்பதாக டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com