tag:blogger.com,1999:blog-1474608369333206681.post6479827102468851749..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-59510440736439785062012-09-22T06:37:02.242+05:302012-09-22T06:37:02.242+05:30டாக்டர் வரதராசலு நாயுடு
நாயுடு, நாயக்கர், முதலியா...டாக்டர் வரதராசலு நாயுடு<br /><br />நாயுடு, நாயக்கர், முதலியார் என்ற மும்மூர்த்திகள்தான் தமிழ்நாடு இந்த மும்மூர்த்தி கள்தான் காங்கிரஸ் என்று பேசப்பட்ட காலம் ஒன்று உண்டு.<br /><br />இதில் நாயுடு என்றால் டாக்டர் வரதராசலு நாயுடு, நாயக்கர் என்றால் தந்தை பெரியார், முதலியார் என்றால் திரு.வி.க. ஆவார்கள்.<br /><br />இந்த மும் மூர்த்திகளில் டாக்டர் வரதராசலு நாயுடு அவர்களின் நினைவு நாள்தான் இன்று (1957).<br /><br />டாக்டர் வரதராசலு நாயுடு இந்து மத அபிமானிதான் ஆனாலும் சேரன்மாதேவியில் காங்கிரசின் சார்பில் நடத்தப் பட்ட குருகுலத்தில், அதன் நிருவாகியான வ.வே.சு. அய்யர், பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் என்று வேறுபாடு செய்து, சமபந்திக்கு இடம் இல்லாமல் தனித்தனியாக உணவு பரிமாறச் செய்ததைக் கண்டித்தவர்.<br /><br />அப்பொழுது தமிழ்நாடு காங்கிரசின் தலைவராக டாக்டர் வரதராசலு நாயுடுவும், செய லாளராக தந்தை பெரியார் அவர்களும் இருந்தனர்.<br /><br />குருகுலத்தில் ஜாதி வேறு பாடு காட்டப்படுவது குறித்துக் கலந்து பேச திருச்சியில் காங்கிரஸ் அவசரக் கூட்டம் கூட்டப்பட்டது (27.4.1925).<br /><br />அக்கூட்டத்தில் பச்சையாக பார்ப்பனர்கள் அனைவரும் ஒரு பக்கமும், பார்ப்பனர் அல்லாதார் இன்னொரு பக்கமும் அணி பிரிந்து காரசாரமாக விவாதிக்கும்படி நேரிட்டது.<br /><br />வேதங்களிலும், சாஸ்திரங் களிலும் வருணப் பாகுபாடும், ஜாதிப் பாகுபாடும் ஏற்பாடு செய்யப் பட்டு இருக்கின்றன. வேத விதி முறைப்படிதானே வ.வே.சு. அய்யர் நடந்து கொண்டு இருக்கிறார். இதில் என்ன தவறு? என்று ஒரு பார்ப்பனர் வ.வே.சு. அய்யருக்கு ஆதரவாகப் பேசினார். பெரியாருக்கு வந்ததே கோபம்!<br /><br />ஜாதி பாகுபாட்டுக்கும், உயர்வு தாழ்வுக்கும் வேதமும், சாஸ்திரங்களும் விதி வகுத்திருந்தால், அந்த வேதத்தையும், சாஸ்திரத்தையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று கர்ச்சனை செய்தார். (1922 இல் திருப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் தந்தை பெரியார் இதே கருத்தைச் சொன்னதும் கருத்தூன் றத்தக்கது!)<br /><br />பெரியாரை அடுத்து டாக்டர் வரதராசலு நாயுடு ஆவேசப் புயலாக வெடித்தெழுந்தார்.<br /><br />ஆரியர்களின் வேதகால கலாச்சாரம்தான் நம்முடைய கலாச்சாரமா? அதற்கு முந்திய திராவிடக் கலாச்சாரத்தில் ஜாதிப் பிரிவினைக்கே இடம் இல்லையே! அந்த உயர்ந்த கலாச்சாரத்தை நாம் பின்பற்ற வேண்டும் என்று வெடித்தார்.<br /><br />பார்ப்பனர்கள் என்ன செய்தார்கள்? டாக்டர் வரதராசலு நாயுடு பார்ப்பனத் துவேஷப் பிரச்சாரம் செய்து வருவதாகக் கூறி அவர் மீது ஒரு கண்டனத் தீர்மானம் கொண்டு வந்தனர். அதனை எதிர்த்துப் பேசித் தீர்மானத்தைத் தோற் கடித்தார் பெரியார். அதன் காரணமாக டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன், ராஜாஜி, என்.எஸ்.வரதாச்சாரி, கே. சந்தானம் அய்யங்கார், சாமிநாத சாஸ்திரி ஆகிய அய்ந்து பார்ப்பனர்களும் உடனே கட்சியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டனர்.<br /><br />1954 இல் குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்த ராஜாஜி, தந்தை பெரியாரின் கடும் எதிர்ப்பின் காரணமாக முதல் அமைச்சர் பதவியை விட்டு விலகிய நேரத்தில், சென்னையில் அரசினர் தோட்டத்தில் (இப்பொழுது ஓமந்தூரார் வளாகம்) இருந்த டாக்டர் வரதராசலு நாயுடு இல்லத்தில் தான், அவரின் முயற்சியால் தந்தை பெரியார் காமராசர் ஆகியோர் அமர்ந்துப் பேசி காமராசர் முதலமைச்சர் ஆவது பற்றி முடிவெடுக்கப்பட்டது.<br /><br />இன்னொரு முக்கிய தக வல் உண்டு. தந்தை பெரியார் அவர்களுக்கு சிலை வைக்க வேண்டும் என்ற கருத்தை முதன் முதலாக வலியுறுத்திய வரும் டாக்டர் நாயுடு அவர்களே! (17.9.1956).<br /><br />----------------------மயிலாடன் அவர்கள் 23-7-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரைதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-79712927023603250502012-09-21T19:47:07.374+05:302012-09-21T19:47:07.374+05:30சுயமரியாதை இல்லாத சுயராஜ்யம்
சகோதரர்களே! நமது ...சுயமரியாதை இல்லாத சுயராஜ்யம்<br /> <br /><br /><br />சகோதரர்களே! நமது பார்ப்பனர்களால் பதினாயிரக் கணக்கான வருஷங்களாக நம் தலையில் வைக்கப்பட்ட இழிவானது வெகுசுலபத்தில் வெகு சீக்கிரத்தில் மாறக் கூடிய காலம் வந்திருக்கிறது; இதை இழந்து விடாதீர்கள். இது சமயம் தவறினால் பின்னால் விமோசனமோ இல்லையென்றே சொல்வேன்.<br /><br />நமது உணர்ச்சியை இது சமயம் உலகம் ஒப்புக் கொண்டு விட்டது. பார்ப்பனர்களும் இதுவரை தங்கள் சூழ்ச்சியின் பெயரால் ஆண்மை அடைந்திருந்தவர்கள், இப்போது வெட்கப்படுகின்றார்கள். நல்ல சமயத்தை விட்டு விடாதீர்கள்! பணங் கொடுக்கக் கூடியவர்கள் பணங்கொடுங்கள்! பத்திரிகை வாங்கிப் படிக்கக்கூடியவர்கள் வாங்கிப் படியுங்கள்! ஒன்றும் உதவ முடியாதவர்கள் பார்ப்பனர்களின் காலில் விழாதீர்கள்.<br /><br />அவன் காலைக் கழுவி தண்ணீர் சாப்பிடாதீர்கள்; அவனுக்குப் பணங் கொடுத்து விழுந்து கும்பிட்டால் உங்கள் பெற்றோர்களுக்கும், உங்களுக்கும் உங்கள் பிள்ளை குட்டிகளுக்கும் மோட்சம் உண்டு என்று நினைக்கும் முட்டாள் தனத்தை ஒழியுங்கள்! பார்ப்பனர் மூலம்தான் சுவாமியைத் தரிசிக்க வேண்டும்.<br /><br />அவன்தான் தரிசனை காட்ட வேண்டும்; அவனைத்தான் தரகனாக்க வேண்டும் என்கிற அறியாமையை யாவது விலக்குங்கள். சுயமரியாதை இல்லாத சுயராஜ்யம் காதொடிந்த ஊசிக்கும் சமானமாகாது. மனிதரின் பிறப்புரிமை சுயமரியாதை! சுயமரியாதை! சுயமரியாதை!! என்பதை உணருங்கள்.<br /><br />ஈ.வெ.இராமசாமி திராவிடன் 1927, மார்ச் 8<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-22761078082805940622012-09-21T19:46:30.574+05:302012-09-21T19:46:30.574+05:30கோவில் சமத்துவமா?
கோவிலில் ஜாதி வித்தியாசம் கிடைய...கோவில் சமத்துவமா?<br /><br />கோவிலில் ஜாதி வித்தியாசம் கிடையாது. யாவரும் உள்ளே செல்லலாம் என்கிறார்கள்.<br /><br />எந்த கோவிலிலாவது பார்ப்பனர் (பிராமணர்) அல்லாதவன் பூசை செய்ய, சமையல் செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கிறானா?தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-23424473290674121842012-09-21T19:45:28.688+05:302012-09-21T19:45:28.688+05:30சிரார்த்தப் பித்தலாட்டம்: ஒரு பார்ப்பனர் கருத்து
...சிரார்த்தப் பித்தலாட்டம்: ஒரு பார்ப்பனர் கருத்து<br /><br />காலஞ்சென்ற திரு.ஏ.ராமச்சந்திர அய்யர் என்பவர் - கொச்சி சமஸ்தானத்தில் திவான் பேஷ்காராக இருந்து பென்ஷன் பெற்றும், கவர்மெண்ட் வித்தியா இலாகாவில் வேலை பார்த்தவர். சித்தூரில் கவர்மென்ட் ஸ்கூல் இருந்தபொழுது அவர் அதன் தலைமை உபாத்தியாயராகவும் இருந்தவர். அவர் காலமாவதற்கு முன்பு எழுதி வைத்த உயிலில் அபூர்வமான சில உண்மைகள் எழுதப்பட்டிருக்கின்றன.<br />அவை வருமாறு:<br /><br />சுயேச்சை பெரிதும் பாராட்டும் பிராமணர்களின் விஷயமாய், கவுண்டி, ஒத்தன், கொத்தன், காவேரிஸ் நானம், தசதானம் முதலியவைகளுக்காக ஒரு தம்படி கூடச் செலவழிக்கக் கூடாதென்று என்னுடைய வாரிசுகளுக்குத் தெரி வித்துக் கொள்கிறேன். மேலே கண்ட சவுண்டி, ஒத்தன், முதலிய கர்மாக்கள் சம்பந்தமாய் செலவு செய்யப்படும் பணத்தினால் எள்ளளவும் பயனில்லையென்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.<br /><br />தங்களுடைய சுயநலத்தினால் பிராமணர்கள் இறந்து போனவர்கள் சந்ததியாரிட மிருந்து பணத்தை உறிஞ்சுவதற்காகவே அவைகளை ஏற்படுத்தியிருக் கிறார்களேயொழிய வேறில்லை. இட்டாருக்கு இட்ட பலன் சித்திக்கு மென்னும் முதுமொழி உண்மையே.<br /><br />ஒருவன் இறந்து போன பிறகு அவனுக்காக நற்கதி கிடைக்குமென்று நான் நம்பவே இல்லை. நம்முடைய முன்னோர்களை கவுரவப்படுத்த வேண்டுமென்பதையும் அவர்களை மறந்து விடக் கூடாதென்பதையும் நான் ஒப்புக் கொள்கிறேன்.<br /><br />இறந்து போனவனைக் குறித்து வருஷத்தில் ஒரு நாள் கொண்டாடி அவனுடைய கண்ணியத்திற்கு குறைவில்லாமல் அவனுடைய சந்ததி யாரும் பந்துமித்திரர்களும் நன்னடக்கையுடன் நடந்து கொள்வது போதும். ஒரு பிறவியில் செய்த கன்மங்களுக்கு ஏற்றபடி அடுத்த பிறவி சித்திக்கும், ஆதலின் ஒருவன் சந்தோஷத்துடன் சுகித்திருப்பதற்குக் காரணம், அவனுடைய செய்கைகளேயாகும். சாம சுலோகங்களைப் பெரிதாகப் பாராட்டுவது பாவமாகாவிட்டாலும், அதுகெட்ட சுபாவமென்றே நினைக்கிறேன்.<br /><br />ஆகவே, இதைக் கண்ணுறும் நண்பர்கள் இனிமேலாவது சுயமரியாதை இயக்கத்தின் மீது சீறி விழாமல், அவர்கள் என்ன செய்ய சொல்லு கிறார்களென்பதைக் கவனித்துப் பார்த்து குருட்டு எண்ணங்களையும், மூடப் பழக்கங்களையும், அடிமை புத்தியையும் அடியோடு அகற்றி சுயமரியாதை பெற்று மனிதத் தன்மையுடன் கூடிய சுகவாழ்வு வாழ்வாராக!<br /><br />- குடிஅரசு, 19.10.1930<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-10441438051344378402012-09-21T19:43:01.769+05:302012-09-21T19:43:01.769+05:30புத்தம் மரணம் கச்சாமி!
புத்தர் விழா தொடர்பான ஒரு ...புத்தம் மரணம் கச்சாமி!<br /><br />புத்தர் விழா தொடர்பான ஒரு நிகழ்ச்சிக்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே இந்தியாவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இது பெரும் கொந்தளிப்பை நாட்டில் ஏற்படுத்தியுள்ளது.<br /><br />தத்துவார்த்த வகையில் பார்க்கப் போனால் புத்தர் விழாவில் பங்கேற்க சற்றும் அருகதை இல்லாத ஆசாமிதான் இந்த ராஜபக்சே.<br /><br />அன்பும், கருணையும், பண்பும், மனித நேயமும் குலுங்கும் பூஞ்சோலையாம் புத்தர் எங்கே? தமிழர்களின் உடலை உயிரோடு கொத்தித் தின்னும் கொடிய கழுகாம் ராஜபக்சே எங்கே?<br /><br />ஓர் ஆட்டுக் குட்டிக்காகத் தன் உயிரைத் தத்தம் செய்ய முன்வந்த கவுதமப் புத்தர் எங்கே? புத்தர் சிலைகளை - தமிழனை வெட்டி, அவன் ரத்தத்தால் குளிப்பாட்டும் கொடுங்கோலன் ராஜபக்சே எங்கே? மனித குலத்துக்கே மாசு மருவற்ற நல்வழி காட்டி மனிதர்களிடையே நல்லுறவையும் நல்லிணக்கத்தையும் அன்பு இழைகளால் இணைத்த அந்தக் கருணைச் சீலர் எங்கே? இனவெறி கொண்டு - இட்லரும்கூட எனக்கு ஈடு இல்லை என்ற தோரணையில், பச்சிளங் குழந்தைகள் தங்கி இருந்த விடுதிகளில்கூட குண்டு மழை பொழிந்து அந்தச் சின்னஞ்சிறு மலர்களைக் கொன்று குவித்த குரூர மனிதனான இந்த ராஜபக்சே எங்கே?<br /><br />யாகங்களின் பெயர்களால் உயிர்ப் பலி கொடுக்கும் உன்மத்தர்களை நேருக்கு நேர் சந்தித்து, இதோபதேசம் செய்து திருத்த முன்வந்த அந்தத் திருமேனி எங்கே? ஆசைகாட்டி மோசம் செய்யும் வகையில் ஓரிடத்திற்குப் பல்லாயிரக் கணக்கான தமிழர்களை வரச் செய்து ஒரே நேரத்தில் கொடிய ஆயுங்களை வீசிப் பிணக் குவியலாக்கிய இந்தப் பேர் வழி எங்கே?<br /><br />புத்தம் என்பது ஒரு நெறி என்ற நிலையை வெறியாக்கிய, ஓநாயல்லவா இந்த ராஜபக்சே! இன்னொரு இனத்தை இல்லாமல் செய்வதற்கு சிங்களவர்கள் மத்தியில் இனவெறியை ஊட்டிய - இரக்கம் என்ற ஒன்று இல்லாத இடி அமீன் அல்லவா இவர்!<br /><br />இலங்கை அரசின் அதிகாரப் பூர்வமான மதம் பவுத்தம். புத்த மதத்தைச் சேர்ந்த சிங்களவர் ஒருவர்தான் அங்கு அதிபராக வர முடியும் என்பது சட்டத்தின் நிலை அங்கு.<br /><br />இதன் பொருள் என்ன? தமிழர்கள் அந்நாட் டின் குடிமக்கள் இல்லை என்பதுதானே? தமிழர்களுக்கென்று தாய்மொழி, இனப் பண்பாடு, வாழும் உரிமை கிடையாது என்று உறுதி செய்யப்பட்ட ஒரு நாட்டின் ஆட்சித் தலைவர் தானே ராஜபக்சே? இல்லை என்று மறுக்க முடியுமா?<br /><br />இனவெறி, இன்னொரு இனத்தின் அழிப்பு, சொந்த நாட்டு மக்கள் மீதே போர்ப் பிரகடனம், அழிக்கப்பட்ட மக்கள் போக எஞ்சிய வர்களும் முள்வேலி முகாமுக்குள் முடக்கி இருக்கும் மோசமான நிலை; ஈழத் தமிழர்கள் என்று சொல்லுவதற்கான எந்தத் தடயமும், அடையாளமும் சற்றுமின்றி முற்றிலும் ஒழித்துக் கட்டும் பாசிச நடவடிக்கைகள் பவுத்தக் கொள்கை என்ற பெயரால் இலங்கையில் நடக்கிறதா - இல்லையா?<br /><br />பவுத்தத்தில் ஆரிய ஊடுருவலால் அதன் அடிப்படைத் தத்துவங்கள் திரிபு நிலைக்கு ஆளாக்கப்பட்டதே! அன்பு நெறி - அபாய வெறியாக அல்லவா மாறி விட்டது?<br /><br />பவுத்தம் பரவுயுள்ள நாடுகளில், பவுத்தத்தின் அடிநாதம் அழிக்கப்பட்டு விட்டதே! இல்லை என்றால் இலங்கையில் சிங்கள வெறி பவுத்தத்தின் பெயரால் தாண்டவம் ஆடுமா? ஆடுகின்ற நிலையில், பவுத்த நெறியாளர்கள் எதிர்க் குரல் கொடுத்திருக்க மாட்டார்களா?<br /><br />புத்தம் சரணம் கச்சாமியல்ல - புத்தம் மரணம் கச்சாமி!<br /><br />சங்கம் சரணம் கச்சாமியல்ல - சங்கம் கலகம் கச்சாமி!<br /><br />தம்மம் சரணம் கச்சாமியல்ல தம்மம் தண்டம் கச்சாமி<br /><br />- என்பதுதான் இன்றைய இலங்கையின் நிலைமை.<br /><br />பவுத்தம் தோன்றிய மண்ணிலே நர வேட்டை மனிதனுக்கு அழைப்பு - வரவேற்பு என்பது வெட்கப்பட வேண்டியதே! 21-9-2012<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-41554374233081048352012-09-21T19:41:41.216+05:302012-09-21T19:41:41.216+05:30தோழர் வெங்கடேஸ்வரப் பெருமாள்
இந்த ஸ்தலத்தில் (...தோழர் வெங்கடேஸ்வரப் பெருமாள்<br /> <br /><br /><br />இந்த ஸ்தலத்தில் (திருப்பதியில்) வீற்றிருக்கும் தோழர் வெங்கடேஸ்வரப் பெருமாளும் ஒரு ஜமீன்தாரேயாவார். நூற்றுக் கணக்கான ஏழை மக்களின் இரத்தத்தை இவர் உறிஞ்சி வருகிறார். நேர்த்திக் கடன் செய்பவர்களும், இந்தியாவின் பல பாகங்களிலிருந்து யாத்ரீகர்களும், பக்தர்களும் ஆயிரக்கணக்கானவர்கள் திருப்பதிக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.<br /><br />இவர்கள் வருஷாவருஷம் தோழர் வெங்கடேஸ்வரப் பெருமாளுக்கு முட்டாள்தனமாகப் பதினாறு லட்சம் ரூபாய்கள் வீதம் செலவு செய்கின்றனர். எனக்கு இத்தகைய கடவுள் மீது சிறிதேனும் நம்பிக்கையே இல்லை. நீங்கள் தோழர் வெங்கடேஸ்வரர் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா? அப்படியானால், அவருடைய ஆட்சியின் கீழ் சரியான நியாயம் வழங்கப்படுகிறதா? அவர்மீது நான் நம்பிக்கை வைப்பதற்கு மறுதலிக்கிறேன்.<br /><br />இந்த நாட்டிலே ஆயிரக்கணக்கான மனிதர்கள் பட்டினி கிடக்கிறார்கள். முதலாவது அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். என்னுடைய கொள்கைப்படி சுயராஜ்யம் என்றால், அபேத வாதந்தான்.<br /><br />- என்.ஜி.ரங்கா<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-77616606117370316932012-09-21T19:38:31.000+05:302012-09-21T19:38:31.000+05:30
தீட்சிதர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு அப்ப...<br />தீட்சிதர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா?<br /><br />இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே சிறார் திருமணத்தை (பால்ய விவாகம்) தடுக்கும் சாரதா சட்டம் இயற்றப்பட்டது. ஆனாலும் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தால் அந்தச் சட்டம் வெகுநாள் செயலாக்கப்படாமலேயே முடக்கப்பட்டது. தந்தை பெரியாரின் தீவிர விழிப்புணர்வுப் பிரச்சாரத்தின் பயனாக சட்டத்தின் துணையில்லாமலேயே சிறார் திருமணங்கள் குறைந்தன. சமீப காலத்தில் திருச்சி யிலும், வேலூரிலும், தர்மபுரியிலும் நடக்கவிருந்த சிறார் திருமணங்களை மாவட்ட ஆட்சியர்கள் தலையிட்டு நிறுத்தினார்கள் எனச் செய்திகள் வருவது வரவேற்கத்தக்கதே.<br /><br />ஆனால், இன்றும் சரளமாக சிறார் திருமணத்தை நடத்தும் தில்லைவாழ் தீட்சிதர்களை இந்தச் சட்டம் நெருங்காதது ஏன்? கடலூர் மாவட்ட நிருவாகம் தூக்கத்திலேயே உள்ளதா? அல்லது தீட்சிதர்கள் பக்கம் திரும்பக் கூடாது என கண்மூடி தவம் செய்கிறதா? பள்ளிக்குச் செல்லும் 10, 11 வயது சிறுமிகள்கூட கழுத்தில் மஞ்சள் கயிறுடனும், காலில் மெட்டியுடனும் செல்வது வெகு சரளமான காட்சி. அந்த மாணவிகள் பள்ளி மாணவர்களின் கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளாவது தனிக் கதை.<br /><br />நாம் தீட்சிதர்களிடம் விசாரித்தால் இதில் பெண்ணடிமைத்தனமோ, வரதட்சணை விவ காரமோ, இல்லையென்றும் கோயில் அர்ச்சகர் பணி குடும்பஸ்தர்களுக்கே உண்டென்பதால் இளவயதுத் திருமணம் தவிர்க்க முடியாதது என்கிறார்கள். தந்தை பெரியார் கூறியபடி பிறவி முதலாளிகளாக வருமானம் பார்க்கும் அர்ச்சகர் தொழிலுக்காக அறிந்தே செய்யும் இந்த அநியாயம் தொடரலாமா?<br /><br />மாவட்ட நிருவாகத்தின் கீழ் சிதம்பரம் இல்லையா? அல்லது தீட்சிதர்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களா? சிதம்பரத்தில் சிறார் திருமணக் கொடுமையை மாவட்ட நிருவாகம் தடுத்து நிறுத்தாவிட்டால் பொது மக்கள் கூடி போராட்டம் நடத்த நேருவதுடன் பொது நல வழக்கும் தொடரப்படும். எச்சரிக்கை!<br /><br />- தி. சோமசுந்தரம்<br />பிள்ளையார்ப்பட்டி<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-89392664428716392992012-09-21T19:37:35.673+05:302012-09-21T19:37:35.673+05:30தமிழர் தலைவர் கி.வீரமணி பெரியாரின் வெற்றி முரசு
...தமிழர் தலைவர் கி.வீரமணி பெரியாரின் வெற்றி முரசு<br /><br /><br /><br />தமிழர்களிடம் மண்டிக் கிடந்த அறியாமை இருளை அகற்றிய அறிவு அகல் விளக்கை ஏற்றி வைத்த தந்தை பெரியார் உலகத் தமிழர்களின் தலைமை சான்ற மறுமலர்ச்சி சிந்தனைத் தலைவர் என்பதை உலகறியும்.<br /><br />தந்தை பெரியார் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கும், அந்த வரலாற்றை இக்காலத்தில் படிப்பவர்களுக்கும்தான் தந்தை பெரியாரின் தன்னேரில்லாத தறுகண்மைத் தொண்டுகள் தெரியும்.<br /><br />அக்காலத்தில் கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால், சாதியின் பெயரால், மக்கள் பட்ட துயரமும் துன்பமும் சொல்லில் அடங்கா. எழுத்தில் வடிக்க இயலாத பெருங்கொடுமைத்துவங்கள் நிறைந்ததாகும்.<br /><br />பெரிய சாதி பார்ப்பனர் கள், அனைத்துச் சாதி மக்களையும் கீழே போட்டு மிதித்தனர். மேல் சாதிக்காரர்கள் அடுத்தடுத்த கீழ் சாதிக்காரர்களை அடிமைப்படுத்தி ஆட்டிப் படைத்தனர். மொத்தத்தில் எல்லோரும் சேர்ந்து ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களைப் படாதபாடுபடுத்தி புழு, பூச்சிகளைவிட கேவலமாக நடத்தினர்.<br /><br />மதம், சாதி, கடவுள் பெயரால் தமிழர் கள் வீழ்த்தப்பட்டனர். இந்தக் காலகட் டத்தில் தமிழகத்தின் விடியலாகத் தந்தை பெரியாரின் திராவிட இயக்கம், அவர் வழி அறிஞர் அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் புத்துணர்ச்சியும், எழுச்சியும், விழிப்பும் தான் இன்றைய தமிழர்கள் நல்வாழ்வு உயர்வாழ்வு.<br /><br />இதற்காக அன்று எத்தனை, எத் தனையோ இளைஞர்கள் கழுமரம் ஏற்றப் பட்டது போன்ற துன்பங்கள், துயரங்களை ஏற்றனர். தங்கள் வாழ்வை இழந்து தமிழர்கள் சுயமரியாதைக்காக தமிழ் மண்ணுக்காக, தமிழர்க்காக உரமாயினர். திராவிட இயக்கம் என்றர்லே அடி உதை, மிதி, சிறை என்று படாதபாடுபடுத்து வார்கள் அன்றைய ஆட்சியினர், மேல் சாதித் திமிர்த்தனத்தினர்.<br /><br />சொத்து சுகத்தை, நலத்தை, ஊணை, உயிரை, இழந்து வளர்த்த இயக்கம்தான் திராவிட இயக்கங்கள். இன்றைய தலைமுறையினர் நன்றியோடு இதனை நினைக்கவேண்டும்.<br /><br />இன்று தமிழர்கள் சுயமரியாதையோடு வாழ்கிறார்கள் என்றால் அதற்குரிய தந்தை பெரியார் தந்த விலைக்கு ஈடே கிடையாது! அறிஞர் அண்ணாவிற்குப் பின் இன்றுவரை திராவிட இயக்கத் தேரோட்டத்தை இழுத்துப் பிடித்துத் தொண்ணூறு அகவையிலும் தொடரும் கலைஞர் போன்றவர்களின் தியாக, ஈகத்திற்குத் தமிழ்ச் சமுதாயம் கடமைப் பட்டுள்ளது.<br /><br />இந்த வழித் தடத்தில் தந்தை பெரியாரின் கொள்கை கோட்பாடு களுக்காக எத்தனையோ இன்னல்களை, இடையூறுகளை விடுதலை, இதழ் வழி சுயமரியாதைச் சுடர் விளக்கை அணை யாத விளக்காகக் காத்து உலகுக்கு ஒளிகாட்ட வைத்தவர் ஒப்பாரும், மிக்காரு மில்லாத தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் ஆவார்.<br /><br />தந்தை பெரியார் தந்த விதைகளை யெல்லாம் பக்குவமாகப் பாதுகாத்து, அந்தந்தக் காலகட்டத்திற்கு என்ன தேவையோ அதற்குத் தக பருவகாலத் திற்கு ஏற்ற பகுத்தறிவோடு அந்த வித் துக்களை, நல்ல நிலங்களை நன்னில மாகப் பயன்படுத்தி விதைத்து இன்று பல்வேறு துறைகளில் தமிழர்களுக்கு நலம் பயக்கும் சீரிய நேர்த்திய கடமையை நம் தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் வியக்கத்தக்க கடமையை விடுதலை இதழின்; இயக்கத்தை நடத்தி வெற்றி நடைபோடுகிறார்.<br /><br />தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் விடுதலை இதழை ஒரு சிறப்பு மிக்க இதழாக நடத்துவதோடு, வேறு எந்த இதழிலும் சொல்ல அஞ்சும் செய்திகளை எல்லாம் துணிவோடு வெளியிட்டு, எந்த வகையிலும் தமிழர் பகைமைகளோடு சமாதானம் செய்து கொள்ளாமல் விடுதலை முரசு கொட்டி வருகிறார்.<br /><br />விடுதலை 50 ஆண்டு நிறைவை நாம் போற்றும் போது, பெருமகனார் வீரமணி அவர்கள் அரும் பெரும், தமிழர் தொண்டினையும் போற்றி, நல்ல உடல் நலத்தோடு, பலத்தோடு, தமிழர்களுக்கு நூறாண்டு மேலாண்டு, பல்லாண்டு தொண்டாற்ற நீடூழி வாழ வாழ்த்தி வணங்குவோம்.<br /><br />(நன்றி: தமிழ்ப் பணி, செப்டம்பர் 2012)<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-63583312922149778312012-09-21T19:34:43.276+05:302012-09-21T19:34:43.276+05:30
டில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சென்னை உயர...<br /><br /><br />டில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர்<br /><br />டி.முருகேசன் நியமனம் புதுடில்லி, செப் 21: டில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ள நீதியரசர் டி.முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 12 ஆண்டு காலமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக சிறப்பாகப் பணியாற்றியவர். டில்லி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக ஒரு தமிழர் நியமிக்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com